பின்பற்றுபவர்கள்

போலி சாமியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி சாமியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மார்ச், 2010

கால் கழுவும் கலாச்சாரம் !

பண்பாடு என்ற அளவில் அன்றாட செயல்களில் சிலவற்றை நேரிடையாக சொல்வது நாகரீகமின்மையாக கருதப்பட்டு அவை மறை பொருளாகச் சொல்லப்படும், அதுவே இடக்கரடக்கல் என்னும் இலக்கணச் சொல், சளி சிந்துதல் என்று சொல்லாமல் மூக்கு சிந்துதல் என்பார்கள், குண்டி / சூத்து கழுவுதலை கால்கழுவுதல் என்பார்கள். இடக்கரடக்கல், குழூக்கூறி ஆகியவை மறை பொருளாகச் சொல்லப்படும் செயல் குறித்த சொற்களின் மறுவடிவம் அல்லது குறியீடு. இருந்தாலும் இங்கே கால் கழுவுவது என்றால் நான் இடக்கரடக்கலான குண்டி கழுவுவது பற்றிச் சொல்லவில்லை.

*****

ஒருவரின் இழிவுகளை சுமப்பதன் மூலம் நாம் அவரைப் போற்றுகிறோம் என்பது பண்பாடாம். இப்படித்தான் இராமன் என்னும் அண்ணனை உயர்வு படுத்த தம்பி பரதன் அவனது செருப்பை வைத்து நாடாண்டான் என்பது இராமாயணக் கதை. உன் கால் செருப்பு கூட எனக்கு உயர்வு தான் என்று சொல்வதாகப் பொருள். பிறரை எதை வைத்து 'செருப்பால் அடிப்பேன்' என்று கேவலப்படுத்துகிறோமோ, மற்றவருக்கு 'செருப்பாக இருப்பேன்' என்று உயர்வாகச் சொல்வது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் காலந்தோறும் இருந்தே வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் இது தேவையில்லாத உணர்ச்சி மிகுதலின் வெளிப்பாடுகள், ஒருவரின் காலில் விழுதலும் மற்றவரை காலை வாரிவிடுவதும் கிட்ட தட்ட ஒன்று தான். ஒன்றின் பெயர் பணிவாம் மற்றொன்று துணிவாம்.

திருமணச் சடங்கின் போது பெற்றோர்களுக்கு பாத பூசை செய்வது பார்பனிய வழி இந்து திருமண முறையில் ஒரு சடங்கு. பெற்றோர்களின் காலில் பூசை செய்வதை பிள்ளைகள் விரும்பியே செய்கின்றனர் என்றாலும் இது பெற்றோர்களுக்கு பேரனந்ததை தந்துவிடுமா ? அப்படியே என்றாலும் அந்த நிகழ்வின் போது எந்த ஒரு விதவை தாய்க்கும் அந்த தகுதி கொடுக்கப்படுவதில்லை. விதவை தாயின் மக்களின் திருமணத்தின் போது வேறொரு மூத்த பெரியப்பா, சித்தப்பா தம்பதிகளுக்கு அந்த பாத பூசை நடக்கும், அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைப்பார்கள். பாத பூசை என்பது பெற்றோர்களுக்கு மதிப்பதற்கு செய்யும் ஒரு சடங்கு என்றாலும் இரு பெற்றொரும் இருந்தால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.

கால்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தவிர்த்து கால் உட்பட பிற(ர்) உடல் உறுப்புகளுக்களை ஒருவர் மதிக்க வேண்டியது இல்லை. ஒருவரின் மீதான மரியாதை என்பது அவருடைய முழுவுருவத்திற்கும் அன்றி தனித்தனியாக கால், கை, தலை முதலியவற்றிற்கானது அல்ல. சாமியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் புனித பிம்பங்கள் முற்றையும் துறந்ததாகச் சொல்லிக் கொண்டு பக்தர்கள் கால் கழுவி, பாத பூசை செய்யச் சொல்வதைவிட சக மனிதனை இழிவு படித்தும் நிகழ்வு எதுவும் இல்லை. அப்படியே செய்ய அது என்ன கழிவரைக்கே செல்லாத காலா என்ன ? இதையும் விடக் கொடுமை காஞ்சிப் பெரியவாள்கள் திறந்த வெளியில் தான் ஆய் போவார்களாம், அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம். அதை புனித பணியாக சிலர் செய்துவருவதாகவும் பலர் படித்திருக்கக் கூடும். மனித உடல்கழிவுகள் ஒருவருக்கு சந்தனமாகவும், மற்றவருக்கு மலமாகவும் போகுமா என்ன ? இது போன்ற இழிவுகளையும் ஒரு மனிதன் தன்னைத் தாழ்த்திக் செய்வதையெல்லாம் இறைப் பணி என்று உளறவும் செய்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனம் உவந்து செய்யும் இந்த செயல்களையெல்லாம் கூட வயது வந்த பெற்றொர்களுக்கு பிள்ளைகள் செய்யாமல் வேலைக்காரர்களை வைத்து செய்யும் நிலையில் ஒரு சாமியாரின் கழிவுகளுக்கான பணிவிடைகளில் என்ன புனித தன்மை இருந்துவிடப் போகிறது.

