பின்பற்றுபவர்கள்

31 டிசம்பர், 2008

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள் !

"வேண்டுகோள் வைக்கும் வாரம் முடியறத்துக்குள்ளே... நீங்க ஒரு பதிவைப் போட்டு வேண்டுகோள் வைங்கண்ணே..."

என்றார் பதிவுலகின் ஒரு சின்னத் தம்பி (ஜெகதீசனோ, விஜய் ஆனந்தோ, விக்னேஷ்வரனோ இல்லை)

திடீர் என்று கேட்டால் என்ன வேண்டு கோள்வைப்பது ? ஆங்.....ஒண்ணே ஒண்ணு இருக்கு...நானும் ரொம்ப நாளாகவே வேண்டுகோள் வைக்கனும் என்று நினைத்து இருந்தேன்.

என்னோட வேண்டுகோள் யாருக்கு ? தலைப்பிலேயே இருக்கு !

எதுக்கு வேண்டுகோள் ?

Classic தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர பக்கம் கிளிக்கினால் நட்சத்திர பக்கம் காட்டும் (இந்த வாரம் நம்ம லதாநந்த் அங்கிள்... கோவை கிரைம் நாவல் எழுத்தாளர் இராஜேஸ் குமார் மாதிரியே போஸ் கொடுப்பார் பாருங்க)

நட்சத்திர பக்கத்தில் இருந்து தமிழ்மணம் முகப்புக்குச் செல்ல 'கிளிக்' செய்தால்



Not Found
The requested document was not found on this server.
--------------------------------------------------------------------------------
Web Server at thamizmanam.com

வெள்ளை அறிக்கை காட்டுது, அதாவது அந்த வலைப்பக்கம் சர்வரில் இல்லையாம்,


இது எதுனால வருது என்றால், புதிய தமிழ்மண முகப்பு அமைப்பின் போது எல்லா கோப்புகளையும் PHP Script க்கு மாற்றி இருக்கிறார்கள், ஆனால் இந்த
பக்கத்தில் இருக்கும் தமிழ்மண முகப்பிற்கான இணைப்பு மட்டும் இன்னும் html ஆகவே (http://www.thamizmanam.com/index.html) இருக்கிறது அந்த கோப்பும் சர்வரில் இல்லை (Dead Link), இதை சரி செய்ய அங்கு இணைப்பாக PHP (http://www.thamizmanam.com/index_classic.php) இணைப்பு தான் வரவேண்டும்.


இந்த கவனமின்மை தமிழ்மணத்தில் புதிய தமிழ்மணம் வடிவமைத்த போதிலிருந்தே இருக்கிறது.

வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்.

பதிவர்கள், வாசிப்பவர்கள், வெறும் புரொபைல் வைத்திருப்பவர்கள், அனைவருக்கும் 2009 ஆம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !

30 டிசம்பர், 2008

கலைஞர் மற்றும் இராமதாஸ் - நரியிடம் நாட்டாமை கேட்டால் ?

நரியை நாட்டமையாக்கி தீர்ப்புச் சொல்லச் சொன்னால் என்னவாகும்...தனக்கு சாதமாகத் தானே தீர்ப்புச் சொல்லிக் கொள்ளும். இதைத்தான் காங்கிரஸ் அரசாங்கம் ஈழப் பிரச்சனையில் செய்துவருகிறது. இராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்கிற ஒரே காரணத்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறேன் என்கிற போர்வையில் தமிழினம் துடைத்து ஒழிக்கப் படுகிறது.

"போர் நிறுத்தம் வேண்டும்...அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்" என்று தமிழகத்தின் குரல்களை மன்மோகன் அரசு கண்டு கொண்டது போல் தெரியவில்லை. இதெல்லாம் கூட 'அவனுங்க அப்படித்தான்' தமிழனுக்குள்ளேயே காங்கிரஸ்காரன் என்கிற பெயரில் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள் என்று விட்டுத் தொலையலாம். ஆனால் தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள், தனி ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று கூறி சீமான் உட்பட பலரை கைது செய்து சிறையில் அடைப்பது எந்த விதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம் தான். ஆனால் அவர்களின் ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஈழமண்ணில் நடக்கிற ஒன்று அதற்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் இந்திய இறையாண்மையை பாதிக்கிறது என்று தெரியவில்லை.

போராளிகளின் ஆயுத போராட்டம் இன்றி ஈழ விடுதலை என்பது சாத்தியமற்றதே, இவை நன்கு தெரிந்தும், நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை, தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லும் அரசியல் பித்தலாட்டாவாதிகளை எந்த கணக்கில் சேர்ப்பது ? இவர்கள் ஈழத்தமிழருக்கு வடிக்கும் கண்ணீர் உண்மையான கண்ணீர் தானா ?

மத்திய அரசில் அங்கம் வகிப்பதால் பாமகவும், திமுகவும் நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழவிடுதலையை ஆதரிக்கிறோம் என்கிறார்கள். ஈழ விடுதலை என்பது இன்னொரு ஈழகாந்தியால் ஏற்படப் போகிறதா ? யார் அந்த காந்தி....இதையெல்லாம் தெளிவு படுத்துவிட்டு ஈழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லாமே, தானும் தெளிவில்லாமல், தொண்டர்களையும் தெளிவு படுத்தாமல் இவர்கள் ஈழத்தமிழர்களின் நலன் குறித்து பேசுவது முரணாகவே இருக்கிறது.

ஈழவிடுதலைக் குறித்து கலைஞர் வடிக்கும் கண்ணீரும், மருத்துவர் இராமதாசின் கண்ணீரும் யாருக்காக என்றே தெரியவில்லை. எங்களுக்கு காங்கிரஸ் கூட்டணி தான் முக்கியம் என்று சொல்லிவிட்டால் தொண்டர்களாவது குழம்பாமல் இருப்பார்கள். அதைவிடுத்து மேடைக்கு மேடை ஒரு பேச்சு, வெளியே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் மீது கைது நடவெடிக்கை. இரட்டை வேஷம் ! Shame !

இந்த விசயத்தில் காங்கிரஸ் அரசுடன் தொடர்பு இருக்கின்ற காரணத்தினால் மருத்துவர இராமதாஸ் மற்றும் கலைஞர் செயல்பாடுகள் எனக்கு வேறு வேறாக தெரியவில்லை. முரண்பாடுள்ள ஜெவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் ஈழ விடுதலைக் குறித்து வைகோ தெளிவாக இருக்கிறார். காங்கிரஸ் நிர்பந்தம் இல்லாததால் திருமாவளவனும் தெளிவாகவே இருக்கிறார்.

இராஜிவ் காந்தியின் உயிருக்காக ஈழத்தமிழர்கள் அனைவருமே பலியாகத்தான் வேண்டும் என்று நினைக்கும் காங்கிரசாரின் நிலைக்கு ஆதரவாகவே கலைஞரும், இராமதாசும் செயல்படுகிறார்கள், இதில் அடிக்கடி டெல்லி பயணம், வலியுறுத்தல்கள். நினைக்கவே பெரிய அரசியல் அசிங்கமாக இருக்கிறது. இந்த விசயத்தில் மிகத் தெளிவாகவே, வெளிப்படையாக இருக்கும் ஜெ கூட பரவாயில்லை.

29 டிசம்பர், 2008

விடைபெறும் கடந்த காலம் 2008 - சில எண்ணங்கள் !

2008 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியல் மாற்றம், சீனாவில் நடந்த ஒலிம்பிக் தவிர்த்து உலக அளவில் நினைவு வைத்துக் கொள்ளக் கூடிய நிகழ்வுகள் அரிதுதான். சென்ற ஆண்டு (2007) பெனாசீர் படுகொலையில் பரபரப்பான பாகிஸ்தான், இந்த ஆண்டு மும்பய் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற பொய்யுடன் பாகிஸ்தான் மக்களுக்கு எந்நேரமும் இந்தியாவின் இராணுவ தாக்குதல் இருக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா எவ்வளவு அடிசாலும் தாங்கும் என்பது பாகிஸ்தான் மக்களுக்கு தெரியாது.

திரையுலகில் வரலாறு காணாத படமென உலக நாயகனின் தசவாதராம் வந்து சென்றது. அஜித்தின் பில்லா மாபெரும் வெற்றி, குருவி, அழகிய தமிழ்மகன் போன்ற சுமாரான அதே சமயம் வழக்கமான படங்களால் அடுத்த சூப்பர் ஸ்டார், முதலமைச்சர் கனவு என விஜயின் வளர்ச்சி சற்று மெதுவாக சென்று கொண்டு இருக்கிறது. சிம்புவுக்கு பலத்த அடி, திரிசா, நயன் தாரா அலை எழுந்து அடங்கிவிட்டது, சென்ற ஆண்டு மிகுதியான படங்களில் நடித்தவர் பாவனா வாக இருப்பார் என்றே நினைக்கிறேன். குசேலன் பற்றி பேச என்ன இருக்கிறது. 20 கோடி வரை ஈட்டியதே பெரும் வியப்புதான். 'சூப்பர் ஸ்டார்' பெயர் ராசி இருக்கிறதே.

தமிழகத்தின் முதன்மை வரலாற்று நிகழ்வென கலைஞர் அரசால், தை ஒன்றாம் தேதி அரசறிவிப்பாக (அதிகார பூர்வ) தமிழ் புத்தாண்டாக முன்மொழியப்பட்டு ஜெ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களால் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. பஞ்சாங்கக்காரர்களுக்குத்தான் சிறிது திண்டாட்டாம். கவலைப் படவேண்டாம் தினமலர் வகையராக்கள் சித்திரைக்கு புத்தாண்டு கொண்டாடும்.

ஒக்கனேக்கல் தொடர்பான சர்சைகள், நடுவன் அரசான காங்கிரசுக்கு இடற்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக கலைஞர் அரசின் மெத்தனம், நடிகர்களின் உண்ணா நோன்பு காமடி, செண்டிமெண்ட், அழுகாச்சி, திட்டத்தின் தற்காலிக முடக்கம், குசேலன் பெட்டிக்குள் போகும் என்ற அறியாமையால ரஜினியின் வருத்தம். ஒக்கேனேக்கல் திட்டம் 2009ல் ஆவது நிறைவேற வேண்டும். இந்த ஆண்டில் கன்னடமும், தெலுங்கும் செம்மொழி சிறப்பு தகுதி அடைந்திருக்கிறது.

ஈழப்போர் அதன் தொடர்பில் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் அடக்கி வாசிக்கும் கலைஞர், அமீர், சீமான் கைதுகள், தமிழக மக்களின் ஈழவிடுதலை ஆதரவு எழுச்சி, இராஜிவ் ஆன்மா மன்னிக்காது என்று விரக்தியில் பேசும் காங்கிரசார் என ஈழவிடுதலைப் போராட்டம் ஓரளவு உச்சத்தை தொட்டுக் கொண்டு இருக்கிறது.


தனிப்பட்ட முறையில் 2008 ஆம் ஆண்டு, பதிவுலகில் என்னை இணைத்து பங்காளிச் சண்டை, பல புதிய பதிவர்களின் அறிமுகம், கடந்த ஆண்டுகளில் இல்லாதா அளவாக 400 இடுகைகள் (வாவச, காலங்கள் கவிதைகள், மற்றும் காலம்), சென்னை பதிவர் சந்திப்பு, சிங்கைப் பதிவர் சந்திப்புகள், பினாங்கு பதிவர்கள் சிலருடன் (பாரி அரசு, ஜெகதீசன் மற்றும் டிபிசிடி), டிபிசிடி இல்லத்தினருடன் எனது இல்லத்தாரும் இணைந்த லங்காவி, கேமரான் ஹைலாண்ட் மலேசிய இன்பச் சுற்றுலா குறிப்பிடத் தக்கவை.

மோகன் கந்தசாமியின் வலையுல பேட்டிகள், கட்டுடைத்தல் என்னும் எழுத்து சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட லக்கி லுககின் ஜட்டிக் கதைகள், அதிஷா வின் துள்ளல் கதைகள், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக் கதைகள். டோண்டு ராகவனின் வலையுலக துக்ளக் பாணி கேள்வி பதில்கள், பரிசல்காரனின் அவியல், வடகரை அண்ணாச்சியின் கதம்பம், குசும்பனின் கார்டூன், கேஆர்எஸ்சின் ஆன்மிகம் என பரவாலாக வாசிக்கப்பட்டதாக நினைக்கிறேன்.

புதிய பதிவர் நண்பர்கள் என பரிசல், வடகரைவேலன், வால்பையன், சஞ்செய், அப்தூல்லா, வெண்பூ, கார்க்கி, நிஜமா நல்லவன், லதானந்த் , ச்சின்னப் பையன், நசரேயன், மனசாட்சி கிரி, ஸ்வாமி ஓம்கார், ஜோசப் பால்ராஜ், ஜோதி.பாரதி, ஜமால், நர்சிம், முரளி கண்ணன், விக்னேஷ்வரன், டொன்லி.......மற்றும் பாலோயர் பட்டியலில் இருக்கும் 69 பேர் என பட்டியல் 2008ல் மிக நீளம்.

தமிழ்பதிவுலகினரால் மறக்க முடியாத பதிவாக அமைந்த பெண் பதிவர் அனுராதா அவர்களின் மரணம்.

இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,

1.லக்கிலுக்
2.பரிசல்காரன்
3. அதிஷா

இந்த ஆண்டின் தமிழர்களால் மிகுதியாக பேசப்பட்ட பெயர்
இயக்குனர் சீமான்









இந்த ஆண்டு 'இந்தி'யர்களால் மிகுதியாக பேசப்பட்ட பெயர்












அமீர்கானின் 'கஜினி'

இந்த ஆண்டின் உலக நாயகன்










பாரக் ஒபாமா


*****

வரப்போகும் 2009ம் ஆண்டில் பொருளாதார சீர்குழைவை தத்தமது நாட்டில் சரிசெய்வதற்கான உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டாகவேண்டும், இந்திய அரசியல் களம் பாராளுமன்ற தேர்த்தலை எதிர்நோக்கியுள்ளது.

