அன்பு சகோதரர் சுவனப்பிரியன் நித்தியா நந்தாவால் இந்து மதம் பாழ்பட்டுவிட்டது இனி என்ன செய்யப் போகிறீர்கள் இந்து நண்பர்களே ? என்ற கேள்வி கேட்டு என்னையும் இன்னும் சிலரையும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதில் சென்றப் பதிவில் சொல்லியாகிவிட்டது, இந்தப் பதிவில் அதையே பேச ஒன்றும் இல்லை, இருந்தாலும் சுவனப்பிரியரின் அந்த ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நித்தியாநந்தாவின் கடந்த கால ஆன்மிக வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரைத்தான் ஒரே இந்து நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக் கொண்டும் தன்னையும் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் பக்தராக இணைத்துக் கொண்டு தன் பெயரை சுவனாநந்தா என்று மாற்றிக் கொள்ள இருந்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது, இடையில் ரஞ்சிதா - நித்தியாநந்தா கசமுசா நடந்த பிறகு தனது ஒரே நம்பிக்கையும் வீழ்ந்துவிட தனது கவனத்தை வஹாபிய பிரச்சாரங்களில் சுவனப்பிரியன் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடும், பின்னர் நித்தி போனால் சுத்தி என்று மதுரை ஆதினத்தின் பக்கம் சுவனம் கவனம் திருப்பி இருந்த வேளையில் தான் நித்தி அங்கும் நுழைய இந்து மதம் முற்றிலும் சீரழிந்துவிட்டது இனி ஒருவராலும் அதனை சீர்படுத்த முடியாது என்றே வெகுண்டெழுந்திருக்கிறார், இவரே இந்து மதத்திற்கு இறுதி இறைத்தூதர் ஆகி இருக்கலாம். அதைவிடுத்து பின்ன என்ன சார் ? அவர் அன்றாடம் வஹாப்பிய மார்க்கத்தில் வடிவது தேன் என்றும் பிற மதங்களில் வடிவது வேப்பெண்ணை என்றே பிரச்சாரம் செய்த வேளையில் வேப்பெண்ணையில் எலிப்புளுக்கை இருந்தால், எருக்கம்பால் கலந்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று அவர் போய் இருக்க வேண்டியது தானே ? எதற்கு இவருக்கு அப்படி ஒரு அக்கரை இருந்திருக்க வேண்டும், ஒரு வேளை சுவனாநந்தா ஆக இருந்த முயற்சிச் தோற்றதால் எழுந்த ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஆகியவை தான் அவரை அவ்வாறு எழுது வைத்தது என்று கொள்ளலாமா ?
சென்ற பதிவில் நான் கேட்டிருந்த எந்த ஒரு கேள்விக்கும் அவரால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை, ஜைனைப் திருமணம் உலக நடைமுறைக்கு எதிராக இருந்ததால் தானே அல்லாவால் அந்தத் திருமணத்தை தற்காத்து குரான் வசனாமாகப் பேச முடிந்தது என்று கேட்டால் அவரிடம் பதிலே இல்லை, மாற்றான் மனைவியை பெண்டாள்வதே மாபெரும் குற்றம் என்பதை மையக் கருத்தாக வைத்து சம்பூர்ண இராமயணம் முதல் கம்பராமயணம் வரை இங்கே படைக்கப்பட்டு அவற்றை (மாற்றன் மனைவியை கவர்வது) குற்றமாக பார்க்கும் எங்கள் சமூகத்திற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று கேள்வியை முன் வைத்ததற்கும் பதில் சொல்லாமல் தசரதன் அறுபதாயிரம் மனைவியைக் கட்டவில்லையா ? அதை ஒப்பிட எங்கள் சமயத் தலைவர் செய்தது அற்பம் சொற்பம் என்று தொடர்பற்று பதில் சொல்லி இருக்கிறார். மாற்றான் அல்லது மகனுடைய மனைவியை தாரமாக்கிக் கொள்வதும் ? பல தார திருமணம் ஒன்றா ? தவிர தறுதலை அப்பன் தசரதனுக்கு மகன் அவ்வாறு இல்லை என்று முரண்பட்ட வேறுபட்ட வழியைக் காட்டுவது தானே இராமயணம், நான் இங்கே இராமனின் புகழ்பாடவோ இராமயணத்தை இந்திய நம்பிக்கைக் குரிய வேதம் என்று முன்னிலைப் படுத்தவோ நான் இதைக் கூறவில்லை, இராமயணத்தில் எனக்கும் பல விமர்சனங்கள் உள்ளன. தசரதன் 60 ஆயிரம் மனைவிகளை உடையவன் என்பதால் இங்கே யாரும் அவனைப் போற்றுவதும் இல்லை.
