பின்பற்றுபவர்கள்

பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 மார்ச், 2012

தி.க தோழர்கள் படித்த திருவாசகம் !

நேற்று சிங்கை இலக்கிய வட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெரியவர் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ சுந்தரம் அவர்களின் 'கம்பனுக் கை கொடுத்தவர்கள்' என்ற தலைப்பில் நிகழ்த்திய 2 மணி நேர உரையைக் கேட்க நேர்ந்தது. சுமார் இரண்டு மணி நேரம் அருவியாக மேடைப் பேச்சு இலக்கியம் இடையே நகைச்சுவை, கிளைக் கதைகள் என கம்பராமாயண சிறப்பைப் பற்றியும் அதைப் புகழ்ந்தவர்கள் மற்றும் அவர்களது சிறப்புகளையும் பேசினார். கேட்கக் கேட்க அது போன்று அடுத்தத் தலைமுறைகளுக்கு பேச்சாளர்கள் கிடைப்பார்களா என்ற எண்ணமே எனக்கு தனியாக ஓடியது, ஆம் ! பொருளியல் மற்றும் வசதியான வாழ்க்கைத் தேடலின் ஓட்டங்களின் இடையே இளைப்பாறும் பொழுது போக்குகளாக மேற்கத்திய இசையும், திரைபடங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன, பாரம்பரிய இசை மற்றும் தமிழர் இலக்கியமெல்லாம் வெறும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டு பாதுகாப்பாக திறந்து பார்க்கப்படாமலேயே முடங்கிக் கிடக்கின்றன, விரல்விட்டு எண்ணும் அளவுக்கே அதுவும் ஐம்பது அகவையைக் கடந்தவர்களாக இன்றைய இலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை உள்ளது. அவர்களும் இன்னும் 20 - 30 ஆண்டுகளில் மறைந்து போக ஒருவேளை தமிழன் தன் இலக்கிய பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ளும் போது டைனசர்களின் படிவங்களைத் தேடிக் காட்சிக்கு வைத்து டைனசர் இப்படி இருந்தது, இவ்வளவு வலிவு மிக்கது என்று காட்டுவது போல் தமிழ் இலக்கியம் மற்றும் அதன் சுவைகளைத் தேட வேண்டி இருக்கும்.

******

பெரியவர் சொ.சொ.மீ.சுந்தரம் கம்பனைப் போற்றியவர்கள் என்று பேச்சுகளின்டையே கம்பனைப் போற்றிய திரு வி கலியாண சுந்தரம் என்கிற திருவிக பற்றியும் குறிப்பிட்டார். ஒரு முறை திருவிக திருச்சிக்கு கம்பராமயண சொற்பொழிவிற்காக இரயிலில் வந்தார், அவரை வரவேற்க ஏராளமான அன்பர்கள் (பக்தர்கள்) மற்றும் ஏற்பாட்டாளர்கள் இரயில் நிலையத்தில் குழுமி இருந்தனர், வேறொரு நிகழ்ச்சிகாக பெரியாரும் அதே இரயில் நிலையத்தில் இறங்கி திருவிகவும் அன்று திருச்சி வருவாத அறிந்த பின்னர் திருவிகவைப் பார்த்துவிட்டுச் செல்ல நினைத்து காத்திருந்தாராம்.

திருவிக வந்து இறங்கிய பின்னர் அவரை வரவேற்க வந்தவர்கள் அழைக்க, பெரியாரைக் கண்ட திருவிக தாம் தற்போது பெரியாருடன் செல்ல விரும்புவதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பாட்டாளர்களில் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவதாகவும் கூறி பெரியாருடன் சென்றுவிட்டாரம், ஏற்பாட்டாளர்களுக்கு திருவிக 'நாத்திகன் இராமசாமி நாயகனுடன்' சென்றுவிட்டாரே என்ற வருதத்துடன், திருவிகவை பெரியாருடன் செல்லவேண்டாம் என்று வற்புறுத்தவும் முடியாமல் சென்றுவிட்டனராம்.

அதன் பிறகு திருவிக மற்றும் பெரியார் திருச்சி முக்கொம்பு காவேரிக் கரைக்குச் சென்று பேசிக் கொண்டு இருந்துவிட்டு திருவிக நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் தீர்த்த குளியல் (ஸ்னானம்) முடித்துவிட்டு ஆற்றில் இறங்கிக் குளிக்க, குளித்து முடித்து வந்ததும் திருவிகவின் பையில் இருந்து திருநீரை எடுத்து பூசிக் கொள்ளக் கொடுத்தாராம் பெரியார். அதன் பிறகு அன்றைக்கு தாம் பேசம் போகும் கம்பராமயணப் பகுதிகளைப் பற்றி பெரியாரிடம் கூறிக் கொண்டு வந்தவர் இடையே திருவாசகம் பற்றிக் குறிப்பிட்டு நெகிழ்ந்தவராக திருவிக சொன்னாராம், தாம் இறந்தால் இறுதிச் சடங்கின் போது திருவாசகம் படிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். பெரியாரும் அதை அமைதியாக கேட்டுக் கொண்டுவந்தாரம், பிறகு திருவிக தன் சொற்பொழிவுக்குப் போக, பெரியாரும் அவரது நிகழ்சிக்கு செல்ல விடை பெற்றுக் கொண்டார்கள்.

பாரதி தாசன், அண்ணா போன்று திருவிகவும் பெரியாருக்கு முன்பே மறைந்துவிட்டார், பெரியாருக்கு தம் அருமை நண்பர் திருவிக சொன்னது நினைவுக்கு வந்தது, திருவிகவின் இறுதிச் சடங்கிற்குச் சென்றவர். தம் தொண்டர்களை அழைத்து திருவிகவின் இறுதிச் சடங்கு ஆசையான திருவாசகத்தை திருவிகவின் உடல் அருகே நின்று படிக்க சொல்லி பணித்தாரம். திருவிகவின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

*****

பெரியார் தூற்றிகள் இவற்றை அறிந்திருந்தாலும் இது பற்றி எழுதினால் பெரியாரை புகழ்ந்தது போல் ஆகிவிடும் என்று மறைத்துவிடுவர். பெரியார் பிழைப்புவாதிகளான தற்கால திக குழுவினர் இது பற்றி எழுதினால் 'பெரியார் திருவாசகம் படிக்கச் சொன்னார் என்பது நாத்திகத்திற்கு இழுக்கு' என்று அடக்கிக் கொள்வர். பெரியாரை வெறும் பார்பன எதிர்பாளராகவும் நாத்திகராகவும் காட்டுவதற்கான முயற்சியில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள், மனித நேயம் தெரிந்த மாமனிதன், மனித இழிவுகளை அகற்ற பெரியாருக்கு நூற்றாண்டு வாழ்க்கைத் தேவை என்பதால் தான் இயற்கையும் பெரியரை 90 அகவைக்கும் மேல் விட்டு வைத்திருந்தது, இன்னும் 200 நூற்றாண்டுகளுக்கு சாதி மதப் பேய்கள் ஒழியும் வரை பெரியார் எம்போன்றவர்களால் எடுத்துச் சொல்லப்படுவார்.

இணைப்பு:

14 ஜனவரி, 2011

பெரியார் ஏன் பெரியார் ?

வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான சமூகத் தாழ்வு குறித்த ஒற்றுமைகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட வன்கொடுமை, சமூகத் தாழ்வு, சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் செட்டியார், பிள்ளைமார் உள்ளிட்ட மேட்டுக்குடிகளின் பொறுப்பிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு, நாடர்கள், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் இருந்தது. இன்றும் கூட அந்நிலைமை இருக்கிறது. பள்ளிகளிலும் அதே நிலைமை இருந்தது. நாய்களும், பன்றிகளும், கழுதைகளும் நடமாடும் தெருக்களில் மனிதர்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதி மறுக்கப் பட்டிருந்தது பெரும்பாலான பார்பனர் அக்ரஹாரம் உள்ளிட்ட மேட்டுக்குடி பண்ணையார்கள் வசிக்கும் தெருக்களில். இந்த கொடுமையான அடக்குமுறைகளை - அநீதிகளை களை வதற்காக பல பெரியார்கள் தோன்றினார்கள். அந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.

தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப்போராட தந்தைப் பெரியார் பிற்பட்ட வகுப்பில் இருந்து தோன்றியதாக திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு தந்தைப் பெரியார் பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பார்பனர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் - தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய மேட்டுக்குடி சமுதாயத்தினரை எதிர்த்தாரா ?

பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே தந்தை பெரியார் எடுத்த முடிவுகள் எது? என்பதை ஆராயும்போது அவருடைய செயல், எண்ணம், தொண்டு எல்லாமே தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என இருவருக்கும் தான் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே பலதடவை சொல்லியும் இருக்கிறார்.

தந்தை பெரியார் கூறுகிறார் :-
‘‘என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.

பார்ப்பனரல்லாதவர்களோ - முக்கால் வாசிப்பேர் - பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்களாகவும், பார்ப்பானுக்குத் தாசிமகனாய் இருந்தாலும் சரி, நாம் பறையனுக்கு மேலே இருந்தால் போதும் - என்று முட்டாள்தனமாய்க் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும், நம்மால் கூடியதைச் செய்துதான் வருகின்றோம். எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும், தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கந்தான் என்று நான் சொல்ல வரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், மதத்தைவிட்டு விடுங்கள்; அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால், தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம். ஆகவே நான் சொல்லுவதை பொறுமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து, உங்களுக்குச் சரி என்று தோன்றியபடி நடவுங்கள். - (குடியரசு 25.4.1926)

பிற்பட்ட வகுப்பினரான சூத்திரன் என்று சொல்லப்படும் உனக்கும் கீழே தாழ்த்தப்பட்ட ஒருவன் இருப்பதால் மகிழ்ச்சியடையும் நீயும் பார்பனர்களால் தாழ்த்தப்பட்டவன் தான், உனக்கும் கிழே உள்ளவனை முன்னேற்றாமல் சமூக சமத்துவம் ஏற்படாது, , இந்து மதத்தினால் தொடரும் தீண்டாமையை ஒழிக்க பிற்பட்டவர்களும் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்பதாக பிற்பட்டவர்களுக்கு சுட்டிகாட்டிச் சொல்லுகிறார். தாழ்த்தப்பட்ட தலித்துகளே இந்துமதத்தில் இல்லை என்றால் சூத்திரனுக்குத்தான் அந்த இடத்தில் வைக்கப்படுவர் எனவே சூத்திரனாகச் சொல்லப்படும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களை சமமாக நடத்தாவிட்டால் பிற்பட்டவர்களுக்கும் ஆபத்தானது என்பதே தந்தை பெரியார் சொல்வது

************

அதையே வேறுரொரு கூட்டத்தில்,


தந்தை பெரியார் கூறுகிறார்,

“தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு - அதாவது கடவுள் முகத்திலிருந்து பிறந்ததாகவும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் களுக்கு நாங்கள் தீண்டாதவர்களாகவே இருக்கின்றோம். கோயில் பிரவே ஷம் என்பதிலும் உங்களைவிட சற்று முன்னால் போக மாத்திரம் அனுமதிக் கப்படுகிறோமே தவிர மற்றபடி பார்ப்பனர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் தான் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீங்கள் கோயிலுக்குள் வந்தால் எப்படிக் கோயிலும் சாமியும் தீட்டுப்பட்டு விடுகின்றதோ, உங்கள் எதிரில் சாப்பிட்டால் உங்களுடன் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் சாப்பிட்டால் எப்படித் தோஷமும் பாவமுமான காரியமாகி விடுகின்றதோ அப்படியே எங்கள் வீட்டிலே எங்கள் முன்னாலே எங்கள் பக்கத்திலே சாப்பிட்டாலும் தோஷம், மோசம் பாவமென்று தான் சொல்லப்படுகின்றது”

நமது சமூகத்திற்கு பெயர் சொல்லி அழைப்பதிலும் உங்களைவிட மிக இழிவாகவேதான் அழைக்கப்படுகின்றோம். உங்களைப் பறையர் என்றும், பள்ளர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் பறையர், பள்ளர் என்கின்ற வார்த்தை தொழிலையும், வசிப்பு இடத்தையும் பொறுத்து ஏற்படுத்தப்பட்டது. பறையனும் பள்ளனும் அந்த பெயரால் சுதந்திரமான வராகவும் இழிவுபடுத்தத்தகாதவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களை அழைக்கும் பெயராகிய சூத்திரன் என்று சொல்லப்படும் பேரானது பிறவி யிலேயே இழிவை உண்டாக்கத்தக்கதும், ஒருவனுக்குப் பிறவி அடிமை யாகவும், பிறவி தாசி மகனாகவும் மற்றும் மிக்க இழிவான கருத்துக் கொண்டதாகவுமே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தங்களும் சகிக்க முடியாத இழிவை கொடுக்கக்கூடியதாகவே இருக்கின்றது. பறையன் என்றால் சொந்தத்தாய் தந்தைக்கே பிறந்தவன் என்கின்ற கருத்து உண்டு. ஆனால் சூத்திரன் என்றால் - தாசிமகன், வேசிமகன், வைப்பாட்டி மகன், பிறவி அடிமை, விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்பது போன்ற பல இழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கின்றத - (குடியரசு 16-6-1929)


அதாவது பிற்பட்ட சூத்திரர் நிலையும் தாழ்த்தப்பட்டவர் நிலையும் ஏறக்குறைய ஒன்று தான், தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் போராட்டங்கள் அனைத்திலும் பிற்பட்டவர்களை சூத்திரன் என்று சொல்லும் இழிவு நிலையை அகற்றுவதும் அடங்கி இருக்கிறது.

