பின்பற்றுபவர்கள்

பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 செப்டம்பர், 2012

முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது .....!

வாலிப வயோதிக அன்பர்களை துன்புறுத்தும் சுய இன்பம் பற்றிய  'விழிப்புணர்வு' பழனி / சேலம் சித்த வைத்தியர்களைத் தாண்டி பதிவுகளாகவும் வந்து கொண்டி இருக்கிறது, விழிப்புணர்வு என்ற பெயரில் அறிவு வெளிச்சத்தை அணைக்கும் செயலாக தன்னின்பம் பற்றிய தவறான விளக்கங்களை கொடுக்கிறார்கள், வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து காக்க நகைச்சுவையாகக் கூறுவதுண்டு, கோழி எப்படி முட்டும் ? என்று யோசித்துக் கொண்டே வெற்றிலையை மறந்துவிடுவான் சிறுவன், காம்பைக் கிள்ளிக் திண்ணக் கொடுப்பார்கள், வெற்றிலையால் கெடுதல் எதுவும் இல்லை என்றாலும் சிறுவயதில் பற்களில் கறை படுவது முகத் தோற்றத்தையும் சிரிப்பழகையும் கெடுத்துவிடும் என்பதால் அவ்வாறு கூறி தடுப்பார்கள். பருவ வயதில் கைப் பழக்கம் எனப்படும் தன்னின்பம் பற்றிய விழிப்புணர்வுகளும் அத்தகையது என்றாலும் அவை எந்த வயதிற்கு ஏற்ற பரிந்துரை அல்லது விழிப்புணர்வு என்று அடிப்படை அறிவே இல்லாமல் பொதுவாக அவை தவறு என்கிற ரீதியில் எழுதப்படுகிறது, தவறுதலாக சித்தரிக்கப்படுகிறது.

பெண் பூப்பெய்தும் பருவம் தான் ஆணின் திருமண வயதையும் முடிவு செய்கிறது என்கிற நிலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண வயது ஆணுக்கு 15 பெண்ணுக்கு 12 - 13 என்ற நிலையில் இருந்தது. ஆண் பெண்ணைவிட இரண்டு வயதாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்கிற சமூக எண்ணங்களின் செயல்பாடுகளாக ஆணின் திருமண வயது 16 என்று முடிவு செய்து வைத்திருந்தனர். ஆண் உடல் ரீதியாக வளர்சி அடைந்து கிளர்ச்சி அடையும் பருவம் 15 - 16 வயது தான், அந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது நடைமுறையாக இருந்தது, அன்றைய ஆண்களுக்கு பொருளாதார வழிநடத்தல்களாக இல்லம் சார்ந்த தொழில்கள் இருந்ததால் திருமணத்தைத் தள்ளிப் போட வேறு காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பருவ வயதில் திருமணம் செய்துவைப்பது நடைமுறையாக கடைபிடிக்கப்பட்டுவந்தது.  சேலம் சித்த வைத்தியர்களின் அறிவுறுத்தல்கள் 16 வயதினருக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம், காரணம்  சுய இன்ப நாட்டத்திலோ அல்லது பாலியல் தொழிலாளியை நாடும் எண்ணங்களையோ வளர்த்துக் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கைப் பற்றிய எண்ணங்கள், அதன் நன்மைகள் ஆகியவற்றை புறந்தள்ளக் கூடும் என்பதால் விலைமாந்தர்களிடம் செல்வது முறையற்ற உறவு என்ற வகையில் தடுக்கப்படுவது போலவே சுய இன்பப் பழக்கம் உடல் ரீதியாக கேடுவிளைவிக்கக் கூடியவை என்கிற அறிவுறுத்தல்களை செய்வதால் முறையான பாலியல் வடிகாலுக்கு திருமண உறவை நம்பி, விரும்பி செய்து கொள்வார்கள் என்று உளவியல் ரீதியாக கிளப்பிவிடப்பட்டவையே சுய இன்பம் பற்றிய கட்டுக்கதைகள். 

தற்பொழுது வயதும் பருவமும் திருமணத்தை முடிவு செய்ய முடியாத நிலையில் தனிமனித பொருளாதார மையம் பெரும் அறை கூவலாக அமைந்துவிட்டபடியால் கல்லூரிப் படிப்பை முடித்து பின்னர் வேலை தேடி, வேலை வாய்ப்பு பெற்று,  ஓரளவு கால் ஊன்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட நிலையில் திருமணம் என்கிற முடிவை எடுக்க 25 வயதிற்கு மேல் ஆகிறது. பெற்றோர்களே விரும்பிக் கொடுத்தாலும் 20 வயது பெண்ணை மணந்து கொள்ள 25 வயது இளைஞர்கள் முன்வருவதில்லை. பெண்ணுக்கான திருமண வயது அரசு 18 என்று வழிகாட்டினாலும் 22 வயதிற்கு மேல் தான் திருமணப் பேச்சு துவங்குகிறது.  ஓரளவு நிலையான வருமானம் உள்ள ஆணை பெண்ணுக்கு மணம் முடிக்க ஆணின் வயது 28 வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பெண்ணையும் படித்தவளாகவே கொடுப்பது தான் அவர்கள் இருவருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதால் பெண்ணும் படித்து வேலைக்குச் சென்ற பிறகே திருமணம் செய்விப்பது வழக்கமாகி இருக்கிறது. முதிர்கன்னி பற்றி கண்ணீர் கவிதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டதற்குக் காரணம் சமூகப் புரட்சி நடந்துவிட்டது என்பதல்ல. முதிர்கன்னி என்றால் எத்தனை வயதிற்கு மேற்பட்டவர்முதிர்கன்னி ? என்கிற வயது பற்றிய முடிவெடுக்கத் திணற வேண்டிய நிலையில் முதிர்கன்னிக் கவிஞர்களின் சிந்தனை சிறகுகள் படபடக்க மறுத்துவிட்டன. திருமணம் பற்றிய முடிவுகளுக்கு பருவமும், வயதும் காரணிகள் இல்லை, பொருளாதாரமே முதன்மைக் காரணம்.

தனிமனித பொருளாதார மேம்பாடு திருமணம் எப்போது என்பது பற்றித் தான் முடிவு செய்யும். ஆனால் பருவ வயதை எட்டி ஒரு சில ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உடல் ரீதியான இச்சைகளுக்கு அவை பொறுப்பேற்றுக் கொள்ளாத போது தனிமனித பாலியல் தேவையின் வடிகாலுக்கு தீர்வு ? அரசுகளைப் பொருத்த அளவில் பாலியல் தொழிலை ஊக்குவிக்க முடியாத நிலைக்குக் காரணம் குடும்ப அமைப்புகள் சீர்கெட்டுவிடும் என்கிற அக்கரை கிடையாது, பாதுகாப்பற்ற உறவினால் நோய் பெருகும் என்பதே காரணம், ஏனெனில் தனிமனித பாலியல் தேவைக்கு வடிகால் இவை என்று திருமண பந்தம் தவிர்த்து வேறெதையும் காட்ட முடியாத நிலையில் ஒருவர் பாலியல் தொழிலாளியை நாடுவதைத் தடுக்கும் உரிமையையும் அரசுகள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் பாலியல் நோய சார்ந்த விழிப்புணர்வுகளை செய்வதை மட்டும் அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

தனிமனித வக்கிரம், மித மிஞ்சிய பாலியல் உணர்வுகள், வண்புணர்வுகள், கள்ள உறவுகள்  என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடிப்படை ரீதியிலான திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. பாலியல் தொழிலாளியை நாடுவதில் உள்ள ஆபத்துகள்  கடுமையான பாலியல் நோய் தொற்றுகள், அதனை பிறருக்கும் பரப்புதல் கூடவே பண விரயம். ஆனால் சுய இன்பம் எந்த ஆபத்தும் அற்றது என்பதால் தனிமனித பாலியல் தேவைக்கு சரியான தீர்வு அது மட்டுமே. 

மதங்கள் அனைத்துமே சுய இன்பத்தை பாவம் என்றும் ......செய்துவிட்டால் நரகம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றன, மதங்களின் கோட்பாட்டின் படி சுய இன்பத்திற்கு தண்டனைக் கிடைக்கும் என்றால் 99.9X விழுக்காடு ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. ஒரு நகைச்சுவைக்காக சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு கைவெட்டப்படும் என்று வைத்துக் கொண்டால் யாருக்கு கை மிஞ்சும் ? ஒரு வேளை தண்டனை எதுவும் கிடைக்காதவருக்கு ஏற்கனவே கைகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது செயல்படாத உறுப்பு கொண்டவராக இருக்க வேண்டும்.  மதங்கள் வேண்டுமென்றால் வேறு பிரச்சாரங்கள் செய்யலாம் அடுத்தவர் உறுப்பை அனுமதியின்றித் தொடுவது பாவம், தண்டனைக்குறியது. இது போன்ற கோட்பாடுகள் இருந்தால் வரவேற்பேன். வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன  ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?

நேற்று சித்த வைத்தியம் என்ற பெயரில் சுய இன்பம் பற்றி உளறி எச்சரித்த பதிவு ஒன்றை படிக்க நேரிட்டதால் தான் இதை எழுதுகின்றேன், மதவாதிகள் இதுபற்றி பெரிதாக எச்சரிக்கைக் கொடுப்பதில்லை, எழுதினால் ஏன் வம்பு என்று நக்கைக் கடித்துக் கொள்வதுடன் தன்கையையே கட்டிப் போட்டுக் கொண்டு தான் எழுத நேரிடும் என்பதால் அவர்கள் சுய இன்பம் பற்றி எழுத வெட்கம் அடைந்துள்ளார்கள் மற்றபடி நாமும் எழுதலாம், கைப் பழக்கம் இல்லாத சமூகத்தை உருவாக்கி சொர்கத்திற்கு அனுப்புவோம் என்று கனவு காணுவார்கள் ஆனாலும் அதற்கு அவர்கள் கை அனுமதிக்கனுமே ? காலத்துக்கும் ஏற்றக் கருத்துகள் எங்கள் மதப் புத்தக்கத்தில் முத்துகளாகக் கோர்க்கப்பட்டுள்ளன என்று அளந்துவிடும் எவரும் சுய இன்பம் பற்றி எழுதுவதை அடக்கி வாசித்தே வருகின்றனர்.  தனிமனிதன் யாருக்கும் தொல்லை இன்றி தாம் ஈடுபடும் சுய இன்பத்தை எந்த ஒரு அரசும் வெளிப்படையாக தடையாக அறிவிவிக்கவில்லை என்பதிலிருந்தே இது பற்றிய கருத்துகள் காலம் கடந்துவிட்டவை என்பது உறுதியாகின்றது, மதப் புத்தகங்களில் குறிப்பிட்ட பக்கங்களை பிய்து எரியுங்கள். கடவுள் மனிதர்களை எல்லை மீறி சோதிப்பது இல்லை, அதனால் தான் மனிதர்களின் உறுப்பை எட்டும் அளவுக்கு நீளமான கைகளையும் விரல்களையும் வழங்கியுள்ளான் - நம்புங்கள். :).  எந்த ஒரு அறிவியல் ஆய்வும் கட்டுப்பாடான சுய இன்பப் பழக்கத்தை தவறு என்று சொல்லவில்லை, மாறாக உடல் ரீதியான நன்மைகள் என்றே பட்டியல் இடுகின்றன. தேவையின் போது நாய் உள்ளிட்ட விலங்கினங்களும்  நாவினால் தனக்கு தானே செய்து கொள்கின்றன.  இணைப்பு

பசி, தூக்கம், உடல் அரிப்பு போன்று தனிமனித பாலியல் வேட்கையும் அதற்கான தீர்வும் தேவையான ஒன்றே, இதற்கு எளிய வழி தன்னின்ப தீர்வு தான்.  தன்னின்ப / கைப்பழக்க செயல்பாடுகள் தவறு என்றால் ஏன் தவறு ? எந்த வயதினருக்கு தவறு ? என்றெல்லாம் விளக்கிவிட்டு அதன் பிறகு அது பற்றிப் பேசலாம். மொட்டையாக விந்துவிட்டான் நொந்து கெட்டான் இவையெல்லாம் எதுகை மோனையாக எழுதப்பட்டது என்பது தவிர்த்து வேறெதும் அறிவுபூர்வமாக சொல்லவில்லை என்பதே உண்மை.

சுய இன்பம் தவறு என்கிற  முட்டாள்களின் தவறான வழிகாட்டல் மூலம் அரைகுறையாக புரிந்து கொள்ளும் பருவ வயதை எட்டிய ஒருவர் / திருமணம் ஆகாத ஒருவர், ஆண்/பெண் உறவே சரி என்று எண்ணி பாலியல் தொழிலாளியை நாடும் வழிகாட்டலாக எடுத்துக் கொள்வர், அதன் ஆபத்துகள் மிகுதி, கூடவே சிறுவர் / சிறுமியர்களையும் சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள் என்றாவது எழுதும் மடையர்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் அவ்வாறு எழுதமாட்டார்கள்.

3 பிப்ரவரி, 2012

ஓரின சேர்க்கையாளர்கள் - சீனாவின் மற்றொரு துயரம் !

திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து பேச மறுக்கும் சமூகங்களும் அரசுகளும் மெல்ல மெல்ல அது குறித்த பேச்சும் சேர்க்கைக்கான அனுமதிகளையும் ஒரு சில சட்டக் கட்டுப்பாடுகளுடன் வழங்கிவருகின்றன, மதச்சார்பற்ற அரசுகள் ஓரின சேர்க்கையாளர்களின் பாலியலை அனுமதித்திருப்பது தனிமனித நிலைப்பாடு என்ற அளவில் தான், எந்த ஒரு அரசும் ஊக்குவிப்பதற்காக அதனை செய்யவில்லை என்பதைத் தெளிவாகவே சொல்லுகின்றன. தனிமனிதன் பிறரை துன்பறுத்தாத தற்பாலியல் இச்சைகளுக்கு அரசுகள் குறுக்கே நிற்பது தவறு என்பதாக புரிய வைக்கப்பட்டு அத்தகைய நிலையை மேற்கத்திய நாடுகள் எடுத்ததும் பரவலாக அதே எண்ணங்கள் பிற மதம் சாராத கிழக்கு நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

******

நேற்றைய சீன செய்திகளில் மொத்தம் 16 மில்லியன் (1 கோடியே 60 லட்சம்) பெண்கள் ஓரின சேர்க்கையாளர்களை மணந்திருக்கக் கூடும் என்ற செய்தியுடன், அந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டி செய்தி வெளி இட்டிருக்கிறது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 'ஓரின சேர்கையாளரின் மனைவியர்' என்ற பெயரில் இணைய தளம் துவங்கியதிலிருந்து இவை அங்கு பரவலான விழிப்புணர்வை எட்டி இருக்கிறதாம்.