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளும் சாமியார்கள், சாமியாரிணிகள் பலரும் பக்தர்கள் பாத பூசை செய்வதை அனுமதிப்பதும் இல்லாமல் அதற்கு கட்டணம் வேறு வைத்து வசூலிக்கிறார்கள். இந்த நாற்றம் பிடித்த சாமியார்களின் செயல்களை இந்து மத இடிதாங்கிகள் கண்டித்ததே இல்லை. பாத பூசை செய்வதில் பக்தனுக்கு பலன் உண்டு என்றால் அதே சாமியார்களுக்கு குண்டி கழுவி விடுவது பன்மடங்கு பலன் தரும் என்று சொல்லிவிட முடியுமா ? அந்த அளவுக்கு இன்னும் செல்லாதது ஓரளவு ஆறுதலே அளிக்கிறது, அதுவும் ஒரு புனித சேவை என்று எதோ ஒரு பக்தி இலக்கியத்தில் கோடிட்டு இருந்தால் சாமியார்களுக்கு குண்டி கழிவி விட டெண்டர் விட்டு வசூல் நடத்தினாலும் நடத்திவிடுவார்கள்.

*****

சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவருமே நம்மைப் போல் எலும்பும் சதையும், கழிவு உறுப்புகளும் உள்ள மனிதர்கள் தாம், அவர்கள் உடலில் இருந்து வியர்வை, சீழ், மலம், சிறுநீர், விந்து, கண்ணீர் ஆகிய அனைத்து கழிவுகளும் வெளியேறும். இன்னும் சொல்லப் போனால் நம்மைப் போலவே பெற்றோர்களின் உடல் உறவின் மூலம், கழிவு உறுப்பின் வழியாக பிறந்தவர்கள் தான் அனைத்து மத சாமியார்கள் மற்றும் மத போதகர்கள் அனைவருமே. அவர்களது தனித்தன்மை என்பது அவர்கள் நடவடிக்கை மட்டுமே அன்றி உடல் அல்ல. சாமியார்களுக்கு கால்கழுவுதல், இலை போடுதல் போன்றவற்றிற்கு பதிலாக முதியோர் இல்லங்களுக்குச் சென்று குளிக்கக் கூட இயலாத நிலையில் நலிவுற்றிருக்கும் மூத்தவர்களுக்கு அப்பணிவிடைகளைச் செய்தால் கிடைக்கும் அவர்களின் மனதிலிருந்து கொடுக்கும் வாழ்த்தும், ஆசியும் எந்த ஒரு முக்தி பெற்ற அல்லது முக்தி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்களால் கூட அளிக்க முடியாது.






எந்த ஒரு சாமியார் பாத பூசையால் மகிழ்கிறானோ, அவ்வாறு செய்ய அனுமதிக்கிறானோ, பணிவிக்கிறானோ அவன் போலி சாமியாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் மக்களை இழிவு படுத்திப் பார்பவன் ஒரு உண்மையான துறவியாக இருப்பதற்கு வாய்பே இல்லை. தன்னை அவதாரம் மற்றும் கடவுள் என்று விளம்பரம் செய்ய இவ்வாறு செய்கிறார்கள்.

6 மார்ச், 2010

நித்தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

ஞாயமாக இந்த தலைப்பில் கிழக்கு வெளியிடுகள் தான் சூட்டோடு சூடாக 100 ரூபாய் புத்தகம் வெளி இட்டிருக்கனும். அச்சில் இருக்கிறதோ அல்லது பா.ரா பிசியோ என்னவோ :)

90களின் இறுதியில் நித்தியின் புகைப்படங்கள் கட்டுரைகள் குமுதம் போன்ற நாளிதழ்களில் வெளியான காலகட்டங்களில், 'இவன் என் பிரண்ட் அரவிந்த் க்ளாஸ்மெட்' என்று ஒரு வாரப்பத்திரிக்கையில் அவன் படத்தைப் பார்த்த என் தம்பி எனக்கு சொன்னான். என் தம்பியின் நண்பன் டிப்ளமோ படித்தவர். நித்தியும் டிப்ளமா தான். அப்போதெல்லாம் நித்தியின் புகைப்படங்கள் விவேகநந்தர் பாணியில் காவி உடையில் தலையில் முண்டாசுடன் 21 ஆம் நூற்றாண்டு புதிய விவேகநந்தர் போன்ற போஸுடன் காணப்படும். பெயரும் விவேகநந்தர் மற்றும் இராமகிருஷ்ண மடங்களின் சந்நியாசிகளுக்கு கொடுப்பது போலவே 'ஆனந்தா' வில் முடியும் பெயருடன் இருந்தார். நித்தியின் ஆசிரமத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஆனந்தாவில் முடியும் பெயர்கள் தான் சூட்டப்பட்டு இருப்பதாக தற்போதைய செய்திகள் வாயிலாக அறிகிறேன்.

