பின்பற்றுபவர்கள்

செய்திக் கருத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திக் கருத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 மார்ச், 2013

யார் அந்த அதிகாரி ?


நான் செய்தி நிறுவனங்கள் எதையும் முழுதாக நம்புவதில்லை, செய்தி ஊடகங்கள் அனைத்துமே அரசு சார்பு அல்லது எதிர்ப்பு ஊடகங்கள் தான், தாங்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்று செய்தியாளர்கள் கூறிக் கொண்டாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அல்லது தனக்கு வேண்டிய எதிர்கட்சிக்கு ஆதரவாக, அல்லது தாம் சார்ந்த அமைப்புகளுக்கும், தங்கள் கொள்கைக்கு எதிராகவும் செய்திகளை திரித்து வெளி இடுவது அல்லது தேவையற்ற தகவல்களை திணிப்பது இவை தான் செய்தி இதழ்களின் தலையாயப் பணி,  செய்திகளை முந்தித்தருவது என்றெல்லாம் போட்டித் தன்மை சமாளிப்பு என்ற பெயரில் மக்கள் மூளையை கிறங்கச் செய்வதில் செய்தியாளர்களுக்கு நிகர் அவர்களே தான், ஒருவரை உயர்த்திப் பிடிப்பதும், சாதனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு புறக்கணித்து முன்பு தூக்கியவர்களை கீழே போடுவதும் அவர்களின் சர்குலேசனுக்கு ஏற்ற கலை.

செய்தியாளர்கள் பொதுச் சேவையாளர்கள் இல்லை, அவை நிறுவனங்கள் தான், எல்லா தொழில்களிலும் லாபம் ஈட்டும் நோக்கமே முதன்மையானது என்பது போல் தான் செய்தி நிறுவனங்களும், இவர்களின் செய்திகளின் தரம், அதில் நேர்மை இவற்றின் விழுகாட்டு வேறுபாடுகள் தான் ஒரு செய்தி நிறுவனம் மக்கள் இடையே புகழடைந்து விற்பனையில் கூடுகிறதா இல்லையா என்பதையெல்லாம் முடிவு செய்யும், தகவல் என்ற அடிப்படையில் எதையும் நாம் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டாலும் அவர்கள் அதில் விதைத்துள்ள அல்ல மறைத்துள்ள அரசியலையும் சேர்த்தே நுகர்கின்றோம் என்பதே உண்மை. எனவே செய்தி இதழ்களின் எந்த நிகழ்வு பற்றிய தகவல்களுக்கு நாம் உணர்ச்சி வசப்படலாம் என்பதையெல்லாம் அவரவர் தெளிந்து முடிவு செய்வதே நன்மை இல்லாவிட்டாலும் இரத்த அழுத்தம் கூடாமல் இருக்கும், செய்தியாளர்களால் புரட்சி நடந்திருக்கிறது, ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது, ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்பதெல்லாம் கூட உண்மை தான், ஆனாலும் அவற்றைக் காரணமாக வைத்து அவர்கள் என்னேரமும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார்கள், அதுபற்றி எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை

கிழே உள்ள இரண்டு செய்திகளை கவனமாக படிக்கவும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

************

சென்ற மாதம் ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி ஜார்க்கண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் மன்சர் இமாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது விவரங்களை அளிக்க இமாம் மறுத்துவிட்டார்.

ஏற்கனவே அகமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்சர் இமாம் தேடப்பட்டு வந்துள்ளார். இவருக்கு ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read more at: http://dinamani.com/latest_news/article1487767.ece

இன்று ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

டெல்லி: ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கொடுத்த தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 

இந்திய ராணுவத்தில் மேஜர் நிலையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருநபர் அவரை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி பேசியிருக்கிறார். அந்த உளவாளியும் குறிப்பிட்ட அதிகாரியிடம்தான் பேசுகிறோம் என்று நினைத்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் இருந்த அதிகாரி, ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு இடத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். 

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை தலைவர் அர்விந்த் ரஞ்சன், அந்த அதிகாரியை தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

மேலும் ஒரு அதிகாரி... 

இதனிடையே ராஜஸ்தானில் கைதான ஐஎஸ்ஐ உளவாளியுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரியிடம் டெல்லி போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் பொக்ரானில் நடைபெற்ற விமானப் படைப் பயிற்சியின்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் சில முக்கியத் தகவல்களை அந்த அமைப்புக்கு அளித்ததாகவும் சுமர் கான் என்பவர் சிக்கினார். அவருடைய தொலைபேசி அழைப்புப் பட்டியலில் உள்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரியிடம் புலனாய்வு அமைப்பினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பலருக்கு முறையற்ற வழியில் விசா நீட்டிப்பு செய்து தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/05/india-hyderabad-blasts-nsg-official-facing-probe-170958.html

********

இரண்டு தகவல்களும் வெவ்வேறு ஊடகங்களில் வந்த தகவல் தான், முதல் செய்தியில் குற்றவாளி என்று கருதப்படுபவரின் பெயரை வெளி இட்டுள்ளனர், குற்றவாளியின் பெயரை  (மன்சர் இமாம்) வைத்து என்ன மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதல்ல, ஆனால் இரண்டாம் செய்தியில் இந்திய தேச துரோகம் என்ற அளவுக்கு குற்றம் செய்தவனை ஒரு அதிகாரி, அந்த அதிகாரி என்றெல்லாம் மொட்டையாகவே செய்தி போட்டு இருக்கின்றனர், மேஜர் நிலையில் பணியாற்றிய 'அந்த அதிகாரிக்கு' பெயர் இல்லையா ? பெயரை வெளி இடாமல் இருக்க பாதுகாப்பு காரணம் என்றால் அதை ஏன் செய்தியாளர்களுக்கு தகவலாக தரவேண்டும், உள்ளுக்குள்ளேயே அமுக்கி இருக்கலாமே, எல்லாவற்றையும் நோண்டுவோம், நொங்கெடுப்போம் என்று அறைகூவும் செய்தியாளர்கள் அந்த தேச துரோக குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா ? ஒருவேளை 'அந்த அதிகாரி' பெயரை வைத்து இந்து என்று கண்டிபிடித்து காரித்துப்பினால் பிறகு இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து செய்திகள் போட முடியாது என்கிற நட்ட நடுசெண்டர் நிலையோ ?

குற்றங்களும் குற்றவாளிகளும் தாங்கள் சார்ந்துள்ள மதங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் செயல்பட்டாலும், குறிப்பிட்ட மதத்தினரை மட்டுமே வெளிச்சம் போட்டு மற்றதை மறைப்பது நல்லதில்லை. ஒருதலைப்பட்சமான தகவல்கள் தேவையற்ற வெறுப்புகளையும், அச்சத்தையும் வளரவைக்கும். குற்றங்கள் நிருபனம் செய்யப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்படாதவரை எவருடைய பெயரையும் புகைப்படத்தையும் இன்னார் தான் குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார் என்று காட்டுவதை தவிர்கலாம். பிழைப்புவாதிகளான செய்தியாளர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை.

1 பிப்ரவரி, 2012

வேதனை மற்றும் எரிச்சல் தந்த ஒரு செய்தி !

பொதுவாகவே செய்தி ஊடகங்கள் மிகைப்படுத்தித் தான் எதையும் சொல்லுகின்றன. வாசிப்பாளர்களின் சிந்தனையை தூண்டுவதும், முடக்குவதும் அவர்களின் செய்திகளின் தரம் வழியாக உருவாக்கப்படுபவை. கள்ளக்காதலர்கள் 'உல்லாசமாக இருந்தனர்' 'ஜாலியாக' இருக்கும் போது கொலை செய்யப்பட்டனர் என்றெல்லாம் நேரில் பார்த்தது போல் எழுதுவார்கள். அவர்கள் உல்லாசமாக இருந்தார்களா ? அவசரகெதியில் நடந்து கொண்டார்களா அல்லது தனக்கு மறுக்கப்பட்ட ஒன்றை வேறு இடத்தில் தேடிக் கொண்டார்களா ? என்பது தொடர்புடைய இருநபர்களுக்குத்தான் தெரியும். இன்றைக்கு கூட அப்படியான செய்தி ஒன்று நக்கீரனின் வெளியாகி உள்ளது, தினமலரின் தரம் அறிந்து அதனை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். கள்ளத் தொடர்புகளின் கொலைகளை செய்தித்தாள்கள் எழுதுவதே அந்த நிகழ்வுகளுக்காக இல்லை, இந்தக்த் தகவலை தெரிந்து கொள்ளாத தமிழினம் அழிந்துவிடும் அல்லது சபிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் எழுதுகிறார்களா ? அவற்றில் இருப்பவை பாலியல் சார்ந்த தகவல் என்பதால் அதில் நாட்டமுள்ளவர்களை தொடரும் வாசகராக்கும் திட்டத்துடன் மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். அவை வெறும் விற்பனை நோக்கம் தான்.

*******
சிங்கப்பூர் தமிழ் முரசு செய்தி பிரிவினருக்கு,

22 ஜனவரி 2012 (சிங்கப்பூர்) தமிழ் முரசு நாளிதழில் முகப்பு பக்கத்தில் மேற்கண்ட செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு குழந்தையை முதலை விழுங்கிய தகவல் மிகவும் கவலைக்குரியதும் வேதனையான ஒன்றும் ஆகும், அந்தக் குழந்தையை இழந்த பெற்றோர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. ஆனால் இந்தத் தகவலை 'ஏப்பம் விட்டுவிட்டது' என்று எழுதி நகைச்சுவை ஆக்கி இருந்தது செய்தியின் வெளியிடுதலின் தரம் குறித்த சிந்தனையை தோற்றுவித்தது.

பொதுவாக கடன் வாங்கி ஏமாற்றுதல், அல்லது நிதி நிறுவனங்களின் மோசடி ஆகியவற்றைத்தான் 'ஏப்பம் விடுவது' என்று எழுதுவது அல்லது சொல்லுவது வழக்கம், காரணம் அங்கு நடைபெறுவது நம்பிக்கை மோசடி, நம்பிக்கை மோசடி நகைச்சுவை இல்லை என்றாலும் பிறருக்கு எச்சரிக்கைக்காக முதலை வாயில் விழுந்த பணம் போன்று 'பணத்தை ஏப்பாம் விட்டுவிட்டார்கள்' என்று செய்தியாளர்கள் எழுதுவதுண்டு.

குழந்தையை முதலை விழுங்கிய செயல் நம்பிக்கை மோசடி அல்ல, அது விரும்பத்தகாத எதிர்பாராத வேதனையை உருவாக்கிய நிகழ்வு, தங்கள் வெளியிட்ட செய்தியில் இடம் பெற்றிருக்கும் 'ஏப்பம் விட்டுவிட்டது' என்ற கருத்தாக்கம் பத்திரிக்கை உத்தி என்று பார்த்தாலும் கூட ஏற்றுக் கொள்ள இயலவில்லை, செய்தி இதழ்கள் தான் மனிதர்களின் சிந்தனையை வளர்க்க உதவுகின்றன அதே போன்று பொதுவான சிந்தனைகளையும் தோற்றுவிக்கின்றன. மேற்கண்ட தகவலை படித்த போது குழந்தையின் மறைவு வேதனையை ஏற்படுத்திய அதே வேளையில் செய்தியில் இடம் பெற்றிருந்த நகைச்சுவை எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த செய்தியை தகவல் அடிப்படையில் நகைச்சுவை சேர்க்காமல் கொடுத்திருக்காலம் என்பதே என் கருத்து.

இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட அல்லது விரும்பத் தகாத சொற்களை செய்திகளில் தவிர்க்க வேண்டும் என்று உங்களின் நாளிதழ் வாசகன் என்ற முறையில் வேண்டுகோள் வைக்கிறேன்

அன்புடன்
கோவி.கண்ணன்

******

இந்த கருத்தை மின்னஞ்சல் வழியாக தமிழ் முரசிற்கு அனுப்பி இருக்கிறேன், வாசகர்கள் கடிதங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன், என்ன பதில் சொல்லுவார்கள் என்று பார்ப்போம்.

21 ஏப்ரல், 2011

சாய்பாபா செத்துப் போவாரா ?

சாய்பாபா செத்துப் போய்விடுவாரொன்னு பக்தர்கள் பதட்டம் அடைந்துள்ளார்களாம். அவர் தான் அவதாரமாச்சே அவருக்கு ஏது மரணம் என்று இவர்கள் ஒருகால் நினைத்தால் இவ்வாறு பதட்டம் ஆகுமா ?

கவலைப்படாதீர்கள் ஏதோ ஒரு சிறுவன் நான் தான் சாய்பாபா என்று ஓரிரு ஆண்டுகளில் அறிவிக்கக் கூடும், சீரடி சாய்பாபா செத்துப் போன பிறகு தானே அது என்று அறிவித்துக் கொண்டவர் தான் தற்போது மரணத்துடன் போராடிவரும் சத்திய சாய்பாபா.

சாமியார்கள், மடாதிபதிகள், சாய்பாபாக்களும் சாவதில்லை, எப்படியோ அவதாரம் எடுத்துவிடுவார்கள்.

***********

மூப்பு, பிணி மரணம் இவையெல்லாம் சதைப் பிண்டமான உடம்பை உடைய எல்லோருக்கும் வரும் சாமியார்களோ, சாய்பாபாக்களோ விதி விலக்கு இல்லை, புத்தரே செத்துப்போனதாகத்தான் வரலாறு சொல்கின்றன. எந்த ஒரு பிரம்மச்சாரியும் தாய் தந்தை உடலுறவு இல்லாமல் பிறந்திருந்தால் அவர்கள் செத்துப் போகமாட்டார்கள், சாய்பாபா அப்படியாக ஒன்றும் பிறக்கவில்லை.

கடவுள் முகம் காட்டாதவரை இறைத்தூதர்களுக்கும், 'நான் கடவுள்' அவதாரங்களுக்கும் இவ்வுலகில் பஞ்சம் ஏற்படுவதே இல்லை.

9 பிப்ரவரி, 2011

மாயாவதியின் காலணியும் இந்துத்துவமும் !

