பின்பற்றுபவர்கள்

நட்சத்திர இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திர இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஏப்ரல், 2012

* கேள்விகளற்ற விடை !


ரண்டாம் முறை தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு என்பது மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு, ஏதாவது மாறுபட்டு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்,  ஓரளவு எழுதிய அனைத்து இடுகைகளும் எனக்கு மன நிறைவைத் தந்தது, மூன்றே மூன்று இடுகைகளுக்கான தகவல்களை மட்டுமே முன்கூட்டித் திரட்டி இருந்தேன், மற்றபடி அனைத்து இடுகைகளும் அன்றன்றே எழுதி வெளியிட்டவையே, இடையில் நான் உணர்ந்த நில அதிர்வு பற்றிய தகவலை என்னுடைய மற்றொரு பதிவில் வெளியிட்டேன், நில அதிர்வு நடந்த ஐந்தாம் நிமிடம் மற்ற ஊடங்களில் வெளிவருவதற்கு முன்பே நில அதிர்வை அறியும் USGS வெப்பதளத்தில் அதிர்வு அளவை மட்டும் சரி பார்த்துவிட்டு உடனேயே நில அதிர்வின் தகவலையும் சுனாமி விழிப்புணர்வு குறித்து பதிவுலகம் அறியச் செய்தது சென்றவாரத்தில் நட்சத்திரப் பதிவுகளைத் தாண்டி எனக்கு மனநிறைவைத் தந்தது, வலைப்பதிவுகளில் பலம் அது தான்,. வெளியே எந்த ஒரு ஊட்கத்திலும் இது போன்ற எச்சரிக்கைக் குறித்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிடமுடியாது, அதை நாம் ஊடகப் பொறுப்புணர்வு என்று வகைப்படுத்தாவிட்டாலும், அவர்கள் கொடுக்கும் தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று, நடக்காத ஒன்று என்று தெரியும் பொழுது ஊடகத்தின் பெயர் கெட்டுவிடும், அதனால் இது போன்ற உடனேயே எச்சரிக்கைச் செய்ய வேண்டிய தகவல்களுக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்களுக்கும், மேலிடத்து அனுமதிக்கும் காத்திருப்பர், நமக்கு (வலைப்பதிவர்களுக்கு) அது போன்ற தடைகள் எதுவும் இல்லாததால், நாம் நேரிடையாக அறிந்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிட முடியும்.

நட்சத்திர வாரத்தில் எழுதிய அனைத்துப் பதிவுகளுமே 'வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை' யில் வந்து போனது, ஒரே நாளில் எழுதிய மூன்று இடுகைகள் கூட அவ்வாறு அதிகம் பார்வையிடப்பட்ட பட்டியலில் இருந்தாலும், தமிழ்மண திரட்டி வரையறையின் படி ஒருநாளில் ஒருவரின் ஒரு இடுகை மட்டுமே முகப்பில் காட்டப்படும் என்பதால் மற்ற இடுகைகள் முகப்புப் பக்கத்தில் வரவில்லை, ஆனால் தமிழ்மணத்தின் தனிப்பக்கமான மற்றொரு 'இன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்' பகுதியில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எனது இடுகைத் தலைப்பும் உட்பொருளும் படிப்பவர்களை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.


மேலும் எழுதிய சில இடுகைகளை, 'திகட்டும்' என்பதால் நான் வெளியிடவில்லை, அதை நான் பிறகு மற்றொரு நாள் வெளியிடுவேன். 

வாழ்த்து மற்றும் கருத்துரை விட்டுச் சென்ற பதிவர் அன்பர்கள்

Robin, புதுகை.அப்துல்லா, kari kalan,பிரியமுடன் பிரபு, ராமலக்ஷ்மி, மோகன் குமார், கபிலன், ரவிச்சந்திரன், என். உலகநாதன், முனைவர் பரமசிவம், துளசி கோபால், T.V.ராதாகிருஷ்ணன், தேவன் மாயம்,தமிழ்சேட்டுபையன், தனிமரம், சேலம் தேவா, அம்பலத்தார், புதுகை.அப்துல்லா, ராஜ நடராஜன், thequickfox, குமரன் (Kumaran), nigalkalathil siva, Amudhavan, ஆ.ஞானசேகரன், நண்டு @நொரண்டு -ஈரோடு, ILA(@)இளா, கிரி, SathyaPriyan, சுவனப்பிரியன், நட்புடன் ஜமால், இராம.கி, தருமி, சிவபாலன்,Vinoth Kumar,  வவ்வால், ராஜ நடராஜன், அறிவன்#11802717200764379909, Vairai Sathish, அன்பை தேடி,,,அன்பு, நம்பள்கி!, கல்வெட்டு, சார்வாகன், தறுதலை, renga, மாதேவி, Jawahar,மௌனகுரு, jaisankar jaganathan,புலவர் சா இராமாநுசம், கிளியனூர் இஸ்மத், அமர பாரதி, renga, அன்பு ஆமீரா, BADRINATH, Krishna Moorthy S, முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ், guna thamizh, கிரி, Karthik Vasudhevan, koodal bala, விழித்துக்கொள், அப்பாதுரை, இராஜராஜேஸ்வரி, வே.சுப்ரமணியன், எல் கே, Ramachandranwrites, பழனி.கந்தசாமி, பனிமலர், O.R.B Raja, ரமேஷ் வெங்கடபதி, மாயன்:அகமும் புறமும், Anonymous, தமிழ் ஓவியா, smart, kamalakkannan, Chilled Beers, Gaana Kabali மற்றும் ganabathy 

- இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், பெரும்பாலான பதிவுகள் அன்றன்றே எழுதி வெளியிட்டச் சூழலில் பின்னூட்டங்களுக்கு உடனடியாக மறுமொழிய முடியவில்லை.

மேலும் எனக்கு அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் குறுந்தகவலால் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இடுகைகளை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(நட்சத்திர வார இடுகைகளை வாசித்தவர்கள் எண்ணிக்கை : 8,771)

நட்சத்திர பதிவர் வாய்ப்பு நாம் கேட்டுவாங்குவதில்லை, அதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுக்கிறார்கள் என்று பொருளும் இல்லை, நன்றாக எழுதிக் கொண்டு வந்தால் தமிழ்மண நிர்வாகிகளின் கவனத்திற்கு செல்லும், அல்லது தமிழ்மணம் நிர்வாகிகளை அறிந்தவர்கள் நன்றாக எழுதும் பதிவர்களின் பெயர்களை பரிந்துரைப்பார்கள். அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அதை மட்டுமே அல்லது பிரச்சார உத்தியில் எழுதுபவர்களுக்கு அவ்வாய்ப்புக் கிடைக்காது என்றே நினைக்கிறேன், இவை எனது அவதனிப்பின் மூலமாக அறிந்துள்ள தனிப்பட்ட கருத்து,

திரும்பப் படித்துப் பார்க்கும் நேரமின்மையால் நட்சத்திர இடுகைகளாக எழுதியவற்றின் எழுத்துப் பிழைகளை சரிபார்க்க முடியவில்லை. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மணம் நிர்வாகக் குழு மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்துவரும் இந்தவார நட்சத்திரப் பதிவருக்கும் நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.

15 ஏப்ரல், 2012

* தமிழர்களின் வீண் பெருமை !


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் - மனித இனம் உட்பட ஏனைய உயிர்களும் பிறப்பினால் மேன்மையானவை என்று சொல்லியவன் ஒரு தமிழன், அண்மையில் தான் இந்த கருத்து உலகத்தினரில் சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது என்பதாக விலங்கு பாதுகாப்பு அமைப்புகளாக 'ப்ளூ க்ராஸ்' அமைப்புகள் தோன்றியுள்ளன, நிற அடிப்படைடில் மனிதனையும், ஏனைய விலங்குகளையும் அடிமையாகவும் அற்பமாகவும் நினைக்கும் புற உலகில் அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதியவன் தமிழன்.

முல்லைக்கு தேர், மானுக்கு போர்வை என்று தாவிரங்களையும், விலங்குகளையும் நேசித்திருகின்றனர் தமிழ் மன்னர்கள், புதுச் சிந்தனை என்ற பெயரில் நம்மவர்களே முல்லைக்குக் கொடுத்தத் தேரை உருவாக்க வெட்டப்பட்ட மரங்கள் எத்தனையோ, எனவே மன்னன் தாவிரங்களிடம் அன்பாக இருந்தால் தேரைக் கூடப் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாமே என்பர். சுற்றுச் சூழல் விழிப்புணர்வில் நாம் இவ்வாறு சொனனாலும், காடுகள் நிறைந்த அந்த காலத்தில் மரத்தை வெட்டுவது பெரிய இழப்பாக இருந்திருக்கவில்லை, தவிர காடுகளை அழித்து நாடுகளாக்குவது, விரிவாக்கம் செய்வது தான் மன்னர்களின் வேலை, ஆனால் முல்லைக்கான தேர் என்ற தகவலில், முல்லை இயல்பாக கொடியில் படர்ந்து வளர்வது அதற்கு பற்றிக் கொள்ள கொழுக் கொம்பு இல்லாததால் அது தனது இயல்பான வளர்ச்சியை எட்டமுடியாமல் தவிக்கிறதோ என்று வருந்தி மன்னன் தன் தேரைக் கொடுத்தான் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என்றார் வள்ளலார், அப்படி என்றால் சைவரான அவர் கீரைக் குழம்பு சாப்பிட்டது இல்லையா ? என்கிற குதர்க்கத்தினால் என்ன பயன் ? பயிர் பலனுக்கானது என்றே விதைக்கப்படுகிறது, அவை பலன் தரும் முன்பே அவற்றை பராமரிக்காமல், கவனிக்கப்படாமல்,நீர் ஊற்றாமல் இருப்பதைப் பார்த்து வள்ளலார் அவ்வாறு குறிப்பிடுகிறார், பருவம் எய்தியவர்கள் பயன்படா வாழ்க்கை என்பதை வைத்து முதிர்கன்னி கவிதைகள் எழுதுவோர் சற்று நினைத்துப் பார்க்கவும், இங்குப் பயிர் வாட்டமும் கன்னிப் பெண்ணின் வாட்டமும் பயனற்ற நிலை என்ற அளவில் பார்க்க, பயன் தருவதால் தனக்கும் பெருமை என்ற நிலையை பயன்பாடற்ற நிலை தருவதில்லை, வீணடிக்கப்படுகிறது, பயனற்றுப் போகிறது தவிர தன்னுடைய தன்மையையும் அது (பசுமைத்) தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகிறதே என்கிற வாட்டம் தான் வள்ளலாரின் வாட்டம், கீரைக் குழம்பு சாப்பிடுவது பற்றி அல்ல.

கவிஞர் அறிவுமதிப் சிங்கை நிகழ்ச்சியில் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு தகவல் சொன்னார், இன்றும் வடவர்கள் இராவணை அழிப்பதாகக் கூறி ஆண்டு தோறும் தெற்கு நோக்கி வில்லில் நாண் தொடுத்து அம்புகளை விடுகின்றனர், ஆனால் கொலைக் கருவியில் ஒன்றான வில்லை கவிழ்த்து வைத்து இசைக்காகப் பயன்படுத்துகிறான் தமிழன், வில்லுப்பாட்டு, உலகிலேயே கொலைக் கருவியையும் இசைக் கருவியாக்கிப் பயன்படுத்தும் பெருமை பெற்றவன் தமிழன் தான்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - அவ்வையார், உலகில் எந்த ஒரு நாட்டிலும் தாய் தந்தையரை கடவுளாகப் போற்றும் வழக்கம் கிடையாது, உலக வழக்கம் பெற்றோர்களிடம் அன்பு செலுத்துவது மற்றும் அவர்களின் பாதுகாப்பில் வளரும் வரை இருப்பது மட்டுமே, தாய் தந்தை தான் முதலில் உனக்கு தெய்வம் மற்றதெல்லாம் பிறகே என்றவன் தமிழன்

யாதும் ஊரே யாவரும் கேளீர் - எல்லா நாடும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்று உலகெங்கிலும் பல்வேறு படையெடுப்புகளைத் தான் காலம் தோறும் கடைபிடித்தே வருகின்றனர், ஆனால் உலகத்தில் உள்ள எல்லா ஊரும் ஒன்றே தான், அவற்றில் வேறுபாடுகள் இல்லை, உன் நாட்டை நேசிப்பது போல் பிற நாட்டையும் நேசி என்கிறார் கனியன் பூங்குன்றனார், ஒரு தமிழர்.

