இறைவன் நேரடியாக அனைவருக்குமே உதவ முடியாது என்பதால், பெற்றோர்கள் வழி, குறிப்பாக அன்னையர் வழியாக அதனைச் செய்கிறான் என்று பெற்றோரின், அன்னையிரின் பெருமை தன்னை சிறப்பாகச் சொல்வதுண்டு.
தாய்மை உயர்வு தான், அதைவிட எல்லோரையும் தன் மக்களைப் ( குழந்தைகள்) போல் பரிவு காட்டும் தாய்மை உயர்விலும் உயர்வு, வேறெந்த மதத்தைக் காட்டிலும் பெண்ணிற்கு உயரிய மதிப்பு அளித்து, அவர்கள் மூலம் நல்லொதொரு சமூக, ஆன்மீகச் சேவை செய்துவரும் மதம் என்பதால் கிறித்துவ மதத்தின் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. தன்னலமற்ற உன்னத சேவைக்காக தன்னையே அற்பணித்துக் கொள்ளும் எண்ணற்ற கிறித்துவ சகோதரிகள் வெள்ளை ஆடையில் செல்வதைப் பார்க்கும் பொழுது, என்னை தேவதைகள் கடந்து போவது போலவே உணர்வேன்.
பெண்களின் வாழ்கையை கணவன், குழந்தைகள் என்று சுறுக்கி வைத்திருக்கும் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அனைவருக்கும் வாழும் அன்னையராகவே இவர்களை கருதுகிறேன். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவது என்று கொச்சையாக பிற மதத்தினரால் ஏசப்பட்டாலும், அந்த அன்னையர்கள் எண்ணங்களில் இருப்பது கிறித்துவம் என்கிற மதம் அல்ல, இறைவனிடம் அன்பு கொண்ட அடியார்கள் இறைவன் குறித்தான தங்கள் சேவையை எப்படி இறைப்பணி என்று நினைக்கிறார்களோ அதைத்தான் அந்த சகோதரிகளும், அன்னையர்களும் நினைக்கிறார்கள்.
உலகுக்கு ஒரு அன்னையைக் காட்ட எந்த மதத்தாலும் முடியாதபோது, மதங்களைக் கடந்தவராக உலக மக்களின் அன்பைப் பெற்றவராக அன்னை தெரசா ஒளிர்ந்து நின்றார்.
அவரைப் போலவே எண்ணிலடங்காத கிறித்துவ சகோதரிகள் தங்களின் முழுவாழ்க்கையை இறைவனின் சேவையாளர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். அதில் ஒருவராக அன்னை அல்ஃபோன்ஸா இருந்திருக்கிறார், தனது ஊனமுற்ற காலையும் பொருட்படுத்தாது கேரள பகுதியில் 39 வயது வரை வாழ்ந்து சிறப்பான சேவை ஆற்றி மறைந்திருக்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் இந்திய கிறித்துவர்களுடன் சேர்ந்து இந்தியர்களும் பெருமை பட வேண்டிய ஒன்று, நான் பெருமை படுகிறேன்.
*********
நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும், கால்டுவெல் ஐயர் போன்ற பாதிரிமார்கள் வந்திருக்காவிட்டால் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள், தமிழும் வடமொழியில் இருந்து பிறந்த நீச பாசை என்று கூறும் தமிழ்தூற்றிகளின் ஏச்சுக்களை உண்மை என்று நம்பி குறுகிக் கொண்டு இருந்திருப்போம்.
நல்ல வேளை பாமரன் கல்வி பெற்றதும், தமிழர்கள் தெளிவடைந்ததும் கிறித்துவம் இம்மண்ணில் வேர் ஊன்றியதால் கிடைத்த பெரும் பயன்கள்.
என்னைப் பொறுத்து கல்வி தரும் கலைச் செல்வி சரஸ்வதியாக தெரிபவர்கள், தூய வெள்ளையாடையில் அதைச் சிறப்பாகச் செய்யும் கிறித்துவ சகோதரிகள் மட்டுமே.
இந்தியாவெங்கும் பாமரர்கள் மட்டுமே கல்வி பெறவில்லை, ஒரிசா போன்ற மாநிலங்களில் கிறித்துவ சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒவ்வொரு இந்துத்துவ வெறியனும் கூட எதாவது ஒரு கிறித்துவ பள்ளியில் ஆரம்பக் கல்வியோ, உயர்நிலை கல்வியோ பெற்று இருப்பான். இந்துத்துவ கேடுகெட்ட ஜென்மங்களின் தகாத செயல், தங்களது சொந்த சகோதரியையை தானே பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற மன்னிக்க முடியாத இழிசெயல். (முற்றிலுமே நிதானம் இழந்து ஒரு இந்து சகோதரியை கிறிதுவ கன்னிகாஸ்திரி என்று நினைத்து வண்புணர்ந்து இருக்கிறார்கள்)
*******
தமிழக மண்ணிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் தன்மானத் தமிழர்கள் என்றோ, பெரியார் பூமி என்றோ சொல்லிக் கொள்வதில் பெருமை கிடையாது, அதன் பிறகு எல்லா சாக்கடைகள் போலத்தான் நாமும் என்று நினைத்துக் கொள்வோம்.
