பின்பற்றுபவர்கள்

செய்தி கருத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி கருத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 செப்டம்பர், 2013

செவ்வாயோ வெறும் வாயோ !

மதப் புத்தகங்களுக்கு மாற்று விளக்கம் சொல்ல வேளை வந்துவிட்டது, பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக் கூறுகள் பூமியில் இருந்ததற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, அவை ஒருவேளை செவ்வாயில் இருந்திருக்கலாம் எனவே செவ்வாய் தான் உயிரின தோற்றத்தின் மூலமாக இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர், அறிவியல் கூற்றுகள் காலத்திற்கும் ஏற்றவை என்பதை அறிவியலே ஏற்றுக் கொள்வது கிடையாது, அறிவியல் கொள்கைகள், அறிவியல் கூற்றுகள் மாறக் கூடியது என்பதை அறிவுள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள், அதில் நானும் ஒருவன், எனக்கு செவ்வாய் தான் மூலமா, பவுத்திரமா ? என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை. :)


ஏற்கனவே மதத்தையும் அறிவியலையும் கலந்து பேதிக்கு / போதிக்கும் மருந்தாக கொடுப்பவர்களுக்கு தான் இந்த கருத்துகள் அடுத்து என்ன செய்யலாம் என்று மண்டை குடைய வைத்திருக்கும். நானே சிலவற்றை எடுத்து தருகிறேன்.

இறைவன் ஆறு நாளில் உலகை படைத்தான் என்று போதித்த முந்தைய விளக்கங்களை இனி உலகம் என்றால் அம்மையப்பன் அம்மையப்பன் என்றால் உலகம் என்ற ரீதியில் உலகம் என்றால் செவ்வாயும் பூமியும், செவ்வாயும் பூமியும் என்றால் உலகம் என்று புது விளக்கம் அளிக்கலாம்.

அது சரி, களிமண்ணில் இருந்து மனிதனை உருவாக்கினார் என்பதை எப்படி சொல்வதாம் ? என்று கேட்போருக்காக, களிமண்ணால் மனிதனை படைத்தார், என்பது உண்மை தான் என்று கூறிவிட்டு, ஆனால் அதனை செவ்வாயில் இருந்து எடுத்த களிமண் என்பதை இப்போது தான் அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறுவீராக. ஆக மனிதனை (செவ்வாயில் இருந்து எடுத்த) களிமண் மூலமாக படைத்தான் என்று அடைப்புக் குறிக்குள் எழுதிவிட்டால் விளக்கமாகிப் போகும்.

இதுக்கெல்லாம் இந்து மதத்தினர் எளிய விளக்கம் கொடுப்பார்கள், எப்படி என்று கேட்கிறீர்களா ? கிருஷ்ணரின் பவளச் 'செவ்வாயில்' இருந்து தான் உலகமும் உயிர்களும் தோன்றியது என்பதை இந்து கூற்று மெய்பிக்கிறது என்பார்கள்.  படிச்சா செவ்வாய்க்கே செவ்வாய் தோஷம் ஏற்பட்டது போல் இருக்கா ?

:)

இணைப்பு:



10 ஜனவரி, 2012

சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் !

அன்பு நண்பர் திரு சுவனப்பிரியன் "சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது". என்று சவுதி அரேபியா பற்றி நெகிழ்ந்து பாலாறும் தேனாறும் அங்கு ஓடுவதாகவும், அதை சவுதி அரசு ஏற்றுமதி செய்து வளமிக்க நாடாக சவுதியை மாற்றி வருவதாகவும் மிக அருமையான கட்டுரையை எழுதியுள்ளார், அவருக்கு பாராட்டுகள்.

*****

எமெக்கெல்லாம் கவலை இந்தியா சவுதி அரேபியா போன்று ஆகாமல் போனாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும் என்பது தான்.

பாலாறும் தேனாறும் ஓடும் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக பணிப் பெண்களை கண்ணியத்துடன் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை, சென்ற ஆண்டு 'ஆணி அடிக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஆரியவதிக்கு நேர்ந்த கொடுமை குறித்து வினவில் கூட கட்டுரை எழுதி இருந்தார்கள், அதனுள் மற்றொரு செய்தியாக 'வளர்த்தக்கடா மார்பில் பாய்வதைப் போல் “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” குறிப்பிடப்பட்டு இருந்தது, பணிப் பெண் என்பவள் ஒரு அடிமை என்ற அளவில் தான் அங்கு நடத்தப்படுகிறதாம், அது எல்லாப் பணிப் பெண்களுக்கும் இருக்கும் சிக்கல் என இல்லாவிட்டாலும், சமூகக் குற்றம் என்பது ஒரு சில என்றாலும் அவர்களுக்காகத்தான் காவல் நிலையங்கள், எனவே தனிநபர் குற்றம் பேசப்படக் கூடாது என்பதை நான் எப்போதும் நிராகரிப்பேன், அப்படி மாரைப் பிடித்துப் பார்த்த நிகழ்வு உண்மையோ பொய்யோ அவைபற்றி ஆதாரம் இல்லை என்ற வகையில் அந்தச் செய்தியை நிராகரிக்கலாம் என்றாலும் கூட உடலெல்லாம் ஆணி அடிக்கப்பட்ட பெண் சவுதியில் இருந்து மீண்டது உண்மை தானே.

இன்றைக்கு வந்திருக்கும் செய்தி சவுதி அரேபியாவிற்கு இல்லப்பணிக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்களில் 50க் கும் மேற்பட்டவர்கள் பாஸ்போர்டுகள் பிடுங்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்களாம், தப்பி வந்தவர் கண்ணீர், பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது என்று அந்தச் செய்தியில் தகவல் இடம் பெற்றுள்ளன.

சவுதி அரேபியாவில் விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையாம், ஆனால் பணிப்பெண்களை அவ்வாறு கல்லால் அடித்துக் கொலை செய்யமாட்டார்கள் என்று நாம் நம்புவோம், ஏனெனில் அவர்களைப் பொருத்த அளவில் அவர்கள் அடிமைகள் தான், அடிமைகளை எப்படிப் பயன்படுத்தினாலும் அடிமைகளுக்கோ, அவர்களை பயன்படுத்திக் கொள்பவர்களுக்கோ, பயனாக்கிக் கொண்டவர்களுக்கோ தண்டனைகள் இருக்காது என்று நம்பலாம். விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லப்படுவதெல்லாம் சவுதி அரேபியவில் பிறந்து வளர்ந்த அந்த நாட்டுப் பெண்களுக்கான சட்டமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடட்டும் அதை நக்கிப் பலர் குடிக்கட்டும் நமக்கென்ன ஆனால் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு பணிப் பெண்களை அனுப்பும் போது அவர்களுக்கான பாதுகாப்பு, பெண்மைக்கான பாதுகாப்பு கேள்விக்குறி என்பதையே அந்த செய்தி காட்டுகிறது.

இன்ஷா அல்லா ! மாஷா அல்லா ....... ! மெக்காவுக்கு மிக அருகில் நடக்கும் பெண் / வன் கொடுமைகளைக் கூடத் தடுக்க முடியவில்லையே, நண்பர் சுவனப்பிரியனின் பேராசையாக சவுதியைப் போல் இந்தியா ஆகவேண்டும் என்பதை எப்படி நிறைவேற்றப் போகிறாயோ ?

பின்குறிப்பு : கட்டுரை தகவல் அடிப்படையில் அதற்குறிய சுட்டிகளுடன் எழுதப்பட்டுள்ளது, இதில் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ விமர்சனம் செய்யும் வரிகள் எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

10 ஆகஸ்ட், 2010

மாரியம்மன் கோவில் நில மீட்பாம் ! உடல் மீட்பு எப்போது ?

கிறித்துவர்களால் அங்கங்கே நில ஆக்கிரமிப்பு என்கிற செய்தி புறக்கணிக்கக் கூடியது அல்ல, எப்போதும் நடைபெறுவது தான். வேளாங்கன்னி என்கிற கிராமம் தற்போது சிறுநகரம் என்கிற வளர்ச்சியை எட்டியுள்ளது, 90 விழுக்காட்டு இடங்கள் பல்வேறு தரப்பினரிடம் மிருந்து தானமாகவோ, இனாமாகவோ, விலை கொடுத்தோ பெறப்பட்டு வேளாங்கன்னி ஆலய நிர்வாகத்தினரிடம் இருக்கிறது, வேளாங்கன்னியில் நிலங்களை மாதா கோவில் நிர்வாகம் வளைப்பதாக குற்றச்சாட்டுகள் உண்டு. தற்பொழுது 90 விழுக்காட்டு சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் மாத கோவில் நிர்வாகத்திடம் தான் உள்ளது. கிறித்துவர்களோ, இஸ்லாமியர்களோ யாரும் வெளியில் இருந்து வந்து குதித்தவர்கள் அல்ல, அவர்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என்பதால் வழிபாட்டு இடம் அனைவருக்கும் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக வளைத்துப் போடுவது என்பது சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் பல இடற்களை உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கண்டதைக் குறிப்பிட்டேன்.

அதே போல் நாகையில் காயாரோகன - நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான குளத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து அரபு / மதராசா பள்ளிகள் கட்டப்பட்டிருந்தது, அதுகுறித்து 10 ஆண்டுக்கும் மேல் வழக்கு நடைபெற்று பிறகு இடம் கோவிலுக்கு உரிமை உடையது என்பதாக தீர்பளிக்கப்பட்டது, இது குறித்து வழக்கு நடைபெறும் போது அதன் தீர்வுகளை அச்சில் கோர்த்தவன் என்கிற முறையில் எனக்கு முழுவிவரம் தெரியும் என்பதால் நான் இட்டுக்கட்டி எதையும் எழுதவில்லை, சம்பந்தப்பட்ட குளத்தை கோவில் குளம் அல்ல, அதன் பெயர் பேய் குளம் என்றெல்லாம் கூறி முடிந்த மட்டில் அந்தக் குளத்தை ஆக்கிரமிக்கவே முயற்சிகள் நடைபெற்றன. இது போன்ற வழக்குகள் அங்கங்கே நடைபெறுவது தான். இட ஆகிரமிப்பு பொது இடம் அல்லது தனிப்பட்டவர்களின் இடம் என்றால் கூடப் பரவாயில்லை, இந்துக் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தை பிற மதத்தினர் ஆக்கிரமிக்கும் போது அது மதப்பிரச்சனையாகிறது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும், அது பாபர் மசூதி என்று பெரிய அளவிலான பழைய ஆக்கிரமிப்பாக இருந்தாலும் ஈரோட்டு மாரியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பு என்ற சிறு அளவிலான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு எதிர்க்க அதே மத அரசியலைத்தான் எடுக்கும்.

******

அண்மையில் ஈரோட்டில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்ப்பில் இந்துக்களைத் திரட்டி மாரியம்மன் கோவில் நிலத்தை கிறித்துவர்களிடமிருந்து மீட்கும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது என்கிற தகவலை நான் தமிழ் இந்து தளத்தில் இருந்து படித்தேன். இன்றைய இந்துக் கோவில்களில் குறிப்பிடத் தகுந்த அளவு கோவில்கள் குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பழைய கோவில்கள் பவுத்த சமண ஆலங்கள் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டவை தான். அன்றைய மன்னர்களின் ஆணைகளில் அதைச் செய்வது மிகவும் எளிது, பள்ளி என்று முடியும் அனைத்து கிராம நகரங்கள் அனைத்தும் பவுத்த சமண ஆலயங்கள் இருந்த இடம் தான். ஊர் பெயர்கள் (திருச்சிறாப்பள்ளி) தவிர்த்து இன்றைக்கு சமண பவுத்த அடையாளங்களை தமிழகத்தில் பார்க்க முடியாது. மாரியம்மன் கோவில் போன்ற சிறுவழிபாட்டு நாட்டார் தெய்வங்களுக்கான கோவில்கள் சமண / பவுத்த பள்ளிகளை இடித்து ஆக்கி இருக்க வாய்ப்பு இல்லை, இவை சுமார் 300 ஆண்டுகளுக்கு குறைவான வரலாறு கொண்ட கோவில்கள் என்பதால் யாரேனும் தானம் / கொடை செய்த நிலங்களில் பெரும்பாலும் தனியார்களால் கட்டி வைக்கப்பட்டவையே மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டுக் கோவில்கள்.

முழுக்க முழுக்க கோவிலும் கோவிலுக்கும் சொந்தமான நிலமும் கோவில் சார்ந்த சொத்து எனலாம். பிற்காலத்தில் இந்துக் கோவில்களில் வருமானம் உள்ளவற்றை அறநிலையத் துறைக்குள் கொண்டு வந்தது தவிர்த்து அரசுகள் கோவில்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. குறிப்பாக 1000 ஆண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவிலுக்குக் கொண்டாடப்பட்டது என்பதான தகவல்கள் அனைத்தும் வெறும் வரலாற்றுகான குறிப்பு ஏற்படுத்துதல் என்பது தவிர்த்து கோவில்களுக்கு அரசுகள் பெரிதாக எதுவும் செய்வது இல்லை. இந்துகோவில்களை பராமரிக்க போதிய வருமானம் உண்டு முன்பு அதை கோவில் நிர்வாகிகள் உண்டார்கள், தற்பொழுது அரசாங்கமும் கோவில் நிர்வாகமும் சேர்த்து உண்ணுகிறது, அவ்வளவு தான்.

ஈரோட்டு மாரியம்மன் கோவில் நிலம் கிறித்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் அது மீட்கப்படுவதாகவும் போராட்டம் நடைபெறுகிறது. நல்லது நீதி உள்ள பக்கம் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துவோம். அதே சமயத்தில் மாரியம்மனுக்கு பார்பன இந்து மதம் செய்த கொடும் செயல் பற்றி சிறிது குறிப்பிடுகிறேன், அதையும் சரி செய்தால் மாரியம்மனின் அருள் நிலம் மீட்பாளர்களுக்கு கிட்டும். மாரியம்மன் பழந்தமிழ் தெய்வங்களுள் எஞ்சி இருக்கும் பெண் தெய்வத்தின் தொடர்ச்சி, இயற்கை வழிபாடு என்னும் நீட்சியில் மழையை (மாரி) பெண்ணாக நினைத்து வழிபட்டதே மாரியம்மன் வழிபாடு, மாரியம்மன் கிராம தெய்வங்களுல் முதன்மையானது, கோடையில் அம்மை போன்ற நோய்கள் பெருகும் என்பதால் மாரியாம்மன் வழிபாட்டுத் தொடர்ச்சி இன்றும் சிறப்பாகவே நடைபெறுகிறது.

