பின்பற்றுபவர்கள்

அரசு ஊழியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு ஊழியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே, 2010

கூலிக்குக் கூட மாரடிக்காத ஆசிரியர்கள் - மறுகூட்டல் !

இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்களாம். அரசு ஊழியர்கள் மீது எனக்கு எந்த ஒரு நம்பிக்கையும், உயர்ந்த எண்ணங்களோ ஏன் ஏற்படுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பொதுமக்கள் யாரேனும் அரசு ஊழியர்களை கேள்வி எழுப்பி கொஞ்சம் கடுமையாக கைநீட்டும் அளவுக்குச் சென்றுவிட்டாலோ, கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று கூப்பாடு போட்டு அவர்களை சிறையில் தள்ளும் சட்டப் பாதுகாப்புடன் கடமை தவறும் அரசு ஊழியர்கள் கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை என்பதற்கு மற்றொரு சான்றாக இந்த மறுகூட்டல் என்னும் நடைமுறையை நான் பார்க்கிறேன்.

ஒரு மாணவனுக்கு கல்வி தான் எல்லாவித வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் பெற்றுத்தருகிறது என்பதும் அதில் பெறும் மதிப்பெண்கள் மிக மிக இன்றியமையாத ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தவை. இதுமிகவும் சாதாரண புரிதல் கூட, ஒரு மாணவன் தவறிழைத்தவனாக இருந்தால் சில பள்ளிகளில் அவனுக்கு எதிராக பள்ளியை விட்டு வெளியேற்றுவது அல்லது கடுமையான குற்றம் செய்த மாணவனை காவலர்களிடம் ஒப்படைக்கும் முடிவு என்னும் போது மாணவனின் எதிர்காலம் முற்றிலுமாக நலிவடையுமோ என்பதை நினைத்துப் பார்த்து எச்சரிக்கை செய்து அனுப்புவார்கள், நல்லதொரு சமூகம் அமையவேண்டும் என்பதன் பொறுப்புணர்வு என்பதாக நாம் அந்த செயலை எடுத்துக்கொண்டு தொடர்புடைய பள்ளிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டலாம்.

எவ்வளவோ (மோசமான, பொருளியல்) இல்லச்சூழலில் படிப்பைத் தொடரும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஆசிரியர்களின் கவனக்குறைவால் திசைமாறும் அல்லதும் முற்றிலுமாக நலிவடையும் சூழல்களை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முன்பெல்லாம் ஒரு மாணவன் மிகச் சரியாக எழுதி இருந்து மதிப்பெண் குறைவாகப் பெற்றால், அந்த மாணவன் விண்ணப்பித்தால் தேர்வுத்தாளை மற்றொருமுறை வேறொரு ஆசிரியரால் திருத்தப்பட்டு சரிபார்க்கப்படும், இப்போது அத்தகைய நடைமுறைக்கு வாய்ப்பே இன்றி, நன்றாக தேர்வு எழுதிய மாணவன் குறைவாக மதிப்பெண் பெற்றிருப்பதற்குக் காரணம் ஒருவேளை தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியரின் கவனக்குறைவாக இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தாம் நன்றாக எழுதியும் மதிப்பெண் குறைவாக வந்திருப்பதாக 1 1/2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் அதில் ஐம்பது விழுக்காடு மாணவர்களாவது தாம் குறைவாக மதிப்பெண் பெற்றதை மறைக்கும் விதமாக பெற்றோர்களை ஏமாற்றவே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றாலும் மீதம் 50 விழுக்காடு அதாவது 75,000 மாணவர்கள் நன்றாக எழுதியும் மதிப்பெண் சரிவர கிடைக்காத மாணவர்கள் என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

75 ஆயிரம் மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய ஆசிரியர்களின் கவனக்குறைவை கண்டிப்பது யார் ? இந்த நிலை தொடர்ந்தால் பொதுத்தேர்வு முறைகள் என்பதே கேலிக்கும் கேள்விக்கும் சென்று கொண்டிருக்கிறது என்பதின் பதிவாகத்தான் இந்த மறுகூட்டல் என்னும் ஒரு வழக்கத்தை நான் பார்க்கிறேன்.

அவர்களில் 75 ஆயிரம் மாணவர்கள் மறுகூட்டலில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுகிறார்கள் என்றாலும் கூட அது விண்ணப்பிக்கும் அவர்களின் மறுமுயறிசியினால் கிடைத்த பலன்மட்டுமே, நன்றாக எழுதியும் குறைந்த மதிப்பெண் பெற்று விண்ணப்பிக்காத மாணவர்கள் பெறும் பாதிப்பை யார் சரி செய்வது ? ஏறக்குறை 75 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு அடையும் அளவுக்கு கவனக்குறைவாக இருக்கும் ஆசிரியர்கள் என்ன விதமான கடமையை ஆற்றினார்கள் ? அவர்களுக்கு ஏன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கரையே இல்லாமல் போயிற்று ?

ஒருகாலத்தில் ஆசிரியர் மருத்துவர்கள் தெய்வம் என்பதாக் போற்றப்பட்டனர், காரணம் அவை தொழில் என்பது தவிர்த்து தனிப்பட்ட மனிதர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அக்கரை கொண்டவர்கள் என்கிற புரிதலை அவர்கள் ஏற்படுத்தி இருந்தனர். இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கிறவர்களாக மாறிவிட்டார்கள் என்கிற புரிதல் இருந்தாலும் அதையும் சரியாக செய்வதில்லை என்னும் போது இவர்களையெல்லாம் எப்படித்தான் திருத்துவது ?

இப்போதெல்லாம் அரசு ஊழியர்களின் போராட்டங்களெல்லாம் சுயநல பிசாசுகளின் போராட்டமாகவே எனக்கு தெரிகிறது, அரசு அலுவலகங்கள் பொதுமக்களால் சூறை என்று படிக்கும் போது எந்த ஒரு உணர்ச்சியும் ஏற்படுவது இல்லை, அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டால் அவன் எந்த அளவுக்கு மோசமாக செயல்பட்டு இருப்பான் என்று எதிர்மறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

ஆசிரியர் பணி என்பது புனிதப்பணி என்பதை ஆசிரியர்கள் மட்டுமே இன்று சொல்லிக் கொள்ளும் படி அவர்கள் நடந்து கொள்ளும் சூழலில் மறுகூட்டலுக்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்று செய்தி ஆசிரியர்கள் முகத்தில் மாணவர்கள் உமிழ்வதாக உணர்த்துகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட அரசு ஊழியர்களை நினைத்தாலே. கூலிக்கு மாரட்டிக்கும் ஆசிரியர்களிலும் சரியாக அடிக்காதவர்கள் 'ஆசிறியர்களா ?'

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்