குடும்ப அமைப்பு மற்றும் பண்பாடுகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, சீனர்களின் குடும்பங்களிலும் ஆண் குழந்தையின் தேவை இன்றியமையாதது என்றே கருதுகிறார்கள். மக்கள் தொகை குறித்த கட்டுப்பாடுகளினாலும் குடும்பத்துக்கு ஒரு குழந்தை தான் அனுமதி என்ற அளவில் பெற்றோருக்கு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை தான் இருக்கும். இப்படி அனுமதிக்கப்பட்டு பிறந்த ஒரே ஆணும் வளர்ந்ததும் ஓரின சேர்க்கையாளராக மாறினால் அது அவர்களுக்கு அதிர்ச்சி தான், பெரும்பாலும் பெற்றோர்களின் வெறுப்புக்கு ஆளாகக் கூடாது என்கிற எண்ணத்தில் ஓரின நாட்டம் உள்ளவர்கள் முடிந்த அளவுக்கு திருமணங்களை தள்ளிப் போட்டாலும் ஒரு கட்டத்தில் திருமணங்களை செய்து கொள்ளும் போது சிக்கல் ஆகிப் போகிறது.

அவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் போது நேரிடையாக பாதிப்பது பெற்றோர்களோ, சமூகமோ இல்லை, அவர்களை திருமணம் செய்து கொள்பவர் தான், எந்த ஒரு துணையும் தன் துணை ஒத்த பால் நாட்டமுடையது என்று தெரிந்தால் அதிர்ச்சியே மிஞ்சும், இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும் ஓரின ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கே மிகுந்த இழப்பு, நம்பிக்கைகள் உடைந்து எதிர்கால பாதுகாப்பு என்பது கேள்விக்கு உள்ளாகிவிடும், குறிப்பாக தெரிந்தே அனுமதித்தாலும் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் அவர்களுக்கும் தொற்றும் வாய்ப்பு உண்டு, இதனால் தன் துணை ஓரின நாட்டம் கொண்டவர் என்று தெரியவரும் போது மணவிலக்குகள் பெருகிவிடுகின்றன, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இதன் விபரீதம் தெரியாது என்பதால் இவற்றை முறையான உளவியல் பயிற்சி கொடுத்து திருத்திவிடலாம் என்று நம்புகின்றனர். ஆனால் சூடுகண்ட பூனையாக இருந்து, ருசி கண்ட பூனையாகவும் இருந்தால் அதிலிருந்து மீள்பவர் குறைவே, இவற்றை பெற்றோர்களோ, சமூகமோ புரிந்து கொள்ளாது காரணம் 'நம் குடும்பத்தில் பிறந்த ஒருவரா இப்படி ?' ஏதோ செய்வினை, புத்தி பேதலிப்பு என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்துவிடுவார்கள்.

உண்மையில் ஓரின சேர்க்கை என்பது மனித இன துவக்க காலம் தொட்டே இருந்திருக்க வேண்டும், இன்றைய ஊடகங்களால் அவை மிகைப்படுத்தப்பட்டு தற்காலத்தில் தோன்றிய புதிய சமூக சீரழிவு போன்று காட்டப்படுகிறது. அலக்சாண்டரும், ஜூலியட் சீசர் போன்றவர்கள் கூட ஓரின சேர்க்கையாளர்களாக மேற்கத்திய வரலாறுகளில் பதியப்பட்டுள்ளனர், பிற நாடுகளில் அவை வெறுக்கத்தக்கது என்ற அளவில் அவை வரலாறுகளில் இடம் பெறவில்லை.

பிறப்பு வழி பிற உடலியல் குறைபாடுகளைப் போன்றதே ஓரின நாட்டமும், அதற்கான உடலியல் காரணங்களை இன்னும் கூட ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அன்றி அவை உளவியல் ரீதியான குறைபாடுகள் அல்ல என்பதை தெளிவாகவே சொல்லுகிறார்கள். வளர்ந்ததும் எந்த உணவை ஒருவர் விரும்பி சாப்பிடுவார் என்பதை கணிக்க முடியாதது போலவே ஒருவரின் பாலியல் நாட்டம் எத்தகையது என்பதை முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. முதலில் மதுவை விரும்பி இருக்காத ஒருவர் பிறர் தூண்டுதலால் தாமும் மதுவிற்கு அடிமை ஆகுவது போன்றே ஓரின சேர்க்கையாளர்களின் தூண்டுதலாலும் ஓரின சேர்க்கையாளராக மாறுபவர்களும் உண்டு என்பதும் உண்மை தான்.

சமூக கட்டுப்பாடு ஆகியவை இயற்கைக்கு மாறானது என்று வகைப்படுத்தி அவற்றை மதக் கொள்கையாக்கிக் கொண்டு எதிர்த்து நின்றாலும் அத்தகைய நாட்டத்தில் செல்பவர்களை தடுக்க முடியவில்லை என்பதிலிருந்து ஒருவரின் பாலியல் நாட்டத்தில் சமூகம் நுழைவதை தண்டனைக்கு பயந்து கண்டு நிறுத்திக் கொண்டால் அன்றி தன் விருப்பமாக எவரும் மாற்றிக் கொள்வதும் இல்லை என்றே தெரிகிறது. சமூகம் மற்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலால் மாறுபவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகும் அதைத் தொடராமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது, மிகச் சிலர் மாறி இருக்கலாம் அதற்கான காரணம் கூட அவற்றிற்கான மறுசூழல் வாய்க்காமல் போனதாகக் கூட இருக்கும்.

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து சமூக பொறுப்புணர்வு என்ன ?

ஒருவர் ஓரின சேர்கையாளர் என்று தெரிந்தால் அவரை புறக்கணிக்காமல் எடுத்துக் கூறி சமூக அமைப்புக்கு நல்லது அல்ல என்று புரிய வைப்பது தான், புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரை வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை, சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர், அல்லது திருநங்கைகளைப் போல் பாலியல் தொழிலில் விழுந்துவிடுவார்கள். வற்புறுத்தலின் மூலம் திருமணம் செய்துவைக்கப்படும் போது மேலும் ஒருவரின் வாழ்வும் சேர்த்தே சீரழிகிறது.

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கு தேவை குடும்பக்கட்டுபபடு என்று கமலஹாசன் கூறியதாகச் சொல்லுகிறார்கள், எல்லாம் இறைவனின் படைப்பு, எல்லாம் அவன் செயல் என்று நம்பும் போது ஒருவரின் பாலியல் நாட்டத்தை மட்டும் கடவுள் தீர்மாணித்திருக்க முடியாது என்பது மட்டும் எந்தவகையான நம்பிக்கையாக இருக்க முடியும் ?

ஓரின சேர்கையாளர்கள் புறக்கணிக்கப்படும் போது என்ன செய்வார்கள் ?

சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதைப் பற்றி கவலைப்படாதவர்கள், தன் தேவைக்கு ஏற்ப கூடும் நபர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள், இத்தகைய உறவின் இரகசியங்கள் வெகு நாளைக்கு நீடிக்காது ஏனென்றால் அந்த மற்ற ஒருவரும் இதே சமூகத்தின் ஒருவர் தான், அவரும் ரகசிய வழிகளில் தான் இத்தகைய உறவுகளை நாடுவார். இவ்வாறு பல்வேறு நபர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் போது பாலியல் நோய்களும் சேர்ந்தே தொடர்பில் வந்துவிடும், அதில் ஒருவர் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவரை திருமணம் செய்துள்ள மாற்றுப் பாலினருக்கும் அந்த நோய்கள் பரவும். மறைவாக செயல்பட எண்ணி சிறுவர் / சிறுமியரைக் கூட தொல்லைக்குள்ளாக்கி அவர்களை மன ரீதியான பாதிப்பில் கொண்டு சென்றுவிடுவார்கள்.

வயது வந்தவ ஒருவரின் பிறரை துன்புறுத்தாத பாலியல் நாட்டத்தில் இயற்கை செயற்கை என்றெல்லாம் எதுவும் கிடையாது இயற்கையான பாலியல் உறவு என்று எதிர்பாலினர் மீதான நாட்டத்தில் இயற்கை என்று வலியுறுத்தப்படுவதின் விதிமீறல்களாக வாய் வழி, பின்புணர்வு என்பதில் ஈடுபடதாவர்கள் கூட மிகச் சிலரே, அவ்வாறு மிகச் சிலராக இருப்பவர்களுக்கும் கூட அவற்றை வெட்கத்தால் கேட்காமல் இருப்பது அல்லது கேட்டும் மறுக்கப்பட்டதாக இருக்கும், மற்றபடி அவற்றில் விரும்பாமல் தான் அவர்களும் இருந்தனர் என்று சொல்ல எதுவும் இல்லை.

இயற்கை வழி உறவு என்பதில் மிஞ்சிய தேவைகள் என்பதில் பாலியல் தொழில்கள் அங்கீகரிக்கப்படுகிறது, வசதி உள்ளவர்கள் பலரை திருமணம் செய்து கொள்வதும் கூட மதக் கொள்கைகளினால் அங்கீகரிக்கப்படுகிறது, இயற்கையில் எந்த ஒரு துணையும் தன்னுடைய துணை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன், எதிர்பாலினர் என்றாலும் தொடர்பு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்வதில்லை என்பதும் இயற்கை தான், ஆனால் பல பெண்களுடன் திருமணம் ரீதியாக உறவு வைத்திருப்பது இயற்கையா என்றெல்லாம் யாரும் விவாதம் செய்வதே இல்லை. அவற்றின் விதிமீறல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு ஓரின சேர்க்கையாளர்களை மட்டும் சமூகத்தை சீரழிப்பவர்கள் போன்று பரப்புவது எவ்விதமான நாகரீகமாக அல்லது பண்பாடாக இருக்க முடியும்.

இறுதியாக ஓரின சேர்கையை அனுமதித்தால் நாளை மிருகங்களுடன் கூடுவதைக் கூட இயற்கை என்று கேட்டு சிலர் உரிமை பிரச்சனை எழுப்பக் கூடும் என்றெல்லாம் சிலர் ஓரினசேர்கையாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்ற ரீதியில் கருத்து சொல்கிறார்கள். அசைவ உணவர்கள் மன்னிக்கவும், மிருக வதைகள் உணவுக்கு என்ற அடிப்படையிலும் அவற்றைத் தோலுக்காக மற்றும் அவற்றின் உழைப்பைப் பயன்படுத்துதல் என்ற அளவிலும் அவை அதற்காகத் தான் படைக்கப்பட்டன என்ற சப்பைக் கட்டுகளுடன் பலகாலமாக அவை துண்புறுத்தப்பட்டுத்தான் வருகின்றன. எதுவுமே விலங்குளைக் கேட்டு நடைபெறவில்லை என்னும் போது இவ்வாறு மிருக புணர்சிகள் சமூகக் குற்றம் என்பது போல் காட்டப்படுவதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

ஓரின நாட்டத்தில் ஒரு சிறுவனை சீரழிப்பவனுக்கும், எதிர்பாலின நாட்டத்தில் ஒரு சிறுமியை சீரழிப்பவனுக்கும் அடிப்படை மன நிலை வேறுபாட்டில் இவன் தேவலை என்று யாரைக் குறிப்பிட முடியும் ? இது போன்றது தான் மிருக புணர்ச்சியின் மீதான நாட்டமும் அது மன நிலை பிரண்டதின் செயல்பாடு அதற்கான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதை பொதுப்படுத்தி ஓரின சேர்கையாளர்கள் தண்டனைக்குரியவர்கள் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்வதை நான் எதிர்கிறேன். கைப்பழக்கங்களுக்கும் இயற்கைக்கு எதிரானது அதற்கு தண்டனை என்று தானே மதங்கள் பயமுறுத்துகின்றன அதனைச் செய்யாத ஆண்களில் வெகு சிலர் இருந்தால் அவர்களில் பலர் கையே இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். திரைப்படங்களின் வழியாக மாமனாரின் இன்பவெறிகள் கூட சமூக சந்தையாக்கப்படுகிறது, அவற்றையெல்லாம் கூட இயற்கை என்றே திரைமறைவில் பார்ப்பதும் சமூகம் தான்.

நம் உயர்ந்தப் பண்பாட்டின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொண்டாலும் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி பார்க்க அதிர்ச்சியே மிஞ்சுகிறது, 6 வயதிற்கு 14 வயதிற்கும் உட்பட்ட பெண் சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் பாலியல் துண்புறுத்தியவர்கள் தான் நம் சமூகம், சிறுவர் திருமணங்களை இன்றும் கூட திருட்டுத்தனமாக பலர் செய்து தான் வருகிறார்கள், நடைமுறைக்கு ஒத்துவராது மற்றும் மனம் வளர்ச்சியடையாத நிலையில் குழந்தைத் திருமணங்கள் முறையானது அல்ல என்பதாகத் தான் அவை சமூகங்களில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன, இவற்றை விலக்கும் போது இது இயற்கையா செயற்கையா என்ற விவாதங்கள் எதுவும் நடந்தேறியது போல் தெரியவில்லை, சமூக மன வளர்ச்சி என்ற அளவில் அவை செயல்பாட்டிற்கு வந்தன. ஆனால் அடிப்படை புரிந்துணர்வு இருந்தும் ஓரின சேர்கையாளர்கள் பல நாடுகளில் எதோ ஒரு காரணத்தைக் காட்டி புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் அது வேறுவிதமான சமூக குற்றங்களுக்கும் சமூக சீரழிவுக்கும் துணை போகிறது என்பதைத் தான் சீனாவின் அந்தச் செய்தி சுட்டுகிறது.

நான் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாளன் இல்லை ஆனால் அவர்களின் தனிப்பட்ட தேவை அல்லது விருப்பு என்ற அளவில் புரிந்து கொள்கிறேன். திருநங்கைளை கேலி செய்து வந்த நம் தமிழ் திரையுலகம் ஒருவாறு தன்னை திருத்திக் கொண்டு அத்தகைய காட்சிகளை தவிர்த்தே வருகின்றன, ஆனால் அடுத்து அவர்களின் கரிசனம் ஓரின சேர்க்கையாளர்கள் மீது விழுந்திருக்கிறது... 'அவனா நீய்யீ ?' நண்பன் படத்தில் மீண்டும் கிண்டல் அடித்துள்ளனர். சமூகத்தில் அவர்களும் இருக்கிறார்கள் என்று இவர்கள் எடுத்துச் சொல்வதாகத் தான் புரிந்து கொண்டேன், திரையுலகில் அவர்களைப் பற்றி பேச துவங்கியுள்ளார்கள் என்றே கருதுகிறேன்.

