பின்பற்றுபவர்கள்

போலி ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 செப்டம்பர், 2011

64 ஆம் நாயன்மார் தேவநாதர் வரலாறு !

பின்னொரு காலத்தில் தேவநாதரைப் பற்றி அறிந்து கொள்ளவும், தேவநாதரை 64 ஆவது நாயன்மாராக ஆக்க வேண்டுகோள் வைத்துள்ள சிவ அன்பர்களைப் போற்றி, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெறத் தக்க பேறு பெற்ற தேவநாதர் நாயன்மார் வரலாற்றை சுறுக்கமாக எழுதத் தலைப்(ப)பிட்டுள்ளேன்.

முதுபெரும் அரசியல்வாதிகளும், மாமன்னர்களும், சைவ வைணவ சமய குரவர்களும் வாழ்ந்த நற்பூமியாம் பல்லவ நாட்டின் தலைநகராம் காஞ்சி மாநகரம், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமென்பர் அது போல் காஞ்சி மாநகர் குறித்த மற்றொரு முதுமொழி உண்டு, 'காஞ்சிக்கு சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்' என்பதே அது, அதன் பொருள் அறியா மூடர் சிலர், அவர்களின் சோம்பேறிகளாகப் பலர், காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிக் கொண்டே இருந்தால் சாப்பிட்டுவிடலாம் என்று காஞ்சி வந்து காலாட்டி கால்வீங்கிப் பின்னர் பிச்சைக்காரர்களாக அங்கேயே தங்கிவிட்டனர். மூடர் அறியாரோ முதுமொழி ? என்னும் பழமொழிக்கேற்ப அடே மடையர்களே காஞ்சியில் காலாட்டிப் பிழைப்பது என்பது அவ்வூரில் புகழ்பெற்ற நெசவுத் தொழில் என்பதாம், அஃதாவது கால்களால் ஆட்டி ஆட்டி தறிபோடும் தொழில் தான் காலாட்டிப் பிழைக்கும் தொழில் என்பர். காஞ்சி மாநகருக்கு நெசவு மட்டுமா புகழ் ? உலகுக்கே ஆன்மிகப் பேரொளி வீசம் ஶ்ரீஶ்ரீஶ்ரீ காஞ்சி காமகோடிப் பீடம் அமைந்துள்ள நகர் தான் காஞ்சிமாநகர், ஆதிசங்கரர் நான்முகமாய் நான்கு நகரங்களில் சங்கரமடங்களை நிறுவிவிட்டு பஞ்சரத்தினமாக காஞ்சியில் ஒன்று அமைக்க முடிவு செய்திருந்த போது முக்தி அடைந்தார், ஆதி சங்கரரின் சங்கல்பம் (எண்ணம்) அறிந்த கும்பகோண மடப் பெரியவாக்கள் தங்கள் மடத்தை காஞ்சிக்கு இடம் பெயர்த்து சங்கரரின் சங்கல்பம் பூர்த்தி பெற்று அருளாசி வழங்கிவருகின்றனர். காஞ்சிமடம் எதைச் சேர்ந்தது என்று கேட்டால் வரலாறு தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்றே நான் இந்த பிட்டுகளை இங்கே போட்டு வைக்கிறேன். காஞ்சிக்கு பெருமை மட்டும் தானா ? சிறுமையும் கூட இருக்கிறது, நாத்திகன் ராமசாமியின் சீடன் அண்ணாத்துரை பிறந்து வளர்ந்ததாம் இவ்வூர், நல்லோர் நல்லூரின் நரிகளும் வாழ்ந்திருக்கின்றன என்பதைச் சுட்டவே யாம் இங்கு அண்ணாதுரைப் பற்றிச் சுட்டியுள்ளோம். நல்லது தேவநாதருக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்ப்பு ? ஏன் காஞ்சியைப் பற்றி பெருமை பொங்க எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது அறிவோம்,

சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் நாயன்மார்கள் வரலாறு எழுதும் போது அவர்கள் வாழ்ந்த சென்ற ஊர்களின் பெருமைகளை எழுதி பின் அவர்களைப் பற்றிச் சொல்வது பக்தி இலக்கிய வழக்கம் என்று வழிசொல்லி இருக்கிறார். யாமும் அதைப்பின் ஒற்றியே தேவநாதர் வாழ்ந்துவரும் காஞ்சிமாநகர் தம் பெருமைகளை எடுத்துரைத்தோம். அப்பேரு பெற்ற காஞ்சி மாநகரில் மச்சேஸ்வர நாதர் என்ற பெயரில் உலகாளும் உமையாளின் மனாளன் கோவில் ஒன்றில் குடிகொண்டிருந்தார். அம்மச்சேஸ்வர நாதர் ஆலயத்தில் ஆறுகாலப் பூஜைகளுடன் நடுச்சாம பூஜைகளையும் செவ்வனே செய்து வாழ்ந்து வந்தார் தேவநாதக் குருக்கள், தேவநாதர் தம் பெயருக்கு ஏற்படியே தேவந்திரனை தலைவராக கொண்ட பிராமணச் சமூகத்தில் விளைந்த பிராமண குலக் கொழுந்து, சாதா காலமும் இறைச் சேவை செய்து கொண்டிருந்தாலும் தேவநாதரின் நாட்டம் அர்சனைக்கு வரும் பெண்கள் மீதே இருந்தது. இதனை மச்சேஸ்வரர் அறிவாரா ? உலகாளும் ஊர்த்தாண்டவர் ஒவ்வொரு உயிர்களின் உள்ளத்திலும் ஆடுகிறார், தேவநாதரின் சிந்தை அறியாமல் இருப்பாரோ ?

மச்சேஸ்வரநாதருக்கு பக்தர்களை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பது வழக்கம், பக்தர்களை மட்டுமா ? என்கிறீர்ளே நான் அர்சகர்களையும் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன் என்பதை காட்ட விரும்பிய பெருமானார் மச்சேஸ்வர,ர் ஒரு நாள் பக்தை வடிவில் அர்சனைத் தட்டுடன் வந்தார். அப்போது குருக்கள் பணியில் இருந்த தேவநாதர் 'அப்பப்பா இம்மண்ணுலகில் இவ்வளவு அழகான பெண்ணா ? ' வியந்தார், காமம் தலைக்கேறியது, மயக்கும் மஞ்சளாக செவ்வானம் லேசான தென்றல், மல்லிகை மணம், உள்ளத்தை கொள்ளையடிக்கும் குமரிப் பெண், ஒரே கண் ஜாடையில் சம்மதம் பெற்றார் தேவநாதர். கருவறைக்கு அழைத்துச் சென்று அவள் ஆடையைக் களைய.........ஆவேசம் அடைந்த பெருமானார் பெண் உரு மறைய சடாமுடிகளுடன் தன் உருபெற்று நெற்றிக்கண் திறக்க 'தேவ நாதா நீ என்ன காரியம் செய்கிறாய் ? இது என் கருவறை என்று தெரியாதா ? உன்னை எரித்துவிடுகிறேன்.......என்று சொல்ல, அங்குள்ள மணிகளெல்லாம் கிண் கிண் என அடிக்கின்றன, பதட்டம் அடையாத தேவநாதர் மிகப் பொருமையாக 'ஐயனே தங்கள் தரிசனம் பெற்று பாக்கியம் பெற்றேன், ஆனாலும் நீங்கள் கோபப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை' என்று கூறினார், கருவறையில் கசமுசா செய்வது தவறு என்றே உமக்குத் தெரியாதா ? என்று மேலும் சினமானார் இறைவர். ஐயனே நீர் இல்லாத இடம் ஏது ? என் வீட்டுப் படுக்கையறையிலும் பஞ்சுத் தலையிணையிலும் கூட நீர்தான் இருக்கிறீர். காணும் இடங்களில் எல்லாம் பரம்பிரம்பம் உமை தரிசிக்கும் எனக்கு கருவறை ஒன்றும் தனித்த இடமாகத் தெரியவில்லை, தவறிருந்தால் என்னை மன்னியுங்கள். இருந்தாலும் நான் தவறாக எதையும் செய்துவிடவில்லை என்று கூறினார்.

தேவநாதரின்ன் மெய்யறிவை மெச்சிய பெருமானார் மகிழ்ந்து பார்வதியை வரவழைத்து தம்பதி சகிதமாக காட்சி தந்து 'நீயே உண்மையான சிவ பக்தன்.....வா என்னோடு' என்று கையிலாயம் அழைத்துச் சென்றார்.

கருவறை ஈசனவன் காட்சிதந்தவனைக் கேட்க,
நில்லா இடமென்றோ செல்லா இடமென்றோல்லாமல்
எல்லாவிடத்திலிருக்கும் எம்மீசன், இவ்விடத்தில் மட்டும்
நிற்கானோ என்றுரைத்த தேவநாதன்

தேவநாதர் வரலாறு முற்றிற்று.