அழிக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற வழிபாட்டையும் அதன் தெய்வங்களையும் பார்பனிய வடமொழிமயமாக்கி, வேத காலத் தெய்வங்கள் என்று காட்டுவது தான் பார்பனிய இந்து மதத்தின் நடைமுறை. மாரியம்மனை முற்றிலுமாக தமிழர்கள் மனதில் அகற்ற முடியாது என்று உணர்ந்து கொண்டோர் அதற்கு வேத வடிவம் கொடுத்த சக்தியின் வடிவம் ஆக்கினர். மாரியம்மனை பலர் வெறும் தலையை மட்டும் வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம், இன்றும் உக்கிரமான மாரியம்மன் சிலைகள் வெறும் தலைகளுடன் இருக்கின்றன. மற்ற தெய்வங்களை முழுதுமாக வழிபடுபவர்கள் மாரியம்மனை தலையை மட்டும் வழிபடும் காரணம் என்ன ? காரணம் மிகவும் அருவெறுப்பும், சமூக சீக்கும் நிறைந்தவை. பரமசிவன் கூப்பிடும் போது குளித்துக் கொண்டிருந்த பார்வதி உடனே வரவில்லையாம், சினமுற்ற பரமசிவன், மகன் பரசு இராமனை கூப்பிட்டு அவள் தலையை கொய்துவா என்றாராம். தந்தைச் சொல் மிக்க மந்திரமில்லை என்று உடனே வேண்டுகோளை நிறைவேற்றினானாம் பரசு இராமன், பிறகு அவசரப்பட்டுவிட்டோமே என்று வருந்திய பரமசிவன் வழி இன்றி உடல் பாகத்தைத் தேட அது கிடைக்காமல் போக அந்த பக்கமாக சென்ற பறைப்(தலித்) பெண் ஒருத்தியின் தலை வெட்டிவிட்டு அந்த உடலை பார்வதியின் தலையுடன் பொருத்து பார்வதியை உயிருடன் எழுப்பினாராம். இந்தப் புதுப்பிறவி மாரியம்மன் எனப்படும் என்பது மாரியம்மன் தோற்றத்திற்கான பார்பனிய வரலாற்றுக் கதை. இந்தக் கதையை இன்றும் நம்பும் பார்பனர்கள் மாரியம்மனின் உடலை பற உடம்பு என்பதாக ஒதுக்கி வைத்து தலையை மட்டும் வழிபடுவது தான் இன்றும் தொடர்கிறது. சாமியை சிலையாக வழிபட்டாலும் அந்த சிலையில் கழுத்துக்கு கீழே இருப்பது பறச்சியின் உடல் அதனை வழிபடக் கூடாது என்பதாக வெறும் தலையை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். மாரியம்மனுக்கு மட்டுமல்ல ஆனைத் தலை பிள்ளையாருக்கும் தலை மட்டும் எப்படி யானை ஆகியது என்பதற்கும் அருவெறுப்பான கதைகள் உண்டு.

முண்டமற்ற வெறும் தலையாக இருக்கும் மாரியம்மன் சிலைகள் இன்னும் பல்வேறு கோவில்களில் வழிபடப் படுகிறது. அங்கெல்லாம் மாரியம்மனை முழுவுடலாக மாற்றி வழிபட இத்தகைய மாரியம்மன் நிலமீட்பு குழுவினர் உடல் மீட்கவும் போராடினார்கள் என்றால் மக்களுக்கு நன்மையோ இல்லையோ மாரியம்மனுக்கு நன்மையாக முடியும். உடல் சிதைக்கப்பட்ட சிலையாக நிற்கும் மாரியம்மன் பழந்தமிழர் தாய் தெய்வ வழிபாட்டின் நீட்சியாகும், அதை முழு உடலாக்கி நிறுத்தி செம்மை படுத்துவதும் தமிழர்கள் கையில் தான் உள்ளது

28 ஜூலை, 2010

அரசு ஊழியன்களின் கய(ட)மை உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி !

இலவச பேருந்து அட்டை எடுத்துவராத மாணவி அரசு பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட அந்த மாணவி அவமான உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

ஒருவேளை நுழைவு அனுமதி அட்டை வழியில் தொலைந்தாலோ, யாரோ திருடிக் கொண்டாலோ, பள்ளி மாணவி என்பதை நிருபனம் செய்யும் சீருடைத் தவிர்த்து அவளை பேருந்தில் அனுமதிக்க வேறு என்ன ஆவணம் இலவச பேருந்துகளுக்கு தேவைப்படும் என்பது தெரியவில்லை.

அரசு ஊழியர்களில் 75 விழுக்காடு வரை இரக்கமட்டவர்களாகவே நடந்து கொள்கிறார்கள், 'ரூல்ஸ்' பேசுவது என்பது இயலாதவர்களிடம் மிகவும் கடுமையான நடைமுறையாகவே பின்பற்றுகிறார்கள். ஒரு அரசு ஊழியன் வேலை நிறுத்தம் செய்வது கூட சட்டபடி குற்றம் தான் என்றாலும் தொழிற்சங்கம் என்ற பெயரில் அத்தகைய சட்ட மீறல்களை செய்யும் போது இவர்களது மனசாட்சியும் ரூல்ஸும் என்ன ஆனது என்று தெரியவில்லை. பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களின் (குடும்பம் தவிர்த்த) நெருங்கிய உறவினர்கள் யாரும் அந்த ஓட்டுனர் பணி செய்யும் பேருந்தில் இலவச பயணம் தான், அப்போதெல்லாம் ரூல்ஸ் பேசுவது கிடையாது. பேருந்தில் அனுமதிக்கப்படும் அளவை விட கூடுதலாக லக்கேஜ் ஏற்றி கையூட்டுப் பெரும் போதும் இவர்களுக்கு ரூல்ஸ் கிடையாது.

அரசியல்வாதிகளாலும், அவர்களின் அரசு விழாக்கள், பாராட்டு திருவிழாக்கள் என்ற பெயரில் பொதுமக்களின் வரிப்பணம் கோடிக்கணக்காக இறைக்கப்படும் நாட்டில் சீருடைகளுடன் வரும், பள்ளி மாணவிகளை, குழந்தைகளை எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாமல் இலவசமாகக் கூட்டிச் சென்றால் என்ன இழவு நிகழ்ந்துவிடப் போகிறது ?

முந்தைய பதிவு :

அரசு ஊழியன் என்னும் கிங்கரகர்கள் !

படம் / செய்தி : நன்றி தினமலர்

27 ஜூலை, 2010

பூவரசி பெண்ணியம் ஆணியம் சாணியம் !

என்னக் கொடுமைங்க, ஒரு பெண் உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்ததை ஆணிய / பெண்ணிய வாதிகள், ஆணியம் பெண்ணியம் என்றெல்லாம் வகைப்படுத்தி கச்சைக்கட்டுகிறார்கள். பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண் ஒரு ஆணின் மீது இருக்கும் ஈர்ப்பு அல்லது வெறுப்பினால் அவனை/ அவனது மனைவியைக் கொல்லாமல் ஒரு குழந்தையை கொடுறுமாகக் கொன்றுவிட்டாளே என்பது தான். குழந்தையைக் கொல்லும் மனநிலை மிகவும் மோசமானது சாதிவெறியர்கள், மதவெறியர்கள், இனவெறியர்கள் தான் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொல்லுவார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், தனிமனிதன் வெறுப்பினால் பிறர் அல்லது தன் குழந்தையைக் கொல்வார்களா என்பது நம்மால் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. குழந்தைகளைக் கொல்லும் மன நிலை சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தே வருகின்றன. கணவன் அல்லது மனைவியின் நடத்தை சரி இல்லை என்னும் போது குழந்தைகளும் கொல்லப்பட்டு பின் கணவன் அல்லது மனைவியின் தற்கொலைகள் நடப்பதை நாம் காலம் தோறும் செய்திகள் வழியாகப் படித்தே வருகிறோம், அப்போதெல்லாம் கொல்லப்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு இது போன்று ஒரு அனுதாபங்கள் கிடைப்பதில்லை, பெற்றக் குழந்தையையே கொல்லவதற்கு எப்படித்தான் மனது வருகிறதோ என்கிற ஆதங்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர். மற்றவர் குழந்தையைக் கொல்வதைவிட தன் குழந்தையைக் கொல்வது இன்னும் கூட கொடுரமனது வேண்டும் என்பதை 'தன் இறப்புக்கு பின்னால் குழந்தையின் எதிர்காலம் கெட்டுவிடும் என்பதாக அந்தப் பெற்றோர்கள் நினைத்துக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள்' என்பதாக அதை ஒரு பெற்றோரின் இயலாமையினால் செய்யப்படும் உயிர்/கொலைத் தியாகமாகத் தான் சமூகம் பார்க்கிறது.

குழந்தைகளுக்கு எந்த ஒரு சூதுவாதும் தெரியாது, தன்னுடன் அன்பாகப் பழகுபவர்களிடம் பழகும். அதுவும் அன்பாகப் பழகிய பூவரசியிடம் குழந்தையும் இப்படித்தான் பழகி வந்திருக்கிறது, கோபம் எப்போதும் இயலாதவர்களிடம் மட்டுமே எடுபடும் என்பதாக தன்னை ஏமாற்றியவனை விட்டுவிட்டு தன்னை நம்பிய அவனுடைய குழந்தையிடம் காட்டிவிட்டாள் அவள், இது திட்டுமிட்டு நடந்திருக்கவும் வாய்ப்பில்லை, காதல் முற்றினால் காதலனது உடமைகள் அனைத்தும் தன்னுடையதாக நினைக்கும் ஒருவித மனநிலையில் அந்தக் குழந்தையுடன் நெருக்கமாகப் பழகிய அவள், காதலுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றலில் தனக்கு எதிர்காலப் பாதுகாப்பு எதுவும் இல்லை என்கிற அவநம்பிக்கையில், அவனை முழுவதும் நம்பி இருந்து அவன் ஏமாற்றியதாக நினைத்த ஒரு நொடியில் தன்னை நம்பிய அவன் குழந்தையிடம் தனது முழு ஆத்திரத்தையும் காட்டி கொலை செய்து, அதை மறைக்க முயன்று, மனநிலை தடுமாற்றத்தில் பாவமன்னிப்பு வரையிலும் கூடச் சென்றிருக்கிறாள் என்பதாக செய்திகள் வழியாகத் தெரிகிறது. குழந்தைக்கு பதிலாக அவன் எதிரில் இருந்திருந்தாலும் கூட அவனை கொலை செய்திருப்பாள், அப்பாவியாக சிக்கிக் கொண்டிருக்கிறது குழந்தை.

இது எல்லையற்ற கோபத்தினால் நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்று நினைக்க முடிகிறது. கொலையை மறைக்க நடந்த முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்றால் ஊடகம் இதைப் பெரிதாக ஊதி இருக்காது, 'கள்ளக் காதலனை பலிதீர்க்க அவனது குழந்தையைக் கொன்ற காதலி' என்பதாக ஒரு நாள் ஓரச் செய்தியாக இவை முடிந்திருக்கும். கொலையின் பிறகு நடந்த நிகழ்வு, கொலை கண்டுபிடிக்கப்பட்டது, அதில் துப்பு துலங்கியது என்பதாக ஒரு துப்பறியும் கதைப் போல நிகழ்ந்துவிட்டதால் ஊடகங்கள் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து ஆணியம் பெண்ணியம் சார்ந்த நிகழ்வாகவும் உளவியலாகவும் ஊதுகின்றன.

என்னைப் பொருத்த அளவில் இதில் ஆணியம் பெண்ணியம் என்று எதுவுமே இல்லை, காலம் தோறும் எங்கும் இருக்கும் முறையற்ற உறவுகள் அதன் சிக்கலினால் ஏற்படும் விளைவுகள் அவற்றில் இதுவும் ஒன்று. இதிலும் அந்தக் குழந்தையின் தாய் 'தன் கணவன் அப்பாவி என்றும், தன் கணவனை இன்றும் முழுதும் நம்புவதாக சொல்வதை' பேட்டி எடுத்து எழுதி இருக்கின்றன ஜூவி போன்ற செய்தி இதழ்கள். ஒரு பெண் குழந்தையைக் கொல்லலாமா ? அவள் பெண்ணா ? பேயா ? காமவெறி பிடித்தவளா ? அவளுக்கு மட்டும் ஏன் தண்டனை ? அவனும் தானே இவளை இந்த அளவு வெறி எடுக்கும் நிலைமைக்குத் தூண்டியது ? என்றெல்லாம் விவாதிக்கப்படுகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இந்தச் சமூகம் 'பொண்டாட்டி ஒழுங்க இருந்தா புருசன் ஏன் இன்னொருத்தியை நாடப் போகிறான் ? அவளால் தானே இவ்வளவும் நடந்தது ?' என்றெல்லாம் கூட கணவனுக்கு காமக் குறை வைத்த பெண் என்பதாக ஆண்சார்பில் கூடக் கேட்டு இருக்கும். நல்லவேளை இப்போது யாரும் அவ்வளவு அபத்தமாக கேட்பது இல்லை.

குழந்தைகளை குறிவைத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல், நரபலி உள்ளிட்ட வன்முறைகள் காலம் தோறும் வரைமுறை இன்றி நடந்துவருகிறது, மேற்சொன்னது போல் பெற்றோர்களின் சண்டைகளின் பிரிவின் போது சில வேளைகள் குழந்தைகள் கூடக் கொல்லப்படுகின்றன, எவனாவது / எவளாவது வெட்டிக் கொண்டு, அடித்துக் கொண்டு சாகுங்கள் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள் என்று விழிப்புணர்வு ஊட்டலாம். அதைவிட்டு பூவரசியின் குழந்தைக் கொலைச் செயலை ஆணியம் பெண்ணியம் என்று விவாதிப்பது, பேசுவது வீண்.

தொடர்புடைய செய்திகள் : பூவரசி ; அப்துல்கபூர்

இவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி...

15 ஜூலை, 2010

புதிய இந்திய ரூபாய் சின்னம் கம்யூனிச சின்னமா !?







