பின்பற்றுபவர்கள்

நூல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 டிசம்பர், 2009

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - சேவியர்

இறை நம்பிக்கைப் பற்றி எனது புரிதலில் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், மனித புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அனைத்தையும் அறிந்த ஒன்று, மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒன்று என்கிற நம்பிக்கையின் வேராக இருப்பதே இறை நம்பிக்கை. இறை நம்பிக்கையில் இறை பற்றிய தன்மை அல்லது கட்டுமானம் மற்றும் அவை குறித்த கோட்பாடுகளின் வேறுபாடுகளின் தனித் தனி வேற்றுமைப் பெயர்களே மதங்கள் எனப்படுகின்றன. அவற்றினுள் முரண்பாடுகளை, அவை முரண்படும் போது அவற்றை எடுத்துக் கொண்டு தனித் தனியாக வடிவெடுத்தவையே மதப் பிரிவுகள். உலகில் உள்ள வளர்ந்த மதங்களை இருபிரிவுகளாக பிரிக்க முடியும், இந்திய மதங்கள், ஆப்ரகாமிய மதங்கள். ஆதாம் ஏவாளே மனித தோற்றுவாய், இறைச் சொல்லுக்கு கட்டுப்படாமல், விலக்கப் பட்ட கனியை உண்டதால் பாவம் செய்தவர்களானார்கள், அதன் தொடர்ச்சியாக அவர்களின் பாவத்தை சுமக்கும் அவர்களின் வாரிசுகளாக நாம், எனும் ஆப்ரகாம் என்கிற மூதாதைய நம்பிக்கையுடன் வளர்ந்தது ஆப்ரகாமிய மதங்கள் எனப்படுகின்றன. ஆப்ரகாமிய மதங்களில் யூத, கிறித்துவ அதன் உட்பிரிவுகள் மற்றும் இஸ்லாம் அடக்கம். இந்த வரிசைப்படி முதலில் தோன்றியது பிந்தியதை மறுதலிக்கும். பிந்தியவை நாங்களே இறுதியான, உறுதியானது உண்மையானது என்று சொல்லிக் கொள்ளும். இந்திய மதங்கள் பற்றி அனைவருக்கும் ஓரளவு நன்கு தெரியும் ஆகையால் நான் அதை மீண்டும் இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன். உலக மதங்கள் பற்றிய புரிதல் வலைப்பதிவுகளை வாசித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டவை தான்.

கிறித்துவம் பற்றி கிறித்துவம் சாராத பிற மதத்தினருக்கு குறிப்பாக இந்துக்களுக்கான, தமிழர்களுக்கான புரிதல் அவர்கள் (கிறித்துவர்கள்) நிறைய பள்ளிக் கூடங்களைத் திறந்தார்கள், ஏசு மற்றும் மாதாவை வழிபடுபவர்கள், ரோமை அல்லது வாடிகன் போப்பாண்டவரை தலைமையாக கொண்டவர்கள், துறவர வாழ்க்கை வாழும் சாமியர்கள் (பாதிரியார்கள்) தலைமையில் திருமணம் செய்து கொள்பவர்கள், ஞாயிற்றுக் கிழமை வழிபாடு செய்பவர்கள், அவர்களில் சிலர் வெள்ளை ஆடைகள் அணிந்து கொண்டு இரவு பதினோரு மணி வரை கூட 'ஏசு அழைக்கிறார், அலேலூயா, அலேலூயா, மீட்பர் வருகிறார்' என்று பிரச்சாரம் செய்து தூக்கத்தை கெடுப்பவர்கள், அங்கங்கே ஆர் எஸ் எஸ் காரர்களால் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் என்கிற பொதுப் புரிதல் தான். இதைத் தாண்டி கிறித்துவம் என்கிற மதத்தைப் பற்றிய புரிதல், அதன் தோற்றம், அவற்றின் வளர்ச்சி, அவற்றின் பிரிவுகளை அறிந்தவர்கள் மிகவும் குறைவு தான்.

ஒரு மதம் பற்றிய பிற மதத்தினரின் புரிந்துணர்வுகள் என்பது அவர்களை மதிப்பது, அவர்களின் அடையாளம், பண்பாடு, அவர்களின் கடவுள் ஆகியவற்றுடன் முடிந்துவிடுகிறது. அதைத் தாண்டி மதங்களை வரலாறுகளாக படித்து தெரிந்து கொள்வோர் மிகக் குறைவே. அதற்கு காரணம் தன்னுடைய மதத்தின் மீதான உறுதியான நம்பிக்கையும், அந்த உறுதியான நம்பிக்கை பிற மதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதை, புரிந்து கொள்வதை மறுதலித்துவிடும்.