*****

தேவநாதருக்கு மச்சேஸ்வரர் காட்சிக் கொடுத்த மார்க்ழி திங்கள் 11 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் தேவநாதர் பிறந்த பழைய சீவாரம் மக்கள் வெகு விமர்சியாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆண்டு தோறும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு வந்து தேவநாதர் பெயரில் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்கின்றனர்.

சைவ சமயத்தில் மட்டும் தானா இம்மாதிரி கசமுசா கதைகள் உள்ளன ? வைணவத்திலும் உண்டு அவர்களில் சிலர் ஆழ்வார்கள் ஆகியுள்ளனர், 'சிந்தாமணி' என்ற பொதுமகளிடம் 'லீலா சுகர்' என்ற வைணவர் அடிமைப்பட்டிருந்து பின்னர் திருந்தினாரே?​ 'தேவ தேவி' என்னும் விலைமகளிடம் விப்ர நாராயணர் சரணடைந்திருக்க,​​ அரங்கன் அவரை மீட்டாரென்பது வரலாறு

*********

இந்தக் கதைகளை நான் பக்தியாளர், நெறியாளர் ஐயா இராம கோபாலன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். ஏனெனில் அவர் தான் நாத்திகர் அண்ணாதுரைக்கு கோவிலில் வைத்து மரியாதைச் செய்வதை தார்மீக ரீதியில் எதிர்த்து,

அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?: ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பினார்

28 ஜனவரி, 2011

செயற்க்கைக் கோளை சனிப் பிடிக்கிறதாம் - நாசா !

என்னக் கொடுமைங்க,

மின்னஞ்சலில் வந்தது.... என்பதாக கூகுள் பஸ்ஸுலும், பேஸ்புக்கிலும் கீழ்கண்ட தகவல் கசிய விடப்படுகிறது.

*********************

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்


இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது. கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர். இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில் 2005 -06 வாக்கில் , வெளிவந்தது. நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..?

**************

மேற்கண்ட மின் அஞ்சலில் நாசா இணையத் தளம் செயற்கைகோள் குறித்து அவ்வாறான அறிக்கைக் கொடுத்ததாக சுட்டிகள் எதுவும் இல்லை. ஜூனியர் விகடன் 2005-2006 வாக்கில் கட்டுரை வெளியிட்டதாக சொன்னதன் பகுதியின் இணைப்பும் இல்லை, இந்த தகவல் 7 ஆண்டுகள் முந்தையது என்றாலும் இந்துத்துவவாதிகளுக்கு தேவையான தகவல் என்பதால் கண்டிப்பாக எடுத்து வைத்திருப்பர் என்பது குறிபிடத் தக்கது. முழுக்க முழுக்க வெறும் வதந்தியைப் பரப்பி திருநள்ளாருக்கு கூட்டம் சேர்க்கும் நோக்கிலும், மதநம்பிக்கையைப் பரப்பும் மலிவான உத்தியுடனும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதே தகவல் மின் அஞ்சல்வழியாக பரப்பப்படுவதுடன் தமிழ் பார்பனர்கள் நடத்தும் இணையத் தளத்திலும், பார்பனர் உலகம் என்றபெயரில் மற்றொரு இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது

மத நம்பிக்கைகளுக்கு அறிவியல்சாயம் பூசுவதும் அது களைவதும் புதிதல்ல. மகரவிளக்கு குட்டு வெளிப்பட்டு இருக்கும் இவ்வேளையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு இது போன்று புதியவத(வா)ந்திகளை பரப்புகிறார்கள்.