எல்லாவற்றிக்கும் மேலாக குற்றம் செய்தவன் கடவுளே ஆனாலும் 'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று எடுத்துரைத்தான் தமிழன், எவருக்கு வரும் இந்தத் துணிவு ? 

தமிழர் தம் தனி இயல்புகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால்

இவற்றையெல்லாம் நினைத்துப் பெருமைபடுங்கள் என்று நான் சொல்லவரவில்லை, பழம்பெருமையில் திளைத்திருங்கள் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை ஆனால் இவை தமிழனின் தனிச் சிறப்பாக இருந்தது, பெருமைக் குரியதாக இருந்தது இலக்கியம், வாழ்வியல், விலங்குகளையும், தாவிரங்களையும் நேசிப்பது இவற்றை நாம் எந்த பிற மொழி/மத. இனத்தினரிடமிருந்தும் கற்றுக் கொள்ளத் தேவை இல்லை, இவற்றையெல்லாம் நான் கற்றுக் கொடுக்கும் நிலையில் தான் நாம் இருந்தோம் தற்போது தன்னிலை மறந்துவிட்டோம். நமது பெருமைகளெல்லாம் வீண் (வீணாகப்) போய்விட்டது

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

என்பதை மட்டும் நாம் நம் பொருளியல் சார்ந்த தன்னல வாழ்கைக்காக பின்பற்றிவருகிறோமோ.

பின்குறிப்பு : தமிழ்மண நட்சத்திர வாரத்தின் இடுகைகள் இத்துடன் முற்றிற்று, திங்கள் கிழமை காலை ஒரு நன்றி நவிழல் இடுகையுடன் என் நட்சத்திர வாரம் நிறைவுறும்.

14 ஏப்ரல், 2012

* போகாத ஊருக்கு சில வழி !

ரு இடத்தில் மனிதனின் காலடிபடுவதால் பூமிக்கு ஒண்ணும் பெருமை கிடையாது, மனிதன் காலடிபட்டால் காடுகள் அழிக்கப்படும், மனிதர் தவிர்த்த உயிர்வாழ்க்கைக்கு அங்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை

****

ண்டார்டிக்கா பற்றி பாட நூல்களில் படித்திருக்கிறோம், அதில் எவ்வளவு தகவல்கள் நினைவில் இருக்கின்றன என்று தெரியாது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்புகளில் அண்டார்டிக்கா ஐந்தாம் இடத்தில் வருகிறது. 96 விழுக்காடு பனிக்கட்டிகளால் பரவி இருக்கும் கண்டம், தென் துருவம் இங்கு தான் அமைந்திருக்கிறது.  தெற்குமுனைப் பெருங்கடலால் முழுவதுமாக சூழப்பட்ட தீவு கண்டம். மொத்தப் பரப்பளவு 1 கோடியே 50 லட்சம் சதுர கிமீ. அண்டார்டிக்கா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்கா கண்டமும் பூமியின் ஒரே நிலப்பரப்பாக இணைந்திருந்து பின்னர் பிரிந்து சென்றுள்ளதாம். தற்பொழுது ஆண்டுக்கு 10 மீட்டர் என்ற அளவில் தென் அமெரிக்காவின் பக்கமாக நகர்ந்துவருகிறதாம். 


வெப்ப நிலை : அண்டார்டிக்காவின் தட்பவெப்பம் உறை நிலைக்கு கீழேயே ஆண்டு முழுவதும் இருக்கிறது, குளிர் சூறைக்காற்றுடன் குளிர்காலங்களில் அதன் வெப்ப நிலை - 82 டிகிரி, கோடை காலங்களில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 5 டிகிரி வரை இருக்குமாம். முழுவதுமாக பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளதால் பனிப்பாலைவனம் என்றும் சொல்லப்படுகிறது, கடற்கரைப் பகுதிகளில் பென்குயின் மற்றும் சீல் போன்ற கடுங்குளிர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன, மையம் நோக்கிச் செல்லச் செல்ல அதுவும் கிடையாது, சில பறவை இனங்களும், நுண்ணியிரிகளும் தென்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. அண்டார்டிக்கா என்பதற்கு  (ரோமன் மொழியில்) 'தென் முனையம்' என்பதே மொழிப் பெயர்ப்பாம். உலக நன்னீரின் 70 விழுகாடு அண்டார்டிக்காவில் மட்டுமே பனியாக உறைந்துள்ளதாம். அதெல்லாம் சேர்ந்து உருகினால் கடல் மட்டம் 200 அடிக்கு உயரும் என்கிறார்கள். அண்டார்டிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை ஆனால் உறைந்த நிலையில் ஏரிகள் பல உள்ளனவாம், அவற்றிளுள் துளையிட்டு ஆராய அப்பரப்பு வியாழன் கோளின் சந்திரனை ஒத்து இருப்பதால் ஏரியில் ஏதேனும் உயிரினம் வசித்ததாக கண்டிபிடித்தால் வியாழனின் சந்திரனிலும் உயிர் வாழ்க்கைக்கு வாய்ப்புள்ளது என்று தெரியவருமாம்.

அண்டார்க்டிக்கா பற்றி நாம் முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டியது அதன் கடுங்குளிர், பனிப்பாறைகள் தான் உலகின் அனைத்து கடல்களில் தட்பவெப்பங்களை சரி செய்து நாம் வாழும் நிலப்பரப்புகளின் சுற்றுச் சூழலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது, அண்டார்டிக்காவின் பனி உருகினால் கடல் மட்டம் உயருவதுடன் வெப்பமும் மிகுதியாகும். அதனால் தான் அண்டார்டிக்காப் பகுதி பண்ணாடுகளால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது, பசிபிக் கடலில் நடக்கும் அணுகுண்டு சோதனைகள் அண்டார்டிக்காவில் நடப்பது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் உருகும் பனி கடல் நீரில் சேர்ந்து பின்னர் குளிர்காலத்தில் கடல் நீரிலிருந்தே பனிக்கட்டிகள் உருவாகிவிடுமாம், அதனால் அண்டார்டிக்காவின் வெப்ப நிலை தம்மைத் தாமே சரி செய்து கொள்வதாக சொல்கிறார்கள். வட துருவத்தைக் காட்டிலும் தென் துருவ அண்டார்டிக்காவில் குளிர் மிகுதி ஏனெனில் இது கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் நிலப்பரப்பில் அமைந்திருப்பதால் தான் என்கிறார்கள்.




பகல் இரவு :  ஐரோப்பிய சாலைகள் அனைத்தும் ரோமை நோக்கிச் செல்கிறது என்று சொல்வது போல் அண்டார்க்டிக்காவின் மையத்தில் இருந்து எந்தப் பக்கமும் பயணம் செய்ய அது வட திசை நோக்கியே அழைத்துச் செல்லுமாம், அண்டார்க்டிக்கா தென் முனையமாக இருப்பதால் அதன் எந்த பக்கமும் வட திசை நோக்கியதே.  திசை நோக்கித் தொழ வாய்ப்பு இல்லை, பண்ணாடுகள் அங்கு ஆய்வுக்கூடங்கள் அமைத்துள்ளன, அவர்களையும் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கும் அங்கு கிறிஸ்துவ தேவாலயங்கள் ஒன்று இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆண்டில் ஒரே ஒரு பகலும் ஒரே ஒரு இரவும் மட்டுமே அங்கு வருகிறது.  அக்டோபர் துவங்கி பிப்ரவரி வரை சூரிய வெளிச்சம் கிடைக்கும், பின்னர் முழுவதுமாக இருட்டு தான், அந்த வேளையில் சூரியன் வட துருவத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டு இருக்கும். பகலாக இருக்கும் பொழுதுகளில் சூரியன் அதிக பட்சமாக 23.5 டிகிரி கோணத்திற்கு மேல் வருவது கிடையாது, நமக்கு தெரிவது போன்று கிழக்கு உதயம் மேற்கு மறைவு போன்ற நிகழ்வுகள் கிடையாது, 0 டிகிரியில் இருந்து 23 .5 டிகிரிவரை மூன்று மாத காலம் உயரவும் பின்னர் குறைந்து அடுத்த மூன்று மாத காலமும் மறையவும் துவங்கும், சூரியன் வட்டப் பாதையில் தரையில் இருந்து வானில் 23.5  டிகிரி சாய்வில் கடிகார திசைக்கு எதிராக வளையமாக சுற்றிவருதாகத் தெரியும். துருவங்களில் சூரியப் புயலினால் தாக்கம் வண்ண வேடிக்கையாகவும், பனித்துகளின் தூசிகளால் பல சூரியன்களும், சூரியனைச் சுற்றி பெரிய ஒளி வட்டமும் (Sun Dog) காட்சிக்கு வருவது இந்தப் பகுதியில் நடக்கும் இயற்கைக் காட்சிகள்.




நேரப் பகுதி : அண்டார்டிக்காப் பகுதியை எந்த ஒரு குறிப்பிட்ட நேரப்பகுதி (Time Zone) பகுதிக்குள் அடக்க முடியததால், தனிப்பட்ட நேரம் கிடையாது, ஆனாலும் வசதிக்காக நியூசிலாந்தின் நேரத்தை ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். 

மக்கள் நடமாட்டம் : அண்டார்டிக்காவில் முதன் முதலாக கால் பதித்தவர்கள் என்கிற பெருமையை 31 அக்டோபர் 1956ல் Admiral George J. Dufek  என்பவரின் அமெரிக்க கடற்படை குழுமம் பெற்றிருக்கிறது, பிறகு பல நாடுகளில் இருந்து அங்கு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டவர் பலர், டிசம்பர் 30, 1989, Arved Fuchs மற்றும் Reinhold Messner ஆகிய இருவர் அண்டார்டிக்காவின் கடற்கரைப் பகுதியில் இருந்து மையம் நோக்கி நடந்தே சென்று அடைந்துள்ளனர்.  அதன் பிறகு 2009ல் Todd Carmichael என்கிற அமெரிக்கர் 39 நாட்கள் நடைபயணமாக அடைந்திருக்கிறார், பின்னர் மற்றொரு நார்வேகாரர் Hercules Inlet என்பவர் அதே தொலைவை 2011 ஆம் ஆண்டில் 29 நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.  தற்பொழுது 1000 - 5000 பேர் ஆராய்ச்சியாளர்களாக பல நாடுகளைச் சார்ந்தவர்களாக அங்கு தங்கி இருக்கிறார்களாம்.

அண்டார்டிக்கா தனி கண்டம் என்றாலும் மையப்பகுதியில் இருந்து கோணம் கோணமாக பகுத்து அதனை அமெரிக்கா, அர்ஜென்டைனா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் பங்கு போட்டுக் கொண்டுள்ளன, அண்டார்டிக்காவிற்கு தனிப்பட்ட இணைய தள குறியீடாக .aq  (https://www.google.com/search?q=site:aq) உண்டு, அதில் 100க் கணக்கான இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. அண்டார்டிக்கா பகுதிகள் பல்வேல்வேறு நாடுகளால் பங்கு போட்டுக் கொண்டாலும் அந்த கண்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், முழுக்கண்டமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நாட்டின் இராணுவ செயல்பாடுகளும் தடுக்கபப்ட்டுள்ளது. கொஞ்சம் இயற்கை வளங்கள், தாதுத் பொருள்கள் இருந்தாலும் அவற்றை எடுப்பதற்கும் தடை உள்ளது.

ஓசோன் திறந்தவெளி அண்டார்டிக்காவின் மீது உள்ளது, ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகிவருவதால் அண்டார்சிக்காவின் பனி உருகினால் உலமே தண்ணீரில் மூழ்கிவிடும்.