மாயாவதியின் காலணியை விருது பெற்ற காவலர் துடைப்பதாக படங்களுடன் செய்திகள் வெளி வந்துள்ளன. மாயாவதி ஒரு ஆண் முதல்வராக இருந்தால் இந்த அளவு பெரிதுபடுத்தப்பட்டு இருக்குமா என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். இது போன்ற மனிதனை இழிவு படுத்தும் செயல் ஒன்றேயெனினும் அதில் தொடர்புடைய நபர்கள் ஆணா பெண்ணா என்பதால் அது வெளிச்சம் பெருகிறது. ஒரு பெண்ணுக்கு அதுவும் தலித் பெண்ணுக்கு காலணி துடைப்பது எத்தகைய இழி செயல் என்பதைத் தான் அந்த செய்திகள் பரப்ப முற்படுகின்றன. நான் மாயாவதியின் செயல் சரி என்று வாதிட இதை எழுதவில்லை. மாறாக நானும் மனித உரிமை மீறல் என்கிற நிலையில் அதை கண்டிக்கிறேன். ஆனால் இவற்றை விமர்சிப்பவர்களின் நிலை குறிப்பாக தயிர்சாத மற்றும் உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்வோரின் வன்கொடுமைகளை கண்டிக்கத் துணிவு இல்லாத செய்தி இதழ்களின் மனித உரிமை கரிசனம் எத்தகையது எதனுடன் தொடர்புடையது என்பதை எண்ணிப் பார்க்க அவர் ஒரு பெண் மேலும் அவர் ஒரு தலித் என்பதால் இவை பரபரப்பாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

தலித்துகள் பொது இடத்தில் காலணி அணிய இன்னும் கூட சில கிராமங்களில் தடை இருக்கின்றன. தோலில் துண்டு போட்டுக் கொள்ள முடியாது, இடுப்பைச் சுற்றி அணிந்து கொள்ள வேண்டும், இரட்டை தம்ளர். அவர்கள் வேலை பார்க்கும் வீட்டின் கழிவறையைக் கூட அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி இல்லை. குறிப்பிட்ட கோவில்கள், சுடுகாடு, சர்ச்சுகள் எங்கும் அவர்களுக்கு அனுமதி மறுப்பு. ஒரே ஒரு (தலித்) பெண் காலணியைத் துடைக்க வைத்துவிட்டாள் என்று துடிக்கும் இவர்கள் தலித்துகளுக்கு தொடரும் சமூகக் கொடுமைகளைக் களைய என்றாவது முயற்சிக்கிறார்களா ? கர்ம யோக அடிப்படையில் ஒருவன் தன் தொழிலை அதாவது தலையில் மலக் கூடை சுமக்கும் ஒரு தலித் மறுபிறவியில் சுவர்க்கத்தை அடைவான் என்றார் குஜராத்தின் மோடி. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து 'தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகள்' கூகுளில் தேடினால் அவலங்களையும், அவமானங்களையும் துப்பிக் காட்டுகிறது கூகுள்.

புதிய ஏற்பாட்டு பைபிளில் இருந்து ஏசு நாதர் கூறுவதாக ஒரு குறிப்பு கொஞ்சம் மாற்றத்துடன்,

"உங்களில் யார் தலித் வன்கொடுமையாளர்கள் மற்றும் வன்கொடுமைக்கு ஆதரவானவர்கள் இல்லையோ அவர்கள் மாயாவதி மீது கல்வீசுங்கள்"

இணைப்பு : பாஜகவின் தலித் விரோத பரிசோதனைக்கூடம்(குஜராத்)!

10 ஜனவரி, 2011

துரோணாச்சாரியாரும் உச்ச நீதிமன்றமும் !

ஒரு சமூக நீதி தொடர்பான தீர்பின் ஊடாக தூரோனாச்சாரியாரின் செயலை பற்றி எதிர் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது தன்னை குருவாக உருவகித்து ஏகலைவன் கற்றத் தேர்ந்து கூடவே வெல்ல முடியாதவன் என்ற தகுதியைப் பெற்றதற்கு காணிக்கையாக தூரோனாச்சாரியார் ஏகலைவன் கட்டைவிரலைக் கேட்பது பற்றிய கதை அனைவருக்கும் தெரிந்ததே, அதைத்தான் உச்ச நீதிமன்றம் கண்டனம் செய்திருக்கிறது. தன்னுடைய நேரடி மாணவன் ஆக இல்லாதவனிடம் காணிக்கை கேட்டதில் உள்நோக்கம் இருந்தது, அதன் படி ஏகலைவன் என்கிற ஒரு சிறந்த வேட்டுவ வீரனை தலையெடுக்கவிடாமல் செய்து அந்த புகழை அர்சுனனுக்கு கிடைக்குமாறு துரோணாச்சாரியார் செய்தது கடைந்தெடுத்த ஐயோக்கியத் தனம் கண்டனத்துக்குரியது, துரோணரின் செயல் அவமானமானது என்பதாக தீர்பில் சொல்லப்பட்டுள்ளது.

*****

எனக்கு இந்துமதம் என்கிற ஒருங்கிணைந்த இந்திய சமயங்களுக்கான பொதுப் பெயரில் எப்போதுமே ஒப்புதல் இல்லை. இந்துமதத்தினர் என்பவர் யார் யார் ஆப்ரகாமிய மதங்களைச் சாரதவரோ அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதாக வெள்ளைக்காரன் வழிகாட்டுதலின் பெயரில் நமது சமயம் எது என்பதன் பெயருக்கு உடைய இடத்தில் இந்துமதம் என்று போடப்பட்டுள்ளது என்பதைத் தவிர்த்து இந்துக்களில் பெரும்பான்மையினர் விரும்பி அதனைப் போட்டுக் கொண்டதில்லை. அல்லது இந்து மதம் என்பதன் பொருள் தெரியாதவர்கள் இந்து மதத்தினரின் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்றும் சொல்லலாம். மதத்திற்கான கொள்கைகள் என்பதில் பார்பனர்கள் போற்றும் நான்கு வேதங்களை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துக்கள் என்பதாக இந்துமதத்தினருக்கு கொடுக்கப்படும் விளக்கம்.

இந்துகளில் எத்தனை பேருக்கும் அப்படியான நான்கு வேதங்கள் இருப்பது தெரியும் ? நான்கு வேதங்களும் அதை மேற்கோள் காட்டி பின்னர் வந்த பகவத் கீதை, மனு உள்ளிட்டதில் இருக்கும் நான்கு வருண கோட்பாட்டை பார்பனரில் பெரும்பான்மையினர் தவிர்த்து இந்துக்களின் பெரும்பான்மையினர் தற்காலத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே இந்து மதத்தினர் நான்கு வேதங்களை போற்றுபவர்கள் என்கிற அடிப்படையே ஆட்டம் கண்டவையே. பிறகு எது தான் இந்து மதம் ? இந்துமதம் என்பது ஒரு பொதுப் பெயர் தான். இந்தியர் என்பதில் இந்திய இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியரும் அடக்கம் என்பது போல் தனித் தனியான பல் வேறு சமய நம்பிக்கைகளை உடைய இந்தியம் சாராத சமயத்தினர் தவிர்த்து அனைவரும் இந்துக்கள்.

இந்து சமயத்தின் மூட நம்பிக்கை என்பது பொதுவாக இந்துக்கள் அனைவரிடமும் இருக்கும் மூட நம்பிக்கை அல்ல. அதனுள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் மூடநம்பிக்கை சார்ந்தது மட்டுமே. வைணவர்களிடம் இருக்கும் சில நம்பிக்கைகள் சைவர்களிடம் இருக்காது, அது போல் குலதெய்வ வழிபாட்டினர், சக்தி வழிபாட்டினர் இவர்களிடம் இருக்கும் நம்பிக்கை பிறரிடம் இருக்காது, எனவே இந்து சமய மூடநம்பிக்கை இந்துக்களுக்கு பொதுவானதோ, பொதுப்படுத்துதலில் அடக்குவதோ தவறு, அல்லது இந்திய சமயம் சார்ந்த தெளிவுகள் எதுவுமே இல்லாமல் பொதுப் படையாகச் சொல்லும் ஒரு மேலோட்டமான விமர்சனம் மட்டுமே. தலையில் தேங்காய் உடைப்பதோ, குழந்தைகளை குழிக்குள் போட்டு பிறகு எடுப்பதோ இந்துக்கள் அனைவரின் செயல் அல்ல, அது போல் பூணூல் அணிவதன் மூலம் தாம் உயர்ந்த பிராமணப் பிறவி (இருபிறப்பு) அடைவதாகக் கூறிச் செய்யும் பார்பனர்கள் மற்றும் ஆசாரி, செட்டியார் உள்ளிட்டோரின் மூட நம்பிக்கை இந்து மதத்தினர் அனைவருக்கும் பொதுவானதோ, வலியுறுத்தப்பட்டதோ அல்ல. இந்துமதத்தின் பொதுவான நம்பிக்கை இதுதான் என்று சொல்ல அறுதியிட்டு எதுவும் இல்லை. ஆப்ரகாமிய மதங்களின் தாக்கத்தில் பொதுவான புனித நூல் 'பகவத் கீதை' என்பது நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது, தீவிர சைவர்களை அதில் சத்தியம் செய்யச் சொன்னால் வெறும் கடமைக்குத்தான் செய்வார்கள்.

*****

முதல் பத்திக்கும் மேற்கண்ட இந்து சமயம் சார்ந்த தகவல்களுக்கும் தொடர்பில்லை, இந்திய நிலப்பரப்பின் பழங்கதைகள் என்பதாக இராமயணம் மகாபாரதம் உள்ளிட்டவை, அவைகளும் பல்வேறு உள்ளடக்கத்துடன் (வெர்சன்) ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்படுகின்றன, இன்றைக்கு அவற்றை படிக்கும் நாம் அறிவாளிகள் போலவும், அவற்றில் இருப்பது அபத்தங்கள், முறையற்றவை போன்றும் நமக்குத் தெரிவதற்கு இன்றைய வாழ்வியல் சூழல் என்பது தவிர்த்து வேறெதுவுமே இல்லை. மேற்கண்ட துரோணர் - ஏகலைவன் கதையையே எடுத்துக் கொண்டால், ஏகலைவன் என்கிற பாத்திரம் கதையில் வைத்திருக்க காரணம், தூரோணர் என்பவரின் ஆசிரியர் திறமையை சிறப்பிக்க வரும் ஒரு பாத்திரம், அதாவது அந்த ஆசிரியரை மனதினால் நினைத்தாலே அவர் கற்றுக் கொடுக்க வேண்டியவற்றை அவர் இல்லாமலேயே கற்றுக் கொள்ள முடியும், என்பது தான் அந்த ஏகலைவன் பாத்திரத்தின் மூலம் கதையில் சொல்ல வருவது, மகாபாரதத்தில் இது ஒரு கிளைக்கதைதான்.

ஏகலைவன் ஒரு வேடன், இயல்பாக வில் ஏற்றம் செய்யக் கூடியவன், மேலும் அவனுக்கு ஒரு ஆசிரியர் கிடைக்கும் போது அவன் அதில் சிறந்தவன் ஆகிறான், எது போன்ற ஆசிரியர் என்பதில் துரோணர் என்பதை பதிலாக வைத்திருக்கும் ஒரு கிளைக்கதை, அந்த ஏகலைவன் பாத்திரமே துரோணரின் ஆற்றலைக் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு குறியிடூ, அத்துடன் அந்தப் பாத்திரம் கதைக்குத் தேவை இல்லை என்பதாக கட்டைவிரலை வெட்டிக் காணிக்கைக் கேட்பதுடன் அந்தப் பாத்திரத்தை ஓரம் கட்டிவிட்டு மகாபாரதக் கதை அடுத்தப் பகுதிக்கு கதை நகர்ந்துவிடும். இதே போன்று இராமயணத்தில் சொல்லபடும் வாலியின் பாத்திரமும் அவன் அளவில் அவனுடைய பலம் எதிரே போருக்கு நிற்பவனைவிட இருமடங்கு என்பதாக சொல்வது அவன் எளிதில் நேருக்கு நேர் வெல்ல முடியாதவன் என்று சொல்வதற்கான ஒரு கதை சொல்லும் உத்திமட்டுமே, பிறகு எப்படி வெல்லப்பட்டான் ? என்று சொல்ல இராமன் மறைந்திருந்து வில் ஏற்றிக் கொன்றான் என்பதாக அந்த கிளைக்கதையை முடித்து அடுத்தப்பகுதிக்குச் செல்கிறார்கள்.

இந்த இருகதைகளை வைத்து தான், துரோணர் செய்தது சரியா ? இராமன் மறைந்திருந்து கொன்றது சரியா என்ற விவாதமெல்லாம் நடக்கின்றன, உச்சகட்டமாக உச்ச நீதிமன்றமே விமர்சனம் செய்திருக்கிறது. பல பாகங்களையும், பல நூறு கிளைக்கதைகளையும் வைத்துக் கதை எழுதியவர்கள் இந்த சின்ன கிளைக்கதையில் சறுக்கிவிட்டதை, கோட்டைவிட்டதை தற்போது நாம் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பு என்று கூறி மேதாவித்தனத்தை காட்டும் போது, இந்துமதம் குறித்த பலவேறு எதிர்மறை விமர்சனம் செய்யும் என்னால் கூட நகைக்காமல் இருக்க முடியவில்லை. திரவுபதிக்கு ஐந்து கணவர்கள் இருக்கும் அதே மகாபாரத்கதையில் தான், தன் கணவனுக்கு (திருதராட்சதன்) கண் இல்லை என்பதால் தானும் கண்ணைக்கட்டிக் கட்டி வாழும் (காந்தாரியின்) கதையும் சொல்லப்பட்டு இருக்கிறது. விமர்சனம் செய்பவர்கள் திரவுபதி கதை மட்டுமே எடுத்துக் கொண்டு கதை எழுதியவன் முட்டாள் என்பது போல் பரப்புகிறார்கள்.

பலதார மணங்களுக்கு ஆதரவானவர்கள் கூட ஒரு பெண் அவ்வாறு பல கணவர்களை திருமணம் செய்வது சமூகக் கேடு என்பது போலவும், இந்தக் கதைகள் பண்பாடற்ற கலாச்சாரத்தின் கண்ணாடி என்பது போலவும் இந்தியபண்பாடுகள் கீழானவை என்பது போல் சொல்லுகிறார்கள். இந்தப் பழங்கதைகள் எந்தக் காலத்திற்கும் ஏற்றக் கருத்துகள் கொண்டவை என்று சொன்னால் அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன், ஆனால் அதே சமயத்தில் அனைத்தையும் ஒளிவு மறைவு இன்றி பதிவு செய்திருப்பதன் வெளிப்படையை நாம் போற்றவேண்டும் என்றோ எழுதிய கதைகளை விமர்சனம் செய்வது இன்றைய சூழலில் நாம் அறிவாளிகள் என்று காட்டிக் கொள்ளூம் ஒரு மேட்டிமைத் தனமேயன்றி வெறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பலநூறு கிளைக்கதைகளை வைத்து எழுதப்பட்டவை சின்ன சின்ன நிகழ்வுகளை எழுதும் போது சறுக்கிவிட்டது என்று சொல்ல அவை 'சித்தி, அண்ணாமலை, செல்வி, அண்ணாமலை' வகை கதைகளும் அல்ல.

தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் கடவுள்களும் அல்ல. முன்பெல்லாம் மிசனரிகள் தான் இந்திய புராணக் கதைகளின் பாத்திரங்களை இழிவு செய்வார்கள், இப்போது இந்திய நீதிபதிகளே செய்வது வருத்ததிற்குரியது. மற்றபடி இதை எழுதுவதன் மூலம் நான் இந்துமத இடிதாங்கி என்று நினைத்தால் தவறு, அந்த புரிதலைத் தவிர்க்கவே இரண்டாம் மூன்றாம் பத்திகளில் இந்துமதத்தின் வரையரைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளேன்

29 டிசம்பர், 2010

திருமா அறிமுகப்படுத்திய தமிழ் கொடி !