இளம் வயது திருமணங்கள் பிற சமூகங்களில் திருட்டுத்தனமாக நடக்கிறது என்று நாம் ஒப்புக் கொண்டாலும் உங்கள் மதத்தில் இன்றும் அவ்வாறு நடப்பதை தடுக்கும் சரியத் சட்டம் எதுவும் இல்லையே ? உங்கள் மத வழிகாட்டல் காலத்திற்கும் பொருத்தமானது என்று எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள், அவற்றை எதிர்க்கும் சட்டங்களையும் உங்களவர்கள் எதிர்க்கிறார்களே என்று கேட்டால் எந்த பதிலும் இல்லை. இவர் அபத்தமாக சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அவர்களுக்கு 6 வயதில் திருமணம் செய்து ஒருவருக்கு சொந்தமாக்குவது தான் நல்வழி என்று எங்கள் மதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்திருக்கிறது, அதைப் பின்பற்றினால் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் தொடராது என்று கூறாமல் விட்டது நமக்கு ஆறுதல்.
திரு சுவனப்பிரியன் தொடர்ந்து இஸ்லாத்தில் சாதி இல்லை என்று பிரச்சாரம் செய்யவும் இந்திய சமயங்களை தூற்றவும் பல்வேறு நாளிதழ்களில் இடம் பெறும் சாதி கலவரம் குறித்து எடுத்துப் போட்டு கருத்துரைக்கிறார், பகவத் கீதையைப் போலவே கோத்திரங்களையும் மனிதப் பிரிவுகளையும் படைத்ததாகப் குரானில் (அல்லா) பறைசாற்றுவது வேறு தகவல், தவிர இவர்களது சியா - சுன்னி வகுப்பு / இன வாதக் கலவரங்களும் அதன் பொருட்டு நடக்கும் அன்றாட மசூதி குண்டுவெடிப்புகளும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாளிதழ்களில் செய்தி ஆகிறது, இது குறித்துக் கேட்டால் இஸ்லாமியத் தவறு இஸ்லாத்தின் தவறு இல்லை என்றே கூறுவார். பின்பு இஸ்லாமிய சட்டங்கள் எவருக்காக எழுதப்பட்டது ? யார் பின்பற்றுகிறார்கள் என்று கேட்டால் பதிலும் வராது, யாரும் பயன்படுத்தாத / நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று நல்லத் திட்டம் என்று கூறினால் அது திட்டம் என்ற அளவில் மட்டுமே, அதைப் பயன்படுத்தி யாரும் பயன்பெற்றிருந்தால் அவற்றைப் பற்றி எதேனும் புகழ்ச்சியாகக் கூற முடியும். தூரத்து பச்சை பார்க்க அழகாக இருக்கும், அழகு என்ற அளவில் அதை ரசிகலாம், ஆனால் நுகர முடியாது, அது போன்றதே இவர்கள் புகழ்ந்து பேசும் சட்டங்கள் யாவும், அவர்களே அதை மதித்து நடக்காத போது அது குறித்து இவர்கள் பிரச்சாரம் செய்வதால் ஏதேனும் பலன் உண்டா ?
