பின்பற்றுபவர்கள்

31 ஜூலை, 2014

உலக வலம் (2) !

எந்த பயணம் என்றாலும் முன்கூட்டிய திட்டமிடல் மிகவும் தேவையான ஒன்று, திட்டமிடல் இன்றியும் பயணச்சீட்டு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து விட்டு செல்லாம், ஆனால் அத்தகைய பயணம் அவ்வளவு மன நிறைவாக அமையாது, நான் கனடா செல்ல முடிவெடித்த பிறகு கண்டிபாக அமெரிக்காவிலும் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றே முடிவு செய்திருந்தேன்.

அமெரிக்காவில் நிறைய பதிவர் நண்பர்கள் இருந்தனர், அதில் எனக்கு நெருக்கமான இரு நண்பர்களிடம் நான் கனடா வருவது குறித்து சொன்ன போது கண்டிபாக அமெரிக்காவிற்கு வந்து அவர்களது இல்லத்தில் தங்கி சுற்றிப் பார்க்கும் படி அழைத்தனர், எனவே கனடாவில் வேலைகளை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டு தான் சிங்கை திரும்ப வேண்டும் என்பதை திட்டமிட்டு, சிங்கப்பூருக்கு திரும்பும் பயணச் சீட்டை நார்த் கரோலினா 'ராலே தர்காம் (Raleigh-Durham)' விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் படி போட்டுவிட்டேன். அது போன்று சிங்கையில் இருந்து இந்தியா புறப்பட்டு அங்கிருந்து சென்னை, பிறகு நான்கு நாள்கள் கழித்து திருச்சி - பெங்களூரு வழியாக பெங்களூரில் இருந்து கிளம்பி பிரான்ஸ் வழியாக கனடா மோன்ட்ரியல் அடைவது தான் திட்டம்.

கனடாவில் எதை எதையெல்லாம் பார்ப்பது, கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எப்படி செல்வது என்பதையெல்லாம் திட்டமிடவில்லை, காரணம் நாங்கள் செல்ல முடிவெடுத்திருந்தது கனடாவில் பனிப் பொழிவு துவங்கும் காலம் ஆகையால், முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டு பின்னர் பருவ நிலை மாற்றங்களினால் வெளியே செல்வதே அறைகூவலாக அமைந்துவிட்டால், பணம் செலவு செய்தாகிவிட்டதே என்று குழந்தைகளையும் போட்டுபடுத்தி, போன இடத்தில் போக முடியாத இடங்களுக்கு செய்த செலவுகளுக்காக வருந்தி, பயணம் என்பது வெறுப்பை வரவழைத்துவிட்டால் எல்லாம் வீண் என்பதால், முதலில் கனடா போய் சேருவோம், பிறகு கனடாவில் என்னவெல்லாம் பார்க்கலாம், அங்கிருந்து அமெரிக்கா எப்படி செல்லலாம் என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

நான் இந்தியா வழியாக ஏற்பாடு செய்ததன் நோக்கமே, சென்ற (2012) மறைந்த தம்பியின் ஓராண்டு நினைவு நிகழ்வில்கலந்து கொள்வதை முன்னிட்டு தான். எனவே மனைவி மகள் மற்றும் மகனை நேரடியாக கனடா செல்வதற்கானஏற்பாடு செய்துவிட்டு, அதன் படி அவர்களுக்கான பயணச் சீட்டு
 
17 நவ 2013 00:55 (ஞாயிறு பின்னிரவு / அதிகாலை 0055 சிங்கையில் இருந்து புறப்பட்டு
17 நவ 2013 0830 (ஞாயிறு) காலை 0830 ஜப்பான் டோக்கியோ நரிட்டா நிலையத்தை அடைந்து
17 நவ 2013 1100 (ஞாயிறு) அங்கிருந்து காலை 1100 புறப்பட்டு வடஅமெரிக்கா காலை 0735க்கு சிக்காகோ வர
17 நவ 2013 0735 (ஞாயிறு) சிக்காகோவில் இருந்து கனடா மோண்ட்ரியல் செல்ல காலை 1023  புறப்பட்டு
17 நவ 2013 1023 (ஞாயிறு) மோண்ட்ரியல் அடையும் நேரம் மாலை 13:25

மொத்தம் 20 மணி நேரத்திற்கும் மேலான பயணம், உலக நேர அமைப்பு படி பின்னிரவு புறப்பட்டு மாலை வரை அதே நாள் தான்.
 
