பின்பற்றுபவர்கள்

செய்திப் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திப் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 ஜூன், 2009

லங்கா ரத்னாக்கள் மற்றும் அமிதாப் !

புதுடில்லி: "ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டத்தை நிராகரிப்பது குறித்த முடிவை எனது மனசாட்சிப் படி எடுத்தேன்,'' என்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், குவீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டதாக, அமிதாப் பச்சன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்நிலையில், ஐ.ஐ.எப்.ஏ., விருதுகள் விழாவை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் வழங்க இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை நிராகரிக்கும் முடிவு என் தனிப்பட்ட முடிவு. எனது நாட்டு மக்கள் கவுரவமின்றி நடத்தப்படும் நிலையில், இந்த கவுரவ விருதை ஏற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. இது எனது மனசாட்சிப் படி எடுத்த முடிவாகும்.

நன்றி தினமலர்



(முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவிடம் லங்க ரத்னா விருது பெற்ற 'இந்து ராம்')

இலங்கைப் போரில் சிங்களவர்களைவிட முனைப்புக் காட்டிய இந்தியர்களுக்கு இன்னும் பல விருதுகளும் பாராட்டுப் பத்திரங்களும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வெறுப்புகள் ஏன் குறையாமல் இருக்கிறது என்பதற்கு வராலாறுகள் தோறும் இதுபோன்ற நிகழ்வுகள் இருப்பதைவிட வேறென்ன காரணமாக இருக்க முடியும் ? மனசாட்சிகளே இல்லாத விலங்குகளிடையே வாழ்வது தான் மனிதம் பற்றி அவ்வப்போது நினைத்துக் கொள்ள வழிவகை செய்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்