விவேகநந்தர் வேடத்திற்கு பிறகு நித்தி புத்தர் போஸ்கள் கொடுக்கத் தொடங்கினார். புத்தரைப் போன்ற வெள்ளை உடை, ஆலமரம் அடியில் தியானம் செய்வது போன்ற போஸ். இந்தகாலகட்டத்தில் நித்தி தன்னை கார்ப்ரேட் அந்தஸ்திற்கு உயர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு, பணக்காரர்களின் பொருள் உதவி என வேகமாக வளர்ந்திருக்கிறார். சாய்பாபாவைப் போன்ற அவதாரம் தேவைப்பட முண்டாசைக் கழட்டிவிட்டு பம்பல் முடி வளர்க்க முயற்சித்த் அவரது முடியால் முடியாமல் போக அது குறும் கூந்தல் வளர்க்கத் தொடங்கி இருக்க வேண்டும். பொதுவாக கார்ப்ரேட் சாமியார்கள் அனைவருமே கடவுள் படத்தை தூக்கிப் போட்டுவிட்டு நான் தான் சிவன் அவதாரம் என்பார்கள். சாய்பாபா விஷ்ணு அவதாரமாம், போட்டி வேண்டாமே என்று நினைத்த நித்தி சிவன் அவதாரம் ஆகிவிட்டார். சிவலிங்கத்திற்கு முண்டாசு கட்டிவிட்டு பூசைக்காக பெயரளவில் வைத்துவிட்டு, இவர் படத்தையே இவரது அடியார்கள் வணங்கும் படி வைத்தார். சாய்பாபா செய்துவருவதும் அப்படியே. சாய்பாபா சமீதிகளில் அவரது படமும், ஒரு நாற்காலியும் இருக்கும், இதன் பொருள் சாய்பாபா அங்கே அமர்ந்திருப்பதாக உணரனுமாம், சிலருக்கு அப்படியே தோன்றுமாம் (மன பிராந்தி, விஸ்கி என்று இதைத்தான் சொல்லுவார்கள்), அதே பாணியில் நித்தியும் நித்தியின் படங்களை முன்னிறுத்தி சீடர்களையும், நம்பிக்கையாளர்களையும் வணங்கச் செய்தார். படத்தை வணங்கச் சொல்லுவது பங்காரு அடிகளாரும் என்றாலும் சாய்பாபா தான் நித்திக்கு முன்னோடி.

கார்ப்ரேட்டுகளாக வளர்ந்த பிறகு உலக அளவில் பரவவேண்டுமென்றால் 'அடியார்கள் அருள் பெற்ற' கதைகள் எழுதவேண்டும். படத்திலிருந்து விபூதி கொட்டியது, 'மெடிக்கல் மிராக்கல்' என்று மருத்துவர்களே வியப்படையும் படி நோயாளிகள் குணமடைந்தார்கள் போன்ற பல கதைகள் உலவ விடப்படவேண்டும். இந்த வேலையை சாரு போன்ற பிரபல எழுத்தாளர்கள் எழுதி நித்திக்கு பெரும் புகழ் சேர்த்தனர். கார்ப்ரேட் சாமியார்களின் பக்தர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் பிறகு வெளி நாடுகளில் மடம் திறக்க அது பெரியவழியாக அமையும். அவர்களின் முன்னேற்பாடுகளில் கிளை கிளையாக தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் நித்தியும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். 1000 என்ற எண்ணிக்கையில் ஆசிரமங்கள், யோக நிலையங்கள், தனிப்பட்ட கோவில்கள் என நித்திக்கு உலக அளவில் செல்வாக்கு உயர்ந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் நித்தி வளர்ந்த அசுர வளர்ச்சி 32 வயதிற்குள் 1000 கணக்கில் யோகா நிலையங்கள், 1000 ஏக்கர் கணக்கில் ஆஸ்ரம நிர்வகத்திற்கு பல்வேறு நாடுகளில் சொத்துகள், மில்லியனில் பணம் இவையெல்லாம் நித்தியின் தனிப்பட்ட சாதனைதான், இந்த வயதில் இவ்வளவு வளர்ந்தவர்கள் தொழில் துறையிலும் பன்னாட்டு நிறுவனம் என்ற அளவில் கூட குறைவே.

சாய்பாபா போன்றே பெரிய பெரிய ஆசனங்களில் அமர்ந்து பேசினார். தன்னை சிவனவதாரம், ஜீவன் முக்தி அடைந்தவன் (வாழ்வில் முக்தி அல்லது வாழும் போதே மோட்சம் பெற்றவன் என்று பொருள், அதனால் தான் அவர் பெயர் நித்திய ஆனந்தா)

நித்தி போன்றவர்கள் போதிப்பதே உண்மையான ஆன்மிகம் என்று ஆன்மிக நாட்டம் உடையவர் நம்பிவிட்டால், மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயக்கம் அடைந்துவிடுவார்கள், அதன் பிறகு சரணாகதி அடைந்தவர்களாக அந்த அப்பாவிகள் 'ஜீவன் முக்தி' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களைத் துறந்து, இல் வாழ்க்கையை துறந்து நித்தி போன்றவர்களின் ஆஸ்ரமங்களில் சேவைக்கு சரணாகதி அடைந்துவிடுவார்கள், நித்தி போன்றவர்கள் போலி என்று அடையாளம் காணும் போது ஆசிரமத்தில் சரண் அடைந்த ஆண்கள் பரவாயில்லை, இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று அதனை விட்டு 'மனப்'பூர்வமாக விடுதலை அடைய முடியும். பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறி, 'இவளும் அங்கே படுக்கையை பகிர்ந்திருப்பாளோ' என்று உறவினர்களாலேயே கேவலமாகப் பேசப்பட்டு அந்த பெண் வாழ்நாள் முழுவதும் ஒடுங்கியே இருக்க வேண்டியதான். நித்தியின் ஆசிரமத்தில் சரணடைந்த பெண்களின் எண்ணிக்கை 600க்கும் மேலாம், இதில் இந்தியாவில் தான் உண்மையான ஆன்மிகம் என்று விரும்பி வந்த வெளிநாட்டினர்களும் உண்டு. நித்தியின் கார்பரேட் கட்டுமானத்தில் வெற்றிகரமாக ஆசிரமம் நடத்தியவர்களின் அனைத்து அம்சங்களும் உண்டு.