இந்த திட்டத்தில் சென்றால் தான் மறுநாள் திங்கள் 18 நவ 2013  அன்று மனைவி அங்கு அலுவலகம் செல்ல முடியும்,அலுவலகம் செல்லும் போது குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் 18 நவ 2013 (திங்கள்) காலைக்குள்நான் சென்றாக வேண்டும்,  இல்லை என்றால் குழந்தைகள் விடுதி (ஹோட்டல்)யில் தனியாக இருக்க வேண்டும், அந்தநாட்டில் பாதுகாப்பில்லாமல் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாதாம், எங்களுக்கும் அவ்வாறு விட்டுச் செல்லமனதில்லை, எனவே எப்படி கணக்கு போட்டாலும் 18 நவ 2013 அதி காலை 2 மணிக்கு பெங்களூருவில் இருந்துபுறப்படும் வழித்தட சேவையில் ஏறினால் தான் குறைந்தது பகல் 12 மணிக்குள்ளாவது மோண்ட்ரியல் அடையமுடியும், நவ 17 ஆம் தேதி தான் தம்பிக்கு நினைவு நாள் என்பதால் அதனை மனதில் வைத்தே எல்லா பயணசீட்டுகளின் புறப்படும் நேரம் தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்தோம். இந்தியாவில் பல நகரங்கள் (சென்னை,பெங்களூரு,  மும்பை, ஹைத்ராபாத் மற்றும் டெல்லி) வழியாக இணைப்பு வழி சேவையில் செல்ல முடியும்என்றாலும் அந்த வழிதடங்கள் கனடாவை அடையும் நேரம் எதுவும் ஒத்துவரவில்லை.
 
17 ஆம் தேதி தம்பிக்கு செய்ய வேண்டிய நிகழ்வு நாகையில் தான், அதனால் எனது இந்திய பயணம் 15 நவ 2013 வெள்ளி அன்றே அமைத்துக் கொண்டேன், அவை முடிந்து அங்கிருந்து திரும்பவும் சென்னைக்கு வழியாக செல்வதற்கானவானூர்தி  போக்குவரத்து வாய்ப்பு இருந்தாலும் அவை கனடாவை 18 நவ 2013 மதியம் 3 மணிக்கு தான் அடையும்,அதுவரையில் குழந்தைகள் தனியாக விட்டு வைப்பது பெரிய சிக்கல் ஏற்படுத்துவிட்டால் ? வேறு வழியில்லை, வேறுவழியில்லை, 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகையில் தம்பியின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்வு, அதை முடித்துஅங்கிருந்து சிற்றுந்தில் 2 மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடலாம், அன்றே திருச்சியில் மாலை 5:30 மணிக்குகொச்சி வழியாக பெங்களூர் செல்லும் வானூர்தியில் ஏறினால் மாலை 8 மணிக்கு பெங்களூருவை அடைந்துவிடும்,பிறகு 6 மணி நேரம் ஓய்வு, அங்கிருந்து பிரான்ஸ் ஏர்வேஸ் 18 நவ 2013 அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, பாரிஸைஅன்று காலை  8 மணிக்கு அடைந்து, இரண்டு மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு காலை 10 மணிக்கு புறப்பட்டால்அன்று மதியம் 12:15க்கு மோண்ட்ரியல் அடைந்துவிடலாம், எனவே எனது பயணத் திட்டம்
 