இனி இந்திய ரூபாய் மற்றும் காய்ன்களில் இந்த முத்திரை பதிக்கப்பட்டு வெளி வரும். உலக அளவில் இந்த முத்திரையே பயன்படுத்தப்படும். இனி ஆர். எஸ், ஆர்.இ., என்று போட வேண்டியிருக்காது. இந்த குறியீட்டை போட்டாலே போதுமானது. ஆங்கிலத்தில் ஆர் என்ற எழுத்தின் பாதியில் அதன் மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது. இந்தியில் “ ர “ என்பது போலவும் இருக்கிறது.

மேலும் படிக்க...

நன்றி : தினமலர்

28 ஜூன், 2010

350 கோடி செலவில் இல்லவிழா !

தமிழர் நலனை புறக்கணிக்கும் மைய அரசு நூற்றாண்டுகள் (காலம்) கடந்து செம்மொழி என்னும் தகுதியை தமிழுக்கு கொடுத்ததால் தமிழ் தற்பொழுது தான் தாவணி உடுத்திக் கொண்டது போலவும், அதனால் "மஞ்சள்" நீராட்டுவிழா என்பதாக முதன் முதலில் தமிழுக்காக என்பதாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் முதன் முறையாக மாநாடு நடத்திய கருணாநிதி அதை செம்மொழி மாநாடு என்று பெயரிட்டு நடத்தினார். முதல் செம்மொழி மாநாடு என்னும் பெயர் அரசியலில் இதுவரை தமிழுக்காக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததே இல்லை என்கிற தோற்றம் ஏற்படுத்தினார். தமிழ்மொழி மாநாடு நடப்பது முதன் முறையன்று. இதற்கு முன்பு செம்மொழி மாநாடு நடத்திய எம்ஜிஆர் மற்றும் ஜெவின் பெயர்கள் மாநாட்டில் திட்டுவதற்குக் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மாநாட்டில் கவியரங்கம் என்பதாக முழுக்க முழுக்க கருணாநிதியின் புகழ்பாடினார்கள் அண்டிப்பிழைக்கும் கவிஞர்களும், கவிதாயினிகளும், உச்சகட்டமாக கருணாநிதியின் உமிழ்நீரும் தமிழ் நீர் என்று செம்மொழி மீது பச்சையாக மஞ்சள் எச்சிலை உமிழ்ந்தார் தமிழச்சி தங்கபாண்டியன் என்கிற ஒரு ஒருகவிதாயினி. ஏற்கனவே கவிதைவடிவில் இருக்கும் புராண புளுகுகளுக்கு புதுக்கவிதை புனுகு பூசி உலாவிட்ட வாலி ஒருபடி மேலே போய் கருணாநிதியை வாழ்த்துவது ஜெவைச் சாடுவதாது தான் என்பதாக புரிந்து கொண்டு "மாமிகள், சாமிகள் என்று, அறிவாலயம்" என்றெல்லாம் எளுதி கூடவே பார்பனர்களையும் வம்பிக்கிலுத்தார், வாலி அக்கிரகாரத்து அக்மார்க் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை, இருந்தாலும் பொற்கிழி பெரும் ஆர்வக் கோளாரில் வாய்கிழித்துப் பாடுவதாக நினைத்து இவர் பாடிய ஆசனவாய்கவிதைகள் அருவெருப்பானவையே.

முதல்வர் இல்லத்தில் இருந்து மொத்தம் 84 பேர் கலந்து கொண்டார்களாம். இது இல்லவிழா இல்லை என்றும் யாரும் உதட்டுச் சாயம் கூடப் பூசி சாயம் ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் சொன்னதால் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டதாம், ஆறுமாதங்களாக நடக்கும் ஏற்பாடு, திமுக அரசின் ஏற்பாடு இதில் உடன்பிறப்புகள் எந்த அளவுக்கு வரவேற்புகாட்டுவார்கள் என்பது கூட ஒரு முதல்வரால் யூகிக்க முடியாமல் போனதும் அதை வைக்கும் முன்பே தவிர்க்கச் சொல்ல தடுக்கச் சொல்ல ஒரு முதல்வரால் முடியாமல் போனதை அனைவரும் நம்பித்தான் ஆகவேண்டும். உடன்பிறப்புகள் பேனர் வைத்தப் பிறகு அகற்றச் சொன்னது பெருந்தன்மை என்றெல்லாம் கூட சில அப்பாவிகள் எழுதுகிறார்கள், நினைக்கிறார்கள். வைக்கச் சொல்லி எடுக்கச் சொல்லுவது பெரும்தன்மையாம்.


மாநாட்டில் நடுவில் திரு சுதர்சனம் மறைவு. அந்நிகழ்வை 'இதயத்தை தாக்கிய இடி' என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. இதற்கும் சேர்த்து 'இடியையும் இதயத்தில் தாங்கும் எங்கள் ஒரே தலைவன்' என்று எவரேனும் அடுத்து பாராட்டுவிழா ஏற்பாடு செய்தாலும் வியக்க ஒன்றுமில்லை.

மாநாட்டை பிடிக்காதவர்கள் விமர்சிக்க இதை செம்மொழி மாநாடு இல்லை என்று உடன்பிறப்புகளைப் போல் சொல்லிவிட்டு போனால் யார் விமர்சிக்கப் போகிறார்கள் ? அதுவும் அரசு வரிப்பணத்தில் நடக்காவிட்டால் யார் விமர்சனம் செய்வார்கள்? பொதுமக்கள் வரிப்பணத்தில் இப்படி ஒரு கேலிக்கை நடந்ததை விமர்சனம் செய்வது வெறும் காழ்புணர்வு அன்று.

இங்கு, அங்கு எநத ஒரு அசாதராண சூழலும் இல்லை, கிரிக்கெட் நடக்கிறது பாருங்கள் என்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நடுவில் கிரிக்கெட் நடத்திக் காட்டியாது இலங்கை, அதற்கு வீரர்களை அனுப்பி ஆசிர்வதிதது இந்தியா, அதன் தொடர்ச்சியாக தமிழர்கள் மத்தியில் துயர் இல்லை, இதோ அவர்கள் கொண்டாடும் மனநிலையில் தான் இருக்கிறார்கள், அப்படி இல்லை என்றால் மொழிக்கு மகுடம் சூட்ட அவர்களால் இயலுமா ? இராஜபக்சே கூப்பிட்டு சுட்டிக்காட்ட உலகினருக்கு இன்னொரு நிகழ்வு நடந்து முடிந்த கேலி(க்கை) செம்மொழி மாநாடு.......வெற்றி வெற்றி........மாபெரும் வெற்றி!

படம் நன்றி : ஜூவி

நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி (திரு வந்தியத்தேவன்)

26 ஜூன், 2010

சந்துல "சிந்து" !

ஒரு இனத்தை அழிப்பெதென்பது இனத்தின் தொண்மைகளை அழித்துவிட முயற்சிப்பது, பிறகு அந்த இனத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டால் அந்த இனத்தையே அழித்துவிடலாம், அமெரிக்காவில் வேட்டையாடி கொல்லப்பட்ட செவ்விந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளை வெள்ளை இன ஐரோப்பியர்கள் அழித்துவிட்டு அவ்விடங்களை தங்கள் ஆளுமைக்குக் கொண்டு வந்தார்கள். இருந்தாலும் வரலாறுகள் மண்ணில் மறைத்துவிட்டால் மறையாது துளிர்த்தெழும் விதைகளைக் கொண்டிருக்கிறது என்பதை இன ஒழிப்பாளர்கள் மறந்துவிடலாகாது என்பது போல் இன ஒழிப்பின் கதைகள் நூற்றாண்டுகள் கடந்து விழிப்படைகிறது. வரலாறுகளை திரிப்பதும் மாற்றி எழுதுவதும் தற்காலிகமேயன்றி அவை உறுதியான ஒன்று அல்ல. கட்டுமானங்கள் அனைத்துமே விரிசல் ஏற்பட்டு என்றோ ஒரு நாள் உதிரும் என்பது விதி.

பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்களையும், அரிய நூல்களைக் கொண்ட மாபெரும் களஞ்சியமாக திகழ்ந்திருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை தமிழர்கள் குறிப்பாக இலங்கை வாழ்தமிழர்கள் மறக்க் கூடியதே அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் நூலகம் இலங்கையில் தமிழர்களின் ஆயிரம் ஆண்டு வேர்களை தாங்கி நின்று கொண்டிருந்தது, அதை அழிப்பதன் முலம் இலங்கையில் தமிழர்கள் நூற்றாண்டுக்கு முன்பு பிழைப்புக்காக வந்த மலையகத் தமிழர்களாக வரலாறுகளில் காட்டிவிடலாம் என்று முனைந்தே அந்த யாழ்நூலகத்தை எரித்து மகிழ்ந்தனர் சிங்களர்கள். தற்போது எரிப்பு குறித்த மன்னிப்புகளை இலங்கை அமைச்சர் ஒருவர் கேட்டு இருக்கிறார். மன்னிப்புகள் மனக்காயங்களை அகற்றிவிடாது என்பது தெரிந்தவை தான் என்றாலும் குற்றங்களை ஒப்புக்கொள்வதை வரலாறுகள் பதிந்து கொள்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழர்களின் தொண்மைகளை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதை கடல்கோள்களுக்கே புரிய வைத்து வாழ்கிறது தமிழ். செம்மொழிகள் என்று அடையாளம் கூறப்பட்டவை எதுவுமே வாழும் மொழியாக இல்லாத காலகட்டத்தில் வாழும் மொழியாக குன்றா இளமையுடன் திகழும் தமிழை ஒரே யாழ் நூலகம் மட்டும் தாங்கி இருந்ததாக நினைத்த சிங்களர்களின் சிறுமதியை எள்ளி நகையாடும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன.

செம்மொழி மாநாடும், அதை நடத்துபவர்களின் தன்னலமும் கேள்விக்கும் கேலிக்கும் உரியது என்பதாக எதிர்ப்புகளை பல்வேறு தரப்பினரும் பதிய வைத்திருக்கின்றனர். செம்மொழி மாநாடு இச்சூழலில் தேவையற்றது என்பதை மறுப்பதற்கே இல்லை. இருந்த போதினும் செம்மொழி மாநாட்டு சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் மற்றும் அதன் பின்னனி சின்னங்களில் மிக அழகாக தமிழர் தொண்மங்கள் பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. கடல்கோள்களால் கொள்ளப்பட்ட தமிழகத்தை உணர்த்தும் வண்ணம் கடற்கோள் அலைகளின் பின்னனியில் எழுச்சி சின்னமாக திருவள்ளுவர் சிலை, காலம் கடந்து தமிழ் வாழ்ந்து வருவதை உணர்த்துவதாகவும், சிந்து சமவெளி சின்னங்கள் சுற்றிலும் அமைத்து தமிழ் மொழி உலக நாகரிங்களுக்கு முற்பட்டவை அல்லது நாகரிகங்களின் துவக்கம் என்பதாக சிந்து சமவெளி எழுத்துகள் மற்றும் சின்னங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதே ஆகும்.

சிந்து சமவெளிக்கு தமிழர்கள் உரிமை கொண்டாடலாமா ? என்னும் கேள்வியை புறந்தள்ளும் வண்ணம் அண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தமிழர் தொண்மங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை ஒட்டியது மட்டுமின்றி சிந்துவெளியில் கிடைத்த அதே எழுத்துருக்கள் கிடைத்தது அனைவரையும் வியப்ப அடைய வைத்ததுடன் சிந்துசமவெளி நாகரிகம் முன்னாள் திராவிடநாகரீகம் என்பதை தெளிவுபடுத்தாவிட்டாலும் இரண்டிற்குமிடையேயான தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டு தமிழர் நிலம் தமிழ்நாடு சிந்துவெளி காலத்தை ஒட்டிய வரலாற்று சிறப்பு மிக்கது என்பதுடன் சிந்துவெளி வரை பரவியிருந்தது என்பதை ஏற்கும் வண்ணம் அமைந்தது.

சிந்துசமவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டவரின் மிகவும் அறியப்பட்டவர்கள் இருவர், அஸ்கோ பர்போலா மற்றும் ஐராவதம் மகாதேவன் இருவருமே கிட்டதட்ட சிந்து சமவெளி நாகரிகம் திராவிடச் சார்புடைய நாகரிகம் அல்லது திராவிட நாகரீகம் என்பதை நம்புவர்கள், சிந்துசமவெளியை அழித்தது ஆரிய படையெடுப்பா என்பதில் தான் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள். ஆதிச்ச நல்லூர் தொல்பொருள்களுக்கு பிறகு சிந்துவெளி நாகரீகம் என்பது திராவிட நாகரீகமே என்பதில் உறுதியாக நிற்கின்றனர். இவர்கள் இருவரையும் உயர்வுபடுத்தும் வண்ணம் இருவருக்கும் செம்மொழி மாநாட்டில் விருதுகள் வழங்கப்பட்டது. சிந்துசமவெளி ஆராய்ச்சியில் வாழ்நாளை அற்பணித்த இருவரும் செம்மொழி மாநாட்டுச் சின்னத்தில் சிந்துவெளி சின்னம் இருப்பதைப் பற்றி எந்த ஒரு எதிர்கருத்தும் கூறவில்லை. மாறாக அவர்களின் ஒப்புதலில் தான் சின்னமே உருவாகப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மொழி, தமிழர்கள், தமிழின் தொண்மை என்பவை தொல்காப்பியத்தை ஒட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை தாண்டி, சிந்துவெளி ஆராய்ச்சிகளின் முடிவில் ஐந்தாயிரம் ஆண்டுகளைக் கடந்து எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதை மாநாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இவ்விரு ஆராய்சியாளர்களும் மிக முதன்மையான பங்காற்றி இருக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் தமிழர்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள்.

******

இவையெல்லாம் அறிந்தே தாமும் தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், சிந்துவெளி சின்னம் மாநாட்டின் சின்னத்தில் செதுக்கி இருப்பதை மறைமுகமாக கண்டனம் செய்வதுடன், அவ்விரு ஆராய்ச்சியாளர்கள் மீதும் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள், அதற்குகாரணமாக அவர்கள் கூறும் சப்பைக்காரணம் தமிழின் தொண்மையும் தொடர்ச்சியும் ஆரிய நாகரிகம் எனப்படும் வேத நாகரிகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவையாம் அதற்கு ஆதாரமாக குறுந்தொகைப் பாடலைக் கூறி இமயமும் தென்குமரியும் பற்றி பாடல்களில் வருகிறது அதையெல்லாம் மாநாட்டில் புறக்கணித்துள்ளார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்

சிந்துவெளி தற்பொழுது பாகிஸ்தானில் இருக்கிறது, அதுவரை சென்றுவிட்ட அடையாளத்தை இமயம் வரை மட்டுமே குறுக்கி இருந்திருந்தால் போதும் என்பதாகவும் அவை மறைகப்பட்டதாகவும் ஓலம் இடுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் ஒரு பார்பனர், நேர்மையாளர், சிந்துசமவெளி நாகரிகம் ஆரியத்தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்ட காளை சின்னத்தை குதிரையாக காட்டச் சொன்ன வட ஆரியர்களின் கோரிக்கைகளை புறம் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் சிந்துவெளியில் குதிரைகள் கிடையாது. ஆரியர்களின் படையெடுப்புகளுக்கு பிறகே குதிரைகள் இந்தியாவிற்குள் வந்தன.