ஆன்மிகத்தில் மாயை என்று சொல்லுவார்கள், கண்ணில் தெரியும் காட்சி உண்மை அல்ல என்பது இதன் பொருளாம். அபிரதமான வளர்ச்சி அடைவது அது பணமாக இருந்தாலும் புகழாக இருந்தாலும் அது மாயைதான். ஏனெனின்றால் அது இயல்பான வளர்ச்சியே அன்று. குதிரை பந்தயம், பெரும் திருட்டு, ஏமாற்றுதல் இதன்வழியாக பெரிய பணம் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால், அது விட்டுப் போக வெகு குறைவான நாட்களே எடுத்துக் கொள்ளும், நித்தியின் கட்டுபாடற்ற வளர்ச்சியும் கூட அப்படித்தான், சீட்டுகட்டு மாளிகைப் போல் ஒரே நாளில் தரைமட்டமானது.

நித்தி விவேகநந்தாராக, புத்தராக, சிவ அவதாரமாகி கடைசியில் மன்மதன் அவதாரம் எடுத்த போது வீழ்ந்துவிட்டார். :)

மக்களும் எந்த அவதாரத்தையும் போற்றி வணங்குகிறார்கள், லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி பாத பூசைகூட செய்கிறார்கள் மன்மத அவதாரம் என்றால் பொங்கிவிடுகிறார்கள். :)

கடவுள்களுக்கு ஏற்கபட்டும் மன்மத அவதாரம், சாமியார்களும் எடுக்கும் போது ஏற்றுக் கொள்ளாதது மக்களின் ஓரவஞ்சனை. ஆக மக்கள் மனதில் எந்த ஒரு சாமியாரையும் கடவுள் அல்ல அவன் மனிதன் தான் என்று புரிந்து கொள்ள சூழல் தான் தேவைப்படுகிறது. மற்றபடி மக்கள் முட்டாள்களே அல்ல.






4 மார்ச், 2010

ஞான மரபும், வெளிநாட்டு சதியும் !

நேற்றுவரை இந்து மதத்தை உய்விக்க மறு அவதாரம் எடுத்த விவேகநந்தர் என புனித பிம்பம் ஆக்கி புகழ்ந்த இந்து அமைப்புகள் அது கிழிந்த மூத்திரப் பை என்று தெரிந்ததும், சத்யானந்தனின் ஆசிரம அமைப்புகளை அடித்து நொறுக்கி இருக்கிறதாம். வேடம் களைந்ததால் இவர்கள் உருவாக்கிய புது விவேகநந்தனை இவர்களே காலி செய்கிறார்கள். சத்யாநந்தனனுக்கு இவர்கள் செய்த விளம்பரம், அவனுடைய அசுர வளர்ச்சியும் துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம் ஆனது போல் ஆகிவிட்டது.

சந்தடி சாக்கில் 'கிந்து' லேகியம் விற்கும் 'வெற்றி' எழுத்தாளர் குழுமம், சத்யானந்தரின் அம்பலத்தால் கிந்து ஞானமரபுக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று கேள்வி எழுப்பி விடையும் சொல்கிறார்கள். தலித்தை கோவிலுனுள் சேர்க்காததற்கும், அனைத்து மதத்தினர் அர்சகர் ஆகும் திட்டத்திற்கு தடைவாங்கியும், தமிழ் வழிபாட்டு முறை என்றால் முகம் சுளிக்கும் இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு 'ஞான மரபு' பற்றி வெற்றி எழுத்தாளர் மிகவும் கவலைப்படுகிறார். எங்க கிந்து மதத்தில் பிரம்மாச்சாரியம் எல்லாம் கிடையவே கிடையாது பெளத்த மதத்தின் 'சன்னியாசம், பிரம்மச்சாரியம்' என வேண்டாத ஒன்றை கிந்து மதம் எடுத்துக் கொண்டுதால் இது போன்ற அவமானங்களை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று முத்து உதிர்கிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக சத்யானநந்ததிற்காக மீடியா கிடைத்த போதெல்லாம் கூவிய சேறு எழுத்தாளர், சத்யானந்தன் ஸ்திரீ லோலன் தான் ஆனாலும் அவனிடம் நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பது உண்மை, நேரில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே தான் உடல் நலம் இல்லாமல் படுத்திருந்த போது சத்யானந்ததின் ஆசி பழிக்கவில்லை, கஞ்சு பாத்திரத்தைக் கூட திறக்க தெம்பு இல்லாமல் இருந்ததாகவும் யாரோ ஒரு வாசகர் உதவியால் மருத்துவமனை சென்றதாகவும் அதே கட்டுரையில் சத்யானந்ததின் சக்தி பற்றி முன்னுக்கு பின் உளரலாகவே எழுதி இருக்கிறார். தான் விளம்பரம் செய்தது தவறு அல்ல, சத்யானந்தம் மோசமானவன் தான் என்பதை இப்படியாக உணர்த்துகிறாராம். அவரை படிப்பவர்கள் ஐயோ.....முட்டிக் கொள்ளுங்க.

