பின்பற்றுபவர்கள்

செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 மே, 2009

ஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் ! (18+)

திருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை.

தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :)

தகவல் இங்கே,

Published in : ஆரோக்கியம், உடலே நலமா?


மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

மேலும் படிக்க...


பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)

18 ஆகஸ்ட், 2008

முஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் !

செளதியில் அடைக்கலம்:

இதற்கிடையே அவரை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து தவிர செளதி அரேபியாவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முஷாரப்பிடம் இருந்து நவாஸ் ஷெரீப்பை காப்பாற்றி பாதுகாப்பு தந்த செளதி இம்முறை ஷெரீப்பிடம் இருந்து முஷாரப்பை காப்பாற்றும் வேலையில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக செளதி வெளியுறவு அமைச்சர் அஜீஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு செளதியே அடைக்கலம் கொடுக்கும் என்றும் தெரிகிறது.

அவர் பதவி விலகினால் நாட்டை விட்டு கெளரவமாக வெளியேற உதவ வேண்டும் என நவாஸ் ஷெரீ்ப்-சர்தாரி ஆகியோரிடம் செளதி கூறியுள்ளது. அதை இருவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.


மேலும் படிக்க ...

நன்றி : தட்ஸ்தமிழ்
cartoons : http://www.dawn.com/2008/08/18/cart.htm

அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு பதவி சுகம் அனுபவிக்கிறார்களோ, பதியும் வரலாறு தவிர்த்து அவை யாவும் நிலையல்ல...அவர்கள் வாழும் காலத்திலேயே ஒருநாள் அவை காணல் நீராகிவிடும்.

22 ஜனவரி, 2008

50லும் ஆசை வரும் ...

50லும் பலருக்கு ஆசை மட்டுமல்ல அதில் ஒரு சிலருக்கு பேராசையும் வரும் என்பதை கீழ்கண்ட செய்தியை படித்தவுடன் தான் தெரிந்தது.

******

மோசடி இ மெயிலால் பல ஆயிரம் பண மோசடி
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 22, 2008

நாகை: நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மோசடி இ- மெயிலை நம்பி பல ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). இவர் மஸ்கட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஒரு இ மெயில் வந்தது. அதில், ஒரு மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ 80 ஆயிரம்) அனுப்பினால் ரூ 8 கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்படிருந்தது.

8 கோடி வருகிறதே என்று ஆசைப்பட்ட பாலசுப்பிரமணியன் அந்த இ -மெயிலில் குறிப்பிட்ட படி ரூ 80 ஆயிரத்தை வங்கி மூலம் நைஜீரியாவில் உள்ள ஆப்ரிக்கன் டெவலப்மெண்ட் வங்கிக்கு செலுத்தினார்.

இதையடுத்து உங்களுக்குரிய ரூ 8 கோடி பணம், மயிலாடுதுறையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள உங்களது கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பதில் வந்தது.

இதனால் குஷியானார் பாலசுப்ரமணியன். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஆகியும் குறிப்பிட்டபடி ரூ 8 கோடி பணம் வரவில்லை. அதனால் மீண்டும் இ - மெயில் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை.

இதனால் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து யாரிடம் புகார் கொடுப்பது. அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் பாலசுப்பிரமணி பெரும் குழப்பமடைந்துள்ளார்.

- தட்ஸ்தமிழ்

*********

சோமாலியா, கென்யா, நைஜீரியா என எல்லா "யா" க்களும் பசி, பட்டினி பஞ்சம் என்று ஆப்பிரிக்காவின் வறுமை பெருமைகளை பறைசாற்றும் தேசமாக இருக்கும் போது...இதெல்லாம் ஓரளவு தெரிந்தே அங்குள்ள நைஜீரியாவில் இருந்து கோடிக்கனக்கான பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் இலவசமாக கிடைப்பதாக எதிர்ப்பார்த்து செயல்பட்டவர் எவ்வளவு பேராசைக்காரராக இருப்பார் ?
:)))

அவர் ஏமாந்ததற்கு ஐயோ பாவம் என்று சொல்ல முடியுமா ? பேராசை பெருநஷ்டம் சொல்ல முடியுமா ? அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுபவர்களின் பேராசையே ஏமாற்றுபவர்களின் மூலதனாமாகிவிடுகிறது.

