பின்பற்றுபவர்கள்

பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஏப்ரல், 2008

இளங்கோவடிகள் (கண்ணகி), பாரதி யார் தீவிரவாதி ?

ஒரு சொல்லோ, செயலோ அதன் தன்மையில் இருக்கும் உண்மை இயல்பைவிட, அது யாரால் சொல்லப்பட்டது என்பதை வைத்துத்தான் வலிந்து பொருள் உறக்கவே உரைக்கப்படுகிறது.

ஒருமுறை அமெரிக்காவில் ஒரு மாநிலம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற போது அதில் தப்பிப்பிழைத்தவர்கள் பற்றிய செய்தியில் கருப்பர்களைப் பற்றி குறிப்பிடும் போது, "அங்குள்ள கடைகளில் உணவை திருடினார்கள்" என்றும் அதே செய்திதாளில் பிரிதொரு பக்கத்தில் வெள்ளையர்கள் பற்றிய குறிப்பிடும் போது, "உணவுக்காக ஒரு கடையில் இருந்த ரொட்டிக்களை எடுத்தார்கள்". அதாவது ஒன்று திருட்டு என்றும் மற்றொன்று உயிர்வாழ்வதற்கென்றும் சொல்லப்பட்டது.

ஒடுக்கப்பட்டவர்கள் வீறுகொண்டு எழுந்து போராடினால் அது தீவிரவாதம் என்றும், அவர்களுக்கு எதிராக ஆளும் வர்க்கம் எடுக்கும் நடவெடிக்கை உலகை அமைதி பூங்காவாக ஆக்குவதாற்கா என்று சொல்லுவார்கள்.

இது போன்ற கூத்து தமிழ் இலக்கியங்களை வைத்தும் செய்யப்படுவதுண்டு, இந்த இலக்கிய அரசியல் படி யார் தமிழை நேசித்தார்கள், சுவாசித்தார்கள் என்றெல்லாம் காட்டுவதற்கு எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும்.
பெரியார் தமிழை காட்டுமிராண்டு பாசை என்று சொன்னார், அவர் தமிழனல்ல என்றும் (இதுபற்றி முன்பே எழுதி இருக்கிறேன்) பெரியார் மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் சொல்ல முடியாது போகும் போது இது போன்று அவர் (வெளியில் தொங்கிய மூத்திர பையில்) சிறுநீர் போனது , பாரிஸில் நிர்வாணமாக நின்றது, வயதான காலத்தில் மணியம்மையை திருமணம் செய்து கொண்டது என்பதையெல்லாம் சொல்லி பெரியார் ஒரு அயோக்கியன் என்று காட்ட முற்படுவார்கள்.

இளங்கோவடிகளையும், பாரதியையும் ஒப்பிட முடியுமா ? சிலப்பதிகாரம் என்ற பெருங்காதை படைத்த புலவன் எங்கே, வருண கீதையை மொழிப்பெயர்த்த பாரதி எங்கே ? பாரதி சிறந்த கவிஞர் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரை இளங்கோவடிகளுடன் ஒப்பிட முடியுமா ?

அப்படியும் ஒப்பிட்டு இளங்கோவை தாழ்த்தியும், பாரதி புரட்சிக்கென பிறந்ததாகவும் காட்டுகிறார்கள்.

இது ஒருபதிவில் இருந்து எடுத்த ஒரு பகுதி

//பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையை எரித்த கண்ணகியை தீவிரவாதி என்று நாம் இதுவரை சொன்னதில்லியே! பாண்டிய மன்னன் செய்தது தவறு என்று ஜல்லிதானே அடித்து இருக்கின்றோம்.
பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையையும் மதுரை மக்களையும் கண்ணகி ஏன் எரித்தாள் என்று யாரவது கில்லி அடித்து இருப்பார்களா?//


இளங்கோவின் சிலப்பதிகார நாயகி தனக்கு அநீதி கிடைத்தற்காக மதுரையை எரித்தாளாம் ! இது என்ன ஞாயம், பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன செய்ய முடியும் ? ஞாயமான கேள்வியே. இலக்கிய புனைவுக்காகவும், வளமைக்காகவும் புலவர்கள் பொய்யுரைப்பது வழக்கம் தான். கண்ணகி மதுரையை எரித்தாளா இல்லையா என்பது பற்றி சிலப்பதிகாரம் தவிர்த்து வேற எந்த தமிழ் இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை, கதையின் இலக்கியத்தையும், பயனையும் எடுத்துக் கொண்டு, அதை ஒரு புனைவு அல்லது அந்த கதையே புனைவு என்று கூட சொல்லிவிட முடியும்.

தனிமனித அநீதி எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மட்டுமே கண்ணகி மதுரையை எரித்தாக சொல்லப்பட்ட செய்தியை இளங்கோவடிகளின் கற்பனை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அதே தனிமனித் நீதி பேசிய பாரதியின் செய்யுள் மட்டும் புரட்சியாக பரப்பபட்டு வருவது ஏன் ?

''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’

என்று பாரதி ஆவேசப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் உணவின்றிப் பசியால் வாடுவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அந்தக் காரணத்தை அழிப்பதற்குப் பதிலாக ஜெகத்தினை அழித்திடுவது என்ற ஆவேசத்தில் அறவியல் இருக்கலாம்; அதில் அறிவியல் இல்லை.


- அறவியல் காரணமாக, அறிவியல் காரணம் என்றெல்லாம் திரிக்கிறார்கள், முதலில் இதை அறிவின் காரணமாகச் சொல்ல முடியுமா ?

பலர் பாரதியிடம் இருக்கும் பக்தியின் காரணமாகவும், நம்மவர் என்ற பாசத்திலும் பலவகையில் திரிக்கிறார்கள். கூகுளில் "ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று தேடிப்பாருங்கள்.

எவனோ ஒருவன் பட்டினியால் இரு(ற)ப்பதற்கு காரணம், அவன் சோம்பேறியாகக் கூட இருக்கலாம், உழைக்கத்தெரிந்தும் அந்த பொருளை சேமிக்கும் சக்தியற்றவனாக இருக்கலாம், அல்லது எதோ ஒரு புண்ணாக்கு காரணத்திற்காக, ஞாயமற்ற காரணத்திற்கு அவன் பட்டினியாக இருந்து இருக்கலாம், அந்த பட்டினியால் அவன் செத்தே போனதாகக் கூட வைத்துக் கொள்வோம், அந்த ஒருவனுக்காக முழு உலகையும் அழிக்கச் சொன்ன செயல் ஞாயமானதா ?

உலகத்தை(யே) அழிக்கச் சொன்ன பாராதி தீவிரவாதியா ? மதுரையை (மட்டும்) கண்ணகி எரித்தாள் என்று புனைவுக்காக எழுதிய இளங்கோ திவிரவாதியா ?

எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப்பப்படுகிறது, ஒன்று ஏன் தாழ்வாகவும், மற்றொன்று ஏன் உயர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ந்தால் எல்லாவற்றிலுமே சாதி அரசியல் அசிங்கம் (நன்றி: இளா) இருப்பதுதான் தெரிகிறது.

:(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்