அண்டார்டிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாரும் கிடையாது, பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு முழுவதும் ஆள் மாற்று (ஷிப்ட்) முறையில் மாறி மாறி தங்கிச் செல்கிறார்கள், மற்றபடி சுற்றுலா சாதனையாளர்கள் வந்து செல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் தவிர்த்து வேறு யாரும் (அதாவது அக்டோபர் - மார்ச்) தவிர இரவு பொழுதுகளில் ஏப்ரல் - செப்டம்பர்) வரை வந்து செல்வது கிடையாது, சில நாட்களில் குறைவான நிலா வெளிச்சம் தவிர்த்து எப்போதும் இருட்டாகவே இருக்கும்.

சிலி நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அண்டார்டிக்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர், அதற்கான சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியாவில் இயங்கும் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி வரையில் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளனர், இந்த விமானங்கள் அண்டார்டிக்காவில் தரையிறங்காது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே இருக்கும் அண்டார்டிக்காப் பகுதியில் தாழ்வாகப் பறந்து வட்டமடித்து திரும்பிச் செல்லும், அண்டார்டிக்காவின் கடும்பனியில் ஓடுதளம் அமைக்கவோ அதனை பரமரிக்கவோ வாய்ப்பில்லை என்பதால் அண்டார்டிக்காவின் குளிர் குறைவாக இருக்கும் காலங்களில் மேலே இருந்து சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டை ஆஸ்திரேலியா நிறுவனங்கள் செய்துவருகின்றன.

கோடை காலங்களில் (குறைவான குளிர் காலங்களில் மற்றும் சூரிய வெளிச்சம் உள்ள காலங்ங்களில்) சிலி நாட்டின் புன்டோ ஏரிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 100 பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானங்கள் அண்டார்டிக்காவுக்கு அருகே இருக்கும் கிங்க் ஜார்ஜ் தீவிற்கு செல்கிறது, அங்கிருந்து சிறிய கப்பல் வழியாக அண்டார்டிக்கா கடற்பகுதியை அடைகின்றனர், இது 7 நாள் கொண்ட சுற்றுலாவிற்கு அமெரிக்க வெள்ளிகள் 15,000 வரை செலவாகும்.

பூமியின் வியப்புகளில் அண்டார்டிக்கா ஆகப் பெரிய வியப்பு

13 ஏப்ரல், 2012

* தமிழ் புத்தாண்டு மீசை மயிரா ?


சில இஸ்லாமிய தளங்களில் மாற்று மத அன்பர்களுக்கு வாழ்த்து சொல்லலாமா ? கூடாதென்றெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்லி, சொல்லக் கூடாது மீறிச் சொன்னால் மத நம்பிக்கைக்கு எதிரானது என்றெல்லாம் சொல்கிறார்கள், என்று முன்பு சுட்டிகளோடு எழுதி இருக்கிறேன். இப்ப அதே நிலைமை தமிழ் புத்தாண்டிற்கும் ஏற்பட்டிருப்பதை இங்குச் சொல்கிறேன்.

ஆன்றோர் சான்றோர் எது தமிழ் புத்தாண்டு என்று சொன்னார்கள், கொண்டாடினார்கள் என்கிற ஆராய்ச்சிக்குப் போகவிரும்பவில்லை, அது பற்றி ஏற்கனவே திரு இராமகி ஐயா மற்றும் கண்ணபிரான் ரவிசங்கர் (கே ஆர் எஸ்) எழுதியுள்ளனர், நான் எனது தமிழ் புத்தாண்டை திருவள்ளுர் ஆண்டின் தைத் திங்களில் மாற்றிக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதன் பிறகு சித்திரை திங்கள் ஒன்றாம் தேதியை எப்போதும் வந்து போகும் ஒரு நாளாகத்தான் பார்க்கிறேன், இதற்குக் காரணம் கருணாநிதி தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தார் என்பதற்கு அல்ல, இந்த தமிழ் புத்தாண்டு நாள் மாற்றம் ஏற்கனவே 71 ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் ஆர்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டவையே, கருணாநிதி ஆட்சி ஆளுமைகளில் இருந்ததால் நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்பதாக சென்ற ஆட்சியில் மாற்றினார், ஆனால் இதை அவர் முன்பு எப்போதோ செய்திருக்க வேண்டியது. தனித்தமிழ் ஆர்வலர்கள் என்றால் யாரு ? அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்போர் கே.ஆர்.எஸ் இடுகையைப் படிக்கவும்.
(இதில் யாரும் இறை மறுப்பாளர்கள் இல்லை)

என்னைப் பொருத்த அளவில் 100 ஆண்டு காலக் கோரிக்கைகளுக்குப் பிறகு சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் செம்மொழி என்பதை மைய அரசு அறிவித்தது, அவ்வாறு அறிவிக்காத முன்பு தமிழ் சொம்மொழி வரையறைக்குள் வரவில்லை அல்லது தகுதி இல்லாமல் இருந்தது என்கிற கூற்று இருந்தால் அதில் எள்முனை அளவும் அறிவார்ந்த சிந்தனைகள் இல்லை என்பது போல் தான். கருணாநிதி அறிவிக்காத முன்பு சித்திரை 1ல் தான் புத்தாண்டு இருந்தது தைக்கு பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்பும் இல்லை என்பது போன்ற கூற்றும். தமிழுக்கு செம்மொழிக்கான அனைத்து தகுதி இருந்தும் செம்மொழியாக அறிவிக்க மைய அரசைக் கெஞ்சியது போன்று தை 1 க்கு தமிழ் புத்தாண்டை மாற்றக் காரணங்கள் ஏற்கனவே இருந்தது, அதற்காகவே தமிழார்வளர்கள் காத்திருந்ததும் உண்மையே. தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக மாற்றிக் கொண்டால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மதச் சார்பற்று கொண்டாடலாம் என்கிற பரிந்துரைகளும் இருந்தது,  சித்திரை 1ஐ புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் தமிழ் இந்து பண்டிகையைப் போன்று வடை பாயசத்தோடு படையல் மற்றும் அன்று மாலை கோவிலுக்குச் செல்வது என்பதுடன் முடிந்துவிடுகிறது. பிற மொழிப் பேசுபவர்கள் தங்கள் புத்தாண்டுகளை பெரிய அளவாக மதச் சார்பற்று கொண்டாடுவதைப் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் தமிழ் புத்தாண்டு என்று சித்திரை 1ல் கொண்டாடுவதில் எந்த ஒரு தனிச் சிறப்பும் கிடையாது. சித்திரை 1 என்பது ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், வைகாசி விசு, ஆடிப் பூரம், மாசி மகம், தைப் பூசம் போல் வந்து போகும் வெகு சாதாரண ஒரு இந்துப் பண்டிகை என்ற அளவிலேயே மொழிச் சார்ந்த தனி அடையாளத்தைச் சிதைத்து சுருக்கி இருக்கிறார்கள்.

நாம விருப்பப்படி வைத்துக் கொள்ள தமிழ் புத்தாண்டின் தேதி என்ன மீசையா ? என்ற கேள்வியை சித்திரை 1 ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுபவர்கள் கேட்கிறார்கள், காலத்திற்கும் எவனோ இழித்துச் சொன்ன தீண்டத்தகாதவன் என்கிற இழிச் சொல்லை சுமக்க மறுப்பது இந்த மீசை வரையறைக்குள் வருமா என்று தெரியவில்லை, இன்றைக்கு அட்சய திருதியை ஒன்றை நுழைத்திருப்பதைப் போன்று என்றோ ஒரு நாள் நுழைக்கப்பட்டதே தமிழ் திங்களின் பெயர்களும் அதன் துவக்கமும், மாற்றிக் கொள்வதால் தமிழ் தனித் தன்மையை மேலும் கூட்டிக் கொள்கிறதே அன்றி அதனால் தமிழுக்கு கெடுதலோ, சிறுமையோ கிடையாது

********

நான் முன்பு பொங்கல் அன்று தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்று கூகுள் + ல் அறிவித்திருந்தேன், நியமாகப் பார்த்தால் நாம கொண்டாடாத ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ் நாளுக்கும் அந்த நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம், ஆனால் நான் தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்றதும் சபிக்காத குறையாக சிலர் விவாதம் என்றப் பெயரில் கருத்துக்களைக் கூறி இருந்தனர், நான் தெளிவாகச் சொன்னேன், 'நீங்கள் தான் கொண்டாடவில்லை, அதை நான் ஏன் என்றும் கேட்கப் போவதில்லை, உங்களுக்கு விளக்கினாலும் வெளங்காது, ஆனால் கொண்டாடும் என்னை நீங்கள் வாழ்துவதற்கு உங்களுக்கு என்ன தடையோ ?'  இதில் புரியாதது என்றும் ஏதும் உண்டா ? 'வீம்புக்கு கொண்டாடுவதற்கெல்லாம் நாங்கள் வாழ்த்து சொல்ல மாட்டோம்' என்றனர். அப்படிப் பார்த்தால் என்னைப் பொருத்த அளவில் சித்திரை 1 யே அவர்கள் பிடித்துத் தொங்குவதும் எனக்கும் வீம்பாகத்தானே படும். வழக்கத்தை மாற்றுவது தர்மம் இல்லை, ஞாயம் இல்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள், தமிழ் நாட்டில் ராம நவமி என்று ஒன்று கொண்டாடப்படுகிறது, திருவரங்கம் தவிர்த்து ஏனையை பெருமாள் கோவிலும் ஒரு திங்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இராம நவமியின் அதே நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் கொண்டாடப்படுவதில்லை, அதற்குக் காரணம் சொல்கின்றனர், மற்ற கோவில்களில் கொண்டாடுவது 'சந்தர மாஸத்தை அடிப்படையாக கொண்டது, ஶ்ரீரங்கத்தில் ஸூர்ய மாஸத்தை அடிப்படையாகக் கொண்டது' இவற்றையெல்லாம் மாற்றி மாற்றிக் கொண்டாட ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து வைத்திருப்பதிலும் அதன் நடை முறைகளிலும் முரணே இல்லையாம், தமிழ் புத்தாண்டின் திங்களை மாற்றுவது தான் முரணானதாம்.

ஈழப்போரில் வென்றதன் நினைவாக இராஜபக்சே ஒரு வெற்றி நாள் அறிவித்து அதை அனைத்துக் குடிமக்களும் கொண்டாடச் சொல்லி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தால் நூற்றாண்டுகளுக்குப் பின் தம் முன்னோர்களை அழித்து வெற்றி கொண்டதன் அடையாளம் தான் அந்த நாள் என்று தெரியாமலேயே இலங்கைத் தமிழர்களும் அதைக் கொண்டாட நேரிடும். நாம தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் தமிழ் அடையாளங்களை அழிக்க முயன்றதின் அடையாளங்களில் ஒன்று.

என்னதான் சங்கு ஊதினாலும் கேட்காத காதில் கேட்காது.

ஆனாலும் நான் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களை வாழ்தத் தயங்கும் அளவுக்கு எனக்கு சிறுமதி இல்லை. 

சித்திரையை தமிழ் புத்தாண்டாகவே கொண்டாடும் அனைத்து தமிழ் 'இந்து'க்களுக்கும் நல்வாழ்த்துகள். 

ஹேப்பி டமில் நியூ இயர் டூ யூ !



12 ஏப்ரல், 2012

* ஏழு தலைமுறை ஆணாதிக்கப் பெருமை !


