பின்பற்றுபவர்கள்

8 அக்டோபர், 2008

Saraswathi Pooja Special - சர்வேஷனுக்கு மட்டும் ...!

சரஸ்வதி பூசை படங்கள்


(சுண்டல் செய்ய நேரம் இல்லை, வெறும் அவல் பொறி கடலை சர்கரை தான்)

















(திருநீற்றுப் பட்டை சின்னதாக வைத்தால் தான் நன்றாக இருக்கும்)
















எங்க வீட்டில் உள்ள சாமிபடங்கள் (ஆல் இன் ஒன்)















எங்கள் வீட்டுப் பிள்ளையார்
















எங்கவீட்டு பூசை அறை






















பிள்ளையார் சதுர்த்தி படங்கள்:















(கொண்டைக் கடலை, மாதுளை, கொழுக்கட்டை வகைகள்)


28 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

aahaa

பெயரில்லா சொன்னது…

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய நெத்தி சுட்டி நெற்றியில் விழும்
மண்டை சுரப்பை வலையுலகில் வைக்கும்
இவர்தான் கோவி! இவர்தான் கோவி!!
வாழ்த்துக்கள் கோவியாரே!
திரு என்கிற தமிழ் சொல்லைத் தாங்கி வருவதால்
நீரு அணித்திருக்கிறார்(பெங்களுருவில் கொஞ்சநாள் இருந்ததால் வந்த "ரு")

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
aahaa

10:47 PM, October
//

ஓஹோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துர்கா said...
:)
//

அம்மா தர்கா,

பட்டைப் போட்டுக் கொண்டு இருக்கேனே, சின்னப் பொண்னான நீ காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொள்ளக் கூடாதா ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய நெத்தி சுட்டி நெற்றியில் விழும்
மண்டை சுரப்பை வலையுலகில் வைக்கும்
இவர்தான் கோவி! இவர்தான் கோவி!!
வாழ்த்துக்கள் கோவியாரே!
திரு என்கிற தமிழ் சொல்லைத் தாங்கி வருவதால்
நீரு அணித்திருக்கிறார்(பெங்களுருவில் கொஞ்சநாள் இருந்ததால் வந்த "ரு")
//

ஜோதி,

பாரதி தாசன் பாட்டை மாற்றி எழுத முயற்சி பண்ணினீர்களா ?
:) வலையுலகில் தலைவைப்பது தண்டவாளத்தில் வைப்பது போன்று தான், ஆனால் இங்கே ரயில் எப்போதும் வராது

குடுகுடுப்பை சொன்னது…

தேங்காய் நல்லா இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
:-)))...
//

என்னைய்யா சிரிப்பு ? என்னையப் பார்த்தா 'இ'னா 'வா' னாவா இருக்கா ?

:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
தேங்காய் நல்லா இருக்கு.

11:16 PM, October 08, 2008
//

படத்தைப் பெருசாக்கிப் பாருங்க தேங்காயினுள் பூ கூட இருக்கும்.

Subbiah Veerappan சொன்னது…

//////திருநீற்றுப் பட்டை சின்னதாக வைத்தால் தான் நன்றாக இருக்கும்////.

பெரிதாக வைத்தாலும் நன்றாகத்தான் இருக்கும். கோவியானந்தா என்ற பெயருக்கு ஏற்றபடி இருக்கும்!

Kanchana Radhakrishnan சொன்னது…

கோலம் போட்டது யாரு? நீங்களா அல்லது உங்க வீட்டு அம்மாவா?சுண்டல் பண்ண யாருக்கு நேரமில்லை.

ILA (a) இளா சொன்னது…

//எங்கள் வீட்டுப் பிள்ளையார்//
காதுல பூ :)

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
கோலம் போட்டது யாரு? நீங்களா அல்லது உங்க வீட்டு அம்மாவா?சுண்டல் பண்ண யாருக்கு நேரமில்லை.
//

கோலம் நானும் போடுவேன், ஆனால் அவங்க தான் எப்போதும் கோலம் போடுறாங்க, சுண்டலுக்கு கடலை ஊறவைக்க காலையில் மறந்தாச்சு !
:)

யார் செய்தால் என்ன சாமியா திங்கப் போகுது ? :)))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//iLa said...
//எங்கள் வீட்டுப் பிள்ளையார்//
காதுல பூ :)
//

இரண்டு காதிலேயும் !
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

பெரிதாக வைத்தாலும் நன்றாகத்தான் இருக்கும். கோவியானந்தா என்ற பெயருக்கு ஏற்றபடி இருக்கும்!