தமிழ் இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் வட ஆரியர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி இருப்பதுடன் தமிழின் தொண்மை போற்றும் சிந்துசமவெளி நாகரிகம் பற்றி தவறான தகவல்களை தொடர்ந்து எழுதிவருவதுடன், இன்று மாநாட்டில் அச்சின்னத்தை அமைத்திருப்பதையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழுக்கு எதிரிகள் தரணியில் இல்லை, அவன் தமிழருள் ஒருவனாகவே இருக்கிறான்.

12 மே, 2010

நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

ஆங்கிலத்தில் ஜட்ஜ்மெண்ட், ஜட்ஜ் என்பதற்கான நேரடி பொருள் 'தீர்வு', 'தீர்வு சொல்லுபவர்' என்பதே. ஒரு வழக்கு என்றாலே ஒருவர் (வாதியோ, எதிர்வாதியோ) மனசாட்சியை அடகு வைத்தவர், மற்றவர் நேர்மையானவர் என்பது பரவலான புரிதல், அதுமட்டுமின்றி சில சமயம் இருவருமே விட்டுக் கொடுக்காதவர்கள் என்னும் போது, இருவருக்கும் இடையேயான உடன்பாடின்மை ஆகியவை தீர்வுக்களைத் தேடி நீதிமன்றம் வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் 'நீதி' என்ற சொல்லை வழக்கு தீர்வுகளுக்கும், அதனை வழி நடத்துபவர்களுக்கும் கொடுப்பது அநீதியானது. ஏனெனில் வழக்கு மன்றங்கள் கொடுப்பது நீதி அல்ல தீர்வு மட்டுமே. ஒரு பிரச்சனையின் தீர்வு நீதியா அநீதியா என்பதை அவரவர் மனசாட்சி தவிர்த்து யாருமே சரியாக மதிப்பிட முடியாது என்பதால் நீதிபதிகளின் தீர்ப்பை நீதி என்று நான் நினைப்பது இல்லை. நீதிபதிகள் அளிப்பது நீதியல்ல சாட்சிகள் அடிப்படையில் ஆன தீர்வுகள் மட்டுமே. இது போன்ற புரிதல்களால் தான் எந்த ஒரு பதவிக்கும் புனிதம் கொடுக்கக் கூடாது என்பதால் தீர்வை நீதி என்றோ, தீர்ப்பு சொல்லுபவர்களை நீதிபதி என்றோ சொல்லாமல் 'தீர்வு அளிப்பவர்' என்னும் பொருளில் 'ஜட்ஜ்' என்று சொல்லுகிறார்கள், தீர்வுகள் மன்னர்களிடமிருந்து அதற்கான படிப்பு படித்தவர்களுக்கு சென்ற பிறகு வெள்ளைக்காரர்கள். 'மை லாட்' என்ற பதத்தை நீதிபதியை நோக்கி பயன்படுத்த்தினார்கள் அல்லது தீர்பளிப்பவர்கள் வழக்கிற்கு பொதுவானவர்கள் என்பதாலும் முறையான தீர்வு அளிப்பவர் என்கிற நம்பிக்கையாலும் தீர்ப்பு அளிப்பவர்களை கடவுளுக்கு நிகராக 'மை லாட்' என்று சொல்லி வந்தனர். இருந்தாலும் நடைமுறையில் அந்த பதவிக்கு 'தீர்வு அளிப்பவர்' என்ற பொருளில் தான் 'ஜட்ஜ்' என்று சொல்லப்பட்டு வருகிறது.

சாட்சிகள் அடிப்படையிலான தீர்வுகள் என்பதையும் மீறி, சாட்சிகளை கவனத்தில் கொள்ளாது நீதிபதி தன் விருப்பம் போல் (அநீதியாக) தீர்ப்பு வழங்கிவிட்டால் நீதிபதிகளின் தீர்ப்புகளை விமர்சனம் செய்யக் கூடாது என்பது தான் மக்களாட்சி தத்துவங்களில் எழுத்தப்பட்ட மற்றொரு அநீதியாயன நடைமுறைகள். நீதிபதிகள் என்பவர்கள் கடவுள்கள் அல்ல, சாமியார்களும் சாதாரண மக்களே என்பது போல நீதிபதிகளும் அதற்கான படிப்பு படித்த மனிதர்கள் மட்டும் தான், அவர்களை கடவுளுக்கு இணையாக வைத்துப் பார்ப்பதும், 'நீதி அரசர்' என்கிற பட்டம் கொடுப்பதும் எனக்கு ஏற்புடையது அல்ல.
நீதிபதிகளில் தவறு செய்யக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை, காசு வாங்கிக் கொண்டு ஆளுனராக இருந்த அப்துல்கலாமும் கைது வாரண்ட் பிரப்பித்தவனும் கூட 'நீதிபதி' என்ற பதவியில் இருந்து தான் அதனை வழங்கினான். ஒரு சிலர் தவறு செய்வதற்காக ஒட்டு மொத்த நீதிபதிகளை குறைச் சொல்ல முடியுமா ? அந்த ஒரு சிலரின் தவறுகளை கடுமையாக தண்டித்திருக்க வேண்டிய பிற நீதிபதிகள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பதை என்னவென்று சொல்வது.

ஒரு நீதிபதி லஞ்சம் வாங்கியாதகச் சிக்கினால் அதற்கு முன் அவர் வழங்கிய தீர்ப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்கு ஆளாகிறது, அவ்வாறு அதற்கு முன் வழங்கிய தீர்வுகள் எதுவும் நீக்கம் (ரத்து) செய்யபடுவதில்லை. ஒருவர் அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாத சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது என்னும் போது தவறான நீதிபதிகள் வழங்கிய தீர்வுகள் மட்டும் செல்லுபடியானவை என்பது நீதியில் வருமா ?

எதற்கு ஏன் இவ்வளவு புலம்புகிறேன் என்றால் படித்த ஒரு செய்தி எரிச்சலை ஏற்படுத்தியது.

********

ஊழலில் ஈடுபட்ட நீதிபதிகள் இட மாற்றத்தை அரசு நிராகரித்தது
மே 11,2010,00:00 IST

புதுடில்லி : பல கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதி மோசடியில் சிக்கிய மூன்று நீதிபதிகளின் இட மாற்றம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரையை, மத்திய அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்த வருங்கால வைப்பு நிதி பல கோடி ரூபாய் மோசடி சம்பவம், நாட்டையே உலுக்கியது.

இந்த மோசடியில் அலகாபாத், நைனிடால் ஐகோர்ட் நீதிபதிகள் மூன்று பேருக்கு தொடர்பு இருந்தது சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஊழல் புகாரில் சிக்கிய அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சுசில் ஹர்கவுலி ஜார்க் கண்ட் ஐகோர்ட்டிற்கும், ஜே.சி.எஸ்.ரவாத் நைனிடால் நீதிமன்றத் திற்கும், நைனிடால் ஐகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிற்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டனர்.

ஊழல் நீதிபதிகளின் இடமாற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தவிரவும், ஊழலில் சிக்கிய மூன்று நீதிபதிகள் மோசடிகள் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, புகாரில் சிக்கிய நீதிபதிகளை மீண்டும் பழைய இடத்திற்கே பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற சிபாரிசு, மத்திய அரசுக்கு திருப்தி தரவில்லை.

நீதிபதிகள் குழு அளித்த இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஊழல் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக நீதிபதிகள் குழு பழைய உத்தரவையே மீண்டும் அரசுக்கு பரிந் துரை செய்தால், அவர்கள் மாறுதல் உத்தரவை விதிமுறைகளின்படி மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

*******

குற்றத்தின் முகாந்திரம் இருக்கிறது என்பாதக்தான் விடுமுறை நாட்களிலும் காவலர்களால் வீட்டிற்கே அழைத்துவந்து முன் நிறுத்தப்படுவர்கள் (நக்கீரன் கோபால், வைகோ, சு.வீ, நெடுமாறன்) குற்றவாளிகள் என்பதாகப் புரிந்து கொண்டு உடனடியாக ஒரு நீதிபதி போலிஸ் காவல் விசாரணைக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து இடுகிறார்கள். இது குற்றம் செய்யும் நீதிபதிகளுக்கு பொருந்ததா ? என்ன கொடுமை பாருங்கள், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக ஊழல் முகாந்திரம் உள்ள ஒருவரை மீண்டும் பணி இடத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டுமாம்.

அரசுகளை அரசியல்வாதிகள் ஆட்டிப்படைப்பது போலவே நீதிபதிகள் தங்கள் நலன் சார்ந்து நீதிமன்ற ஆணைகளை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்கிறார்கள்.

நீதிபதிகளின் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பது லஞ்சம் பெற்று குற்றவாளியாக நிற்கும் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளுக்கும் பொருந்துமா ? அல்லது நீதிபதிகளே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ?

நீதிபதிகள் வழங்குவது நீதி அல்ல வழக்கின் சாட்சிகள் அடிப்படையிலான தீர்வுகள் மட்டுமே, அதையும் மனசாட்சிக்கு விரோதமாக அறிவிக்கும் நீதிபதிகளும் உண்டு, அப்படியான வழக்குள் சில சமயம் வழக்கு நடத்த பண பலம் இருந்தால் மேல் நீதிமன்றத்தில் வெற்றி அடைகின்றன, சில தண்டனை அடைகின்றன, அதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்வுகள் நீதியானவை என்று நான் சொல்லவரவில்லை.

தீர்ப்புகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்லது விமர்சனம் செய்வது இந்திய சட்டவியல் படி குற்றம் என்றாலும் கூட நீதிபதிகளின் தவறான செயல்களை, பணியைப் பயன்படுத்தி செய்த குற்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று எந்த ஒரு சட்டத்திலும் இல்லை.

"நீதி" என்ற சொல் "தீர்ப்புகளுக்கு" தொடர்பில்லாதது, தீர்வுகள் அனைத்தும் "நீதிகளும்" அல்ல. தீர்ப்பு வழங்குபவரை "நீதிபதி", "நீதி அரசர்" என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று, அதற்கு பதிலாக 'ஜட்ஜ்' என்ற சொல்லின் நேரடி பெயர்பான, 'தீர்வு ஆணையர்' அல்லது 'தீர்வாளர்' என்று குறிப்பிடுவதே சரி.

நீதிபதிகளை விமர்சனம் செய்து முன்பு எழுதிய இடுகை.

10 மே, 2010

பார்பனர்களைப் தொடர்ந்து பாராட்டும் முதல்வர் !

ஒருகாலத்தில் பார்பனர்களின் 'தீண்டத்தகாத கட்சி' என்று அவர்களுக்குள் விமர்சனம் செய்யப்பட்ட திமுகவிற்கு எஸ்வீசேகர் உட்பட பல பார்பனர்களின் நேரடி ஆதரவும், 'ஷோ' இராமசாமி போன்ற பார்பனர்களின் மறைமுக ஆதரவும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் எம்ஜிஆருக்கு பிறகான ஜெ தலைமை அதிமுகவில் தலைமைத் தவிர்த்து தேவர் சாதியின் பிடி அதிமுகவில் இறுகி உள்ளதாலும், பார்பனர்களின் இராஜ குருவான ஜெயேந்திர சரஸ்வதியை கைது செய்ததாலும் பார்பனர்கள் அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டனர், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அதிமுக திமுக தவிர்த்து பிறக்கட்சிகளுக்கு பெரிய செல்வாக்கு கிடையாது என்பதால் பார்பனர்களின் இருக்கும் இரு வாய்ப்புகளுக்குள் கடந்த பத்தாண்டுகளில் திமுக ஆதரவு என்பதாக தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட தேசிய கட்சிகள் அனைத்தும் பார்பனர்களின் வழிகாட்டுதலில் அல்லது தலைமையில் இயங்குகின்றன என்பது அனைவரும் அறிந்தவை தான். தமிழகத்தில் பார்பனர்கள் நுழைய முடியாத ஒரே கட்சி திக மட்டுமே, பெரியாருக்கு பிறகான திகவின் ஒரே கொள்கையும் பார்பன எதிர்ப்பு என்பதால் அந்த நிலை நீடிக்கிறது என்றாலும் கூட தேர்தலில் நிற்காத ஒரே கட்சி என்பதால் திகவின் பார்பன எதிர்ப்பு அல்லது பார்பனர்களின் திக எதிர்ப்பு நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. கட்சியில் இருக்கும் மந்திரிகளின் ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது மட்டும் தமது கட்சி திராவிடக் கட்சி என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொள்ளும் கருணாநிதி 'பார்பன சதி', 'தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வெறுப்பு' துவேசம்', 'காழ்புணர்வு' என்பதாக கிளப்பிவிட்டுவிட்டு மறந்துவிடுவார்.

*****

அண்மையில் ஒய்ஜிமகேந்திரனுக்கு பாராட்டுவிழா நடந்தது, 50 ஆண்டுகளாக நாடகத் துரையில் கலைப்பணிகளுக்காக எடுக்கப்பட்ட விழாவாம், கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார், கருணாநிதி கலந்து கொண்டதால் அரசு சார்பு விழா போன்ற தோற்றம் ஏற்பட்டது, மற்றபடி அது அரசு சார்பு விழா அல்ல. நாடகத்துறையில் கிரேசிமோகன், மெளலி மற்றும் விசு போன்ற பார்பனர்கள் இருக்க, அவர்களை விட மகேந்திரன் என்ன சாதனை செய்தார் என்றே தெரியவில்லை.

