பின்பற்றுபவர்கள்

நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூன், 2013

பாமெண்ணையால் வந்த வினை !

செய்திகளில் படித்திருப்பீர்கள், கடந்த மூன்று நாட்களாக கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் புகைமூட்டம், ஜூன் மாதம் துவங்கி அக்டொபர் வரையிலும் இந்த பகுதிகளில் புகைமூட்டம் இருக்குமாம், இந்தோனேசியா சுமத்திரா தீவில் காட்டுத்தீ 'ஏற்படும்' அதனால் தான் புகை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறேன், வெயில் காலத்தில் காட்டில் தீ பற்றுவது இயல்பு, அது காட்டுத்தீயாக பரவி புகை மூட்டம் கிளம்பும் போல என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். 

சிங்கப்பூர் துவங்கி மலேசியா கோலாலம்பூர் நோக்கிய பேருந்து பயணத்தில் வழியெங்கும் பாம் எண்ணை மரங்களைக் காணலாம், ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் காட்டுப்பகுதிகளை அழித்து தான் அவை உருவாக்கியுள்ளனர் என்பது அவற்றைப் பார்க்கும் பொழுதே விளங்கிக் கொள்ள முடியும். தென்னை மரங்களைவிட பாம் எண்ணை மரங்கள் மகசூல் மிகுதியாகக் கொடுத்து முதலாளிகளுக்கு மிகுதியான பணம் ஈட்டித்தருவதால் மலேசியாவில் கிட்டதட்ட பாதி நாட்டு பரப்பளவில் பாமாயில் விவாசயம் தான். 

கடந்த மூன்று நாளில் இன்று உச்சமாக சுற்றுச் சூழல் காற்று எண் 290 (PSI index) தொட்டு இருக்கிறது, முன்பு 1997ல் 224 ஆக இருந்ததே உயரிய அளவாம், அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. காலையில் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது 120....140... பகல் 2 மணிக்கு 160 பின்னர் 4 மணிக்கு 172 ஐ நெருங்கியது. பிறகு குறையவே அலுவலகம் முடிந்து மாலை 8 மணிக்கு 190ஐ தொட்டது, 100க் மேல் சென்றாலே புகை வாடையையும் உணர முடியும், 190 என்று தெரிந்தவர்கள் முகத்தில் முகமுடியுடன் சென்றார்கள், இரவு 9 மணிக்கு PSI 290 ஐ தொட்டு இருக்கிறது, 300க்கும் மேல் சென்றால் எதிரே வருபவர்கள் தெரியாது, போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை, கப்பல் விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்படும், அல்லது பாதிவழியிலேயே நிறுத்தப்படும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுவார்கள்.

வழக்கமாக இரவு 11 மணி வரை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் ஆள் அரவே இல்லை, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர், சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன, அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தாண்டி புகைப்பிடித்தால் தண்டம் கட்ட வேண்டிய சிங்கப்பூரில் எல்லா இடத்திலுமே புகை. நிலமை இன்னும் சில நாட்கள் நீடித்தால் .....அவசரகால அறிவிப்புகள் கூட வெளிவந்தால் வியப்பில்லை, எங்கள் வீட்டில் முடிந்த அளவு பகல் பொழுதில் கூட சன்னல் கதவுகள் அனைத்தையும் சாத்திதான் வைத்திருக்கிறோம், இருந்தும் வீட்டினுள்ளும் புகை நெடியை உணர முடிகிறது.


வரலாறு காணாத புகை மூட்டம் என்று தலைப்பிட்டு தொலைகாட்சியிலும், இணைய செய்திகளிலும் தகவல்கள் வெளி இடுகிறார்கள். சுற்றுலா வந்தவர்களுக்கு மோசமான அனுபவங்கள், நிலமை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் இவை வெறும் காட்டுத் தீயால் ஏற்பட்டது தானே என்று என்னைப் போல் நினைத்தவர்களுக்கு. கிடைக்கும் தகவல்கள் மனித பேராசைகளே இதற்கு காரணம் என்று தெரியவர அதிர்ச்சி தான். புகையை கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள் என்று சிங்கப்பூர் சுற்றுச் சூழல் அமைச்சு இந்தோனேசியாவை கேட்க, அவர்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அதற்கு முற்றிலும் உதவ எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் - மலேசிய முதலாளிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் கூறியுள்ளனர். அதாவது



சமையல் எண்ணை நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணை மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியா காடுகளிலும் கை வைத்துள்ளனர், இவற்றில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் சிங்கப்பூர் மலேசியாவை சேர்ந்த முதலாளிகளாம், காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நடைபெறும் செயலாம். இந்த ஆண்டு கூடுதலான பகுதிகளை அழித்திருக்க வேண்டும், அதன் எதிர்விணையைத் தான் தற்பொழுது நாங்கள் அனுபவிக்கின்றோம்.

இந்தோனேசியா ஏழை நாடு இத்தனை ஆண்டுகளுக்கு பாமாயில் மரங்களுக்கு குத்தகைக்கு இடம் வேண்டும் என்றால் காடுகளை கைகாட்டிவிட்டு கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள், அவர்களையும் குறை சொல்ல முடியாது. போட்டித் தன்மை நிறைந்த உலகத்தில் எதையாவது அழித்தால் வருமானம் வந்தால் சரி என்று நினைக்கும் முதலாளிகளை குறைச் சொல்ல முடியாமல் அரசுளும் கையை பிசைகின்றன, ஏனென்றால் எல்லாம் அரசாங்கம் அனுமதித்தப்படியே நடக்கின்றன, விளைவு ? மக்களுக்கு தான் எல்லா வகையிலும் இழப்பு.

பாமாயில் வாங்குவதை நிறுத்தினால் ஒருவேளை காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்பட்டுவதை தடுக்கலாம்,  ஆனால் அவையெல்லாம் கடல்கடந்து வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து பாமாயிலுக்காக முதலிடு செய்யப்படுவதை தடுத்தால் எரியும்  காடுகளை தடுக்கலாம். பெரிய அளவு உயிர் சேதம் நடந்தால் ஒருவேளை அவர்கள் அது பற்றி யோசிக்கக் கூடும். அதுவரை இவை வழக்கம் போல் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகிவிடும்.

இதை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால்

The three-hour Pollution Standards Index (PSI) soared to 321 at 10pm local time 

Singapore haze hits 'hazardous' levels of PSI 321.

பொழைச்சு கிடந்தால் பின்னர் பார்ப்போம். (குறைந்துவருவதாகவுக் குறிப்பிட்டுள்ளனர்.

22 ஆகஸ்ட், 2012

இரண்டாம் அகவை !


கால ஓட்டத்தின் கணக்கு வழக்குகளை பின்னுக்கு தள்ளும் குழந்தைகளின் வளர்ச்சி வியக்க வைக்கிறது, மணமானவர்கள் பெற்றோர்களானதும் அவர்களின் வாழ்நாள் இறக்கைகட்டிப் பறக்கும். குழந்தைகளின் ஒவ்வொரு 10 ஆண்டு அகவைகளும் பெற்றோர்களின் மண வாழ்க்கை மற்றும் அகவைகளை பத்து ஆண்டுகள் கூட்டிச் செல்லும். மகள் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மகன் பிறந்தது முன்னிரவு நிகழ்வு போல் இருந்து, ஓராண்டு ஆகி, ஈராண்டும் ஆகிவிட்டது. ஒரு வயதில் எழுந்து நடக்கத் தெரியும், பசிக்கு அழத்தெரியும், சிரித்து மகிழவும், கையை நீட்டி வாங்கவும் தெரியும் என்று நிலையில் இரண்டாம் ஆண்டை எதிர் கொள்ளும் குழந்தைகள் விருப்பங்களை முடிவு செய்து அடம் பிடிக்கத் துவங்குகிறது,  தனக்கு வேண்டியவை, வேண்டாதவை, கூடவே மொழியைப் புரிந்து கொண்டு பேச முயற்சிக்கும் ஆற்றல் இவைகளை வளர்த்துக் கொள்கிறார்கள், பெண் குழந்தைகள் 18 மாதங்களின் பேசத் துவங்கினால் ஆண் குழந்தைகள் பேசத் துவங்க கூடுதலாக இரண்டு மாதங்கள் ஆகிறது, எங்கப் பையன் 'சிவ செங்கதிர்' கோர்வையாகப் பேசாவிட்டாலும், 'அப்பா மியாவ்' என்று கூறினால் பூனைகளைப் பார்க்க வெளியே அழைத்துச் செல்லச் சொல்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும், 'அம்மா தண்ணீ' அல்லது 'தண்ணீ' என்றூ சொன்னால் தண்ணீர் கேட்கிறான் என்று பொருள். கூடவே 100க் கணக்கான சொற்களை கற்றுக் கொண்டு தேவையின் போது சொல்கிறான், அக்கம் பக்கம் குழந்தைகளை பெயர் சொல்லி அழைப்பது  உள்ளிட்ட அவனது மழலைப் பேச்சு இனிக்க வைக்கிறது. அழுது அடம் பிடித்தால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதை ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறான். குழந்தைகள் 2 - 3 வயதில் குணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள், பிடித்தது - பிடிக்காததெல்லாம் இந்த வயதில் அவர்களாக முடிவு செய்பவைகள் அவர்களின் குணங்களாக மாறுகிறது என்றே நினைக்கிறேன்.

