பின்பற்றுபவர்கள்

திரையுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரையுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 செப்டம்பர், 2011

தலயின் தறுதலை - மங்காத்தா !

திரைப்படம் என்பது பொழுது போக்கு சார்ந்தது தான், மக்களின் வாழ்வியலுக்கு பாடம் நடத்துபவை அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது மங்காத்தா குழு. கதை நாயகன் திறன் படைத்தவனாக இருந்தால் போதும் நல்லவனாக இருப்பது தேவையற்றது என்று காட்சிக்கு காட்சி சொல்லி நகர்த்தி இருக்கிறார்கள், நாயகனின் பெண்கள் மீதான தொடர்பு காமம் அல்லது தன் நலம் சார்ந்த ஒன்றாகவே காட்சிகள் நகர்கின்றன. படம் முழுவதும் மது மற்றும் சிகெரெட் புகை. அன்புமணி ராமதாஸ்கள் ஏன் இன்னும் போர்கொடித் தூக்க வில்லை என்று தெரியவில்லை. பணத்தின் மீதே குறி கொண்ட ஒருவருக்கு ஒழுக்கங்கள் எதுவும் இருக்காது என்பதாகத்தான் காட்சிகள் அதை ஞாயப்படுத்துகின்றன. படம் முழுவது டிஸ்யூம் டிஸ்யூம் துப்பாக்கிச் சண்டை, இறைச்சல்.

புலிவேசம் படம் செட்டியார்களை அவமானப்படுத்துகிறது என்று போர்கொடித் தூக்கிய செட்டியார் சமூகம், இங்கு ஒட்டுமொத்தமாக கோவணம் உருவப்படுவதை கண்டு கொண்டார்களாத் தெரியவில்லை, படத்தில் வரும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை வைத்து தொழில் செய்யும் புக்கியாக செட்டியார் வருகிறார், படமும் அவர் அரசை ஏமாற்றி சூதாட்டப்பணத்தை பிரித்துக் கொடுப்பவராகத்தான் காட்டுகிறார்கள், பெரும்பாலும் சமூகவிரோதிகள், அரசை ஏமாற்றுபவர்கள், தீவிரவாதிகள் என்பதற்கு ரெடிமேடாகவே முஸ்லிம் பாத்திரம் ஒன்றை கதைகளில் வைத்திருக்கும் திரை உலகம், இதில் ஒரு முஸ்லிம் இளைஞரை செட்டியாரின் அடியாளாகக் காட்டுகிறது.

ஆகஸ்ட் 15ல் பிறந்ததற்காக தேசப் பக்தி படங்களாக நடித்துத் தள்ளிய அர்ஜுன் போலிஸ் அதிகாரியாக வந்து கொள்ளைப் பணத்தில் பங்கு பிரிக்கும் அஜித்தின் நண்பர் என்பதை இறுதிக்காட்சியில் சொல்கிறார்கள், அர்ஜுனின் தேசபக்தி கோவணம் முற்றிலுமாக அவிழ்ந்து தொங்குகிறது, பணத்திற்காக நண்பர்கள் அடித்துக் கொள்வதாகவும் துரோகம் செய்வதாகவும், காதலியை ஏமாற்றுவதாகவும் காட்டிய படத்தில் அர்ஜுன் மற்றும் அஜித் நல்ல நண்பர்கள் என்று சொல்லி அவர்களின் திட்டபடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு, ஸ்விஸ் வங்கியில் பாதுகாப்பு உகந்ததல்ல அதனால் லண்டன் பேங்குகளில் பணம் போடப்பட்டதாக அர்ஜுன் அஜித்திடம் சொல்லுகிறார். அர்ஜுன் வரும் காட்சிகளெல்லாம் அர்ஜுனின் வேறு படத்தில் இருந்து இந்தப்படத்திற்கு ஊடுறுவி வந்து செல்வது போன்று இருந்தது. பாலியல் வண்புணர்ச்சி காட்சிக்கு மணிரத்னம் முதலியோர் பிரியாமணியை நாடுவது போல் படுக்கை அறையில் கண்ணீர் விடும் காட்சிக்கு அஞ்சலி நல்ல தேர்வு. மற்றப்படி படத்தில் அவருக்கு வேலை இல்லை. ஹாலிவுட் படங்களில் வரும் நாயகிகள் போல் ஆண்டிரியாவும், லட்சுமிராயும் வந்து போகிறார்கள். போக்குவரத்து விளக்குகளை ஹேக் செய்வது உள்ளிட்ட ஹைட்டெக் காட்சி அமைப்பதாக எடுக்கப்பட்ட காட்சிகள் சரியான சொதப்பல்கள்.