மதங்களை வரலாறு என்பதாக படிப்பதற்கு தமிழ் சூழலில் நூல்கள் குறைவாகவே இருக்கின்றன. மதங்கள் பற்றிய அறிமுகங்களை எளிமையான வரலாறு அல்லது வரலாற்று அடிப்படையில் தரவுகளுடன் எழுதப்படும் போது அவை ஒரு வரலாற்று இலக்கியம் என்கிற புரிதலுடன் பரவலாக வாசிப்பதற்கு வழி வகுக்கும். "கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு" என்கிற தலைப்பில் திரு சேவியர் 210 பக்கங்களில் மிகவும் எளிமையாக வரலாற்று இலக்கியம் போன்று மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். கிழக்கு பதிப்பகம் அதை வெளி இட்டு இருக்கிறது. இந்த நூலை சென்றவாரம் சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து எடுத்துவந்து படித்தேன். விறுவிறுப்பாக நாவல் போல் தொடங்கும் நடை, தொய்வில்லாமல் பல்வேறு தலைப்பு உள்ளடக்கங்களுடன் சிறப்பாக எழுதப்பட்டு இருந்தது, போதிய நேரமின்மை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரே மூச்சில் படித்துவிடக் கூடிய ஆவல் ஏற்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டு இருந்தது.

*****

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு கிறித்துவம் வளர்ந்தது பற்றியும், அது புறப்பட்டு, பயணப்பட்ட இடங்கள், அதை வளர்த்தெடுத்தவர்கள் பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறார். ஏசு கிறித்துவின் அப்போஸ்தலர்கள் எனப்படும் நேரடி சீடர்களில் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டு, மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு சீடர், மற்றும் இயற்கை மரணம் அடைந்த யோவான் (John) தவிர ஏனைய 10 சீடர்களும் ஏசுவின் கொள்கைகளை போதித்தார்கள் என்பதற்காக அன்றைய ஆட்சியாளர்களாலும், பழைய மதத்தலைவர்களினாலும் கொடுரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், இது பற்றிய குறிப்புகள், ஆண்டு விவரங்கள், அவர்கள் மதப் பரவலுக்குச் சென்ற இடங்கள், குறிப்பாக இந்தியாவிற்கு வந்த புனிதர் தோமா (செயின்ட் தாமஸ்) போன்ற விவரங்களைத் தந்திருக்கிறார். எந்த ஒரு மதமும் ஆளும் அரசர்களின் ஆதரவைப் பெறாமல் போனால் அது சந்திக்கும் இன்னல்களையும், ஆதரவு பெற்றால் பெரும் அசுர வளர்ச்சியையும் கான்ஸ்டண்டைன் மன்னருக்கு பிறகு கிறித்துவம், முன் கிறித்துவம் என்பதில் இருந்து நன்கு புரிய வைக்கப்பட்டு இருக்கிறது.

உலகில் அன்பு என்னும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டவை இரு மதங்கள் தான் ஒன்று பவுத்தம், மற்றொண்டு கிறித்துவம், இவைகள் பின்னாளில் அரச மதங்கள் மற்றும் தங்கள் ஆளுமைக்கான மத அடிப்படை நாடுகளை உறுவாக்கிக் கொண்டன, ஐரோப்பாவில் கிறித்துவ சமய நாடுகளும், ஆசியாவில் புத்த சமய நாடுகளும் இருப்பதற்கு அவை வலிமையாக வழியுறுத்தப்பட்டன என்று சொல்வதற்கான ஆதாரங்கள் குறைவு அல்லது இல்லை. மக்கள் சேவைகளின் வழியாக பரவியதில் கிறித்துவமே முதலிடத்தை இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியில் இந்தியாவில் கிறித்துவம் பரப்பப்பட்டது என்கிற கூற்று ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம் என்கிற கூற்றுக்கு ஏற்ப பிற நாடுகளில் விரைவான வளர்ச்சி பெற்ற கிறித்துவம் இந்தியாவிற்கு தோமாவால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கிட்டதட்ட திருவள்ளுவர் காலத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும், புரோட்டஸ்டாண்ட் பிரிவு வெள்ளையர்கள் இந்தியாவில் நுழைந்த பிறகே விரைவாக வளர்ச்சி கண்டது, இந்தியாவில் கிறித்துவ வளர்ச்சிக்கு வந்த அருட் தந்தைகள் இங்குள்ளது போல் காவி உடை, பூணூல் அணிந்தது, தமிழ் வளர்ச்சிக்கு உதவியது பற்றியெல்லாம் நூல் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார், தோமாவுக்கு முன்பும், பின்பும் கேரளா மற்றும் கேராளாவை ஒட்டிய தமிழக கடற்கரைப் பகுதி கிறித்துவர்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்துவரும் கிறித்துவர்கள், கத்தோலிக்க மற்றும் சிரியன் கிறித்துவர்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மதத்தை பயன்படுத்துபவர்களின் மொழி(கள்) புறக்கணிக்கப்பட்டால் (கிரேக்கம் மற்றும் லத்தீன்) மதம் பிளவு பெறும் என்பதற்கு கிறித்துவத்தில் புரோட்டஸ்டாண்டு என்னும் பிரிவு ஏற்பட்டு கிறித்துவம் பிளவு ஆகியதை நூல் ஆசிரியர் மிதமாக உணர்த்தி இருக்கிறார், அதற்கு காரணமாக பிரிதொரு மையக் கருத்தாக ரோம் தலைமையின் கட்டுப்பாடுகள், ஆளுமைகள் என்கிற குற்றச் சாட்டு எழுந்து கிறித்துத்தில் பிரிவுகள் ஏற்பட்டு பிரிந்தாகக் குறிப்பிட்டு இருக்கிறார். 'ஆண் வாரிசு' இல்லை என்பதற்காக மற்றோர் திருமணம் செய்து கொள்ள இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி முடிவு செய்த போது அதை பாப்பரசர்(போப்) தலைமை திருச்சபை எதிர்க்க, கட்டுப்படாத மன்னன் பாப்பரசருக்கு எதிராக புரோட்டஸ்டாண்ட் பிரிவை ஆதரிக்க இங்கிலாந்து முழுவதும், மற்றும் உலக நாடுகளில் புரோட்டஸ்டாண்ட் பிரிவு வளர்ச்சி கண்டதாகா குறிப்பிட்டு இருக்கிறார். ஆண் வாரிசு ஆசை மதங்களையே ஆட்டம் காண வைக்கிறது என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.

