பின்பற்றுபவர்கள்

மதவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 மார்ச், 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.

காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.




தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

23 ஜூன், 2013

மோடி ஆண்டால் என்ன கேடி ஆண்டால் என்ன ?

சிறுபான்மை பெரும்பான்மை என்ற சொல்லாடலும் அதன் சூழலும் இல்லாத நாடுகளும் இல்லை, இந்தியாவைப் பொருத்த மட்டில் ஊர்களில், மாநிலத்திற்குள் சாதி பெரும்பான்மை, நாட்டிற்குள் மதப் பெரும்பான்மை, வெளி நாடுகளில் இனப் பெரும்பான்மை சிறுபான்மை, அரபு நாடுகளில் மதப்பெரும்பான்மை, அதனுள் இனப் பெரும்பான்மை என்பவை காலம் காலமாகவே அமைந்துள்ளது, நல்லாட்சி என்பது அனைத்து மக்களையும் சமமாக நடத்துதல், அனைத்து உரிமைகளையும் கொடுப்பது என்பது பற்றியது தான் அன்றி யார் ஆளுவது என்ற கேள்விக்கே இடமின்றி பெரும்பான்மையினரின் பிடியில் ஆட்சிகள் இருப்பது தான் நடைமுறை. சிறுபான்மையினருக்கு உரிமை மறுக்கப்பட்டாலோ, பெரும்பான்மையினர் ஆட்சி அதிகாரம் இழந்தாலோ அங்கே பூசல்கள் கலவரம் வெடிக்கும் என்பது உண்மை. 

மதம் / இனம் சார்ந்த சொல்லில் அடைக்கப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு  எந்த ஒரு நாடும் சிறுபான்மையினரை ஆளவிட்டு பார்த்துக் கொண்டு இருக்காது, அதற்கான சகிப்பு தன்மைகள் தாம் ஒரே இனம் என்ற அளவில் அனைவருக்கும் இருந்தால் இன்றி வாய்ப்பில்லை, சுதந்திர இந்தியாவில் அப்படியான எண்ணங்கள் இருந்து அவை படிப்படியாக கரைந்து போனது, சிறுப்பான்மை மதப் பிரிவை சேர்ந்த ஒருவரை (இராசசேகர ரெட்டியைப் போன்று) மாநில முதல்வர் ஆக்குவதே கூட அத்திப் பூத்தாற்போல் நடைபெறும் நிகழ்வு, இந்தியாவிற்கு சிறுபான்மை மதத்தைச் சார்ந்த பிரதமர் ? இன்ற அளவில் வாய்ப்பற்றது, வழிபாடு, நம்பிக்கை என்பதைத் தாண்டி மதங்களால் இறுக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நாம் அதனை மீறி தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவது இயலாத ஒன்று. இருந்தாலும் இந்தியாவில் பாஜக ஆட்சி அமைவதை முற்போக்காளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், பாஜக என்பது மதவாத கட்சி என்பதற்காகவே அல்ல. இந்துக்கள் / கிறித்துவர்கள் / இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இடத்தில் / தொகுதியில் எந்த ஒரு தேசிய / மாநில கட்சியும் மாற்று மத வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கவே மாட்டார்கள், என்பதால் பாஜக மட்டுமே மதவாத கட்சி என்று கூறுவது அரைகுறையான அடிப்படை புரிந்துணர்வு அற்ற கருத்து. ஆனாலும் பாஜக ஏன் இந்துகளாலேயே எதிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. 

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதக் கொள்கையை அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும். இந்து மதக் கொள்கை என்றால் என்ன ? நான்கு வேதங்களும் அதில் கூறப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மறுக்கும் நான்கு வருண கோட்பாடுகள், சுறுக்கமாகச் சொல்லப்போனால் பார்பனரை ஏனைய இந்துக்கள் பிராமணர் என்று ஒப்புக் கொள்ளப் பட வேண்டும், பிறப்பு அடைப்படையில் பார்பனர் அதிகார வரம்புகள் அனைத்தையும் பெறுவதை எதிர்த்துக் கேட்டால் இந்து மதத்திற்கு எதிரானவன் என்று பழிக்கப்படலாம், அல்லது பேச்சு உரிமை மறுக்கப்படலாம், இடப்பங்கீடுகள் மறுக்கப்படலாம், தவிர தீண்டத்தகாதவர்களின் சாதி அமைப்பும் அவர்களது தொழிலும் அழித்து ஒழிக்கப்படாது, மலம் சுமக்கும் மனிதன் சொர்கத்திற்குப் போவான் என்று திருவாளர் மோடி கூட ஒருமுறை திருவாய் மல(ர்)ந்துள்ளார், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதம் சார்ந்த பழமை வாதங்கள் தலை தூக்கும் என்பதாலேயே பகுத்தறிவாளர்கள், ஒரு சில சமய சார்பற்றவர்கள் ஆகியோர் எதிர்க்கின்றனர், மற்றபடி இந்து சமய பெரும்பானமை அரியணை ஏறினால் இந்தியாவின் மதச் சார்பின்மை அழிந்துவிடும் போன்றவை எடுபடா வாதம், மதச் சார்பின்மை என்பது இன்றைய சூழலில் போலியானவையே. போலி மதச் சார்பின்மை இல்லை என்றால் இந்தியாவில் காங்கிரஸ் என்றோ அழிந்திருக்கும்.

******

மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் இன்றைய சூழலில் பலர் வெளிப்படையாக எதிர்க்கிறார்கள், அதற்கு காரணமாக கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள், இதே போன்று அத்வானியை பாஜக முன்னிறித்திய பொழுது பாபர் மசூதி உடைப்பு பற்றி கூறி எதிர்த்தார்கள், ஆனால் பாபர் மசூதி உடைப்புக்கு பிறகே இந்தியாவில் இருமுறை பாஜக ஆட்சியை பிடித்தது, ஒரு முறை ஜெ-வால் கவிழ்ந்தது, மறுமுறை கருணாநிதியால் நீடித்தது. அத்வானி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது எதிர்க்கக் காரணம் இருந்தது போல் மோடிக்கும் காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள், ஆனால் வெங்கைய்யா நாயுடுவையோ, சுஷ்மா சுவராஜையோ பாஜக முன்னிறுத்தினால் இவர்களெல்லாம் மனம் மாறி காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவிற்கு வாக்களிக்கும் எண்ணம் கொண்டிருந்தார்களா ? என்றால் அதுவும் இல்லை, பாஜக மதவாத கட்சி, சிறுபான்மையினருக்கு ஆபத்து அதனால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்ற நிலையில் இருந்து கொண்டு அத்வானி ஆகாது, மோடி கூடாது என்கிற கருத்து முத்துகளினால் ஆகப் போவது என்ன ? பாஜகவில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்களை நிறுத்துவது சரியான முடிவு என்று அவர்கள் முடிவெடுப்பது அவர்களது உள்கட்சி விருப்பம், அதில் அவர்களுடைய கட்சியை எந்த காலத்திலும் ஆதிர்க்காதவர்களின் எதிர்ப்புக்கும், எதிர்க்கருத்திற்கும் அடிப்படை ஞாயம் என்று ஏதேனும் உண்டா ?

வாஜ்பாய் ஆட்சியின் பொழுது எந்த மதக் கலகவரமும், சிறுபான்மை அச்சுறுத்தலும் இருக்கவில்லை,கார்கில் நிகழ்வுகளுக்கு பின்னும், கோடிக்கணக்கில் செலவு செய்து இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானின் பிரதமர் முஷ்ரப்பை டெல்லி வரவழைத்து சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்தார், அவர் வளர்ந்த இடங்களையெல்லாம், வீடுகளையும் புதுப்பித்து, மெருகூட்டி அழைத்துச் சென்று காட்டினார், இவையெல்லாம் காங்கிரசு ஆட்சியில் கூட நடைபெற்றதில்லை, ஆனாலும் வாஜ்பாயை போலி மதவாத எதிர்ப்பாளர்கள் ஆதரிக்கவும் இல்லை.

சிறுபான்மை காவலன் என்ற பெயரில் காங்கிரசை ஆட்சியில் உட்கார வைத்து நாட்டில் ஊழல்கள் பெருத்துவிட்டதும், லட்சம் கோடி என்ற அளவில் எல்லாம் ஊழல் நடைபெறுவதும், இந்திய பண மதிப்பு பாதளத்திற்கு சென்றதையும் கண்ணுறுகிறோம், 10 விழுக்காட்டு மக்களின் மன திருப்திக்காக மீதம் 90 விழுக்காடு மக்கள் வதைபடுவது ஞாயம் அது தான் மதச் சார்பின்மை என்றால் நாட்டில் பெரும்பான்மை மக்களின் நலனைவிட சிறுபான்மையினரின் விருப்பமே மேலானது என்கிற மனப்போக்கு வெகுவிரைவில் மதம் சார்ந்தே மீதம் இருக்கும் 90 விழுக்காட்டினரை அழைத்துச் சென்றுவிடும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் பெரும்பானமியினரின் கையில் ஆட்சி இருப்பதும் தான் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லது, அவை இல்லை என்றால் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்படும்.  இந்திய  மக்கள் பல்வேறு மதவாதிகளின் /  மதங்களின் கையினுள் சிக்கிவிட்டார்கள் என்பதால் தான் இவ்வாறு எழுதுகிறேன். 

***

75 விழுக்காடு சீனர் வசிக்கும் சிங்கப்பூரில் ஒருமுறையாவது இந்தியரோ, மலாய்காரரோ பிரதமாராக வந்தால் நல்லா இருக்கும் என்றே நாம நினைக்கலாம் ஆனால் சீனார்களுக்கு அவை பெருமையானது அல்ல அதற்கான வாய்ப்புகளும் ஏற்படாது, அவை ஞாயம் என்ற அளவுகோலிலும் வைத்துப் பார்க்க முடியாது. இந்தியர்களும், மலாய்காரர்களும் சீனர்களுக்கான உரிமையுடன் இருக்கிறார்களா ? என்பது மட்டும் தான் இங்கே முக்கியம்.

2 அக்டோபர், 2012

கண்டன கடமையும் பொறுப்பேற்கும் சடங்குகளும் !

ஐயா நல்லா பார்த்துக் கொளுங்கள் நாங்கள் எங்கள் மதத்தினர் செய்த பாதக செயல்களைக் கண்டிக்கிறோம், எங்க மத்தில் இல்லாததைத் தான் இவர்கள் செய்துள்ளனர், எங்க மதம் தூய்மையானது அப்பழுக்கற்றது. ஐயா நாங்க சிறுபான்மையினர் எங்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை, இந்த நாட்டில் எங்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை, இந்த நாட்டில் நல்லவர்களே இல்லை என்று சொல்லவில்லை இது மோசமான நாடாகத்தான் இருக்கிறது கொலை கொள்ளை தலித்துகளை வண்புணர்கிறார்கள், இதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

தனிமனித தவறை ஏன் நாட்டின் பிரச்சனை என்று தண்டோராப் போடுகிறீர்கள் இதையெல்லாம் உங்க மதத்தவர் பெரும்பான்மையினராக இருக்கும் நாட்டிலும் தானே செய்கிறார்கள், 

தப்பு தப்பு தப்பு இதெல்லாம் எங்கள் மத மார்க்கத்தில் இல்லை அதை நீங்கள் தனிமனித செயலாகத் தான் பார்கனும், நாங்க அப்படித்தான் பார்த்து கண்டனக் கடமையைப் பதிய வைக்கிறோம். இதப் பாருங்க எங்க மதப் புத்தகத்தின் எட்டாவது பகுதி 84 ஆவது வசனம் "அப்பாவிகள் மீது (அ)நியாயம் செய்யாதீர்கள்" 8:84 மேலும்

எங்க மதத்தில் அடக்க தலங்களை வழிபடத் தடையுள்ளது, அவ்வாறு வழிபடுபவர்களை நாங்கள் தூற்றுவோம், முடிந்தால் அந்த அடக்கத் தளங்களை அகற்றவும் நாங்கள் ஆதரவு அளிப்போம், ஆனால் அதை மாற்று மதத்தினர் செய்துவிட்டால் எங்களை அவமதித்துவிட்டார்கள் என்று ஓலமிடுவோம். உங்க மதத்தில் தானே பெண்குழந்தையைக் கொல்கிறார்கள், 

உங்க ஆளுங்களும் தான் அதைச் செய்கிறார்களே, 

இல்லை இல்லை அது தனிமனித தவறு அவ்வாறு செய்பவர்களை எங்கள் மதம் வன்மையாக கண்டிக்கிறது, 

அட முட்டாப் பயலே எந்த மதம் தான் பெண் குழந்தையைக் கொல்லலாம் என்று அனுமதிக்கிறது ? இதுவும் தனிமனித செயல் தானே இதை மட்டும் ஏன் மதவாதம், நாட்டு நடப்பு என்றெல்லாம் வகைப்படுத்துகிறாய் ? 

