பின்பற்றுபவர்கள்

பெண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 டிசம்பர், 2009

பர்தா வெவகாரம் சில எண்ணங்கள் !

நாகூர், நாகப்பட்டினம் பகுதியில் பிறந்து வளர்ந்ததால் இஸ்லாமியர்கள் வாழ்வியல் முறைகள் பற்றி ஓரளவு எனக்கு தெரியும். இஸ்லாமியர்கள் பற்றிய எனது சிறுவயது எண்ணம், அவர்கள் இந்து கோவில்களுக்கு வரமாட்டார்கள். மசூதிக்கு செல்பவர்கள், மாறுபட்ட உடை பழக்க வழக்கம் கொண்டவர்கள் என்பதே. எங்கள் வீட்டினருக்கும் நெருக்கமான இஸ்லாமிய குடும்பங்கள் உண்டு. நாங்களும் இஸ்லமிய சிறுவர்களும் விளையாடும் போது அவர்கள் / நாங்கள் வேறு என்பதாக நினைத்தது கிடையாது. பெரியவர்கள் அளவிலும் பண்டிகைகளில் உணவுகள் இடம் மாறும். பெரியவர்கள் அளவில் இஸ்லாமிய சிறுவர்களை சுன்னத் பற்றி கிண்டல் அடிப்பதுடன் சரி. இஸ்லாமிய சிறுமிகள் எட்டு வயதிற்கும் மேலும் தெருவில் உள்ள மற்ற சிறுமிகளுடன் விளையாடிப் பார்த்தது கிடையாது. எட்டு வயதிலிருந்து தாவணிகள் அணியும் வழக்கத்திற்கு சிறுமிகள் சென்றிருப்பார்கள். பளபளப்பான சரிகை வகை உடைகளை அணிந்திருப்பார்கள். பள்ளி ... பள்ளி விட்டால் வீடு என்பதாகவே இஸ்லமிய சிறுமிகளின் நடவெடிக்கைகள் மாறி இருக்கும். "சின்ன வயதிலேயே தாவணிப் போட்டு வீட்டோடு இருப்பதால் சிறுமிகளுக்கு கூச்ச உணர்வு ஏற்பட்டுவிடுகிறது, பெரியவளானதும் ஆண்களைக் கண்டால் அவர்களுக்கு உடனேயே கூச்சம் வந்துவிடுகிறது, வீட்டுக்கு அடங்கி இருக்கிறார்கள்" என்று எங்க வீட்டு பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால் பெண் வீட்டினுள் அடங்கி இருக்கவேண்டும் என்று விரும்பவர்களாக எங்கள் வீட்டு பெரியவர்களும் விரும்பி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

சிறுவயது முதலே உடைக்கட்டுப்பாடு, குறிப்பிட்ட உடை என்ற அளவில் பழக்கப்படுத்தப்படுவதால் இஸ்லாமிய பெண்களைப் பொருத்த அளவில் கைகள், இடுப்பு, கழுத்து பகுதி வெளியே தெரிய உடை அணிவது அவர்களது வளர்ப்பு முறையால் அவர்களை மிகவும் கூச்சப்படுத்தும். விரும்பி பர்தா அணிகிறார்கள் என்பதைவிட அது தான் தங்கள் உடலுக்கும், கூச்ச உணர்விற்கும் பாதுகாப்பு என்பதாக இயல்பாகவே பர்தா அணிந்தே வெளியே செல்வார்கள். பொது இடத்தில் அவர்களால் மற்ற பெண்களைப் போல் பர்தா இல்லாமல் இருப்பது வேட்டி மட்டுமே அணிந்து வந்த ஒருவரை ஒரு நாள் பேண்ட் போடச் சொன்னால் அவர் நெளிவதைப் போன்ற அவஸ்தைதான். என்ன தான் நாம ஆண் என்று மார்பு தட்டினாலும் ஜட்டியுடன் பலர் முன் நிற்பது நம்மால் நினைத்துப் பார்க்கவே கடினமானது தான். ஜட்டி அணிந்திருப்பது அம்மணத்தைவிட மேலானது, கோவணம் அணிந்து பலர் வேலை செய்வதைப் பார்த்து இருக்கிறோம். இருந்தும் நம்மால் பொது இடத்தில் அனுமதி கொடுத்தாலும் ஜட்டியுடன் ஒரு ஆண் தான் நிற்க நேரிட்டால் வெறும் வீம்புக்கு என்பதை விட்டு விட்டு பார்த்தால் அவனுக்கு மிகுந்த கூச்சமான அனுபவமாகவே நேரிடும்.

