2001ல் அதிமுக ஆட்சியில் அமர்ந்த அப்போது பாமக அதிமுக கூட்டனியில் தான் இருந்தது, ஜெ ஆட்சியில் அமர்ந்த ஒரு மாதத்திலேயே கலைஞர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து அதிர்ச்சியடைய வைத்தார். திமுகவின் அப்போதைய கூட்டணிக் கட்சியான பாஜகவே இதுபற்றி வாய்திருக்காமால் இருக்கும் போது, ஜெ வுடன் கூட்டணியில் இருந்தாலும் தைரியமாக ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை பிறகு கூட்டணியை முறித்துக் கொண்டவர் இராமதாஸ். ஆளுங்கட்சியிடன் கூட்டணி என்றால் பெரிய கட்சியான காங்கிரஸ் கூட எதிர்த்துப் பேசக் கூடாது என்பது போன்ற ஒப்பந்த அரசியல் தான் தமிழகத்தில் நடந்தேறியது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து வென்ற ஒரே மாதத்திலும், பதவி ஏற்ற அதே நாளிலும் ஜெவின் செயல்பாடு காரணாமாக இராமதாஸ் ஜெவை புறக்கணித்தார் என்பதை யாரும் மறக்க முடியாது.
குறை சொல்லும் கலைஞரின் அதே மட்டமான அரசியலுக்கும் யாதொரு வேறுபாடும் இல்லை.
காடுவெட்டி குரு தேசத் தியாகி என்பது போல், தற்போது இராமதாஸ் ஐயா பிரச்சாரம் செய்வது மிக மட்டமான அரசியலே, பிற கட்சியின் அரசியல் செயல்பாடுகளை மனம் கோணாமல் விமர்சிக்கும் இராமதாஸ் ஐயா, தன்னுடைய கட்சியனர் மட்டும் எதோ உத்தமர் போல் பேசி வருவது நகைப்புக்கிடமாகவே இருக்கிறது. பாமகவிற்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தான் அண்மையில் தலித் கிறித்துவர்களுக்கும் - வன்னிய கிறித்துவர்களுக்கும் மோதல் நடைபெற்று இறுதியில் சாதிப்பெருமை காக்க வன்னிய கிறித்துவர்கள், தாய்(!) இந்துமதம் திரும்புவதாக அறிவித்தனர். இந்துமதத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் இராமதாஸ் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. அங்கு நடைபெற்ற வன்னியர் - தலித் மோதல்களுக்குப் பிறகு அவர்களின் ஒற்றுமைக்காக என்ன செய்தார் ? ஒன்றும் இல்லை. ஆனால் திருமாவும், நானும் சகோதரர்காள் என்று மேடைக்கு மேடை கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்வார். ஒட்டுக்கள் சிதராமல் இருக்க ஒற்றுமை என்பது மேல்மட்ட அளவில் இருந்தாலே போதும் என்கிற மனநிலையில் தான் அண்ணன் திருமாவுடன் இராமதாஸ் ஐயா கைகோர்த்துக் கொண்டு இருக்கிறார்.
தற்போது இராமதாஸ் ஐயா திமுக அரசின் மீது வைக்கும் மற்றொரு குற்றச் சாட்டு நகைப்பிற்கு இடமாகவே இருக்கிறது. 'இங்கு சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை' என்கிறார். குரு கைது நடவெடிக்கை இல்லை என்றால் இதெல்லாம் இருக்கும் போல. வன்னிய சாதித் தலைவன் என்ற போர்வையில், பாதுகாப்பில் குரு கண்டபடி ஒருமையில் கலைஞரை, ஆர்காடு வீராசாமியை, ராஜாவை படுகேவலமாகப் பேசி, கொலை மிரட்டல் விட்டதைப் பொறுக்கமுடியாமல் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று தானே குரு கைது செய்யப்பட்டார் ? பின் எங்கே சட்ட ஒழுங்கு காணாமல் போனது ?
இனி எஞ்சியிருக்கும் 2 ஆண்டுகால திமுக அரசுக்கு எதிராக அதிமுகவோ, பிற எதிர்கட்சிகளோ கேள்விக் கேட்கத் தேவை இல்லை என்று நினைக்கும் அளவுக்கு திமுக அரசின் மீது குற்றச்சாட்டு கணைகளை வைத்து அறிக்கைப் போர் நடத்திவருவார்.
'இனியும் திமுக அரசுவுடன் கூட்டணியா ? இனி திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. தேர்தல் நெருங்க நெருங்க...'இது கொள்கை கூட்டணி அல்ல...தேர்தல் கால கூட்டணி' என்ற அறிவிப்புகளும் வரும்.
*********
பின்குறிப்பு : படத்தில் இருக்கும் நிழல் படம் குறித்து, படத்தில் நான், மருத்துவர் இராமதாஸ் ஐயா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி. 2006ல் பொங்குதமிழ்ப் பண்னிசை விழாவுக்காக மருத்துவர் ஐயாவும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியும் சிங்கை வந்திருந்த போது (முன்னாள்) நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றதால் ,மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் அருகில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நண்பர் அவரது நிழல்படக் கருவியிலேயே க்ளிக்கிக் கொடுத்தது தான் இந்தப்படம். அந்த பொன்னான வாய்ப்பு வழங்கிய நண்பருக்கு நன்றி. அதே நண்பருடன் மற்றொருமுறை வீரமணி ஐயா கலந்து கொண்ட திருக்குறள் விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்ப்படம் கூட இருக்கிறது, எப்போதாவது வலை ஏற்றுகிறேன்.