தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற (இடைத்?) தேர்தல் முடிவுக்கு பிறகு,
இயக்குனர் பாரதிராஜாம் ஜூனியர் விகடன் பேட்டியில் ஐயத்திற்கிடமின்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,
''ஈழத் தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி, காங்கிரஸாருக்கு எதிராகப் பிரசாரத்துக்குப் போனீர்கள். ஆனாலும், காங்கிரஸ் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் ஜெயித்துவிட்டதே..?''
''தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தமிழர்களிடம் வாக்கு வாங்கி அமைச்சரான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோர் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவர் களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் எங்களுடைய தமிழீழ திரைப்பட ஆதரவு இயக்கத்தின் சார்பில் பிரசாரத்துக்குப் போனோம். அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோருக்கு எதிராக மக்கள் தீர்ப்புகள் வந்திருக்கிறது. ப.சிதம்பரம் கணக்கே வேறு. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பின்தங்கியிருந்தார். கடைசி நேரத்தில் எப்படி ஜெயித்தாரோ, அது தெரிய வில்லை..! 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள். அதன் பிறகு, ஆகவேண்டியதைப் பார்த்துக்கொள்ளலாம்...' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அவருக்கும் தோல்விதான்!''
பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
ஆளும் கட்சியின் கூட்டணியின் இணைந்த "கைகள்" தேர்தல் பதிவு அலுவலகம் அனைத்திலும் கனிசமான அளவுக்கு செயல்பட்டுள்ளதால், 40(39+1) தொகுதியிலும் நடந்த தேர்தல், இடைத்தேர்தல் போல் இருந்தது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.
பின்பற்றுபவர்கள்
தேர்தல் 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
20 மே, 2009
16 மே, 2009
சீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி !
தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் சீமான், பாரதி ராஜாவின் பேச்சு எடுபட்டுள்ளது. காங்கிரசு மத்திய அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை தழுவும் முகத்தில் இருக்கின்றனர்.
நம்ம செதம்பரம் ஐயா, தங்கபாலு, ஈகேவிஎஸ் இளங்கோவன், அய்யர் அனைவரும் பின்வாசல் வழியாக மந்திரியாகும் முயற்சியில் இறங்க ஆயத்தம்.
40க்கு 40 வாய்ச்சொல்லுக்கு ஆப்பு !
நம்ம செதம்பரம் ஐயா, தங்கபாலு, ஈகேவிஎஸ் இளங்கோவன், அய்யர் அனைவரும் பின்வாசல் வழியாக மந்திரியாகும் முயற்சியில் இறங்க ஆயத்தம்.
40க்கு 40 வாய்ச்சொல்லுக்கு ஆப்பு !
பதிவர்:
கோவி.கண்ணன்
at
5/16/2009 02:23:00 PM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009
43
கருத்துக்கள்


14 மே, 2009
திவாலாகும் வாக்கு வங்கிகள் !

அண்ணாவிற்கு பிறகு தேர்தல் களம் கண்ட திமுகவில் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு திமுக உடையவே எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஏற்பட்டது. அடுத்த அடுத்த தேர்தலில் திராவிட சித்தாந்தம், திராவிடக் கொள்கைகள் ஆகியவற்றில் நீக்கு போக்கும், நீர்த்து போதலும் இரு கட்சிகளிலுமே ஏற்பட்டது, அதன் காரணமாக காங்கிரஸ் எதோ ஒரு திராவிடக் கட்சிகளில் இணைந்து கூட்டாகவே தேர்தலை சந்தித்து வந்திருக்கிறது. காங்கிரசுக்கு மாற்று என்று மக்கள் முன் முழங்கிய முன்வைக்கப்பட்ட திராவிடக் கட்சி(கள்) காங்கிரசுடனேயே கை கோர்த்து களம் கண்டன. இதில் ஓரளவு சமரசம் ஏற்பட்டாலும் திராவிட மற்றும் காங்கிரசுக்கு தேசிய அறைகூவலாக, பாஜக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வந்தது. வேறு வழியின்றி, திராவிட, காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் இணைய வேண்டிய காலகட்டத்திற்கு பாஜக இக்கட்சிகளை தள்ளிவிட்டது.
பாஜகவிற்கு எதிர்ப்பு என்பதை மக்கள் முன் தெளிவாக, பயம் கொடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்த கட்சிகள் சென்றன. திராவிட - காங்கிரஸ் சித்தாந்த முரண்பாட்டை முழுப்பூசனிக்காயக மறைக்க கிடைத்த இலைச் சோறாக 'மதவாதம்' என்ற சொல்லாடலை மக்கள் முன் வைத்தனர். ஊருக்குள் புதிய திருடன் நுழைந்தால் பழைய திருடர்கள் தொழில் பாதிப்பு அடைவதை உணர்ந்து இணைந்து புதிய திருடனை காட்டிக் கொடுப்பது போல், பாஜக மதவாதக் கட்சி என்று மக்கள் முன் திராவிட, காங்கிரசு, கம்யூனிச (தமிழக கட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்) பயம் காட்டி தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள முயன்றன. இராசீவ் மரணத்திற்கு பிறகு, காங்கிரசின் நரசிம்ம ராவ் ஆட்சிக்கு பிறகு பாஜக பெரிய வளர்ச்சி பெறவே, மூப்பனாரின் தமாக திமுகவை ஆதரிக்க, எஞ்சி இருந்த சில்லரை காங்கிரசு காரர்கள் அதிமுகவை ஆதரிக்க அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது, குஜ்ரால் / தேவகவுடா (?) தலைமையில் ஏற்பட்ட மத்திய அரசில் தாமக உட்பட பல உதிரிக்கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன, அதுவும் குறுகிய காலம், பிறகு ஜெ-வின் ஆதரவுடன் பாஜக ஆட்சி ஏற்பட்டு கவிழ்ந்தது.
அதுவரை மதவாத பாஜக என்று கூறிவந்த திமுக, 'பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல' என்ற ஒரு ஸ்டேட் மெண்ட் கொடுத்துவிட்டு பிஜேபியிடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் 5 ஆண்டுகள் பதவி பெற்றது. பின்னர் பாஜக செல்வாக்கு சரியவே காங்கிரசுடன் இன்று வரை ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஜெ காங்கிரசு கூட்டணிக்கு முயன்றார். திமுகவுக்கு - காங்கிரசுக்கும் அப்படி என்ன ஸ்பெக்டரம் பந்தமோ இணை பிரியாமல் தற்போதைய தேர்தல் முடிவு வரை தொடர்கிறார்கள்.
********
இதெல்லாம் எதுக்கு எழுதினேன் ?
அதாவது கட்சி / கொள்கைகள் என்றெல்லாம் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்களாக சேருபவர்கள் அக்கட்சியின் தொடக்க காலத்தில் மட்டுமே, திமுக உடைந்த போது அதிமுகவிற்கு தொண்டர் அளவில் வந்தவர்களும் / அங்கேயே இருந்தவர்களும் அவர்களின் வாரிசுகளில் சிலரும் தான் இன்று வரை அடிப்படட தொண்டர்களாக வாக்கு வங்கியாக தொடர்கிறார்கள். அதிலும் பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் தொடங்கப்பட்ட பிறகு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் ஹவாலா அளவுக்கு ஓட்டை விழுந்துவிட்டது.
இவர்களுக்கே இப்படி என்றால் காங்கிரசுக்கு வாக்கு வங்கிகள் என்பது மூப்பனார் காலத்து சில பெருசுகளும், அவர்களின் சொத்துக்களை காக்கும் பேரன்களுமே மிச்சம், புதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும அளவில் காங்கிரசின் கொள்கை பிடித்து கடந்த முப்பது ஆண்டுக்குள் காங்கிரசுக்கு வந்தவர்கள் என்றால் தமிழகத்தைப் பொறுத்த அளவில் சில ஆயிரங்கள் என்ற அளவில் இருக்கும், மூப்பனாருக்கு பிறகு இளைஞர்கள் காங்கிரசில் சேருவதற்கான எந்த ஒரு கொள்கையோ கவர்ச்சியோ இருந்தது இல்லை. அதிமுக ஜா - ஜெ என்று பிரிந்ததால், அந்த தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரசு 25 சட்ட மன்ற இடங்களைப் பெற்றது. அது நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போதைய நிலையில் அதிமுக, திமுகவைத் தவிர எந்த ஒரு கட்சியும், தனித்து நின்றால் ஒரு இடம் பெருவது கூட அரிதே, முதல் முறை என்பதால் வி.காந்து மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் எந்த ஒரு தொகுதியிலும் இருக்கும் வாக்களர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஒரே கட்சிக்கு வாக்களிப்பர்கள் இல்லை. அதுவே இன்றைய நிலைமை. கட்சித்தொண்டர்கள் என்று பார்த்தால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே 10 விழுகாடு இருந்தால் அதுவே மிகுதி, காங்கிரசு ? உங்க அக்கம் பக்கம் வீட்டுக் காரங்க அல்லது தெருவில் எத்தனை காங்கிரசு காரர்கள் என்று தேடிப்பாருங்க விரல் விட்டே எண்ணிவிடலாம்.
பாமகவை மட்டுமல்ல, காங்கிரசையும் திமுக, அதிமுக கட்சிகள் முதுகில் ஏற்றிக் கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரசும் காணாமல் போகும். தமிழகத்தில் காங்கிரசுக்கு உயிர் தண்ணீர் ஊற்றிவருபவர்கள் திராவிடக் கட்சியினர் தான். திராவிடக் கட்சிகளுகே தமிழகத்தில் வாக்கு வங்கிகள் சிறுசேமிப்பு திட்டம் போல் பிழைப்பை ஓட்டி வருகின்றன. இதில் காங்கிரசுக்கு வாக்கு வங்கி ? எங்காவது குக்கிராமத்தில் இருந்தால் உண்டு :)
சோற்றுக்கே வழி இல்லாமல், அடிமைப்பட்டால் தான் பெரும் புரட்சி ஏற்பட வேண்டும் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வாக்காளர்கள் அனைவருமே ஒன்று போல் சிந்தித்து வாக்களிப்பாளர்கள், அப்படி பட்ட நிலையில் மக்கள் நிலை இல்லை. தங்களுக்கு பெரிய அளவில் வாக்குவங்கிகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் சொல்வது ஏமாற்ற வேலை, இன்றை ஓட்டுக்கள் அனைத்துமே நோட்டுகளாலும், சாதி, மதத் தலைமையினாலும், சில நடுநிலையாளர்களின் ஊழல் எதிர்ப்பு என முவ்வகையில் தீர்மாணிக்கபடுகின்றன. பெரும்பான்மை சாதியினர் இருக்கும் ஊர்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் நிலைக்கு எந்த ஒரு பெரிய கட்சிகளும் தயாராக இல்லை, ரிஸ்க் எடுப்பதும் இல்லை.
தற்போதும், எப்போதும் அனைத்து கட்சிகளுமே, தேர்தலில் பணத்தில் விளையாடுவதும், கூட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்வதுடன், மூன்று வேளை உணவுடன், பிரியாணி கொடுத்து, நாள் ஊதியம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்வதிலிருந்தும், முடிந்த அளவு மாபெரும் கூட்டணி என்று காட்ட முயல்வதிலிருந்தே வாக்கு வங்கிகள் திவாலாகி வருவது கண்கூடு.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
5/14/2009 10:38:00 AM
தொகுப்பு :
அரசியல்,
கட்டுரைகள்,
தேர்தல்,
தேர்தல் 2009
3
கருத்துக்கள்


13 மே, 2009
40 க்கு 40 ! :)
கற்பனைக்கு காசா / பணமா ? எக்சிட் போல் காத்திருப்பில்......சும்மா டைம் பாஸ்,
*******
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து பெரு மகிழ்ச்சி தெரிவித்த விஜயகாந்த், மனைவி பிரமலதா விஜயகாந்தின் அனுமதி பெற்று "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, கடவுளுக்கு கிடைத்த வெற்றி, இனி பாகிஸ்தான் பார்டரை தாண்டி ஒரு தீவிரவாதியும் வரமுடியாது"
(எல்லையில் அகழி வெட்டுவாங்களோ ?)
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து மற்றற்ற மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, "மீண்டும் வெற்றிக்கனியை பெற்றுத்தந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன், சூழ்ச்சிக்காரர்கள் பேச்சற்று வீழ்ந்துவிட்டார்கள், ஏச்சுக்காரர்கள் மூச்சற்று சாய்ந்துவிட்டார்கள், கூச்சல்காரர்கள் ஓய்ந்து மாய்ந்துவிட்டார்கள், இனி தமிழக ஏழைகளுக்கு போனசாக 50 ரூபாய் மளிகை சாமான்களுடன் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான குச்சிமிட்டாய்களையும் இலவசமாகத் தருவோம்"
(ஆரம்பிச்சிட்டாங்கய்யா)
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து கருத்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, "என்னுடைய தலைமைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல,கருணாநிதியின் சிறுபான்மை மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வெற்றி, இதை தனது ஆட்சியின் தோல்வியாக ஏற்றுக் கொண்டு கருணாநிதி பதவியையும் ஆட்சியையும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும், அதிமுக தலைமைக்கு துணை பிரதமர் பதவி கொடுக்கும் தேசிய கட்சிக்கே அதிமுக பிரதமர் வாக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்கும்... அந்த வகையில் காங்கிரசுக்கு..."
(அடக் கொடுமையே ! )
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி - சமக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது,
(போட்டி இட்டதே 30க்கும் குறைவான இடம் தானே ? இவங்க 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மற்ற 10 இடங்களில் வெற்றிப் பெற்றவர்கள் இவங்க கூட்டணியை ஆதரிக்கப் போறாங்களாம் அதான்)
இது குறித்து சபதம் மேற்கொண்ட இல.கனேசன், "போலி மதச்சார்பின்மை தோற்றுவிட்டது, ஹிந்து தேசிய உணர்வு வெற்றி பெற்றுவிட்டது, அத்வானிஜி தலைமையில் அகண்ட பாரத வல்லரசை உருவாக்குவோம். என்றார்
(கிழிஞ்சிடும் !வல் அரசு வாழ்க !)
*******
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து பெரு மகிழ்ச்சி தெரிவித்த விஜயகாந்த், மனைவி பிரமலதா விஜயகாந்தின் அனுமதி பெற்று "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, கடவுளுக்கு கிடைத்த வெற்றி, இனி பாகிஸ்தான் பார்டரை தாண்டி ஒரு தீவிரவாதியும் வரமுடியாது"
(எல்லையில் அகழி வெட்டுவாங்களோ ?)
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து மற்றற்ற மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, "மீண்டும் வெற்றிக்கனியை பெற்றுத்தந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன், சூழ்ச்சிக்காரர்கள் பேச்சற்று வீழ்ந்துவிட்டார்கள், ஏச்சுக்காரர்கள் மூச்சற்று சாய்ந்துவிட்டார்கள், கூச்சல்காரர்கள் ஓய்ந்து மாய்ந்துவிட்டார்கள், இனி தமிழக ஏழைகளுக்கு போனசாக 50 ரூபாய் மளிகை சாமான்களுடன் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான குச்சிமிட்டாய்களையும் இலவசமாகத் தருவோம்"
(ஆரம்பிச்சிட்டாங்கய்யா)
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து கருத்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, "என்னுடைய தலைமைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல,கருணாநிதியின் சிறுபான்மை மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வெற்றி, இதை தனது ஆட்சியின் தோல்வியாக ஏற்றுக் கொண்டு கருணாநிதி பதவியையும் ஆட்சியையும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும், அதிமுக தலைமைக்கு துணை பிரதமர் பதவி கொடுக்கும் தேசிய கட்சிக்கே அதிமுக பிரதமர் வாக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்கும்... அந்த வகையில் காங்கிரசுக்கு..."
(அடக் கொடுமையே ! )
மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி - சமக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது,
(போட்டி இட்டதே 30க்கும் குறைவான இடம் தானே ? இவங்க 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மற்ற 10 இடங்களில் வெற்றிப் பெற்றவர்கள் இவங்க கூட்டணியை ஆதரிக்கப் போறாங்களாம் அதான்)
இது குறித்து சபதம் மேற்கொண்ட இல.கனேசன், "போலி மதச்சார்பின்மை தோற்றுவிட்டது, ஹிந்து தேசிய உணர்வு வெற்றி பெற்றுவிட்டது, அத்வானிஜி தலைமையில் அகண்ட பாரத வல்லரசை உருவாக்குவோம். என்றார்
(கிழிஞ்சிடும் !வல் அரசு வாழ்க !)
பதிவர்:
கோவி.கண்ணன்
at
5/13/2009 09:12:00 AM
தொகுப்பு :
தேர்தல்,
தேர்தல் 2009,
நகைச்சுவை
2
கருத்துக்கள்