பார்பனர்கள் சந்தியா வந்தனம் சொல்றச்சே....சொல்லும் போது ஏழு தலைமுறைகளின் பெயர்களாக அவர்களுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா கொள்ளுத் தாத்தாவின் அப்பா, கொள்ளுத் தாத்தாவின் தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தாவின் கொள்ளுத் தாத்தா பெயர்களைக் குறிப்பிட்டு இப்படியான பெருமைக் குரிய பாரம்பர்யத்தில் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கும் படி மந்திரம் இருக்கும். இவ்வாறு பரம்பரைகளின் பெயரைத் தெரிந்துள்ள பார்பனர்களில் சிலர் பார்பனர் அல்லாதவர்களைப் பார்த்து 'மூன்று தலைமுறைக்கு முன் உன் முன்னோர் பெயர் தெரியுமா ?' என்று நக்கலாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள், வலைப்பதிவிலும் முன்பு இத்தகைய விவாதங்கள் ஓடியது. நாடோடிகள் படத்தில் சசிக்குமார் ஒரு காட்சியை வைத்து தனக்கு அவருடைய தந்தையின் முன்னோர்களைத் தெரியும் என்று குறிப்பிட்டு ஒவ்வொரு ஊர் மற்றும் அவர்கள் வசித்த இடங்களைப் பற்றி படத்தில் கூறி கைதட்டல் பெறுவார். பார்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நம்ம அப்பங்காரன் இதையெல்லாம் நமக்குச் சொல்லவில்லையோ என்று நினைத்து வருந்துவார்கள். நாம் எதோ தவறு செய்து முன்னோர்களை புறக்கணித்துவிட்டோம் என்றே நினைப்பர்.

முப்பாட்டன் பெயர்களை நினைவு வைத்திருப்பதோ அது ஒருவரின் தனிப்பட்ட பெருமைக்குரிய ஒன்று என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் இவர்களில் எத்தனை பெயர் தாய் வழி உறவையோ அல்லது தந்தையின் அப்பா, தாத்தா.......கொள்ளுத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தாவின் மனைவிப் பெயரையோ தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தான் என் கேள்வி. ஆணிய சிந்தனையில் (தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே) என்பதாக குடும்பத் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்களுக்கும் கொடுத்த மதிப்பை அவர்களின் மனைவியர் பெயர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள் ?

ஒரு குழந்தைக்கு பெற்றோர் என்றால் அதில் அப்பா - அம்மா இருவரும் சம அளவில் தான், இதில் தந்தையின் தந்தையை மற்றும் அவருடைய தந்தை என நினைவு வைத்திருப்பவதும், முன்னோர்களைப் போற்றுவதாகக் கூறுவதும் அதைப் பெருமை என்றும் அவ்வாறு தெரியாதவர்கள் தன் வரலாறு தெரியாதவர்கள் என்று தூற்றுவதும் நகைப்புக்கு இடமானதே.

நான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது அம்மாவின் தாத்தா - பாட்டி வரை மற்றும் அப்பாவின் தாத்தா - பாட்டிவரை பெயர்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் நினைவில் வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, நமக்கு யார் என்றே தெரியாதவர்களை நாம் அவர்களின் வழி வந்தவர்களாகவே இருந்தாலும் கேட்டுத் தெரிந்து போற்றுவதால் என்ன பலன் ? எதோ ஒரு கட்டத்தில் வாரிசே இல்லாமல் போகும் ஒருவரின் பரம்பரைகள் உலகத்தில் வாழ்ந்ததே இல்லை என்று ஆகிவிடுமா ?

இந்தியாவில் மட்டுமல்ல பிற மதங்களிலும் அவ்வாறே முந்தைய இடுகையில் கொடுத்திருக்கும் ஏசுவின் பரம்பரைப் பட்டியலில் ஆண்கள் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது,  அது தொடர்பான வேறு பட்டியலில் சில இடங்களில் மட்டுமே சில பெண் பெயர்கள் வருகின்றன.

ஏழு தலைமுறை பெருமையை வெளியே சொல்ல தந்தை மற்றும் தாய் இருவரின் பெற்றோர்கள் அவர்களுக்கு மேலே உள்ளவர்கள் என 14 * 2  = 28 பெயர்கள் அல்லது ஏழு தலைமுறை எண்ணிக்கையில் தன்னையும் சேர்த்துக் கொண்டல் 12 * 2 = 24 பெயர்கள் தெரிந்திருந்தால் உங்கள் பரம்பரைப் பெயரைப் பெருமையாகச் சொல்லுங்கள் ஆனால் அதை வெளியே சொல்வதால் மற்றவர்களுக்கு எந்த பலனும் இல்லை.

ஏழு தலைமுறைப் பெயர்கள் தெரிவதால் நானும் எம் முன்னோர்களும் மேலானவர்கள், வந்த வழி தெரிந்தவர்கள் என்று கூறுவது நகைப்புக்கிடமானதே. பரம்பரைப் பெருமை என்பது ஆண்ட பரம்பரை அல்லது பே.......ட பரம்பரை, ராசராசன் வாரிசு என்று சொல்வதோ இல்லை, உங்கள் முன்னோர்கள் இன்றும் நினைவு கொள்ளத் தக்க ஏதேனும் ஊருக்குள் நல்லது செய்துள்ளார்கள் என்றால் அது தான் பெருமையானது, முகம் தெரியாத நடிகர்கள் மீது வைத்திருக்கும் தீராக் காதல்  போன்றதே நாம் பார்க்காத முன்னோர்களை நினைத்து பெருமை பேசுவதும். வெற்றுப் பெருமை அதனால் யாருக்கும் பயனில்லை.

தற்போதைய ஏழு தலைமுறைப் பெருமை என்பது ஆணாதிக்க பெருமை தான், இவற்றில் வெளியே சொல்வது அருவெறுப்பானது.

* ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் !

ன்றைய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்களின் சிந்திக்கும் மற்றும் கேள்வி கேட்கும் திறணை எதிர் கொள்ள மதங்கள் திணறியே வருகின்றன, இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு இல்லை. மரபணு பற்றி இன்றைக்கு மிகவும் பேசப்படுவதால் இவற்றை மதங்களின் கருத்துகள் எவ்வாறு முடிந்து கொள்கின்றன என்று பார்ப்போம்

******

ரபணு இல்லாமல் ஆதாம் ஏவாள் பிறந்திருக்க முடியுமா ? என்ற கேள்விக்கு ஒரு கிறிஸ்துவ இணைய தளம், ஆம் என்கிறது, களிமண்ணால் படைக்கப்பட்டதாக நம்பம்ப்படும் ஆதம் ஏவாளுக்கு தாய் வழி இயற்கையான பிறப்பு அமையாததால் கருவரையில் இருந்து பிறக்கும் அடையாளமாக தொப்புள் இருக்காது என்பதுடன் மரபணுவும் இருக்காது என்கிறார்கள், நான் பார்த்த வரையில் ஆதாம் ஏவாள் படங்களில் தொப்புளும் சேர்ந்தே வரையப்பட்டுள்ளது இதற்கு முரணாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மரபணு இல்லாமல் படைக்கப்பட்ட ஒருவரின் வாரிசுகளுக்கு மரபணு எப்படி ஏற்படும் ? இன்றைய க்ளோனிங்க் போல் நகலெடுக்கும் உருவமாக ஆதமின் வார்சிகள் ஆதாமைப் போல் தான் இருந்திருப்பார்கள், இவர்களுக்குள் (வாரிசுக்குள்) அண்ணன் தங்கையை திருமணம் செய்வது தவிர்க்க முடியாது என்றாலும் மரபணு குறைபாடுகளுடன் குழந்தைப் பிறக்காதா என்கிற கேள்வியை அவர்களே கேட்டு பதிலும் சொல்லி உள்ளனர்.

கேள்வி: காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?

பதில்: காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்யப்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.
(அந்தரத்தில் தாடியோடு இருப்பவர் கடவுள், அவரைச் சுற்றி இருப்பவர்கள் தேவ தூதர்கள்)

"ஆதாமும் ஏவாளும் மட்டுமே முதலாவது படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை (லேவியராகமம் 18:6-18) என்ற காலம் வரும்வரை குடும்பத்திற்குள்ளேயே எற்படும் திருமண உறவை கர்த்தர் தடுக்கவில்லை. மிகவும் நெருங்கிய, முறையில்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது எதனாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, கோளாறான குணங்கள் ஆற்றலடையும் ஆபத்தான நிலை உருவாகிறது. வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தஅவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர்கள் இருவரும் ஒரே கோளாறு பண்புகளைக் கொண்டிருக்கும் நிலைமை மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாக இருந்தது."


One idea that has surfaced comes from Genesis 4:15. After Cain killed Able the Bible says that Cain felt insecure about life and God said, “Therefore, whoever kills Cain, vengeance shall be taken on him sevenfold.” and “the Lord set a mark on Cain, lest anyone finding him should kill him.” Some have concluded that this “mark” was black skin. First of all, we don’t know what the mark was, but is it possible that the black gene was started with Cain and carried onto the ark in one of Noah’s sons or daughter-in-laws? Not very likely at all. That would be a very prejudiced viewpoint in our opinion, and a view that has no Scriptural evidence.


*****
இங்கே கேட்டிருக்கும் கேள்வி காயீனின் மனைவி பற்றி ஆனால் அவர்களாகவே மரபணு பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார்கள், கேள்விக்கும் பதிலுக்கும் முதல் பகுதியிலேயே பதிலை சமாளித்துச் சொல்லி இருந்தாலும் (அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதது பற்றி அவர்கள் கவலைப் படவில்லை) கூடுதல் தகவலாக மரபணு பற்றி யாரும் கேட்டுவிட்டால் ? என்று முந்திக் கொண்டுள்ளனர். இவர்கள் சொல்வது படிப்பார்த்தால் ஆதாமின் வாரிசுகளுக்குள்ளேயே திருமணங்கள் ஒரு முடிவுக்கு வந்த பிறகு மரபணு என்ற ஒன்று மனித உடலில் புகுந்துள்ளது போல் நினைக்கத் தோன்றுகிறது. இருவரின் வாரிசுகளில் வரும் அனைவருமே கிளைத்து வரும் பொழுது பிற குடும்பத்து (வேற ஆதாம்களின் வாரிசுகள்?) திருமணம் ஏற்பட்டிருக்கும் புதிதாகத்தான் மரபணு உற்பத்தியானது, இரத்தவகை மாறியது என்பது எப்படி கூறுகளாகும் ? பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் படைப்புக் கொள்கை செத்துவிடும் என்று நினைப்போர், ஆதாம் கருப்பராக இருந்தாரா ? வெள்ளையராக இருந்தாரா ? அல்லது மஞ்சள் நிற மங்கோலிய இனமாக இருந்தாரா ? என்ற கேள்விகளுக்கு விடைச் சொல்வது இல்லை. உடலமைப்பு சூழலால் மாறும் என்று இவர்கள் ஒப்புக் கொண்டாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த அதே மனித உருவங்கள் தான் இன்றும் கருப்பர்களுக்கு இருக்கிறது, ஒரு கருப்பினம் குளிர்நாடுகளுக்கு இடம் பெயர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக பெருகி வளர்ந்தால் அவர்கள் மஞ்சள் நிறத்தினராகவோ அல்லது வெள்ளை இனத்தினராகவோ ஆவார்களா ? சிந்திப்பவர்களுக்கு சாட்சி இருக்கிறது என்போர், ஆதாம் ஏவாளின் வாரிசுகள் எப்படி பல்வேறு நிறங்கள் முக அடையாளங்களுடன் மாறிப் போனார்கள் ? என்பதற்கு விடையாக ஆதாமின் வாரிசுகள் ஒருவேளை குரங்குக் கூட்டங்களுடன் கலந்து பல்கிப் பெருகி இருப்பார்கள் அல்லது பூனைகள் பல வண்ணங்களில் குட்டிப் போடுவது போல் எல்லா இனங்களின் குழந்தையை பெற்றெடுத்தார்கள் என்கிற எளிய ஊக விடையாவது சொல்லிவிட்டு பின்னர் பரிணாமக் கோட்பாடுகளை மறுக்கச் செல்லலாமே. ஒருவேளை ஆதாம் கருப்பு நிறம் என்று வைத்துக் கொண்டாலும் கூட வெள்ளையர்கள் தாங்கள் குரங்கில் இருந்து பிறந்தோம் என்பதை பெருமையாக நினைத்தாலும் கருப்பர்களிடம் இருந்து பிறந்தோம் என்பதை பெருமைக்குரிய ஒன்றாகக் கருதமாட்டார்கள், இன்னும் ஒரு கேள்வி ஆதாம் ஏவாளுக்கு பிறகு பல சந்ததிகள் பெருகி இருந்தாலும் நோவாவின் காலத்தில் நோவா கப்பலில் ஏற்றும் பொழுது இனத்துக்கு ஒன்றாக மனிதர்களை ஏற்றுவதாக குறிப்புகள் எதுவுமே இல்லையே, பிறகு எப்படி மனித இனங்கள் பலவாக பல நிறங்களாகப் பெருகி இருக்கும் ?