தமிழ் கொடி என்றதும் தமிழ் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் இந்திய இறையாண்மையை சிதைக்கும் திட்டமிட்ட சதி என்று தேசியவாதிகள் கிலி பிடித்து உளறுவார்கள். தேசியம் என்கிற பெயரில் மாநில உரிமைகளும்,, மாநில மொழியும் அழிந்து போகாமல் இருக்க மொழி உணர்வை மேம்படுத்த தமிழ் நாட்டிற்கு தனிக் கொடி தேவை என்பதை நான் வழிமொழிகிறேன். தேசியவாதிகள் பயந்து மிரள மாநிலக் கொடிகள் என்பவை ஒரு அடையாளம் என்பது தவிர்த்து எதுவும் இல்லை, அண்டைமாநிலம் கர்நாடகாவில் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்திற்கான தனிக் கொடி இருந்துவருகிறது, வாட்டாள் நாகராஜ் ஏந்துவது கர்நாடக மாநிலக் கொடியைத்தான்.

தமிழர்களுக்கான அடையாளம் மொழி, மொழி என்பது பண்பாட்டு அடையாளம் மட்டுமே, இவற்றை குறியீடாகக் கொள்ள முடியாது. உலகமெங்கும் குறீயீடுகள் மக்கள் இனக் குழுவை அடையாளப்படுத்த ஏற்படுத்தப்படுவது நடைமுறைதான். நிலம்சார்ந்த வகையில் தமிழ் நாடு என்று சொல்லப்படுவதற்கு வெறும் வரைபடம் தவிர்த்து எந்த அடையாளமும் இல்லை. தற்போது தமிழ் கொடி அமைத்திருப்பது வரவேற்க்கக் கூடிய ஒன்று, இதை என்றோ செய்திருக்க வேண்டும்.

தற்போது திருமாவால் வடிவமைக்கப்பட்டு திக தலைவர் வீரமணி அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழ் தனிக்கொடிக்கு முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் எதுவும் இல்லை. மேலும் இதனை விரும்பவும் இல்லை, காரணம் தேசியவாத காங்கிரசை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதே.

தமிழ் கொடி பற்றிய சிந்தனையும், செயல்படுத்தலும் சரிதான், இருந்தாலும் இதுபற்றி பல்வேறு தரப்புகளிடம் விவரித்து, பல்வேறு வடிவமைப்புகளாக வைத்து ஒன்றை தெரிவு செய்திருக்கலாம், அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையான கருத்துகளோ, ஏற்புகளோ கிடைத்திருக்காது. ஆனால் பொதுமக்களிடம் கருத்தும் வாக்கெடுப்பும் நடத்தி இருக்கலாம்.

கொடியில் தமிழ் நாட்டின் சின்னங்கள் எதுவுமே இல்லை. தமிழ் நாடு பஞ்சு உட்பட விவசாயத்திற்கு பெயர் பெற்ற மாநிலம், மீன்பிடித் தொழில் பெயர்பெற்றது, பல்வேறு சமய / மத / மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் நிறைந்த மாநிலம். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இவற்றை காட்டும் வடிவமைப்பு கொடியில் இருந்தால் நன்றாக இருக்கும்.


அவசர கெதியில் 'நான் தான் பெயர் பெற வேண்டும்' என்று கட்டிய தமிழ்நாட்டு தலைமைச் செயலகத்தைப் பாருங்கள், எனக்கு அது பிடிக்கவே இல்லை. தமிழ் நாட்டின் முகப்பைக் காட்டுவதாக, கட்டிடக் கலையைக் காட்டுவதாக கட்டிடம் அமைந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் எந்த ஒரு சின்னமும் தலைமை செயலக கட்டிடத்தில் இல்லை. எண்ணை தொழிற்சாலையில் இருக்கும் சேமிப்பு தொட்டி ஒன்று பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அல்லது நெல் அரவை மில்களின் ஊரல் தொட்டிகள் பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது தலைமைச் செயலகம்.

சிற்பகக் கலைக்கும் / கோபுரங்களுக்குப் பெயர் போன தமிழ் நாட்டில், தாம் தமிழர்களின் அடையாளம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரால் கட்டிமுடிக்கப்பட்ட தலைமைச் செயலகம். பாதி வரை ஈயம் பூசப்பட்ட கவிழ்த்து வைத்த கரிபிடித்த அண்டாவைப் போலவே இருக்கிறது என்று காணும் போதெல்லாம் வருத்தம் கொள்கிறேன்.

தமிழ் கொடியும் அவ்வாறில்லாமல் தமிழர் பண்பாட்டைச் சொல்லும் அடையாளங்கள் அதில் இருக்க வேண்டும், கொடி அமைத்தல் நல்லச் செயல், தேவையும் கூட என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமாவின் முன்னெடுப்பும், திக வீரமணியின் ஒப்புதலும் நல்ல துவக்கம். ஆனால் இதுவே இறுதி என்பதை ஏற்கமுடியவில்லை. கொடியை மாற்றி அமைத்து பொதுமக்களின் ஒப்புதல் பெறுவது சரியான நடைமுறையாக இருக்கும்.

சுட்டிகள் :

தமிழர் இறையாண்மை மாநாடு புகைப்படத் தொகுப்பு


கூட்டணியில் இருக்கிறோம்... கூட்டம் போடத் தவிக்கிறோம்!

7 டிசம்பர், 2010

கமல் கவிதைக்கு வெளம்பரம் கொடுக்கும் இந்துத்துவாக்கள் !

கமலஹாசன் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவர் அதையும் தாண்டி பல்கலை அறிஞனாகக் காட்டிக் கொள்ள கவிதை எழுதுவார், பாடுவார். எகிரும் குரலில் (ஹைப் பிச்) பாடவல்லவர், அவ்வாறு நிறைய பாடல் பாடி இருக்கிறார். மாடர்ன் ஆர்ட் எனப்படும் வரைகலையைப் பற்றி (காதலா காதலா) கேலி செய்பவர், அன்பே சிவம் படத்தில் மாடர்ன் ஆர்டை முதன்மைபடுத்தி இருப்பார். புரியாத ஒன்றை கிறுக்கி கவிதை என்று சொல்லி பேசுவார். அவருக்கு ஏன் வேண்டாத வேலை... இருக்கிற திறமைக்கு வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதுல யாருக்கும் புரியாத கவிதை வேறையா ? கலைத்தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு எப்போதும் கலைதாகம் எடுத்து பால், வெண்ணை, தயிரோடு ஆட்டுக்கால் பாயாவும் கேட்கிறது என்பதாக வைத்துக் கொள்வோம், ஆனால் அவை செறிக்க வேண்டாமா ? :)

*****

மன்மதன் அம்பு கலைப்படையலில் தொட்டுக்கைக்காக கமலே ஒரு பாடலை இயற்றிப் பாடி இருக்கிறாராம். படிச்சுப் பார்த்தேன், எழுத்துகளும் சொற்களும் தமிழ் என்பது தவிர்த்து எனக்கு எதுவும் புரியவில்லை. அதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லும் இந்துத்துவா(லா)க்கள், இந்து மதத்தை கமல் கொச்சைப்படுத்துவிட்டார் (மீண்டும் சீண்டும் கமல்) என்று குதிக்கிறார்கள். படுக்கை அறையில் நிகழ்வான பாடலில் அரங்கநாதனையும் வரலட்சுமியையும் இழுத்து அசிங்கப்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான இந்துக்களை புண்படுத்திவிட்டதாகக் கூறி கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களாம்.

இந்து மதம் எங்கே புண்படுகிறது ? கோவிலுக்குள் நுழைந்தால் கோபுரத்தில் இருக்கும், சுற்றில் இருக்கும், தூண்களில் இருக்கும் சிலைகளில் வடிக்கப்பட்டு இருக்கும் எந்த ஒன்றையும் விட பாடல்வரிகளில் என்ன ஆபசம் இருக்கிறது என்றே தேடிப்பார்த்தாலும் புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஆண்டாள் பாடிய பாடல், இதில் இருக்கும் விரசம், ஆபாசம் அளவுக்கு கமல் எழுதிய பாடலில் இருகிறதா தெரியவில்லை.


''குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல
மெத்தென்ற சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பை வாய்திறவாய்
மைத்தடங் கண்ணீனாய் நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்..."38
(மேற்கண்ட ஆண்டாள் பாடலின் பொருளுக்கு இங்கே செல்லுங்கள்)

ஆண்டாள் பாடியவற்றை திருப்பவை, திருவெம்பாவை என்றெல்லாம் பக்தி இலக்கியதில் வைத்து கோவிலிலும் பாடுகிறார்கள். திரையில் நாயகன் நாயகியைப் பாடுவதில் விரசமாம். அதில் ரங்கநாதன் வரலட்சுமி என்ற வரிகள் இல்லாவிட்டால் விரசமாக தோன்றாது போலும்.

கமல் என்ற மன்மதக் கலைஞன் மீது அம்பு வீசுகிறார்கள் என்றும், அந்தப் பாடலில் ஆபாசம் இல்லை என்றோ நான் எழுதவில்லை, ஆபாசம், காமம் என்று வரையறுக்கப்பட்டவை அனைத்துமே (இன்றைய) இந்து மதத்தின் பகுதியாவும் இருக்கிறது, இதில் குறிப்பிட்டு சிலரை எதிர்த்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று கிளம்பும் பேர்வழிகள் நாயகி / நாயகன் பாவங்களில் பாடிய வழிபாட்டுப் பாடல்களை தீயிட்டுக் கொளுத்துவார்களா ? இரண்டாவது பொண்டாட்டியை ஏன் இந்த சாமி வச்சிருக்கிறது என்று கேட்கும் இன்றைய சிறுகுழந்தைகளுக்கு பதில் சொல்ல நம்மிடம் பக்தி, சாமி, கதை, கண்ணைக் குத்திடும் என்று சொல்லும் இன்றைய சமய நம்பிக்கையின் மழுப்பல்களைத் தவிர்த்து என்ன இருக்கிறது ?


தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ?

9 செப்டம்பர், 2010

அடுத்தவாரத்தில் பற்றவைக்கப்படும் கலவர திரி !

செப் 11 நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்பு நினைவு நாளில் அமெரிக்காவில் (GAINESVILLE, Fla) ஒரு உள்ள ஒரு தேவாலய பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் இஸ்லாமியர்களின் இறைவாக்கு என்று போற்றப்படும் திருகுரானை எரிக்கப் போகிறாராம். இது குறித்து அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும், பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் தனது திட்டமிட்ட முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். குரான் எரிப்பு நிகழ்வு திட்டமிட்டபடி நடந்துவிட்டால் அதன் பிறகு ஏற்படும் படுகொலைகளை, கலவரங்களை யாராலும் தவிர்க்க தடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

டென்மார்க் செய்தித்தாள் ஒன்றில் முகமது நபி குறித்து கேலிச்சித்திரம் வெளி இடப்பட்டதற்காக பெரும் கலவர சூழல் ஏற்பட்டு, பிறகு சம்பந்தப்பட்ட செய்த்தித்தாள்களும் அரசும் மன்னிப்பு கேட்ட பிறகு அடங்கியது. கலவரங்கள் நடக்கலாம், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படலாம் என்பதை பாஸ்டர் டெர்ரி அறியாதவர் இல்லை. இருந்தாலும் தற்போது பாதுக்காப்பில் இரும்பு பெட்டமாக இருக்கும் அமெரிக்காவினுள் எதுவும் நடக்காது தடுக்கப்படுவிடும் என்று நம்புகிறார் போலும். அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளில் இந்நிகழ்ச்சியின் எதிர்வினையாக மூளும் கலவரங்கள் குறித்து அவர் அலட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. பொதுவாக மதவாதிகள் அனைவருமே 'இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் கிடைக்கட்டும்' என்பதை சமயக் கூட்டங்களில் மட்டுமே சொல்லுவார்கள், வெளியில் அவ்வாறெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள், முடிந்த வரையில் மாற்று மதத்தினரை புண்படுத்தி, கிளறிவிட்டு குளிர்காய முடியுமா என்று மட்டுமே நினைப்பார்கள், அப்படி ஒருவராகத்தான் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் தெரிகிறார்.

பொதுவாக மெதடிஸ் மற்றும் பெந்தகோஸ், புரோட்டஸ்டாண்ட் கிறித்துவ சபைகளை வழிநடத்துபவர்கள் பாஸ்டர்கள் எனப்படுவார்கள், கத்தோலிக்க கிறித்துவத்தில் அருள் தந்தை அல்லது சகோதரர் என்று சமயப்படிப்பு மற்றும் பயிற்ச்சி நிலைக்கேற்ப பட்டம் வைத்திருப்பார்கள், குரானை எரிப்பதாக அறிவித்தவர் கத்தோலிக்கம் சாராத கிறித்துவ அமைப்பைச் சார்ந்தவர். ஆனால் அவருக்கு எதிராக வன்முறையில் இறங்குபவர்கள் தாங்கள் தாக்குவது எந்த பிரிவு கிறித்துவர்களை என்றெல்லாம் ஆராயமல் கத்தோலிக்கப் பிரிவு உட்பட அனைத்து கிறித்துவ பிரிவுகளையும் தாக்குவர். இந்தியாவில் இந்துத்துவாக்கள் கூட புரோட்டஸ்டாண்டை சேர்ந்தவர்களை கண்டிப்பதாக நினைத்து கத்தோலிக்க கிறித்துவர்களை தண்டிப்பார்கள். பிறமதத்தினர்களுக்கு கிறித்துவத்தினுள் உள்ள பிரிவுகள் எதுவும் தெரியாது. டோனிப் ப்ளேயர் புரோட்டஸ்டாண்டில் இருந்து கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறி இருக்கிறார். நம்மைப் பொருத்த அளவில் அது நமக்கு செய்தி, கிறித்துவவர்களைப் பொருத்த அளவில் அவர்களுக்குள் மதமாற்றம். இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் குரான் எரிப்பு நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றவோ கலவரத்தில் ஈடுபவ முனைபவர்கள் கண்ணுக்கு முன் மாதா கோவில் இருந்தாலும் அவர்களைப் பொருத்த அளவில் அது ஒரு கிறித்துவ சின்னமாகத்தான் தெரியும். இதையெல்லாம் அந்த அறிவு கெட்ட பாஸ்டர், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு குரானை எரிப்பேன் என்று அறிவித்திருக்கும் பாஸ்டர் உணர்ந்தவன் இல்லை.


தீயின் பிறப்பு சின்ன உரசல் தான் அதன் பிறகு அதன் பரவல்களை கட்டுப்படுத்துவது எளிதே அல்ல. தீப்பெட்டிக்குள் உறங்கும் சின்ன தீக்குச்சி ஒரு காட்டையே அழிக்கும் ஆற்றல் மிக்கது என்பது நமக்கு தெரியும். ஆனாலும் நிலமை மோசமாகவும் வரை அதை நம்புவதற்குத்தான் நாம் தயாராக இருப்பது இல்லை. யார் கண்டது அடுத்த உலகப் போர் அந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் உரசப் போகும் தீக்குச்சியின் முனையில் கூட உறங்கிக் கொண்டு இருக்கலாம். உரசப்படும் தீக்குச்சி எளிதில் பற்றிப் பரவும் வண்ணம், இஸ்லாமியர்களுக்கு எதிராக எதையுமே விமர்சனம் செய்துவிட முடியாத நிலைக்கு இஸ்லாம் (அடைப்படைவாத நம்பிக்கை என்னும் தீவிரவாத, சகிப்புத் தன்மை அற்றத) பெரும்பான்மை இஸ்லாமியர்களின் பிடியில் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.