மாமனார் - மருமகள் உறவு பற்றிய சொல்லி சிந்துசமவெளி , செல்லவராகவனின் துள்ளுவதோ இளமை ஆகியவை ஒரு சிலரின் எதார்த்தங்களை படமாக்கியது போல் இந்த படமும் தாவூத் இப்ராஹிம் போன்ற பணத்தை குறியாக வைத்து செயல்படும் ஒருவரைப் பற்றிய ஒருவரிக் கதையாக நகர்ந்து முடிகிறது, அழுகாச்சி, செண்டிமென்ட் ஆகியவற்றைப் புறந்தள்ளும் கதைகள் தமிழில் வரத் துவங்கி இருகின்றது. பொழுது போக்குகளில் சமூகம் நலம் என்ற கோட்பாடுகளில் திரப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது போன்ற படங்கள் உவர்பாகத்தான் இருக்கும். பொழுது போக்கு திரைப்படம் என்ற அளவில் ஓகே. கெட்டவனை கெட்டவனாகவே காட்டி முடிப்பது பின் நவீனத்துவா இல்லையா ? இலக்கிய ஆர்வலர்களின் ஆராய்ச்சிக்கு உரியது.

நான் பார்த்த அளவில் இந்தப்படம் நாயகனின் குணம், கதை முடிவு வரை சினிமா மரபுகளை உடைத்துள்ளது. பணத்தீன் மீது வெறி கொண்டு அலைபவர்களின் இலட்சனம் இது தான் என்று காட்ட முயன்று இருக்கிறார்களா ? தெரியவில்லை. நீலப்படங்களில் எதாவது மெஜேஜ் இருக்கும் என்று நம்பினால் இந்தப்படத்திலும் அது போன்று எதாவது இருக்கலாம். அஜித் - அர்ஜுன் இந்தப் படத்தில் நடித்தது துணிச்சலான முடிவு. துப்பாக்கிச் சத்தங்களும், சிகிரெட் புகைகளும், மதுக்கூடமும் உங்களுக்கு பிடித்து இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம். மங்காத்தா ஆடுபவர்களுக்கு பணம் ஒன்று தானே குறிக்கோள், அது தான் படத்தின் கதையும், தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் நோக்கமும், அஜித் பில்லாவுக்கு பிறகான தொடர் தோல்விகளால் துணிச்சலாகவே இப்படத்திற்கு மங்காத்தா ஆடி வெற்றி பெற்றுள்ளார். மரண தண்டனைக்கு எதிராக 'விருமாண்டி' படத்தில் கூவிய கமலஹாசன், மரண தண்டனையை ஞாயப்படுத்தி உன்னைப் போல் ஒருவன் செய்யவில்லௌயா ? எல்லாம் பணத்தை நோக்கிய மங்காத்தாவே. படத்தில் பஞ்சு வசனத்திற்கு அடிமையாகும் ரசிகர்கள் தான் புரிந்து கொள்வதில்லை,.

நான் எவ்ளவு நாளைக்குத்தான் நல்லவனாக இருப்பது திமுகவினரால் நெருக்கடிக்குள்ளான அஜித் தயாநிதி அழகிரி தயாரிப்பிலேயே அதை நொந்து வெளிப்படுத்தி இருப்பதற்கு பாராட்டுகள். தலை தறுதலையாகவே நடித்திருக்கிறார்.

சரோஜா படத்தைப் போலவே ப்ளாஸ் பேக்கில் படம் முழுவதையும் மாற்றிச் சொல்வது வெங்கட் பிரபுக்கு இது இரண்டாவது படம், இனி தொடர்ந்தால் பல்பாகத் தான் அமையும்.