உங்க மத ஸ்லோகத்தில் தான் இதை அனுமதித்துள்ளது, தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார் இதோ பார் "தலைச்சன் பெண் குழந்தையைக் கொன்றால் தந்தை தனவான் ஆவான்" 

அட கருமாந்திரம் புடிச்சவனே இந்த எழவெல்லாம் எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது, இதையெல்லாம் எங்கிருந்து எடுத்துவந்து காட்டுகிறாய், இதையெல்லாம் சொல்லி இருக்கிறதே என்று யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை, எவனோ பேராசைக் கொண்டவன் அல்லது பெண் குழந்தையை வெறுப்பவன் செய்திருந்தால் அதையெல்லாம் மதச் செயலாகவும் நாடு அனுமதிப்பதாகவும் சொல்லும் நாசமாப் போனவனே, நாங்களெல்லாம் பழமை வாதத்தைப் புறக்கணிக்கக் கூடாது, எங்களுக்கு எங்கோ என்றோ ஒரு அரைக்கிறுக்கன் எழுதிவைத்ததை அடிபிறழாமல் பின்பற்றுவது தான் எங்களுக்கான வழிமுறை என்று சொல்ல வருகிறாயா ?

ஆமாம் ஆமாம், நாங்கள் எங்க மதத்தைப் அடிபிறழாமல் பின்பற்றுகிறோம் நீங்களும் அவ்வாறு பின்பற்றவேண்டும், அது தான் உங்க மதம், அதனால் தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்,  எங்கள் மதத்தில் இவ்வாறான செயல்கள் அனுமதிக்கப்படவும் இல்லை, தவிர தவறு செய்தவர்களை நாங்கள் வன்மையாகவும் கண்டிக்கிறோம், திருந்த வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென்றும் மத எண்ணிக்கைக்காகவும் அவர்களை மதத்தில் இருந்து விலக்காமல் வைத்திருக்கிறோம்

அதுக்குள்ள ஒருவர் ஓடிவந்து கண்டனம் தெரிவிப்பவரின் கருத்தை ஆராய்ந்ந்து நீங்களும் கண்டனம் தெரியுங்கள் கயவர்களே, கண்டனம் தெரிவித்தவரின் மதத்தைப் பார்க்காதீர்கள் என்று முட்டுக் கொடுப்பார்.

தான் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்கள் செய்யும் வன்முறைகள் தனிமனிதத் தொடர்பானது என்றும் மாற்று மதத்தினர் செய்யும் தவறுகள் அந்த மதத்தின் தவறு நாட்டின் தவறு என்றும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஆனால் இவர்களைப் போல் அந்தந்த மதத்தினர் மதவாதிகளாகவே நடந்து கொண்டால் இவர்களின் மதப் பிரச்சாரம் எடுபடாது அங்காங்கே வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதை இவர்கள் அறியாதவர்களா ?

"இந்த இடத்தில் குண்டு வைத்தவர் எங்கள் அமைப்பினர்"  என்று காவலர்களுக்கு துப்பு துலக்க வேலையே வைக்காமல் பொறுப்பேற்றுக் கொள்ளும் முஜாஹுதின் அமைப்பினர் எவ்வளவோ பரவாயில்லை, அவர்கள் சப்பைக் கட்டுவதில்லை.

எந்த மதவெறிகளும் அடங்கும் முன்பு ஓலம் பெரிதாக இருக்கும், ஒருவேளை மதவெறிகள் அடங்கப் போவதன் அறிகுறியோ இவை.

உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது

26 செப்டம்பர், 2012

பூ மிதிக்கலாம் வாங்க !


பூ மிதிக்க ஆசைப்பட்டு போன கவுண்டமணி,  நல்லா அடிவாங்கிக் கொண்டே கொஞ்சாதீங்க கொஞ்சாதிங்க என்று சொல்லும் ஜனராஜ் கேரக்டர் ஞாபகம் தான் வருது அண்ணன் சுபி எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்களுக்கு தடித்த தோலுடா ன்னு நாம மார்க்க அறிஞர்களைப் பார்த்து தான் தெரிஞ்சு கொள்ளனும், மதங்களும் மார்க்கங்களும் எதை எதையெல்லாம் சொல்லிக் கொடுக்குதோ இல்லையோ தடித்தத் தோலை ஆடையாகக் கொடுக்கிறது, அது அல்லேலோயா கோஷ்டியாக இருக்கட்டும், இந்துத்துவா குருப்பாக இருக்கட்டும், நம்ம மார்க அறிஞ்ஞர்களாக இருக்கட்டும் சொல்லி வச்சது போல் அவங்க அவங்க அளவுக்கு தோலாடை அணிந்து கொண்டு தான் பொது இடத்தில் வந்து "கருத்து" சொல்கிறார்கள். நமக்கு மார்க அறிஞ்ஞர்களுக்கு மார்க்கு போடுவது வேலை இல்லை என்றாலும் மார்க்க அறிஞ்ஞர்களாக ஓடிவந்து தமக்கு மார்க்கு போடுங்க என்று முதுகை காட்டி வரத்தான் செய்கிறார்கள்.  ஏற்கனவே நிறைய பேர் நிறைய மார்க்கு போட்டுவிட்டார்களே என்றாலும் நாம யோசிச்சு மார்க் போடத்தான் வேண்டி இருக்கு காரணம் மேலே சொன்னவை தான்.

*****

கற்பழிப்பு என்று சொல்வது பாலியல் வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுபடி நாம் பன்னெடுங்காலமாக அவ்வாறு சொல்லக் கூடாது எழுதிவருகிறோம், தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை, அதாவது கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்கிற பொருள் தவிர்த்து வெறெதும் இல்லை, எனவே பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பெண் ஒருத்தியை ஒழுக்கம் கெட்டவள் அல்லது அவளுடைய ஒழுக்கம் அழிக்கப்பட்டது என்ற பொருள் தரும் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவது காட்டுமிராண்டி தனம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வதில் யாதொரு தவறும் இல்லை, கற்பு என்ற சொல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் பெண்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது மணவிலக்கு பெற்ற பெண் இரண்டாவது கணவருடன் வாழ்க்கை நடத்துவதை இரண்டாம் கற்பு பெற்றவள் அல்லது கற்பு மாற்றம் செய்து கொண்டவள் என்று சொன்னால் அது எப்படி பொருந்தாதோ, அபத்தமானதோ அது போன்றதே தானாக எந்த ஒரு ஒழுக்கக் கேட்டையும் செய்துவிடாது பாலியல் வேட்கை வெறியால் சிதைக்கப்பட்ட பெண்ணை கற்பிழந்தவள், கற்பழிக்கப்பட்டவள் என்று சொல்லுவதும் ஆகும். இது போன்ற முறையற்ற, பொருள் தராத, திரிக்கப்படக் கூடிய வகையில் பெண்களை இழிவுப் படுத்தும் சொல் தான் "கற்பு" என்பதால் பெரியார் அதனைப் பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை அரிசனங்கள் என்று காந்தி சொன்னபோது கடுமையாக எதிர்த்தவரும் பெரியார் தான்,  ஹரி ஜனங்கள் அதாவது மகாவிஷ்ணுவின் மக்கள் என்ற பொருளில் தாழ்த்தப்பட்டவர்களை அழைக்கலாம் என்கிற காந்திஜியின் பரிந்துரை தாழ்த்தப்பட்டவர்களை இந்துமத சாக்கடைக்குள்ளே அடைத்து அதை அள்ளச் சொல்லும் பார்ப்பனிய வாதிகளுக்கு தான் சாதமாக இருக்கும் எனவே ஹரிஜன் என்று தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினார் பெரியார்,  தாழ்த்தப்பட்டவர்களை வெறும் சொற்களால் "வள்ளல் வாரிசுகள்" என்று அழைப்பதினால் மட்டுமே அவர்களின் பொருளாதாரா நிலை மாறிவிட்டதாக நாம் கூறிக் கொள்ள முடியுமா ? எனவே ஹரிஜன் என்று சொல்வது தாழ்த்தப்பட்டவர்களை மேலும் இழிவிலேயே வைத்திருக்கும் என்பதால் ஹரிஜன் என்று சொல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது மாறாக தலித் என்ற சொல்வது அவர்களைக் குறிக்கும் பொது அடையாளச் சொல்லாக இந்தியாவெங்கிலும் வழக்கில் உள்ளது, தமிழகத்தில் மு.கவின் பரிந்துரைப்படி அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை, "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று தமிழில் சொல்லிவருகிறோம்.

அண்ணன் சுவனப்பிரியன் அரிசனத் தெரு அவலம் என்ற பெயரில் 'எங்கள் ஊருக்கு பக்கத்தில் அரிசனத் தெரு இருக்கிறது அவர்கள் சுத்தம் தெரியாதவர்கள் தண்டவாளப்பாதையில் திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள், இவர்கள் எங்கள் மதத்தவர்களைப் பார்த்து திருந்தவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார், வவ்வால் போன்றவர்கள் அரிசனம் என்று சொல்லக் கூடாது இழிவு படுத்துவதாகும் என்று சொல்லியும் மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லை. தலித்துகளின் நிலை குறித்து பாலைவன ஊற்றாக கண்ணீர் வடிக்கும் சுவனப்பிரியன் தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் திறந்த "வெளிக்கு" போகிறார்கள், அவர்களுக்கு கழிவறையையும் அவர்களது  கழிவறையை  தூய்மை செய்யவும் ஏன் ஆட்கள் இல்லை ?, தம்பகுதி மக்களின் கழிவறையை யார் துப்புறவு செய்கிறார்கள் ? என்ற கேள்வியெல்லாம் எழவே இல்லை. இவர் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இவரின் தாரைக் கண்ணீரில் கோரைப் பாயை ஊறவைக்கிறார்.

அடுத்து அண்ணாரின் இன்றைய பதிவு "கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக விட்ட கண்ணீர்", ஏனுங்க வர வர உங்கப் பதிவு ஏன் இந்துத்துவ எழில் பதிவு போல் அவலங்களை மட்டும் அதும் இந்தியாவில் நடக்கும் அவலங்களை மட்டும் எடுத்து எழுதுகிறீர்கள், நீங்கள் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்லும் சவுதியில் இவையெல்லாம் நடைபெறுவதே இல்லையா ?" என்ற என் பின்னூட்டத்திற்கு அண்ணன் அளித்துள்ள மறுமொழி

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவின் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ


"சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். 


ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்."


அதாவது அண்ணன் சுபி கற்பழிப்பு  பற்றி சவுதியில் இவர் கேள்விப்பட்டதே இல்லையாம், அங்கு நடைபெறுவதெல்லாம் சில பெண்களிடம் தவறாக நடப்பது மட்டும் தானாம். படிப்பவர்களுக்கு ஏதோ சுவனப்பிரியன் தான் ஒப்புக் கொண்டுள்ளாரே என்று நினைக்கத் தோன்றும், தவறாக நடப்பதெல்லாம் என்றால் என்ன பொருள் ஈவ் டீசிங்கா ? அதாவது சவுதியில் வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வண்புணர்வுக்கு பெயர் "தவறாக நடப்பதாம்"  ஆனால் இந்தியாவில் நடப்பது "கற்பழிப்பாம்",  சவுதியில் உள்ள பாலியல் குற்றவாளிகள் அதை மொபைலில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், அவர்கள் அறிவாளிகள் என்றும் மறைமுகமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அண்ணன் சுபியின் சவுதிய அகராதிபடி சவுதியில் 
கல்லால் எறிந்து கொல்லப்பட்டால் அதன் பெயர் பூ எறிதல், பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக சவுதியில் இன்று நான்கு பெண்கள் மீது பூக்கள் எறிந்தனர்

கழுத்து வெட்டி கொல்லப்பட்டால் அதன் பெயர் மாலை சூடுதல், திருட்டு வழக்கில் இரண்டு சவுதி ஆண்களுக்கு இன்று மாலை சூடப்பட்டது

பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டிருந்தால் அதன் பெயர் தங்கம் உரசுதல் ஏதோ இரக்கப்பட்டு இதற்கு மட்டும் "தவறாக நடத்தல்" என்று சொல்கிறார் போலும் கை வெட்டப்பட்டால் "இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தல்" என்று சொல்லுவாரோ

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அண்ணன் சுவனப்பிரியனுக்கு வாழ்த்து சொல்லுவோம், ஆனால்  'வாழ்த்து' அவருடைய அகராதிபடி இல்லை.

இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்.
:)

************

சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின்  அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.

13 ஜூலை, 2012

மரண தண்டனையும் இஸ்லாமிய பதிவர்களும் !


மரண தண்டனைக்கு எதிராக வைக்கும் ஞாயங்களில் முதன்மையானது மனிதாபிமானமோ, அனுதாபமோ அல்லது மரணதண்டனைப் பெற்றவர்களின் குடும்பம் பிறகு சந்திக்கும் பாதிப்புகள் குறித்தோ அல்ல, மாறாக கொலை என்பது மரணம் விளைவித்தக் குற்றம் என்ற வகைப்படுத்தப்படும் போது மரண தண்டனை என்பது மற்றுமொரு கொலைக்கான ஒப்புதல் பெற்ற ஆணை என்றே பொருள், கொலையும் அதன் மூலம் பெறும் மரணத்தின் வலியும் அதன் பாதிப்பும் கொடுமையானது என்றே உணரும் எவரும் அதை இன்னொருவருக்கு பரிந்துரைக்க மாட்டார் என்கிற மிக மிக அடிப்படைப் புரிதலில் தான் மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன் தான். பல கொலைகளை செய்துவிட்டு சாட்சியோடு மாட்டிக் கொள்பவன் மட்டுமே தண்டனைப் பெறுகிறான் என்பதால் மரண தண்டனை என்பது சமூகத்தில் குற்றங்களைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, 

எந்த ஒரு நாட்டிலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் என்ற சட்டம் இருந்தால் அதனை லாவகமாக மீறுகிறவர்களும் இருக்கிறார்கள். மாட்டிக் கொள்ளாதவர்கள் தவிர்த்து மற்றவர்கள் தண்டனைப் பெறுகிறார்கள், கூலிப்படைகளின் செயலும், அவர்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களும், மதவெறியர்களும்ம், தீவிரவாதிகளும் தீட்டும் திட்டங்கள் தவிர்த்து கொலைக்கானக் காரணங்கள் முன்கூட்டியே முடிவு செய்யப்படாத நிலையில் இழைக்கப்படும் கொலைக் குற்றங்கள் யாவும் சற்றே உணர்ச்சி வசப்படுவதால் நடைபெறுவது தான். ஒன்பது கொலை செய்த ஜெயபிரகாசும் கூட திட்டமிட்ட கொலை செய்யவில்லை, உணர்ச்சி வசப்பட்டு தான் கொலை செய்தான், சிறையில் அவனது நன்னடத்தை அவனை விடுதலை செய்ய வைத்தது, எங்கு இருக்கிறான் என்றே தெரியாத நிலையில் அவனும் சமூகத்தில் இருந்து மறைந்தே வாழ்கிறான், வாழ்கிறான் என்றாலும் அவனால் நாள் தோறும் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியுமா ? என்பது கேள்விக் குறி.