நவீன வீவேகந்தர் நாறிப் போய்விட்டார், கிந்து மததிற்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்று அலறும் கூட்டங்கள், கிந்து மதம் மேன்மை அடைய என்ன செயதது என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் போலி சாமியார்களை அடையாளம் காட்டும் வேலையாவது செய்தார்களா ? தெரியவில்லை, மாட்டிக் கொண்டால் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை உடனடியாக சொல்லி மாட்டிக் கொண்ட அமைப்பை தாக்குவதின் மூலம் கிந்து மதம் காக்கப்படும் வருணாசிரமம் காக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

இதைவிடப் பெரிய காமடி சத்யானந்தம் சிக்கிக் கொண்டது நல்லது தான் என்று எதுவுமே சொல்லாமல், இது கிந்து எதிரிகளின் சூழ்ச்சி, வெளிநாட்டு மதமாற்றுக் கும்பலின் சதி என்றால் உளறிக் கொட்டுவதற்கு 'வெற்றி' எழுத்தாளர் ஆமாம் போடுகிறார். வெளி நாட்டுக்காரன் ஒரு வேளை சதி செய்கிறான் என்றே வைத்துக் கொண்டாலும் சத்யானந்தம் போன்ற கார்பரேட் சாமியார்களுக்கு 200 ஏக்கர் பரப்பில் அமைந்த ஆசிரமங்கள், 1000 கிளைகள், உலகம் தழுவிய 1000 கோடி டாலர் ஆசிரம சொத்துகள், யாரால் வந்தது ? வெளி நாட்டுக்காரன் பணம் தானே ? பாதிக்கபடுபவன் வெளிநாட்டுக்காரனாக இருக்கும் போது அதை அவன் தான் அம்பலப்படுத்தி இருந்தாலும் அதில் தவறு ஏது ?

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளை காமசூத்திர,தாந்திரீக யோக குண்டலினி, என்ற பெயர்களில் போலி கிந்து அமைப்புகள் கூடாரம் அடித்து தாக்கி வருகின்றனர். கிந்து மதத்தில் தான் உண்மையான ஆன்மீகம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கையில் வாரிசு அற்ற தங்கள் சொத்துகளை வெளி நாட்டினர்கள் முழுவதுமாக அளிக்கிறார்கள், பில்கேட்ஸ் 10000 தொழிலாளர்களை, 1000 அலுவலங்களை வைத்து செய்யும் ஒரு தொழிலில் கிடைக்கும் வருவாய் போல 1000 ஆசிரமக் கிளைகள் தொடங்கி கிந்து சாமியார்கள் வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டு அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு கோபம் வருமா வராதா ?

கிந்து சேவை அமைப்புகள் சாமியார்களின் அளவுக்கு மிஞ்சிய அசுரவளர்ச்சி, அவர்களின் சொத்து குவிப்பு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமல் இருந்துவிட்டு, அவர்கள் மாட்டிக் கொண்டால் கைகழுவதும் இல்லாமல் அவர்களின் அமைப்பில் எதுவுமே தெரியாமல் எதோ தேடல் என்று சென்று அங்கே சேர்ந்து அங்கேயே தங்கி இருக்கும் அப்பாவிகளையெல்லாம் தாக்குகிறார்கள். சத்யானந்ததிற்கு பேராதரவு கொடுத்து கட்டுரைகள், அருளுரைகள் வெளி இட்ட செய்தி இதழ்கள் தற்போது சூடான விற்பனைக்கு சத்யானந்த சம்போகம் வெளி இடுகிறார்கள். இவர்களையாவது கிந்து அமைப்புகள் கண்டித்ததா ?

கிந்து மதம், ஞான மரபு என்ற சப்பைக் கட்டும் 'வெற்றி' எழுத்தாளர் இதை வைத்து நித்யபுரம் என்னும் நாவல் எழுதினால் நன்கு விற்கும்.

கிந்து மதத்தை எவனும் காத்துவரவில்லை, அதுவாகவே அவ்வப்போது போலிகளை அம்பலப்படுத்தி காத்துக் கொண்டு தான் வருகிறது. சத்யானந்தம் சிக்கியதற்கு உணர்ச்சி வசப்படும், ஆவேசப்படும் இந்துக்கள் சத்தியானந்தம் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் இந்து மதத்தின் கற்பக விருச்சம் என்ற பெயரில் அசுர வளர்ச்சி பெற்ற ஒரு எட்டி மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாய்க்கப்பட்டுவிட்டதாக நினைத்து மகிழலாம்.

இந்த சூழலில் உடனடித் தேவை மற்றும் சேவை எதுவென்றால் சத்யானந்தனின் ஆசிரமத்தில் அற்பணித்துக் கொண்டவர்களை மீட்டு அவர்களின் இல்லங்களில் ஒப்படைத்து அவர்களுக்கு உளவியல் மருத்துவரை வைத்து பயிற்சி கொடுத்து, மன அழுத்ததில் இருக்கும் அவர்களின் தற்கொலைகளைத் தடுக்கலாம். தாம் தவறு செய்துவிட்டோம், வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்கிற குற்றவுணர்வுகளில் இருந்து மீட்டு, அவர்களை குத்திக் காட்டாமல் அவர்களுக்கு நல்வாழ்வு அமைய ஏற்பாடு செய்வது தான் ஹிந்து மததிற்கு செய்யும் உண்மையான சேவை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

3 மார்ச், 2010

சத்யானந்தம், சேரு, அதிரச லீலா !

