பின்பற்றுபவர்கள்

13 அக்டோபர், 2008

அல்ஃபோன்ஸா அன்னை !

இறைவன் நேரடியாக அனைவருக்குமே உதவ முடியாது என்பதால், பெற்றோர்கள் வழி, குறிப்பாக அன்னையர் வழியாக அதனைச் செய்கிறான் என்று பெற்றோரின், அன்னையிரின் பெருமை தன்னை சிறப்பாகச் சொல்வதுண்டு.

தாய்மை உயர்வு தான், அதைவிட எல்லோரையும் தன் மக்களைப் ( குழந்தைகள்) போல் பரிவு காட்டும் தாய்மை உயர்விலும் உயர்வு, வேறெந்த மதத்தைக் காட்டிலும் பெண்ணிற்கு உயரிய மதிப்பு அளித்து, அவர்கள் மூலம் நல்லொதொரு சமூக, ஆன்மீகச் சேவை செய்துவரும் மதம் என்பதால் கிறித்துவ மதத்தின் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. தன்னலமற்ற உன்னத சேவைக்காக தன்னையே அற்பணித்துக் கொள்ளும் எண்ணற்ற கிறித்துவ சகோதரிகள் வெள்ளை ஆடையில் செல்வதைப் பார்க்கும் பொழுது, என்னை தேவதைகள் கடந்து போவது போலவே உணர்வேன்.

பெண்களின் வாழ்கையை கணவன், குழந்தைகள் என்று சுறுக்கி வைத்திருக்கும் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அனைவருக்கும் வாழும் அன்னையராகவே இவர்களை கருதுகிறேன். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவது என்று கொச்சையாக பிற மதத்தினரால் ஏசப்பட்டாலும், அந்த அன்னையர்கள் எண்ணங்களில் இருப்பது கிறித்துவம் என்கிற மதம் அல்ல, இறைவனிடம் அன்பு கொண்ட அடியார்கள் இறைவன் குறித்தான தங்கள் சேவையை எப்படி இறைப்பணி என்று நினைக்கிறார்களோ அதைத்தான் அந்த சகோதரிகளும், அன்னையர்களும் நினைக்கிறார்கள்.

உலகுக்கு ஒரு அன்னையைக் காட்ட எந்த மதத்தாலும் முடியாதபோது, மதங்களைக் கடந்தவராக உலக மக்களின் அன்பைப் பெற்றவராக அன்னை தெரசா ஒளிர்ந்து நின்றார். அவரைப் போலவே எண்ணிலடங்காத கிறித்துவ சகோதரிகள் தங்களின் முழுவாழ்க்கையை இறைவனின் சேவையாளர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். அதில் ஒருவராக அன்னை அல்ஃபோன்ஸா இருந்திருக்கிறார், தனது ஊனமுற்ற காலையும் பொருட்படுத்தாது கேரள பகுதியில் 39 வயது வரை வாழ்ந்து சிறப்பான சேவை ஆற்றி மறைந்திருக்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் இந்திய கிறித்துவர்களுடன் சேர்ந்து இந்தியர்களும் பெருமை பட வேண்டிய ஒன்று, நான் பெருமை படுகிறேன்.

*********

நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும், கால்டுவெல் ஐயர் போன்ற பாதிரிமார்கள் வந்திருக்காவிட்டால் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள், தமிழும் வடமொழியில் இருந்து பிறந்த நீச பாசை என்று கூறும் தமிழ்தூற்றிகளின் ஏச்சுக்களை உண்மை என்று நம்பி குறுகிக் கொண்டு இருந்திருப்போம்.

நல்ல வேளை பாமரன் கல்வி பெற்றதும், தமிழர்கள் தெளிவடைந்ததும் கிறித்துவம் இம்மண்ணில் வேர் ஊன்றியதால் கிடைத்த பெரும் பயன்கள்.

என்னைப் பொறுத்து கல்வி தரும் கலைச் செல்வி சரஸ்வதியாக தெரிபவர்கள், தூய வெள்ளையாடையில் அதைச் சிறப்பாகச் செய்யும் கிறித்துவ சகோதரிகள் மட்டுமே.

இந்தியாவெங்கும் பாமரர்கள் மட்டுமே கல்வி பெறவில்லை, ஒரிசா போன்ற மாநிலங்களில் கிறித்துவ சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒவ்வொரு இந்துத்துவ வெறியனும் கூட எதாவது ஒரு கிறித்துவ பள்ளியில் ஆரம்பக் கல்வியோ, உயர்நிலை கல்வியோ பெற்று இருப்பான். இந்துத்துவ கேடுகெட்ட ஜென்மங்களின் தகாத செயல், தங்களது சொந்த சகோதரியையை தானே பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற மன்னிக்க முடியாத இழிசெயல். (முற்றிலுமே நிதானம் இழந்து ஒரு இந்து சகோதரியை கிறிதுவ கன்னிகாஸ்திரி என்று நினைத்து வண்புணர்ந்து இருக்கிறார்கள்)

*******

தமிழக மண்ணிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் தன்மானத் தமிழர்கள் என்றோ, பெரியார் பூமி என்றோ சொல்லிக் கொள்வதில் பெருமை கிடையாது, அதன் பிறகு எல்லா சாக்கடைகள் போலத்தான் நாமும் என்று நினைத்துக் கொள்வோம்.