இது போன்று மற்றொரு அறிவியல் ஆன்மிகத் தகவல் என்பதாக இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத்தலமான மெக்கா உலகத்தின் மையத்தில் இருப்பதாக கட்டுரைகள் எழுதப்படுவதுண்டு. பூமி தட்டையாக இருந்தால் நீள அகலத்தை வைத்து நடுப்பகுதி எது என்றே சொல்ல முடியும், ஆனால் கோள வடிவத்தில் அதுவும் சுழலும் கோள வடிவத்தில் நடுப்பகுதி எது ? அப்படியே கோளத்தின் நடுப்பகுதி எது என்றால் அது சுழற்சி மையமான துருவ பகுதிதானேயன்றி நாடுகள் அமைந்த நிலப்பகுதி அல்ல. இப்படி நடுப்பகுதியில் தான் மெக்கா அமைந்திருக்கிறது என்று நம்பப்பட்டு பரப்பப்பட்டாலும், சென்ற ஆண்டுவரை இந்தோனேசிய இஸ்லாமியர்கள் மெக்கா எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்ற குழப்பத்தில் வேறொரு இடம் நோக்கி தொழ, அதை அல்லா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்னும் விவாதங்கள் கூட நடந்து முடிவில் தெரியாமல் செய்-தவற்றை அல்லா ஏற்றுக் கொள்வான், தொழுகையின் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த மெக்கா - உலக நடுப்பகுதி நம்பிக்கையை மேலும் வளர்த்துக் கொள்ள இஸ்லாமியர்கள் கிரின்விச் நேரத்திற்கு மாற்றாக மெக்காவை மையப்படுத்தும் நேரங்களுக்கு மாறவேண்டும் என்றும் இஸ்லாமிய அறிவியல் அறிஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏசுநாதர் கண்களில் வடியும் ரத்தம் என்று கிளப்பிவிடப்படும் வதந்திகளில் ஒன்றாக அவரின் இரத்தவகையையும் அந்த இரத்ததில் இருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் அறிவித்தனர்.

மிராக்கல் ஆப் அல்லா
மிராக்கல் ஆப் ஜீஸஸ்
மிராக்கல் ஆப் புத்தா
மிராக்கல் ஆப் காத்தவராயன்
என்று இணையத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுங்கள் ஏகப்பட்ட குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும்.

it is a medical miracle என்று தமிழ் படத்தில் சொல்லப்படுவது போல் அறிவியல் ஆன்மிக அற்புதம் என்கிற கட்டுக்கட்டுகான கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. மனித வரலாறுகள் பதியப்பட்ட காலங்களில் இருந்தே இந்த நம்பிக்கைகள் ஊன்றுவதும் பின்பது பட்டுப்போவதும் நடந்தேறிவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. புதிய மதத்தின் / மதங்களின் எழுச்சி என்பது பழைய மதத்தின்/மதங்களின் பழைமைவாதத்தை எதிர்த்து கட்டப்பட்டுகிறது என்பதால் நான் குறிப்பிடும் கூற்று உண்மை. அண்ணாவின் மாஜி கடவுள் நூல் கிடைத்தால் படித்துப்பாருங்கள், பண்டைய ஐரோப்பிய நாடுகளில் இருந்த கடவுள்களெல்லாம் காணாமல் போன வரலாறுகள் தெரியும். இன்றைய கடவுள்கள் குறித்த நம்பிக்கைகள் அழிய இன்னும் ஒராயிரம் நூற்றாண்டுகள் எடுக்கலாம், ஆனால் கண்டிப்பாக நம்பிக்கைகள் அனைத்தும் அழிவுக்கு உட்பட்டதே.

இன்னும் இரண்டு சுனாமிக்கு இரையாக வேண்டிய இலக்கிய குப்பைகள் தமிழகத்தில் உண்டு ஆனால் வாழ்க்கைகுக்த் தேவையான இலக்கியம் இன்னும் கிடைத்தபாடில்லை என்று தமிழகத்து இலக்கிய வளர்ச்சி பற்றி வைரமுத்து ஆதங்கமாகக் குறிப்பிட்டாராம். இவை மதங்களுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் கூட பொருந்தும் அதாவது இன்னும் சில உலக அழிவுகளுக்கு அசைந்து கொடுக்காத மதங்கள், மூடர் நம்பிக்கைகள் நிறைய உண்டு ஆனால் முடநம்பிக்கையை கட்டுமானமாகக் கொள்ளாத உண்மையான ஆன்மிகம் இது என்று காட்ட மனிதனுக்கு எந்த ஒரு மதமும் இன்னும் கிடைத்தப்பாடில்லை.

இணைப்பு :

அப்துல்கலாம் ஐன்ஸ்டன் ஆனக் கதை !

9 நவம்பர், 2010

கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !

விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?

1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.

இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்

1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.

கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.

2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!

எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்

3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?

இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.

4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?

ஆகமவிதி கோயி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கரையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.


இணைப்பு : இரண்டாவது பெரியாராக முழங்கிய கமல் (தினமலர்)

விஜய் தொலைகாட்சியின் காணொளி:

11 அக்டோபர், 2010

அப்துல்கலாம் ஐன்ஸ்டன் ஆனக் கதை !