**********
dalit12
அதே தெளிவில் வேறொரு கூட்டத்தில், தந்தைப் பெரியார் அதையே,

"பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகிறீர்-களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள். மற்றும் பேசப் போனால் பறையன், சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்சாதி என்பதற்கு இன்னது ஆதாரமென்று சொல்-லுவதற்கு ஒன்றுமே இல்லை. கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில்லை. ஆதலால் பறைபட்ட-மாவது சீக்கிரத்தில் மறைந்துவிடக் கூடும். உங்கள் சூத்திரப்பட்டத்-திற்குக் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு.... ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சி-களும், ஆதிதிராவிடர் அல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்-லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள் என்று பெரியார் குறிப்-பிட்டுள்ளார். (குடிஅரசு 11.10.1931)

தாழ்தப்பட்டவர்களுக்கு பிற்பட்டவர்கள் ஏன் போராடவேண்டும் என்று சொன்ன பெரியார், தாம் உருவாக்கிய திராவிட இயக்கம் என்றால் என்ன என்பதை மிக அழகாக,

‘திராவிடர் கழகம்’என்பது, 4-வது வருணத்தாராக ஆக்கப்பட்டு, சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரப் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் ஒரு 4 கோடி மக்கள் கொண்ட சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்லவேண்டும்.


திராவிட இயக்கம் என்பது சூத்திரனாக இழிவுபடுத்தப்பட்ட பிற்பட்டவர்களுக்கும், சமூதாயத்தால் இழிவு படுத்தப்பட்ட மிகவும் பிற்பட்டவர்களுக்கும், உடல் உழைப்பாளிகளாக ஒதுக்கிவைப்பட்டு தீண்டதகாதவர்கள் ஆக்காபட்ட மொத்தம் 4 கோடி பேர்களின் சமூக விடுதலைக்கானது. பெரியார் காலத்தில் பிற்பட்டவர், மிகவும் பிற்பட்டவர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அரசு பிரிவுகள் இல்லை, பிற்பட்டவர்களையும், மிகவும் பிற்பட்டவர்களை தாழ்த்தப்பட்ட சூத்திரர்களும், பஞ்சமர் (ஐந்தாம் பிரிவினர்) அல்லது சண்டாளர்கள் என்று பார்பனர்களால் அழைக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் இருந்தது.

*****

இவ்வாறு தான் தந்தை பெரியார் சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் பஞ்சமர் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் தான் பாடுபடுகிறேன் என்று தெள்ளத்தெளிவாக கூறியதால் தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள் முதல், திருமா உள்ளிட்ட பல தலித் தலைவர்களும், எழுத்தாளர்களும் கூட தந்தை பெரியார் தலித்துகளுக்காக பாடுபட்டார் என்பதை எழுதி மெய்பித்து வருகின்றனர்.

பார்பனர்கள் பிற்பட்டோர்களுடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டடோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோரை தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அதை பிற்பட்ட சமூகத்துக்கு புரிய வைத்து ஒட்டுமொத்த தீண்டாமைக் கொடுமை விலங்குகளை தகற்தெறிய பாடுபட்டார். அவருடைய நோக்கமே ஒட்டுமொத்த தீண்டாமை குறித்தே இருந்தது. தானும் தாழ்த்தப்பட்டவன் தான் என்று பிற்பட்டவர்களுக்கு புரியவைக்காமல் தலித்துகளுக்கு மட்டுமே பாடுபட்டாலே சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை விலங்கை அறுத்தெறிய முடியும் என்கிற நம்பிக்கைகள் அவருக்குக் கிடையாது. தனக்கும் கீழானவன் என்பதாக பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த கொடுமைகளை தந்தை பெரியார் ஏற்றதே இல்லை. தீண்டாமையை கடைபிடிக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் அவர் ஆரம்பிக்கவில்லை மாறாக இந்த நிலை தொடர்வது கூடாது 'பார்பனர் உன்னையும் சூத்திரனாகத்தான் வைத்திருக்கிறார்கள்' என்று ஒட்டுமொத்தமாக அவர்களைவைத்தே சுட்டிக்காடி திருத்தினார்.

தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும் ? பெரியார் சொல்லுகிறார்

"இந்த ஜில்லா ஆதிதிராவிடர்கள் மகாநாட்டுக்கு நான் இதற்கு முன் நான்கைந்து தடவை அழைக்கப்பட்டிருந்தாலும், அப்போது பல காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய் விட்டதால், இந்தத் தடவை கட்டாயமாய் எப்படியாவது வரவேண்டுமென்று கருதியே வந்து சேர்ந்தேன். வரவேற்பு கழகத் தலைவர் என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறினார். அவ்வளவு புகழ்ச்சி எனக்கு வெட்கத்தை கொடுத்ததேயல்லாமல் மற்றபடி அதில் உண்மை இல்லை என்று சொல்லுவேன்,

உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால் இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்க ளுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லா விட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்கு போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால். உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்."

****

பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் இன்றும் தீண்டாமைக் கொடுமைகள் தொடரும் போது, அன்றைக்கு எத்தனை கிராமங்கள் இதே போன்று இருந்திருக்கும் ? வாழும் இடத்தில் அடையாளப்படுத்தப்பட்டால் அடையாளம் காண முடியாத இடத்துக்கு இடம் பெயர்வதன் மூலம் இழிவுகளை அகற்றிக் கொள்ளமுடியும், மதம் மாறுவதால் இழிவை அகற்றிக் கொள்ளமுடியும் என்று பெரியா வலியுறுத்தினார். ஆம் இன்றைக்கு வெளிநாடுகளில் வாழும் தலித்துகள் எவருக்குமே வன்கொடுமைகள் தொடர்வது இல்லை.

முதாய்பாக, தந்தை பெரியார்,

‘‘ஆதித்திராவிட சமுகத்தாருக்கு, மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கேட்க எனக்கு ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்தாரி என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், உங்களைக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின்பேரில், தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வபுண்ணியம்-தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில், ஒரு உரிமை பாராட்டி அம்மாதிரி செய்கிறார்களேயொழிய வேறில்லை....

மத சம்பிரதாயப்படி நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களு டைய பூர்வஜன்ம கர்மத்தின் விதி யென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர் களும் அப்படியேதான் மத ஆதாரத் தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள். இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென் மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனா யிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடனாய் இருப்பதற்கும், அயோக்கி யனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனா யிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழை யாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்)தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மாதிரி மக்களை உடைய தேசத்தில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்யவேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடை பெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்


************

பெரியார் ஏன் பெரியார் ? வெறுமனே 'உபதேசம், பிரசங்கம்' செய்யாமல் தாழ்த்தப்பட்டவன், சூத்திரன் எல்லாம் ஒண்ணு தான், இந்துமதத்தில் இருக்கும் இந்த பிரிவு கொடுமைகளை அழிக்காமல் தமிழனின் இழிநிலைமாறாது என்று மேடை தோறும் முழங்கினார். பெரியாரின் விழிப்புணர்வால் திராவிட இயக்கங்கள் மலர்ந்தது, பின்னர் தலித் இயங்கள் வளர்ந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் நடுத்தர மற்றும் பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பங்களிக்க வாய்ப்பு அமைந்தது. மகாத்மா காந்தியை அவர் வாழும் காலத்திலேயே மகாத்மா என்று அழைக்கப்பட்டது போல் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெரியார் என்று போற்றப்பட்டார் பெரியார். பெரியார் தம் பிற்பட்ட நாயக்கர் சமூகத்திற்காக மட்டுமே போராடி இருந்தால் ஆட்சி அதிகார பீடத்தில் அவர்கள் மட்டும் அல்லவா அமர்ந்திருப்பார்கள் ?

படம்: நன்றி தமிழ்ஹிந்து.

பின்குறிப்பு : இந்தக்கட்டுரை தமிழ் ஹிந்துவில் பெரியார் பேச்சின் குறிப்பிட்ட ('Context') பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டுபெரியார் மீது அவதூறாக எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது. முழுவதையும் மறுத்து எழுத போதிய ஆதரங்கள் உண்டு, இருந்தும் வளவள என்று ஏழுதும் அயற்சியைத் தவிர்க, அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் அவதூற்றை உங்கள் எண்ணத்திற்கே விட்டு வைத்திருக்கிறேன்

15 செப்டம்பர், 2010

வேதாளம் சொல்லாத ஆரிய மாயை !


நவீன இந்து மதம் என்பது பண்டைய ஆரிய மதத்தின் இன்றைய பெயர் வடிவம். வடமொழி இந்தி வடிவமாக மறைந்திருப்பதைப் போலவே ஆரிய வைதீகம் மதம் இந்து மதம் என்ற பெயரில் மறைந்திருக்கிறது என்பதை அதன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் வழியாக நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்திக்கும் இந்து மதத்திற்கும் அதனால் ஏற்படும் சீர்கேட்டிற்கும் சப்பைக் கட்டுபவர்கள் பெரும்பாலும் பார்பனர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. பிற மக்கள் இனங்களை ஒப்பிடும் போது சிறிய அளவிலான மக்கள் தொகை என்றாலும் குயுக்தி அல்லது பஞ்ச தந்திரம் என்பதை அறிவுத்திறனாக கூறிக் கொண்டு ஆளுமைகளைத் தொடர்ந்துவருவதால் அண்ணா யூதர்களையும் பார்பனர்களையும் ஒன்றாகவே பார்த்தார். இன்றும் கூட யூதர்கள் மீது பார்பனர்கள் பலர் பெருமை கொள்வதை பார்க்கலாம். இன்னும் சில பார்பனர்கள் தாங்கள் ஆரியர் எனப்படும் ஹிட்லர் வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதாகவும் பறை சாற்றிக் கொள்கின்றனர். ஏனென்றால் யூதர் மற்றும் செருமானியர்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதால் இந்த இரு இனங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்றாலும் பார்பனர்களைப் பொருத்த அளவில் இருவரும் பார்பனர்களுக்கு மாமா மச்சான்கள் தான்.

