பின்பற்றுபவர்கள்

11 அக்டோபர், 2008

வாய்விட்டு சிரிங்க... (இராதா கிருஷ்ணன் ஐயாவுக்காக)

புண்ணியகோடி : என்ன சொல்றிங்க, உங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கிடைப்பது ஆற்காட்டாரின் அருளால் கிடைத்த புண்ணியமா ?

தெய்வசிகாமணி : ஆமாம், இப்போதெல்லாம் மெகாசீரியல் ஓடும் போது எப்போ கரண்ட் போகும் என்பதே தெரியாததால் வீட்டில பார்பது இல்லை, டயத்துக்கு சமைச்சிடுறாங்க

*******

இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்

சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க

இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா

********

கமலா : அவன் ப்ளாக் எழுதுறவன் என்று எப்படி கண்டு பிடிச்சே

விமலா : மி த பர்ஸ்ட் ? என்னு கேள்வியாக பார்த்து ரோஜாப்பு கொடுத்துட்டு ஐ லவ் யூங்கிறாண்டி.

********


தமிழரசி : உன் கணவர் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கிறாராதா சொல்லி ஆறுவருசமாக ரொம்ப கொடுமை படுத்துறதா சொல்றியே, வெளங்கல

செல்வி : பெரும் ரோதனையாகப் போச்சு, வெங்காயம் உறிச்சா என் கண் கலங்கிவிடுமாம் அதனால் வெங்காயமே வாங்காமல் இந்த ஆறுவருசமாக ஓட்டிட்டார்.

6 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆகா!

ALIF AHAMED சொன்னது…

மி த 2 ?

:)

விஜய் ஆனந்த் சொன்னது…

:-))))....

சின்னப் பையன் சொன்னது…

:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ராதாகிருஷ்ணன்- நம்ம வாய் விட்டு சிரியுங்க..இனிமே எடுபடாது
காஞ்சனா- ஏன் அப்படி சொல்றீங்க?
ராதாகிருஷ்ணன்-கோவி வேற ஆரம்பிச்சுட்டாரே!!!
:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
ராதாகிருஷ்ணன்- நம்ம வாய் விட்டு சிரியுங்க..இனிமே எடுபடாது
காஞ்சனா- ஏன் அப்படி சொல்றீங்க?
ராதாகிருஷ்ணன்-கோவி வேற ஆரம்பிச்சுட்டாரே!!!
:-))))
//

'அட.. அசத்தல் !' போட வச்சிட்டிங்க, சும்மா... சும்மா... உங்க பாணியில் எழுதிப் பார்த்தேன். நாலு எழுதறத்துக்குள் நாள் முழுவதும் யோசிக்க வேண்டியதாகப் போச்சு. நகைச்சுவை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. மண்டை காயுது. உங்கள் வழியில் குறுக்கிட மாட்டேன். :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்