11:21 PM, October 08, 2008
//

வாத்தியார் ஐயா,
மனுசனுக்கு நெற்றியை படைத்ததே பட்டைக்குத்தான் என்கிறீர்களா ?
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜோதி,

பாரதி தாசன் பாட்டை மாற்றி எழுத முயற்சி பண்ணினீர்களா ?
:) வலையுலகில் தலைவைப்பது தண்டவாளத்தில் வைப்பது போன்று தான், ஆனால் இங்கே ரயில் எப்போதும் வராது//

நீங்கள் சொல்வது சரிதான் கோவியாரே!
தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பது போலதான்(எனக்கு கல்லக்குடி,டால்மியாபுரம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது)
இரயில் வராதுன்னு சொல்றது சரிதான்! ஆனா,
ஷேர் ஆட்டோன்னு ஒன்னு இருக்காமே இப்ப, அது வருமுன்னு சொல்றாங்க சிலர்!
அவங்க சொல்றது உண்மையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷேர் ஆட்டோன்னு ஒன்னு இருக்காமே இப்ப, அது வருமுன்னு சொல்றாங்க சிலர்!
அவங்க சொல்றது உண்மையா?//

ஜோதி,

சிங்கப்பூரில் இருந்தால் அந்த பயமும் தேவை இல்லை. இங்க ஒருத்தரும் வரமுடியாது. :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//ஷேர் ஆட்டோன்னு ஒன்னு இருக்காமே இப்ப, அது வருமுன்னு சொல்றாங்க சிலர்!
அவங்க சொல்றது உண்மையா?//

ஜோதி,

சிங்கப்பூரில் இருந்தால் அந்த பயமும் தேவை இல்லை. இங்க ஒருத்தரும் வரமுடியாது. :)//

ஆமா, பெட்ரோல் டீசல் விலை ஏறிடுச்சுல்ல,
ஆட்டோ தண்ணியில ஓடாதே!

பி.கு. சிங்கப்பூர் ஒரு தீவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
அருமை!!!
//

பரிசல்,
பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமா, பெட்ரோல் டீசல் விலை ஏறிடுச்சுல்ல,
ஆட்டோ தண்ணியில ஓடாதே!

பி.கு. சிங்கப்பூர் ஒரு தீவு.

11:43 PM, October 08, 2008
//

ஜோதி,

அப்போ 'தலைவா ஆணையிடு...சூரியனை உன் காலடியில் சிறை வைக்கிறேன்...' என்பதெல்லாம் வெறும் வசனம் தானா அவர்களுக்கு. :)

RATHNESH சொன்னது…

பிரம்ம ஞானம் தேடும் நாத்திகர்கள் இப்படித்தான் பூஜை கொண்டாடுகிறார்களா? நல்லது.

"தொண்டு செய்து பழுத்த கிழம் ; தூய தாடி மார்பில் விழும்" என்று பெரியார் பற்றி கருணாநிதி பாடியதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
பிரம்ம ஞானம் தேடும் நாத்திகர்கள் இப்படித்தான் பூஜை கொண்டாடுகிறார்களா? நல்லது.

"தொண்டு செய்து பழுத்த கிழம் ; தூய தாடி மார்பில் விழும்" என்று பெரியார் பற்றி கருணாநிதி பாடியதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
//


ரத்னேஷ் அண்ணா,

பிரம்ம ஞானமா ? அப்படின்னா ? அருகில் வலது பக்கம் சில ஆன்மிக பதிவுகளை இணைத்து அதில், பிரம்ம ஞானம் அறிந்து கொள்ளூங்கள் என்ற பதிவையும் இணைத்திருக்கிறேன். நட்சத்திர வாரத்தில் எழுதியது.