தமிழ் நாட்டைப் பொருத்த அளவில் பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரைச் சொல்லாமலோ 'திராவிடம்' என்கிற பெயரைச் சொல்லாமலோ எந்த ஒரு கட்சியும் இன்னும் ஓர் நூற்றாண்டுக்குக் கூட தனிப் பெரும்பான்மை பெற முடியாத நிலைதான். இந்த இருவர் மீதும் பார்பனர்கள் காண்டு கொண்டிருப்பதற்கு இதற்குமேல் தனிப் பெரும் காரணம் எதுவும் இருக்க முடியாது. பார்பன நலம் விரும்பும் கட்சி எனப்படும் காங்கிரசு கட்சியை தமிழக ஆட்சியில் இருந்து அகற்றியதால், பார்பன எதிர்ப்பில் (திராவிட) ஆட்சி அமைத்ததால் பார்பனர்களின் வெறுப்பு அண்ணா மற்றும் பெரியார் மீது தொடர்வதில் வியப்பே இல்லை. மத அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை பிரிக்க இந்து என்ற சொல் மிகவும் வசதியாக இருப்பதால் மதவாத அரசியல் நடத்த முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்று பாஜக போன்ற மதவாதக் கட்சிகள் நாட்டின் உயரிய பதவியான பிரதமர் பதவி, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை கைப்பெற்றும் நிலைக்குச் சென்று, விழித்துக் கொண்டோர்களின் சகிப்புத்தன்மையால் மீண்டும் இந்தியாவில் காங்கிரசு ஆட்சி என்னும் பேரவலமும் நடந்தேறிவருகிறது என்றாலும் அறுதிப் பெரும்பான்மையை மக்கள் காங்கிரசு வசம் தந்துவிட வில்லை என்பதால் இந்தப் பேய்களில் எந்தப் பேயால் ஆபத்துக் குறைவு என்கிற முடிவாகத்தான் இந்திய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்தியாவில் இந்து மதம் சார்ந்த கட்சிகள் வளர்வதற்கு இந்துக்கள் மதவாதிகள் ஆனார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் இஸ்லாமியர்களின் மத ஈடுபாடு , ஊடகங்களின் இந்து சார்பு நிலைகள் அந்தக்கட்சிகளுக்கு வாய்ப்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. இந்தியா என்ற நாடு மத அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிந்தது என்னும் போது எஞ்சி இருப்போரின் மத உணர்வுகள் தாம் இந்து என்ற உணர்வை அவர்கள் பெறவதையும் பிரிந்தவர்கள் மறைமுகமாக அதை விதைத்துச் சென்றிருக்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. இவைதான் இந்தியாவில் மதம் சார்ந்த சக்திகள் தலை எடுப்பதற்கு காரணம். இதைத் தவிர்த்து இந்தியர்கள் மதங்களின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது, எல்லாம் சூழலால் ஏற்படும் (எதிர்) வினையே. பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் இந்தியா என்று சொல்லப்படுவதைப் போலவே பல்வேறு சமய நம்பிக்கைகளை இந்து மதம் என்று சொல்கிறோம் என்பது தவிர்த்து பார்பன இந்து சமய நம்பிக்கைகள் ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கை என்பது வெறும் பரப்பல் தான். உண்மையில் சொல்லப் போனால் பார்பன நான்கு வேதங்களில் காணப்படும் நம்பிக்கைகள் சடங்குகள் எல்லாம் என்றோ சிதைந்து போய்விட்டன. நிலம் சார்ந்த தெய்வங்களுக்கு பூணூல் அணிவித்து புராணம் எழுதி அவற்றை வேதகால தெய்வங்களாகக் காட்டி பார்பனர்கள் பிழைப்பு நடத்திவருகின்றனர். பார்பனர்களின் முழுமுதல் கடவுளான இந்திரன், சோமன் உள்ளிட்டோர் என்றைக்கோ முதன்மை வழிபாட்டில் இருந்து மறைந்துவிட்டார்கள். நிலம் சார்ந்த தெய்வங்கள், சிறு தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவற்றைத்தான் பார்பனர்களும் ஆராதனை செய்துவருகின்றனர்.

பெரியார், அண்ணா இராமனை பழிப்பதைவிட பல மடங்கு இந்திரன் புராணங்களில் பழிக்கப்பட்டு இருகின்றான், உடலெங்கும் பெண் குறி பெறக் கடவது என்பதாக சபிக்கப்பட்டு இருக்கிறான். இந்திரன் ஒரு காம வெறியன் என்பதாகவே புராணங்களில் வழியாக பழிக்கப்பட்டு இருக்கின்றான்.

மெட்ராஸ் மாகானம் என்ற பெயரை தமிழ் நாடு என்று மாற்றியதில் அண்ணாவின் பங்கையாராலும் மறக்க முடியாது. கருணாநிதி பேசுவதைவிட பல மடங்கு இலக்கிய சுவையுடன் பொருளுடன் பேசக் கூடியவர் அண்ணா. ஆட்சி அதிகாரம் என்றால் அடிப்படை கொள்கை சீரழிந்துவிடும் என்பதால் கட்சியாக மாறாமல் இருந்த பெரியார் கொள்கைகளை, ஆட்சி அதிகாரம் பெற்றால் மட்டுமே நடைமுறை படுத்த முடியும் என்று பெரியாரிடம் இருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டு வெற்றிபெற்றவர் அண்ணா. இன்றைக்கும் அண்ணாவின் பெரியாரின் கொள்கைகளின் தேவை என்பதற்கு காரணங்கள் வேண்டுமானால் இல்லாது போய் இருக்கலாம், இதன் காரணமாகவே திராவிடக் கட்சிகளும் தமக்குள் உடைந்து நீர்த்து போய் இருக்கலாம். ஆனால் இன்றைய நிலையை வைத்து அண்ணாதான் தமிழ் நாட்டைக் கெடுத்துவிட்டார் என்று சொல்வது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை இந்தியாவில் தலித்துகள் அனைவருமே சமநிலை பெற்ற பிறகு அம்பேத்கார் என்பவர் சாதிவெறியை தலித்துகளிடம் தூண்டினார் என்று எழுதினால் அது போன்ற அபத்தம் இருக்க முடியுமா ? அண்ணா பற்றி எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

தமிழ் ஹிந்து கட்டுரைக்கு வரிக்கு வரி மறுப்பு எழுத நான் திராவிடக் கட்சிகளின் தீவிர தொண்டனும் இல்லை. பார்பன ஆதிக்கத்தை ஒழித்தவர்கள், மூட நம்பிக்கைகளை சாடியவர்கள் என்பதால் அண்ணா மற்றும் பெரியார் மீது எனக்கு ஆழ்ந்த பற்றுதல்கள் உண்டு. பெரியாரைப் போல் முற்றிலும் இறைமறுப்புக் கொள்கை என்பதாக இல்லாமல் மூட நம்பிக்கைகளை மட்டுமே தாக்கியவர் அண்ணா என்பதை நான் அவரது சொற்பொழிவுகள் மற்றும் நூல்களின் வாயிலாக அறிந்து கொண்டேன். ஒண்றே குலமும் ஒருவனே தேவனும் என்கிற திருமந்திர வரியை அண்ணாவும் பரப்பினார்.

அண்ணாவை கிண்டல் செய்வது அவமானப் படுத்துவதாக கட்டுரை எழுதிய இணைய தளம் மாடு படம் ஒன்றைப் போட்டு அதன் பின்பக்கம் பணமூட்டைகள் கொட்டுவதாகப் போட்டு படம் இருக்கிறார்கள். அந்தப்படத்தைப் பார்த்தால் மாட்டுச் சாணத்தை திருநீராக்கி பசுமாடுகளின் பின்பக்கத்தை பணம் காய்க்கும் மரமாக்கியவர்கள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். பிறரைப் பற்றி சொல்வதெல்லாம் தன்னையும் சுட்டும் என்று அண்ணா சொன்னதை உணராதவர்கள் போலும் இவர்கள். இது தான் ஆரிய மாயை என்பதா ?

அண்ணா என்ன செய்தார் ? பார்பன தமிழ் இந்துக்கள் பார்பனர்களின் ஒருவரான ஜெயலலிதாவே நன்கு சொல்லி இருக்கிறார்.

கருணாநிதி போல் சொல்ல வேண்டுமென்றால் 'அண்ணா பல்கலைகழகம், அண்ணா சாலை, அண்ணா விமான நிலையம், அண்ணா பொது நூலகம், அண்ணா நகர் என தமிழக எங்கெங்கும் இருக்கும் அண்ணாவின் பெயரை ஒரு கேவலமான திரிப்பு கட்டுரைமூலம் கெடுத்துவிட முடியும், அகற்றிவிட முடியும் என்று நினைக்கும் சிறுமதியர்களின் செயலைக் கண்டு நாமெல்லாம் நகைக்கலாம்'

3 செப்டம்பர், 2010

பெரியார் பற்றாளர்களுக்கு அன்பு வேண்டுகோள் !

தமிழகத்தில் பெரும அளவு மக்களால் தந்தை பெரியார் என்று போற்றப்படும் பெரியார் சிலை குறித்த செய்தியில் ஈவேரா சிலை சேதம் என்று தலைப்பிட்டு தனது பார்பன, இந்துத்துவ அரிப்பை செய்தித்தலைப்பாக வெளி இட்டுள்ளது தினமலர். செய்தி இதழ்கள் தலைவர்களின் பெயரை போட்டு எழுதலாமா அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்ட பெயர்களை வைத்து அழைக்கலாம் என்று கேட்டால் தலைவர்களின் பெயரைப் போட்டு எழுதுவது தவறில்லை என்பது சரியான நிலைப்பாடு என்றாலும் மறைந்த பெண்ணிய எழுத்தாளர் அனுராதா இரமணனை கையைப் பிடித்து இழுத்தவர் என்று சொல்லப்படும் மற்றும் சங்கரராமன் கொலை வழக்கில் வாய்தா வாங்கும் காஞ்சி மட சாமியார் சுப்பிரமணியும் அவரது இளவலையும் பெயரிட்டு இந்த செய்தி இதழ்கள் எழுதுவதில்லை மாறாக 'பெரியவா, பாலப் பெரியவா' என்றே எழுதுகின்றன என்பதில் இருந்து இவர்களின் தமிழர் எதிர்ப்போக்கு மற்றும் இந்துத்துவ நிலைப்பாடு வெட்ட வெளிச்சம். இதே தினமலர் தம் நிறுவனர் பெயரை 'ராமசுப்பையர்' என்று சாதிப் பெருமையுடனே எழுதிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினமலரை கண்டனம் செய்யவோ, தினமலர் தம் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் இதைக் குறிப்பிட வில்லை, நாய்வாலையும், சாதி மதவெறியர்களையும் நிமிர்த, நிறுத்த முடியாது.

*****

பெரியார் வெறுப்பாளர்கள் கோழைகள் போல் இரவு நேரங்களில் பெரியார் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பது பகுத்தறிவு பகலவன் கருணாநிதி ஆட்சி காலங்களில் தான் அவ்வப்போது நடைபெறுகிறது, கடந்த முறை திருவரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது திண்டுகல் அருகே பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார். கருணாநிதி பெரியாரின் வாரிசு, காவலன் என்று காட்டிக் கொண்டாலும் அவருடைய ஆட்சியின் போது தான் பெரியார் எப்போதும் அவமரியாதை செய்யப்படுகிறார்.

மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு - நக்கீரன்

ஆகஸ்ட் 6 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட சிலை ஒரு மாதத்திற்குள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பெரியார் சிலை சேதம்: திருச்சியில் பரபரப்பு - நக்கீரன்

அதே நாளில் திருச்சியிலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாம்.

*****


கருணாநிதி கன்யாகுமரியில் அமைத்த வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை சுற்றுலா செய்வோரை மலைக்க வைக்கிறது, தமிழர்களின் தொல் பெருமைகளை பிறர் அறிந்து கொண்டு தமிழர்களை பெருமை படுத்துகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்டோர் படித்து முன்னேறிய நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணியம் ஆகியவற்றிற்கு தமிழகத்தில் பெரியார் ஆற்றிய தொண்டுகளை முறியடிக்க இன்னொருவர் பிறக்கவோ, பெரியாருக்கும் முன்பு இருக்கவோ இல்லை. அத்தகைய பெருமை மிகு பெரியாருக்கு திருவள்ளுவருக்கு தென் கோடியில் கடற்கரையில் வானுயர்ந்த சிலை வைத்தது போல் வட தமிழகத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் ஏன் வானுயர்ந்த சிலை வைத்து பெருமை படுத்தக் கூடாது ? திராவிடக் கழகம் மற்றும் பெரியார் திராவிடக் கழகம் ஆகிய அரசியல் அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெரியாருக்கு மிகப் பெரிய சிலை வைக்கச் சொல்லி தமிழக முதலவரை வற்புறுத்தலாமே ? தந்தை பெரியாருக்கு திருவள்ளுவரைப் போல் வானுயர்ந்த சிலை அமைந்துவிட்டால் பெரியார் சிலையை உடைக்க நினைப்பவர்கள் பெரியார் சிலையின் கால் நகத்தைக் கூட பெயர்த்துவிட முடியாது. வலைப்பதிவில் பெரியார் பாசறைத் தோழர்கள் இயங்குறார்ர்கள் இவர்கள் தமிழக அரசிடம் பெரியாருக்கு மிகப் பெரிய சிலை வைக்கச் சொல்லி வற்புறுத்தலாமே. கருணாநிதிக்கும் வரலாற்றை எழுதிக் கொள்ள இன்னொமொரு வாய்ப்பு கிடைக்கும் தவறவிட்டுவிடுவாரா என்ன ?