12 மே, 2009
ஈழம் - வாக்களிப்பில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தாது !
கடந்த 10 நாட்கள் தமிழகத்தில் இருந்த போது கண்ட உண்மை இது. வலைப்பதிவில் ஈழம் தேர்தலில் ஒலிக்கும் என்று காரசாரமாகப் பேசுகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் மூலம் ஈழப் பிரச்சனை தேர்தலில் ஒலிக்க வண்ணம் வெற்றிகரமாக தவிர்க்க முடியும் என்பதை திமுக கழக கூட்டணிக் கட்சிகள் சாதித்து இருக்கின்றன. தொடக்கம் முதலே ஈழம் பற்றிய விழிப்புணர்வு பேச்சாளர்களை சிறையில் தள்ளி தேர்தல் வரையில் ஈழம் தொடர்பான செய்திகள் மக்களை எட்டா வண்ணம் மிகுந்த கவனம் எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாண்மை ஆளும் கட்சி சார்பிலும், ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சீமான் போன்றோரின் பேச்சுகள் ஒரு சில தொலைகாட்சிச் சானல் தவிர்த்தும், நேரடியாக கேட்ட மக்களைத் தவிர்த்தும் ஈழப் பிரச்சனை மக்களிடம் கொண்டு செல்லப்படவே இல்லை. ஏன் கொண்டு செல்ல வில்லை என்பதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை.
எங்கள் தெருவில் இருந்த வாக்களிக்கும் சிலரிடம் கேட்ட பொழுது, 'ஈழத்தில் சண்டை நடப்பதாக கேள்விப்பட்டேன்' என்ற அளவில் தான் சொன்னார்கள். வாக்கு யாருக்கு என்று கேட்ட போது, திமுக கூட்டணிக்கு மாற்றாக வாக்களிக்கப் போவதாகவும், அதற்குக் காரணமாக ஜெவின் பேச்சைக் குறிப்பிட்டார்கள், அதாவது திமுக ஊழல் செய்துவிட்டதாகவும், ரவுடிகள் மிகுந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், மின் வெட்டையும் குறிப்பிட்டனர்.
தேநீர் கடையில் இருவர் பேசிக் கொண்டதில், 'சீமான் பேசினதைக் கேட்டிங்களா, மனுசன் அழறான், கேக்க பாவமாக இருக்கு, நான் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறேன்' என்றார்கள். மற்றபடி ஈழம் தொடர்பில் திமுக - காங்கிரசு கூட்டணிக்கு எதிர்ப்பு ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை இல்லாமலேயே ஆட்சி முறை, வாரிசு அரசியல் இதைக் காரணம் சொல்லி அதிமுகவிற்கு வாக்களிக்கப் போவதாக சொல்பவர்களே மிகுதி.
திமுக கட்சிக்காரர்களைப் பொருத்த அளவில் எதைச் சொல்லி பரப்புரை செய்வது என்பதில் தெளிவற்று இருப்பதால், சன் டிவி உட்பட ஆளும்கட்சி மீடியாக்கள் ஜெ வின் பழைய ஆட்சியில் நடந்த வற்றை 'ஞாபகம் வருதே' என்ற பாடல் பின்னனியில் காட்டுவதில் இருந்தே, சாதனை என்று எதையுமே மக்களிடம் கொண்டு செல்ல இவர்களிடம் எதுவுமே இல்லையா ? என்றே எண்ண வைக்கிறது. 3 ஆண்டு மானிலத்திலும், 5 ஆண்டு நடுவன் அரசிலும் இடம் பிடித்த கூட்டணி 'ஜெ வின் ஆட்சியை நினைவு படுத்தி மக்களை பயமுறுத்தி வாக்கு பெற முடியும் என்று நம்புவதைப் பார்க்கும் போது அந்த கூட்டணி தங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, அந்தோ பரிதாபம் !!!
தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை. திமுகவினரிடம் பேசும் போது அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவினருக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இதனால் கூட்டணி வெற்றி என்ற அளவில் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவைப் பொறுத்தவரை பின்னடைவே. இராச தந்திரம் என்ற பெயரில் இப்படி எதையாவது அபத்தமாக செய்வது திமுகவிற்கு வாடிக்கை தான். பலமுறை ஆட்சியை இழந்ததற்கும், கூட்டணிக்குள்ளே இழுபறி ஏற்பட்டதற்கும் காரணமே இத்தகைய மட்டமான இராச தந்திரமே காரணமாக அமைந்திருக்கிறது.
ஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு. அதற்குக் காரணம் மீடியாக்கள் வழியாக அந்த செய்திகளை எடுத்துச் செல்லாமலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியாக வலிந்து சொல்ல முயன்றதே. ஜெ பிரச்சாரத்தின் போது ஓரளவு ஈழம், தமிழ் மக்கள் கொல்லப்படுவது, தனி ஈழம் தீர்வு பற்றிப் பேசினார். இரட்டை இலை வாக்கு வங்கிக்கு அந்த தகவல் வெறும் தகவல் தான். மற்றபடி தமிழ் உணர்வாளர்களை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும், ஆனால் விழுக்காட்டு அளவில் தமிழ் இன உணர்வாளர்கள் வாக்காளர்களில் குறைவே. நடுநிலை வாக்காளர்கள் ஈழம் தொடர்பில்லாமலேயே மின்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பில் திமுக கூட்டணிக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர்.
அதிமுக கூட்டணி 29 இடங்களும்,
திமுக கூட்டணி 11 இடங்களும் பெரும்,
ப.சிதம்பரம் தோற்கடிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்
எங்கள் தெருவில் இருந்த வாக்களிக்கும் சிலரிடம் கேட்ட பொழுது, 'ஈழத்தில் சண்டை நடப்பதாக கேள்விப்பட்டேன்' என்ற அளவில் தான் சொன்னார்கள். வாக்கு யாருக்கு என்று கேட்ட போது, திமுக கூட்டணிக்கு மாற்றாக வாக்களிக்கப் போவதாகவும், அதற்குக் காரணமாக ஜெவின் பேச்சைக் குறிப்பிட்டார்கள், அதாவது திமுக ஊழல் செய்துவிட்டதாகவும், ரவுடிகள் மிகுந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், மின் வெட்டையும் குறிப்பிட்டனர்.
தேநீர் கடையில் இருவர் பேசிக் கொண்டதில், 'சீமான் பேசினதைக் கேட்டிங்களா, மனுசன் அழறான், கேக்க பாவமாக இருக்கு, நான் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறேன்' என்றார்கள். மற்றபடி ஈழம் தொடர்பில் திமுக - காங்கிரசு கூட்டணிக்கு எதிர்ப்பு ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை இல்லாமலேயே ஆட்சி முறை, வாரிசு அரசியல் இதைக் காரணம் சொல்லி அதிமுகவிற்கு வாக்களிக்கப் போவதாக சொல்பவர்களே மிகுதி.
திமுக கட்சிக்காரர்களைப் பொருத்த அளவில் எதைச் சொல்லி பரப்புரை செய்வது என்பதில் தெளிவற்று இருப்பதால், சன் டிவி உட்பட ஆளும்கட்சி மீடியாக்கள் ஜெ வின் பழைய ஆட்சியில் நடந்த வற்றை 'ஞாபகம் வருதே' என்ற பாடல் பின்னனியில் காட்டுவதில் இருந்தே, சாதனை என்று எதையுமே மக்களிடம் கொண்டு செல்ல இவர்களிடம் எதுவுமே இல்லையா ? என்றே எண்ண வைக்கிறது. 3 ஆண்டு மானிலத்திலும், 5 ஆண்டு நடுவன் அரசிலும் இடம் பிடித்த கூட்டணி 'ஜெ வின் ஆட்சியை நினைவு படுத்தி மக்களை பயமுறுத்தி வாக்கு பெற முடியும் என்று நம்புவதைப் பார்க்கும் போது அந்த கூட்டணி தங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, அந்தோ பரிதாபம் !!!
தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை. திமுகவினரிடம் பேசும் போது அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவினருக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இதனால் கூட்டணி வெற்றி என்ற அளவில் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவைப் பொறுத்தவரை பின்னடைவே. இராச தந்திரம் என்ற பெயரில் இப்படி எதையாவது அபத்தமாக செய்வது திமுகவிற்கு வாடிக்கை தான். பலமுறை ஆட்சியை இழந்ததற்கும், கூட்டணிக்குள்ளே இழுபறி ஏற்பட்டதற்கும் காரணமே இத்தகைய மட்டமான இராச தந்திரமே காரணமாக அமைந்திருக்கிறது.
ஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு. அதற்குக் காரணம் மீடியாக்கள் வழியாக அந்த செய்திகளை எடுத்துச் செல்லாமலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியாக வலிந்து சொல்ல முயன்றதே. ஜெ பிரச்சாரத்தின் போது ஓரளவு ஈழம், தமிழ் மக்கள் கொல்லப்படுவது, தனி ஈழம் தீர்வு பற்றிப் பேசினார். இரட்டை இலை வாக்கு வங்கிக்கு அந்த தகவல் வெறும் தகவல் தான். மற்றபடி தமிழ் உணர்வாளர்களை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும், ஆனால் விழுக்காட்டு அளவில் தமிழ் இன உணர்வாளர்கள் வாக்காளர்களில் குறைவே. நடுநிலை வாக்காளர்கள் ஈழம் தொடர்பில்லாமலேயே மின்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பில் திமுக கூட்டணிக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர்.
அதிமுக கூட்டணி 29 இடங்களும்,
திமுக கூட்டணி 11 இடங்களும் பெரும்,
ப.சிதம்பரம் தோற்கடிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்
பதிவர்:
கோவி.கண்ணன்
at
5/12/2009 10:04:00 AM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009
44
கருத்துக்கள்


28 ஏப்ரல், 2009
தேசிய பாது'காப்பு' சட்டமும், ஆட்சியாளர்களின் குறுமதியும் !
இறையாண்மையைக் காக்கிறோம் என்கிற பெயரில் கடுமையான சட்டங்களை இயற்றுகிறார்கள். ஆனால் அந்த சட்டங்களை பயன்படுத்தும் தேர்தெடுக்கப்படும் அரசியில் கட்சிகளின் அரசு, அதைத் தங்களின் அரசியல் நோக்கிலேயே தன்னலத்திற்காக பயன்படுத்துகின்றன.
பொடா சட்டம், தடா சட்டம் போன்றவை இந்த வகைதான். தடா சட்டம் என்ற ஒரு சட்டம் முன்பு இருந்தது, அதைக் கொச்சைப் படுத்தியவர் ஜெ. முன்பு சு.சாமிக்கும் ஜெ-வுக்கும் இடையிலான கடுமையான முட்டல் மோதல்கள் இருந்த நேரம் தடா சட்டம் என்கிற ஒரு சட்டம் இருந்தது, அதில் தீவிரவாதிகள் என்று ஐயப்படுபவர்களை விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைக்கலாம். அதில் சிக்கிய கைதி ஒருவரின் புகைப்படத்தை சு.சுவாமியுடன் இணைத்து, 'இதோ பாருங்கள், சு.ஸ்வாமி தடா இராவியுடன் போஸ் கொடுக்கிறார், எனவே சு.ஸ்வாமியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். தடா இரவி - சு.ஸ்வாமி புகைப்பட இணைப்புக்கு தி.க ஐயாவே அறிவுறுத்தல் கொடுத்தார் என்று அப்போது பரவாலாகப் பேசப்பட்டது. பிறகு தடா புகைப்படம் தடவியல் ஆய்வாளர்களால் போலியானது என்று சொல்லப் பட்ட பிறகு அடங்கியது. இணையப் பக்கங்களில் தேடிப்பார்த்தால் தடா ரவி - சு.ஸ்வாமி இணைந்த போலி புகைப்படம் கிடைக்கலாம். சு.ஸ்வாமி நல்லவர் வல்லவர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. தடா சட்டத்தை எப்படி பயன்படுத்த முயன்றார்கள் என்பதற்காகச் சுட்டினேன்.
அடுத்து பொடா சட்டம் அதில் வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச் சாட்டில் ஓராண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டார், பிறகு வழக்கு போதிய ஆதராமின்றியும், தீவிரவாதத்திற்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசவில்லை என்பதால் பிசுபிசுத்தது, வைகோவும் வெளியே வந்தார். அதே காலகட்டத்தில் வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும், 17 வயது சிறுவன் மீதும் கூட பொடா சட்டம் பாய்ச்சப்பட்டது. சிறுவன் மீது பாய்ச்சப்பட்ட பொடாவிற்கு நீதிமன்றத்தால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு சாதாரண சிறுவர் குற்ற வழக்காக மாற்றப்பட்டது. நக்கீரன் கோபால் செய்த குற்றம் ? வீரப்பனைப் பேட்டியெடுத்ததும், அதில் ஜெ பற்றிய கடுமையான விமர்சனங்கள் இருந்ததும், தொடர்ந்து அதிமுக, ஜெ, சசிகலா பற்றி நக்கீரனில் எழுதி வந்ததும் தான் காரணம். மற்றபடி நக்கீரனை பொடாவில் போட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. நக்கீரன் கோபால் தனது வாதங்களை வைத்துவிட்டு எளிதாக வெளியே வந்தார்.
தற்பொழுது சீமான், கொளத்தூர் மணி போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற அதே குற்றச் சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். சீமான் வெற்றிகரமாக வைகோ பாணியில் வெளியே வந்துவிட்டார். கொளத்தூர் மணியும் வெளியே வருவார்.
ஆட்சியாளர்களுக்கு இது நிற்கும் வழக்கு இல்லை என்று தெரியாதா ? தெரியும். ஆனால் இந்த வழக்கில் சிக்க வைப்பதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தப்படுபவர்களை உள்ளே வைத்து காழ்புணர்வை தீர்த்துக் கொள்கிறார்கள். சீமான் போன்றோரை உள்ளே வைப்பதன் மூலம் அவர் மூலம் எடுத்துச் சொல்லப்படும் விழிப்புணர்வை குறுகிய காலத்திற்கு தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள், அதன் படியே நடக்கிறார்கள். மற்றபடி இது செல்லாத வழக்கு என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த வித இழப்பீடும் கிடைக்கவில்லை என்பதையும் சட்ட இயற்றுபவர்கள் பார்ப்பது இல்லை. இது போன்ற சட்டங்களினால் ஒருவர் பாதிக்கப்பட்டு அது அரசியல் காழ்புணர்வினால் எடுத்த பழிவாங்கள் நடவடிக்கை என்று குற்றவாளி உறுதிப்படுத்தும் (நிரூபணம்) போது அந்த சட்டத்தில் முகாந்திரமின்றி அரசியல் நோக்கிற்காக கைது செய்யப்பட்டதற்கு தக்கதொரு இழப்பீடு கொடுக்கப் படவேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற ஒரு பிரிவுகளும் இருந்தால், இது போன்று பழிவாங்கும் கைது நடவெடிக்கைகள் குறையும்.
ஒரு சில சட்டங்களை இயற்றும் போது பலர் அதற்கு எதிராக திரும்பப் பெறும் படி போராடுவது எதற்கென்றே தற்பொழுது தான் புரிகிறது. நேர்மையற்ற அரசியல் ஆட்சியாளர்களின் கையில் சட்டம் அவர்களது எதிரிகளைப் பழிவாங்கும் இன்னொரு ஆயுதமாகவே செயல்படுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கூட்டணி வெற்றிப் பாதுகாப்புக்காக முறைகேடாக பயன்படுத்துவது அரசியலில் மாபெரும் அசிங்கம், அதை மக்கள் ஆட்சி (ஜெனநாயக) படுகொலை என்றும் வகைப்படுத்தலாம்.
பொடா சட்டம், தடா சட்டம் போன்றவை இந்த வகைதான். தடா சட்டம் என்ற ஒரு சட்டம் முன்பு இருந்தது, அதைக் கொச்சைப் படுத்தியவர் ஜெ. முன்பு சு.சாமிக்கும் ஜெ-வுக்கும் இடையிலான கடுமையான முட்டல் மோதல்கள் இருந்த நேரம் தடா சட்டம் என்கிற ஒரு சட்டம் இருந்தது, அதில் தீவிரவாதிகள் என்று ஐயப்படுபவர்களை விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைக்கலாம். அதில் சிக்கிய கைதி ஒருவரின் புகைப்படத்தை சு.சுவாமியுடன் இணைத்து, 'இதோ பாருங்கள், சு.ஸ்வாமி தடா இராவியுடன் போஸ் கொடுக்கிறார், எனவே சு.ஸ்வாமியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். தடா இரவி - சு.ஸ்வாமி புகைப்பட இணைப்புக்கு தி.க ஐயாவே அறிவுறுத்தல் கொடுத்தார் என்று அப்போது பரவாலாகப் பேசப்பட்டது. பிறகு தடா புகைப்படம் தடவியல் ஆய்வாளர்களால் போலியானது என்று சொல்லப் பட்ட பிறகு அடங்கியது. இணையப் பக்கங்களில் தேடிப்பார்த்தால் தடா ரவி - சு.ஸ்வாமி இணைந்த போலி புகைப்படம் கிடைக்கலாம். சு.ஸ்வாமி நல்லவர் வல்லவர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. தடா சட்டத்தை எப்படி பயன்படுத்த முயன்றார்கள் என்பதற்காகச் சுட்டினேன்.
அடுத்து பொடா சட்டம் அதில் வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச் சாட்டில் ஓராண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டார், பிறகு வழக்கு போதிய ஆதராமின்றியும், தீவிரவாதத்திற்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசவில்லை என்பதால் பிசுபிசுத்தது, வைகோவும் வெளியே வந்தார். அதே காலகட்டத்தில் வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும், 17 வயது சிறுவன் மீதும் கூட பொடா சட்டம் பாய்ச்சப்பட்டது. சிறுவன் மீது பாய்ச்சப்பட்ட பொடாவிற்கு நீதிமன்றத்தால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு சாதாரண சிறுவர் குற்ற வழக்காக மாற்றப்பட்டது. நக்கீரன் கோபால் செய்த குற்றம் ? வீரப்பனைப் பேட்டியெடுத்ததும், அதில் ஜெ பற்றிய கடுமையான விமர்சனங்கள் இருந்ததும், தொடர்ந்து அதிமுக, ஜெ, சசிகலா பற்றி நக்கீரனில் எழுதி வந்ததும் தான் காரணம். மற்றபடி நக்கீரனை பொடாவில் போட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. நக்கீரன் கோபால் தனது வாதங்களை வைத்துவிட்டு எளிதாக வெளியே வந்தார்.
தற்பொழுது சீமான், கொளத்தூர் மணி போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற அதே குற்றச் சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். சீமான் வெற்றிகரமாக வைகோ பாணியில் வெளியே வந்துவிட்டார். கொளத்தூர் மணியும் வெளியே வருவார்.
ஆட்சியாளர்களுக்கு இது நிற்கும் வழக்கு இல்லை என்று தெரியாதா ? தெரியும். ஆனால் இந்த வழக்கில் சிக்க வைப்பதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தப்படுபவர்களை உள்ளே வைத்து காழ்புணர்வை தீர்த்துக் கொள்கிறார்கள். சீமான் போன்றோரை உள்ளே வைப்பதன் மூலம் அவர் மூலம் எடுத்துச் சொல்லப்படும் விழிப்புணர்வை குறுகிய காலத்திற்கு தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள், அதன் படியே நடக்கிறார்கள். மற்றபடி இது செல்லாத வழக்கு என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த வித இழப்பீடும் கிடைக்கவில்லை என்பதையும் சட்ட இயற்றுபவர்கள் பார்ப்பது இல்லை. இது போன்ற சட்டங்களினால் ஒருவர் பாதிக்கப்பட்டு அது அரசியல் காழ்புணர்வினால் எடுத்த பழிவாங்கள் நடவடிக்கை என்று குற்றவாளி உறுதிப்படுத்தும் (நிரூபணம்) போது அந்த சட்டத்தில் முகாந்திரமின்றி அரசியல் நோக்கிற்காக கைது செய்யப்பட்டதற்கு தக்கதொரு இழப்பீடு கொடுக்கப் படவேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற ஒரு பிரிவுகளும் இருந்தால், இது போன்று பழிவாங்கும் கைது நடவெடிக்கைகள் குறையும்.
ஒரு சில சட்டங்களை இயற்றும் போது பலர் அதற்கு எதிராக திரும்பப் பெறும் படி போராடுவது எதற்கென்றே தற்பொழுது தான் புரிகிறது. நேர்மையற்ற அரசியல் ஆட்சியாளர்களின் கையில் சட்டம் அவர்களது எதிரிகளைப் பழிவாங்கும் இன்னொரு ஆயுதமாகவே செயல்படுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கூட்டணி வெற்றிப் பாதுகாப்புக்காக முறைகேடாக பயன்படுத்துவது அரசியலில் மாபெரும் அசிங்கம், அதை மக்கள் ஆட்சி (ஜெனநாயக) படுகொலை என்றும் வகைப்படுத்தலாம்.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
4/28/2009 12:26:00 PM
தொகுப்பு :
அரசியல்,
சமூகம்,
தேர்தல்,
தேர்தல் 2009
6
கருத்துக்கள்