ஒண்ணரை வயது வரை விரும்பி நடப்பார்கள், பிறகு தூக்கிச் செல்லச் சொல்லி அடம் பிடிப்பார்கள், நடப்பதால் ஏற்படும் (பிஞ்சுக்) கால்வலி உணர்வும், தூக்கிச் செல்வதால் கால் வலிகாது என்று தெரிந்துவிடுவதால் நடந்து செல்ல விரும்ப மாட்டார்கள், தண்ணீரில் ஆட்டம் போட இந்த வயதில் ரொம்பவே விருப்பம் இருக்கும், மற்ற விளையாட்டுப் பொருள்களைவிட தண்ணீர் விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும், தண்ணீர் அவர்களின் விருப்பதிற்கேற்ப வளைந்து கொடுப்பதால் தண்ணீரில் விளையாட கொள்ளை விருப்பம் இருக்கும், தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை, வாலிகளை அவர்களுக்கு எட்டும் படி வைக்கக் கூடாது, முடிந்த அளவுக்கு வெற்றுப் பாத்திரங்களையும், குளியல் அறைக் கதவுகளை மூடி வைத்திருப்பதும் நலம். 

********

குழந்தைகளுக்கு தாய்மொழிப் பேச்சு வழக்கு குழந்தைப் பருவத்தில் பயிற்றுவைக்காவிட்டால் பின்னர் அவர்களுக்கு அதன் மீது கவன ஈர்ப்பு வரவே வராது, முடிந்த அளவுக்கு தாய்மொழியில் பேசி வளர்ப்பது தான் குழந்தைகளுக்கு நல்லது,  மூன்று வயதில் பாலர் பள்ளியில் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்வது எளிது, மூன்று வயதில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றலில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது அவர்களுக்கு சுமையான ஒன்று இல்லை,  பாலர் பள்ளிக்குச் செல்லும் பொழுது குழந்தைகள் ஆங்கிலம் தெரியாமல் இன்னல் படுவார்கள் என்பது பெற்றோர்களின் தவறான எண்ணம், அனுபவப்பட்டவன் என்ற முறையில் தான் இதனை எழுதுகிறேன், மகளை 2 1/2 வயதில் சிங்கையில் பாலர் பள்ளியில் சேர்த்த போது அவளால் மற்றக் குழந்தைகளுடனும், காப்பாளருடனும் உரையாடமுடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இவையெல்லாம் ஒரு மாதங்களில் சரியாகிவிட்டது, ஆங்கிலமே பேசி வளர்த்திருந்தால் அவளால் இயல்பாக பேசக் கூடிய தாய் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போய் இருக்கும், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட 'சூழல்' என்று வரும் பொழுது எதையும் கற்றுக் கொள்வார்கள். தாய்மொழியை ஒவ்வொரு தலைமுறைக்கும் சரியாகப் பயிற்று வைத்து அடுத்தத் தலைமுறைக்கு மொழியையும் கூடவே அழைத்துச் செல்வது தாய்மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரின் கடமையும் கூட. ஒரு குழந்தைக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பதன் மூலம் தாய் மொழியின் புழக்கத்தை இன்னும் ஒரு 80 - 100 ஆண்டுகளுக்கு நம்மால் நீட்டிக்க முடியும், நம்புங்கள்,  தமிழ் நாட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் குழந்தைகளிடம் அம்மொழியில் தான் பேசுவார்கள், பின்னர் பள்ளியிலும் வெளியிலும் தமிழில் உரையாடுவதற்கு அவர்கள் எந்த ஒரு இன்னலையும் சந்தித்தது கிடையாது, இதை ஏன் ஆங்கிலத்திற்கும் பொருத்திப் பார்க்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, கண்டிப்பாக ஆங்கில வழிக் கல்விதான் குழந்தை படிக்கப் போகிறது என்று தெரிந்தும் ஏன் அவற்றை குழந்தைப் பருவத்தில் இருந்து திணிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் சமுகம், கலை இலக்கியத் தொடர்பிற்கு மிகவும் தேவையானது என்ற அளவில் தாய்மொழி தான் குழந்தைக்கு உணவுடன் சேர்த்து ஊட்டப்பட வேண்டும். 

எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர் 'பையன் சிரமப்படுவான் என்று ஆங்கிலத்தில் பேசி வளர்த்தோம், தற்பொழுது அவனுக்கு தமிழ் புரிந்தாலும் பேச தடுமாறுகிறான், அந்த தவறை மகள் பிறந்த பிறகு செய்யக் கூடாது என்பதற்காக அவளிடம் தமிழிலும் பேசுகிறோம்' என்றார். குழந்தைகளுக்கு எளிய ஆங்கிலமும் தமிழுடன் சேர்த்துச் சொல்லிக் கொடுப்பது நல்லது, ஆனால் ஆங்கிலமே போதும் என்று நினைப்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மற்றொரு மொழி ஆற்றலை முளையிலேயே கிள்ளி எரிவது போன்றது. நாம் வாரிசுகளுக்கு முறைப்படியாக கொடுக்கும் அழியாதச் செல்வங்களுல் தாய் மொழியும் ஒன்று. போதிய ஊக்கம் கொடுத்தால் ஏனையவற்றை அவர்களே வளர்த்துக் கொள்வார்கள்.

ஒரு குழந்தைக்கு தாய்மொழியில் பெயர் சூட்டுவதால் தாய் மொழிப் பெயர்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நிலைக்கும், ஒரு குழந்தைக்கு தாய் மொழி பயிற்றுவித்தால் மொழி சார்ந்து இயங்கும் கலைகளும், இலக்கியங்களும் இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்கு படைக்கப்படும் வாய்பையும், தேவையையும் ஏற்படுத்தும், தாய்மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழிப் பேசுபவர்களின் கடமை என்ற அளவில் இவை செயலாக்கம் பெரும் போது மொழிகளுக்கு அழிவு என்று யாரும் பேசவே முடியாது. தமிழ் இல்லத்து குழந்தைகளுக்கு  99 விழுக்காட்டு தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை என்பது நாம் பெருமைப் படக் கூடிய ஒன்று இல்லை. 'ஸ்டைல். பெயர் ராசி' என்ற முடிவில் தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் அற்று போய்விட்டது.

இதையெல்லாம் ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் என் பையன் தன்னைப் பற்றி அப்பா என்ன எழுதி இருக்கிறார் என்று ஆவலுடன் படிக்கும் பொழுது தனக்கு தமிழ் பெயர் வைத்ததன் காரணத்தையும் சேர்த்தே தெரிந்து கொள்வான், அவனுடைய வாரிசுகளுக்கும் தமிழ் பெயர் வைக்க விரும்புவான்.

*****


கடந்த ஞாயிறு (19 ஆகஸ்டு 2012) செங்கதிரின் இரண்டாம் அகவை நிறைவுற்றது, அக்கம் பக்கம் குழந்தைகளுடன் மிக சிறிய விழாவாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தோம், அவனுக்கு பாண்டா கரடி பொம்மை மிகவும் பிடிக்கும் அதானல் அவனுக்கு பிடித்த பாண்டா கேக்.

அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் கூகுள் கூ(ட்)டல் வழியாக வாழ்த்திய அனைத்து பதிவுலக உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

22 அக்டோபர், 2010

ஒரே புகைச்சல் !

தீபாவளி நெருங்க மழைகாலம் துவங்கி இருக்கும், அதன் பிறகு பனிக் காலம், "எங்கூரு சிங்கையில்", முந்தைய நாள் காலை 7 மணிக்கு அலுவலகம் புறப்பட வெளியே வந்தால் எங்கும் பனிப் படர்ந்தது போல் இருந்தது, ஆனால் குளிருக்கான அறிகுறி இல்லை. மிதமான தீயின் மணம், பிறகு தான் தெரிந்தது சுற்றிலும் அடர்த்தியாக பனி போல் தெரிவது பனி அல்ல, புகை மூட்டம் என்பது. இந்தோனேசியா சுமத்திராவின் அடர்ந்த காட்டுப் பகுதி சிங்கைக்கு மிக அருகில் இருப்பதால் காடுகள் பற்றி எரியும் போது ஏற்படும் புகை சிங்கை மலேசியாவையும் அடையும். சுற்றுச் சூழல் நிலை ஓரளவு கட்டுப்பாடு எண் அளவில் இருப்பதால் அரசு அறிவிப்பாக இன்னும் முகமூடி அணியச் சொல்லி எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை. இன்னும் மூன்று நாளைக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள்.