படைப்புத் தொழிலின் ஆறாம் நாள் மற்ற மனித இனங்களைப் படைத்தார் என்று பழைய ஏற்பாடு சொல்கிறது, ஆதம் ஏவாள் ஆப்பிளைக் கடித்தார்கள் துன்பத்திற்கு ஆளானார்கள், மற்றவர்களையும் ஏன் துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும், தவிர ஆதாம் ஏவாளை மற்ற இனங்களின் மூததையர் என்று எப்படி ஏற்றுக் கொள்வது ?

ஏசுவின் மரபணுவும் இரத்த வகையும் தெரிந்துவிட்டதாக கிறித்துவ இணைய தளங்கள் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள், மேரி கன்னித்தாய் என்றால் ஏசுவின் இரத்த வகையும் மேரியின் இரத்த வகையும் ஒன்று என்றும், ஏசுவின் மரபனு கடவுளினால் பெறப்பட்டது என்றும் சொல்லுகிறார்கள். எதோ ஒரு பழைய துணியைக் காட்டி அது ஏசுவை அடக்கம் செய்யப்பட்ட போது போர்த்தப்பட்டதாகவும் அதில் படிந்திருந்து படிமங்களில் இரத்த வகை மாதிரியை கண்டுபிடித்துவிட்டனர் என்றும் AB வகையைச் சேர்ந்தது என்று சொல்கிறார்கள், இதையெல்லாம் அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்பது வேற, தொடர்ந்து அங்கங்கே ஏசு சிலைகளில் வடியும் இரத்தங்களும் சோதனை செய்யப்படுகிறது, அதில் சில இடங்களில் AB வகையும், O வகையும் இருப்பது முரண்

ஏசுவின் பரம்பரைப் பட்டியல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஏசுவில் இருந்து மேலே போனால் மோசஸ் அப்படியே மேலே சென்றால் ஆதாமில் முடியும், ஏசுவும் மோஸசும் யூதர்கள் இவர்கள் அந்தப் பட்டியலின் வாரிசுகள் என்றால் ஆதாமின் வாரிசுகள் அனைவருமே இஸ்ரேலியர்கள் அல்லது யூதர்கள் தான், ஏசு காலத்திலேயே யூதர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், எகிப்தியர்கள் அது தவிர ஆசியர்கள், இந்தியர்கள் என்று பெருங்கூட்டமே இருந்தது, இஸ்ரேலியர்கள் தவிர மற்றவர்கள் யாருக்குப் பிறந்தார்கள், எப்படிப் பிறந்தார்கள். இதையெல்லாம் நம்புவர்கள் காந்தாரிக்கு 100 குழந்தைகள் என்றால் நம்ப மறுப்பதும் வேடிக்கைதான்.

ஆதாம் பிறந்த உருவாக்கிய தேதி அக்டோபர் மாதம் 23 தேதி கிமு 4004 ஆம் ஆண்டாம் (creation of Adam on October 23, 4004 BC at 9:00 am and lived until 3074 BC), 930 ஆண்டு வாழ்ந்தாரம்,  ஒப்பிட அதே காலகட்டத்தில் எகிப்திய நாகரகம் ப்ரமீடுகள் எழும்ப கொடிக்கட்டிப் பறந்ததாகத் எழுதப்பட்ட வரலாற்றில் தெரிகிறது

இதையெல்லாம் படிக்க படிக்க மூச்சு வாங்குது, இதில் மதவாத அன்பர்கள் மத நூலை சரியா உள்வாங்கினால் புரியும் என்கிறார்கள், ரொம்பவும் உள்வாங்கினால் பேராபத்து ... நான் கடல் உள்வாங்குவதையும் அதன் பிறகான சுனாமியையும் சொல்கிறேன்.

ஸ்ஸப்பா.......கண்ணைக் கட்டுதே !

* உலக அழிவை நாடும் மத நம்பிக்கைகள் !


ரே ஒரு பெரிய நில அதிர்வு அன்றைய செய்திகளையெல்லாம் பின்னுக்குத்தள்ளி ஊடகங்களை விழுங்கிவிடுகிறது. மனிதர்களை விட இயற்கையே 'சூப்பர் ஸ்டார்கள்'. உடனேயே உலக மக்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன, ஊடகங்களுக்கு முழுத்தீணியாக இயற்கைப் பேரிடர்களே என்றும் உள்ளன.

****

அனைத்து மதவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை 'கடவுள் உலகையும் மனிதன் உட்பட ஏனைய உயிர்களைப் படைத்தார்' என்பதே. மனிதனின் ஆறாம் அறிவு செயல்படத் துவங்கியதிலிருந்து உயிர் தோற்றம் குறித்த சிந்தனைகளில் ஒரு முடிவை எட்டாமல் நம்பிக்கையின் அடைப்படையில் 'இவை கடவுளின்' செயல் என்று முடித்துக் கொள்வதால் கடவுள் குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு கடவுளின் அன்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கையின் விளைவாக இதில் நம்பிக்கையாளர்கள் நிறைவு பெற்றுக்கொண்டார்கள்.  இறப்பிற்கு பிறகான வாழ்கை என்ன ? என்ற கேள்விக்கு விடையாக சொர்க நகரக் கோட்பாடுகளும், பொருள்கள் என்றால் அழிவுக்கு உட்பட்டது என்ற வரையறையின் நீட்சியாக இந்த உலகமும் ஒரு நாள் அழியக் கூடியது தான் என்பது புரிந்துணர்வு என்பதால், உலகம் அழிக்கப்பட்டால் அல்லது அழிந்துவிட்டால் என்ன வாகும் என்ற கேள்விக்கும் கதைகளையும் நம்பிக்கைகளையும் வைத்துள்ளனர்.

ஆப்ரகாமிய மதங்களைப் பொருத்த அளவில் பிரளயக் காலம் என்பது நடந்துள்ளது, நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை, அதில் பூமி முற்றிலுமாக அழியாது, நீரினால் கொள்ளப்படும் என்பதும், அவ்வாறு அழியும் போது அனைத்து உயிரினங்களிலும் ஒரு இணை (ஜோடி) காப்பாற்றப்பற்று பின்னர் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதையும் படைப்புக் கொள்கை மற்றும் மறுமை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பது நன்கு விளங்கும். அதாவது உலகை ஆறு நாளில் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வெடுக்கப் போன கடவுளால் மீண்டும் அவ்வாறே செய்யாமல் ஏன் மக்கள் அனைவரும் கெட்டவர்கள் ஆன பிறகு அதில் இருந்து நல்லவர்களை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்து காப்பாற்றி வைக்க வேண்டும் ? தவிர அவர்களை இந்த உலகில் தொடர்ந்து வாழ வைக்காமல் நேரடியாக சொர்கத்திற்கே அழைத்துச் சென்றிருக்கலாமே ? என்ற கேள்வியும் வருகிறது, ஊழிக்காலத்தின் போது நோவா கப்பலும் அதில் ஏற்றப்படும் உயிரினங்கள் பற்றிய கதை உங்களுக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.

தனிமனிதனின் இறப்புக்கு பின்னார் சொர்கம் / நரக கட்டுமானங்களைத் தீர்வு போல் சொல்லும் மதங்கள், ஒட்டுமொத்த மக்களும் கெட்டுவிட்டால் அதற்கான தீர்வு என்ன என்கிற சிந்தனையின் தொடர்ச்சியாக நோவா கப்பல் கதையும், பிரளயம் என்பது ஒரு நிகழ்வு தான் என்றும் அதற்கு பின்னரும் பூமியும் உயிர்களும் உண்டு என்றே சொல்கின்றன. இங்கு தான் மேற்குறிப்பிட்ட கேள்வி, எதற்கு காப்பாற்றி மறுபடியும் உலவ விடவேண்டும், அவர்களை நேரிடையாக சொர்கத்தில் விட்டுவிட்டு அங்கு வாழவைக்கலாமே ? தவிர மனித தவறுகளுக்காக ஒட்டுமொத்த உலகையும் நீரைக் கொண்டு அழிப்பதால் பாழ்படும் பிற உயிரினங்கள் என்ன தவறு செய்தன ? அவற்றையும் ஏன் ஜோடி ஜோடியாக காப்பற்ற வேண்டும் ? கடவுளின் படைப்புத் திறனால் ஆகுக என்று சொன்னபோது தோன்றிய பூமியும் உயிரினமும், பின்னர் ஏன் அவ்வாறே செய்து தோன்ற வைக்க முடியாது ? எதனால் அவை காப்பாற்றப்பட்டு தான் மீண்டும் வெளியில் விட வேண்டும் ?

இந்த முரண்பாடுகளின் தொகுப்புகளை வைத்துப் பார்க்கும் போது கடவுள் படைக்கவில்லை என்பதை நேரிடையாக ஒப்புக் கொள்ளத் தயங்கிய மனநிலையில், பூமி அழியும் ஆனால் தொடரவேண்டும் என்கிற மன நிலையில், நோவா கப்பலும் அந்தக் கதைகளும் வந்திருக்க வேண்டும். கடவுள் எதையும் படைக்கவில்லை என்று மதங்களே ஒப்புக் கொள்வதற்கு நோவா கப்பல் கதைகளே சாட்சியாகக் கிடக்கின்றன.

கெட்டுப் போன வேலை செய்யாத கணிணியை தூக்கி வீசிட்டு புதுக்கணிணி வாங்கிக் கொள்ளலாம் என்பது போல் கடவுள் ஏன் பழைய பூமியை அழித்துவிட்டு புதிதாக இன்னும் அதிக பரப்பளவுடன் ரியல் எஸ்டேட் பிரச்சனை இல்லாமல், ஆறு நாளைக்கு பதில் 10 நாளே எடுத்துக் கொண்டு மிகப் பெரிய அளவுக்கு மற்றொரு கோளை உருவாக்கி அதில் புதிய உயிரினங்களை படைக்கக் கூடாது ? 

ஆப்ரகாமிய மதங்களில் மட்டுமா பிரளய காலத்தில் ஜோடி ஜோடியாக காப்பற்றப்பட்ட கதை ?  அகத்தியர் நாடியில் இதே போன்ற கதைவருகிறது,  ஒவ்வொரு யுகம் முடியும் போது உலகம் நீரினால் சூழப்படுமாம், அப்போது பாதுகாப்பட்டவேண்டிய அனைத்து உயிரினங்களையும் ஒரு கலசத்தில் போட்டு இமயமலையின் உச்சியில் வைப்பாராம் பிரம்மன், பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு அவை விடுவிக்கப்பட்டு வாழவிடப்படும், யுகங்களின் தொடர்சிகள் இவ்வாறாக இருக்கின்றது என்கிறது இந்து மதப் புராணம்,

 ‘பிரளய நீரில் நீந்திய ஜீவ கும்பத்தை பாணமொன்றால் கயிலாயநாதன்
தகர்க்க கண்டோமே; அமிர்தமது நின்ற துவித்தலமும்
மகாமகமொடு பொற்றாமரை பொய்கையானதே
சிவனே தன்னமிர்த கரத்தால் கும்பத்தைக் கூட்டி
மலரசஞ்சாய்ந்து மணலிங்கமாக்கிட்டானே’

கடவுள் குறித்த மனித சிந்தனைகளும், படைப்பு, உயிர், அழிவு குறித்த சிந்தனைகளும் உலகெங்கிலும் ஒன்று போல் தான் இருந்திருக்கின்றன, எனபதற்கு இவ்வெவ்வேறு கதைகளும் சாட்சி.


