பின்பற்றுபவர்கள்

எதிர்வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 செப்டம்பர், 2012

பூ மிதிக்கலாம் வாங்க !


பூ மிதிக்க ஆசைப்பட்டு போன கவுண்டமணி,  நல்லா அடிவாங்கிக் கொண்டே கொஞ்சாதீங்க கொஞ்சாதிங்க என்று சொல்லும் ஜனராஜ் கேரக்டர் ஞாபகம் தான் வருது அண்ணன் சுபி எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்களுக்கு தடித்த தோலுடா ன்னு நாம மார்க்க அறிஞர்களைப் பார்த்து தான் தெரிஞ்சு கொள்ளனும், மதங்களும் மார்க்கங்களும் எதை எதையெல்லாம் சொல்லிக் கொடுக்குதோ இல்லையோ தடித்தத் தோலை ஆடையாகக் கொடுக்கிறது, அது அல்லேலோயா கோஷ்டியாக இருக்கட்டும், இந்துத்துவா குருப்பாக இருக்கட்டும், நம்ம மார்க அறிஞ்ஞர்களாக இருக்கட்டும் சொல்லி வச்சது போல் அவங்க அவங்க அளவுக்கு தோலாடை அணிந்து கொண்டு தான் பொது இடத்தில் வந்து "கருத்து" சொல்கிறார்கள். நமக்கு மார்க அறிஞ்ஞர்களுக்கு மார்க்கு போடுவது வேலை இல்லை என்றாலும் மார்க்க அறிஞ்ஞர்களாக ஓடிவந்து தமக்கு மார்க்கு போடுங்க என்று முதுகை காட்டி வரத்தான் செய்கிறார்கள்.  ஏற்கனவே நிறைய பேர் நிறைய மார்க்கு போட்டுவிட்டார்களே என்றாலும் நாம யோசிச்சு மார்க் போடத்தான் வேண்டி இருக்கு காரணம் மேலே சொன்னவை தான்.

*****

கற்பழிப்பு என்று சொல்வது பாலியல் வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுபடி நாம் பன்னெடுங்காலமாக அவ்வாறு சொல்லக் கூடாது எழுதிவருகிறோம், தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை, அதாவது கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்கிற பொருள் தவிர்த்து வெறெதும் இல்லை, எனவே பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பெண் ஒருத்தியை ஒழுக்கம் கெட்டவள் அல்லது அவளுடைய ஒழுக்கம் அழிக்கப்பட்டது என்ற பொருள் தரும் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவது காட்டுமிராண்டி தனம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வதில் யாதொரு தவறும் இல்லை, கற்பு என்ற சொல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் பெண்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது மணவிலக்கு பெற்ற பெண் இரண்டாவது கணவருடன் வாழ்க்கை நடத்துவதை இரண்டாம் கற்பு பெற்றவள் அல்லது கற்பு மாற்றம் செய்து கொண்டவள் என்று சொன்னால் அது எப்படி பொருந்தாதோ, அபத்தமானதோ அது போன்றதே தானாக எந்த ஒரு ஒழுக்கக் கேட்டையும் செய்துவிடாது பாலியல் வேட்கை வெறியால் சிதைக்கப்பட்ட பெண்ணை கற்பிழந்தவள், கற்பழிக்கப்பட்டவள் என்று சொல்லுவதும் ஆகும். இது போன்ற முறையற்ற, பொருள் தராத, திரிக்கப்படக் கூடிய வகையில் பெண்களை இழிவுப் படுத்தும் சொல் தான் "கற்பு" என்பதால் பெரியார் அதனைப் பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை அரிசனங்கள் என்று காந்தி சொன்னபோது கடுமையாக எதிர்த்தவரும் பெரியார் தான்,  ஹரி ஜனங்கள் அதாவது மகாவிஷ்ணுவின் மக்கள் என்ற பொருளில் தாழ்த்தப்பட்டவர்களை அழைக்கலாம் என்கிற காந்திஜியின் பரிந்துரை தாழ்த்தப்பட்டவர்களை இந்துமத சாக்கடைக்குள்ளே அடைத்து அதை அள்ளச் சொல்லும் பார்ப்பனிய வாதிகளுக்கு தான் சாதமாக இருக்கும் எனவே ஹரிஜன் என்று தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினார் பெரியார்,  தாழ்த்தப்பட்டவர்களை வெறும் சொற்களால் "வள்ளல் வாரிசுகள்" என்று அழைப்பதினால் மட்டுமே அவர்களின் பொருளாதாரா நிலை மாறிவிட்டதாக நாம் கூறிக் கொள்ள முடியுமா ? எனவே ஹரிஜன் என்று சொல்வது தாழ்த்தப்பட்டவர்களை மேலும் இழிவிலேயே வைத்திருக்கும் என்பதால் ஹரிஜன் என்று சொல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது மாறாக தலித் என்ற சொல்வது அவர்களைக் குறிக்கும் பொது அடையாளச் சொல்லாக இந்தியாவெங்கிலும் வழக்கில் உள்ளது, தமிழகத்தில் மு.கவின் பரிந்துரைப்படி அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை, "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று தமிழில் சொல்லிவருகிறோம்.

அண்ணன் சுவனப்பிரியன் அரிசனத் தெரு அவலம் என்ற பெயரில் 'எங்கள் ஊருக்கு பக்கத்தில் அரிசனத் தெரு இருக்கிறது அவர்கள் சுத்தம் தெரியாதவர்கள் தண்டவாளப்பாதையில் திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள், இவர்கள் எங்கள் மதத்தவர்களைப் பார்த்து திருந்தவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார், வவ்வால் போன்றவர்கள் அரிசனம் என்று சொல்லக் கூடாது இழிவு படுத்துவதாகும் என்று சொல்லியும் மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லை. தலித்துகளின் நிலை குறித்து பாலைவன ஊற்றாக கண்ணீர் வடிக்கும் சுவனப்பிரியன் தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் திறந்த "வெளிக்கு" போகிறார்கள், அவர்களுக்கு கழிவறையையும் அவர்களது  கழிவறையை  தூய்மை செய்யவும் ஏன் ஆட்கள் இல்லை ?, தம்பகுதி மக்களின் கழிவறையை யார் துப்புறவு செய்கிறார்கள் ? என்ற கேள்வியெல்லாம் எழவே இல்லை. இவர் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இவரின் தாரைக் கண்ணீரில் கோரைப் பாயை ஊறவைக்கிறார்.

அடுத்து அண்ணாரின் இன்றைய பதிவு "கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக விட்ட கண்ணீர்", ஏனுங்க வர வர உங்கப் பதிவு ஏன் இந்துத்துவ எழில் பதிவு போல் அவலங்களை மட்டும் அதும் இந்தியாவில் நடக்கும் அவலங்களை மட்டும் எடுத்து எழுதுகிறீர்கள், நீங்கள் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்லும் சவுதியில் இவையெல்லாம் நடைபெறுவதே இல்லையா ?" என்ற என் பின்னூட்டத்திற்கு அண்ணன் அளித்துள்ள மறுமொழி

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவின் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ


"சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். 


ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்."


அதாவது அண்ணன் சுபி கற்பழிப்பு  பற்றி சவுதியில் இவர் கேள்விப்பட்டதே இல்லையாம், அங்கு நடைபெறுவதெல்லாம் சில பெண்களிடம் தவறாக நடப்பது மட்டும் தானாம். படிப்பவர்களுக்கு ஏதோ சுவனப்பிரியன் தான் ஒப்புக் கொண்டுள்ளாரே என்று நினைக்கத் தோன்றும், தவறாக நடப்பதெல்லாம் என்றால் என்ன பொருள் ஈவ் டீசிங்கா ? அதாவது சவுதியில் வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வண்புணர்வுக்கு பெயர் "தவறாக நடப்பதாம்"  ஆனால் இந்தியாவில் நடப்பது "கற்பழிப்பாம்",  சவுதியில் உள்ள பாலியல் குற்றவாளிகள் அதை மொபைலில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், அவர்கள் அறிவாளிகள் என்றும் மறைமுகமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அண்ணன் சுபியின் சவுதிய அகராதிபடி சவுதியில் 
கல்லால் எறிந்து கொல்லப்பட்டால் அதன் பெயர் பூ எறிதல், பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக சவுதியில் இன்று நான்கு பெண்கள் மீது பூக்கள் எறிந்தனர்

கழுத்து வெட்டி கொல்லப்பட்டால் அதன் பெயர் மாலை சூடுதல், திருட்டு வழக்கில் இரண்டு சவுதி ஆண்களுக்கு இன்று மாலை சூடப்பட்டது

பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டிருந்தால் அதன் பெயர் தங்கம் உரசுதல் ஏதோ இரக்கப்பட்டு இதற்கு மட்டும் "தவறாக நடத்தல்" என்று சொல்கிறார் போலும் கை வெட்டப்பட்டால் "இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தல்" என்று சொல்லுவாரோ

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அண்ணன் சுவனப்பிரியனுக்கு வாழ்த்து சொல்லுவோம், ஆனால்  'வாழ்த்து' அவருடைய அகராதிபடி இல்லை.

இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்.
:)

************

சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின்  அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.

17 செப்டம்பர், 2012

சுவன அண்ணன் சொல்லும் பொய்கள் !


தெரிஞ்சோ தெரியாமலோ சுவன அண்ணனை பதிவுல வஹாபிகளின் தலைவர் ஆ(க்)கிவிட்டார்கள், அதனால் வலையுலகில் சுவன அண்ணன் பொன்னான கருத்துகளுக்கு பல முனைகளில் இருந்தும் எதிர்வினைகள் வருது, அண்ணன் சுவனப் பிரியன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வெற்றி வெற்றி என்று கூறிக் கொள்ளலாம். ஆனாலும் சுவன அண்ணன் மற்றும் அவருடைய நான்கு ஆதரவாளர்களும் அவர்களின் பீஜெ டைப் வஹாபிய கொள்கைகளும் தான் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் சார்ந்தவை என்பதை நான் புறக்கணித்தே வருகிறேன், இருந்தாலும் அவர்களுக்கான எதிர்வினைகள் குறித்து அவர்களுடைய கருத்துகள் 'இஸ்லாமை' தாக்குவதாக அவர்கள் புலம்புவதில் இருந்தும் ஏனைய இஸ்லாமியர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நாம் பெரிதாக கவலைப்பட கலவரப் பட ஒன்றும் இல்லை. சுவன அண்ணனின் தலைமை பதவிக்கு போட்டி நடக்காமல் இருந்தால் சரி. சுவன அண்ணனுக்கு நான் எதிர்வினை எழுதுகிறேன் என்பதால் எனக்கு அவர் எதிரி என்பதெல்லாம் கிடையாது, அப்படி இருந்தால் 'அண்ணன்' அடைமொழியை அவ்வளவு எளிதாகப் போட்டுவிடுவேனா ?

*****

அண்ணன் சுவனப்பிரியன் சொல்கிறார், "ஈழத்தமிழர்களைத் தாக்க பிரபாகரனை ஏன் தாக்க வேண்டும் அவர்களின் மதமான இந்துகடவுள்களை அல்லவா தாக்கவேண்டும் ?" என்கிற ஈழப்பதிவர்களின் கூற்று இரு மதங்களுக்கிடையே பிரச்சனைக் கிளப்பும் வகையில் உள்ளதாம்,  சுவனப்பிரியன் அண்ணனுக்கு தெரிந்து இஸ்லாமிய (வஹாபிய) பதிவர்கள் யாரும் பிற மதங்களைத் தாக்கி எழுதியதே கிடையாதாம். அண்ணன் சொல்வதன் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் முழு ஒட்டகத்தையும் குடிசைக்குள் நுழைத்துவிட்டு ஒட்டகமே இந்தப் பக்கம் வரவில்லை என்பது போல் சொல்கிறார். சில நாட்களுக்கு முன்பு தான் "சிந்திக்க சில உண்மைகள்" என்ற பெயரில் பெரியாரின் படத்தைப் போட்டு கிறித்துவ / இந்து மதங்களைப் பற்றி மிகவும் கிழ்தரமாக பல்வேறு இடங்களில் எழுதப்ப்ட்டவைகளை ஒட்டி வெட்டி பதிவுகள் வெளியானது, பெரியார் ஆட்கள் கிறித்துவ மற்றும் இந்து மதங்களை மட்டுமே தாக்கி எழுத என்ன முகாந்திரம் உள்ளது ? அந்த வலைப்பதிவில் பெரியார் படம் இருப்பது தவிர்த்து பெரியாரின் முக்கிய கொள்கையான கடவுள் மறுப்பு குறித்து எந்த இடுகையும் இல்லை என்பதாலும், அந்த வலைப்பு முக்கியமாக கிறித்துவ / இந்து மதத்தினரை தாக்கி எழுதியதால் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தின் சார்பில் எழுதப்படுவது என்பதை அதனை தொடர்ந்து பார்த்துவரும் எவரும் சொல்லிவிடுவர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவை பின்னர் தமிழ்மணம் திரட்டியும் நீக்கியது. 