29 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் வெளிவராத காட்சிகள் !

நான் சென்னையில் இருந்த பொழுது எங்கள் வீட்டின் எதிரே உள்ள பங்களாவில் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை அங்கே படப்படிப்பு நடக்கும். கேரவன்கள், உணவு வாகனங்கள், படக்கருவி இழுவை வண்டிகள், உதவியாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் படத்தில் பணி புரிபவர்கள் என பெரியக் கூட்டம் சூழ்ந்திருந்தது. அன்றைய காட்சி நடிகர் சாயாஜி சிண்டே வேகமாக ஜீப்பில் வந்து பங்களாவில் இறங்குவது போன்ற காட்சி. மூன்று முறை அடுத்தார்கள், அடுத்தக் காட்சியாக விரக்தியாக வீடு கைவிட்டுப் போகிறதே என்பது போல் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவது போன்ற காட்சி இதையும் மூன்று முறை எடுத்தார்கள்.

படத்தில் அந்த இரு காட்சிகளுமே இல்லை, ஆனால் வீட்டினுள் பிடிக்கப்பட்டக் காட்சி காட்டப்பட்டு இருந்தது. கதை படி சாயாஜி சிண்டே வில்லனுக்கு ஆதரவான உயர் காவல் அலுவலர். அவரது சின்னவீடு தான் அந்த வீட்டில் இருப்பார். வில்லன் அவரது சின்ன வீட்டையும் வளைத்துவிட வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளி ஏறுவார். வீட்டுனுள் வில்லனும், சின்னவீடும் இருக்கும் காட்சியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத விரக்தியில் வெளியே வருவார். வெளியே வந்ததும் சின்ன வீடும், பங்களாவும் கைவிட்டுப் போய்விட்டதே என்று வெறுத்து, வெறுப்பில் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவார். வீட்டுனுள் எடுக்கப்பட்ட காட்சியை நான் பார்க்கவில்லை. வெளியே எடுத்தக் காட்சியைத் தான் பார்த்தேன். படத்தில் வீட்டுனுள் எடுத்தக் காட்சியே இடம் பெற்றிருந்தது. வெளியே எடுத்தக் காட்சி நீளம் கருதி வெட்டப்பட்டதாக நினைக்கிறேன். காரணம் ஏற்கனவே படம் 3 மணி நேரத்திற்கும் மேல் மாபெரும் இழுவை. வேட்டைக்காரன் படத்தில் சிறப்பாக செய்திருந்தவர்களில் சாயாஜி சிண்டேவும் ஒருவர்.







படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டே எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து நான் படம் எடுத்துக் கொண்டிருத்தேன். எடுக்கக் கூடாது என்று சைகை காட்டினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன். எடுத்த வரை ஆறு படங்கள் இருந்தது. ஒரு திரைப்படம் உருவாக பலரது உழைப்பும், பெரிய அளவில் பணமும் புழங்குகிறது, திரை உலகம் என்பது மபெரும் தொழிற்சாலை தான். வெற்றி பெற்றால் பணத்துடன் புகழ் வெளிச்சமும் சேர்ந்தே கிடைக்கிறது. அதிலும் டைட்டில் எனப்படும் படத் தலைப்பில் தனியாக பெயர் போடப் படுபவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களது உழைப்பு பெரிதாக வெளியே தெரியாது என்றாலும் ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த மற்றவர்கள் பாதிப்பு அடையமாட்டார்கள், தனியாக பெயர் போடப்படுபவர்கள் தான் பாதிப்பு அடைவார்கள். திரையுலகம் கலை சார்ந்தது என்றாலும் அது ஒரு மாபெரும் சூதாட்டம், ஒரு இயக்குனர் வரிசையாக இரண்டு தோல்வி படங்கள் கொடுத்தால் பிறகு அவருக்கு தயாரிப்பாளரே கிடைக்க மாட்டார். ஆனால் நடிகர்கள் ? நான்கு படம் தோல்வி அடைந்து ஐந்தாவது வெற்றிப்படம் அமைந்தால் அதன் காரணமாக அடுத்த நான்கு தோல்விப் படங்களுக்கு அவருக்கு இயக்குனரும், தயாரிப்பாளர்களும் கிடைப்பார்கள். ஏனென்றால் முகராசி என்பதை திரையுலகம் வெகுவாகவே நம்புகிறது அதுவும் நடிகைகளுக்குக் கிடையாது. எந்த ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும் பொதுமக்களிடம் நேரடி அறிமுகம் பெற்றவர் என்பதால் ஒரு நடிகரின் புகழ் அந்தப் படத்தின் இயக்குனரை விட வெகுவாகவே பரவும், இயக்குனரின் புகழ் திரையுலகிலும், நடிகர்களைத் தாண்டி திரைப்படங்களை ரசிப்பவர்களிடம் மட்டும் தான் பரவும்.