தாடியோடு நின்ற நிலையில் வள்ளுவரும் பெரியாரும் ஒற்றுமைகள் உண்டு. பெரியாரைப் பற்றி மக்களும், தமிழகத்தில் சுற்றுலா வருவோரும் தெரிந்து கொள்ள அவர் அன்றாடம் மக்கள் வந்து செல்லும் இடத்தில் திருவள்ளுவரைப் போல் பெரியார் சிலை பெரிய அளவில் இருக்க வேண்டும்.

20 நவம்பர், 2009

பெரியார் விழுந்து வணங்கிய கால்கள் !

திராவிடக் கொள்கையில் ஒன்றாக சுயமரியாதை என்பது தனிமனித உரிமை, யாருடைய காலில் விழுவதும் தனிப்பட்ட மனிதனுக்கு இழுக்கு என்பதை கொள்கையாக வைத்திருந்த தந்தை பெரியார் அதை தன் தொண்டர்களுக்கும் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட சுயமரியாதைச் செம்மல் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஒரு நிகழ்வில் இறைத்தொண்டர் ஒருவரின் காலில் விழுந்தார் என்று படித்த போது பெரும் வியப்பாக இருந்தது.

"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது"
-மகா சன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார் (எ) குன்றக்குடி அடிகளார்

அதாவது ஆத்திகம் - ஆன்மிகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்படிச் சொன்னவர் பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் கொண்டாப்பட்டார் என்று நினைக்கும் போது அது தவறே அல்ல. மேடைப் பேச்சுகளின் வழி ஒருவரை ஒருவர் பெரியாரும், அடிகளாரும் கடுமையாக விமர்சனம் செய்து சாடி வந்த வேளையில், ஒருமுறை பெரியாரும் அடிகளாரும் கலந்து கொண்ட ஒரு பொன்மாலை நிகழ்ச்சி நடந்தது, அந்நிகழ்ச்சியில் இருவரின் பேச்சும் இருவரையுமே கவர அன்று முதல் திராவிட கழக, அடிகளார் ஆன்மிக மேடை நிகழ்ச்சிகள் பல ஒன்றாக நடந்தன.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிகளார் மிகவும் தீவிரமாக ஆதரிக்கவே பெரியார் அடிகளார் முன்பைவிட பலமாக ஆதரித்தார். அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அடிகளாரை மேலவை உறுப்பினருக்கு பரிந்துரைக்க, பதவி ஏற்றதும் இந்தியாவிலேயே முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மிகவாதி என்ற பெருமையை அடிகளாருக்கு ஏற்பட்டது.

1967ல், அண்ணா பதவி ஏற்றதும் திருச்சியில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார், திருச்சி திராவிடக் கழக தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு பிறந்த நாள் செய்தியாக பெரியார் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர், ஒரு சில குடும்ப பிரச்சனைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பெரியார், இறுதியாக "நான் துறவியாகிவிடலாமா என்று பார்க்கிறேன்"

அதை கேள்விபட்டபோது அண்ணா அப்போது அமெரிக்காவில் இருந்தார், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் பெரியாருக்கும் ஆறுதல் கடிதம் எழுதினாராம். "அப்படி துறவு மேற்கொள்வதாக இருந்தால் குன்றக்குடி மடத்துக்கு வந்துவிடுங்கள்" என்றாராம் பிறந்த நாள் விழாவில் தலைமை ஏற்ற அடிகளார். 'அப்படி என்றால் பெரியார் குன்றக்குடி மடத்தின் தலைவராகட்டும், அடிகளார் திராவிடக் கழகத்தின் தலைவராகட்டும், அப்படி செய்தால் அது பெரியாருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும்' என்று கேட்டுக் கொண்டாராம் செல்வேந்திரன். அங்கிருந்தவர்களின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியார் எதுவும் பேசாமல் இருக்க, 'பெரியாரே இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் நான் செல்வேந்திரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்' என்றாராம் அடிகளார்.

அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இறுதியாக பாராட்டு நடத்திய அடிகளார் பெரியாருக்கு பொன்னாடைப் போடுவதற்கு எழ, தன்னால் பிறர் துணை இன்றி எழவே முடியாத பெரியார் தானே முயன்று கால்கள் நடுநடுங்க எழுந்து நின்றதும், அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்க, பெரியார் கால்கள் நடுநடுங்க குனிய உணர்ந்து கொண்ட அடிகளார் சமாளித்து தடுக்க முயற்சிக்கும் முன் பெரியார் அடிகளாரின் காலை தொட்டு வணங்கிவிட்டார். இது அங்கு பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். அடிகளார் ஆன்மிகவாதி என்றாலும் அவர் பெரியாரைவிட வயதில் பாதி அளவுதான். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பெரியாரே மீறுவது அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியதாம்.

மறுநாள் பெரியார் இல்லத்தில் கூடிய தொண்டர்களும், திருச்சி செல்வேந்திரனும் தயங்கி தயங்கி நிற்க, பெரியார் நேற்றைய நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் என்றதும் "ஐயா நேற்று நீங்கள் செய்த காரியம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கமில்லாம் செய்துவிட்டது" என்றது எல்லோருக்குமே பிடிக்காமல் போய்விட்டதா ? என்று கேட்டு, 'என்னங்க செல்வேந்திரன், நீங்கள் புத்திசாலின்னு நெனெச்சேன்' என்று சொல்லிக் கொண்டே பேசத் தொடங்கினாராம் பெரியார்.

"சர்.சி.பி.இராமசாமி ஐய்யரை தெரியுமா உங்களுக்கு ? எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் ?... தான் மரியாதை செய்தால் தான், தன்னுடைய நிறுவனம் பெருமைபடனுமின்னு, அதைத்தான் நானும் செய்தேன், சூத்திர சாதி மடத்தை (அடிகளாரின் மடத்தை) நானும் பெருமைபடுத்த நானும் செஞ்சேன். எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்" என்றார்

*****

தனது சாதிப் பெருமைக்காக எதைவேண்டுமானாலும் குறிப்பாக பிற சாதியை தாழ்த்தி பெருமை சேர்த்துக் கொள்ளும் பிற சாதித் தலைவர்களைவிட, தனது மக்களுக்காக தனது கொள்கையையையும், சுயமரியாதையும் இழக்க முடிவு செய்த பெரியாரைப் போல் இனி ஒரு பெரியாரைப் பார்க்க முடியாது.

பல்வேறு தரப்பினரால் ஓட்டு வாங்கி பிரதமர் ஆனாலும் சமயத்தலைவர்களின் காலில் விழுவது இன்றும் நடப்பில் இருக்கத்தான் செய்கிறது. (மட)சாமியார்கள் காலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விழுவது ஏன் ? பெரியார் சரியாகச் சொல்லியே இருக்கிறார். காலில் விழுவது அரசியல்வாதிகளின் அவர் அவர் விருப்பம் என்றாலும் கிறித்துவர்களின், இஸ்லாமியர்களின் ஓட்டையும் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள், ஒரு அரசியல்வாதி ஒருசாமியார் காலில் விழுகின்றார் என்றால் அவரை ஆதரிக்கும் மக்களும் சாமியாரைப் பெருமையாக பார்ப்பார்கள் அல்லது அவர்களின் ஆதரவையும் சாமியாரின் காலடியில் வைப்பது போன்றது, விழட்டும் ஆனால், ஒரு பாதிரியின், இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை. யாரை மக்களுக்கு பெருமைபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் காலில் மட்டும் தான் விழுவார்கள். மதச் சார்பற்ற நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டு தான் வருகிறோம், இதெல்லாம் போகப் போகத் தெரியுமா ?

*****

பெரியார் குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்த நிகழ்வைப் பற்றி தற்போதும் எப்போதும் திக தலைமை மற்றும் ஆதரவாளர்கள் வெளியே சொல்வது இல்லை, குறிப்பாக தமிழ் ஓவியா இது பற்றி எழுதியது போல் தெரியவில்லல. அதற்குக் காரணம் இவர்கள் பெரியாரை புனிதராக காட்ட முயற்சிப்பது தான். பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.

இடுகை தகவல் : "இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா ?" (பக்கம் 171 - 182)
நூல் ஆசிரியர் திருச்சி செல்வேந்திரன், நாம் தமிழர் பதிப்பகம். 17/1, தாச்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர். சென்னை 4

9 அக்டோபர், 2009

பெரியாரின் மூத்திரப் பை !

பெரியார் செய்தது மற்ற அனைத்தும் மிகச் சிறந்தது என்பது எதுவுமே சொல்லாமல், ஆனால் அவர் 30 வயது மணியம்மையை தனது தள்ளாத வயதில் திருமணம் செய்தது தான் அடாத செயல் என்பது போல் பதிவர் பெரியவர் திரு டோண்டு இராகவன் உட்பட சிலர் எழுதுகிறார்கள். ஐயா பெரியவங்களே பெரியார் செய்ததில் உங்களுக்கு உடன்பாடானது என்று இதுவரை பெரியாரைப் பற்றியோ அவரது இயக்கத்தைப் பற்றியும் பாராட்டி எழுதி இல்லாத போது பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது மட்டுமே எதோ அடாதது போல் எழுதுவதன் நோக்கம் என்ன என்பதை விளக்கினால் பலரும் அறிந்து கொள்வார்கள்

பெரியார் மணியம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்டதற்குக் காரணமே அவர் பெண்ணைப் போகப் பொருளாக நினைக்காமல் 'வைத்துக் கொள்ள' ஆசைப்படாமல் திருமணம் மூலம் அந்த உறவை அங்கீகரித்தார். திருமணம் பற்றிய பல்வேறு எதிர்கருத்துகளைக் கூறிய பெரியார், மணியம்மையை யாரும் தூற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கு திருமணம் செய்து கொண்டார். பெரியார் மணியம்மையை திருப்தி படுத்தினாரா என்றெல்லாம் கவலைப்படுகிறார்கள். தெய்வத் திருமணங்கள் என்ற பெயரில் அம்மன் சிலைகளுக்கு கோவிலில் பூசை செய்யும் பார்பனர்களே / பூசாரிகளே தாலி கட்டுகிறார்கள், அதையெல்லாம் யாரும் அருவெறுப்பாகப் பார்ப்பது கிடையாது, கோணல் புத்திக்காரர்கள் பார்ப்பார்களோ ? திருமண கோலத்தில் இருக்கும் சாமிகள் உடலுறவு கொள்ளும் என்கிற கற்பனைகளெல்லாம் நாம் செய்கிறோமா ? பிறகு ஏன் பெரியார் மணியம்மை 'உறவைப்' பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டும்.

பெரியாராவது மனைவி இறந்த பிறகு திருமணம் செய்தார், பெரியார் காலத்திலும் அதற்கும் முன்பும் 'கடவுள் சேவை' என்ற பெயரில் கோவிலில் பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்களை எந்த வயது ஆசாமிகள் புணர்ந்தார்கள் என்கிற தகவலெல்லாம் சரி பார்த்துவிட்டு பிறகு பெரியாரைக் குறித்து கேள்வி எழுப்பலாமே. விதவைகளைக் குறிவைக்கும் 'மட' சாமியார்கள் பற்றி எதேனும் சந்தேகம் (சந்தேகத்தின் பலனோ என்ன எழவோ) என்ற அளவிலாவது இவர்கள் எதும் கேள்வி எழுப்பி இருக்கிறார்களா ?

ஆண் பெண் உறவுடன் தொடர்புடைய திருமணம் வெறும் புணர்ச்சியில் தான் தொடர்புடையது என்று நினைப்போருக்கு பெரியார் மணியம்மையின் திருமணம் புரியாத ஒன்று தான். அதே நினைப்பில் அன்று இருந்ததால் தான் அறிஞர் அண்ணா அதைக் கடுமையாகச் சாடினார், பின்னர் தாம் விமர்சனம் செய்தது தவறு என்று பெரியாரின் கைகளைப் பற்றினார்.