அடுத்து 5600 முறை நாடகம் போட்ட எஸ்வீசேகரைப் பாராட்டுகிறாராம் கருணாநிதி, எஸ்வீசேகருக்கு வயது 60 என்று வைத்துக் கொண்டாலும், 20 வயதில் இருந்து 40 ஆண்டுகளாக (14600 நாட்கள்) நாடகம் போடுகிறார் என்று வைத்துக் கொண்டாலும் கூட இரண்டரை நாள்களுக்கு ஒரு நாடகம் என்ற கணக்கில் வருகிறது. எஸ்வீசேகர் நாடகம் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை கடந்த 10 ஆண்டுகளில் எங்கும் நடந்தது போல் தெரியவில்லை. ஆண்டுக்கு 50 தடவை என்றாலும் பத்தாண்டுகளில் 500 முறையும் அதற்கு முன்பு அடிக்கடி அதாவது ஆண்டுக்கு 100 முறை என்றாலும் கூட 1000 முறைகள் ஆக மொத்தம் 1500 முறை, ஒரு நாள் நாடக நிகழ்வு என்பது இரு காட்சிகள் என்று வைத்துக் கொண்டாலும் கூட 3000 நாடக காட்சிகள் தான் வரும். அதற்கு கிட்டதட்ட இருமடங்கு அதாவது 5600 முறை என்ற எண்ணிக்கையில் நடத்தியதாக விக்கிப்பீடியா உட்பட செய்திகளில் கொடுத்திருக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. எண்ணிக்கையை விட்டுப் பார்த்தாலும் எஸ்வீசேகர் நாடகங்கள் நகைச்சுவை என்ற பெயரில் கிராமத்தினரின் பெயர்களையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் கிண்டல் செய்தே பெயர்வாங்கியவை தான். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். நகைச்சுவை என்ற பெயரில் பலவீனமானவர்களை விமர்செய்யும் பாணியிலான பணியைத்தான் 5600 முறை செய்திருக்கிறார். 5600 முறைகளிலான எண்ணிக்கை என்பது தாழ்த்தப்பட்டவர்களை விளிம்பு நிலை மனிதர்களை கிண்டல் செய்த எண்ணிக்கை. இதற்கு பாராட்டுவிழாவாம், இதில் கலந்து கொண்டு 'தமிழர்களின் ஒரே தலைவரான' கருணாநிதி வாழ்த்துகிறாராம்.

வலையுலகில் 'மாட்டிக் கொள்ளாமல் உடலுறவு கொள்வது எப்படி ?' மற்றும் '80 வயது கிழவி கூட விடுதலைப் புலிதலைவரின் தாய் என்பதால் திருப்பி அனுப்பவது ஞாயம் தான்' என்பதாகவும், 'ஷோ' இராமசாமியின் தேடலான 'எங்கே பிராமணன் ?' குறித்தெல்லாம் 1000 பதிவுகளுக்கு மேலாக எழுதிவரும் வலைப்பதிவின் டெண்டுல்கர் என்று லக்கிலுக் யுவகிருஷ்ணாவால் சிறப்பிக்கப்பெற்ற நம்ம டோண்டு இராகவன் சாருக்கு திமுக அனுதாபியான லக்கிலுக் '1000 பதிவுகள் கண்ட டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் அவர்களுக்கு பாராட்டு' என பாராட்டு விழா ஏற்பாடு செய்தாலும் கருணாநிதி கலந்து கொள்வார். வலையுலகிற்கும் பெருமை :)

(டோண்டு சார், மன்னிக்கவும், 'நீங்கள் என்ன எழுதினீர்கள்?' என்று நினைத்தால் உடனடியாக பலருக்கும் நினைவுக்கு வருபவை அவைகள் தான் என்பதால் அவற்றைக் குறிப்பிட்டேன்)

27 ஏப்ரல், 2010

அச்சோ அச்சோ அச்சச்சோ !

இந்த செய்தியை படித்துவிட்டு 'வேண்டுதல்கள் என்றால் என்ன ?' என்று கேள்வி எழுகிறது.

மட்டை ஆட்டத்தில் தன் அணி வெற்றி பெற வேண்டும் அம்பாணி குடும்பத்தார் மூலம் 2 கோடி ரூபாய்களை திருப்பதி உண்டியலில் பெருமாளுக்கு (லஞ்சமாக) போடப்பட்டதாம், மும்பை அணி தோற்றுவிட்டதால் அதை மண்ணைக் கவ்வவைத்துவிட்டார் பெருமாள், பெருமாளே டோனிக்கு தான் ரசிகர் என்று சொல்லிவிடலாமா ? அல்லது கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் சென்னை வெற்றி பெற இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியலில் போட்டு இருப்பார்களோ ?

*******

* பக்கத்து வீட்டுக்காரன் பாடையில் போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?
* என்னை திட்டியவன் நாசமாகப் போகவேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?

சிலர் வேண்டுதல் என்பதோடு நிறுத்தாமல் சூனியம் வைக்கவும் கிளம்புவார்கள், சூனியம் பலிக்கும் என்பது பலர் நம்பிக்கை, அப்படி என்றால் ஜெ சார்பில் கருணாநிதி குடும்பத்துக்கு சூனியம் வைக்கலாம். காங்கிரஸ் கோஸ்டிகள் உள்ளுக்குள் கோஷ்டி ஒழிப்பிற்கு சூனியம் வைத்து ஒழித்துவிட்டால் சோனியாவிற்கு தலைவலி மிச்சமாகும். சூனியம் சோதிடத்தின் ஒரு பிரிவு, கிரக நிலைகளை ஒப்பிட்டு ஒருவருக்கு மோசமான நிலை இருக்கும் போது சூனியம் வைத்தால் பலிக்கும் என்பது சூனியக்காரர்களின் சோதிட மற்றும் சூனிய நம்பிக்கை.

கிரிக்கெட் சூதாட்டங்களை தவிர்த்து பார்த்தால் விளையாட்டு என்பது இரு அணியினருக்கிடையேயான போட்டி, இதில் திறமை தான் வெற்றி பெரும், வெற்றி யை உறுதி செய்வோர் தவறிழைக்காமல் கடுமையாக போட்டி கொடுத்தால் வெற்றி பெற முடியும், விளையாட்டின் சித்தாந்தங்கள் அனைத்தும் இது தான். அது தவிர்த்து விளையாட்டில் வெற்றி என்பது எதிரியை ஏமாற்றுவதோ, குதறுக்கு வழியில் பெருவதோ இல்லை. தன் அணி வெற்றி பெற வேண்டும் என்கிற வேண்டுதல் கூட தவறு இல்லை, ஆனால் அதற்காக முன்பணமாக உண்டியலில் லஞ்சம் போடுவதெல்லாம் இறை நம்பிக்கையை கேலிக் குரியாக்கும் ஒரு தவறான முன் உதாரணம் ஆகும்.

போட்டியில் வெற்றி பெருவதைவிட தோல்வியே அடையாமல் இருக்க வேண்டுமென்றால் போட்டி இடாமல் இருப்பது தான் ஒரே (மாற்று) வழி. அதை விடுத்துவிட்டு தோல்விக்கு அஞ்சி கடவுளுக்கு கையூட்டு கொடுப்பவர்கள் வெற்றி என்பதையே வாங்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் பொருள். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுதல்கள் பயனளித்தாலும் கூட போட்டியில் எதிரணியில் இருப்போரை ஏளனம் செய்வது போலாகும்.

திருப்பதி சாமி சென்னை அணிக்கு வேண்டாதவரா ? வெற்றி தோல்விகளில் மூன்றாம் நபர் தலையீடுகள் இல்லை என்றால் அது ஞாயமான முடிவாகும், அதில் ஆண்டவன் என்கிற மூன்றாம் நபர் தலையீடு இருந்தால்
கிடைப்பது எதுவாக இருந்தாலும் அது அநீதி தான்.

உண்மையைச் சொல்லப் போனால் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் நமாஸ் செய்தாலோ, சிலுவை குறி போட்டுக் கொண்டாலோ, இந்துக்களைப் போல் வேண்டிக் கொண்டாலோ அதை மாற்று மத சமூகத்தினர் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் தரையில் விழுந்து அல்லாவுக்கு நன்றி என்று நமாஸ் செய்வதை ரசிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர் யார் ?

விளையாட்டினுள் மதமோ வேண்டுதல்களோ நுழைவதை நேர்மையான விளையாட்டு என்று கொள்ள முடியுமா ? வேண்டிக் கொண்டு காசு போடுகிறவன் போடுகிறான் உனக்கென்ன என்று கேட்டாலும் கூட......'அட இவனுங்க நிஜமாலும் திறமையால் வெற்றி பெறவில்லையா ?' என்று பதில் வருமா வராதா ?

எந்த வித அநீதிகளும், ஞாயம் பற்றிய கேள்விகள் எதுவும் இல்லாத போட்டிகளில் தன்பக்கம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவோர் போட்டியிடாமல் இருப்பதே போட்டிக்கான நன்மதிப்பு. விளையாட்டில் அரசியல், மதரீதியான வேண்டுதலகள் இவையெல்லாம் நுழையும் போது திறமை என்பதே கேள்விக்குரியாகிவிடுகிறது.

20 ஏப்ரல், 2010

இந்தியா சத்திரமல்ல. ...!

சூரியன் படத்தில் சரத்குமாரை கைது செய்வார்கள், அந்த நேரத்தில் சரத்குமாரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக் கொண்ட மனோரமாவின் பிணம் அந்த பக்கமாக ஊர்வலமாக செல்லும் ஒரு காட்சி, அப்போது கவுண்டமணி, 'ஐயா இவன் திருடனோ, கொள்ளைக்காரனோ எதுவும் எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்களைப் பொருத்த அளவில் இந்த தாய்க்கு மகன், அந்த அம்மாவுக்கு கொள்ளி போட விடுங்கய்யா' என்று காவலாளிகளிடம் கொஞ்சுவார், கண்டு கொள்ளாமல் சரத்குமாரை இழுத்துச் சென்றுவிடுவார்கள்.

குற்றவாளியின் உறவினர்களும் தண்டிக்கபடவேண்டுமென்றால் நாட்டில் அனைவருமே சிறையில் தான் இருக்க வேண்டும், நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு குற்ற பின்னனி தான் முதல் தகுதியே. நீதி, நேர்மை அடிப்படையில் அனைத்து அரசியல்வாதிகளையும் ஊழல் வழக்கு ஏதோ ஒன்றில் தொடர்புடையவர்கள், குற்றம் நிருபனம் செய்யப்படாததால் வெளியே இருக்கிறார்கள். கட்டுச் சோற்றுக்கு பெருச்சாளி காவல் என்பது போல் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கத்தில் சட்டம் என்பவை எப்படி வேண்டுமானாலும் வளைக்க கூடிய அவர்களுக்கான பாதுகாப்பு வளையம்.

நாங்கள் குற்றவாளிகளுக்கு எதிரிகள் அல்ல, என்பது போல் நளினியை சிறையில் சென்று சந்தித்ததை விளம்பரப்படுத்திக் கொண்டார் சோனியாவின் புதல்வி பிரியங்கா வதோரா. மற்றபடி நளினி சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும் என்கிற அவர் குடும்பத்தின் எண்ணத்தில் மாற்றமில்லை என்பது போல் காட்சிகள் நடந்துவருகின்றன. போஃபர்ஸ் வழக்கு....அதில் தொடர்புடையவர்கள் பற்றியெல்லாம் அரசியல் தலையீடு அற்ற விசாரணை நடந்து இருந்தால் காங்கிரசு குடும்பத்தில் எல்லோருமே சிறையில் தான் கழிக்க வேண்டி இருக்கும், காரணம் இங்கே குற்றவாளிகளுக்கான தண்டனை என்பதே அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தானவை என்பதாக பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியத்தில் இருந்து புரியவைக்கப்படுகிறது.

நான் முதல்வர் என்பதையே தினகரனை படித்து தான் தெரிந்து கொண்டேன், எதற்கும் நான் முதல்வரா என்று மறு உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, தலைமை கேட்டுக் கொண்டால் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்பது போல் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டத்தை நாளிதழ் பார்த்து தெரிந்து கொண்டாராம் முதல்வர். விமான நிலையத்திற்கு சென்றவர்கள் முகம் தெரியாதவர்கள் அல்ல, வைகோவும், நெடுமாறனும் சென்றிருக்கிறார்கள், அவர்கள் நினைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்ட முடியும், அவர்களின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கும் உளவுத்துறை கூட அவர்கள் விமான நிலையம் சென்றது ஏன் என்பதை முதல்வருக்கு தெரிவித்திருக்கமாட்டார்கள், உளவுத்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது என்று சொல்லவருகிறாரா முதல்வர் ? நாட்டு நடப்பே தெரியாத ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது இதுவே முதல் முறை, அதிலும் எங்கள் கட்சிக்கே பெருமை என்று திமுகவினர் மார்த்தட்டினாலும் வியப்பு இல்லை.

திருமாவளவன் தலித்துகளுக்கு எதோ செய்ய கட்சி தொடங்கினார், தமிழர் நலன் மீது ஆர்வம் கொண்டவர் என்கிற பிம்பம் இருந்தது, இவர் கட்சி நடத்துவதற்கு பதிலாக கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்துவிட்டால், இவர் சொல்வது பேசுவது காமடியாகவே தெரியாது, நானும் அரசியல் நடத்துகிறேன் பாருங்கள் என்கிற ரீதியில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு ஜெ காரணம் என்கிறார். இந்த பொழப்புக்கு பச்சோந்தி வேசம் கட்டி நாடகம் நடத்தினால் கூட அது நடிப்பு நல்லா இருக்கிறது என்று பாராட்டலாம்.

ஆண் பேய், பெண் பேய் என பேய்கள் கட்சி தலைமை ஏற்றால் காட்சிகள் சுடுகாடு ஆகும். என்பது பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்ட நிகழ்வின் மூலம் தெரியவருகிறது.

அதிமுக மகளிர் அணியிடம் 'தரிசனம்' பெற்ற சு.சாமி....'இந்தியா சத்திரமல்ல....கண்டவர்களும் வந்து செல்ல' என்கிறார். இந்தியாவில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சோனியா காந்தி போன்று கட்சி தலை ஏற்கலாம், ராஜிவ் காந்தி படுகொலையில் தொடர்புடையவன் மற்றும் சிஐஏ ஏஜெண்டாக இருந்தவன் என பல்வேறு தரப்பினரால் சந்தேகிப்படுபவன் அரசியல் வாதியாக உலாத்தலாம், காந்தியை கொன்ற கோட்சேவை ஞாயப்படுத்த....'நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்' என்று 'நாடகம்' போடலாம், கோடிக்கணக்கான இதயங்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு தலைவனின் தாயான 80 வயது மூதாட்டி குற்றமற்றவராக இருந்தாலும் வரக்கூடாது. வழக்கம் போல் 'வந்தேறி கூட்டத்தை சேர்ந்த ஒருவனுக்கு அதைச் சொல்ல தகுதிகள் உண்டா ?' என்று யாரும் கேட்டுவிட மாட்டார்கள் என்ற சு.சாமியின் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்.