என்னைப் பொருத்த அளவில் திரைக் கலைஞன் என்றால் முதலில் இயக்குனரே அதன் பிறகு இயக்குனரின் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் நடிகர் நடிகைகள். வளர்ந்த நடிகர்களைப் பொருத்த அளவில் ஒரு படத்தின் தோல்வி என்பது அந்த படத்தை இயக்கியவர்களின் தோல்வி (இவளவு பெரிய நடிகரை வச்சே பணம், படம் பண்ணத் தெரியலையே என்பார்கள்). ஒரு படத்தின் வெற்றி அந்த நடிகரின் வெற்றி என்பதாகவும் திரையுலகினுள்ளேயே பிரித்து அறியப்படுகிறது. வளர்ந்த நடிகர் தோல்வி படமானால் அடுத்தப் படத்துக்கு இயக்குனரை மாற்றிக் கொள்வார். வெற்றிப்படம் மென்றால் அடுத்தப்படத்தில் அதைவிட நிறைய செலவு செய்யும் படமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரையே மாற்றிக் கொள்வார். திரையுலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்று சரியாகச் சொல்கிறார்கள். சில கனவுகள் பலிக்கும், பல கனவுகள் பழிக்கும். இதில் நட்டம் அடைபவர்கள் என்றால் இயக்குனரோ, நடிகர்களோ கிடையாது வட்டிக்கு பணம் வாங்கி தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் எனப்படும் படம் வெளியீட்டாளர்களும் தான். இயக்குனர்கள், நடிகர்கள் படு தோல்வி என்றாலும் அவர்கள் தஞ்ச மடைய சின்னத் திரையுலகம் இருக்கு. தயாரிப்பாளர் தோல்வி அடைந்தால் கடன் தொல்லையில் தப்பிக்க விடுதி அறையில் தஞ்ச மடைந்து முழம் கயிற்றில் முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இது சன்/திமுக, ஏவிஎம் குடும்பம் போன்று பெரிய அளவிலான பலதொழில் புரியும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பொருந்தாது, வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுப்பவர்களுக்குத்தான் அந்த நிலை.

பின்குறிப்பு : வேட்டைக்காரன் விமர்சனம் எழுதினால் பதிவுலகில் இருந்து தள்ளி வைக்கப்படுவீர்கள் என்று பலமான எச்சரிக்கை பல தரப்பினரிடம் இருந்து வந்ததை முன்னிட்டும், வேறு வழியே இல்லாததால் என் பங்குக்கான வேட்டைக்காரன் பதிவு இது என்ற அளவில் எடுத்துக் கொள்ளுமாறு விஜய் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். :)

21 பிப்ரவரி, 2009

நாளை உலகப் பெரும் புகழடையப் போகும் தமிழனுக்கு வாழ்த்துகள் !

ஹாலிவுட்டின் ஆஸ்கார் பரிசு இந்திய திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து...பின்னார்...அது ஒன்றும் அவ்வளவு உயர்ந்த விருது அல்ல...பிற நாட்டினரின் படங்களுக்கு ஒரு பிரிவு வைத்திருக்கின்றனர் அவ்வளவுதான் என்பதாக இந்திய திரைக்கலைஞர்கள் தங்கள் பெருமூச்சுகளுக்கு ஞாயமான காரணங்களை சொல்லிக் கொண்டு தேற்றிக் கொண்டனர்.


நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் ஆங்கிலப் படமான 'ஸ்லம் டாக் மில்லினியர்' படத்துக்கு இசை அமைத்து பல விருதுகளைப் பெற்றதுடன், அவரது பெயர் ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பின்னனி இசை
சிறந்த பாடல் (இருபாடல்கள்)


என இரு பிரிவுகளில் அவரது பெயர் முன் மொழியப்பட்டுள்ளது.

இசைப்புயல் நாளை நடக்க இருக்கும் ஆஸ்கர் விருதுவழங்கும் விழாவில் குறைந்தது பின்னனி இசை அல்லது பாடல் அல்லது இரண்டிலுமே பரிசு வெல்லப் போவது உறுதி,

எனெனில் அனைத்து தமிழ்மக்களின் வாழ்த்துகளும், இந்தியர்களின் வாழ்த்துகளும் அதை உறுதி படுத்தும், அவற்றிக்கும் மேலாக அவரது இசைக்கும் அந்த தகுதியும் இருக்கிறது.



ஏ.ஆர்.ரகுமானின் இசையை விட அவரிடம் மிகவும் பிடித்தவை...அவர் புகழின் உச்சியை நோக்கி மேலே செல்லும் ஒவ்வொரு காலகட்டத்திலும்,

'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தன்னடக்கமாக சொல்லும் அவரது மனது.

31 ஜூலை, 2008

ரஜினி மன்னிப்புக் கேட்டார் ! நாமும் மன்னிப்போம் !

ஒகனேக்கல் விவகாரத்தில் உணர்ச்சிவசப் பட்ட ரஜினிகாந்த் தன்னைச் சேர்ந்தவர்கள் என்றே உரிமை எடுத்துக் கொண்டு கன்னடர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து பல்வேறு கன்னட அமைப்புகளிடமிருந்து ரஜினிக்கு எதிர்ப்புக் கிளம்பியது தெரிந்ததே.

குசேலன் படம் பெங்களூரில் வெளியிட முடியாதபடி வாட்டாள் கும்பல்கள் தொடர்ந்து அச்சுறுத்திவர, குசேலன் படத் தயாரிப்பாளர்களும் ரஜினிக்கு நெருக்கடி கொடுத்து இருப்பார்கள் என்றே நினைக்க முடிகிறது. அதைத் தொடர்ந்து கன்னட திரைப்பட சங்கத்தலைவருக்கு (சபரிமலை அய்யன் புகழ் அதே ஜெயமாலா) மன்னிப்பு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதை செய்தியாளர்களுக்கு முன்பு எடுத்துக்காட்டி ரஜினி தன்னிடமே மன்னிப்பு கோரியுள்ளார் என்பதுபோல் காட்டி அதைத் தனக்கான விளம்பரம் ஆக்கிக் கொண்டார் ஜெயமாலா. இது ரஜினி தரப்பை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கும் என்றே தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் தற்போது (இன்று) தொலைக்காட்சியில் தோன்றி கன்னடர்களிடம் வெளிப்படையான மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்.

மனிதன் தவறு செய்வது இயல்பு, மன்னிப்புக் கேட்பது பாராட்டுக்குரியது, மன்னிப்பு கேட்பது பெரும்தன்மை கூட.

ஆனால் இதை குசேலன் வெளியீட்டை முன்னிட்டு செய்யாமல் முன்பே செய்திருந்தால் ரஜினி பெரும்தன்மையானவர் என்று பாராட்டலாம். சொல்றத செய்வேன் செய்றதைச் சொல்லுவேன் என்கிற பத்தரை மாற்று பஞ்ச் டயலாக்குக்கு அவரே பங்கம் வைத்துவிட்டார்.