18 நவம்பர், 2007

ஸெங்கோ எனும் அதிசய தீர்த்தம்.

ஒர் இருமுறை அறிமுகமானவர்கள், நீண்ட நாட்களாக தொடர்பு விட்டுப் போனவர்கள் ஆனால் நெருக்கமானவர்கள் அல்ல, திடிரென்று ஒரு நாள் செல்பேசியில் அழைப்பார்கள். ஆகா இவர் இன்னும் நம்மை நினைவில் வைத்திருக்கிறேரே என்ற மனமகிழ்ச்சியில் 'அப்பறம் சொல்லுங்க சார்' எப்படி இருக்கிங்க என்று கேட்டவுடன் பொறுப்புடன் நம்மைப் பற்றி எல்லாம் விசாரிப்பார்.

"உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்"

"ஓ தாரளமாக, பார்த்து நீண்ட நாள் ஆயிற்று"

"உங்களுக்கு எப்போ நேரம் இருக்கும்"

"நீங்களே சொல்லுங்க"

"எனக்கு ஒன்னும் சிரமில்லை, வீட்டு முகவரியை சொல்லுங்கள் வருகிறேன்"

சொன்னபடி வருவார். லேப்டாப் சகிதமாக வருவார்,

"என்ன சார், அலுவலகத்தில் இருந்தே வந்துட்டுங்களா ?"

"ம் கொஞ்சம் பிசிதான், கஷ்டப்பட்டு உழைக்கலைன்னா, சமாளிக்க முடியாது சார்"

காபி உபசரிப்புக்குபின்பு,

"சார், ஒரு பிசினஸ்"

"ம் சொல்லுங்க"

"இதை நீங்க வீட்டில் இருந்தே செய்யலாம், அருமையான ப்ராடெக்ட்"

கூடவே வைத்திருக்கும், லேப்டாப் பைகளில் இருந்து ப்ராக்டட் பற்றிய விவரங்களை காண்பிப்பார்,

நாமும் வெட்டப் போகிற ஆடு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு மனைவியின் முகத்தைப் பார்க்க, அவளும் நமட்டுச் சிரிப்புடன் நம்மை நக்கலாக பார்ப்பது, 'இந்த தடவையும் இளிச்ச வாய் மாதிரி ஏமாந்திடாதிங்க' என்ற எச்சரிக்கை போல் இருக்கும்.

வந்தவர் அதன் பிறகு பவர் பாயிண்ட் ப்ரசன்டேசன் ஒன்றை காட்டுவார்'

"இந்த ப்ராடெக்ட் பாருங்க, இந்த படத்தில் இருப்பவரை பாருங்க, டாக்டர் கைவிரித்த கேஸ், இந்த மருந்தை சாப்பிட்ட 3 மாதங்களில் பழைய நிலைக்கு திரும்பிட்டாங்க"

"...........ம்"

"இதப் பாருங்க சார், இவர்தான் இந்த கம்பெணியை தொடங்கியவர், அமெரிக்காவில் ஆரம்பிகக்ப்பட்டது'

".........ம்"

"இதுல சேர்ந்து 3 மாதத்தில் எனக்கு தெரிந்த பத்மநாபன் என்பவர் கார் வாங்கிட்டார்"

".......ம்"

"வேலை வேலைன்னு நாம் அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளம் மட்டும் இருந்தால், நாம் என்னைக்கு வசதி வாய்பை பெருக்கிக் கொள்வது ?"