கொலைக்கு தீர்ப்பு கொலை - காட்டுமிராண்டித் தனமானது என்கிற என் சிந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
கொலைக்கு தீர்ப்பு கொலை என்பது அடுத்த கொலை.

இறந்தவர்களை மீட்டெடுக்க திறன் அற்ற மனித சமூகத்திற்கு உயிருடன் இருப்பவர்கள் குற்றவாளிகள் என்பதால் கொன்றுவிடும் உரிமை எதை மீட்டுத் தரும் ?

கொலையால் பாதிக்கப்பட்ட சமூத்தின் மன நிலை தெரிந்தால் மரண தண்டனை எதிர்க்க மாட்டீர்கள் ?  என்று கேட்போருக்கு ..... மரண தண்டனையால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தில் ஒருவராகவோ, அவரது மனைவியாகவோ இருந்தால் மரண தண்டனை நியாயம் என்று சொல்ல முடியுமா ?

குற்றவாளிகள் தனிமைபடுத்தப்பட வேண்டியவர்கள், கொத்தடிமையாகக் கூட மாற்றி அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பதில் எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக்காது, நானே பாதிக்கப்பட்டாலும் கூட.

*********

திட்டமிட்ட படுகொலைகள் கூட தன்னுடைய விருப்பமில்லாமல் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் குற்றத்திற்கும்  அதை செய்த குற்றவாளிக்குமான தொடர்ப்பு ஒரு ஆயுதம் என்ற அளவில் தான், ஆனால் தூண்டியவர்களை (ஆதாரமில்லை) என்று விட்டுவிட்டு (ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்டர்ம் முறைகேட்டில் அதன் நிறுவனருக்கு சம்மன் அனுப்பாமல் உயர் அதிகாரிகளை மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து நீதிமன்ற காவலாக சிறையில் வைத்தார்கள்). கொலைக் குற்றத்திற்கான தண்டனை என்ற பெயரில் ஆயுதங்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது இதையெல்லாம் சரியான நீதி என்று எப்படிச் சொல்ல முடியும் ? சிங்கப்பூரினுள் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை என்பது எல்லோருக்கும் தெரியும், அதில் சிறிய மாற்றமாக கூரியர்களாக முதல் முறை குற்றம் செய்பவர்களின் தண்டனைகள் குறித்து பரீசீலிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவித்துள்ளனர், இது ஒரு நல்ல மாற்றம் தான், உதாரணத்திற்கு சென்னையில் இருந்து கிளம்பும் ஒரு அப்பாவி பயணியிடம் இந்த மாத்திரையை எங்க சொந்தக்காரர் ஒருவர் சிங்கை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்வார், அவரிடம் சேர்த்துவிடுகிறீர்களா ? என்று கூறி போதை மாத்திரைகளைக் கொடுக்க, இன்பாமர் மூலம் தெரிந்து கொள்ளும் அரசு கொண்டுவரும் நபரை அப்படியே அள்ளி நீதிமன்றத்தில் கொண்டு சேர்த்து கையில் இருக்கும் பொருளை உறுதி செய்து மரண தண்டனை அளித்துவிடுவார்கள். இங்கு நாம் சிந்திக்க வேண்டியது கொண்டுவரும் நபர் உதவி செய்யும் மனப்பான்மையில் உள்ளவர் என்ற நிலையில் சற்று சுதாரிப்பு இல்லாத நிலையில் அவர் பெரும் சிக்கலுக்கு ஆளாகிறார்,  அந்த குறிப்பிட்ட போதைப் பொருளைக் கொடுக்கச் சொன்னவன் உறவினராகக் கூட இருப்பான், இருந்தாலும் நபர் சிக்கிய பிறகு நான் அவ்வாறு எதையுமே கொடுக்கவில்லை என்று அவனால் சாதித்துக் கொள்ள முடியும். அப்பாவியாக இருந்து ஏமாற்றப்பற்றவர்களை ஏன் தூக்கில் போட வேண்டும் ? ஆனாலும் அவர்கள் இழைத்தது குற்றம், கவனக் குறைவானது என்றாலும் குற்றம் தான் என்பதற்காக சிறை தண்டனைக் கொடுக்கலாம், அதன் மூலம் எச்சரிக்கை கொடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. 

மரண தண்டனைகள் குறித்த சிந்தனைகள் நாட்டுக்கு நாடு மனித உரிமை மற்றும் மனிதாபிமான மன நிலை வளச்சிக்கேற்ப மாறும் போது, இஸ்லாமிய பதிவர்கள் குறிப்பாக வஹாபிகள் மரண தண்டனை தேவை என்றே வாதிடுகிறார்கள்.

மரண தண்டனைக் குறித்த வஹாபிகளின் பிடிவாதங்களுக்கு காரணம் ? கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்,. கைக்கு கை மற்றும் பாலியல் குற்றத்திற்காக பெண்களை கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனைகள் சவுதியில் / ஈரானில் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் இன்னும் நடைபெறுகிறது. இஸ்லாம் சொல்வதெல்லாம் சரி என்னும் போது மரண தண்டனைக் குறித்த இஸ்லாம் பார்வையும் சரியானதே என்று சாதிப்பதற்காக வஹாபிகள் மரண தண்டனை கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

சரி, 
கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்டவை நடத்திய பாட்சா, மதானி உள்ளிட்டோருக்கு இதுவரை எத்தனை முறை நீங்கள் மரண தண்டனை தரவேண்டும் என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறீர்கள் ? என்று கேட்டால் மட்டும் அவர்கள் 'ஆர் எஸ் எஸ் சிந்தனை வெளிப்பாடு இவ்வாறு உங்களைக் கேட்கத் தூண்டுகிறது பாட்சாவின் குண்டுவெடிப்பு குற்றம் நிறுபனம் ஆகும் போது பார்க்கலாம் என்கிறார்கள், ஆனால் மோடி வகையறா நீதிமன்றத்தால் தண்டனை பெறாத நிலையில் இவர்கள் அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதிவிடுகிறார்கள்.

மதானி குற்றவாளி இல்லை, நீதிமன்றம் விடுவித்துவிட்டது, அவரை குற்றவாளி என்று சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்கிறார்கள், சாட்சி அடிப்படையில், ஆதாரம் / ஆதாரமில்லா அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது நமக்கு தெரியாதா என்ன ? ஆனாலும் மதானிக்கு பொறுத்திப் பார்க்கும் ஞாயத்தை இவர்கள் கொலைக் குற்றத்தில் விடுதலையாகும் காவிக் கும்பலுக்கும் பொறுத்திப் பார்ப்பார்களா ? உதட்டைத்தான் பிதுக்க வேண்டும்,


இன்னும் சிலர் நேர்மையாக பதில் சொல்வதாக, ஞாயம் பேசுவதாக நினைத்து, 'கோவை வெடிகுண்டு வெடிப்பின் மூல காரணம் அதற்கு முன் பத்தொன்பது பேரை காவிக் கும்பல் வெட்டி தீர்த்தது தான்......என்று சொல்லிவிட்டு அவர்களை தண்டித்தால் (பாட்சா என்று பெயரைக் குறிப்பிட்டு சொல்லாமல்) கோவை வெடிகுண்டு குற்றவாளிகளையும் தண்டிக்கலாம் என்கிறார்கள்

ஹலோ.......எவனோ 19 பேரை படுகொலை செய்ததற்கு கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்றது எந்த விதத்தில் ஞாயம் ? 40 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணியில் கொலைகாரனைத் (இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயிடுவை) தானே  தலையை வெட்டினார்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். மாறாக கொலைகாரனின் சாதிக்காரர்களை கொல்லவில்லையே ?  ஊரையே கொளுத்தவில்லையே, பழிக்கு பழி கொலைகளை ஏன் பொது மக்கள் மீது செயல்படுத்த வேண்டும் என்ற எனது கேள்விக்கு........ஒருவரும் பொறுப்பாக பதில் சொல்ல முனையவில்லை.

இவர்கள் மட்டுமல்ல காவிக் கும்பல் கூட சங்கர ராமன் படுகொலைக்கு பெரியவாளுக்கு மரண தண்டனைக் கேட்டு இருக்கிறதா ? கோர்ட் தண்டிக்கட்டும், குற்றவாளியாக நிறுபனம் ஆகட்டும் அப்பறம் (மேல் கோர்டில்) பார்க்கலாம் :) என்று தானே சொல்கிறார்கள்.

மரண தண்டனைக்கு ஆதரவான குறிப்பிட்ட மதரீதியிலான, அரசியல் ரீதியிலான நியாங்கள் எப்போதும் சமூகத்தின் மீதும் பொது மக்களின் மீதும் மிகுந்த அக்கறை உள்ளது போலவும், குற்றமற்ற சமூகத்தை உருவாக்குவது போலவும், நீதி நிலை நாட்டப்பட்டே ஆகவேண்டும் என்பது போலவும் நீட்டி முழக்கப்படுகிறது, அவர்களின் பின் புலன்களைப் பார்த்தால் அவர்கள் ஒருதலைப் பட்சமானவர்கள், அவர்கள் வழங்கும் பரிந்துரைகள் அவர்கள் சமூக / அரசியல் சார்ந்த குற்றவாளிக்கு பொருந்ததாது என்ற நிலையில் தான் வாதிடுகிறார்கள்.

பின்லேடன் தூண்டுதலில் அமெரிக்க ரெட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்படவில்லை, அதெல்லாம் அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என்றே இதே மரண தண்டனை ஆதரவு நியாயவாதிகளில் பலர் வெளிப்படையாக பின்லேடனை புனிதனாக, இஸ்லாமிய போர்வீரனாக, மாவீரனாக, மாசற்றவனாக முன் நிறுத்துகிறார்கள், அதன் தொடர்பில் தான் பின்லேடனுக்கு சென்னை மசூதியில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

உன்னைப் போல் ஒருவன் படத்தையும் விருமாண்டி படத்தையும் ஒப்பிட்டு மரண தண்டனைக் குறித்த கருத்துகளில் கமலஹாசன் தடுமாறுகிறார், தடம் மாறுகிறார், சினிமாவுக்காக எதைவேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறார்கள் என்று கண்டனமாகவே நான் எழுதினேன், உன்னைப் போல் ஒருவன் படத்தின் தண்டனைகளை இவர்கள் ஞாயம் என்றும், குற்றவாளிகள் குற்ற முகாந்திரம் இருப்பதாக காட்சி இருப்பதால் அதில் தரும் மரண தண்டனை தவறு அல்ல என்றும் சொல்லுவார்களா ?

இணைப்பு :

தற்கொலை தாக்குதல்களும் மரண தண்டனைகளும் !



24 மே, 2012

'சுன்னத்' - சுவனப்பிரியன் செய்த அறுப்பு வாதம் !

நண்பர் சுவனப்பிரியன் தனது மதம் சார்ந்த பிரச்சாரங்களை மதம் சார்ந்தது என்று எழுதாமல் மாற்றுவழியில் மனிதனுக்கு மகத்தான நன்மை என்ற ரீதியில் சுன்னத் பற்றி ஒரு பதிவை எழுதி இருக்கிறார். இதே போன்ற அவரது பதிவுக்கு எதிர்வினை ஏற்கனவே எழுதப்பட்டது என்றாலும், அவரது மத ரீதியிலான பொய் பிரச்சாரங்களை அவ்வப்போது நாமும் விமர்சிப்பதன் மூலம் அவரது பிரச்சாரங்களை முறியடிக்க முடியாவிட்டாலும், அவரது பதிவைப் படித்துவிட்டு 'மாட்டிக் கொள்ளாமல்' பாலியல் தொழிலாளியை நாடி உயிர்கொள்ளி நோயை ஒரு சிலர் ஆட்கொள்ள நேர்ந்தால் தடுக்க முடியும் என்பதால் இதை மீண்டும் எழுதுகிறேன், மற்றபடி அவர் பதிவை எவரும் பெருட்படுத்தமாட்டார்கள் என்றால் எனக்கு ஒன்றும் இல்லை.