பின்குறிப்பு : எழுதியவை யாவும் எனது தனிப்பட்ட அவதனிப்புத்தான் வலியுறுத்தல் எதுவும் இல்லை.

28 டிசம்பர், 2008

நீண்ட நாளைக்கு பிறகு...!

மிதிவண்டி ஓட்டி நீண்ட நாளாகிவிட்டிருந்தது, அண்மையில் சென்ற சனிக்கிழமை (நேற்று) ஒரு நாள் முழுவதும், சிங்கையில் இருக்கும் 'புலாவ் உபின்' என்ற ஒரு தீவில் பதிவர்கள் சிலருடன் சைக்கிள் ஓட்டி சுற்றி வந்தோம். காலை 11 மணிக்கு தொடங்கிய மிதிவண்டி பயணம் இடை இடையே ஆன சிறு இளைப்பாறுதலுக்கு பிறகு மாலை 6 மணி அளவில் முடிவுக்கு வந்தது. நல்ல மகிழ்ச்சியான பொழுதாக அமைந்தது.

மிதிவண்டி பயணத்தின் போது தம்பி ஜகதீசன் ஐயர் தரையை முத்தமிட்டார்

டொன்லீ மற்றும் நிசமா நல்லவன் அசராமல் ஓட்டினார்கள்

வாவச இராம் அழகான புகைப்படங்களை சுட்டார்

கிரி இறக்கக் கட்டிப் பறக்குது அண்ணாமலை சைக்கிள் என்று பாடாத குறைதான். இடை இடையே பணியின் நினைவு வந்து சற்று சுணங்கினார் (நியாமான வேலைக்காரன்)

அதிரை ஜமால் (முதன்முறையாக கலந்து கொண்டார்) ,மிதிவண்டியை பலம் கொண்ட வரை மிதித்தார். மிதிவண்டி வழிக்கு வந்தது

பின்னூட்ட புயல் விஜய் ஆனந்த் விரைவாக செல்லும் இடங்களை கடந்தார்

என் பங்குங்கு ? இவர்களெல்லாம் காணமல் போகாமல் பார்த்துக் கொண்டேன்.

*****

மிதிவண்டிப் பயணத்துடன் அமைந்த சிற்றுலா பற்றி 'டொன் லீ' விரிவாக தனிப் பதிவாக எழுதி இருக்கிறார்...வண்ணப்படங்களுடன் சிற்றுலா பற்றி பயணக்கட்டுரையை இங்கே கண்டு களிக்கலாம்.

அதிரை ஜமால் முதன் முறையாக பதிவர்களுடன் சென்று வந்த அனுபவத்தை தனிப்பாதிவாக பகிர்வார்

நீண்ட நாள் கழித்து மிதிவண்டியை மிதியோ மிதி என்று மிதித்தால், இடுப்பில் இருந்து கால் வரை வலியோ வலி.


பின்னூட்டப் புயல், 'புதிய கேமரா'மேன், பதுங்கு குழி, நிஜமாகவே நல்லவன், சிங்கம்










இரண்டாவது உள்ளவர் மீ த பர்ஸ்ட் போடுபவர்









26 டிசம்பர், 2008

"பிரபல" பதிவர்கள் - இது அன்பால சேர்ந்த கூட்டம் :)

மூத்த பதிவர்கள் என்றால் என்ன அருத்தம் ? பதிவர்களில் சிலருக்கு தலைமுடி நரைத்திருக்கும், வழுக்கைக் கூட விழுந்திருக்கும் அவர்கள் எல்லோரும் மூத்த பதிவர்கள் தான். :) மூத்தப் பதிவர்கள் பற்றிய சரியான விளக்கம் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

பிரபல பதிவர்கள் யார் யார் ? பலருக்கு இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறதாம், யார் பட்டம் கொடுத்தாகன்னு கேட்குறாவ.

மிக்கவையாக வாசகர்களால் வாசிக்கப்படும் எழுத்துக்களுக்கு உடமைக் காரர்களே "பிரபல" பதிவர்கள், இதில் அண்மையில் எழுதவந்தவர்களும் உண்டு, நீண்ட நாளாக எழுதுபவர்களும் உண்டு. அதை எப்படிக் கண்டுபிடிக்கிறதாம் ? ப்ளாக்கர் பாலோயர் பட்டியலை வைத்திருப்பவர்களில் யாருடைய பதிவு பல பதிவர்களால் பாலோ செய்யப் படுகிறதோ அவர்களே "பிரபல" பதிவர்கள்.

இதோ சில பிர"பலங்கள்",



தம்பிக்கு பாசக்கார பயபுள்ளைங்க மிகுதி மிகுதி...இவரு எதையும் சுடுவார் (கேமராவால் தான்) இவரு பதிவுல இவர 117 பேர் பின் தொடருடாங்க...

பேரக் கேட்டாலே அதுருதுல்ல...அதனால் "பய"புள்ளைய "கார்டூன் கேரக்டர்" என்றும் சொல்லமாக கூப்பிடுறாவ
இவரு பதிவுல 107 பேரு பின் தொடருறாவ


இவரு வம்பிலுக்காத ஆளுகளே இல்லைன்னு சொல்றாவ...கல்யாணத்துக்கப்பறம் ரகசியமாக தொப்பைக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாகளாம்... எம்புட்டு பாசக்கார பய தெரியுமா ?
இவரு பதிவுல 97 பேர் சுத்திவராக

இவரு ஜூனியர் கலக(கழக - இல்லை)காரன்...சைலண்டாக ஆப்பு சொருகுவாக...அடிக்கடி உணர்ச்சிவசப்படுவாக...நல்லா எழுதுவாக...மேசமான பயப்புள்ளய எத்தனை பேரு பார்க்கிறாக தெரியுமா ? 68

*******

அம்புட்டுதான் வந்த வேலை முடிந்தது.

மேலே பதிவர்களுக்கு பாலோயராக சேர்ந்தவக எல்லாம் "அன்பினாலா சேர்ந்த கூட்டம்" அப்படி அன்புக் கூட்டம் கிடைக்காதவக...பாலோயர் பட்டியலை பெருசாக்கனும் என்றால் ஒரே ஒரு யோசனை தான் இருக்கு.

நிறைய (டம்மி...வெறும் புரொபைல் கூட இல்லாதா)பளாக்கர் புரொபைல் ஆயத்தம் செய்து கொண்டு அப்படியே அதை மெயின் ப்ளாக்கில் பாலோயராக சேர்த்துவிடுங்கள்.

பிகு : இட்லிகாரரை ஏன் பட்டியலில் சேர்க்கல ? அவுகாதான் தமிழ்மணத்தில இணைக்கிறது இல்லையே

25 டிசம்பர், 2008

சிங்கை கிறிஸ்மஸ் கொண்டாட்ட வண்ணப் படங்கள் !

சிங்கையில் சீசன் கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டி இருக்கும், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி சிங்கை ஆர்சட் சாலை பகுதி ஒளிவெள்ளமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதில் ஒரு சிலக் காட்சிகளை படமெடுத்தேன். பார்த்து மகிழுங்கள். கிறிஸ்துவ பதிவர்கள் அனைவருக்கும் இனிப்பான கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.
கிறிஸ்மஸ் மரத்தில் வெளிச்சப் பூசனி !

சுழலும் ஒளி வளையம் !


ஒளியா அலங்காரமா எது அழகு ? வரவேற்பு முகப்பு !

இது குட்டிஸுக்கான அணி வகுப்பு !

சூடான கிறிஸ்மஸ் வணிகம் !

மூன்று மாடி உயர கிறிஸ்மஸ் மரம் !

டாட்டா சொல்லும் கிறிஸ்மஸ் தாத்தா

மிட்டாய்கள் போல் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்


படங்களை கிளிக்கி பெரிதாகப் பாருங்கள் !

24 டிசம்பர், 2008

சூடான இடுகை குளிர்காயும் பதிவர்கள் !

நான்கு பதிவர்கள் எழுதிய இடுகைகள் சூடான இடுகைப் பகுதியில் காட்டப்படுவதில்லை என்ற தகவலை கடந்த ஒருவாரம் தமிழ்மண சூடான இடுகைப் பகுதியையும், பதிவர்களின் பதிவுகளின் வாசகர் வருகைக் கணக்கையும் வைத்து எழுதி இருந்தேன்.

சூடான இடுகையில் திரட்டப்படாததால் தமிழ்மணத்தை கண்டிப்பதாகவோ, அதற்காக வருத்தப்படுவதாகவே நான் குறிப்பிடவில்லை. மற்ற மூன்று பதிவர்களும் அவ்வாறே சொல்லிவிட்டார்கள். லக்கிலுக் 'கவலைப்படவில்லை' என்றார், அவதூறு ஆறுமுகமும் 'புதியவர்கள் வாய்ப்பு பெறட்டுமே' என்று வெளிப்படையாக சொல்லியாதாக வட்டாராச் செய்திகள் அறிவிக்கின்றன, டோண்டு இராகவன் பெயரிலி மீது குற்றச் சாட்டுகளைச் சொல்லி முடித்துக் கொண்டார். ஆக நால்வருமே இதற்காக வருத்தப்படவில்லை.

ஆனால் சிலப்பதிவர்கள் இந்த பிரச்சனையில் நாங்களெல்லாம் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், ஒப்பாறி வைப்பதாகவும் எழுதுகிறார்கள்.

தமிழ்மணமும் சில "மூத்தபதிவர்களின்" அநாகரீகமும்! - வரூண்

பிரபல பதிவர்களே, ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள் - காட்டாமணக்கு

சூடான இடுகைப் பகுதியில் நீக்கப்பட்ட பதிவர்கள் 3 - 4 ஆண்டுகளாக எழுதுபவர்கள், சூடான இடுகைப் பகுதியே கடந்த ஆண்டுதான் தமிழ்மணத்தில் உருவாக்கப்பட்டது, அதற்கும் முன்பே தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சூடான இடுகைப் பகுதி சில நாட்கள் தற்காலிகமாக இல்லை என்ற நிலையிலும் எழுதிக்கொண்டு தான் இருந்தனர். தற்பொழுது நீக்கப்பட்ட பிறகும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பதிவர் வருண் என்பவர் தனது இடுகையில், அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்றும், இதற்கு இவர் சொல்லும் காரணம், 'வெறி நாய், சொறி நாய் என்றெல்லாம் தலைப்பு வைத்தால் அது அநாகரீகம் இல்லையா ? என்று கேட்கிறார்

எந்த ஒரு வசைச் சொல்லும் கூட சொல்லப்படுபவரின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் அநாகரீகம் இல்லை என்பதே நவீன சித்தாந்தம், சேரியில் இருப்பவன் 'ங்கோத்தா.........' என்று தான் திட்டுவான், சேரியைப் பற்றி இலக்கியம் எழுதுபவர் அதையும் பதிய வைத்தாகவேண்டும், பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர் அங்கு நடக்கும் அசிங்கங்களை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதவேண்டும், அங்கெல்லாம் நாகரீகம் மனதில் கொண்டு எழுதினால், இயல்பை பதிய வைக்கவே முடியாது. ஜ்யோராம் சுந்தரின் காமக் கதைகள் பதிவுகள் அந்தக் கண்ணோட்டத்தில் தான் எழுதப்படுகிறது.

செய்தித்தாள்களில் தலைப்பை வைத்துதான் செய்திகள் ஈர்க்கப்படுகின்றன. வாசகர்களை ஈர்பதற்கு, அதை தவறாக செய்தி ஊடகங்கள் பயன்படுத்துவது போலவே பதிவர்களும் நடந்து கொள்கிறார்கள், சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்து மொக்கைப் பதிவுகளைக் கூடப் போடலாம், எழுதுபவர் யாரென்றால்லாம் பார்க்க மாட்டார்கள் என்பதற்காகவே 'சொறிநாய்...வெறிநாய்' பதிவை பதிவர் வட்டத்திற்காக எழுதினேன்.

"சொறிநாய் வெறிநாய்" என்ற தலைப்பில் யாரையோ திட்டுவதாகவே புரிந்து கொண்டு பதிவர்கள் அந்த பதிவைப் பலர் படித்தனர், அதுவும் சூடான இடுகைக்கு வந்தது, நான் அந்த பதிவில் சொல்லி இருந்ததும் அதுதான். தலைப்பை வைத்து ஆர்வத்தினால் மொக்கை பதிவுகளைக் கூட சூடாக்குவது படிப்பவர்கள் தான், வெறும் தலைப்புக்கு முதன்மைத்துவம் கொடுப்பதை நிறுத்தினால் தரமான இடுகைகள் படிக்கப்பட்டு சூடான இடுகைக்கு வரும் என்பதைத் தான் அந்த பதிவின் மூலம் சுட்டினேன். அந்த பதிவில் எதாவது அநாகரீகம் இருப்பதாகச் சுட்டினால் வருத்தம் தெரிவித்து அந்த இடுகையை நீக்குகிறேன்,

******

'சூடான இடுகையில் நீக்கம்' குறித்த பதிவில் தமிழ்மணம் சிலபதிவர்களை நீக்கி இருக்கிறது, யார் யார் நீக்கப்பட்டர்கள் என்ற தகவலைக் கூடச் சொல்லவில்லை என்று மட்டும் தான் குறித்திருந்தேன் அன்றி... தமிழ்மணம் எப்படி அவ்வாறு நடந்து கொள்ளலாம் என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை, சூடான இடுகையில் இடம் பிடிக்கவும் அலையவும் வில்லை.

