இந்திய சமயங்களில் புலால் மறுப்பு போற்றப்படுவதற்கு அனைத்துப் பிரிவுகளும் அதனை ஏற்றுக் கொண்டதே காரணம். சிவனடியார்கள் உணவு என்பதாக மரக்கறி உணவுகள் ஆறாம் நூற்றாண்டுகளில் சொல்(வது) வழக்காகி, சிவ உணவாகி, சைவ உணவு என்பதாக மருவி. புலால் மறுப்பு என்பது சைவ உணவு என்று பெயர் பெற்றது. மற்றபடி சைவ உணவிற்கும் சைவ சமயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை. சமணர்கள் தாவிர உணவு வகைகளிலும் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை விலக்கிக் கொண்டனர், இவை ஜைன உணவு எனப்படும். வைணவர்கள் சைவ சமயத்தை மறுத்து உருவாகியவர்கள் என்றாலும் சைவ உணவின் பெயரை அப்படியேத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள். வைணவ உணவு என்று சொல்வதில்லை. சைவம் என்பது சமயமாக அறியப்படுவதைக் காட்டிலும் அது ஒரு உணவு வகை என்ற புரிதலை பொதுமக்கள் வைத்திருக்கட்டுமே என்று விட்டுவைத்தார்களோ ! :). ஆறாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் சனாதனத்தில் இருந்து பிரிந்த சமைய(ல்) வகையல் இன்றைய காலகட்டத்தில் 'இந்து' மதம் என்ற பெயரில் ஐக்கியம் ஆனதால், இன்றைய தேதிக்கு சைவம் என்பது சமயமல்ல அது புலால் மறுத்தல் அல்லது தாவிர வகை உணவின் பெயர் மட்டுமே.
முட்டை சைவமா ?
உண்ணத்தக்க தாவிரவகைகளை அல்லது அவற்றின் விதை உணவாக்கிக் கொள்வது தான் சைவ உணவு. அந்த வகையில் பார்த்தால் முட்டை என்பது விலங்குகளின் மறு உற்பத்திக்கான விதை தான். முட்டையில் கரு இருந்தாலும் அவற்றில் நரம்பு மண்டலங்களோ, வலி உணரக் கூடிய மூளைப் பகுதியோ இல்லை. ஒரு முட்டை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எதிர்ப்புக் காட்ட அவற்றில் வளர்ந்த நிலையிலான, அசையக் கூடிய உயிர்த்தன்மை இல்லை, அடைகாக்காத முட்டை என்பது முளைக்கக் காத்திருக்கும் விதை போன்றதே. அவற்றை உணவாகக் கொள்வது அசைவ உணவு என்னும் பகுப்பில் வராது என்றே நினைக்கிறேன். மதவாதிகள் கருத்தடைகளையும், தற்காலிக கருத்தடைகளை ஏற்றுக் கொள்ளும் போது வளராத கரு உடைய முட்டையை சைவம் என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த பவுத்த சைவர்கள் பிற விலங்கின உணவுகளைத் தவிர்த்தாலும் முட்டையை உணவாக்கிக் கொள்கிறார்கள்

இருப்பினும் சைவ உணவு என்பது வெறும் தாவிர உணவு தொடர்புடையது மட்டுமின்றி மன நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால் வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணர்வு சுரப்பிகளை மிகுதியாகத் தூண்டக் கூடிய உணவுகளையும் சேர்த்தே தவிர்த்தனர் ஜைனர்கள். உணவு உணர்வுகளை தூண்டுமா ? என்ன கோவியாரே உளறுகிறீர்களா ? வெறும் பார்லி தண்ணீர் தான் பியர், பியர் பாட்டலில் சைவ முத்திரை கூட குத்தப்பட்டிருக்கும் அதை அளவுக்கு மிகுதியாக குடித்துவிட்டால் உணர்வுத் தூண்டலில் ஆடும் ஆட்டம் வெளிப்படையானது தானே. வெங்காயம், பூண்டு உணவு வகைகளைப் போன்றே முட்டைக்கும் சுரப்பிகளைத் தூண்டும் ஆற்றல் உண்டு. பெற்றோர் பழக்க வழக்கம் என்னும் வெறும் கொள்கைகாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு முட்டை கூட சைவம் தான், உணவாக ஏற்கலாம் என்பது எனது பரிந்துரை. மற்றபடி சாத்வீகம், அமைதி இவற்றின் நலவிரும்பிகளுக்கு வெங்காயம், பூண்டு இவற்றுடன் முட்டை கூட அசைவமே.