"கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது" என்று எனது நண்பர் திரு ரத்னேஷ் அவர்கள் எனக்கு மின் அஞ்சல் செய்திருந்தார். அவரது சொல் எனது 'காலங்கள்' பக்கத்தில் 2008ல் இந்த ஆண்டிற்காகமட்டும் பலிக்கிறதா என்று பார்க்கிறேன். மனக்கட்டுப்பாடு இருக்கவேண்டும். முயற்சி செய்கிறேன். மற்றபடி இதுதான் கடைசி பதிவு என்று உதார் விடுபவர்கள் சிரிப்பையே வரவழைப்பவர்கள்.
யார் யாரோ சுய அரசியலுக்கு என்னைப் பலிகடாவாக ஆக்கி, போலிக்கு கையாள், அடியாள் இன்னும் எத்தனையோ இட்டுக்கட்டுக்களை அள்ளிவிதைத்துச் சென்றார்கள். யார் யார் எப்படி என்று தெரிந்தாலும் அவற்றையெல்லாம் வெளியில் சொல்வதனால் எந்த பயனும் இல்லை. நான் அவர்களின் அரசியலுக்கு பயன்பட்டு இருக்கிறேன் என்று அவர்கள் நினைத்து இருந்து பயன்பட்டு இருந்ததால் மகிழ்ச்சியே. 'தேளுக்கு கொட்டும் குணமாம், எனக்கு காப்பாற்றும் குணம்' என்றார் ஒருமுனிவர். அந்த அளவுக்கு சரியாக இருந்தேனா என்பது நான் சிறிது உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றியதால் எனக்கே சந்தேகம் இருக்கிறது.
போலியும் நண்பர் மூர்த்தியும் ஒன்று என்று தெரிந்தவர்கள் அவரிடம் நேரிடையாகவே முட்டிக் கொள்ளுங்கள். என்னிடம் முட்டை கொடுக்கவேண்டாம். எனக்கு தேவையற்றதும் கூட. நான் அவருக்கு எங்கேயும் எப்போதும் சான்றிதழ் கொடுக்கவில்லை. எனது சான்றிதழ் தேவையற்றதும் கூட. மற்றபடி வேறு விசயங்கள் எவரும் என்னுடன் உரையாட வந்தால் கண்டிப்பாக பேசுவேன்.
மூர்த்தி / விடாது கருப்பு தொடர்பில் எனக்கு இருவரின் நட்புகள் பாதிக்கப்பட்டது ஒருவர் குழலி, மற்றவர் குமரன். மற்றவர்களுடன் நான் பழகியதில்லை என்பதால் அவர்கள் என்னைப் பற்றி தூற்றியதற்காக எதிர்வினை ஆற்றவில்லை. "கேள்விக் கனைகளை தாக்கு பிடிக்காமல் கருத்து கந்தசாமி தப்பி ஓட்டம்" என்றே எழுதிக் கொண்டு மீண்டும் பதிவுலகில் முகம் காட்ட அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும். எனது பதிவுகளில் 'மஞ்ச துண்டு ' போடும்... ஜயராமன் என்றே விழித்து அழைக்கும் 'பாலா' கூட அவர்களது அவதூறுகளுக்கு பின்னூட்டம் போடாததும் அவர்களுக்கு அவர்களே பின்னூட்டம் போட்டுக் கொண்டதும் எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. :) அவருக்கு தொலைபேசி செய்தாவது வரவழையுங்கள். :)
மூவாண்டுகள் பதிவு எழுதியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. குறிப்பாக பதிவர் வீஎஸ்கே ஐயா, மகேந்திரன், டிபிசிடி , ரத்னேஷ், சிவபாலன்,ஜெகதீசன், பாரி அரசு, ஆகியோரை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் நான் பதிவெழுதும் 'காலங்களில்' வந்திருக்காவிட்டால் தொடர்ந்து இயங்கி இருப்பேனா என்பதே சந்தேகம். எனது கூகுள் சாட் லிஸ்டில் இருந்து தொடர்ந்து என்னுடன் உரையாடும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.
தொடர்ந்து எழுதியது மிகுந்த அயர்ச்சியைக் கொடுத்துவிட்டது. மீண்டும் 2009ல் எழுதவருவேன். அதற்குள் நல்ல மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி பதிவெழுதும் எனது அனைத்து நண்பர்களின் இடுகைகளையும் படித்து நேரமிருந்தால் பின்னூட்டுவேன்.
"எழுதுபவனுக்கும் படிப்பவனுக்குமான தொடர்பு எழுத்தைத் தாண்டி நெருங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எழுத்து நம்முடைய அன்றாட உணவைத் தீர்மானிக்கிற விஷயம் இல்லையே" - ரத்னேஷ்.
ரத்னேஷ், மீண்டும் எழுதவந்தால் நினைவு வைத்துக் கொள்கிறேன்.
"ஏப்ரல் 14 -தமிழர்களின் முட்டாள் தினம்" என்று ஏப்ரல் 14ல் பதிவு எழுதவேண்டும் என்ற ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. அது வராது.
எழுத்தாளர் சுஜாதவின் எழுத்துக்களில் விமர்சனங்கள் இருந்தாலும், அவரும் தமிழில் இலக்கிய உலகில் ஆற்றிய சாதனைக்கு என்று நினைவு கூறத்தக்கவர். அவருக்கு இதய அஞ்சலிகள்.
தலைப்பிற்கு மறைமுகமாக உதவிய தன் ஆற்றல் மிகு எழுத்தால் என்னைக் கவர்ந்த நண்பர் ரத்னேஷ் ! 2007ல் எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்களில் அவர் முதன்மை, ரத்னேஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லது பதிவு நண்பர்களே. அழுகாச்சி பின்னூட்டங்கள் எதுவும் இங்கு தேவையற்றது !!!
அன்புடன்,
கோவி.கண்ணன்
பின்பற்றுபவர்கள்
முற்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முற்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
28 பிப்ரவரி, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்