பின்பற்றுபவர்கள்

21 நவம்பர், 2011

விஜயகாந்த் சட்டசபைக்குச் செல்லாதது ஏன் ?


திமுகவுக்கு எதிராக அடித்த சட்டசபைத் தேர்தலில் 29 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமை தேமுதிகவிற்கு கிடைத்துவிட்டது, ஒரு ஆண்டு சென்றதும் தான் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வேன் என்று கூறி இருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனால் எதிர்பார்த்தப்படி உள்ளாட்ச்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியால் இருந்து கழட்டிவிடப்படவே உதிரிக்கட்சிகளைத் தேற்றிக் கொண்டு உள்ளாட்ச்சித் தேர்தலை சந்தித்தார் குறிபிட்டபடி எந்த ஒரு நகராட்ச்சிக் கூடக் கிடைக்காத விரக்தியில் இனி அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வதன் மூலமே மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும் என்று நினைக்கிறது தேமுதிக.

மற்றக் கட்சிகளைப் போன்று அரசியலில் நீண்டகாலம் இருந்த ஒரு தலைவரின் தோற்றுவிப்பாக தேமுதிக இருக்கவில்லை, திராவிடக்கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்ற எதிர்ப்பார்புகளாலும், ரஜினி போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படலாம் என்று நினைத்த மக்களின் எதிர்ப்பார்ப்பை மூலதனமாக வைத்து தேமுதிக துவங்கப்பட்டது, எதிர்ப்பார்ப்பிற்கும் மேலாக சுமார் 8 விழுக்காட்டினரின் வாக்குகளை தேமுதிக தக்க வைத்துள்ளது, இந்த வாக்குவிகிதம் சரியாமல் இருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிப்பதவிகள் உருவாக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு தேர்தலுக்கு வேலை பார்க்கும் அளவுக்கு தொண்டர்களை உருவாக்கி இருந்தது தேமுதிக. தமிழ்நாட்டின் எந்த மாவட்ட சட்டமன்ற தொகுதி என்றாலும் 10000 வாக்குகள் வரையிலும் தேற்றிவிடும் அளவுக்கு தேமுதிக வலுவாகவே உள்ளது.

அதிமுக - திமுக - அதிமுக - திமுக என்று மாறி மாறி வேறு வழியின்றி மக்கள் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சூழலில் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கும் தேமுதிக பொறுப்பான எதிர்கட்சியாகச் செயல்பட்டால் இந்த அதிமுக - திமுக சுழற்சியைத் தடுக்க முடியும் என்பது உண்மை தான். கருநாநிதி சரி இல்லை என்று தான் ஜெ -விற்கு மறு வாய்ப்பு வழங்குகிறார்கள், அதே போல் ஜெ சரி இல்லை என்றால் வேறு வழியின்றி கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்குறார்கள், கங்கு கொண்டிருக்கும் கொள்ளைக்கட்டையைவிட புகைந்து கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையால் தலை அதிகமாக தீய்ந்து போகாது என்றே நினைக்கின்றனர், ஆனால் புகைந்த கொள்ளிக்கட்டை தலையில் ஏறியதும் மீண்டும் கங்கு கொள்ளத் துவங்குறது என்பதை மட்டும் வாக்கு அளிக்கும் மக்கள் உணருவதில்லை.

இது போன்ற சூழலில் புதியதொரு கட்சி ஆட்சி அமைக்க பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதன் மூலம் தான் வளரமுடியும். ஏனெனில் தமிழ்நாட்டின் மையப் பிரச்சனைகளுக்கு இயக்கங்கள் தேவையற்றது தான் இன்றைய அரசியல், திராவிர இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பண்ணையார்களின் ஆண்டான் அடிமை முறையை ஒழிக்கவும், அதற்கு ஆதரவு கொடுத்த காங்கிரசினை எதிர்த்து துவங்கியது. ஆனால் இன்றைய சூழலில் திராவிட அரசியல் என்பதும் அது முன் வைத்த திராவிட அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டதால், தன்னல நோக்காகவும் குடும்ப அரசியலாகத் தொடர்வதால், இவற்றிற்கு மாற்றுத் தேடு வேறெந்த மையப் பிரச்சனையும் இல்லை, இருந்த ஒரே ஒரு ஈழப்பிரச்சனையையும் அரசியல்வாதிகள் விருப்பம் போல் விளையாடி ஒழித்துவிட்டார்கள், எனவே அனைத்து மக்களை மையப்படுத்திய பிரச்சனைகள் இல்லாத சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாற்றங்களின் விடையாக நிற்கிறது.