பார்க்க சூரியன் கண்ணுக்கு குளிர்ச்சியாக சிவப்பு நிலா போல் தெரிகிறது, 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' மறைச் சொல்லுக்கு இந்தோனியா காட்டுத் தீ பழிப்பு காட்டி சூரியன் சுடர்களை மறைத்துவிட்டது.


பின்குறிப்பு : "எங்கூரு சிங்கையில்" - பத்து ஆண்டுகளாக தின்று கொண்டிருக்கிறேன், எங்கூருன்னு சொல்வதால் நான் தேச துரோகி ஆகிவிடமாட்டேன் என்று தேசிய பாகைமாணிகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அதான் கனியன் பூங்குன்றனார் சொல்லிவிட்டாரே யாதும் ஊரே யாவரும் கேளிர்னு.

*****



அலுவலகத்தில் உடன் பணி புரியும் தோழிகள் தான். நிறுவன ஆண்டுவிழாவிற்கு நல்ல அழகாக அலங்காரம் செய்து வந்திருந்தார்கள், 'பேஸ் புக்குல போடனும் போஸ் கொடுங்க' என்றேன் கொடுத்தார்கள். இருவரும் சீன நங்கைகள், ஒருவர் மலேசியர் மற்றொருவர் சிங்கப்பூரார்.

6 அக்டோபர், 2010

தங்கமீன் - முதல் சிங்கப்பூர் தமிழ் இணைய இதழ் !

அண்மையில் பதிவர், சிங்கப்பூர் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் பதிப்பக உரிமையாளர், நண்பர் திரு பாலு மணிமாறன் அவர்களின் முயற்சியினால் ஆர்வத்தினால் தங்கமீன் என்கிற இணைய இதழ் அறிமுகவிழாவிற்கு அழைப்பின் பெயரில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சியை கவிஞர் மற்றும் எழுத்தாளர் ந.வீ.விசயபாரதி தொகுத்து வழங்கினார்.


கணிணி தொழில் நுட்பத்தை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துவர்கள் பலர், அதில் அண்ணன் பாலு மணிமாறன் குறிப்பிடத் தக்கவர். புலம்பெயரும் தமிழர்கள் தமிழை தாய்மொழியாக எடுத்துச் சென்று பின்னர் பெற்றோர்களைப் போலவும், பெற்றக் குழந்தையைப் போலவும் பேணி காத்து, சீராட்டுவதால் குறிப்பிட்ட பலநாடுகளில் தமிழ் வளர்ச்சி கண்டுள்ளது, தேசிய அடையாள மொழியாகவும் வளர்ந்துள்ளது. தன் சிந்தனைகள் தோறும் தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதாக முயற்சி எடுப்போர் பலர், அண்ணன் பாலு மணி மாறன் சிங்கப்பூர் வந்த நாட்களாக தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை அமைத்தும், பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூல்களாகப் பதித்தும் கிட்ட தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சேவை ஆற்றிவருகிறார். இவரை நன்கு அறிந்திடாத சிங்கப்பூர் மலேசியா வாழ் எழுத்தாளர்களே இல்லை என்னும் சொல்லும் அளவுக்கு அனைவரிடமும் நல்ல செல்வாக்குப் பெற்றவர்.


சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய எழுத்துச் சேவைகள் பெரும்பாலும் தாள் (பேப்பர்) சார்ந்த திங்கள் (மாத), கிழமை(வார), நாள் வெளியிடுகளாகவே இருக்கிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்காவிட்டால் எழுத்துக்கள் பரவலான தமிழர்களை சென்று அடைய தடை என்னும் நிலை தான் உள்ளன. இன்றைய நாட்களில் கணிணி புழக்கம் பெருவாரியான தமிழர்கள் இடையே இருக்கின்ற காரணத்தில் தமிழ் இலக்கியத்தை கணிணி

சார்ந்து இட்டுச் சென்று சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும் என்று எண்ணுவோர் பலர், அதனை செயலாக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களினால் பின்வாங்குவோர் அதில் பலர், எண்ணத்தை செயலாகி வெற்றிபொருவோர் ஒரு சிலர் தான். இவர்கள் காணும் கனவு அனைத்தும் நிறைவேற்றி முயற்சிகள் வெற்றியடையக் கூடியவை தான் என்பதாக நம்பிக்கையை வளர்ப்பர். சிங்கப்பூரில் பலர் இணைய இதழ் துவங்க எண்ணி இருந்தாலும் அதை செயலாக்கிக் காட்டியுள்ளார் அண்ணன் பாலு மணிமாறன் அவருக்கு நல்வாழ்த்துகள்.

நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கும் தமிழார்வளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மலர்விழி அவர்களால் திரையிசைப் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சி தங்கமீன் பற்றிய அறிமுக நிகழ்வென்றாலும் வாழ்த்திப் பேசவந்தவர்களின் நகைச்சுவைக்கும் இலக்கியச் சுவைக்கும் குறைவில்லாமல் இருந்தது. நிகழ்ச்சியின் நிறைவு மதிய வேலை என்பதால் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் சிறப்பு.

தங்க மீன் :

தங்கமீனை தற்போது திங்கள் (மாத) தொகுப்புகளாக துவங்கி இருக்கிறார், இருந்தாலும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய இலக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது அறிவிப்புகளில் வெளி இடுவதாக குறிப்பிட்டார். பின்னர் பயனர்களைப் பொருத்து திங்கள் இருமுறை அல்லது கிழமை (வார) இதழாக தொகுக்கப் போவதாகவும்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கமீனில் சர்சைப் புக்ழ் திரு சாரு நிவேதிதா மற்றும் திரு மாலன் ஆகியோய் கட்டுரைகள் எழுதித் தொடர்வதாகப் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் மலேசிய இலக்கிய ஆர்வளர்களின் கதை கவிதை மற்றும் கட்டுரைகள் இடம் பெறுவது போலவே தமிழகம் மற்றும் உலகத் தமிழ் ஆர்வலர்களின் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தங்கமீன் சார்பற்ற தகவல் மற்றும் இலக்கிய ஊடகமாகத் திகழும். சிங்கப்பூரில் இருந்து பல்வேறு தமிழ் சார்ந்த இணைய தளங்கள், வலைப்பதிவு திரட்டிகள் மற்றும் வலைப்பதிவுகள் இயங்கி வந்தாலும் முழுமையானதொரு இணைய இதழாக தங்கமீன் தவழ்ந்து வருவது இது தான் முதல் முறை. தங்கள் இலக்கிய கதை, கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை கள், நிகழ்வுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா மேலும் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் இணைய எழுத்தார்வளர்கள் தங்கமீனில் வெளியிட ஆக்கங்களை அனுப்பலாம்.
கணிவுடன் நிகழ்ச்சியில் பங்குபெற அழைத்து உணவும் அளித்த அண்ணன் பாலு மணிமாறன் அவர்களின் இணைய தளம் தங்கமீன் சிங்கப்பூர் மலேசிய எழுத்துலகில் தன்னிகரற்ற தரமான மீனாக வளர்ந்து நிலைக்க வாழ்த்துகிறேன்.

9 செப்டம்பர், 2010

அடுத்தவாரத்தில் பற்றவைக்கப்படும் கலவர திரி !