கடவுள் பற்றிய விவாதங்களில் பல இடங்களில் அப்துல் கலாம் பெயர் தொடர்புபடுத்தி கட்டுரைகள் வரும், அதாவது கடவுளின் இருப்பை கலாம் வரையறுத்துவிட்டார் என்பதாக அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த உரையாடல் என்ற ஒன்றை எடுத்துப் போடுவர்.

உண்மையில் இப்படியான உரையாடல் கலாமுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்ததா என்று எவரும் கேட்டுத் தெரிந்து கொண்டது போலவோ அல்லது கலாம் அவ்வாறு தன் பேச்சுகளில் எங்கும் குறிப்பிட்டதாகவோ தெரியவில்லை. அண்மையில் ஒரு ஆங்கில இணையப் பக்கத்தை திறந்த போது அதிர்ந்தேன் (நான் அப்படியே ஷாக்காயிட்டேன்). ஏனெனில் கலாம் - ஆசிரியர் உரையாடலின் அப்பட்டமான ஆங்கில மொழிப்பெயர்ப்பில் எழுதப்பட்டு முடிவில் அந்த உரையாடல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்திருந்ததாகப் போட்டிருந்தது. அதே போன்ற உரையாடல்கள் இன்னும் பலமொழிகளில் அந்தப் பகுதி அறிஞர்கள் கடவுளை மெய்பித்த கதையாக ஒவ்வொரு நாட்டிலும் வழங்கிவரும் என்று நினைக்கிறேன். இது போன்ற உரையாடல் மலேசிய கிறித்துவ மாணவனுக்கும் அவரது புரொபெசருக்கும் நடந்ததாகவும் எழுதி இருக்கிறார்கள். யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆத்திக மனநிலைக்கு ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருப்பதால், அந்தந்தப் பகுதி இருப்பவர்களை அதில் நுழைத்து எழுதிவிடுகிறார்கள்.

இன்னும் எத்தனை பேரு கிளம்பி இருக்கிறார்களோ.........ஏன் இந்த பொழப்பு.......கடவுள் இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே......காப்பிரைட் இல்லாத கதைகளை கண்டபடி திருத்தி எழுதி என்னை நிருபியுங்கள் என்று எங்கும் கடவுள் மன்றாடியதைப் போல் தெரியவில்லை..... இந்த பொழப்புக்கு மாற்று மதத்துக்காரனை மனிதனாக நினைச்சு மனிதனாக வாழலாமே.

The Atheist Professor vs the Christian Student)


http://malaysianatheist.blogspot.com/2006/11/atheist-professor-vs-christian-student_11.html

(மலேசியா வர்சன்)

http://www.patrish.com/atheist.html
(கிறித்துவ வர்சன்)

http://hasnain.wordpress.com/2006/05/31/a-dialogue-between-an-atheist-professor-and-a-student/
(இஸ்லாம் வர்சன்)


http://pudukai.blogspot.com/2009/07/blog-post.html
(கலாம் வர்சன்)

http://www.religioustolerance.org/culeins.htm
(ஐன்ஸ்டன் வர்சன்)

**************



இனிமே இது கலாம் சொன்னது, கண்ணதாசன் சொன்னது கதை எழுதினால் கண்டபடி கண்டனம் செய்து இந்த சுட்டியை அங்கு சேர்ப்பேன்.

என்ன கொடுமை சார் இது.........!

கூகுளில் "The Student & the Atheist Professor", என்று தேடினால் ஒரு வண்டி குப்பைக்கு மேலாகக் கொட்டுது. இதை நான் கடவுள் ஏற்பு மறுப்பு என்கிற நிலையில் நின்று எழுதவில்லை, திருப்பதி கடிதம் பலவடிவங்களில் வருவது போல் இந்த 'கடவுள் நிருபன' கதைகளும் வெளிவருது என்று காட்டவே எழுதினேன்.

29 மார்ச், 2010

கால் கழுவும் கலாச்சாரம் !

பண்பாடு என்ற அளவில் அன்றாட செயல்களில் சிலவற்றை நேரிடையாக சொல்வது நாகரீகமின்மையாக கருதப்பட்டு அவை மறை பொருளாகச் சொல்லப்படும், அதுவே இடக்கரடக்கல் என்னும் இலக்கணச் சொல், சளி சிந்துதல் என்று சொல்லாமல் மூக்கு சிந்துதல் என்பார்கள், குண்டி / சூத்து கழுவுதலை கால்கழுவுதல் என்பார்கள். இடக்கரடக்கல், குழூக்கூறி ஆகியவை மறை பொருளாகச் சொல்லப்படும் செயல் குறித்த சொற்களின் மறுவடிவம் அல்லது குறியீடு. இருந்தாலும் இங்கே கால் கழுவுவது என்றால் நான் இடக்கரடக்கலான குண்டி கழுவுவது பற்றிச் சொல்லவில்லை.