29 இடங்கள் சட்டமன்றத்தில் பிடித்திருப்பது தேமுதிகவிற்கு பலம் தான், ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகள் எழுப்பி குடைச்சல் கொடுத்துக் கொண்டு சட்டமன்ற செயல்பாடுகளின் கவனத்தைப் பெற்று மக்கள் செல்வாக்கப் பெற முடியும் என்று தேமுதிக நினைக்கிறது, அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப் பெற்றதன் மூலம் நேரடியாக சட்டமன்ற விவாதங்களில் தானும் பங்குபெறுவது விஜயகாந்த் தனக்கு பலவீனம் என்றே நினைக்கிறார். இதற்கு மாற்றாக வெளியில் இருந்தே ஆளும் கட்சியை கடுமையாகச் சாடி தேமுதிகவை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்.

இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்கள் கட்சித் துவங்கினால் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆபத்து தான், ஏனெனில் விஜயகாந்தை அரசியல்வாதியாகப் பார்த்து வருவது அல்ல இன்றைய வாக்குகள், அவருக்கு கிடைக்கும் வாக்குகளும் செல்வாக்கும் அவரைப் போன்று திரையில் இருந்துவரும் பிற நடிகர்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும், மற்றபடி விஜய் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.

விஜயகாந்து வரும்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவாரா என்பதெல்லாம் அதிமுக - திமுக கட்சிகளின் செயல்பாடு பொறுத்தது, விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே கூட ஏதாவது நடிகரைத் தூண்டிவிட்டு புதுக் கட்சித் துவங்கினால் தான், விஜயகாந்தை அடுத்த தேர்தலில் அவற்றால் சமாளிக்க முடியும்.

16 நவம்பர், 2011

அந்நியன் படத்து அம்பிகளும் தீவிரவாதிகளும் !

பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் தீவிரவாதி என்கிற சொல்லுக்கு வடிவம் கொடுத்து வைத்திருப்பது ஊடகங்களும், அரசுகளும் தான், தீவிரவாதிகள் என்பவர் யார் ? தீவட்டிக் கொள்ளைக்காரர்களா ? தீவிராவதிகளுக்கு அரசு தண்டனைக் கொடுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ட்விட்டர் நண்பர் ஒருவர். பொதுவாக பொதுப் புத்தியில் ஊறிப் போனவர்களுக்கு எதையும் விளக்கினாலும் புரியாது, சிந்தாந்தங்கள் பேசும் அளவுக்கு நான் இசங்களைக் கரைத்துக் குடித்து இருக்காவிட்டாலும், கொஞ்சமேனும் பொதுப் புத்தியை தாண்டி சிந்திக்கும் ஆற்றல் உண்டு, அது வலையுலகினால் வாய்க்கப் பெற்றது என்று கூறுவேன். காரணம் வலைப்பதிவுகள் சொந்த அரசியல் தாண்டியும் பலவற்றை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவை என்பதால் பல்வேறு தரப்பினரின் கருத்தைக் கேட்டு நமது எண்ணத்தை சீர் செய்து கொள்ள முடியும் என்பது என் கருத்து. திரும்ப தீவிரவாதிக்கு வருவோம்.

தீவிரவாதம் என்பது பலவகை உண்டு மதத்தீவிரவாதம், மொழித் தீவிரவாதம், இனத் தீவிரவாதம் மற்றும் பிற உரிமை மீட்புக்கான தீவிரவாதம், ஆனாலும் அரசுக்கு எதிரானக் கருத்துக் கொண்டவை, பொது மக்களுக்கு ஊறு விளைக்கத் தக்கவை என்று அறியப்படும் போது இவ் அமைப்புகளுக்கு தீவிரவாத என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது, அதற்கு குறிப்பிட்ட குழுவின் செயல்பாடுகள் காரணமாகக் கூட இருக்கலாம், ஆனாலும் ஒரு நாட்டில் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களில் 99 விழுக்காட்டினர் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகத் தான் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது, எனவே தீவிரவாதிகள் என்பவர்கள் பிற நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து பயமுறுத்துபவர்களோ, வானத்தில் இருந்து குதித்த ஏலியன்களோ இல்லை, தங்களின் குறிக்கோள் என்று எதோ ஒன்றை வைத்துக் கொண்டு அது நிறைவேற வாய்ப்பில்லாத போது அரசுகளைப் பணிய வைக்க பொது மக்களின் வாழ்க்கை சிதரடித்துப் பார்ப்பவர்கள் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளை ஒப்பிட இவர்களால் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பு மிகுதி :)

தீவிரவாதம், சரி தவறு என்று நான் கூற வரவில்லை, இன்னும் சொல்லப் போனால் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யும் உரிமை எவருக்குமே கிடையாது என்ற கொள்கை கொண்டவன். தீவிரவாதி என்பவன் யார் ? சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தண்டனைக் கொடுப்பவர்கள், தங்கள் ஆளுமைக்கு பணிய வைப்பவர்கள், மிரட்டிப் பார்ப்பவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். இவர்கள் தானே ?

