பின்பற்றுபவர்கள்

அழுகாச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழுகாச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 பிப்ரவரி, 2008

நண்பர் குழலிக்கு கோவி.கண்ணனின் அழுகாச்சு காவியம் (கடிதம்)

நண்பர் குழலிக்கு, - 'நண்பர்' வெளியே சொல்லக் கூடாதா ? குறிப்பாக உங்களை சொல்லலாம். போலியான ஒருவரிடம் நண்பராக இல்லை என்றே நினைக்கிறேன், அதனால் உங்களை என் நண்பர் என்று சொல்வதில் தவறே இல்லை. என்னையும் சேர்த்தே நீங்கள் இரண்டு மூன்று முறை பார்த்தவர்களில், உங்கள் அகராதிபடி உங்களுக்கு நான் நண்பராக இல்லாமல் இருக்கலாம். செண்டி மண்ட் அழுகாச்சி சீன் படி எனக்கு நீங்கள் என்றும் நண்பர் தான்.

//
இப்போது கேட்கிறேன் அந்த ஆடியோவில் இருக்கும் குரலும் உங்களோடு பேசிய விடாதுகருப்பு(எ)சதீஷ்குமார்(எ)போலி மூர்த்தியின் குரலும் ஒன்றா இல்லையா? என்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?//

பதிவில் கேள்வியாக கேட்டதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்,

மேற்கண்ட கேள்வியை என்னைக் கேட்டு இருக்கிறீர்கள், இதே கேள்வியை நான் மூர்த்தியிடமே கேட்டேன். உங்கள் குரலை பதிவு செய்து இருக்கிறார்கள், போலியுடன் உரையாடியவர் எவரும், இருகுரலும் ஒன்று என்று உறுதிப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன், 'உங்களுக்கும் ஒரு சந்தர்பம்... போலி நீங்கள் அல்ல என்று சொல்ல போலியுடன் உரையாடினேன் என்று சொல்பவர்களிடன் நீங்கள் பேசி இருகுரலும் ஒன்றா என்று ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமே' என்று கேட்டு இருக்கிறேன். 'போலியுடன் யார் உறவாடினார்களோ அவர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள்' என்று சொன்னார். 'இவர்கள் என்னை போலி என்று சொல்லி தூற்றும் போது நான் எதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றும் கேட்டார்.

அவரிடம் மட்டுமல்ல மேலும் சில பதிவர்களிடமும் யார் போலியுடன் பேசினார்களோ அவர்கள் தான் மூர்த்தியின் டேப் செய்யப்பட்ட குரலையும் போலியின் குரலையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்றும் சொல்லி இருக்கிறேன்.

மூர்த்திதான் போலியா, போலி தான் மூர்த்தியா இதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்கள் சொல்லும் ஆடியே வெளியீட்டில் இருப்பது மூர்த்தியின் குரல் என்றே உறுதிப் படுத்துகிறேன். அதில் அவர்தான் போலி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று உங்களால் காட்ட முடியுமா ? நானும் திரும்ப திரும்ப கேட்டுப் பார்த்தேன் ஆபாச அர்சனைகள் தவிர்த்து அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரியவில்லை. என்னை சீண்டுபவன் ஒருவனை நான் திட்டினேன் என்று கொள்ளுங்கள் அதை வைத்து, இவன் ஆபாசமாக பேசுகிறான் இவன் தான் போலி என்று சொல்ல முடியுமா ? இரு குரலும் ஒன்று தான் என்று நிரூபிக்க போலியின் குரல் பதிவு செய்யப்பட்டு இருக்கவேண்டும். அப்படி இல்லையா ? போலி நிச்சயம் ஜிடாக்கில் எவருடனாவது உரையாடி இருப்பான், போலியுடன் உரையாடிவர்களிடம் இரு குரல்களும் ஒன்றே போல் இருந்ததா என்று கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். போலியுடன் நான் பேசியது இல்லை, தொடர்பும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் என் பெயர் எப்போதோ வெளியில் வந்திருக்கும்.