*****

ஒருவரின் இழிவுகளை சுமப்பதன் மூலம் நாம் அவரைப் போற்றுகிறோம் என்பது பண்பாடாம். இப்படித்தான் இராமன் என்னும் அண்ணனை உயர்வு படுத்த தம்பி பரதன் அவனது செருப்பை வைத்து நாடாண்டான் என்பது இராமாயணக் கதை. உன் கால் செருப்பு கூட எனக்கு உயர்வு தான் என்று சொல்வதாகப் பொருள். பிறரை எதை வைத்து 'செருப்பால் அடிப்பேன்' என்று கேவலப்படுத்துகிறோமோ, மற்றவருக்கு 'செருப்பாக இருப்பேன்' என்று உயர்வாகச் சொல்வது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் காலந்தோறும் இருந்தே வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் இது தேவையில்லாத உணர்ச்சி மிகுதலின் வெளிப்பாடுகள், ஒருவரின் காலில் விழுதலும் மற்றவரை காலை வாரிவிடுவதும் கிட்ட தட்ட ஒன்று தான். ஒன்றின் பெயர் பணிவாம் மற்றொன்று துணிவாம்.

திருமணச் சடங்கின் போது பெற்றோர்களுக்கு பாத பூசை செய்வது பார்பனிய வழி இந்து திருமண முறையில் ஒரு சடங்கு. பெற்றோர்களின் காலில் பூசை செய்வதை பிள்ளைகள் விரும்பியே செய்கின்றனர் என்றாலும் இது பெற்றோர்களுக்கு பேரனந்ததை தந்துவிடுமா ? அப்படியே என்றாலும் அந்த நிகழ்வின் போது எந்த ஒரு விதவை தாய்க்கும் அந்த தகுதி கொடுக்கப்படுவதில்லை. விதவை தாயின் மக்களின் திருமணத்தின் போது வேறொரு மூத்த பெரியப்பா, சித்தப்பா தம்பதிகளுக்கு அந்த பாத பூசை நடக்கும், அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைப்பார்கள். பாத பூசை என்பது பெற்றோர்களுக்கு மதிப்பதற்கு செய்யும் ஒரு சடங்கு என்றாலும் இரு பெற்றொரும் இருந்தால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.

கால்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தவிர்த்து கால் உட்பட பிற(ர்) உடல் உறுப்புகளுக்களை ஒருவர் மதிக்க வேண்டியது இல்லை. ஒருவரின் மீதான மரியாதை என்பது அவருடைய முழுவுருவத்திற்கும் அன்றி தனித்தனியாக கால், கை, தலை முதலியவற்றிற்கானது அல்ல. சாமியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் புனித பிம்பங்கள் முற்றையும் துறந்ததாகச் சொல்லிக் கொண்டு பக்தர்கள் கால் கழுவி, பாத பூசை செய்யச் சொல்வதைவிட சக மனிதனை இழிவு படித்தும் நிகழ்வு எதுவும் இல்லை. அப்படியே செய்ய அது என்ன கழிவரைக்கே செல்லாத காலா என்ன ? இதையும் விடக் கொடுமை காஞ்சிப் பெரியவாள்கள் திறந்த வெளியில் தான் ஆய் போவார்களாம், அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம். அதை புனித பணியாக சிலர் செய்துவருவதாகவும் பலர் படித்திருக்கக் கூடும். மனித உடல்கழிவுகள் ஒருவருக்கு சந்தனமாகவும், மற்றவருக்கு மலமாகவும் போகுமா என்ன ? இது போன்ற இழிவுகளையும் ஒரு மனிதன் தன்னைத் தாழ்த்திக் செய்வதையெல்லாம் இறைப் பணி என்று உளறவும் செய்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனம் உவந்து செய்யும் இந்த செயல்களையெல்லாம் கூட வயது வந்த பெற்றொர்களுக்கு பிள்ளைகள் செய்யாமல் வேலைக்காரர்களை வைத்து செய்யும் நிலையில் ஒரு சாமியாரின் கழிவுகளுக்கான பணிவிடைகளில் என்ன புனித தன்மை இருந்துவிடப் போகிறது.