- 1) ஷேக்
- 2) சையது
- 3) தக்னி முஸ்லிம்
- 4) அன்சார்
- 5) தூதுகோலா
- 6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
- 7) மாப்பிள்ளா
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(நன்றி அஸ்மா)
இந்திய சாதிகள் தலித்துகளை மிகவும் தாழ்வாக நடத்துகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை தான். அவர்கள் இஸ்லாமுக்கு மாறி ஒன்றும் மேம்படவில்லை, என்பதை ரசூல் போன்றவர்கள் எழுதியுள்ளனர். ஏழைக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் எந்த மதமும் இறங்காது, மாறாக இந்திய சாதிகளில் பார்பனர்களை ஓரங்கட்டி பல சாதிகளும் வளர்ந்துள்ளன, ஒரு வன்னியனிடமோ, நாடாரிடமோ சென்று நீங்கள் பார்பனரைவிட தாழ்ந்தவரா ? என்று கேட்டால் செருப்பைக் காட்டி மறுப்பார்கள். ஒரு ஷியா முஸ்லும் சுன்னி முஸ்லாமாகவோ, சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமாக மாற வழியே இல்லாத உங்கள் மார்க்கத்தில் நீங்கள் சாதியைக் கடந்தவராக பிரகனப்படுத்துவது எவ்வாறு ? உங்களது தலித் மதமாற்றம் பித்தலாட்டம் என்பதால் தான் அம்பேத்கார் பெளவுத்த மதத்திற்கே மாறினார்.

இஸ்லாம் மறுமண மற்றும் பெண்களுக்கான சொத்து உரிமையைத் தந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், அந்த உரிமை அரேபிய பாலைவனங்களில் ஏற்கனவே இருந்தது முகமதுவிற்கு அல்லாவின் வஹி கிடைப்பதற்கு முன்பே அவர் விதவையாக இருந்த கதீஜாவை மணந்துள்ளார், கதீஜாவிற்கும் தந்தைவழி சொத்துகள் இருந்ததால் அவரால் ஒரு வியாபாரியாக இருந்திருக்க முடிந்திருந்தது, என்று நண்பர்கள் சிலர் பதிலும் சொல்லி இருக்கின்றனர், ஏற்கனவே இருந்த நடைமுறையை சட்டமாக்கி இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்,. அதுவும் நடைமுறையில் இருக்கிறதா ? என்று கேட்டால் பழையபடி இஸ்லாமியரின் தவறுகள் இஸ்லாமிய சட்டத்தவறுகள் இல்லை என்றே பதில் வரும். நாகூர் நிலவரம் நமக்கு ஓரளவு தெரியும் என்றாலும் கீழக்கரையில் கூலித் தொழிலாளிக்கும் 10 லட்சம் வரதட்சனைக் கொடுத்தால் தான் இஸ்லாமிய பெண்களுக்கு திருமணங்கள் நடக்கும் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது, இவர்களைக் கேட்டால் பெண்ணுக்கு மகர் கொடுப்பது தான் இஸ்லாத்தின் வழக்கம் என்பார்கள், இந்த வழக்கத்தைப் பின்பற்றுபவர் யார் ? இவர்களின் வரதட்சனை வழக்கத்தை மகருக்கு மாற்றும் முயற்சியில் தான் இருக்கிறோம் என்பார்கள், அதை முதலில் இஸ்லாமியர்களிடம் செய்யாமல் அதை பிரச்சாரம் ஆக்குவது ஏன் ? தவிர தந்தை வழிச் சொத்துரிமையும், வரதட்சனைக் கேட்பவர்களுக்கான தண்டனையும் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டச் சூழலில் அதில் இந்தியர்களுக்கு இஸ்லாத் புதிதாக பரிந்துரைக்க என்ன இருக்கிறது ? தவிர அதைப் பின்பற்ற வேண்டியவர்கள் இஸ்லாமிய ஆண்கள் அல்லவா ?
இவரின் நண்பர்கள் மிகவும் அபத்தவாத சிந்தனையாக
"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..!நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?