பூமி ஏன் அழியும் ? அழிய வேண்டும் என்கிற நம்பிக்கை ஏற்பட வேண்டும் ? ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் பிறழ்ந்துவிடுகிறார்கள், வாழ்கை நெறியைக் கெடுத்துவிடுகிறார்கள், அவர்களுக்கு அச்சமூட்டவேண்டும் என்பதே காரணம் என்பது தவிர்த்து நோவா கதைகளிலோ, அகத்தியர் நாடியிலோ சுற்றுப் புறச் சூழல், ஓசோன் ஓட்டை பற்றியெல்லாம் எதும் சொல்லப்படாததால் நாம் அவற்றை சுற்றுப் புறச் சூழல் தொடர்பில் உலகம் அழியும் என்று தொடர்புபடுத்திவிட முடியாது. ஆக மனிதன் என்றுமே நல்லவனாக நீடித்தது இல்லை, மனிதர்கள் கெட்டுவிடும் போது உலகம் அழிவதில் தவறில்லை, அழிய வேண்டும் என்கிற எண்ணமும், அதே சமயத்தில் பூமியில் மனித இனம் / உயிர்கள் தொடர்ந்து வாழும் என்கிற நம்பிக்கையாவே இந்தக் கதைகளின் உளவியல் விளங்குகிறது. 


****
தீர்ப்பு நாள், கல்கி அவதாரம் 'ஜல பிரளயம்' ஏற்படும் என்றெல்லாம் நம்புபவர்களும் அதை விரும்புவர்களும் நில நடுக்கம், சுனாமி எச்சரிக்கை, இயற்கைப் பேரிடர் என்றால் வழிபாட்டுத் தளங்களில் தஞ்சம் அடைந்து காப்பாற்ற கெஞ்சுகிறார்கள், வேண்டுகிறார்கள், அப்பறம் எப்படித்தான் கடவுள் ஏற்கனவே சொன்னப்படி உலகை அழித்து நம்பிக்கையாளர்களை (மீளா) சொர்கத்திற்கு இட்டுச் செல்வாராம் ? இந்தப் பதிவை முதற்பத்தித் தவிர்த்து ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.




இந்த அவதாரங்களைப் பார்த்துவிட்டு இன்னுமா உலகம் அழியாமல் இருக்கு என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.
********

நேற்றைய சுனாமி எச்சரிக்கையால் அவதியுற்றவர்கள் நோயாளிகளும் பள்ளிக் குழந்தைகளும் தான், என்ன தான் மனித நேயம் பேசினாலும் தன் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து என்னும் போது எதிரே சாகக் கிடப்பவர்களை மிதித்துக் கொண்டு ஓடுவதே இயல்பாக நடக்கிறது, இதையும் தாண்டி இதை வாய்பாக எடுத்துக் கொண்டு சூறையாடும் கூட்டமும் உண்டு, சென்ற முறை சுனாமி ஏற்பட்டப் பிறகு கரையில் சிதறிக் கிடந்த பிணங்களின் நகைகளை, உடைமைகளை  எடுத்துக் கொண்டதுடன் தோடுகளை கழட்டி எடுத்துக் கொள்ள காலமெடுக்கும், அதற்குள் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று மிக விரைவாக தோடு துளைப் பகுதியை கீறி எடுத்துச் சென்றிருந்தனர். எதிரே நடந்த பேரழிவு, மரணம் இவற்றையெல்லாம் நேரில் பார்த்தும் பிறர் பொருள் பேராசை கொண்டோர் இருக்கிறார்கள் என்பது, சுனாமிகளை விட ஆபத்தான மக்களுடன் நாம் வாழ்ந்துவருகிறோம் என்பதும் உண்மை தான்.

11 ஏப்ரல், 2012

* மொய்க்கும் கண்களைப் பார்த்த அச்சம் !


முத்துப் படத்தில் மேடை நாடக நடிகையாக நடிக்கும் மீனா கீழே அமர்ந்து கிண்டல் அடிக்கும் ரஜினியிடம் சொல்லுவார் "யோவ் அங்கே ஒட்கார்ந்து கொண்டு என்ன வேணுமானாலும் பேசலாம், இங்கே (மேடையில்) வந்து பேசமுடியுமா உன்னால் ? ரஜினியுடன் அமர்ந்திருப்பவர்கள் உசிப்பிவிட அவரும் மேடை மீது ஏறி நாற்காலியில் உட்கார்ந்து எதை எதையோ பேசி, இந்த நாற்காலி நமக்கு சரிப்படாது என்பார். ரஜினிக்கு அரசியல் பஞ்ச் ஆக வைக்கப்பட்ட காட்சியாக இருந்தாலும் மேடை ஏறிப் பேசுவது என்பது எல்லோராலும் முடியாது என்பதை அந்தக் காட்சி சொல்லும். சிலருக்கு மேடைக் கிடைத்தால் கேட்பவர்கள் கதறி எழுந்து ஓடும் வரை பேசிக் கொண்டே இருப்பார்கள். சிலர் கூட்டத்தினரை கட்டிப் போட்டது போல் மிகச் சுவையாக பேசிக் கொண்டே இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு பேசச் சொல்லித் தரவேண்டியதே இல்லை.

தனிமனிதனின் தனித்திறமைகள் என்பதில் ஓவியம், எழுத்து, நடனம், நடிப்பு என்பதையெல்லாம் வீட மேடைப் பேச்சு கடினமானது என்றே நினைக்கிறேன். ஓவியம் வரைபவர்களுக்கு வரையும் திறமையுடன் பொறுமை இருந்தாலே போதும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் வரையும் போது சிந்திக்கத் தேவை இல்லை, எழுத்தாளர்களுக்கு எழுதும் போதே அல்லது எழுதிய பிறகு வெளியிடும் முன்பே என்ன எழுதி இருக்கிறோம் என்று தெரிவதால் அதைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும், அவர்களும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை எழுதும் போது சிந்திக்கத் தேவை இல்லை. நடனம், (மேடை) நடிப்பு இவையெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டபடி முன்கூட்டிய பயிற்சியுடன் செய்வதால் சொதப்பி விடுவோமோ என்கிற அச்சம் இருந்தாலும் தொடர்ச்சி என்ன என்பது முன்கூட்டியே தெரியும் என்பதால் பார்வையாளர்களுக்கு பயப்படத் தேவை இல்லை, ஆனால் மேடைப் பேச்சு என்பது அவ்வளவு எளிதான ஒன்றாகத் தெரியவில்லை. மேடையில் பேசுபவர் பார்வையாளர்களின் கண்களாலும் காதுகளாலும் கவனிக்கப்படுபவர், 100க் கணக்கான பார்வையாளர்களின் நேரங்களை எடுத்துக் கொள்கிறோம் என்கிற பொறுப்புணர்வுடன் தான் மேடைப் பேச்சாளர்கள் அந்த தகுதியுடன் அங்கே செல்கிறார்கள்.

அரசியல்வாதிகள் பேச்சுத் தவிர்த்து நான் கேட்ட வகையில் சாலமன் பாப்பையா, சுகிசிவம் ஆகியவர்கள் மிகச் சிறப்பாக நகைச்சுவையாக பேசுவார்கள், மலேசியாவில் தென்றல் என்னும் வார இதழில் ஆசிரியர் வித்யாசாகர் நகைச்சுவையாகப் பேசுவார், பேசு பொருள் ஒன்று இருக்கும் அதனூடாக நகைச்சுவைக்காக வேறு தகவல்களச் சொல்லிவருவார்கள், பின்னர் எங்கு விட்டுச் சென்றார்களோ அங்கு துவங்குவார்கள், சட்டென்று பெயர்கள் சரியாக நினைவுக்கு வரவில்லை, இன்னும் நிறைய பேர் இது போல் நகைச்சுவையாகப் பேசுவர்கள் எங்கும் உண்டு, இலங்கை கம்பவாருதி ஜெயராஜ் மிக நகைச்சுவையாக அன்றைய அரசியல் கலப்போடு கலகலப்பாகப் பேசி கலக்குவார். மறைந்த தென்கச்சி சாமிநாதன் கொஞ்சமும் சிரிக்காமல் பார்வையாளர்களைத் தொடர்ந்து சிரிக்க வைப்பார். தன்முனைப்புப் பயிற்சி அல்லது தொழில் சார்ந்த மேடைப் பேச்சு என்பதைத் தாண்டி வெறும் இலக்கியத்திற்காக மேடைப் பேச்சுகளை ரசிக்கும் கூட்டம் தமிழர்கள் கூட்டம் இதில் மதவேறுபாடுகள் , ஆத்திகம் நாத்திகம் எதுவுமே கிடையாது. மிகப் பெரிய அரங்குகளில் மேடைப் பேச்சாளர்களை அழைத்து வந்து தமிழ்சார்ந்த பட்டிமன்றம் மற்றும் இலக்கியம் சார்ந்த மேடைப் பேச்சு நிகழ்ச்சி நடத்துவதும், அதை பெரும்திரளாக தமிழர்கள் கண்டுவருவதும் வெறெந்த இனத்தில் காணக் கிடைக்காத ஒரு காட்சி. மொழி சார்ந்த பழக்கவழக்கம். ஏசு அழைக்கிறார் வாருங்கள் போன்ற மாபெரும் கூட்டங்கள் பிற மொழி இனத்தினிடையேயும் நடப்பது உண்டு, இருந்தாலும் மதம் சாராத இலக்கிய நிகழ்ச்சியாக பிற இனத்தினரிடம் / மொழியினரிடம் நடப்பதை நான் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை, ஆங்கிலத்தில் அல்லது குறிப்பிட்ட மொழியில் தன்முனைப்பு பேச்சு மற்றும் பயிற்சி பட்டறைகள் நடக்கும், தமிழகத்திலும் தமிழரிடத்திலும் மேடைப் பேச்சுகள் என்பது தனிப்பட்ட அடையாளமாகவே திகழ்கிறது.

*****

மேடையில் பேசவேண்டியவை இவை மற்றும் கேட்கவந்தவர்களின் விருப்பம் எதைச் சார்ந்தது என்ற தெளிவோடு பேசவேண்டும், தவிர மேடையில் பேசும் போது பேசியதை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு என்பது சொல் தடுமாற்றம் மட்டுமே, ஆனால் தகவல் தடுமாற்றமாக பேசிவிட முடியாது. பேசப் போவது குறிப்பிட்ட தகவல் சார்ந்தது என்றாலும் முதல் முறை மேடை ஏறிப் பேசுவது அதுவும் போதிய பயிற்சி இன்றிப் பேசுவது என்பதைவிட எதிரே இருக்கும் பார்வையாளர்களைப் பார்த்ததுமே நடுக்கம் வந்துவிடும். கடந்தவாரத்தின் சனிக்கிழமையில் சிங்கைப்பதிவர்கள் சார்பில் ஏற்கனவே சிங்கை நூலக பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 'மாணவர்களுக்கு வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லி அறிமுகம் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு தமிழ் நிகழ்சியின் ஊடக நடத்த ஒப்புக் கொண்டு இருந்தோம், தேதியைச் சொல்லி நூலக பொறுப்பாளர் நிர்மலா நண்பர் குழலியை அழைத்துக் கேட்டனர், அவர் குறிப்பிட்ட நாளில் தமிழகம் சென்றதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டார். நமக்கு தெரிந்தத் தகவலைத் தானே கூறப் போகிறோம் என்பதால் நானும் ஒப்புக் கொண்டு பவர்பாயிண்ட் சிலைடுகளை தாயார் செய்து கொண்டு நிகழ்ச்சிக்குச் சென்றேன்.  அலுவலக கூட்டம் போல் நீள மேசையின் இருபுறமும் மாணவர்கள் அமர அவர்களுக்கு ஸ்லைடு போட்டு விளக்கலாம் என்று தான் நான் நினைத்துச் சென்றேன், அங்கு சென்றதும் 400 பேர் அமரும் பெரிய அரங்கத்தைக் காட்டி அதில் தான் நிகழ்ச்சி நடக்கும் என்றதும், எனக்கு 'திக்' என்றாகியது.