27 ஏப்ரல், 2009
என் ஓட்டும் ஜெ-வுக்கே !
தேர்தல் நெருங்க யாருக்கு ஓட்டு என்கிற முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்திற்குள் வந்தாச்சு. காங்கிரசுதான் தமிழர் எதிரி (கர்நாடகம் - தமிழகம் காவேரிப் பிணக்குகள், ஒக்கனேக்கல் பிணக்குகள், இராமேஸ்வரம் மீனவர் கொல்லப்படுவது ஆகியவற்றை இதுவரை காங்கிரசுவாதிகள் கண்டுகொண்டதில்லை, கூடுதலாக ஈழவிடுதலையை இராசீவ் காந்தி கொலையை சாக்கிட்டு நசுக்குவது) எனவே காங்கிரசை தேர்தலில் வீழ்த்துவதே சரியான முடிவு என்கின்றனர். கூடவே கருணாநிதியின் மீது இருக்கும் பழைய பாசம் காரணமாக திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்கின்றனர். எது லாஜிக் படி எப்படி சரி என்று கேட்டால், தேர்தலுக்குப் பிறகு ஜெ எப்படி வேண்டுமானாலும் மாறுவாராம், காங்கிரசுக்கே ஆதரவு கொடுப்பாராம். இதே நிலையை திமுகவும் எடுத்திருக்கிறது, மதவாதக் கட்சி மதவாதக் கட்சி என்று பாஜக பற்றி கருத்துக் கூறி வந்த திமுக, பாஜக தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து ஏற்கனவே பிரதமர் பதவியில் அமர்ந்த பிறகு ஜெவினால் கவிழ்க்கப்பட்ட பாஜக அரசை காப்பாற்றி பதவி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுகவும் கொள்கைக்கு எதிராக, தொண்டர்களின் எதிர்ப்புக்கு எதிராக, திகவின் எதிர்ப்புக்கும் எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.
ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு இந்திய அளவில் பாஜக செல்வாக்கு இழக்கவே காங்கிரசுடன் கைகோர்த்தது திமுக, அப்போதும் எப்போதும் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படாததற்குக் காரணம் ஜெ சோனியாவை பதிபத்தி இல்லாதவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர், ஆண்டனோ மொய்னோ என்ற தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தது தான், மேலும் 1992 தேர்தலில் இராசீவ் மரணத்தால் நான் வெற்றிபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார், அதையும் மீறி காங்கிரசார் சிலர் அதிமுகவுடன் கூட்டணி தொடர முயன்ற போது மூப்பனார் தலைமையில் தமாக உருவாக திமுகவும் அதனை ஆதரிக்க சட்டமன்றத்தில் திமுக ஆட்சி தொடர்ந்தது, மீண்டும் தமாக, காங்கிரசு இணைந்தது. அந்த தேர்தலில் அதிமுக - காங்கிரசு கூட்டணி வெற்றிபெறவில்லை, ஜெ திடிரென்று பாஜகவை 13 மாதங்களுக்கு ஆதரித்தார், பிறகு கவிழ்த்தார். மேலே குறிப்பிட்ட படி பாஜகவை திமுக ஆதரித்தது. மற்றபடி தமிழக காங்கிரசு தலைவர்களும், மற்ற காங்கிரசு புள்ளிகளும் ஜெவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். அந்த கூட்டணி ஏற்படாமல் போனதற்கு சோனியா - ஜெவுக்கு இடையே நடந்த நீயா நானா போட்டிதான். மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு ஜெவின் தயவு தேவைப்பட்டால் சோனியா இறங்கிவருவார். எந்த ஒரு நிபந்தனையுமின்றி ஜெ காங்கிரசுக்கு ஆதரவளிப்பார் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
*****
ஈழ விடுதலையை விடுதலை புலிகளைக் காரணம் காட்டி பேச மறுத்த காங்கிரசார், 'நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்' என்று கூறிய ஜெ வை தேச தூரோகம், இறையாண்மைக்கு எதிரானவர் என்று விமர்சிக்கின்றனர். இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நலனில் காங்கிரசு அக்கரை கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஈழ விடுதலைக்கு எதிராக இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தமும் அதன் தொடர்பில் ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் செய்த அட்டூழியங்களினால் இராசீவ் காந்தி படுகொலை வரை சென்ற பிறகு ஈழ விடுதலையே கேள்விக் குறியானது, காங்கிரசார் தமிழர்கள் விடுதலைப் பெற்றுவிடக் கூடாது என்கிற இராசீவின் நிலைப்பாட்டையே இன்றும் தொடர்கிறார்கள் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிந்துவிட்டது. காங்கிரசுவுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக 'ஈழ விடுதலை கிடைத்தால் மகிழ்வோம்' என்று ஒரு செய்தி விமர்சனம் என்ற அளவில் ஈழம் பற்றி பேசுகிறது. ஈழத்தின் உண்மை நிலை அனைவருக்கும் தெரியாமல் இல்லை, ஆனால் அதற்காக குரல் கொடுப்பவர் என்பதைப் பார்த்தால் ஜெ-வின் குரலே ஓங்கி ஒலிக்கிறது. ஜெ - செய்வாரா ? இல்லையா ? கூட்டணி மாறுவாரா ? என்ற கேள்விகளையும், ஊகங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.
ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு, தமிழர் நலனில் மெத்தனம் காட்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு , ஈழவிடுதலைக்கு எதிரான காங்கிசாருடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு எதன் அடிப்படையில் இந்த தேர்தலில் ஆதரவு கொடுக்க முடியும் ? திமுக தமிழகத்தில் இலவசங்களை வழங்கி சிறப்பாக(?) செயல்பட்டது என்பதற்காக ? அப்படிப் பார்த்தால் ஜெவின் ஆட்சிக்கு பிறகு ஜெ மீது இதுவரை எந்த ஊழல் வழக்குகளும் பதியப்படவில்லை. ஐயா இது சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் கூட, மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவியை அடைபவர்களில் தமிழர்களும் இருக்கிறார்களே. ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு அதிமுக காங்கிரசை ஆதரித்தாலும் காங்கிரசு சவாரி செய்யும் குதிரையாக இருக்காது, காங்கிரசு என்னும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் கடிவாளமாகவே இருக்கும், என்பதால் என் ஓட்டு ஜெ-கூட்டணிக்கே.
ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு இந்திய அளவில் பாஜக செல்வாக்கு இழக்கவே காங்கிரசுடன் கைகோர்த்தது திமுக, அப்போதும் எப்போதும் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படாததற்குக் காரணம் ஜெ சோனியாவை பதிபத்தி இல்லாதவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர், ஆண்டனோ மொய்னோ என்ற தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தது தான், மேலும் 1992 தேர்தலில் இராசீவ் மரணத்தால் நான் வெற்றிபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார், அதையும் மீறி காங்கிரசார் சிலர் அதிமுகவுடன் கூட்டணி தொடர முயன்ற போது மூப்பனார் தலைமையில் தமாக உருவாக திமுகவும் அதனை ஆதரிக்க சட்டமன்றத்தில் திமுக ஆட்சி தொடர்ந்தது, மீண்டும் தமாக, காங்கிரசு இணைந்தது. அந்த தேர்தலில் அதிமுக - காங்கிரசு கூட்டணி வெற்றிபெறவில்லை, ஜெ திடிரென்று பாஜகவை 13 மாதங்களுக்கு ஆதரித்தார், பிறகு கவிழ்த்தார். மேலே குறிப்பிட்ட படி பாஜகவை திமுக ஆதரித்தது. மற்றபடி தமிழக காங்கிரசு தலைவர்களும், மற்ற காங்கிரசு புள்ளிகளும் ஜெவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். அந்த கூட்டணி ஏற்படாமல் போனதற்கு சோனியா - ஜெவுக்கு இடையே நடந்த நீயா நானா போட்டிதான். மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு ஜெவின் தயவு தேவைப்பட்டால் சோனியா இறங்கிவருவார். எந்த ஒரு நிபந்தனையுமின்றி ஜெ காங்கிரசுக்கு ஆதரவளிப்பார் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
*****
ஈழ விடுதலையை விடுதலை புலிகளைக் காரணம் காட்டி பேச மறுத்த காங்கிரசார், 'நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்' என்று கூறிய ஜெ வை தேச தூரோகம், இறையாண்மைக்கு எதிரானவர் என்று விமர்சிக்கின்றனர். இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நலனில் காங்கிரசு அக்கரை கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஈழ விடுதலைக்கு எதிராக இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தமும் அதன் தொடர்பில் ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் செய்த அட்டூழியங்களினால் இராசீவ் காந்தி படுகொலை வரை சென்ற பிறகு ஈழ விடுதலையே கேள்விக் குறியானது, காங்கிரசார் தமிழர்கள் விடுதலைப் பெற்றுவிடக் கூடாது என்கிற இராசீவின் நிலைப்பாட்டையே இன்றும் தொடர்கிறார்கள் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிந்துவிட்டது. காங்கிரசுவுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக 'ஈழ விடுதலை கிடைத்தால் மகிழ்வோம்' என்று ஒரு செய்தி விமர்சனம் என்ற அளவில் ஈழம் பற்றி பேசுகிறது. ஈழத்தின் உண்மை நிலை அனைவருக்கும் தெரியாமல் இல்லை, ஆனால் அதற்காக குரல் கொடுப்பவர் என்பதைப் பார்த்தால் ஜெ-வின் குரலே ஓங்கி ஒலிக்கிறது. ஜெ - செய்வாரா ? இல்லையா ? கூட்டணி மாறுவாரா ? என்ற கேள்விகளையும், ஊகங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.
ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு, தமிழர் நலனில் மெத்தனம் காட்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு , ஈழவிடுதலைக்கு எதிரான காங்கிசாருடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு எதன் அடிப்படையில் இந்த தேர்தலில் ஆதரவு கொடுக்க முடியும் ? திமுக தமிழகத்தில் இலவசங்களை வழங்கி சிறப்பாக(?) செயல்பட்டது என்பதற்காக ? அப்படிப் பார்த்தால் ஜெவின் ஆட்சிக்கு பிறகு ஜெ மீது இதுவரை எந்த ஊழல் வழக்குகளும் பதியப்படவில்லை. ஐயா இது சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் கூட, மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவியை அடைபவர்களில் தமிழர்களும் இருக்கிறார்களே. ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு அதிமுக காங்கிரசை ஆதரித்தாலும் காங்கிரசு சவாரி செய்யும் குதிரையாக இருக்காது, காங்கிரசு என்னும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் கடிவாளமாகவே இருக்கும், என்பதால் என் ஓட்டு ஜெ-கூட்டணிக்கே.
13 ஏப்ரல், 2009
வாக்காள பெருங்குடி மக்களே ... 1
ஸ்டாலின் : மத்திய சென்னை வாக்காளர்கள் மீண்டும் தயாநிதி மாறன் அவர்களை மத்திய அமைச்சர் ஆக்க உதவ வேண்டும்.
பொது மக்கள் : சன் டிவியிடம் இனி அழகிரி அண்ணன் பற்றி கருத்து கணிப்பு நடத்தமாட்டோம் என்பதை கைப்பட எழுதி வாங்கிட்டிங்களா ?
அத்வானி : பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றார்.
பொது மக்கள் : அதுக்கும் முன்பு 'டீ' பார்டிகள் நடத்தும் ஓட்டல்களை விலை கொடுத்து வாங்கிவிடுவோம் என்பதை எப்போது அறிவிப்பீர்கள் ?
ஜெ: எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் அதிமுக சார்பில் நடத்தவில்லை.
பொது மக்கள் : தேர்தல் முடிந்ததும் தானே முழு செலவுக் கணக்கும் தெரியும். முன்பே பேச்சு வார்த்தை நடத்தி நட்டப்பட அம்மாவுக்கு அரசியல் அனுபவம் போதாதுன்னு நாங்களும் நினைக்கலையே
இல.கணேசன் : தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.
பொது மக்கள் : அரசி சூட்டிங்க்கு சித்தி அவுட்டோர் போய் இருப்பாங்க, எதுக்கும் ஒருவாரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்
திருமாவளவன் :நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர்
பொது மக்கள் : யாரோ விசமிகள் சத்திய மூர்த்தி பவனில் கல் எரிந்ததை விசமிகள் விடுதலை சிறுத்தைகள் செய்ததாக கிளப்பிவிட்டனர் என்பதை விட்டுவிட்டீர்களே.
விஜயகாந்த்: கருமவீரர் காமராஜரின் மணி மண்டபத்தைக் கூட பராமரிக்க முடியாத காங்கிரசார் காமராஜர் ஆட்சி அமைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் : கேப்டன் ...கேப்டன் நீங்க தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவராக இருந்த போது சிவாஜிக்கு மணி மண்டபம் அமைத்த வேகத்துக்கு தமிழக காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியாது
இராமதாஸ் : தமிழகத்தில் திமுக அரசு 3 மாதத்தில் கவிழும், சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வரும்.
பொது மக்கள் : அப்போதைய அரசியல் சூழலில் பாமக எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை முடிவு செய்வார் குடிதாங்கி ஐயா
பொது மக்கள் : சன் டிவியிடம் இனி அழகிரி அண்ணன் பற்றி கருத்து கணிப்பு நடத்தமாட்டோம் என்பதை கைப்பட எழுதி வாங்கிட்டிங்களா ?
அத்வானி : பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றார்.
பொது மக்கள் : அதுக்கும் முன்பு 'டீ' பார்டிகள் நடத்தும் ஓட்டல்களை விலை கொடுத்து வாங்கிவிடுவோம் என்பதை எப்போது அறிவிப்பீர்கள் ?
ஜெ: எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் அதிமுக சார்பில் நடத்தவில்லை.
பொது மக்கள் : தேர்தல் முடிந்ததும் தானே முழு செலவுக் கணக்கும் தெரியும். முன்பே பேச்சு வார்த்தை நடத்தி நட்டப்பட அம்மாவுக்கு அரசியல் அனுபவம் போதாதுன்னு நாங்களும் நினைக்கலையே
இல.கணேசன் : தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.
பொது மக்கள் : அரசி சூட்டிங்க்கு சித்தி அவுட்டோர் போய் இருப்பாங்க, எதுக்கும் ஒருவாரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்
திருமாவளவன் :நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர்
பொது மக்கள் : யாரோ விசமிகள் சத்திய மூர்த்தி பவனில் கல் எரிந்ததை விசமிகள் விடுதலை சிறுத்தைகள் செய்ததாக கிளப்பிவிட்டனர் என்பதை விட்டுவிட்டீர்களே.
விஜயகாந்த்: கருமவீரர் காமராஜரின் மணி மண்டபத்தைக் கூட பராமரிக்க முடியாத காங்கிரசார் காமராஜர் ஆட்சி அமைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் : கேப்டன் ...கேப்டன் நீங்க தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவராக இருந்த போது சிவாஜிக்கு மணி மண்டபம் அமைத்த வேகத்துக்கு தமிழக காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியாது
இராமதாஸ் : தமிழகத்தில் திமுக அரசு 3 மாதத்தில் கவிழும், சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வரும்.
பொது மக்கள் : அப்போதைய அரசியல் சூழலில் பாமக எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை முடிவு செய்வார் குடிதாங்கி ஐயா
பதிவர்:
கோவி.கண்ணன்
at
4/13/2009 11:27:00 PM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009,
நகைச்சுவை
19
கருத்துக்கள்


கொஞ்சம் புலம்பல் !
விடுதலைப் புலிகள் வைகோவிடம் அதிமுக கூட்டணியில் தொடரும் படிக் கேட்டுக் கொண்டதாலேயே வைகோ நான்கு இடங்களுக்கு உடன்பட்டு அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக சிங்கை தமிழ் முரசு நாளிதழில் தகவல் வெளி ஆகி இருந்தது. ஏன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு விடுதலைத் தரப்பு சொல்லி இருந்த காரணம்,
1. ஜெ, ஈழத்தில் தமிழர்களுக்கான சுய ஆட்சி முறை வேண்டும் என்று வழியுறுத்துகிறார்
2. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்று கருத்துரைக்கிறார், உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
என்றும் மேலும் சில காரணங்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரும் காங்கிரசு அரசு, ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம் என்பதை இரட்டை வேடம் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும், மேலும் இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொருத்த அளவில் ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தி வாக்கு கேட்பவர்களுக்கே மிகுதியாக வாக்கு கிடைக்கும் போல் தெரிகிறது. ஆனால் யார் உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைத்துக் கட்சிகளும் அறிக்கைப் போர்களாக அடித்துக் கொள்ளும் வேளையில், யாருடைய கூட்டணி வெற்றி ஈழத்தமிழர்களுக்கு நன்மைசெய்ய முடியும் என்று முடிவு செய்யும் ஈழத்தமிழர்களின் குரலாக போராளிகளின் எண்ணம் வெளிப்பட்டதாகவே கருத முடிகிறது.
விடுதலைப் புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிமுக ஜெ கூட்டணி வெல்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா இல்லையா என்பதெல்லாம் தற்போதைய அரசியல் வாதிகளின் மன நிலையை வைத்து எவரும் சரியாக சொல்ல முடியாது. இருந்தாலும்
தமிழின மக்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் காங்கிரசு கூட்டணிக்கு எதிராக தமிழக மக்களின் எதிர்ப்பை பதிய வைத்ததாக அமையும். ஒருவேளை அதிமுக தேர்தல் வெற்றிக்கு பிறகு காங்கிரசை ஆதரித்தால் ? அப்போது திமுக எதிர்கட்சி தானே, அவர்களே அதிமுக - காங்கிரசு கூட்டணியின் சந்தர்பவாதம் பற்றிப் பேசுவார்கள். எப்படியும் எந்த கூட்டணியும் எந்த நன்மையும் செய்யப் போவதில்லை, வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் 'காங்கிரசுக்கு எதிராக' என வாக்குகளைப் அளிப்பதன் மூலம் எதிர்ப்பு பதிய வைக்கப்படுகிறது. இதைத்தான் ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்கள், அதைத்தான் வைகோவிடம் போராளிகள் சொல்லி வைகோவை அதிமுகவில் தொடர கேட்டுக் கொண்டுள்ளார்கள் என்பதாக நினைக்க முடிகிறது.
காங்கிரசை அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக அழைத்துப் பார்த்ததில் ஒன்றும் பலனில்லை என்பதால் மாற்று வழிகளில் செல்ல வேண்டிய முடிவுக்கு வந்தவராக ஜெ ஈழ அரசியலை கையில் எடுத்தார் என்பது அரசியல் நோக்கர்கள் அறிந்த ஒன்றுதான். ஈழத்தமிழர்களின், தமிழக மீனவர்களின் நலனைவிட காங்கிரஸ் - திமுக கூட்டணியும், நட்பும் உறுதியானதா ? இந்த உறுதிக்கு பெவிக்கால் ஆனவை இரண்டு
1. சிறுபாண்மை உறுப்பினர்களுடன் தொடரும் திமுக அரசின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்கிற தொடர் மிரட்டல்
2. திமுகவின் ஸ்பெக்ட்ரம் ரகசியம் அறிந்துள்ள காங்கிரசு மே(லி)டம்
ஒரு வேளை ஜெ வென்றால் அதன் பிறகு திமுக - காங்கிரசு கூட்டணியை உடைக்க, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு அமைந்ததும், திமுக அரசை கவிழ்த்துவிட்டு விட்டு, டெல்லியில் ஒரு தேனீர் விருந்தில் கலந்து கொண்டு காங்கிரசையும் கவிழ்பார், அதன் பிறகு என்ன ? அதிமுக, காங்கிரசு, திமுக தனித்தனியாக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும், இதன் மூலம் இமேஜை உயர்த்திக் கொண்டு, சில்லரைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் தமிழக அரியணை ஏறலாம் என்பதே அதிமுகவின் அரச தந்திர திட்டம் என்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்
யாரும் காப்பாற்ற முடியாது, அறிவும், ஆள் பலமும், பணமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்
1. ஜெ, ஈழத்தில் தமிழர்களுக்கான சுய ஆட்சி முறை வேண்டும் என்று வழியுறுத்துகிறார்
2. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்று கருத்துரைக்கிறார், உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
என்றும் மேலும் சில காரணங்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரும் காங்கிரசு அரசு, ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம் என்பதை இரட்டை வேடம் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும், மேலும் இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொருத்த அளவில் ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தி வாக்கு கேட்பவர்களுக்கே மிகுதியாக வாக்கு கிடைக்கும் போல் தெரிகிறது. ஆனால் யார் உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைத்துக் கட்சிகளும் அறிக்கைப் போர்களாக அடித்துக் கொள்ளும் வேளையில், யாருடைய கூட்டணி வெற்றி ஈழத்தமிழர்களுக்கு நன்மைசெய்ய முடியும் என்று முடிவு செய்யும் ஈழத்தமிழர்களின் குரலாக போராளிகளின் எண்ணம் வெளிப்பட்டதாகவே கருத முடிகிறது.
விடுதலைப் புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிமுக ஜெ கூட்டணி வெல்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா இல்லையா என்பதெல்லாம் தற்போதைய அரசியல் வாதிகளின் மன நிலையை வைத்து எவரும் சரியாக சொல்ல முடியாது. இருந்தாலும்
தமிழின மக்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் காங்கிரசு கூட்டணிக்கு எதிராக தமிழக மக்களின் எதிர்ப்பை பதிய வைத்ததாக அமையும். ஒருவேளை அதிமுக தேர்தல் வெற்றிக்கு பிறகு காங்கிரசை ஆதரித்தால் ? அப்போது திமுக எதிர்கட்சி தானே, அவர்களே அதிமுக - காங்கிரசு கூட்டணியின் சந்தர்பவாதம் பற்றிப் பேசுவார்கள். எப்படியும் எந்த கூட்டணியும் எந்த நன்மையும் செய்யப் போவதில்லை, வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் 'காங்கிரசுக்கு எதிராக' என வாக்குகளைப் அளிப்பதன் மூலம் எதிர்ப்பு பதிய வைக்கப்படுகிறது. இதைத்தான் ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்கள், அதைத்தான் வைகோவிடம் போராளிகள் சொல்லி வைகோவை அதிமுகவில் தொடர கேட்டுக் கொண்டுள்ளார்கள் என்பதாக நினைக்க முடிகிறது.
காங்கிரசை அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக அழைத்துப் பார்த்ததில் ஒன்றும் பலனில்லை என்பதால் மாற்று வழிகளில் செல்ல வேண்டிய முடிவுக்கு வந்தவராக ஜெ ஈழ அரசியலை கையில் எடுத்தார் என்பது அரசியல் நோக்கர்கள் அறிந்த ஒன்றுதான். ஈழத்தமிழர்களின், தமிழக மீனவர்களின் நலனைவிட காங்கிரஸ் - திமுக கூட்டணியும், நட்பும் உறுதியானதா ? இந்த உறுதிக்கு பெவிக்கால் ஆனவை இரண்டு
1. சிறுபாண்மை உறுப்பினர்களுடன் தொடரும் திமுக அரசின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்கிற தொடர் மிரட்டல்
2. திமுகவின் ஸ்பெக்ட்ரம் ரகசியம் அறிந்துள்ள காங்கிரசு மே(லி)டம்
ஒரு வேளை ஜெ வென்றால் அதன் பிறகு திமுக - காங்கிரசு கூட்டணியை உடைக்க, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு அமைந்ததும், திமுக அரசை கவிழ்த்துவிட்டு விட்டு, டெல்லியில் ஒரு தேனீர் விருந்தில் கலந்து கொண்டு காங்கிரசையும் கவிழ்பார், அதன் பிறகு என்ன ? அதிமுக, காங்கிரசு, திமுக தனித்தனியாக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும், இதன் மூலம் இமேஜை உயர்த்திக் கொண்டு, சில்லரைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் தமிழக அரியணை ஏறலாம் என்பதே அதிமுகவின் அரச தந்திர திட்டம் என்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்
யாரும் காப்பாற்ற முடியாது, அறிவும், ஆள் பலமும், பணமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்
பதிவர்:
கோவி.கண்ணன்
at
4/13/2009 09:44:00 AM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009
31
கருத்துக்கள்


