பின்பற்றுபவர்கள்

குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூலை, 2009

இவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி...

ஒரு சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஆற்றல் உண்டு அவை கலைகள், விளையாட்டு மற்றும் படிப்பு அறிவுடன் தொடர்புடையது மட்டும் தான். தனது குழந்தையை சாதனை செய்யவைக்க வேண்டும் என்று வெறி கொண்ட பெற்றோர்களால் கடுமையான பயிற்சிக் கொடுக்கப் படும் குழந்தைகளுக்கும், தெருக் கூத்து, கம்பங்க் கூத்தாடி துன்புறுத்தி வித்தை செய்ய வைக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒன்று சாதனை என்ற பெயரில் மற்றது பிச்சை வயிற்றுப் பாடு என்பதைத் தவிர்த்து பெரிய வேறுபாடு இல்லை.

குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம், குழந்தைகளை வைத்து வேலை வாங்குபவர்களுக்கு தண்டனைக் கொடுக்கிறோம் என்று அரசு சொல்கிறது. சாதனைக்காக பயற்சி என்ற பெயரில் துன்புறுத்தப்படும் குழந்தைகளின் நிலைகளை கண்டு கொள்பவர்கள் குறைவே, ஏனெனில் இவை பெற்றோர்களின் ஆசியுடன் நடக்கும் சாதனை வன்முறை.

படத்தில் இருக்கும் பெண் குழந்தைக்கு பணிரெண்டு வயதிற்குள் தான் இருக்கும், பைக் ஓட்டும் படுபாவியின் கவனம் கொஞ்சம் பிசகினாலும் அவள் வயிற்றிலோ, மார்பிலோ மொத்த பைக் எடையும் இறங்கி அவளது வாழ்க்கையையே முடக்கிவிடும். சாதனைகள் தவிர்த்து, கடுமையான பயிற்சியின் போது காயம்படும் குழந்தைகள், இறக்கும் குழந்தைகள் பற்றிய செய்திகள் வெளியே வருவது கிடையாது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(படம் நன்றி தினமலர்)

குழந்தைகளை அவர்களது மனதுக்கும் வயதுக்கும் மீறிய செயல்களை செய்ய வைப்பதும், அதனை சாதனையாக எண்ணி மகிழ்வதும், பெற்றோர் தம் வீண் பெருமைக்கும் பேராசைக்கும் குழந்தைகளை வற்புறுத்துவதும் எந்த இடத்தில் நடந்தாலும் உடனடியாக கண்டிக்கப் படவேண்டும், அந்தக் குழந்தையைத் தவிர்த்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் உடலை வருத்திக் கொண்டு செய்யும் சாதனைகள் முயற்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்.

குழந்தைகளை வேலை வாங்குவது, அடிப்பது, காயப்படுத்துவது போலவே அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுப்பதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன் செயல்கள் (Child Abuse) தான்.

2 ஜூலை, 2009

நான் வளர்கிறேன் அம்மா !

ஒரு குழந்தை வலி என்றால் வெறும் அழுகையுடன் நிறுத்துக் கொள்வதுடன் அதை உணரத் தொடங்கி தவிர்க்க விரும்புவது 4 வயதில் இருந்து தொடங்குகிறது. தான் அடிபடுவது போல் பிறரை அடித்தால் வலிக்கும் என்று தெரியத் தொடங்கியதும் அதைச் சோதனை செய்து பார்த்து மகிழும் குழந்தைகள். அந்த வயதில் நாம் (பெற்றோர்கள்) கண்டிக்கிறோம் என்பது அதற்குத் தெரியாது, அடித்தால் திருப்பி அடிக்கும், அப்படி திருப்பி அடிக்கும் போது நாம் மீண்டும் அடித்தால் பயப்பட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டு மிகுந்து அழும். 'நீங்க அடிக்கலாம், நான் அடிக்கக் கூடாதா என்று கேட்கத் தெரியாது', 5 வயதைக் கடந்ததும் அப்படிக் கேட்டு வைக்கும். அதன் பிறகே பெரியவர்கள் கண்டிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளும்.

குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்குவது 5 வயதில் இருந்து தொடங்குகிறது. அதற்குத் தெரிந்து பெற்றோர்கள் பொய் சொன்னால், நாமும் சொல்லலாம் என்பதாக முடிவு செய்து கொள்ளும். முதலில் அடிக்கு பயந்து சொல்லும் பொய்களை பிறகு தவறுகளை மறைக்க சொல்லத் தொடங்கும், 8 வயதில் பொய் சொல்லி தவறுகளை மறைக்க முழுமையாகக் கற்றுக் கொள்ளும். இவை தெரியாமல் 'பொய் பேசுவியா ?' என்று கேட்டு கடுமையாக குழந்தைகளை தாக்கும் பெற்றோர்கள் உண்டு.

ஒரு குழந்தை பொய் பேசத் தொடங்கினால் அது தன்னளவில் உலகைப் பற்றிய அறிவும், எப்படி நடந்து கொண்டால் தண்டனைகளில் இருந்து தப்பிக்கலாம் என்கிற 'அறிவை' பெற்றிருப்பதாகவே பொருள். அதாவது குழந்தை அறிவு வளர்ச்சி பெற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் தான் குழந்தைகள் பொய் சொல்லும் செயல். இதைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் குழந்தைகள் பெரும் குற்றம் செய்வது போல் ஆற்றாமையால் புலம்பித் தீர்பதுடன் குழந்தைகளை கடுமையாக அடித்துவிடுவார்கள்.

"அப்பா என்னை அடிக்கலாம், அப்பாவை நான் அடிக்கக் கூடாதா ?" எதிர்த்துக் கேட்கும் குழந்தைகள் அவ்வாறு அடிக்கும் போது அவமானம் அடைந்ததாக நினைத்து உடனடியாக கை நீட்டிவிடாதீர்கள். பாதிப்பு அடையும் செயலுக்கான எதிர்வினை ஆற்றவேண்டிய அறிவை அவை பெற்றிருப்பதாகவே பொருள். குழந்தைகளின் செயலில் ஏற்பு இல்லை என்றால் பொருமையாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள், எளிமையாக தேவையான தகவல்களை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டால் குழந்தைகள் கற்பூரம் போல் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள். வாங்கி வைத்திருக்கும் பொருள் நமக்குத் தான், கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று குழந்தைகள் உறுதியுடன் நம்பினால் அந்த பொருள்களை திருடும் பழக்கம் கூட அவைகளுக்கு ஏற்படாது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு. கிடைக்காது என்கிற நிலையும் ஏக்கமும் தான் குழந்தைகள் திருடப் பழகுவதற்குக் காரணமாக அமைகிறது

உங்கள் குழந்தைகள் பொய் சொன்னாலோ, திருப்பி அடித்தாலோ உங்களுக்கு சினம் வருவதற்கு முன், உலகில் எதிர்த்து நின்று வாழ்வதற்கான அடிப்படை அறிவை குழந்தைகள் பெற்றுருக்கிறார்கள், தெரிந்து கொண்டுள்ளார்கள் என்று மகிழ்ச்சி அடையுங்கள், அதன் பிறகு அப்படி பேசுவது, அடிப்பது ஏன் தவறு என்பதை அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகள் எப்படியான அறிவு வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதே அவைகளின் நடவடிக்கை மூலம் வெளிப்படுகிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்