இஸ்லாமியர்கள் (வஹாபியர்கள்) அவ்வாறு செய்யக் கூடியவர் இல்லை என்று நம்பும், பரப்பும் சுவன அண்ணனுக்கு குறிப்பிட்ட வலைப்பதிவை நடத்தி வந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருக்க ஞாயமில்லை, இருந்தும் சுவன அண்ணன் இஸ்லாமியர்கள் அவ்வாறு செய்யக் கூடியவர்கள் இல்லை என்கிறக் கருத்தை வலைப்பதிவில் எழுதிவருவது போல், சம்பந்தப்ப்ட்ட வலைப்பதிவை எழுதுபவர் ஒரு இஸ்லாமியராக இருக்க தகுதியற்றவர் என்று வெளிபடையாக எழுதி கண்டனம் தெரிவிப்பாரா ? தவிர "UNMAIKAL" என்ற பெயரில் அண்ணனின் பதிவுகளில் பின்னூட்ட வாந்தி எடுப்பவரும் பிற மதங்களை தாக்கிய கருத்துகளைத் தான் அள்ளித் தெளித்துவருகிறார்

தவிர வாஞ்சூர் என்கிற பெரியவர் (இவரு தான் UNMaikal?) நடத்திய வலைப்பதிவில் 'இது தான் இந்தியா' என்ற தலைப்பில் இந்தியாவில் நடைபெறும் மோசமான செயல்களின், அவல நிலையின் வீடியோ காட்சிகளை இணைத்து வெளியிடுவதே பதிவாக தொடர்ந்து வந்தது, அண்ணன் சுவனப்பிரியன் அவர்களிடம் சொல்லிக் கேட்கும் பொழுது, பெரியவர் வாஞ்சூர் ஐயா இந்தியாவின் மீது அக்கரைக் கொண்டுள்ளதால் தான் மனம் நொந்து இந்தியா திருந்த வேண்டும் என்கிற நோக்கில் அத்தகைய வீடியோ காட்சிகளை வெளி  இடுவதாக இட்டுக் கட்டி பதிலும் சொன்னார், சுவன அண்ணன் எனக்கு இதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும், இஸ்லாம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று அன்றாடம் எழுதும் தாங்களுக்கோ, பெரியவர் வாஞ்சூருக்கோ இஸ்லாமியர் பெயர்களில் நடைபெறும் வன்முறைகளும் வீடியோ காட்சிகளும் காணக் கிடைக்கவில்லையா ? இந்தியாவின் மீது கொண்ட அக்கரையின் காரணமாக அதன் மீது ஏற்பட்ட ஆற்றாமையினால் வீடியோ காட்சிகளைப் போட்டு இந்தியாவை திருத்த முனையும் தாங்கள், இஸ்லாம் பெயரில் நடக்கும் தீவிரவாதச் செயல்களும், அல்லாஹூ அக்பர் சொல்லி நடைபெறும் கழுத்தறுப்பு காட்சிகளையும் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டி இஸ்லாமை திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை ?, தான் ஒரு இஸ்லாமியன், பிறகு இந்தியன் என்கிற முன்னெடுப்புகளில் தங்களுக்கும் வாஞ்சூர் ஐயாவிற்கும் இஸ்லாம் மீதான பற்றுதல் தான் கூடுதலாக இருக்க வேண்டும். இது தான் இந்தியா என்ற வீடிய காட்சிகள் கிடைக்கும் உங்களுக்கு இது தான் இஸ்லாம் என்று படம் காட்டுவதற்கு படம் இல்லை என்று வெளிப்படையாக் கூறினால் கூகிளிட்டு தேடித்தர பலர் இருக்கிறார்கள். படம் காட்ட நீங்கள் தயாரா ?

உங்களது இறுதி இறைத் தூதர் மற்றும் இறைத் தூதர்கள் நம்பிக்கைகள் பற்றி எமக்கு எந்தக் கருத்தும் இல்லை, ஆனால் இந்தியாவிற்கான இறைத் தூதர்கள் இவர்களாக இருக்கக் கூடும் என்று திருவள்ளுவர் உள்ளிட்டவர்களை நீங்கள் ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள், மேற்குலக மதங்களில் மட்டும் தான் இறைத் தூதர் சித்தாந்தகள் இருக்கிறது, இந்திய மதங்களில் வழிகாட்டிகளை கடவுளின் அவதாரங்கள் என்று தான் பார்ப்பார்கள், நீங்கள் போகிற போக்கில் இவர் இவர் இறைத்தூதராக இருக்கலாம் என்கிற கூற்று தேவை இல்லாமல் இந்து மதத்தினரை இஸ்லாமுக்குள் அடைக்கும் கூற்றாக இருக்கிறது, உங்களுக்கு உறுதியாக தெரியாத ஒன்றை வலிந்து திணிப்பது ஏன் ?

மீண்டும் ஒருமுறை,

எங்க ஆட்கள் பிற மதங்களை கொச்சைபடுத்த துணியமாட்டார்கள் என்கிற பச்சை பொய்யை அவிழ்த்துவிடாதீர்கள், அவர்கள் சொந்தமாக எழுதவில்லை கட் & பேஸ்டு தான் செய்தார்கள் என்று சப்பைக்கட்டாதீர்கள், இஸ்லாம் பற்றி ஏனையோர் எழுதும் மாற்றுக்கருத்துகளும் அவர்களே உருவாக்கிக் கொண்டது இல்லை, எங்கெங்கோ படித்தவை தான்.

சுவன அண்ணன், நான் இஸ்லாமை எதிர்த்து எதுவும் எழுதுவதில்லைக் காரணம் உங்களையும் சேர்த்து  நான்கு வகாபிய பதிவர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும் அவர்களின் கருத்துகள் மட்டுமே இஸ்லாமிய கருத்துகள் என்றும் நான் நம்புவதில்லை.

இறை நாடினால் மேலும் தொடரும்....

14 ஆகஸ்ட், 2012

பதஞ்சலி பாம்பின் அற்புதம் !


நான்கு நாளைக்கு முன்பு வலைப்பதிவு நண்பர் ஒருவர் 'மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதம் ( பதஞ்சலி தரிசனம் ) (படிக்கத் தவறாதீர்கள் )' இணைப்பைக் கொடுத்து 'இதன் உண்மை தன்மை' குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா ? அறிந்து கொள்ள ஆவல் என்று மின் அஞ்சல் செய்திருந்தார். அந்த இணைப்பில் ஏழு தலை நாகம் காட்சி தந்ததையும், அந்த ஏழு தலை நாகம் சாட்சாத் பதஞ்சலி மகரிஷியே தான் என்றும் அந்த வலைப்பதிவில் எழுதி இருந்தனர்.  நண்பர் இது போன்ற தகவல்களை நம்பக் கூடியவர் இல்லை என்றாலும் சித்தர்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவரையும் மீறி இது அற்புதமாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க, சித்தர்கள் நினைத்தால் இதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று ஒருவேளை அவர் எண்ணி இருந்தாரோ என்னவோ, என்னைமாதிரி ஆளுங்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றால் உண்மையிலேயே அதை பலருக்கும் அனுப்பலாம் என்று கூட அவர் நினைத்திருக்கக் கூடும்.

நாம் ஏற்கனவே மாடு மணி அடிச்சக் கதை, பாம்பு சிவலிங்கத்திற்கு செய்த வில்வ அர்சனைக் குறித்தப் படம், குரங்கு செய்த பூசை எல்லாம் அறிந்தவர் அலசியவர் என்ற முறையில் இணைப்பில் இருந்த ஏழு தலைகள் நாகமும் தகவலும் பெரிதாக ஈர்க்கவில்லை, இந்த தகவலை 'கும்முகிறவர்களெல்லாம் வரிசையாக வாங்க' என்று கூறி கூகுள் கூ(ட்)டலில் இணைத்துவிட்டேன். அந்த தகவலைப் பார்த்த மற்றொரு கூகுள் நண்பர் இந்த பாம்புக்கு ஏற்கனவே மூணு தலை தானே இருந்தது என்று கூறி அவரும் ஒரு இணைப்பை எடுத்து அனுப்பினார். ஏழு தலை நாகம் பதஞ்சலி மகிரிஷி தான் என்று சத்தியம் செய்து இது கிராபிக்ஸ் படமில்லை என்று சாதித்துக் கொண்டிருந்த பதிவில் சென்று அந்த 'மூன்று தலைகள் நாகம்' குறித்த இணைப்பைப் கொடுத்துப் பின்னூட்டம் போட்டப் பிறகு பதிவையே தூக்கிவிட்டார்கள். ஆனாலும் வேறொரு இணையப்பக்கத்தில் அந்த தகவல் அப்படியே இருக்கிறது.

* ஒரு தகவலை யாரேனும் சொன்னால் அதன் நம்பகத்தன்மை குறித்து கொஞ்சம் கவலையின்றி நாலு பேருக்கு வதந்திகளைப் பரப்புவதில் உள்ள இன்பம் என்ற வகையில் இதைப் பார்ப்பதுடன், இது போன்றெல்லாம் அற்புதங்கள் நடந்தால் தான் தன் நம்பிக்கைகள் போற்றப்படும் என்கிற தவறான நம்பிக்கைகளையும் பலர் கொண்டு இருக்கின்றனர்.


*****

பாம்பு, இருட்டு இதற்கான அடிப்படை அச்சம் ஒவ்வொரு மனிதருக்குமே உண்டு, பாம்பு, இருட்டு (எமன்) இவைகள் தெய்வமாக மாறியதற்குக் காரணமே அதன் மீது இருக்கும் அடிப்படை பயம், அதைப் போற்றிவிட்டால் அது நம்மை அச்சப்பட வைக்காது அல்லது அச்சமின்றி இருக்கலாம் என்ற உளவியல் காரணங்களால் இவைகள் தெய்வமாயின, நாகம் என்று வாய் சொல்லாகச் சொன்னால் கூட ஏற்படும் அச்சத்தைப் போக்கிக் கொள்ள 'நல்ல பாம்பு' என்று கூறிவருகிறோம், நல்ல பாம்பு என்று கூறிவந்தாலும் அதற்கு நாம் முத்தம் கொடுக்க முடியுமா ? அச்சமற்றவன் (தைரியசாலி) என்று கூறிக் கொள்ள அச்சம்(பயம்) இல்லாதது போல் நடிப்பது போன்றது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ள நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே பாம்பை தெய்வமாக்கியதும், நல்ல பாம்பு என்றதும். பாம்புகள் நம்மைப் பார்த்து அச்சமடைகின்றன, பல்வேறு உயிரினங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவற்றிற்கு இயற்கை வழங்கி இருக்கும் பாதுகாப்புகள் போன்றவையே பாம்புக்கு நஞ்சு. மற்றபடி யாரைத் தீண்டலாம் என்று எந்த பாம்பும் வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பது கிடையாது.

அரங்கநாதன் அல்லது நாரயணனின் படுக்கையாகவும், சிவன் கழுத்து மாலையாகவும் பாம்புகள் இருப்பதற்கு என்ன காரணம் ? கடவுளுக்கு உருவங்கள் உருவகங்கள் போல் பாம்பு அந்த உருவகத்தில் அமைந்த மற்றொரு உருவகம் அவ்வளவு தான், அதற்கு மேல் ஒன்றுமே இல்லை, பொதுவாக பஞ்சமா பாதகம் அல்லது பெரும்பாவங்கள் என்று சொல்லப்படும் (மிதமிஞ்சிய) காமம் அல்லது காமவெறி, வெறுப்பு, பொறாமை, பேராசை, ஆணவம் ஐந்து தீய குணங்களைக் கொண்டவன் தீயவன் என்றும் அது இல்லாதவனை நல்லவன் என்றும் சொல்லுகிறார்கள், இதை இந்தி அல்லது வடமொழியில் காம, க்ரோத, லோப, மோக, அஹங்காரம் என்று சொல்லுவர். தீய எண்ணங்களால் ஆட்கொள்ளப் படாததே தெய்வாம்சம் அல்லது தெய்வீகத் தன்மை என்று சொல்லப்படும், நாகம் தீயது தீண்டி கொல்லக் கூடியது என்ற உருவகத்தில் இந்த ஐந்து தீய எண்ணங்களை இணைப்பாக ஐந்து தலை நாகம் உருவகப்படுத்தப்பட்டு அது  குடையாக இருப்பதாகவும் பஞ்சணையாக இருப்பதாகவும் நாராயணன் படங்கள் வரயப்பட்டது, அதே போன்று தீய எண்ணத்தின் உருவகமான நாகத்தை அணிகலனாக அணிந்தவர் என்று சிவன் படங்கள் வரையப்பட்டன. வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை என்பது வெளி ஆட்களுக்குத் தான் அன்றி அதை வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கைக் கிடையாது. என்னதான் ஒருகடியில் ஒரு கிலோ சதையை கவ்வி எடுக்கக் கூடிய நாயாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தி வளர்ப்பவர்களுக்கு அது நன்றி உள்ள நாய், வளர்ப்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளவை, அந்த நாய் வளர்ப்பவர்களை ஒன்றும் செய்யாது தவிர அவர்களை பாதுகாக்கும், அதைப் பார்த்து வளர்ப்பவர்கள் அச்சம் அடைவதில்லை, தீய எண்ணங்களின் பிடியில் இருப்பவர்களுக்கும். 