7 ஏப்ரல், 2009
பதிவர் தமிழ் ப்ரியனுக்கு பாராட்டுகள் !
வலையுலகம் சாராத நண்பர்களிடமும் அவர்களின் சாதி என்ன என்று அறிய விரும்புவதில்லை, இங்குள்ளது (பதிவுலகில்) போல் ஒருவரின் சாதியை எப்படியாவது தெரிந்து கொண்டு எவனோ செய்யும் தப்புக்கெல்லாம் கேள்வி கேட்டு அந்த சாதிக்காரனைப் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி தூற்றுவது (சாதிப் பெருமை பேசுபவர்களை அவ்வாறு தூற்றவும் செய்யலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து) குறைவு என்பதால் வெளி உலக நண்பர்கள் எதோ ஒரு காரணத்திற்காக தங்கள் சாதி என்ன என்று வெளிப்படுத்தினாலோ, அல்லது எப்படியோ தெரியவந்தாலோ பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. பதிவுலகம் சாராத வன்னிய நண்பரிடம் இராமதாஸ் கூட்டணி மாறியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
"அவன் கிடக்கிறான்ங்க.....அவனால வன்னியர்களுக்கு என்ன நன்மை ?, ஜால்ரா அடிக்கும் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு வானளாவிய சொத்து சேர்த்து இருக்கிறான், அதற்கு ஆதரவு கொடுத்து தொண்டர்கள் என்ற பெயரில் ஒட்டிக் கொள்கிறவர்கள் பதவி பெறுகிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.....இதனால் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு என்ன லாபம் ?......என்னைக் கேட்டால் வன்னியர்கள் அனைவரும் சேர்ந்து பாமகவைத் தோற்கடிக்கனும், ஓட்டு வங்கியை உருவாக்கி சுயலாபம் அடைந்தது தவிர்த்து இராமதாஸ் வன்னிய சமூகத்துக்கு பெருசா ஒண்ணும் பண்ணிவிடவில்லை" என்றார்
"உங்க சாதி ஆளுங்களுக்குத்தான் பிரதி நிதித்துவம் கிடைக்குதே... அதுல உங்களுக்கு பெருமை இல்லையா ?...ஒரு வன்னியர் மத்திய மந்திரியாக இருப்பது வன்னியர்களுக்குத் தானே லாபம் ?" என்று அவரிடம் கேட்டேன்.
"ஆகுறான்..ஆகட்டம்... இவன் ஒரு ஆள் மத்திய மந்திரி ஆகிவிட்டால் வன்னியர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா ?... தான் வன்னியர் என்று சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெறுகிறான்...அவ்வளவு தான்...அவனோட வாழ்க்கைத் தரம் மட்டும் தான் உயரது... இதுல பெருமை பட என்ன இருக்கிறது...மத்திய மந்திரியாக இருப்பதாலேயே வன்னியர்களுக்கு என்று குறிப்பிட்டு எதையும் வாங்கிட முடியாது....அந்தந்த பகுதியில் எதாவது நலத் திட்டம் அறிவிக்கலாம்...அதுலையும் பாதி காசை கமிசன் அடிச்சிடுவானுங்க, இது தானே நடக்குது....இதுல வன்னிய மக்களுக்கு தனிப்பட்ட பலன் இருப்பதாக எனக்குத் தெரியலைங்க....என் ஜாதிக்காரன் மந்திரியாக இருக்கிறான் என்று சொல்வது ஒரு வரட்டு கவுரவம் தான்... பைசா ப்ரோயஜனம் இல்லை" என்றார்
சாதிப் பெயரில் ஆதரவு திரட்டி பெரிய பதவிகளைப் பெருவதன் மூலம் சாதிக்காக எதையும் யாரும் சாதிப்பதில்லை, வெளிப்படையாக அவ்வாறு செய்ய சட்டத்திலும் இடம் இல்லை என்பதாகத் தான் அவரது கருத்தை புரிந்து கொண்டேன். எனவே சாதிப் பெயரைச் சொல்லி 'நம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப் பாடுபடுங்கள்' என்னும் தேர்தல் கால ஜாதிப் பற்று கோஷங்களை 'தாழ்த்தப்பட்டவர்கள்' தவிர்த்து எவரேனும் சொன்னால் அது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றே.
*****
இதெ கருத்தில் பதிவர் தமிழ் ப்ரியன் "முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! " என்ற அதிரை POST பதிவில் பின்னூட்டத்தில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
தமிழ் பிரியன் said...
திமுக ஒரு முஸ்லிமுக்கு சீட் கொடுப்பதன் மூலம் அவர் வந்து முஸ்லிம்களுக்கான ஒன்றையும் கிழிக்கப் போவதில்லை... முஸ்லிம்கள் அல்லாதவர்களே முஸ்லிம்களுக்கு சிறப்பு செய்கின்றார்கள். முஸ்லிம்களின் ஓட்டை வாங்கி சட்டமன்றம், பாராளுமன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள் சொத்தை மட்டுமே சேர்க்கின்றனர். இதில் எல்லா எழவுகளும் அடக்கமே.. அது முஸ்லிம் லீக்காக இருந்தால் என்ன? மமகவாக இருந்தால் என்ன ?
*****
அதைப் படித்ததும் உண்மையில் மிக்க நெகிழ்சியாக இருந்தது, மனிதம் மறந்து சாதியையும், மதத்தையும் வளர்க்க வேண்டும், அதைத் தூண்டவேண்டும் என்று நினைப்போருக்கு தமிழ் ப்ரியனின் பின்னூட்டம் சரியான சவுக்கடி. தமிழ் ப்ரியன் ஒரு இஸ்லாமிய பதிவர் நண்பர் தான். மத உணர்வின் வழி உணர்ச்சித் தூண்டலை இவரைப் போல் பலரும் புறக்கணித்தால் தமிழகத்தில் மதச் சண்டைகள் இல்லாது இருக்கும். தமிழ் ப்ரியனைப் பாராட்டி மகிழ்கிறேன்.
எல்லா மாநிலங்களில் ஓரளவு பலமும், பெரும்பான்மையோ பெரும் நிலையில் இருக்கும் பாஜக தமிழகத்தில் பரிதாப நிலையில் இருப்பதைப் பாருங்கள், தமிழகத்தில் 'பெரும்பான்மை இந்துக்கள்' என்கிற சொல்லாடலை 'தமிழக இந்துக்கள்' யாரும் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. இதே மனநிலையில் 'முஸ்லிம்' பெயரைச் சொல்லும் சக்திகளுக்கு எதிராக 'தமிழக இஸ்லாமியர்கள்' நடந்து கொண்டால், தமிழகத்தில் மதவாதங்களும் அதன் வழி மதவெறி நுழைந்து வன்செயல் நடத்திவிட முடியாது
"அவன் கிடக்கிறான்ங்க.....அவனால வன்னியர்களுக்கு என்ன நன்மை ?, ஜால்ரா அடிக்கும் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு வானளாவிய சொத்து சேர்த்து இருக்கிறான், அதற்கு ஆதரவு கொடுத்து தொண்டர்கள் என்ற பெயரில் ஒட்டிக் கொள்கிறவர்கள் பதவி பெறுகிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.....இதனால் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு என்ன லாபம் ?......என்னைக் கேட்டால் வன்னியர்கள் அனைவரும் சேர்ந்து பாமகவைத் தோற்கடிக்கனும், ஓட்டு வங்கியை உருவாக்கி சுயலாபம் அடைந்தது தவிர்த்து இராமதாஸ் வன்னிய சமூகத்துக்கு பெருசா ஒண்ணும் பண்ணிவிடவில்லை" என்றார்
"உங்க சாதி ஆளுங்களுக்குத்தான் பிரதி நிதித்துவம் கிடைக்குதே... அதுல உங்களுக்கு பெருமை இல்லையா ?...ஒரு வன்னியர் மத்திய மந்திரியாக இருப்பது வன்னியர்களுக்குத் தானே லாபம் ?" என்று அவரிடம் கேட்டேன்.
"ஆகுறான்..ஆகட்டம்... இவன் ஒரு ஆள் மத்திய மந்திரி ஆகிவிட்டால் வன்னியர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா ?... தான் வன்னியர் என்று சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெறுகிறான்...அவ்வளவு தான்...அவனோட வாழ்க்கைத் தரம் மட்டும் தான் உயரது... இதுல பெருமை பட என்ன இருக்கிறது...மத்திய மந்திரியாக இருப்பதாலேயே வன்னியர்களுக்கு என்று குறிப்பிட்டு எதையும் வாங்கிட முடியாது....அந்தந்த பகுதியில் எதாவது நலத் திட்டம் அறிவிக்கலாம்...அதுலையும் பாதி காசை கமிசன் அடிச்சிடுவானுங்க, இது தானே நடக்குது....இதுல வன்னிய மக்களுக்கு தனிப்பட்ட பலன் இருப்பதாக எனக்குத் தெரியலைங்க....என் ஜாதிக்காரன் மந்திரியாக இருக்கிறான் என்று சொல்வது ஒரு வரட்டு கவுரவம் தான்... பைசா ப்ரோயஜனம் இல்லை" என்றார்
சாதிப் பெயரில் ஆதரவு திரட்டி பெரிய பதவிகளைப் பெருவதன் மூலம் சாதிக்காக எதையும் யாரும் சாதிப்பதில்லை, வெளிப்படையாக அவ்வாறு செய்ய சட்டத்திலும் இடம் இல்லை என்பதாகத் தான் அவரது கருத்தை புரிந்து கொண்டேன். எனவே சாதிப் பெயரைச் சொல்லி 'நம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப் பாடுபடுங்கள்' என்னும் தேர்தல் கால ஜாதிப் பற்று கோஷங்களை 'தாழ்த்தப்பட்டவர்கள்' தவிர்த்து எவரேனும் சொன்னால் அது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றே.
*****
இதெ கருத்தில் பதிவர் தமிழ் ப்ரியன் "முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! " என்ற அதிரை POST பதிவில் பின்னூட்டத்தில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
தமிழ் பிரியன் said...
திமுக ஒரு முஸ்லிமுக்கு சீட் கொடுப்பதன் மூலம் அவர் வந்து முஸ்லிம்களுக்கான ஒன்றையும் கிழிக்கப் போவதில்லை... முஸ்லிம்கள் அல்லாதவர்களே முஸ்லிம்களுக்கு சிறப்பு செய்கின்றார்கள். முஸ்லிம்களின் ஓட்டை வாங்கி சட்டமன்றம், பாராளுமன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள் சொத்தை மட்டுமே சேர்க்கின்றனர். இதில் எல்லா எழவுகளும் அடக்கமே.. அது முஸ்லிம் லீக்காக இருந்தால் என்ன? மமகவாக இருந்தால் என்ன ?
*****
அதைப் படித்ததும் உண்மையில் மிக்க நெகிழ்சியாக இருந்தது, மனிதம் மறந்து சாதியையும், மதத்தையும் வளர்க்க வேண்டும், அதைத் தூண்டவேண்டும் என்று நினைப்போருக்கு தமிழ் ப்ரியனின் பின்னூட்டம் சரியான சவுக்கடி. தமிழ் ப்ரியன் ஒரு இஸ்லாமிய பதிவர் நண்பர் தான். மத உணர்வின் வழி உணர்ச்சித் தூண்டலை இவரைப் போல் பலரும் புறக்கணித்தால் தமிழகத்தில் மதச் சண்டைகள் இல்லாது இருக்கும். தமிழ் ப்ரியனைப் பாராட்டி மகிழ்கிறேன்.
எல்லா மாநிலங்களில் ஓரளவு பலமும், பெரும்பான்மையோ பெரும் நிலையில் இருக்கும் பாஜக தமிழகத்தில் பரிதாப நிலையில் இருப்பதைப் பாருங்கள், தமிழகத்தில் 'பெரும்பான்மை இந்துக்கள்' என்கிற சொல்லாடலை 'தமிழக இந்துக்கள்' யாரும் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. இதே மனநிலையில் 'முஸ்லிம்' பெயரைச் சொல்லும் சக்திகளுக்கு எதிராக 'தமிழக இஸ்லாமியர்கள்' நடந்து கொண்டால், தமிழகத்தில் மதவாதங்களும் அதன் வழி மதவெறி நுழைந்து வன்செயல் நடத்திவிட முடியாது
பதிவர்:
கோவி.கண்ணன்
at
4/07/2009 09:26:00 AM
தொகுப்பு :
அரசியல்,
சமூகம்,
தேர்தல்,
தேர்தல் 2009
26
கருத்துக்கள்


5 ஏப்ரல், 2009
வி.காந்துடன் கற்பனைப் பேட்டி !
நிருபர் : வணக்கங்க கேப்டன்
வி.காந்த் : நான் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி
நிருபர் : ஐயோ கேப்டன்... நான் நீங்க யாரு கூட கூட்டணின்னு கேட்கவரல... இதையே சொல்லிக் கிட்டு இருந்தால் அப்பறம் ஆடுமாடுகள் எங்கள் கூட கூட்டணி அமைக்கவில்லையான்னு கேட்டு போர்கொடி தூக்கும்
வி.காந்த் : பின்னே என்ன கேட்க வந்த இங்க, திமுக அரசின் உளவு படை ஆளா நீ
நிருபர் : உளவும் இல்லை களவும் இல்லை, நான் உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்
வி.காந்த் : திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கொள்ளையடித்திருக்கிறார்கள்
நிருபர் : உங்களுக்கும் ஒரு சான்ஸ் வேணுங்கிறிங்க, அதைத்தான் எல்லா மேடையிலும் சொல்லி இருக்கிங்களே, அது பத்திக் கேட்கல, ஈழ தமிழர் நலனுக்காக தேர்தலை புறக்கணிப்பேன் என்று சொன்னிங்க, ஆனால் பெரிய கட்சிகளையெல்லாம் முந்திக்கிட்டு வேட்பாளர் அறிவிச்சு...தேர்தல் பிரச்சாரமெல்லாம் பண்ணுறிங்க
வி.காந்த் : நீ எந்திரி...நீ கருணாநிதியோட ஆளேத்தான்....இருந்தாலும் சொல்றத கேட்டுட்டுப் போ... நான் நிக்காமல் இருந்தால் எனக்கு வர்ற ஓட்டையெல்லாம் அள்ளிடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார், நீ அவரோட ஆள்
நிருபர் : நான் ப்ரஸ்காரனுங்க
வி.காந்த் : இன்னொன்னும் சொல்றேன், நான் புறக்கணிக்கிறேன் என்று சொன்னதை வச்சுதான் செல்வி ஜெயலலிதா ஈழ ஆதரவுக்கு உண்ணாவிரதம் இருந்தாங்க....சோ....என்னோட திட்டத்தையெல்லாம் காப்பி அடித்து அதிமுகவும், திமுகவும் செயல்படுத்து, ஈழமக்கள் ஆதரவு தமிழர்கள் எனக்குத்தான் ஓட்டுப்போடுறாங்க, கருணாநிதி ஒரு கருநாகப் பாம்பு, ஜெயலிதா ஒரு செந்தேள்
நிருபர் : வாரிசு அரசியலை வாய்க்கு வந்தப்படி திட்டினிங்க, இப்ப ஒங்க மச்சானையே வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக
வி.காந்த் : இந்த விஜயகாந்த் மொதலமச்சர் ஆன பிறகும் வாரிசு அரசியலை வளர்த்தால் வந்து கேளுங்க, என் மச்சான் என்றாலும் அவரும் இம் மண்ணின் மைந்தன், அவருக்கும் போட்டி இட எல்லா உரிமையும் இருக்கு
நிருபர் : என்ன இருந்தாலும் மக்கள் வாரிசு அரசியல் என்று தானே சொல்லுவாங்க
வி.காந்த் : என்னது மக்கள் கேட்பாங்களா ?: அவங்கக் கூடவும் தெய்வத்துக் கூடவும் தான் என் கூட்டணி, என்னோட மக்கள் என்கிட்ட எப்படி கேட்பாங்க, என்னோட தெய்வம் என்கிட்ட எப்படி கேக்கும்...நீ கருணாநிதியோட ஆளே தான்.... எந்திரு
நிருபர் : கடைசியாக ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.... முன்னால் முதல்வர்கள் ஊர அடிச்சு ஒலையில் போடுறதா சொல்ற நீங்க.... ஆட்சியில் இல்லாத போதே...மதுராந்தகம் பக்கம் பொறம்போக்கு நிலங்களை வளைச்சுப் போட்டு...மின்சார வேலி அமைச்சிருக்கிங்களாமே...அது பற்றி முன்பு பலமாக பேச்சு அடிபட்டதே
நிருபருக்கு சரமாரியாகவும், பலமாகவும் அடிபட்டது
வி.காந்த் : நான் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி
நிருபர் : ஐயோ கேப்டன்... நான் நீங்க யாரு கூட கூட்டணின்னு கேட்கவரல... இதையே சொல்லிக் கிட்டு இருந்தால் அப்பறம் ஆடுமாடுகள் எங்கள் கூட கூட்டணி அமைக்கவில்லையான்னு கேட்டு போர்கொடி தூக்கும்
வி.காந்த் : பின்னே என்ன கேட்க வந்த இங்க, திமுக அரசின் உளவு படை ஆளா நீ
நிருபர் : உளவும் இல்லை களவும் இல்லை, நான் உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்
வி.காந்த் : திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கொள்ளையடித்திருக்கிறார்கள்
நிருபர் : உங்களுக்கும் ஒரு சான்ஸ் வேணுங்கிறிங்க, அதைத்தான் எல்லா மேடையிலும் சொல்லி இருக்கிங்களே, அது பத்திக் கேட்கல, ஈழ தமிழர் நலனுக்காக தேர்தலை புறக்கணிப்பேன் என்று சொன்னிங்க, ஆனால் பெரிய கட்சிகளையெல்லாம் முந்திக்கிட்டு வேட்பாளர் அறிவிச்சு...தேர்தல் பிரச்சாரமெல்லாம் பண்ணுறிங்க
வி.காந்த் : நீ எந்திரி...நீ கருணாநிதியோட ஆளேத்தான்....இருந்தாலும் சொல்றத கேட்டுட்டுப் போ... நான் நிக்காமல் இருந்தால் எனக்கு வர்ற ஓட்டையெல்லாம் அள்ளிடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார், நீ அவரோட ஆள்
நிருபர் : நான் ப்ரஸ்காரனுங்க
வி.காந்த் : இன்னொன்னும் சொல்றேன், நான் புறக்கணிக்கிறேன் என்று சொன்னதை வச்சுதான் செல்வி ஜெயலலிதா ஈழ ஆதரவுக்கு உண்ணாவிரதம் இருந்தாங்க....சோ....என்னோட திட்டத்தையெல்லாம் காப்பி அடித்து அதிமுகவும், திமுகவும் செயல்படுத்து, ஈழமக்கள் ஆதரவு தமிழர்கள் எனக்குத்தான் ஓட்டுப்போடுறாங்க, கருணாநிதி ஒரு கருநாகப் பாம்பு, ஜெயலிதா ஒரு செந்தேள்
நிருபர் : வாரிசு அரசியலை வாய்க்கு வந்தப்படி திட்டினிங்க, இப்ப ஒங்க மச்சானையே வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக
வி.காந்த் : இந்த விஜயகாந்த் மொதலமச்சர் ஆன பிறகும் வாரிசு அரசியலை வளர்த்தால் வந்து கேளுங்க, என் மச்சான் என்றாலும் அவரும் இம் மண்ணின் மைந்தன், அவருக்கும் போட்டி இட எல்லா உரிமையும் இருக்கு
நிருபர் : என்ன இருந்தாலும் மக்கள் வாரிசு அரசியல் என்று தானே சொல்லுவாங்க
வி.காந்த் : என்னது மக்கள் கேட்பாங்களா ?: அவங்கக் கூடவும் தெய்வத்துக் கூடவும் தான் என் கூட்டணி, என்னோட மக்கள் என்கிட்ட எப்படி கேட்பாங்க, என்னோட தெய்வம் என்கிட்ட எப்படி கேக்கும்...நீ கருணாநிதியோட ஆளே தான்.... எந்திரு
நிருபர் : கடைசியாக ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.... முன்னால் முதல்வர்கள் ஊர அடிச்சு ஒலையில் போடுறதா சொல்ற நீங்க.... ஆட்சியில் இல்லாத போதே...மதுராந்தகம் பக்கம் பொறம்போக்கு நிலங்களை வளைச்சுப் போட்டு...மின்சார வேலி அமைச்சிருக்கிங்களாமே...அது பற்றி முன்பு பலமாக பேச்சு அடிபட்டதே
நிருபருக்கு சரமாரியாகவும், பலமாகவும் அடிபட்டது
பதிவர்:
கோவி.கண்ணன்
at
4/05/2009 01:41:00 AM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009,
நகைச்சுவை
15
கருத்துக்கள்