சுவனப்பிரிய ன் முதலில் பதிவுக்கு தலைப்பு ''சுன்னத் பண்ணுங்க! எய்ட்ஸை விரட்டுங்க!' ' என்று தான் வைத்திருந்தார், பின்னர் ' 'சுன்னத்'(கத்னா) பண்ணிக் கொள்ளும் ஜிம்பாப்வே எம்பிக்கள்!' என்று மாற்றியுள்ளார்.

சுன்னத் எய்ட்ஸ் நோயை தடுக்குமா ? என்பதற்கு முன்பு சுன்னத் வரலாறு பற்றிப் பார்ப்போம், ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோலை அகற்றிக் கொள்ளும் பழக்கம் யூத இனத்தின் பழக்கமாக இருந்தது, இதற்கு அடிப்படைக்காரணம் கடும் குளிர் மற்றும் வரட்சி ஆகிய காரணங்களுக்காக அவர்களிடையே குளிக்கும் பழக்கமும் குறைவாக இருந்தது, அதனால் பருவமடைந்த ஆண்களுக்கு ஆண்குறியில் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு அதற்கான தீர்வு முந்தோலை அகற்றிக் கொள்ளுதல் என்று வழக்கமாக பின்னர் மதக்கடமைகளில் ஒன்றாக வழியுறுத்தப்பட்டது, பூணூல் அணிந்தவர் 'உயர்ந்தோர்' என்று பரப்பட்டதைப் போல் சுன்னத் செய்து கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள் என்ற கருத்து யூதர்களிடம் இருந்து பின்னர் அவ்வாறு செய்து கொள்ளாதவர்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆனதும், ஏற்கனவே யூத மதம் என்கிற நிறுவனத்தை துவங்கியவர்கள் என்ற நிலையில் யூத இனம் மேலனதாகவும், அவர்களது செயல்கள் உயர்ந்த பண்பு நலன் சார்ந்த, நாகரீகமேன்மை பட்டதாகவும் அரபுக்களிடமும், ரோமானியர்களிடமும் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது, பின்னர் யூத மதப்பிரிவுகளாக கிறிஸ்தவமும், இஸ்லாமும் பிரிய 'சுன்னத்' செய்து கொள்வது மதப் பழக்கம், ஒழுக்கம் சார்ந்தவை என்பதாக கொள்கையாக்கிக் கொள்ளப்பட்டது. 19 நூற்றாண்டிற்கு முன்பே கிறிஸ்தவ பிரிவு சுன்னத் செய்து கொள்ளும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டது, இன்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் யூதர்கள் அல்லாத கிறித்துவர்களில் சுன்னத் செய்து கொள்பவர்கள் 5 விழுக்காட்டிற்கும் குறைவே.

சுன்னத் செய்து கொள்ளாத ஐரோப்பிய பிரபலங்கள் Famous Intact Men குறித்த தகவல்களை அந்த இணையத் தளத்தில் காணலாம்.

இஸ்லாமியர்கள் சுன்னத் பழக்கம் கைவிடப்படாமல் இருப்பதற்குக் காரணம் ? வேறு ஒன்றுமே இல்லை, அவை குரானிலும் கதீசிலும் சொல்லப்பட்டு கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை. குரான் கட்டளையை மீற அவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் அவர்களால் அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க முடியாது. அதை ஞாயப்படுத்தச் சொல்லி யாரும் கேட்காவிட்டாலும், நெற்றியில் கிரல் விழுந்த ஒருவர் உலகில் உள்ள எல்லோருக்கும் அதே கீரல் இருந்தால் தன்னைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்பதாகத் தான் இவர்கள் அதை மற்றவர்களுக்கு 'பரிந்துரை' செய்கிறார்கள்.

சுன்னத் செய்து கொள்வது எய்ட்ஸ் பரவலை தடுக்கிறதா ?

இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, காரணம். எய்ட்ஸ் பரவல் பாதுகாப்பற்ற பாலியல் உறவால் பரவுகிறது என்றாலும், அவ்வாறு பாதுக்காப்பற்ற பாலியல்உறவை நாடும் சுன்னத் செய்யப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ளாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சுன்னத் செய்யப்பட்ட ஆண் ஒருமுறை பாலியல் தொழிலாளியை நாடி நோயைத் தொற்றிக் கொள்ளவில்லை என்றால் அடுத்த் முறை அவர் கவலைப்படாமல் செல்லலாம் என்று சொல்ல ஒன்றும் இல்லை. உலக சுகாதார நிறுவனங்கள் இத்தகைய பொய் பிரச்சாரங்களை நிராகரித்துவருகின்றனர், மாறாக பாதுக்காப்பான பாலியல் உறவை நாடச் சொல்லுகிறார்கள்.

மனைவியர் தங்கள் கணவனை சுன்னத் செய்து கொள்ளச் சொல்வது 'நீ பாலியல் தொழிலாளியிடம் சென்றுவருவதை நான் மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறேன்' என்பதே ஆகும், கணவனின் வருமானம் மட்டும் போதும் எங்கு 'போனாலும்' கவலை இல்லை என்று எந்த ஒரு மனைவியும் நினைக்கமாட்டாள். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு எய்ட்ஸ் என்பது காற்றில் பரவும் நோய் சுன்னத் செய்து கொள்ளாதவர்களை அது 'கப்' என்று பிடித்துக் கொள்ளும் என்ற தகவல் பரப்பட்டாலன்றி அறிவுள்ள எவரும் நன்றாக ஒழுக்கமாக நடந்து கொள்ளும் கணவனை நீ அறுத்துக் கொண்டு வா என்று சொல்லமாட்டார்கள், ஒருவேளை ஆப்பிரிக்க பெண்களுக்கு எய்ட்ஸ் காற்றில் பரவும் நோய் என்று சொல்லப்பட்டதோ ?

கணவர்களான ஆண்களுக்கு சுன்னத் வழியுறுத்தும் சுவனப்பிரியன் மனைவியர்களான பெண்களுக்கு என்ன வழியுறுத்துவாறோ ? ஆப்பிரிக்க நாடுகளில் செய்யப்படும் பெண்களுக்கான சுன்னத் ?

*****

சுன்னத் செய்வது என்பது காட்டுமிராண்டி பழக்கம், இதை மதப் பழக்கம் என்றால் அதில் சொல்வதற்கு விமர்சனம் செய்ய ஒன்றும் இல்லை, அலகு குத்தி காவடி எடுப்பதற்கு என்ன விமர்சனமே அதே போன்றதுதான், அது அம்மதப் பழக்கவழக்கம் யாருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை இல்லை, செய்து கொள்பவர்களுக்கு இல்லாத அக்கரை நமக்கு ஏன் என்று விட்டுவிடலாம். ஆனால் அது பொதுவானது, கடைபிடிக்க வேண்டியது என்னும் போது தான் நாம் விமர்சனம் செய்கிறோம், மதக் கடமை என்றாலும் இவை காட்டுமிராண்டி பழக்கம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. காரணம் ?

முதலில் சுன்னத் செய்து கொள்வதோ உடலில் ஏதேனும் மாற்றம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பம் என்றாலும் இவை ஒருவரிடம் அவருடைய அனுமதி பெறாமல் செய்வது கொடுமையான ஒன்று, குறிப்பாக ஆண் குழந்தைகள் பிறந்ததும் இரண்டு வயதிற்குள் மதக் கடமை என்று நிறைவேற்றிவிடுகிறார்கள், அதில் குழந்தைக்கு என்ன விருப்பம் இருக்க முடியும் ? ஒரு ஆண் வளர்ந்த பருவ வயதில் மதக் கடமை ஒன்று இருக்கிறது நிறைவேற்றுவது உனது கடமை என்று சொன்னால் அவனுடைய விருப்பம் பற்றி கேட்கும் ஒரு வாய்ப்பு அது பற்றிய மத ரிதியிலான புரிந்துணர்வும் அவனுக்கு இருக்கும், அவனுடைய அனுமதியுடன் அதை செய்துவிடமுடியும், ஆனால் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளை மதக் கடமைகள் என்று கூறி அறுத்துப் போடுவதை (Child Abuse) மதக் கடமை என்று நியாப்படுத்தினாலும் அதை காட்டுமிராண்டித் தனம் என்று விமர்சனம் செய்வதில் தவறே இல்லை.

*****

ஒரு சில ஆண்களுக்கு பிறவி குறைபாடாக முன் தோலை பின்னுக்கு தள்ள முடியாத நிலையில் மருத்துவ தீர்வாக சுன்னத் செய்யப்படுகிறது, மற்றபடி நல்ல நிலையில் இருக்கும் ஆணை அறுத்துக் கொள்ளச் சொல்வதில் எந்த ஒரு அறிவார்ந்த செயலும் இருப்பதாகத் தெரியவில்லை, பாலியல் நோய் பற்றிய விழிப்புணர்வில் பாதுகாப்பான உடல் உறவுக்குத்தான் வழியுறுத்த வேண்டுமே அன்றி சுன்னத்தை முதன்மைத் தீர்வாக செல்வது அறியாமையின், மதப்பற்றின் வெளிப்பாடே.

கைவிரல்களில், நகங்களில் அழுக்கு சேராத நாளே இல்லை, கை கழுவி விட்டு தான் சாப்பிடுகிறோம், அதற்காக நகங்களை வேருடன் பிடுங்கிக் கொள்ளுங்கள், கரண்டியால் சாப்பிடப் பழகுகங்கள் என்று யாரும் சொல்வது கிடையாது, ஆண்குறியில் அழுக்குகள் சேர்வது இயல்பான ஒன்று நாள் தோறும் குளிக்கும் போது அதை கழுவ எவ்வளவு நேரமாகும் ? அதைத் தவிர்க்க ஏன் வெட்டிக் கொள்ள வேண்டும் ? என்றோ ஒரு நாள் பல்வலிவரலாம் பற்களை பிடுங்கிக் கொள் நல்லது என்றால் பல்லின் பயன் ? முற்றிலும் இழக்கிறோம். அதே தான் சுன்னத் செய்து கொள்ளும் ஆண்கள் ஆண் உறுப்பின் மென்மையை இழக்கிறார்கள், அதானால் கிடைக்கும் முழுமையான உடல் உறவு மற்றும் தன்னின்ப பழக்கத்தின் முழுச் இன்பத்தையும் இழக்கிறார்கள். ஏற்கனவே சுன்னத் செய்யப்பட்டு உணர்வு நரம்புகளின் உணர்வுகள் குறைந்த நிலையில் அதன் மீது ஆணுறையும் அணிந்து கொள்ளும் ஆண்களுக்கு உடலின்பம் என்பது 50 விழுக்காடு கிட்டுமா ? என்பதே ஐயம். சுன்னத் செய்யப்பட்ட ஆண்குறி ரப்பர் ஆண்குறிகளைவிட சற்று துடிப்பானது என்று மட்டுமே சொல்லலாம், இயற்கை வழங்கிய அற்புதமான முன் தோலை வெட்டிக் கொள்வதால் ஆண்களுக்கும் நட்டம், அதை வெட்டிக் கொண்டு பாலியல் தொழிலாளியை நாடிவாருங்கள் என்று சொல்ல பெண்களுக்கும் நட்டம்.

இவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் ? வேறு என்ன ? மேலே சொல்லி உள்ள 'முகத்தில் கிரல் பட்டவன் நிலையே' நாம் அவர்களைப் பார்த்து பரிதாப்படுவோம், ஆண் குழந்தைகள் சுன்னத் செய்வதிலிருந்து முற்றிலும் காப்பற்றப்படவேண்டும், மதவாத மூடப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் ஒழிய வேண்டும்.

சுன்னத் செய்யச் சொல்வதைவிட இரண்டு குழந்தைப் பெற்ற ஆணை கு.க செய்யது கொள்ளச் சொல்வது தான் மிக முக்கியமானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கள்ளத் தொடர்பில் உருவாகும் கருவையும் தடுக்க முடியும்.

Rights of Parent and Child

Infant circumcision violates the UN Declaration of Human Rights.
Article V, United Nations Declaration of Human Rights states that "No one shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment." It says nothing about circumcision of infants nor when it is chosen by adolescents and adults. This Article is aimed fairly and squarely at the treatment of captives, prisoners and suspects by law enforcement and military authorities. Its only relevance to circumcision is to prohibit this as a forcible treatment of captives or prisoners.
Circumcision, with its proven prophylactic benefits, cannot ever be officially regarded as contravening the UN Declaration when performed by suitably qualified persons at the request of the patient or his legal guardians.
Parents have no right to inflict circumcision on their sons.
Numerous research projects have shown that there is a small net prophylactic (i.e. preventative) benefit from infant circumcision which doesn't accrue if the circumcision is performed after infancy. Furthermore, in a number of cultures the religious or social norm is for boys to be circumcised. If a boy is not circumcised as an infant then these benefits are denied to him.
An infant cannot make his own decision to be circumcised (just as he cannot make his own decisions about immunisation, religious upbringing, choice of schooling, etc). Parents have a right and a duty to make, on behalf of a child, those decisions which he cannot make for himself. It is thus up to the parents to make the decision based on what they see as the benefits and risks. They make many other far-reaching decisions for their children every day, so why not this one too?
Infant circumcision is highly traumatic for the boy.
There is little evidence that circumcision itself is more than slightly stressful for the average baby. All babies cry when they are undressed or restrained. Many babies sleep quite peacefully through their circumcision, whilst others go to sleep contentedly as soon as they are comfortably dressed again after it.
General anaesthetics should normally be avoided with infants, but a small amount of local anaesthetic to provide a dorsal penile nerve block can be used. Most doctors (and all Jewish Mohels) prefer to completely avoid the small risks posed by any anaesthetic agents. Instead, a few drops of wine or a sugar solution pacifier have been found to have excellent results.
A baby's nervous system is not as highly developed as in an older child, although he can feel some pain, neither is his memory. A baby cannot localize any pain from his circumcision; has no sense that his penis is in any way different from any other part of his body; and doesn't remember anything of the circumcision (whereas an older child - say over 2 years old - will localize and remember any pain).