பாலியல் தொழில் சமூகத்தில் இருந்து மறையும் போது,
கைப்பழக்கம் சமூகத்தில் இருந்து மறையும் போது
வாய்வழி மற்றும் பின்வழி புணர்ச்சிகள் மறையும் போது
ஓரின நாட்டமும் சமூகத்தில் இருந்து ஒழிந்துவிடும் அதுவரையில் அவற்றையெல்லாம் இயற்கை கூறுகளின் மனித மன பரிமாணங்களின் செயல்பாடுகள் என்று புரிந்து கொள்வோம்.

இணைப்பு : Millions of wives wed to gay men: expert

5 அக்டோபர், 2009

பாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் !

நடிகை புவனேஸ்வரி பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொழில் என்பது அத்தொழிலில் ஈடுபடும் பெண் தன் உடலை வாடகைக்குத் தருகிறாள் என்பது போலவே அதை விரும்பும் ஒரு ஆண் வாடகைக்கு அவ்வுடலை வாங்குகிறான் என்கிற உடல்சார்ந்த வணிகமே பாலியல் தொழில் ஆகும். உடல் இச்சை என்கிற ஆண் விருப்பம் அதைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, வடிகால் கிடைக்கும் வாய்பு தேடுபவர்களுக்கு, அல்லது பல உடல்களை விரும்பும் ஆண்களின் சபலங்களே பாலியல் தொழிலின் சந்தைத் தேவையாகும் (டிமாண்ட்) , அந்த சந்தையில் வைக்கப்படும் பெண் உடல் சதையே விற்பனைப் பொருளாகும். பாலியல் இச்சையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களையும், வடிகால் வாய்ப்பு தேடுபவர்களையும் கணக்கில் கொள்ளாவிடிலும் பாலியல் தொழில் சந்தையின் தேவையில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது பல்வேறு பெண் உடலை விரும்பும் ஆண்களின் நாட்டம் தான். இப்படி பல்வேறு உடலை விரும்பும் ஆண்களில் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் ஆகிய இருபிரிவினருமே உண்டு. ஆகையால் பாலியல் தொழிலை தடை செய்வதற்கு திருமணம் என்கிற சடங்கு ஆண்களைப் பொருத்த அளவில் வடிகால் அல்ல.

ஒரு சந்தையை உருவாக்குவதில் அதில் விற்பனையாளர்கள் இரண்டாம் இடதையே பிடிக்கிறார்கள், சந்தை உருவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பது அதன் தேவை தான், வாடிக்கையாளர்கள் தான். வாடிக்கையாளர்களும் தேவையும் இல்லை என்றால் தன்னிச்சையாக உருவாகும் எந்த ஒரு சந்தையும் எதையும் விற்றுவிட முடியாது, இது பாலியல் உடல் சார்ந்த வணிகத்திற்கும் பொருந்தும். பாலியல் சந்தையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதிகளை வைத்திருக்கின்றன. பாலியல் தொழில் என்பது சமூக முன்னேற்றத்திற்கு பின்னடைவு, குறிப்பாக குடும்ப அமைப்புகளுக்கு கேடுவிளைவிப்பது என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. சில நாடுகள் பாலியல் தொழிலை தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக பார்க்காமல் தனிமனித விருப்பம் சார்ந்த ஒன்றாகவே அங்கீகரிக்கிறது. அதனால் தான் அந்நாடுகள் பாலியல் விருப்பம் எத்தன்மையாயினும் (வயது வந்தவர்களிடையே விருப்பத்துடன் கூடிய பாலியல் புணர்ச்சி, தற்பால் புணர்ச்சி) அவற்றை ஒருசில வரையறைகளுடன் அனுமதிக்கிறது. அத்தகைய நாடுகளில் பாலியல் சார்ந்த குற்றங்கள் நடைபெறுவது மிகக் குறைவு. குறிப்பாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு அன்றாடச் செய்தி கிடையாது. ஆனால் பாலியல் தொழில் ஒப்புமை கொடுக்காத நாடுகளில், கட்டுப்பாடு மிகுந்த நாடுகளில் பாலியல் வன்புணர்வு, குழந்தைகளையும் குறிவைக்கும் பாலியல் முறைகேடுகள் அன்றாடச் செய்திகள் தாம்.

பாலியல் தொழில் ஒப்புமை இல்லாத நாடுகள் பக்கசார்பாகவே சட்டங்களை வைத்திருக்கின்றன. பாலியல் தொழிலை நாடுபவர்களை கணக்கில் கொள்ளாது, பாலியல் தொழில் செய்பவர்களை மட்டுமே அரசுகள் தண்டிக்கின்றன. தேவையை (டிமாண்ட்) ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவது இல்லை, விற்பனையாளர்கள் (சப்ளையர்) மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். தேவையை ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கபடாதவரை அவர்கள் விற்பனைத் தேவையை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். புவனேஸ்வரிக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் செய்தித்தாள்கள் செய்தி வெளி இடுகின்றன, புவனேஸ்வரி தொழில் செய்ய முடியாத போது வேறு ஒருவரை அந்த 30 ஆயிரம் ரூபாய் தரத் ஆயத்தமாக இருப்பவர்கள் நாடுவார்கள், அல்லது வேறொரு புவனேஸ்வரியை உருவாக்குவார்கள்.

இதுபற்றி தலையங்கம் எழுதி அரசுகளைக் கேள்வி கேட்க வேண்டிய செய்தித்தாள்கள் அதை ஒரு கவர்ச்சி செய்தியாகவே வெளி இடுகின்றன. நடிகைகளின் அந்தரங்கம், கவர்ச்சி ஆகியவற்றை செய்தி விபச்சாரமாகவும், நடிகைகளின் அங்கங்களை காட்சிப் படுத்தும் சிலரின் திரைப்படத் தொழில் மூலம் அதில் மறைமுகமாக பாதிக்கப்படும் விடலைகளின் பாதிப்புகளை ஒப்பிடும் போது ஆண்களின் சபலத்தை மையமாக வைத்து நடைபெறும் விபச்சாரம் மோசமான குற்றமாகத் தெரியவில்லை.

13 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 7

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6

பகுத்தறிவு, ஆன்மிகம் என எந்த நோக்கில் பார்த்தாலும் உயிரினங்கள் பிறப்பு வளர்ச்சி முடிவு என்கிற சுழற்சிக்கு ஒவ்வொன்றும் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்து பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது, இதுதான் இயற்கை. இந்த உயிர்த்தன்மையின் கூறுகளாக தாவரங்களும் சிலவகை ஒரு செல் உயிரனங்கள் தவிர்த்து தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடையாது, உயிரினப் பெருக்கத்திற்கு ஆண் / பெண் என ஒரே உயிரினப் பிரிவின் இருவகை உயிரினங்களின் சேர்க்கை இன்றியமையாததாகும். ஆண் பெண் சேர்க்கையால் உயிரினப் பெருக்கம் என்கிற சமண்பாட்டில் தூண்டும் பொருள்களாக புலனின்பம் என்கிற பயனும், இனப்பெருக்கம் என்பது அதன் ஈடுகளும் ஆகும். இனப்பெருக்கம் என்கிற செயலுக்கான நற்பலனை செயல்படும் போதே பெருவது பெருவதே கலவி இன்பம் அல்லது உடல் இன்பம். உயிர்ப்புக்கான இனப்பெருக்கம் என்னும் செயல்பாட்டின் புறக்காரணிகள் தான் ஆண் / பெண் உடல் கூறுகள், அதில் பெறப்படும் பிற பயன் உடலின்பம். சமூகமாக மாற்றிக் கொண்ட மனித இனத்தின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிற மையத் தன்மையில் இருந்து விலகி பெண் உடலில் பெரும் இன்பத்தை தனது சமூகத்திற்கு வசப்படுத்துவதன் மூலம், தனது சமூகம் சார்ந்த இனப்பெருக்கம் செய்வதற்கு சமூகக் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதன் கூறுகள், இயல்பான ஆண் பெண் ஈர்ப்பு என்பதில் மன ரீதியான சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறேன். உடலின்பம் என்பது ஆண் பெண் ஈர்ப்பு அல்ல, தன்னலம் சார்ந்த ஒன்று என்பதாக மரபுக் கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு, உடலின்பத்திற்குத் தேவை இரு உடல்கள் மட்டும் இருந்தால் போதும் என்கிற மனமாற்றம் ஏற்பட்டு, எதிர்பால் ஈர்ப்புகள் குறைந்து அல்லது இல்லாது, தன்பால் சேர்க்கை விருப்பிற்கு சிலரின் மனம் ஏற்பாக மாறிவிட்டது சமூகம் மாற்றத்தினால் ஏற்பட்ட பக்க விளைவு.

மனிதர்களில் சிலர் இருப்பது போல் பிற உயிரினங்களில் எப்போதுமே தற்பால் சேர்க்கை நாட்டம் உள்ள உயிரினம் எதுவும் கிடையாது. அப்படி இருக்கும் உயிரினங்கள் இருபால் நாட்டம் கொண்டவை, இனப்பெருக்கத்திற்கும் உதவும், தற்பால் நாட்டத்திலும் இருக்கும், அதன் செயல்பாடுகள் ஒற்றைத் தன்மை வாய்ந்தவை கிடையாது. ஆளுமைச் சமூகம் என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளாதால் பிற உயிரனங்களில் தற்பால் நாட்டம் இருந்தாலும் அவை நிலைத்த தன்மை கொண்டது இல்லை. தனிமனிதனின் பருவத் தேவையாக இணையைத் தேடுவது, இனப்பெருக்கம் செய்வது, அவற்றை வளர்ப்பது, உடல் முதிர்ச்சி அடைந்ததும் மறைவது. பெண் உடலின் இயற்கை அமைப்பு பூப்பு எய்தியதிலிருந்து சுமார் 45 வயது வரை இனப்பெருக்கத்திற்கு தேவையான முட்டைகளை திங்கள் தோறும் வெளி ஏற்றும், அதன் பிறகு முதுமைப் பருவம், அதற்கு மேல் இயற்கையும் பெண்களை தொல்லைப் படுத்த விரும்பாததால் அல்லது உடல் தன்மை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதல்ல என்பதால் முட்டை உற்பத்தி நின்றுவிடுகிறது. இவை பெண்களைப் பொருத்த அளவில் கலவி இன்பத்திற்கான காலமும் இதுவே. ஆணுக்கு இந்தக் கட்டுபாடுகளை இயற்கை விதிக்கவில்லை சீரான உடல் நிலை உள்ள ஆண் இனப்பெருக்கத்திற்கு முடிந்த வரையில் உதவ முடியும் என்பதே இயற்கை விதியாக இருக்கிறது. இணையாக சேர்ந்த பெண் மாதவிலக்கு நின்ற பிறகும் ஆணுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடிய கட்டாயத்தில் வைத்திருப்பது இயற்கை கிடையாது, சமூகம் மற்றும் இருவருக்கிடையே ஆன வயது வேறுபாடு அவற்றை நீட்டிக்கிறது, ஆணையும் கட்டுக்குள் கொண்டுவரவும் பெண்களை அதற்குமேலும் தொல்லை படுத்துவது நல்லது அல்ல என்பதால் இந்திய சமூகச் சூழலில் ஆணுக்கு வாலிபம், இல்லறம், துறவறம் என மூன்று பருவகாலங்கள் பிரிக்கப்பட்டு, இல்லறக் கடமைகள் முடிந்த ஆண் துறவரம் மேற்கொள்வது நல்லது என்கிற வழியுறுத்தல் இருந்தது. ஆனால் பலரும் அப்படி இருக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் 90 வயது வரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

உடல் நிலை காரணங்கள் தவிர்த்து வயதின் காரணாமாக இந்தகாலத்தில் செயல்படாத ஆணுக்கு வய்க்கரா போன்ற மருத்துவ வில்லைகளும், மாதவிலக்கு நின்ற பெண்களின் வரண்ட குறிகளுக்கு களிம்பு வகைகளையும் பரிந்துரை செய்து இல்லற இன்பம் சாகும் வரை என்பதாக நீட்டிக்கப்பட்டு இருப்பது இயற்கையா என்று பார்த்தால், கலவி இன்பத்திற்கு இருக்கும் இயற்கைத் தடைகளையெல்லாம் உடைத்து எரிந்துவிட்டிருக்கிறோம் என்றே தெரிகிறது. கலவி இன்பத்தின் நோக்கமான இனப்பெருக்கம் என்கிற காரணங்களே இல்லாத போது கலவி இன்பம் என்பதை ஆண் பெண் ஈர்ப்பின் நோக்கத்தில் எதிர்பாலினரிடம் மட்டும் தான் ஏற்பட வேண்டும் என்பது சரியான வாதமாக வைக்கும் அளவுக்கு இயற்கையின் கட்டுப்பாடுகளுக்கு நாம் கட்டுப்படவில்லை என்பதே உண்மை. சேர்க்கையின் நோக்கம் உடலின்பம் மட்டுமே என்கிற எண்ணங்களில் சேரும் உடல்களில் பால் தன்மைகள் விருப்பப்படி எப்படி இருந்தாலும் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை. அந்த வகையில் தற்பால் சேர்க்கையை இயற்கை செயற்கை வகைப்படுத்திப் பார்ப்பது தவறு.

***

ஒரு தனிமனிதன் இல்லறத்திற்குள் நுழைவது என்பதன் முதல் சடங்கு திருமணம், இதன் மூலம் எதிர்பாலினரிடம் கருத்தொற்றுமையுடன், இல்லற இன்பம் பெற்று, குழந்தைகள் பெற்று சந்ததி பெருக்கத்திற்கு உதவுவதாக சமூகத்தின் மூன்பு தன் சார்ந்துள்ள சமுக / மதப் பழக்கவழக்கப்படி உறுதி மொழி ஏற்கிறார்கள், அரசாங்க சட்ட அளவில் இருவருக்கும் பாதுகாப்பாக சொத்து உரிமை இன்னும் பல உரிமைகளை வழங்குகிறது. திருமணம் என்பது சமூகங்களை ஏற்றுக் கொண்டோரின் மன ஒப்புதலுடன் கூடிய முழுக்க முழுக்க சமுகம் சார்ந்த சடங்கு. இந்த சடங்கின் வழி அந்த சமூகத்தின் சந்ததிகள் பெருகிவளர்கின்றன. அனைத்து சமூகங்களின் திருமணச் சடங்குகளின் வழியாக பூமியின் உயிர்த்தன்மை நிலைத்து இருக்கிறது.