24 மார்ச், 2010

திருமணத்துக்கு முன் பாலுறவு - குஷ்பு கருத்துக்கு தீர்ப்பு வந்தாச்சு !

திருமணத்திற்கு முன்பான வயதுவந்தவரிடையேயான பாலியல் உறவு குறித்து குஷ்பு சொன்னக் கருத்துகள் சர்சையை ஏற்படுத்தியதும், அவருக்கெதிரான பொது நல வழக்கு தொடர்ந்ததும், அதை அவர் தள்ளுபடி செய்யக் கோரிய மனு கீழ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, பின்னர் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில்,

"தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்."

- என்பதாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுகிறது.

*****

பிரச்சனை வயது வந்தவர்கள் திருமணம் ஆகுமுன் பாலியல் உறவு கொள்ளலாமா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல, அதை ஊக்குவிக்கலாமா என்பது பற்றியே. குஷ்பு சொன்னது பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதன் மூலம் பாலியல் நோய்களையும், வேண்டாத கற்பத்தையும் தடுக்கலாம் என்பது தான்.

பாலியல் வேட்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆனால் திருமணம் இல்லாமல் தீர்த்துக் கொள்ளப்படுவதில் பாதிக்கப்படுவது எப்போதும் பெண் தான். ஆசைக்காட்டி மோசம் என்பார்கள் பெண்களுக்கு அப்படியான பாதிப்புகள் உண்டு. தான் சுவைத்தது போதாது என்பதுடன் மட்டுமில்லாமல் தொடர் இச்சைக்கு ஆளாகாத பெண்களை ஊருக்கும் காட்டிக் கொடுப்பது தவறான ஆண்களின் தவறான நடைமுறையாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது குஷ்பு சொன்ன 'பாதுகாப்பு' சாதனம் குறித்த எச்சரிக்கை தேவையே என்றாலும்.
என்னதான் பாதுகாப்புடன் உறவு கொண்டாலும் ஏமாற்றும் மனநிலையில் இருப்பவன் அந்தப் பெண்ணை விளம்பரப்படுத்திவிடுவான். தேவையற்ற கற்பம் என்கிற பெரிய பாதிப்பில் இருந்து 'லோலாயி' என்கிற சிறிய பாதிப்புடன் பெண் மீண்டுவிடுவாள் என்பது குஷ்புவின் நம்பிக்கை என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் எதற்கும் துணிந்தவளாக ஒரு பெண் பெற்றோர் சம்மதம் எதுவுமின்றி ஒரு ஆணை திருமணத்திற்கு முன்பே நாடினாள் அவனை எதிர்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இருந்தே ஆகவேண்டும் என்பதாகத்தான் சமூகம் கருதுகிறது என்று நினைக்கிறேன். அப்படித் துணிந்தவளுக்கு கற்பத்தைக் கலைத்துக் கொள்ள காலம் எடுக்காது என்பதும் உண்மையே. உண்மையான காதல் என்று டயாலாக் பேசி வேண்டாத வாரிசை வயிற்றில் சுமப்பவர்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். 'ஏண்டி அவனிடம் போனது தான் போனே.......பாதுகாப்பாக இருந்து கொள்ளக் கூடாதா ?' என்று கேட்டு பெண்ணை அரவணைத்துக் கொள்ளும் பெற்றோர்கள் நாட்டில் இருந்தால் குஷ்பு சொல்வது சரியாகக் கூட இருக்கும், அல்லது குஷ்பு சொல்வது தேவையற்றதாகக் கூட இருக்கும்.

மேல் தட்டு மக்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் திருமணத்திற்கு முன்பான உடலுறவுகள் பொதுவானது என்றாலும் அனைவரிடத்திலும் அந்த பழக்கம் இல்லை, அப்படியாக இருப்பவர்களுக்கு குஷ்புவின் யோசனை பயனும் அளிக்காது, அதையெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தது மற்றும் அதிலிருந்து மீளவும் தெரிந்திருப்பார்கள். நான் மேல் தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் பண்பாடு அற்றவர்கள் என்று சொல்லவரவில்லை, ஆனாலும் நடுத்தர வசதி பெரும்பான்மையினரைப் போன்று மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே சொல்லவருவது.

திருமணத்திற்கு முன்பு பாலியல் வேண்டுமா வேண்டாமா என்பதில் முடிந்த அளவுக்கு திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர்களிடத்தில் நம்பிக்கை வைத்து நல்வாழ்க்கை அமையும் என நினைக்கும் பெண்கள் இதில் சோதனை அளவுக்குக் கூட ஈடுபடக்கூடாது, பண்பாட்டிற்கும் நல்லது அல்ல என்று சொல்லி இருந்தால் பாராட்டலாம். ஆனால் குஷ்புவின் கருத்து அதை ஊக்கப்படுத்துவது போல் அமைந்தது என்பதாக எல்லோரும் புரிந்து கொண்டார்களா ? அல்லது குஷ்புவே அப்படித்தான் சொன்னாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

திருமணம் என்கிற அமைப்பு சமூகத்தில் இருக்கிறது, அதற்கு மையமாக இருப்பது பாலியல் உறவு, திருமணத்திற்குள் செல்லமாட்டேன் எனக்கு நம்பிக்கை இல்லை என்பவர்கள் எப்படியான உறவு வைத்திருந்தாலும் அது தவறு என்று யாருமே கூறிவிட முடியாது, ஆனால் பிரச்சனையின் மையம் 'திருமணம்' என்ற சொல்லையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு வருவது தான்.

திருமணத்திற்கு முன்பான மற்றும் பின்பான பிறநபர்களுடன் ஆன பாலியல் உறவு நம்பிக்கைத் தூரோகமே, உடல் மற்றும் மன ரீதியாக ஆண்கள், திருமணத்திற்கு முன்பான உறவுகள் தெரிந்தாலும் சமூகத்தால் மன்னிக்கப்படுகிறார்கள். பெண்ணையும் அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் சமூகத்தில் ஏற்படாத போது, இதில் பாதுகாப்பு சாதனம் என்பது அதன் பக்கவிளைவுகளை மட்டும் தான் காக்கும். நம்பிக்கை துரோகம் பரவாயில்லை என்போர்களுக்கு பாதுகாப்பு சாதனம் இருப்பதும் இல்லாததும் வெறும் உடல் நலம் தொடர்புடைய பிரச்சனை மட்டுமே.

ஐரோப்பியர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் ஆனால் ஐரோப்பிய ஆண்கள் எத்தனை முறை விவாகரத்து ஆகி இருந்தாலும், அவள் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவு கொண்டவள் என்று தெரிந்திருந்தாலும், நீலப்பட நாயகி என்றாலும் அந்த பெண்ணைப் பிடித்து இருந்தால் மணந்து கொள்வார்கள். நாம் ? நாம் ஏன் ஐரோப்பிய பண்பாட்டை பின்பற்றி நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ?

குஷ்பு சொல்வதைக் கேட்டு எந்த ஒரு பெற்றோரும் தங்கள் வயது வந்த மகள் அல்லது மகனுக்கு 'காண்டம் மணி'யும் சேர்த்து வைத்துக் கொள் என்று கொடுத்து அனுப்பும் மனநிலைக்கு மாறிவிடுவார்களா என்ன ?

ஆனாலும் அப்படி பெற்றோர்கள் இருப்பதில் தவறே இல்லை என்பது சிலரின் வாதமாக இருக்கிறது. குஷ்பு சொன்னது தனிமனித கருத்து என்றாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாயகி என்கிற அளவில் அவரது கருத்து பரவலாக சென்று சேருகிறது அதனால் அதைப் பலர் எதிர்த்தனர். குப்பனையும் சுப்பனையும் விளம்பரத்தில் போட்டால் ஒரு பொருள் விற்குமா ? பொருளின் மதிப்பு அதை விளம்பரப்படுத்துவர்களால் தானே பலரை அடைகிறது. நான் சொன்னது தனிப்பட்ட கருத்து என்பதை முன்பே குஷ்பு சொல்லி இருந்தால் இவ்வளவு கலேபரம் நடந்திருக்காது. அனுபவபட்டவர் போல சொல்கிறார் என்று விட்டு இருப்பார்கள்.

இணைப்பு : சுட்டி

16 மார்ச், 2010

அரசு ஊழியன் என்னும் கிங்கரகர்கள் !

அப்பாவிகளிடம் 'ரூல்ஸ்' பேசுவதில் அரசு ஊழியகர்கள் காட்டும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை, ஆனால் அவன் தனக்கு மேல் இருக்கும் உயர் அலுவர்களிடம் கூழைக் கும்பிடு போடும் போது கடமையும், தன் மானத்தை இழக்கிறோம் என்பதை துளியும் நினைப்பதில்லை, காரணம் தன்னலம், எப்படியாவது பதவி உயர்வு பெறுவதற்கு உயர் அலுவலர்களின் கழிவறையைக் கூட நாக்கால் தூய்மை செய்ய முயற்சிப்பார்கள்.

ஒரு கோடி அரசு திட்டம் அறிவித்துவிட்டு அதற்கு இரண்டு கோடியில் பாராட்டு விழா நடத்துவதையெல்லாம் எந்த அரசு ஊழியனும் மக்களின் வரிப்பணத்தில் நடை பெறும் முறைகேடு என்று வாய்திறந்து பேசமாட்டான், அங்கெல்லாம் கடமை என்று எதையும் நினைக்காமல் சலாம் போடுவது முதல் விழா முடியும் வரை நன்றி உள்ள நான்கு கால் விலங்கைவிட கூடுதலாகவே நன்றி வெளிப்படையாக தெரியும் படி நடந்து கொள்வான். இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால்,

8 ஆம் வகுப்பு மாணவ சிறுமி இலவச பேருந்து பயண அட்டையை மறதியாக வைத்துவிட்டு வந்துவிட்டாள் என்பதற்காக பேருந்து சோதனையாளர்களால் கடுமையாக பேசப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு அவளுக்கு 100 ரூபாய் வரை தண்டத் தொகை ரசீது கொடுக்கப்பட்டதாம். பொதுமக்களின் எதிர்ப்பிற்கு பிறகு 50 ரூபாய் குறைக்கப்பட்டு, அதையும் பொதுமக்கள் செலுத்திய பிறகே அம்மாணவியை பேருந்துனுள் அனுமதித்திருக்கிறார்கள். மாணவி செய்தது தவறு தான் என்றாலும் சீருடையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் 'பஸ் பாஸ்' எனப்படும் அடையாள அட்டைச் சோதனை கூட தேவையற்றது தான். பள்ளி நாட்கள் தவிர்த்து மற்ற நாட்கள் என்றால் கூட சோதனையாளர்களின் செயலை சரி என்று சொல்லலாம். ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச கல்வி, இலவச பேருந்து சேவைகளை தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகள் கோரிக்கையுடன் தான் இலவச திட்டங்களே நடைபெறுகின்றன. பள்ளிக்க்குச் செல்லும் ஒரு மாணவியிடம் 'ரூல்ஸ்' பேசுபவர்கள் ஏழை எளியவர்களின் நலன்களின் ஏதும் அக்கரை அற்றவர்கள் என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. ஒரு சோதனையாளர் மாணவியை அனுமதித்திருந்தால் அதை வேறொரு சோதனையாளர் அதே தடத்தில் கண்டுபிடிக்க ஏதுவும் வாய்ப்பு கிடையாது, இருந்தும் அவர்களை தடுப்பது யார் ?

ரூல்ஸ் பேசும் சோதனையாளர்கள் என்றாவது நடத்துனரின் பணப் பையை இதுவரை சோதனை போட்டு பொதுமக்களிடம் சில்லரை இல்லை என்று கூறி உபரியாக நிரப்பிக் கொண்டதைப் பற்றி அறிவித்திருக்கிறார்களா ? அது எங்கள் வேலை இல்லை என்று மறுபடியும் தங்களுக்கு சாதகமான ரூல்ஸ் பேசுவார்கள்.

வசதி குறைந்த மாணவர்கள் பள்ளி தொலைவில் இருந்தால் பேருந்தில் பயணிக்க அரசு இலவச பாஸ்களை வழங்குகிறது, ஆனால் சோதனைகள் என்ற பெயரில் சீருடை போட்டிருக்கும் மாணவர்களையும் இறக்கிவிடுவது அல்லது அபராதம் போடுவது எந்த விதத்திலும் ஞாயமே இல்லை. ஒரு ஊரில் ஒரு மாணவி தவறுதலாக மறந்து வந்திருந்தால் அரசு பேருந்து நட்டத்தில் இயங்கிவிடுமா ? அப்படி என்றால் இவர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் அவ்வப்போது வேலை நிறுத்தம் என்ற பெயரில் பேருந்துகளை இயக்காமல் இருப்பதால் நட்டம் அடைவது யார் ? அதை ஈடுகட்ட இவர்களின் ஊதியத்தைக் கொடுக்கிறார்களா ? இவர்களைப் பற்றி நினைத்தாலே டென்சன் தான் ஆகுது.