"........ம்"

"நீங்க ஒன்னும் செய்யத் தேவையில்லை, 2 பேரை அறிமுகப்படுத்தினால் போதும்"

"......ம்"

"அப்பறம் அவுங்க ஆளுக்கு 2 பேரை அறிமுகப்படுத்துவாங்க, இது சங்கிலி தொடர்போல, எவ்வளவு ஆட்கள் சேருகிறார்களோ, அதுக்கு ஏற்றார் போல் உங்கள் அக்வண்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்"

"........ம்"

*********

இது போன்று பல மல்டி மார்கெட்டிங் எனப்படும் சங்கிலி(பறிப்பு ?) தொடர் பிசினெஸ் நிறைய பார்த்திருக்கிறேன். பேச்சு திறமை இல்லை என்பதைவிட தெரிந்தவர்களின் மனதை முறிக்கக் கூடாது என்று அதில் மெம்பராக சேர்ந்துவிட்டு 100 - 200 வெள்ளியை ஒரே முறையில் இழந்து அத்துடன் அதை மறந்திருக்கிறேன். அவர்களும் அதன் பிறகு வரமாட்டார்கள். அந்த பணத்திற்கு அவர்கள் கொடுக்கும் பொருள்களையும், மற்ற விவரங்களையும் அதன் பிறகு இடது கையாலும் தீண்டுவதில்லை.

நேற்று மலேசியா சென்ற போது அங்கு இருக்கும் தமிழ் வார இதழ் ஒன்றை வாங்கினேன். அதில் அது போன்ற ஒரு பிசினெஸ் பற்றி எழுதி இருந்தார்கள். விளம்பரம் போன்று எழுதி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதை ஒரு முக்கியதுவம் வாய்ந்த செய்தி கட்டுரை போன்று எழுதி இருந்தனர். சிறுபகுதியை மட்டும் தருகிறேன். அதில் ஒருவர் தனது மருத்துவ தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்ட ஸெங்கோவில் ஈடுபட்டவர், தந்த தகவல்கள்

இதழின் நிருபர் : ஸெங்கோ என்றால் என்ன ?

ஸெங்கோ பார்டி : ஸெங்கோ என்பது மூலிகை திர்த்தம், சகல வியாதிகளையும் தீர்க்க வல்ல புனித தீர்த்தம். இதை எடுத்துக் கொண்ட எனது நோயளிகள் குணமடைந்தார்கள், அதனால் வேலையை விட்டுவிட்டு ஸெங்கோ வியாபாரத்தில் இறங்கிவிட்டேன்.

நிருபர் : ஸெங்கோ வியாபாரம் எங்கே தொடங்கப்பட்டது ? எதனால் செய்யப்பட்டது ?

ஸெங்கோ பார்டி : ஸெங்கோ தீர்த்தம் மங்குஸ்தான் பழத் தோலில் இருந்து செய்யப்பட்டது, அமெரிக்காவில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, மூன்றே ஆண்டுகளில், உலகில் அனைத்து கம்பெணி தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.

நிருபர் : புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவணம் என்கிறீர்கள், இங்கு 1500 பேருக்கும் மேல் கூடி இருக்கிறார்களே ? இவர்கள் பார்வையாளர்களா ?

ஸெங்கோ பார்டி : இவர்கள் பார்வையாளர்கள் அல்ல, விற்பனையாளர்கள், இந்த தீர்த்ததின் மகிமை இவ்வளவு பேரை இந்த விற்பனையில் ஈடுபடுத்தி இருக்கிறது. இதிலிருந்தே நீங்கள் இதன் விற்பனை திறனை தெரிந்து கொள்ளலாம்.

நிருபர் : உங்களுடைய மாதவருமானம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா ?

ஸெங்கோ பார்டி : இந்த வியாபாரத்தில் வந்த பிறகு மமதம் 20 ஆயிரம் வெள்ளிக்கு மேல். இன்னும் இது உயரும்.

***********

இவர்கள் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது பலர் கோடிஸ்வரன் ஆகிவிடுவது போல் சொல்கிறார்கள். இதில் சிலர் சம்பாதிக்கிறார்கள். பலர் ? ஒரே முறை அழுதுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் பொருள்கள் தரமிக்கவையா ? என்பது மருத்துவர்கள் தான் உறுதிசொல்ல முடியும். இதுபோன்ற மல்டி லெவல் மார்கெட்டிங் ந(ண்)பர்களை சந்திக்கும் போது கவனம் தேவை.