இப்படி ஒரு திருமணச் சடங்கை தற்பால் சேர்க்கையாளர்கள் உரிமையாகக் கேட்பது திருமணம் என்கிற பொருள் பொதிந்த சடங்கையே கேலிக்கூத்தாகுவதாகவே நினைக்கிறேன். திருமணத் தேவை என்பதற்கு தற்பால்சேர்க்கையாளர்கள் முன்வைக்கும் காரணங்களாக, சொத்துரிமை மற்றும் துணை இறந்துவிட்டால் அடக்கம் செய்யும் உரிமை அல்லது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உரிமை ஆகியவை திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் என்கிறார்கள். இவையும் 'திருமணத் தேவைக்கு' ஏற்றுக் கொள்ளும் காரணங்களாகத் தெரியவில்லை.


பொதுச் சட்டங்களில் வழி, தனிமனிதன் தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க சட்டங்களில் இடம் இருக்கிறது, தனிமனிதன் ஒருவன் தன்னலனில் அக்கரை கொண்டவர்கள் தனது இறப்பிற்கு பிறகு எப்படி நடந்து கொள்ளலாம் என்பற்கான அனுமதியும் சட்டத்தின் மூலம் பெறமுடியும். இதற்கு திருமணம் என்கிற சமூகச் சடங்குகளெல்லாம் தேவை இல்லை என்பது என் கருத்து. இன்னொரு காரணமாக நான் நினைப்பது ஓரின தம்பதிகளில் ஒரு சிலர் தவிர்த்து நீண்டகாலம் சேர்ந்து வாழ்வதில்லை, ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உடலின்பம் கொடுக்க இயலாத சூழலில் இருந்தால் இன்னொருவரை நாடிவிடுவார்கள், இவர்களின் பெரும்பாலோனோரின் நோக்கம் வெறும் ஈர்ப்பு மட்டுமே, அதில் எழுதப்படாத ஒப்பந்தமாக மனம் ஒப்புதலுடன் சேர்ந்து இருப்பார். அந்த ஈர்ப்பின் செயல் தன்மை பாதிக்கப்படும் போது வெறொருவர் பக்கம் சாய்ந்துவிடுவர், இவை உடலின்பம் பெறும் ஆண் / பெண் ஈர்ப்பிலும் மணவிலக்காக இருந்தாலும் அவர்களின் வாரிசுகளுக்கு சில சட்டக் கடமைகள் தேவைப்படுவதால் அந்தத் திருமணமும் ஓரினவாதிகள் கேட்கும் திருமண அங்கீகாரமும் ஒன்று அல்ல. சீரான உடல் நிலையுடன் இருந்தும், பிள்ளைப் பெற்றுக் கொள்ள விருப்பப்படாமல் திருமணம் செய்து கொள்ளும் ஆண் / பெண் இணைகளை என்னவென்று சொல்வது, அவர்களைப் போல் தானே ஓரின விருப்பர்களும் ?

திருமணம் என்பது இரு உடல்களின் சங்கமத்திற்கு ஒப்பந்தம் போடும் ஒரு நிகழ்வு என்பதாக மட்டும்மல்லாது திருமணம் என்பது இனப்பெருக்கத்திற்கு முன்மொழியப்படும் முதல் சடங்கு என சமூகத்தில் திருமணம் பற்றிய புரிந்துணர்வுகள் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் திருமணச் சடங்குகளே இல்லாது போய் இருக்கும், இன்றும் கூட சமூகத்தில் திருமணம் என்பது உடல் இணைப்பிற்கான சடங்கு அல்ல அதற்கும் மேலாக இல்லற ஒப்பந்ததில் சந்திகளை நல்ல முறையில் கொண்டு சென்று உயிர்த்தன்மையை அடுத்த தலைமுறைக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கும் ஒரு தொடக்கம், அதனை பெற்றோர்கள் வாழ்த்துகிறார்கள். அதை வெறும் சட்டங்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்து ஓரினவாதிகள் திருமணம் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று கூறுவதும், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பதும், கேலிக் கூத்தாகத் தான் நினைக்க முடிகிறது. நல்ல உடல் நிலையில் இருந்து அடுத்தலைமுறை தேவைகள் என்கிற எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து இறந்து போவது உயிர்புடன் வைத்திருக்க முயலும் சமூகத்திற்கு பேரிழப்புதான்.

இந்த காரணங்களுக்காக சமூகம் தற்பால் புணர்ச்சியனரின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளச் சொல்லி வழியுறுத்தலாம். ஆனால் பருவ வயதினரிடையே அவர்கள் தங்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றிக் கொள்ளும் தற்பால் இன்பங்களை மதங்களுக்கு எதிரானது என்கிற பழமை வாத சப்பைக் காரணங்களைக் காட்டி, குற்றமாகக் கருதி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்ல எந்த வெறெந்த ஞாயமான காரணமும் இல்லை.

முடிவாக,
தனிமனிதனின் பாலியல் நாட்டங்களில் இயற்கை செயற்கை என்று எதுவும் கிடையாது, அப்படி இருப்பவை அனைத்தும் சமூக மாற்றங்களினால் ஏற்பட்ட கூறுகளே, ஒத்த பாலின நாட்டத்திற்கு தனிமனித மனம் தவிர்த்து சமூகத்தில் ஏற்பட்ட உடலின்பம் குறித்த செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றமும் காரணி ஆகிறது என்பதால் சமூகமும் அதற்கு காரணமாக அமைகிறது, இதில் விரும்பி ஈடுப்பட்டவர்களுக்கு அங்கீரமின்மையால் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான, மான - அவமான தற்கொலை, கொலை, மற்றும் புதியவர்களின் விருப்பம் இல்லாமல் அதில் நுழைவதற்கு மறைமுகமாக தடை ஏற்படுத்த, தற்பால் சேர்க்கை அங்கீகரிக்கக் தேவையானது தான். அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஓர்பால் விருப்பர்களின் திருமணம் ? என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்போர் சரியான காரணங்களைக் கூறவும்.

தற்போதைக்கு தொடர் முற்றும்.

12 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 6

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5
பாலியல் தொடர்பில் ஆண்களின் நடவெடிக்கை தனிப்பட்ட அவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆண்கள் அதில் ஆர்வத்துடன் செயல்படுவது, தொடர்வது யாருக்கும் தெரியாமல் செயல்படுவதும் எளிது. ஏனெனில் பாதுகாப்பற்ற என்பதில் இருக்கும் பாலியல் நோய் தாக்கம் தவிர்த்து ஆண்கள் உடல் ரீதியாக பாதிப்பு அடைவதில்லை. பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத நாடுகளில் அது நடைபெறுவதே இல்லை, குறைவு என்பதெல்லாம் வெறும் கணக்கியல் கூறுகள் தான். பலருக்கு வாடிக்கையாக இருக்கும் ஒருவர் அல்லது குழு , திருமணம் பந்தம் இல்லாது ஒருவரின் ஆளுமையில் 'வைத்து இருப்பதும்' என்பதாக படுக்கை அறை என்பது கண்காணிக்கக் கூடியதல்ல என்கிற சமூகப் புரிந்துணர்வின் சாதகத்தை மூலதனாமாக வைத்து அங்கீகாரம் இல்லாத பாலியல் தொழில்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆண் சமூகத்தில் திருமணம் மூலம் உடலின்பத் தேவை தடையில்லாது கிடைக்கும் சூழல் உள்ளவர்கள் பாலியல் தொழிலை அரும்வெறுப்பாகத்தான் பார்பார்கள். தேவையான போது உடலின்பம் பெற வாய்பில்லாதவர்கள் அனைவரும் முனிவர்கள் கிடையாது, கட்டுக்குள் வைத்திருக்க எந்த ஒரு பயிற்சியும் இல்லாத ஆண் சாமியாராகவே தொடரவேண்டும் என்கிற சமூக எதிர்பார்ப்பு அவர்களுக்கு என்ன தீர்வை சொல்லிவிட முடியும் ? தன்னின்பம், இதற்கும் மதவாதிகள் தடா போடுகிறார்கள். ஒரு ஆண் சட்ட சிக்கல் இல்லாத பாலியல் வேட்கைத் தனிப்பு என்றால் பாலியல் தொழிலாளியைத் தான் நாடவேண்டும் என்கிற சூழல் இருப்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். இது வெளியே சுதந்திரமாக இருப்பவர்களுக்கு ? ஆனால் ஆண்களுடனேயே பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்போர்கள் சக ஆண்களை நாட வேண்டிய சூழல் அமைந்துவிடுகிறது, குறிப்பாக கப்பலில் பணியாற்றுபவர்கள், இராணுவவீரர்கள், சிறைக் கைதிகள் இவர்களிடையே தற்பால் சேர்க்கை மிக இயல்பாக நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்கு சமூகமும், மதமும் என்ன வகையாக தீர்வு சொல்கிறது என்றே தெரியவில்லை. பாலியல் தேவை கட்டுப்படுத்தியக் கூடியதென்றாலும் அனைவருமே புலனடக்கத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா ?

பல ஆண்கள் தற்பால் சேர்க்கை விருப்பில் செல்வதற்கு சூழல் காரணமாக அமைந்துவிடுகிறது, நான் பட்டயப்படிப்பு கடைசி ஆண்டு படிக்கும் போது என்னுடன் படிக்கும் வெளியூர் மாணவர்கள் வீடு எடுத்து தங்கிப் படிப்பது வழக்கம், அவர்கள் அறைக்கு வெளியூரில் இருந்து தங்கி பாடம் நடத்தும் விரிவுரையாளரும் வருவார், அவருக்கும் மாணவர்களுக்கும் ஒரு 6 வயது தான் வேறுபாடு, அப்படி வரும் அந்த விரிவுரையாளர் மாணவர்களுன் மாணவராக பழகுபவர், தேவையான நேரத்தில் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு கொடுத்து உதவுவார், திருமணம் ஆகி 2 வயதில் குழந்தை உடையவர். மாணவர்கள் அனைவருக்குமே அவரை மிகவும் பிடிக்கும். மாணவர்களுடன் இரவு படம் பார்த்துவிட்டு சில வேளைகளில் அவர்களுடன் படுத்துவிடுவார்.

பலநேரங்களில் வெளியூர் மாணவர்களுடன் சேர்ந்து படிப்பேன். தேர்வு நெருங்கும் போது, ஒரு நாள் எனக்கு நண்பனான ஒரு மாணவன் மிகவும் மன அழுத்ததில் பாதிக்கப்பட்டவனாக இருந்தான், படிப்பில் கவனம் செலுத்தமால் இருந்தான், என்ன நடந்தது ஏன் இப்படி இருக்கிறான் என்று அறிந்து கொண்டு ஆறுதல் படுத்தலாம் என தனியாக அழைத்து விசாரித்த போது, யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பலமுறைக் கேட்டுக் கொண்டு, சத்தியம் வாங்கிக் கொண்டு, விரிவுரையாளரின் பெயரைக் குறிப்பிட்டு, போனவாரம் இரவு தூங்கும் போது, அவரு 'அங்கு' கைவச்சிட்டார், அந்த நேரத்தில் எனக்கு தடுக்க முடியாமல், பக்கத்தில் இன்னும் இரண்டு ரூம் மெட் நல்ல தூக்கத்தில் இருந்தாங்க, வாத்தியார் மேல் வைத்திருந்த மரியாதையில் அவர் அப்படி செய்யும் போது தட்டிவிட முடியவில்லை, அந்த நேரத்தில் அது எனக்கு தேவையாக இருந்தது, அன்னிக்கு காலையில் இருந்து மனசே சரி இல்லை, அவரு அப்படி நடந்து கொள்வார்னு நான் எதிர்பார்க்கவில்லை, நானும் அவரது செயலை தடுக்க முயற்சிக்கல' என்றான். வாத்தியார் இப்படிபட்டவரா எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது, வாத்தியாரிடம் போய் கேட்க அந்த வயதில் அச்சமாக இருந்தது.
என்னிடம் சொல்லிவிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் பழைய நிலைக்கு திரும்பிவிட்டான். வாத்தியாரும் அதன் பிறகு அங்கு போனதில்லை, அவரை கல்லூரியில் பார்க்கும் போது எப்போதும் இருப்பது போல் வெகு இயல்பாகவே இருந்தார். அவரிடம் பிறரும் பாதிக்கப்பட்டார்களா ? பாதிக்கப்படவில்லையா ? அவர் அன்று மட்டும் தான் உணர்ச்சிவசப்பட்டவராக நடந்து கொண்டாரா ஊகித்துப் பார்த்தால் அவரது நடவடிக்கை தொடர்ந்திருந்தால் பலருக்கும் அவரைப் பற்றி தெரியவந்திருக்கும் என்பதால் தொடர்ந்திருக்க மாட்டார் என்றே கருத முடிகிறது.

மாணவவிடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் தங்கும் ஆண்கள் நெருங்கிப் பழகுபவர்களிடம் இருந்து எதிர்பாராதவிதமாக தற்பால் சேர்க்கை விருப்பிற்குள் விழுந்துவிடுகிறார்கள். நெடும் தொலைவு இரவு பேருந்துப் பயணங்களில் நடுத்தரவயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அருகில் அமர்ந்திருக்கும் பருவ வயது இளைஞர்களை சீண்டுவார்கள், பலருக்கும் இது போன்ற பாலியல் தொல்லை அனுபவங்கள் இருக்கும். ஆனால் இப்படி நடப்பது தற்காலிகம், அதை இடம்மாறி உட்கார்ந்து அல்லது கூச்சல் போட்டு தவிர்க்கமுடியும், உடன் தங்கி இருக்கும் நண்பர்கள், அறையை பகிர்ந்து கொள்பவர்களினால் ஏற்பட்டால் விருப்பம் இல்லை என்றால் அவர்களிடையே நட்பு கெடும், விருப்பம் இருந்தால் அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். இந்திய ஆசிய நாடுகளைப் பொருத்த அளவில் தற்பால் சேர்க்கை நாட்டம் பிறப்பிலேயே மனதில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு, நமது கலாச்சாரத்தின் மரபு கூறுகளும் அத்தன்மை வாய்ந்தது இல்லை. பிறரின் தூண்டுதலால் அந்தப் பழக்கத்தை ஏற்று தொடர்பவர்களே மிகுதி, இவர்களின் விழுக்காடுகளில் திருமணம் ஆன ஆண்கள் பெரும்பகுதியாக இருப்பர், திருமணம் தவிர்க்க ஆண்கள் இந்தக்காரணத்தைச் சொன்னால் பெற்றோர்களுக்கு பெருத்த அவமானமாகிவிடும் என்பதால் திருமணம் செய்து கொண்டும் தொடர்கிறார்கள் என்றே ஊகிக்கிறேன்.