'நாங்கள் அலைகிறோம்' என்று எதைவைத்து மனம் போன போக்கில் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களின் செயல் சுய விளம்பரம் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. இதுபோன்று செய்வதில் கிடைப்பது ஓர் நாள் விளம்பரம் தான், அடுத்தவாரம் அதையெல்லாம் பதிவர்கள் மறந்துவிடுவார்கள்.

சூடான இடுகையில் இருந்து நீக்கியதால் நான் உட்பட யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஓர் நாள் விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு சூடான இடுகை அலைவதாகவும், அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், தொடர்ந்து பொய்யான ஊகங்களை வெளியிட்டு குளிர்காய்பவர்கள் காயலாம். எது அநாகரீகம், எது தேவையற்ற ஒப்பாறி என்பது பதிவர்களுக்கு தெரியும்.

2009 புத்தாண்டு மகிழ்ச்சி கொடுக்கவில்லை :(

அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளியல் தாக்கம், உலகெங்கிலும் உற்பத்திகளின் தேக்கம், உற்பத்தி குறைப்பு என்று சென்று கொண்டு இருக்கிறது. உற்பத்தி குறைப்பு, செலவு கட்டுப்பாடு என்ற பெயரில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய சிங்கை ஆங்கில நாளிதழில் பல்வேறு நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கைப் பற்றி செய்தி போட்டு இருந்தனர்.

அன்றாட செய்திகளில் நேற்று எந்த நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற செய்திகள் இடம் பிடித்து இருக்கின்றன.

வழக்கமாக டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் கொடுக்கப்படும் ஆண்டு ஊக்கத்தொகையை (போனஸ்) முன்னிட்டு, சில நிறுவனங்களில் அதற்கு முன்பே பணியாட்களை வேலையில் இருந்து எடுத்துவிடுகிறார்கள்.

இந்த ஆண்டு நிறுவனங்களின் செலவீனக் கட்டுப்பாடுகள்,

1. ஊதியம் இல்லாத விடுப்பின் நீட்டிப்பு ( Extended Unpaid Holiday)
2. ஆண்டு இறுதியில் தற்காலிக மூடல் ( Year End Shutdown)
3. ஊதிய குறைப்பு (Salary Cuts)
4. வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டும் வேலை (Four-Day Work Week)
5. கட்டாய விடுமுறை (Valuntary Unpaid Vacation time)



பல நிறுவனங்களில் ஆண்டு விடுப்பை ( Paid Leave ) உற்பத்தி குறைந்த இந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளச் சொல்லி கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை நிறுவனம் சார்பில் ஓர் நாள் நடத்தப்படும் இரவு உணவு கேளிக்கைகள் இந்த ஆண்டுகள் இல்லை.

சிங்கைப் போன்ற நாடுகளில் ஒருமாதம் ஊதியம் இல்லை என்றால் வாழ்க்கையை ஓட்டுவதே கடினம் தான். மாதந்திர கடன்கள் நெருக்கும், அதாவது வீட்டுக்கடன், வாகனக் கடன், கடன் அட்டை மாதச் சந்தா இன்னும் பலப் பல மாதந்திர செலவீனங்களில் தான் வரும்.

இதில் பண்டிகை நாட்களாக கிறிஸ்மஸ் மற்றும் சீனப் புத்தாண்டுகள் அடுத்து அடுத்துவருவதால்... ஊக்கத் தொகை (போனஸ்) கொடுக்கவில்லை என்றால் கொண்டாட்டம் திண்டாட்டம் ஆகிவிடும். ஏற்கனவே நிறுவனங்கள் தொடங்கிவிட்ட பல்வேறு நிதி குறைப்பு நடவெடிக்கையால் எவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. வரப்போகும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் மனநிலையில் எவரும் இல்லை, அடுத்த ஆண்டாவது நன்றாக இருக்குமா என்ற ஆசையை ஆண்டு தொடக்கத்தின் நிலையே தடுத்துவிட்டது.

23 டிசம்பர், 2008

பாஜகவுக்கு (மூ)முட்டுக் கொடுக்க மீண்டும் வாஜ்பாய் !

ஐந்து வட மாநில தேர்த்தலில் மூன்றில் மண்ணைக் கவ்வியும் ( ஏற்கனவே இருந்ததை பறிகொடுத்தது) இரண்டை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து பாஜகவின் செல்வாக்கு (காங்கிரசுக்கு எதிர் என்ற செல்வாக்குதான்) சரிந்ததாகவும் அதை தூக்கி நிறுத்து மூட்டுவலி அறுவசிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் தான் முடியும் என்பதாக பாஜக தலைமை வாஜ்பாய் வீட்டுக் கதவைத் தட்டுவதற்காக காத்திருக்கிறார்களாம்.

மீண்டும் வாஜ்பாய் பிரதமர் என்று அறிவித்து ஓட்டுக்கேட்க அத்வானிக்கு இருக்கும் தயக்கத்தினால் கதவைத் தட்டும் படலம் சற்று மெதுவாக நடக்கிறது. பிஜேபியினருக்கு வாஜ்பாயை பிரதமராக முன்மொழிய விருப்பம் இல்லை, ஏனெனில் அவர் பாஜக பரிவாரக் கட்சிகளின் தீவிர முடிவுகளை ஆதரிப்பவர் இல்லை. அத்வானிதான் அதற்கு சரியான ஆள் என்றே நினைக்கிறார்கள். இந்தியாவை "இந்து" நாடகும் திட்டமெல்லாம் அத்வானிஜியால் தான் செயல்படுத்த முடியும். ஆனால் அத்வானிஜியை பொதுமக்களுக்கு பிரதமவேட்பாளராக பார்க்க அச்சம் தான். அந்த அச்சத்தைத் தான் ஐந்து மாநில தேர்த்தல் உணர்த்துகிறது.

பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி மத்திய அரசை பிடிக்கலாம் என்ற நப்பாசையில், வேறு வழியின்றி வாஜ்பாயைத் தேடுகிறார்கள் பிஜேபியினர். ஒருவேளை வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, ஒருவேளை பிஜேபி பெரும்பாண்மை பெற்றால், வாஜ்பாயின் உடல்நிலையைச் சுட்டிக் காட்டி அத்வானிஜியை பிரதமர் ஆக்கும் திட்டம் இருக்கலாம். வாஜ்பாய் இதெற்கெல்லாம் ஒப்புக்கொள்வாரா ? ஏற்கனவே பிஜேபி அவரை பிரதமர் ஆக்கிய நன்றிக் கடன் இருக்கே.

இனிவரும் இந்திய பொதுத் தேர்தல்களில் தேசியகட்சிகள் பெரும்பாண்மை பெருவது கடினமே, மாநிலக் கட்சிகளின் தயவில் தான் கூட்டணி ஆட்சியாக நடத்த முடியும்.

காங்கிரசுக்கு நேரு குடும்பம் (அல்லது அவர்கள் கைக்காட்டும் ஒரு பொம்மை), பிஜேபிக்கு வாஜ்பாய் இவர்களைத் தவிர இந்தியாவில் பிரதமராகும் வாய்ப்பும், திறமையும், தகுதியும் யாருக்குமே இல்லையா ?

:((

தட்ஸ்தமிழ் சுட்டி.

22 டிசம்பர், 2008

சன் செய்தி வாசிப்பாளர்கள் நெற்றியில் ?

சன் டிவியில் நான் பார்க்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி சன் செய்திகள் தான். எப்போதாவது திரைப்படங்களைப் பார்ப்பேன். இங்கே சிங்கையில் தமிழ்நாட்டுச் செய்திகள் கேட்க ஒரே ஒரு ஒளி/ஒலி வழி என்றால் சன் டிவிதான். விஜய் டிவியும் வரும் அதில் செய்திகள் வாசிப்பது இல்லை. அதனால் வேறு வழியின்றி சன் செய்திகளை பார்க்கும் துர்பாக்கிய நிலையில் பலர் உண்டு.

நேற்று சன்னில் செய்தி வாசிக்கும் பொழுது செய்தியாக 'திண்டுக்கல் சாரதியையும்' சேர்த்தே வாசித்தார்கள், "தமிழ்நாடு திரையரங்கும் எங்கும் கட்டுக்கு அடங்காத கூட்டம், தாய்மார்கள் திரையரங்குக்கு படையெடுக்கின்றனர் என்று சொல்லிவிட்டு....திரையரங்கில் இருந்து வெளியே வருபவர்களின் புகழ்ச்சிகளைக் காட்டினார்கள். வழக்கமாக திரைவிமர்சனத்தில் தான் இதுபோன்று வரும், சன் செய்தியில் இதை விளம்பரமாகக் காட்டினாலும் பாரவாயில்லை, செய்திகளில் ஒரு செய்தியாக இந்த தகவலை, எதோ தமிழ்நாட்டின் மின்சார பற்றாக் குறை தீர்ந்து மக்கெளெல்லாம் ஒளிவெள்ளத்தில் மிதந்து மகிழ்ச்சியை தெர்விக்கும், எதோ ஒரு புரட்சி நடந்தது போல் திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளியானதைப் பற்றிய விளம்பரத் தகவலை செய்தியாக நுழைத்துவிட்டனர்.

எல்லோருமே காசு கொடுத்து தான் தொலைக்காட்சி இணைப்பு வாங்குகிறோம், இவர்கள் விளம்பரம் போடவேண்டுமென்றால் செய்திக்கு நடுவே விளம்பரமாகப் போட்டால் வேறு சேனலையாவது மாற்றிக் கொள்ளலாம், ஒரு செய்தியாகவே அதனைப் போட்டது, ஒருவகையான ஏமாற்று, காசு கொடுத்து தானே கனெக்சன் வாங்குறோம், எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டியதும் நாம்தான். எதோ செய்திவாசிக்கிறார்களே என்று பார்த்தால் அந்த நம்பிக்கையையும் மோசடி செய்து...இப்படியெல்லாம் மாறன் சகோதரர்கள் பிழைக்கும் அளவுக்கு முரசொலி மாறன் தன் குடும்பத்தை பிச்சை எடுக்கவச்சிட்டா போய் சேர்ந்தார் என்று நினைக்க வேண்டி இருக்கு.

கடந்த மூன்று மாதமாக முதலிடத்தில் இருக்கும் 'காதலில் விழுந்தேன்' இனி இரண்டாவது இடத்துக்கு போகுமா ? டாப் டென் மூவிஸ் பார்க்கிறவர்கள் சொல்லுங்க :) அப்ப அடுத்து எந்திரன் வரும் வரை முதலிடம் ? சந்தேகமே இல்லை, திண்டுக்கல் சாரதிக்குத்தான்.

எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப் போறாங்களாம், இனி வரும் நாட்களில், நாள்தோறும் செய்தி வாசிப்பாளர்களின் நெற்றியில் 'எந்திரன்' படத்தின் குட்டி ஸ்டில்களை (விளம்பரத்திற்காக) ஒட்டிவிட்டு... படத்தைப் பற்றி நாள் தோறும் (பெரும் எதிர்பார்ப்பு) விளம்பரம் ஏற்படுத்தினாலும் இனி வியப்படைய ஒன்றும் இல்லை.

குறிசொல் : சன் செய்தி விமர்சனம் !

திமுக ஆட்சிக்கு இளங்கோவன் மறைமுக மிரட்டல் !

தமிழகத்தின் வெளி கோஷ்டியால் சத்தியமூர்த்தி பவன் முதல்முறையாக தாக்கப்பட்டதற்கு இளங்கோவன் ஆவேசம் அடைந்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகளின் சத்திய மூர்த்தி பவன் முற்றுகை தெரிந்ததே. வழக்கமாக காங்கிரஸ் கோஷ்டிகளால் தான் சத்திய மூர்த்தி பவன் ரண களப்படும், அந்த பெருமைக்கு இழுக்கு போல் முதல் முறையாக விசி அமைப்பினர் அங்கு சென்று ஆர்பாட்டம் நடத்தி இருக்கின்றனர். இது போல் நிகழ்வே இதற்கு முன் நடந்தது இல்லை என்ற ரீதியில் இளங்கோவன் அறிக்கை விட்டுள்ளார்.

அதாவது "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த காங்கிரஸ் என்ன செய்லாம் என்று யோசனை செய்ய வேண்டி இருக்கும்" என்கிறார்

நல்ல யோசனை செய்யலாம், மும்பை தாக்குதல் கூட பொறுப்பற்ற மத்திய உளவு படையின் மெத்தனத்தால் நிகழ்ந்த பயங்கரமே இதற்கும், சேர்த்து யோசனை செய்து தனக்குத்தானே ஆட்சியை கலைத்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும், செல்வாக்கும் பிஜேபிக்கு எதிரான (போலி) மதச் சார்பின்மையினரால் பாதுகாப்பளிக்கப்பட்டு வருகிறது

******

காங்கிரஸ் கட்சி இலங்கையில் சிங்களர்களால் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று நம்புகிறதா ? அப்படி இல்லை என்றால், ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப் போகும் இராமன் யார் ?

வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் சோனியாவே மறந்த ராஜிவ் ஆன்மாவை குடுவைக்குள் அடைத்து வைத்துக் கொண்டு அதைச் சொல்லி தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தைத் தவிர தமிழக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இவர்களின் அதிதீவிர தமிழீழ எதிர்ப்பு ( நாங்க எதிர்க்கவில்லை என்று சொல்லுவாங்க, ஆயுதப் போராட்டம் இன்றி தமிழீழம் சாத்தியமே இல்லை) தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு முகவரி இல்லாமல் செய்யப் போவது உறுதி. காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சிகளும் இதே காரணத்தால் ஒதுக்கப்படலாம், திமுக காங்கிரஸ் கூட்டை மறுபரிசீலனை செய்வது நல்லது. காங்கிரசிடம் கூட்டணி இல்லை என்றால் கலைஞர் இன்னேரம் பெரிய அளவில் போராட்டமாக கொண்டு சென்று இருப்பார் என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் திமுகவிற்கு தேவை இல்லாத சுமை. கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டால் நல்லது, எப்படியும் காங்கிரசிலிருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டா கோஷ்டிகள் தனியாக வந்து ஆதரிக்கும், அது போதும் :) காங்கிரசுக்கு பணிந்து போகும் திமுக அரசியல் பலருக்கும் எரிச்சலையே தருகிறது. ஒட்டுமொத்த தமிழகமே ஓரணியில் நின்றால் காங்கிரசால் என்ன செய்ய முடியும் ?

எத்தனை நாளைக்குத்தான் செத்துப் போனவங்க பெயரைச் சொல்லி பொழைப்பை ஓட்டுவாங்களோ ! இந்திராகாந்தி மறைவிற்கு பிறகாவது காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்திடமிருந்து மீண்டு இருந்தால், இராஜிவ் காந்தி ஆன்மா பற்றி பேசத் தேவை இல்லாதிருந்திருக்கும். முதலில் காங்கிரஸ் விடுதலை அடையட்டம் அதன் பிறகு இந்திய நலன் பற்றி பேசுவது நலம்.



எனது இடுகைகள் எதுவும் சூடான இடுகைப் பகுதியில் வராது

20 டிசம்பர், 2008

சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ?

கடந்த ஒரு வார காலத்தில் "பிரபல" பதிவர்கள் எழுதும் பதிவுகள் எதுவும் தமிழ்மணம் சூடான இடுகையில் வருவதில்லை, பதிவு திரட்டப்படுகிறது, ஆனால் சூடான இடுகையில் காட்டப்படவில்லை, கட்டம் கட்டப்பட்டதாக தெரிகிறது. எந்த அறிவிப்பும் இன்றிய நடவடிக்கையாக புரிகிறது.

யார் யார் இடுகைகள் வருவதில்லை ?

அதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். எனக்கு தெரிந்து நால்வர் !

கண்டிப்பாக இந்த இடுகை(யும்) தமிழ்மணம் சூடான இடுகைப் பகுதியில் வராது :)


:((((((((

ஓலமிடுவது தோல்வியை ஒப்புக் கொண்டதன் பொருள் !

இராஜிவ்காந்தி - ஸ்ரீபெரும்புதூர் - சுப்ரமணிய ஸ்வாமி, சந்திரா ஸ்வாமி - சி ஐ ஏ - சிவராஜன் - தனு - சுபா - நளினி - மொட்டை முருகன் - இந்திய தேசியம் - தங்கபாலு - இந்திய இறையாண்மை - இளங்கோவன் - தேச துரோகம் - தினமலர் - வாசகர் கடிதம் - தனக்குத்தானே - தமிழன் - இராஜிவ் ஆன்மா - காங்கிராசார் - பாரதிராஜா - சீமான் - அமீர் - விடுதலை புலி - ஆதரவு - இந்திய தேச துரோகிகள் - எரிச்சல்- ஆற்றாமை - ஓலம்

இது தளபோட்சுத்ரி வடிவம், அப்படின்னா என்ன ? இங்கே பாருங்கள்

நாள்தோறும் இனப் படுக்கொலையில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு தமிழனத்தை துடைத்தொழிக்கும் முயற்சிக்கு இந்தியாவில் இருந்தும், "தமிழ் பேசும் இந்தியர்களிடமிருந்தும்" இலங்கை அரசுக்கு பலமான ஆதரவு.

தேசியம், ஒருமைப்பாடு இந்த ஜல்லிகளை இன்னும் எத்தனை நாளைக்கு அடிக்க முடியும் ? நாள் தோறும் அடிக்கிறார்கள், எந்த ஒன்றிற்கும் இருக்கும் பலமான எதிர்ப்பே... அதன் வெற்றியை முன்கூட்டியே அறிந்து நடுங்கும் "ஓலம்" என்பதைத் தவிர்த்து வேறெதும் நினைக்கத் தோன்றவில்லை.

எதிர்ப்புகளை பதியவைக்கட்டும்...ஏனெனில் இந்த எதிர்ப்பின் பதிவே, யார் யார் தமிழின துரோகிகள் என்று அறிய, நாளைய வரலாற்றில் தமிழின தூரோகத்தின் தடையங்களாக இருக்கும்.

களபிரர் ஆட்சி, பிற மாநிலத்தவர் ஆட்சி, மணிபிரளவ திணிப்பு, இந்தி நுழைவு இவற்றையெல்லாம் எதிர்த்தும், எந்த ஒரு எதிர்ப்பிலும் ஒற்றுமையாக இருந்து தமிழன் வென்றே வந்திருக்கிறான்.

19 டிசம்பர், 2008

திரட்டிகள் ரேஸ்... யாருக்கு முதலிடம் !

வலைப்பதிவுகள், வலைப்பதிவாளர்கள் எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக திரட்டிகளின் (தமிழ்பதிவுகள் தமிழ்வெளி சங்கமம் தமிழிஷ் தமிழ் கணிமை திரட்டி.காம் ) எண்ணிக்கையும் மிகுந்து கொண்டே வருகிறது.... தற்பொழுது தமிழ் பதிவு திரட்டியாக 10க்கு மேற்பட்ட திரட்டிகள் இயங்குகின்றன.

திரட்டிகள் புதிதாக எதுவும் செய்தால் தான் பதிவர்களை ஈர்க்குமா ? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனெனில் தமிழ்மணத்தை விட பதிவர்களுக்கு பலவசதிகளை செய்து தந்ததாகச் சொல்லப்பட்ட தேன்கூடு தமிழ்மணத்திற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது. தற்பொழுது தேன்கூடு திரட்டி செயலில் இல்லை.

புதிதாக தமிழிஷ் பல வசதிகளைத் தருவதாக அறிவித்திருக்கிறது, பல பதிவர்கள் அதில் இணைத்திருக்கின்றனர். தமிழிஷ் வாக்குகள் பதிவர்களை ஊக்கப்படுத்துவதாக பதிவர்கள் பலர் நினைக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை பதிவில் தெரியாவிட்டாலும் வாக்கு அடிப்படையில் வாசகர் பரிந்துரையை தமிழ்மணமும் வைத்திருக்கிறது.




தமிழிஷ் போலவே புதிதாக இன்னொரு திரட்டியும் வந்திருக்கிறது. இன்னும் பெயர் வைக்கவில்லை போலும், நெல்லைதமிழ்.காம் என்ற இணையத் தளம் நடத்துபவர்களே இதையும் நடத்துகிறார்கள், வால் பையனைத் தவிர வேறு யாரும் இதுவரை இணைக்கவில்லை. தமிழிஷ்க்கும், நெல்லை திரட்டிக்கும் அட்டைப் பலகைத் தவிர வேறு பெரிய வேறுபாடு தெரியவில்லை.



******

தமிழ் திரட்டி ஆரம்பிக்கும் தமிழார்வளர்கள் பதிவர் ஒவ்வொருவருக்கும் மின் அஞ்சல் மூலமாகவே, தனிப்பட்ட நண்பர்கள் வழியாகவோ சொல்லி அறிமுகப் படுத்துகிறார்கள். 10க்கு மேற்பட்ட திரட்டி இருந்தால் ஒரு பதிவர் ஒவ்வொரு திரட்டியிலும் பதிவை இணைப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. பதிவர்களின் வலைப்பதிவும், உள்ளிடும் காப்புரிமை உடையது அல்ல. எனவே திரட்டிகள் பதிவை திரட்டும் வேலையை தானாகவே செய்யலாம். ஒவ்வொரு திரட்டியிலும் இணைத்துவிடுவது பதிவர்களுக்கு நேர விரையாமாகும் வீன் வேலை.

திரட்டிகள் புகழடைய பதிவர்களை ஊக்கப்படுத்தினால் தான் உண்டு, அதைத் தமிழ்மணம் சரியாக செய்கிறது. நட்சத்திர தேர்வுகளில் குளறுபடிகள் இருப்பதாக பலர் சொல்கின்றனர். என்னுடன் எழுத வந்த பதிவர்கள் சிலருக்கு இன்னும் நட்சத்திர வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. குலுக்கல் முறையில் நட்சத்திரம் யார் என்று தேர்ந்தெடுத்தால் மட்டுமே நீண்ட காலப் பதிவர்கள் விடுபட காரணம் உண்டு எனலாம். நீண்ட காலப் பதிவர்களில் இன்றும் எழுதிக் கொண்டு இருப்பவர்களில் யார் யார் தமிழ்மணம் நட்சத்திரம் ஆகவில்லை என்ற கணக்கை தமிழ்மணத்தால் எடுக்க முடியும்.

தமிழ்மணம் போல் பதிவர்களை ஊக்கப்படுத்தினால் தான் பிறதிரட்டிகளும் புகழ்பெற முடியும். அங்கிருக்கிறது இங்கும் இருக்கு...அதுல என்ன இருக்கு ? என்பதெல்லாம் பதிவர்கள் அனைவரையும் சென்றடையும் விளக்கம் அல்ல. தமிழ்மணம் வார நட்சத்திரம் நடத்துவது போல், பதிவர்களை தொடர்ப்பு படுத்தி திரட்டிகள் ஏதும் செய்தால் அது பதிவர்களிடையே பேசப்பட்டு புகழடையும். இன்றும் கூட 'தினமலரின் எனது சிறுகதை' என்று சிற்றிதழில் படைப்புகள் வெளிவந்ததை பதிவர்கள் பெருமையாக நினைத்து அந்த தகவலை பதிவு செய்கிறார்கள், தான் பாராட்டப்பட வேண்டும் என்பதே பதிவர்களின் விருப்பம். புரிந்து கொண்டால் திரட்டிகள் தமிழ்மணம் போல் புகழடையும்.

பதிவர்களால் பாராட்டி பேசப்படும் திரட்டியே முதலிடத்திற்கு வரும். அந்த வகையில் தமிழ்மணம் சன் டிவி போல முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து...நீங்களும் அப்படிச் சொல்லுங்க என்று வலியுறுத்தல......டிஸ்கி போடாமல் எதையுமே எழுத முடியல... :(

திருமணம் ஆன ஆண்களுக்கு ... !

புதுசா நிறைய பேர் திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலோ, காதலித்துக் கொண்டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம் மறந்துவிடுவார்கள்.

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப் போவதாகச் சொல்லி ஒரு 4 மணி நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள் கூட திருமணம் ஆன பிறகு மனைவிக்கு என்று பிறந்த நாள் வருகிறது என்பதைக் கூட மறந்துவிடுவார்கள். 'என்னைய டென்சன் படுத்ததே...' என்ற வசனம் கூட அடிக்கடி வரும்.

திருமணம் ஆன புதிதில் மனைவி கவனிக்கும் ஓவர் கவனிப்பில் ஒருவித மகிழ்ச்சி இருந்தாலும்...ஒரு வித கூச்ச மனப்பான்மையும் ஏற்படுவதால் எரிச்சலும் வரும். எது எது பிடிக்கும் என்பது தெரியாததால் தெரிந்து கொள்வதற்காக வேண்டி அன்புத் தொல்லை மிகுதியாக கொடுக்கும் மனைவியரும் உண்டு.

பெண்களைப் பொருத்த அளவில் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆண்கள் சின்ன சின்ன விசயத்தையையெல்லாம் மறந்தாலும் ஆறுதல் அடைந்தோ...இதெல்லாம் ஒன்னும் பெரியதல்ல என்று தேற்றிக் கொள்வார்கள். பெண்கள் எல்லாவற்றிலும் குறை வரக் கூடாது என்று நினைப்பவர்களாகவே இருப்பார்கள். திருமணம் ஆன பிறகு தன்னோட குடும்பம் தனி என்கிற நினைப்பு ஆண்களைவிட பெண்களுக்கே மிகுதி. உண்மையில் ஆண்கள் தன்னுடைய குடும்பம், தனக்க்கான குடும்பம் என்றுகூட நினைக்கவே மாட்டார்கள். தன்னுடைய குடும்பம் என்கிற நினைப்பில் தான், கணவன் தன்மீது மட்டுமே மிகுதியாக அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பையும் வைத்துக் கொள்வார்கள். நெருங்கிய நண்பர்களோ, கணவனின் உறவினர்களோ கணவன் மீது தன்னைவிட மிகுதியாக அன்புகாட்டுவதை விரும்புவது இல்லை.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இதற்கு தடை போடும் போது...பிணக்குகளாக வளரும். திருமணம் ஆன உடனேயே கணவன் - மனைவி இருவரும் உறவினர்களை விட்டுவிட்டு தனிக்குடித்தனமாகச் சென்றால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்யலாம். நண்பர்களின் நடவடிக்கைகளில் மிகுதியாக ஈடுப்படக் கூடாது. நட்பா, மனைவியா எது பெரியது என்கிற சீர்தூக்களையெல்லாம் சிறுதுகாலம் ஒதுக்கி விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள...குறிப்பாக மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள கணவன் முயற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன் பிறகு பெண்கள் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு கணவனை தண்ணீர் தெளிச்சு விட்டுவிடுவார்கள்.