பெரியார் தொண்டகளும் பெரியார் பற்றாளர்களும் ஏற்றுக் கொண்ட பெரியார் மணியம்மை திருமணத்தைப் பற்றி பிறர் கவலை எழுப்புவது கேள்வி எழுப்புவதும் எதற்காக, நகைப்பாக இருக்கிறது. அதற்கான தகுந்த விளக்கம் கொடுத்தால் இவர்களெல்லாம் உடனேயே பெரியார் கொள்கைகளை தாங்கிப் பிடிக்கப் போகிறார்களா ?


சுயமரியாதை ஊட்டப்பட்ட பெரியாரின் தொண்டர்கள் சுயமரியாதையை ஓரத்தில் வைத்துவிட்டு பெரியார் மீதான அன்பில் பெரியாரின் மூத்திர சட்டியையும் தூக்கியவர்கள் தான். பெரியார் மீதான விமர்சனங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. பெரியார் பற்றிக் கேள்வி எழுப்பத் தகுதியானவர்கள் பெரியார் பற்றாளர்களேயன்றி பெரியார் தூற்றிகளெல்ல ஏனெனில் பெரியார் தூற்றிகளுக்கு பெரியாரைத் தூற்ற மணியம்மையைத் திருமணமெல்லாம் ஒரு சப்பையான காரணம், இதே தூற்றிகள் காமலீலை சாமியார்கள் பற்றியும் வாய்த்திறப்பதில்லை என்பதையெல்லாம் பார்க்கும் போது முறையான திருமணம் முறையற்ற திருமணம் இவற்றையெல்லாம் இவர்கள் சந்தர்பவாத அளவுக்கோலாகக் கொண்டு வருகிறார்கள் அவற்றின் உள்னோக்கம் எப்படியாவது பெரியாரைக் கொச்சைப் படுத்த முடியுமா என்பதே.

வைப்பாட்டி, தேவதாசி முறைகளைப் பற்றி எதுவுமே கண்டிக்காதவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்ட பெரியார் பற்றிக் கேள்வி எழுப்புவது பெரியார் மீதான சுயவெறுப்பு என்பதைத் தாண்டி என்னவாக இருக்கும் ?

வள்ளியை வளைக்க முருகன் கூட கிழவன் வேடம் தான் போட்டான் என்கிறது கந்தப்புராணம். பெரியார் மீது படும் சந்தேகங்களை முருகன் மீதும் பட முடியுமா ?
:)

இன்றைய தேதியில் காவி உடை கொடுத்து மொட்டையடிக்கப்பட்டு 'அமங்கலி' என்ற பெயரில் மூலையில் ஓரங்கட்டப் பட்டு, பிற சாதியினரால் 'மொட்டை பாப்பாத்தி' என்று கேலி செய்யப்படும் பார்பான குலப் பெண்டிரைப் பார்ப்பது அரிது, அப் பெண்களின் நிலை மாறி, பலர் மறுமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குக் காரணமே அனைத்துப் பெண்களுக்குமான பெரியார் ஊட்டிய பெண்ணிய விடுதலை விழிப்புணர்வு தான் காரணம் என்பதை நன்றியுடையவர்கள் மறக்கலாகாது.

20 ஜூலை, 2009

வெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி !

பெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்கவர்கள், பார்பனர்களின் ஆதிக்கத்தை முன்னிட்டு பெரியாரின் கடவுள் மறுப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்க ஆயிரம் காரணங்கள் உண்டு, அதில் முதன்மையானது தமிழர்களுக்கென்றே முருகன் (சேயோன்), மாயோன்(திருமால்), கொற்றவை(மாரியம்மன்), மாடன் (சிவன்) தெய்வங்கள் உண்டு. 6 ஆம் நுற்றாண்டு காலத்திற்கு பிறகே அவைகள் பார்பனர்களது வைதீக சமயத்துடன் முடிந்து வைக்கப்பட்டு பூணுல் மற்றும் பிற சடங்குகளுடன் வைதீகமயமானது. பார்பன எதிர்ப்பில் தங்கள் தெய்வங்களையும் விட்டுவிட தமிழர்கள் விரும்பவில்லை, அதனால் தான் பெரியாரின் பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்ற அளவுக்கு இறை மறுப்பு வெற்றிபெறவில்லை. என்னைக் கேட்டால் இறை மறுப்பு வெற்றி பெறவேண்டும் என எண்ணுவதற்கு மூட நம்பிக்கைகள் தவிர்த்து மிகப் பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. மூட நம்பிக்கைகள் அனைத்து மதங்களிலுமே நிரம்பிக் கிடக்கின்றன. இறைமறுப்புக்கு பதிலாக மதமறுப்பாக திராவிட இயக்கம் சென்றிருக்கலாம், சிறுபான்மை ஓட்டு அரசியல் என்கிற பெயரில் அவையெல்லாம் கண்டு கொள்ளப் படமால் போனது பெரியாருக்குப் பிறகு இறைமறுப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்பது "மஞ்சள்" தூண்டால் வடிகட்டிய "உண்மை".

"பிரமணன் என்பவன் பார்பனன் அல்ல, ஒருவனின் பிராமணத் தகுதி பிறப்பினால் வருவதன்று, தகுதியால் வரும்" என்கிற 2000 ஆண்டு புளுகுகள் இன்றும் தொடர்கின்றனர். ஆனால் அவர்களே அதை அவ்வபோது உடைத்து வருகின்றனர், ஒப்பிட்டுப் பார்க்காதததல் நாமும் அவர்கள் சொல்வது சரிதானோ என்று எண்ணிவிடுவோம். அண்மையில் படித்த ஒரு கட்டுரையில், 'இராமன் பிராமணன் அல்ல, வியாசர் பிராமணன் அல்ல......இன்னும் பல இதிகாச பாத்திரங்களை பிராமணன் அல்ல" என்று தெளிவாகச் சொல்லுகிறார்கள், ஆனால் அவர்கள் பிராமணர் என்று சுட்டிக்காட்டும் பாத்திரங்களும், ஆதி சங்கரர் உட்பட அனைவருமே பார்பனர்கள், அதாவது பார்பனர்கள் மட்டுமே பிராமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். எதாவது ஒரே ஒருவர் அல்லது பாத்திரம் சத்திரியனில் இருந்து பிராமண நிலை அடைந்திருப்பதாக எந்த ஒரு புராணங்களிலும் காட்டப்படவில்லை, பிறகு ஏன் இந்த "பிரமணன் என்பவன் பார்பனன் அல்ல, ஒருவனின் பிராமணத் தகுதி பிறப்பினால் வருவதன்று, தகுதியால் வரும்" என்பது எப்போது நடைமுறையில் இருந்தது என்று சொல்லாமல் தொடர்ந்து புளுகி வரவேண்டும் என்றே தெரியவில்லை. ஆனால் அதில் உள்ள அரசியலை ஆழ்ந்து யோசித்தால்,

பிராமணர் என்கிற சொல் பார்பனர் குறித்த சொல் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் இதுகாறும் அவை பார்பனர்களையின் தகுதியையும், சமூக அந்தஸ்தையும் நிலைநிறுத்த நுழைக்கப்பட்டு வழங்கப்படும் சொல்லாகவே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இல்லை என்று மறுப்போர் சரியான ஆதாரங்களைத் தாருங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

இது இப்படி இருக்கையில், சோ இராமசாமி போன்றோர் 'எங்கே பிராமணன் ?' என்ற தொடர் பார்பனத் தகுதிகளை பார்பனர்களுக்கு காட்டும் ஒரு முயற்சியாகத் தான் நினைக்க முடிகிறது. அதை இந்துமதம், பண்பாடு, சமயக் கூறுகள் என்றெல்லாம் பொதுப்படுத்த முடியாது, ஏனெனில் பிராமணன் என்பவன் எந்த ஒரு காலத்திலுமே மற்ற மூவர்ணங்களில் இருந்து தகுதியால் உயர்த்திக் கொண்டவன் இல்லை. முழுக்க முழுக்க பார்பனர்களே பிரமணர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். 'எங்கே பிராமணன் ?' பார்த்து சிலாகிக்கும் பார்பனரல்லாதவர்கள் சிந்திக்க வேண்டும்.

"மிட்டாய் அனைவருக்கும் உண்டு.....ஆனால் கிடைத்தவர்கள் அனைவரிடமும் பூணூல் இருந்தது" - மிட்டாய் பூணூல் அணியாதவருக்கு கிடைத்ததே இல்லை என்பது உண்மை. இங்கு மிட்டாய் என்பது 'பிராமணர்' ஆகும் தகுதி.

பெரியாரின் கடவுள் மறுப்பு நீற்றுப் போனாலும், பார்பன எதிர்ப்பு என்றும் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் இன்றும் பார்பனர்கள் 'தகுதி' பேசுவதே. சிறுநீரும் மலமும் பார்பனர், பார்பனர் அல்லாதோர் அனைவரிடமும் உள்ளவை தான், எதன் அடிப்படையில் பார்பனர்களை "பிராமணர்" என்று அழைப்பது ? எந்த ஒரு பார்பனரும், 'பிராமணர் என்பதற்கு' பார்பனர்கள் எழுதி வைத்திருக்கும் விளக்கங்களையும், சோ இராமசாமியின் வியாக்யாணங்களையும் படித்தால் தன்னை பிராமணன் என்று அழைத்துக் கொள்வது தன்னைப் போலவே இருக்கும் பிற மனிதர்களை அவமதிக்கும் செயலாகும் என்று நினைப்பான்.

22 செப்டம்பர், 2008

நீர்த்துப் போன பெரியார் கொள்கைகளில் ஒன்று - திருமணம் !

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. -பெரியார்

'நச்' என்று சொல்லி இருந்தாலும், சமூகம் என்கிற அமைப்பின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறவர்களுக்கு பெரியாரின் இந்த கருத்து ஏற்புடையதாக இருக்காது. மாறாக திருமணம் செய்து கொள்ளாமல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதைச் சரி என்கிறாரோ என்ற கற்பனையெல்லாம் வளர்த்துக் கொள்வார்கள், மேலும் குழந்தை குட்டிப் பெற வேண்டாம் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம், இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் உலகம் உய்விக்குமா ? என்று கவலைப்படுவார்கள், என்னமோ பெரியார் சொல்வதினால் உலகமே ஒரு நாளில் மாறிவிடப் போவது போல் நினைக்கும் இவர்களின் அச்சம் நகைப்புக் கிடமானது தான்.

*****

பெண்களை இந்திய சமூகம் குறிப்பாக நடுத்தரவர்கம் ஒரு அடிமை போன்று தான் நடத்தி வந்தது, 50 ஆண்டுகளுக்கு முன்பு இரு / பல பெண்களை மணந்து கொள்ளும் பழக்கம் பரவாலாக இருந்தது, பெண்களை உடல் உறவு இச்சைக்காகவும், வாரிசுக்களை உருவாக்கும் எந்திரமாகவே வைத்திருந்தார்கள், எல்லோரையுமா ? எல்லோரையும் அல்ல, விழுக்காட்டு அளவில் வதைபடும் பெண்கள் எண்ணிக்கை மிகுதி. மற்ற பெண்களுக்குக் கிடைத்த சுதந்திரம் கூட அவளின் கணவரின் தாரள மனசுதான் காரணம், சமூக அமைப்பு அல்ல. பெண்களுக்கு இயல்பான சுதந்திரம் இருக்கவில்லை, வீட்டோடு இருக்கும் வேலைக்காரியாக நடத்தப்படுவதும் இல்லாமல் கூப்பிடும் போதெல்லாம் அவளது சுய விருப்பு வெறுப்பு இன்றி அவனை மகிழ்விக்க வேண்டும், அன்றைக்கு குடும்பக் கட்டுப்பாடு முறை இல்லாததால் அவளுக்கு மாதவிலக்கு நிற்கும் வரை குழந்தைகளைப் பெற்றுப் போட்டு ஆகவேண்டும் என்பது அவளது தலையெழுத்தாகி இருந்தது.