சூழலால் அல்லாது பிறப்பிலேயே தற்பால் நாட்டம் அமையப்பெற்றவர்கள் அதுபற்றிய புரிந்துணர்வுகள் இல்லாத சமூகத்தில் வளர்ந்தால் தன்னை எதிர்பாலினம் என்று நினைத்து, அதாவது மன அளவிலும் ஆணாகவே இருப்பவர் பருவ வயதில் தனக்கு ஏற்படும் ஆண்கள் மீதான நாட்டம் குறித்து எண்ணும் போது தான் ஒரு பெண்ணோ என்று திருநங்கைகளைப் போல் நினைத்துவிட்டால் அப்படியே மாறிவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகுதி. திருநங்கைகளாக மாறியவர்களில் சிலர் ஆண் நாட்டம் கொண்ட ஆண்களாக இருந்து பாலியல் நாட்டம் (Sexual Orentation) பற்றிய (தவறான) சமூகப் புரிந்துணர்வு படி, தன்னையும் மாற்றிக் கொண்டவர்களாகவோ, மாற்றப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆண் உடலில் பெண்ணாக தன்னை நினைக்கும் திருநங்கைகளும் ஓர்பால் சேர்க்கை நாட்டம் உள்ளவர்களுக்கும் மன அடைப்பிடையிலான பாலியல் விருப்புகள் முற்றிலும் வேறானவை. திருநங்கைகள் தான் ஆண் என்று மன அளவில் நினைப்பதையே வெறுப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது, அதனால் தான் அவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள். தற்பால் புணர்ச்சியனர் பாலின்பத்திற்கு ஒத்த பாலினர் மீது நாட்டம் கொண்டவர்கள்.
உடலளவிலும், மன அளவிலும் தன்னை மாறுபட்ட பாலினமாக நினைப்பது இல்லை.

சட்ட அங்கீகாரம் இருந்தால் தற்பால் சேர்க்கை விருப்பர்களாக புதியவர்கள் மாறும் / விழும் வாய்பு குறையும். சட்ட அங்கீகரம் இல்லாததால் ரகசியமாக செயல்பட வேண்டி இருப்பதால் புதியவர்கள் அதில் சிக்க வைக்கப்படுகிறார்கள். தற்பால் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வரவேற்கப்படக் கூடியதே. மற்றபடி பாலியல் வன்கொடுமை, குழந்தைகளிடம் (சிறுமி/சிறுவர்களிடம்) சில்மிஷம் இதை அனைத்துத் தரப்பும் செய்கிறது என்பதால் அதைத் அவர்கள் மீதான தனிப்பட்ட குற்றச் சாட்டாக பார்க்க முடியவில்லை. பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்ட நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைவு. குறிப்பாக தாய்லாந்து போன்ற நாடுகளில் பெண்களை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்வது அன்னாட்டின் அன்றாடச் செய்தி கிடையாது.

தற்பால் விருப்பர்களின் திருமண அங்கீகாரம் தேவையா ? தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

10 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 5

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4
உடல்கூறுகளின் வளர்ச்சியினால் பருவம் அடைதல் என்று சொல்வது ஆண்/பெண் இருவரும் ' இனப்பெருக்கத்துக்கு ஆயத்தம் ஆகிவிட்டார்கள் என்பாதாக பொருள். உடலியல் மாற்றங்களில் சுரப்பிகள் வளர்ந்து பணியைத் தொடங்க அதன் ரசாயன மாற்றங்கள் மனதில் தூண்டுதல் ஏற்படும் பாலியல் உணர்வு என்பது உடல்சார்ந்த இச்சை என்றாலும் மனதின் செயல்பாடுகளே அதன் தீர்வுகளை முடிவு செய்கிறது. பாலியல் வேட்கையும் தணிப்பும் உடல் இன்பம் என்றே சொல்லுவார்கள்,
வேறெந்த உயிரினங்களும் வெறும் இச்சைக்காக கூடுவதே இல்லை, பெண் உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்கு ஆயத்தமாகும் போது அதனை அறிந்து கொண்ட ஆண் உயிரினம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. மனித இனத்தில் மட்டும் தான் உடல் இன்பம் ஆண்/பெண் இருவருக்கும், குறிப்பாக ஆணுக்கு அன்றாட தேவை என்கிற அளவில் உடல்கூறுகள் அமைந்துவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி அல்லது எப்படி வாழ்ந்தாலும் மனிதனின் அன்றாட உடல் இன்பத் தேவை என்பது குழந்தைப் பெருவதற்காக அல்ல என்ற நிலையில், உடல் இன்பம் என்பது ஒப்புதலுடன் கூடிய இரு உடல்களின் தற்காலிக சேர்க்கை என்பதாகத் தான் பொருள்படும்.

மனித இச்சைகள் உடல் சார்ந்த ஈர்ப்புக் கொண்டிருக்கத் தான் வேண்டும், மனம் இயற்கை அமைப்புபடி மாற்றுப் பாலினரைத்தான் நாடமுடியும் என்பது சரியான கூற்றா ? தனிப்பட்ட மனித மனத்தின் விருப்பு வெறுப்பு என்பது இயற்கைச் சார்ந்தது அல்ல. சூழல் சார்ந்ததே. பிறவிக் கலைஞர்கள் ஒருசிலர் நல்ல பாடும் திறன், ஓவியத் திறன், கலைத் திறன் பெற்று இருப்பார்கள், இவர்கள் பரம்பரையில் முன்பு அப்படி ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். அந்த சிலரின் செயல்பாடுகள் மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பதை யாரும் இயற்க்கைக்கு மீறிய ஒன்றாக நினைப்பது இல்லை, மாறாக வியக்கிறார்கள். ஒரு தனிமனிதனின் பிறவியிலேயே கிடைத்திருக்கும் கலைத்திறன் வரங்கள் இயற்கைக்கு மீறிய ஒன்றுதானே. அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் சமூகம் தனிப்பட்ட ஒரு ஆண் அல்லது பெண் ஒத்தப் பாலினரிடம் ஈர்ப்பு கொண்டிருப்பதை இயற்கைக்கு மாறானது என்று எப்படிச் சொல்ல முடியும். வேண்டுமென்றால் குடும்ப அமைப்புக்கு எனும் சமூக அமைக்கு எதிரானது என்று சொல்லமுடியும், இயற்க்கைக்கு எதிரானது என்று சொல்ல முடியாது.

ஆண் / பெண் சேர்க்கையின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல, அது ஒரு அன்றாடத் தேவையாகிப் போனதை இயற்கை என்று சொல்ல முடியுமா ? இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எத்தனை முறைகளை பயன்படுத்தினாலும் அவை அனைத்துமே இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று தானே. இன்றைய இனப்பெருக்கத் தேவையை தனிமனிதனின் வருமானமும், மனைவி/கணவன் ஆகியோரின் உடல் நிலையும், அதை ஏற்றுக் கொள்ளும் இருவரின் மன நிலையும் தான் முடிவு செய்கிறது. இனப்பெருக்கம் தான் நோக்கம் அதனால் ஈர்ப்பு இருப்பது இயற்கையாகவே இருக்கும் என்றால் உடலியல் குறைபாடுகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாத தம்பதியினர் கூடிக் களிப்பதை இயற்கைக்கு எதிரானது, தேவையற்றது என்று எவரும் சொன்னால் அது அறிவீனம். மனித உடல் அமைப்புகளையும், மனம், பொருளாதாரச் சூழல் சமூகம் இவற்றைப் பார்த்தால் இச்சைகளின் நீண்டகாலத் தேவை உடல் இன்பம் மட்டும் தான். மாற்றுபாலின சேர்க்கையாளர்கள் (Normal Sex Orentation) நாடும் உடல் இன்பம் உறுப்பு சங்கமங்களினால் மட்டும் தான் தனித்துக் கொள்வதில்லை, பல்வேறு 'வழிகளிலும்' அடைகிறார்கள், இவையெல்லாம் மற்றும் சுய இன்பம் காண்பது இயற்கையா ? உடல் இன்பம் பெறும் முறைகளை இயற்கை செயற்கை என்று வகைப்படுத்த முடியாமல் போவதற்கு அதன் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல என்பதே உண்மை. அப்படி இருக்கும் போது கூட விரும்பும் உடல்களுக்கு சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்றால் அது தற்பாலினமாகவோ இருந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமல் வெறும் Live together ஆக குடும்பம் நடுத்துபவர்களின் நோக்கம் கூட உடல் இன்பம் மட்டுமே, சிலர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை வெறும் உடல் இன்பம் தேவை மட்டும் தான் என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் சமூகம்,
ஓர் பால் சேர்க்கையினரை இயற்கைக்கு எதிரானவர்கள் என்று சொல்வதுவதன் காரணம் சமூகக் கட்டமைப்பு மற்றும் மதக் கொள்கை மட்டுமே.

ஆண் / பெண் இருவரது மனங்களும் மாற்றுப் பாலினரை (Opposite Sex) மட்டும் தான் நாடும் என்பது அவரவரின் சொந்த கற்பனை. பிறவிக் கலைஞர்களைப் போல் பிறவியிலேயே ஒத்த பாலினர் சேர்க்கை விருப்பர்கள் உண்டு. மேற்கத்திய நாடுகளில் இடது கையால் எழுதுவோரை சாத்தான்கள் என்று விளித்து பின்னார் மாற்றிக் கொண்டு அவர்களும் சக மனிதர்கள் என்றே ஏற்றுக் கொண்டார்கள். இடது கையால் எழுதுவோர்களை பிறவிக் குறைபாடு உடையவர்கள் என்று சொன்னால் அது அறிவீனம் தான். தற்பால் சேர்க்கை விருப்பர்களின் பலரின் இயற்கை மன அமைப்பு அவ்விருப்பத் அத்தன்மை கொண்டது என்றே சொல்லலாம்,

எங்களது அலுவலகத்திற்கு விற்பனைத் தொடர்பில் வரும் அமெரிக்கர் ஒருவரை, 'திருமணம் ஆகிவிட்டதா ? ' என்று கேட்டேன். அதில் தனக்கு நம்பிக்கைக் கிடையாது, தான் ஒரு ஓரின சேர்க்கை விருப்பர் என்று சொன்னார். 'உங்களுக்கெல்லாம் பெண்கள் மீது ஆர்வம் ஏற்படாதா ? என்று கேட்டேன், பெண்களை வெறுப்பது கிடையாது, மிகவும் மதிக்கிறேன். தனக்கு நெருங்கிய பெண் நண்பர்கள் உண்டு, ஆனால் பெண்ணுடன் சேருவது தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, தனது விருப்பம் ஆண் சேர்க்கைதான் என்றார். உயர்நிலை பள்ளிப் படிப்பின் போது சக மாணவனுடன் ஏற்பட்ட பழக்கம், அதன் பிறகு தானும் மாற்றிக் கொள்ள நினைக்கவில்லை, தான் விருப்பத்துடன் அப்படியே ஓரின சேர்க்கையாளராக தொடர்வதாக குறிப்பிட்டார்.

திருநங்கையர் போல் தற்பால் சேர்கையினர் அனைவருமே பிறவியிலேயே அதில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது, பலர் மற்றவர்களின் தூண்டுதலால் அந்த பழக்கத்தை தொடர்ந்து, பின் அதுவே அவர்களது விருப்பம் என்பதற்கு அழுத்தமான காரணமாக அவர்களின் சேர்க்கையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உணர்வு அடிப்படையிலான நெருக்குதல்களால், பிணைப்புகள், அதில் இருந்து மீள விருப்பம் ஏற்படும் சூழல் இல்லாது, அவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் திருமணம் செய்து கொண்டவர்களிடையேயும் குடும்பம் என்பதில் நம்பிக்கை குறைந்துவதால் அதிலிருந்து மீள வேண்டும் என்கிற சமூகக் பொறுப்பிற்கான சூழல் சார்ந்த தேவையும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது.

ஆண்/பெண் திருமணம் செய்து கொண்டவர்களிடமும் ஓர்பால் சேர்க்கை விருப்பம் மற்றும் செயல்பாடுகள் சிலரிடையே உண்டு (Bi-Sexual Activities) . தற்பால் விருப்பர்களின் பொறுப்பின்மையால் ஏற்படும் சமூகத் தொல்லைகள் எவை ? பிறகுபேசுவோம்.

9 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 4

பகுதி 1பகுதி 2பகுதி 3
மனித உணர்வுகளில் வழி செயல்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் எது இயற்கை என்பது பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கிறது. எவையெல்லாம் இயற்கை எவையெல்லாம் இயற்கைக்கு எதிரானது என்பதை முடிவு செய்யும் போக்கு சமூகம் சார்ந்தது என்பதைவிட மதம் சார்ந்ததாகவே இருக்கிறது. சமூகம் சார்ந்த இயற்கை அந்த சமூகத்துக்கு பழக்க வழக்கங்கள், பழக்க வழக்கங்கள் என்பதால் அது ஏற்படுத்திக் கொண்ட ஒன்றுதான். உதாரணத்துக்கு வெளிநாட்டில் அறிமுகம் இல்லாதவன் ஒரு தமிழன் என்று அறிந்தால் இன்னொரு தமிழன் கண்டு கொள்ளாமல் போவான். அதுவே இரு மலையாளிகள் அறிமுகமாகதவர்கள் என்றாலும் மலையாளி என்று அறிந்தால்....'நிங்கள்கு பாலகாடோ' என்று பேசத் தொடங்குவார்கள் ஆற்றாமையால் குறிப்பிட்டேன், சொல்லவந்தது அதுவல்ல. தான் சார்ந்துள்ள சமூகத்திற்காக தனிமனிதன் தனது செயலில் நடவடிக்கைகளில் மாற்றம் அமைத்துக் கொள்வது சமூகத்தினால் ஏற்பட்ட, ஏற்படுத்திக் கொண்ட இயற்கை செயல்பபடுகள் என்றாலும், பிற இனமக்களை ஒப்பிடும் போது செயற்கைத் தனமானது.