சுட்டிகள் :
1. http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/7990783/911-Koran-burning-Sarah-Palin-calls-it-unnecessary-provocation.html

2. http://blogs.aljazeera.net/americas/2010/09/08/quran-also-burns-fahrenheit-451

14 ஜூன், 2010

தண்டவாளத் தகர்பில் தி*மலரின் பங்கு !

இந்தியாவில் குண்டு வெடித்தால் இஸ்லாமிய சதி என்று (ஊகம்) கிளப்பி விடும் நாளிதழ்களில் நமது தி*மலருக்கு சிறப்பான இடம் உண்டு. மலேக்கான் குண்டு வெடிப்பு இந்துத்துவ சதி என்பது அம்பலமாகிய பிறகு யார் குண்டு வைத்தது என்று முந்திக் கொண்டு அறிவிப்பதில் சற்று சுனக்கம் காட்டினார்கள்.

வடகிழக்கில் இந்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் தொடர்ந்து வரும் வேளையில் தி*மலரின் தேசிய பற்று சற்று தூக்கலாகவே உள்ளது. இதன் காரணமாக பொதுப் புத்தி வாசகர்களை உருவாக்கி டீக்கடை பெஞ்சுகளில் தீவிரவாதிகளை கண்டிக்கும் தொடர் கூட்டங்களுக்கு தேவையான பணிவிடைகளை தினமலர் செய்துவருகிறது.

கடலூர் அருகே தண்டவாளத் தகர்ப்பில் இராஜபக்சே வருகைக்கு எதிரான துண்டு அறிவிப்புகள் கிடந்ததாம். இதைவைத்து 'விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?' என்ற கேள்விகளுடன் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர்.

* குண்டு வெடித்த இடத்தில் தி*மலர் நாளிதழ்களின் வாசகர் கடிதப் பகுதிகள் கிடந்தால் தி*மலர் தான் குண்டு வைத்தது என்று சொல்லிவிட முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'இராஜிவ் காந்தி வாழ்க !' என்ற துண்டு அறிவிப்பு கிடந்தால், தமிழ்நாட்டின் எதோ ஒரு காங்கிரசு கோஷ்டி சார்பில் குண்டு வைக்கப்பட்டது என்று கொள்ள முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'புரட்சி தலைவி வாழ்க' என்ற அறிவிப்பு கிடந்தால் அதிமுக காரன் குண்டு வைத்தான் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'நமீதா வாழ்க, குஷ்பு வாழ்க' என்று எழுதி இருந்தால் கவர்ச்சி சினிமா ரசிகர் எவரோ குண்டு வைத்தார் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'தாமபிராஸ் வாழ்க' என்று எழுதி இருந்தால் தமிழ்நாடு வாழ் பார்பனர்கள் தான் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா ?

குண்டு வெடிப்பிற்கும் கிடைக்கும் அறிவிப்புகளுக்கும் தொடர்பு இருக்கும் என்பது போலவே அவை திசை திருப்பும் நோக்கில் கூட செய்யப்பட்டிருக்கலாம் என்று இவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை. சதிச் செயல் என்று ஒரு செயல் உருவாகும் போது சுய விளம்பரத்திற்காக மட்டும் தான் இவற்றையெல்லாம் செய்வார்களா என்ன ? வேறொரு அமைப்பை சிக்க வைப்பதற்கும் சதிச் செயல்கள் நடைபெறும் என்பதை மலேக்கான் நிகழ்வுகள் சுட்டிக் காட்டிய பிறகும் இவர்களின் பார்வைகள் கோணல் பார்வையாக இருப்பதன் காரணம் என்ன ?

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியான பிறகு,
முள்ளி வாய்கால் படுகொலை தொடர்வது தெரிந்த பிறகு
இராஜ பக்சே மகிழ்ச்சியுடன் போர் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க திருப்பதி வந்த பிறகு
கடந்த ஓராண்டுகளாகவே இலங்கையிலும் எந்த ஒரு தண்டவாளத்திலும் வெடிக்காத குண்டு
இராஜபக்சே டெல்லி வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டும் தான் வெடிக்குமா என்ன ?

ஊகமாக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஊடகம் இருக்கிறதே என்று எழுதலாம் என்றால் என்னால் கூட தண்டவாளத் தகர்ப்பில் தினமலருக்கு பங்கு இருக்கிறது என்று எழுத முடியும் அல்லவா ?

புலி என்பதாக ஈழ ஆதரவாளர்களையும், ஈழப் பொதுமக்களையும் முற்றிலும் ஒழிக்காமல் இவனுங்க அடங்கமாட்டானுங்கப் போல. அந்த அளவுக்கு தமிழர்கள் மீது கசப்புடன் இருக்கும் இவர்கள் நடத்துவதோ தமிழ் நாளிதழ், அதையும் காசு கொடுத்து வாங்கிப் படித்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறான் தமிழன்.

31 மே, 2010

வீரமணி ஐயா... நாத்திகம் என்பது மதமா ?

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் - கி.வீரமணி

ஐயா வீரமணி அவர்களே, திராவிடம் என்ற சொல்லை தமிழன் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளாத போது 'திராவிடத்தை' முற்றிலுமாக ஒழித்துவிட்டு தமிழன் என்றே போடலாமே. பழந்தமிழகத்தில் ஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்பதாக ஏசும் சொல்லாக புழங்கப்பட்ட தமிழர் நிலம் சார்ந்த சொல்லாக, மறைமுகமாக புழங்கிய சொல், தென்னிந்திய அரசியல் முன்னெடுப்பு மற்றும் பார்பனிய சித்தாந்தங்களின் எதிர்ப்பு என்பதாக அயோத்திதாசப் பண்டிதரால் 'திராவிட' என்னும் சொல் அரசியல் களத்தில் தென்னிந்திய நிலம் சார்ந்த அரசியல் சொல்லாக பரிந்துரைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பெரியார் அந்த சொல்லை அரசியலில் பொதுப்படுத்தி திராவிட இயக்கம் கண்டார். இயக்கங்கள் கொள்கைகளை காற்றில் (விற்று) விட்டு பரிணாமம் கண்டு, மன்னர் ஆட்சி அடிப்படையில் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்பதற்கு உங்கள் தலைமையிலான திக உட்பட தங்களுக்கு பின்னால் தங்கள் மகன் என்பதாக வாரிசு உடைமை ஆக்கிவிட்டன. இதில் எங்கே இருக்கிறது திராவிடம் ?

மேலும் மதம் என்பதில் நாத்திகன் என்று போடச் சொல்லுகிறீர்கள். நாத்திகம் என்பது மதமா ? அப்படி என்றால் அதனை உருவாக்கிய இறைத் தூதர் யார் ? நாத்திகத்தை மதம் என்று ஏற்க ஆக்கிய ஆசான் வேண்டும் என்பது பொதுவாதம்.
ஏற்கனவே ஏகப்பட்ட மதங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் புதிய மதமாக நாத்திகத்தை நுழைக்கும் நீங்கள் தான் நாத்திக மத நிறுவனரா ?

பெரியார் கொள்கையில் சுயமரியாதை, பெண்ணுரிமை, வாரிசு அரசியல், ஊழல் எதிர்ப்பு, தமிழர் நலன் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஒப்புக்காக பார்பன எதிர்ப்பையும் நாத்திகவாதத்தையும் பிடித்துக் கொண்டிருக்கும் தாங்கள், திராவிட அரசியல் என்றும் நாத்திகம் என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்பது விளங்கவில்லை. உங்களாவது விளங்கியதா ?

பெரியார் நாத்திகத்தை முன்னிருத்தி இருந்தால் அவர் பக்கத்தில் குன்றக்குடி அடிகளார் இருந்திருக்கமாட்டார். பெரியார் நாத்திகம் என்ற பெயரில் செய்தது மூட நம்பிக்கை மறுப்பு. பார்பன எதிர்ப்பு என்ற பெயரில் பழமை வாத எதிர்ப்பு. வருண வாதிகளின் ஆதரவுகளுடன் இருந்த மன்னர் ஆட்சிகளின் பரிணாமம் போல் இன்றைய வாரிசு அரசியலுக்கு சாமரம் வீசுபவரான தாங்கள் திராவிடம், நாத்திகம் என்றெல்லாம் பிதற்றுவது நகைப்புகிடமாக இருக்கிறது. பெரியாரை சாமியாக்கவும் பெரியாரின் கொள்கைகளை நாத்திக மதம் என்பதாக்கவும் பார்பனர்கள் தேவை இல்லை, அந்தப் பணியை தாங்களே சிறப்பாக செய்கிறீர்கள்.

தமிழன் திராவிடன் என்று சொல்ல தாங்கள் முன்வைக்கும் நிலம் சார்ந்த அரசியல் என்ன ? மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்று குறிக்க.... நாத்திகம் என்பது ஒரு மதமா ? இன உணர்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்கிறீர்கள். இன உணர்வாளர்கள் யார் ? முள்ளிவாய்க்காலில் வாய்கரிசி போட்டவர்களா ?

இனம் என்ற இடத்தில் 'தமிழன்' என்று சொல்லோ, மதமற்றவன் என்ற சொல் நாத்திகன் என்ற பொருளில் வராது. மதம் என்ற இடத்தில் 'மதம் சாராதவன்/மதமற்றவன்' என்ற சொல்லோ போடலாம் என்று சொல்லமுடியாமல் உங்களை தடுப்பது எது ?

30 மே, 2010

சோதிடர்களுக்கு சுண்ணாம்பு தடவினால் என்ன ?

உலகில் இருவகைப் பொருள்கள் தான் உண்டு, ஒன்று உயிருள்ளவை மற்றது உயிரற்றவை. உயிருள்ளவற்றில் தானியங்கி இயக்கம் இருக்கும், மிகப் பெரிய திடப் பொருள்களான பூமி உள்ளிட்ட கோள்களான உயிரற்றவற்றில் இருக்கும் இயக்கம் புறத்தூண்டல்களினால் ஏற்படுவது. இந்த புறத்தூண்டல் பால்வெளி, பரவெளி ஆகியவற்றில் பிணைந்(த்)திருக்கும் காந்தவிசை.

அசைவு என்பது தவிர்த்து உயிருள்ளவை, உயிரற்றவை இவற்றின் வேறுபாடுகள் அவை மாற்றத்திற்கு உட்படப் போகும் காலம் மட்டும் தான். இரண்டிற்குமே சிதைவு என்பது என்றோ ஒரு நாள் ஏற்படும் உறுதியான ஒன்று. உயிருள்ளவை குறுகிய காலத்திற்குள் முழுவளர்ச்சி அடைந்த பிறகோ, விபத்துகளாலோ சிதைவைடையும், உயிரற்றவை சுற்றுச் சூழல் (குறிப்பாக நீர் மற்றும் காற்றின் இரசாயன சேர்க்கை) இவற்றினால் என்றோ ஒரு நாள் மூலக் கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு சிதைவடையும், அல்லது அதை மனிதர்களே சிதைப்பதன் மூலம் அவற்றின் தன்மை மற்றும் அமைப்பு மூலக் கூறு ஆகிய அனைத்தும் சிதைந்து பிற வடிவம் எடுக்கும். ஆனால் எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது அதன் வடிவங்களை மூலக்கூறுகளை மாற்றி அமைக்கலாம் இது தான் இயற்பியல் தத்துவத்தின் பேருண்மை. மனிதன் வரலாறுகளின் வரையரை காலம் முதல் இன்று வரை (நிலவின் மண் என்பதைத் தவிர்த்து) புதிய பொருள்கள் என்று எதுவுமே 'தோன்றியது' இல்லை. இருப்பவற்றைத் தான் பயன்படுத்துகிறோம். வெறும் கடற்கரை மணல் அதில் கடல் நீரைச் சேர்த்து பிசைந்து அவற்றை உருவங்கள் ஆக்குவது போன்றது தான் நமது கண்டுபிடிப்புகள் அனைத்துமே. குறிப்பாக சொல்லப் போனால் ஆற்றல்களின் தன்மைகளை மாற்றி பயன்படுத்திக் கொள்வது (நீரின் விசையில் இருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் என்பது போல்) இவற்றைத்தான் மனித அறிவின் வழி செய்திருக்கிறோம்.

மனிதன் எத்தனை ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தாலும் அழியாத பொருள், மாற்றத்திற்கு உட்படாத பொருள் என்று எந்த ஒன்றையும் அடையாளப்படுத்துவிட முடியாது. அதற்கு சாட்சியாக சிதைந்த வடிவத்தில் இருக்கும் எகிப்து பிரமீடுகளைப் பார்க்கிறோம். அவை 5 ஆயிரம் ஆண்டுகள் கடந்து நின்றாலும் அவற்றின் சிதைந்த வடிவத்தைக் காண்கிறோம், இன்னும் ஓர் 5 ஆயிரம் ஆண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளிலோ அங்கு பிரமீடுகள் இருந்தன என்கிற தடயமே இல்லாமல் போய்விடும்.

பிரமீடுகள் மட்டும் அல்ல அனைத்துவகையான மத வழிபாட்டுத்தளங்களும், கோவில் சிலைகளும் கூட சிதைவுக்கு உட்பட்டவையே. ஒரு காலத்தில் மிகப் பெரிய அளவில் வணங்கப்பட்ட புத்தர் சிலைகள் ஆசிய நாடுகளில் சிதைந்த வடிவில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. கவனிப்பார் இன்றிய கோவில்கள் பல சிதலமடைந்து கிடக்கின்றன. கவனிப்பு கவனிப்பு இன்மை இவை இரண்டு காரணிகள் தவிர்த்து எந்த ஒரு பொருளும் சிதைவை நோக்கிய பயணத்தில் தான் இருக்கின்றன, கவனிப்பினால் அந்த சிதைவின் காலம் சற்று தள்ளப்படும் மற்றபடி எந்த ஒரு பொருளின் சிதைவையும் முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பொருள்கள் அனைத்துமே சிதைவுக்கு உட்பட்டவை. பொருள்கள் அனைத்தும் சிதைவுக்கு உட்பட்டவை என்பது தத்துவமோ, புதிய சிந்தனையோ, கண்டுபிடிப்போ இல்லை, காலம் காலமாக நாம் கண்ணுறும் உண்மை.

இந்த அடிப்படை கூடத் தெரியாதவர்கள் என்று நாம் நமது சோதிடக்காரர்களை சொல்லிவிட முடியாது, இது முற்றிலும் படிக்காத பாமரனுக்குக் கூடத் தெரிந்த உண்மையே. ஆனாலும் சோதிடக்காரர்கள் ஏன் 'காளகஸ்தி கோவில் கோபுரம் இரண்டாக பிளந்ததை வைத்து பல்வேறு தரப்புகளை பயமுறுத்துகிறார்கள் என்றால் வெறும் பிழைப்பு வாதம் தான். மனிதனுக்கு இருக்கும் அடிப்படை பயம் அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்னின்ன ராசிக்காரர்களுக்கு கோபுரம் சிதைந்தால் பாதிப்பு என்று கிளப்பிவிட்டால் கல்லா நிறையாதா என்கிற பேராசையே. நாட்டில் நாடுகடுத்தப் படவேண்டியவர்களில் போலி சாமியார்களுக்கு அடுத்தபடியாக போலி சோதிடர்களைச் சேர்க்கலாம். மதப் பழமைவாதிகள் எப்படி மக்களை கற்காலத்துக்கு கட்டி இழுத்துச் செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தட்டிக் கொடுத்து கூடவே சேர்ந்து கயிறு இழுப்பவர்கள் இந்த சோதிடர்கள் தான்.