என் நிகழ்ச்சிக்கு முறைவந்ததும், கணிணியைப் பொருத்தி ஸ்லைடுகளை ஓடவிட்டு ஒலிவாங்கி முன் நின்று முன்னே பார்வையாளர்களின் மொய்க்கும் கண்களைப் பார்க்க அடிவயிற்றில் பயம், அச்சம், லேசான நடுக்கம், இத்தனைக்கும் பார்வையாளர்கள் மொத்தம் 100 பேர் தான் என்றாலும் மாணவர்கள், பெரியவர்கள், நடுத்தர வயதினர் என பலதரப்பினர் அமர்ந்திருந்தனர், கொஞ்சம் கொஞ்சம் திணறினாலும் சமாளித்தேன், தொண்டை வரண்டே விட்டது, அடுத்ததாக பேச இருந்த மற்றொரு இலக்கிய பேச்சாளர் சகோதரி சித்ரா ரமேஷ் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு நேராக பேச்சுக்கு சென்றுவிட்டேன், முதலில் அனைவருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வணக்கம் சொல்ல வேண்டும் என்கிற நினைப்பு வரவே இல்லை, அதே போன்று ஒரு 'வணக்கத்துடன்' முடித்துக் கொண்டேன், நன்றி தெரிவிக்கவும் மறந்துவிட்டேன், செய்முறையாக சிலவற்றை மாணவர்களுக்கு திரையில் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்ததும் மறந்துவிட்டது, 15 நிமிடங்கள் மேடையில் நின்று என்ன பேசினேன் என்று எனக்கு தெரியாது, அதன் பிறகு நன்றாக, எளிமையாக, புரியும்படி இருந்ததாக எனக்கு அறிமுகமில்லாத பார்வையாளராக அமர்ந்திருந்த ஆசிரியர் சொல்லி என்னிடம் சொல் பேசி எண்கள், மின் அஞ்சல் முகவரிகள் கேட்டப் போது தான், ஓரளவு என்ன பேசவேண்டுமோ அதைத்தான் பேசி இருக்க்கிறேன் என்ற மன நிறைவுடன் என் பார்வையாளர் இருக்கைக்குச் சென்று அமர்ந்தேன்.

என்னால் மணிக்ககணக்கில் தொடர்ந்து எதையாவது தட்டச்சு செய்து அதன் தொடர்ச்சியைக் கொண்டு வரமுடியும், ஆனால் 40 பேர் முன் நின்று பேசமுடியாது என்பது தெரிந்தது, இருந்தாலும் முதல் நிகழ்ச்சி கொடுத்த தெம்பு, உற்சாகம் மேடை நடுக்கங்களை அடுத்து அடுத்து குறைக்கும் என்றே நினைக்கிறேன். பரிசு வாங்க மேடை ஏறுவது அல்லது மேடையில் பேசி வெளிவரும் வதும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது, தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது நாலு பேர் நம்மைக் கவனிக்கிறார்கள், அவர்கள் காது கொடுத்து கேட்கும் நிலைக்கு நாம் தகுதியிடன் வளர்ந்து இருக்கிறோம் என்று நினைக்க அது பெருமைக்கு உரிய ஒன்றாகவும் உள்ளது.

10 ஏப்ரல், 2012

* இது தான் 'உயர்' தமிழா ? - ஒரு மொழிப் பெயர்ப்பு !


சென்ற ஏப்ரல் 1, ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணிக்கு விஜய் தொலைகாட்சியை ஓடவிட்டேன், பக்தி திருவிழா நிகழ்ச்சி யாரோ ஒரு வைணவ சாஸ்திரிகள் நன்னா ப்ரசங்கம் பண்ணிண்டே பஜனை பண்ணினா, நேக்கு தான் ஒண்ணும் புரியல, கீழே உள்ளதைப் படிச்சுப் பாருங்கள், நேக்கு புரியலைன்னாலும் நோக்கு புரியும்னு பதிவு செய்து கொஞ்ச கொஞ்சமாக கேட்டு தட்டச்சினேன், ப்ரசங்கம் பண்றச்ச நாலு பேர் நாமம் பொட்டுண்டு முன்னாடி உட்கார்ந்து கேட்டுண்டு இருந்தா மத்தவாளைப் பார்த்தா ப்ராமணாப் போல் தெரியவில்லை, ஆனால் சாஸ்திரிகள் நன்னா ப்ராமண பாஷையில் தான் பேஷினா, கேட்டுண்டுருந்த மத்தவாளுக்கு அர்தம் ஆனதா நேக்கு தெரியாது.

**********
இப்போது பிரஷங்கம்....


"சாதுக்கள்னா யாரு ?  தீர்கமான ஆயுளைக் கொடுக்கணும் அப்படிங்கிறது தான் ஒரு பிறவியிலே அவனுக்கு தீர்கமான ஆயுள் கிடைக்கறது, அந்த தீர்கமான ஆயுள் கிடைத்த பிறவியிலும் அவன் புண்ணியம் பன்றான், அந்த பிறவியிலும் அவன் நறையா புண்ணியம் பண்றதைப் பார்த்துட்டு அடுத்தப் பிறவியிலே அவனுக்கு * அக்‌ஷயமான ஐஷ்வர்யத்தை பஹவான் அனுக்கிரஹம் பண்றான், அந்த அக்‌ஷ்யமான ஐஷ்வரியத்தை வச்சிண்டு அவன் நறையா புண்ணிய காரியங்களை பண்ணும் பொழுது பஹவான் பார்க்கிறான் அடுத்த ஜென்மாவிலே அவனுக்கு பெரிய எஸ் எஸ் கீர்த்தியைக் கொடுக்கிறான், அந்த கீர்த்தி இருக்கக் கூடிய ஜென்மாவிலேயும் அவன் நறையா புண்ணியங்களை பண்ணிண்டே வர பஹவான் பார்க்கிறான், இவனுக்கு எதக் கொடுத்தாலும் அதற்கு தகுந்த புண்ணியத்தைப் பண்றான் இனிமே இவனுக்கு கொடுக்கறத்துக்கு ஒண்ணுமே இல்லை தீர்கமான ஆயுள் கொடுத்தாச்சு ஆரோக்கியம் கொடுத்தாச்சு அழகு கொடுத்தாச்சு, புகழ் கொடுத்தாச்சு பஹவான்கிட்ட இப்ப கொடுக்கிறதுக்கு ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு மோ... க்‌ஷ ...ச...ம். ஆனா சாத்திரங்களெல்லாம் என்ன சொல்றதுண்ணா புண்ணியத்துக்கு பலன் மோக்‌ஷசம் இல்ல. புண்ணியம் பண்ணினால் நல்ல ஜென்மாக்கள் வரும் அந்த ஜென்மாக்களிலே நாம் சவுக்கியமாக இருக்கலாம். "

***************


அருஞ்சொற்பொருள்

தீர்கமான ஆயுள் - நீண்ட வாழ்நாள்
புண்ணியம் - நற்பலன்
ஐஷ்வர்யம் - செல்வம்
அனுக்கிரஹம் - கிட்டுதல்
அக்‌ஷ்யமான - குன்றாத
ஜென்மா - பிறவி
எஸ் எஸ் கீர்த்தி - எஸ் எஸ் வாசனா ? ஆவ்வ் ( கீர்த்தி - புகழ்)
மோக்‌ஷசம் - மேலுலகம்
சவுக்கியம் - உடல் நலம்

* மேலேயும் கீழேயும் திரும்பத் திரும்ப சிலவரிகள் வருவது அவர் பேசியதில் இருந்ததே

***************

"இவனோ புண்ணியத்துக்கு மேல புண்ணியம் பண்ணிண்டே இருக்கான், * அந்த புண்ணியத்துக்கு பலனா தீர்கமான ஆயுள், ஐஷ்வர்யம், ஆரோக்கியம், எஸ் எஸ், கீர்த்தி எல்லாம் கொடுத்தாச்சு, பஹவான் பார்க்கிறான் நம்மகிட்டேர்ந்து இவனுக்கு கொடுக்காதது மோட்சம் தான் ஆனா புண்ணியத்திற்கு பலனா மோக்‌ஷத்தக் கொடுக்க முடியாது, அதனால பஹவான் என்ன பண்ணறான்னா இவனோட புண்ணியங்களெல்லாம் உயர்ந்த நிலையை அடையும் பொழுது பஹவன் அவனுக்கு சத்சங்கத்தைக் கொடுக்கிறான், அந்த சத்சங்கத்தினால இவன் மோட்சம் வரட்டும் என்று நினைக்கிறான், அதாவது ஒரு ஜீவனுக்கு எப்பொழுது சத்சங்கம் கிடைக்கினும்கிறது ப்ராப்தம் ஆகிறதுன்னா பல கோ(ட்)டி ஜென்மாக்களில் இவன் பண்ணின புண்ணியங்களெல்லாம் பழுத்து ஒரு நிலையை அடையும் பொழுது தான் அவனுக்கு சத்சங்கம் அப்படிங்கிறது ப்ராப்தம் ஆகிறது. சத்சங்கம் என்றால் என்ன ? ஒரு இடத்தில போர்டு இருக்கு வாசல்ல இது சத்சங்கம் னு எழுதி இருக்கிறதால சத்சங்கம் ஆகிடாது, சத்சங்கம் அப்டினுட்டா, பொதுவா அதற்கு ஒரு அர்தம் சொல்லனும் அப்படின்னுட்டா சாதுக்களுடைய சங்கம் .....சத்சங்கம். "

***************
அருஞ்சொற்பொருள்

சத்சங்கம் - பக்தர் / அன்பர் கூட்டம்
ப்ராப்தம் - விதி
***************

"சாதுக்கள்னா யாரு அப்படினுட்டு பாஹவதமே ஒரு கேள்வி கேட்டு அதற்கு ஒரு பதிலும் சொல்றது 'ஜீவன் முக்தி, க்ரண முக்தி, காய முக்திய சாது மஹான். அந்த சாதுக்கள் மூன்றே மூன்று காரியம் தான் பண்ணிண்டு இருக்காளாம், அந்த மூன்று காரியத்திற்கு அந்நியமா வேற ஒரு காரியம் பண்ணி பழக்கமில்லே தெரியாது, என்ன பண்ணுவா அப்படின்னா ? எங்கேயாவது யாராவது பஹவானைப் பத்தி சொல்லமாட்டாளா ன்னு ஏங்கி தவிச்சி சதா ஷர்வ காலமும் பஹவானுடைய கதைகளையும், குணங்களையும், லீலைகளையும் கேட்டுண்டே இருப்பாளாம், அப்படி சொல்றதுக்கு யாருமே இல்லேன்னு அப்படின்னுட்டா, நான் சொல்றேன் நீ கேட்கிறியான்னு சின்ன குழந்தையை உக்காத்தி வச்சிண்டாவது பஹவானோட பால லீலைகளை அந்த குழந்தைக்கு எந்த அளவுக்கு புரியுமோ அந்த அளவுக்கு சொல்லுவா, சொல்றதுக்கும் ஆளில்லே, கேட்கிறதுக்கும் ஆளில்லே ங்கிற போது 'க்ருஷ்ணா ஹரே கோவிந்தா, ஹரே க்ருஷ்ணா ராமா கிருஷ்ண கோவிந்தா, நந்த நந்தன கோவிந்தா, ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா அப்படின்னு பஜனை பண்ணிண்டே இருப்பாளாம், ஒண்ணு பகவத் மூலம் சொல்றது மற்றொன்று பகவத் மூலம் அழிக்கிறது இல்லேன்னா பஹவானைப் பற்றி பாடிண்டே இருக்கிறது, இந்த மூன்று காரியங்களை மட்டுமே யார் பண்ணிண்டு இருக்காளோ அவா தான் சாதுக்கள்."