செப் 11 நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்பு நினைவு நாளில் அமெரிக்காவில் (GAINESVILLE, Fla) ஒரு உள்ள ஒரு தேவாலய பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் இஸ்லாமியர்களின் இறைவாக்கு என்று போற்றப்படும் திருகுரானை எரிக்கப் போகிறாராம். இது குறித்து அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும், பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் தனது திட்டமிட்ட முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். குரான் எரிப்பு நிகழ்வு திட்டமிட்டபடி நடந்துவிட்டால் அதன் பிறகு ஏற்படும் படுகொலைகளை, கலவரங்களை யாராலும் தவிர்க்க தடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

டென்மார்க் செய்தித்தாள் ஒன்றில் முகமது நபி குறித்து கேலிச்சித்திரம் வெளி இடப்பட்டதற்காக பெரும் கலவர சூழல் ஏற்பட்டு, பிறகு சம்பந்தப்பட்ட செய்த்தித்தாள்களும் அரசும் மன்னிப்பு கேட்ட பிறகு அடங்கியது. கலவரங்கள் நடக்கலாம், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படலாம் என்பதை பாஸ்டர் டெர்ரி அறியாதவர் இல்லை. இருந்தாலும் தற்போது பாதுக்காப்பில் இரும்பு பெட்டமாக இருக்கும் அமெரிக்காவினுள் எதுவும் நடக்காது தடுக்கப்படுவிடும் என்று நம்புகிறார் போலும். அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளில் இந்நிகழ்ச்சியின் எதிர்வினையாக மூளும் கலவரங்கள் குறித்து அவர் அலட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. பொதுவாக மதவாதிகள் அனைவருமே 'இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் கிடைக்கட்டும்' என்பதை சமயக் கூட்டங்களில் மட்டுமே சொல்லுவார்கள், வெளியில் அவ்வாறெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள், முடிந்த வரையில் மாற்று மதத்தினரை புண்படுத்தி, கிளறிவிட்டு குளிர்காய முடியுமா என்று மட்டுமே நினைப்பார்கள், அப்படி ஒருவராகத்தான் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் தெரிகிறார்.

பொதுவாக மெதடிஸ் மற்றும் பெந்தகோஸ், புரோட்டஸ்டாண்ட் கிறித்துவ சபைகளை வழிநடத்துபவர்கள் பாஸ்டர்கள் எனப்படுவார்கள், கத்தோலிக்க கிறித்துவத்தில் அருள் தந்தை அல்லது சகோதரர் என்று சமயப்படிப்பு மற்றும் பயிற்ச்சி நிலைக்கேற்ப பட்டம் வைத்திருப்பார்கள், குரானை எரிப்பதாக அறிவித்தவர் கத்தோலிக்கம் சாராத கிறித்துவ அமைப்பைச் சார்ந்தவர். ஆனால் அவருக்கு எதிராக வன்முறையில் இறங்குபவர்கள் தாங்கள் தாக்குவது எந்த பிரிவு கிறித்துவர்களை என்றெல்லாம் ஆராயமல் கத்தோலிக்கப் பிரிவு உட்பட அனைத்து கிறித்துவ பிரிவுகளையும் தாக்குவர். இந்தியாவில் இந்துத்துவாக்கள் கூட புரோட்டஸ்டாண்டை சேர்ந்தவர்களை கண்டிப்பதாக நினைத்து கத்தோலிக்க கிறித்துவர்களை தண்டிப்பார்கள். பிறமதத்தினர்களுக்கு கிறித்துவத்தினுள் உள்ள பிரிவுகள் எதுவும் தெரியாது. டோனிப் ப்ளேயர் புரோட்டஸ்டாண்டில் இருந்து கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறி இருக்கிறார். நம்மைப் பொருத்த அளவில் அது நமக்கு செய்தி, கிறித்துவவர்களைப் பொருத்த அளவில் அவர்களுக்குள் மதமாற்றம். இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் குரான் எரிப்பு நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றவோ கலவரத்தில் ஈடுபவ முனைபவர்கள் கண்ணுக்கு முன் மாதா கோவில் இருந்தாலும் அவர்களைப் பொருத்த அளவில் அது ஒரு கிறித்துவ சின்னமாகத்தான் தெரியும். இதையெல்லாம் அந்த அறிவு கெட்ட பாஸ்டர், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு குரானை எரிப்பேன் என்று அறிவித்திருக்கும் பாஸ்டர் உணர்ந்தவன் இல்லை.


தீயின் பிறப்பு சின்ன உரசல் தான் அதன் பிறகு அதன் பரவல்களை கட்டுப்படுத்துவது எளிதே அல்ல. தீப்பெட்டிக்குள் உறங்கும் சின்ன தீக்குச்சி ஒரு காட்டையே அழிக்கும் ஆற்றல் மிக்கது என்பது நமக்கு தெரியும். ஆனாலும் நிலமை மோசமாகவும் வரை அதை நம்புவதற்குத்தான் நாம் தயாராக இருப்பது இல்லை. யார் கண்டது அடுத்த உலகப் போர் அந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் உரசப் போகும் தீக்குச்சியின் முனையில் கூட உறங்கிக் கொண்டு இருக்கலாம். உரசப்படும் தீக்குச்சி எளிதில் பற்றிப் பரவும் வண்ணம், இஸ்லாமியர்களுக்கு எதிராக எதையுமே விமர்சனம் செய்துவிட முடியாத நிலைக்கு இஸ்லாம் (அடைப்படைவாத நம்பிக்கை என்னும் தீவிரவாத, சகிப்புத் தன்மை அற்றத) பெரும்பான்மை இஸ்லாமியர்களின் பிடியில் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.


சுட்டிகள் :
1. http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/7990783/911-Koran-burning-Sarah-Palin-calls-it-unnecessary-provocation.html

2. http://blogs.aljazeera.net/americas/2010/09/08/quran-also-burns-fahrenheit-451

2 செப்டம்பர், 2010

அண்மைய இணைய வதந்திகள் !

என்னுடைய மாணவ பருவத்தில் வதந்திகள் எனக்கு அறிமுகம் ஆகின. அப்போது திடிர் திடிரென்று வீடுகள் தீப்பிடித்து எரியும் நிகழ்வுகள் நடந்தேறியது. நெடுநாள் பகையை தீர்த்துக் கொள்ளுதல் என்பதாக தீ வைப்பு நிகழ்வுகள் அமானுஷ்யம் என்கிற பெயரில் தொடர்ந்தது. யார் வீட்டின் முன்பு நாமம் போடவில்லையோ அவர்கள் வீடு பற்றி எரிவதாக கிளப்பிவிட்டார்கள், 90 விழுக்காடு வீடுகளின் முகப்பில் நன்கு தெரியும் படி நாமம் வரைந்து வைத்தனர். எங்கள் வீட்டிலும் எங்க அண்ணன் நாமம் வரைந்து வைத்தார். இந்துக்கள் வீடுகள் மட்டுமல்லாது கிறித்துவ இஸ்லாமியர் வீடுகளிலும் நாமம் வரைந்து வைக்கப்பட்டது. நாமம் எப்படி வரைவது என்று தெரியாதவர்களின் நாமங்கள் சூலம்போன்று இருந்தது. எந்த தெருவில் நுழைந்தாலும் நாமம் வரையாத வீடுகளைப் பார்ப்பதே அரிது என்பதாக மக்களின் மனப் பயம் நாமங்களாக வரையப்பட்டு இருந்தன. இந்த வதந்திகளின் போது வெளியூர்காரர்கள் நேரம் கெட்ட நேரத்தில் சிக்கிக் கொண்டால் விசாரணை எதுவும் இன்றி அவர்களை பொதுமக்கள் கூடி அடித்தே கொன்றுவிடுவார்கள். வதந்திகள் தற்போதும் வீட்டின் முகப்பில் வேப்பிள்ளைக் கட்டுவது, உடன்பிறந்தாளுக்கு பச்சை சேலை வாங்கிக் கொடுப்பது என்பதாக பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கோலச்சுகிறது. சென்னையில் வசிக்கும் காலங்களில் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்ட ஒருவர் இடம் வந்து இறங்கியதும் 'வெல்கம் டு எய்ட்ஸ் வேர்ல்ட்' என்று சொல்லிக் கொண்டு எய்ட்ஸ் ஊசிப் போட்டுவிட்டு தப்பி ஓடுவதாகச் சொல்ல ஸ்கூட்டரில் சென்றவர்கள் போக்குவரத்து விளக்குகளிலும் நிற்காமல் சென்றதாக ஜூவி உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதினார்கள்.

பிள்ளையார் பால்குடித்தது (சிலை பால் குடிக்கும் ஆய் போகாது என்கிற புனிதம் காரணமாக பிள்ளையார் ஆய் போனர் என்று கிளப்பிவிடவில்லை என்று நினைக்கிறேன்) உட்பட பசுமாட்டின் கண்களில் எம்ஜிஆர், கிருஷ்ணன் வந்து போனார்கள், சில ஊர்களில் மாதாவின் கண்களிலும், ஏசு சிலையும் வடிந்த இரத்தம் வேப்பமரங்களிலும் வடிந்ததாக வதந்திகள் வடிவங்களை மாற்றிக் கொண்டு புழங்கிவருகின்றனர். வதந்திகளின் வேர் எது என்று அரியா வண்ணம் வதந்திகளின் விரைவெடுத்து பின் முற்றிலுமாக அடங்கிவிடுகின்றன.