இந்துத்துவ வாதிகளின் இழிவினால் சிறுமை அடையும் நிலை நம்மீது(ம்) திணிக்கப்படாமல் தடுப்போம்.
தாய்மை உயர்வு தான், அதைவிட எல்லோரையும் தன் மக்களைப் ( குழந்தைகள்) போல் பரிவு காட்டும் தாய்மை உயர்விலும் உயர்வு, வேறெந்த மதத்தைக் காட்டிலும் பெண்ணிற்கு உயரிய மதிப்பு அளித்து, அவர்கள் மூலம் நல்லொதொரு சமூக, ஆன்மீகச் சேவை செய்துவரும் மதம் என்பதால் கிறித்துவ மதத்தின் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. தன்னலமற்ற உன்னத சேவைக்காக தன்னையே அற்பணித்துக் கொள்ளும் எண்ணற்ற கிறித்துவ சகோதரிகள் வெள்ளை ஆடையில் செல்வதைப் பார்க்கும் பொழுது, என்னை தேவதைகள் கடந்து போவது போலவே உணர்வேன்.
பெண்களின் வாழ்கையை கணவன், குழந்தைகள் என்று சுறுக்கி வைத்திருக்கும் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அனைவருக்கும் வாழும் அன்னையராகவே இவர்களை கருதுகிறேன். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவது என்று கொச்சையாக பிற மதத்தினரால் ஏசப்பட்டாலும், அந்த அன்னையர்கள் எண்ணங்களில் இருப்பது கிறித்துவம் என்கிற மதம் அல்ல, இறைவனிடம் அன்பு கொண்ட அடியார்கள் இறைவன் குறித்தான தங்கள் சேவையை எப்படி இறைப்பணி என்று நினைக்கிறார்களோ அதைத்தான் அந்த சகோதரிகளும், அன்னையர்களும் நினைக்கிறார்கள்.
உலகுக்கு ஒரு அன்னையைக் காட்ட எந்த மதத்தாலும் முடியாதபோது, மதங்களைக் கடந்தவராக உலக மக்களின் அன்பைப் பெற்றவராக அன்னை தெரசா ஒளிர்ந்து நின்றார்.

*********
நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும், கால்டுவெல் ஐயர் போன்ற பாதிரிமார்கள் வந்திருக்காவிட்டால் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள், தமிழும் வடமொழியில் இருந்து பிறந்த நீச பாசை என்று கூறும் தமிழ்தூற்றிகளின் ஏச்சுக்களை உண்மை என்று நம்பி குறுகிக் கொண்டு இருந்திருப்போம்.
நல்ல வேளை பாமரன் கல்வி பெற்றதும், தமிழர்கள் தெளிவடைந்ததும் கிறித்துவம் இம்மண்ணில் வேர் ஊன்றியதால் கிடைத்த பெரும் பயன்கள்.
என்னைப் பொறுத்து கல்வி தரும் கலைச் செல்வி சரஸ்வதியாக தெரிபவர்கள், தூய வெள்ளையாடையில் அதைச் சிறப்பாகச் செய்யும் கிறித்துவ சகோதரிகள் மட்டுமே.
இந்தியாவெங்கும் பாமரர்கள் மட்டுமே கல்வி பெறவில்லை, ஒரிசா போன்ற மாநிலங்களில் கிறித்துவ சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒவ்வொரு இந்துத்துவ வெறியனும் கூட எதாவது ஒரு கிறித்துவ பள்ளியில் ஆரம்பக் கல்வியோ, உயர்நிலை கல்வியோ பெற்று இருப்பான். இந்துத்துவ கேடுகெட்ட ஜென்மங்களின் தகாத செயல், தங்களது சொந்த சகோதரியையை தானே பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற மன்னிக்க முடியாத இழிசெயல். (முற்றிலுமே நிதானம் இழந்து ஒரு இந்து சகோதரியை கிறிதுவ கன்னிகாஸ்திரி என்று நினைத்து வண்புணர்ந்து இருக்கிறார்கள்)
*******
தமிழக மண்ணிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் தன்மானத் தமிழர்கள் என்றோ, பெரியார் பூமி என்றோ சொல்லிக் கொள்வதில் பெருமை கிடையாது, அதன் பிறகு எல்லா சாக்கடைகள் போலத்தான் நாமும் என்று நினைத்துக் கொள்வோம்.
இந்துத்துவ வாதிகளின் இழிவினால் சிறுமை அடையும் நிலை நம்மீது(ம்) திணிக்கப்படாமல் தடுப்போம்.