கணவன் வாங்கித்தரும் ஒவ்வொரு பொருளை பெருமதிப்பு மிக்கதாக அது பயன்படாத நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருமண நாள், பிறந்த நாள் ஆகியவற்றிற்கு தான் கேட்காமலேயே கணவன் பரிசுகளை வாங்கித்தரவேண்டும் நினைப்பார்கள், குறிப்பாக நகைகள் வாங்கித்தந்தால் அன்றே அம்மாவீட்டிற்கு தொலைபேசி சொல்லி மகிழ்வார்கள். பெண்கள் தாம் மகிழ்வுடன் வாழ்வதாக வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில் விருப்பம் மிக்கவர்கள். தனக்கு எது கிடைத்தாலும் பிறரிடம் சொல்லி மகிழ்வதில் அவர்களுக்கு அலாதியான விருப்பம் உண்டு. அது பிறர் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்றா அல்லது பொறாமை படவேண்டும் என்று சொல்கிறார்களா ? என்பது அவர்கள் அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தின் தன்மையைப் பொருத்தது. சிலரிடம் பெருமையாக சொல்லும் ஒன்றைப் பற்றி வேறு சிலரிடம் பொறாமை படுவார்கள் / படவேண்டும் என்பதற்காக மறைப்பதும் / சொல்வதும் உண்டு.

எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா ? Exception எங்கும் உண்டு. எல்லா ஆண்களில் மன நிலையும் ஒன்று போல் இருப்பதில்லை...அது போல் தான் பெண்களும் எல்லா பெண்களுமே ஒன்று போல் இருப்பதில்லை. ஆனால் பெண்களின் பொதுவான மனநிலை...பிறரைவிட கணவன் தன்னிடம் மட்டுமே மிகுதியாக அன்பு செலுத்த வேண்டும், தனது செயல்களை பாரட்டவேண்டும் அது சமையலாக இருந்தாலும் கூட என்றே நினைப்பார்கள்.

எதை மறந்தாலும் மனைவியின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலாவது) மறந்துவிடாதீர்கள், நினைவிருந்தால் பரிசு கொடுக்க மறந்துவிடாதீர்கள். ஆரம்பத்தில் மனைவியின் கவனிப்பு அன்புத் தொல்லையாகவே இருக்கும், போகப் போக சரியாகிடும் அல்லது குறைந்துவிடும்.

18 டிசம்பர், 2008

பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? - இளங்கோ !

இந்த பதிவில் கேள்வியாக கேட்டு தனிப்பதிவாக போட்ட பதிவர் இளங்கோவிற்கான பதிவு இது:

பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? - இளங்கோ !

முதலில் கேள்வியே தப்பு, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பகுப்பில் பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள் என்று தவறாகவே சொல்லப்படுகிறது. பிராமணர் என்றால் எண்ணம் சொல் செயல் குறித்த மேலான எண்ணம் உடையவர்களுக்கு, அவர்கள் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தோர் என்ற பொருளில் பிராமணர்கள் என்ற தகுதிச் சொல் வழங்கப்பட்டது. பிராமணர் என்ற வடசொல்லுக்கு தமிழில் அந்தணர் என்ற பொருள். மேலும் பிராமணர் என்ற பண்புப் பெயர் தகுதியின் அடைப்படை அடைமொழி யன்றி பிறப்பின் அடிப்படையில் கிடையாது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மணியக்காரர் என்கிற பட்டம் ஊர் நாட்டமைகளுக்கு வழங்குவதுண்டு, மணியக்காரர் என்றால் குறிப்பிட்ட சாதியைச் சொல்வதன்று, அந்த கிராமத்தின் நாட்டாமைக்கு வழங்கப்படும் பட்டப்பெயரே. பின்னாளில் மணியக்காரரின் வாரிசுகளை மணியக்காரர் என்று சொல்ல ஆரம்பித்து ... சாதியாக பரிணமித்தது, தற்பொழுது இல்லை, சத்திரியன், பிள்ளைமார், பட்டமும் அப்படித்தான். சங்ககாலத்தில் அந்தணர் என்ற தகுதி படித்தவர்களுக்கு, குருக்களுக்கு என படித்தவர்கள் பல குலத்தொழில்களை செய்திகொண்டிருந்தவர், பல்வேறு குலங்களில் பிறந்திருந்தாலும் வழங்கப்பட்டது, அவர்களை பிறரில் இருந்து வேறுபடுத்திக் காட்ட 'பேட்ஜ்' போல முப்புறிநூல் அணியும் பழக்கமும் இருந்தது.

இன்றைய பார்பனர்கள் பல நிறத்திலும் இருப்பதற்கு காரணம் முன்பு அந்தணர்கள் பட்டம் பெற்றவர்களில் பல்வேறு வகுப்பினரும் இருந்திருந்தார்கள், அவர்களின் சந்ததிகள் ஆதிசங்கரர் மற்றும் இராமனுஜருக்கு பிறகு தங்களை பார்பனர்களாக நினைத்துக் கொண்டனர். உண்மையிலேயே பார்பனர்கள் மற்றும் ஆரியர்கள் யாரென்றால் அவர்கள் அனைவரும் இன்றும் இருக்கும் காஷ்மீரத்து பண்டிட்டுகள் மட்டுமே. இன்றைய தேதியில் மதமாற்றம் போல் பண்டைய காலத்தில் இன்றைய பார்பனர்களில் பெரும்பகுதி திராவிடர்களில் இருந்து பார்பனர்களாக 'இனம்' மாறியவர்களே. காஷ்மீரத்து பண்டிட்டுகளின் முகம், மூக்கு, உடல், நிறம் ஜெர்மானியர்களை அல்லது ஐரோப்பியர்களை ஒத்தே இருக்கிறது, தென்னிந்திய பார்பனர்கள் மற்றும் ஏனைய முன்னாள் திராவிட இன்னாள் பார்பனர்களுக்கு உடல் ஐரோப்பியர்கள் போல் இருப்பதில்லை, முன்னாள் திராவிடர்களான இன்னாள் பார்பனர்கள் யாரும் கைபர் போலன் கனவாய் வழி வந்தவர்கள் அல்ல

கேள்வியே....பார்பனர்கள் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? என்று இருக்க வேண்டும்.

கேள்விக்கு வருவோம்... 'ஆரியர்கள் ஜெர்மானியர்களே' என்றே பார்பனரான ஆவி மதன் தனது 'வந்தார்கள் வென்றார்கள்...' தொடரில் எழுதி இருக்கிறார். அதாவது ஆரியர்கள் அனைவரும் ஹிட்லர் வம்சம். அப்படி கைபர் போலன் வழியாக வந்த ஒர்ஜினல் ஆரியர்களில் மொழி பிராகிரதம் எனப்படும் வடமொழியின் முதல் வடிவம், அதன் ஒலிப்பு மற்றும் இலக்கணம் கிரேக்கம், லத்தீனம், ஜெர்மானியம் ஆகிய ஐரோப்பிய மொழிகளை ஒத்தது. சமஸ்கிரதத்தில், மாதா = மதர், பிதர்/பித்ரு = பாதர், பிராகிரதம் எழுத்தில்லாத மொழியாகவே இருந்தது, தென்னிந்தியாவில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் தான் சமஸ்கிரத்திற்கான இன்றைய எழுத்துவடிவம் கிருந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு, பின்னரே வேதங்கள் எழுத்தில் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சமஸ்கிரத்திற்கு எழுத்துக்கள் வந்த காலத்தில் ஒரிஜினல் ஆரியர் (பார்பனர்) மற்றும் முன்னாள் திராவிடர்களாக இருந்து ஆரிய இனமாக தங்களை மாற்றிக் கொண்ட இன்றைய பார்பனர்கள் பலரும் ஒரே பார்பனர்களாக ஆகி இருந்தனர். பண்டைய இந்தியாவில் பாலி, பிராகிரதம் மற்றும் ஆதித்தமிழ் ஆகிய மொழிகளே இருந்தன. இவற்றில் பாலி, சமஸ்கிரதமும் முற்றிலும் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து வடமாநில வட்டார மொழிகளாக திரிந்தது, ஆதித்தமிழ் திராவிட மொழிகளாக திரிந்தது.

பண்டைய இந்தியாவில் வடக்கில் பெருமளவு ஐம்பூத வணக்கமும், தெற்கில் நிலப்பிரிவு படி ஐந்து நிலத்தில் (குறிஞ்சு முதல் பாலை வரை) தனித்தனியான கடவுளை வணங்கினர்.

நான்கு வேதங்களான ஒரிஜினல் ஆரியர்களின் இருக்கு, யஜூர், சாம, அதர்வான வேதங்களுக்கும், இந்திய சமயங்களுக்கும் அவ்வளவு தொடர்ப்பு இல்லை, பின்னாளில் தொடர்ப்பு ஒட்டவைக்கப்பட்டது. நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்கள் ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிக் கொண்ட கதைதான். அரசன் பெயராக இந்திரன், கண்ணன் போன்றோரின் பெயர் சொல்லப்பட்டுள்ளது, கண்ணன் ஆயர் குலத்தோன், ஆரிய குலத்திற்கு நண்பன் என்று வேதங்களில் சொல்லப்படுகிறது. வெகு பிற்காலத்தில் இருக்கு வேத கண்ணனும், திராவிட மருத நில மாலும் ஒன்றாக்கினர், அதுபோல் வேதகாலத்தில் இருந்த சங்கரன் என்கிற ஏவல் தெய்வமும், தமிழக (சைவ) சிவனும் ஒன்றென சொல்லிவைத்தனர். வடக்கில் இருந்த குமர குருபரனே தெற்கின் முருகன் அல்லது சேயோன் என்று சொல்லிவைத்தனர். இவற்றையெல்லாம் ஒட்ட வைத்தில் பெரும்பங்காற்றியது கந்தபுராணம்.

*****

இன்றைய தேதியில் "பிராமணர்" என்கிற தகுதியாருக்கும் இல்லை, எனவே ஆரியர்கள் எவராக இருந்தாலும் பார்பனர் என்று சொல்லலாம். பிரமணர் என்று சொன்னால் பிராமணர் அல்லாதோர் அதாவது சூத்திரர் என்று ஒரு சமூகத்தையும் நீங்கள் ஒப்புக் கொள்வதாக பொருள், சாதிகள் பிறப்பு அடிப்படை என்று ஆகிவிட்ட பொழுது 'பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர்' என்கிற தகுதியடைப்படைச் சொற்கள் எவருக்குமே பொருந்தது.

**********

ஒருவரை பிராமணர் என்ற சொல்லத் தகுதியானவை:

யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'

இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)

- நன்றி நண்பர் குமரன்


பிராமணர் என்கிற சொல்லுக்கான தகுதி ஒருவருக்கும் இல்லை, அனைவருமே சூத்திரன் என்ற சொல்லுக்கு இருக்கும் தகுதியில் தான் இருக்கின்றனர். நான் பார்பனர்களை மட்டுமே சொல்லவில்லை, இன்றைய தேதியில் பார்பனர் உட்பட நான் ஷத்திரியன் என்று மார்தட்டும் அனைத்து சாதிகளும் சூத்திரன் என்ற தகுதியில் தான் இருக்கின்றனர். ஒருவரை பார்பனர் என்று அறிந்து நீங்கள் அவரை பிராமணர் என்று சொல்வது, அழைப்பது மறைமுகமாக உங்களை நீங்களே சூத்திரன் என்று சொல்வதாக, ஒப்புக் கொள்வதாக பொருள்.

பார்பனர்களுக்கு பிறவி குணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, பார்பனீயம் என்ற கட்டமைப்பில், சூழலில் வளர்வதால் அந்த குணம் அவர்களுக்கு இருக்கிறது. மற்றபடி எந்த சாதியினர் வீட்டுக் குழந்தையும் பார்பனர் வீட்டில் வளர்ந்தால் பார்பன குணத்துடன் தான் வளரும், இது பிற சாதிவிட்டில் வளர்க்கப்படும் பார்பன குழந்தைக்கும் பொருந்தும். சிங்கையில் தமிழர்கள் வீட்டில் வளர்ந்த சீனர்கள் தமிழர்களைப் போல் பண்பாடும் நாகரீகமும், தமிழ் பேச்சும் உள்ளவர்களாகவே உள்ளனர்

17 டிசம்பர், 2008

சென்னை விமான நிலைய காமடி - மெய்ப்புலம் அறைகூவலர் !

சென்னை: சென்னை விமான நிலையத்தின் கழிவறைக்குச் செல்வோரை தலை சுற்றி கிறுகிறுக்க வைக்கும் வகையில் ஒரு தமிழ்ப் பலகையை வைத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்காகவே சிறப்பு கழிப்பறை ஒன்று உள்ளது. அதன் வெளிக் கதவின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில், மெய்ப்புலம் அறைகூவலர் என்று எழுதி வைத்துள்ளனர்.

இதைக் காணும் பலருக்கும் இதன் அர்த்தம் சுத்தமாக புரியாமல் குழம்பியபடியே உள்ளே சென்று திரும்புகின்றனர்.

மெய்ப்புலம் அறைகூவலர் என்றால் உடல் ஊனமுற்றோர்

பிசிகலி சேலஞ்ச்ட் என்று எழுதாமல் தமிழில் எழுத வேண்டியதுதான். உடல் ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம். அதை விடுத்து வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே புரியும் வகையிலான படு சுத்தத் தமிழில் எழுதி வைத்தால் யாருக்காவது புரியுமா?

நல்ல வேளையாக மெய்ப்புலம் அறைகூவலர் என்ற வார்த்தைக்கு அருகில் உடல் ஊனமுற்றோருக்கான படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இது ஏதோ தமிழ் சங்கத்தின் அலுவலகம் என்று நினைத்து யாரும் இப்பக்கமே வராமல் திரும்பிப் போகக் கூடும்.

தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?

- தட்ஸ் தமிழ்

************

இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.

இதுபோன்று ஆங்கிலத்தை தமிழ்படுத்தும் போது, சங்க(கால)ச் சொற்களுக்கு பதிலாக புழக்கத்தில் இருக்கும் சொற்களை பயன்படுத்துவதே நல்லது. இல்லாவிடில் விளங்காமல் போகும்.