அப்படிப் பார்த்தால் இந்தியன் படத்தில் வரும் இந்தியன் தாத்தாவும், அந்நியன் படத்தின் அம்பியும் கூட தீவிரவாதிதான். ஆனாலும் தீவிரவாதி என்றால் தாடி வைத்து பார்க்க நடுக்கம் ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒருவனின் தோற்றத்தை மனதில் நிறுத்தி இருப்பவர்கள் ஒப்புக் கொள்வார்களா ?

ஒரு அரசை அகற்ற அதற்கு எதிராக வாக்களிக்கும் போது பொதுமக்கள் கூட அப்போதைய அரசுக்கு எதிரானவர்கள் தான், என்ன அவர்கள் கையில் ஆயுதம் இருக்காது என்பதால் பொதுமக்கள் திவிரவாதிகளாக அறியப்படுவதில்லை :)

ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்களால் தீவிரவாதி அடையாளப்படுத்தப்பட்ட நாடு கடந்த சுபாஸ் சந்திர போஸ் ஒரு தீவிரவாதி என்பதை நம்ப மறுக்கும் மனம் தீவிரவாதம் பற்றிய பொது புத்திகளை மட்டும் அகற்றிக் கொள்ளாமல் அவர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முழக்கம் இடுவது ஏன் ?

*******

பொதுவாகவே மரண தண்டனைப் பற்றிய எனது தனிப்பட்டக் கருத்து கூடாது என்பதே, இது வரை நாம் கண்ட மரண தண்டனைகளெல்லாம் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேரடி அல்லது மறைமுக தொடர்ப்பில்லாததால் தான் வழங்கப்பட்டு இருக்கிறது, நாம் அன்றாடம் படிக்கிறோமே குடும்ப உறவுக்குள் வெட்டுக் குத்து கொலை பாலியல் வண்புணர்வு, கள்ளக் காதல் அதன் தொடர்பில் கொலை, இவற்றிற்கெல்லாம் பாதிக்கப்பட்ட உறவினர்களால் மரண தண்டனை வழங்கும் படி கேட்கப்பட்டுள்ளதா ? அண்மையில் ஒரு தந்தை தன் மகளை 200 பேர்களுக்கும் மேலானவர்களிடம் பாலியல் தொழில் ஈடுபடுத்தி இருக்கிறார், அந்த பெண் உயிரோடு இருக்கிறாள் மேலும் குற்றத்துக்கு தூண்டியவன் அவளுடைய தந்தை தான் என்பதால் அவனை மன்னித்து விட்டு விட முடியுமா ? அவள் மைனாராக இல்லாமல் இருந்து தன் தந்தை மீது கொடுத்த புகாரை திரும்மப் பெற்றால் அவனுக்கு தண்டனைக் கிடைக்காது, அவ்வாறு நடந்திருந்தால் நீதி நிலை நாட்டப்பட்டதாகக் கூறுவீர்களா ? இது பாலியல் வழக்கு தான், ஆனாலும் குடும்பத்தினுள் நடக்கும் கொலைகள் அதற்கான தண்டனைகள் என்னும் போது வெறும் ஆயுள் தண்டனையுடன் முடிந்து விடுகிறது.

உறவுக்குள் குற்றம் செய்தவர்களை தூக்கில் போட உறவினர்கள் கூட வேண்டுகோள் வைப்பது இல்லை, குற்றம் அதற்குக் கடுமையான தண்டனை எல்லாம் குற்றம் செய்த நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே யான உறவு அல்லது உறவின்மையைப் பொருத்தே அமைகிறது. எந்த ஒரு தூக்குத் தண்டனையும் நேர்மையாக குற்றம் தொடர்ப்பில் மட்டும் தான் கொடுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை, அப்சல் போன்ற தீவிரவாதிகளுக்கான மரண தண்டனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கும் போது நான் மேலே முதல் பத்தியில் இருந்தவற்றைத் தான் கூறினேன். அப்சல் தன் தீவிரவாதக் குழுவினருக்குள் ஒரு 10 பேரைக் கொன்று இருந்தால் அவனுக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டு இருக்குமா ? தீவிரவாதிகளைக் கூட இருந்தே அழித்தான் என்று மெடல் குத்தப்பட்டு இருக்கலாம்.

சட்டத்தைக் கையில் எடுக்கும் அந்நியன்களுக்கும், இந்தியன் தாத்தாக்களுக்கும் தூக்கு மேடைகள் கூடாது என்போர் தீவிரவாதிகளுக்கான தண்டனைகள் மட்டும் ஞாயம் என்பதும் அவை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் என்ன நியாயம் ?

அந்நியனுக்கும் அப்சல்குருவுக்கும் என்ன வேறுபாடு அந்நியன் அரசு அதிகாரிகளை கொலை செய்கிறான், அப்சல்குரு அரசை எதிர்ப்பதாக நினைத்து குண்டு வைக்கிறான். ஒருத்தனுக்கு கைத்தட்டாம் மற்றவனுக்கு கெடா வெட்டாம்.