உடை கைதெரிய அணியலாமா, இடுப்பு தெரிய அணியலாமா தொடை தெரிய அணியலாமா என்கிற விவாதங்களை விட ஒருவர் எந்தவிதமான உடைக்கு பழக்கப்பட்டு இருக்கிறாரோ அதுவே அவருக்கு பொருத்தமான உடை என்பதே உடை குறித்த கேள்விக்கு சரியான விடையாக இருக்கும். சென்னையில் இருக்கும் போது நண்பர்கள் அரை ட்ராயர் போடுவது போல் நானும் போட்டுக் கொள்ள நினைத்துப் பார்த்தால் எனக்கு மிகுந்த கூச்சம் ஏற்பட்டது. ஆனால் சிங்கை வந்த பிறகு வேலை நேரம் தவிர்த்து பலரும் அரை ட்ராயரில் தான் உலாத்துகிறார்கள். நானும் அரை டிராயருக்கு மாறிவிட்டேன். சொந்த ஊருக்குச் சென்றாலும் விமானத்தில் சென்றாலும் அரை ட்ராயர் எடை குறைந்ததாகவும் வசதியாகவும் இருப்பதாக உணர்ந்து அலுவல் தவிர்த்த வேளைகளில் அணிந்து வருகிறேன்.

எப்போதும் புடவை அணியும் அம்மாவை வெளி நாட்டிலாவது கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம் சுடிதார் அணியச் சொன்னால் அவங்க வெட்கப்பட்டுக் கொண்டு மறுத்துவிடுவார்கள். அவர்களைப் பொருத்த அளவில் அவர்களின் வளர்ப்பு முறையில் அவர்களுக்கு ஏற்ற கண்ணியமான ஆடையாக புடவை அணிவதை நினைக்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதும் கூட வளர்ப்பு முறையினால் தான். பர்தா அணிந்தே வளர்க்கப்பட்டவர்களால் பர்தா இன்றி வெளியே செல்வதை அவர்கள் கண்ணியம் குறைவாக நினைப்பார்கள், அவ்வாறு அவர்களால் செல்லவும் முடியாது. இப்படியான வளர்ப்பு முறைகளை அவரவர் நற்குடி வளர்பு என்று நினைத்துக் கொள்வதைத் தவிர்த்து இதில் ஒன்றும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் கவிஞர் பர்வின் சுல்தான புடவையுடன் தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள் ப்ர்வின் சுல்தானா வீட்டில் குழுக்கலாச்சாரம் வேண்டாம், ஒரு குழுவிற்குள் முடக்கவேண்டாம் என்று ஏனைய பெண்களைப் போல் உடை அணியட்டம் என்று அனுமதிக்கப்பட்டு அதன் படி அவர்கள் வளர்க்கப்பட்டு இருக்கலாம். அவர்களைப் பொருத்த அளவில் மற்ற பெண்கள் பொதுவாக அணியும் உடை அவர்களுக்கு கண்ணியமானது. அவர்கள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவர்கள் நற்குடி, இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தார்களா என்ற ஆராய்ச்சிகளெல்லாம் நடத்தினால் நமது பார்வை மிகக் குறுகியதே. இந்து மதத்திற்குள் பெண்களுக்கு புடவை கட்டுவதிலே கூட பல்வேறு வகைகள் இருக்கின்றன. நகரத்து பெண்களும், கிராமத்து பெண்களும் ஒரே துணி என்றாலும் புடவை கட்டும் விதம் வேறு, கிராமத்தினர் போல் நகரத்தினர் அணிவது அவர்களுக்குள் கூச்சமாகவே இருக்கும். மடிசார் எனப்படும் புடவைக் கட்டை பார்பன பெண்கள் மட்டுமே அணிகிறார்கள். மற்ற பெண்களுக்கு அதைக் கட்டினால் அவர்கள் தடுக்கி விழுந்தாலும் விழுவார்கள். புடவை கட்டுகள் ஒரு பெண்ணின் நற்குடி பற்றி எதுவும் சொல்லாதோ, அதே போன்று தான் நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்.