புற உலகில் நடப்பது போலவே சைபர் ஸ்பேஸ் எனப்படும் இணைய வெளிகளிலும் வதந்திகள் பல்வேறு வடிவில் வீடியோவாக, மின் அஞ்சல்களாக பரப்பப்படுகின்றன. இதில் என்ன கொடுமை என்றால் என்றோ பரவி அடங்கிய வதந்திகள் கூட அண்மையில் ஏற்பட்ட நிகழ்வு ஒன்றைச் சொல்வதாக புதிய வடிவில் மறு உலாவரும். புற உலகில் ஊர் அளவில் பரவும் வதந்திகள் இணையங்களில் உலக அளவில் விரைவாக இணையம் பயன்படுத்துவோரிடம் பரவி விடுகிறது.

சென்ற வாரங்களில் 'நேபாள மசூதியின் அற்புதங்கள்' என்பதாக ஒரு வீடியோ இணையங்களில் சக்கைப் போடு போடுகின்றன. மசூதியின் டூம் எனப்படும் கலசத்தை அல்லா தரையில் இருந்து உயர்த்தி கோபுரத்தில் வைத்தான் என்பதாகவும், அல்லாவின் அற்புதம் என்பதாகவும் அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.


அந்த நிகழ்வு நடந்ததாக வேறு வேறு நாடுகளை வைத்துச் சொல்லப்படுவதாக அத்தகவல் பல்வேறு வரிபடிவங்களில் (வர்சன்) இருப்பதாக இந்த வதந்தியை ஆராய்ந்தவர்கள் வதந்தியை மறுத்து கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். (மறுப்பு இணைப்புக்கு நன்றி: நண்பர் சலாஹுத்தின்)

வானத்தை உயர்த்தி பூமியை பிரித்தான் என்ற குரான் வசனத்தை படிப்பவர்களுக்கு கோபுரம் உயர்த்தப்படுவது மேலும் ஒரு அல்லாவின்அதிசயம், அற்புதம் என்பதாக தெரிவது வியப்பில்லை என்பதாக இந்த வதந்தி பரவிவிடும் என்பது வதந்தி பரப்பியவர்களின் எதிர்ப்பார்ப்பு. அதன்படியே தொடர்புடைய வீடியோக்களில் பல இஸ்லாமியர்கள் நெகிழ்ந்து பின்னூட்டம் இட்டு இருக்கிறார்கள். இஸ்லாம் அற்புதம் (Miracle of Allah) மட்டுமல்ல இணையங்களில் ஏசுவின் அற்புதம், கிருஷ்ணனின் அற்புதம், சாய்பாபாவின் அற்புதம் என்று தேடினால் 1000க் கணக்கான வீடியோக்களை துப்பும். இன்னும் பெரியாரின் அற்புதம் (Miracle of Periyar) என்று வராதவரையில் பெரியார் இன்னும் சாமியாக்கப்படவில்லை என்று நம்புவோம். :)


இன்னும் ஒரு அற்புதமான வதந்தி, 'பூஜாவை அவர்கள் பெற்றோர்களிடத்தில் சேர்க்க உதவுங்கள்' என்கிற வதந்தி, இந்த வதந்தி 2003ல் இருந்தே பரவி வருவதாக இணையத் தேடல்களில் காணக் கிடைக்கிறது, பூஜா என்கிற வட இந்திய குழந்தையை பிச்சைக்காரனிடம் இருந்து மீட்டு அனாதை இல்லத்தில் சேர்த்திருப்பதாகவும், அந்தக் குழந்தை பெற்றோர் பெயர் தவிர்த்து ஊர் பெயரை புரியாத அளவுக்கு சொல்லுவதாகவும், ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்ட குழந்தை அவளை உங்களுக்கு தெரிந்தால் பெற்றோரை சென்றடைய உதவுங்கள் என்பதாக அச்செய்தி உலாவருகிறது. குழந்தையின் படத்தைப் பார்த்தால் அவை அண்மையில் டிஜிட்டல் கேமராவழி எடுத்தப் புகைப்படம் மாக இல்லாமல் பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட படத்தில் ஸ்கேன் நகல் போன்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அண்மையில் காணாமல் போய் இருந்தால் டிஜிட்டல் கேமராவில் எடுத்த பளிச் புகைப்படமே வந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தை பூஜாவைப் பற்றி இணைய மின் அஞ்சல் வழியாக பார்வேட் மெயில் என்பதாக கிடைக்கப் பெறும் இளகிய மனம் படைத்தோர் குழந்தை என்பதில் மனதை பரிகொடுத்து, உச் கொட்டி மற்றவர்களுக்கும் அந்த தகவலை அனுப்புகிறார்கள். மின் அஞ்சல் வர்சனாக வந்தவை தற்போது பதிவாக (பதிவர் படைப்பாளி) எழுதப்படும் அளவுக்கு மாறி இருக்கிறது என்றாலும் அடிப்படையான பூஜாவின் பெயர் மற்றும் படங்களும் அதே தான். 2003ல் 4 வயதில் காணாமல் போன பூஜாவிற்கு தற்போது 11 வயது இருக்கலாம். 2003ல் கூட பூஜா காணமல் போனது உண்மையா என்பது ஆராய்ச்சிக்குரியது. 2000 ஆம் ஆண்டில் இருந்தே இணையம் பல்வேறு தரப்புகளால் நன்கு புழக்கத்தில் இருந்துவருகிறது.

தொடர்புடைய அந்த குழந்தையின் பெற்றோருக்கு வேண்டாத ஒருவர் முன்பு நெருங்கி பழகிய ஒருவர் அவர்களை பலிவாங்க அவள் காணமல் போனதாக இணையங்களில் அவர்களுடையை தொலைபேசி எண்ணுடன் கொடுத்து பல்வேறு நபர்கள் அவர்களை தொடர்பு கொண்டு செய்தி உண்மையா என்று கேட்டு டார்சர் கொடுக்கக் கூட உள்நோக்கத்துடன் வெளி இடப் பட்டிருக்கலாம். (இணையங்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவோர் தங்கள் குழந்தைகளின் படங்களை இணையங்களில் வெளியிட்டால் விமர்சனங்களால் பாதிக்கப்படுகிறோம் என்று நம்பும் கூட்டத்தாரும், தனிநபரும் இவ்வாறான அவதூறுகள் செய்ய வாய்ப்புகள் இணையத்தில் ஏராளம் உண்டு. எனவே சர்சைகளை எழுதுவோர் குறிப்பாக பெண் குழந்தைகளின் படங்களை இணையங்களில் வெளி இடாதீர்கள் என்று இதன் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்) பூஜாவுக்கும் பூஜாவின் பெற்றோர்களுக்கும் நேரும் கெதி நமக்கும் ஏற்படலாம். பூஜாவின் பெற்றோரை கண்டு பிடித்துத் தாருங்கள் என்கிற தேடலில் 45,300 பக்கங்களை கூகுள் காட்டுகிறது.

தகவலை நம்பி அதில் உள்ள எண்ணுக்கு பல்வேறு நபர்கள் தொடர்பு கொண்டு செய்தி உண்மையா என்று கேட்க அந்த எண்ணுக்கு உரியவர் மன உளைச்சல் அடைந்ததாக ஜெகதீஸ்வரன் என்கிற பதிவர் படைப்பாளியின் பதிவின் பின்னூட்டங்களில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவின் வழி நான் சொல்ல முயன்றது என்னவென்றால் 'இணையங்களில், பதிவுகளில், மின் அஞ்சல்களில் தகவல் பரிமாறுவோர், வந்த மின் அஞ்சலை அனுப்புவோர் தம்மைச் சார்ந்தவர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்பதாக அனுப்பும் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து சிறுது சிந்தித்தோ அல்லது ஆராய்ந்தோ உறுதிப்படுத்திக் கொண்டு அனுப்பலாம், அவ்வாறு செய்யவில்லை என்றால் வதந்திகளிலும் சிலருக்கான சங்கடங்கள் பரவ நாமும் காரணமாக அமைந்துவிடுவோம்.

புற உலகைப் போலவே இணைய உலகிலும் மனநோயாளிகள், ஏமாற்றுக்காரர்கள் நிரம்ப உண்டு.

27 ஆகஸ்ட், 2010

பிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் !

முதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மற்றும் குட்டிக் கோவியாரின் வணக்கம்.