பொது புத்தியின் ஊறிய மனங்கள் தங்களை நீதிபதிகளாக நினைத்துக்கொள்ளும் போது இவைபற்றியெல்லாம் சிந்திக்க மறுக்கின்றன

14 நவம்பர், 2011

சங்கராமன் கொலையாளிகளுக்கும் தூக்கு தண்டனை ?

சங்கராமன் கொலை நிகழ்வை யாரும் மறந்துவிட முடியாது, தாம் அன்றாடம் கணக்கெழுதும் கோவிலுனுள்ளே நரசிம்ம அவதாரத்தால் கொலை செய்யப்பட்ட ஹிரன்யகசிபு போன்று கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலை நடந்து 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, இதனிடையே தமிழக அரசு விசாரித்தால் தங்களுக்கு ஞாயம் கிடைக்காது என்று கூறி வேறு மாநிலமான பாண்டிச்சேரிக்கு வழக்கு இழுத்தடிப்பட்டுவிட்டது. இடை இடையே நீதிபதிகளிடம் பேரம் பேசியதாக ஆடியோக்கள் வெளியாகி பரப்பரப்பானது தான் மிச்சம், கொலையாளிகளுக்கு தண்டனை இன்னும் கிடைத்தபாடு இல்லை.

மறுபடியும் தலைப்பைப் பாருங்க, அப்படியெல்லாம் நடக்கும் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடலாம் என்று நானும் பார்க்கிறேன், மன நலம் குன்றியவன் ஒருவன் செய்த கொலைக்காக தூக்கில் போடுகிறார்களாம், அதனை எதிர்க்க துப்பு இல்லையா என்று கேட்கிறது தினமலர்

சோத்துக்கு தண்டம் பூமிக்குபாரம் மட்டுமில்லாது பிற உயிருக்கும் ஆபத்து என்று இருப்பவனை தூக்கில் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன ? ஆனா சத்தியமாக சங்கராமன் கொலை வழக்கில் ஒரு வேளை பெரியவாளுக்கு தூக்கு தண்டனைக் கிடைத்தால் கண்டிப்பாகப் போராடுவோம். மரண தண்டனைக் கொடுமையானது, அதுவும் பலரும் கடவுளாக நினைப்பவருக்கு மரண தண்டனை கடவுளுக்கே கொடுக்கும் தண்டனையாகும்.

உயிர் கொலைக்காக இன்னோர் உயிரை கொன்று பழிதீர்ப்பது அரசு செய்யும் கொலையே என்று சொல்வதில் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.

*******

எதற்காக இந்தப்பதிவு ?

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

என்ற பெயரில் ஒரு கேவலமான கட்டுரையை வெளி இட்டிருக்கிறது தினமலர், அதில்

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!

-நமது சிறப்பு நிருபர்-

*******

செந்தமிழர்கள் மீது இந்த வந்தே.......







மாதிர தேசியவியாதிகளுக்கு என்ன கோவமோ ?

12 நவம்பர், 2011

தினமலர் வேறு தொழில் செய்யலாமே !

தினமலரின் திரித்தல் தெரிந்தும் பலர் படிப்பதற்குக் காரணமே அது எந்த அளவுக்கு கேவலாக செய்திகளை வெளியிடுகிறது, பொய் பரப்புகிறது, இட்டுக்கட்டி எழுதுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு பதலடிக் கொடுப்பதற்குத்தான், வெகுஜன ஊடகம் என்று கடைவிரித்திருக்கும் தினமலருக்கு இதைச் செய்யாவிட்டால் அவை வழக்கமான வாசக மந்தைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும், பொதுப் புத்திகளை வாசகர்களிடையே உருவாக்குவதில் தினமலருக்கு நிகர் வேறு எந்த நாளிதழும் இல்லை, மற்ற நாளிதழ்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு நிலையிலேயே நீடிக்கும் ஆளும் கட்சிக்கு அடிவருடுதல் என்ற நிலை அவர்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, ஆனால் தினமலர் அப்படிப்பட்டது அல்ல, அவர்கள் அடிவருடும் அரசியல் கட்சி எப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியாகத்தான் இருக்கும், சென்ற திமுக ஆட்சியின் போது ஓயாமல் ஜால்ரா அடித்து செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு பகுதியே ஒதுக்கி இருந்தது தினமலர், கருணாநிதியின் அரசியலை மறைமுகமாக எதிர்த்தாலும் விளம்பர லாபம் கருதி திமுக ஆளும் கட்சியாக இருந்த போது எப்போதும் ஜால்ரா அடித்தும், சிலவற்றை விமர்சிக்காமல் அடக்கியும் வாசித்தது. இருந்தாலும் கருணாநிதியின் ஆட்சி நீடிப்பதை தினமலர் விரும்பி இருக்கும் என்பது ஐயமே.

