பின்பற்றுபவர்கள்

விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 செப்டம்பர், 2010

மானம் கப்பல் ஏ(ற்)றிய காமன் வெல்த் போட்டி !

உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தி முடித்தது, ஏழைகளை இருப்பிடங்களை விட்டுத் தூறத்தினார்கள், பெய்ஜிங்க் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்கிற வெளி நாட்டுத் தகவல்களை தவிர்த்து சீனா ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திமுடித்து ஐரோப்பிய நாடுகளின் விழிகளை விரிய வைத்தது.

காமன்வெல்க்த் போட்டிகளை ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்த இந்தியா பல்வேறு நாடுகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவருகிறது. துவக்கம் முதலே ஊழல் குற்றச் சாட்டுகள், தற்போது தரமற்ற கட்டுமானங்களினால் பாதுகாப்புக் கூரைகள் இடிந்துவிழவதும், மற்றும் விளையாட்டுவீரர்களுக்கான வசதிக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் காமன் வெல்த் போட்டிகளுக்காக தங்கள் வீரர்களை அனுப்பப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர். காமன்வெல்த் போட்டியின் கண்காணிப்புக் குழுவும் இந்தியா வந்து போட்டி நடைபெறும் இடங்களை பார்த்து ஏற்பாடுகள் நிறைவாக இல்லை என்று அறிவித்துவிட்டன. வெளிநாட்டு ஊடக செய்திகளில் காமன்வெல்த் போட்டியின் குறைபாடுகளை கட்டம் கட்டிப் போட்டு இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றிவருகிறார்கள்.

தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசு கட்சியின் கையாலகத்தனமாகவே இதனை கருதவேண்டி இருக்கிறது, வடகிழக்கில் நக்சல்களுடன் மோதல், காஷ்மீரில் பதட்டம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலேயே குண்டு வீச்சு என பாதுக்காப்பு தொடர்புடையவற்றில் காங்கிரசின் செயல்பாடுகள் எதுவும் பாராட்டுவிதமாக இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், போட்டி ஏற்பாடுகளின் சொதல்பல்களையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புறக்கணித்திருப்பதை நாம் தவறு என்று பார்க்க முடியவில்லை. பளுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது என்னும் போது இவர்களை நம்பி எந்த ஒரு நாடும் வீரர்களை அனுப்ப முடிவு செய்வார்கள் என்று நம்புவது நம் மடைமை.

இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில் முனைப்புக் காட்டி தமிழர் அழிவுகளுக்கு அடிகோலியதன் சிறு பங்கை இந்திய நலனின் காட்டி இருந்தால் விளையாட்டுப் போட்டி நடத்தும் நாம் உலகின் முன்பு தலைகுணிந்து நிற்கத் தேவை இல்லை. வாரம் ஒருமுறையாவது மீனவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்தே வருகின்றன. இந்திய பாதுகாப்பும், இந்திய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகளும் இராஜபக்சேவை திருப்திபடுத்தி இலங்கை வீரர்களாவது விளையாடவருவார்களா ? அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை காட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

உணவு தானியம், பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காங்கிரசு அரசின் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக, இந்திய நலன் சார்ந்ததாகவோ, பொறுப்பாகவோ இல்லை. எந்த ஒரு தனிப்பெரும்பான்மை பலமும் இல்லாத நிலையில் கூட்டணி என்ற பெயரில் ஆளும் காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது தவிர்த்து எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை, ஏழைகளுக்கு இலவச செல்போனாம், எத்தனை ஆண்டுகளுக்கு ? ஒருவேளை ஏழைகளும் செல்போன் பயன்படுத்தி பழகிக் கொண்டால் இலவச செல்போன் திட்டங்களை களையும் போது பயன்படுத்தியவர்கள் எப்படியேனும் செல்போன் பயன்பாட்டை நாடுவார்கள், அதன் மூலம் தனியார் செல்பேசி நிறுவனங்கள் பெருத்த லாபம் அடையும் என்பதைத் தவிர்த்து வேறென்ன நடக்கும் ? கருணாநிதியில் இலவச தொலைகாட்சியைப் பெற்றுக் கொண்டோர் அவர் வாரிசுகள் நடத்தும் கேபிள் நிறுவனங்களுக்கு மாதக் கப்பம் கட்டிவருவது தானே நடந்துவருகிறது. அரசுகள் அறிவிக்கும் இலவசங்களெல்லாம் தனியார் லாபங்களை கருத்தில் கொண்டவையே.

கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணங்களை விளையாட்டு நடத்த செலவிட்டு, ஏற்பாடுகளை சரியாகச் செய்யாமல் நாட்டுமக்களை தலைகுனிய வைத்துவிட்டு, சின்னதம்பி படத்தில் 'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்பதாக காங்கிரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் செயபால் ரெட்டி 'எந்த நாடு புறக்கணித்தாலும் போட்டி வெற்றிகரமாக நடக்கும்' என்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் தெற்காசிய நாடுகள் தவிர்த்து எந்த ஒரு நாடும் கலந்து கொள்ளாதோ என்கிற அச்சம் தான் ஏற்படுகிறது. அதிலும் ஆழம் பார்க்க இலங்கை கழண்டு கொண்டால் வியப்பேதும் இல்லை.

11 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் - இந்திய வீரர்கள் பதக்கம் பெறுவதில் ஏன் சுனக்கம் ?

100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் ஒரே ஒரு தங்கம், அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு. நமது நாட்டில் வீரர்களே இல்லையா ? பிறகு ஏன் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி தகுதிச் சுற்றில் கூட தோல்வியைத் தழுவியது ?