சத்யானந்தத்தின் படுக்கை அறையைக் காட்சிகளை பன் தொலைக்காட்சி காட்டியுள்ளது. பன் தொலைகாட்சி இதற்கு முதன்மைத்துவம் கொடுத்து, தலைப்புச் செய்தியாகக் காட்டி நீலப்படம் போல் காட்சிகளை ஓடவிடுவதன் பின்புலம், பேரம் தெரியவில்லை, இருந்தாலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு அந்த (காமக்) காட்சிகளைப் பார்ப்பதை பெற்றோர்கள் தவிர்பது நல்லது. பன் தொலைகாட்சியின் இந்த திடீர் சேவை திராவிடத்தை தாங்கிப் பிடிக்க, பகுத்தறிவை வளர்க்க எடுக்கும் நடவடிக்கை என்று என்னால் நினைக்க முடியவில்லை.

சத்தியானந்தம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை பேசக் கூடியவர், சமுக மாற்றம் ஏற்படுத்தும் பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் பெரியாருடன் ஒப்பிட்டு எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராவாக அண்மையில் தான் எழுத்தாளர் சேறு, அஜய் தொலைகாட்சியில் விளம்பரம் (போல்) பேசி இருந்தார். சத்யானந்ததின் இருட்டு அறையில் பன் தொலைகாட்சி வெளிச்சம் போடுவதற்கு முன்பே சேறுவின் பக்கத்தில் சத்யானந்தம் பற்றிய விளம்பரங்களையும், புகழுரைகளை, பரப்புரைகள் மாயமாக மறைந்துவிட்டு இருக்கிறது.

பொறுப்பான எழுத்தாளர்கள் சத்யானந்தம் போன்ற சாமியார்களை அவதாரங்கள் என்பது போல் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வாசகர்களை பலியாக்கும் முன், தான் தெளிதல் நல்லது. சத்யானந்தம் லீலைகள் குறித்து மற்றபடி பெரிய கருத்து ஒன்றும் இல்லை. இன்று ஒருவர் நாளை வேறொருவர் என்பதாக சந்தியானந்ததின் முறை இன்று வந்திருக்கிறது அவ்வளவு தான். முன்பே 'நான் குறிப்பிட்ட பெண்ணுடன் தொடர்பு உள்ளவன்' அல்லது அவரைத்தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் அறிவித்துவிட்டு பல்கி சாமியார் போல் தம்பதி சகிதமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தால் சத்யானந்ததின் லீலைகள் பெரிய விசயமாகவே ஆகி இருக்காது. காவி உடையும், கலியுக கண்ணனைப் போன்று அருள் கைகளும், கோல்கேட் விளம்பரம் போல் பளீர் சிரிப்புமாக 'வளமாக' வ(ளர்)ந்த சாமியார் தாம் ஒரு பிரம்மச்சாரி என்பதாக நம்ப வைத்தார், மற்றபடி அவர் தாம் பிரம்மச்சாரி என்று வெளியே சொன்னாரா என்பது தெரியவில்லை.

பொதுவாக இந்துக்களின் நம்பிக்கை காவி உடை உடுத்துபவர் காமத்தை கட்டுப் படுத்திக் கொண்டவர் என்பது, அந்த உடையை சத்யானந்தம் அணிந்து கொண்டு சாமியார் பிஸ்னஸ் செய்ததால்தான் பெண்ணுடன் ஆன லீலை பெரிய விசயமாக்கப்படுகிறது, இல்லை என்றால் 'என் படுக்கை அறையைப் படம் பிடித்தார்கள்' என்று சாமியார் மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்புள்ள தொலைக்காட்சியின் மீது போட்டிருக்கக் கூடும். சாம்பார் லீலை புத்தகத்தின் அடுத்த பகுதியாக அதிரச லீலையை எழுத உட்கார்ந்துவிடுவார் சேறு. மற்றபடி சதியானந்ததை உண்மையான ஞானி, அவதாரம் என்று நம்பிய அப்பாவி பக்தர்களுக்குத்தான் பெருத்த அவமானம்.

சத்யானந்தம்' இந்த படக்காட்சி கணிணி வரைகலை மூலம் உருவாக்கப்பட்டது போலியானது, என் புகழுக்கும் வளர்ச்சிக்கும் களங்கம் கற்பிக்க நினைப்பவர்களின் சதி, இதை நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்' என்றோ 'கதவை திறந்தால் காற்றுவருவதைப் போல் அவர்களை திறந்த மனதுடன் மன்னிக்கிறேன்' என்றோ ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு புதிய கிளையை திறக்கப் புறப்படுவார்.

இதற்க்காக அனைத்து சாமியார்களும் சத்யானந்தம் போல் தான் என்று நினைப்பவர்களும் உண்டு, எனக்கு தெரிந்து கேள்வி பட்ட வரையில் பல சாமியார்கள் அப்படித்தான், ஆனால் விதி விலக்குகள் உண்டு. திருமணமானப் பெண் காதலுடன் ஓடிப் போய்விட்டாள் என்பதற்காக திருமணமாகப் போகும் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என்று முத்திரை குத்த நினைப்பதும் கூட பொது புத்திதான். சத்யானந்தம் செய்தது சாதாரண செயல் ஆனால் காவி உடை போட்டுக் கொண்டு, தத்துவம் பேசிக் கொண்டு இதைச் செய்வது நம்பிக்கை துரோகம்.

போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

10 செப்டம்பர், 2008

பகுத்தறிவாளன் பட்டம் ? எனக்கும் வேண்டாம் !

எனது 'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல ! - பதிவுக்கு, விஷ்வா என்கிற நண்பரிடமிருந்து வந்த பின்னூட்டம் கீழே....

//
நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலளித்து உங்கள் பகுத்தறிவு ஞானத்தை வெகு சிறப்பாக வெளிபடுதுகுறீர்கள்!!!
கூடிய சீக்கிரம் உங்கள் பெயரை "கண்ணன்"லிருந்து "சத்யராஜ்தாசனாக" மாற்றிகொள்வது உத்தமம்...

நீங்கள் ஒரு இந்துவாக இருப்தால்தான் இந்தளவு வாய்கிழியே உங்கள் பகுத்தறிவு பிரசாரத்தை செய்துகொண்டு இருக்குறீர்கள்.... பிற மதமாக இருந்தால் இந்நேரம் உங்கள்........ தைகபட்டுஇருக்கும்.

உங்கள் ஐம்பது வருட பகுத்தறிவைவிட எங்கள் ஐந்தாயிரம் வருட ஆன்மிகம் மக்களை செம்மைபடுதியுள்ளது.தனிமனித ஒழுக்கம் இல்லாத "பெரியோர்கள்" பிறரை விமர்சனம் பண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

கண்ணன்,
ஐயாயிரம் வருட போலி ஆன்மீகத்தைவிட ஐம்பதுவருட போலி பகுதறிவுவாதிகள் இந்த நாட்டிற்க்கு செய்த தீங்கு எரளமானது.

கண்ணன்,
சடாரெண்டு ஆன்மீகத்திலிருந்து பெண்ணியத்திற்கு SOOPER"ஆக பரந்துவிட்டீர்..உங்களுக்கு உங்கள் பகுத்தறிவு மீது எந்தளவுக்கு பேச தகுதிஉள்ளதோ அதே அளவு எனது மதத்தின் மீதும் ஆண்மீகதின்மீதும் பேச எனக்கும் முழுத்தகுதியும் உள்ளது. நீங்கள் முதலில் உண்மையான பகுத்தறிவுவாதி என்று எனக்கு வேண்டாம், உங்களுக்கே நிரூபித்து கொள்ளுங்கள்?

எதற்கெடுத்தாலும் ஹிந்து மாதத்தில் அது நடந்ததே இது நடந்ததே என்று ஒப்பாரி மட்டும் வைக்க தெரியும் ஆனால் நேர்மையான கேள்விக்கு மட்டும் "மதவாதி பேசுகிறான்" என்று சொல்லிவிட வேண்டியது....

ஆமாம் எங்களை போன்றவரிடம் எப்படி கருத்து மோதல் வரும் விட்டால் மோதல் மட்டும்தான் வரும்...பகுத்தறிவாளன் என்று சட்டை காலரை துக்கிவிட்டுகொள்வதில் என்ன பிரயோஜனம்.....இன்று உலகில் தொடரும் வன்முறைக்கும் மதச்சண்டைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு...அது சண்டைபோடும் இரு தரப்புகளில் கண்டிப்பாக ஒரு தரப்பு முஸ்லிம்களே...அதற்கு என்ன காரணம்.....அவர்கள் இன்றுவரை விடாமல் பிடித்துகொண்டிருக்கும் பழமைவாதமும் மூடபழக்கவழக்கமே...நீங்கள் அதையும் தோலுரிக்கவேண்டுமே...யாரும் உங்களை எகிப்துக்கோ அல்லது கொஸொவொவுக்கொ போகசொல்லவில்லை... ஆனால் உங்கள் பகுத்தறிவு பார்வையை அங்கேயும் கொஞ்சம் பார்க்க சொல்கின்றோம்...செய்வீர்களா....உலகம் உருண்டைதான் என்று உலகுக்கு சொன்ன விஞ்ஞானியை கொன்றுவிட்டு இன்று அதற்கு பாவமண்ணிப்பு கோரிய போபுகள் இன்று உங்கள் பார்வையில் படாமல் போனதேன்?

இதுதான் விதண்டாவாதமா...போங்கையா நீங்களும் உங்க பகுத்தறிவும்...
//


யாரு சொன்னா நான் பகுத்தறிவாளன் ?

அச்சச்சோ, என்ன கொடுமை சார் இது ? சமரசம் செய்து கொண்டு தான் எல்லாவற்றையும் எழுதனுமா ? பெரியாரின் ஏற்கத்தக்க கருத்துக்களை எழுதினால் உடனே அவனுக்கு பகுத்தறிவாளன் என்ற பட்டம் கட்டுவதா ? முற்போக்காக எதாவது பேசினாலே அவன் பகுத்தறிவாளனாம். பகுத்தறிவாளன் என்றால் நாத்திகமா ? ஆத்திகவாதிகளுக்கு பகுத்து அறியும் திறனே இல்லையா ?