எனக்கு 15 வயது இருக்கும் போது 10 வயது தம்பியை அழைத்துக் கொண்டு வேளாங்கன்னி வரை உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பேருந்து பயணச் சீட்டு முறைகள் பற்றி அவ்வளவாக விபரம் தெரியாது, தம்பியின் வயதை வைத்து எனக்கு முழு டிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து ஒரு டிக்கெட்டும், தம்பிக்கு அரைடிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து (2ரூபாய் டிக்கெட் ஒண்ணு , 1 ரூபாய் டிக்கெட் ஒண்ணு வாங்கியது போக என்னிடம் இருந்தது மீதம் 1 ரூபாய் ) இன்னொரு டிக்கெட்டும் வாங்கி பேருந்துனுள் பயணம் செய்தேன், பேருந்து பாதி தொலைவு சென்றவுடன் நடத்துனர் ஒவ்வொரு பயணியிடமும் பயணச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார், இரண்டையும் கொடுத்தேன், 'என்னது 1 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு இவ்வளவு தூரம் வருகிறே ?' என்று கூறி, வேறு காசு இருக்கா என்று கேட்டார், இல்லை என்றேன், இறங்கிப் போ.....என்றார், எனக்கு ஒண்ணும் புரியல, தம்பி சின்னப் பையன் 10 வயது தான் ஆகுது அதனால் அவனுக்கு அரை டிக்கெட் தான் எடுத்தேன், இப்ப இறங்க சொல்றிங்களே' என்றேன். 'இது டவுன் பஸ்.....இதுல அரை டிக்கெட்டெல்லாம் கிடையாது, காசு இல்லாவிட்டால் இறங்கிப் போ' என்றார். என்னிடம் மீதம் இருந்த காசுக்கு அங்கிருந்து இன்னொரு முழு டிக்கெட் வாங்க முடியாது.....கையில் இருந்ததைக் காட்டினேன். இரண்டு பேரும் இறங்குங்க என்று கடுமையாகவே சொன்னார். வேறு வழியே இல்லாமல் தம்பியை மட்டும் பத்திரமாக சரியான இடத்தில் இறங்கச் சொல்லிவிட்டு, நான் பேருந்தைவிட்டு பாப்பா கோவில் என்னும் இடத்தில் இருந்து இறங்கி, கடுமையான வெயிலில் 5 கிலோ மீட்டர் நடந்தே வீட்டுக்கு வந்து மறுபடியும் பணம் எடுத்துக் கொண்டு வேறொரு பேருந்தில் சென்றேன். இதில் என்னுடைய தவறு டவுன் பஸ்ஸுக்கு அரை டிக்கெட் இல்லை என்று தெரியாதது மட்டுமே.

எவ்வளவோ உறவினர்களை, நண்பர்களை வித் அவுட்டில் அழைத்துச் செல்லும் நடத்துனர்கள், ஒரு 15 வயது பையனை நடுக்காட்டில் இறக்கிவிட்டு செல்வது என்பதை இப்போது நினைத்தாலும் வெறுப்பாகத்தான் இருக்கிறது.

அரசு ஊழியகர்கள் பொதுமக்களை மதிக்காவிட்டால் அல்லது கண்டிபான விதிமுறை பேசும் போது அவர்களை பொதுமக்களும் உதாசீனப்படுத்தனும், அவனும் சம்பளத்துக்கு வேலைப் பார்க்கும் ஒரு ஊழியன் தான் அதைவிட அவனுக்கு தனிப்பட்ட மரியாதைகள், 'சார்....சார்' என்ற விழிப்பு என்னைப் பொருத்த அளவில் தேவை அற்றது.

விதிமுறைகள் என்பது ஒழுங்குக்கான பரிந்துரைகள் மட்டுமே, மனிதாபிமானத்திற்கு முன்பு விதிமுறை பேசினால் மனிதனுக்கு சொல்லித்தரும் படி இயங்கும் இயந்திரங்களும் வேறுபாடுகள் இல்லை. பயண அனுமதிச் சீட்டை வைத்துவிட்டு வந்து சோதனையாளர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி அப்போது எவ்வளவு கதறி இருப்பாள், அவமானம் அடைந்திருப்பாள் என்று நினைத்தால் ஏற்கனவே அவமானம் அடைந்த அனுபவம் இருப்பதால் எனக்கு மனது பதைக்கிறது.

பாஸ்போர்ட் அலுவலக அலட்சியம்!

10 மார்ச், 2010

தினமலர் பரிந்துரை செய்த ஆன்மிக சிந்தனையாளர் நித்தி !

நித்தியை ஆன்மிகவாதி என்ற லேபிள் கொடுத்து மக்கள் முன் அறிமுகப் படுத்தியவர்கள் பலர், நித்தி அம்பலப்பட்ட பிறகு தடாலடியாக பலர் நித்திக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது போல் நித்தி பற்றிய எதிர்கருத்துகளைத் திரட்டி எழுதிவருகிறார்கள், நித்தியின் விடியோவைப் போட்டு காசு பார்த்தாலும் நக்கீரன் சென்ற ஆண்டே நித்தி ஒரு கல்லூரியில் மாணவிகளுக்கு கட்டுபிடி சிகிச்சை செய்து கசமுசா செய்தார் என்று வெளி இட்டிருந்தது. நக்கீரன் குழுமம் நடத்தும் ஆன்மிக இதழ் மற்றும் தினகரனில் நித்தி கட்டுரைகள் வந்ததா என்று சரியாக தெரியவில்லை. குமுதம் நித்திக்காக கதவை திறந்து வைத்திருந்தது. தினமலர் நித்தியை சிறந்த ஆன்மிகவாதிகளுல் ஒருவர் பட்டியலில் இணைத்து அவரின் அருளுரைகளை வெளி இட்டுவந்தது. இவை எல்லாம் நித்தி வீடியோவில் சிக்கும் முன்பு தான். தினமலர் தற்போது நித்தியை ஆன்மிக அருளாளர்கள் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டிருந்தது.

தற்போது இருக்கும் பட்டியலில் நித்திபெயர் இல்லை. தினமலர் முன்பே நித்தியை நம்பவில்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கும் கூகுள் கேச் வழியாகத் தலைப்பைத் தேடலாம் என்று பார்த்தால் நித்தி அம்பலப்படும் முன் தினமலர் நித்தியையும் ஆன்மிகவாதிகளின் பட்டியலில் இணைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

நித்தி சிக்கிய பிறகு


நித்தி சிக்குவதற்கு முன்
****

லோக குரு, ஜெகத் குரு, அவதாரம் இவை எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு செய்தி இதழ்கள் சூட்டும் வெறும் புகழ்ச்சி மகுடம், வேடம் களையும் போது செய்தி இதழ்களே தொடர்புடைய அந்த நபருக்கு செருப்பு மாலை போடுகிறார்கள். இவர்கள் ஆன்மிகவாதிகள் என்று அறிமுகப்படுத்தும் நபர்களே இப்படி என்றால் 'வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிட்டுக்குருவி லேகியம், சித்தவைத்திய விளம்பரம், அவர்களாகவே இட்டுக்கட்டி எழுதிக் கொள்ளும் திரைச் செய்திகள் இவை எல்லாம் அப்பாவிகளை ஏமாற்ற செய்தி இதழ்கள் தரும் தரமற்ற சேவை விளம்பரங்களின்றி வேறென்ன ?

2 பிப்ரவரி, 2010

சாரு, ஜெமோ !

பெரியாரும் நித்யானந்தரும் : ஞாயிற்றுக் கிழமை நீயா நானா நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினராக சாரு, அவரிடம் கோபி நாத் கேட்ட கேள்வி, 'பெரும் மாற்றம் ஏற்படுத்திய பேச்சுகள் என்றால் இந்திய வரலாற்றில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?' அதற்கு சாரு, 'ஆதி சங்கரர் இந்தியா வெங்கும் பயணம் செய்து இந்து சமயம் வளர்ந்ததற்கு அவர் பேச்சு பயன்பட்டது, பெரியார் நிறைய பேசினார், தமிழகத்தில் மாற்றம் வரவழைத்தார், தற்போது நித்யானந்தர் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பேசுகிறார்'

என்ன கொடுமை சார், மாற்றம் ஏற்படுத்தும் பேச்சுக்கும் நித்தியா நந்தருக்கும் என்ன தொடர்பு, நித்யானந்தர் 20 மணி நேரம் நாள் ஒன்றுக்கு பேசுவதால் தமிழக மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ? சாருவுக்கு நித்யானந்தருக்கு எல்லாவகையிலும் வேண்டியப்பட்டவராகவோ ஒருவருக்கொருவர் ஆதாயம் அடைவதாகவே வைத்துக் கொள்வோம், இருந்தாலும் பெரியார் பேச்சுடன் ஒப்பிடும் அளவுக்கு நித்யானந்தரின் பேச்சில் என்ன இருக்கிறது ? ஜெமோ குமரி மைந்தனையும் பெரியாரையும் ஒப்பிட்டார் என்று குதித்தவர்கள் சாருவுக்கு கண்டனம் தெரிவிப்பார்களா ? தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் ஜெமோ குறித்த சாடல் வெறும் பக்க சார்ப்பு என்றே கொள்ளப்படும், கொள்ள வேண்டும்.

*****

ஜெமோவும் திராவிட இயக்க எதிர்ப்பும் : திராவிட இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்ய வில்லை என்பதாக நெடிய கட்டுரை ஒன்றை ஜெமோ எதோ எதோ மேற்கோளுடன் எழுதி இருக்கிறார். அதில் வைக்கும் முதன்மை குற்றச் சாட்டு, உவேச உட்பட பல தமிழறிஞர்களின் உழைப்பை எல்லாம் மறைத்து தமிழ் வளர்ச்சியின் ஒட்டுமொத்தத்தையும் திராவிட இயக்கம் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறது என்பது.

ஜெமோவின் கட்டுரையில் திராவிட இயக்கம் என்பதில் எம்ஜிஆர் ஜெயலிதா பெயரைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை. ஒருவேளை அவர்களை திராவிட இயக்கத்தை சேர்ந்தராக ஜெமோ பார்க்கவில்லையா என்று தெரியவில்லை. தனித் தமிழ் என்று பல இடங்களில் குறிப்பிடும் கட்டுரையில் தேவ நேயப் பாவாணர் என்கிற ஒற்றைச் சொல்லையோ, அவருக்கு பிறகு பெருஞ்சித்திரனார் போன்றவர்களைப் பற்றி ஒற்றை வரியையோ காண முடியவில்லை. இன்றைய தேதிக்கு பாவேந்தர் பாரதி தாசன், பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற மூன்னோடிகள் இல்லை என்றால் கலைச் சொற்கள் திரும்ப திரும்ப எழுதப்பட்டு தமிழின் தரம் மாறி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய் இருக்கும். அண்மையிலும் சமகாலத்திலு வாழ்ந்த இவர்களையெல்லாம் விட்டு தனித்தமிழ் ஆர்வலராக ஜெமோ குறிப்பிடுவது பரிதிமார் கலைஞர் மற்றும் மறைமலையடிகளாரை மட்டுமே.

இவர்கள் இருவரது பங்களிப்புகள் முதன்மையானது என்றாலும் தனித் தமிழ் என்றாலே நினைவுக்கு வரவேண்டியவர்கள் பாவாணர் வழித்தோன்றல்களே, அவர்களுக்கு போதிய ஊக்கம் கொடுத்தது அண்ணாவிற்கு பிறகான திராவிட இயக்கம், அதனால் தான் பாவாணர் பெயரில் மிகப் பெரிய நூலகம் ஒன்று சென்னையில் இருப்பதை நாம் அறிகிறோம்.

தமிழ்நாடு என்று தமிழகத்திற்கு பெயர் கிடைக்கச் செய்தவர்களே திராவிட இயக்கத்தினர் தான். அதுமட்டுமில்லாமல், திராவிட நாடு போன்ற கட்சி சார்பு இதழ்களில் தனித்தமிழில் எழுதியும் மேடையில் பேசியும் வந்ததால் தான் முன்பு நடைமுறையில் இருந்த மணிப்பவளத் தமிழ் என்பது திருத்தி அமைக்கப்பட்டு ஓரளவு தனித்தமிழ் ஆனது.

தமிழ் வளர்ச்சிக்கு திராவிட இயக்கத்தினர் உரிமை கோருகிறார்கள் என்கிற தலைப்பில் திராவிட இயக்கத்தினர் எதுவுமே செய்யவில்லை என்பதாகவே ஜெமோ எழுதி இருக்கிறார். இவரே தான் முன்பு பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்றும் பெரியார் அதில் கலந்து கொண்டார் மற்றபடி அவர் வழிநடத்தலில் வைக்கம் போராட்டம் நடக்க வில்லை என்பதாக எழுதினார். பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பெயரை திருவிக முன்மொழிந்ததற்குக் காரணமே பெரியார் போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்கு என்றே ஜெமோவுக்கு மறுப்பு எழுதினார்கள்.

உ வே ச ஏடுகளை திரட்டினார் பிழை திருத்தினார் என்று சொல்கிறார். உண்மை, பிழை திருத்துவதற்கான காரணம் பற்றி விரிவாக அல்லது ஒரு சில வரிகள் கூடச் சொல்லப்படவில்லை. பிழை திருத்தியதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. அது மட்டுமில்லாமல் சைவ வைண இலக்கியங்கள் ஓரளவு முற்றாக கிடைத்தது போல் ஐம்பெரும் காப்பியங்கள் ஏன் கிடைக்கல, அல்லது கிடைத்ததை மறைத்துவிட்டார்களான்னு தெரியாது.

அண்ணாவின் பேச்சும் கருணாநிதியின் பேச்சும் மக்களை கவர்ந்திருந்தது என்றால் அதில் அவர்கள் புகுத்திய நடையும் சொல்லும் தகவலுமே ஆகும். அண்ணாவின் தமிழைக் கேட்ட பிறகு தமிழில் மேடைப் பேச்சு என்பது சிறப்பு பெற்றதாகவும் அதன் பிறகு பட்டிமன்றங்கள் புகழ்பெறவும் தொடங்கின. ஆனால் ஜெமோ சொல்லும் குற்றச் சாட்டு "ஆனால் சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களின் மொழிநடையில் தனித்தமிழ் மிகக்குறைவே என்பதை பலர் கவனிப்பதில்லை. "
அதுமட்டுமின்றி அவர்களின் பேச்சு "ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் அடுக்குமொழிப் பாணியில் இருந்து கடன்பெற்றது " என்பதை நாம் காணலாம்.

அரசியல், நடப்புகளில் இன்றைய தலைமுறைகள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை, அவர்களுக்கு ஜெமோ போன்றவர்கள் எழுதுவது தான் அரசியல் மற்றும் வரலாறு,
சமகால வரலாறுகள் ஜெமோ போன்றவர்களாலும் புனையப்படுகிறது என்பதைத்தான் கட்டுரையை வாசித்த பிறகு உணர்ந்தேன்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்கிறார், தலித் விழிப்புணர்வு இதை திராவிட இயக்கத்தினர் கம்யூனிசத்துடன் இணைந்து நன்றாகவே செய்தார்கள், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தலித்துகளின் நிலை தமிழகத்தில் நன்றாகவே இருக்கிறது, அவர்களால் தனிக் கட்சி தொடங்கி வளரும் நிலை தமிழகத்தில் இருப்பது போல் பிற தென்னிந்திய மாநிலங்களில் கூட கிடையாது.
நான் குறிப்பிடுவது பொதுவான திராவிட இயக்கம், மற்றபடி நான் திமுக-வையோ, திகவையோ குறிப்பிடவில்லை. எனக்கு தெரிந்த அளவிற்கு சொல்லிவிட்டேன். ஜெமோவுக்கு விளக்கமாக மறுப்பு தெரிவிக்க வேண்டியவர்கள் திராவிட இயக்கத்தின் ஒரே நம்பிக்கையான இயக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுகவினர் தான்.