:)

பூஜை செய்வது எதுக்கு ? அன்னிக்கு ருசியாக பல ஐயிட்டங்களை சுவைத்து பார்க்க முடியும். முன்பெல்லாம் சிங்கைப் பெருமாள் கோவிலுக்குச் சுண்டலுக்காக செல்வது உண்டு, அப்பறம் சுண்டல் சுவையில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது, அதன் பிறகு போவதில்லை.

அப்பறம் ஞானிகள் பூஜை செய்வார்களா ? போலிச் சாமியார்கள் செய்வார்கள், நீங்கள் படத்தில் இங்கே பார்பது போலிச் சாமியாரைத்தான். போலி ஆத்திகன் போல போலி நாத்திகனும் உண்டல்லவா ?

'தொண்டு செய்த' பாட்டு பாரதிதாசன் பெரியார் இருக்கும் போதே எழுதியது.

TBCD சொன்னது…

சர்வேசனுக்கு நீங்க பதிவு போடுறது எல்லாம் இருக்கட்டும்..

உங்க படத்தை சிதைத்த சர்வேசர், அவர் படத்தை இப்படி விளையாட தருவாரா...(உடனே....ஒரு ஆப்பு வைச்ச, பை சார்ட் படத்தை தரேன் என்று வேகமாக வருவார்....அதெல்லாம்..ஒத்துக்க மாட்டோமய்யா...)

SurveySan சொன்னது…

:)))

அருமை.

டிபிசிடி, என் 'பை சார்ட்' மேல அவ்ளோ என்ன கோவம் உங்களுக்கு. தனி மடல் அனுப்புங்க, என் படம் வேணும்னா அனுப்பி வைக்கறேன். ஆப்படிச்சு, எனக்கு திரும்ப மெயில்லயே அனுப்பரதா இருந்தா ;)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

இப்ப் தான் நியூயார்க் வந்து சேர்ந்தேன். விட்டுப் போன பதிவையெல்லாம் படிக்கலாம்-னு வந்தா.....ரெண்டு படத்தைப் பாத்து பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேன்!

ஒன்னு உங்களுக்கே தெரியும்! :)

இன்னொன்னு, படையல்-ல கத்தியும் வச்சி படைப்பதன் மர்மம் என்னவோ கோவி.அண்ணா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இப்ப் தான் நியூயார்க் வந்து சேர்ந்தேன். விட்டுப் போன பதிவையெல்லாம் படிக்கலாம்-னு வந்தா.....ரெண்டு படத்தைப் பாத்து பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேன்!

ஒன்னு உங்களுக்கே தெரியும்! :)

இன்னொன்னு, படையல்-ல கத்தியும் வச்சி படைப்பதன் மர்மம் என்னவோ கோவி.அண்ணா? :)

7:19 PM, October 13, 2008
//

கேஆர்எஸ்,

உங்களுக்கு நடுக்கமா ? :) நம்ப முடியல, நான் என்ன முனிஸ்வரனா ?

சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் சேர்ந்தே வருகிறதே ஆயுதங்களுக்கு பூசை போடனுமே, எப்போதும் பயன்படுத்தும் ஆயுதம் சமையல் அறையில் (காய்கறி வெட்ட) பயன்படுத்தும் கத்தி தான்.

இப்ப போட்டு இருப்பது கூட (வெளி) வேசம் தான். அந்த அடையாளம் கூட எனக்கு தேவையற்றதாகவே நினைப்பேன். உங்களுக்கு ஓரளவுக்கு புரியும், மற்றவர்களுக்கு புரியாது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒன்னு உங்களுக்கே தெரியும்! :)//

இந்த இடுகையில் இருக்கும் (என்)படத்தையும் சேர்த்து (கத்தி இல்லாத படம் தவிர்த்து) மூன்று படங்கள் உங்களை பயமுறுத்தி இருக்க வேண்டும் !

:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan 11:52 AM, October 10, 2008
:)))

அருமை.//

அந்த படம் உங்களுக்காவே எடுத்தேன்.
:) பிள்ளையார் சதுர்த்தி படமெல்லாம் ஏற்கனவே வலையில் போடவேண்டும் என்று எடுத்தவைதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்