அதே சமயத்தில் பெண்ணிய காவலாளிகள் போல் பர்தா பெண்ணை முடக்குகிறது என்று கூச்சலிடுபவர்கள் தம் இனப் பெண்களுக்கு என்ன விதமான உடை சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் என் கண் முன்னே இன்னும் கூட பல இடங்களில் வெள்ளை உடை அணிந்த விதவைகளும், இன்னும் சில இடங்களின் அக்ரஹாரங்களில் காவி உடை அணிந்து தலையில் முக்காடு அணிந்து, தலை மொட்டையான பார்பான பெண்களும் கூடத் தெரிகிறார்கள். முக்காடு அணிந்த இஸ்லாமியர்கள் பார்பதற்கு இந்து விதவைகள் போல் இருக்கிறார்கள் என்று நினைப்பதுடன் சகிக்காமல், தாழ்வுணர்வில் 'இஸ்லாம் பெண்களின் மீது ஆடைக் கட்டுபாடு விதித்திருக்கிறது' என்று கூச்சல் இடுகிறார்கள் என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பர்தா பற்றி ஒரு இஸ்லாம் இணைய தளம் சொல்லும் கருத்து,

ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!

*****

பெண்களுக்கான கண்ணிய உடைகள் இவை என்பவை ஆண்களின் பார்வையில் தப்ப ஆண்களே வடிவமைத்து செய்த ஏற்பாடு என்பதைத் தவிர்த்து, எந்த ஒரு சமயத்தைச் சேர்ந்த பெண்களின் உடையையும் அப்பெண்களே முடிவு செய்துவிடவில்லை. பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெண்கள், எந்த உடை பாரம்பரியமானது, எதை அணியலாம் என்று கருத்து சொல்லும் உரிமை அந்த பெண்களுக்கு உண்டு, ஆனால் அதையும் 'பெண்களுக்கான' உடை என்று பன்மையில் பொதுப்படுத்துவது தவறு தான்.

*****

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !

16 டிசம்பர், 2009

பெண்ணுடலால் வளர்க்கப்படும் சாதீயம் !

மதங்கள் அனைத்தும் ஆண்கள் தலைமையில் உருவாகி இருந்தாலும் அன்னிய (மத/சாதி) ஆண் / பெண் ஈர்ப்பில் அந்த அமைப்பு சிதைந்துவிடாமல் இருக்கவும், அவ்வமைப்பில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் பெண்களின் வழியாக அவற்றைக் கட்டிக்காக்க முடியும் என்ற நம்பிக்கையில் மதக் கொள்கைகளின் வழியாக பெண்களின் மீதான கட்டுப்பாட்டில் அவை செயல்படுகின்றன. மதம் மாறி காதல் திருமணம் செய்துக் கொள்ளும் போது அங்கு பெண்களின் நிலை எப்போதுமே கவலைக்கிடம் தான். தான் இதுவரை வணங்கி வந்த கடவுள்களை மறந்து புதிய வகை வணக்கத்திற்கும், பழக்கவழக்கத்திற்கும் தன்னை அவள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு மதத்திலும் அந்நிய ஆண்களிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது சமயப் பாடமாகவே நடத்தப்படுகிறது. அவை பெண்களின் கண்ணியம், கற்பு என்கிற புனிதங்களாக நிறுவப்பட்டு இருக்கும்.

இந்தியாவின் சிறப்புத் தன்மையாகவும், இந்து மதத்தின் பொதுத் தன்மையாகவும் இருக்கும் சாதியத்தில் பெண்களின் நிலைகுறித்து பல்வேறு சாதிய சமூகங்களும் பல்வகைக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை அவர்கள் சார்ந்த ஆண் சமூகத்தின் விருப்பமே தீர்மணம் செய்திருக்கிறது. இதற்கு அனுமதித்த, மறுத்த சமூகங்கள் அனைத்திலும் பெண்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை ஆண்கள் சமூகமே பரிந்துரை செய்து வந்திருக்கிறது. மறுமணம் செய்வதில் உடன்பாடு உள்ள சில சாதியினரிடம் கூட அம்மறுமணம் கூட அப்பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஆண்களே முடிவு செய்துவிடுவார்களாம். கணவனை இழந்த பெண்கள் கணவரது தம்பியை திருமணம் செய்து கொள்வது கூட வழக்கில் இருந்திருக்கிறது. காரணம் சொத்து யாருக்கு என்பதில் அது உறவுமுறைகளைக் கடந்து வேறொருவருக்கு போய்விடக் கூடாது என்பதைத் தவிர்த்து மறுமணம் பெண்களின் மறுவாழ்வை மறு உறுதி படுத்துகிறது என்பதற்காக அல்ல என்பதாக இத்தகைய மறுமணங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