சோ இராமசாமி துக்ளக் வழியாகவும், தினமலரும் செய்வது தான் தமிழ் சேவை என்று சொல்லாமல் விட்டாரே ஜெமோ என்று மகிழ்வோம்.

29 நவம்பர், 2009

அவன் அவர் அது !

செய்தி ஊடகங்கள் நான்காம் தூண், சமூதாயத்தை, சமுதாய எண்ணங்களைக் கட்டமைப்பதில் அவையே முதல் தூண். அவர்கள் வெளியிடும் தகவல் மக்கள் வெறும் தகவலாக எடுத்துக் கொள்வது இல்லை என்பது ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.

ஒரு முறை அமெரிக்காவில் வெள்ளத்தினால் உணவு திண்டாட்டம் ஏற்பட்ட போது அமெரிக்க கடைகள் பல சூறையாடப்பட்டன, பொருள்களை அள்ளிச் சென்றவர்கள் பற்றிய பல்வேறு ஊடக செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தனவாம், அதில் வெள்ளையர்கள் அள்ளிச் சென்றதைப் பற்றிய செய்திகளில் "உணவுக்காக பொருள்களை எடுத்துச் சென்றனர்" என்றும் கருப்பர்கள் அள்ளிச் சென்றது பற்றிய படச் செய்திகளில் "உணவுக்காக பொருள்களைச் திருடிச் சென்றனர்" என்றும் வெளியாகி இருந்தனவாம்.

அவன்:

வடசென்னை பகுதியில், பகல் நேரத்தில் பூட்டப்பட் டிருந்த வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 110 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெரம்பூர் கோபால் தெருவைச் சேர்ந்தவன் சுந்தர் (25). இவன் 2006ம் ஆண்டு செம்பியம் மற்றும் பெரவள்ளூர் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

இவன் மீது 12க்கும் மேற் பட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த சுந்தர், மளிகைக் கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்தான். கடைக்கு வரவேண்டிய பணத்தை, சென்னையில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று காசோலைகளாக பெற்றான். அதை வங்கியில் செலுத்தி, பணமாக மாற்றி கடைக்கு கொண்டு வந்து சேர்த்து வந்தான். பூக்கடை, யானைக்கவுனி, ஏழு கிணறு, கொத்தவால் சாவடி, எஸ்பிளனேடு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிக் கிடக்கும் வீடுகளில் பகல் நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.

அவர்:

காஞ்சிபுரம்:அர்ச்சகர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கோவில் நிர்வாகிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் மச்சேஸ்வரர் கோவில் உள்ளது. தனியார் கோவில். இக்கோவிலில் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன்(35) அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார்.


இவர் கோவிலுக்கு வந்த பெண்களிடம் கோவில் உள்ளே உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவநாதன் தலைமறைவானார். முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 16ம் தேதி காஞ்சிபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரணடைந்தார். அவரை, ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். நீதிபதி இரண்டு நாட்கள் அனுமதி அளித்தார்.


அது :

இந்த இரு (அவன், அவர்) செய்திக்குரிய அது.... தமிழில் நெ.1 (என்று சொல்லிக் கொள்ளும்) நாளிதழான தினமலர் (தமிழர்கள் தினமலரை காசு கொடுத்து வாங்கிப் படிப்பது சொந்த செலவில் சூனியம்)

*****

பார்பனீயம் என்றால் என்ன ? புரியல தயவு செய்து விளக்கவும்.

10 ஜூன், 2009

ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !

புதுடில்லி: ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது சொல்லுக்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற சொல்.

ஆங்கில சொற்களை ஏற்றுக் கொண்டு, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் நூல்கள், பாடல்கள், கவிதைகள், இணையம், வலைப்பதிவுகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது சொற்களை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து ஏற்றுக்கொள்வர்.

இந்த வகையில், ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொட ஆயத்தம் விட்டது. இன்று பத்து லட்சமாவது சொல்லை தேர்வு செய்ய நிபுணர் குழு கூடுகிறது. பத்து லட்சமாவது சொல்லாக இடம்பெறும் போட்டியில் மொத்தம் 73 சொற்கள் சேர்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்த சொற்கள் அனுப்பப் பட்டுள்ளன. இதில், இந்தியாவில் இருந்தும் சில சொற்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த சொல்லும் தேர்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆஸ்கர் விருதுகளை குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலில் அந்த சொல்லையும், பத்து லட்சமாவது சொல் ஆக்கும் போட்டியில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில், டெக்சாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.50க்கு (உள்ளூர் நேரம் காலை 10.20)பத்து லட்சமாவது ஆங்கில சொல் அறிவிக்கப்படுகிறது.

ஆஸ்கர் விருது பெற்றதும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் "ஜெய் ஹோ' என்ற பாடல் வரவேற்பு பெற்றது.. "ஜெய் ஹோ' என்றால் என்ன என்று வெப்சைட்களில் பல லட்சம் பேர் தேடினர். பல செய்தி இதழ்கள், நூல்கள், படங்கள் என்று கோடிக் கணக்கில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. இப்படி பல கோடி பேரிடை யே வரவேற்பு பெற்ற ஒரு சொல்லை, வழக்கமாக சிறப்பிப்பதுண்டு; ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில சொல்லாக அறிவிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துக்கு தொடர்பே இல்லாத சொல்லாக இருந்தாலும், வேற்று மொழி சொற்கள், ஆங்கிலத்தில் இடம்பெறுவதுண்டு. பிரெஞ்சு உட்பட பல்வேறு நாடுகளின் மொழி சொற்களும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், "ஜெய் ஹோ' பத்து லட்சமாவது சொல்லாகும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

தகவல் : தினமலர்
(தினமலர் திணித்திருந்த வேற்று மொழிச் சொற்களை மொழி மாற்றி போட்டு இருக்கிறேன்)



அதில்,
அறிவு சீவி ஒருவரின் கேள்வி :
Posted on ஜூன் 10,2009,09:49 IST
It is good to see the English language is increasing its word strength, Similarly Tamil Language should accept such new words from other well spoken languages all over the world, Will our tamil language '' arvalargal'' consider and accept If the word falls within Tamil ''Ilakkanam''?
by R Ganesh,India

எனது பதில்,

மொழி அறிவு அற்றோர், அல்லது அரைகுறைகள், அல்லது அறிவுரை என்ற பெயரில், அல்லது உண்மையிலேயே ஆர்வம் காரணமாக, நல்லது என்று நினைத்தோ இவ்வாறு கேள்வி எழுப்புவதுண்டு.

தொழில் அல்லது விற்பனைத் தொடர்பில் பயன்படும் இணைப்பு மொழிகளில் பிறமொழிகள் சேர்க்கப்படுவதும், நுழைவதும் அதைப் பயன்படுத்துவதும் உலகவழக்கு. ஆங்கிலம் இயற்கை மொழிகிடையாது, உருவாக்கப்பட்ட மொழி, இன்னும் முழுமையடையாத மொழி எனவே அது பிறமொழிச் சொற்களை கடன்வாங்குவது, ஏற்றுக் கொள்வது இயல்பானது. ஆனால் "தாய் மொழிகளின்" தேவை இனக்குழுக்குள் உரையாடவும் அடிப்படை கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது, அதற்குமேல் பயன்படுத்தத் தேவையோ அதற்காக சொற்களை கடன்வாங்க வேண்டும் என்கிற நெருக்குதலோ "தாய் மொழி"களுக்கு ஏற்படுவதே கிடையாது. எனவே ஆங்கிலத்தை ஒப்பிட்டு எந்த ஒரு மொழியும் சொற்களை ஏற்றுக் கொள்ளுமானால் அது மற்றொரு ஆங்கிலமாக மாறிவிடும், அதனுடைய இயற்கைத் தன்மையில் இருக்காது. ஒரு மொழியில் புழங்கும் சொற்களில் 50 விழுக்காட்டு சொற்கள் பிறமொழி என்றால் அந்த மொழி புதுப் பெயரை எடுத்துக் கொள்ளும், திராவிட மொழிக்குடும்பத்தின் தோற்றமும் தன்மையும் அது தான்.

மொழிகளை அந்தந்த இனக்குழுக்கள் சரிவர பராமரிக்காவிடில் மொழிகள் திரிந்து கிளைக்கும் அல்லது அழிந்து போகும் வாய்ப்புள்ளது. வட இந்திய மொழிகளாக வடமொழி பலமொழிகளாக திரிந்தும் மூல மொழியான வடமொழி எந்த ஒரு சிறுநகரத்திலும் பேசப்படும் மொழியாகவோ, புதிய இலக்கியங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மொழியாகவோ தற்போதைக்கு இல்லை. அதில் உள்ள பழைய நூல்களுக்காகவும், இறைவழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருப்பதால் அதனை தேவைக்கு என்ற அளவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வளர்ச்சி இன்றி நின்றுபோன மொழிகள் என்ற வகையில் தான் வடமொழியும் இருக்கும், சிலர் வெளிப்படையாகவே இறந்த மொழி என்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. வடமொழிகளுக்கும், சில திராவிட மொழிகளுக்குமான புதிய சொற்களின் வேர்சொற்களுக்காக வடமொழியின் தேவை என்றும் உண்டு, அதனால் வடமொழி தொடர்புள்ள மொழிகள் வடமொழியை வாழவைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழ்மொழி பிறமொழி சொற்களை ஏற்றுக் கொண்டால் ஆங்கிலம் போல் தழைக்கும் என்பது மொழி அறிவற்றோரின் கற்பனை வாதம். ஏனெனில் இனமொழியாக அடையாளப்படுத்தப்படும் எந்த ஒரு மொழியும் பொது மொழியாவது கடினம். தமிழ் இனமொழி, தமிழர்களுக்கு தாய்மொழி என்ற அளவில் தான் என்றும் இருக்கும், அதனை இனம் தாண்டி பேச வைக்கமுடியும் என்பதற்க்கான தேவை இருந்ததில்லை. தமிழர்கள் உலகம் முழுவதையும் ஆளுகைக்கு கொண்டுவந்தால் தமிழ்மொழி பிற இனத்தாலும் பேசப்படும், ஏற்கப்படும் அல்லது திணிக்கப்படும் என்ற வகைக்குள் வரும், ஆனால் இந்தியாவில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழன் உலகத்தை ஆளுகைக்கு உட்படுத்துவதெல்லாம் நடக்கின்ற செயலா ? நாம் உலகை ஆளவோ, உலகத்தினரை தமிழ் பேசவைக்கவோ முயலவேண்டாம். எனவே வேற்று மொழிச் சொற்களின் ஏற்பு தமிழுக்கு சிறப்பையோ, வள்ர்ச்சியையோ ஏற்படுத்தாது. முடிந்த அளவில் பிறமொழிச் சொற்களை தமிழில் மொழிமாற்றிப் பயன்படுத்தும் அளவுக்கு நம்மிடையே வேர்சொற்கள் (Word Root / Orgin or the Word) நம்மொழியில் உண்டு. வேர் சொல் இல்லாத மொழிகள் தான் பிறமொழிச் சொற்களை கடன் வாங்கும், நமக்கு அதன் தேவை இல்லை. இணையம், வலைப்பக்கம், வலைப்பதிவு என ஆயிரம் ஆயிரம் சொற்களை நம்மால் அமைக்க முடிந்திருக்கிறது, அதை பயன்படுத்து வழக்கில் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்க.

20 மே, 2009

பாரதிராஜா சூடு : 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள்'

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற (இடைத்?) தேர்தல் முடிவுக்கு பிறகு,
இயக்குனர் பாரதிராஜாம் ஜூனியர் விகடன் பேட்டியில் ஐயத்திற்கிடமின்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,

''ஈழத் தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி, காங்கிரஸாருக்கு எதிராகப் பிரசாரத்துக்குப் போனீர்கள். ஆனாலும், காங்கிரஸ் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் ஜெயித்துவிட்டதே..?''

''தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தமிழர்களிடம் வாக்கு வாங்கி அமைச்சரான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோர் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவர் களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் எங்களுடைய தமிழீழ திரைப்பட ஆதரவு இயக்கத்தின் சார்பில் பிரசாரத்துக்குப் போனோம். அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோருக்கு எதிராக மக்கள் தீர்ப்புகள் வந்திருக்கிறது. ப.சிதம்பரம் கணக்கே வேறு. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பின்தங்கியிருந்தார். கடைசி நேரத்தில் எப்படி ஜெயித்தாரோ, அது தெரிய வில்லை..! 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள். அதன் பிறகு, ஆகவேண்டியதைப் பார்த்துக்கொள்ளலாம்...' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அவருக்கும் தோல்விதான்!''




பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆளும் கட்சியின் கூட்டணியின் இணைந்த "கைகள்" தேர்தல் பதிவு அலுவலகம் அனைத்திலும் கனிசமான அளவுக்கு செயல்பட்டுள்ளதால், 40(39+1) தொகுதியிலும் நடந்த தேர்தல், இடைத்தேர்தல் போல் இருந்தது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.

14 பிப்ரவரி, 2009

கோக் பெப்ஸிக்கு போட்டியாக மாட்டு சிறுநீர் :

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின் சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெள ஜல் என அது பெயரிட்டுள்ளது.

இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இது மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக் குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர் வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போது மார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போல உடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காது என்றார் ஓம் பிரகாஷ்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேத மூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும்.

இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம் இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்

மேலும் படிக்க

*******

மாட்டு சிறுநீர் என்று படித்தால் தலைப்பு அருவெறுப்பாக இருக்கும் 'கோமேயம்' என்று படிக்கவும்.


தசவதாரம் படம் பார்த்திருக்காவிட்டால் சவுச்சாலயம் என்றால் எதோ வட இந்திய கோயில் என்றே நினைத்திருப்போம். கழிவரை என்ற பெயர்ச் சொல்லை சமஸ்கிரதத்தில் மொழி மாற்றி எழுதி யாராவது படித்தால் 'ஸ்லோகம்' சொல்வதாக நினைத்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நம்மவர்கள் இருக்கும் வரை கோமேயம் என்ன அஸ்வமேயம் (குதிரை மூத்(தி)ரம்), வரகாமேயம் (பன்றி மூத்(தி)ரம்) கூட விற்பனைக்கு வரலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்