பின்பற்றுபவர்கள்

புனைவு இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை, 2010

தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு மற்றும் சிலர் !

நாம எழுதுற எழுத்தை வாசிப்பதே பதிவர் / வாசகர் அளிக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறோம், அதிலும் சிலர் எழுதும் அத்தனை இடுகைகளும் எல்லோரும் படிக்கக் கூடிய பதிவு என்பதாக பரிந்துரைப்பது மிகப் பெரிய அங்கீகாரம், நான் அறிந்த வரையில் பதிவர்கள் தமிழ் ஓவியா, திரு மாதவராஜ் மற்றும் வினவுக் குழு ஆகியோர் எழுதும் அத்தனை இடுகைகளும் வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் எப்படியாவது வாசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்க்கும் போது ஏற்படும் வியப்பைத் தாண்டி இவர்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ரஜினி தும்மினாலே பத்திரிக்கை செய்தியாகிடும் என்பார்கள் அது போல் இவர்கள் எதை எழுதினாலும் படித்துவிட்டு பரிந்துரைக்க இவர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமே காத்திருப்பதைப் பார்க்கும் போது இது இவர்களின் பதிவுலக வெற்றி என்றே நினைக்கிறேன். இவர்கள் வெறும் தலைப்பிட்டு வெளி இட்டாலே வாசகர்களால் பரிந்துரைக்கப்படும் என்பது எனது அவதனிப்பு, மேற்கண்ட அன்பர்கள் வாசகர்களைக் கவரும் ரகசியத்தை வெளி இட்டால் பிறரும் பயன்பெறுவர்.

மேலும் தமிழ்மணத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள், வாசகர் பரிந்துரைப் பகுதியை எடுக்காமல் தலைப்பை மற்றும் 'தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு மற்றும் சிலர்' என்று வைத்துவிட்டால் தமிழ்மணத்தை திறந்தாலே பளிச்சென்று வாசகர்களை அடைந்து தமிழ்மணம் திரட்டிக்கு மேலும் பல பதிவர்கள் வந்து இணைத்துக் கொள்ளும் ஈர்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன், செய்வதும் செய்யாமல் இருப்பதும் தமிழ்மணத்தின் விருப்பம்.

பதிவர்களாகிய நாம் தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு ஆகியோர்களின் ஆக்கங்கள் இவ்வளவு சிறப்புற்றிருப்பதற்கு வட்டார அளவில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ பாராட்டு விழா நடத்தினால் இவர்களை கவுரவப்படுத்தி அங்கீகரிப்பது போல் இருக்கும், தொடர்ந்து சமூகத்திற்காக எழுதித் தள்ளும் இவர்களை நாம் அங்கீகரிக்காவிட்டால் யார் தான் அங்கீகரிப்பது.

என்னோடு சேர்த்து வாசகர்களும் பின்னூட்டத்தில் இம்மூவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து அவர்களைப் போல்வாசகர் பரிந்துரையில் தொடர்ந்து இடம் பிடிப்போர் பட்டியலும் இருந்தால் தெரிவிக்கவும், அவர்களுக்கும் பாராட்டுகள் அளித்து ஊக்கப்படுத்துவோம்.

தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு ஆகியோரின் எழுத்துப்பணி என்றென்றும் வாழ்க, மூவருக்கும் பாராட்டுகள்.

இவர்களைப் போன்று உணர்வு பூர்வமான, சுண்டி இழுக்கும் எழுத்து நடை மற்றும் சமூக எழுத்துகளைப் பெற்றிருக்காத அப்பாவி பதிவர்கள் வாசகர் பரிந்துரையில் துண்டு போடுவது இடம் பிடிப்பது எப்படி என்பது குறித்து எனக்கு தெரிந்த புள்ளி விவரங்களை நாளைப் பார்க்கலாம்.

பின்குறிப்பு : தலைப்பில் போதிய இடம் இல்லாததாலும், இது போன்ற தொடர் சாதனையை தொடர்ந்து செய்யாததாலும் சிலரின் பெயர்கள் தலைப்பில் விடுபட்டுவிட்டது, இந்தப் பதிவை படிக்கும் பதிவர்கள் இதை வாசகர்களுக்கு தமிழ் மணத்தில் பரிந்துரைத்தால், மின் அஞ்சல் வழியாக இணைப்பாக அனுப்பினால் மூவரின் பெருமை மேலும் (கீழும் கூட) பரவும் என்பது எனது அவா.

இந்த இடுகையை இதுவரை பரிந்துரைத்தவர்கள் விவரம் இங்கே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்