தீய எண்ணங்களை கட்டுபடுத்தி வைத்திருப்பவர்களுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளே மனிதன் - தெய்வம் குறித்த வேறுபாடுகள், இதைத் தான் இந்திய சமய உருவ வழிபாடுகளின் உருவங்களில் பாம்புகளும் சேர்த்தே வரையப்பட்டிருப்பதாகக் காண முடியும், முருகனுக்கு கால் அடியிலும், பிள்ளையாரின் இடுப்பு பட்டியாகவும் பாம்பு இருக்கும். இவை தத்துவ ரீதியான விளக்கம், இதைச் சொல்வதால் நான் இந்திய சமயங்களுக்கு முட்டுக் கொடுக்கிறேன் என்று பொருளும் இல்லை, தத்துவங்கள் மதங்களைக் கடந்தவை, மனித நலனுக்காக ஏற்படுத்தி வைக்கப்பட்டவை என்பதை மறுக்கும் எண்ணம் எனக்கு அமையப் பெற்றதும் இல்லை, தந்தைப் பெரியாரையும், இராமலிங்க வள்ளலாரையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் மனநிலை வாய்க்கப் பெற்றவன் நான், தவிர விமர்சனங்களுக்கு பயந்து 'மூடிக் கொள்ளலாம்' என்று என்றுமே நினைத்ததும், என்னைப் பற்றிய எண்ணம் மாறிவிடுமோ என்றெல்லாம் நான் நினைப்பதே கிடையாது.

உண்மையிலே ஏழு தலைகள் கொண்ட நாகம் இருப்பதாக நம்புவதன் விளைவே பதஞ்சலி முனிவர் பற்றிய அற்புதமாக பரப்பப்பட்டுள்ளது, அவர்கள் காட்டி இருக்கும் படத்தில் பதஞ்சலி முனிவருக்கு பின்னால் இருக்கும் படத்தில் ஐந்து தலைகள் நாகமே உள்ளது, இவர்கள் எப்படி ஏழு தலைகள் நாகத்தைக் காட்டி பதஞ்சலி காட்சி கொடுத்தார் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை. இதற்கு பதிலாக சப்தரிஷிகள் காட்சி கொடுத்தார்கள் என்றாவது இவர்கள் நம்பி இருக்கலாம், ஆக தகவல் பிழை அடிப்படையிலும் இவர்களின் நம்பிக்கைகள் பொய் தான்.

இவர்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலுமே இது போன்ற அற்புதகங்களுக்கு வாய்பிருப்பதாக நம்புகிறார்கள், இரண்டு தலையுடன் பிறந்தாலே அந்த பாம்பு பரிதாபத்துக்கு உரியது என்றே சொல்லுகிறார்கள், ஒரு தலை வலப்புறமாக செல்ல விருப்பப்பட மறு தலை இடப்புற செல்ல விரும்பம் போராட்டத்தில் பாம்பு முடிவெடுக்கத் தெரியாமல் திணறிக் கொண்டு இருக்குமாம், பின்னர் எந்த தலையின் மூளை விரைவாக செயல்படுகிறதோ அந்தப் பக்கம் பாம்பு செல்லுமாம், ஒரு தலைக்கு பசி உணர்வும், மறு தலைக்கு உண்ட களைப்பும் இருக்குமாம், இரண்டு தலைக்கே இப்படி என்றால் ஏழு தலை நாகம் இருந்தால் அது படும்பாடு அந்தோ பரிதாபம்.

இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே மகப்பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதும், இரண்டு தலை பாம்பு, ஆமை உள்ளிட்டவை இருப்பதும் அதிசயமோ அற்புதமோ இல்லை, அவை இயற்கையில் சில வேளைகளில் நடைபெறும் கூறுகளே, அவற்றிக்கு அறிவியல் ரீதியான காரணங்களும் விளக்கங்களும் உள்ளன, இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிசயம், அற்புதம் என்று நம்பப்படாத போது ஏழு தலைகளுடன் ஒரு நாகம் ஒரு வேளை இருந்தால் அது மட்டும் எப்படி அதியமாகவோ, அற்புதமாகவோ நம்ப்படும் என்று தெரியவில்லை, இறை அற்புதங்கள் என்றால் அது நம்பக் கூடியத் தன்மையைக் கடந்தது என்ற தவறான அடிப்படைப் புரிந்துணர்வுகளலாம், அவை நடைபெறுவதால் இறைவனின் இருப்பு உறுதிப்படும், தத்தமது நம்பிக்கைகள் போற்றப்படும், பொருள் படும் என்று நம்புவதன் விளைவே அற்புதங்கள் குறித்த மனிதத் தேடலாகவும், அவை குறித்த கட்டுகதைகளை பரப்புவதாகவும் உள்ளது.

*****
நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது, 

"நம் நாட்டில் சூரிய நமஸ்காரத்தை வழக்கமாக கொண்டுள்ள பலரும் அறியாமல் நோயை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் கண்பார்வை மங்கியவர்களின் விகிதாச்சாரமும் தோல் வியாதியின் விகிதாச்சாரமும் அதிகமாக இருப்பதற்கு இந்த சூரிய நமஸ்காரமும் காரணமாக இருக்கலாம்." - சுவனப்பிரியனின் உளறல்.

முரண்பாடுகளைத் தான் நாம் விமர்சனம் செய்கிறோம், குனிந்து நிமிரும் தொழுகையால் கூன் விழும் ஆபத்து உண்டு, முதுகு தண்டுவடம் தேயும், பாதிப்பு அடையும், ஆண்களின் விந்தகம் (Prostate)  அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதால் பாதிக்கப்படும் என்று ஒரு நாசா விஞ்ஞானி கூறியுள்ளார் என்று ஒருவர் காணொளி காண்பித்தால் சுவனப்பிரியனுக்கு இனிப்பாக இருக்குமா ?

மேலும் இணைப்புகள்.
ஆக ஒருவருக்கு அற்புதமாக தெரிவது மற்றவருக்கு அற்புதமாக தெரியத் தேவை இல்லை, இவையெல்லாம் அவரவருக்கு வெறும் நம்பிக்கை மட்டுமே.

*****

இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதும் அற்புத விளக்கங்களினாலும், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி கடவுள் நினைத்தால் சாத்தியமே என்று இவர்கள் எழுதிவதில் இருந்தும் எனக்கு விளங்காதவை ஒன்று உண்டு. இயற்கைக்கு மேம்பட்ட சக்திகள் எல்லாம் கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உண்மை என்றால். ஓருபால் சேர்கையாளர்களையும், திருநங்கைகளையும் @#%%&&& கொழுப்பெடுத்தவர்கள், அரிப்பெடுத்தவர்கள் என்றும் இவர்கள் எள்ளி நகையாடுவதன் முரண்பாடுகள் எத்தகையது ?  இவையெல்லாம் அற்புதம், விசித்திரம் என்ற வகைக்குள் வராதா ? இயற்கைக்கு மாறுபட்டு பாம்புக்கு பல தலைகள் இருந்தால் அதிசயம், அற்புதம், இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பால் விருப்பம், திருநங்கைத் தன்மை ? இவர்களின் படைப்புகள்  மட்டும் யார் செயல் ?

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கு செய் குடும்பக் கட்டுப்பாடு - கலைஞானி கமலஹாசன்

24 மே, 2012

'சுன்னத்' - சுவனப்பிரியன் செய்த அறுப்பு வாதம் !

நண்பர் சுவனப்பிரியன் தனது மதம் சார்ந்த பிரச்சாரங்களை மதம் சார்ந்தது என்று எழுதாமல் மாற்றுவழியில் மனிதனுக்கு மகத்தான நன்மை என்ற ரீதியில் சுன்னத் பற்றி ஒரு பதிவை எழுதி இருக்கிறார். இதே போன்ற அவரது பதிவுக்கு எதிர்வினை ஏற்கனவே எழுதப்பட்டது என்றாலும், அவரது மத ரீதியிலான பொய் பிரச்சாரங்களை அவ்வப்போது நாமும் விமர்சிப்பதன் மூலம் அவரது பிரச்சாரங்களை முறியடிக்க முடியாவிட்டாலும், அவரது பதிவைப் படித்துவிட்டு 'மாட்டிக் கொள்ளாமல்' பாலியல் தொழிலாளியை நாடி உயிர்கொள்ளி நோயை ஒரு சிலர் ஆட்கொள்ள நேர்ந்தால் தடுக்க முடியும் என்பதால் இதை மீண்டும் எழுதுகிறேன், மற்றபடி அவர் பதிவை எவரும் பெருட்படுத்தமாட்டார்கள் என்றால் எனக்கு ஒன்றும் இல்லை.

சுவனப்பிரிய ன் முதலில் பதிவுக்கு தலைப்பு ''சுன்னத் பண்ணுங்க! எய்ட்ஸை விரட்டுங்க!' ' என்று தான் வைத்திருந்தார், பின்னர் ' 'சுன்னத்'(கத்னா) பண்ணிக் கொள்ளும் ஜிம்பாப்வே எம்பிக்கள்!' என்று மாற்றியுள்ளார்.

சுன்னத் எய்ட்ஸ் நோயை தடுக்குமா ? என்பதற்கு முன்பு சுன்னத் வரலாறு பற்றிப் பார்ப்போம், ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோலை அகற்றிக் கொள்ளும் பழக்கம் யூத இனத்தின் பழக்கமாக இருந்தது, இதற்கு அடிப்படைக்காரணம் கடும் குளிர் மற்றும் வரட்சி ஆகிய காரணங்களுக்காக அவர்களிடையே குளிக்கும் பழக்கமும் குறைவாக இருந்தது, அதனால் பருவமடைந்த ஆண்களுக்கு ஆண்குறியில் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு அதற்கான தீர்வு முந்தோலை அகற்றிக் கொள்ளுதல் என்று வழக்கமாக பின்னர் மதக்கடமைகளில் ஒன்றாக வழியுறுத்தப்பட்டது, பூணூல் அணிந்தவர் 'உயர்ந்தோர்' என்று பரப்பட்டதைப் போல் சுன்னத் செய்து கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள் என்ற கருத்து யூதர்களிடம் இருந்து பின்னர் அவ்வாறு செய்து கொள்ளாதவர்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆனதும், ஏற்கனவே யூத மதம் என்கிற நிறுவனத்தை துவங்கியவர்கள் என்ற நிலையில் யூத இனம் மேலனதாகவும், அவர்களது செயல்கள் உயர்ந்த பண்பு நலன் சார்ந்த, நாகரீகமேன்மை பட்டதாகவும் அரபுக்களிடமும், ரோமானியர்களிடமும் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது, பின்னர் யூத மதப்பிரிவுகளாக கிறிஸ்தவமும், இஸ்லாமும் பிரிய 'சுன்னத்' செய்து கொள்வது மதப் பழக்கம், ஒழுக்கம் சார்ந்தவை என்பதாக கொள்கையாக்கிக் கொள்ளப்பட்டது. 19 நூற்றாண்டிற்கு முன்பே கிறிஸ்தவ பிரிவு சுன்னத் செய்து கொள்ளும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டது, இன்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் யூதர்கள் அல்லாத கிறித்துவர்களில் சுன்னத் செய்து கொள்பவர்கள் 5 விழுக்காட்டிற்கும் குறைவே.

சுன்னத் செய்து கொள்ளாத ஐரோப்பிய பிரபலங்கள் Famous Intact Men குறித்த தகவல்களை அந்த இணையத் தளத்தில் காணலாம்.

இஸ்லாமியர்கள் சுன்னத் பழக்கம் கைவிடப்படாமல் இருப்பதற்குக் காரணம் ? வேறு ஒன்றுமே இல்லை, அவை குரானிலும் கதீசிலும் சொல்லப்பட்டு கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை. குரான் கட்டளையை மீற அவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் அவர்களால் அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க முடியாது. அதை ஞாயப்படுத்தச் சொல்லி யாரும் கேட்காவிட்டாலும், நெற்றியில் கிரல் விழுந்த ஒருவர் உலகில் உள்ள எல்லோருக்கும் அதே கீரல் இருந்தால் தன்னைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்பதாகத் தான் இவர்கள் அதை மற்றவர்களுக்கு 'பரிந்துரை' செய்கிறார்கள்.

சுன்னத் செய்து கொள்வது எய்ட்ஸ் பரவலை தடுக்கிறதா ?

இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, காரணம். எய்ட்ஸ் பரவல் பாதுகாப்பற்ற பாலியல் உறவால் பரவுகிறது என்றாலும், அவ்வாறு பாதுக்காப்பற்ற பாலியல்உறவை நாடும் சுன்னத் செய்யப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ளாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சுன்னத் செய்யப்பட்ட ஆண் ஒருமுறை பாலியல் தொழிலாளியை நாடி நோயைத் தொற்றிக் கொள்ளவில்லை என்றால் அடுத்த் முறை அவர் கவலைப்படாமல் செல்லலாம் என்று சொல்ல ஒன்றும் இல்லை. உலக சுகாதார நிறுவனங்கள் இத்தகைய பொய் பிரச்சாரங்களை நிராகரித்துவருகின்றனர், மாறாக பாதுக்காப்பான பாலியல் உறவை நாடச் சொல்லுகிறார்கள்.

மனைவியர் தங்கள் கணவனை சுன்னத் செய்து கொள்ளச் சொல்வது 'நீ பாலியல் தொழிலாளியிடம் சென்றுவருவதை நான் மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறேன்' என்பதே ஆகும், கணவனின் வருமானம் மட்டும் போதும் எங்கு 'போனாலும்' கவலை இல்லை என்று எந்த ஒரு மனைவியும் நினைக்கமாட்டாள். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு எய்ட்ஸ் என்பது காற்றில் பரவும் நோய் சுன்னத் செய்து கொள்ளாதவர்களை அது 'கப்' என்று பிடித்துக் கொள்ளும் என்ற தகவல் பரப்பட்டாலன்றி அறிவுள்ள எவரும் நன்றாக ஒழுக்கமாக நடந்து கொள்ளும் கணவனை நீ அறுத்துக் கொண்டு வா என்று சொல்லமாட்டார்கள், ஒருவேளை ஆப்பிரிக்க பெண்களுக்கு எய்ட்ஸ் காற்றில் பரவும் நோய் என்று சொல்லப்பட்டதோ ?