போலியும், மூர்த்தியும், மூர்த்திக்கு எதிரான உங்கள் சகாக்களும் எந்த அளவுக்கு கீழே இறங்குவார்கள் என்று எனக்கும் பலருக்கும் தெரியும். கவிதாவை யாரும் இன்னும் யாரும் மறந்துவிடவில்லை. எனவே பயப்படுபவர்கள் போலிக்கோ, மூர்த்திக்கோ மட்டும் பயப்படுவார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். நான் அந்த குரலைக் கேட்டு உறுதிப் படுத்தாதற்கு போலியின் குரலை நான் கேட்டது இல்லை என்பது தான் காரணம் அன்றி மூர்த்தி என்னைத் ஆபாசமாக பேசுவார் என்றோ அல்லது போலி என்னைப் பற்றி ஆபாசமாக எழுதுவானோ என்ற பயம் எதுவும் இல்லை.

நான் தான் அவர் பதிவில் பெரியார் கருத்துக்களை தெரியாமல் படித்தேன். அவருக்கு திராவிட தமிழர்கள் குழுமத்திலும் தொடர்பு இருந்திருக்கிறது, ஓசை செல்லா விடாது கருப்பை தமிழ்மணம் நீக்கிய போது தொடர்ந்து விடாது கருப்பின் பதிவின் RSS Feed கொடுத்து இணைத்து வைத்திருந்தார். அப்பாவியாகவே கேட்கிறேன், அப்போதெல்லாம் அவர் பெரியாரை சொந்த அரசியலுக்கு பயன்படுத்துகிறார் என்று உங்களுக்குத் தெரியாதா ?

என்னைப் பொறுத்து எனக்கு மிகவும் வேண்டியவர், என்னை நன்கு தெரிந்தவர் ஒருவர் என் அம்மாவைப் பற்றி பேசி இருந்தால் கவலைப் படுவேன். ஒரு காமக் கிறுக்ககன் பலரும் சென்று வரும் பொதுக்கழிவரையில் எழுதிவிட்டான் என்பதற்காக அவனுடன் மல்லுக்கு நிற்கமாட்டேன், அதற்கெல்லாம் எதிர்ப்புக்காட்டி அவனுக்கு மரியாதை செய்ய மாட்டேன். அம்மாவை 'கூப்பிடுபவன்' பற்றி மகி எழுதி இருந்தார். அம்மாவை கூப்பிடுவது கருப்பு பதிவில் மட்டும் தான் நடக்கிறதா ? வேறு இடங்களில் நடப்பது உங்களுக்கு பிடித்தமானதா ?

உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பதால் உங்களுக்கு மட்டுமே பதில் எழுதுகிறேன். இன்னும் இரு காமக் கிறுக்கர்கள், 'அம்மாவின்' நலம் விசாரித்து எழுதி இருந்தார்கள் அவர்களுக்கெல்லாம் நான் மதிப்பு கொடுக்கவில்லை. அவர்களையாவது நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வீர்களா ? போலியைக் கண்டுபிடித்து நிருத்துங்கள் செருப்பால் அடிப்போம். உண்மையாக 'திராவிடம்' பேசும் உங்களிடம் கேட்கிறேன் டோண்டு 'பார்பனர்' என்பதால் அவர் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதியவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்துவிட்டீர்களா ?அறிய ஆவல். இதை நான் மட்டும் கேட்கவில்லை. உங்கள் அதிரடி பதிவுகளைப் படிப்பவர்கள் அனைவருமே நகைப்புடனே கேட்கிறார்கள்.

கடைசியாக, போலிப் பிரச்சனைக்குப் பிறகு நீண்ட நாள் சென்று என்னிடம் நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்த போதே பாய்ந்தன் காரணம் இன்னும் விளங்கவில்லை. சத்தியமாக உங்கள் தகவல்கள் எதையும் நான் மூர்த்திடம் பரிமாறிக் கொள்ளவில்லை, வேறு என்னவென்று தெரிந்திருந்தால் உங்கள் பதிவில் எதோ ஞாயம் இருக்கிறது என்றாவது உணரலாம்.

நான் தனிப்பட்ட முறையில் தான் உங்களிடம் நிறைய பேசி இருக்கிறோன், இங்கும் எந்த ரகசியமும் இல்லை. படிப்பவர்கள் தான் பாவம், ஒரு மின் அஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கலாம். உங்கள் முன்னாள் நண்பர்கள் பட்டியலில் நான் இல்லை என்றே நம்புகிறேன். பதிவில் கேட்டதால் பதிவிலேயே சொல்லிவிட்டேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்