இணைப்பு : 12 Reasons to Say “No” to Circumcision

3 மே, 2012

இவர்களால் மட்டும் எப்படி ? எல்லாம் (ஏக) இறைவனின் ஆசி !

நான் கடந்த 4 - 5 மாதங்களாக வலைப்பதிவுகளை குறிப்பாக தமிழ்மணம் திரட்டியில் வரும் வலைப்பதிவுகளைப் பார்க்க ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது.

உலகத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல அமைதியான மார்க்கம் வாஹபிய மார்க்கம் தான். வஹாபியர்களின் சுறுசுறுப்பும், ஒற்றுமையும், இறை அச்சமும், இறைப் பற்றும், இறைப் பறைச்சாற்றலுக்கும் முன் ஒரு பய மார்த்தட்ட முடியாது. அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் என்ன என்ன நான் கேள்விபட்ட வரையில் அவர்களது செயல் திறன் சிலிர்க்க வைக்கிறது, ஒற்றுமையாக ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதுவதாகட்டும், அதில் கள்ள ஓட்டோ நல்ல ஓட்டோ ( மற்றவர்கள் ) போட்டு குத்தாது தற்காத்து தாமே ஓட்டுகளைப் போட்டு கண்ணும் கருத்துமாக குத்தி மகுடம் ஏற்றுவதாகட்டும் வியக்க வைக்கிறார்கள், சிலிர்க்க வைக்கிறார்கள். இதைப் படித்து வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரிந்தால் உங்களுக்கு வாசிப்பு அனுபவமே இல்லை என்றே சொல்வேன். இவர்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்றைய உலகத்தில்  இவர்களது வஹாபிய மார்க்கம் தான் வேகமாக வளர்க்கிறது, தொடர்ந்து இவர்கள் மகுடம் ஏற்றும் பதிவுகள் அதைத்தான் சொல்கின்றன. உங்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் சிலை வணங்கி உங்களுக்கு ஏக இறைவனின் ஆதரவு இல்லை, நீங்கள் செய்வது இறைச் சேவையும் இல்லை. இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியம்  ? ஆச்சர்யபட்டீர்களா ? நானும் வியப்படைந்தேன் ஏக இறைவனின் ஆசி இல்லாமல் இவர்களால் இவ்வளவு ஒற்றுமையாக செயல்படமுடியாது, இதை மறுப்பவர்கள் இந்தப் பதிவுக்கு நெகட்டிவ் வாக்குப் போடலாம். 






Add caption
Add caption

Add caption


Add caption



(யாராவது வஹாபி நண்பர்கள் பெயர் விட்டிருந்தால் மன்னிக்கவும், எனக்கு போதிய நேரமின்மையால் உங்கள் அத்தனை பேரின் மகுடங்களை ஸ்கீர்ன் ஷாட் எடுக்க முடியவில்லை, இருந்தாலும் 30 நாளைக்கு 25 பதிவுகளுக்கு மேல் உங்களது தான் மகுடம் சூட்டியது என்பதை நான் சாட்சியாகவும், வாழ்த்தாகவும் தெரிவித்துக் கொள்கிறேன், ஆமினா போல் 55 வாக்குகளை ஒருத்தனும் இதுவரை வாங்கவில்லை)

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடுவதைத் தெரிந்ததால் தான் என்னவோ, இது போல் இந்தியாவில் ஓடினால் இந்தியா எப்படி இருக்கும், கூடவே அல்லாவின் ஆட்சி நடந்தால் எப்படி இருக்கும் ? நம் வாஞ்ஜையுடன் வாஞ்சூர் ஐயாவைக் கேளுங்கள், கேடுகெட்ட இந்தியா, அசிங்கப் பிடித்த இந்தியா, நாகரீகமற்ற இந்தியா எப்படி இருக்கும்? இது பற்றி இதுவரை ஒரு 10 பதிவாக எழுதி இருப்பார்,. இவருக்கு இருக்கும் தேசப்பற்று தான் என்னை சிந்திக்க வைக்கிறது, இறைவன் நாடி இந்தியாவில் இஸ்லாமிய வஹாபிய ஆட்சி ஏற்படும் போது நம் வாஞ்சூர் ஐயாவின் இந்தியாவின் மீதான வருத்தமெல்லாம் நீங்கி இருக்கும்.
(வாஞ்சூர் ஐயாவின் விடா முயற்சிக்கு என் வாழ்த்துகள், இந்த காஃபீரின் வாழ்த்து உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெரியும், இருந்தாலும் என் திருப்திக்காக வாழ்த்துகிறேன், எங்காளுங்க சாகுற வயதானால் (தான்) சங்கரா சங்கரான்னு சொல்லுவாங்க, ஆனா ஒருத்தரும் உங்களைப் போல் இறைச் சேவை செய்யமாட்டார்)

ஒருவனுக்கு முக்கியத் தேவை நாட்டுப் பற்றா ? இறைப் பற்றா ? இதில் என்ன சந்தேகம், இறைவனின் படைப்பாற்றலை ஒப்பிட நாடு என்பதே அற்பம், இதன் மீது பற்று வைப்பதைக் காட்டிலும் இறைப் பற்று எவ்வளவோ மேல், நாட்டு பற்று 'நாம் சிட்டிசன் ஆப் வேர்ல்ட்' ஆக இருக்கும் வரை தான், அதன் பிறகு மறுமை இந்த நாடு எப்படிப் போனால் என்ன ? இறைப் பற்றில் இளைப்பாருங்கள், அதைத் தான் நம் வாஞ்சூர் ஐயா 'இந்தியாவின் அவலங்கள் இவை' என்று தோல் உறித்துக் காட்டுகிறார். மார்க்கத் தடையில்லை என்றால் இந்தியாவில் பிறந்ததற்காக உயிரை விட்டு இருப்பார். சிந்திக்க வேண்டாமா மனிதர்களே, அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவலங்கள் நிறைந்த நாட்டில் ஒரு வஹாபியாக பிறந்தது மட்டுமே, அவருக்கு ஜென்மங்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் அடுத்த பிறவியில் அரேபியாவில் பிறக்கவும் என்று என்னால் வாழ்த்தவும் முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு இந்தியா மீது இருக்கும் வெறுப்பான பற்றிற்கு என் வாழ்த்துகள், உங்களைப் போல் குடிமகனைப் பெற இந்தியா தான் தவம் செய்திருக்க வேண்டும். அரேபிய அவலங்கள் என்று எவரேனும் எதிர்பதிவு போட்டு படம் போட்டால் நம்பாதீர்கள், நாட்டில் கிராபிக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்த நயவஞ்சகர்கள் நிறைய உண்டு, அவர்கள் உங்களை காழ்புணர்வால் தூற்றுவதற்கும் இட்டுக் கட்டிய படங்களைக் காட்டக் கூடும்.

யா அல்லா, இந்தியாவில் உன் நல்ல ஆட்சியை நயவஞ்சக வெள்ளையர்கள் களைத்துவிட்டார்கள் மீண்டும் அது ஏற்படுமா ? ஏற்படும் என்கிறார் நண்பர் சுவனப்பிரியன் இந்தியாவில் அவருடைய மார்க்கம் வேகமாக வளர்ந்துவருகிறதாம். எல்லாம்..... எல்லாம் வல்ல அல்லாவின் ஆ(ட்)சி நாம என்ன செய்ய ? நானும் அவருடைய மார்க்கத்திற்கு திரும்ப வேண்டுமாம், மார்க்க சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமாம், தீர்ப்பு நாளில் நிற்க வைத்து அல்லா கேள்வி கேட்கும் பொழுது சுவனப் பிரியன் எனக்கு ஒழுங்காக புரியும் படிச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவருக்கு கிடைப்பதில் எண்ணிக்கை குறையுமாம். எல்லாம் சரி தான் ஆனால் எனக்கு குபீர்னு செண்ட் அடித்துக் கொள்பவர்களுடன், பலநாள் மழிக்காத தாடி உள்ளவர்களுடன் சொர்கம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையே., மயக்கமாகி சொர்கத்தில் கிடப்பதைவிட அல்லாவின் தண்டனையை ஏற்று சுவனப் பிரியன் நல்லா தான் விளக்கினார் நான் தான் வெளங்கிக் கொள்ளவில்லை, நம்பவில்லை என்று இறைவனிடம் கூறி அவருக்கு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நகரம் செல்ல இருக்கிறேன்.

இதை யாரும் நக்கல் பதிவாகக் கொள்ளவேண்டாம்.

***********

தமிழ்மண மகுடத்தை கைப்பற்றுவதில் காஃபிர்கள் தோல்வி அடைந்துவிட்டனர், ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதற்கு தான் நான் இங்கே சாட்சிகளை வைத்துள்ளேன்.  பதிவை மகுடம் ஏற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா ? கள்ள ஓட்டைப் போட்டு கீழே தள்ள காஃபிர் கும்பல் சதி தீட்டும், இதையும் மீறி இம்புட்டு பேர் நாளொரு மேனியும் பொழுதெருவண்ணமும் மகுடம் ஏற்றுவதைப் பார்க்க அவங்க ஒழைப்பு எனக்கு பிடிச்சிருக்கு.  இதை நான் மனதில் கொள்ளும் போது இதே வேலையாக இவர்கள் இருப்பதால் தொழுகையை தவறி இறைதண்டனைக்கு ஆளாகிவிடுவார்களோ, வேலையை இழந்துவிடுவார்களோ என்று நானும் அச்சப்படுகிறேன், ஆகவே நண்பர்களே நீங்கள் வேண்டுகோள் வைத்தால் தமிழ்மணம் மகுடம் பகுதியை வஹாபிய மகுடம் என்று மாற்றி அவர்களது பதிவு ஒவ்வொன்றாய் மணிக்கு ஒரு முறை மாற்றி மாற்றி காட்டும், அவர்களுக்கு தேடித் தேடி வாக்குப் போடும் நேரமும் மிச்சம், தொழுகையை ஒழுங்காக தொழுது இறைவனின் அன்பையும் மறுமை வாழ்வில் மேன்மையும் பெறுவார்கள். 

தமிழ் மணம் திரட்டிக்கு பணிவான வேண்டுகோள் 'தமிழ்மணம் மகுடம்' என்பதை 'வஹாபிய மகுடம்' என்று பெயர் மாற்றி எங்களது அன்பு வஹாபிய நண்பர்களுக்கு உதவுங்கள், சக பதிவர்கள் நீங்கள் எந்த ஒரு பிற பதிவுக்கும் வாக்கு செலுத்தி வஹாபியர்களின் இறைச் சேவையை நிந்தித்து இறை தண்டனை[ப் பெற வேண்டாம்.

இறைவன் மிகப் பெரியவன், மகுடம் ரொம்ப ரொம்ப சிறுசு. ஆகாவே வஹாப்பி அல்லாத பதிவர்கள் தமிழ்மண மகுடத்தை வஹாப்பிய பதிவர்களுக்கே விட்டுக் கொடுங்கள் / பெயர் மாற்ற பரிந்துரை செய்யுங்கள்.

இன்ஷா அல்லா, மாஷா அல்லா !

இந்தியாவில் நல்லாட்சி ஏற்படும் முன் இந்த தமிழ்மணத்தை வஹாபிய மணமாக்கிக் நல் அத்தாட்சி வைத்துவிட்டாய். நீயே மிகப் பெரியவன்.

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன் 3:54

ஏக இறைவனின் ஆசி பெற்றவர்களிடம், அவன் புகழ் பாடுபவர்களிடம் மோதினால் தோல்வி என்று நன்கு உணர்ந்து கொண்டேன், இனி அவர்கள் என்ன எழுதினாலும் (இறை நாடினால் அன்றி) இனி இது குறித்து எதுவுமே சொல்வதாக இல்லை.

26 மார்ச், 2012

தோழர் செங்கொடி மற்றும் வினவு !

தோழர் செங்கொடியுடன் எனக்கு நேரடியான பழக்கம் எதுவும் இல்லை, தமிழ்மணத்தில் அவரது இடுகைகளைப் படிப்பேன், காரணம் தெளிவான எழுத்து நடை மற்றும் கைதேர்ந்த விவாதம், தரவுகள், படங்கள் சேர்த்து தெள்ளத் தெளிவாக எதையும் எழுதுவதுடன் அது குறித்துவரும் விவாதங்களுக்கு மிகத் தெளிவாக விடை சொல்லுவார், ஆதாரமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதாமல் பிறகு இவை சர்சையானால் எப்படி பதில் சொல்லுவது உள்ளிட்டவற்றை நன்கு உணர்ந்தே ஊடக பொறுப்புணர்வுடன் எழுதுபவர் என்பதால் அவர் பதிவை மவுனமாக படித்துச் செல்வேன், குறிப்பாக பின்னூட்டங்களையும்.