போரில் அகதியான அடிமைப் பெண்ணை (வலக்கரம் சொந்தமாக்கிக் கொள்ள என்று அவர்களுக்குள்ளேயே புரியாதபடியெல்லாம் எழுதிவார்கள்) அடிமையை விருப்பம் போல் அனுபவிக்கலாம் என்பதே இவர்களுக்கு ஹதீதியா குரானிய வழிகாட்டால், இந்த சிந்தனையில் சற்று மாற்றி இவர்களுக்கு ஏற்பாக இருக்கும் பலதார மறுமணத்தை ஈழ விதவைகளுக்கு இவர்கள் பரிந்துரைக்கிறார்கள், விதவைகளுக்கான மறுவாழ்வு இளைஞர்கள் மனவுவந்து அவர்களை மணக்க வேண்டும் என்பது தான் பொதுவான பரிந்துரை அன்றி அவர்களில் பலரையும் மணந்து கொள்ளுங்கள் என்பது அபத்தவாத மூளையற்ற சிந்தனையின் பரிந்துரையாக இருக்க முடியும், தவிர ஒரு இளைஞனின் வருமானம் நிரந்தரமாக இருக்க முடியாத இன்றைய சூழலில் பல பெண்களை மணந்து எவ்வாறு காப்பற்ற முடியும் ?, இதற்கும் மாற்றாக அந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் தனியார் நிறுவனமும், அரசு நிறுவனங்களும் முன்னுரிமை தரவேண்டும் என்று பரிந்துரைப்பது தான் நல்வழி. அப்படியென்றால் அவளுக்கு ஆண் துணையோ ? ஆண் இன்பமோ தேவை இல்லையா ? என்று கேட்டால் சொல்ல அறுவெறுப்பாக இருந்தாலும் பல தாரம் மணம் செய்து கொண்ட பெண்களின் பாலியல் வேட்கை என்றோ ஒருநாள் வந்து போகும் கணவரால் தீர்ந்துவிட்டதா ? என்று கேட்டு அது குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவை குறித்த பரிந்துரைகள் கடுமையான கண்டனத்துகுரியது ஆகும், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உடல் சுகத்திற்காக ஈடுபடுகிறார்கள் என்கிற கருத்துகள் புறந்தள்ளக் கூடிய நிலையில், அவர்களை பல தார மணத்தில் ஈடுபடுத்தலாம் என்று சொல்வது குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதே. அவர்களுக்கு மாற்று நல்ல வேலையும், விதவையை மணக்க வரும் இளைஞர்களும் அன்றி வேறெந்த தீர்வும் சிறப்பானதாக இருக்க முடியாது.
இதையெல்லாம் விட அரேபிய நாடுகளில் இன்றைய தேதிக்கு போரில் (ஈராக் தவிர்த்து) விதவையாக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் ? சவுதி உள்ளிட்ட மன்னர் பரம்பரைகள் விதவைகளைத்தான் மணந்து விதவை நல்வாழ்வு என்கிற ரீதியில் முழக்கப்படும் இஸ்லாமிய தீர்வைச் செயல்படுத்துகிறார்களா ? மன்னர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் விதவையான பிறகு அவர்களுக்கு மறுமணம் நடப்பில் உள்ளதா ? மன்னர்களைவிடுத்துப் பார்த்தாலும் அரேபிய ஷேக்குகள் பண ஆசைக் காட்டி இந்திய ஹைத்ராபாத்தில் மணந்து கொண்டு பின்னர் மோகம் தீர்ந்ததும் கைவிட்டு செல்லும் பெண்களில் எத்தனை பேர் விதவைகள் ? அவர்கள் முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டே பின்னர் மறுமணம் செய்து கொடுக்கப்படுகிறார்களா ? நீங்கள் பெருமையானதாகக் கூறும் முத்தலாக்கை குறிப்பிட்ட காலங்களில் முறையாக செய்து மணவிலக்கு பெற்றுக் கொண்டோர் எத்தனை பேர் ? யாருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைமுறைப்படுத்தாத மேலும் ஒரு இஸ்லாமிய சட்டமாகத்தான் அவை பெயரளவில் தான் இருக்கிறது. அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தும் கண்காணிப்பை நீங்கள் செய்துவருகிறீர்களா ? உங்களையெல்லாம் ஈழ விதவைகளுக்கு பலதார