கோபுரம் இடிந்ததால் நாட்டுக்கு ஆபத்தாம், அரசாள்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கு ஆபத்தாம், ஆறு ராசிக்காரர்களுக்கு ஆபத்தாம். பாபர் மசூதியை இடித்த பிறகு ஏற்பட்ட ஆபத்துகளைவிடவா ஏற்பட்டுவிடப் போகிறது ?

போலி சாமியார்களை விரட்டுவது போலவே போலி சோதிடர்களையும் விரட்டினால் தான் பில்லி சூனியம் போன்ற ஒரு மாய நம்பிக்கையின் வழியில் வழிபாட்டு நம்பிக்கைகள் செல்லாது.

தொடர்புடைய செய்தி : காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

10 மே, 2010

வராகம் சுவைக்கலாம் வாருங்கள் !

வழக்கமாக விவகாரமாக மதவாதக் கருத்துகளை எழுதி வெளியிடும் ஹிந்து இணையத்தளத்தில் சமயல் குறிப்புகளுடன் பன்றி மாமிசம் குறித்தான 'சுவையான' விரிவான கட்டுரை வெளி வந்திருக்கிறது. பன்றி இறைச்சி உண்போருக்கு நாவில் எச்சில் ஊரவைக்கும் வருணனைகளுடன் எழுதி இருக்கிறார்கள்.

ஒருபக்கம் ஹிந்து தருமம் சனாதனம், சாத்வீகம், சைவம், ஹிந்து மதம் மட்டும் தான் விலங்குகளிடத்தும் அன்பு செலுத்துகிறது என்று கட்டுரைகள் வரும் அந்தத்தளத்தில் பன்றி மாமிசம் குறித்தான சிறப்புக் கட்டுரை ஏன் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பவுத்த, சமண சமயங்களால் முன்னெடுக்கப்பட்ட புலால் மறுத்தல், பிறகு திருவள்ளுவர், வள்ளலாரும் மற்றும் ஏனைய சைவ, வைணவ சமயங்களால் பரிந்துரைக்கப்பட்டு ஓரளவுக்கு மரக்கறி உணவை (விரத நாட்களிலாவது) கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நிலைக்கு இந்துக்கள் மாறி இருக்கின்றனர். மதங்களின் வழியான உணவு பழக்கம் என்பது நல்லதோ கெட்டதோ அவற்றில் ஓரளவேனும் உண்மை உண்டு என்ற அடிப்படையில் தான் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் உணவு பழக்கமும், உணவும் அந்தந்த நாடுகளின் தட்பவெட்ப, விவசாய சூழல்களைப் பொருத்ததே. சைவம், அசைவம் புனிதம், புனிதமற்றது, புண்ணியம் , பாவம் என்பதைவிட அவற்றின் மறு உற்பத்திகள் பாதிக்காத அளவுக்கு அவற்றை மனிதன் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொள்கிறேன், அந்த விதத்தில் உணவுக்காக விலங்குகள் படைக்கப்பட்டதாகக் கூறி அவற்றை முற்றிலும் அழித்து திண்பதை நான் ஏற்பது இல்லை. உயிரினங்கள் பல முற்றிலும் அழிந்ததன் காரணமே அவற்றின் மறு உற்பத்தியை கணக்கில் கொள்ளாது அவற்றை மனிதர்கள் தின்று தீர்ததே. உணவு சுழற்சி அடிப்படையில் இயற்கையிலேயே ஒன்றை ஒன்று அடித்து திண்ண வேண்டும் என்பது விதி என்றாலும் கூட பயிரிட தெரிந்த மனிதன் விலங்கு உணவை மட்டும் சார்ந்திருக்கத் தேவை இல்லை என்பதுடன் விலங்களைப் பாதுக்காக்கும் பொறுப்பும் உள்ளது என்றே நான் கருதுகிறேன். மற்றபடி விலங்குகளை உண்ணுவது பாவம் என்று யாரேனும் போதித்தால் 'இயற்கை மற்றும் உணவு சுழற்சி பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாதவர்' என்று கருதுவேன். இயற்கை தாவர உணவு வகைகளை பெருக்க வைக்கிறோம் என்று கூறி அறிவியல் முறையில் இரசாயணம் கலந்த வீரிய வகைகளை அறிமுகப்படுத்தி வழமையான இயற்கை உணவுகளை அழிப்பதும் கூட மனிதன் தனக்கு தானே வைத்துக் கொள்ளும் தீ தான் என்பதாக பலரும் பேசுகிறார்கள்.

கதைப்படி கண்ணப்பனுக்கு என்ன கிடைத்ததோ அதைத்தான் படைத்தான், கண்ணப்பனுக்கு கிடைத்தது பன்றி மாமிசம் மட்டும் தான். காட்டுவாசியான கண்ணப்பன் பன்றிக்கறிக்கு பதிலாக பாம்புக்கறி / நரிக்கறி / பூனைக்கறி படைத்திருந்தால் பாம்பு மாமிசம் பற்றி விரிவான பதிவை ஹிந்து இணையத்தளம் எழுதி இருக்குமா ? பன்றி கிருஷ்ண அவதாரத்தில் ஒரு (வராக) அவதாரம் தானே, நாயை பைரவனாகவும், யானையை பிள்ளையாராகவும் பார்க்கின்றனர் ஹிந்துக்கள். அப்படி என்றால் பன்றி இறைச்சி ? பன்றியை இறைச்சிக்காகக் கொன்றால் பாவம் இல்லையா ?

பசுமாடுகளிடம் இருந்து பாலை ஒட்ட ஒட்ட கறந்து பசு கிழடு ஆனதும் அதையும் அடிமாட்டுக்காரனிடம் விற்றுவிட, வாங்கியவன் அந்த பசுமாட்டைக் கொன்றால் கொல்லுபவன் பாபம் செய்கிறானாம். குலதெய்வத்திற்கு ஆடுகோழி பலி இட தடைவிதிக்க தூண்டுதலாக இருந்தவர்கள் தான் இன்று பன்றி இறைச்சியை பதமாக சமைப்பது பற்றி எழுதுகிறார்கள்.

எலி ஏரோப்ளேன் ஓட்டிய கதையாகத்தான் இருக்கு. பன்றி மாமிசம் குறித்து எழுதியுள்ள இணைய தளம் அதைப் அவர்கள் 'பிராமணர்கள்' என்று அழைத்துக் குறிப்பிடும் பார்பனர்களுக்கும் பரிந்துரைத்தால் நான் இதை இங்கே எழுதி இருக்கவே மாட்டேன்.

21 ஏப்ரல், 2010

தமிழக அரசு சின்னம் மாறுகிறுது (!?)

தமிழக அரசு சின்னம் கோபுரத்தில் இருந்து திருவள்ளுவராக மா(ற்)றுவதாக ஜூவியில் கிசு கிசுத்துள்ளதாக தமிழ் ஹிந்து என்கிற இணைய தளம் கட்டுரை வெளியிட்டு தனது (எதிர்) கருத்தை தெரிவித்திருந்தது. தமிழ் ஹிந்து இணையத்தளம் வருணாசிரம ஹிந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்ட இணையத்தளம் என்பது பரவலாக பலரும் அறிந்தவையே. ஹிந்து நலன் என்கிற அடிப்படையில் மக்களை பழமைவாதத்திற்குள் இழுத்துச் செல்லும் பல்வேறு மதக்கூட்டங்களில் இவர்களும் ஒருவர் என்பது தவிர்த்து இவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட காண்டு எதுவும் என்று கிடையாது. 'ஹிந்து' தமிழர்களின் தாய் மதம் என்று கட்டமைக்கிறார்கள். கிறித்துவம் இஸ்லாம் எல்லாம் மகன் மதம், மகள் மதம் என்று சொல்லலாமா ? தமிழகத்தின் முன்பிருந்த சமணமும் பவுத்தமும் பாட்டன் முப்பாட்டன், தந்தை மதம் என்று சொல்லலாமா ? தாய் மொழி என்று மொழிக்குச் சேர்க்கும் ஒரு சிறப்பு தாய மதம் என்று சொல்வதன் மூலம் ஒரு மதத்திற்கு சிறப்பு சேர்த்துவிட முடியாது. தாய்மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை எவருக்குமே கிடையாது, அதுவாக அமைவது, ஆனால் மதம் அப்படி கிடையாது ஒருவர் விரும்பினால் தாயின் மதத்தைக் கூட மாற்றிவிடும் நிலை தான் மதமாற்றம் குறித்த மன(த் தடு)மாற்றம். எனவே தாய் மதம் நாய் மதம் இவை எல்லாம் உதவாத கதைகள்.

கருணாநிதியின் தமிழக அரசு அமைத்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை சரியான அமைப்பில் இல்லையாம், தமிழகத்தில் சுனாமி வந்ததற்கு அதுவும் காரணம் என்று நல்லவேளை எதுவும் கொளுத்திப் போடவில்லை. வள்ளுவர் சிலை எதோ ஒரு சங்கிலி பூதம் போல் இருப்பதாக இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். திருவள்ளுவர் சிலை மீது பூணூல் இருந்திருந்தால் இது போல் விமர்சனம் வந்திருக்குமா அறியேன். மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொன்ன திருவள்ளுவர் கொண்டை மற்றும் தாடியுடன் இருப்பாரா என்று கேட்கிறார்கள். ஆதிசங்கரர் போலவோ, இராமனுஜர் போலவோ முன் மொட்டை பின் குடுமியுடன் பூணூல் இல்லாமல் இருந்தால் கூட ஏற்றுக் கொள்வார்கள் போலும். திருவள்ளுவரை ஒரு பார்பனராக காட்ட முயற்சித்து அது எடுபடாமல் போகவே திருவள்ளுவர் உருவத்தையே புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று தான் நான் அவர்களின் விமர்சனம் குறித்த உளவியலாகக் கொள்கிறேன். பார்பன புறக்கணிப்பு என்பது பார்பனர்களால் பார்பனர்களுக்கே நடந்தவை தான் அதற்கு இந்த நூற்றாண்டு சாட்சியாக பாரதியாரே உள்ளார். பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியாரை பார்பனர்கள் எவரும் கொண்டாடவில்லை, தற்போது பாரதியை பார்பனர் சின்னமாக பார்பனர்களே மாற்றி இருக்கிறார்கள். பாரதி தற்போது பார்பனர்களால் பார்பனராக அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட பாரதியை பார்பனர் என்பதற்காக புறக்கணிப்பவர்கள் மிக மிகச் சிலரே. எனவே திருவள்ளுவரை ஒருவர் போற்றுவதற்கு அவர் பார்பனராகவோ, பார்பனர் அல்லாதவராகவோ இருக்க வேண்டிய தேவை எதுவுமில்லை. வள்ளுவர் சிலை பார்பன அடையாளத்தில் இல்லை என்கிற பார்பனர்களின் கவலை தேவை அற்றது, ஒருவேளை அப்படி செய்தால் திருவள்ளுவரை போற்றுபவர்களைவிட அதற்காகவே தூற்றுவர்கள் மிகுதியாகும் வாய்ப்பு உண்டு. திருவள்ளுவரை சாதி ரீதியில் அடையாளப்படுத்த முயற்சிப்பது தேவையற்ற செயல்.

தமிழக அரசு சின்னமாக வைக்க திருவள்ளுவர் உருவத்திற்கு முழுத்தகுதியும் உண்டு, ஏனெனில் திருவள்ளுவர் கிறித்துவர் என்றும் கிறித்துவர்களில் சிலர நம்பத் தொடங்குகிறார்கள், திருவள்ளுவர் கிறித்துவர் என்பதால் அவர் முகமதுவுக்கு முன் இருந்த இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதாக இஸ்லாமியர்களுக்கும் பிரச்சனை இருக்காது. (இஸ்லாமைப் பொருத்த அளவில் கிறித்துவம் என்பது முகமதுவை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு இஸ்லாம், இந்த கூற்றை கிறித்துவர்கள் ஏற்று கொள்வதில்லை என்பது வேறு விசயம்), ஏற்கனவே திருவள்ளுவருக்கு சமணர், பவுத்தர், வைதீகர், சைவர், வைணவர் என்று பல்வேறு அடையாள முயற்சி நடை பெற்றிருக்கிறது என்பதால் மேலும் அவர் ஒரு கிறித்துவர், இஸ்லாமியர் என்பது பெரிய விசயமே இல்லை.

இருந்தாலும் தற்போது இருக்கும் கோபுர சின்னம் சமய சார்பாக பார்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அது ஒரு பழமையான தமிழக அடையாளத்தின் சின்னம், இஸ்லாமும் கிறித்துவமும் தமிழகத்தில் நுழையும் முன்னே தமிழகத்தில் கோபுரங்கள் எழுந்துவிட்டன. தமிழகத்தின் அடையாளமே கோபுரங்கள் தான், வேறெந்த இந்திய மாநிலத்திலும் இல்லாத அளவுக்கும், உயரத்திற்கும் கோபுரங்கள் தமிழகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன.கூகுளில் ஆங்கிலத்தில் தமிழ் நாடு என்று தேடினாலும் எதோ ஒரு கோபுர படம் காணக் கிடைக்கிறது. இதுவரை இஸ்லாமியர்களோ, கிறித்துவர்களோ தமிழக அரசின் சின்னங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லாத போது பகுத்தறிவாதம் என்கிற பெயரில் சில சமயம் தவறாகவும் சிந்தனை செய்யும் ஒரு சிலரின் சிறுமூளையில் கோபுர சின்னம் மத அடையாளமாக தெரிந்திருக்கும் என்பதும் அவர்களின் பரிந்துரையினால் தான் சின்னம் மாற்ற மடைய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். தமிழர்களின் அடையாளம் வேட்டி, புடவை கூட இந்து மத அடையாளம் என்றால் நாம கோவணத்தைத்தான் தமிழக அடையாளம் மதச் சார்பற்றது என்று சொல்ல முடியும்.

மதச்சார்பற்ற நிலை என்பதை மதவெறுப்பு என்பதாக பலர் புரிந்து கொண்டு நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நிலை என்பது மதச் சகிப்பு தன்மை என்கிற நிலைப்பாட்டில் தான் முழுமையாக உள்ளது. கோபுரம் மதச் சார்பு என்றாலும் கூட ஒரு பெரும்பான்மை இஸ்லாமியர், கிறித்துவர் வசிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ நாடுகளில் 10 விழுக்காடு பிறமதத்தினர் வசிக்க நேரிட்டால் எங்களுக்காக நீங்கள் மதச்சார்பற்றவராக மாறுங்கள் அரசு சின்னங்களை மாற்றுங்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. தமிழக அரசின் சின்னமாக கோபுரச் சின்னம் வலிந்தோ பலவந்தமாகவோ நுழைக்கப்பட்டதாக வரலாறு இல்லாத போது அதை மாற்றுவது தேவை அற்றது என்பது என் கருத்து.