3 ஏப்ரல், 2009
ஜெ - வைகோ தொகுதி உடன்பாடு !
புலியை பிடறியைப் பிடித்து பொடாவில் போட்டதும், அடிபட்ட புலின்னு நெனச்சா... பூனையாக்கி போயாஸ் தோட்டத்தில் கட்டியதால் என்னவோ சூடுபட்ட பூனையாக கூட இல்லாமல்... தொகுதி உடன்பாட்டு சந்திப்பு (கற்பனைதான்)
ஜெ : மிஸ்டர் வைகோ, உங்கக் கட்சியில் தான் இப்ப யாருமே இல்லையே, எப்படி 6 சீட் கேக்குறிங்க ?
வைகோ : கருங்காலிகள் ஓடிவிட்டார்கள், கோடிக்கணக்கான கட்சித்தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்
ஜெ : மிஸ்டர் வைகோ...நாம பொதுக்கூட்டம் போடப் போறதுல்ல...பஸ்ஸில லாரியில் ஆள் அழைச்சிட்டு வர...பொதுத் தேர்தல்.... உங்க கட்சியில் இருப்பவர்களெல்லாம் வெறும் தொண்டர்கள்...அதுல யாரை நிறுத்துவிங்க
வைகோ : அது வந்து....
ஜெ : மூணு சீட் தருகிறேன்......அத வச்சு
வைகோ : (இந்த அம்மா மூணு சீட்டை வச்சு தியேட்டர் வாசலில் மூணு சீட்டு போட்டு பொழச்சிக்கச் சொல்லுதா ? ன்னு நினைச்சு....ச்சே அப்படியெல்லாம் இருக்காது....ன்னு) 6 சீட் கிடைச்சா
ஜெ : மூனே மூணு சீட்டுதான்.....அதுவும் வேட்பாளர்களோட ஜாதகம் வேணும்.....வேண்டுமென்றால் ஒண்ணு செய்கிறேன் நீங்க கேட்கிற 6 சீட்டும் தருகிறேன்......ஆனா இரட்டை இலையில் தான் நிற்கனும்
வைகோ : மனதுக்குள் அந்த ஆளாவது இதயத்தில் இடம்னு சொல்லுவார்.....இந்த அம்மா அதிமுகவாகவே நிற்கச் சொல்லுது......கடைசியில் அதிமுகவுக்கு பேசாமல் வட்டச் செயலாளர் ஆகிடுங்க...பார்த்து செய்வோம் என்கிற ரேஞ்சுக்கு சொல்லுதே.....ன்னு நினச்சு.....அதெல்லாம் சரிவராது.....மதிமுகவுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு, போராட்டம் அது இது என்று பலமுறை ஜெயிலுக்கு போய் இருக்கிறோம்.....பொடாவுலேயே ஒரு வருசத்துக்கும் மேலாக இருந்திருக்கிறேன்... ஒரு ஐஞ்சு சீட்டுக் கொடுத்தால் கவுரமாக இருக்கும்
ஜெ : மிஸ்டர் வைகோ உங்களை கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றியதற்காக கொஞ்சம் கீழே இறங்கி வரப்படாதா ?
வைகோ : நேற்று வந்த இராமதாசுக்கெல்லாம்....
ஜெ : தி இஸ் லிமிட்....அது என்னோட டெஸிசன்...அதப்பத்தி எல்லாம் பேசக்கூடாது.... மூணு சீட்டுத் தரலாமுனு இருந்தேன்....என்னை விமர்சித்தால இரண்டே சீட்டுதான்
வைகோ : :(மனதுக்குள் மொதலுக்கே மோசம் ஆகறத்துக்குள்ளே...)எதோ பார்த்து செய்யுங்க ....வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரைக்கும் வெயிட் பண்ணுவோம்... இல்லாட்டி
ஜெ : இல்லாட்டி என்ன மிஸ்டர் ?
வைகோ : இரண்டு சீட்டுலேயே நிற்போம்னு சொல்ல வந்தேன்... (நம்ம பொழப்பு வடிவேலு காமடிக் கணக்காக ஆகிவிட்டதேன்னு நெனச்சு மனசுக்குள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
ஜெ : மிஸ்டர் வைகோ, உங்கக் கட்சியில் தான் இப்ப யாருமே இல்லையே, எப்படி 6 சீட் கேக்குறிங்க ?
வைகோ : கருங்காலிகள் ஓடிவிட்டார்கள், கோடிக்கணக்கான கட்சித்தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்
ஜெ : மிஸ்டர் வைகோ...நாம பொதுக்கூட்டம் போடப் போறதுல்ல...பஸ்ஸில லாரியில் ஆள் அழைச்சிட்டு வர...பொதுத் தேர்தல்.... உங்க கட்சியில் இருப்பவர்களெல்லாம் வெறும் தொண்டர்கள்...அதுல யாரை நிறுத்துவிங்க
வைகோ : அது வந்து....
ஜெ : மூணு சீட் தருகிறேன்......அத வச்சு
வைகோ : (இந்த அம்மா மூணு சீட்டை வச்சு தியேட்டர் வாசலில் மூணு சீட்டு போட்டு பொழச்சிக்கச் சொல்லுதா ? ன்னு நினைச்சு....ச்சே அப்படியெல்லாம் இருக்காது....ன்னு) 6 சீட் கிடைச்சா
ஜெ : மூனே மூணு சீட்டுதான்.....அதுவும் வேட்பாளர்களோட ஜாதகம் வேணும்.....வேண்டுமென்றால் ஒண்ணு செய்கிறேன் நீங்க கேட்கிற 6 சீட்டும் தருகிறேன்......ஆனா இரட்டை இலையில் தான் நிற்கனும்
வைகோ : மனதுக்குள் அந்த ஆளாவது இதயத்தில் இடம்னு சொல்லுவார்.....இந்த அம்மா அதிமுகவாகவே நிற்கச் சொல்லுது......கடைசியில் அதிமுகவுக்கு பேசாமல் வட்டச் செயலாளர் ஆகிடுங்க...பார்த்து செய்வோம் என்கிற ரேஞ்சுக்கு சொல்லுதே.....ன்னு நினச்சு.....அதெல்லாம் சரிவராது.....மதிமுகவுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு, போராட்டம் அது இது என்று பலமுறை ஜெயிலுக்கு போய் இருக்கிறோம்.....பொடாவுலேயே ஒரு வருசத்துக்கும் மேலாக இருந்திருக்கிறேன்... ஒரு ஐஞ்சு சீட்டுக் கொடுத்தால் கவுரமாக இருக்கும்
ஜெ : மிஸ்டர் வைகோ உங்களை கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றியதற்காக கொஞ்சம் கீழே இறங்கி வரப்படாதா ?
வைகோ : நேற்று வந்த இராமதாசுக்கெல்லாம்....
ஜெ : தி இஸ் லிமிட்....அது என்னோட டெஸிசன்...அதப்பத்தி எல்லாம் பேசக்கூடாது.... மூணு சீட்டுத் தரலாமுனு இருந்தேன்....என்னை விமர்சித்தால இரண்டே சீட்டுதான்
வைகோ : :(மனதுக்குள் மொதலுக்கே மோசம் ஆகறத்துக்குள்ளே...)எதோ பார்த்து செய்யுங்க ....வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரைக்கும் வெயிட் பண்ணுவோம்... இல்லாட்டி
ஜெ : இல்லாட்டி என்ன மிஸ்டர் ?
வைகோ : இரண்டு சீட்டுலேயே நிற்போம்னு சொல்ல வந்தேன்... (நம்ம பொழப்பு வடிவேலு காமடிக் கணக்காக ஆகிவிட்டதேன்னு நெனச்சு மனசுக்குள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
பதிவர்:
கோவி.கண்ணன்
at
4/03/2009 10:34:00 AM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009,
நகைச்சுவை
9
கருத்துக்கள்


2 ஏப்ரல், 2009
ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !
கூட்டணி என்பதே மக்கள் ஆட்சித் தத்துவத்தின் மாபெரும் ஏமாற்று வேலை. மூன்று வேட்பாளர்கள் சம பலத்துடன் நிற்கும் தொகுதியில் முறையே 33, 33, 34 விழுக்காடுகள் பெரும் போது 34 விழுக்காடு பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 66 விழுக்காட்டினர் வாக்களிக்க விரும்பாத ஒருவர் அந்த தொகுதியின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதை அரசியல் கட்சிகள் வெற்றிகரமாக முறியடிப்பது தான் கூட்டணியாக வேட்பாளரை நிறுத்துவது என்கிற முடிவுகள். மூன்று கட்சிகள் நிற்கும் இடத்தில் இருகட்சிகள் கூட்டணியாக இணைந்தால் இருகட்சியின் ஆதரளவாளர்களின் 66 விழுக்காடு பெற்று கூட்டணி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தல் முறைகளும் உறுப்பினர் வெற்றி பெறும் விதம் ஆகியவை குளறுபடிகளுடன் தான் நடக்கிறது.
இவர் பிரதமர் என்று சுட்டிக்காட்டி கூட்டணிகள் வாக்கு கேட்கும், வாக்குகளைப் பெற்றவுடன் குதிரை பேரத்தில் கூட்டணிகள் பிரியும், மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ அவர்களுக்கு பட்டையும் நாமமும், குல்லாவும் தான். இதையெல்லாம் பார்க்கும் போது மன்னர் ஆட்சியும் சர்வாதிகார ஆட்சியும் எவ்வளவோ பரவாயில்லை என்ற மனநிலைக்கு நாளடைவில் மக்கள் வந்துவிடுவார்கள் போலும். எந்த சித்தாந்தமும் காலவெள்ளத்தில் நீர்த்துப் போகக் கூடியது என்பது மக்கள் ஆட்சித் தத்துவத்திற்கும் பொருந்தும்.
மக்கள் சேவை என்ற பெயரில் அரசியலில் நுழைபவர்கள் நாளடைவில் பதவி, அதற்குரிய மரியாதை, அதில் இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம், ஊழல் செய்வது, குற்றங்களில் இருந்து தப்புதல், இனி வரும் அவர்களுடைய சந்ததிகளுக்கு வானளாவிய சொத்துக்களை சேர்த்து வைப்பதுடன், கட்சியின் வரும்கால தர்மகர்த்தாக்களாக அவர்களையே வைத்துவிடுவார்கள், முட்டாள் தொண்டனும், குடும்ப அரசியலுக்கு ஊது குழலாகவே இருப்பான். ஆதாயம் எதிர்ப்பார்க்காத தொண்டர்களே அரிது, ஆதாயம் எதிர்பார்க்காமல் தொண்டர்களாக இருப்பவர்கள் தலைமை தவறு செய்யும் போது தட்டிக் கேட்பார்கள், அப்படி செய்யாமல் தன்னை எந்தக் கட்சிக்கும் தொண்டன் என்று கூறிக் கொள்பவர்களை நன்றியுள்ள நாலுகால் விலங்கு என்று சொல்லலாம். ஏனெனில் இவர்கள் ஆதரவின்றி எந்த தலைவனும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. நாயைப் பொருத்தவரையில் தன் எஜமானன் திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் விசுவாசத்துடன் தான் இருக்கும்.
*****

இடுகை தலைப்பை ஒட்டி வரவில்லையா ? பேரம் படியாமல் தானே கூட்டணி மாறுகிறார்கள், இதில் பரிதாபப் பட என்ன இருக்கிறது. வயிற்றெரிச்சலில், ஆதங்கத்தில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சாடுவர், அதுவும் ஒரே ஒரு தேர்தல் கால அளவுக்கு மட்டுமே, அடுத்த தேர்தலில் புகழ்மாலையுடன், பொக்கே புகைப்பட போஸ் கொடுப்பார்கள். இன்றோ, நாளையோ, மறுநாளோ.....வைகோ சொல்லப் போகும் வாக்கியங்கள் அவை என்பதைத் தவிற வேறு அதில் ஆராய ஒன்றுமே இல்லை. :)
இவர் பிரதமர் என்று சுட்டிக்காட்டி கூட்டணிகள் வாக்கு கேட்கும், வாக்குகளைப் பெற்றவுடன் குதிரை பேரத்தில் கூட்டணிகள் பிரியும், மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ அவர்களுக்கு பட்டையும் நாமமும், குல்லாவும் தான். இதையெல்லாம் பார்க்கும் போது மன்னர் ஆட்சியும் சர்வாதிகார ஆட்சியும் எவ்வளவோ பரவாயில்லை என்ற மனநிலைக்கு நாளடைவில் மக்கள் வந்துவிடுவார்கள் போலும். எந்த சித்தாந்தமும் காலவெள்ளத்தில் நீர்த்துப் போகக் கூடியது என்பது மக்கள் ஆட்சித் தத்துவத்திற்கும் பொருந்தும்.
மக்கள் சேவை என்ற பெயரில் அரசியலில் நுழைபவர்கள் நாளடைவில் பதவி, அதற்குரிய மரியாதை, அதில் இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம், ஊழல் செய்வது, குற்றங்களில் இருந்து தப்புதல், இனி வரும் அவர்களுடைய சந்ததிகளுக்கு வானளாவிய சொத்துக்களை சேர்த்து வைப்பதுடன், கட்சியின் வரும்கால தர்மகர்த்தாக்களாக அவர்களையே வைத்துவிடுவார்கள், முட்டாள் தொண்டனும், குடும்ப அரசியலுக்கு ஊது குழலாகவே இருப்பான். ஆதாயம் எதிர்ப்பார்க்காத தொண்டர்களே அரிது, ஆதாயம் எதிர்பார்க்காமல் தொண்டர்களாக இருப்பவர்கள் தலைமை தவறு செய்யும் போது தட்டிக் கேட்பார்கள், அப்படி செய்யாமல் தன்னை எந்தக் கட்சிக்கும் தொண்டன் என்று கூறிக் கொள்பவர்களை நன்றியுள்ள நாலுகால் விலங்கு என்று சொல்லலாம். ஏனெனில் இவர்கள் ஆதரவின்றி எந்த தலைவனும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. நாயைப் பொருத்தவரையில் தன் எஜமானன் திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் விசுவாசத்துடன் தான் இருக்கும்.
*****

இடுகை தலைப்பை ஒட்டி வரவில்லையா ? பேரம் படியாமல் தானே கூட்டணி மாறுகிறார்கள், இதில் பரிதாபப் பட என்ன இருக்கிறது. வயிற்றெரிச்சலில், ஆதங்கத்தில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சாடுவர், அதுவும் ஒரே ஒரு தேர்தல் கால அளவுக்கு மட்டுமே, அடுத்த தேர்தலில் புகழ்மாலையுடன், பொக்கே புகைப்பட போஸ் கொடுப்பார்கள். இன்றோ, நாளையோ, மறுநாளோ.....வைகோ சொல்லப் போகும் வாக்கியங்கள் அவை என்பதைத் தவிற வேறு அதில் ஆராய ஒன்றுமே இல்லை. :)
31 மார்ச், 2009
மல்லாந்து எச்சில் துப்புவது கலைஞருக்கு அழகா ?
தேர்தல் லாவனிகள் ஒருபக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கம் இவ்வளவு கேவலமானவர்களா ? அரசியலுக்காக அம்மணமாகக் கூட நிற்கிறார்களே என்று நினைக்கவும் வேண்டி இருக்கிறது. அரசியலில் எந்த காலத்திலும் நாகரீகம் இருந்தது இல்லை. அத்திபூத்தார்போல் சில தழுவல்கள் கூட வரும்காலத்தில் நாங்களெல்லாம் நாகரீகமாக நடந்து கொண்டோம், இளைய அரசியல் வாதிகள் அவ்வாறு இல்லை என்று காட்டுவதற்கான நாடகமே அன்றி வேறொன்றும் இல்லை,
வைகோ திமுகவின் வருங்காலத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தார், முயன்றார் என்பதை எதோ குற்றாச் சாட்டு போல் கவிதை வடித்து இருக்கிறார் கலைஞர்.
தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதை
பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு அண்ணாவின் எழுத்தாற்றல், பேச்சு கண்டு பெரியார் மகிழ்ந்து பாராட்டி, இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த தட்டிக் கொடுத்தார். தலைமைப் பண்பின் அடையாளம் என்பது ஆற்றல் மிக்க தொண்டர்கள் வளர்வதைப் பாராட்டி மேலே கொண்டு விட தூண்டு கோலாக இருப்பது தான். பெரியாரிடமிருந்து பிரிந்தது அண்ணா பிரிந்தது வேறு கதை, அது கட்சி அபகரிப்புத் திட்டத்தில் வராது. அதே போன்று அண்ணாவினால் தொடங்கப்பட்ட திமுக கழகத்தில் மேடை நாடகம், திரையுலகம், இலக்கியம் போன்றவற்றிலும், அரசியலிலும் திரம்பட செயல்பட்டதால் அண்ணாவின் அன்பு தம்பி என்ற பாராட்டைப் பெற்ற கருணாநிதி அண்ணாவின் ஆட்சி அமைக்கிறேன் என்று அண்ணாவிற்கு பிறகு திமுகவை நடத்தி வருகிறார். அண்ணாவுக்கு பிறகு திமுக தலைவர் ஆகும் தகுதி தனக்கு இருக்கிறது என்கிற நினைப்பு கலைஞருக்கு இருந்திருக்காதா ? ஒரே நாளில் 'தலைவா....அண்ணாவுக்கு பிறகு நீ தான் தலைமை ஏற்கவேண்டும்' என்று கூறி முள் கிரிடத்தை தொண்டர்கள் கலைஞரின் தலையில் வைத்தார்களா ? கட்சிவிசுவாசிகள், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது, நாளை தனது உழைப்பு அங்கீகரிக்கப்படும் என்று நினைப்பது மனித இயல்பு, அதுவும் அரசியலில் நோக்கமின்றி உழைப்பவர்கள் எவருமே கிடையாது.