எனது புறப்பாடு
 
15 நவ 2013 0920 சிங்கையில் இருந்து சென்னைக்கு காலை 1100 மணிக்கு போகும், பிறகு ஒருநாள் விட்டு 
17 நவ 2013 1530 திருச்சியில் இருந்து கொச்சி வழியாக பெங்களூரூ மாலை 20:25 போய் சேரும்,
18 நவ 2013 1:45 (அதிகாலை) பெங்களூரில் இருந்து பாரிஸ், 2 மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு
18 நவ 2013 10:45 க்கு பாரிஸிலிந்த்து மோண்ட்ரியல், அங்கு சென்று சேரும் நேரம்
18 நவ 2013 12:15 (நன்பகல்), ஆக மொத்தமாக பெங்களூரில் இருந்து 20 மணி நேரப் பயணம், ஆனால் தேதிபடி வெறும் 11மணி நேரம். பூமி சுழலும் திசைக்கு எதிர் திசை பயணம் என்பதால் 11 மணி நேரம், எதிர்திசையில் சென்றால்கூடுதலாக இன்னும் இரண்டு மணி நேரமாகி இருக்கும்.
 
பயணம் குறித்து இரண்டு திங்கள் முன்பு முடிவு செய்திருந்தாலும், பயணத்தேதி, வழித்தடம் இவற்றை முடிவுசெய்யவே ஒருவார காலம் பிடித்தது, பின்பு குளிர் ஆடைகள், காலணிகள், உணவு பொருள்கள் உள்ளிட்டஅனைத்தையும் பயணத்தேதிக்கு ஒரு திங்கள் முன்பாகவே வாங்கி சேகரித்தோம்.
 
எந்த ஒரு நெடுநாள் பயணத்திற்கும் எடுத்துச் செல்லும் பொதுவான பட்டியல் என்னிடம் உண்டு, அதன் படி அனைத்தும்எடுத்து வைத்துள்ளோமா என்பதை பயணத்தின் முதல் நாள் இரவு சரிபார்த்துக் கொள்வேன். உடைகளைப் பொருத்தஅளவில் வெளி ஆடைகளுடன், தூக்கிப் போட வேண்டியது என்று எடுத்து வைத்திருக்கும் காலுறைகள்,உள்ளாடைகளைத் தான் எடுத்துச் செல்வேன், ஒவ்வொரு நாளும் பயன்படுத்திய பிறகு அவைகளை அங்கேயேகுப்பையில் போட்டுவிட்டு வருவது. இதற்கு காரணம் பொதுவாக நல்ல நிலையில் இருக்கும் துணிகளை அவ்வளவுதூக்கிப் போட மனம் வராது, உள்ளாடைகளை ஓராண்டுக்கு மேலும் துவைத்து துவைத்து பயன்படுத்துவதும் உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்ப‌தே.
 
10 நாளைக்கு மேல் வெளிநாட்டுக்கு செல்வ‌தென்றால் க‌ண்டிப்பாக பயணக் காப்பீடு இன்றிய‌மையாத‌து, எதிர்பாராமருத்துவம் தவிர்த்து குறிப்பாக‌ வானூர்த்தி சேவைக‌ள் எதிர்பாராமல் முடங்கும் பொழுது ந‌ம‌க்கு கைகொடுக்கும், எனக்கும் அப்படி ஒரு நிலை வருவது போல் இருந்தது.

சிங்கையில் இருந்து சென்னை நோக்கி ஜெட் ஏர்வேஸில் புறப்பாட்டேன்...


நேரமின்மையால் இரண்டு திங்களுக்கு முன்பு எழுதியதை இப்பொழுது தான் பதிவேற்றுகிறேன்

இனி சிங்கையில் இருந்து புறப்பட்டது முதல் திரும்பு வரையில் பார்த்தவற்றையும், நடந்தவற்றையும் அடுத்து பார்ப்போம். 

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்