பெண்களின் கற்பு என்பதை அவளுடைய பெண் குறியுடன் தொடர்பு படுத்தி புனிதம் கட்டமைக்கப்பட்டுவிட்டதால், கணவனின் இறப்பிற்கு பிறகு அவளது பெண் குறி வன்முறையாகத் தீண்டப்பட்டால் அவளுடைய தெய்வீகத் தன்மைக்கு இழுக்கு என்கிற சித்தாந்ததில் கணவன் பிணத்துடனேயே 18 ஆம் நூற்றாண்டுகள் வரை உயிருடன் பெண்கள் (உடன்கட்டை என்கிற) புனிதச் சடங்கு என்ற பெயரில் கொளுத்தப்பட்டு இருக்கிறார்கள், தமிழ் சூழலிலும் அது போன்ற நிகழ்வுகள் நடந்தேறியதாக புறநானூற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு ஆண் எத்தனைப் பெண்ணுடன் உறவு கொண்டிருந்தாலும், அவன் மாற்று சாதிப் பெண்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவனுக்கு 'கற்பு' பாதிப்பு ஏற்படாது. ஆனால் ஒரு பெண் வன்முறையால் தீண்டப்பட்டால் கூட அவள் தீட்டுப்பட்டவள் ஆகிறாள் என்கிற சித்தாந்தங்களில், சாதியத்தின் நிலைப்பு அல்லது விளைச்சல் என்பது அந்த சாதியைச் சேர்ந்த பெண் அந்த சாதியைச் சேர்ந்த ஆணுடன் கூடிப் பெறும் குழந்தைகளினால் மட்டுமே ஏற்படக் கூடியவை என்பதால் பெண் குறியின் மீது ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து 'பதிவிரதா, பத்தினி' தர்மங்கள், கோட்பாடுகள் எழுதப்பட்டன.

இன்னும் கூட உச்சமாக பெண்ணுக்கான ஆன்ம விடுதலை என்பது அவள் தன் கணவனுக்கு எவ்வளவு உண்மையாகவும், அவனுக்கே அற்பணிப்பாக வாழ்கிறாள் என்பதே முடிவு செய்துவிடும் எனவே பெண்கள் ஆண்களைப் போன்று கடுமையான சாதகப் பயிற்சியினால் ஆன்மிக முன்னேற்றம் அடைவதைவிட அது எளிய வழிகள் என்பதாகச் சொல்லப்பட்டன. ஆன்மிகம், சமூகம் அனைத்து வழியிலும் பெண்கள் மாற்று ஆடவரை திருமணம் செய்வது அவளுடைய புனிதத் தன்மைக்கு இழுக்கு என்பதாகவே சமூகம் கட்டமைத்து இருக்கிறது பெண் குறியை மூன்று தெய்வங்கள் காவல் காக்கின்றன என்பதாக மனுஸ்மிருதிகள் எழுதப்பட்டன. வேற்று (சாதி) ஆடவனை அங்கே எந்த சூழலிலும் அனுமதித்திவிட்டால் பெண் குறியை காவல் காக்கும் தெய்வங்களுக்கு தெரிந்து போய்விடும், அவள் தண்டனை அடைந்துவிடுவாள் என்கிற மனம் சார்ந்த பயத்தை பெண்களுக்கு ஏற்படுத்துவதன் முலம் பெண் தனது பிற ஆடவர் குறித்த மன அளவிலான சிந்தனையைக் கூட கட்டுபடுத்திவிட முடியும் என்கிற உளவியலுக்காக பெண் குறி தெய்வங்கள் அங்கே குடிகொண்டி இருப்பதாக கதைகள் உண்டாகின.