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளும் சாமியார்கள், சாமியாரிணிகள் பலரும் பக்தர்கள் பாத பூசை செய்வதை அனுமதிப்பதும் இல்லாமல் அதற்கு கட்டணம் வேறு வைத்து வசூலிக்கிறார்கள். இந்த நாற்றம் பிடித்த சாமியார்களின் செயல்களை இந்து மத இடிதாங்கிகள் கண்டித்ததே இல்லை. பாத பூசை செய்வதில் பக்தனுக்கு பலன் உண்டு என்றால் அதே சாமியார்களுக்கு குண்டி கழுவி விடுவது பன்மடங்கு பலன் தரும் என்று சொல்லிவிட முடியுமா ? அந்த அளவுக்கு இன்னும் செல்லாதது ஓரளவு ஆறுதலே அளிக்கிறது, அதுவும் ஒரு புனித சேவை என்று எதோ ஒரு பக்தி இலக்கியத்தில் கோடிட்டு இருந்தால் சாமியார்களுக்கு குண்டி கழிவி விட டெண்டர் விட்டு வசூல் நடத்தினாலும் நடத்திவிடுவார்கள்.

*****

சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவருமே நம்மைப் போல் எலும்பும் சதையும், கழிவு உறுப்புகளும் உள்ள மனிதர்கள் தாம், அவர்கள் உடலில் இருந்து வியர்வை, சீழ், மலம், சிறுநீர், விந்து, கண்ணீர் ஆகிய அனைத்து கழிவுகளும் வெளியேறும். இன்னும் சொல்லப் போனால் நம்மைப் போலவே பெற்றோர்களின் உடல் உறவின் மூலம், கழிவு உறுப்பின் வழியாக பிறந்தவர்கள் தான் அனைத்து மத சாமியார்கள் மற்றும் மத போதகர்கள் அனைவருமே. அவர்களது தனித்தன்மை என்பது அவர்கள் நடவடிக்கை மட்டுமே அன்றி உடல் அல்ல. சாமியார்களுக்கு கால்கழுவுதல், இலை போடுதல் போன்றவற்றிற்கு பதிலாக முதியோர் இல்லங்களுக்குச் சென்று குளிக்கக் கூட இயலாத நிலையில் நலிவுற்றிருக்கும் மூத்தவர்களுக்கு அப்பணிவிடைகளைச் செய்தால் கிடைக்கும் அவர்களின் மனதிலிருந்து கொடுக்கும் வாழ்த்தும், ஆசியும் எந்த ஒரு முக்தி பெற்ற அல்லது முக்தி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்களால் கூட அளிக்க முடியாது.






எந்த ஒரு சாமியார் பாத பூசையால் மகிழ்கிறானோ, அவ்வாறு செய்ய அனுமதிக்கிறானோ, பணிவிக்கிறானோ அவன் போலி சாமியாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் மக்களை இழிவு படுத்திப் பார்பவன் ஒரு உண்மையான துறவியாக இருப்பதற்கு வாய்பே இல்லை. தன்னை அவதாரம் மற்றும் கடவுள் என்று விளம்பரம் செய்ய இவ்வாறு செய்கிறார்கள்.

10 மார்ச், 2010

தினமலர் பரிந்துரை செய்த ஆன்மிக சிந்தனையாளர் நித்தி !

நித்தியை ஆன்மிகவாதி என்ற லேபிள் கொடுத்து மக்கள் முன் அறிமுகப் படுத்தியவர்கள் பலர், நித்தி அம்பலப்பட்ட பிறகு தடாலடியாக பலர் நித்திக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது போல் நித்தி பற்றிய எதிர்கருத்துகளைத் திரட்டி எழுதிவருகிறார்கள், நித்தியின் விடியோவைப் போட்டு காசு பார்த்தாலும் நக்கீரன் சென்ற ஆண்டே நித்தி ஒரு கல்லூரியில் மாணவிகளுக்கு கட்டுபிடி சிகிச்சை செய்து கசமுசா செய்தார் என்று வெளி இட்டிருந்தது. நக்கீரன் குழுமம் நடத்தும் ஆன்மிக இதழ் மற்றும் தினகரனில் நித்தி கட்டுரைகள் வந்ததா என்று சரியாக தெரியவில்லை. குமுதம் நித்திக்காக கதவை திறந்து வைத்திருந்தது. தினமலர் நித்தியை சிறந்த ஆன்மிகவாதிகளுல் ஒருவர் பட்டியலில் இணைத்து அவரின் அருளுரைகளை வெளி இட்டுவந்தது. இவை எல்லாம் நித்தி வீடியோவில் சிக்கும் முன்பு தான். தினமலர் தற்போது நித்தியை ஆன்மிக அருளாளர்கள் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டிருந்தது.