வைகோ எதோ படுபாதகம் செய்யத் துணிந்தது போல் கவிதை தீட்டி இருக்கிறார் கலைஞர். அதோடு மட்டுமின்றி வைகோ அதை யாருடன் ஆலோசித்தார் என்பதை குறிப்பிடும் விதமாக
"ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!"
அந்த கவிதையை படித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்கள், இரும்பு பெட்டி ஆண்டுகள் பல ஆனதும் துரு ஏறி உடைந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆக வைகோ சொன்னதை என்னிடம் இவர்கள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்வதாகத் தான் அதனை புரிந்து கொள்ளமுடிகிறது. மூவரின் நம்பகத் தன்மைகளை கேலி செய்வதாக நினைத்து குடும்ப அரசியலை ஞாயப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி தன்னையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார் கலைஞர்.
வைகோவுக்கு கவிதை பாடியவர் அதே போன்று எம்ஜிஆருக்கு பாடி இருக்க முடியாது, ஏனெனில் எம்ஜிஆர் 'திமுகவை நீயே வைத்துக்கொள்' என்று உதறித்தள்ளி, வெளி ஏறி, திமுகவையும், கலைஞரையும் ஓரம் கட்டினார். வைகோவும் அதே போல் வளர்ந்திருந்தால் இந்த கவிதை திமுக கழகத்தினரையே கேலி செய்யும். எப்படியோ...கலைஞரின் பெரும்தன்மை இன்மையால் அண்ணாவின் திமுக. அதிமுக, மதிமுக என மூன்றாகியது.
****
விஜயகாந்து திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் கலைஞர், விஜயகாந்த் நன்றி மறந்தவராக கலைஞரை தாக்குகிறார் என்று பேராசிரியர் சொல்லிக் காட்ட, பதிலடியாக நான் திரையுலகினரை திரட்டி கருணாநிதிக்கு விழா எடுத்தேன், தங்கப்பேனா கொடுத்தேன் என்கிறார் விஜயகாந்த். இவர்களெல்லாம், ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பை வைத்தே எதையும் செய்துவிட்டு மக்கள் மேடையில் இந்த கருமாந்திரங்களைப் பேசி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.
நான் இங்கே வைகோ தூய்மையானவர், விஜயகாந்த் சொக்கத் தங்கம் என்று சொல்லவரவில்லை, 30 ஆண்டுகளுக்கும் திமுகவின் தலைமை ஏற்று பலமுறை முதல்வராக இருந்தவரின் மேடைப் பேச்சுகளும், கவிதைகளும் இவர் மீது அரசியல் பொதுப்பார்வையாளர்களுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.
வைகோ திமுகவின் வருங்காலத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தார், முயன்றார் என்பதை எதோ குற்றாச் சாட்டு போல் கவிதை வடித்து இருக்கிறார் கலைஞர்.
தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதை
பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு அண்ணாவின் எழுத்தாற்றல், பேச்சு கண்டு பெரியார் மகிழ்ந்து பாராட்டி, இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த தட்டிக் கொடுத்தார். தலைமைப் பண்பின் அடையாளம் என்பது ஆற்றல் மிக்க தொண்டர்கள் வளர்வதைப் பாராட்டி மேலே கொண்டு விட தூண்டு கோலாக இருப்பது தான். பெரியாரிடமிருந்து பிரிந்தது அண்ணா பிரிந்தது வேறு கதை, அது கட்சி அபகரிப்புத் திட்டத்தில் வராது. அதே போன்று அண்ணாவினால் தொடங்கப்பட்ட திமுக கழகத்தில் மேடை நாடகம், திரையுலகம், இலக்கியம் போன்றவற்றிலும், அரசியலிலும் திரம்பட செயல்பட்டதால் அண்ணாவின் அன்பு தம்பி என்ற பாராட்டைப் பெற்ற கருணாநிதி அண்ணாவின் ஆட்சி அமைக்கிறேன் என்று அண்ணாவிற்கு பிறகு திமுகவை நடத்தி வருகிறார். அண்ணாவுக்கு பிறகு திமுக தலைவர் ஆகும் தகுதி தனக்கு இருக்கிறது என்கிற நினைப்பு கலைஞருக்கு இருந்திருக்காதா ? ஒரே நாளில் 'தலைவா....அண்ணாவுக்கு பிறகு நீ தான் தலைமை ஏற்கவேண்டும்' என்று கூறி முள் கிரிடத்தை தொண்டர்கள் கலைஞரின் தலையில் வைத்தார்களா ? கட்சிவிசுவாசிகள், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது, நாளை தனது உழைப்பு அங்கீகரிக்கப்படும் என்று நினைப்பது மனித இயல்பு, அதுவும் அரசியலில் நோக்கமின்றி உழைப்பவர்கள் எவருமே கிடையாது.
வைகோ எதோ படுபாதகம் செய்யத் துணிந்தது போல் கவிதை தீட்டி இருக்கிறார் கலைஞர். அதோடு மட்டுமின்றி வைகோ அதை யாருடன் ஆலோசித்தார் என்பதை குறிப்பிடும் விதமாக
"ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!"
அந்த கவிதையை படித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்கள், இரும்பு பெட்டி ஆண்டுகள் பல ஆனதும் துரு ஏறி உடைந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆக வைகோ சொன்னதை என்னிடம் இவர்கள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்வதாகத் தான் அதனை புரிந்து கொள்ளமுடிகிறது. மூவரின் நம்பகத் தன்மைகளை கேலி செய்வதாக நினைத்து குடும்ப அரசியலை ஞாயப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி தன்னையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார் கலைஞர்.
வைகோவுக்கு கவிதை பாடியவர் அதே போன்று எம்ஜிஆருக்கு பாடி இருக்க முடியாது, ஏனெனில் எம்ஜிஆர் 'திமுகவை நீயே வைத்துக்கொள்' என்று உதறித்தள்ளி, வெளி ஏறி, திமுகவையும், கலைஞரையும் ஓரம் கட்டினார். வைகோவும் அதே போல் வளர்ந்திருந்தால் இந்த கவிதை திமுக கழகத்தினரையே கேலி செய்யும். எப்படியோ...கலைஞரின் பெரும்தன்மை இன்மையால் அண்ணாவின் திமுக. அதிமுக, மதிமுக என மூன்றாகியது.
****
விஜயகாந்து திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் கலைஞர், விஜயகாந்த் நன்றி மறந்தவராக கலைஞரை தாக்குகிறார் என்று பேராசிரியர் சொல்லிக் காட்ட, பதிலடியாக நான் திரையுலகினரை திரட்டி கருணாநிதிக்கு விழா எடுத்தேன், தங்கப்பேனா கொடுத்தேன் என்கிறார் விஜயகாந்த். இவர்களெல்லாம், ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பை வைத்தே எதையும் செய்துவிட்டு மக்கள் மேடையில் இந்த கருமாந்திரங்களைப் பேசி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.
நான் இங்கே வைகோ தூய்மையானவர், விஜயகாந்த் சொக்கத் தங்கம் என்று சொல்லவரவில்லை, 30 ஆண்டுகளுக்கும் திமுகவின் தலைமை ஏற்று பலமுறை முதல்வராக இருந்தவரின் மேடைப் பேச்சுகளும், கவிதைகளும் இவர் மீது அரசியல் பொதுப்பார்வையாளர்களுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
3/31/2009 07:04:00 PM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009
72
கருத்துக்கள்


26 மார்ச், 2009
நாளைய செய்தி - பாமக !
மார்ச் 27, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக கட்சியின் நிறுவனரான மருத்துவர் இராமதாஸ், இலங்கை பிரச்சனையை முன்னிட்டு ஏன் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்ளவில்லை என்று கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது. கடந்த நவம்பர் முதல் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை பாமக நடத்திவந்தது. அதில் ஒரு கட்டமாக காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் விலக்கவும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுக்குழுவை கூட்டி விவாதித்த போது, தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பாமக விலகும் பட்சத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு இருந்ததால் பாமக தன் முடிவை ஒத்தி வைக்க வேண்டி ஆகிற்று. 1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்திய அரசை கவிழ்ப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும், எப்படியும் ஆறு மாதங்களில் பொதுத் தேர்தலை சந்திக்கும் நிலையில் இருக்கும் பொழுது இடையில் காங்கிரசின் ஆதரவை விலக்கிக் கொள்வது மத்தியில் பெரும் குழப்பத்தையே விளைவிக்கும் என்பதால் இந்திய நலனையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் அவையில் தொடர்ந்தோம். அதே சமயத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்த காங்கிரஸ் அரசும் அதன் தமிழக கூட்டணி தலைமையும் எதுவும் செய்துவிட வில்லை என்பதால் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.
திமுக அரசு ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை கைகழுவி விட்டது, அரசு மதுக்கடைகளுக்கு எதிராக நாங்கள் எவ்வளவோ போராடினோம், குறைந்த பட்சம் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழக நலனைக் காக்கவும் திமுக முயலவில்லை, இலவசம் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு இலவசங்களை வழங்கிவிட்டால் ஓட்டுக்களை தங்கள் வசம் ஆக்கமுடியும் என்று நினைத்து தவறாக செயல்படுகின்றன. திமுக அரசின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம், திருந்துவார்கள் என்று நினைத்தோம், தற்பொழுது வேறு வழி இன்றி கூட்டணியில் இருந்து பிரிகிறோம். ஆளும் கட்சியாக இருக்கும் கருணாநிதியைவிட சகோதரி ஜெயலலிதா ஈழ நலன்களில் மிகுந்த அக்கரை காட்டுகிறார். திமுகவின் மக்கள் விரோத அரசை இந்த தேர்தலில் முற்றிலுமாக மக்கள் புறக்கணிப்பார்கள்.
நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் ஈழபிரச்சனை உடனே தீர்ந்துவிடுமா ?
மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்
முழுவதும் வாசிக்க... உண்மையான பேட்டி இங்கே
திமுக அரசு ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை கைகழுவி விட்டது, அரசு மதுக்கடைகளுக்கு எதிராக நாங்கள் எவ்வளவோ போராடினோம், குறைந்த பட்சம் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழக நலனைக் காக்கவும் திமுக முயலவில்லை, இலவசம் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு இலவசங்களை வழங்கிவிட்டால் ஓட்டுக்களை தங்கள் வசம் ஆக்கமுடியும் என்று நினைத்து தவறாக செயல்படுகின்றன. திமுக அரசின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம், திருந்துவார்கள் என்று நினைத்தோம், தற்பொழுது வேறு வழி இன்றி கூட்டணியில் இருந்து பிரிகிறோம். ஆளும் கட்சியாக இருக்கும் கருணாநிதியைவிட சகோதரி ஜெயலலிதா ஈழ நலன்களில் மிகுந்த அக்கரை காட்டுகிறார். திமுகவின் மக்கள் விரோத அரசை இந்த தேர்தலில் முற்றிலுமாக மக்கள் புறக்கணிப்பார்கள்.
நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் ஈழபிரச்சனை உடனே தீர்ந்துவிடுமா ?
மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்
முழுவதும் வாசிக்க... உண்மையான பேட்டி இங்கே
பதிவர்:
கோவி.கண்ணன்
at
3/26/2009 04:33:00 PM
தொகுப்பு :
அரசியல்,
தேர்தல் 2009,
நகைச்சுவை
19
கருத்துக்கள்


25 மார்ச், 2009
ஆளும் கட்சிகள் செய்யும் தேர்தல் கால தவறுகள் !
தேர்தல் ஆணையம் தானியங்கி நிறுவனம் என்றாலும் அரசுடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளவில்லை என்றால் ஆணைய வளர்ச்சிகள், வசதிகள் இவற்றை அரசும் கண்டுகொள்ளாது, எனவே எழுதப்படாத ஒப்பந்தமாக அரசுசார்(ந்த) நிறுவனங்கள் எதுவென்றாலும் அதில் அரசியலும், ஆளும் அரசியல்வாதிகளின் நலனும் கலந்தே இருக்கும், டி என் சேசனுக்கு முன் தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதே யாருக்கும் தெரியாது. தேர்தல் ஆணையம் என்பது ஆளும்கட்சியை சார்ந்த நிறுவனம் அல்ல தனித்து செயல்படும் அரசு நிறுவனம் என்று பொதுமக்கள் அறிந்து கொண்டது டி.என்.சேஷனால் தான். தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல்வாதிகளுக்கு பயமும், அவர்களால் விமர்சனமும் செய்யும் அளவுக்கு கொண்டு சென்ற பெருமை டி.என்.சேஷனையே சாரும். அதில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பது வேறு தகவல்கள்.
தேர்தலுக்கு முன் தேர்தல் எப்போது நடத்துவது என்பதை எழுதப்படாத மரியாதை நிமித்தமாக ஆளும்கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கலந்து முடிவெடுப்பது வழக்கம், குறிப்பாக புதிய அரசு தலைமைகள் மாறும் போது தேர்தல் ஆணையர்கள் சென்று அந்த அரசியல் தலைமைகளை சந்தித்து வருவதும் வழக்கமாம், அதை தமிழக தேர்தல் ஆணையர் செய்யவில்லை என்று கலைஞர் அண்மையில் மனம் புழுங்கி இருந்தார். அப்படி செய்வது எங்களுக்கு ஆணை வழியாக வழியுறுத்திச் சொல்லப்படவில்லை என்று ஆணையரும் பதில் சொல்லி இருந்தார். இருவரும் போட்டி போட்டு செய்தி இதழ்களில் பேட்டிக் கொடுத்தார்கள். மக்கள் தலைவர்களை அரசு உயர் அலுவலர்கள் மதிப்பதற்கு தயாராக இருப்பதில்லை என்பதாகத் தான் விளங்கிக் கொண்டேன். இதுவே வேலை தகுதி மேம்பாடு (ப்ரமோஷன்) கிடைக்கும் வாய்பென்றால் ஆளும் அரசியல் வாதிகளை காக்கைகள் கூட்டம் போல் அரசு உயர் அலுவலர்கள் மொய்திருப்பார்கள். சரி.... சொல்ல வந்தது வேறு
தேர்தல்கால திருவிழாவாக கருத்து கணிப்புகளை செய்தி இதழ்கள் வெளி இடுவது முந்தைய வழக்கம், பெரும்பாலும் கருத்துக் கணிப்புகள் ஆளும் கட்சிக்கு எதிரானவையாகவே இருக்கும், இந்தியா ஒளிருகிறது என்று கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து அடுத்த தேர்தலிலும் கொழிக்கலாம் என்று நினைத்த பாஜவுக்கு அப்போதைய கருத்து கணிப்புகள் பெரும் தலைவலியாக இருந்தன. வேறு வழியின்றி கருத்து கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்கிற திரைமறைவு கோரிக்கையை பரிசீலனை செய்து 'கருத்து கணிப்புகளை வெளி இடுவது, மக்களை சுயமாக முடிவெடிக்க முடியாமல் செய்துவிடும் தவறான உத்திகள்....அவற்றில் உள்நோக்கம் கொண்டவையும் தவறான கருத்துக்கணிப்புகளும் கூட இருக்கலாம்' என்று தேர்தல் ஆணையம் லாஜிக்காக விளக்கம் கொடுத்து கருத்து கணிப்புகளை வெளி இட ஊடகங்களுக்கு தடைவிதித்தது.
தற்பொழுது ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை மக்கள் முன் கொண்டு சென்று ஆளும் காங்கிரசுக்கு எதிராக பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்த ஈழநல அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன, இதிலும் தேர்தல் ஆணையம் மூக்கை நுழைத்து அதற்கும் தடை விதித்திருப்பதாக அறிய முடிகிறது, இதில் காங்கிரசின் தலையீடுகளே இருக்காது என்று எவரும் சொன்னால் அவரின் நம்பகத் தன்மை எத்தகையதாக இருக்கும் என்பதை யாரும் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் காலங்களை மக்கள் திருவிழா போலவே கொண்டாடினார்கள், இப்போதெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் பேசக்கூடாது........முதல் ஏகப்பட்ட கூடாதுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது, அவை ஒழுங்கு முறை நடவடிக்கையா ? தேர்தல் ஆணையத்தின் அதிகார வெறியா என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. சட்டத்தில் அனுமதி இருந்தால் கொலை கூட ஞாயமானதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படும், பேசப்படும், வழியுறுத்தப்படும்.
ஈழத்தமிழர்களின் அவலங்களையும், ஈழம் தொடர்பானவற்றையும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் தேர்தல் ஆணையம் வரும் காலத்தில் (அகால) மரணம் அடையும் தலைவர்களின் பிணங்களைக் கட்டி மக்களிடம் அனுதாபம் அலையை ஏற்படுத்த முயன்றால் அதனையும் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்.
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆளும் கட்சியாக இருக்கும் போது தேர்தல் ஆணையத்திடம் ரகசிய ஆணை பிறப்பிக்கும், கோரிக்கை வைக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான எதிர்பலனை எதிர்கட்சியாக இருக்கும் போது அடைகின்றன
தேர்தலுக்கு முன் தேர்தல் எப்போது நடத்துவது என்பதை எழுதப்படாத மரியாதை நிமித்தமாக ஆளும்கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கலந்து முடிவெடுப்பது வழக்கம், குறிப்பாக புதிய அரசு தலைமைகள் மாறும் போது தேர்தல் ஆணையர்கள் சென்று அந்த அரசியல் தலைமைகளை சந்தித்து வருவதும் வழக்கமாம், அதை தமிழக தேர்தல் ஆணையர் செய்யவில்லை என்று கலைஞர் அண்மையில் மனம் புழுங்கி இருந்தார். அப்படி செய்வது எங்களுக்கு ஆணை வழியாக வழியுறுத்திச் சொல்லப்படவில்லை என்று ஆணையரும் பதில் சொல்லி இருந்தார். இருவரும் போட்டி போட்டு செய்தி இதழ்களில் பேட்டிக் கொடுத்தார்கள். மக்கள் தலைவர்களை அரசு உயர் அலுவலர்கள் மதிப்பதற்கு தயாராக இருப்பதில்லை என்பதாகத் தான் விளங்கிக் கொண்டேன். இதுவே வேலை தகுதி மேம்பாடு (ப்ரமோஷன்) கிடைக்கும் வாய்பென்றால் ஆளும் அரசியல் வாதிகளை காக்கைகள் கூட்டம் போல் அரசு உயர் அலுவலர்கள் மொய்திருப்பார்கள். சரி.... சொல்ல வந்தது வேறு
தேர்தல்கால திருவிழாவாக கருத்து கணிப்புகளை செய்தி இதழ்கள் வெளி இடுவது முந்தைய வழக்கம், பெரும்பாலும் கருத்துக் கணிப்புகள் ஆளும் கட்சிக்கு எதிரானவையாகவே இருக்கும், இந்தியா ஒளிருகிறது என்று கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து அடுத்த தேர்தலிலும் கொழிக்கலாம் என்று நினைத்த பாஜவுக்கு அப்போதைய கருத்து கணிப்புகள் பெரும் தலைவலியாக இருந்தன. வேறு வழியின்றி கருத்து கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்கிற திரைமறைவு கோரிக்கையை பரிசீலனை செய்து 'கருத்து கணிப்புகளை வெளி இடுவது, மக்களை சுயமாக முடிவெடிக்க முடியாமல் செய்துவிடும் தவறான உத்திகள்....அவற்றில் உள்நோக்கம் கொண்டவையும் தவறான கருத்துக்கணிப்புகளும் கூட இருக்கலாம்' என்று தேர்தல் ஆணையம் லாஜிக்காக விளக்கம் கொடுத்து கருத்து கணிப்புகளை வெளி இட ஊடகங்களுக்கு தடைவிதித்தது.
தற்பொழுது ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை மக்கள் முன் கொண்டு சென்று ஆளும் காங்கிரசுக்கு எதிராக பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்த ஈழநல அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன, இதிலும் தேர்தல் ஆணையம் மூக்கை நுழைத்து அதற்கும் தடை விதித்திருப்பதாக அறிய முடிகிறது, இதில் காங்கிரசின் தலையீடுகளே இருக்காது என்று எவரும் சொன்னால் அவரின் நம்பகத் தன்மை எத்தகையதாக இருக்கும் என்பதை யாரும் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் காலங்களை மக்கள் திருவிழா போலவே கொண்டாடினார்கள், இப்போதெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் பேசக்கூடாது........முதல் ஏகப்பட்ட கூடாதுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது, அவை ஒழுங்கு முறை நடவடிக்கையா ? தேர்தல் ஆணையத்தின் அதிகார வெறியா என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. சட்டத்தில் அனுமதி இருந்தால் கொலை கூட ஞாயமானதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படும், பேசப்படும், வழியுறுத்தப்படும்.
ஈழத்தமிழர்களின் அவலங்களையும், ஈழம் தொடர்பானவற்றையும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் தேர்தல் ஆணையம் வரும் காலத்தில் (அகால) மரணம் அடையும் தலைவர்களின் பிணங்களைக் கட்டி மக்களிடம் அனுதாபம் அலையை ஏற்படுத்த முயன்றால் அதனையும் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்.
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆளும் கட்சியாக இருக்கும் போது தேர்தல் ஆணையத்திடம் ரகசிய ஆணை பிறப்பிக்கும், கோரிக்கை வைக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான எதிர்பலனை எதிர்கட்சியாக இருக்கும் போது அடைகின்றன
பதிவர்:
கோவி.கண்ணன்
at
3/25/2009 09:18:00 AM
தொகுப்பு :
அரசியல்,
கட்டுரைகள்,
தேர்தல் 2009
8
கருத்துக்கள்