60 ஆண்டுகளுக்கு முன், என் அம்மா படிக்க விரும்பிய போது "கட்டிக் கொடுத்தால் சட்டிப்பானை கழுவ போற ஒனக்கு, படிப்பு எதுக்கு, சமையலை மட்டும் கற்றுக் கொள் போதும்" தாத்தாவின் கண்டிப்புடன் மூன்றாம் வகுப்போடு நிறுத்தப்பட்டு இருக்கிறார். பெருவாரியான ஆண்களின் மன நிலை பெண்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்து, அவன் விருப்பங்களை நிறைவேற்றி, அவன் வாரிசுகளைப் பெற்றுத் தந்து, இடையில் இறந்துவிட்டான் என்றால் வெள்ளை சேலை அணிந்து அவனை நினைத்து உருகிக் கொண்டே, பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும். பெண்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே நினைத்துப் பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தது சமூகம். இதனை கண்டு மனம் புழுங்கி, மாற்ற வேண்டும் என்பதற்காகவே பெரியார் திருமணத்தினால் பெண்கள் எப்படியெல்லாம் அடிமையாகிறார்கள் என்பதை சற்று கடுமையாகவே சொன்னார்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளிலும் கூட அதே நிலை தான் இருந்தது, ஆண்களைப் பொருத்த அளவில் பெண்கள் பெண் குழந்தைகள் மட்டுமின்றி 'ஆண் குழந்தைகளையும்' பெறுபவர்கள். வாரிசுகளை உருவாக்கிக் கொள்வதற்காக மட்டுமே பெண்களுடன் உறவு கொள்வார்களாம் ஆண்கள், மற்றபடி இச்சைகளை ஆண்கள் ஆண்களிடமே தீர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள், கிரேக்க மேதைகள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ மற்றும் மாவீரன் அலெக்சாண்டர் ஆகியோர் ஓரின புணர்ச்சி யாளர்களாகவே இருந்ததற்கு அன்றைய ஐரோப்பாவில் பெண்களின் நிலை மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டு இருந்ததும் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஐரோப்பிய நாடுகள் பெண்ணடிமைத் தனத்திலிருந்து என்றோ மீண்டு இருக்கிறது.

இங்கே இந்தியாவில் பெண்களுக்கு புனிதம் சேர்பதாக அவளை லட்சுமி, சரஸ்வதி, பூமாதேவி, சக்தி, கற்புக்கரசி என்றெல்லாம் உயர்வான பெயரில் அழைப்பதாகவும், தாய்மையைப் போற்றுகிறோம் என்றெல்லாம் மிகவும் உயர்வாகக் கூறிக் கொண்டு வந்திருந்தாலும், இந்திய இளம் விதவைத் தாய்களின் நிலை உலகில் எங்கும் நடக்காத கொடுமைதான் ( அதற்கு முந்தைய காலங்களில் இந்த நிலையைக் கூட அவளுக்குக் கொடுக்காமல் கணவனின் பிணத்தோடு சேர்த்து எரித்தார்கள்.), பெண்களை இப்படியெல்லாம் வதைத்து வந்த சமூகத்தைப் திருத்துவதற்கு பெரியார் கூறிய அதிரடி கருத்துகள் எவ்வளவு பெரிய அடியைக் கொடுத்திருக்கிறது.

பெரியார் திருமணம் வேண்டாம் என்றாரே, இப்பொழுது அவரது தொண்டர்கள் கூட அவரது வேண்டுகோளை மதித்தார்களா ? தற்பொழுது பெண்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள், முன்பைப் போல் மாதவிலக்கு நிற்கும் வரை யாரும் குழந்தை பெறுவது கிடையாது, ஒன்றோ அல்லது இரண்டோ அத்துடன் நிறுத்திக் கொள்கிறார்கள், அடாவடி ஆண்களை எதிர்த்து குடும்ப நல நீதிமன்றங்களை நாடி அவனது செயலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுதலையாகி அவர்களுக்கென்ற வாழ்கையை வாழத் தொடங்குகிறார்கள், இரண்டு திருமணமெல்லாம் தற்போதைய ஆண்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி போய்விட்டது. முதல் மனைவின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு திருமணம் ஆன ஆணும் தன்விருபங்களுக்கு ஏற்ப பல பெண்களையெல்லாம் மணந்து கொள்ள முடியாது. கணவன் அன்னிய பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்றாலே அவனிடமிருந்து மணவிலக்கு பெற்றுக் கொண்டு விடுபடவும் பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

தற்பொழுதெல்லாம் தப்பு செய்யும் ஆண்கள் அந்த கால ஆண்களைப் போல் வெளிப்படையா சின்னவீடு என்பது போல் ஏற்பாடு செய்து கொள்ள முடியாது. மொத்தத்தில் ஒரு திருமணம் ஆன ஆணின் பணமோ, புகழோ, பாரம்பரியமோ அவன் மனைவியை ஆட்டுவிக்கும், அடிமை படுத்தும் சாதனமாக ஆகிவிட முடியாது. தற்பொழுது தான் ஆண்கள் பெண்களும் சமுகத்தில், தனது குடும்பத்தில் சமமானவள் என்று உணர ஆரம்பித்திருக்கிறார்.

கணவன் - மனைவிக்குள்ளே இந்த அளவுக்கு புரிந்துணர்வுகள் ஏற்பட்டுவிட்டதால், பெரியார் சொன்ன திருமணம் குறித்த (மேற்கண்ட) அன்றைய கருத்துக்கள், இன்றைக்கு தேவையற்றதாகிவிட்டது. தற்பொழுது பெண்களைப் பொருத்த அளவில் திருமணம் அவளை அடிமை ஆக்குவதில்லை, பெண்களிடம் விழிப்புணர்வைக் கூட்டி, ஆண்கள் தங்களைத் திருத்திக் கொண்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் அதிரடி கருத்துக்களும் ஓரளவு காரணமாக இருந்து, எந்த ஒரு சமுக சீர்திருத்தவாதியாக இருந்தாலும் அவரது சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சாகாவரம் பெற்றவை அல்ல, அவை தேவை எனும் போது ஏற்படும், அதன் தேவை முடிந்ததும், அவைகளின் வலியுறுத்தல்கள் கூட தேவை இல்லாமல் போய்விடும். மற்ற மாநிலங்களிலும் இந்த மாற்றம் இருக்கிறது என்றாலும், தமிழகத்தில் இந்த மாற்றம் விரைவாகவே நடைபெற்றது.

17 செப்டம்பர், 2008

ரத்னேஷ் அண்ணா...! பெரியாரை விமர்சிக்கும் முன் ...

வழக்கமாக பார்பனிய ஏகாதிபத்யமே மாற்றுப்பார்வை என்கிற கருத்து நுழைத்தலில் கோணல் பார்வையில் எல்லாவற்றையும் எழுதி இருக்கும். நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவில் பெரியாரை விமார்சிக்கிறீர்களா ? வீரமணியை விமர்சிக்கிறீர்களா ? என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்.

பெரியாரை என்றால் அதில் பெரியாரை வடிவேலுடன், வடிவேலின் சினிமா காட்சியுடன் ஒப்பிட்டு இருப்பதே தவறு, இன்னிக்கு வடிவேலுவும் மேலே வந்திருக்கிறார் என்றால் ஆளின் தோற்றத்திற்கு, அவன் எந்த சாதியில் பிறந்திருக்கிறான் என்பதற்கு இல்லாமல் அவனுடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்கிற பெரியாரின் சிந்தாந்தம் பரவலாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டதால் தான்.

நீங்கள் சொல்லும் குற்றச் சாற்றை இன்னும் மாற்றிப் போட்டுக் கூடக் கேட்கலாம்

"பெண்ணியம் பேசும் பெரியார், தனது கொள்கைகளை தன் வீட்டுப் பெண்களிடம் வலியுறுத்தி பெண்களிடம் வீரத்தைக் காட்டி இருக்கலாமா ?" இப்படி கேட்டு இருந்தீர்களென்றால் சிரித்துவிட்டு போய்விடுவார்கள்.

ஆக, கோவில்களின் புனிதம் களங்கப்பட ஆரம்பித்தது இவர்களின் ஏற்பாடு தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா? அதற்கு முன்பேயே அப்படி இருந்தால் இவர் தனியே ஆட்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே. கோவிலுக்குப் போய்த் திரும்பிய போதெல்லாம் அவர்கள் நொந்திருப்பார்களே. இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? தங்கள் கொள்கையை வலியுறுத்துவதற்காக இவர்கள் எந்த நாடகமும் நடத்துவார்கள் என்பது தானே இதன் மூலம் சொல்லப்படும் செய்தி.

- இது மிதமிஞ்சிய கற்பனையே, இதற்கு நான் பதிலும் அளித்துவிட்டேன்

கோவி.கண்ணன் said...

//இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? //

இது கொஞ்சம் கற்பனையானது தான், பெரியார் குடும்பம் செல்வாக்கு மிக்கது, அவர்கள் வீட்டுப் பெண்களை கோவிலில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், மற்ற பெண்களிடம் வைத்துக்கொள்ளும் வம்புகளை இவர்களிடம் செய்ய முயன்றிருக்க மாட்டார்கள்.

முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?

September 17, 2008 11:47 AM

இதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்,

RATHNESH said...

கோவி.கண்ணன்,

//முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?//

எண்ணம் சரியே. நான் கேட்பது, அதனை நிறைவேற்ற பொய் நாடகம்? அதுவும் புனிதமாகக் கருதப்படும் ஓர் இடத்தைக் களங்கம் செய்து?

நான் வீரமணி பொய்சொல்கிறார் என்றே சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கோவில் 'புனிதமாக கருதப்படும்' என்ற கருத்தைச் சொல்லி பெரியார் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.

கோவில்கள் எப்போது புனிதமாக இருந்தது ?

கோவில்களில் தேவதாசிகளின் ஆட்டமும், அவற்றைச் சார்ந்தவர்களின் அந்தபுரமாக இருந்த காலங்களில் கோவில்கள் புனிதமாக இருந்ததா ?

பள்ளன், பறையன் இன்னும் சண்டாளர்கள் நுழைந்துவிட்டால் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்துவைக்கப்பட்டு இருந்ததால் புனிதமாக இருந்ததா ?

தற்பொழுது தான் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டவுடன் அவர் சிந்திய இரத்தத்தால் புனிதம் அடைந்திருக்கிறதா ?

வழக்கமாக புனிதம் பேசிதான் பெண்கள் முதல் மனிதர்கள் வரை தாழ்த்துவது நடந்து ஏறியது, வீட்டில் உள்ளவர்களை வெளி ஆட்களை வைத்தே ... இங்கும் புனிதம் கெடுகிறேதே...? என்பதால் பெரியார் அடவடி செய்தார், அதுவும் புனிதமாக கருதப்படும் கோவிலை வைத்து செய்தார் என்பது தங்களின் கண்டுபிடிப்பா ?

இன்னும் ஒன்றே ஒன்று,

கோவில் உண்மையிலேயே புனிதமானதா ? அல்லது கோவில் புனிதமாக கருதப்படுகிறதா ?

கள்ளுக்கடை, சாராயக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இன்றைய தலைவர்களில் ஒருவர் கூட தங்கள் வீட்டு தென்னை மரங்களைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தங்கள் வீட்டு பெண்களை அனுப்பியதுமின்றி, தனது தோப்பில் இருந்த அத்தனை தென்னை மரங்களையும் வெட்டி சாய்தார்.

உங்கள் பதிவின் ஆதங்கத்தில் பெரியார் குறித்த ஆதங்கமும் இல்லை, வீரமணி குறித்த குற்றச் சாட்டும் இல்லை. உங்களின் தவறான புரிதலின் எழுத்துவடிவம் மட்டுமே இருக்கிறது.

எந்த சூழலில் பெரியார் தமிழை 'காட்டுமிராண்டி பாஷை' என்று சொன்னார் என்ற சூழலைச் சொல்லாமல் Context ஆக பெரியார் தமிழைத் தூற்றினார் என்று சொல்லும் கூட்டத்திற்கு உங்கள் கருத்து நிச்சயம் பலனும், பயனுமாக இருக்கும்.

பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அதே சமயத்தில் நாம் எடுத்துவைக்கும் கருத்தில் எதாவது பொருள் இருக்க வேண்டும். வீரமணி அட்டாக் என்ற பெயரில் பெரியாரை கேவலப்படுத்துவது யார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

4 செப்டம்பர், 2008

எப்போதான் நிறுத்துவானுங்களோ.......!

சில சமயம் செய்திகளைப் படித்தால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கொடுமையை விட அவர்கள் அதைக் கொண்டு சேர்க்கத் தலைப்பிட்டிருப்பது படு எரிச்சல்.