*****

ஐந்தாண்டுக்கு முன்பு வரை இருந்த இரண்டாம் குழந்தை ஆசை பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனது, காரணம் பெரிதாக இல்லை, ஒரு குழந்தையையே வீட்டில் வைத்து வளர்க்க (வேறு) வழியில்லாமல் பள்ளி முடிந்ததும் மாணவ காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மனைவியோ, நானோ இருவரில் முன்பே செல்லும் ஒருவர் அலுவலகம் முடிந்த பிறகு அழைத்துவரும் நிலையில் இரண்டாவது தேவையா ? என்கிற எண்ணம் தான். பிறகு சென்ற ஆண்டு மகளாகவே கேட்கத் துவங்கினாள், எங்கு சென்றாலும் பல இடங்களில் இரு குழந்தைகளைப் பார்த்துவிட்டு.....'நம்ம வீட்டில் ஏன் இன்னொரு பேபி வரவே இல்லை.......எப்போதான் வருமோ ?' என்று ஒருவித ஏக்கமாக கேட்க்கத் துவங்கினாள். பொருளியல் தேவையை சீராக வைத்திருக்கவும், மகளின் எதிர்காலத்திற்கு நல்லக் கல்வியைக் கொடுக்கவும் எண்ணம் இருப்பதால் உடனடியாக மனைவி வேலையை விட மனதில்லா சூழலில் 'பணிப் பெண்ணை அமர்த்திப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம்.....இரு குழந்தைகளை மாணவ காப்பகத்தில் விடுவதும் பணிப்பெண் வைத்திருப்பதிற்கும் மிகப் பெரிய செலவின வேறுபாடுகள் இல்லை என்பதால் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவாகியது.

இருந்தாலும் எங்களது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடுத்து பெண் குழந்தையாகப் பிறந்தால் அவளுக்கு திருமணம் முடிக்கும் வரை கூட பொறுப்புணர்வு என்கிற டென்சன் இருக்குமே என்கிற டென்சன் இருக்கத்தான் செய்தது. எப்படி இருந்தாலும் நம் குழந்தை தான், அப்படியே பெண்ணாக பிறந்தாலும் ஏற்கனவே இருக்கும் மகளைப் போல் இன்னொரு மகள் தானே பிறப்பாள், அவளை நேசிப்பது உண்மை என்றால், அவள் செயல்களை போற்றுவது உண்மை என்றால் பிறக்கப் போகும் மற்றொரு பெண் குழந்தையையும் அவ்வாறு நேசிக்க முடியாமலோ போய்விடும் ? என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சரி என்ற முடிவில் செயலாற்ற, மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு பள்ளி விடுமுறைக்குச் தமிழகம் சென்ற அந்த திங்களிலேயே அவள் ஆசை நிறைவேறத் துவங்கியது.

என் மகள் தெளிவாக இருந்தாள், தம்பி தங்கச்சி எதுவாகிலும் என்னுடையவர்கள் தானே என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். சிங்கையில் குழந்தை வளர்ச்சியை ஸ்கேனிங்க் செய்து பார்க்கும் போது பாலினம் தெரிய துவங்கும் ஐந்தாம் திங்களில் பெற்றோர்கள் விரும்பினால் குழந்தையின் பாலினம் பற்றிச் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது பெற்றோர்களின் உரிமை என்பதால் சிங்கையில் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி எந்த குற்றமும் இல்லை. ஐந்தாம் மாதத்தில் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள், இருந்தும் குழந்தை பிறக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பது மனைவியின் அடிப்படை பயம் கலந்த கட்டளையாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து இரண்டாம் குழந்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

கடைகுட்டி, மூத்தவ(ள்)ன், நடுவுள்ளவ(ள்)ன் என்கிற செல்லப் பெயர்களெல்லாம் தற்போதான இருகுழந்தை கட்டுப்பாடுகளினால் காணாமல் போய்விட்டது, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா இதில் ஏதோ ஒன்று தான் இரு குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் வாரிசுகளுக்கு கிடைக்கும் உறவுப் பெயர்கள், அதிலும் ஒரே குழந்தையாக வளரும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆனதும் தன்னைப் போன்றே தனித்து பிறந்தவர்களை திருமணம் செய்ய அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உறவு முறைகளில் எதுவுமே கிடைக்காது.

பெண்ணோ ஆணோ எந்த குழந்தையும் சரி என்று முடிவு செய்திருந்தாலும் ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரண்டாவதாக ஆண் குழந்தை என்று அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. மகப்பேறுக்கு முதல் நாள் வரையில் சீனர்கள் அலுவலகம் சென்று வருவார்கள், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பேறு நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார் இன்னும் நாள் இருக்கிறதே என்பதாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தார் மனைவி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க கடந்த 17 ஆம் தேதி அலுவலகம் சென்று திரும்பியதும், அருகில் இருந்த கடைத் தொகுதிக்குச் தன் தாயாருடன் சென்று திரும்பும் நேரத்தில் பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணர்ந்த மனைவி மகிழுந்தில் ஏறி உடனே வீட்டுக்கு வந்தார். பனிக்குடம் முழுதாக உடையாமல் கசிவாக இருந்ததால் சிறுது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வலி ஏற்பட்டதுடன் செல்லலாம் என்று காத்திருந்தோம், மேலும் கசிவு ஏற்பட..உடனடியாக வலி ஏற்பட்டால் பதட்டம் ஆகிவிடும் என்பதால் உடனடியாக இரவு 11:50 வாக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். மருத்துவ மனையில் சோதனை செய்து மகப்பேறு அறையில் உடனடியாக சேர்த்துவிட்டார்கள், நானும் மகப்பேறு அறையில் மகள் பிறக்கும் போது இருந்தது போலவே அருகில் இருந்தேன்.

17 ஆம் தேதி முடிய 18 ஆம் தேதியும் முடிய போகும் நேரம் வரை குறைவாக விட்டு விட்டு வலி ஏற்பட்டது தவிர்த்து பெரிதாக வலி ஏற்படவில்லை, பனிக்குடம் முழுதாக கசிந்தும் குழந்தை சரியான அமைப்பில் இருந்தும் வெளிவர முயற்சிக்காமல் வழக்கம் போல் உதைத்துக் கொண்டு தான் இருந்தது, ஆனால் நாடித் துடிப்பு குறையத் துவங்கியது, பனிக்குடத்தில் தண்ணிர் இல்லை என்றால் தொப்புள் கொடி சுருங்கி குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைய நாடித் துடிப்பு குறையுமாம் , உணர்ந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது தான் தாய்கும் சேய்க்கும் நல்லது என்று சொல்லி, என்னை அனுப்பிவிட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, 18 ஆம் தேதி இரவு 11:55 வாக்கில் அறுவையை துவங்க சரியாக இரவு 12 மணி தாண்டிய சில நிமிடங்களில் ஆங்கில நாள் படி ஆகஸ்ட் 19ல் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் பிரிக்கப்பட்டார்களாம். அறுவை சிகிச்சை அறையில் கணவரை அனுமதிக்கமாட்டார்கள். அறுவை முடிந்து தையல் போடும் நேரத்தில் குழந்தையை குழந்தைகள் வைக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். நல்லிரவுக்கு மேல் என்பதால் அங்கு கண்ணாடி தடுப்பு இருந்ததும் நாங்கள் பார்க்க வசதியாக அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டனர். ஈரம் முற்றிலும் காயாத நிலையில் பிறந்த 10 ஆம் நிமிடத்தில் கழுத்தைத் திருப்பி அனைவரையும் நன்றாகப் பார்த்து பிறகு மெலிதாக சிரித்தான்.

பிறக்கும் குழந்தை பெயரில்லாமல் பிறக்கக் கூடாது என்பது என் விருப்பம் அதனால் மகளுக்கும் பிறக்கும் மூன்று திங்களுக்கு முன்பே பெயரை முடிவு செய்து பிறந்த மறுநாளே பிறப்பு சான்றிதழில் பதிந்துவிட்டேன். அதே போன்று மகனுக்கும் பெயரை முடிவு செய்யும் போது தமிழ் பெயர் தான் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன், கூப்பிட எளிதாக அழகாக இருந்தால் எந்தப் பெயராக இருந்தாலும் சரி என்று சொல்லி இருந்தார் மனைவி. பத்து பெயர்கள் வரை முடிவு செய்து அதில் இரண்டை தெரிவு செய்து மனைவியிடம் சொன்னேன். எல்லோருக்கும் பிடித்தப் பெயராக இருக்க வேண்டும் என்பதாக அதிலிருந்து அவர் தெரிவு செய்து முடிவு செய்தப் பெயர் தான் 'சிவ செங்கதிர்' கூடவே மனைவி பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலொழுத்து சேர்த்து 'GK சிவ செங்கதிர்' என்று மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லும் முன்பே பதிந்து பதிவு சான்றிதழ் பெற்றுவிட்டு சென்ற சனிக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டோம். படுக்கையில் அடிக்கடி மகனின் ஒண்ணுக்கு தீர்த்தம்.....வீட்டில் மகிழ்ச்சி மழை தான்.