24 மார்ச், 2009
அம்மாவும் ஐயாவும் ஒண்ணாக வாராங்க !
பலருக்கு அதிமுக - பாமக கூட்டு வியப்பாக இருந்தாலும் இதெல்லாம் எதிர்பார்த்தது தான், காங்கிரசுக்கு பலத்த அடி கொடுக்க முடிவு செய்த தமிழக மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கும் சேர்த்தே வேட்டு வைப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். இலங்கை அரசு ஈழத்தமிழர்களை காங்கிரஸ் உதவியுடன் அழிக்கிறது என்பது தெரிந்தவை தான் என்றாலும் அன்றாடம் இலங்கை இராணுவத்தினரால் சுடப்படும் இந்திய மீனவர்கள் குறித்து யாதொரு நடவடிக்கையும் காங்கிரஸ் அரசு செய்தது இல்லை. தமிழனை வெறும் குதிரையாக நினைத்து சவாரி செய்யலாம் என்கிற காங்கிரஸ் நினைப்புக்கு இந்த முறை தமிழர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை தமிழக சிறுவன் கூட அறிந்திருப்பான், இதை அறிந்ததால் பாமக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்து ஜெ வுடன் கூட்டணியில் இணைய முடிவு செய்து அதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்த ஜெ வை ஈழத்ததமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கக் கேட்டுக்கொண்டு அதன் படியே பாமக அரசியல் காய்நகர்த்தல் நடைபெறுகிறது. ஈழத்தமிழர்களின் நலன் என்ற ஜெ வின் உண்ணாவிரத்ததை தமிழக மக்கள் எந்த அளவுக்கு நம்புவவர்கள் என்று தெரியாது. ஆனால் காங்கிரசை வீழ்த்த நினைக்கும் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
விஜயகாந்த் இதுவரையில் தான் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதாகக் கூட மக்கள் மன்றத்தில் காட்டவில்லை. ஒருகூட்டத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்தி வருவதாகவும், மறுநாள் கூட்டத்தில் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதாக நாளொரு பேச்சு பேசி வருகிறார். எதுவுமே செய்யாதவர்கள் இவரது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்துவதாக முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் இருந்தே விஜயகாந்தின் அரசியல் வெறும் தூற்றல் தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சென்ற சட்டமன்ற தேர்தலில் 'பதிவான' வாக்குகளில் வி.காந்த் வாங்கியது வெறும் 8 விழுக்காடு, அதாவது 'மொத்த' வாக்களர்களில் 5 விழுக்காட்டினர் வி.காந்துக்கு வாக்களித்தனர், அதிலும் 3 விழுக்காட்டினர் முதல் முறை நிற்கிறார் என்பதாலும் திராவிட கட்சிகளைப் பிடிக்கவில்லை என்பதற்காக கிடைத்த வாக்குகள் தான். 1 விழுக்காடு ரஜினி கட்சி ஆரம்பிக்காத எரிச்சலில் வி.காந்தை ஆதரித்த ரஜினியின் முன்னால் ரஜினி ரசிகர்க்கள், 1 விழுக்காடு சரத்குமாருக்கும் மதுரை இடைத்தேர்தலுக்கு கிடைத்தது போல் தெளிவற்ற வாக்களர்களால் போடப் பட்டது, அதிலும் மீதம் ஒரே ஒரு விழுக்காடு தான் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களில் வாக்குகள், வி.காந்தின் வாக்கு வங்கி என்றால் அது அந்த ஒரு விழுக்காடு மட்டுமே, சென்ற முறை வி.காந்துக்கு வாக்களித்த மற்ற 4 விழுக்காட்டினர் எப்போதும் அளிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
இந்த கணக்கு பெரிய கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை, வி.காந்தை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் கூட்டணியின் பலம் கூடுவதாக மக்கள் மன்றத்தில் கணக்கு காட்ட வி.காந்துக்கு அழைப்பு விடுத்தனர். எல்லோரும் ஊழல் செய்தவர்கள் என்று தொடர்ந்து கூறிவிட்டு அவர்களுடன் கூட்டணியில் இணைவாரா சங்கடமாக இருக்காதா, அதற்குத்தான் அவர் தயங்குகிறார் என்பது போல் விஜயகாந்த் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்காததை வைத்து சிலர் பேசிக் கொள்கிறார்கள். அரசியலிலாவது தயக்கமாவது அதெல்லாம் ஒன்றும் இல்லை, கலைஞரின் காலில் பலமுறை விழுந்த வி.காந்த் அரசியல் என்று வந்த பிறகு படுகேவலாமாகவெல்லாம் பேசி இருக்கிறார். அதே போன்று இராமதாசும் கலைஞரை பலமுறை பேசி இருக்கிறார், ஜெவையும் பலமுறை பேசி இருக்கிறார். அரசியல்வாதிகளைப் பொறுத்து வசையாடல்கள் இயல்பானதே, அப்படி செய்பவர்களைத் தான் தங்கள் அரசியல்வாதி தொழிலைச் சேர்ந்தவர்கள் என்றே நினைப்பார்கள் எவ்வளவு கேவலாமாக பேசினாலும் தேர்தல் நெருங்க, புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆயத்தமாகிவிடுவார்கள், இப்படியெல்லாம் இருந்தும் எதாவது திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த தேர்த்தலில் தாம் வருங்கால முதல்வர் என்று பிரச்சாரம் செய்ய முடியாது என்பதே வி.காந்தின் எண்ணம், அடுத்த தமிழக தேர்த்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே உள்ளன, வி.காந்த் கொஞ்சம் காலம் மருத்துவரிடம் பாடம் பாடிக்கலாம்.
இராமதாஸ் அடிக்கடி கூட்டணி தாவுகிறார் என்கிற பரவலான குற்றச் சாட்டுகளை அவர் தாவும் அணிக்கு எதிரணி சாட்டுவது எப்போதும் வாடிக்கைத்தான், அவர் கூட்டணி தாவுவர் என்று தெரிந்தே சேர்த்துக் கொள்வதும் அதே அரசியல் வாதிகள் தான், சொல்லப் போனால் தாவித் தாவித்தான் பாமகவை மத்திய அமைச்சர் அவை வரையில் வளர்த்துச் சென்றிருக்கிறார் இராமதாஸ். மற்ற கூட்டணிகளில் சொல்வது போல் கொள்கை கூட்டணி என்ற சொல்லாடலைப் பயன்படுத்தாமல் 'தேர்தல் கால கூட்டணி...தேர்தலுக்கு பிறகு நிலமை எப்படி போகும் என்று சொல்ல முடியாது'என்கிற சொல்லாடலை அரசியலில் நுழைத்தவரே இராமதாஸ் தான். அதனை கவனத்தில் கொண்டே பல கட்சிகளும் தேர்தல் காலக் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதுடன் கொள்கைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்வது இல்லை, வைகோ அம்மா கூட்டணி கூட இப்படித்தான் விடுதலை புலிகள் பற்றிய கருத்தில் வைகோவும் அம்மாவும் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள்.
இதோ ஐயாவும் அம்மாவும் தேர்தல் கால கூட்டணியில் செருகிறார்கள், தேர்தலுக்கு மறு நாளே......'ஜெ ஒரு நல்ல அரசியல்வாதி அல்ல...பழிவாங்கும் நோக்கம் கொண்டவர் என்று ஐயாவும், 'பாமக ஒரு சாதிக்கட்சி, இராமதாஸ் ஒரு மரம் வெட்டி' என்று அம்மாவும் சொல்லப் போவதையும் நாம் கேட்கலாம்.
விஜயகாந்த் இதுவரையில் தான் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதாகக் கூட மக்கள் மன்றத்தில் காட்டவில்லை. ஒருகூட்டத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்தி வருவதாகவும், மறுநாள் கூட்டத்தில் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதாக நாளொரு பேச்சு பேசி வருகிறார். எதுவுமே செய்யாதவர்கள் இவரது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்துவதாக முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் இருந்தே விஜயகாந்தின் அரசியல் வெறும் தூற்றல் தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சென்ற சட்டமன்ற தேர்தலில் 'பதிவான' வாக்குகளில் வி.காந்த் வாங்கியது வெறும் 8 விழுக்காடு, அதாவது 'மொத்த' வாக்களர்களில் 5 விழுக்காட்டினர் வி.காந்துக்கு வாக்களித்தனர், அதிலும் 3 விழுக்காட்டினர் முதல் முறை நிற்கிறார் என்பதாலும் திராவிட கட்சிகளைப் பிடிக்கவில்லை என்பதற்காக கிடைத்த வாக்குகள் தான். 1 விழுக்காடு ரஜினி கட்சி ஆரம்பிக்காத எரிச்சலில் வி.காந்தை ஆதரித்த ரஜினியின் முன்னால் ரஜினி ரசிகர்க்கள், 1 விழுக்காடு சரத்குமாருக்கும் மதுரை இடைத்தேர்தலுக்கு கிடைத்தது போல் தெளிவற்ற வாக்களர்களால் போடப் பட்டது, அதிலும் மீதம் ஒரே ஒரு விழுக்காடு தான் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களில் வாக்குகள், வி.காந்தின் வாக்கு வங்கி என்றால் அது அந்த ஒரு விழுக்காடு மட்டுமே, சென்ற முறை வி.காந்துக்கு வாக்களித்த மற்ற 4 விழுக்காட்டினர் எப்போதும் அளிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
இந்த கணக்கு பெரிய கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை, வி.காந்தை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் கூட்டணியின் பலம் கூடுவதாக மக்கள் மன்றத்தில் கணக்கு காட்ட வி.காந்துக்கு அழைப்பு விடுத்தனர். எல்லோரும் ஊழல் செய்தவர்கள் என்று தொடர்ந்து கூறிவிட்டு அவர்களுடன் கூட்டணியில் இணைவாரா சங்கடமாக இருக்காதா, அதற்குத்தான் அவர் தயங்குகிறார் என்பது போல் விஜயகாந்த் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்காததை வைத்து சிலர் பேசிக் கொள்கிறார்கள். அரசியலிலாவது தயக்கமாவது அதெல்லாம் ஒன்றும் இல்லை, கலைஞரின் காலில் பலமுறை விழுந்த வி.காந்த் அரசியல் என்று வந்த பிறகு படுகேவலாமாகவெல்லாம் பேசி இருக்கிறார். அதே போன்று இராமதாசும் கலைஞரை பலமுறை பேசி இருக்கிறார், ஜெவையும் பலமுறை பேசி இருக்கிறார். அரசியல்வாதிகளைப் பொறுத்து வசையாடல்கள் இயல்பானதே, அப்படி செய்பவர்களைத் தான் தங்கள் அரசியல்வாதி தொழிலைச் சேர்ந்தவர்கள் என்றே நினைப்பார்கள் எவ்வளவு கேவலாமாக பேசினாலும் தேர்தல் நெருங்க, புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆயத்தமாகிவிடுவார்கள், இப்படியெல்லாம் இருந்தும் எதாவது திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த தேர்த்தலில் தாம் வருங்கால முதல்வர் என்று பிரச்சாரம் செய்ய முடியாது என்பதே வி.காந்தின் எண்ணம், அடுத்த தமிழக தேர்த்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே உள்ளன, வி.காந்த் கொஞ்சம் காலம் மருத்துவரிடம் பாடம் பாடிக்கலாம்.
இதோ ஐயாவும் அம்மாவும் தேர்தல் கால கூட்டணியில் செருகிறார்கள், தேர்தலுக்கு மறு நாளே......'ஜெ ஒரு நல்ல அரசியல்வாதி அல்ல...பழிவாங்கும் நோக்கம் கொண்டவர் என்று ஐயாவும், 'பாமக ஒரு சாதிக்கட்சி, இராமதாஸ் ஒரு மரம் வெட்டி' என்று அம்மாவும் சொல்லப் போவதையும் நாம் கேட்கலாம்.
16 மார்ச், 2009
தேர்தலுக்கு உயிர்த்தெழும் பிணம் !
செத்துப் போன தாத்தா எலக்சனுக்கு ஓட்டு போட வந்ததாக விளையாட்டாக கள்ள வாக்குகளை கிண்டல் செய்வது வழக்கம். அதில் உண்மையும் உண்டு. உயிரோடு இருப்பவர்களின் வாக்குகளையே கள்ளத்தனமாக குத்தும் போது செத்தவர்களின் வாக்குகளை விட்டு வைப்பார்களா ?
மதச்சார்பின்மை என்கிற காங்கிரசின் 'அரசியல்' முழக்கம் அப்படித்தான். மதச்சார்பின்மை - இந்த சொல்லை தந்தை பெரியாரைத் தவிர பயன்படுத்த எவருக்கும் தகுதியே கிடையாது. இந்தியாவின் மதச்சார்பின்மை காவிகளின் தலைமை பல மாநிலங்களில் ஏற்பட்ட போதே, ஏன் அதற்கு முன்பே மகாத்மா காந்தி சுட்டுக் கொள்ள பட்ட போதே அதன் கோர பற்களால் இளித்த ஒன்று. அதையும் மீறி சில வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் என்றால் அது அவர்களின் நன் மதிப்புக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல முடியும்.
இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்பாண்மை, சிறுபாண்மைச் சொல்லாடலின் தன்மை தேர்தல் காலங்களில் தான் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். ஒரு தொகுதியில் பெரும்பாண்மை மிக்க எந்த சமூகத்திலும் அவர்களுக்கு மாற்றான ஒரு சிறுபாண்மை சமூகத்தினரை தேர்தலில் நிறுத்திவிடவே முடியாது. கிறித்துவர்கள் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில், இஸ்லாமியர் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில் இந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது என்பதே இன்றைய நிலை. இப்படிதான் அனைத்து கட்சிகளுமே தங்களுக்குறிய வேட்பாளரை அந்தந்த தொகுதியில் நிறுத்துகிறார்கள். இந்துக்கள் பெரும்பாண்மையினராக இருக்கும் தொகுதிகளில் எந்த சாதிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த சாதியைச் சேர்ந்தவரைத் தான் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக களம் இருக்கிறது. எதிர்கட்சிக்காரன் நிறுத்தி இருக்கும் அதே சாதியைச் சார்ந்த வேறொருவரைத்தான் மாற்றுக் கட்சியும் நிறுத்துகிறது. மாறாக அங்கே ஒரு கிறித்துவரையோ, இஸ்லாமியரையோ நிறுத்துவது இல்லை. பிறகு மதச்சார்பின்மை என்கிற மண்ணாங்கட்டி எங்கிருந்து வந்தது ?
மதச்சார்பின்மையெல்லாம் நாம் எப்போதோ குழி தோண்டி புதைத்துவிட்டோம். கவர்சிகர கூட்டொலியாக (கோஷம்) காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பு பிஜெபியுடன் முன்பு கூட்டணியில் இருந்த திமுகவும் மதச்சார்பின்மை என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி வருகிறது. இந்துக்கள் நிறைந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக அறிவிக்கும் துணிவு இந்த கட்சிகளுக்கு இருக்கிறதா ? பிறகு ஏன் தாங்கள் மதச்சார்பிண்மையின் காவலர்கள் என்று இவர்கள் கூசாமல் பேசுகிறார்கள். அதுவும் தேசிய கட்சிகளின் இந்த கோசம் தமிழ்நாடு தாண்டி எடுபடவே இல்லை, அப்படி எடுபட்டிருந்தால் பக்கத்து மாநிலத்தில் பாஜக ஆட்சி ஏற்பட்டிருக்குமா ? பக்கத்து மாநிலத்திலோ அல்லது அல்லது பாஜக ஆளும் மாநிலத்திலோ உள்ளவர்கள் இந்து மதவெறியர்கள் என்று சொல்லிவிட முடியுமா ? காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுன் போலி மதச்சார்பின்மை தோல்வியுற்றது என்று தான் சொல்லமுடியும். ஏனெனின் தமிழக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த போது பாஜக தமிழகத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள, அப்படி தமிழகத்தில் முன்பு பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்தப்பட்ட இடத்தில் இருந்த வாக்காளர்கள் மதச்சார்பின்மை உடைய இந்துவெறியர்கள் என்று சொல்லிவிட முடியாது தானே. காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க, அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம இராவ் நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை துணண இராணுவம் கொண்டாவது தடுத்து இருக்க முடியும். அப்போதெல்லாம் இந்துக்களின் நண்பன் போல அமைதி காத்த காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் மதச்சார்பின்மை பேசுவது வெட்கக் கேடான ஒன்று.
நான் இங்கே பிஜேபி பற்றி எதையும் உயர்வாக சொல்லவில்லை. நேரடியாக மதச்சார்பில் நடந்து கொள்ளும் பாஜக மக்களிடம் குழப்பம் விளைவிக்காமல் நாங்கள் மதச்சார்பாளர் என்றே சொல்வதை பாராட்டலாம், அதனை உணர்ந்தே பிடித்தவர்கள் வாக்களிக்கிறார்கள், பிடிக்காதவர்கள் மறுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் மதச்சார்பின்மை என்னும் முழக்கம் போலித்தனமானவை.
தொகுதியில் எந்த மதத்து வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று பார்த்து வேட்பாளரை நிறுத்துவது எந்த வகையில் மதச்சார்பின்மையில் அடங்கும் ? மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பேசுகிறார்கள் ? ஊழல் ! கட்சி பாகுபாடின்று அனைத்துக் கட்சிகளுமே ஊழல் செய்து மக்களிடம் பெயர் பெற்றுவிட்டன. அவர்களிடையே நாங்கள் யோக்கியர்கள் என்று சொல்லும் விதமாக மதச்சார்பின்மையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன. இதை வாக்களர்கள் என்றோ நிராகரித்துவிட்டார்கள் ஆனால் காங்கிரஸ் போன்ற போலி மதச்சார்பின்மை கட்சிகள் அதையெல்லாம் மறந்துவிட்டு 'மதச்சார்பின்மை' என்னும் என்றோ செத்த பிணத்துக்கு உயிர் கொடுத்து ஓட்டு பிச்சை எடுக்க வைக்க முயல்கின்றன.
மதச்சார்பின்மை என்கிற காங்கிரசின் 'அரசியல்' முழக்கம் அப்படித்தான். மதச்சார்பின்மை - இந்த சொல்லை தந்தை பெரியாரைத் தவிர பயன்படுத்த எவருக்கும் தகுதியே கிடையாது. இந்தியாவின் மதச்சார்பின்மை காவிகளின் தலைமை பல மாநிலங்களில் ஏற்பட்ட போதே, ஏன் அதற்கு முன்பே மகாத்மா காந்தி சுட்டுக் கொள்ள பட்ட போதே அதன் கோர பற்களால் இளித்த ஒன்று. அதையும் மீறி சில வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் என்றால் அது அவர்களின் நன் மதிப்புக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல முடியும்.
இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்பாண்மை, சிறுபாண்மைச் சொல்லாடலின் தன்மை தேர்தல் காலங்களில் தான் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். ஒரு தொகுதியில் பெரும்பாண்மை மிக்க எந்த சமூகத்திலும் அவர்களுக்கு மாற்றான ஒரு சிறுபாண்மை சமூகத்தினரை தேர்தலில் நிறுத்திவிடவே முடியாது. கிறித்துவர்கள் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில், இஸ்லாமியர் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில் இந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது என்பதே இன்றைய நிலை. இப்படிதான் அனைத்து கட்சிகளுமே தங்களுக்குறிய வேட்பாளரை அந்தந்த தொகுதியில் நிறுத்துகிறார்கள். இந்துக்கள் பெரும்பாண்மையினராக இருக்கும் தொகுதிகளில் எந்த சாதிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த சாதியைச் சேர்ந்தவரைத் தான் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக களம் இருக்கிறது. எதிர்கட்சிக்காரன் நிறுத்தி இருக்கும் அதே சாதியைச் சார்ந்த வேறொருவரைத்தான் மாற்றுக் கட்சியும் நிறுத்துகிறது. மாறாக அங்கே ஒரு கிறித்துவரையோ, இஸ்லாமியரையோ நிறுத்துவது இல்லை. பிறகு மதச்சார்பின்மை என்கிற மண்ணாங்கட்டி எங்கிருந்து வந்தது ?
மதச்சார்பின்மையெல்லாம் நாம் எப்போதோ குழி தோண்டி புதைத்துவிட்டோம். கவர்சிகர கூட்டொலியாக (கோஷம்) காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பு பிஜெபியுடன் முன்பு கூட்டணியில் இருந்த திமுகவும் மதச்சார்பின்மை என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி வருகிறது. இந்துக்கள் நிறைந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக அறிவிக்கும் துணிவு இந்த கட்சிகளுக்கு இருக்கிறதா ? பிறகு ஏன் தாங்கள் மதச்சார்பிண்மையின் காவலர்கள் என்று இவர்கள் கூசாமல் பேசுகிறார்கள். அதுவும் தேசிய கட்சிகளின் இந்த கோசம் தமிழ்நாடு தாண்டி எடுபடவே இல்லை, அப்படி எடுபட்டிருந்தால் பக்கத்து மாநிலத்தில் பாஜக ஆட்சி ஏற்பட்டிருக்குமா ? பக்கத்து மாநிலத்திலோ அல்லது அல்லது பாஜக ஆளும் மாநிலத்திலோ உள்ளவர்கள் இந்து மதவெறியர்கள் என்று சொல்லிவிட முடியுமா ? காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுன் போலி மதச்சார்பின்மை தோல்வியுற்றது என்று தான் சொல்லமுடியும். ஏனெனின் தமிழக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த போது பாஜக தமிழகத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள, அப்படி தமிழகத்தில் முன்பு பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்தப்பட்ட இடத்தில் இருந்த வாக்காளர்கள் மதச்சார்பின்மை உடைய இந்துவெறியர்கள் என்று சொல்லிவிட முடியாது தானே. காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க, அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம இராவ் நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை துணண இராணுவம் கொண்டாவது தடுத்து இருக்க முடியும். அப்போதெல்லாம் இந்துக்களின் நண்பன் போல அமைதி காத்த காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் மதச்சார்பின்மை பேசுவது வெட்கக் கேடான ஒன்று.
நான் இங்கே பிஜேபி பற்றி எதையும் உயர்வாக சொல்லவில்லை. நேரடியாக மதச்சார்பில் நடந்து கொள்ளும் பாஜக மக்களிடம் குழப்பம் விளைவிக்காமல் நாங்கள் மதச்சார்பாளர் என்றே சொல்வதை பாராட்டலாம், அதனை உணர்ந்தே பிடித்தவர்கள் வாக்களிக்கிறார்கள், பிடிக்காதவர்கள் மறுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் மதச்சார்பின்மை என்னும் முழக்கம் போலித்தனமானவை.
தொகுதியில் எந்த மதத்து வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று பார்த்து வேட்பாளரை நிறுத்துவது எந்த வகையில் மதச்சார்பின்மையில் அடங்கும் ? மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பேசுகிறார்கள் ? ஊழல் ! கட்சி பாகுபாடின்று அனைத்துக் கட்சிகளுமே ஊழல் செய்து மக்களிடம் பெயர் பெற்றுவிட்டன. அவர்களிடையே நாங்கள் யோக்கியர்கள் என்று சொல்லும் விதமாக மதச்சார்பின்மையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன. இதை வாக்களர்கள் என்றோ நிராகரித்துவிட்டார்கள் ஆனால் காங்கிரஸ் போன்ற போலி மதச்சார்பின்மை கட்சிகள் அதையெல்லாம் மறந்துவிட்டு 'மதச்சார்பின்மை' என்னும் என்றோ செத்த பிணத்துக்கு உயிர் கொடுத்து ஓட்டு பிச்சை எடுக்க வைக்க முயல்கின்றன.
வாய்மூடி சிரிக்கலாம் போங்க ! அரசியல்
தொண்டர் 1 : நம்ம தலைவர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்க இப்படியெல்லாம் அறிவிப்பு விட்டு கெஞ்சுவார்னு யாரும் எதிர்பார்க்கல
தொண்டர் 2 : என்ன அறிவிப்பு விட்டார் ?
தொண்டர் 1 : கூட்டணிக்கு சேர்ந்தால் அந்த முக்கிய கட்சிக்கு 45 சீட் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
தொண்டர் 2: 45 ? இருப்பதே 39 தொகுதிதானே ?
தொண்டர் 1 : பக்கத்து மாநிலத்திலும் சில தொகுதிகளை கேட்டு வாங்கித்தருவாராம்
****
தொண்டர் : எங்க தலைவர் குறிப்பிட்ட தொகுதியை மட்டும் விட்டுத்தரமாட்டேன் என்று கராராக பேசிவிட்டார்
மற்றவர் : ஏன் ஏன் ?
தொண்டர் : போனதடவை அங்கே நின்னு தான் டெபாசிட் வாங்கினாராம்
***
வட்ட துணைச் செயலாளர் : நம்ம கட்சியில் தான் பெண்களுக்கு 33 % சீட் கொடுத்திருப்பதாக தலைவர் பெருமையாக பேசினாரே விவரம் என்ன ?
வட்டச் செயலாளர் : கேட்டு வாங்கிய 10 சீட்டில் 3ல் அவரது மனைவியும், மகளும், மருமகளும் நிற்கிறார்கள், அவர்களெல்லாம் பெண்கள் தானே.இந்த பெரும் தன்மை யாருக்கு வரும் ?
***
அப்பாவி : எங்க கட்சி தான் தேர்தலுக்கு கவர்சிகரமான திட்டம் அறிவிச்சிருக்காங்க
ஐயாசாமி : ஓஹோ......?
அப்பாவி : தேர்தலில் கட்சி ஜெயிச்சா, இலவச டிவியுடன், நமிதா நடித்து வெளிவர இருக்கும் ஜெகன் மோகினி பட குறும்தகடு இலவசமாக தரப் போறாங்களாம், அதுதவிர நமீத படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப் போகிறார்களாம்
***
மும்பை நடிகையை பிராச்சாரத்துக்கு கூப்பிட்டது தப்பாக போய்விட்டது
ஏன் ஏன் ?
எல்லோரும் நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடுங்கன்னு பேசச் சொல்லிக் கொடுத்தால், அந்த அம்மா 'அல்லாரும் நம் கட்ச்சிக்கு ஓட்டை போடுது' ன்னு பேசிவிட்டது. அதனால் எல்லோரும் எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு நம்ம கட்சியை ஓட்டை ஆக்கிட்டாங்க
***
ராமசாமி : அந்த நடிகரை ஏன் தான் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டோம் என்று நம்ம தலைவர் நொந்து போய் இருக்கிறார்
குழந்தை சாமி : ஏனாம் ?
ராமசாமி : அவரோட ரசிகர்கள் வழியெங்கும் நம்ம முதல்வர் கண்ணில் படுவது போல் 'வருங்கால முதல்வரே வாருங்கள்' என்று நடிகருக்கு வரவேற்பு கட் அவுட் வச்சிட்டாங்களாம்
தொண்டர் 2 : என்ன அறிவிப்பு விட்டார் ?
தொண்டர் 1 : கூட்டணிக்கு சேர்ந்தால் அந்த முக்கிய கட்சிக்கு 45 சீட் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
தொண்டர் 2: 45 ? இருப்பதே 39 தொகுதிதானே ?
தொண்டர் 1 : பக்கத்து மாநிலத்திலும் சில தொகுதிகளை கேட்டு வாங்கித்தருவாராம்
****
தொண்டர் : எங்க தலைவர் குறிப்பிட்ட தொகுதியை மட்டும் விட்டுத்தரமாட்டேன் என்று கராராக பேசிவிட்டார்
மற்றவர் : ஏன் ஏன் ?
தொண்டர் : போனதடவை அங்கே நின்னு தான் டெபாசிட் வாங்கினாராம்
***
வட்ட துணைச் செயலாளர் : நம்ம கட்சியில் தான் பெண்களுக்கு 33 % சீட் கொடுத்திருப்பதாக தலைவர் பெருமையாக பேசினாரே விவரம் என்ன ?
வட்டச் செயலாளர் : கேட்டு வாங்கிய 10 சீட்டில் 3ல் அவரது மனைவியும், மகளும், மருமகளும் நிற்கிறார்கள், அவர்களெல்லாம் பெண்கள் தானே.இந்த பெரும் தன்மை யாருக்கு வரும் ?
***
அப்பாவி : எங்க கட்சி தான் தேர்தலுக்கு கவர்சிகரமான திட்டம் அறிவிச்சிருக்காங்க
ஐயாசாமி : ஓஹோ......?
அப்பாவி : தேர்தலில் கட்சி ஜெயிச்சா, இலவச டிவியுடன், நமிதா நடித்து வெளிவர இருக்கும் ஜெகன் மோகினி பட குறும்தகடு இலவசமாக தரப் போறாங்களாம், அதுதவிர நமீத படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப் போகிறார்களாம்
***
மும்பை நடிகையை பிராச்சாரத்துக்கு கூப்பிட்டது தப்பாக போய்விட்டது
ஏன் ஏன் ?
எல்லோரும் நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடுங்கன்னு பேசச் சொல்லிக் கொடுத்தால், அந்த அம்மா 'அல்லாரும் நம் கட்ச்சிக்கு ஓட்டை போடுது' ன்னு பேசிவிட்டது. அதனால் எல்லோரும் எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு நம்ம கட்சியை ஓட்டை ஆக்கிட்டாங்க
***
ராமசாமி : அந்த நடிகரை ஏன் தான் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டோம் என்று நம்ம தலைவர் நொந்து போய் இருக்கிறார்
குழந்தை சாமி : ஏனாம் ?
ராமசாமி : அவரோட ரசிகர்கள் வழியெங்கும் நம்ம முதல்வர் கண்ணில் படுவது போல் 'வருங்கால முதல்வரே வாருங்கள்' என்று நடிகருக்கு வரவேற்பு கட் அவுட் வச்சிட்டாங்களாம்
11 மார்ச், 2009
யார் யார் இந்தியன் ?
யாராவது தான் இந்தியன் என்று அறிந்து கொள்ளவேண்டுமென்றால் சத்திய மூர்த்திபவனுக்குச் சென்றால் அறிந்து கொள்ளலாம். வைகோ இந்தியனாக இருக்கத் தகுதியற்றவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் தங்கபாலு. அதற்குக் காரணாமாக பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக,
கேள்வி: இலங்கையில் இந்திய வீரர்கள் முகாமிட்டு போரில் ஈடுபடுவதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்: அவர் சொல்வது அப்பட்டமான பொய். வைகோ, முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். ராஜீவ் கொலைக்கு பிறகும் 6 மாதங்கள் விடுதலைப் புலிகளுக்கு உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி உண்மையான இந்தியனாக இருக்க முடியும். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதி அற்றவர்.
****
பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே.... என்னும் விதமாக அன்றைய சூழலில் இந்திய இராணுவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்ததாக வைகோ ஒப்புக் கொண்டுள்ளார்
இது தேச துரோகமாம். அப்படி என்றால் சொந்த நாட்டு இராணுவத்திற்கு பீராங்கி வாங்கியதில் ஆயிரம் கோடிகளை கையூட்டாக பெற்ற போஃபர்ஸ் ஊழல் எல்லாம் என்ன கணக்கு ? குற்றம் நிரூபிக்கப் படாததால் ஒருவர் குற்றவாளி இல்லை என்று ஆகிவிடாது. போஃபர்ஸ் விசாரணைக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்த விவரம் நாடே நாறிய ஒன்றுதான். நாட்டின் தலைமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கும் இராணுவா தளவாடங்களுக்கு கமிசன் பெற்றுக் கொண்டதைவிட பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வைகோ உதவியது ஒன்றும் மிகப் பெரிய இந்திய துரோகமாக தெரியவில்லை.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும். இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும்
***
இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது போலவே அந்த ஆயுதங்களால் வீழ்ந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் (மரண வலி) நிவாரண பொருட்கள் திரட்டப்படுகிறதாம். மானமுள்ள தமிழன் காங்கிரஸ் தாரும் நிவாரண பொருள்களை ஏற்பார்ர்களா என்பது வேறு விசயம்.
யார் தேச துரோகிகள் ? நாடு விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்திஜி காங்கிரஸின் நோக்கம் நிறைவேறிவிட்டது, இனியும் அரசியல் கட்சியாக தொடர்ந்தால் வாரிசு அரசியலும் ஊழலும் பெருகும் எனவே காங்கிரசை கலைத்துவிட வேண்டுகோள் வைக்கிறேன் என்றார். ஆதிக்க வெறியர்கள், பண்ணையார்கள் தங்களுக்கு பாதுகாப்பு கொடுத காங்கிரசை கலைக்க முன்வந்தார்களா ? நேருவில் இருந்து இராகுல் காந்திவரை வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சுதந்திர போராட்டத்தைச் சொல்லி இன்றும் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு ஆதிக்கத்த தக்கவைத்துக் கொள்ள, அரசு பதவி அதிகார வெறியில் செயல்படுபவர்கள் தேச நலவிரும்பிகளா ? காந்தி சொன்ன போது கலைக்காவிட்டாலும் காங்கிரஸ் முதல்முறை ஆட்சியை இழந்த போதே மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டது என கருதி கட்சியை கலைத்திருக்க வேண்டும். செய்யவில்லை. இழுத்துப் பிடித்துக் கொண்டு கூட்டணி ஆட்சியில் காலம் ஓட்டிக் கொண்டு, யார் இந்தியன் யார் இந்திய தேச துரோகி என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் அருகதையே இல்லை.
கேள்வி: இலங்கையில் இந்திய வீரர்கள் முகாமிட்டு போரில் ஈடுபடுவதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்: அவர் சொல்வது அப்பட்டமான பொய். வைகோ, முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். ராஜீவ் கொலைக்கு பிறகும் 6 மாதங்கள் விடுதலைப் புலிகளுக்கு உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி உண்மையான இந்தியனாக இருக்க முடியும். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதி அற்றவர்.
****
பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே.... என்னும் விதமாக அன்றைய சூழலில் இந்திய இராணுவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்ததாக வைகோ ஒப்புக் கொண்டுள்ளார்
இது தேச துரோகமாம். அப்படி என்றால் சொந்த நாட்டு இராணுவத்திற்கு பீராங்கி வாங்கியதில் ஆயிரம் கோடிகளை கையூட்டாக பெற்ற போஃபர்ஸ் ஊழல் எல்லாம் என்ன கணக்கு ? குற்றம் நிரூபிக்கப் படாததால் ஒருவர் குற்றவாளி இல்லை என்று ஆகிவிடாது. போஃபர்ஸ் விசாரணைக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்த விவரம் நாடே நாறிய ஒன்றுதான். நாட்டின் தலைமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கும் இராணுவா தளவாடங்களுக்கு கமிசன் பெற்றுக் கொண்டதைவிட பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வைகோ உதவியது ஒன்றும் மிகப் பெரிய இந்திய துரோகமாக தெரியவில்லை.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும். இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும்
***
இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது போலவே அந்த ஆயுதங்களால் வீழ்ந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் (மரண வலி) நிவாரண பொருட்கள் திரட்டப்படுகிறதாம். மானமுள்ள தமிழன் காங்கிரஸ் தாரும் நிவாரண பொருள்களை ஏற்பார்ர்களா என்பது வேறு விசயம்.
யார் தேச துரோகிகள் ? நாடு விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்திஜி காங்கிரஸின் நோக்கம் நிறைவேறிவிட்டது, இனியும் அரசியல் கட்சியாக தொடர்ந்தால் வாரிசு அரசியலும் ஊழலும் பெருகும் எனவே காங்கிரசை கலைத்துவிட வேண்டுகோள் வைக்கிறேன் என்றார். ஆதிக்க வெறியர்கள், பண்ணையார்கள் தங்களுக்கு பாதுகாப்பு கொடுத காங்கிரசை கலைக்க முன்வந்தார்களா ? நேருவில் இருந்து இராகுல் காந்திவரை வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சுதந்திர போராட்டத்தைச் சொல்லி இன்றும் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு ஆதிக்கத்த தக்கவைத்துக் கொள்ள, அரசு பதவி அதிகார வெறியில் செயல்படுபவர்கள் தேச நலவிரும்பிகளா ? காந்தி சொன்ன போது கலைக்காவிட்டாலும் காங்கிரஸ் முதல்முறை ஆட்சியை இழந்த போதே மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டது என கருதி கட்சியை கலைத்திருக்க வேண்டும். செய்யவில்லை. இழுத்துப் பிடித்துக் கொண்டு கூட்டணி ஆட்சியில் காலம் ஓட்டிக் கொண்டு, யார் இந்தியன் யார் இந்திய தேச துரோகி என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் அருகதையே இல்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்