பின்பற்றுபவர்கள்

திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஆகஸ்ட், 2008

திருக்குறளும் மெகா சீரியல்களும் !

திருக்குறளை பொதுமக்கள் வாழ்வியல் நெறியில் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, நெடுந்த்தொடர் இயக்குனர்கள் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். நடிகை ராதிகா தொடர்களில் இதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [311]


இதன் பொருள் படி, கதாநாயகி நல்ல நிலையில் உயர்ந்து பெரிய வியாபார ஒப்பந்தம் ஒன்றில் கோடிக்கணக்கில் பணம் வரும் நேரத்தில், அந்த ஒப்பந்தத்தினால் தனது கணவரின் சின்னவீட்டின் பெரிய மகனுக்கு பெரிய நட்டம் என்றால், யாருக்கும் சொல்லாமல் நாயகி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பகவான் மேல் பாரத்தைப் போட்டு திருப்பதி படிமேல் 2 வார காட்சி எடுப்பதற்காக ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டி இருப்பார்.

'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [312]


இந்த குறள் படி, தன் கணவரின் சின்னவீட்டு பெரிய மகன் ஆயிரம் பேருக்கு முன்னால், கதாநாயகியைப் பார்த்து 'நீ தாண்டி எங்கப்பாவுக்கு வப்பாட்டி' என்று திட்டிவிடுகிறான், தியாக சொரூபமான கதாநாயகி அதைக் அவமானமாகக் கருதாமல் ... கேட்டு சிரித்துக் கொண்டே, 'கண்ணா இன்னிக்கு உனக்கு பிறந்த நாள், காபாலிஸ்வரர் கோவிலுக்கு உனக்காக அர்ச்சனைப் பண்ணப் போகிறேன் வழியவிடு' என்று கூறியபடி ஓரத்தில் துளிர்க்கும் கண்ணீர் சிதறுவதற்குள் அந்த இடத்தைவிட்டுச் செல்கிறார்.

'செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.' [313]


கதாநாயகி ஒரு கட்டத்தில் மிகவும் பொருக்கமாட்டாமல் கணவரின் சின்னவீட்டு பெரிய மகனை கைநீட்டி அடிச்சிடுறாங்க, அடிச்சப் பிறகு 'அவனை அடிச்சிட்டோமே' ன்னு மனம் வருந்தி வருந்தி மூன்று நாள் தூக்கமே இல்லாமல் கண் சிவக்கிறாங்க

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.' [314]


இந்த குறள் மிகவும் புகழ்வாய்ந்தது, இந்த குறளை பயன்படுத்தாத மெகாதொடரே இல்லை, மெட்டி ஒலியின் ஒவ்வொரு நாள் தொடருக்கும் இந்த குறள் தான் கருவாக அமைந்தது. பெரியவர் சிதம்பரம் கேரக்டரே இந்த குறளை வைத்துதான் உருவாக்கப்ப்பட்டது, மருமகன் கேரக்டர் அவமானப்படுத்தும் போதெல்லாம் மாப்ளே...மாப்ளே... என்று உருகுவார். ராதிகா சீரியல்களில் சின்னவீடு கேரக்டருக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவையை விளம்பர நிறுவனம் பரிசு குலுக்களில் அனுப்பியதாக யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைப்பார்

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.' [315]


நேற்று தன்னை பலர் முன் அவமானப்படுத்திய சின்னவீட்டின் பெரிய மகன் குடிச்சிட்டு கீழே ரத்தம் சொட்ட சொட்ட விழுந்து கிடப்பதைப் பார்த்து தாய்மைகே உள்ள பாசத்தால் காரில் தூக்கிக் கொண்டுவந்து போட்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவன் கண் விழிக்கும் வரை அன்னம் ஆகாரமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்து சரியாக கண்விழிக்கும் நிமிசத்துக்கு முந்தைய நிமிசம் சத்தமில்லாமல் வெளியே சென்றிருப்பார்.

'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.' [317]


பொது எதிரி ஒருவன் தனக்கு பார்டி நேரத்தில் கோக்கில் விசம் கொடுத்துக் கொல்ல முயன்றதைப் போலவே ... இன்னிக்கு அவனே தன் சின்னவீட்டு நடுப்பையனுக்கு பொட்டிக் கடையில் கோக் வாங்கிக் கொடுப்பதைப் பார்க்கிறாங்க, ஒரு வேளை இதிலும் விஷம் இருக்கும்...என்று பதறி...காரை யூ டேர்ன் அடித்து அங்கு நிறுத்துவிட்டு, நடுப்பையன் கோக்கை குடிக்கப் கவிழ்கும் போது... கோக் பாட்டிலை லாவகமாக பிடிங்கி நடுரோட்டில் உடைக்கிறாங்க...

'பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.' [319]


நாளு பேருக்கு முன்னால் கணவரை சத்தம் போட்டு அவமானபடுத்திடுறாங்க நாயகி, அப்பறம் அதை நினைச்சு மனம் புழுங்கி நாலு செவத்துக்குள்ளே அழுமால் மிடுக்காக சென்ற போது நிலைப்படி முன்நெற்றியில் நச்சின்னு இடித்து...ஸ்டிக்கர் பொட்டு நிலைப் படியிலேயே ஒட்டிக் கொள்கிறது.

'நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.' [320]


மேலே சொன்னது போல் அடுத்த முறை கணவரால் அவமானப்படும் போது, எதிர்த்து சத்தமிடலாம் என்று தொண்டை வரை வந்த குரலை.. நிலைப்படி ஞாபகம் வர அப்படியே நிறுத்திவிட்டு... நெற்றியை தடவிக் கொண்டே .... சத்தம் போடாமல் ... மெதுவாக சிரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார் நாயகி.

Ref: மூலஉரை வீஎஸ்கே ஐயாவின் மன்னார் குறள் விளக்கம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்