தமிழக அரசு சின்னம் கோபுரத்தில் இருந்து திருவள்ளுவராக மாறுவாதால் மதச்சார்பின்மை காக்கப்படும் என்பது ஒரு தவறான புரிதல். உலகில் இஸ்லாமியர் மிகுதியாக வசிக்கும் இந்தோனிசியாவில் அரசு சின்னம் கிருஷ்ண பருந்து தான். அதை இந்து அடையாளமாக அவர்கள் பார்க்கவில்லை, அந்த பகுதியின் பண்பாட்டு விழுமியங்களில் புழங்கிய பழமையான இலக்கிய வடிவத்தில் இருக்கும் ஒரு பாத்திரத்தின் சின்னமாகத்தான் அதை தற்போது வரை பார்க்கிறார்கள். அங்கும் வகாபி இசம் இறுகினால் நிலை மாறலாம். திருவள்ளுவரை புதிய சின்னமாக மாற்றுவது தவறு அல்ல, ஆனால் ஏற்கனவே இருக்கும் கோபுர சின்னத்தை மாற்றுவதற்கு கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது. தமிழர் பண்பாடுகளில் எதையெலலம் காக்கவேண்டும், எதை அழிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவற்ற நிலையை கொண்ட் சிலரின் பரிந்துரையின் பேரில் இவ்வாறெல்லாம் நடைபெறுவதால் மதச் சார்பின்மை என்று எதுவும் ஏற்படப் போவதில்லை.

19 மார்ச், 2010

எம் எப் ஹுசைன் பாகிஸ்தானுக்கு போய் இருக்கலாம் !

தென்னிந்தியாவை விட மத உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருப்பது என்றுமே வட இந்தியாதான். மதக்கலவரங்களுக்கு வட இந்தியா பெயர் பெற்றது. அதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு, இஸ்லாமிய படையெடுப்புகளால் மிகுதியாக பாதிப்புக்கு உள்ளாகியதும், வட இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என மத அடிப்படைவாதத்தால் பிரிந்து போனதும் வட இந்தியர்களின் எண்ணத்தில் என்றுமே வடுவாக இருப்பவை.

****

எம் எம் ஊசேனின் ஓவியங்கள் புகழ்பெற்றவை, ஒரு ஓவியக் கலைஞன் என்ற வகையில் அவரின் திறமைகள் போற்றப்பட வேண்டியவையே, எந்த ஒரு கலைஞனும் தனது திறமையை அரசியல் சமூக உள்நோக்கில் நுழைத்தால் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். ஒரு மத நம்பிக்கையாளன் இன்னொரு மத நம்பிக்கையாளனை மதரீதியாக தீண்டுவது என்றுமே சர்சைக்கு உரியது தான். காரணம் நம்பிக்கைகளை விமர்சனம் செய்வதை எந்த ஒரு சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, ஏனினெல் நம்பிக்கைகள் தான் அந்த சமூகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன. எப் எம் உசேன் என்றோ சரஸ்வதியை இந்து வழிபாட்டு உருவங்களை வரைந்த காலகட்டத்தில் சர்சை ஏற்படவில்லை, ஆனால் அவர் ஹிட்லரை அவமானப்படுத்ததான் நிர்வாணமாக வரைந்தேன் என்று சொன்ன பிறகே சர்சைகள் வெடித்தது. ஆக உசேன் மனதில் எதை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைப்பு இருக்கிறதோ அதுவே நிர்வாண ஓவியமாக ஆகிறது என்பதை உளறிக் கொட்டிவிட்டார். அதன் பிறகே இந்துத்துவ வாதிகளால் அவரது ஓவியக்கூடம் தீக்கிரையாக்கப்பட்டதும், கொலை மிரட்டல் போன்ற சம்பவங்களும் நடைபெற்றுவிட்டன.

உசேனுக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்தது போல் தெரியவில்லை, இந்த கலவரங்களெல்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை, ஆனால் திடிரென்று உசேன் இந்தியாவை விட்டு வெளியேறுவதை 'இந்தியாவில் வாழ்வாதே கேள்விக்குரியது என்கிற ஒரு கட்டமைப்பை உலக நாடுகளுக்குச் சொல்லிச் செல்வது போல் இந்திய கடவுச் சீட்டை ஒப்படைத்துவிட்டு 'நான் இந்தியாவை இன்னமும் நேசிக்கிறேன்' என்று சொல்லுகிறார். வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிவதான மனவருத்தம் என்பது தவிர்த்து இந்தியாவை அவர் நேசிப்பது போல் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தியா என்பது ஒரு சிறிய நாடு இல்லை இங்கே பலமாநிலங்கள் இருக்கின்றன, மத உணர்வு குறைந்த மாநிலங்கள் உள்ளன, உசேன் இந்தியாவை நேசிப்பது உண்மையானால் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவில் எதோ ஒரு மாநிலத்தில் வாழ்ந்து வந்திருக்க முடியும், ஒரு முஸ்லிம் என்ற அடையாளத்திலும் இருக்கும் அவரை இஸ்லாமிய சமூக, அரசியல் அமைப்புகள் போதிய பாதுகாப்புகளுடன் தென்னிந்தியாவிலேயே தங்க வைத்திருக்க முடியும். கேரள மதானிக்கு இல்லாத பாதுகாப்பு இன்மையா ஊசேனுக்கு தென்னிந்தியாவில் இருந்துவிடப் போகிறது. எல்லா மதத்தைச் சார்ந்த மத உணர்வை தூண்டுபவர்களும், தலைமைகளும் பாதுகாப்பாக உலாவும் தென்னிந்திய நகரங்கள் ஒன்றில் உசேனால் இருந்துவிட முடியாதா ?

உசேன் மனநிலையை வைத்துப் பார்க்கும் போது வெறும் அச்சுறுத்தல்களை காரணமாக கருத முடியவில்லை, அதையும் தாண்டி இந்தியா ஒரு இந்துநாடு என்கிற அங்கீகாரம் அவரே கொடுத்து இருப்பார் போல, அதனால் வெறுத்துப் போய் இஸ்லாமிய நாடு ஒன்றிற்கு இடம் பெயர்ந்திருக்கிறார். இதை தஞ்சம் புகுதல் அல்லது நாடுகடந்து சென்ற மனநிலை என்று என்னால் கருத முடியவில்லை.

உசேனின் பிடிவாதம் அப்படி தான் நிர்வாணமாக வரைந்த இந்து வழிபாட்டு உருவங்களை அழிக்காததும், அதற்காக மன்னிப்பு கேட்காததும் தொடர்ந்த நிலையில் அவருடைய முடிவு அவரே விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்று தான்.

இவ்வளவு பிடிவாதம், ஆணவம் உள்ள ஒருவர் நல்ல கலைஞராக இருந்து யாருக்கு பயன், கலைஞர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது, அப்படியே பட்டாலும் ஒரு மதத்தின் சார்பில் இருந்து கொண்டு இன்னொரு மதத்தை அதில் பழிப்பு காட்டுவது சிக்கலில் தான் முடியும். முகமதுவை ஓவியமாக வரைந்துவிட்டார்கள் என்று டென்மார்க் செய்திபத்திரிக்கை மீதும், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவும், அதை மறுபதிவு செய்த தினமலர் இணைய தளத்தை அரபியாவில் தடை செய்தததற்கு முயற்சித்து வெற்றிபெற்ற இஸ்லாமிய அமைப்புகள் கார்டூன் குறித்து ஆவேசப்பட எவ்வளவு உரிமை இருக்கிறது என்று நம்புகிறோமோ அதே உரிமையை ஒரு இந்துவுக்கும் கொடுத்துப் பார்த்தால் உசேன் செய்தது கடைந்தெடுத்த அயோக்கிய தனம் என்பது வெட்ட வெளிச்சம்.

உசேன் இந்திய பாஸ்போர்டை ஒப்படைத்து கண்ணீர் விட்டார் என்ற தகவலைப் படித்ததும் மனது துணுக்குற்றது, ஊசேன் செயல் குறித்து நினைத்துப் பார்த்தால் அவர் மீது வெறுப்பாகத்தான் இருக்கிறது. அவருக்கு வட இந்தியா, தென்னிந்தியா பிடிக்கவில்லை என்றால் பழைய இந்தியாவின் பகுதியாக இருந்த பாகிஸ்தானுக்கு சென்றிருக்கலாம்

இந்த கட்டுரையில் சொல்ல வந்தது.....'ஒரு மத நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மற்றொரு மதநம்பிக்கையை தூண்டிப் பார்பது விஷ(ம)த்தனம்' ஒரு திறமைவாய்ந்த கலைஞனாக இருந்து கொண்டு தனது கலையை தனது தனிமனித உணர்ச்சிக்கு பலியாக்கி இருக்கிறார் உசேன். இதில் மதப்பற்றறவர்கள் வருத்தப்படுவதில் ஞாயமே இல்லை. மததிற்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள் என்கிற சொல்லுக்கும் உசேன் பொருத்தமானவராக நடந்து கொள்ளவில்லை, அவர் அனைத்து மதங்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால் நாம் அவர் குறித்து வருத்தப்பட ஞாயம் உண்டு, அவர் விரும்பியே வேறு நாடு சென்றதற்கு அவர் தஞ்சம் புகுந்தார், நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தார் என்ற கற்பிதத்தமாக நாம் வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது.

5 மார்ச், 2010

நித்யானந்தா VS பெரியவா !

இந்த கன்றாவிகளைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் செய்திகளைப் பற்றி படிக்கும் போது எழுதினால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது.

நித்தியானந்தா மீதான திடீர் புகார் - முழுமையாக விசாரிக்க வேண்டும் - ராம கோபாலன்

இது போன்று முறைகேடுகள், விதவைகள் மீது பாலியல் தொந்தரவு (அணுராதா ரமணன் உட்பட), நம்பிக்கை மோசடி கூடுதலாக கொலை ஆகியவற்றுடன், ஆபாச வீடியோ வெளியீடுகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் பெரியவாவை உள்ளே வைத்து விசாரணை நடத்திய போது அரசுக்கு எதிராக போராடியவர்கள் தான் இராம கோபாலன் தலைமையிலான இந்து அமைப்புகள்.

நித்யானந்தா மேட்டரில் விசாரனை நடை பெற வேண்டும் என்று உடனடியாக கேட்பதில் இருந்து இந்த அமைப்புகளின் உள்நோக்கம் பற்றி நினைக்க வேண்டி இருக்கிறது.

பெரியவா சின்னவாக்களின் மீது விசாரணையே கூடாது, அவர் தவறு செய்யக் கூடியவர் அல்ல என்று வரிந்து கட்டிய இந்த அமைப்பினர் நித்யானந்ததின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதின் பற்றி நினைத்தால் வெறும் பார்பனர் / பார்பனர் அல்லாதவர் என்கிற வருண சாதி அரசியலே காரணம். மற்றபடி இந்து மதத்தை இவர்கள் துய்மை படுத்த நடவெடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை. பார்பான் சதுர்வேதி மற்றும் பார்பான் தேவநாதன் விடியோவும் போஸுமாக சிக்கிய பின்பு இந்த அமைப்பினர் அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு இப்படியான உடனடி ஆதரவு கொடுத்தாகக் கூட நான் படித்ததில்லை. அப்படி இருந்தால் யாராவது இணைப்பை கொடுங்கள்.

பெரியாவா மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றாலும் குறைந்த பட்சமாக விசாரணை நடை பெற்றால் உண்மை தெரியும், எனவே இது பற்றி நாங்கள் மவுனம் சாதிக்கிறோம் என்றாவது கூறி இருக்கலாம், ஆனால் சு.சாமி மற்றும் ஏவி எம் நிறுவன உரிமையாளர்களுடன் சென்று விசாரணைக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்து காஞ்சியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தான் இந்த இந்து அமைப்புகள்.

ஒருவரை நீதிமன்றம் சாட்சிகளின் வழியாக குற்றவாளி என்றால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது நடைமுறை ஆனால் ஒருவர் மீது குற்ற அடிப்படைகளை வைத்து குற்றம் சுமத்தி விசாரணைக் கோருவது தவறே இல்லை. அப்படி பட்ட குற்றச் சாட்டுகள் பெரியவாளுக்கு எதிராக பதிய வைத்தற்குக் கூட எதிர்ப்பு காட்டிய இந்து அமைப்புகள் நித்யானந்ததிற்கு மட்டும் உடனடியாக விசாரணைக் கோருவது ஏன் ?

காரணம் மிக எளிது, நித்யானந்தம் ஒரு சூத்திரன், மேலும் (வீடியோவில் பார்த்ததில்) மிகவும் கருப்பாகவே இருக்கிறான், அவனிடம் பார்பன லட்சணம் என்று கூறிக் கொள்ளும் ஒரு அடையாளமும் இல்லை. போட்டிக்கு கல்லா கட்டியவன் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் தெரியவில்லை.

******

இராம கோபாலன் மற்று இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லுபவர்களும், சில இந்து அமைப்புகளும் பார்பனிய / வருணாசிரம நலம் காப்பவர்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகவே உள்ளது.

நித்யாநந்தம் யோக்கிய சிகாமணி பார்பனரல்லாதவர்கள் அவனைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் அரசியல் நடத்துபவர்கள், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவு பெற வேண்டும் என்று நினைக்கும் இந்து அமைப்புகள் எப்படி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற அமைப்புகளால் இந்து மதம் மெய்யாலுமே காக்கப்படுமா ? ஆனால் இதே அமைப்புகள் மார்ச் 2 முன்பு, நித்யானந்ததின் செல்வாக்கு, வளர்ச்சி, உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து நித்யானந்தம் இந்து மதத்தின் புதிய சூரியன், நவீன விவேகாநந்தர் என்று புகழ்ந்தவைகள் தாம். ஒரு பார்பன சாமியார் சிக்கினால் அவர் தப்பே செய்யாதவர் என்றும், அதுவே ஒரு சூத்திர சாமியார் சிக்கினால் நடவெடிக்கை கோருவதென்றால் அதில் உள்நோக்கம் இன்றி வேறென்ன, இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், இந்து அமைப்பு என்ற போர்வைகள் யாரைக் காப்பதற்கு என்று, இவர்கள் ஒட்டு மொத்த இந்துக்களின் நலனையும் இந்து மதத்தின் நலனையோ, இந்து தெய்வங்களின் நலனையோ காக்கிறார்கள் என்று நினைப்பவர்கள் தான் யோசிக்க வேண்டும். இது போன்ற பக்க சார்பு அமைப்புகளை நம்பும் நம்மால் இந்துகளுக்குள் ஒற்றுமையாவது வளர்க்க முடியுமா ?

இன்னும் ஒரு இடத்தில் சந்தடி சாக்கில் ஒரு இஸ்லாமியர் 'எங்க மதத்தில் துறவரம் கிடையாது....இது போன்று நடப்பதில்லை' என்கிறார். எல்லோரும் இஸ்லாமியராக மாறுங்கள் உண்மையான இறைவனை அடையுங்கள் என்கிறாரா தெரியவில்லை. நிரந்தர சொற்கம், நீளக் கண்கள் பெண்கள் கிடைக்கும் என அப்பாவிகளை ஆசைக்காட்டி, தீவிரவாதிகளாக்கி, தற்கொலை படைகளாக மாற்றி இறக்குவதைவிட சாமியார்களின் செக்ஸ் லீலைகள் எனக்கு பெரியதாகவே தெரியவில்லை. எல்லா மதத்திலும் எல்லா கன்றாவிகளும் இருக்கு. அதனால் கைகொட்டி சிரிப்பவர்களும், உள்ளுற புழுக்கம் அடைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை சாட்சியாக பார்த்துக் கொண்டு முடிந்தால் எதிர்ப்புகளை அங்கங்கே தெரிவிக்கலாம்.