உயர்சாதி ஆண்களை காதல் மணம் புரியும் போது பெண்ணின் பெற்றோர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள், அவர்களுக்கு அது பெருமை என்பதாகவும், தாழ்ந்த சாதி ஆண்களை காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அந்தப் பெண்கள் பெற்றோர்களால் கைகழுவி விடப் பட வேண்டும் என்பது சமூக ஏற்பாடாகவே இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களெல்லோருக்கும் இந்த காலத்தில் எதிர்ப்பு அவ்வளவு இல்லை என்றாலும் தன்னுடைய அடையாளத்தை அவள் துறந்தாகவே வேண்டும் என்கிற நிலையில் தான் இன்றைய சமூக அமைப்பும் இருக்கிறது.

தற்போதைய திரைப்படங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அவளை அவனுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற அபத்தங்கள் இல்லை என்றாலும், ஒரு பெண் ஒருவனை மனதார நினைத்துவிட்டால் அவள் சாகும் வரையில் பிற ஆணை நினைக்கமாட்டாள் என்கிற ஆண்கள் எழுதும் வசனங்களைப் பல்வேறு திரைப்படப் பாத்திரங்கள் பேசுவதைக் கேட்கிறோம். இவற்றின் வழியாகக் கூட பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும், மனது உடலும் ஒருமுறை யாருக்கேனும் கொடுக்கப்பட்டால் அவள் சாகும் வரையில் அப்படியே தான் இருக்க வேண்டும் என்கிற ஆணிய சாதித்துவ ஆசைகளை அப்படி வெளிப்படுத்தி எழுதிவிடுகிறார்கள். அந்த வசனத்தை பெண்களின் காதலைச் சொல்லும் உறுதியான மனவியல் வசனங்கள் என்பதைவிட முன்கூட்டியே பெண் எதிர்புகளை எல்லாம் சிந்தித்து அதன் பிறகே தனது மனதை ஒருவருக்குக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அப்படியே அவள் இருக்க வேண்டியது தான் என்கிற சாதித்துவ ஆசைகள் அதில் அடங்கும். ஒரு பெண் ஏமாற்றப்பட்டாலும் அந்த ஒருவனைத் தான் நினைக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி ஆண்கள் எழுதும் வசனங்கள் அல்ல.

பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்துக் கொள்வது போன்றவை விதவைகளுக்கான புரட்சிகள் இல்லை, அவள் முறையாக மறுமணம் செய்து வைக்கபடவேண்டும் அதுவும் அவள் விருப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை சமூகம் சிந்திப்பது இல்லை. முடிந்த அளவுக்கு அதே சாதியில் ஒருவன் வந்து கட்டமாட்டானா என்றே காத்திருப்பார்கள். இன்றைய தேதியில் விதவைகளைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் பலர் முன்வந்தாலும் சாதியத் தடைகளை மீறி அத்தகைய திருமணங்கள் நடைபெறுவது அரிது.
குழந்தையற்ற விதவைகள் என்றால் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதாக சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கான விளம்பரமாக "நோ இஸ்யூ" அதாவது அவளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை, என்பதும் கூட விளம்பரப்படுத்தப்படுகிறது.

மத அடையாளம், சாதிய அடையாளம் இவை அனைத்தும் மறு தலைமுறைக்கு பெண்களின் வழியாகவே அனுப்பப் படுகிறது என்பதை விழாக்கள், விருந்துகள், பண்டிகை காலங்களில் நன்கு அறியலாம். ஆண்கள் வெள்ளைகாரனின் உடையை அணிந்திருக்க, பட்டுபுடைவை சலசலக்க பெண்களை அங்கே அழைத்துவருவது தான் பெருமையானதும், பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் வழிமுறையாகவும் சுறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாடு மற்றும் சாதிய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஆண்கள் வெளியே வெளி உலகில் காட்டாவிட்டாலும் பெண்களின் வழியாக அதைச் செய்தே வருகிறார்கள். தாய் மொழி மாறி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கூட தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய மொழியை தாய் மொழி ஆக்கிவிட முடியாது.