அடுத்து செல்புட் என்ற நிறுவனத்தினத்தை ஒருவர் எனக்கு அறிமுகமான கதை.

5 ஜூலை, 2007

சிறுவன் திலீபனின் நிலை மிகவும் பரிதாபம் :(

அண்மையில் மணப்பாறை பெண்ணுக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ பெற்றோர்களின் மகன் திருச்சி சிறுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறான்.

பெற்றோர்களின் ஆர்வக்கோளாரே இந்த குற்ற வழக்கிற்கு முதன்மையாக அமைந்திருக்கிறது. பெற்றோர்கள் வழி நடத்தியதன் மூலம் தான் அந்த சிறுவன் செயல்பட்டு இருக்கிறான் என்பது இதுவரை கிடைத்த தகவல் படி தெரியவருகிறது.

சிறுவர் நீதி மன்றத்தில் அந்த சிறுவன் சரணடைந்திருக்கிறான், போலிசார் வலைவீசி தேடினார்கள் என்றெல்லாம் செய்திகளில் மிகவும் அதிகமாகவே அந்த சிறுவனை புகைப்படத்துடன் போட்டு ரவுடி ரேஞ்சுக்கு எழுதுகிறார்கள். பாவம்... அவனும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதால் இதை பெற்றோர்களின் தூண்டதல் மூலம் செய்திருக்கிறான். சிறிய வயதிலேயெ, உடன்படிப்போர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் மிகப் பெரிய அவமானம் தனக்கு காத்திருக்கிறது என்றெல்லாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். இதையெல்லாம் நினைத்துப்பார்க்க வேண்டிய பெற்றோர்களே மருத்துவம் படித்தும் கவனக்குறைவாகவும், பெறும்பின்மையுடன் நடந்து கொண்ட போது பாவம் பள்ளிச் சிறுவன் என்ன செய்வான் ?

இது உண்மையில் நடந்திருந்தாலும் கூட இந்த வழக்கில் தண்டனை அடைய வேண்டியவர்கள் பெற்றோர்களே அன்றி சிறுவன் அல்ல. அரசும், பத்திரிக்கைகளும் கவனத்துடன் செயல்பட்டால் நன்றாக படிக்கும் ஒரு சிறுவனை மன உளைச்சல் அடைந்து, அவன் எதிர்காலமே கேள்விகுறியாகிவிடும் நிலையை தவிர்க்க முடியும்.

இந்த வழக்கில் சிறுவனை குற்றவாளியாக கருதாமல் சாட்சியாக மட்டும் எடுத்துக் கொண்டு சென்றால் அவனுடைய எதிர்காலம் பாதிப்பு அடையாது. அவனுடைய பெற்றோர்களில் தந்தை தூண்டினாரா ? அல்லது தாய் தூண்டினாரா என்பது சரியாக தெரியவில்லை. சாட்சிகள் மற்றும் வாக்கு மூலங்களின் மூலம் குற்றவாளிகள் என்று தெரிந்தால் கண்டிப்பாக தூண்டியவர் தண்டனைகளை அடைந்தே தீரவேண்டும். இது பலருக்கு பாடமாக அமையும், அதாவது ஆர்வகோளாறு பெற்றோர்கள் திருந்துவார்கள். சிறுவர்களை சிறிய வயதில் சாதனை என்ற பெயரில் அவர்களை கொடுமைபடுத்துவதும் குறையும்.

8 மே, 2007

தாத்தா சொத்து பேரனுக்கா ?

சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழும் இணைந்து நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து கணிப்பு ஏ.சி நெல்சன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது நாளை வெளியிடப் படுகிறது.

ஒரிஜினல் கருத்து கணிப்பு கேள்வி : கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ?

செய்தி : இரவு 8 மணி தமிழ் செய்தி - சன் டிவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்