எல்லாஞ்சரிதான் தனக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்படப் போகிறது என்று முன்னமே அறியாமல் இருந்தது ஏன் ? இதுக்கு மட்டும் போலிஸ் வேண்டுமா ? ஒரு பரிகார பூஜையில், அல்லது சூனியம் வைத்து கையெழுத்து வாங்கியவனை வெளங்காமல் செய்ய முடியாதா ?
போங்கைய்யா நீங்களும் உங்க சோசிய பித்தலாட்டமும் !
என்னவா ? கிழே படியுங்கள்.
***************
ஜெ. ஜோதிடரை மிரட்டினாரா சசி உறவினர்?
வியாழக்கிழமை, பிப்ரவரி 14, 2008
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை, சசிகலாவின் உறவினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் (வயது 43). இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரனிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், நான் ஜோதிடராக இருக்கிறேன். கடந்த 8ம் தேதி சொந்த ஊரான ஈரோடு சென்றிருந்தேன். கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு எனக்கு ஏற்கனவே அறிமுகமான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் ராவணன் என்பவர் அங்கு வந்தார்.
சசிகலா என்னை பார்க்க விரும்புவதாகவும், உடனே கோவைக்கு அழைத்து வரும்படி சொன்னதாகவும் கூறினார். அவருடன் காரில் ஏறி சென்றேன். ஆனால் சசிகலா அங்கு இல்லை.
பின்னர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். நான் எனது சொத்து விவரத்தை கூறினேன். உடனே எனது சொத்தை தனது பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று கூறினார்.
நான் மறுத்தேன். இதையடுத்து என்னை ஆபாசமாக திட்டினார். எழுதி தராவிட்டால் என்னையும் மனைவி, குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் என்னை கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தார்.
ஒரு ஓட்டலில் தங்க வைத்தார். அங்கிருந்து ஒரு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார். என்னை அடித்து துன்புறுத்தி 10 பத்திர தாள்களிலும், 10 பச்சை காகிதங்களிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார். நான் அவர் கூறியபடி 10ம் தேதியை குறிப்பிட்டு கையெழுத்து போட்டேன்.
என்னை மிரட்டி, அடித்து உதைத்து வெற்று பத்திரத்திலும், தாளிலும் கையெழுத்து வாங்கிய சசிகலாவின் உறவினர் ராவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வெற்றிவேல்.
இந்தப் புகார் குறித்து வெற்றிவேல் கூறுகையில், பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நான்தான் ஆஸ்தான ஜோதிடராக இருந்தேன். ஜெயலலிதா 2001ல் முதல்வர் ஆவார் என்று கணித்துக் கூறியிருந்தேன். அதன்படி அவர் முதல்வர் ஆனார்.
பல்வேறு வழக்குகளிலிருந்தும் விடுதலை ஆனார். இடையில் என் மீது பொறாமை கொண்ட சிலர் செய்த சூழ்ச்சியால் என்னை ஒதுக்கி விட்டார் என்றார் வெற்றிவேல்.
தட்ஸ் தமிழுக்கு ஒரு 'ஓ'
பின்பற்றுபவர்கள்
செய்திவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
15 பிப்ரவரி, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்