(இதுக்குமேல் கேட்கவில்லை தொலைகாட்சியை நிறுத்தியாச்சு)

***************
அருஞ்சொற்பொருள்

பாஹவதம் - சமய நூல்
ப்ராப்தம் - விதி
மஹான் -  மூத்த அறிஞர்
சாது - சாமியார்
அந்நியம் - மாற்றாக
காரியம் - செயல்
லீலை - விளையாட்டு
பால - சிறு அகவை
காயம், க்ரணம், ஜீவன் - உடல், பொருள், ஆவி(உயிர்)
சதா ஷர்வ காலமும் - முக்காலமும் அல்லது எப்பொழுதும்

***************

சென்னையில் கைரிக்‌ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை பாஷையில் பேசுறாங்க, தமிழை கொலை செய்கிறார்கள், கொச்சைப் படுத்துகிறார்கள் என்கிறோம், ஆனால் நானூறு பேர் அமர்ந்திருக்கு ஒரு அவையில் பிரசங்கம் என்ற பெயரில் பார்பன மொழி வழக்கிலேயே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வெளியில் பார்பனர்கள் தங்களுக்குள் தவிர்த்து பிறரிடம் பார்பன தமிழ்மொழிப் பேசிவது கிடையாது, எனவே பார்பனர்களுக்கு பொதுவாக பலர் பேசும் பொதுத்தமிழ் உரையாட வராது என்று சொல்வதற்கில்லை, நம்புவதற்கில்லை, ஆனால் எல்லோரும் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் வலிந்தே இவ்வாறு பேசுகிறார்கள், ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது, ஒரு வேளை இழந்து போன பார்பனப் பெருமையை 'ப்ராமணர்' என்னும் கட்டமைப்பாக மீட்டெடுக்கும் முயற்சி என்றே நினைக்கத் தோன்றுகிறது, 30 ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக தமிழகத்தில் நரேஷ் "ஐயர்" மற்றும் அனுஷா "ஐயர்" போன்ற பெயர்கள் தோன்றி இருக்கின்றன. பார்பனர்கள் தனி அடையாளம் விரும்பும் வரை பார்பன எதிர்ப்புகளை பார்பனர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது பார்பனர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பார்பனர்களும் பார்பன எதிர்ப்புகளை விரும்பியே ஏற்படுத்திக் கொள்கிறார்கள், வெளியில் இருந்து வரும் பார்பனர் எதிர்ப்பு பார்பனர்களை ஒன்று சேர்க்கும் என்றே பார்பனர்கள் நினைக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

* சிங்கப்பூர் - மலேசியா, இந்தியா - பாகிஸ்தான் !

திட்டமிடுவதைவிட தற்செயலாக நடப்பது பல வேளைகளில் நன்றாகவே இருக்கும், நட்சத்திரப் பதிவு எழுத இரண்டு வார முன்கூட்டியே தகவல் கிடைத்து, நேரம் கிடைத்திருந்தை வைத்து, நூலகத்தில் இருந்து சில நூல்களை எடுத்து வந்து அதில் இருப்பவற்றில் சிலவற்றை எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இடைப்பட்ட காலத்தில் காதில் விழுந்தவைகளை வைத்து எழுதுவதே சிறப்பு என்று எடுத்துக் கொடுப்பதாக சில நடந்தேறியது. இந்த இடுகையையும் தற்பொழுது (இன்று) எழுதுகிறேன். 

********

நானும் அலுவலக தோழர் / தோழிகளும் அலுவலகம் முடிந்ததும் ஒன்றாக செல்வது வழக்கம், அதில் வாகனம் வைத்திருப்பவர் அழைத்துச் சென்று அருகில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் அல்லது பேருந்து நிறுத்ததிற்கிடையே விடுவார். அப்படிச் செல்லும் போது எதையாவது பேசிக் கொண்டு செல்வோம், சென்றவாரம் உடன் பணிபுரியும் பெண் தோழர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரில் குடியேறி குடியுரிமை பெற்றவர், பேச்சின் தொடர்பில் சொன்னார், 'சிங்கப்பூரில் இருந்து மலேசியா பிரியும் முன் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு'. அதற்கு மற்றொரு நண்பர், அவரும் மலேசியவாசிதான் ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கும் உரிமை பெற்றவர், 'அப்படியெல்லாம் இல்லை, நீ போய் வரலாற்றைப் படி, நீ வரலாறு பாடத்தை பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எனக்கும் ஓரளவு சிங்கப்பூர் வரலாறு தெரியும் ஆதலால் அவர் சொன்னதை ஆமோதித்தேன்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் தவிர்த்து குடியேறிய பிறரும், மலேசியர்களும் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான மாநிலமாக முன்பு எப்போதும் இருந்தது என்றே நம்புகிறார்கள், ஆனால் வரலாறு வேறுவிதமாகத்தான் இருக்கிறது, சிங்கப்பூர் தனி நிலமாகத்தான் வெள்ளைக்காரர்கள் மற்றும் ஜப்பானியர்களின் ஆளுமைக்குள் விழுந்திருந்தது, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த மலேசியா, சாபா, சரோவாக் ஆகிய பகுதிகள் விடுதலை அடைந்த போது சிங்கப்பூரும் விடுதலை அடைந்தது, அப்போதே தொழில் துறை மற்றும் கப்பல் கட்டுமானங்களில் சிங்கப்பூர் தனித்து இயங்கியது. வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைக் கிடைத்த பிறகு சிங்கப்பூர் தனிநாடாக இயங்கப் போதிய இயற்கை வளங்கள் இல்லை என்பதால் அப்போதைய சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் மலேசியாவின் மாநிலப் பகுதியாக இணைந்து கொண்டனர், இது நடந்தது 31 ஆகஸ்ட் 1963, இதன் பிறகு சிங்கப்பூர் அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு உரிமைகள் கோரவே, ஏற்றுக் கொள்ளாத மலேசிய தலைமை சிங்கப்பூர் தனித்து இயங்கலாமே என்று கூறி 9 ஆகஸ்ட் 1965ல் சிங்கப்பூர் தனித்து விடப்பட்டது, இருந்தாலும் நீர் மற்றும் போக்குவரத்திற்கான ஒப்பந்தங்களுடன் சிங்கப்பூர் தனித்தே இயங்கலாம் என்ற துணிவுடன் தனிநாடு என்று அறிவித்துக் கொண்டதுடன், சிங்கப்பூரை உலக வர்தக மையமாக மாற்றி, சில ஆண்டுகளிலேயே சிங்கப்பூர் வெள்ளியை மதிப்பு மிக்கதாக மாற்றி ஆசியாவின் முதலில் முன்னேறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுத்தந்தார் சிங்கபூர் முன்னாள் பிரதமரும் இன்றைய மதியுரை அமைச்சருமான திரு லீ க்வான் யூ. இது கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் பற்றிய சுருக்கமான வரலாறு. 


சிங்கப்பூர் மலேசியாவின் மாநிலமாக இயங்கிவந்தது வெறும் இரண்டே ஆண்டுகள் தான். மற்றபடி சிங்கப்பூர் வரலாற்றில் மலேசியாவின் பகுதியாக சொந்தமாக இருந்த வரலாறே கிடையாது, தவிர மலேசியாவும் பல்வேறு குறுநில மன்னர் ஆட்சிகளால் ஒரே மொழிப் பேசுபவர்களின் தனித்தனி மாநிலமாகவே இருந்தது, மலேசியாவின் பழங்குடிகள் மலைவாசிகள் தான், இன்னும் அவர்கள் மலைவாசிகளாகவே சொல்லப்பட்டு அவர்களை பூமி புத்ரா என்று கூறித் தனிச்சலுகையும் பெறுகிறார்கள், பின்னர் இந்த பூமி புத்ரா சலுகைக்குள் மலாய்காரர்களும் பெரும்பான்மை என்னும் அரசியல் காரணங்களுக்காக இடம் பெற்றுவருகின்றனர், அங்கேயே பிறந்து வளர்ந்த சீனர்களுக்கு அந்த உரிமை கிடையாது. 

இதே போன்று தான் இந்தியச் சொல்லாடல்களில் பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்து பிரிந்து சென்றது அல்லது பாகிஸ்தான் என்பது இந்தியாவிலிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்ட பகுதி என்கிற கருத்தியல் இந்திய மக்களிடம் வரலாறாகச் சொல்லப்படுகிறது, பரதன் ஆண்டான் என்கிற எழுதப்படாத நம்பிக்கைத் தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இந்தியாவில் இல்லை, பல குறுநில மன்னர்கள் மொழி வாரி அடிப்படையில் ஆட்சி செலுத்தி வந்தனர், அவர்களுக்குள் ஒற்றுமைகள் என்பதே இல்லாமல் இருந்தது, தமிழகத்தைப் பொருத்த அளவில் சேர, சோழ, பாண்டிய பரம்பரைகளும் அவர்கள் ஆளுமைக்குட்பட்டவைகள் மூன்று நாடுகளாக அறியப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டு மொத்த இந்தியாவையும் பார்க்க நூற்றுக் கணக்கான மன்னர்கள் இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளாகப் பிரித்து ஆட்சி செய்திருக்க வேண்டும், ஒரே மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருந்தால் மொகலாயர்களோ அதற்கு முன் லோடிகளோ, கில்ஜிகளோ இந்தியாவிற்குள் நுழைந்து கைப்பற்றி இருக்க முடியாது, தவிர இஸ்லாமிய மொகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலம் வெறும் 200 ஆண்டுகள் தான் அவர்களாலும் மொத்த இந்தியாவையும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, அல்லது அந்த முயற்சிக்கு முன்பே வெள்ளையர்கள் வசம் இந்தியா வீழ்ந்ததால் ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்ட பெருமையை வெள்ளையர்களே பெற்றார்கள்.

மதவாத இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் என்ற அடிப்படையில் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பாரதம், பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் தனித்தனி பகுதிகளாக தற்பொழுது அறியப்படுகிறது, பாகிஸ்தானில் அங்குள்ளப் பாடத்திட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட / பிடுங்கப்பட்ட பெரும்பகுதி நிலப்பகுதியே இந்தியா என்று சொல்லப்படுகிறது என்கிற பாடம் இருந்தால் நமக்கு ஏற்பாக இருக்குமா ? ஆனாலும் இந்தியப் பாடங்களாக தேசப்பற்று என்ற ஊசியாக போடப்படுவது பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்தது என்பதே, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் பங்களாதேஸ் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான், அப்படி இருந்திருந்தால் பாகிஸ்தானின் பெயர் இன்றும் மேற்கு பாகிஸ்தான் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கும், அரசியல் காரணங்களுக்காக நிலப் பரப்புகளின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களே தவிர ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிந்தது என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சுகள் தான், வடகொரியா தென்கொரியா இவைகளில் உண்மையான கொரியா எது என்பதற்கு விடைகள் கிடையாது, கொள்கை ரீதியாக அவர்களின் அரசியல் சார்ந்த நிலம் பிரிந்து பெயர் வழங்கப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு அல்லது வெற்றிகரமாக இந்தியாவை வளர்ப்பதற்கு இந்தியா வட இந்தியா தென் இந்தியா என்று பிரிவதாக வைத்துக் கொள்வோம், அப்போது எது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று எப்படிச் சொல்வது எதை உண்மையான இந்தியப் பகுதி என்று எப்படிச் சொல்வது ?

  • சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு இல்லை
  • பாகிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமான நாடு இல்லை (வேண்டுமானால் பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் பாகிஸ்தான் இருந்தது என்று சொல்லலாம், அதே பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் இலங்கையும் உண்டு)
  • பங்களாதேஸ் பாகிஸ்தானுக்கு சொந்தமான நாடு இல்லை
  • இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.
  • அந்தமான் நிக்கோபார் நில அமைப்பின் படி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் தொடர்ச்சியாக இருக்கிறது, ஞாயமாகப் பார்த்தால் அது இந்தோனேசியாவின் பகுதியாக அல்லது தாய்லாந்தின் பகுதியாக தொடர்ந்திருக்கும், இந்திய கைதிகளை அடைக்கப் பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள் அதை கொடையாக இந்தியாவிற்குக் கொடுத்து இந்தியப் பகுதியாக மாற்றிச் சென்றனர்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்