தோழர் செங்கொடியின் பதிவுகள் கடந்த பிப்ரவரியில் பொதுப்பார்வையில் இருந்து மூடப்பட்டு இருந்தது, உள்ளே நுழைந்து படிக்க கடவுச் சொல்லெல்லாம் கேட்டது, நான் உள்ளே செல்ல முயற்சிக்கவில்லை, காரணம் ஒருவேளை கொள்கை அடிப்படையில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கிறாரோ அப்படிப்பட்டவற்றை படிக்கத் தேவை இல்லை என்று விட்டுவிட்டேன், தமிழ்மணம் தொடுப்பிலும் அவரது இடுகைகளைக் காண முடியவில்லை, இதற்கு இடையே மார்ச் துவக்கத்தில் கூகுள் ப்ளஸ் மூலம் அவரது இடுகைக்கான இணைப்புகள் கொடுக்கபட்டிருந்தது, உள்ளே சென்று படித்த போது அதிர்ச்சியே மிஞ்சியது. மதரீதியிலான விமர்சனங்களை எழுதுபவர்கள் தொடர்ந்து அதனை செய்யமுடியாது, அதற்கான அச்சுறுத்தல்களை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்த போது கிட்டதட்ட வியர்த்தே விட்டது.

பொதுவாக மதவாதம் பற்றிய விமர்சனங்களை மதவாதிகள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்தவிடயம் என்றாலும் அதனை எதிர்க்கும் செயல்களில் இவ்வளவு தூரம் கீழ் இறங்குவார்கள் என்பது கொஞ்சம் கற்பனைக்கு எட்டாதவை என்றாலும் மதவாதிகளை விமர்சனம் செய்பவர்கள் பின்விளைவுகளை கொஞ்சம் கூடுதலாகவே நினைத்துக் கொண்டு தான் எழுதவேண்டியுள்ளது, சென்ற ஆண்டில் 'கேரளாவில் கை எடுக்கப்பட்ட பேராசிரியர் ஒருவரை நினைவு கொள்க'. தோழர் செங்கொடிக்கு கை எடுக்கப்படவில்லை என்பது ஆறுதல் ஆனது என்றாலும், அவர் பணிபுரிந்த நாட்டில் இருந்து மிரட்டப்பட்டு தமிழகம் துறத்தப்பட்டிருக்கிறார். ஒரு மதவாத நாட்டில் இருந்து அந்த மதத்திற்கு எதிரான கருத்துகளை எழுதியது அவர் செய்த அவரது கொள்கை அளவில் தவறு என்று சொல்லமுடியாது, ஆனால் அதனால் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்திருந்து எழுதுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டு இருந்ததை அவரது 'முட்டாள்' தனம் என்றே நினைக்கிறேன். கம்யூனிசம் பேசி முதலாளித்துவத்திற்கு எதிராக பேசுபவர்கள் பலர் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணி செய்பவர்களாக இருப்பது முரண் என்பது போல் தான் தோழர் செங்கொடி கம்யூனிசம் பேசுபவர் முதலாளித்துவத்திற்கும். மதவாதத்திற்கும் எதிரானவர், அவற்றிற்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களின் கீழ் வேலைப் பார்ப்பதும், அதை தனிமனித பொருளாதார தோற்றுவாயாக நினைத்திருந்ததும் கொள்கை முரண், கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றவர் அங்கு அடக்கிக் கொண்டு இருந்தால் பிரச்சனை வந்திருக்காது. ஆனால் அவ்வாறு செய்யாமல் இருந்தது அவருடைய முட்டாள் தனம் என்றே திரும்பச் சொல்கிறேன், இங்கு நான் 'முட்டாள்' என்று குறிப்பிடுவதற்கு நண்பர் செங்கொடி சினந்தாலும் பரவாயில்லை, அவர் இரண்டு குதிரை மீது சவாரி செய்ய முயன்றிருக்கிறார் என்பதால் இவ்வாறு சொல்கிறேன்.

இங்கே ஏன் தலைப்பில் வினவு இடம் பெற்றுள்ளது ? யாரோ துரப்ஷாவுக்கு கட்டுரைகள் எழுதிய வினவு குழு, தோழர் செங்கொடி வேலைப் பறிபோய் உயிருக்கு பயந்து தமிழகம் திரும்பியது பற்றி வினவு பதிவில் எந்தக் கட்டுரையும் இடம் பெறவில்லை, புனைவு எழுதி சீண்டப்பட்டது போல் தனிப்பட்ட ஒரு பதிவர் பிரச்சனையாகவும் தெரியவில்லை. நடந்தது மதவாத விமர்சனம் தொடர்பாக நடந்த அச்சுறுத்தல் மற்றும் வேலை இழப்பு அதன் மூலம் பணிய வைக்க நடந்த முயற்சி, அதில் மதவாதிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவே நேரிடுகிறது, இவற்றை அறிந்தும் வினவு குழுவினர் அதுபற்றிப் எழுதாமல் விட்டது, தோழர் செங்கொடியின் இரட்டை நிலைப்பாடோ என்று எண்ண வைக்கிறது, வினவுக்குழு விளக்கினால் நன்று.


மதவாதம் பற்றி எழுதும் போது சொல்ல வந்ததை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிந்திக்க மறுக்கும் மதவாதிகள் சினந்து எழுவார்கள் என்பது தெரிந்தவிடயம் தான், எனக்கு அவ்வப்போது 'நீ வேலை செய்யும் நாட்டின் சட்டம் ஒழுங்கு உனக்குத் தெரியுமா ?' என்று மிரட்டல் விடுகின்றனர், இத்தனைக்கும் நான் எந்த மதத்தையும் நேரிடையாக விமர்சனம் செய்வதே கிடையாது, அது எனது கோழைத்தனம் என்றே நான் ஒப்புக் கொண்டாலும், அத்தகைய கோழைத்தனங்களுக்கு மதச் சகிப்புத்தன்மையும், கருத்துரிமையை மதிப்பதையும் சொல்லிக் கொடுக்காத மதங்களே காரணம் என்பதை ஒப்பு நோக்க எனது கோழைத்தனம் எனக்கு அவமான ஒன்று அல்ல, அவை மதவாதிகளுக்கும், அவர்களின் சகிப்புத்தன்மைகளுக்கும் அவர்களே பிறரிடம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமானம்.

இருந்தாலும் மதவாத எதிர்ப்பாக எழுதுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியவை இவை என்பது தோழர் செங்கொடிக்கு நேர்ந்த கொடுமைகளில் இருந்து அறிந்து கொள்ள வேண்டியவை,

1. மதவிமர்சனம் செய்பவர்களுக்கு நேரிடையாக, மறைமுகமாக மிரட்டல் ஏற்படலாம்
2, தோழர் செங்கொடிக்கு நேர்ந்தது போல் வேலை இழப்பும் பொருளாதாரா இழப்பும் ஏற்படலாம்
3. கடுமையான மன உலைச்சல் ஏற்படலாம் (இக்பால் செல்வன் என்பவர் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது, என்று கூறி பதிவு எழுதுவதை விட்டு, பதிவுகளை மூடிவிட்டார்)
4. அனுமதியில்லாமல் (பதிவர்) புகைப்படங்களைச் சுட்டிக்காட்டி வசைபபடலாம்
5. உயிருக்கு ஆபத்து (?) அந்தளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை என்பது தான் தற்போதைய ஆறுதல்.

*********

நாம் தமிழ் சூழலில் தமிழில் எழுதுகிறோம் என்று தமிழன் என்பதற்காகப் பெருமைபட்டாலும், இதே தமிழ் சூழலில் மதவாதிகளும் அங்கமாக அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது எழுதி மயிரையா புடுங்கப் போகிறோம் ? என்று வெறுப்பாகவும் உள்ளதை நான் இங்கே பதிவு செய்து கொள்கிறேன், தாய்மொழி, இனம் இவற்றையெல்லாம் வெற்றி கொள்ள மதவாத விசச்செடிகள் ஒரு குறிப்பிட்ட இன சமூகத்தில் ஊன்றப்படும் போது நாளடைவில் அச்சமூகம் தனக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு சாகும், இதற்கு தமிழ் பேசுபவனும் விதிவிலக்கு இல்லை.

நான் எந்த ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் எதிரி அல்ல, அதே போல் ஒரு குறிப்பிட்ட மதக் குழுதான் அந்த மதத்தின் அடையாளம் என்று சொல்லப்படுவதையும் நான் புறக்கணிக்கிறேன், ஏனெனில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் என்னிடையே நல்லத் தோழமையில் உள்ளனர்.


23 மார்ச், 2012

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !

இலங்கைப் போர் குற்றம் தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், தீர்மானத்திற்கு எதிராகவும் மதவாத நாடுகளே பெரும்பாலும் வாக்களித்துள்ளனர். இதற்கு அடிப்படைக்காரணம் என்று நம்பப்படுபவை இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை என்பதைவிட முன்பிருந்த விடுதலை போராளிகளுக்கும் இலங்கைவாழ் மற்றொரு மதத்தினருக்கும் இடையேயான பகைத்தான். ஆனால் பிரச்சனையோ விடுதலைப் போராளிகளுக்கும் இலங்கையரசுக்கும் நடந்த போர் பற்றியதல்ல, போரில் கொடுரமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களைப் பொருத்தும், அவர்களை இன்றும் முள் வேலிக்குள் அடைத்து வைத்திருப்பதும், அவர்களின் உடைமையை பறித்தது பற்றியும் தான் என்பதை மதவாத நாடுகள் சிந்திக்க மறுக்கின்றன. அதாவது முற்றிலும் மனிதாபிமானதிற்கு இழைத்த கொடுமை தொடர்பிலேயே தீர்மானம் உருவாகியும் அதற்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசை பணிய வைக்கவும் தான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தாம் மனிதாபிமானத்திற்கு ஆதரனான நாடு என்கிற பிம்பத்தை அமெரிக்க உருவாக்கி அரசியல் செய்தாலும் வீடற்ற, உறவற்ற தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிடைத்தால் சரி என்ற அளவில் தான் இதனை நினைக்க வேண்டியுள்ளது.

வாக்களிப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள மதவாத நாடுகள் உலகிற்கு புரிய வைக்கும் பாடம் இதில் அடங்கியுள்ளதையும் அதன் மூலம் மதவாத சக்திகள் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தாம் புரிந்து கொள்ளவேண்டும், தானோ தன்னைச் சார்ந்தவர்களோ பாதித்துள்ளதாக அறிந்தால் மனிதாபிமானம் என்பதெல்லாம் சிந்தனைக்குள் வரத் தேவை இல்லை என்பதை தான் இந்த நாடுகள் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளன, மதங்களும் மதவாதிகளும் காட்டும் மனிதாபிமானம் என்பவை போலித்தனமானது என்று பிறர் கூறும் போது ஆவேசப்படும் மதவாதிகளின் முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களாலேயே அகற்றப்படுவதை பார்த்தும் மூடிக் கொள்ளத்தான் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு மதவாதி இன்னொரு மதவாதியால் தாக்கப்படும் போது அங்கே மனிதாபிமானம் பேசுபவர்களுக்கு வேலை இல்லை, எதையும் மத அரசியல் கண் கொண்டு பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்பதைத் தான் மதவாதிகள் அவ்வப்போது நினைவுபடுத்திவருகிறார்கள், மோடி அரசின், இஸ்ரேல் அரசின் மதவாத நடவடிக்கைகளைக் கூட நாம் கண்டு கொள்ளாமல் அதை வெறும் மதவாத அல்லது இரு மதங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும் என்பதை நமக்கு மதவாதிகள் தான் சொல்லிக் கொடுக்கின்றனர்.

இனி எங்காவது எங்கள் மதத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று ஓலங்கள் கேட்கும் போது அதை நாம் வெறும் மதவாத ஓலம் என்று கேட்டுக் கொண்டு கடந்து செல்வது தான் நமக்கான நடைமுறைகள் என்பதை மதவாதிகளே நமக்குச் சொல்லித்தருகிறார்கள்,

மதவாதிகள் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் ? அவர்களால் ஒரு நாளும் மனிதாபிமானத்திற்கு ஆதரவான நிலைப்பாடுகளை மதம் தாண்டிய சிந்தனையாக கொண்டுவந்துவிடவே முடியாது, மதவாதிகள் பேசும் மனிதாபிமானம் போலியானது, மத சார்புநிலையானது அப்படியும் அவர்களால் மனிதாபிமானம் பற்றிய கருத்துகள் சொல்லப்பட்டிருந்தால் அவை வெறும் மதம் பரப்புதல் என்ற செய்ல்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி மட்டுமே.

மதவாதிகள் குறிப்பிடும் உலக இறுதி நாளின் முன்பே மதவாதிகளால் மனிதாபிமானம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும் பிறகு இந்த உலகம் இருந்தால் என்ன நாசமாகப் போனால் என்ன ?

கடவுள் நம்பிக்கைக் குறித்த சிந்தனைகளில் உலகம் மாற்றம் விரும்பி அதனை அழித்திவிட விரும்புக் கடவுள் அதனை செயல்படுத்த இறக்கிவிடுபவை தான் மதமும் மதவாதிகளும் என்றே நினைக்கத் தோன்றுகிறது, உலகில் மதவாதிகளால் நடந்த ஆக்கப்பூர்வமானவை என்று ஏதேனும் இருக்கிறதா ? என்று நினைத்துப் பார்த்தால் நான் கூறி இருப்பது உண்மையே என்று உணரத் தோன்றும்.