படம் : நன்றி வினவு

4 மார்ச், 2010

ஞான மரபும், வெளிநாட்டு சதியும் !

நேற்றுவரை இந்து மதத்தை உய்விக்க மறு அவதாரம் எடுத்த விவேகநந்தர் என புனித பிம்பம் ஆக்கி புகழ்ந்த இந்து அமைப்புகள் அது கிழிந்த மூத்திரப் பை என்று தெரிந்ததும், சத்யானந்தனின் ஆசிரம அமைப்புகளை அடித்து நொறுக்கி இருக்கிறதாம். வேடம் களைந்ததால் இவர்கள் உருவாக்கிய புது விவேகநந்தனை இவர்களே காலி செய்கிறார்கள். சத்யாநந்தனனுக்கு இவர்கள் செய்த விளம்பரம், அவனுடைய அசுர வளர்ச்சியும் துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம் ஆனது போல் ஆகிவிட்டது.

சந்தடி சாக்கில் 'கிந்து' லேகியம் விற்கும் 'வெற்றி' எழுத்தாளர் குழுமம், சத்யானந்தரின் அம்பலத்தால் கிந்து ஞானமரபுக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று கேள்வி எழுப்பி விடையும் சொல்கிறார்கள். தலித்தை கோவிலுனுள் சேர்க்காததற்கும், அனைத்து மதத்தினர் அர்சகர் ஆகும் திட்டத்திற்கு தடைவாங்கியும், தமிழ் வழிபாட்டு முறை என்றால் முகம் சுளிக்கும் இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு 'ஞான மரபு' பற்றி வெற்றி எழுத்தாளர் மிகவும் கவலைப்படுகிறார். எங்க கிந்து மதத்தில் பிரம்மாச்சாரியம் எல்லாம் கிடையவே கிடையாது பெளத்த மதத்தின் 'சன்னியாசம், பிரம்மச்சாரியம்' என வேண்டாத ஒன்றை கிந்து மதம் எடுத்துக் கொண்டுதால் இது போன்ற அவமானங்களை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று முத்து உதிர்கிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக சத்யானநந்ததிற்காக மீடியா கிடைத்த போதெல்லாம் கூவிய சேறு எழுத்தாளர், சத்யானந்தன் ஸ்திரீ லோலன் தான் ஆனாலும் அவனிடம் நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பது உண்மை, நேரில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே தான் உடல் நலம் இல்லாமல் படுத்திருந்த போது சத்யானந்ததின் ஆசி பழிக்கவில்லை, கஞ்சு பாத்திரத்தைக் கூட திறக்க தெம்பு இல்லாமல் இருந்ததாகவும் யாரோ ஒரு வாசகர் உதவியால் மருத்துவமனை சென்றதாகவும் அதே கட்டுரையில் சத்யானந்ததின் சக்தி பற்றி முன்னுக்கு பின் உளரலாகவே எழுதி இருக்கிறார். தான் விளம்பரம் செய்தது தவறு அல்ல, சத்யானந்தம் மோசமானவன் தான் என்பதை இப்படியாக உணர்த்துகிறாராம். அவரை படிப்பவர்கள் ஐயோ.....முட்டிக் கொள்ளுங்க.

நவீன வீவேகந்தர் நாறிப் போய்விட்டார், கிந்து மததிற்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்று அலறும் கூட்டங்கள், கிந்து மதம் மேன்மை அடைய என்ன செயதது என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் போலி சாமியார்களை அடையாளம் காட்டும் வேலையாவது செய்தார்களா ? தெரியவில்லை, மாட்டிக் கொண்டால் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை உடனடியாக சொல்லி மாட்டிக் கொண்ட அமைப்பை தாக்குவதின் மூலம் கிந்து மதம் காக்கப்படும் வருணாசிரமம் காக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

இதைவிடப் பெரிய காமடி சத்யானந்தம் சிக்கிக் கொண்டது நல்லது தான் என்று எதுவுமே சொல்லாமல், இது கிந்து எதிரிகளின் சூழ்ச்சி, வெளிநாட்டு மதமாற்றுக் கும்பலின் சதி என்றால் உளறிக் கொட்டுவதற்கு 'வெற்றி' எழுத்தாளர் ஆமாம் போடுகிறார். வெளி நாட்டுக்காரன் ஒரு வேளை சதி செய்கிறான் என்றே வைத்துக் கொண்டாலும் சத்யானந்தம் போன்ற கார்பரேட் சாமியார்களுக்கு 200 ஏக்கர் பரப்பில் அமைந்த ஆசிரமங்கள், 1000 கிளைகள், உலகம் தழுவிய 1000 கோடி டாலர் ஆசிரம சொத்துகள், யாரால் வந்தது ? வெளி நாட்டுக்காரன் பணம் தானே ? பாதிக்கபடுபவன் வெளிநாட்டுக்காரனாக இருக்கும் போது அதை அவன் தான் அம்பலப்படுத்தி இருந்தாலும் அதில் தவறு ஏது ?

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளை காமசூத்திர,தாந்திரீக யோக குண்டலினி, என்ற பெயர்களில் போலி கிந்து அமைப்புகள் கூடாரம் அடித்து தாக்கி வருகின்றனர். கிந்து மதத்தில் தான் உண்மையான ஆன்மீகம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கையில் வாரிசு அற்ற தங்கள் சொத்துகளை வெளி நாட்டினர்கள் முழுவதுமாக அளிக்கிறார்கள், பில்கேட்ஸ் 10000 தொழிலாளர்களை, 1000 அலுவலங்களை வைத்து செய்யும் ஒரு தொழிலில் கிடைக்கும் வருவாய் போல 1000 ஆசிரமக் கிளைகள் தொடங்கி கிந்து சாமியார்கள் வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டு அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு கோபம் வருமா வராதா ?

கிந்து சேவை அமைப்புகள் சாமியார்களின் அளவுக்கு மிஞ்சிய அசுரவளர்ச்சி, அவர்களின் சொத்து குவிப்பு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமல் இருந்துவிட்டு, அவர்கள் மாட்டிக் கொண்டால் கைகழுவதும் இல்லாமல் அவர்களின் அமைப்பில் எதுவுமே தெரியாமல் எதோ தேடல் என்று சென்று அங்கே சேர்ந்து அங்கேயே தங்கி இருக்கும் அப்பாவிகளையெல்லாம் தாக்குகிறார்கள். சத்யானந்ததிற்கு பேராதரவு கொடுத்து கட்டுரைகள், அருளுரைகள் வெளி இட்ட செய்தி இதழ்கள் தற்போது சூடான விற்பனைக்கு சத்யானந்த சம்போகம் வெளி இடுகிறார்கள். இவர்களையாவது கிந்து அமைப்புகள் கண்டித்ததா ?

கிந்து மதம், ஞான மரபு என்ற சப்பைக் கட்டும் 'வெற்றி' எழுத்தாளர் இதை வைத்து நித்யபுரம் என்னும் நாவல் எழுதினால் நன்கு விற்கும்.

கிந்து மதத்தை எவனும் காத்துவரவில்லை, அதுவாகவே அவ்வப்போது போலிகளை அம்பலப்படுத்தி காத்துக் கொண்டு தான் வருகிறது. சத்யானந்தம் சிக்கியதற்கு உணர்ச்சி வசப்படும், ஆவேசப்படும் இந்துக்கள் சத்தியானந்தம் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் இந்து மதத்தின் கற்பக விருச்சம் என்ற பெயரில் அசுர வளர்ச்சி பெற்ற ஒரு எட்டி மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாய்க்கப்பட்டுவிட்டதாக நினைத்து மகிழலாம்.

இந்த சூழலில் உடனடித் தேவை மற்றும் சேவை எதுவென்றால் சத்யானந்தனின் ஆசிரமத்தில் அற்பணித்துக் கொண்டவர்களை மீட்டு அவர்களின் இல்லங்களில் ஒப்படைத்து அவர்களுக்கு உளவியல் மருத்துவரை வைத்து பயிற்சி கொடுத்து, மன அழுத்ததில் இருக்கும் அவர்களின் தற்கொலைகளைத் தடுக்கலாம். தாம் தவறு செய்துவிட்டோம், வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்கிற குற்றவுணர்வுகளில் இருந்து மீட்டு, அவர்களை குத்திக் காட்டாமல் அவர்களுக்கு நல்வாழ்வு அமைய ஏற்பாடு செய்வது தான் ஹிந்து மததிற்கு செய்யும் உண்மையான சேவை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

3 மார்ச், 2010

சத்யானந்தம், சேரு, அதிரச லீலா !

சத்யானந்தத்தின் படுக்கை அறையைக் காட்சிகளை பன் தொலைக்காட்சி காட்டியுள்ளது. பன் தொலைகாட்சி இதற்கு முதன்மைத்துவம் கொடுத்து, தலைப்புச் செய்தியாகக் காட்டி நீலப்படம் போல் காட்சிகளை ஓடவிடுவதன் பின்புலம், பேரம் தெரியவில்லை, இருந்தாலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு அந்த (காமக்) காட்சிகளைப் பார்ப்பதை பெற்றோர்கள் தவிர்பது நல்லது. பன் தொலைகாட்சியின் இந்த திடீர் சேவை திராவிடத்தை தாங்கிப் பிடிக்க, பகுத்தறிவை வளர்க்க எடுக்கும் நடவடிக்கை என்று என்னால் நினைக்க முடியவில்லை.

சத்தியானந்தம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை பேசக் கூடியவர், சமுக மாற்றம் ஏற்படுத்தும் பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் பெரியாருடன் ஒப்பிட்டு எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராவாக அண்மையில் தான் எழுத்தாளர் சேறு, அஜய் தொலைகாட்சியில் விளம்பரம் (போல்) பேசி இருந்தார். சத்யானந்ததின் இருட்டு அறையில் பன் தொலைகாட்சி வெளிச்சம் போடுவதற்கு முன்பே சேறுவின் பக்கத்தில் சத்யானந்தம் பற்றிய விளம்பரங்களையும், புகழுரைகளை, பரப்புரைகள் மாயமாக மறைந்துவிட்டு இருக்கிறது.

பொறுப்பான எழுத்தாளர்கள் சத்யானந்தம் போன்ற சாமியார்களை அவதாரங்கள் என்பது போல் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வாசகர்களை பலியாக்கும் முன், தான் தெளிதல் நல்லது. சத்யானந்தம் லீலைகள் குறித்து மற்றபடி பெரிய கருத்து ஒன்றும் இல்லை. இன்று ஒருவர் நாளை வேறொருவர் என்பதாக சந்தியானந்ததின் முறை இன்று வந்திருக்கிறது அவ்வளவு தான். முன்பே 'நான் குறிப்பிட்ட பெண்ணுடன் தொடர்பு உள்ளவன்' அல்லது அவரைத்தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் அறிவித்துவிட்டு பல்கி சாமியார் போல் தம்பதி சகிதமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தால் சத்யானந்ததின் லீலைகள் பெரிய விசயமாகவே ஆகி இருக்காது. காவி உடையும், கலியுக கண்ணனைப் போன்று அருள் கைகளும், கோல்கேட் விளம்பரம் போல் பளீர் சிரிப்புமாக 'வளமாக' வ(ளர்)ந்த சாமியார் தாம் ஒரு பிரம்மச்சாரி என்பதாக நம்ப வைத்தார், மற்றபடி அவர் தாம் பிரம்மச்சாரி என்று வெளியே சொன்னாரா என்பது தெரியவில்லை.

பொதுவாக இந்துக்களின் நம்பிக்கை காவி உடை உடுத்துபவர் காமத்தை கட்டுப் படுத்திக் கொண்டவர் என்பது, அந்த உடையை சத்யானந்தம் அணிந்து கொண்டு சாமியார் பிஸ்னஸ் செய்ததால்தான் பெண்ணுடன் ஆன லீலை பெரிய விசயமாக்கப்படுகிறது, இல்லை என்றால் 'என் படுக்கை அறையைப் படம் பிடித்தார்கள்' என்று சாமியார் மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்புள்ள தொலைக்காட்சியின் மீது போட்டிருக்கக் கூடும். சாம்பார் லீலை புத்தகத்தின் அடுத்த பகுதியாக அதிரச லீலையை எழுத உட்கார்ந்துவிடுவார் சேறு. மற்றபடி சதியானந்ததை உண்மையான ஞானி, அவதாரம் என்று நம்பிய அப்பாவி பக்தர்களுக்குத்தான் பெருத்த அவமானம்.

சத்யானந்தம்' இந்த படக்காட்சி கணிணி வரைகலை மூலம் உருவாக்கப்பட்டது போலியானது, என் புகழுக்கும் வளர்ச்சிக்கும் களங்கம் கற்பிக்க நினைப்பவர்களின் சதி, இதை நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்' என்றோ 'கதவை திறந்தால் காற்றுவருவதைப் போல் அவர்களை திறந்த மனதுடன் மன்னிக்கிறேன்' என்றோ ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு புதிய கிளையை திறக்கப் புறப்படுவார்.

இதற்க்காக அனைத்து சாமியார்களும் சத்யானந்தம் போல் தான் என்று நினைப்பவர்களும் உண்டு, எனக்கு தெரிந்து கேள்வி பட்ட வரையில் பல சாமியார்கள் அப்படித்தான், ஆனால் விதி விலக்குகள் உண்டு. திருமணமானப் பெண் காதலுடன் ஓடிப் போய்விட்டாள் என்பதற்காக திருமணமாகப் போகும் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என்று முத்திரை குத்த நினைப்பதும் கூட பொது புத்திதான். சத்யானந்தம் செய்தது சாதாரண செயல் ஆனால் காவி உடை போட்டுக் கொண்டு, தத்துவம் பேசிக் கொண்டு இதைச் செய்வது நம்பிக்கை துரோகம்.

போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

1 மார்ச், 2010

பொறியியல் பட்டப்படிப்பில் தமிழில் !

அண்மையில் தமிழக அமைச்சர் பொன்முடி தமிழ் வழிப் படிப்பாக பொறியியல் பட்டப்படிப்பு விரைவில் துவங்கும் என்று அறிவித்து இருந்தார். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தும், அதனால் பெறப் போகும் பயன் நினைத்துப் பார்த்தால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடுகளில் குறிப்பாக சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் அந்த நாடுகளின் தாய்மொழி வழியாக அனைத்துக் கல்வியும் வழங்கப்படுகிறது. அந்த நாட்டு மக்கள் அம்மொழியிலேயே வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும் சூழலும் பெறுகிறார்கள்.

தாய் மொழி வழிக் கல்வி வழியாக வேலை வாய்ப்பு பெறும் சீன நாட்டைச் சேர்ந்த சீனர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட சீன மொழி பேசும் பெரும்பாண்மை மக்கள் வாழும் நாடுகளில் தான் வேலை கிடைக்கிறது. வேறு நாடுகளில் கிடைக்காது, கிடைத்தாலும் அவர்களால் செய்ய இயலாது.