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் .

பின்குறிப்பு : பதிவர்களில் பலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் நலம் விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்க நேரமின்மையால் இடுகை வழியாக அறிவிக்க, தெரிவிக்க இப்பதிவை எழுதினேன். மற்றபடி இதைப் பதிவாகவே எழுதுவது எனக்கு தயக்கமான ஒன்று தான்.

28 மே, 2010

நினைவில் நிற்கும் வலைப்பதிவர்களின்.....

பதிவர் கல்வெட்டு அவர்கள் 'தேனீ உமர் தம்பிக்கு அங்கீகாரம் வேண்டுகோள்' குறித்த பதிவில் பின்வருமாறு பின்னூட்டமிட்டு இருந்தார்.

"உமர் போன்ற பலரை இணையத்தில் பதியும் நாமாவது அங்கீகரிக்க வேண்டும். பரிசுகள் போட்டிகள் நடத்துபவர்கள் உமர் நினைவுப் பரிசு, தேன்கூடு சாகரன் நினைவுப் பரிசு, சிந்தாநதி நினைவுப் பரிசு என்று மறைந்தவர்களுக்கு மரியாதை செய்யலாம். அது போல நம்முடன் இன்று இருப்பவர்களை அடையாளம் கண்டும் அவர்கள் பெயரிலும் பரிசுகள் வழங்கலாம். அவர்களையேகூட புரவலர்களாக இருக்கச் சொல்லலாம். உதாரணம் தமிழ்மண காசி பாரட்டுப் பதக்கம் என்று வழங்கி காசியிடம் இருந்தே வழங்கச் சொல்லலாம். யாரும் யாருக்காகவும் செய்யலாம்."

*****

அடுத்த ஆண்டு இதை நாம் செயல்படுத்துவோமா ? என இதைப் பற்றி சிங்கை வலைப்பதிவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது,

இதற்கு செயல்வடிவம் இந்த ஆண்டே நாமே கொடுத்து நல்ல துவக்கமாக இருக்கலாம்
என பதிவர் நண்பர் குழலி முன்மொழிந்தார், அதன் படி,


சிங்கப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட மணற்கேணி - 2009 ன் நிறைவு நிகழ்வாக வெற்றியாளர்களுக்கு விருது நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு லிட்டில் இந்தியா ஆர்கெட் பானா லீப் அப்பல்லோவில் கவிஞர் / எழுத்தாளர் புதுமைத் தேனீ மா.அன்பழகன் தலைமையில் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் மணற்கேணி 2009 வெற்றியாளர்களுக்கு மறைந்த நினைவில் நிற்கும் பதிவர்கள், தமிழ் இணையத்தில் பங்களித்தவர்கள் பெயர்களில் விருது வழக்கம்படுகிறது, இதன் படி,

தேனீ உமர் தம்பி
விருது தமிழ் மொழி / இலக்கியம் பிரிவின் வெற்றியாளர் திரு பிரபாகர் அவர்களுக்கும்,

'கேன்சருடன் ஓர் யுத்தம்' என்ற வலைப்பதிவின் பதிவர் மறைந்த அனுராதா சுப்ரமணியன் விருது தமிழ் அறிவியல் பிரிவின் வெற்றியாளர் திரு தேவன் மாயம் அவர்களுக்கும்,

தேன் கூடு சாகரன் விருது அரசியல் சமூகம் பிரிவின் வெற்றியாளர் திரு தருமி ஐயா அவர்களுக்கும்,

சிந்தாநதி
விருது திரு கையேடு அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

சிங்கைப் பதிவர்கள் வாசகர்கள் நிக்ழ்ச்சியில் நேரடியாக பங்கு கொள்ளலாம்.

மணற்கேணி 2009 போட்டியின் நோக்கம் வெற்றிபெற்றதா இல்லையா என்பதைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை, ஆனால் இந்த போட்டியின் வழியாக சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் ஒன்றிணையவும், இணைந்து செயல்படவும், துவங்கிய செயலை பல்வேறு தொய்வுகள் ஏற்பட்டாலும் முடித்துவிட முடியும் என்கிற மன உறுதியையும் இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள். இந்த போட்டியின் வழியாக நினைவில் நிற்கும் பதிவர்களை பெருமை படுத்தும் நிறைவு நிகழ்ச்சி எங்கள் அனைவருக்கும் மனநிறைவை தந்துள்ளது.

மணற்கேணி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஊக்கப்படுத்திய பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும், சிங்கைப் பதிவர்கள் சார்பாக நன்றி.

"பதிவர் பெயரில் விருதுகள்" - பரிந்துரை செய்த பதிவர் கல்வெட்டு அண்ணனுக்கு மிக்க நன்றி.

8 மார்ச், 2010

சிங்கையில் ஸ்வாமி ஓம்காரின் திருமந்திரம் சொற்பொழிவு !

வரும் வெள்ளி அன்று மாலை மணி 7:00 - 9.00 மணி வரை, பிரபல வலைப்பதிவர் மற்றும் ஆன்மிக அடியார் திரு ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சொற்பொழிவு நடை பெற இருக்கிறது.

இடம் : வடபத்திர காளியம்மன் கோவில்
நாள் : 12 மார்ச் 2010, வெள்ளிக்கிழமை; நேரம் மாலை 7:00 - 9:00

அனைவரும் வருக அனுமதி இலவசம். சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*****

நாத்திகம் பேசும் நீ ஏன் ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வைத்திருக்கிறாய் என்று பல நண்பர்கள் வியப்புடன் கேள்வியாகவே கேட்கிறார்கள். நான் என்னவோ ஆன்மிக எதிரி என்றும் தீவிர பகுத்தறிவாளன் பெரியார் தொண்டன் என்கிற பிம்பத்தை படிப்பவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். மூடநம்பிக்கையையும், மதவெறி, சாதிவெறியையும் எதிர்ப்பவன் இறை நம்பிக்கையற்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஆன்மிக மற்றும் நாத்திக நண்பர்களின் எண்ணமாக இருக்கிறது. இது மிகவும் தவறு. மக்களுக்கு பயனிளிக்க வேண்டிய ஒன்று எந்த பெயரில் இயங்கினால் என்ன என்பதை நினைக்க மறந்துவிடுகிறார்கள்.

இந்த பொது புத்திப் புரிதலில் கொள்கை ரீதியான தவறுகள் பெரும்பாலும் மறைக்க அல்லது மன்னிக்கப் படுகிறது. நிறுவனம் அல்லது வணிக மயமாகி இருக்கும் கொள்கைகள் என்ற அளவில் (நாள்பட்ட) தலைமையில் கீழ் இயங்கும் பகுத்தறிவு வாதமோ, ஆன்மிகமோ எல்லாம் ஒன்று தான். எந்த ஒரு கொள்கையும் தலைமையை வைத்து அளவிட செய்ப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொள்கைக்கான தொண்டன் என்ற பெயரில் தலைமை முறைகேடுகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்று எழுதாத விதியாக எல்லாவித அமைப்புகளிலும் உண்டு.

எனது நிலைப்பாடுகள் என்ற அளவில் பலமுறை நான் எழுதி இருப்பவை, சாதி எதிர்ப்பு அல்லது சாதிச் சம உரிமை. மதவாத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, தாய் மொழி உணர்வு இதன் அடிப்படையில் தான் நான் எழுதிவருகிறேன். பிறரைத் தாழ்த்தாத வீழ்த்தாத நம்பிக்கைகள் எதையும் நான் குறை சொன்னது கிடையாது. ஓப்பீட்டு அளவில் எங்கள் மதத்தில் தான் அனைவரும் உய்வு அடைகிறார்கள் போன்ற மதபற்று போலி ஆன்மிகத்தை கடுமையாகவே சாடி இருக்கிறேன். பார்பனியம் என்கிற தளத்தில் உயர்வர்க்க, ஆளுமைகளைச் செய்யும் பார்பனர்களையும் பிற சாதியினரையும் கடுமையாகவே சாடி இருக்கிறேன். மற்றபடி பல்வேறு மதம், சமூகம் சார்ந்த நெருக்கமான நண்பர்கள் எனக்கு உண்டு. கொள்கை அளவிலான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் போது அங்கே நட்பையோ, தனிப்பட்ட குணநலன்களையும் நான் கருத்தில் கொள்வது இல்லை. எனக்கு பல தரப்பு நண்பர்கள் உண்டு, அதிலும் ஆன்மிகம் பேசுபவர்கள், ஆன்மிக வாதிகள் நிறையவே உண்டு. நான் கண்ணை மூடிக் கொண்டு நாதிகன் பேசுபவனும் அல்ல கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் என்ற பெயரில் அடவாடிகள் செய்யும் மதவாதிகளை ஆதரிப்பவனும் அல்ல. நான் பெரியார் மற்றும் வள்ளலார் ஆகியோரை சமமாகவே போற்றுகிறேன் என்பது என் வலைப்பதிவில் அவர்கள் இணைந்திருக்கும் படமே தரவு.