ரஜினி பல்டிகள் தெரிந்தது தான், எல்லா நடிகர்களும் நெய்வேலிக்கு சென்று போராடிய போது, தனக்கு ஒப்புதல் இல்லை என்று தனியாக உண்ணாவிரதம் இருந்தவர் தான் ரஜினி. கன்னடர்களை கண்டிக்கிறேன் என்று கண்டித்தவர் தற்பொழுது அதைத் திரும்ப பெற்று இருக்கிறார். இதில் அவருடைய தவறு எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. அவர் ஒரு நடிகர் அவருக்கு இருக்கும் மதிப்புக்கு ஏற்றவாறு அவருடைய படங்கள் விற்பனையாகின்றன, அதை வாங்கும் வெளியீட்டாளர்கள் ( விநியோகம்) நட்டப்படக் கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. அதைத்தான் செய்து இருக்கிறார். திரைத்துறையினரிடமே அவர் முரண்டு பிடித்தால் அவர் தன்னை நடிகன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. தான் ஒரு நடிகன் என்பதை நன்றாகவே உணர்ந்து அந்த முடிவை எடுத்து இருக்கிறார். அது தனியாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதைத் தவிர்த்து இந்த திடீர் மன்னிப்புக்கு காரணம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் அப்பாவி ரசிகர்களும் சரி, பரபரப்பு செய்தி இதழ்களும் சரி, ரஜினி வாய்ஸ் கொடுத்தால் சூரியன் கூட நிலவாகிவிடும் என்று அவரை சீண்டுவதை நிறுத்தவேண்டும், தன்னால் முடியாத ஒன்றை செய்துவிட்டு அவர் படும் பாடு அவருக்குத்தான் தெரியும்.

ரஜினி ஸ்டெயில் உங்களுக்கு பிடித்து இருந்தால் படத்தை 100 முறை கூட பாருங்கள், தலையில் கூட வைத்து கொண்டாடுங்கள், ஆனால் அவரை உலகரட்சகன் போன்று புகழ்வதால் அவருக்கும் நட்டம், உங்களுக்கும் இழுக்கே !

எனக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும், ஒரு நல்ல மனிதராகத்தான் பார்க்கிறேன். கடவுள் அவதாரம், அகில உலகத்திற்கும் தலைவன் என்று சொல்வதையெல்லாம் கேட்டால் சிரிப்பே வருக்கிறது.

ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூவிவிட்டு அவரை ஒகனேக்கல் விவகாரம் போல் தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்.

ரஜினி தமிழர்களுக்காக கன்னடர்களைப் பகைத்துக் கொண்டார், கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவர்கள் மன்னித்துவிட்டார்கள். தமிழர் - கன்னடர் விவகாரங்களில் இன்னொமொருமுறை தமிழ்களுக்காக வாய்திறக்கமாட்டேன் என்று மறைமுகமாக சொல்லாமல் சொல்லியதை நாமும் மன்னிப்போம். ரஜினியைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் தமிழருக்கு எதிராக வன்முறையில் இறங்கும், கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேறு தலைவர்களே இல்லையா ? இல்லை.... ரஜினியே சொல்லிவிட்டார் என்ற கன்னடர்கள் தான் அடங்கிவிட்டார்களா ?

*******

இதுபோன்று இனிதர்மசங்கடத்திற்கு ஆளாகவேண்டாம் ரஜினி சார் ! தமிழர்களுக்குஆதரவாக இல்லாவிட்டாலும், எதிர்ப்பாகவே பேசினாலும் கூட இருக்கும் உங்கள் ரசிகர்களில் 50 விழுக்காட்டும் மேல் அதைத் கேட்டு மெய்சிலிர்த்து உங்கள் காலில் விழவும் தயாராக இருக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு உங்கள் கையில் இருப்பதால் நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை பாபா படமே 100 நாள் வரை ஓடிய போது, குசேலனை ஓடவைத்துவிடமாட்டோமா ? நீங்கள் சொல்வதைக் கேட்போர் இங்குண்டு எங்களுக்கெல்லாம் விளக்கம் தேவை இல்லை. கர்நாடகத்தில் தானே நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், அங்கு நீங்கள் மன்னிப்பு கேட்பது தேவையான ஒன்று தான். இதைக்கூட கன்னடர்கள் சந்தர்பவாத மன்னிப்பு என்று நினைத்து பிரச்சனையை நீட்டிக்காமல் இருந்தால் நல்லதே !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்