கணவர்களான ஆண்களுக்கு சுன்னத் வழியுறுத்தும் சுவனப்பிரியன் மனைவியர்களான பெண்களுக்கு என்ன வழியுறுத்துவாறோ ? ஆப்பிரிக்க நாடுகளில் செய்யப்படும் பெண்களுக்கான சுன்னத் ?

*****

சுன்னத் செய்வது என்பது காட்டுமிராண்டி பழக்கம், இதை மதப் பழக்கம் என்றால் அதில் சொல்வதற்கு விமர்சனம் செய்ய ஒன்றும் இல்லை, அலகு குத்தி காவடி எடுப்பதற்கு என்ன விமர்சனமே அதே போன்றதுதான், அது அம்மதப் பழக்கவழக்கம் யாருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை இல்லை, செய்து கொள்பவர்களுக்கு இல்லாத அக்கரை நமக்கு ஏன் என்று விட்டுவிடலாம். ஆனால் அது பொதுவானது, கடைபிடிக்க வேண்டியது என்னும் போது தான் நாம் விமர்சனம் செய்கிறோம், மதக் கடமை என்றாலும் இவை காட்டுமிராண்டி பழக்கம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. காரணம் ?

முதலில் சுன்னத் செய்து கொள்வதோ உடலில் ஏதேனும் மாற்றம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பம் என்றாலும் இவை ஒருவரிடம் அவருடைய அனுமதி பெறாமல் செய்வது கொடுமையான ஒன்று, குறிப்பாக ஆண் குழந்தைகள் பிறந்ததும் இரண்டு வயதிற்குள் மதக் கடமை என்று நிறைவேற்றிவிடுகிறார்கள், அதில் குழந்தைக்கு என்ன விருப்பம் இருக்க முடியும் ? ஒரு ஆண் வளர்ந்த பருவ வயதில் மதக் கடமை ஒன்று இருக்கிறது நிறைவேற்றுவது உனது கடமை என்று சொன்னால் அவனுடைய விருப்பம் பற்றி கேட்கும் ஒரு வாய்ப்பு அது பற்றிய மத ரிதியிலான புரிந்துணர்வும் அவனுக்கு இருக்கும், அவனுடைய அனுமதியுடன் அதை செய்துவிடமுடியும், ஆனால் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளை மதக் கடமைகள் என்று கூறி அறுத்துப் போடுவதை (Child Abuse) மதக் கடமை என்று நியாப்படுத்தினாலும் அதை காட்டுமிராண்டித் தனம் என்று விமர்சனம் செய்வதில் தவறே இல்லை.

*****

ஒரு சில ஆண்களுக்கு பிறவி குறைபாடாக முன் தோலை பின்னுக்கு தள்ள முடியாத நிலையில் மருத்துவ தீர்வாக சுன்னத் செய்யப்படுகிறது, மற்றபடி நல்ல நிலையில் இருக்கும் ஆணை அறுத்துக் கொள்ளச் சொல்வதில் எந்த ஒரு அறிவார்ந்த செயலும் இருப்பதாகத் தெரியவில்லை, பாலியல் நோய் பற்றிய விழிப்புணர்வில் பாதுகாப்பான உடல் உறவுக்குத்தான் வழியுறுத்த வேண்டுமே அன்றி சுன்னத்தை முதன்மைத் தீர்வாக செல்வது அறியாமையின், மதப்பற்றின் வெளிப்பாடே.

கைவிரல்களில், நகங்களில் அழுக்கு சேராத நாளே இல்லை, கை கழுவி விட்டு தான் சாப்பிடுகிறோம், அதற்காக நகங்களை வேருடன் பிடுங்கிக் கொள்ளுங்கள், கரண்டியால் சாப்பிடப் பழகுகங்கள் என்று யாரும் சொல்வது கிடையாது, ஆண்குறியில் அழுக்குகள் சேர்வது இயல்பான ஒன்று நாள் தோறும் குளிக்கும் போது அதை கழுவ எவ்வளவு நேரமாகும் ? அதைத் தவிர்க்க ஏன் வெட்டிக் கொள்ள வேண்டும் ? என்றோ ஒரு நாள் பல்வலிவரலாம் பற்களை பிடுங்கிக் கொள் நல்லது என்றால் பல்லின் பயன் ? முற்றிலும் இழக்கிறோம். அதே தான் சுன்னத் செய்து கொள்ளும் ஆண்கள் ஆண் உறுப்பின் மென்மையை இழக்கிறார்கள், அதானால் கிடைக்கும் முழுமையான உடல் உறவு மற்றும் தன்னின்ப பழக்கத்தின் முழுச் இன்பத்தையும் இழக்கிறார்கள். ஏற்கனவே சுன்னத் செய்யப்பட்டு உணர்வு நரம்புகளின் உணர்வுகள் குறைந்த நிலையில் அதன் மீது ஆணுறையும் அணிந்து கொள்ளும் ஆண்களுக்கு உடலின்பம் என்பது 50 விழுக்காடு கிட்டுமா ? என்பதே ஐயம். சுன்னத் செய்யப்பட்ட ஆண்குறி ரப்பர் ஆண்குறிகளைவிட சற்று துடிப்பானது என்று மட்டுமே சொல்லலாம், இயற்கை வழங்கிய அற்புதமான முன் தோலை வெட்டிக் கொள்வதால் ஆண்களுக்கும் நட்டம், அதை வெட்டிக் கொண்டு பாலியல் தொழிலாளியை நாடிவாருங்கள் என்று சொல்ல பெண்களுக்கும் நட்டம்.

இவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் ? வேறு என்ன ? மேலே சொல்லி உள்ள 'முகத்தில் கிரல் பட்டவன் நிலையே' நாம் அவர்களைப் பார்த்து பரிதாப்படுவோம், ஆண் குழந்தைகள் சுன்னத் செய்வதிலிருந்து முற்றிலும் காப்பற்றப்படவேண்டும், மதவாத மூடப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் ஒழிய வேண்டும்.

சுன்னத் செய்யச் சொல்வதைவிட இரண்டு குழந்தைப் பெற்ற ஆணை கு.க செய்யது கொள்ளச் சொல்வது தான் மிக முக்கியமானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கள்ளத் தொடர்பில் உருவாகும் கருவையும் தடுக்க முடியும்.

Rights of Parent and Child

Infant circumcision violates the UN Declaration of Human Rights.
Article V, United Nations Declaration of Human Rights states that "No one shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment." It says nothing about circumcision of infants nor when it is chosen by adolescents and adults. This Article is aimed fairly and squarely at the treatment of captives, prisoners and suspects by law enforcement and military authorities. Its only relevance to circumcision is to prohibit this as a forcible treatment of captives or prisoners.
Circumcision, with its proven prophylactic benefits, cannot ever be officially regarded as contravening the UN Declaration when performed by suitably qualified persons at the request of the patient or his legal guardians.
Parents have no right to inflict circumcision on their sons.
Numerous research projects have shown that there is a small net prophylactic (i.e. preventative) benefit from infant circumcision which doesn't accrue if the circumcision is performed after infancy. Furthermore, in a number of cultures the religious or social norm is for boys to be circumcised. If a boy is not circumcised as an infant then these benefits are denied to him.
An infant cannot make his own decision to be circumcised (just as he cannot make his own decisions about immunisation, religious upbringing, choice of schooling, etc). Parents have a right and a duty to make, on behalf of a child, those decisions which he cannot make for himself. It is thus up to the parents to make the decision based on what they see as the benefits and risks. They make many other far-reaching decisions for their children every day, so why not this one too?
Infant circumcision is highly traumatic for the boy.
There is little evidence that circumcision itself is more than slightly stressful for the average baby. All babies cry when they are undressed or restrained. Many babies sleep quite peacefully through their circumcision, whilst others go to sleep contentedly as soon as they are comfortably dressed again after it.
General anaesthetics should normally be avoided with infants, but a small amount of local anaesthetic to provide a dorsal penile nerve block can be used. Most doctors (and all Jewish Mohels) prefer to completely avoid the small risks posed by any anaesthetic agents. Instead, a few drops of wine or a sugar solution pacifier have been found to have excellent results.
A baby's nervous system is not as highly developed as in an older child, although he can feel some pain, neither is his memory. A baby cannot localize any pain from his circumcision; has no sense that his penis is in any way different from any other part of his body; and doesn't remember anything of the circumcision (whereas an older child - say over 2 years old - will localize and remember any pain).

இணைப்பு : 12 Reasons to Say “No” to Circumcision

4 மே, 2012

மதுரைக்கு நித்தி, காஞ்சிக்கு தேவ நாதன் ?

பாரம்பர்ய மிக்க சைவ மடத்தில் நித்தியானந்தன் ஆதீனமா ? ஐயோகோ என்று ஒப்பாறி வைக்கிறார்கள், இது வஹாபி மதவாத பதிவர்கள் இல்லை, தமிழ் இந்து தளத்தினர். இரண்டிற்கும் வேறுபாடு ஓநாய் ஆட்டின் மீது காட்டும் அக்கரை மற்றும் காலில் அப்பி இருக்கும் நரகலை கழுவாமல் அடுத்தவன் காலுறை (சாக்ஸ்) நாறுது என்று சொல்வதும் போன்றது தான்.

"ஒரு தனியார் அல்லது அரசாங்க அலுவலகம் இருக்கிறது. அதில் பணிபுரியும் அதிகாரி அல்லது ஊழியர் மீது குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அப்போது அந்த நிறுவனம் அல்லது அலுவலகம் என்ன செய்கிறது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறது. அந்த விசாரணை முடிந்து அவர் மீது குற்றம் இல்லை நிரபராதி என்று முடிவாகும் வரை அவரை இடைக்கால பணி நீக்கம் செய்து வைக்கின்றனர். குற்றம் சுமத்திய பிறகு தான் அந்த குற்றத்தைச் செய்யவில்லை என்று அசைக்கமுடியாத ஆதாரங்களைக் காட்டி அதிலிருந்து வெளிவருவதுதான் சரியான வழி. குற்றச்சாட்டுக்கு ஆளான எவரும் முதலில் சொல்வது நான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதுதான். ஆனால் குற்றம் சாட்டுபவர்கள் சான்றுகளைக் காட்டி குற்றத்தை நிரூபிப்பாரானால் குற்றம் உறுதியாகும். அப்படி அவர் குற்றம் செய்யாதவர் என்று விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது அந்த கறை படிந்துதான் இருக்கும். நீதிமன்றமும், பொதுமக்களும் அவர் குற்றம் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் தர்மம் என்றாலும், மக்கள் மனத்தில் ஒரு நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னார் இன்ன குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆச்சே, இவர் இந்த பெரும் பதவியை வகிக்கலாமா என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் தோன்றுவது இது முதன்முறை இல்லை. இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது." - தமிழ் இந்து.

இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது - என்று இவர்கள் காஞ்சி மட கசமுசாக்களைச் சொல்கிறார்களா ? அல்லது நித்தியின் கசமுசாக்கள் இன்னும் நீர்த்துப் போகமல் அதாவது அவை வதந்தி என்ற நிலையை அடையாமல் இருக்கிறது என்று சொல்ல வருகிறார்களா ? ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை காஞ்சி மடம் பற்றிச் சொல்ல விரும்பினால் அதை நேரிடையாகச் சொல்லி இருக்க வேண்டியது தானே ? இல்லை நித்தியைத் தான் சொல்கிறார்கள் என்றால் காஞ்சி மடம் பற்றி பொத்திக் கொண்டு இருப்பது ஏன் ? நித்தியாவது காமம் கடந்த சாமியார் என்று பரப்பி திருமணம் ஆனப் பெண்ணுடன் காம லீலைகளில் ஈடுபட்டான் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும், நித்தியின் மீது கொலைக் குற்றச் சாட்டு எதுவும் பதியப்படாத நிலையில், கொலைக் குற்றச் சாட்டில் வாய்தா வாங்கி, நீதிபதியையே வளைக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டில் காஞ்சி சுப்புரமணி குப்புறக்கிடப்பதை இதே ரீதியில் கண்டிக்காமல் நித்தி தேர்வை குறைச் சொல்ல இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? காஞ்சி மடத் தலைவர் விதவையைக் கூட விட்டுவைக்காதவர் என்கிற குற்றச் சாட்டு மக்கள் மனதில் பதிந்திருக்கும் போது அது குறித்து எதுவும் பேசாத இவர்கள் நித்தி பற்றி கட்டுரை எழுதுவதன் உள்நோக்கம் இந்து மத நன்மையா ?