கரூர்-ஒரு பெண்ணை 6 பேர் கற்பழித்த கொடூரம்! - இது ஒரு கொடுமையான நிகழ்வு, இதன் தொடர்புடைய ஆண்களுக்கு விதையை அறுத்துப் போட்டு தண்டனைக் கொடுத்தாலும் எவரும் எதிர்க்க மாட்டார்கள். (அந்த செய்தியை நான் படிக்கவில்லை)

கற்பு - என்ற சொல்லே பெண் அடிமைத் தனத்துக்காக புகுத்தப்பட்ட ஒன்று, கணவன் மனைவியிடம் பாலியல் உறவு கொள்வதை கணவன் கற்பழிக்கிறான் என்று சொல்ல முடியாது அல்லவா ? புணர்ச்சி, பாலியல் உறவு இது தானே பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வதற்கான பெயரே...இதில் கற்பு என்கிற சொல் எங்கிருந்து வந்தது ?

ஒரு பெண்ணின் விருப்பமின்றி பலவந்தப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வல்லுறவு அல்லது வன்புணர்ச்சி என்றே இப்பொழுதெல்லாம் முற்போக்கு சிந்தனையாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. காரணம் இது போன்ற கொடுமைகளை எந்த தவறும் செய்யாது அனுபவித்து வரும் பெண்ணிடம் சென்று 'நீ கற்பழிக்கப்பட்டுவிட்டாய்' என்று தூற்றுவது, அடையாளப்படுத்துவது... அவளுக்கு மன அளவில் ஆயிரம் பேர் தன்னை வன்புணர்ந்த கொடுர உணர்வையே ஏற்படுத்தும். கற்பனையாக கற்பு என்னும் சொல்லில் பெண்களை புனிதப் படுத்துகிறோம் என்ற போர்வையில் அந்த சொல்லால் அவளைக் கொல்வதற்கே, இழிவு படுத்துவதற்கே, காயப்படுத்துவதற்கே ஆண் சமூகம் தற்போதும் முயன்று வருகிறது.

தலைமீது காக்கை எச்சமிட்டுவிட்டது என்பதற்காக தனது புனித தன்மை போய்விட்டது என்று எந்த மனிதனாவது புலம்புகிறானா ? குளித்துவிட்டு அல்லது துடைத்துவிட்டு சென்று கொண்டே இருப்பான். பாலியல் வண்புணர்ச்சி ஒரு கொடிய செயல் அந்த செயலைச் செய்த கொடியவர்களுக்கு மேற்சொன்ன தண்டனை வழங்குவதைத் தான் செய்ய வேண்டும். அதைவிடுத்து 'பெண் கற்பழிக்கப்பட்டாள்' என்று சொல்வது பெண்ணை இழிவு படுத்துவதுதான். ஒரு பெண் கற்பு என்ற உறுப்பை பெண் உறுப்பில் ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறாளா ? ஏன் இல்லாத ஒன்றைச் சொல்லி பெண்களை இழிவு படுத்த வேண்டும் ?

ஊடகங்கள் இது போன்ற பாலியல் வண்கொடுமைகளை, வல்லுறவுகளை, வன்புணர்ச்சிகளைப் பற்றி எழுதும் போது 'கற்பழிக்கப்பட்டாள்' என்று எழுதுவதை நிறுத்த வேண்டும். கற்பு என்ற சொல் பெண்மையைப் புனிதப் படுத்துவதாக ஆணாதிக்கவாதிகள் சொல்லிக் கொண்டாலும்..அந்த சொல்லால் காயப்பட்ட பெண்களின் உணர்வுகளை ஆற்றவே முடியாது ... அது மேலும் அவளைக் காயப்படுத்தி 'தான் புனிதம் கெட்டவள்' என்று எண்ண வைத்து தற்கொலை வரை கொண்டு செல்லும். கற்பு என்பது பெண்ணிய ஒழுக்கமாகத்தான் சித்தரிக்கப்படுகிறது....'பெண் கற்பழிப்பட்டாள்'...என்பதை 'பெண் ஒழுக்கம் அழிக்கப்பட்டாள்' மறைமுகமாக 'பெண் ஒழுக்கம் கெட்டாள்' என்ற பொருளையே சொல்கிறது. கற்பு என்ற சொல் பெண்களின் மீது வீசப்படும் ஆணிய கத்தி...உடைத்து எரியப்பட வேண்டும்.

பெரியாரால் அறிவுறுத்தப்பட்டு ... பெரியார் வாழ்ந்த காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வரும் 'கற்பு' என்னும் சொல்லே அழிக்கப்பட வேண்டியது, தமிழ் மொழியில் ஒரு சொல்லாக இருக்கக் கூட பயனற்றது. மேற்கத்திய மொழிகளில் 'கற்பு' என்ற சொல்லுக்கு மாற்றான சொற்கள் இல்லை, அது போன்ற தாழ்வான கற்பனை மேற்கத்திய மக்களிடம் இல்லை.

10 ஆகஸ்ட், 2008

குசேலனை ஓரம் கட்டிய பதிவர் !



குசேலனுக்கு ரிடையர் கொடுத்து... தம்பி KRS க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பதிவுகள் தான் இன்று தமிழ்மணத்தில் படையெடுத்து இருக்கு !

1. பிறந்த நாள் வாழ்த்து சொல்லேலோ ரெம்பாவாய் : ambi
2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் க.ர.ச. (K.R.S) : குமரன் (Kumaran)
3. "கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள் : கானா பிரபா
4. Birthday: KRS : ILA
5. துர்காவின் மோசடி - KRS க்கு நியாயம் தேவை!
6. ஒரு (போலி) அப்பாவி சிறுவனின் கதை -துர்கா
7.
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு !
8. குசேலனை ஓரம் கட்டிய பதிவர் !

அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!




108 முறை இருக்கா ?




குறிசொற்கள் ? சும்மா ட்டமாஷு :)



சூடான இடுகையிலும் வந்திட்டு !

10 செப்டம்பர், 2007

தந்தை பெரியார் தமிழ் விரோதி ?

பெரியார் தமிழை முன்னிறுத்தவில்லை, மாறாக 'திராவிடர் இயக்கம்' என்று சொல்லை முன்னிறுத்திவிட்டார், அவர் தம்மை கன்னடர் என்று கருதி இருந்ததாலேயே தான் திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர், எனவே பெரியார் தமிழுக்கு விரோதியா ? என்கிற ஐயப்பாட்டை நண்பர் அரைபிளேடு வெளிப்படுத்தினார்.

எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பொதுமக்கள் நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்பதால் குட்டையை குழப்பி மீன் பிடிப்பதில் அதிக மீன்களை சுலமாக பிடிக்க முடியும் என்பது ஒரு வகை உத்திதான். பெரியார் கொள்கைகளை அறிந்த நண்பர் அரைபிளேடு அதுபோல் செய்திருக்க வாய்ப்பில்லை. 'திராவிட' என்ற சொல்லே 'சூத்திர' பாசை என்று இழித்துக் கூறப்பட்ட தமிழை முதன் முதலில் பலுக்கத் தெரியாமல் (உச்சரிப்பில்) திரித்துச் சொல்லப்பட்ட தமிழின் மற்றொரு பெயர் ( பாவணர் கூற்றுப்படி தமிழ் > த்ரமிள > த்ரமிட > திராவிட). பின்னாளில் தமிழிலிருந்து திரிந்து போன மொழிகளே கன்னடம், தெலுங்கு, துளு மற்றும் மலையாளம். இவை பேசப்படும் நிலப்பரப்புகளை நாம் இன்னாளில் திராவிட நிலங்கள் என்று புதிதாக அடையாளப்படுத்தவில்லை. அவை ஏற்கனவே வடமொழியாளர்களால் அப்படி குறியீடு செய்யப்பட்டவைதான். சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் திராவிட என்ற சொல்லை பார்பனீய அல்லது பிராமன சித்தாந்தங்களுக்கு எதிராக பயன்படுத்தி அந்த சொல்லை வெளிக் கொணர்ந்தவர்
அயோத்திதாச பண்டிதர். அதன் பிறகே பெரியாரும் அதே சொல்லை திராவிட இயக்கம் என்ற பெயருக்கு பயன்படுத்திக் கொண்டார்.

எதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிய கொடுமைகள் நடப்பதாக பெரியார் நினைத்திருந்தால் 'தமிழர் இயக்கம்' என்று கூட வைத்திருந்திருப்பார். அவர் கேரளா வைக்கம் வரை சென்று போராடி இருப்பதை நினைவு கூர்ந்து பார்க்கையில் ஒட்டு மொத்த திராவிட நிலப்பரப்பும் சாதிய கொடுமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்று பரந்த நோக்கில் 'திராவிடர் இயக்கம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். பெரியார் தம் இயக்கம் வலுப்பெற்றிருந்தாலும் அதை அரசியல் கட்சியாக்கி நிறுவனப்படுத்த பெரியார் நினைத்தவர் அல்ல. இந்நாளில் திராவிட கட்சிகள் கொள்கைகளை மறந்து 'தூய அரசியல்' செய்து கொண்டிருப்பதை பார்க்கையில் பெரியாரின் முன்னறிதலால்(தீர்க தரிசனம்) உணர்ந்திருந்து, திராவிட இயக்கம் அரசியல் கட்சியாக வளர்ந்தால் அதனால் சமரசங்கள் ஏற்பட்டு கொள்கைகள் திரியும் என்று நன்கு உணர்ந்திருந்தார்.

பெரியார் சுதந்திர நாளை துக்க தினமாக அறிவித்ததற்கு காரணமே ஆட்சி அதிகாரம் என்பது ஆதிக்க சக்திகளின் கைகளில் வீழ்ந்து மீண்டும் இந்திய பழமை வாதத்தைத் தாங்கிப் பிடித்து, மூவர்ண கொடி என்பது நான்கு வருண கொடியாகவே ஆகிவிடும் என்று நம்பியதால் தான். அதையே தான் மகாத்மா காந்தி வேறு வடிவில் வலியுறுத்தினார். அதாவது சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். பெரியார் சொன்னதும் சரி, மகாத்மா சொன்னதும் சரி இரண்டுமே ஆதிக்க சக்திகளின் கையில் மீண்டும் இந்தியா விழுந்துவிடும் என்று நன்கு உணர்ந்தாதால் ஏற்பட்ட மாற்றுச் சிந்தனைகள். அண்ணாதுரை போன்றவர்கள் சுதந்திர தினம் என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் குறுதிக்கு கிடைத்த பலன் என்றும் அந்த சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தது தவறு என்று போர் கொடி தூக்கிவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். திராவிட கட்சிகளின் உதயம் என்பது சுதந்திரம் அடைந்ததை குறித்த வெளிப்படையான கருத்துக்களால் பெரியாருக்கும் அவரது பற்றாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவான இயக்கம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவாக்கி முதல்வராக அமர்ந்த அண்ணாதுரை அவர்களும் அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கி தாம் பெரியாரின் பாசறையை சேர்ந்தவர் என்று பெரியாருக்கே புரியவைத்தார் என்பது பெரியார் திரைப்படத்திலும் பதிவாகி இருக்கிறது.

பெரியாரின் தமிழ்பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தகாலத்தில் தமிழ் முற்றிலும் சிதைந்ததாகவே இருந்தது. அப்பொழுது இருந்தது தமிழ் 'மொழி' அல்ல, வடமொழியை கலந்து திரிக்கப்பட்ட மணிப்பவள தமிழ் 'பாஷை'. அதன் இயல்பு நடையெல்லாம் தொலைந்து போய் பக்தி இலக்கியங்களையும், வடமொழி மொழிப்பெயர்பான இராமயணம், மகாபாரத கதா கலேசபங்களைத்தான் விழாக்களில் அரங்கேற்றி வந்தனர். பெரியார் அறிந்திருந்த தமிழ் காட்டு மிராண்டி 'பாசை' என்று சொல்லும் அளவுக்கு அது களங்கப்பட்டு இருந்தது. திருக்குறளுக்கு கொடுக்கப்பட்ட திரிக்கப்பட்ட விளக்கங்கள் போன்றே சிலப்பதிக்காரகதைகளின் உட்பொருளை சிதைத்து கற்பை முன்னிறுத்தி அவை உயர்வாக பேசப்பட்டது. இதையெல்லாம் பார்த்தே பெரியார் பழமைவாதம் பேசும் மொழியாக தமிழை நினைத்து தமிழ் 'காட்டு மிராண்டி பாசை' என்றார். பின்னாளில் அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் போன்றவர் தமிழில் இருந்த வேற்று மொழிச் சொற்களுக்கு மாற்றான புதிய தமிழ் சொற்களை சங்க இலக்கியங்களில் இருந்து அறிமுகப்படுத்தினர். பக்தி பாடல்கள் எழுதினாலும் பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களைத்தான் அவற்றில் பயன்படுத்துகிறோம் :) பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.