உடல்சார்ந்த செயற்கைத் தனம், இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உடலில் பல்வேறு அழகு சிகிச்சைகள் செய்து கொள்வது, தலைமுடியின் நிறத்தை மாற்றிக் கொள்வது, பச்சை குத்திக் கொள்வது, பிறரின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதற்கு உடலில் மாற்றத்தையும், உடனடியாக கவனம் ஈர்க்கும் ஆடைகளை அணிந்து கொள்வது இன்னும் பல செயற்கைத் தனங்கள், இவற்றை பலரும் விரும்பியே செய்கிறார்கள், அது சரி தவறு என்று சொல்லவரவில்லை, செயற்கை இயற்கைக்கு வைக்கப்படும் அளவுகோளில் தற்பால் புணர்ச்சி விருப்பை கொண்டு வரும் முன் மனித இனத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் உணர்வு / செயல்பாடு குறித்த அனைத்துமே இயற்கையான செயல்கள்தானா என்று சர்சை எழுப்புபவர்கள் சிந்தனை செய்து பார்க்கவேண்டும்.

உடல்சார்ந்த செயற்கை மா(ற்)றுதல் களில் இந்துக்கள் காதில் சிறு துளையிட்டு காதணிகள் அணிந்து கொள்ளப்படுகிறது. காதில் துளையிடும் பழக்கம் ஆதிவாசிகளாக (நாகரீக வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில் இருந்து - என்று எழுதத் தயங்குகிறேன், நாகரீகம் என்பது தம்மை உயர்த்திச் சொல்ல தற்கால சமூகம் அமைத்துக் கொண்ட சொல், எனக்கு உடன்பாடு இல்லை, இன்றைய நவநாகரீகம் என்று சொல்லப்படுபவை பல, பிற்காலத்தில் பிற்போக்குத் தனமாகக் கூட நினைக்கப்படலாம்) வாழ்ந்த போது ஏற்பட்டு தொடர்ந்து வரும் ஒரு பழக்கமாக இருக்கும், முகங்களை அழகாகக் காட்ட காதணி அணிவது நன்றாக இருக்கிறது என்பதால் பல்வேறு பிற இன சமூகங்களிலும் விருப்பமுடையவர்கள் காதில் துளையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால் இந்திய சமூகத்தில் இதற்குச் சொல்லப்படும் மறைமுகக் காரணம் 'காதில் துளையிடுவதன்' மூலம் அக்குபஞ்சர் போல் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களை குறைக்க பயன்படுகிறது, அதற்காகத் தான் நம் முன்னோர்கள் செய்து கொண்டார்கள் என்று கதை விடப்படுக்கிறது. மற்றொன்று விருத்த சேதனம் (சுன்னத்) என்று சொல்லப்படுகின்ற ஆண்குறியின் மொட்டு (Glans) பகுதியின் மென்மையைப் காக்கும் முன்தோலை (Foreskin) அகற்றிக் கொள்ளும் யூதச் சடங்கு, விருத்தசேதனம் யுதப்பழக்கமாக இருந்தது பின்னார் இஸ்லாம் சமயத்தினராலும் பின்பற்றப்படுகிறது.

முன்தோலை அகற்றிக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படும் காரணங்கள்.

1. உடல் தூய்மை பேணுகிறது, 2. நோய் தொற்றுவதை (ஓரளவுக்கு) குறைக்கிறது, இதில் தவறு ஒன்றுமே இல்லை. சொல்வதும் உண்மைதான். முன் தோலில் தங்கும் கழிவுப் படலம் (கலோக்கியல் ஆங்கிலத்தில் Cock Cheese என்று சொல்லப்படும், smegma - sebaceous paste collects under the foreskin near the base of the head) முன் தோலை அகற்றிக் தடுக்கப்படுகிறது அதன் மூலம் பால்வினை நோய்கள் தொற்றும் வாய்ப்புகளை 50 விழுக்காடு குறைக்கிறது ( முற்றிலும் தடுக்கிறது என்று சொல்லவதற்கு இல்லை) ஆனால் ஆண்குறி முனையின் (Glans) மென்மைகள் போய்விடும் என்பதால், நீண்ட நேரம் உறவு கொள்ள விரும்புவர்களுக்கு பயனாக இருக்கும். அல்லது உடல் ரீதியான குறையால் மனம் செயல்பாடுகளின் வழி உணர்வுகளை கட்டுப்படுத்தி தேவையான நேரம் உறவு கொள்ள இயலாதாவர்களுக்கு மென்மையற்றதன்மை பயனளிக்கும். சிலருக்கு பிறவியினாலும் ஒரு சில திடீர் உடல் நோய்களால் முன் தோல் இழுவை (Flexiblity) தன்மை இல்லாமல் மிகவும் குறுகியதாக விட்டமாக இருக்கும், அவர்கள் அகற்றிக் கொள்வதால் பயன் உண்டு. மற்றபடி இது மனித குலத்துக்கே பயனானது அனைவரும் செய்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதால், அறிவுறுத்தல் தவறான ஒன்று.

உடலில் இருக்கும் அனைத்து வகையான அமைப்புகளிலும் நகமும், மயிரும் தான் வெட்டினாலும் வளரும் தன்மை உடையது, வெட்டுவேண்டும் என்பதாலாயே எப்போது வளரும் தன்மையும் உடையது. முடி உடல் வெப்ப நிலையை சீர்படுத்தவும், நகம் விரல் செயல்பாட்டில் அழுத்தம் கொடுக்கும் போது விரல் முனையை பாதுகாக்கவும் இருக்கிறது, மற்ற உடல்பாகங்கள் எவையும் வெட்டினால், வெட்டுபட்டால் வளருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் அதன் தேவைகள் இன்றியமையாத ஒன்றாகவே இயற்கை அமைப்பின் கூறுகளாகவே உள்ளன. ஆண்குறி மொட்டின் மென்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதால் முன் தோலும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. வெறும் உடல் தூய்மைக் கெடலாம் அதானால் அகற்றிக் கொள்வது நல்லது என்றால், ஒரு நாள் பல் துலக்காவிடினும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதையும், பற்சிதைவு ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும். காய்சலைவிட பல்வலி கொடுமையானது, நீங்கள் தண்ணீர் இல்லாத ஊருக்குச் சென்றால் உங்களால் பல்விளக்க முடியாமல் போகலாம், வாயில் துர்நாற்றம் ஏற்படும், பல்வலி ஏற்படும், அதனால் முன்யோசனையாக பற்கள் அனைத்தையும் அகற்றிவிடுங்கள், உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்ற அறிவுறுத்தல் எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் விருத்த சேதனம் அனைவரும் செய்து கொள்வதே நலம் என்கிற அறிவுறுத்தல்.

நாள்தோறும் குளிக்கிறோம், ஆண்குறி முனையை மூடி இருக்கும் தோல் பகுதியை பின்னால் தள்ளிவிட்டு கழுவ எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் ? அதுமிகவும் கடினமான செயலா ? பால்வினை நோய் தொற்றுவதைத் தடுக்க அகற்றிக் கொள்ளலாம் என்றால் அப்படி விலைமகளிரிடம் செல்பவர் மட்டும் தானே அதையெல்லாம் செய்து கொள்ளவது நல்லது. நல்ல ஒழுக்கத்துடன், தூய்மையுடன் உடல் நலம் பேணும் ஆண்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக விருத்தசேதனம் செய்வதே சரி என்பது தவறான கூற்றாக கருதுகிறேன். விருத்தசேதனம் செய்து கொள்ள வழியுறுத்த்துவது மதம் சார்ந்த வழியுறுத்தல் தவிர அதை மறைத்துச் சொல்லப்படும் தூய்மைக் காரணங்கள் சொற்பமே, உடல் தூய்மை அன்றாடம் பேணுவோருக்கு தேவையற்றதும் ஆகும். யூதர்களிடமோ, அவர்களுக்கு முன் காட்டுவாசிகளிடமோ உடல் தூய்மை பேனாத காரணத்தினால் இந்தப் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது இனப்பழக்கமாகி, பின்னர் அந்தப் பகுதியில் தோன்றிய மதம் என்பதால் இஸ்லாமிய பழக்கமாக இவை ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது என்பதைத் தவிர்த்து இந்த வழக்கத்தின் தோற்றம் குறித்து மிகச் சரியான காரணங்கள் தெரியவில்லை. முன்தோல் (Foreskin) அகற்றிக் கொள்வது காது குத்திக் கொள்வது போல் மதவழிச் சடங்கு தான். யூத இனத்தில் தற்பொழுது விருத்தசேதனம் செய்து கொள்வது தவர்க்கப்படுகிறது.

எது இயற்கை, எது செயற்கை என்பதை மதம் தான் முடிவு செய்கிறது, இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு அல்ல.

Ref: http://www.cirp.org/ ; http://www.historyofcircumcision.net/

தொடரும்...

8 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 3

பகுதி 1 பகுதி 2

பண்டைய மேற்கத்திய ஐரோப்பிய கிரேக்க மற்றும் ரோமன் பேரரசுகளின் இல்லங்களில் ஆண்கள் பெண்களுடன் தனது வாரிசுகளை உருவாக்க வேண்டுமென்ற காரணத்தினால் கூடினார்கள். உடலின்பத்திற்கு பல ஆண்கள் மற்ற ஆண்களை சார்ந்திருந்தார்கள் என்பது வராலாற்று வழி அறியவருவதாகும்.

ஆசிய நாடுகளில் பெண்களை உயர்வாக நடத்தினார்களா ? ஆசிய ஆண்களின் ஆண்மையின் பெருமை அவனுடைய அறிவுத் திறமை, உடல்பலம் மற்றும் எத்தனை மனைவியைக் கொண்டிருக்கிறான், எத்தனை குழந்தைகளைக் கொண்டிருக்கிறான் என்பதாக கட்டமைக்கப்பட்டிருந்தது. மற்றபடி ஆசிய ஆண்களும் பெண்களை சமாக நடத்தி இருக்கவில்லை. போரில் தோற்கும் இனங்களது பெண்களை அடிமையாகவும், மணந்து கொள்ளவும் முற்பட்டனர். அரபு நாடுகளில் இன்றும் பலதாரமணத்துக்கு வருமானத் தடைகள் தவிர்த்து மனதளவில் கூட தடையேதும் இல்லை.

இந்திய சமூகச் சூழலில் இராமயணம் மகாபாரதம் போன்றக் கதைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் பலதார மணம் இயல்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. (சீதை) பெண்களை கவர்ந்து செல்வதும், (பாஞ்சாலி)அவமானப்படுத்துவதும் செயல்களைக் காட்டி இருப்பதால் பெண் ஆணுக்கு அடிமைப்பட்டவளாகவே இருந்ததாள் என்று சொல்லாமல் தெரியவரும் செய்திகள். பெண்கள் நிறைந்திருக்கும் அந்தப்புரம் இல்லாத அரண்மனைகளே இல்லை என்பது போல் தான் கதைகளில் படிக்கிறோம். இந்திய சூழலில் தாய்மைக்கு முதன்மைத்துவம் கொடுத்திருந்தாலும் பெண் ஆணின் சொத்து என்பதாக நினைத்து கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏறச் செய்வது தமிழ் சூழலில் கூட இருந்ததற்கு சங்க இலக்கிய குறிப்புகள் உண்டு. ஆசிய ஆண்கள் பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாகவே நடத்தினர். தமிழ்ச் சூழலில் பலதார மணம் தவறு என்பதை சிலப்பதிகாரமும், கம்பைராமாயணமும் வழியுறுத்தி கட்டுபடுத்த முயன்றது.

மேற்கு நாடுகளில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக பெண்கள் சமமாக நடத்தப்படும் நிலையும் வளர்ந்தது, வெள்ளையர்கள் எங்கெல்லாம் ஆட்சியைப் பிடித்தார்களோ அங்கெல்லாம் அவர்களைப் பார்த்து பிற இனத்தினரும் ஒருதார மணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டனர். கூடவே அவர்களிடம் இருந்த தற்பால் புணர்ச்சி வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற இனத்தினரிடையேயும் பின்னபற்றப் பட்டது. ஆனால் இன்றும் கூட கிரமாத்தினரிடையே 'தற்பால் புணர்ச்சி செயல்கள் நகரங்களில் இருக்கிறது' என்று செய்தியாகச் சொன்னால் உடனடியாக முகம் சுளிப்பார்கள். கிராமத்தினரைப் பொருத்த அளவில் அது நினைத்துக் கூட பார்க்காத செயல்.

மேற்கத்திய நாகரீகத்தில் நாகரீகம் என்பது தனிமனித சுதந்திரம் என்று முன்வைக்கப்பட்டு, அது முதன்மையாக்கப்பட்டதால் அவர்களிடையே முன்பு இருந்த ஓர் பால் சேர்க்கை குறித்த சமூகக் கருத்துகளில் மாற்றம் ஏற்படவில்லை, அல்லது மாற்றுக்கருத்தே ஏற்படவில்லை என்றும் சொல்லலாம். பிறரை துன்புறுத்தவில்லை என்றால் பொது இடத்தில் நிர்வாணமாக நடக்க நினைப்பவருக்கு அந்த உரிமை உண்டு என்றே சொல்லுவார்கள். தனிமனித சுதந்திரம் பற்றிய மேற்கத்திய நாடுகளின் கொள்கை பிறநாடுகளுக்குப் பிடித்திருந்தாலும் தற்பால் சேர்க்கைகள் சமூகத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கையில், முதலில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை, அப்படியே செய்து கொண்டாலும் குடும்பத்தில் நாட்டம் வைத்திருக்கமாட்டார்கள் என்று கருதி சமூக வளர்ச்சிக்கும் இன வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றெல்லாம் எண்ணி, தற்பால் புணர்ச்சிக்கு ஆசிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து மதங்களின் வழியான தடைகளை போட்டு வைத்திருந்தனர். வெளிப்படையாக் தற்பால் சேர்க்கையினர் செயல்படாவிட்டாலும், அரசாங்கம் எவருடைய படுக்கை அறையையும் கண்காணிக்கும் அளவுக்கெல்லாம் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதால் தற்பால் புணர்ச்சியினர் மறைமுகமாகவே இயங்கி வருகின்றனர்.