இன்றைக்கும் தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனைகள் சிலுவைப் போர்களின் தொடர்ச்சி எனலாம், கிறுத்துவின் நிலம் (பெத்லகேம்) மீட்கும் போராட்டமாக தொடங்கப்பட்ட சிலுவைப் போர்கள் பல பின்னடைவை சந்தித்து இஸ்ரேல் என்னும் தனி நாடு உருவாக காரணமாக அமைந்திருக்கிறது. ஐரோப்பாவில் இஸ்லாமிய படையெடுப்புகள் ஐரோப்பியர்களை கிறித்துவர் மதம் சேர்ந்தவர்கள் என ஒன்றிணைந்த போராட்ட சக்தியாக மாற்றியது, கிறித்துவ பிரிவுகள் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய இஸ்லாமிய படையெடுப்புகள் தான் மறைமுகமாக வழி அமைத்தது. சிலுவைப் போர்கள் பற்றிய அறிமுகமாக ஆசிரியர் எளிமையாகக் அவைபற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழில் விவிலியம் எனப்படும் பைபிள் எனப்படும் கிறித்துவர்களின் மறை நூல்களின் பிரிவுகள் (புதிய, பழைய ஏற்பாடுகள்) யாரால் ஏற்பட்டது, யாரால் தொகுப்பட்டது போன்ற விவரங்கள் நூலில் அடங்கி இருக்கிறது. கிறித்துவத்தின் பல்வேறு பிரிவுகளின் வேறுபாடுகள், அவர்கள் தங்கள் பணியாக நினைப்பது பற்றி சுறுக்கமான அறிமுகங்களைக் கொடுத்து இருக்கிறார். கொலைக் கருவியான சிலுவை எப்போது புனித சின்னமாக மாறியது, கிறித்துவ கொள்கைகள் திரிப்பு அல்லது வசதிக்கேற்று பொருள் கூறி வளர்ந்த கிறித்துவ பிரிவு இயக்கங்கள் ஆகியவை நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஏசுவின் மறுவருகை இதோ, மீட்பர் இதோ வருகிறார் என்று சொல்லப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு மதம் வளர்ச்சி பெற்றே வந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால் பெரும் வியப்பு தான். குறியீடுகளையும் சிலை வழிபாடுகளையும் எதிர்த்து துவங்கிய கிறித்துவ மதம் சிலுவை குறியீட்டையும், சிலை வணக்கங்களையும் மீண்டும் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பார்க்கும் போது 'நாளை வருகிறார் ஏசு' என்கிற நம்பிக்கைக்கு குறியீடுகளும் சிலை வணக்கமும் மறைமுகமாக உறுதுணை புரிவதாக எனது புரிதல்.