எம்மைப் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் அடிப்படைக்காரணம் உண்டு, திமுக கருணாநிதியின் வாரிசுகளால் ஆக்கரமிக்கப்பட்ட பிறகு அது தன் அரசியல் பாதையில் இருந்தும் கொள்கைகளிலிருந்தும் முற்றிலுமாக விலகி, ஊழல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்டவைகளிலும், மதுரை தினகரன் உள்ளிட்டவைகளில் கொலையானவர்கள் குறித்து அனுதாபமே இல்லாமல் குடும்பமாகக் கூடிக் கொண்டது மேலும் குறிப்பாக இலங்கைப் போராட்டத்தின் போது காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டார்கள் என்பதே. ஆனால் இவை போன்று கொள்கை ரீதியாக கருணாநிதி பற்றிய விமர்சனம் செய்யாத தினமலர் வழக்கமான திராவிட அரசியல் காழ்புணர்வு மற்றும் கருணாநிதி பற்றிய தீவிர வெறுப்பு என்ற நிலையிலேயெ உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகிறது, அரசியல் மட்டுமல்ல திரைத்துறையைச் சார்ந்த நடிகைகளை விபச்சாரிகள் என்று கூறி அவர்களை அடையாளப்படுத்துவதாக படங்களை வெளியிட்டு திரைத்துறையினரிடம் செருப்படிப் படாத குறையாக கண்டனங்களைப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டது

******

எந்த ஒரு குற்ற (கிரிமினல்) வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று நீதிபதிகளே குறிப்பிடுவது கிடையாது, காரணம் குற்றம் சுமத்தப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்பது தெளிவு, விசாரணைகள், சாட்சிகள் அடிப்படையில் தான் ஒருவர் குற்றவாளி, குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது, மற்றபடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்படுவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் (accused) என்றே அழைக்கப்படுகிறார்கள். வழக்கு முடியும் வரை குற்றத் தொடர்புடையவர் குற்றம் சுமத்தப்பட்டவர் என்றே அழைக்கபடுவர், ஒருவர் குற்றமற்றவரா என்று தெரியாமல் அவரை குற்றவாளி என்று தொடர்ந்து அழைப்பது தான் குற்றம். 30 ஆண்டுகளாக நாளிதழ் நடத்திவரும் தினமலருக்கு இது தெரியாதா ? இவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது என்றால் 'பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சங்கராமன் கொலைக் குற்றவாளி ஜெயந்திர சரஸ்வதி ஆஜரானார்' என்று செய்திகள் போட்டு இருக்கலாமே இவர்கள், பிறகு ஏன் ?


இது போன்ற கேவலாமான காழ்புணர்வு தலைப்புகளை இட்டு செய்தி வெளியிட்டு வாசகர்களின் பொது அறிவையும் பாழ்படுத்தும் தினமலரின் செயல் கண்டிக்கத்தக்கது, திமுகவினர் நினைத்தால் மேற்கண்ட இழிவிற்கு மான இழப்பு வழக்கே தொடுக்கலாம், செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறதோ தினமலர், நான் கனிமொழி இராசா ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று சொல்லவரவில்லை, அவற்றை முடிவு செய்வது நீதிமன்றம் தானே. இப்படிப்பட்ட இழிதொழிலாக்கி நாளிதழ் நடத்துவதற்கு ஆளும் அரசியல்வாதிகளுக்கு குண்டி கழுவி விட்டு சேவை செய்து துட்டுப்பார்க்கலாம், துய்மை செய்யும் தூய பணி. செய்வார்களா ?

8 நவம்பர், 2011

அணு மின் நிலையத்தின் செயற்கை பேரிடர் !

அப்துல்கலாம் சொல்லிவிட்டார் அதனால் அணு உலையால் ஆபத்து இல்லை என்பது போல் இரண்டு நாட்களாக பரப்புரை நடைபெறுகிறது, 5 ஆண்டு ஜனாதிபதி பதவி வகித்த அணு விஞ்ஞானியின் கைமாறு அணு உலையில் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடிகிறது, புக்குஷிமா விபத்திற்கு பிறகு அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்து கொண்டே கூடங்குளம் பொதுமக்கள் அதனை முற்றிலுமாக எதிர்கிறார்கள் என்பதால் நில அதிர்வு, இயற்கை பேரிடர் ஆபத்து சூழல் உள்ள பகுதி இல்லை என்கிற பரப்புரை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் புக்குஷிமா விபத்து உணர்த்துவது வெறும் இயற்கைப் பேரிடர் தொடர்ப்பான எச்சரிக்கை மட்டும் தானா ? உலக நாடுகள் அனைத்துமே இதிலிருந்து படித்துள்ள பாடம் அணு உலைகளை ஏவுகணையால் தாக்கினால் அவை அந்த நாட்டிற்கே பேரிடராக அமையும் என்பது தான், ஆனால் இதனை வசதியாக அணு உலைக்கு ஆதரவானவர்கள் மறந்துள்ளார்கள் / மறைத்துள்ளார்கள்