இந்திய விளையாட்டு இது என கட்டமைப்பைச் செய்ததில் பண்ணாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகப் பெரியது. வீட்டுக்குள்ளேயே சின்னத்திரை மூலமாக காட்டப்படும் அனைத்து விளம்பரங்களிலும் மட்டையாட்டமே (கிரிக்கெட்) முன்னிலையில் இருக்கிறது, பெயரளவுக்குக் கூட மற்ற விளையாட்டுக்களைக் காட்டாததால் மாணவர்களிடையே மட்டையாட்டத்தில் இருக்கும் ஆர்வம் வேறெதிலும் இல்லாமல் போனது.

உண்மையில் படகு செலுத்துதல், கால்பந்து, மல்யுத்தம், கபடி, வாலிபால் ஆகியவற்றிற்கு நல்ல ஊக்கம் கொடுத்தால் நாமும் உலக அளவில் வெற்றிபெற முடியும். இந்த விளையாட்டுக்கெல்லாம் அடிப்படையில் உடலில் உறுதி இருக்க வேண்டும். (ஜமாலன் கட்டுரை) உடலில் உறுதி உள்ளவர்களாலேயே இந்த போட்டியிலெல்லாம் பங்கெடுக்க முடியும், எல்லாவற்றிலும் சாதி அரசியல் இருப்பதால், இது போன்ற விளையாட்டுக்களுக்கெல்லாம் ஊக்கமும் கிடைப்பது இல்லை, உண்ணும் உணவு அடிப்படையில் கிடைக்கின்ற அதற்குத் தேவையான உடல் தகுதியுடன் விளையாடும் வீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரிலேயே இருக்கின்றன இவர்கள் கலந்து கொண்டால் கண்டிப்பாக போட்டிகளில் வெல்ல முடியும். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி என்பது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை தானே. மட்டையாட்டத்தில் வீரர்களுக்கு கொட்டும் பணம் ஒலிம்பிக் போட்டிகளில் கொட்டிவிடாது.

தாழ்த்தப்பட்ட பிரிவினர் தவிர்த்து நல்ல உடல் தகுதி உள்ள மற்ற இளைஞர்களுக்கு மட்டையாட்டம் தவிர்த்த விளையாட்டுக்களில் ஆர்வம் வராமல் போனதற்கு காரணம் அதனால் பெரிய அளவில் பணமோ புகழோ கிடைக்காது, (ஜமாலன் மற்றொரு கட்டுரையைப் பார்க்க). ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் மாநில அரசு விளையாட்டு ஆசிரியர் வேலையும், ஒரு வீடும் கொடுக்கும், மத்திய அரசு எதோ பணமுடிப்பு கொடுப்பார்கள். பத்மஸ்ரீ எல்லாம் கொடுக்க மாட்டார்கள். ஆண்டுக்கணக்கில் பயிற்சி பெற்று அந்த போட்டியில் பங்கு பெற்று பதக்கம் பெற்றால் தான் இவையெல்லாம். பெறாவிட்டால் நாய் கூட திரும்பிப் பார்க்காது, கிடைக்குமா கிடைக்காதா என்பதற்கு ஆண்டுகணக்கில் ரிஸ்க் எடுத்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாது வாழ்வை வீணாக்கிக் கொள்ளவேண்டுமா என்று தான் இளைஞர்களும் நினைப்பார்கள். இளைஞர்களின் பெற்றோர்களுக்கு நடப்பு நன்றாக தெரிவதால் பையன் படித்து நாலு காசு சொந்தமாக சம்பாதித்து நம்ம கையை எதிர்பார்க்கமல் இருந்தாலே போதும், என்று சொல்லி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை தடை செய்துவிடுவார்கள்.

பள்ளிகளில் சாம்பியனாக வரும் மாணவர்கள் கூட கல்லூரியில் சேர்ந்ததும் முற்றிலும் விளையாட்டை மறந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒலிம்பிக்கில் மிகுந்த தங்கம் பெற வேண்டும் என்ற 100 கோடி இந்தியர்களின் கனவு, விளையாட 10 பேரை அனுப்பி வைத்துவிட்டு எப்படி நிறைவேற்றுவது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாணவர்களை மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்க வேண்டும். விளையாட்டுக்கென்றே மாநிலம் தோறும் தனிக் கல்லூரிகள் அமைத்து பட்டப்படிப்பாகவும், பல்வேறு மாநில போட்டிகளை பல்வேறு விளையாட்டுக்களின் வழி நடத்தினால், படிப்பில் ஆர்வம் இல்லாத விளையாட்டு ஆர்வம் மிக்க மாணவர்கள் பயன்பெறுவர், அவர்களால் நாடும் பயன்பெறும்.

வெறும் மட்டையாட்டமே போதும் என்று இந்தியா நினைத்தால், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பர விளையாட்டாக மாறி வீட்டுக்குள் இளைஞர்ர்களை முடக்கிப் போட்டு, இந்திய இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் எந்த ஆர்வமும் இல்லாது செய்துவிடும்.

வெறும் 10 பேரே கலந்து கொள்ளச் செல்ல அனுப்பிவிட்டு 10 பேரும் தங்கம் பெற்று திரும்பவேண்டும் என்று நினைப்பது எந்தவிதத்தில் ஞாயம். இவர்களுக்காவது கலந்து கொள்ளத் தகுதி இருக்கிறதே என்ற பெருமூச்சே வருகிறது.

ஒலிம்பிக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முன் அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தியர்களும் பதக்கப் பட்டியலில் ஒரு கவுரமான நிலையை அடைந்து உலகிற்கு நாம் விளையாட்டுகளில் சளைத்தவர்கள் என்று காட்டவேண்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்