சிங்கையில் உடல் ஊனம் பற்றிய சொற்களாக பயன்படுத்துவது

குருடர் - பார்வையற்றோர், பார்வையிழந்தோர், பார்வை குறைபாடு உடையோர்

"குருட்டுப்பயலா நீ" என்று பிறரை கேலி செய்ய "குருடு" என்பதன் பொருள் திரிக்கப்பட்டத்தால் பார்வை குறைபாடுகளை சொல்வதற்கு அந்த 'குருடு' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தற்போதைய பண்பாடு அல்ல. குரு என்ற சொல்லுக்கு ஒளி என்றே பொருள், ஒளியிலார், ஒளியிழந்தோர் என்ற பொருளில் தான் குருடர் என்ற தமிழ் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. குரு என்பது தமிழ்ச் சொல்லே, Kuru என்று எழுதாமல் Guru என்று ஆங்கிலத்தில் எழுதுப்படுவதால் நாம் அதை வடச்சொல் என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். குரு என்ற தமிழ் சொல்லுக்கு நேரடியான வடச் சொல் 'ஆச்சார்ய'

செவிடு - இதற்கு காது கேளாதவர், செவிக் குறையுடையோர், ஒலி கேளாதவர் என்று சொல்லலாம்

ஊமை - பேச இயலாதோர்,

இது போல் உடல் ஊனமுற்றோர் என்று எழுதினால் அந்த குறையுடையோரின் இதயத்தை காயப்படுத்துவதாகவே அந்தச் சொல்லின் பொருள் ஆகிவிட்டது. 'ஊனம்' என்பது குறை என்ற பொருளுடைய சொல். ஒருவரின் ஊனம் என்பது அவரே வாங்கி வந்த வரமல்ல, அவருடைய இயற்கை அமைப்பின் படி அப்படி அவர் இருக்கிறார்.

ஊடல் ஊனமுற்றோர் - "உடல் குறையுற்றோர்", "உடலியல் மாறுபட்டோர்" என்று சொல்லலாம், ஊனம் என்பதை விட குறை என்று எழுதினால் பொருள் மாறாது, சொல்லின் தாக்கமும் குறைவு

ஒரே சொல்லால் சொல்லப்படும் பண்பு பெயர்ச் சொற்களின் (Vocabulary) பொருள் எதிர்காலத்தில் திரிந்து போனால், இரு அல்லது மேற்பட்ட சொற்களில் (DECOMPOSE OR CONVERT IN TO MEANING) அந்த பொருளை எழுத முடியும் என்றால் எழுதலாம் தவறு அல்ல. அல்லது முற்றிலும் புதிய ஒற்றைச் சொல்லை உருவாக்கி பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் Latrine பின்னர் Toilet ஆகி அதன் பிறகு அந்த சொல்லின் பொருளும் அருவெறுப்பாய் ஆனதால் தானே Rest Room என்று மாற்றிக் கொண்டார்கள்.

கழிவறை என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு தளர்வறை (கழிவு இறுக்கம் தளர்த்த...) அல்லது வேறு எதாவது புதிய சொற்களை பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்தில் இருந்து நேரடி மொழிப்பெயர்ப்பு எல்லா மொழிகளுக்கும் சிக்கலான ஒன்று தான். மொழிப்பெயர்ப்பு சொற்களை பொதுப்படுத்தும் முன் தமிழார்வளர்களிடமும், தமிழாராய்ச்சியாளர்களிடமும் கலந்து பேசி முடிவு செய்தால் நல்லது.

16 டிசம்பர், 2008

புஷ் மீது ஷூ வீச்சு - சில எண்ணங்கள் !

அமெரிக்க அதிபர் புஷ்சிற்கு ஈராக் மக்களின் கடைசி பரிசு என்று எகிப்து செய்தியாளர் வீசிய ஷூக்கள் நிகழ்வு பற்றிய தகவல் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புஷ் லாவகமாக குனிந்து தப்பியதை பலரும் பார்த்திருப்பீர்கள். புஷ் மீது செருப்படி விழுந்திருக்கனுமா ? கூடாதா ? அந்த நிகழ்வு சரியா தவறா என்று சொல்லத் தெரியல. பாதிக்கப்பட்டவர்களின் பார்வை என்று தனியாக ஒன்று ஒன்று. அரசாங்க செயலுக்கும் போராளிகளின் செயலுக்கும் ஒரே ஒரு வேறுபாடு, ஒன்று அதிகாரத்தின், ஆளுமையின் பெயரில், மக்கள் கொடுத்த அங்கீகாரத்தின் பெயரில் செய்வது. மற்றது தன்னிச்சையாக. இரண்டுமே தன்னிச்சையாக என்றாலும் அரசாங்க செயல் மக்கள் செயலாக சொல்லப்பட்டுவிடும், குற்றமும் இல்லை என்பதாக பொருள் சொல்லப்படுகிறது.

***

பல்வேறு பாதுகாப்புச் சோதனைகளை கடந்து தான் புஷ் போன்ற அரசியல் பெரும் தலைவர்களில் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். காலில் போட்டிருக்கும் ஷூ வைக் கூட பயன்படுத்தி தாக்க முடியும், எதிர்ப்பு காட்ட முடியும், எதிர்ப்பை பதிய வைக்க முடியும் என்பதாக இந்நிகழ்ச்சி புரிய வைத்துள்ளது. இனி வருங்காலத்தில் செய்தியாளர்களை செருப்பில்லாமல், ஷூ இல்லாமல் தான் அனுமதிப்பார்கள், அப்படியே அனுமதித்தாலும் வீசினால் சென்று தாக்கும் அளவுக்கு இல்லாமல் இடைவெளியை மிகுதி படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.

புஷ் தவறான முடிவெடுத்தவராகவும், பொருளாதார சீர்குழைவில் விட்டுச் செல்வதாகவும் இன்னும் பலப்பல குற்றச் சாட்டுகளுடன் விடை பெரும் நேரத்தில் செருப்படியும் கிட்டதட்ட கிடைத்த நிலையில் முடித்துக் கொள்ளப் போகிறார். அவரது கட்சியினருக்கு வருத்தமான நிகழ்வு. அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும். அமெரிக்க அதிபர் வரலாற்றில் புஷ்ஷுக்கென்றே தனியான இடம் இருக்கும்.

எவ்வளவு தான் உயர்ந்த பதவி என்றாலும் அந்த பதவியையும் அவமானப் படுத்த முடியும் என்பது ஷூ வீச்சு நிகழ்ச்சியின் மூலம் புரிகிறது.

பதவியினால் புகழ் கிடைப்பது போல் தான், பதவி அடைந்திருப்பதால் ஏற்படும் அவமானமும், இரண்டுமே செயல் தொடர்பில் கிடைக்கும் பலன் மற்றும் விளைவுகள். தெளிவிருந்தால் இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

*****

புதிய அமெரிக்க அதிபர் ஈராக் படைகளை படிப்படியாக மீட்டுக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ஏற்படும் பாதுகாப்பின்மையால் தற்பொழுது இருக்கும் ஈராக்கின் அமெரிக்க ஆதரவு அரசு நிலைக்குமா என்பது பெரும் கேள்வி குறி.

15 டிசம்பர், 2008

யார் திராவிட சிசு ?

கால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் "ஆரியர், திராவிடர்" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே இல்லை என்றும், இன்று
"ஆரியர்" என்று சொல்வதற்கு அலறி துடிக்கும் இவர்கள் தான், ஒருகாலத்தில் "ஆரியர்" என்பது தனி இனம் என்றும் பெருமைக் குறிய இனம் என்றனர், ஆரியர்களே பிரம்மன் முகத்தில் பிறந்த பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள் பார்பனர்கள். இப்போதும் பிராமணர்கள் என்றே பார்பனர்கள் தங்களுக்குள் அழைத்துக் கொள்கின்றனர். பார்பனர்கள் அனைவருமே ஆரியர் அல்ல என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. பிரம்ம முகத்தில் பிறந்தேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள பார்பனர்களாக தங்களை மாற்றிக் கொண்ட முன்னாள் திராவிடர்கள் கூட தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். இதற்கெல்லாம் ஆதாரம் ? இராமனுஜரின் வைணவ சேவையை படித்திருந்தாலே தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சொல்லிக் கொண்ட முன்னாள் திராவிடர்களான (அப்படித்தான் தேவநேய பாவாணர் குறிப்பிடுவார்) இன்னாள் பார்பனர்கள், ஆரியர் - திராவிட இனமெல்லாம் கால்டுவெல் என்னும் கிறித்துவ வெறியனின் சூழ்ச்சி என்று ஏன் அலறவேண்டும் ? காரணம் உண்டு. ஏனென்றால் ஆரியர்களின் நான்கு வேதங்களில் புழங்கி இருந்த வடசொற்களின் பொருளும், ஒலியும் கிரேக்கம், இலத்தீனை ஒட்டி இருப்பதால், ஆரியர் என்போர் இந்தியாவிற்கு வெளியில் இருந்துவந்தவர்கள் என்று சொல்லி, அதற்கான ஆராய்ச்சிகளில் கைபர் போலன் கனவாய் பெயரெல்லாம் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆரியர் என்றாலே கணவாய் ஞாபகம் வந்துவிடுவதால் ஆரியர் - திராவிடர் என்பது மிசெனறிகளின் சூழ்ச்சி என்கின்றனர்.

தமிழ்சைவ சமய குரவர்கள் மூவர் (அப்பர்-சுந்தரர்-ஞான சமபந்தர்) இந்தில் ஞான சம்பந்தர் மட்டுமே 16 ஆயிரம் பாடல்கள் வரையில் தமிழில் பாடி இருக்கிறார். சிவ வழிபாடு, சிவ சமயம், ஐந்தெழுத்து மந்திரம் இவையே இம்மூவர்களின் மூச்சு, இதற்காக இவர்களால் பலி/பகை வாங்கப்பட்டது சமண / பவுத்த சமயங்கள் என்பது நாம் அறிந்தவையே. ஞான சம்பந்தரும் பார்பனர் தான் 16 வயது வரை வாழ்ந்தார்.

ஆதிசங்கரின் காலம் கிமு என்று பலர் கூறுவதுண்டு, ஆனால் ஆதிசங்கரர் 'திராவிட சிசு' என்று குறிப்பிட்டது ஞான சம்பந்தரைத்தான் என்றும் சொல்கின்றனர், ஞான சம்பந்தர் என்று பொதுவாக குறிப்பிடுவது திருஞான சம்பந்தரை என்றாலும் இன்னும் இரு ஞான சம்பந்தர்கள் இருந்ததாக சைவ அடியார்கள் சொல்லுகின்றனர். ஞான சம்பந்தர் தனது அனைத்து பதிகங்களையும் தமிழில் பாடியதால் அவரை சாடுவதற்காக 'திராவிட சிசு' என்று ஆதிசங்கரர் குறிப்பிட்டதாகச் சொல்கின்றனர். ஏனென்றால் மலையாள தேசம் என்று பிரித்து அறியப்படாத நாட்களில் ,தென்னகத்தில் இருக்கும் காலாடியில் (தற்போதைய கேரளா) பிறந்தவராக நம்பப்படும் ஆதிசங்கரர் தனது பாடல்களில் தமிழை மருந்துக்குக் கூட சுட்டவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். தமிழ் சூத்திர பாசை, தமிழ் பேசுபவர்கள் திராவிடர் என்று இவர்காலத்தில் வலியுறுத்தல் இருந்திருந்ததோ அல்லது இவரே அப்படி வலி யுறுத்தினாரா என்றும் தெரியவில்லை.

சைவ சமயங்களில் வேதசார்ப்புகள் இருந்தாலும், சிவன் தென்னாட்டைச் சேர்ந்தவனாக (தென்னாடுடைய சிவனே போற்றி) வழியுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தமிழ் சைவர்கள் காசிக்கு சென்றது போல் குறிப்புகள் எதுவுமே இல்லை. ஆனால் நாயன்மார்களில் பலர் கைலாயம் சென்றதாக கதைகளில் சொல்லப்பட்டு இருக்கிறது, அதுவும் பாதயாத்திரையாக சென்றது போல் சொல்லப்படாமல், பறக்கும் குதிரையிலும், ஐராவதம் என்னும் பறக்கும் வெள்ளையானையின் மீது அமர்ந்து சென்றதாக (சுந்தரர்) சென்றதாக கதை இருக்கிறது. வடக்கின் எல்லையில் இருக்கும் பனிமலை எப்போது முதல் கைலாயம் என்று சொல்லப்படுகின்றது என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை.

தமிழ் சைவர்கள் ஏன் வடவேதங்களை தமிழ் சைவ வேதத்தில் கலக்க வேண்டும் ? காரணம் உண்டு. கிமு 12 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஒழிப்பிற்கு பிறகு கல்வி கற்றுக் கொடுப்பவர்கள், இருமொழி வித்தர்களாக இருந்தவர்களில் பெரும்பகுதியினர் பார்பனர்களே. அவர்களின் மாணாக்கர்களுக்கு பெரும்பாலும் இருமொழிகளுடன் வடவேதங்களையும் போதித்தனர். அன்றைய காலத்தில் வேதத்தில் இருக்கும் சங்கரன் என்கிற நெருப்புக் கடவுளும் சைவ சமயத்தின் சிவனும் ஒன்றே என்பதாக சொல்லிக் கொடுத்தனர். சிவனுக்கு படங்களில் காட்டப்படுவது போல் பார்வதி என்கிற மனையாட்டியும், முருகன், பிள்ளையார் போன்ற பிள்ளைகளோ கிடையாது, இவை வடபுலத்து கதைகளை இணைத்த கந்த புராணத்து இடைச் சொருகல்கள் மட்டுமே. சிவனை உருவாகக் காட்டியதால் திருவிளையாடல் புராணங்கள் புணைந்து 'அற்புதங்கள்' நடத்தியதாக நம்பவைக்க வேண்டிய நிலைக்கு தங்களை மாற்றிக் கொண்டனர் சைவ மூவர்கள்.