தற்பால் விருப்பர்கள் மறைமுகமாக செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. என்றாவது ஒரு நாள் வெளியே தெரியும் போது அது அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்திற்கே பெரிய தலைகுனிவு ஏற்படுத்தி உறவுச் சிக்கலை ஏற்படுத்துவதுடன், அத்தகைய விருப்பர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல்களை ஏற்படுத்திவிடும். நல்ல உடல் நிலையுடன், பொருளாதாரக் குறை எதுவும் இல்லாத ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் 1. காதல் / திருமணம் தோல்வி, 2. இரத்த சொந்தங்களிடம் / சிறுவர்களுடன் முறையற்ற பால் உறவு, 3 வெளியே தெரிந்த போன தற்பால் தொடர்புகள் இவற்றில் ஒன்று காரணமமக இருக்கும்.

பல்லாண்டு பழகிய மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர், வெளிநாடு செல்வதை முன்னிட்டு அவரை சந்தித்து, ஒரு மாலை பொழுதில் ஒரு உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே

"நாம நெருகமானவர்கள் தான் என்றாலும் என்கிட்ட எதாவது மறைத்து இருக்கியா ?" என்று கேட்டேன்

யோசித்துப் பார்த்துவிட்டு மெதுவாக

"ஆமாம்.....ஆனால் அதை நான் வெளியே சொல்ல முடியாது" என்றான்

"ம் நான் ஊகமாகச் சொல்கிறேன்....நண்பர்களிடம் மறைக்கக் கூடியது தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கை அதுவும் சொல்லக் கூச்சமான பிரச்சனையாகத் தான் இருக்கனும்" என்றேன்

என்னை வியப்புடன் பார்த்தான்

"ஆமாம்.....நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன்..." என்றாலும், தயக்கத்துடன்

"தனித்து இருக்க வேண்டிய சூழலில் என்னுடைய 19 வயதில், என்னைவிட ஒரு வயது குறைந்த எனக்கு தங்கை முறை உள்ள சித்தியின் மகளுடன்.... முறை தவறி நடக்க முயற்சித்தேன்... அவள் இணங்கவில்லை, அதுவுமில்லாமல் வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டாள் தெரிஞ்சு போய் அவமானமாகிவிட்டது... முழுதாக தப்பு செய்யவில்லை என்றாலும் 'தங்கை முறை உள்ளவளிடம்....' அதை மறந்து நான் நார்மலாக ரொம்ப நாள் ஆச்சு" என்று சொன்னான்

வெகு சிலரே சட்டசிக்கல் இல்லாத அல்லது சிக்கலில் சிக்காத முறையற்ற, பால் உறவுகள் வெளியே தெரிந்துவிட்டால் அவமானத்துடன் மன அழுத்தத்துடன் மீண்டு வருவார்கள். பலர் தற்கொலை செய்து கொள்வதுண்டு. ஆண் பெண் ஈர்ப்புகளுக்கே சமூகம்/குடும்ப நல நோக்கில் இவ்வளவு சமூகக் கட்டுப்பாடு என்றால் தற்பால் புணர்ச்சி இந்திய சமூகத்தில்? முதலில் சமூகம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் கூட அதைப் பற்றி மூச்சுவிட முடியாது என்பதே அவர்களின் நிலை. உளவியல் பூர்வமாக அறிவுறுத்தி தடுக்க வேண்டியதை உணர்ச்சி பூர்வமாக அணுகினால் பெரும் சிக்கலும் உயிர் இழப்பும் தான் ஏற்படும். இரு பருவ வயதினரிடையே விருப்பத்துடன், சம்மதத்துடன் கூடிய தற்பால் புணர்ச்சி தவறா ? என்பதை தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

பின்குறிப்பு : சமூக சூழலைப் பற்றிப் பேச உளவியல் படித்தவராக இருக்க வேண்டியதில்லை, எதையும் வழியுறுத்தவோ, அறிவுரையாகவோ சொல்லவில்லை, கண்டது கேட்டது படித்தது என்ற வகையில் சில மேற்கோள்களுடன் எழுதிவருகிறேன். தொடரில் தவறான தகவல்கள் / தகவல் பிழைகள் இருந்தால் குறிப்பிடும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

7 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 2

பகுதி 1
ஆசிய கலாச்சாரம் இவை தான் என்று சீனக்கலாச்சாரம் மட்டும் பார்க்கப்படுவது, காட்டப்படுவது போலவே, ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகளின் மாற்றங்களைத் தான் உலக வாரலாறுகளில் மிகுதியாக பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன. உலகம் நாகரீகம் என்பது ஐரோப்பிய நாகரீகமாக பார்பதும், வலியுறுத்துவதும் ஐரோப்பிய வெள்ளையின அரசியல். ஓரினபுணர்ச்சி பற்றி வரலாறுகளில் என்ன கூறப்பட்டு இருக்கிறது என்பதற்கு வெள்ளை இன வரலாறுகளைப் பார்த்து அதற்கான எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகிறது. குறிப்பாக அலக்சாண்டர் போன்ற மாவீரர்களும் அவனது வழிகாட்டி அரிஸ்டாட்டில் போன்ற தத்துவமேதைகளும் தற்பால் புணர்ச்சியில் நாட்டம் கொண்டவர்கள் என்று வரலாற்றில் பதியப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு சில உண்மைகளில் அவர்கள் காலத்தில் பெண்ணை இனப்பெருக்க பாலினமாகமட்டுமே பார்த்திருக்கிறார்கள். பெண்ணிடம் கூடுவது தனக்கான வாரிசுகளை உருவாக்கி கொள்வதற்காகத் தான் அதாவது வாடகைத் தாய் என்கிற நிலையில் தான் பெண்களின் நிலை இருந்திருக்கிறது என்பதாகச் சொல்லுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பேரரசுகளை அமைப்பது ஆணின் பலத்தினாலும் அறிவினாலும் மட்டும் நடக்கிறது என்பதால் 'ஆண்' என்பவன் மனித இனத்தின் உயரிய படைப்பு என்கிற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனின் எண்ணங்களிலும் இருந்திருக்கக் கூடும்.

உடல் பலம் ரீதியாகவும், குழந்தை பெற்றுக் கொண்டு பேணி வளர்க்கும் பொறுப்புகள் என்றும் இருப்பதால் சமூகம் மற்றும் பேரரசு, அரசு அமைப்பில் பெண்களின் பங்கு என்பதே இல்லை. அடிமையாகவும், குழந்தை பெரும் பாலினமாகத்தான் பெண்கள் நிலை இருந்திருக்கிறது. பெண்நிலை கீழாக இருந்ததால் உடலுறவு 'இன்பம்' தரக்கூடியவள் என்கிற தகுதியைக் கூட அவளுக்கு இருப்பதாகவோ, அப்படி ஒரு தகுதியைக் கொடுக்கவோ ஆண் சமூகம் தயாராக இருந்ததில்லை. கிளர்ந்தெழும் பால் உணர்வுகளை தனித்துக் கொள்ள ஆண்கள் ஆண்களையே நாடும் அவல நிலையைஅவர்களே விரும்பியும், வழியின்றியும் ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நாட்டை வளப்படுத்தவும், வீரத்தை உலகரிய செய்யவேண்டும், தன்னைச் சார்ந்தவர்களின் ஆளுமையைப் பரப்ப வேண்டும் என்பதற்கு எளிய வழிகளாக பேரரசுகளும், மன்னர்களும் நினைப்பது பிறநாட்டினரிடம் போரிட்டு அவற்றைக் கைப்பெற்றி தனது ஆளுமைக்குக் கொண்டுவருவதைத் தான். அப்படிச் செய்வதன் மூலம் வீழ்ந்த நாட்டின் உலோக செல்வங்களும், அடிமைப்பட்ட மன்னன் செலுத்தும் வரியும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், இதனால் பண்டையகாலத்தில் உலகங்களிலும் இருந்த மன்னர் ஆட்சிகள் எப்போதும் போருக்கான ஒத்திகையும், போரையும் தொடர்ந்து செய்துவந்திருக்கின்றன. வடக்கு ஆசியாவில் சீன மன்னர்கள் ஆட்சியைப் பார்த்தால் பெரும்பாலான மன்னர்கள் இயற்கை எய்தியதே இல்லை, போரில் சண்டையிட்டே இறந்திருக்கிறார்கள். சீனாவின் பண்டைய வரலாறுகள் சண்டைகளும் அரசு எழுச்சி வீழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்ததை அறிய முடிகிறது. (From the Qin dynasty to the Qing dynasty, there have been nearly 400 Emperors - சீனாவின் மெகாசீரியல்களுக்கு இவைதான் கதைக் களம்) இவை ஆசிய அளவில் சீனப் பேரரசுகள் கம்போடியா, தாய்லாந்தைக் கூட ஆளுமைகளுக்கு கீழ் கொண்டு வந்திருக்கிறது.

ஐரோப்பிய அலக்சாண்டரின் பேரரசு இந்தியாவின் வடமேற்குவரை வெற்றிக் கொள்ள படையெடுக்கப்பட்டு இருக்கிறது. பண்டைய பேரரசுகளில் ஆண்களின் முதன்மைத் தொழிலே போர்வீரராக அரசனின் படையில் இருப்பது தான். எந்தகாலமும் போரும் ஒத்திகையாக இருக்கும் போது ஆண்கள் பால் உணர்வுகளின் தீர்வுகளாக இன்னொரு ஆணையே நாடவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டதற்கு ஏதுவாக அமைந்திருந்தது ஏற்கனவே அவர்கள் பெண்களை போகப் பொருளாகவோ, பொருட்டாகவோ நினைத்திருக்கவில்லை என்கிற உளவியல் காரணிகள். எனவே பண்டைய ஐரோப்பிய சமூகத்தில் ஓர்பால் ஈர்ப்பு என்பது இயல்பாக இருந்ததற்கு பெண்ணடிமைச் சமூக சூழலும், ஆண்கள் எப்போதும் போர்களத்திலும், போர் ஒத்திகையிலும் இருந்ததது ஆகும். மும்முறை பெண்களை திருமணம் செய்து கொண்ட அலெக்சாண்டருக்கு ஆண்களின் மீதான நாட்டம் இருந்ததாக வரலாறு எழுதியவர்கள் சொல்கிறார்கள்

பண்டைய ரோமாபுரியில் குடும்ப அமைப்பு இல்லை, அனைவரும் அப்படித்தான் என்று ஒட்டுமொத்தமாக, தவறாக குறிப்பிட வில்லை. தற்பால் புணர்ச்சி ஐரோப்பிய கலாச்சாரத்தில் அனுமதிக்கப்பட்ட, விரும்பபட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. அதை வைத்து பிற இனங்களில் இருக்கும் தற்பால் புணர்ச்சியினர் விருப்பர்கள், ஆதரவாளர்கள் தங்களுக்கு ஆதரவாக பண்டைய ஐரோப்பியக் கலாச்சாரத்தில் ஏற்கனவே இருந்த ஒன்று தான் சுட்டிக்காட்டி பேசுவது சரியான வாதமா ? அதற்கு முன்பு ஆசிய, அரபு நாடுகளின் பண்டைய அரசியலைப் பார்க்க வேண்டும். பிறகு தனிமனிதனின் பால் வேட்கைத் தனிப்பு உறுப்புகளின் புணர்சியுடன் மட்டும் தொடர்புடையதா ? புணர்ச்சியின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டும் தானா ? என்பதையும் பற்றிப் பேசுவோம்.

ஐரோப்பிய பேரரசுகள் பற்றிய ஆங்கில பரிந்துரை பதிவு இங்கே

தொடரும் ...

6 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

எந்த ஒரு இயக்கம் என்றாலும் அதில் ஈர்ப்புத் / விலக்குத் தன்மை அந்த இயக்க விசையில் இருக்கும். முழுப் பரவெளிக்கும் (பிரபஞ்சம்) பொருந்தும் உண்மை. உயிரினங்கள் அனைத்தின் தொடர்சியும் இனப்பெருக்கம் மூலமே நடைபெறுகிறது. வாழை மரம் போன்ற தாவிர வகைகள் மற்றும் நுண்செல்கள் தவிர்த்து மாற்றுப் பாலினம் இன்றி இனப்பெருக்கம் நடைபெறுவது உயிரினங்களின் வகைகளில் மிக மிகக் குறைவே. இயற்கை அமைப்புப் படி ஒரு இனத்தில் இருபால் பகுப்புகளும் இனப்பெருக்கத்திற்கு அவை இரண்டின் பங்களிப்புகளும் இணைந்தால் தான் உதவ முடியும் என்பது இயற்கை விதியாக இருக்கிறது.