ஒரு நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதலில் சில ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படலாம், சில நகரகங்கள் அழியலாம், அவை மீண்டும் சரி செய்வதற்கு சில ஆண்டுகள் பிடிக்கலாம், ஆனால் அணு உலை போன்றவற்றை ஏவு கணைகள் தாக்கும் போது அந்த அழிவுகளும் அதன் சுவடுகளும் அதன் கதிர்வீச்சுகளும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். ஜப்பானைப் போல் விரைந்து செயலப்பட்டு அந்தத் தடங்களை மாற்றி அமைக்கும் திறன் இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்னர் அணு உலைகளுக்கு ஆதரவு தெரிவிக்கலாமே.

ஏற்கனவே கல்பாக்கத்தில் செயல்படும் அணு நிலையம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது இரண்டாவதாக கூடங்குளம் என்னும் இலக்கையும் ஆக இரண்டு இலக்குகளை எதிரிகளுக்கு விட்டு வைப்பது (தமிழ்) நாட்டிற்கு நல்லதா ?

இலங்கை - சீனா உறவுகள் இந்திய - இலங்கை உறவை வீட பலமாகக் கூடி வரும் போது, இலங்கை ஏவுகணைச் சோதனைகளை நடத்தினால் அதனை தடுக்க இயலாத ஆதரவு சூழல் தான் இந்தியாவில் உள்ளது, அந்தத் சோதனையில் ஏவுகணை தவறுதலாக கூடங்குளத்தில் விழுந்தால் கைவிரித்து எதிர்பாராது வருந்துகிறோம் என்று இலங்கை அறிவித்துவிடும், ஒப்புக்கு கண்டனம் செய்யும் ஐநா, அப்போதும் இலங்கைக்கு ஆதரவாக குரல்கள் இந்தியாவில் இருந்தே ஒலிக்கலாம், இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டினர் தான்.

அணு உலையால் ஆபத்து இல்லை என்று சொல்லும் மத்திய அரசு அதனைச் சுற்றி மத்திய அரசு அலுவலகங்களை அமைத்து பொது மக்களின் பயம் போக்க முன்வருமா ?

அணு உலை என்பது, அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளும் தாக்குவதற்கு ஒரு நாடு தன்மீதே கட்டிக் கொண்டுள்ள அணுகுண்டு ஆகும்.

மின்சாரம் தேவை இன்றியமையாதது தான், ஆனால் அதன் ஒளியைப் பார்க்க தமிழ்நாட்டினருக்கு கண்கள் இருக்க வேண்டுமே.

ஆயுத போட்டப் போட்டிகள் நிறைந்துள்ள நாடுகளைச் சுற்றிலும் வைத்துள்ள எந்த ஒரு நாட்டிற்கும் அணு உலைகளை அதன் கண்களைக் குத்தும் கைகள் தான். தலைக்கு மேல் தொங்கும் கத்தி எப்போதும் பாதுகாப்பாகத்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா ? அணு உலைக்கு ஆதரவானவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் ?

2 நவம்பர், 2011

கலவை 02/நவ/2011 !

தீபாவளி : ஒருவழியாகத் தீபாவளிப் பேச்சு, ஒரு நான்கு நாள் பயணமாக உறவினர் இல்ல நிகழ்வுக்கு இல்லத்தோடு வந்து அதே விரைவில் தீபாவளிக்கு முன்பே மகள் பள்ளித் தேர்வை முன்னிட்டு திரும்ப வேண்டியதாகிவிட்டது, 400 - 500 வெள்ளிகள் இருந்தால் போதும் வார இறுதியில் கூட வந்து திரும்பலாம் சிங்கை - சென்னை பக்கம் தானே. இருந்தாலும் பயண அலுப்பு ஒருவாரத்திற்கு தொடரத்தான் செய்கிறது. தீபாவளி துணிகளையெல்லாம் சென்னையிலேயே வாங்கியாச்சு, நல்லி சின்னச் சாமி செட்டி(யார்) கடையில் வாங்கிய பட்டுவேட்டி பட்டுச் சட்டைத்தான் என்னோட தீபாவளித் துணி, ஆயிரம் பட்டுப் பூச்சிகளின் ஆத்ம சாந்தியின் மவுனத்தில் பட்டுவேட்டிச் சட்டை நன்றாகவே பளபளத்தது. சொன்னா யார் கேட்கிறாங்க ஆடுமாடு கோழி வளர்ப்புப் போல் பட்டுபுழுவும் மனித அன்றாட வாழ்க்கையின் துணித் தேவையை நிறைவுச் செய்யப் படைக்கப்பட்டதாம், அப்படியே சுடுதண்ணியில் அமுக்கி கொன்றால் பாவம் இல்லையாம். பட்டு உடைகளில் கிடைக்கும் பீடு(கம்பீரம்) வேறெதிலும் கிடைக்குமா ? பெண்கள் இன்னும் புடவைகளைத் துறக்காமல் இருப்பதற்கு பட்டும் அதன் பகட்டுமே காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சும்மாச் சொல்லக்கூடாது தீபாவளிக் கொண்டாட்டம், அதன் களை இவைகளிலெல்லாம் சென்னையை மிஞ்ச நகர் இல்லை. பட்டாசு விறுவிறுப்பாக விற்கவில்லை மற்றபடி துணிக்கடை, நகைக்கடை விற்பனை படுவேகம். முகப்பில் சின்னதாகத் தெரியும் நல்லி (பழைய கடை) பெரிய குடோன் போல் உள்ளே சென்று கொண்டே இருந்தது. விலை ? மற்ற அஞ்சு மாடிக் கட்டிடத் துணிக்கடைகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை, அதே போல் பொதுமக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளிலும். பால் பாட்டிலின் எஞ்சிய பாலைக் கொட்டிக் கழுவ இடம் தேடி படாதபாடு பட்டேன்.

