இதுநாள் வரை சன் டிவி அறிவிக்கப்படாத திமுக ஆதரவு தொலைகாட்சியாகவே இருந்து வந்தது. நடந்து முடிந்த கருத்து கணிப்பும் அதைத் தொடர்ந்த துயர சம்பவங்களும் சொந்த செலவில் சூனியம். ஊழியர்களை பலி கொடுத்துக் கொண்டதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் பதவியையும் திமுக பறித்ததைத் தொடர்ந்து சன் டிவி இனியாவது கட்சி வேறு தொலைக்காட்சி வேறு என்ற நிலையை எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சன் டிவி திமுக தொலைக்காட்சி என்ற முத்திரையை அகற்றிக் கொள்ள வேண்டும்.
ஆதிக்க சக்திகள் லாபம் கொழிக்கும் தொழிலான பத்திரிக்கை துறையை தங்களுக்கு மட்டும் உரித்தான பரம்பரை தொழில் போல் செய்தது மட்டுமின்றி அவர்கள் தருவதுதான் செய்தி என்று சமுக அமைப்பின் தலையெழுத்தை தங்கள் செய்திகளின் மூலம் நிர்ணயம் செய்து வந்தனர். இந்த நிலைமையில் இருந்து வெற்றிகரமாக அதே தொழிலில் கொடிகட்டிப் பறந்தனர் தினத்தந்தி மற்றும் மறைந்த கே.பி கந்தசாமியின் தினகரன் பத்திரிக்கைகள். இன்றைய நாளில் மீடியா எனப்படும் தகவல் தொடர்பு துறையில் ஆதிக்க சக்திகளை ஓரளவுக்கு பின்னுக்கு தள்ளி சன் தொலைக்காட்சி மற்றும் பல செய்தி ஊடகங்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கின்றன.
இந்நிலையில் ஆதிக்க சக்திகள் அல்லாத பிறர் நடத்தும் மீடிய நிறுவனங்கள் தங்கள் மீதான கட்சி சார்பு முத்திரையை விலக்கிக் கொண்டால் மேலும் சிறப்பானதொரு வளர்சியை பெறமுடியும். சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழுக்கு இந்த வேளை ஒரு பொன்னான வேளை தன் மிதான திமுக முத்திரையை அகற்றிக் கொண்டு நடுநிலை நிறுவனங்களாக வளருவதற்கு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !
பின்பற்றுபவர்கள்
சன் தொலைகாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சன் தொலைகாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14 மே, 2007
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்