தவிர சட்டமன்றத்தினுள் ஆபாசப் படம் பார்த்தார்கள் என்கிற சர்சைகளில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிக்கி நாறிப் போய் இருக்கும் போது மதுரை ஆதினத்திற்கு யார் வந்தால் இவர்களுக்கு என்ன ? இந்திரன் ரிஷி பத்தினிகளை மாறுவேடம் கொண்டு புணர்ந்தான் என்பது போன்ற இந்து சமயங்களில் பல்வேறு பாலியல் குற்றச் சாட்டுகள் பண்பாட்டு தொன்மக் கதைகளாக காலம் காலமாக இருந்துவரும் போது நித்தி மட்டுமே முதன் முறை சிக்கி இருப்பது போன்றும் இதை கண்டிக்கும் தொணியில் எழுதுவதற்கு இவர்களுக்கு இருக்கும் அருகதை என்ன ? இந்திரனை இன்னும் தெய்வமாக வழிபடுபவர்களுக்கு நித்தியின் சரசம் தகாத செயலாக இருப்பதாக நினைப்பது முரண்பாடாக இருக்கிறது. இவர்கள் தெய்வ நிலையில் வைத்திருக்கும் இந்திரனே சபலக் கேசாகத்தான் காட்டப்படும் போது தான் சொக்கிப் போய் இருந்த ஒரு நடிகை தனக்கு சேவகம் செய்ய வந்த போது நித்தி உணர்ச்சிவசப்பட்டான்  என்பது என்ன நடக்கக் கூடாதா நிகழ்வா ? 

காரணம் ஒன்று தான், காஞ்சி மடம் பார்பனர் தலைமை எனவே அங்கு எது நடந்தாலும் தற்காக்க வேண்டும், பூசி மெழுக வேண்டும், முடியாவிட்டால் மவுனாமாக இருக்க வேண்டும், நித்தி ஒரு சூத்திர சாமியார், சூத்திரன் தப்பு செய்தால் அவனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும், பதவி கொடுக்கக் கூடாது. இதைத் தவிர இவர்கள் வேறு என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படியும் இல்லை என்றால் பார்பன மேலான்மை ஓங்கும் மதுரை மீனாட்சிக் கோவிலை ஆதினம் வசம் கொண்டுவரும் பொறுப்பு நித்தியிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்ட பதை பதைப்பா ? அவன்கிட்ட இருக்கும் பணத்திற்கு செய்தாலும் செய்வான் என்று நினைத்து அஞ்சுகிறார்களோ.

இவர்களுக்கு அக்கரை இருந்தால் ஏற்கனவே வழக்குகளில் சிக்கி இருக்கும் காஞ்சி மடத்தலைவர்களை நித்திக்கு இவர்கள் சொல்லி இருக்கும் பரிந்துரைகளைப் போலவே சொல்லி ஓரம் கட்டிவிட்டு அதன் தலைமைக்கு தேவநாதனை கொண்டுவரலாம், தேவனாதனை இன்னும் குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டது போல் தெரியவில்லை, நித்தி தனக்கு சொன்னது போல் தேவநாதனின் விடியோக்கள் கிறிஸ்துவ மிசனறிகளில் கிராப்பிக்ஸ் வேலை என்று தேவநாதனனுக்கு ஆதரவாக இருக்கலாம், தேவநாதனும் புனிதம் அடைந்துவிடுவான், ஒன்று தான் இடிக்கிறது, காஞ்சி மடத்திற்கு பிரம்மச்சாரிகள் தான் வாரிசாக வரமுடியும். அப்பறம் அப்படி இல்ல்லாமல் இருப்பது வேற. தேவநாதன் தற்போது வாய்ப்புகளின்றி பிரம்மச்சாரியாகத்தான் இருப்பான் கூடவே பிறப்பால் அவர்கள் பாஷையில் பிராமணன், வேறென்ன தகுதி வேண்டும் ? ஒரே கல்லில் இரண்டு மாங்காய், காஞ்சி மடத்தலைவர்கள் மானமிக்கவர்கள் குற்றச் சாட்டுகள் நீர்த்துப் போகும் வரை பதவியில் நீடிக்க மாட்டார்கள் தவிர தேவனாதனின் தவறுகளையும் மறைத்துவிடலாம். செய்வார்களா ?

2 மே, 2012

சுவனப்பிரியன் சுவனாநந்தாவாக மாற இருந்தாரா ?

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் நித்தியா நந்தாவால் இந்து மதம் பாழ்பட்டுவிட்டது இனி என்ன செய்யப் போகிறீர்கள் இந்து நண்பர்களே ? என்ற கேள்வி கேட்டு என்னையும் இன்னும் சிலரையும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதில் சென்றப் பதிவில் சொல்லியாகிவிட்டது, இந்தப் பதிவில் அதையே பேச ஒன்றும் இல்லை, இருந்தாலும் சுவனப்பிரியரின் அந்த ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நித்தியாநந்தாவின் கடந்த கால ஆன்மிக வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரைத்தான் ஒரே இந்து நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக் கொண்டும் தன்னையும் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் பக்தராக இணைத்துக் கொண்டு தன் பெயரை சுவனாநந்தா என்று மாற்றிக் கொள்ள இருந்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது, இடையில் ரஞ்சிதா - நித்தியாநந்தா கசமுசா நடந்த பிறகு தனது ஒரே நம்பிக்கையும் வீழ்ந்துவிட தனது கவனத்தை வஹாபிய பிரச்சாரங்களில் சுவனப்பிரியன் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடும், பின்னர் நித்தி போனால் சுத்தி என்று மதுரை ஆதினத்தின் பக்கம் சுவனம் கவனம் திருப்பி இருந்த வேளையில் தான் நித்தி அங்கும் நுழைய இந்து மதம் முற்றிலும் சீரழிந்துவிட்டது இனி ஒருவராலும் அதனை சீர்படுத்த முடியாது என்றே வெகுண்டெழுந்திருக்கிறார், இவரே இந்து மதத்திற்கு இறுதி இறைத்தூதர் ஆகி இருக்கலாம். அதைவிடுத்து பின்ன என்ன சார் ? அவர் அன்றாடம் வஹாப்பிய மார்க்கத்தில் வடிவது தேன் என்றும் பிற மதங்களில் வடிவது வேப்பெண்ணை என்றே பிரச்சாரம் செய்த வேளையில் வேப்பெண்ணையில் எலிப்புளுக்கை இருந்தால், எருக்கம்பால் கலந்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று அவர் போய் இருக்க வேண்டியது தானே ? எதற்கு இவருக்கு அப்படி ஒரு அக்கரை இருந்திருக்க வேண்டும், ஒரு வேளை சுவனாநந்தா ஆக இருந்த முயற்சிச் தோற்றதால் எழுந்த ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஆகியவை தான் அவரை அவ்வாறு எழுது வைத்தது என்று கொள்ளலாமா ?

சென்ற பதிவில் நான் கேட்டிருந்த எந்த ஒரு கேள்விக்கும் அவரால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை, ஜைனைப் திருமணம் உலக நடைமுறைக்கு எதிராக இருந்ததால் தானே அல்லாவால் அந்தத் திருமணத்தை தற்காத்து குரான் வசனாமாகப் பேச முடிந்தது என்று கேட்டால் அவரிடம் பதிலே இல்லை, மாற்றான் மனைவியை பெண்டாள்வதே மாபெரும் குற்றம் என்பதை மையக் கருத்தாக வைத்து சம்பூர்ண இராமயணம் முதல் கம்பராமயணம் வரை இங்கே படைக்கப்பட்டு அவற்றை (மாற்றன் மனைவியை கவர்வது) குற்றமாக பார்க்கும் எங்கள் சமூகத்திற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று கேள்வியை முன் வைத்ததற்கும் பதில் சொல்லாமல் தசரதன் அறுபதாயிரம் மனைவியைக் கட்டவில்லையா ? அதை ஒப்பிட எங்கள் சமயத் தலைவர் செய்தது அற்பம் சொற்பம் என்று தொடர்பற்று பதில் சொல்லி இருக்கிறார். மாற்றான் அல்லது மகனுடைய மனைவியை தாரமாக்கிக் கொள்வதும் ? பல தார திருமணம் ஒன்றா ? தவிர தறுதலை அப்பன் தசரதனுக்கு மகன் அவ்வாறு இல்லை என்று முரண்பட்ட வேறுபட்ட வழியைக் காட்டுவது தானே இராமயணம், நான் இங்கே இராமனின் புகழ்பாடவோ இராமயணத்தை இந்திய நம்பிக்கைக் குரிய வேதம் என்று முன்னிலைப் படுத்தவோ நான் இதைக் கூறவில்லை, இராமயணத்தில் எனக்கும் பல விமர்சனங்கள் உள்ளன. தசரதன் 60 ஆயிரம் மனைவிகளை உடையவன் என்பதால் இங்கே யாரும் அவனைப் போற்றுவதும் இல்லை.

இளம் வயது திருமணங்கள் பிற சமூகங்களில் திருட்டுத்தனமாக நடக்கிறது என்று நாம் ஒப்புக் கொண்டாலும் உங்கள் மதத்தில் இன்றும் அவ்வாறு நடப்பதை தடுக்கும் சரியத் சட்டம் எதுவும் இல்லையே ? உங்கள் மத வழிகாட்டல் காலத்திற்கும் பொருத்தமானது என்று எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள், அவற்றை எதிர்க்கும் சட்டங்களையும் உங்களவர்கள் எதிர்க்கிறார்களே என்று கேட்டால் எந்த பதிலும் இல்லை. இவர் அபத்தமாக சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அவர்களுக்கு 6 வயதில் திருமணம் செய்து ஒருவருக்கு சொந்தமாக்குவது தான் நல்வழி என்று எங்கள் மதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்திருக்கிறது, அதைப் பின்பற்றினால் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் தொடராது என்று கூறாமல் விட்டது நமக்கு ஆறுதல்.

திரு சுவனப்பிரியன் தொடர்ந்து இஸ்லாத்தில் சாதி இல்லை என்று பிரச்சாரம் செய்யவும் இந்திய சமயங்களை தூற்றவும் பல்வேறு நாளிதழ்களில் இடம் பெறும் சாதி கலவரம் குறித்து எடுத்துப் போட்டு கருத்துரைக்கிறார், பகவத் கீதையைப் போலவே கோத்திரங்களையும் மனிதப் பிரிவுகளையும் படைத்ததாகப் குரானில் (அல்லா) பறைசாற்றுவது வேறு தகவல், தவிர இவர்களது சியா - சுன்னி வகுப்பு / இன வாதக் கலவரங்களும் அதன் பொருட்டு நடக்கும் அன்றாட மசூதி குண்டுவெடிப்புகளும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாளிதழ்களில் செய்தி ஆகிறது, இது குறித்துக் கேட்டால் இஸ்லாமியத் தவறு இஸ்லாத்தின் தவறு இல்லை என்றே கூறுவார். பின்பு இஸ்லாமிய சட்டங்கள் எவருக்காக எழுதப்பட்டது ? யார் பின்பற்றுகிறார்கள் என்று கேட்டால் பதிலும் வராது, யாரும் பயன்படுத்தாத / நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று நல்லத் திட்டம் என்று கூறினால் அது திட்டம் என்ற அளவில் மட்டுமே, அதைப் பயன்படுத்தி யாரும் பயன்பெற்றிருந்தால் அவற்றைப் பற்றி எதேனும் புகழ்ச்சியாகக் கூற முடியும். தூரத்து பச்சை பார்க்க அழகாக இருக்கும், அழகு என்ற அளவில் அதை ரசிகலாம், ஆனால் நுகர முடியாது, அது போன்றதே இவர்கள் புகழ்ந்து பேசும் சட்டங்கள் யாவும், அவர்களே அதை மதித்து நடக்காத போது அது குறித்து இவர்கள் பிரச்சாரம் செய்வதால் ஏதேனும் பலன் உண்டா ?

  • 1) ஷேக்
  • 2) சையது
  • 3) தக்னி முஸ்லிம்
  • 4) அன்சார்
  • 5) தூதுகோலா
  • 6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
  • 7) மாப்பிள்ளா
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(நன்றி அஸ்மா)

இந்திய சாதிகள் தலித்துகளை மிகவும் தாழ்வாக நடத்துகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை தான். அவர்கள் இஸ்லாமுக்கு மாறி ஒன்றும் மேம்படவில்லை, என்பதை ரசூல் போன்றவர்கள் எழுதியுள்ளனர். ஏழைக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் எந்த மதமும் இறங்காது, மாறாக இந்திய சாதிகளில் பார்பனர்களை ஓரங்கட்டி பல சாதிகளும் வளர்ந்துள்ளன, ஒரு வன்னியனிடமோ, நாடாரிடமோ சென்று நீங்கள் பார்பனரைவிட தாழ்ந்தவரா ? என்று கேட்டால் செருப்பைக் காட்டி மறுப்பார்கள். ஒரு ஷியா முஸ்லும் சுன்னி முஸ்லாமாகவோ, சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமாக மாற வழியே இல்லாத உங்கள் மார்க்கத்தில் நீங்கள் சாதியைக் கடந்தவராக பிரகனப்படுத்துவது எவ்வாறு ? உங்களது தலித் மதமாற்றம் பித்தலாட்டம் என்பதால் தான் அம்பேத்கார் பெளவுத்த மதத்திற்கே மாறினார். 