மறுமணம் பரிந்துரைக் கேட்டு உங்களிடம் ஒப்பாறி வைத்தவர் யார் ? அவர்களுக்கு உங்கள் மதத்தினர் பல தாரமணத்தில் செய்யும் தில்லுமுல்லுகள் தெரியுமா ? இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத உங்களின் பரிந்துரைகளில் மதவெறியும், மதப்பிரச்சாரமும் அன்றி வேறெதுவும் தென்படவில்லை. பணம் படைத்தவனின் மேம்பட்ட காம இச்சைகான வடிகால் என்பதைத் தவிர்த்து பல தார மணத்தில் பெண்களுக்கான தீர்வு என்ன ? காசு இருக்கும் போது அவளை மணந்து அவளுக்கு ஒரு வயிற்றுப் பிள்ளையை / களைக் கொடுத்துவிட்டு, அவர்களை தெருவில் விட அவர்கள் சமூகக் குற்றவாளியாகும் நிலையைத் தான் ஏற்படுத்தும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் ? உங்கள் பலதார மண பரிந்துரையில் முதல் மனைவியின் விருப்பம் பற்றி ஏதேனும் வழிகாட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா ? எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு எண்ணற்ற மனைவிகள் இருப்பதை பெருமையாகக் கருதுவாளா ? எந்த ஒரு இந்தியத் தகப்பனும் தன் மகள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படப்போவதை பெருமையாகக் கூறிக் கொள்வானா ? பணக்காரனுக்கு சலுகைக் கொடுத்து வளைந்து கொடுக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் பணக்காரன் பலமனைவிகளை மணந்து கொள்ளலாம் (பெண்களை பணயம் வைக்கலாம்) என்ற உங்கள் மதப்பரிந்துரைகளுக்கும் வேறுபாடுகள் என்ன ?
திருவாளர் சுவனப்பிரியன் அவர்களே, நீங்கள் அடிக்கடி அரைகுறையாக கூவும் குரானுக்கு மாற்றான மேம்பட்ட வசனம் இவ்வுலகில் எழுதப்படவில்லை என்கிற கூற்றை யாரும் மறுக்கவே இல்லை என்று மார்தட்டிவருகிறீர்கள். இவற்றை பலர் கேட்டு நகைத்துச் சென்றதால் உங்களுக்கு உரிய பதில் கிடைக்காமல் போய் இருக்கும்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று என்றோ ஐய்யன் திருவள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சமமாகவே கருதப்படவேண்டும் என்கிற வழிகாட்டல் தான் அது, பெண்களையே மனிதனாக மதிக்கத் தெரியாத உங்களுக்கு பிற உயிர்களும் சமமாக மதிக்கப் பரிந்துரைப்பதில் ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும் உங்களுக்கு சுட்டிக் காட்டவே விரும்புகிறேன், எந்த ஒரு உயிரையும் கொன்று போடும் உரிமை உங்களுக்கு கிடையாது, உணவுக்காகக் கொல்லுவதையும் என்பெயரில் (அல்லாவின் பெயரில்) செய்யுங்கள் என்கிற வழிகாட்டலும் பிற உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து மறைமுகமாக இருப்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கமாட்டீர்கள், அதை நேரிடையாக வெளிப்படையாகவே 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி எல்லா உயிர்களும் மதிப்பில் ஒன்றே என்றார் ஐய்யன் திருவள்ளுவர், இதற்கு நேரிடையான வசனத்தை உங்கள் மார்க்கத்தில் இருந்து எடுத்துக்காட்டி முடிந்தால் அதைப்பரப்ப முயற்சி செய்யுங்கள்.
நானும் இதுவரை யாரும் சொல்லாத வசனம் ஒன்றை உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன், இதைவிட சிறந்த வசனம் உங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தால் கொண்டுவாருங்கள்.