வெளிநாடுகளில் சாதியற்ற சமூகங்கள் உள்ளன, அங்கே பெண்கள் மறுமணம் செய்து கொள்வது புரட்சியாகப் பார்க்கப்படுவதும் இல்லை, அது ஒரு நிகழ்வு தான். இந்தியாவில் வேலைக்கு போகும் பெண்கள் கூட ஒழுக்க மற்றவர்கள் என 'வருண' பகவான் காஞ்சி சங்கராச்சாரியால் சொல்ல முடிகிறது, வெளி நாட்டுப் பெண்கள் அனைவருமே ஒழுக்கமற்றவர்களாக இந்திய பொது ஆணிய சமூகம் அடிக்கடி பரப்பிவரும் தகவல்களை ஒப்பு நோக்குக.

பெண்களின் மீதான சாதிய பிடிகள், கற்பு சித்தாந்தங்கள் முற்றிலும் உடைபடும் போது சாதியற்ற சமூகங்கள் மலரும். அதுவரை பெண்கள் வழியாக ஆணிய சமூகம் சாதியத்தின் நிழல் கூட சாகமல் காத்துக் கொணடே வரும். சாதிகளை / மத இறுக்கங்களை காக்கும் ஆயுதங்கள் அனைத்தும் பெண்களை புனிதத்துவப் படுத்துவதன், கண்ணியப்படுத்துவதன் மூலம் சமார்த்தியமாக ஆண்கள் சமூகம் அவளிடம் திணித்து வைத்திருக்கின்றன. பெண் சமூகம் அவற்றை ஒவ்வொன்றாக வீசி எறிய எறிய சாதி அற்ற சமூகம் சாத்தியப்படும். பெண் விடுதலையில் ஆணாதிக்க சமூகம் செயல்படுத்தும் சாதி வெறியின் விடுதலையையும் சேர்ந்தே உள்ளது.

25 ஆகஸ்ட், 2009

கலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் !

பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் ஆகிய சொல்லாடல்களில் பலருக்கும் பல கருத்துகள் இருக்கிறது. ஊருக்கு அறிவுரைக் கூறும் ஆண் சமூகம் வீட்டுப் பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் கொடுக்கிறதா என்பதே கேள்விக்குறி. தொடர்ந்து அழும் தொலைக்காட்சித் தொடர்கள் இன்னும் என்ன என்னவோ அத்தனை ஊடகங்களும் திடீர் பெண்ணிய வியாதிகளாகி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் என்பதாக அவர்கள் எதோ நல்லது செய்வது போல் பெண் சமூகங்களை கீழறுத்ததே நடந்தேறிவருகிறது. இன்னும் ஒரு சிலர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வதில் தவறே அல்ல என்றெல்லாம் வழியுறுத்துகின்றனர். மேம்போக்காக பார்த்தால் அது சரிதான் என்பது போல் தெரியும், ஆனால் நல்லதொரு ஆணின் மனைவி கேடுகெட்ட ஆண்களின் வலையில் வீழ்வதற்கு இது போன்ற கருத்து வாதிகள் மறைமுகமாக குழிபறிக்கிறார்கள் என்பதே உண்மை.

பெண்கள் மதுக்குடிப்பதும் குடிக்காமல் இருப்பதற்கும் வளர்ப்பு, குடும்ப சூழலே காரணம், அது அவர்களது மிக மிக தனிப்பட்ட செயல் இதில் கருத்து சொல்ல எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து சித்தாள் வேலை, சாலைத் தொழிலாளிகள், கூலித் தொழிலாளி பெண்கள் பலருக்கு குடிக்கும் வழக்கம் இருக்கிறது, உடம்பு அசதியை மறந்து தூங்கினால் தான் அடுத்த நாள் வேலைக்குச் செல்ல முடியும் என்கிற காரணம் சொல்லுவார்கள், அது சரியான காரணமா ? இல்லையா ? என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அவை பொதுச் சமூக ஒழுக்கத்தை நலிவுறச் செய்வது போலவும், பெண் உரிமையுடன் தொடர்புடைய ஒன்று போலவும் ஊடகங்கள் கட்டமைப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

கூலித் தொழிலாளி ஒருவர் மதுக்கடை முன்பு நின்று மதுக்குடிப்பதை படமெடுத்துப் போட்டு 'அன்றாடம் காய்சிகளின் பெண்ணொழுக்கம் பாரீர்'
என்பதை மறைமுகக் கருத்தாக திணிப்பது போல் மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?


படம் நன்றி : தினமலர்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்