அப்போதும் தமிழ் - வடமொழி எது உயர்வு ? என்கிற போட்டி நடை பெற்றுக் கொண்டி இருக்கிறது, தமிழ் பக்தி இயக்கமே வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக இருந்ததால், அதில் ஆர்வம் காட்டியதால் அதாவது தமிழ் மீட்புக்கு ஆர்வம் காட்டியதால் ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் 'திராவிட சிசு' என்று அழைத்தார் என்கிறார்கள். ஆதிசங்கரரின் காலம் கிமுவில் இல்லை ஞானசம்பந்தரை அவர் குறிப்பிட்டு இருப்பதால், ஆதிசங்கரரின் காலம் சம்பந்தர் வாழ்ந்த அதே 7 ஆம் நூற்றாண்டை (களப்பிரர் ஆட்சிக்கு பிந்தைய காலம்) சார்ந்ததே என்று இதன் வழியாகச் சொல்கின்றனர்.

"திராவிட" என்ற சொல்லை கிறித்துவ மிசெனறிகள் முதன் முதலாக பயன்படுத்தவே இல்லை. அதற்கு முன்பே ஆதிசங்கர் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் "ஆரிய - திராவிட பிரிவு இந்தியாவில் இருந்தது இல்லை, அவை மிசனெறிகளின் சூழ்ச்சி" என்று இன்றைய பார்பனர்களும், இந்துத்துவாக்களும் மெசனிறிகளின் (கால்டுவெல் ஐயர், ஐயுபோப் ஐயர்) மீது அவதூறு சொல்லுகின்றனர். ஆதிசங்கர் என்று ஒருவர் இருந்ததே இல்லை என்று சொல்லிவிட்டு, ஆரியர் - திராவிடர் என்பது மிசெனெறிகளின் சூழ்ச்சி என்றால் ஒருவேளை ஏற்றுக் கொள்ளலாம்.

மேலும் திராவிட சிசு பற்றிய குறிச்சொற்கள்: கூகுள் தேடலில்...

13 டிசம்பர், 2008

எத்தனை எத்தனை முகங்கள் ! (மின் அஞ்சலில் வந்தவை)






சுப்பையா வாத்தியார் தான் மின் அஞ்சலில் வந்த படங்கள் பதிவில் போடுவாரா ? நாங்களும் போடுவோம்ல. :)

12 டிசம்பர், 2008

என்னுடைய அனுபவம் : வேலைவாய்பு மோசடி ஆசாமிகளிடம் எச்சரிக்கை !

பதிவுலகில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக சில 'நல்லவர்கள்' அறிவிப்பு வெளியிடுவார்கள். அதைச் சிறந்த சேவையாக பாராட்டி சிலர் பதிவுகள் மூலம் வாழ்த்தியதையும் பார்த்திருக்கிறேன். வடஅமெரிக்க ஹெச்1பி வேலைவாய்ப்பு பதிவு ஒன்றைப் பார்த்து...அதை நம்பி மனைவியின் ரெஷ்யூம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன். (நான் எனது மனைவியின் ரெஷ்யூம் அனுப்பியதை அந்த கேடுகெட்ட ஜென்மம் வெளியே சொல்லி, தன்னுடைய முகத்திலேயே உமிழ்ந்து கொண்டதுமட்டின்றி, 1001 ஆவது முறையாக தன் அயோக்கிதையை நிரூபணம் செய்திருப்பதுடன் தனது அவதூறு ஆறுமுகம் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது)

பழகும் போது 'நல்லவன்' என்றே நினைப்போம், இப்போதெல்லாம் கணவன் மனைவி இருவரும் வேலை செய்வது தவிர்க்க முடியாததாகிறது. நமக்கோ, மனைவிக்கோ நல்ல வேலை கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் தெரிந்தவன் தானே என்று ரெஷ்யூம் அனுப்பினால், அதன் பிறகு உங்கள் விவரங்களெல்லாம் அந்த 'நல்லவர்களுக்கு' தெரிந்துவிடும்.

பிறகென்ன உங்கள் பிடி அவர்கள் கையில், உங்களுக்கும் 'நல்லவர்'களுக்கு பிரச்சனை ஏற்படும், இல்லாவிடில் ஏற்படும்படி நடந்து கொள்வார்கள், அப்பறம் தான் மிரட்டல்.

அப்பறம் நம்ம வீட்டுக்கு அனாமதைய போன் வரும்.

ஏனென்றால் ரெஷ்யூமில் உள்ள தொலைபேசி எண்களை பல்வேறு ஆபாசதளங்களில் இவர்கள் சேர்த்துவிட்டுவிடுவார்கள். அப்படி வந்தால் போன் நம்பர் பெரிய பிரச்சனை இல்லை, மாற்றித் தொலையலாம். மாற்றி இருக்கிறேன். ரெஸ்யூமில் புகைப்படம் இருந்தால் அதை வெளியிடுவேன் என்றும் மிரட்டுவார்கள். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் ? எல்லாம் மனவியாதி, மனநோய்தான். யாரையாவது மிரட்டவில்லை என்றால் உணவு கூட இறங்காதாம், தூக்கம் வராதாம்.

இதெல்லாம் எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா ? நொந்த அனுபவம் தான்.

*******

ஆகவே மகா ஜெனங்களே, எந்த ஒரு 'நல்லவனையும்' நம்பி உங்களுடையதோ, உங்கள் மனைவி., அக்கா, தங்கை ரெஷ்யூமையோ அனுப்பிவிடாதீர்கள்.

நான் கேள்விப்பட்ட வரையில் எவனும் சும்மா வேலை வாங்கித்தருவதில்லை, கணிசமாக பணம் பெற்றுக் கொண்டு தான் வாங்கித் தரும் பிஸ்னஸாக நடத்துகிறார்கள். கூடவே இதுபோன்ற வேண்டாதா, விரும்பாத தொல்லைகளெல்லாம் வரக் கூடும்.

பதிவிலோ, திரட்டியிலோ வேலை வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று அறிவிப்பு இருந்தால் அதை திறந்து பார்க்காமல் இருப்பதே நலம். ஏனென்றால் நல்ல வேலையாக இருக்குமோ என்கிற டெம்டேசனில் ரெஷ்யூம் அனுப்பிவிட்டு அவஸ்தை பட வேண்டி இருக்கும்.

இண்டர்வ்யூ ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னால் பெண்களை தனியாக அனுப்பாதீர்கள், பிறகு அங்கு பாத்ரூமில் கேமராவைத்து படம் பிடித்து, அதை வெளியிடுவதாக மிரட்டி பணம்பறிக்கவோ, காம இச்சையை தீர்த்துக் கொள்ளவோ இரையாக்கிவிடுவார்கள், இங்கே பதிவுலகில் வெளியிடப்படும் வேலைவாய்ப்புகள் அந்த புகாரையெல்லாம் இன்னும் சந்திக்கவில்லை. அப்படி சந்திக்கும் நிலைக்கு நீங்கள் வாய்ப்பு ஏற்படுத்துக் கொடுத்துவிடாதீர்கள்

பாதிப்புகள் என்னுடன் போகட்டம், நான் ஒப்பாறி வைக்கவில்லை, ஆனால் பிறருக்கும் இது நடக்கலாம் என்பதால் எனக்கு என்னவென்று இருக்கமுடியவில்லை,.

இதை ஒரு விழிப்புணர்வு தகவலாக எடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் ஏற்கனவே அனுப்பியவர்களாக இருந்தால், அப்பாவியாக இருந்தால் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கவும். பலவானாக இருந்து காவல்தூறை நண்பர்கள் இருந்தால் காதில் போட்டு வைக்கவும்.


*********

விஷக்கிருமிகளின் வேலைவாய்பு விளம்பர பதிவுகளை நிராகரியுங்கள். உங்கள் வெளியுலக நண்பர்களிடமும் இது குறித்த அதாவது இணைய வழி வேலைவாய்ப்பு தனிநபர்கள் குறித்த எச்சரிக்கையை போட்டு வையுங்கள். வலையுலகை வியாபாரத்துக்கும், சுயநலத்துக்கும், மனவியாதிக்கும் பயன்படுத்திக் கொள்ளும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், நாலு பேர் பலியாவதை தடுக்கலாம்

11 டிசம்பர், 2008

சொறி நாய் மற்றும் வெறி நாய் !


பதிவுலகில் பரப்படும் வதந்திகளில் / மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று, அதாவது "ஒரு சில பதிவர்களின் பெயரை தலைப்பில் போட்டாலே பதிவு ஹிட் ஆகிடுமாம்."

அதை பொய் என்று நிரூபனம் செய்ய என்னால் முடியும்.

எனக்கு தெரிந்து 'சொறி நாய் மற்றும் வெறிநாய்' பதிவரும் அல்ல, பதிவுகள் எதையும் வைத்திருப்பதோ, எழுதுவதோ இல்லை. ஆனாலும் பாருங்க. இந்த நாய்கள் சூடான இடுகையில் இடம்பிடிச்சிடும் (இடம் பிடித்துவிட்டது).

இப்ப சொல்லுங்க, "தலைப்பில் பிரபல பதிவர்களின் பெயரிடுவதால் பதிவுகள் சூடாகுகிறது என்பது உண்மையா ?"





(தலைப்பை வைத்து ஆர்வத்தினால் மொக்கை பதிவுகளைக் கூட சூடாக்குவது படிப்பவர்கள் தான்)

இறைவன், ஒளி, பகுத்தறிவு பகலவன், கார்த்திகை தீபம் !

தீபம் என்ற வடசொல் தீ என்கிற தமிழெழுத்தில் இருந்து 'படைத்துக்' கொண்ட ஒரு சொல். தீபம் என்பதற்கு சரியான தமிழ் சொல் 'சுடர்'. இரவின் ஒளிவெள்ளமான முழுநிலா நாளை பல சமயங்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர். பவுத்த சமயத்தில் 'புத்த பூர்ணிமா' என்கிற பண்டிகை முழுநிலா நாளை ஒட்டிக் கொண்டாடப்படுபவை. இந்திய சமயங்களில் முழுநிலா நாள் இறை நம்பிக்கையை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது. முழுநிலாவில் முழுமையான ஒளி கிடைப்பதால் ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளில் சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பூரம், தைப்பூசம், வைகாசி விசாகம் (புத்த பூர்ணிமா) போன்றவை சிறப்பான முழுநிலா நாட்களாக கருதப்பட்டு கொண்டாப்படுகிறது. தைப்பூசம் மற்றும் சித்திரா பவுர்ணமி ஆகியவை முருகனுக்கு உகந்த நாளாக கருத்தப்பட்டு அந்நாளில் காவடி எடுப்பது வழக்கம். தைபூசம் வள்ளலார் மன்றத்தினரால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வளர்ச்சி என்னும் பாசிடிவ் சித்தாந்ததில் வளர்பிறை நாளில் எதையும் தொடங்கினால் எதுவும் வளர்ச்சி அடையும் என்பது இந்திய சமய நம்பிக்கை. இஸ்லாமிய சமயத்தினரும் வளர்பிறையை ஒட்டி அவர்களது பண்டிகைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மரணம் என்பது கெட்ட நிகழ்வென்பதால் முற்றிலும் நிலா கருமையான நாளான அமாவாசை (கருநிலா) நாளில் திதி போன்ற மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்கிறார்கள்.

வெளிச்சம், அல்லது ஒளி என்பது அறிவு என்றும் கருமை என்பது அறியாமையையும் குறிக்கும் ஒரு குறியீடாக பயன்படுத்துக்கிறது. இறைவன் பேரரறிவு உடையவன் என்பதற்காக இறைவன் ஒளிமயமானவன், பேரொளி என்பதே அனைத்து சமயங்களின் அடிப்படை நம்பிக்கை, அதற்கு பிறகு தான் மதம், வழிபாடு, உருவமுள்ள வழிபாடு உருவமற்ற வழிபாடு, ஓரிறைக் கொள்கை, பரப்பிரமம் எல்லாம். அறிவொளி / ஆன்மிக ஒளி என்பதன் குறியீடாகவே ஆன்மிக பெரியோர்கள், மற்றும் உருவ வழிபாட்டுச் சின்னங்களில் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் வரைகிறார்கள்.

விளக்கேற்றுவது என்பது வெளிச்சம் பெறுவதற்கான நிகழ்வு. எனவே தான் விளக்கேற்றும் பழக்கம் வந்தது. அனைத்து சமய சமூகத்திலும் அது நெய்விளக்காக இருந்தாலும் சரி, விலங்கு கொழுப்பில் செய்யப்பட்ட மொழுகுவர்த்தியாக இருந்தாலூம் சரி விளக்கேற்றி வழிபடுவது என்பது இருள் எண்ணும் அறியாமையைப் போற்றிக் கொண்டு அறிவு என்னும் வெளிச்சம் பெருகிறோம் என்பதற்கான குறியீட்டு நிகழ்வு.

பகுத்தறிவு பகலவன் என்று பெரியாரைச் சொன்னாலும், புத்தரைச் சொன்னாலும் பகலவன் என்பதில் இருக்கும் ஒளியை பெரியாரின் / புத்தரின் அறிவுத் திறனுடன் ஒப்பிடுவதாகப் பொருள், அறிவென்பது வெளிச்சம் அல்லது ஒளியாகவே ஆத்திகமாக இருந்தாலும் சரி நாத்திகமாக இருந்தாலும் ஒரே பொருள் தான் கொள்ளப்படுகிறது.