நீங்கள் உங்கள் உடன்பிறந்தாளுக்கு , மகளுக்கு செய்ய விரும்பாததைப் பிற பெண்களுக்கு பரிந்துரைக்காதீர்கள்
உங்களுக்கு இதற்கான விளக்கம் ப்ராக்கெட் போட்டால் தான் புரியும் என்பதால்,
நீங்கள் உங்கள் உடன் பிறந்தாளுக்கு (அக்காள் மற்றும் தங்கைகளுக்கு) , மகளுக்கு செய்ய விரும்பாததை (பலதார அல்லது சிலதார மணத்தை) பிற பெண்களுக்கும் (பல தார அல்லது சில தார திருமணத்தை) பரிந்துரைக்காதீர்கள்
********
இதை எப்படி முடிக்கிறது ? தென்னை மரம் , பசுமாட்டுக் கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது.
இஸ்லாமின் கொள்கைகள் சிறப்பாக இருந்தும், நடைமுறையில் பயன்படுத்த முடியாது என்பதால் தான் சுவனப்பிரியன் சுவனநந்தாவாக மாற இருந்து நித்தி - ரஞ்சிதா கசமுசாவால் கெட்டுவிட்டதா ? என்றே நினைக்கத் தோன்றுகிறது. சுவனப்பிரியன் விரும்பினால் தாய் மதம் திரும்பலாம், அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனுக்கு பூணூல் அணிவித்து தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.
போங்க சார், ஐந்து வேளைத் தொழுகையை சிறப்பாக செய்யுங்கள், நீங்கள் விரும்பும் சுவனக் கன்னிகைகள் உங்களுக்கு காத்திருக்கிறார்கள், அதைவிடுத்து தேவையற்ற சர்சைகளாக கொள்ளர் தெருவில் துருப்பிடித்த ஊசியை விற்றுக் கொண்டு உங்கள் நேரங்களை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், 'தீர்ப்பு நாள் சமீபமாக, உள்ளது அதற்கான அத்தாட்சிகளை அல்லா தொடர்ந்து வெளிப்படுத்துக் கொண்டுள்ளான், இந்த இனிய பிறவியை, வீண் விவாதங்களில் வீனாக்கலாமா ?'
பிகு : நான் இஸ்லாமிய மதத்தை நான் இங்கு இழிவு படுத்தும்படி எதையும் எழுதவில்லை, அவர்களின் நடைமுறைகளில் உள்ளவற்றைச் சுட்டியுள்ளேன், தவிர உலகில் 20 விழுக்காட்டினரின் நம்பிக்கை என்பதை உணர்ந்துள்ளதால், அவர்களது வழிகாட்டி முகமதுவையோ, குரானையோ நான் போற்றாவிட்டாலும் தூற்ற நினைத்தது இல்லை, உங்க பாணியில் சொல்ல வேண்டுமென்றால் நான் இஸ்லாத்தைக் குறை கூறவில்லை, இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.
உங்களில் (தமிழக / இந்திய இஸ்லாமியர்கள்) பெரும் விழுக்காட்டினர் ஒரே திருமணத்தில் நம்பிக்கைக் கொண்டு நிலைத்திருப்பதும் உங்கள் மதம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடு இல்லை, அது இங்கேயே வழிவழிவரும் பண்பாடு அல்லது தனிமனித ஒழுக்கம் சார்ந்தவையே, அரபு நாடுகளில் அவ்வாறு இல்லாது பெண்கள் போகப் பொருளாக்குவது கண்டு உங்கள் அறிவுரைகளை பண்பாடுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்
இன்ஷா அல்லா, 'இவர்களுக்கு சாந்தியும் சமாதனமும் என்னேரமும் கிட்டினால் இவர்கள் சிந்தனை இறை நாட்டம் தவிர்த்து தேவையானவற்றதில் மூக்கு நுழைக்காது.
நாடூவீர் ஏக இறைவன் !
உங்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டுவதும், பாறைமுன் திருக்குறள் அறத்துப் பால் விளக்கவுரை பேசுவதும் ஒன்றே என்பது தெரியும், இருந்தாலும் உங்கள் நச்சுப் பிரச்சாரங்களில் என்னையும் இழுத்தால் இதனை பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதினேன், உங்கள் மீது எங்கேயாவது தனிப் பட்ட தாக்குதல் இருந்தால் குறிப்பிடவும்.