இந்துத்துவ வாதிகளின் இழிவினால் சிறுமை அடையும் நிலை நம்மீது(ம்) திணிக்கப்படாமல் தடுப்போம்.

19 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

அருமையான பதிவு

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
அருமையான பதிவு
//

கிருஷ்ணா,

எனது பல பதிவுகளில் பாராட்டி பின்னூட்டமிடுகிறீர்கள், உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

துளசி அம்மா,

தாங்கள் சுட்டிக் காட்டிய பிழையை திருத்திவிட்டு உங்கள் பின்னூட்டத்தை எடுத்துவிட்டேன். படிப்பவர்களுக்கு அதுதான் மனதில் நிற்கும் அதை தவிர்கலாம் என்று தங்கள் பின்னூட்டத்தை நீக்கினேன். மன்னிக்க வேண்டும் !

Robin சொன்னது…

//நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும், கால்டுவெல் ஐயர் போன்ற பாதிரிமார்கள் வந்திருக்காவிட்டால் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள், தமிழும் வடமொழியில் இருந்து பிறந்த நீச பாசை என்று கூறும் தமிழ்தூற்றிகளின் ஏச்சுக்களை உண்மை என்று நம்பி குறுகிக் கொண்டு இருந்திருப்போம்.//- இந்த உண்மையை பலரும் உணராமல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் கொடுமை. கிறிஸ்தவ மிஷனரிகள் பலர் தமிழ் இலக்கியத்திற்கும் அரிய பங்காற்றியுள்ளனர். பதிவிற்கு நன்றி.

Robin சொன்னது…

தற்போதெல்லாம் மனிதர்களுக்கு சேவை செய்பவர்களைவிட மனிதர்களை கொல்பவர்களுக்கு மட்டுமே அதிக மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல பதிவு, இன்னும் சொல்லவேண்டியது நிறைய இருக்கின்றது. சொல்லி இருக்கலாம்!!

துளசி கோபால் சொன்னது…

நல்லவேலை . நானே அதை எடுக்கலாமுன்னுதான் மீண்டும் வந்தேன்.

நன்றி கண்ணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
- இந்த உண்மையை பலரும் உணராமல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் கொடுமை. கிறிஸ்தவ மிஷனரிகள் பலர் தமிழ் இலக்கியத்திற்கும் அரிய பங்காற்றியுள்ளனர். பதிவிற்கு நன்றி.//

ராபின், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சீகன் பால்கு வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் இலக்கியங்களில் கரைகண்டவர்கள், அவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் எப்போது படித்தாலும் குலுங்கி சிரிக்கவைப்பவை. தமிழுக்கு அச்செழுத்துக்களை உருவாக்கித் தந்தவர்களே கிறித்துவ மிஷனரிகள் தான். இந்தியாவில் முதன் முறை அச்சேறிய மொழியாக தமிழ் சிறப்பு பெற்றது கிறித்துவர்களால் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
தற்போதெல்லாம் மனிதர்களுக்கு சேவை செய்பவர்களைவிட மனிதர்களை கொல்பவர்களுக்கு மட்டுமே அதிக மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது.

12:25 PM, October 13, 2008
//

மதங்களை கடவுள் வழி நடத்திய வரை நன்றாக இருந்திருக்கிறது, அதன் பிறகு இவர்களே நடத்துவதாக எடுத்துக் கொண்டதானால் சீரழிந்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மதத்தின் தவறு அல்ல, மதவாதிகளின் தவறுகள் தான் எல்லா கொடுமைக்கும் காரணம். மதத்தையும் மதவாதிகளையும் இனி பிரிக்கவும் முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல பதிவு, இன்னும் சொல்லவேண்டியது நிறைய இருக்கின்றது. சொல்லி இருக்கலாம்!!
//

ஞான சேகர்,
பதிவின் நீளம் கருதில் கொள்ளவதும் தேவைதான். நீளமாக இருந்தால் பத்திகளை விட்டுவிட்டு படிப்பார்கள், நன்றாகச் சொல்லி இருப்பதெல்லாம் கண்ணில் படாமல் போகும். மையம் தொட்டு ஓரளவு நீளம் குறைவாக எழுதுவது மிகத் தேவையான ஒன்று !

மணிகண்டன் சொன்னது…

மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள் கோவி சார்.

********* நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும் *********

இந்த பத்தியில் இருந்த கருத்தாழத்தை மிகவும் ரசித்தேன்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

அண்ணே நானும் ஓரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன்.

//என்னைப் பொறுத்து கல்வி தரும் கலைச் செல்வி சரஸ்வதியாக தெரிபவர்கள், தூய வெள்ளையாடையில் அதைச் சிறப்பாகச் செய்யும் கிறித்துவ சகோதரிகள் மட்டுமே.
//


சிந்திக்க வேண்டியவங்க சிந்திச்சா சரி

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு..நீங்கள் சொல்வது போல கல்விக்கு இந்த கிறிஸ்துவ மிஷீனரிகள் ஆற்றிக்கொண்டிருக்கும் யொண்டு மகத்தானது.
தரம்..ஒழுக்கம்..ஆங்கிலக்கல்வி இப்பள்ளிகளின் ஸ்பெஷாலிட்டி.
தவிர..கிறிஸ்துவ பாதிரிமார்களைவிட..இந்த கன்னியா ஸ்திரிகள் பங்கு அளவிடமுடியாது.
இப்படி ஒரு பதிவிட்டமைக்கு என் பாராட்டுகள் கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...
மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள் கோவி சார்.

********* நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும் *********

இந்த பத்தியில் இருந்த கருத்தாழத்தை மிகவும் ரசித்தேன்.

3:56 PM, October 13, 2008
//

மணிகண்டன்,

எடுத்துச் சொல்லி பாராட்டுவதற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா said...
அண்ணே நானும் ஓரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன்.


சிந்திக்க வேண்டியவங்க சிந்திச்சா சரி
//

அப்துல்லா,
சிந்திக்க வேண்டியவங்க எப்பவும் சிந்திக்க மாட்டாங்க, புதுசா யாராவது சிந்திக்க நினைத்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
T.V.Radhakrishnan said...
அருமையான பதிவு..நீங்கள் சொல்வது போல கல்விக்கு இந்த கிறிஸ்துவ மிஷீனரிகள் ஆற்றிக்கொண்டிருக்கும் யொண்டு மகத்தானது.
தரம்..ஒழுக்கம்..ஆங்கிலக்கல்வி இப்பள்ளிகளின் ஸ்பெஷாலிட்டி.
தவிர..கிறிஸ்துவ பாதிரிமார்களைவிட..இந்த கன்னியா ஸ்திரிகள் பங்கு அளவிடமுடியாது.
இப்படி ஒரு பதிவிட்டமைக்கு என் பாராட்டுகள் கோவி
//

Radhakrishnan ஐயா,

கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி !

ஜோ/Joe சொன்னது…

கோவி.கண்ணன்,
கிறிஸ்தவர்கள் மீது புரிந்து கொள்ள முடியாத வன்மமும் வெறுப்பும் தலைதூக்கி வரும் இந்த கால கட்டத்தில் , பெரும்பான்மை இந்து சகோதரர்கள் உங்களைப் போல பரிவும் புரிந்துணர்வும் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்திய கிறிஸ்தவர்களின் ஒரே ஆறுதல் .

சில நேரங்களில் படித்தவர்கள் சிலரின் எதிர் வினைகளும் ,இணையத்தில் பரவலால காணப்படும் வன்மமும் அதிர்ச்சியளிக்கிறது .. இவையெல்லாவற்ருக்கும் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டுள்ள புரிந்துணர்வில் குறைபாடு என்பதே என் கருத்து .

மேலும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்போம் .நம்முடைய தமிழ் மண்ணிலாவது ஒன்றுபடுவோம் .

பதிவுக்கு மிக்க நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
கோவி.கண்ணன்,
கிறிஸ்தவர்கள் மீது புரிந்து கொள்ள முடியாத வன்மமும் வெறுப்பும் தலைதூக்கி வரும் இந்த கால கட்டத்தில் , பெரும்பான்மை இந்து சகோதரர்கள் உங்களைப் போல பரிவும் புரிந்துணர்வும் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்திய கிறிஸ்தவர்களின் ஒரே ஆறுதல் .

சில நேரங்களில் படித்தவர்கள் சிலரின் எதிர் வினைகளும் ,இணையத்தில் பரவலால காணப்படும் வன்மமும் அதிர்ச்சியளிக்கிறது .. இவையெல்லாவற்ருக்கும் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டுள்ள புரிந்துணர்வில் குறைபாடு என்பதே என் கருத்து .

மேலும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்போம் .நம்முடைய தமிழ் மண்ணிலாவது ஒன்றுபடுவோம் .

பதிவுக்கு மிக்க நன்றி!
//

ஜோ / Joe,

பாராட்டுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி !

mootooking சொன்னது…

அருமையான கட்டுரை. வாழ்துக்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்