மூன்று நாள் பயணத்திலும் ஒரு நாள் பயணமாக நண்பருடன் கீழத் திருப்பதிவரைச் சென்று திரும்பினேன். கீழத் திருப்பதி நுழைவாயில் எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள், அன்றாடம் அவரது சுப்ரபாதம் திருப்பதிக் கோவிலில் ஒலிப்பதன் நன்றிக்கடனோ தெரியவில்லை, குஷ்பு தவிர்த்து தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகை / பாடகிகளுக்கு தமிழ்நாட்டில் சிலை இருப்பது போல் தெரியவில்லை, அண்மையில் நடிகை சாவித்ரிக்கும் ஆந்திராவில் சிலை அமைத்துள்ளார்கள். நம்ம தமிழ்நாட்டில் சிலைகள் வைத்தால் ஒருவேளை சாதி சங்கத்துக்கு அவை சேர்ந்திடுமோ ? சுப்புலட்சுமி அம்மாள் என்கிற தமிழச்சியை பெருமைப்படுத்தியுள்ள ஆந்திர அரசுக்கு பாராட்டுகள்.

(இணையத்தில் எடுத்தப்படம், நேரில் காரில் இருந்தபடி படம் எடுக்க சரியாண கோணம் அமையவில்லை)


திரும்பும் போது 'பீமாஸ் ஹோட்டல்' ரெஸ்டாரண்டில் உண்டு வந்தோம். பீமாஸ் தனியாக இருக்கும் ரெஸ்டாண்டின் உணவுச் சுவை இங்கு இல்லை, ஒருவேளை இது விடுதியுடன் இணைந்துள்ளதால் அவ்வளவு தான் இருக்கும் போல. கோங்ரா சட்னி, பருப்புப் பொடி இருந்தது. கர்நாடகா உணவுகளில் இனிப்புக் கலந்திருக்கும் ஆந்திரா உணவுகளில் காரம், சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையின் நோயாளிகளில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் மிகுதியாகச் சிகிச்சைப் பெருகின்றனர், காரணம் காரம் தான் என்கின்றனர் சிலர்.

திருப்பதிப் போகும் வழியில் ஒரு இரயில் நிலையம், இந்தியாவிலேயே மிக நீளமானப் பெயர் கொண்ட இரயில் நிலையமாம், நண்பர் கூறினார். 'வெங்கட நரசிம்ம ராஜுவாரிப் பேட்டை' நீங்க கேள்விப்பட்டு இருக்கிங்களா ? திருத்தணி தாண்டி வருகிறது இந்த நிலையம்.

கீழத்திருப்பதியில் பெருமாளைப் பார்க்கவில்லை, ஆனால் பெருமாள் மாடுகள் அதிகம் தென்பட்டன, வெள்ளிக்கிழமைகளில் கடைகடையாக வசூல் செய்கின்றன, வழக்கமான பூம் பூம் உறுமி இல்லை, அதற்கு பதிலாக நாயணம் வாசிக்கிறார் மாட்டுகாரர். மாடும் தலையாட்டுவதில்லை, மாட்டின் தலையில் கட்டியிருக்கும் உண்டியலில் சில்லரைக்காசைப் போடுகிறார், சிலர் மாட்டைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். ரொம்ப ஆண்டுகள் ஆச்சு பூம் பூம் மாடுகளை நான் நேரில் கண்டேன்.

தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு தான் சென்னையில் இருந்து சிங்கைத் திரும்பியதால் அலுப்பு, சோர்வு நீடிக்க இந்த ஆண்டு தீபாவளி காலையில் 8 மணிக்கு எழுந்து கொண்டோம், அதன் பிறகு எல்லாவற்றையும் செய்து முடிக்க பகல் 11 ஆகி இருந்தது. இந்த ஆண்டு தீபாவளி ஏன் இவ்வளவு ஃபோராக இருக்கிறது என்று மகள் கூட அலுத்துக் கொண்டாள். செங்கதிருக்கு இது இரண்டாம் தீபாவளி. அக்கா மத்தாப்பு கொளுத்துவதை வெகுவாக ரசித்தான். அதற்கும் முன்பே சென்னையில் பட்டாசு கொளுத்திப் பார்த்தாச்சு, சிங்கையில் பூத்திரி மட்டும் தான் அனுமதி என்பதால் பட்டாசு வெடிக்கும் ஆசையை சென்னையில் தீர்த்துக் கொண்டோம்.



******

நான் சென்னையில் இருந்த நாட்களில் பதிவர் நண்பர் குசும்பனை அழைத்துப் பேசினேன், பெயர் சொல்லாமல் அழைத்து கலாய்க்க அவரும் கடைசிவரை இன்னார் என்று கண்டுபிடிக்கவில்லை, நானும் சொல்லவில்லை அப்படியே துண்டித்தும் விட்டேன். அதே போல் அப்துல்லாவிடமும் ஒரு ஆட்டம், கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் பிறகு இன்னார் என்று சொன்னேன், ஓம்காரை அழைக்க அவரும் திணறினார். இன்னொரு நண்பர் டிபிசிடி மட்டும் தான் அழைத்ததும் குரலைக் கண்டுகொண்டார், ஒருவேளை எனது எண்ணை சேமித்து வைத்திருந்திருப்பார் அதன் வழியாகக் கூட கண்டுகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். சென்னை / தமிழகத்தில் இருந்து அழைத்தால் அங்கேயே இருப்பவர்கள் மட்டும் தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறார்கள், நன்றாக குரல் தெரிய பழகியவர்கள் கூட குரலை வைத்து இன்னார் என்று உடனேயே சொல்லமுடிவது இல்லை. இதப்பற்றி பஸ்ஸுல எழுத.....'உங்க குரல் எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலா ? உடனே கண்டுகொள்ள...' ஜீவ்ஸ் அடித்த கமெண்ட் ரசித்தேன், சிரித்தேன்.


******

இத எப்படிச் சொல்வது, சொல்லாமல் விட்டால் நாளை வரலாறு பழிக்குமோ ? அட நானும் 'ஏழாம் அறிவு பார்த்துட்டேன்' ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனம் வந்ததால் விமர்சனம் எழுதவில்லை, படம் ஒருமுறைப் பார்க்கலாம், ஏகப்பட்ட விளம்பரப் பின்னனிகளை காட்சிக்கு காட்சி வைத்து டெண்டுல்கர் கிரிக்கெட் சட்டைப் போல் ஒரே வெளம்பர உத்தியாக இருக்கு, தமிழ் உணர்வுடன் நமக்குத் தெரியாத போதி தர்மர் உள்ளிடவர்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் வெளம்பர நெடி சகிக்க முடியவில்லை, முன்பெல்லாம் திரைப்படம் போடும் முன் விளம்பரப்படங்களைப் போட்டு முடிப்பார்கள், இப்போது திரைப்படங்களின் ஊடாகவே வந்து தொலைக்கின்றன அவைகள், காசு கொடுத்து இந்த கண்றாவிகளையும் சேர்த்தே பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறோம், போதி தர்மரை வைத்து ஏர்செல்லுக்கு வெளம்பரம் கொடுக்கனுமா ? படம் பட்ஜெட் எகிறினால் நடிகரோ, இயக்குனரோ சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா ? ஏஆர் முருகதாசுக்கு 10 கோடியாம் ஒரு படம் இயக்க, இவ்வளவும் வாங்கிவிட்டு ஏன் வலுக்கட்டாயமாக விளம்பரங்களையும் பார்க்க வைக்கிறார்கள் ?

******

இளையராஜா வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வர அவரது மனைவி இல்லப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதும் காரணமாக இருக்கலாம். என்னதான் சொத்து சுகம், வான் புகழ் இருந்தாலும் இணையைப் பிரிவதில் கிடைக்கும் இழப்பை அவை ஈடு செய்யாது, அதைத்தான் 'சம்சாரம் போனால் சகலமும் போச்சு' என்பார்கள். இளையராஜாவிற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

பிகு: எனது இடுகைகள் அனைத்தும் தட்டச்சு செய்து, திருப்பிப் படிக்க நேரமின்மையால் அப்படியே வெளி இடுகிறேன், எழுத்துப் பிழையை பொருட்படுத்தாதீர்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்