இஸ்லாம் மறுமண மற்றும் பெண்களுக்கான சொத்து உரிமையைத் தந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், அந்த உரிமை அரேபிய பாலைவனங்களில் ஏற்கனவே இருந்தது முகமதுவிற்கு அல்லாவின் வஹி கிடைப்பதற்கு முன்பே அவர் விதவையாக இருந்த கதீஜாவை மணந்துள்ளார், கதீஜாவிற்கும் தந்தைவழி சொத்துகள் இருந்ததால் அவரால் ஒரு வியாபாரியாக இருந்திருக்க முடிந்திருந்தது, என்று நண்பர்கள் சிலர் பதிலும் சொல்லி இருக்கின்றனர், ஏற்கனவே இருந்த நடைமுறையை சட்டமாக்கி இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்,. அதுவும் நடைமுறையில் இருக்கிறதா ? என்று கேட்டால் பழையபடி இஸ்லாமியரின் தவறுகள் இஸ்லாமிய சட்டத்தவறுகள் இல்லை என்றே பதில் வரும். நாகூர் நிலவரம் நமக்கு ஓரளவு தெரியும் என்றாலும் கீழக்கரையில் கூலித் தொழிலாளிக்கும் 10 லட்சம் வரதட்சனைக் கொடுத்தால் தான் இஸ்லாமிய பெண்களுக்கு திருமணங்கள் நடக்கும் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது, இவர்களைக் கேட்டால் பெண்ணுக்கு மகர் கொடுப்பது தான் இஸ்லாத்தின் வழக்கம் என்பார்கள், இந்த வழக்கத்தைப் பின்பற்றுபவர் யார் ? இவர்களின் வரதட்சனை வழக்கத்தை மகருக்கு மாற்றும் முயற்சியில் தான் இருக்கிறோம் என்பார்கள், அதை முதலில் இஸ்லாமியர்களிடம் செய்யாமல் அதை பிரச்சாரம் ஆக்குவது ஏன் ? தவிர தந்தை வழிச் சொத்துரிமையும், வரதட்சனைக் கேட்பவர்களுக்கான தண்டனையும் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டச் சூழலில் அதில் இந்தியர்களுக்கு இஸ்லாத் புதிதாக பரிந்துரைக்க என்ன இருக்கிறது ? தவிர அதைப் பின்பற்ற வேண்டியவர்கள் இஸ்லாமிய ஆண்கள் அல்லவா ?

இவரின் நண்பர்கள் மிகவும் அபத்தவாத சிந்தனையாக

"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..!நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?

போரில் அகதியான அடிமைப் பெண்ணை (வலக்கரம் சொந்தமாக்கிக் கொள்ள என்று அவர்களுக்குள்ளேயே புரியாதபடியெல்லாம் எழுதிவார்கள்) அடிமையை விருப்பம் போல் அனுபவிக்கலாம் என்பதே இவர்களுக்கு ஹதீதியா குரானிய வழிகாட்டால், இந்த சிந்தனையில் சற்று மாற்றி இவர்களுக்கு ஏற்பாக இருக்கும் பலதார மறுமணத்தை ஈழ விதவைகளுக்கு இவர்கள் பரிந்துரைக்கிறார்கள், விதவைகளுக்கான மறுவாழ்வு இளைஞர்கள் மனவுவந்து அவர்களை மணக்க வேண்டும் என்பது தான் பொதுவான பரிந்துரை அன்றி அவர்களில் பலரையும் மணந்து கொள்ளுங்கள் என்பது அபத்தவாத மூளையற்ற சிந்தனையின் பரிந்துரையாக இருக்க முடியும், தவிர ஒரு இளைஞனின் வருமானம் நிரந்தரமாக இருக்க முடியாத இன்றைய சூழலில் பல பெண்களை மணந்து எவ்வாறு காப்பற்ற முடியும் ?, இதற்கும் மாற்றாக அந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் தனியார் நிறுவனமும், அரசு நிறுவனங்களும் முன்னுரிமை தரவேண்டும் என்று பரிந்துரைப்பது தான் நல்வழி. அப்படியென்றால் அவளுக்கு ஆண் துணையோ ? ஆண் இன்பமோ தேவை இல்லையா ? என்று கேட்டால் சொல்ல அறுவெறுப்பாக இருந்தாலும் பல தாரம் மணம் செய்து கொண்ட பெண்களின் பாலியல் வேட்கை என்றோ ஒருநாள் வந்து போகும் கணவரால் தீர்ந்துவிட்டதா ? என்று கேட்டு அது குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவை குறித்த பரிந்துரைகள் கடுமையான கண்டனத்துகுரியது ஆகும், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உடல் சுகத்திற்காக ஈடுபடுகிறார்கள் என்கிற கருத்துகள் புறந்தள்ளக் கூடிய நிலையில், அவர்களை பல தார மணத்தில் ஈடுபடுத்தலாம் என்று சொல்வது குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதே. அவர்களுக்கு மாற்று நல்ல வேலையும், விதவையை மணக்க வரும் இளைஞர்களும் அன்றி வேறெந்த தீர்வும் சிறப்பானதாக இருக்க முடியாது.

இதையெல்லாம் விட அரேபிய நாடுகளில் இன்றைய தேதிக்கு போரில் (ஈராக் தவிர்த்து) விதவையாக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் ? சவுதி உள்ளிட்ட மன்னர் பரம்பரைகள் விதவைகளைத்தான் மணந்து விதவை நல்வாழ்வு என்கிற ரீதியில் முழக்கப்படும் இஸ்லாமிய தீர்வைச் செயல்படுத்துகிறார்களா ? மன்னர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் விதவையான பிறகு அவர்களுக்கு மறுமணம் நடப்பில் உள்ளதா ? மன்னர்களைவிடுத்துப் பார்த்தாலும் அரேபிய ஷேக்குகள் பண ஆசைக் காட்டி இந்திய ஹைத்ராபாத்தில் மணந்து கொண்டு பின்னர் மோகம் தீர்ந்ததும் கைவிட்டு செல்லும் பெண்களில் எத்தனை பேர் விதவைகள் ? அவர்கள் முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டே பின்னர் மறுமணம் செய்து கொடுக்கப்படுகிறார்களா ?  நீங்கள் பெருமையானதாகக் கூறும் முத்தலாக்கை குறிப்பிட்ட காலங்களில் முறையாக செய்து மணவிலக்கு பெற்றுக் கொண்டோர் எத்தனை பேர் ? யாருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைமுறைப்படுத்தாத மேலும் ஒரு இஸ்லாமிய சட்டமாகத்தான் அவை பெயரளவில் தான் இருக்கிறது. அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தும் கண்காணிப்பை நீங்கள் செய்துவருகிறீர்களா ? உங்களையெல்லாம் ஈழ விதவைகளுக்கு பலதார மறுமணம் பரிந்துரைக் கேட்டு உங்களிடம் ஒப்பாறி வைத்தவர் யார் ? அவர்களுக்கு உங்கள் மதத்தினர் பல தாரமணத்தில் செய்யும் தில்லுமுல்லுகள் தெரியுமா ? இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத உங்களின் பரிந்துரைகளில் மதவெறியும், மதப்பிரச்சாரமும் அன்றி வேறெதுவும் தென்படவில்லை. பணம் படைத்தவனின் மேம்பட்ட காம இச்சைகான வடிகால் என்பதைத் தவிர்த்து பல தார மணத்தில் பெண்களுக்கான தீர்வு என்ன ? காசு இருக்கும் போது அவளை மணந்து அவளுக்கு ஒரு வயிற்றுப் பிள்ளையை / களைக் கொடுத்துவிட்டு, அவர்களை தெருவில் விட அவர்கள் சமூகக் குற்றவாளியாகும் நிலையைத் தான் ஏற்படுத்தும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் ?  உங்கள் பலதார மண பரிந்துரையில் முதல் மனைவியின் விருப்பம் பற்றி ஏதேனும் வழிகாட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா ? எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு எண்ணற்ற மனைவிகள் இருப்பதை பெருமையாகக் கருதுவாளா ? எந்த ஒரு இந்தியத் தகப்பனும் தன் மகள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படப்போவதை பெருமையாகக் கூறிக் கொள்வானா ? பணக்காரனுக்கு  சலுகைக் கொடுத்து வளைந்து கொடுக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் பணக்காரன் பலமனைவிகளை மணந்து கொள்ளலாம் (பெண்களை பணயம் வைக்கலாம்) என்ற உங்கள் மதப்பரிந்துரைகளுக்கும் வேறுபாடுகள் என்ன ?

திருவாளர் சுவனப்பிரியன் அவர்களே, நீங்கள் அடிக்கடி அரைகுறையாக கூவும் குரானுக்கு மாற்றான மேம்பட்ட வசனம் இவ்வுலகில் எழுதப்படவில்லை என்கிற கூற்றை யாரும் மறுக்கவே இல்லை என்று மார்தட்டிவருகிறீர்கள்.  இவற்றை பலர் கேட்டு நகைத்துச் சென்றதால் உங்களுக்கு உரிய பதில் கிடைக்காமல் போய் இருக்கும்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று என்றோ ஐய்யன் திருவள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சமமாகவே கருதப்படவேண்டும் என்கிற வழிகாட்டல் தான் அது, பெண்களையே மனிதனாக மதிக்கத் தெரியாத உங்களுக்கு பிற உயிர்களும் சமமாக மதிக்கப் பரிந்துரைப்பதில் ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும் உங்களுக்கு சுட்டிக் காட்டவே விரும்புகிறேன், எந்த ஒரு உயிரையும் கொன்று போடும் உரிமை உங்களுக்கு கிடையாது, உணவுக்காகக் கொல்லுவதையும் என்பெயரில் (அல்லாவின் பெயரில்)  செய்யுங்கள் என்கிற வழிகாட்டலும் பிற உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து மறைமுகமாக இருப்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கமாட்டீர்கள், அதை நேரிடையாக வெளிப்படையாகவே 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி எல்லா உயிர்களும் மதிப்பில் ஒன்றே என்றார் ஐய்யன் திருவள்ளுவர், இதற்கு நேரிடையான வசனத்தை உங்கள் மார்க்கத்தில் இருந்து எடுத்துக்காட்டி முடிந்தால் அதைப்பரப்ப முயற்சி செய்யுங்கள்.

நானும் இதுவரை யாரும் சொல்லாத வசனம் ஒன்றை உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன், இதைவிட சிறந்த வசனம் உங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தால் கொண்டுவாருங்கள்.

நீங்கள் உங்கள் உடன்பிறந்தாளுக்கு , மகளுக்கு செய்ய விரும்பாததைப் பிற பெண்களுக்கு பரிந்துரைக்காதீர்கள்

உங்களுக்கு இதற்கான விளக்கம் ப்ராக்கெட் போட்டால் தான் புரியும் என்பதால்,

நீங்கள் உங்கள் உடன் பிறந்தாளுக்கு (அக்காள் மற்றும் தங்கைகளுக்கு) , மகளுக்கு செய்ய விரும்பாததை (பலதார அல்லது சிலதார மணத்தை) பிற பெண்களுக்கும் (பல தார அல்லது சில தார திருமணத்தை) பரிந்துரைக்காதீர்கள்

********

இதை எப்படி முடிக்கிறது ? தென்னை மரம் , பசுமாட்டுக் கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது.

இஸ்லாமின் கொள்கைகள் சிறப்பாக இருந்தும், நடைமுறையில் பயன்படுத்த முடியாது என்பதால் தான் சுவனப்பிரியன் சுவனநந்தாவாக மாற இருந்து நித்தி - ரஞ்சிதா கசமுசாவால் கெட்டுவிட்டதா ? என்றே நினைக்கத் தோன்றுகிறது. சுவனப்பிரியன் விரும்பினால் தாய் மதம் திரும்பலாம், அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனுக்கு பூணூல் அணிவித்து தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.

போங்க சார், ஐந்து வேளைத் தொழுகையை சிறப்பாக செய்யுங்கள், நீங்கள் விரும்பும் சுவனக் கன்னிகைகள் உங்களுக்கு காத்திருக்கிறார்கள், அதைவிடுத்து தேவையற்ற சர்சைகளாக கொள்ளர் தெருவில் துருப்பிடித்த ஊசியை விற்றுக் கொண்டு உங்கள் நேரங்களை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், 'தீர்ப்பு நாள் சமீபமாக, உள்ளது அதற்கான அத்தாட்சிகளை அல்லா தொடர்ந்து வெளிப்படுத்துக் கொண்டுள்ளான், இந்த இனிய பிறவியை, வீண் விவாதங்களில் வீனாக்கலாமா ?'

பிகு : நான் இஸ்லாமிய மதத்தை நான் இங்கு இழிவு படுத்தும்படி எதையும் எழுதவில்லை,  அவர்களின் நடைமுறைகளில் உள்ளவற்றைச் சுட்டியுள்ளேன், தவிர உலகில் 20 விழுக்காட்டினரின் நம்பிக்கை என்பதை உணர்ந்துள்ளதால், அவர்களது வழிகாட்டி முகமதுவையோ, குரானையோ நான் போற்றாவிட்டாலும் தூற்ற நினைத்தது இல்லை, உங்க பாணியில் சொல்ல வேண்டுமென்றால் நான் இஸ்லாத்தைக் குறை கூறவில்லை, இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

உங்களில் (தமிழக / இந்திய இஸ்லாமியர்கள்) பெரும் விழுக்காட்டினர் ஒரே திருமணத்தில் நம்பிக்கைக் கொண்டு நிலைத்திருப்பதும் உங்கள் மதம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடு இல்லை, அது இங்கேயே வழிவழிவரும் பண்பாடு அல்லது தனிமனித ஒழுக்கம் சார்ந்தவையே, அரபு நாடுகளில் அவ்வாறு இல்லாது பெண்கள் போகப் பொருளாக்குவது கண்டு உங்கள் அறிவுரைகளை பண்பாடுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

இன்ஷா அல்லா, 'இவர்களுக்கு சாந்தியும் சமாதனமும் என்னேரமும் கிட்டினால் இவர்கள் சிந்தனை இறை நாட்டம் தவிர்த்து தேவையானவற்றதில் மூக்கு நுழைக்காது. 