தமிழக அரசு அலுவலகங்களிலும் அரசு ஆணைகளிலுமே தமிழ் முதன்மையாக இல்லாத பொழுது தொழிற்கல்வியை தமிழில் தருவதால் பயன் இருப்பது போல் தெரியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளின் வழியாக 80 விழுக்காட்டு ( சரியாகத் தெரியவில்லை) பொறியாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தாய்மொழிக் கல்வி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்குமா என்பதே தெரியாது. பன்னாட்டு நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுகளும் எழுத்து தேர்வுகளும், கலந்துரையாடல் தேர்வுகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. தமிழ் வழி கல்வி பெற்றவர்களால் அந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமென்றால் ஆங்கிலம் மிக சரளமாக தெரிந்திருந்தால் தான் போட்டி போட்டு தேர்வாகவே முடியும். நான் முதன் முதலில் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற எல் என் டி நிறுவனத்தில் குருப் டிஸ்கசன் எனப்படும் கலந்துரையாடலில் பேந்த பேந்த விழித்து வெளியேறினேன். அதன் பிறகு தட்டு தடுமாறி வேலைக்கு சேர்ந்து பேச்சு வழக்கு ஆங்கிலம் பிடிபடவே இரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியது. பின்னர் பொறியியல் படித்த பிறகே நல்ல ஆங்கில புழக்கம் ஏற்பட்டு வேலை வாய்ப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றேன்.

தமிழ் மொழி வேர்சொற்கள் நிறைந்த வளமையான மொழி, எந்த ஒரு பிற மொழிச் சொல்லையும் தமிழிலேயே உருவாக்கி பயன்படுத்த முடியும் அந்த வகையில் பொறியியல் கல்வியை தமிழ் படுத்துவதும், பாடத் திட்டம் கொண்டுவருவதும் எளிமையானதே. தற்போது தொழிற் பயிற்சி கல்விகள்(ITI), பட்டய படிப்புகள் (DIPLOMA) தமிழில் இருக்கின்றன. அதே போல் பொறியியலையும் கொண்டுவருவது எளிது தான். ஆனால் போட்டி தன்மை மிக்க இவ்வுலகில், உலகமயம் என்கிற சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளைப் பெற தமிழ் வழிக் கல்வி பயனளிக்காது. பயனளிக்கும் வகையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ் நாடு தொழில் துறையில் தன்னிறைவு அடையவும் இல்லை. அப்படி எல்லாம் ஆகவேண்டும் என்ற ஆசையை மட்டுமே வைத்துக் கொண்டு கல்வியில் மட்டுமே நடைமுறைக்குக் கொண்டு வருவதால் மாணவர்கள் எதிர்காலத்தில் இடற்பாடுகளை எதிர் நோக்குவார்கள்.

* குறிப்பிட்ட விழுக்காடு தமிழ் வழி கல்வி பெற்றவர்களுக்கு எங்கள் மானிலத்தில் இருக்கும் பன்னாட்டு, இந்திய அரசு நிறுவங்கள் வேலை வாய்ப்பு தரவேண்டும்
* எல்லா தமிழக அரசு சார்ந்த பொறியியல் நிறுவனங்களும் தமிழ் வழி கல்வி பயன்றவர்களுக்கு சம வாய்ப்பு அல்லது முன்னுரிமை வழங்க வேண்டும்
* தமிழ் வழி கல்வி பயின்றவர்களின் ஆங்கில மொழி அறிவை முதன்மை தகுதியாக வைக்கக் கூடாது

இதற்கெல்லாம் அரசு எதாவது நல்ல நடவெடிக்கை எடுத்துவிட்டு தமிழ் வழி பொறியியல் கல்வியை நடை முறை கொண்டு வந்தால் வரவேற்கலாம்.

உற்பத்தியிலும், பொருளியியலும் தமிழகம் சார்ந்த நிறுவனங்கள் வளர்ந்து வேலை வாய்ப்புக்கு பன்னாட்டு நிறுவனங்கள் சாராத ஒரு நிலையில் தமிழ் வழிக் கல்வியில் பொறியியல் பேச கேட்க, நடைமுறைக்கு நன்றாக இருக்கும்.

நடை முறையில் இருக்கும் இருமொழித் திட்டத்தில் தமிழ் வழி கல்வி பயலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் நன்றாக பயிற்றுவித்தாலே போதும். ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒரு மாணவன்/மாணவி எந்த மொழியில் கல்வி கற்றாலும் அவன்/ள் மேலே வந்துவிடுவான்(ள்). ஆங்கில வழிக் கல்வியில் இருப்பது போன்றே ஆங்கில வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசிப் பழகவேண்டும் என்கிற விதிகளை வைத்து அவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுத்தால் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பழகிக் கொண்டு ஆங்கிலத்தில் நன்றாக பேச எழுதக் கற்றுக் கொள்வார்கள். இப்போது வேலை தேடும் தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் அரை கூவலாக இருக்கிறது. அதில் மின்னுபவர்கள் எளிதில் வேலை வாங்கிவிடுகிறார்கள். மற்றபடி ஒரு மனிதரின் தனித் திறமைக்கு முன்பு மொழி ஒரு தடையே இல்லை.

பொறியியல் கல்விக்கு தமிழ் வழியாகவும் வித்திடும் முன் அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மாணவர்களுக்கு சேர்ந்து படிக்கலாம், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிற தன்னம்பிக்கை ஏற்படும். இல்லாவிடில் தமிழை வாழவைக்கிறோம் என்கிற போர்வையில் ஏழை மாணவர்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி வைத்துவிட, அது எவருக்கும் பயனில்லாத ஒரு திட்டமாக இருந்து தோல்வியில் முடியும்.

22 பிப்ரவரி, 2010

அஜித்தின் கலகக் குரல் !

அரசியல் வாதிகளுக்கும் அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்களுக்கும் எதிரான அஜித்தின் எதார்த்தமான பேச்சு நன்றாக வேலை செய்கிறது, இதை அவர் மீதான 'தமிழ்' எதிரி என்கிற விமர்சனங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை அரசியல் சார்ந்துள்ளவர்கள் விமர்சனம் செய்யும் போது நடிகரின் தாய் மொழியை முன்னிலைப் படுத்துகிறார்கள், இது போன்ற சகிப்புத்தன்மை அற்ற விமர்சனங்கள் திரையில் நடித்திருக்காத பெரியார் அவர்களுக்கே நடந்திருக்கிறது, அவர் கன்னடர் என்றும் இராமசாமி நாயக்கர் என்றும் இன்றும் கூட வரிந்து எழுதும் சாதி வெறியர்கள் உண்டு. இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுன் தமிழ் பற்றும் சாதி எதிர்ப்பும் கேள்விக்கும் கேலிக்கும் உரியவையே, ஏனெனில் இவற்றில் தனக்கே உரிய சார்ப்பு நிலைகளில் இருந்து கொண்டு தான் இந்த விமர்சனங்களைச் செய்கிறார்கள்.

எம்ஜிஆரின் அரசியல் நுழைவின் போதும் அவரை விமர்சனம் செய்ய அவர் மலையாளி என்பதாக குரல் எழுந்து அடங்கியது. மக்களின் அன்பைப் பெற்றுவிட்டால் அத்தகைய விமர்சனங்களால் பயன் ஏதும் இல்லை என்பதை எம்ஜிஆர் மறையும் வரை அவர் அரசே அமைந்திருந்ததன் வழியாக காணமுடியும், சாதி சார்ப்பு, மதச் சார்ப்பு அரசியல் இவை நிலையானதும் அல்ல. ஒரு அரசியல் இயக்கத்தின் தேவை மக்கள் மனதின் ஏக்கமாக இருந்தால் மட்டுமே அது வளர்ச்சி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும், அந்த வகையில் திராவிட அரசுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இவற்றிற்கு மாற்றான அரசு என்று கூறிக் கொள்ளும் தகுதியில் அதன் பிறகு எந்த ஒரு கட்சியும் வளர்ந்துவிடவில்லை எனவே திராவிடக் கட்சிகளே தொடர்ந்து ஆண்டுவருகின்றன, ஆனால் முன்பைப் போல் தனிப் பெரும்பான்மை என்பது கேள்வி குறியாகிவிட்டபடியால் சிறுபான்மை அரசு, கூட்டணி ஆதரவு என்பதாகத்தான் திராவிட ஆட்சிகள் நடந்துவருகின்றன, இதற்கு கருணாநிதியோ ஜெ வோ விதிவிலக்கு இல்லை.

அரசியலுக்கான தகுதி முன்பைப் போல் மக்கள் தொண்டாற்றியவர்கள் என்ற தகுதியில் புதிதாக உள்ளே ஒருவர் நுழைவதற்கான வாய்ப்புகளே இல்லை அல்லது குறைவு, திராவிட இயக்க ஆட்சி ஏற்படும் முன் பண்ணையார் மேலாண்மை, முதாலாளித்துவ, பார்பனிய மேலாண்மையுடன் தொடந்த காங்கிரசு ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற பரவலான எண்ணம் ஏற்பட்டு பிற்பட்ட சமூகத்தினரின் முன்னெடுப்பகளால் பெரியார் வழியாக திராவிட இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பெற்றின. அதன் பிறகு 40 ஆண்டுகள் திராவிட இயக்கங்களின் ஆட்சியே நடந்துவருகிறது, 40 ஆண்டுகளாக அண்ணாவின் ஆட்சியை அமைக்கிறோம், அண்ணாவின் நாமம் என்று சொல்லிக் கொண்டே திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளுமாக மாறி மாறி ஆண்டன. திராவிட இயங்கங்களின் சித்தாந்தங்கள் அனைத்தும் நிறைவேறி இருந்தால் அல்லது அதன் தேவைகள் இன்றும் இருந்தாலோ இந்த இரு கட்சியில் எதோ ஒன்று தான் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.

இவர்களின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் கூட்டணி பலம் என்ற ஒன்றை மாற்றி அமைப்பதின் மூலமே மாறி மாறி நிறைவேறி வருகிறது அன்றி, மக்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் அரசுகள் இவை என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பதவி அதன் அதிகாரம் எதையும் சாதித்துவிட முடியும் என்பதாக அதிமுக ஒரு மாற்றுவழியை அரசியல் தக்கவைப்பிற்கு பயன்படுத்தியது, அதையே தான் திமுகவும் செய்துவருகிறது, கூடுதலாக பணம், இலவசம் ஆகியவற்றுடன் திமுக திராவிட இயக்க ஆட்சிகளின் பரிணாமம் என்பதாக மாற்றிக் கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில் புதிய அரசியலுக்கு வருகிறவர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தாலே நாமும் ஏன் அரசியலில் இறங்கக் கூடாது என்கிற ஆசை வருவது இயல்பு. விஜயகாந்த் அப்படித்தான் அரசியலுக்கு வந்தார். விஜய் போன்றவர்களின் நாற்காலிக் கனவுகளும் தெரிந்தவையே. நடிகனை நடிக்க விடுங்க, அரசியலுக்கு இழுக்காதீர்கள் என்கிற அஜித்தின் குரல் கலகக் குரலாக திரைத்துறையுனுள்ளேயே புயலைக் கிளப்பி இருக்கிறது, மேலும் திரை நடிகர்களை தேர்தலுக்கு தேர்தல் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும் பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக ஜாக்குவார் தங்கம் போன்றவர்களை தூண்டி அஜித் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் தகவல் வருகிறது. நாடாச் சங்கம் கொதிக்குதாம், இன்னும் என்னன்ன சாதி சங்கங்களெல்லாம் கொதிக்குதாம், சாதி சங்கங்கள் எந்த ஒரு ஓடாத, ஊத்திக் கொண்ட படத்தையும் ஓட வைத்தது இல்லை, நாடார் சங்கம் கொதித்து நாடார்கள் அனைவரும் பார்த்திருந்தால் ஜக்குபாய் உட்பட எத்தனையோ சரத்குமார் படங்கள் ஓடி இருக்கும், சரத்குமார் சென்ற தேர்தலில் பிணைத் தொகை கூட கிடைக்காமல் தோல்வியை சந்தித்தார். அஜித் பேச்சை சாதி மற்றும் மொழிச் சார்ப்பில் மாற்றித் திரிப்பது மிகவும் கீழ்த்தரமான ஒன்று, இதை முன்பு பெரியார் மற்றும் எம்ஜிஆருக்கும் செய்தார்கள், இரஜினிக்கும் செய்தார்கள், அவரும் தான் கன்னடன் தான் என்று கூறியோ அல்லது தன் மகள்களுக்கு பெங்களூரில் திருமணம் முடிக்கவில்லை, அவரது மருமகன்கள் கூட சென்னையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும் தாம் ஒரு தமிழன் என்பதை சொல்லாமல் உணர்த்தி வருகிறார். திராவிடக் கட்சிகளிடம் அவமானப் பட்டவர்கள் அனைவருமே தனித்தனி கட்சியை நடத்தி பின்னால் திராவிடக் கட்சியினரால் கூட்டணிக்கு இழுக்கப்பட்டனர், குறிப்பாக இராமதாசு, திருமாவளவன் தற்போது வி.காந்த்

ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.

நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம், ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும்.

17 ஜூலை, 2009

சீனா விற்பனை செய்யும் திருநெல்வேலி அல்வா !

வேறு எதாவது ஊரில் அல்வா செய்து 'திருநெல்வேலி அல்வா ங்கிற பெயரில் விற்பது வேறு. ஆனால் அதை திருநெல்வேலியிலேயே விற்க முயற்சிக்க அங்கே ஏமாந்த சோனகிரிகள் இருக்கிறார்கள் என்று அறிந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

ஆப்ரிக்க நாடுகளில் 'இந்திய தயாரிப்பு' என்ற வில்லைகளுடன் (லேபிள்) என்று தரமற்ற பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு மூக்குடைப்பட்ட சீனா, அதே போன்று 'மேட் இன் இந்தியா' என்ற வில்லைகளுடன் அழகு சாதனப்பொருள்களை சென்னைக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்து இருக்கிறதாம்.

அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் எங்களுக்கு எல்லாப் பக்கமும் எரியுது, இந்தியா அமெரிக்க கைப்பாவையாவதை அனுமதிக்க மாட்டோம் என்ற கம்யூனிஸ்டுகள், சீனாவின் அத்துமீரல்களை இதுவரை ஒரு சிறிய அளவிலான கண்டன அறிக்கையின் வழி கூட கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்டுகள் தேசிய வியாதிகளா ? சீனாவின் கைக்கூலிகளா ? தெரிஞ்சவங்க சொல்லுங்க. கேட்டுக் கொள்கிறேன்.

போகின்ற போக்கைப் பார்த்தால், அரசியல்வாதிகளின் கரை வேட்டிகள் கூட சீனாவில் இருந்து இறங்கும் போல இருக்கு. இது தொடர்பில் முன்பு எழுதியது.

கம்யூனிஸ்டுகள் கட்டிக் கொள்ளும் சீனக் கோவணம் !



படமும் செய்தியும் : கம்யூனிஸ்டின் மீது காழ்புணர்வு அற்ற, தேசிய நலம் விரும்பி :தினமலர்
(நன்றி)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்