இன்னும் நூலின் தகவல் உள்ளடக்கம் மற்றும் கிறித்துவம் பற்றி மிகுதியாகவே எழுத விருப்பம், இடுகை நீண்டுவிடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

*****

சேவியர் சிறப்பாக எழுதி இருந்தாலும் படிக்கும் போது கிறித்துவத்தில் கத்தோலிக்க கிறித்துவ பிரிவே உண்மையானது என்று சொல்லுகிறாரோ என்கிற பொருள் மயக்கம் வருகிறது. இங்கு பின்னூட்டத்தில் சேவியர் விளக்கம் அளித்தால் மகிழ்வேன். என்னுடைய அவதனிப்பு, என்னுடைய வாசித்தல் துய்ப்புபடி சொல்வதென்றால் நூலின் உள்ளடக்கம் மற்றும் எழுத்து நடை மிகச் சிறப்பு.


வரலாற்று ஆர்வம் உடையவர்களுக்கு,கிறித்துவம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு பரிசாக கொடுக்க ஏற்ற நூல்


நூல் கிடைக்கும் இடம் : கிழக்கு பதிப்பகம்
நூலின் விலை : 100

29 ஜூலை, 2006

புத்தம் புதிய புத்தகமே !

நண்பர் சிபா (சிவபாலன்) அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி இந்த பதிவு !

என் வீட்டு அலமாரிகளில் புத்தக குவியல் இல்லை. வெளி நாட்டில் இருப்பதால் புத்தகங்களை வாங்கி அடுக்குவதற்கு அதிகம் யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. வலைப் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு பித்தமாகி புதிய நூல்கள் எதுவும் வாங்கவில்லை. சமீபத்தில் திருவாடுதுரை சூரிய நாராயணன் கோவிலுக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அப்பொழுது கோவிலில் விற்ற புத்தகங்கள் சிலவற்றை கோவிலுக்கு சென்று வந்த ஞாபகமாக இருக்கட்டமே என்று வாங்கினேன். நம்ம குமரன் போன்றோர்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் ஸ்கேன் பண்ணி போடுவேன். அதை மனதில் வைத்தும் வாங்கியது தான் இந்த புத்தகங்கள்.

வாங்கிய புத்தகத்தை தவறுதலாக சென்னை பெரியப்பா வீட்டில் எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு சென்னைக்கு விமானம் ஏற வந்த பொழுது துறத்திப் போய் திரும்ப வாங்கி வந்தேன். இதுதான் மிக மிக சமீபமாக இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கியது. இன்னும் புரட்டிக்கூட பார்க்க வில்லை. மேலூம் சில சித்தர் பாடல் புத்தகங்களை அக்கா வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.
பட்டியல் இதோ:


1 . சூரியனார் கோவில் தல வரலாற்றுச் சுருக்கம்
2. நவக்கிரக ஸ்தலங்களின் திருமுறைத் திரட்டு (வரை படத்துடன்)
3. விதியை வெல்வது எப்படி - திருவாடுதுறை ஆதினம்
4. சித்தர் பாடல்கள் - டாக்டர் ச.மெய்யப்பன்
5. வெற்றி நிச்சயம் - திரு சுகி சிவம்
6. சைவ சித்தாந்த உண்மை விளக்கம் - திரு பா.கமலக்கண்ணன் (இவரை பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளது, இவர் என் நண்பருக்கு நண்பர் 65 வயது ஆகிறது, தற்போது சைவ சமய சித்தாந்த மடம் வைத்து ஏழைகளுக்கு இலவசக் கல்வியும், இடமும் அளித்துவருகிறார் - அவரைப் பார்க்கும் வாய்ப்பு சிங்கையிலேயே கிடைத்தது, 2007 வந்து சென்றார்)
7. Art of happines (Hand Book for living) - HH Dalai Lama
8. Be a Lamp upon yourself (Buddist Book) -
9. The Teaching of Buddha
(7,8,9 புத்தகங்கள் இருப்பது இன்று தான் தெரியும் ! இலவசமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன்)
10. Bhagavat - Gita as it is - Swami Prabupada
11. நாலே கால் டாலர் - ஜெயந்தி சங்கர்(சிங்கை)
12. ஏழாம் சுவை ஜெயந்தி சங்கர்(சிங்கை) - நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்ற போது வாங்கியது
13. Long Man Dictionary
14. IT Books Related to Windows Serer and Networking
15. இந்த நாள் இனிய நாள் - திரு வலம்புரி ஜான்
இது தவிர நக்கீரன், ஜூவி வாரம் இருமுறை வாங்குவதுண்டு, படித்ததும் தூக்கிப் போட்டுவிடுவதுதான் வழக்கம். பதிவுகள் படிக்க ஆரம்பித்த பிறகு அதில் படிக்கும் தகவல்கள் ஆறிய தகவல்களாக இருப்பதால் அதிகம் வாங்குவதில்லை.

மற்ற எல்லா புத்தகங்களுமே தூங்குகின்றன.

"புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டிப் பார்க்காத புலையன் நான் !"

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்