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் ஒரு மோசடி (ஆ)சாமி தன்னைத் தான் கடவுள், இறைவன் என்று சொல்லும் போது ... ஏன் சாமி மல மூத்திரத்திலும் இருப்பானா ? என்று கேட்டால் பகுத்தறிவாளன் பட்டம் கட்டிவிடுவார்கள், நாத்திகன் என்று சொல்லிவிடுவார்கள், வெறும் கையில் விபூதி வரவழைப்பதற்கு பதில் கையடக்க பூசனிக்காயை வரவழைக்க முடியாதா ? சிம்கார்டு போட்ட செல்போன் வரவைக்க முடியாதா ? வயுத்துக்குள்ளே பொற்கொல்லர் உட்கார்ந்து இருக்காரா தங்கத்தில் எப்படி சாமி லிங்க வாந்தி எடுக்கிறீர்கள் என்று கேட்டால் அவன் நாத்திகனாம்.

நான் என்னமோ பெரியார் கொள்கைகளை பதிவுலகில் பறைசாற்றுவேன் என்று சபதம் செய்து கொண்டு வநதது போலவும் அதில் பிரழ்ந்து எழுதுகிறேன், எனது பகுத்தறிவு புனித(!) தன்மை பால்பட்டு, திரிந்து மோராகிவிட்டதாகவும், பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறேன் என்பது போலவும் புரிந்து கொண்டு, நீ ஏன் இஸ்லாமியரைக் கேட்பது இல்லை, போப்பாண்டவரைக் கேட்பது இல்லை ? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள், நான் பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவனோ அதற்கு பாதுகாவலனோ இல்லை.

மூட நம்பிக்கையை கேள்வி கேட்பவன் எல்லாமே நாத்திகனா ? ஆத்திகவாதி என்றால் சாமியார்களில் லீலைகளை தெய்வீகமாக கருதி அவர்கள் பாதுகாப்புடன் உறவு கொள்ள காண்டம் வாங்கிக் கொடுத்து பணிவிடை செய்ய வேண்டுமா ?

நான் பகுத்தறிவாளன் அல்ல, போலி பகுத்தறிவாளன் தான், போலி மதச்சார்பின்மை என்னும் சந்தர்பவாதம் போல்.... போலி பகுத்தறிவாளனான என்னால் இந்து மதத்தை மட்டுமே கேள்வி கேட்கமுடியும்.

பகுத்தறிவாளனின் லட்சணம் என்ன ? அனைத்து மதத்தையும் சமமாக கருதி, எல்லா மதத்தையும் தூற்ற வேண்டுமாம் ! என்ன ஒரு சூப்பர் புரிதல் ! அப்படி செய்பவர்களைத்தான் பகுத்தறிவாளனாக ஒப்புக் கொள்வார்களாம், மற்றவர்களெல்லாம் போலி பகுத்தறிவாதிகளாம். இப்படி லட்சணத்துடன் இருக்கும் பகுத்தறிவாளனின் செயலை எத்தனை ஆத்திகர்கள் போற்றுகிறார்கள்? பகுத்தறிவாளன் பகுத்தறிவாளானாக இல்லை என்பதற்கு இவர்கள் படும் கவலையில் எதாவது உண்மையான ஆதங்கம் இருக்கிறதா ? கருணாநிதி மஞ்ச துண்டு போட்டால் பகுத்தறிவாதம் செத்துடுமா ? எதுவுமே போடாத பெரியாரை இவர்கள் போற்றி இருக்க வேண்டுமே ? அப்படி எதுவும் செய்தது போல் தெரியவில்லை. பிறகு ஏன் பகுத்தறிவாளன் போலியா ஒரிஜினிலா என்றெல்லாம் கவலைப்பட வேண்டும் ?

நான் பகுத்தறிவாளன் இல்லை, போலி பகுத்தறிவாளன் அல்லது அறைகுறை பகுத்தறிவாளன் !

பகுத்தறிவாளன் பட்டம் வேண்டுமா ? எல்லா மதத்தையும் திட்டிவிட்டு வாருங்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையான பகுத்தறிவாளன் என்ற பட்டம் தந்து உங்களை கவுரவிப்பார்கள், நீங்கள் இந்து மதத்தை மட்டும் குறைத்துச் சொன்னால் நீங்கள் போலி பகுத்தறிவாளன் என்றே தூற்றப்படுவீர்கள் !

நான் போலி பகுத்தறிவாளனாக இருக்கவே விரும்புகிறேன் !
:)))))

இதே கருத்தில் டிபிசிடியின் நொந்த இடுகை இங்கே

10 ஆகஸ்ட், 2008

குசேலனை ஓரம் கட்டிய பதிவர் !



குசேலனுக்கு ரிடையர் கொடுத்து... தம்பி KRS க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பதிவுகள் தான் இன்று தமிழ்மணத்தில் படையெடுத்து இருக்கு !

1. பிறந்த நாள் வாழ்த்து சொல்லேலோ ரெம்பாவாய் : ambi
2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் க.ர.ச. (K.R.S) : குமரன் (Kumaran)
3. "கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள் : கானா பிரபா
4. Birthday: KRS : ILA
5. துர்காவின் மோசடி - KRS க்கு நியாயம் தேவை!
6. ஒரு (போலி) அப்பாவி சிறுவனின் கதை -துர்கா
7.
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு !
8. குசேலனை ஓரம் கட்டிய பதிவர் !

அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!




108 முறை இருக்கா ?




குறிசொற்கள் ? சும்மா ட்டமாஷு :)



சூடான இடுகையிலும் வந்திட்டு !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்