மதம் பேசும் மனிதாபிமானம் என்பவை தன் கூட்டதாரை மட்டுமே சார்ந்தது, ஒரு மதவாதியால் 'அண்டை வீட்டுக்காரருக்கு மாறு (கெடுதல்) செய்யாதீர்கள் ' என்கிற கருத்துகள் மனிதாபிமான கருத்துகளாக முன் வைக்கப்பட்டால், இந்த அண்டைவீட்டினர் என்பதை நாம் ஒரே மதத்தைச் சார்ந்த அண்டைவீட்டினர் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் மறுப்பு சிந்தனைகளை நாத்திகர்கள் பரப்புவதைவிட மனிதாபிமானமற்ற செயல்களால் மதவாதிகளே அதை சிறப்பாக செய்துவருகின்றனர்.

2 ஜூன், 2011

சோ இராமசாமியும் சுவனப்பிரியனும் !

பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரேபியா ஏன் தடைவிதித்திருக்கிறது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார் திருவாளர் சுவனப்பிரியன். இவரது புனைப்பெயரிலேயே இவர் எவ்வளவு சுவனத்தின் மீது ஆசை கொண்டிருக்கிறார் என்பது தெளிவு, நண்பருக்கு சுவனத்தில் நித்திய கன்னிகைகள் தேவைக்கு மிஞ்சியே கிடைக்க வாழ்த்துகிறேன். சுவனத்தின் நித்திய கன்னிகைகளை நாம் மறந்தாலும் இவரது புனைப்பெயரே இவர் பதிவிடும் பொழுதெல்லாம் அதை நினைவுபடுத்திவிடுகிறது. பிரச்சனை அதுவல்ல.

*****

பெண்கள் கார் ஓட்டுவதை சவுதி அரசு தடைசெய்வதற்கு காரணம் பெண்களின் பாதுகாப்புக் குறித்ததாம். அதாவது தனியாக கார் ஓட்டிச் சென்று ஏங்கேயாவது காமுகர்களிடம் சிக்கிக் கொண்டால் அந்த பெண்களின் கதி என்ன ஆகும் என்று சவுதி அரசு கவலைப்பட்டே இந்த சட்டத்தை சவுதி அரசு இயற்றி நடைமுறைப்படுத்தி வருவதாக இவரே ஊகமாக சொல்லி இருக்கிறார், சவுதி அரசு பெண்கள் கார் ஓட்ட தடை குறித்த காரணங்களை சுவனப்பிரியன் சொல்வது போல் எங்கும் குறிப்பிடவில்லை. இதற்கு அடைப்படைக்காரணம் பெண்(கள்) அல்லது மனைவி(கள்) தனியாக கணவர் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்கிற குரான் அறிவுறுத்தல் மட்டும் தான். மேலும் குரான் உருவான காலத்தில் கார் என்று ஒரு வாகனமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குரான்படி பார்த்தாலும் பெண்கள் கார் ஒட்டுவதற்கு அவர் கணவர் கூடவே செல்லும் போது தடை ஏதும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம், சவுதி அரசு குரானைக் காரணம் காட்டி பெண்கள் கார் ஓட்டுவதை தடை செய்திருப்பது முற்றிலும் ஆணாதிக்க மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலையே. இதை எந்த ஒரு சப்பைக்கட்டாலும் சரி என்று சொல்லிவிடமுடியாது. சவுதி தவிர்த்து ஏனைய மலேசியா, இந்தோனேசியா, துபாய் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இருப்பதை ஒப்பு நோக்குகையில் குரானை சாக்கிட்டு சவுதி தடை விதித்திருப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை.

பெண்கள் கார் ஓட்டுவதை தடுப்பதற்கு சவுதி அரசு மாற்று வழிகளை அனுமதித்திருப்பதில் மிகவும் தரக்குறைவான ஒன்று, பெண்களுக்கு ஓட்டுனர்களாக இருப்பவர்கள் உறவுக்காரர்களாக இருந்தால் தடை ஒன்றும் இல்லை, அப்படி உறவுக்காரர்களாக இல்லாதவர்கள் ஓட்டுனர்களாக அமைத்துக்கொள்ள குறிப்பிட்ட பெண்கள் ஓட்டுனராக ஆக இருப்பவருக்கு முலைப்பால் கொடுக்க வேண்டுமாம். ஒருமுறை முலைப்பால் குடித்துவிட்டால் பிறகு ஓட்டுனர் இரத்த உறவுக்குள் வந்துவிடும் அந்நியர் அல்லாதவர் ஆகிவிடுகிறாராம். கார் ஓட்ட அனுமதிப்பதை தடைசெய்ய இது போன்ற இழிசெயல்களை நடைமுறையில் வைத்திருப்பது எவ்வளவு கீழான செயல் என்பதை சுவனப்பிரியன் தெரிந்தும் அதைக் கட்டுரையில் குறிப்பிடவே இல்லை.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கார் ஓட்ட அனுமதியில்லை என்றால் நகருக்குள் பேருந்து ஓட்ட அனுமதித்து பெண்கள் ஓட்டுனர் ஆவதற்கு எந்த தடையுமில்லை என்று சவுதி முன்மாதிரியாக இருந்திருக்கலாமே. இவரின் சப்பைக்கட்டின்படி வெளியே தனியே செல்லும் பெண்களுக்கு என்ன என்ன பாதுகாப்புக் குறைபாடு காரணங்கள் இருக்கிறதோ அதே காரணம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கும் இருக்கும் என்பதை இவர் சிந்திக்கவே இல்லை.

மேலும் திரு சுவனப்பிரியனின் பின்னூட்ட பொன்மொழிகளில் ஒன்று கிட்டதட்ட சோ இராமசாமியின் பெண்கள் குறித்த கூற்று போலவே அமைந்திருக்கிறது.

"என்னதான் நாம் சமத்துவம் பேசினாலும் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக ஒரே அளவு கோலை பல இடங்களில் நாம் கடை பிடிப்பதில்லை. மேலாடை இல்லாமல் ஆண்களாகிய நாம் சுதந்திரமாக வர முடியும். அதே அளவு கோளோடு பெண்களும் வெளியில் வர முடியுமா? நாம் அனுமதிக்க மாட்டோம். மூட்டை தூக்குதல், பாரங்களை இழுத்தல் போன்ற உடல் சார்ந்த வேலைகளை நாம் பெண்களை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவர்களின் உடல் மென்மையானது. ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். "

இதில் " ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். " என்பது தவிர்த்து இவை 100க்கு 100 சோ இராமசாமியின் பொன்மொழிகள் ஆகும்.

ரெஸ்லிங்மட்டுமல்ல, பலுத்தூக்கும் பெண்களுக்கும் உடல் கட்டுக்கட்டாகத்தான் இருக்கும். ஓட்டப்பந்தயங்கள், மாரத்தான் பெண்களுக்கும் கூட உடல் தசைகள் இறுக்கமாகத்தான் இருக்கும். இவர் கூற்றுப்படி விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பெண்மையின் மென்மை இல்லாமல் ஆண்களைப் போன்று ஆனவர்களாம், இவர்களைப் பார்த்து ஈர்ப்பு வராதாம். அப்படி என்றால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களெல்லாம் ஆண்களே இல்லை என்று இவர் சொல்லுகிறார் போல. கட்டுமஸ்தான உடல் உடைய ஆண்களை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வோம் என்று பெண்கள் கூறினால் 99 விழுக்காடு ஆண்களுக்கு திருமணமே ஆகாது. அல்லது ரெஸ்லிங் ஆண்களின் உடல்கட்டைப் பார்த்து பெண்களுக்கு ஈர்ப்பு வருது என்று ரெஸ்லிங்க் ஆண்ககளின் உடல்பயிற்சியை தடைச் செய்யச் சொல்லுவாரா ?

சவுதி கார் ஓட்டுவதை தடை செய்திருப்பதற்கு ஒட்டு மொத்தமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்களைப் பற்றி மிகக் கேவலமாக கருத்தொன்றை உதிர்த்திருக்கிறார், இவர் ஒன்றும் இஸ்லாமுக்கு முன் மாதிரியோ பின்மாதிரியோ கிடையாது என்பதால் நான் இவரின் கருத்தை இஸ்லாமிய கருத்தாகப்பார்க்காமல் இஸ்லாமிய அடிப்படை வாதியின் கருத்தாகவே பார்த்து எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்தான் அல்குரானை அன்றாடம் ஓதுவர் ஆகிற்றே இவருக்கு ஏன் ரெஸ்லிங் பெண்கள் மீது பார்வை போனது ? அல்லாவுக்கே வெளிச்சம். குரான் கட்டுப்பாட்டின் படி ரெஸ்லிங் பெண்கள் சுவனம் புகமுடியாது என்பதால் இவருக்கு கிடைக்கும் நித்திய கன்னிகைகளில் ரெஸ்லிங்க் பெண்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்பி ரெஸ்லிங்க் பெண்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

இன்சா அல்லா...........!

பலவித சமூக பழமை வாதக்கருத்துகளில் பார்பனிய அடிப்படை வாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் வேறுபாடே இல்லை. குறிப்பாக ஓரிறைக் கொள்கையை வழியுறுத்த சுவனப்பிரியன் போன்றோர் இந்துவேதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதில் இருந்து கூட இதனை தெரிந்து கொள்ளலாம். ஹுசைனம்மா உள்ளிட்டோர் கூட இவரது கருத்துகளில் சிலவற்றை ஆதரிப்பது இவருக்கு டானிக் கொடுத்தது போல் இருப்பதால் இவர் கண்டபடி கருத்துகளை திணித்துவருகிறார் என்பது கவலை அளிக்கிறது, இவரது கருத்துகளினால் இஸ்லாம் ஒரு அடிப்படைவாத மதம் என்றே மீண்டும் மீண்டும் பிறமதத்தினரை எண்ண வைத்துவிடுகிறது என்பதை இஸ்லாமிய பதிவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சுவனப்பிரியனின் ஆணாதிக்க கருத்துகளை பின்னூட்டத்தில் பொடி(புடை)த்த பதிவர் இக்பால் செல்வனுக்கு பாராட்டுகள்.

பின்குறிப்பு : திரு சுவனப்பிரியன் உங்கள் மீது எனக்கு எந்த காழ்புணர்வும் இல்லை, விமர்சனங்களெல்லாம் உங்களின் கீழான கருத்துகளின் மீது தான். பார்பனிய அடிப்படை வாதிகளுக்கும் இதைத்தான் நான் செய்கிறேன்.

16 நவம்பர், 2010

மதச்சார்பின்மையும் மண்ணாங்கட்டியும் !

நேற்று ஒரு இடுகையைப் படித்ததும் பெருவாரியான இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டுவைக்கும் திரியாக இருந்தது. மதச்சார்பின்மை என்பது பல்வேறு மத நம்பிக்கையினர் வாழும் நாட்டில் மிக மிகத் தேவையானது. மதச்சார்பின்மை என்பது சகிப்புத்தன்மை அல்லது புரிந்துணர்வு. மதத்தினரிடையே சகிப்புத் தன்மை குறைவு என்பதால் புரிந்துணர்வு என்பதே பொருத்தம், அதாவது நீ உன்னுடையதை கழுவிக் கொள், நான் என்னுடையதைக் கழுவிக் கொள்கிறேன் யாருக்கும் புறத் தொல்லைகள் இல்லை, மாறாக நான் மட்டும் தான் கழுவவில்லை என்று சுட்டிக் காட்டாதே என்பதே மதங்களுக்கிடையேயான புரிந்துணர்வு. மற்றபடி அவங்க மதம் சார்ந்த விழாவுக்கு இவங்க வருகிறார்களா ? புறக்கணிக்கிறார்களா போன்றவை அனைத்தும் மத நல்லிணக்கம் என்பவையாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு மதங்களுக்கிடையே முற்றிலும் நல்லிணகம் என்பதே கிடையாது, அவ்வாறு இணங்குபவர்கள் மதங்களை மறுக்கும் நாத்திகர்கள் மட்டுமே, மத நல்லிணக்கவாதிகள் என்று நாத்திகர்களைச் சொல்லலாம் அவர்களுக்கு எல்லா மதமும் ஒண்ணு தான். சகிப்புத்தன்மையே இல்லாத மதவாதிகளிடம் நல்லிணக்கம் எதிர்பார்க்க முடியுமா ? எனவே தற்போதைய சூழலில் பல்வேறு மதத்தினர் இருக்கும் நாட்டில் இருப்பவை வெறும் புரிந்துணர்வுகள் மட்டுமே, அதற்கும் வேட்டுவைக்க அவ்வப்போது இந்தியா இந்து நாடு, இந்து மதம் தமிழர்களின் தாய் (தந்தை மதம் என்ன ?) போன்ற மதவாத முன்னெடுப்புகள் நூற்றாண்டுகளாக நடந்தேறிவருகிறது.