உயிரினங்களில் தாய்மை இனப்பெருக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதுடன் பெருக்கும் தன் இனங்களை தன்னிச்சையாக செயல்படும் வரை காப்பதற்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் அதே இயற்கைத் தன்மை வழி சொல்லிக் கொடுக்காமல் நடைபெறும் ஒரு வியப்பு. ஒரு சில உயிரினங்களில் குட்டிகளை, குஞ்சுகளை ஆண் இனமும் பேணிக் காப்பது உண்டு. அவை பெரும்பாலும் இணை இணையாகவே வசிக்கும். பெரும்பாலும் அனைத்து உயிரினங்களிலுமே வளர்ப்பது தாயின் செயலாகவே நடைபெறுகிறது. அவ்வாறு செயல்படுவதற்கு அவற்றின் உடல்கூறில் அமைந்துள்ள பெண்பால் மரபியல் அமைப்பு என்பதைத் தவிர்த்து அந்த தாய்களுக்கு தனிப்பட்ட பலன் எதுவுமே இல்லை. தனது கடமை என்ற அளவில் இனப்பெருக்கத்துக்கு துணை புரிவதுடன் வளர்ப்பதிலும் பங்காற்றுகின்றன. இனப்பெருக்கத்திற்கு உதவும் ஆண் உயிரினங்களுக்கு சிற்றின்பங்கள் கிடைக்கின்றன. அவற்றிற்கு இன்பம் ஏற்படுகிறதா ? யார் கண்டது ? அவை அவற்றை விரும்பிச் செய்கிறதா ? உந்துதலால் செய்கிறதா ? என்று பார்த்தால் ஆண் இனங்கள் இன்பம் அடைவதாகத் தான் கொள்ள முடிகிறது. கன்றுக் குட்டியின் தாடையை, முதுகை வருடிக் கொடுத்தால் அது காட்டிக் கொண்டே இருக்கும், எனவே உயிரினங்களுக்கு உடல் பசிக்கு உடனடியாக கிடைக்கும் உணவுகளில் ஏற்படும் நிறைவு போலவே அவைகளுக்கும் பல்வேறு உணர்வுகளும் இன்ப நுகர்சிகளும் தேவையாக இருக்கிறது என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

மனித இனத்தின் சிக்கல், ஆண் சமூகக் கட்டமைப்புதான். சமூகமாக வாழ்வதும், அதை அடையாளப்படுத்திக் கொள்வதும், அதையே முன்னிலைப் படுத்துக் கொள்வ விளைவதும் இதன் தொடர்ச்சிக்கு சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு தங்கள் சமூகப் பெண்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஆண் பெண் வேறுபாடுகள் சமூகத்தின் முதன்மைக் காரணியாக இருக்கின்றன. ஆண் பெண்ணிற்கு இயல்பாக இருக்க வேண்டிய ஈர்ப்பு, இந்த ஆணியக் கட்டமைப்புகளினால் ஆட்டம் கண்டு போனாதால் ஏற்பட்டதே மனித சமூகத்தில் ஓரின சேர்க்கைக்கான ஈர்ப்புகள் என்று கருதுகிறேன். பெண்ணை அடிமைப் படுத்ததாத ஆதிவாசிகளிடம் ஓரின ஈர்ப்புப் பழக்கங்கள் கிடையாது. நாகரீக மக்களிடம் தான் இவை மிகுதியாக இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தன்னால் குடும்பமாக இருக்க விருப்பமின்மை, தன்னுடைய உணர்ச்சிகளே முதன்மை வாய்ந்தவை என்கிற தன்னலம், இவை எதுவும் இல்லாமல் மீறி ஒருவர் ஓரின ஈர்பாளர் ஆகுவதற்கு மற்றொரு காரணம் சிறுவயதில் ஒத்த பாலினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் ஏற்பட்ட பாதிப்பு. ஒத்தபாலின நாட்டத்தில் திருநங்கையரை தவிர்த்துவிட்டு பார்த்தால்,

பொதுவானவர்களிடம் ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ ஈர்ப்புகள் இருப்பது இல்லை என்றே சொல்ல முடியாது, பெரும்பாலும் தலைமை விசுவாசிகள் தலைவனின் செயல்பாட்டின் வழி தலைவன் மீது ஈர்ப்பு கொண்டிருப்பார்கள், ஆனால் அவை பாலியல் வேட்க்கையில் அடங்கும் ஈர்ப்பாக இருக்காது. அழகான ஆண்கள் யார் என்று கேட்டால் ஓரின பால் நாட்டம் இல்லாத ஆண்கள் கூட சில ஆண்களைக் குறிப்பிட்டு இவர்களெல்லாம் அழகானவர்கள் என்று சொல்வார்கள். அது அவர்களை மனதுக்குள் பாலியல் சார்ந்த ஈர்பாக நினைத்துக் கொள்கிறார்கள் என்று பொருள்படாது. மற்றபடி அவர்களின் உடலமைப்புடன், திறமை, நடவெடிக்கை ஆகியவற்றில் எதோ ஒன்றில் அவர்களைப் பிடித்திருக்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வகை ஒத்தபாலினர் ஒருவர் மீதான ஈர்ப்பு அவருடைய திறமையின் காரணாமாக ஏற்படும் ஒருவகை ரசனைத் தனமான ஈர்ப்பு அதன் பெயரில் அவர் மீது வைக்கும் அன்பு, அது மிகுதியாகும் போது வெறித்தனமான ரசிகர் ஆகிவிடுவார்கள். மற்றபடி பாலியல் ஈர்ப்பு என்ற உணர்வுக்குள் ஒத்த பாலினர் மீது கொண்டுள்ள ரசனை வந்துவிடாது, எவை எவையெல்லாம் தற்பால் நாட்டத்தில் வராது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

ஓரிணப் புணர்ச்சி விருப்பர்கள் ஒத்தப் பாலினரை விரும்புவதற்கான காரணங்கள் சமூக, உளவியல் காரணிகளை உள்ளடக்கியது. ஒரினப் புணர்ச்சியின் மீதான நாட்டம் சிலருக்கு ஏற்படுவது இயற்கைதான், அவர்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கொடுக்கலாம் என்கிறார்கள்,
சில நாடுகளில் கொடுத்தும் இருக்கிறார்கள். ஓரின புணர்ச்சி நாட்டம் இயற்கை என்று சொல்வதை ஏற்றுக் கொள்வது கடினாமாக இருக்கிறது, மனித வாழ்க்கையே இயற்கைக்கு எதிரான பல்வேறு போராட்டம் தான், இயற்கை நமக்கு எதிராக இருக்கும் போது மாற்றி அமைத்துக் கொண்டு அல்லது அதிலிருந்து பாதுகாத்துக் கொண்டே வாழ்கிறோம். ஓர்பாலின ஈர்ப்பு இயற்கை என்றாலும் அதைத் தொடர்வது சமூகத்திற்கும், இயற்கையில் அமைந்த ஆண்/பெண் உடலமைப்புகள், இனப்பெருக்கம் மனித இனத் தொடர்ச்சி இவற்றிற்கு எதிரானது என்றே கருதுகிறேன். இவை பற்றி தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7

9 நவம்பர், 2008

ஓரின புணர்சியாளர்களின் திருமணக் கூத்து !

வயது வந்தவர்களின் பாலியல் இச்சை என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பு, அவர்கள் ஒருபால் விருப்பம் உடையவர்களாக இருப்பது மனநோய் என்றெல்லாம் சொல்ல முடியாது, முன்பெல்லாம் அப்படி வலியுறுத்த முயன்றார்கள் அதன் பிறகு அவை தவறான அனுமானம் என்று புரிந்து கொள்ளப்பட்டது. அவற்றை மதரீதியாக பார்த்து கருத்து சொல்வதில் உடன்பாடு இல்லை. ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக மதக்கருத்துக்களைக் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.

தன்பால் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாதவர்கள் அந்த வழியிலேயே செல்வது அவர்களின் விருப்பம் என்றாலும் அவர்கள் 'திருமணம்' செய்து கொள்வதும், அதற்கு சட்ட அங்கீகாரம் கேட்பதும் கேலிக் கூத்துதான். திருமணம் என்ற அமைப்பே சமூகம் தொடர்புடையது, ஆண் / பெண் இருபாலார் திருமணம் செய்து கொள்ளும் போது அவை ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலப் பயனாக சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள், திருமண பந்தம் அவர்களுடைய கடமைகளை வரையறுக்கிறது. மேலும் சட்டப்பாதுகாப்புக் கிடைக்கிறது. இருவருக்கும் உடன்பாடு இல்லாமல் பிரியும் போது வாழ்வுதவி (ஜீவனாம்சம்) கிடைக்க சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இவையே திருமணம் என்னும் சடங்கின் வழி ஆண்/பெண் இருபாலரும் அடையும் நன்மை. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் திருமணம் என்னும் சடங்கை சமூக அங்கீகாரமாக நினைக்கும் ஓரினபுணர்சியாளர்கள் அவை தங்களுக்கும் கொடுக்கப் பட வேண்டும் என்பது ஏற்கத் தக்கது அல்ல.

ஆண் / பெண் இருபாலரும் மணந்து கொள்வதும் கூட முதல் காரணம் பாலியல் தேவையை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் ஒரு ஒழுக்க நடவடிக்கை, அதற்கு பெற்றோர் முதல் சமூகத்தின் ஆதரவு எப்போதும் கிடைக்கும், அந்த திருமணத்தின் வழி பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது மட்டுமின்றி அதன் பயனாக உலகத்தை உயிரோட்டத்துடன் சுழற்ற வாரிசுகளை பெற்றுத் தருகிறார்கள். இவையெல்லாம் ஓரினபாலினரின் திருமணத்தால் ஏற்பட்டுவிடுமா ?

யாருடைய அங்கீகாரமும் தேவையின்றியே ஓரின பால் விரும்பிகளின் விருப்பப்படி அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்க முடியும். அதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. இவர்களும் அதை அனுமதிக்கவோ, சகித்துக் கொள்ளவோ மாட்டார்கள், பிறகு ஏன் இவர்கள் திருமணத்தை நாடவேண்டும் என்று தெரியவில்லை. விளங்கவில்லை. ஒருவேளை இவர்களுக்குள் சொத்து முதல் காப்பீடுகள் வரை பகிர்ந்துக் கொள்ளப்படும், அல்லது ஒருவரின் இறப்பிற்கு பிறகு மற்றவர்களுக்கு கிடைக்க ஓரின திருமணம் வழங்கினாலும், திருமணம் என்ற சடங்கே இல்லாமல் ஒருவர் தன் சொத்துக்களை காப்பிடுகளை விரும்பியவர்களுக்கு எழுதி வைக்க முடியும். அதற்காக திருமணம் செய்து கொள்வதெல்லாம் டூ.........மச். இத்தகைய திருமணங்கள் சமூகத்தை, தன்னைப் பெற்றவர்களின் செயலையெல்லாம் பழிப்பது போன்றதே.

ஆண் / பெண் திருமணம் செய்து கொள்ளும் போது உறவு முறைகள் கிடைக்கிறது,ஓரு ஆணும் ஆணும், அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது பெற்றோர்கள், தங்கள் மகன் மணம் முடித்துக் கொண்ட ஆடவனை மருமகன் என்றுச் சொல்லிக் கொள்வார்களா ? பெற்றோர்கள் இவர்களின் இச்சைகளை இயற்கை / இயற்கைக்கு மாற்றானது என்ற புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொண்டாலும், இவர்களின் பெற்றோர்களாலேயே புதிய ஒரு உறவாகவே மதிக்காத இவர்களின் திருமணத்தினால் இவர்களுக்கும் பயன்கிடையாது.

*******

மேலை நாடுகளில் ஒத்தப்பாலின ஈர்ப்பில் நட்பு என்ற ஒன்று இருப்பதே அறியாதவர்களாக இருந்து அவற்றை பாலின தேவையுடன் தொடர்பு படுத்தி ஒருபாலின் நட்பு என்பதே ஓரின சேர்க்கையாகவே புரிந்து கொள்ளப்படுகிறதோ என்ற ஐயமே ஏற்படுகிறது. நம் இந்தியா போன்ற நாடுகளில் மிக நெருங்கிய நண்பர்கள் கைகோர்த்து நடப்பதும், ஒரே படுக்கையில் படுப்பதெல்லாம் இயல்பு. ஹாஸ்டல் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்பவர்களின் நெருக்கம் ஒரே சிகெரெட்டை இருவரும் புகைப்பது முதல் பலவற்றில் அவர்களின் அன்பின் ஆழம் இருக்கும். மேலை நாடுகளில் இதுபோல் இரு ஆண்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் ஓரின ஈர்பில், ஓரின புணர்ச்சியாளர்களாக மட்டும் தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்களிடம் இருக்கும் குறையாக நினைப்பது என்னவென்றால், நல்ல நட்பிலும் ஒத்த பாலினரிடம் நெருக்கமாக இருக்க முடியும் என்று அவர்கள் அறிந்ததில்லை.

****

ஓரின புணர்ச்சியாளார்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் இணையர்களின் நம்பிக்கை எதிராக இருக்கமாட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. இவர்களின் மனதை வசப்படுத்தும் இன்னொரு கவர்சியான ஆடவன் கிடைத்தால் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை எல்லாம் உடனடியாகவே தொலைந்துவிடும். மேலை நாடுகளில் ஆண்கழிவரைகளில் சில ஆண்கள் மணிக்கணக்காக சிறுநீர் கழிப்பது போல் நின்று கொண்டு வரும் போகும் ஆண்களின் ஆண்குறிகளை வெறித்துப் பார்ப்பார்கள், பார்க்கப்படும் ஆண்கள் இவர்களை பார்த்துவிட்டால் சிரிப்பார்கள், பதிலுக்கு சிரிப்பவர்களை தன்னைப் போன்றவர் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இவர்களின் ஓர்பாலின விருப்பம் ஒரே ஆணுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் இவர்களுக்கு தேவைப்படுகிறது ?

திருமணம் செய்து கொள்ளும் ஆண்பெண் இருவரும் ஓரின புணர்ச்சியாளர்களைப் போலவே வேறொருவரை நாடுவதில்லையா ? நாடுவார்கள். அது அவர்களின் தனிமனித ஒழுங்கீனம், அப்படி செய்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே.

********

மனநோய் இல்லை என்றாலும் சுயநலம் என்பதின் உச்சம் தான் ஓரின பால் தொடர்பு, அதாவது தான் விரும்பிய வாழ்கையை மட்டுமே வாழ்வது. அதையேன் சுயநலம் என்று சொல்கிறேன் ? பாலியல் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்வு முறையையே மாற்றி சமூகத்துக்கு பயனளிக்காமல் வாழ்வது சுயநலமின்றி வேறென்ன ? அவர்களால் பிறருக்கு கெடுதல் இல்லை என்றாலும் இவை முழுக்க முழுக்க பாலியல் தேவையை மட்டுமே சார்ந்து, அதன் பிடிப்பில் மையத்தில் வாழ்வதாக மட்டுமே இருக்கிறது.

நட்பையும், பாலியல் தேவையையும் ஒன்றாக குழப்பிக் கொள்வது இவர்களின் குறையாக தெரிகிறது. இந்த ஓரின பாலினருக்கு (அதில் நாட்டமில்லாத) நல்ல நெருங்கிய அதே பாலின நண்பர்(கள்) இருப்பார்களா என்பதும் சந்தேகமே, அப்படி இருந்தாலும் அந்த ஓர் பாலின நாட்டமில்லா நண்பர்கள் இவர்களிடம் (ஓர் பால் ஈர்பாளர்களிடம்) எச்சரிக்கையாகத்தான் நடந்து கொள்வார்.

முடிவாக, ஒரு பாலின ஈர்ப்பு, ஒர் இனக் கவர்ச்சி என்ற எந்த பெயரில் சொன்னாலும் ஓரின சேர்க்கையை முற்றிலும் தவறு, மனநோய் என்றும் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதெலலம் கேலிக் கூத்துதான். அதன் தேவை இல்லாமலே, எந்தவித சமூக அங்கீகாரமும் இல்லாமல் இவர்களால் அதைத் தொடரமுடியும். ஆண்பெண் இருபாலருக்கான சமூகம் ஆக்கி இருக்கும் திருமணம் என்கிற சடங்கை இவர்களும் செய்து கொள்வோம் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்பதே என்கருத்து.

தொடர்புடைய சுட்டி : ஓரின கலப்பு திருமணம் (Gay Marriage)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்