பின்பற்றுபவர்கள்

எரிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எரிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 பிப்ரவரி, 2008

கயவனைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது ?

சரமாரி வெட்டிக் கொலை, கற்பழித்துக் கொலை என்ற செய்திகள் எல்லாம் தலைப்பில் ஒரு ஈர்ப்பை வைத்து பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள் வெளி இடுவார்கள். பரபரப்பு தலைப்பு வைப்பதால் தான் இதுபோன்ற செய்திகளைப் தேடிப் படிக்கிறார்களா ? படிப்பவர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அப்படிப்பட்ட தலைப்புகளை வைக்கிறார்களா ? தலைப்பில் ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மையே.

பிறந்த 54 நாள் ஆன குழந்தையை தந்தை கற்பழித்து கொலை, என்ற செய்தியை தாங்கிக் கொண்டு ஊடகம் வந்தால் அதனால் என்ன பயன் ? காமக் கொடுரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இனம், சாதி, மதம் தாண்டி எங்கேயும் இருக்கிறார்கள், அதுபோன்ற விலங்குகளின் விழுக்காடு 0.0000000001% இருக்கலாம். அவர்கள் செய்யும் ஈனச் செயல்களை செய்தியாகப் போடுவதால் யாருக்கு என்ன பயன் ? செய்திகள் என்றால் எதாவது நிகழ்வுகளின் தகவல் தான். ஊடகவாதிகளைப் பொறுத்து அவர்களுக்கு எல்லாமும் செய்திதான். சமூகத்தை சிந்திக்க வைக்கவோ, திசைத்திருப்பவோ ஊடகத்துறைக்கு ஆற்றல் உண்டு. ஊடகத்துறை மக்களுக்காக இயங்குவதால் அதற்கு பொறுப்புணர்வு என்பது மிக முதன்மையானது.

"பிறந்து 54 நாட்களே ஆன தனது பென்குழந்தையை கற்பழித்து கொன்ற தந்தை!! - என்ற செய்திகளை வெளி இடுவதன் மூலம், இவர்கள் பொதுமக்களுக்கு என்ன தகவல் சொல்லப் போகிறார்கள் ?

அதையும் ஒரு பதிவர் மத அரசியலுக்காக பயன்படுத்துகிறார். எல்லா மதத்திலும் கயவர்கள் இருக்கவே செய்கிறார்கள், ஒரு கயவன் செய்யும் கயமைக்காக அந்த மதத்தில் உள்ளவர்களையோ ஒரு மதத்தையோ குறைச் சொல்ல முடியுமா ? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கிறது. பின்லேடன் செயலுக்கோ, தீவிரவாதிகளின் செயலுக்கோ 'முஸ்லிம் தீவிரவாதம்' என்று சொன்னால் இஸ்லாமியர்களுக்கு ஏற்புடையதா ?

ஒரு கயவனின் இழிசெயலை செய்தியாக போட்டதே பெரும் தவறு, அதைப் பார்த்து திருந்துவதற்கு அந்த அளவு யாரும் கொடுமைக் காரர்கள் கிடையாது, அந்த செய்தியை அறிந்து கொள்வதால் இதுபோன்ற பிறவிகள் இருக்கும் கேடு கெட்ட உலகத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் தவிர்க்கலாம், அத்தகைய செய்திகள் காவல்துறையின் உள்ளே முடித்துக் கொள்ளப்படவேண்டியவை. அதையும் மத அரசியலுக்காக அந்த பதிவில் பயன்படுத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்