ஆன்மாவானது இறைவனைப் போலவே ஒளிவடிவமானது என்ற பொருளில், இறந்தவர்களின் நினைவாக சிறிது காலம் அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தீபம் ஏற்றிவைப்பார்கள்.

கார்திகை நாளில் தீபம் ஏற்றுவது இந்திய சமயத்தினரின் வழக்கமாகவும், திருவண்ணாமலையில் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. (அது சமண சமயச் சடங்கின் தொடர்ச்சி என்று ஒருசாரர் சொல்கின்றனர்), தீபத்திருநாளுக்கும், கார்த்திகை தீபங்களுக்கும் சமயக் கதைகளைத் தள்ளிப் பார்த்தால் ஒரே ஒரு வேறுபாடுதான் தீபத்திருநாள் அமாவாசையில் வருகிறது, இருள் அகற்ற ஏற்றும் ஒளி, கார்த்திகை தீபம் பவுர்ணமி நாளில் இறைவனின் நினைவுறுவதாக ஏற்றப்படுகிறது.

இறைவன் ஆன்மாவினால் (உள்ளார்ந்த அனுபவம்/தூய்ப்பு) கண்டுணரும் (வெப்பமற்ற) பேரொளி வடிவானவன் என்பதாகவே அனைத்து மதங்களின் நம்பிக்கை.

"சுடர்மிகும் ஜோதியிலே.... சுந்தரன் உ(ன்)னைக் கண்டேன்...." என்று இறைவனைஇ நினைத்து நெய்யாக உருகுபவர்களா நீங்கள் ? உங்கள்,

அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் !




"நாய் கடிக்கிறது என்பதற்காக திருப்பி நீங்க கடிக்கனுமா ?" - பதிவுலக தம்பி.
"நல்ல கேள்வி...அப்படி நினைக்கிறதும் கூட தப்புதான்பா" - என்றேன்.

9 டிசம்பர், 2008

(அ)சைவ கதை !

திருவிளையாடல் புராணங்களின் ஆதார அடிப்படையில் சேக்கிழாரின் 63 நாயன்மார்களின் கதைகளில் ஒன்றான திருத்தொண்டர் புராணத்தில் திருத்தொண்டரின் சிவ பக்தி நெறியைப் பற்றிய கதையப் பற்றி பார்ப்போம்

பக்தர்களை 13 ஆம் நூற்றாண்டில் அடிக்கடி சோதித்த சிவன் ஒருமுறை திருத்தொண்டர் என்னும் சைவ அடியாரை சோதிக்க வருகிறார். திருத்தொண்டர் போன்ற ஆட்கள் சிவனுக்கு, சிவனடியாருக்கு என்றால் கொலையும் செய்யத் தயங்காதவர்கள். திருத்தொண்டர் எவ்வளவு தூரம் தன்மீது பக்தி பைத்தியமாக இருக்கிறார் என்று சோதிக்க எண்ணிய சிவபெருமான், சிவனடியார் வேடம் கொண்டு திருத்தொண்டரின் வாசல் கதவை தட்டினார்.

அங்கமெங்கும் விபூதியில் சிவனடியார் கோலம் கண்டு, மெய்மறந்த சிறுதொண்டர்,

"சிவனடியாரே, உங்களுக்கு திருஅமுது படைக்க எண்ணியுள்ளோம், தங்கள் திருவுளம் வேண்டி நிற்கிறேன்" என்று சொல்லி அவருடைய காலடியில் விழுந்தாராம்

"திருத்தொண்டரே, நான் உங்கள் வீட்டில் உண்ணவேண்டுமெனில் ஐந்து வயது சிறுவனை அரிந்து பதமாக சமைத்துத் தருவதாக இருந்தால் உண்ணுகிறேன்"

கேட்பது சிவனடியார் ஆயிற்றே, மறுப்பேதும் இல்லாமல் பேருவுவகைக் கொண்டு, அப்படியே ஆகட்டும் என்று உள்ளே அழைத்துச் சென்று இளைப்பார வைத்துவிட்டு,

கணவனும்(திருத்தொண்டர்), மனைவியும், ஊரார் யாரும் பிள்ளை தர ஒப்புக் கொள்ளமாட்டார்கள், எனவே நம் பிள்ளையையே அரிந்து சமைத்து திருஅமுது படைப்போம் என்றாராம், சற்றும் தயங்காத மனைவி, மகன் சீராளன் பாடசாலையில் இருந்து வந்ததும், எடுத்துச் சொல்ல, சீராளனும் தன்னை அரிந்து அமுது படைக்க ஒப்புக் கொண்டானாம். பிறகு கணவனும் மனைவியுமாக மகனை தரையில் கிடத்தி, மனைவி மகனின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள, மகனின் கழுத்தை அறுத்து (நவரசுவை நினைச்சாலே குடலே நடுங்குது, பெற்ற பிள்ளையை எப்படி ?) தலை தனியாக எடுத்து வேலைக் காரியிடம் கொடுத்துவிட்டு , உடலை துண்டு துண்டாக்கி பதமாக சமைத்துவிட்டு, சிவனடியாரை உணவுக்கு அழைத்தனராம்.

"ஆகா அருமையான மணம், எங்கே உணவை இடுங்கள்" - சிவனடியார் (வடிவில் வந்த சிவன்)

"ஆகட்டும் ஸ்வாமி..."

என்று சொல்லி பரிமாறுகிறார்கள்,

"எனக்கு தலைக்கறியே பெருவிருப்பம், எனவே தலைக்கறியை கொண்டுவாருங்கள்"

'தலைக்கறியா ? அதைத்தான் வேலைக்காரியிடம் கொடுத்தாகிவிட்டதே....'என்று மனதிற்குள் கணவனும் மனைவியும் நினைக்க, இதுபோல் எதாவது ஏடாக் கூடம் ஆகலாம் என்பதால் முன் யோசனையால் வேலைக்காரி தலையை சமைத்து வைத்திருந்திருந்திருக்கிறாள். இவர்கள் கையை பிசைவதைப் பார்த்து குறிப்பறிந்து, தலைகறியை கொண்டு வந்து இலையில் படைத்தாளாம்.

இங்குதான் சிவனடியாராக வந்தவர் சித்து விளையாட்டைக் காட்டுகிறார்.

"எல்லாம் சரியாக இருக்கிறது, தங்கள் மகன் சீராளனைக் கூப்பிடுங்கள், சேர்ந்து உண்ணுகிறேன்" என்றார்

'அவனைத்தான் சமைத்தாயிற்றே...' என்று நினைத்தாலும் தயங்கி தயங்கி, சீராளனை கூப்பிடுவது போல் உருகி அழைக்க....அவன் பள்ளியில் இருந்து திரும்புவது போன்று வீட்டுக்குள் நுழைந்தானாம்.

கணவனும் - மனைவியும் மகிழ சிவனடியார் சிவனாக மாறி, பார்வதியுடன் இடப வாகனத்தில் திருக்கயிலாய தோற்றத்துடன் காட்சி கொடுத்து மறைந்தாராம்

*********
இந்த திருத்தொண்டர் மட்டுமல்ல, ஏனைய சிவனடியார்களும் சிவ பக்தி என்ற பெயரில் வெறி ஆட்டமே ஆடி இருப்பதாக நாயன்மார்கள் கதைகளைப் படித்ததும் தெரிகிறது.

1. அம்மையே அப்பனே என்று போற்றப்படும் சிவன், பக்தனை சோதிக்க பக்தனின் மகனை அரிந்து சமைத்து தரச் சொன்னாராம். இறைவனை இதைவிட கீழ்த்தரமான மனித மாமிசம், அதுவும் சிறுகுழந்தையின் மாமிசம் உண்ணுபவனாக காட்டமுடியாது, (இது போலவே மற்றொரு கீழ்த்தர நடவடிக்கையாக சிவன் சிவனடியார் வேடம் கொண்டு இயற்பகை நாயனாரின் மனைவியைக் தனக்கு கூட்டிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாராம்)

2. பெற்ற பிள்ளையையே அரிந்து கொடுக்க துணிபவனின் சமய வெறி எத்தகையதாகவும், மூட நம்பிக்கையும் உச்சியாகவும் இருக்கிறது, இதற்கு மனைவியும் உடந்தை என்று எழுதப்பட்டு இருக்கிறது, கணவனை கல்லால் அடித்துக் கொல்லத் துணியும் மனைவி கூட பெற்றப் பிள்ளையை கொல்லவும், அதை சமைத்துத் தரவும் முன்வருவாளா ? இந்த பைத்தியத்திடம் இல்லறம் நடத்துவதைவிட பிச்சை எடுத்து உண்ணலாம் என்றே நினைப்பாள்.

3. ஐந்துவயது மகனிடம் சம்மதம் கேட்டார்களாம், அவனும் சிவனடியாருக்கு என்பதால் இசைந்தானாம். என்ன கொடுமை அந்த வயதில் செய்வது சரி / தவறெல்லாம் தெரியுமா ?

4. நரபலி என்னும் கேடுகெட்ட செயலை செய்ததுமின்றி அதை மசாலா போட்டு சமைத்தனராம், தலைக்கறிதான் வேண்டும் என்று சிவனடியார் பிடிவாதமாகக் கேட்டாராம்.

5. சிவன் பிள்ளைக் கறி கேட்டான் என்று சொல்லுவது 'சைவ' சமயமாம்

ஐயோ......ஐயோ......இதுவா பக்தி, இதுவா ஆன்மிகம். இந்த கேடுகெட்டக் கதையை எழுதியதும், இல்லாமல் நாயன்மார்களுள் ஒருவனாகும் தகுதியுடன் திருத்தொண்டர் சிலையாக வைக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு நாள் பூசையும், தீபாரதணையும் நடைபெறுகிறது.

******

மற்ற நாயன்மார்களும் சைவ வெறியில் இன்னும் பல அடாத, அறிவுக்கு ஒவ்வாத செயல்களை செய்யத் துணிந்து இருக்கிறார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்கள் கதையைப் போன்று பலக் (சைவ) கதைகள் சேர்ந்துதான் சைவ சமயம், இந்த கதைகளைப் போற்றிதான் அந்தகாலத்தில் சைவ சமயமே உயர்ந்தது என்கிற சண்டையெல்லாம் நடைபெற்று, சமணம் / பெளத்தம் துடைத்தொழிக்கப்பட்டது

சிதம்பரத்தில் பூட்டப்பட்டு இருந்த திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி 12 ஆம் திருமுறையாக சேக்கிழாரின் பெரியபுராணத்தை சேர்க்காமலேயே கரையான் அரிப்பதற்கு விட்டு இருந்தால் சிவனுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

சிவப் பேரொளியன்பது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்பதே ஆன்றோர் வாக்கு, இதையெல்லாம் மழுங்கச் செய்ய சிவன் சிவனடியார் வேடம் கொண்டு பார்வதியுடன் விடப (ரிஷப) வாகனம் ஏறிவந்தான், சிவகனங்களுடன் காட்சி தந்தான், சோதனைக்காக அறிவுக்கு ஒவ்வாத திருவிளையாடல் புரிந்தான் என்பதெல்லாம் முற்றிலும் பகுத்தறிவுக்கோ, பக்தி செய்து போற்றவோ ஒவ்வாதவைகள். மறுப்பவர்கள் எவரும் சிவனடியாருக்கு பிள்ளைக் கறி சமைத்துத்தர துணிந்தவருமல்லர். அப்படி துணிந்தால் பக்தி என்கிற பெயரில் ஒரு முற்றிய பைத்தியம் இருப்பதாகவே கொள்ளலாம்.

"அம்மையப்பா போற்றி......போற்றி !"

8 டிசம்பர், 2008

நடுநிலையைக் காப்பாற்ற ஒரு பதிவு !

அன்பு தம்பி ஒருவர், "அண்ணே...பக்ரீத்துக்கு ஒரு வாழ்த்துப் பதிவு போட்டு உங்க நடுநிலைமையை மெய்ப்பிங்கன்னு" சொன்னாரு,

தன்மானச் சீண்டல்.... சரி போடுகிறேன் என்றேன்.

*****

இந்தப் படத்தில் சிந்தும் இரத்தம் அனைத்தும், மதவெறிகளாலோ, பிறர் தாக்கியதாலோ வந்தது அல்ல.







தியாகமாம் !

தீமிதி, அலகு குத்திக் கொள்ளுதல் (இந்து மதம்), சிலுவையில் அறைந்து கொள்ளுதல்(பிலிப்பைன்ஸ் கிறித்துவர்கள்), தன்னைத்தானே எரித்துக் காட்டுதல் (புத்த பிட்ச்சுகள்), இவர்களைப் போல் இறைவனுக்காக இரத்தம் சிந்தும் வழக்கம் இஸ்லாம் சமயத்திலும் இருக்கிறது. சிறுவர்கள் கூட ஆயுதங்களால் கிழித்துக் கொண்டு இரத்தம் சிந்தி முகமது நபியின் தியாகங்களை நினைத்துப் பார்க்கின்றனராம். இந்தியாவில், சென்னையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் இரத்தம் சிந்தும் ஊர்வலம் நடக்கும், நேரடியாக பார்த்திருக்கிறேன். எனக்காக இரத்தம் சிந்துங்கள் என்று எந்த கடவுளும் சொன்னது கிடையாது. ஒரு பகுத்தறிவாளனாக பார்த்தால் கண்டிப்பாக இவை அறிவற்ற செயல், இரத்தம் தேவைப்பட்டு கிடைக்காமல் எவ்வளவோ நோயாளிகள் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்து தியாகம் செய்யலாம்.


இஸ்லாமியர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்