நாடூவீர் ஏக இறைவன் !

உங்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டுவதும், பாறைமுன் திருக்குறள் அறத்துப் பால் விளக்கவுரை பேசுவதும் ஒன்றே என்பது தெரியும், இருந்தாலும் உங்கள் நச்சுப் பிரச்சாரங்களில் என்னையும் இழுத்தால் இதனை பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதினேன், உங்கள் மீது எங்கேயாவது தனிப் பட்ட தாக்குதல் இருந்தால் குறிப்பிடவும்.

30 ஏப்ரல், 2012

நித்தியானந்தன் இந்திய சமய அடையளமா ?


நித்தி - ரஞ்சிதா கசமுசா இந்தியர்கள் அறிந்த ஒரு கன்றாவி தகவல், வெ.ஆ மூர்த்தி பாணியில் சொல்லப் போனால் துவண்டு போன செல்வாக்கை தூக்கி நிறுத்த நித்தி எவ்வளவோ முயற்சிக்கிறார், பார்த்து சிரித்து / துப்புவதைத் தவிர நமக்கு அதில் ஒன்றும் இல்லை, தானே புயலுக்கு வாரி வழங்குவதன் மூலம் ஆசிரமத்திற்கு கூட்டம் சேர்க்க முயன்றார் ஒண்ணியும் வேலைக்கு ஆகவில்லை, பின்னர் எதோ ஒரு வெளிநாட்டு அமைப்பு 100 சிறந்த ஆன்மிக திலகங்களில் ஒருவராக தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாக வெளம்பரம் செய்தார், அதுவும் வேலைக்கு ஆகவில்லை, இறுதி முயற்சியாக மதுரை ஆதினத்திடம் காலில் விழுந்து தன்னை வாரிசாக அறிவிக்கச் சொல்லி மன்றாடி அதன்படி முடிசூட்டிக் கொண்டுள்ளார், இதன் பக்க(வாத) விளைவுகள் இனிமேல் தான் தெரியும். நித்தி மட்டுமல்ல காஞ்சிபுரம் சுப்புணி சாமி உள்ளிட்ட எந்த ஒரு இந்திய சமய புருடாக்களையும் ஒட்டு மொத்த இந்திய சமய வழிகாட்டியாக யாரும் கருதாத நிலையில் எந்த மடத்துக்கு ஆண்டி எவனாக இருந்தால் என்ன என்பது தான் இந்திய சமயங்களைப் பின்பற்றுபவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது, நன்றாக வாசிக்கவும், நான் இந்து மதம் என்று குறிப்பிடவில்லை, எனக்கு அந்தச் சொல்லில் உடன்பாடும் கிடையாது, இந்திய சமயங்கள் பன்முகத் தன்மை கொண்டது அதில் சுடலை மாடனுக்கும், ஜெக்காம்மாவிற்கும் கூட இடம் உண்டு. எனவே நித்தி இந்திய சமயங்களின் ஒரே அடையாளம் போன்று நினைப்பதும், பரப்புவதும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியது.

தமிழ் நாட்டில் ஆதினங்கள் சில உண்டு, திருவாடுதுறை ஆதினம், மதுரை ஆதினம் இன்னும் வேற என்ன என்ன இருக்கிறதோ தெரியவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாடுதுறை ஆதின வாரிசுப் பிரச்சனையில் வெட்டு குத்து கூட நடந்தாகத் தகவல் வந்தது. குன்றக்குடி அடிகளாருக்குப் பிறகு எந்த ஒரு ஆதினத்திற்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கிடையாது, பெரியார் போற்றிய ஆன்மிக வாதிகளில் வள்ளலார், குன்றக்குடி அடிகளார் போன்றோர் உண்டு என்பதால் அவர்கள் சமயங்களைக் கடந்த ஆன்மிகத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். நித்திக்கோ, தற்போதைய மதுரை ஆதினத்திற்கோ அப்படியான தகுதி எதுவும் கிடையாது, கோல்கேட் வெளம்பரம் போல் விளம்பரத்தில் பல்லைக் காட்டி, கூட்டம் காட்டி, பெரிய தங்க ஆசனம் போட்டு எங்கள் பராக்கிரமத்தைப் பாரீர் என்று பறைசாற்றுகிறார்கள், பொம்பளப் புள்ளைங்களை பெத்தவன் யாரும் இவர்கள் பக்கம் இனி திரும்புவார்கள் என்பதே ஐயம் தான்.

******

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் இந்து மதத்தின் (அவர்கள் இந்து மதம் என்றே சொல்கிறார்கள்) இழுக்கு பாரீர் என்று நித்தி மதுரை ஆதினமானது இந்து மதத்தின் அவமானம் போன்று எழுத அதற்கு அவருடைய பங்காளிகள் ஆகா இவர்கள் (இந்திய சமயங்களைப் பின்பற்றுவர்கள்) ஏதோ தலை குனிந்து நிற்பது போல் 'இஸ்லாமியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்றெல்லாம் கும்மியடித்துள்ளனர், இஸ்லாமியர் என்ற பெயரில் சாருக்கானும், கமலஹாசனும் கனடா, அமெரிக்காவில் படும் அவமானங்களை அவர்களிடம் கேட்டாதால் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் மீதான கடுமையான குடிநுழைவு சோதனைகளுக்கு இந்திய அரசு சார்பில் கூட கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான தலைகுனிவு அவர்களாகத் தேடிப் பெற்றது இல்லை, அவர்களின் பெயர் இஸ்லாமிய மதம் சார்ந்தவையாக இருப்பதால் அவர்களுக்கு கிடைத்த வெகுமதி. அப்துல்கலாமையே அவிழ்த்துப் பார்த்தது தான் அமெரிக்கா, அதற்கு அவர் ஒரு அறிவியலாளர் என்பது போல் அவர் ஒரு முஸ்லிம் என்பதும் காரணம். அவ்வாறு நடந்த விரும்பத்தகாதவைகளுக்கு சுவனப்பிரியன் மற்றும் அவரது நண்பர்கள் பெருமை பட்டிருந்தால், நித்தியின் செயலை இந்து மதத்துடன் முடிச்சுப் போட்டு நாம் சிறுமை அடையளாம், அதற்கும் வாய்ப்பில்லை காரணம் நித்தி இங்கு இந்திய சமயங்களின் முன்னோடியோ, வழிகாட்டியோ இல்லை.

இதெல்லாம் விட நித்தி மீது வைக்கப்படும் 'செக்ஸ்' குற்றச் சாட்டை சுட்டிக் காட்டுகிறார்கள், நித்தி பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டதாக வழக்குகள் இல்லாத போது அவர் மீதான பாலியல் குற்றச் சாட்டு என்பது புறந்தள்ளக் கூடியதே, வயதுவந்தவர்களின் விரும்பிய பாலியல் ஈடுபாட்டில் மூன்றாம் நபர் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும் கூட நித்தி பிரம்மச்சாரியம் என்ற பெயரில் 1000க் கணக்கான இளைஞர்கள் / இளைஞிகளை வீட்டைவிட்டு ஓடிவரச் செய்து ஆசிரமத்தில் கூட்டம் சேர்ந்தவர் என்பதால், அவர் விளம்பரம் செய்த பிரம்மசாரியத்தை அவர் மீறிவிட்டார், அவருக்கு அது பற்றிப் பேச தகுதி இல்லை, தவிர பாலியல் ஒழுக்கம் என்பதில் அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே அவர் மீதான குற்றச் சாட்டு, காரணம் அதுவும் அவர் தன்னை அவ்வாறு விளம்பரப் படுத்திக் கொண்டதால் மட்டுமே. அதையும் சுட்டிக் காட்டிக் கேள்வி கேட்கவேண்டியவர்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரை நம்பியவர்கள் மட்டுமே, மூன்றாம் நபராக அவனைப் போன்றோர்களை நம்பாதீர்கள் என்று மட்டுமே நம்மால் நித்தி பற்றிய கருத்தை முன்வைக்க முடியும்.

இஸ்லாமும் பாலியலும் நமக்கு தெரிந்த ஒன்று தான், போதிய அளவு செல்வம் உள்ள ஒருவர் தன்னுடைய கட்டுபாடற்ற இச்சைக்காக தொடர்ந்து திருமணங்கள் செய்து மனவிலக்குக்கிற்கு நஷ்ட ஈடு கொடுக்க முடிந்தால் அவர் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இஸ்லாமிய சட்டங்கள் என்பது நமக்குத் தெரியும், ஒருவர் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் நான்கு திருமணங்கள் வரை செய்யலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிறது, நன்றாக கவனியுங்கள் நான்கு என்பது எண்ணிக்கைத் தடை இல்லை, ஒரே நேரத்தில் நான்கு என்பது தான் இதன் பொருள், ஏற்கனவே 4 மனைவிகள் இருந்து ஐந்தாவது ஒன்றை மணக்க நான்கில் ஒன்றை மனவிலக்கு செய்து நஷ்ட ஈடு கொடுத்துவிட்டால் ஐந்தாம் திருமணத்திற்கு தடை என்பதே கிடையாது. இஸ்லாமைப் பொருத்த அளவில் ஒருவரின் பாலியல் வேட்கை என்பது திருமணம் மூலமாக் தொடரவேண்டும் என்பது தான், ஆனால் நடைமுறையில் பணம் உள்ளவர்கள் யாரும் தற்காலிகமாக ஒரு திருமண பந்ததைத் ஏற்படுத்திவிட்டு நன்றாக அனுபவத்துவிட்டு நஷ்ட ஈடு கொடுத்துவிடலாம். கிட்டதட்ட குறிப்பிட்ட காலத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தம் போன்றவை தான், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் என்பதில் பெண்ணை போதைப் பொருளாக அல்லது போகப் பொருளாகவே நினைக்கும் ஒரு ஆணின் பாலியல் விருப்பம் என்பதைத் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும் ? இதையும் ஏன் திருமணம் என்ற சொல்லால் அலங்கரிக்க வேண்டும் என்கிற ஞாயமான என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா ? பணக்கார இஸ்லாமியர்களின் விருப்பம் போல் திருமணமும் மணவிலக்கும் பாதிக்கப்படும் பெண்களும் அவர்கள் வாரிசுகளும் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியாவது தெரியுமா ? Single Mother என்றால் என்ன ?

ஒரு பெண்ணை திருமணம் செய்து பாலியல் மோசடி செய்வதற்கும், திருமணமே செய்யாமல் பாலியல் மோசடி செய்வதற்கும் வேறுபாட்டில் பணவிரயம் மற்றும் ஊர அறிய செய்த மோசடி / மறைவாக செய்த மோசடி என்பது தவிர்த்து வேறு என்ன வேறுபாடு உள்ளது ? இரண்டிலுமே குழந்தை பிறந்து இருந்தால் இவன் தான் அப்பன் என்று தற்காலிக டி என் ஏ சோதனைகள் நிறுபனம் செய்யும், உரிய இழப்பீட்டிற்கு வழக்கு தொடுக்க முடியும்.

முகமது நபியின் திருமணங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் அது அந்த காலம் அப்போது குறிப்பிட்ட சமூகத்துடன் இணைத்துக் கொள்ள அவ்வாறான திருமணங்கள் நடைபெற்றன என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம், ஆனால் ஜைனப் திருமணம் ஒழுக்கமான நிகழ்வா ? வளர்ப்பு மகனுடைய மனைவியின் அழகில் மயங்கி, அவரை வளர்ப்பு மகனிடமிருந்து மணவிலக்கு செய்யச் சொல்லி, பின்னர் மண முடித்துக் கொண்டது உலகினர் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வா ? இறைத்தூதருக்கு உறவுகள் பொருளல்ல என்று கூறுவீர்களே என்றால், உடல் இச்சையும், திருமணங்களும் அழகிய முன்மாதிரி இறைத்தூதருக்கான அழகா ? பொருள் பொதிந்ததா என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் வைத்துள்ளீர் ? பின்லேடன் எந்த காலத்தில் இருந்தான் அவன் செய்து கொண்ட திருமணங்கள் எத்தனை ? அவனை இஸ்லாமிய அடையாளமாக ஏற்காவிட்டால் அவனுக்காக சிறப்புத் தொழுகை சென்னை பள்ளிவாசலில் இடம் பெற்றது ஏன் ? முகமது காலத்தில் 6 வயது சிறுமியாக ஆயிஷா அன்னையை முகமது திருமணம் செய்து கொண்டது போன்று இன்று அவ்வளவு சிறுவயது திருமணங்கள் நடக்காவிடினும் இன்றும் கூட 14 - 18 இளம் வயது திருமணங்கள் இஸ்லாமியருக்குள் நடக்கிறது, இதை நினைத்துக் கொண்டு தான், அண்மையில் அறிவிக்கப்பட்ட கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை இஸ்லாமியர்களின் ஒரு பிரிவு கடுமையாக எதிர்த்தது.