'மெல்லத் தமிழினி சாகும்' என்று சொல்லில் தமிழ் வீழவேண்டும் என்ற ஆசையில் தான் பாரதி தமிழுக்கு சாபம் கொடுத்தான் என்று நாமாகவே நினைத்து கேள்வி எழுப்பி பாரதியின் தமிழ்பற்றை குறைபட்டுக் கொள்ளவது எவ்வளவு நம் அறியாமையை காட்டுமோ, அது போல் தான் தந்தை பெரியாரின் தமிழ் குறித்த பேச்சுக்கள் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்.

5 மே, 2007

நான் 'கண்ட' பெரியார் !

பெரியார் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றதும், தமிழன் என்ற படம் முறையில் எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் இருந்தேன். இன்று (05-மே-2007) நிறைவேறியது. படத்தின் ஆரம்பமே பெரியார் எதிர்பாளர்கள் முன்வைக்கும் 'பெரியார் குளிக்காதவர்' என்பதைச் சொல்லவரும் காட்சியுடன் நேர்மையாக எடுக்கப்பட்டு இருந்தது. தாழ்த்தப்பட்டவன்,படிக்காதவன், குளிக்காதவன் என்ற சொற்களில் ஒருவருடைய கருத்துக்களை சிதைக்க முனைபவர்களை புறம் தள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பது பின்பு புரிந்தது.

பெரியாரின் தந்தையின் வணிக மண்டியில் ஆரம்பித்து படம் பகுத்தறிவு வெடித்துணுக்குகளுடன் தொடர்கிறது. பின்னர் அவரது தங்கைக்கு நடைபெறும் 'பால்ய விவாகமும்' அவர் தங்கை வயதுக்கு வரும் முன்னே கைம்பெண் ஆவதையும், அதன் பிறகு தங்கைக்கு வேறு ஒரு திருமணம் அவரே ஏற்பாடு செய்து நடத்தி வைப்பதையும் காட்டினார்கள். பின்பு முறைபெண் நாகம்மையுடான காதல்... பெற்றோர் எதிர்ப்பு, நாகம்மையின் தற்கொலை முயற்சி அதன் பிறகு பெரியார் - நாகம்மை திருமணம்... தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் மனைவியின் விருப்பத்துக்கு இணங்க கோவில் வாசலில் அவருக்காக காவல் இருப்பது, பின்பு கோவிலுக்குள் நாகம்மையை சில ரவுடிகள் துரத்த... நாகம்மை வெளியில் ஓடிவருகிறார். .. 'ஆண்டவன் ஆயுதங்களுடன் கோவில் முழுதும் நிறைந்திருந்தாலும் ஆபத்துக்கு உதவுபவன் மனிதன் தான்' என்று பெரியார் நாகம்மையிடம் 'நச்'சென்று சொல்லுவார்.

விரத உணவில் கோழி காலை மறைத்து வைத்து பெரியார் அவருடைய அம்மாவை ஏமாற்றுவது போன்றவை சில நகைச்சுவை காட்சிகள். தலைமறைவாக இருக்கும் ஒரு சாமியாரின் தம்பியை நீதிமன்ற நோட்டீஸ் கொடுப்பதற்காக தபேதாருக்கு பெரியார் பிடித்துக்கொடுக்க, உயர்சாதிக்காரர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். அவர்கள் முறையிட்டதும் பெரியாரின் தந்தை பெரியாரை செருப்பால் அடித்து வீட்டைவிட்டு வெளியேறும் படி சொல்கிறார். அதன் பிறகு பெரியாரின் பயணம் காசி நோக்கிச் செல்கிறது. அங்கு இரண்டு பிராமணர்களுடன் சேர்ந்து கதா கலேட்சேபம் செய்கிறார் ( இராமர் அணிலுக்கு கோடு போட்ட பாடல்) ஒரு நாள் பசிக் கொடுமையில் காசியில் இருக்கும் செட்டியார் சத்திரத்திக்குள் மூவரும் நுழைகின்றனர். அங்கே பிராமணர்களுக்குத் தான் உணவு என்றதும் பசிக் கொடுமையால் எச்சிலையில் எஞ்சியதை தின்கிறார். பின்பு ஒரு சாமியாருக்கு தேவையான பொருள்களைக் கொண்டுவரும் எடுபிடியாக சேருகிறார். அங்கிருந்த பெரிய சாமியாரின் காம லீலைகளை அறிந்து அங்கிருந்து ஊருக்கு திரும்புகிறார்.

அவருரைய தந்தையாரின் மறைவுக்குப் பின்பு பல்வேறு பொறுப்புகள் அவருக்கு வந்து சேர... அதுவரை நடிப்பது சத்யராஜ் என்று தெரிந்தது... அதன் பிறகு கண்ணாடி, மீசை என வயதிற்குறிய தோற்றம் ஏற... சத்தியராஜின் உருவம் மறைய பெரியார் தோன்ற ஆரம்பிக்கிறார். இடையிடையே ராஜாஜி அவர்களுடன் ஆழமான நட்பு, காந்திஜியுடன் உரையாடல் என செல்கிறது... ராஜாஜியின் வேண்டுகோளுக்கினங்கி... இட ஒதுக்கீடு கோரிக்கையுடன்... காங்கிரசில் பெரியார் சேர்ந்ததும் அந்த இயக்கத்திற்கு தமிழகத்தில் உரமாகிறார். கதர் புடவையை தன் அம்மாவை உடுத்த வைக்க பெரியார் சொல்லும் சாமியார் காரணம், 'ஸ்ரீலஸ்ரீ காந்திமகான் சொல்லி இருக்கிறார்' என்று காந்திஜி சொன்னதை பெரிய சாமியார் சொல்லியதாக தனது தாயிடம் சொல்லி அவருடைய ஒப்புமை பெற வைப்பதும் நகைச் சுவை வெடி.

வைக்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தும், அங்கு எதிர்ப்பு கிளம்ப... அங்குள்ள நம்புதிரிகள் சத்ரூசம்ஹாரம் என்ற பெயரில் பெரியார் அழிவதற்கு நடத்துகின்றனர். திருவிதாங்கூர் மகாராஜா இறந்து போகிறார். உங்களுக்கு நடத்திய யாகம் மன்னரை காவு கொண்டதாக பெரியாரின் நண்பர் சொல்ல... பெரியார் அவரை 'இது அதைவிட பெரிய மூடநம்பிக்கை' என்று திட்டுகிறார். மன்னரின் மறைவை ஒட்டி எல்லோரும் விடுதலை பெறவே, வைக்கத்தில் தெருநுழைவு போராட்டம் வெற்றி பெருகிறது . சிறைசென்று சாதித்து வைக்கம் வீரராக திரும்புகிறார். பின்பு காஞ்சி காங்கிரஸ் மாநாட்டில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியார் தன் கோரிக்கையை மீண்டும் வலியுருத்த ராஜாஜியும், திலகரும் எதிர்க்க... காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். பின்பு ரஷ்யா சென்று அங்கு மார்கசியத்தின் கொள்கைகள் பிடித்துப் போகவே, மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மார்கசிய கொள்கைகளை ஆதரிக்கிறார். ஒரு நாள் நாகம்மை மறைந்துவிட ... நாகம்மை தன்னிடமிருந்து விடுதலைப் பெற்றதாக சொல்கிறார். தேவதாசி முறையை தடுத்து நிறுத்துவது... தாழ்த்தப்பட்டவர்களுக்கு தண்ணீர்பிடிக்கும் உரிமை, எழுத்து சீர்திருத்தம் என போராட்டமாகவே செல்கிறது நிகழ்வுகள்.

இடையில் மணியம்மை பெரியாரின் கொள்கைப் பித்தினால் அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க ... ஒரு நாள் பெரியாருக்கும் - மணியம்மைக்கும் பதிவு திருமணம் நடக்கிறது. விமர்சனம் செய்துவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா வழி உதயமாகிறது. காமராஜருக்கு ஆலோசனை சொல்லி அவரை காங்கிரசுக்கு தலைமை ஏற்க வைக்கிறார் பெரியார். பின்பு அண்ணா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அண்ணா - பெரியாரின் உணர்சி மயமான சந்திப்பு, மணியம்மையை மேடைகளில் விமர்சித்ததற்காக அண்ணா மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் மிகச் சிறப்பானவை. அனைவரும் கோவிலில் நுழைந்து அர்சனை செய்யும் உரிமை தன் காலத்தில் நிகழவில்லை ... இது தன் நெஞ்சில் குத்திய முள் என்று சொல்லும் போது உண்மையில் நெஞ்சில் முள்தைக்க மாரடைப்பில் இறக்கிறார். காந்திஜியை தேச தந்தையாக ஏற்று எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத ஒருவருக்கு அரசுமரியாதை அடக்கம் செய்ததைக் காட்டி எதிர்ப்புகளை சமாளித்து பெரியாருக்கு கருணாநிதி அரசு, அரசு மரியாதையில் அடக்கம் நடைபெறுகிறது.



இந்த இடத்தில் பெரியார் மறைவை ஒட்டி எடுக்கப்பட்ட உண்மை காட்சிகளை காட்டினார்கள். படம் முடிந்துவிட்டதா ? என்று நினைக்க வைத்துவிட்டது.

பெரியாரே தமிழக கட்சிகள் (பிஜேபி தவிர) அனைத்திற்கும் சொந்தமானவராக இருக்கிறார். என்பதை படம் சொல்லாமல் சொல்லி இருந்தது. உண்மை தமிழர்கள் தந்தை பெரியார் என்று அழைப்பது ஏன் என்பதை உணரவைத்தது.

படத்தில் எம்ஜிஆருக்கு 1 காட்சி, கலைஞருக்கு 2 காட்சி, வீரமணிக்கு 2 காட்சி என ரொம்பவே சுருக்கி இருந்தார்கள். பெரியாரே படம் முழுவது நிறைந்து இருந்தார்... இன்றைய தலைவர்கள் படத்தை ஆக்கிரமிக்காததற்கு இயக்குனருக்கு பாராட்டுச் சொல்லவேண்டும். இடையில் பெரியார் - அம்பேத்கார் சந்திப்பு. அம்பேத்கார் பெரியாரை புத்தமததை தழுவ சொன்னதும்... இந்து மதத்தில் இருப்பதால் என்னால் அதில் களையெடுக்க முடிகிறது. ..என்று பளிச் பதில் சொல்வார்.

படத்தில் பிராமணர்களின் பங்களிப்பும் மிகுதியாகவே இருக்கிறது.

மதன் பாப் (மார்வாடி?), ஒய்ஜி மகேந்திரன், சொர்ணமால்யா, மற்றும் பல நிஜ பிராமணர்கள் நடித்து இருந்தனர். பெரியார் துவேசம் தமிழ்நாட்டில் ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதாக நான் அவர்கள் மூலம் கருத்துகிறேன். வரலாற்று நிகழ்வை அழகாக படம் ஆக்கி தொய்வில்லாமல் எடுத்துச் சென்றதில் இயக்குனர் இராஜசேகரன் வெற்றி பெற்றி இருக்கிறார். பெரியார் பற்றி அறியாமையில் எதிர்பவர்கள் (வேண்டுமென்று எதிர்பவர்கள் அல்ல) அவர்களுக்கு பிற்காலத்தில் பெரியாரின் வாழ்வு, போராட்டுக் குறித்து அறிய செய்ய திரைப்பட குறுந்தகடை (வி.சி.டி) வாங்கி பரிசளிக்கலாம்.

வித்யாசகர் திறன் முழுவதையும் இசையிலும், பின்னனி இசையிலும் கையாண்டு இருக்கிறார். தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் தன் திறனை மேலும் மெய்பித்து இருக்கிறார்.


படம் வெற்றியா தோல்வியா ?


ம்.... படம் வெற்றிப் பெற்றால் வருத்தப்படுபவர்களைப் பார்த்தும், தோல்வியானால் துள்ளிக் குதிப்போரையும்ம் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி ! அவர்களுக்கு இருக்க வேண்டிய கவலை !
:)))

அன்புடன்,
- கோவி.கண்ணன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்