இன்றைய வாழ்வியல் மற்றும் சமூக அமைப்புகள், அரசுகள் பெருவாரியான நடைமுறைகள் (சிஸ்டம்) ஐரோப்பிய வழிகாட்டலின் வழியாக நடந்தேறிவருகிறது, உதாரணத்திற்குச் சொல்லப் போனால் நாட்காட்டி இவை உலகினருக்கு பொதுவானது, அது போன்றே நேரம் இவையும் பொது, இவை கிரிக்கேரியன் முறையைப் பின்பற்றி ஆங்கிலத்தில் உள்வாங்கி அதையே உலகினருக்கு பொதுவானதாகப் பயன்படுத்திவருகிறோம். குறிப்பாக வெள்ளைக்காரன் உடை. இதையெலலாம் வைத்து உலக நாடுகள் அனைத்தும் கிறித்துவத்திற்கு மாறிவிட்டன என்று சொல்ல முடியுமா ? அல்லது உலகமே ஒரு பெரிய கிறித்துவ நாடு என்று சொல்லிவிட முடியுமா ? இந்தப் பதிவைப் படித்ததும் உண்மையிலேயே வெறுப்பே மிஞ்சியது, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறதாம், அல்லா கைகாட்டியுள்ளான், நாம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம் இதுவே சரியான சமயம் என்பதாக இந்தியா இஸ்லாமிய நாடு - ஏன் என்பதற்கான காரணங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

என்ன கொடுமைசார், இந்துக்களுடன் சேர்ந்துவாழ எங்களுக்கு விருப்பம் இல்லை, ஒத்துவராது நாங்கள் செல்கிறோம் என்று தானே பாகிஸ்தான், பங்களதேஷாக பிரிந்து சென்றார்கள். பிரிந்தவர்களின் நிலையோ படு மோசம், இதில் பங்களாதேசாவது பரவாயில்லை பாகிஸ்தான் பண மதிப்பு இந்திய நாணய மதிப்பைவிட மிகக் குறைவு. மொத்த நாடும் சர்வாதிகாரிகள் கையில் மாறி மாறி சிக்கி அந்த நாட்டை வறுமை கோட்டிற்கு கீழே வைத்திருக்கிறது, மேலும் அரபு நாடுகளில் பணிபுரிந்தால் மட்டுமே பாகிஸ்தானில் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிற நிலை, இது தான் இந்தியா பிரிவினையால் முழுக்க இஸ்லாமிய நாடாக மாறிய பாகிஸ்தான் பெற்ற பலன். பங்களாதேஷ் நிலையும் அதே என்றாலும் பொருளாதார வாழ்வியலில் பாகிஸ்தான் மக்களைவிட இவர்கள் பரவாயில்லை காரணம் இராணுவத்திற்கு பாகிஸ்தான் அளவுக்கு செலவு செய்வதில்லை. பாகிஸ்தானோ, பங்களாதேஷோ இஸ்லாமிய நாடாக மாறியதால் அங்கு தேன் மாரி பொழிகிறதா ? கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றது தொடர்பாக குற்றவாளிகளைத் தண்டிக்க அரபு நாடுகளின் சட்டங்களை பின்பற்ற வேண்டும் பொதுமக்கள் சொன்னது இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி முறை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அழைப்பாக இருக்கிறதாம்.

குறிப்பிட்ட அந்த இடுகையை கூகுள் பஸ்ஸில் போட்ட போது சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள், ஏன் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள், நீங்கள் விளம்பரம் கொடுப்பதால் நல்லவர்கள் கூட அதைப் படித்து கெட்டுப் போகலாம் இல்லையா ? ஞாயம் தான். தடுப்பு ஊசிப் போட்டுக் கொள்ள நோய் தாக்கி இருக்கத் தேவை இல்லை. இது போன்ற கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இது சரிதான் என்பதாக கருத்தாக்கத்தை உருவாக்குபவர்கள் மேலும் மேலும் முயலமாட்டார்களா ?

இந்தியா இந்து நாடாக மாறுதா ? இஸ்லாமிய நாடாக மாறுதா ? என்பது பிரச்சனையில் சுடுகாடு ஆகிவிடாமல் இருந்தால் சரி. இங்கு மதவாதிகள் எவருக்கும் வெட்கமே இல்லை, இதற்கு எந்த மதத்தின்வாதிகளுக்கும் விலக்கு இல்லை. மதச்சார்பின்மைதான் இந்தியர்களின் சிறப்பு என்பதற்கு வேட்டுவைக்க எல்லா மத அமைப்புகளுமே தன்னால் ஆன கெடுதலை செய்தே வருகின்றன. பெரும்பான்மை மக்கள் தொகையை கணக்கில் கொண்டாலும் இந்தியா ஒரு இந்து நாடு அல்ல பலமாகவே முழங்கி மதச்சார்பின்மை போற்றிவரும் வேளையில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருதாக புழகாங்கிதப்படுகிறார்கள் ? இந்துக்களிடையே மதச்சார்பின்மை பேசும் பகுத்தறிவாளர்கள் என்போல் ஆயிரம் பேர் உண்டு, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறது என்று மகிழும் இவர்களை வெளிப்படையாக கண்டிக்க இஸ்லாமியர்கள் முன்வரவேண்டும்.

28 அக்டோபர், 2010

மதவாதிகளால் கொலை செய்யப்பட்ட திருநங்கை !

திருநங்கைகள் பற்றி பரவலான புரிந்துணர்வு துவங்கி உள்ள காலகட்டத்தில் இன்னும் கற்காலத்தில் இருந்து கொண்டு அவர்களை கொல்லும் (மத) அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

பால் சார்ந்த உடலமைப்பு மற்றும் மனம் இவை ஒன்றியிராத மனிதப் பிறவிகளே திருநங்கைகள் எனப்படுவர். பருவ வயதை நெருங்கும் முன்பே மனம் சார்ந்து தன்னை எதிர்பாலினம் என்று உணர்ந்து அதில் நாட்டம் கொண்டு அவ்வாறு வாழ முடிவு செய்பவர்கள் திருநங்கைகள். இவை பெற்றோருக்கு அதிர்ச்சி என்றாலும் ஐரோபிய நாகரீகம் சார்ந்த வெளிநாடுகளில் பரவலாக அவர்களின் உணர்வுகள்
புரிந்து கொள்ளப்படுகிறது. திருநங்கைகளும் தற்பால் விரும்பிகளும் ஒன்றல்ல, தற்பால் விரும்பிகள் தங்கள் பாலினத்தை வெறுப்பது இல்லை, தனது பால் உறுப்புகளையும் வெறுப்பதில்லை அதே போன்று பாலியல் நாட்டத்தில் தன்பாலினத்தைச் சேர்ந்தவர்களையே நாடுவார்கள், எதிர்பாலினத்தை அவர்கள் பாலியல் நாட்டத்திற்கு விரும்பிவதில்லை என்றாலும் அவர்களை தனிமனிதனாக வெறுப்பதில்லை. திருநங்கைகளாக உணர்ந்து கொண்ட பின் தங்களது பால் உறுப்பை வெறுத்து முற்றிலுமாக நீக்கிக் கொண்டு பெண்ணாக மாற விழைபவர்களே திருநங்கைகள், இவர்களும் தற்பால் சேர்கையாளர்களும் ஒன்று அல்ல, திருநங்கைகள் பாலியல் ரீதியாக ஆண்கள் மீது நாட்டம் கொண்டிருந்தாலும் மன அடிப்படையில் அவர்கள் தங்களை பெண்ணாகவே நினைப்பவர்கள். தன்னை பெண்ணாக உணர்ந்துள்ள ஆணே திருநங்கை, அதே போன்று ஆணாக உணர்ந்து கொண்ட பெண்களும் உள்ளனர் என்றாலும் அவர்களுக்கு திருநங்கைகளுக்கு இருக்கும் அளவுக்கு சமூகச் சிக்கல் இல்லை, காரணம் ஒரு பெண் தன்னை ஆணாக நினைத்து அதன்படி நடந்து கொண்டாலும் வீட்டை விட்டு துறத்தும் நிலைக்கு சமூகம் அவர்களை தள்ளுவது கிடையாது ஏனெனில் பெண் ஆணாக தன்னை உணர்வதை ஆளுமை என்ற அளவில் மட்டுமே சமூகம் கருதுகிறது. ஆண் பெண்ணாக உணரும் போது
உடலியல் மற்றும் உணர்வியல் தாழ்ச்சி சமூகக் கேடு என்பதாக அவர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏன் உடலும் உள்ளமும் ஏற்றவாறு பொருந்தவில்லை, அதை சரிசெய்ய முடியுமா முடியாதா
என்பதை எந்த ஒரு அறிவியலும் முற்றிலுமாக விளக்கவில்லை மாறாக மனம் மற்றும் உளவியல் என்பதாகவே வகைப்படுத்தி இருக்கிறார்கள்.


படைப்பு படைத்தவன் என்றெல்லாம் புகழ்பாடும் மதவாதிகள் படைப்பு சரி இல்லை என்றால் படைத்தவனை விட்டுவிட்டு படைப்பை சிதைப்பது எந்தவகையில் ஞாயம் என்று தெரியவில்லை, இறைவன் நாடினால் நன்மை கிடைக்கும் என்று ஆசி கூறுவோர், திருநங்கைப் பிறப்புகளை
இறைவன் நாடவே இல்லை என்பதையாவது ஒப்புக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பார்களா ? அவ்வாறு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட ஏன் இவர்களுக்கு மட்டும் இறைவன் குறைவாக நாடினான் என்ற கேள்வியாவது கேட்டுக் கொள்வார்களா ? இந்தியாவில் இந்து மதத்தினாரால் திருநங்கை பிறப்புகள் புரிந்து கொள்ளப்படுகிறது காரணம் மகாபாரதத்திலேயே அர்ஜுனன் திருநங்கையாக மாறிய கதை உண்டு என்று நம்புவோர் இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வியல் நிலையை எண்ணிப் பார்கவும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு வடமாநில எம் எல் ஏ என்பது தவிர்த்து அவர்களில் ஒருவர் கூட அரசு உயர்பதவி வகித்தது கிடையாது. இந்தியாவில் 95 விழுக்காடு திருநங்கைகளுக்கு பாலியல் தான் தொழில் என்பதாக தள்ளப்பட்டுவிட்டனர், பின்னர் இவர்களை இந்து மதத்தினர் மதிக்கின்றனர் என்று கொள்ள முடியும் ?

ஒரு இஸ்லாமிய ஆண் திருநங்கையாக ஆகிப் போனது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளப்பட்டுள்ளார். படிக்கும் போதே பதறியது. சவுதி இளவரசர் (சவுதி மன்னரின் மகளின் மகன் அதாவது மகள் வயிற்றுப் பேரன்) ஒருவர் இங்கிலாந்தில் தன்னுடைய உதவியாளர் (அவர்கள் மொழியில் அடிமையை) அடித்தே கொன்றார், விசாரணையில் அந்த இளவரசர் ஓரின விரும்பி என்று தகவல்கள் தெரியவந்ததாக இங்கிலாந்தின் செய்தி இதழ்கள் குறிப்பிடுகின்றன. மேற்கண்ட குற்றச் சாட்டை வைத்து சவுதி இளவரசரை இம்மத அமைப்புகள் இஸ்லாத்தின் பாலியல் கொள்கைக்கு எதிரானவர் என்று கூறி தூக்கிலடச் சொல்லி போராட்டம் நடத்துமா ? இதெல்லாம் நடக்காது ஏனெனில் சவுதி என்னும் புண்ணிய பூமியில் பிறந்த இளவரசர் அப்படி பட்டவராக இறைவன் படைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே நம்புவார்கள் மற்றும் இவை இஸ்லாத்து எதிராக கிறித்துவ நாடான இங்கிலாந்து இட்டுக்கட்டிப் பரப்பப்படும் செய்தி என்றே நம்புவார்கள்.

ஒருவருக்கு எதிர்பாராமல் நடக்கும் திடீர் விபத்து அல்லது குணப்படுத்த இயலாத திடீர் நோய் என்பது இறைவன் அவரை நாடவில்லை என்பதால் ஏற்பட்டது என்று நம்பவும் பரப்பவும் முடிந்தால் உடல் ஊனம் மன ஊனம் இவைகளும் மற்றும் திருநங்கை பிறப்புகளும் கூட அவ்வாறே ஏற்பட்டது என்று நம்பலாமே, அவர்கள் வழியில் அவர்கள் செல்கிறார்கள் இஸ்லாமிய பெயரை தாங்கி இருந்தார்கள் அல்லது இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த மரண தண்டனை என்றால்
குறையாக படைத்த இறைவனுக்கு என்ன தண்டனையோ ?

எங்கேயோ படித்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது,

ஊனமுற்றோர் கடவுளின் குழந்தைகள் என்றால்
உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டியது
கடவுளுக்குத்தான்
!


தொடர்புடைய செய்தி :

திருநங்கை மின்னல் மீனா கொலையில் 3 பேர் கைது

திருச்செந்தூர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த திருநங்கை சேக் அலி என்கிற மின்னல் மீனா(35), கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி காலையில் காட்டுப்பகுதியில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


பிரேதத்தை கைப்பற்றிய ஆறுமுகநேரி போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர்.

இக்கொலை தொடர்பாக காயல்பட்டணத்தில் புரோட்டா கடை வைத்துள்ள தாஜீதீன்(28), ஆட்டோ டிரைவர்கள் ஜாபர் சதீக்(24), ஹசன்(எ) முகம்மது ஹசன் (32) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ‘எவ்வளவு கண்டித்தும் கேட்காமல், இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு மாறாக, பெண் வேடமிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்ய முடிவெடுத்தோம்.

இதனால் செப்டம்பர் மாதம் 16 ம் தேதி இரவு மின்னல் மீனாவை கம்பால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டோம்’’என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பான உமர் பாரூக் தலைமறைவாகவுள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

சுட்டி : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42072

பின்குறிப்பு : இந்தப் பதிவு எந்த மதத்திற்கு எதிராகவும் எழுதப்படவில்லை, மதவாதிகளின் செயல் மட்டுமே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது என்பதை மதவாதிகள் அல்லோதோர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்