*****

ஸ்வாமி ஓம்கார் பதிவுகள் தமிழ் மணத்தில் புதிதாக இணைந்த போது அவருக்கு பின்னூட்டம் இட்டவர்கள் மிகக் குறைவு, ஏனெனின்றால் இந்து ஆன்மிகம் என்ற பெயரில் பார்பனிய மேலாண்மை போற்றும் கருத்துகளே வெளிவருகிறது என்பதால் ஸ்வாமி ஓம்கார் எழுத வந்த போது, இவரும் ஒரு இந்துத்துவவாதியோ என்று நினைக்க வைத்திருக்கும். நான் அவரது தொடக்க கால 'குரு கீதை' பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட போது கூட அப்படியாக நினைத்தேன். ஆனால் அவரது மறுமொழிகள் இந்துமதத்தை தாங்கிப் பிடிப்பதாக இல்லாமல் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருந்தது. மேலும் புனிதம், புனிதத்துவம் என்ற இனிப்பு தடவி எதையும் எழுதாமல் எதார்த்தமாக எழுதிவந்தார். பிறகு அவருடன் மின் அஞ்சல் தொடர்பு என நட்பாக தொடர்ந்தது அவரது அறிமுகம். தமிழகம் சென்றிருந்த போது கோவையில் நேரடியாக சந்தித்தேன். ஆசிவாங்கவோ, ஜோதிடம் பார்க்கவோ செல்லவில்லை. இணையத்தின் வழியாக அறிமுகம் ஆன நண்பர் என்ற அளவில் தான் எங்கள் சந்திப்பு அமைந்தது. இன்றளவிலும் அப்படித்தான். ஸ்வாமி ஓம்கார் மற்றவர்களுக்கு சாமியார், ஸ்வாமிஜி. வால்பையன் , கல்வெட்டு போன்றவர்கள் பார்வையில் மற்றொரு போலி சாமியார். எப்படியோ....என்னைப் பொருத்த அளவில் மனம் விட்டுப் பேசக் கூடிய நல்ல நண்பர்.

சிங்கையில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். எனக்கு தெரிந்தது சோதிடம் மற்றும் ஆன்மிகம், ஆன்மிக நிகழ்ச்சி நடத்தலாம், என்னுடைய மாணக்கர் ஒருவர் இருக்கிறார். அவரும் கூட சிங்கையில் நிகழ்ச்சி நடத்தக் கேட்டுக் கொண்டார் என்று ஸ்வாமி ஓம்கார் என்னிடம் குறிப்பிட்டார். அவரது தினம் தினம் திருமந்திர நூல் வெளியான பிறகு, ஏற்பாடு செய்யுங்கள் திருமந்திரம் பற்றி சொற்பொழிவு நடத்துகிறேன் என்றார். அவரது மாணக்கருடன் கலந்து பேசினேன். அவருக்கு தேவை ஸ்வாமி ஓம்கார் நடத்தும் யோகா வகுப்புகள் தான். ஏனெனின்றால் அவரால் 10 - 15 நாட்களுக்கு இந்தியாவில் தங்கி ஸ்வாமி ஓம்காருடன் யோகா கற்றுக் கொள்ள நேரம் வாய்கவில்லை. கூடவே அவரது நண்பர்கள் பலருக்கும் யோக கற்றுக் கொள்ள ஆவல் (யோகாவும் இந்திய ஆன்மிகம் ஒன்றுக் கொண்டு தொடர்புள்ளது என்றாலும், இப்பொழுதெல்லாம் எளிமை படுத்தி ஆன்மிகம் கலக்காமல் பலர் மதச் சார்பற்ற யோகா நடத்துகிறார்கள்)
எனவே திருமந்திரம் சொற்பொழிவுடன் யோகா வகுப்புகளும் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு, ஸ்வாமி ஓம்காருக்கு தேதிகளைக் குறிப்பிட்டு, தங்கும் இடம் முதல் அனைத்தும் ஏற்பாடுகளையும் ஸ்வாமியின் மாணக்கர் மற்றும் நான் இணைந்து செய்தோம்.

ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சியினூடே சனி அல்லது ஞாயிறு பதிவர் சந்திப்புகள் உண்டு. தேதி முடிவு செய்யவில்லை. பின்னர் சிங்கைப் பதிவர்களுடன் கலந்து பேசிவிட்டு எழுதுகிறேன்.

இசை, இயல் தமிழில் இருக்கும் பல்வேறு பக்தி இலக்கியங்களில் திருமந்திரம் சிறப்பு வாய்ந்தது, அதனை ஸ்வாமி ஓம்கார் எளிய விளக்கங்கள் மூலம் திருக்குறள் போல் எளிமை படுத்தி பக்தியாளர்களுக்கு பயனளிக்கும் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். ஸ்வாமி ஓம்காரின் சொற்பொழிவு அவரது நூல்கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பொருத்த அளவில் ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் சார்ந்த ஒரு இலக்கிய பேச்சாளர் என்பதாகத்தான் நான் அவரை வரவேற்க மற்றும் முன்மொழிய முடிவு செய்தேன்.

நித்யானந்தன் அம்பலப்பட்டு கிடக்கும் இந்த வேளையிலும் ஒப்புக் கொண்டுள்ளபடி நிகழ்ச்சி நடத்த துணியும் ஸ்வாமி ஓம்காரை மனதாரப் பாராட்டுகிறேன்.

சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சிங்கைப் பதிவர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் தெரிவித்து அழைக்க வேண்டுகிறேன். யோக வகுப்புகளுக்கு பதிவு செய்வோர் என்னையோ அல்லது ஸ்வாமி ஓம்காரின் மாணாக்கர் திரு வைரவன் (9750 4503) அவர்களையோ அழைத்து பதிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகள் இலவசம்.



பதிவர்கள் அனைவரின் வருகையால் ஆதரவால் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமையும். நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக !

24 பிப்ரவரி, 2010

மீண்டும் கல(ர்)ப் படங்கள் !

சிங்கையில் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலாவினரை ஈர்க்க சிஙகே ( Chingay 2010) அணிவகுப்பு நடக்கும், Chingay அணிவகுப்பு என்றால் வட தென் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஓரின (Gay Lesbian) புணர்ச்சியாளர்களின் அணிவகுப்பு போன்றதல்ல. அலங்கார வண்டிகளுடன் பல்வேறு குழுக்கள், அதன் செயல்பாடுகள், நிறுவனங்களின் செயல்பாடுகளின் விளம்பரம் போன்ற காட்சி வண்டிகள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும், இந்த ஆண்டு 10,000 க்கும் மேற்பட்ட தன்விருப்ப (Volunteer) ஆர்வலர்களின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது. நாடுகள் சார்பிலும், குறிப்பிட்ட இன, குழு பண்பாட்டினரைச் சார்ந்த குழுக்களும் இதில் இடம் பெறுகிறது.

இந்த ஆண்டு கடந்த காரிக் கிழமை இரவு 8 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை கிட்டதட்ட 2 மணி நேரங்கள் நடந்தது. இந்த அணிவகுப்பு இரவு நேரங்களிலும் சில ஆண்டுகளில் பகலிலும் கூட நடக்கும், இந்த ஆண்டு இரவில் நடந்தது, வண்ணங்கள் பொதுவாக அழகு, அதை இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஏற்படுத்தும் போது கொள்ளை அழகு, இரவில் வண்ண மின்னல்களாக பளிச்சிடும் ஒளி விளக்குகளுடன் சென்ற ஊர்வல அணிவகுப்பு அதைக் காண வந்த வெளிநாட்டு பயணிகளையும் உள்நாட்டினரையும் ஈர்த்தது என்றால் அது மிகையல்ல. அணிவகுப்பின் முடிவில் வானவேடிக்கைகள் அருகில் இருந்து பார்க்கும் போது பலவண்ணங்களில் .... பெருவெடிப்பு கூட இப்படித்தான் நிகழ்ந்திருக்குமோ என்று நினைத்தேன்.






















மேலும் படங்களுக்கு http://www.chingay.org.sg

************

பகலில் பார்த்தவற்றை இரவில் பார்க்கும் போது எல்லாம் ஒளிகலன் இருந்தது.





மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்