இன்றைய தேதிக்கு,

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கும் 'வைத்திருப்பதற்கும்' பெரிய வேறுபாடு இல்லை, ஏனெனில் இரண்டிலுமே பாதிக்கப்படும் பெண்களின் தொடர்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் என்பதே கிடையாது. தங்கள் மதத்தில் சீர்த்திருத்த மாற்றம் கொண்டுவர எவ்வளவோ இருந்தும் பிற மதத்தினரை எள்ளி நகையாடுவதைப் பார்க்க நமக்கும் நகைப்புத்தான் வருகிறது.

இந்திய சமயத்தினரின் ஒட்டு மொத்த அடையாளம் என்று ஒரு சாமியார் பயலும் கிடையாது என்பதை இந்திய சமயத்தினர் நன்கு புரிந்துள்ளனர் என்பதை இஸ்லாமிய சமயவாதிகளுக்கு நான் கூறிக் கொள்கிறேன். உங்களில் பின்லேடனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பெரும் விழுக்காட்டினர் என்பது போல் நித்தியை புறம் தள்ளுபவர்கள் ஏராளம். நித்தியால் யாரும் தலை குனியவில்லை, அதற்கு தேவையும் இல்லை, உங்களுக்கு பலதார திருமணங்களில். இளம் வயது திருமணங்களில் உவர்ப்பு இல்லாத போது வன்புணர்ச்சி என்ற அளவுக்கு செல்லாத சாமியார்களின் பாலியல் இச்சைகளை இந்திய சமயவாதிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.

மற்ற மதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கவில்லையா ? இளம் வயது திருமணங்கள் நடக்கவில்லையா ? நடக்கிறது, அவை திருட்டுத் தனமாக நடக்கிறது, ஆனால் பிற மதங்களில் பலதார திருமணத்தை உலகின் தலைச்சிறந்த கொள்கை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக காட்டப்பட்ட அற்புத வழிகாட்டல் என்று யாரும் தூக்கிப் பிடிக்கவில்லை. ஏழ்மை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் எந்த ஒரு அப்பனும் தன் மகளை ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பணக்காரனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்யலாம் என்பதை நினைத்துப் பார்க்கவே நாணுவான்.

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.

16 ஜனவரி, 2012

முற்றுப் புள்ளி !

தொடர்ச்சியாக எழுதுவதனால் பயன் என்று எதுவும் கிடையாது, நம்முடைய நேரத்தை பெரிதும் விழுங்கி இருக்கும் என்கிற கெடுதல் தான் அதில் உண்டு, நிறைய பாலோயர்கள் கிடைக்கலாம், அதனால் பெரிய பலன் ஒன்றும் கிடையாது, ஆனால் பதிவில் தொடர்சியாக எழுதுபவர்கள் நினைக்கப்படுகின்றனர், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம், நம்ம சிபி செந்தில் குமார் ஆயிரம் பதிவுகளை ஒண்ணறை ஆண்டுகளில் இட்டு முடித்து இருக்கிறார், ஆரம்பகாலங்களில் காபி பேஸ்ட் செய்தவர் பின்னர் தாமாகவே எழுதி அந்த எண்ணிக்கையைத் தொட்டு இருக்கிறார், அதற்கு அவர் இழந்த நேரம் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். எனது பதிவுகள் பெரும்பாலும் நிகழ்வுகளின் விமர்சனம் என்ற வகையில் தான் எழுதப்படுகிறது. நாள் தோறும் சர்சைகள், ஒவ்வாநிகழ்வுகள், அரசியல் நிலைப்பாடுகள் மாற்றம் என்று எதாவது ஒன்று நிகழ்வதால் நாள் தோறும் எழுத விமர்சனம் செய்ய எதேனும் கிடைப்பதால் எழுதுவதன் தொடர்சிக்கு தீணி கிடைத்துக் கொண்டே இருக்கும், நான் எழுதுவதற்கு எதுவும் இல்லை என்று நினைப்பதே இல்லை. இருந்தாலும் அவற்றில் தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டும் எழுதுவது என்பதன் கட்டுப்பாடுகள் காரணமாக எனது நேரத்தை நான் சரியாகப் பயன்படுத்துவதில் உறுதியாகவே உள்ளேன், இது கடந்த ஆண்டுகளின் என் நேரங்கள் விழுங்கப்பட்டதில் கற்றுக் கொண்ட பாடம், நீங்கள் தொடர்ந்து நாள் தோறும் பதிவிடுபவர், அல்லது அனைத்தையும் வாசிப்பவர் என்றால் அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் இழந்த நேரங்களும், அவற்றினால் நீங்கள் இழந்தவை, செய்ய மறந்தவைப் பற்றி யார் சொல்லாமலும் அறிந்து கொள்வீர்கள்

*******

பாலாறும் தேனாறும் பற்றிய பதிவைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிரிவினைகள், நானே ஓட்டுப் போடாத என் பதிவுக்கு பலரும் வாக்களித்து இருந்தனர், மிக்க நன்றி, அதே சமயத்தில் வாக்குகள் எழுத்தின் தரத்தின் தீர்ப்பு அல்ல என்பதை நான் நன்றாகவே அறிவேன். வாக்குகளையும் வாசகர்களையும் பெற ஆயிரம் வழிகள் உண்டு, பிரபலப் பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அந்த உத்திகளை நன்றாக கையாளுகிறார்கள், அதில் எனக்கு எந்த குடைச்சலும் இல்லை, சும்மா உதாரணத்திற்கு சுட்டினேன்.

மதத்தீவிரவாதம் மிக மோசமானது, உலகில் மதச்சார்பற்ற நாடுகள் அனைத்தும் மதத்தீவிரவாதங்களை கடுமையாகவே எதிர்கின்றன. எனது நிலைப்பாடும் அதுவேதான், கூடவே தமிழ்நாட்டில் பிறந்ததால் சாதி எதிர்ப்பு மனநிலையும் உண்டு, ஒருவர் மதவெறியரா இல்லையா என்பதை அவர் மதம் சார்ந்த சமூகத்தை விமர்சனம் செய்யும் போது எரிச்சல் அடைவதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்வதால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மனிதர்கள் தான் சார்ந்த கொள்கைகள் பாதிக்கப்படாதவரை சமத்துவமானவர்களாக தெரிகிறார்கள், பிறருக்கு அறிவுரைச் சொல்பவர்களாக தெரிகிறார்கள், எனக்கு வருத்தமெல்லாம் பெருவாரியான நல்லவர்கள் தங்கள் ஏன் நல்லவன் என்பதை நினைப்பது இல்லை, பெரும்பாலும் தத்தமது நல்ல மனம் தன் சாதிமதத்திற்கு ஆதரவாக அடமானம் வைப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. மதத்திற்கான அடிப்படை குணம் அது வழிபாடு அளவில் என்ற அளவில் தான், அடிமனதில் இருக்கும் நம்பிக்கை துன்ப வேளைகளில் ஒருவர் எந்த கடவுளின் பெயரைச் சொல்கிறார் என்பது மட்டுமே, மற்றபடி ஒரு மனிதனை தரம் பிரிப்பதில் மதங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

ஒருவர் நல்லவர் என்றால் அவர் தம்மை தாமே உருவாக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட நற்பண்புகளின் தொகுப்பு தான் அவர், அதற்கும் அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது, ஒருவீட்டில் நால்வரில் ஒருவர் நல்லவர் என்றால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை மதிப்பீடு செய்ய உதவாதது என்பது போல் தான். நீங்கள் நல்லமனிதர் என்றால் இருந்துவிட்டுப் போங்கள், ஆனால் அதை உங்களின் மதத்தில் உள்ளவர்களுக்கு சாதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை அளவுகோல் ஆக்கிவிடாதீர்கள், அது நீங்கள் உங்களுக்கு செய்யும் துரோகம், அவ்வாறு செய்வதனால் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் பிறர் செய்யும் கெடுதல்களையும் நீங்கள் உங்கள் முதுகில் சுமக்க விரும்புகிறீர்கள் என்றே பொருள்படும்.

பொதுவாக நான் எப்போதும் எழுதுவது சாதி வெறி மத வெறி குறித்த எனது பார்வை, பிரச்சனை இல்லாதவரை இவற்றினால் ஆபத்துகள் இல்லை, ஒருவர் சாதி சார்பாக இருப்பதற்கு சாதிவெறியனாக இருப்பதற்கு ஒரு நிகழ்வு தான் வேறுபாடு, உதாரணத்திற்கு சாதி சார்ந்த ஊர்வலம் செல்கிறது, யாரோ ஒருவன் ஒரு பேருந்துன் மீது கல் அல்லது யார் மீதோ கல் எறிகிறான், அது வெளியில் இருந்து வந்த கல்லாகக் கூட இருக்கும், நம்ம சாதிக்காரன் மீது கல்வீசிவிட்டான் டா என்று ஒருவன் கூவினாலே போதும் ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த இடத்தை ரண களமாக்கிவிடும், முடிவில் அவை சாதிவெறியின் அடையாளமாக மாறிக் கிடக்கும், கையில் தீவட்டியுடன் ஊர்வலம் போகும் சாதி சார்ந்த கூட்டம் அதே தீவட்டியை அங்கு உள்ள வீடுகளின் மீது வீசினால் அது சாதிவெறி அங்கு கலவரங்களால் பலர் கொல்லப்படும் வாய்ப்பு மிகுதி,. ஆக சாதிவெறி / மதவெறி ஆகியவற்றிற்கு இடையே வன்செயல் என்று நிகழ்வு தான் வேறுபாடு அந்த நிகழ்வு எந்த ஒரு நொடியுலும் ஏற்படக் கூடியது என்பதால் சாதி பற்றுக்கும் சாதிவெறிக்கும், மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

உங்கள் சிந்தனைக்கு...

விநாயக சதுர்தியின் போது சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மத ஊர்வலம் தான் செல்கிறது, அது மதவெறி ஊர்வலமாக மாற எத்தனை வினாடிகள் எடுக்கும் ?

*******

மதவெறி பற்றி பேசுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர், அவற்றை நான் புறக்கணிக்கிறேன், குஜராத் மோடி அரசை விமர்சனம் செய்ய குஜராத்திகளாக இருக்க வேண்டுமா ? பின்லேடனை தீவிரவாதி என்று விமர்சனம் செய்ய இரட்டை கோபுரத்தில் எரிந்து உருக்குலைந்தவர்களின் உறவினர்களாக இருக்க வேண்டுமா ? இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஒரு இஸ்லாமியர் தான் அதனை மறுக்க வேண்டும் என்ற யாரும் நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை, எனவே பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் நிகழ்வைப்பற்றிப் பேசவேண்டும் என்பதை கடுமையாக புறக்கணிக்கிறேன்.


மதவெறி பற்றிய விழிப்புணர்வுகளை பதிவுலகில் சார்ந்த பலர் நன்றாகவே அறிந்துள்ளனர், அதற்கு எனது கடந்த சில பதிவுகளும் கூட காரணமாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவதன் அயற்சி எனக்கு ஒவ்வாத ஒன்று, "தமிழ்மணத்தில் முகப்புகள் மதவாதிகளால் வாக்கு குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால் நான் தமிழ்மணம் வழியாக படிக்க விரும்பவில்லை, ரீடர் வழியாக குறிப்பிட்ட பதிவுகளை நான் வாசிக்கிறேன்" என்றார் நண்பர் ஒருவர். இதனால் பாதிக்கப்படுவது புதிதாக பதியவரும் வலைப்பதிவர் தான், ஒருவேளை அவர் நன்றாக எழுதுபவராக இருந்தால் அவர் பதிவுகள் வாசிக்கபடாமலேயே போகலாம்.

எனக்கு சூடான இடுகை, முகப்பை ஆக்கிரமிப்பதில் ஆர்வம் இல்லை, மூன்றாண்டுக்கு முன்பு எழுதியதில் பெரும்பாலனவை அங்கு வந்து சென்றவை, அப்போது பதிவர்களின் எண்ணிக்கையும் குறைவு, இப்போது அந்த இடங்களை நான் தொடர்ந்து துண்டு போட விரும்பவில்லை, புதியவர்கள் தொடருட்டுமே. என் பெயரில் பிறர் எழுதியதும் சேர்த்தே தமிழ்மணத்தை ஆக்கிரமித்தவைகள் கீழ்கண்டவை.

தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, கடந்தவாரப் பதிவுகள் புதிய பதிவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன், பாலோயர்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது.

*********

பின்குறிப்பு : முகம் தெரிந்த நண்பர்கள் பதிவுகள் தவிர்த்து எவருடைய எதிர்வினைகளுக்கும் நான் பதிவில் போடுவது கிடையாது. நான் எப்போதும் அறிவுரை செய்வதில்லை, பரிந்துரை மற்றவை விமர்சனம். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கம் சொல்லத் தேவை இல்லை, தெரியாதவர்களுக்கு என் விளக்கமும் பயன் தராது. இங்கும், தொடர்ச்சியாகவும் முன்பும் குறிப்பிட்ட மதங்களை தாக்கி நான் பதிவுகள் எழுதியதில்லை, குறிபாக இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பே இல்லை என்று 100 விழுக்காடு உறுதி கூறுகிறேன், அப்படியாக அனுமானிக்கும் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும், குறிப்பாக இந்தப் பதிவின் நெகட்டிவ் ஓட்டுகளும் கடந்த ஒருவாரப் பதிவுகளின் நெகட்டிவ் ஓட்டுகளும் பாசிட்டிவ் என்றே கொள்ளப்படும், வாக்களிப்பவர்கள் முடிவு செய்க.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்