தற்போது இருக்கும் பட்டியலில் நித்திபெயர் இல்லை. தினமலர் முன்பே நித்தியை நம்பவில்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கும் கூகுள் கேச் வழியாகத் தலைப்பைத் தேடலாம் என்று பார்த்தால் நித்தி அம்பலப்படும் முன் தினமலர் நித்தியையும் ஆன்மிகவாதிகளின் பட்டியலில் இணைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

நித்தி சிக்கிய பிறகு


நித்தி சிக்குவதற்கு முன்
****

லோக குரு, ஜெகத் குரு, அவதாரம் இவை எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு செய்தி இதழ்கள் சூட்டும் வெறும் புகழ்ச்சி மகுடம், வேடம் களையும் போது செய்தி இதழ்களே தொடர்புடைய அந்த நபருக்கு செருப்பு மாலை போடுகிறார்கள். இவர்கள் ஆன்மிகவாதிகள் என்று அறிமுகப்படுத்தும் நபர்களே இப்படி என்றால் 'வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிட்டுக்குருவி லேகியம், சித்தவைத்திய விளம்பரம், அவர்களாகவே இட்டுக்கட்டி எழுதிக் கொள்ளும் திரைச் செய்திகள் இவை எல்லாம் அப்பாவிகளை ஏமாற்ற செய்தி இதழ்கள் தரும் தரமற்ற சேவை விளம்பரங்களின்றி வேறென்ன ?

6 மார்ச், 2010

நித்தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

ஞாயமாக இந்த தலைப்பில் கிழக்கு வெளியிடுகள் தான் சூட்டோடு சூடாக 100 ரூபாய் புத்தகம் வெளி இட்டிருக்கனும். அச்சில் இருக்கிறதோ அல்லது பா.ரா பிசியோ என்னவோ :)

90களின் இறுதியில் நித்தியின் புகைப்படங்கள் கட்டுரைகள் குமுதம் போன்ற நாளிதழ்களில் வெளியான காலகட்டங்களில், 'இவன் என் பிரண்ட் அரவிந்த் க்ளாஸ்மெட்' என்று ஒரு வாரப்பத்திரிக்கையில் அவன் படத்தைப் பார்த்த என் தம்பி எனக்கு சொன்னான். என் தம்பியின் நண்பன் டிப்ளமோ படித்தவர். நித்தியும் டிப்ளமா தான். அப்போதெல்லாம் நித்தியின் புகைப்படங்கள் விவேகநந்தர் பாணியில் காவி உடையில் தலையில் முண்டாசுடன் 21 ஆம் நூற்றாண்டு புதிய விவேகநந்தர் போன்ற போஸுடன் காணப்படும். பெயரும் விவேகநந்தர் மற்றும் இராமகிருஷ்ண மடங்களின் சந்நியாசிகளுக்கு கொடுப்பது போலவே 'ஆனந்தா' வில் முடியும் பெயருடன் இருந்தார். நித்தியின் ஆசிரமத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஆனந்தாவில் முடியும் பெயர்கள் தான் சூட்டப்பட்டு இருப்பதாக தற்போதைய செய்திகள் வாயிலாக அறிகிறேன்.

விவேகநந்தர் வேடத்திற்கு பிறகு நித்தி புத்தர் போஸ்கள் கொடுக்கத் தொடங்கினார். புத்தரைப் போன்ற வெள்ளை உடை, ஆலமரம் அடியில் தியானம் செய்வது போன்ற போஸ். இந்தகாலகட்டத்தில் நித்தி தன்னை கார்ப்ரேட் அந்தஸ்திற்கு உயர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு, பணக்காரர்களின் பொருள் உதவி என வேகமாக வளர்ந்திருக்கிறார். சாய்பாபாவைப் போன்ற அவதாரம் தேவைப்பட முண்டாசைக் கழட்டிவிட்டு பம்பல் முடி வளர்க்க முயற்சித்த் அவரது முடியால் முடியாமல் போக அது குறும் கூந்தல் வளர்க்கத் தொடங்கி இருக்க வேண்டும். பொதுவாக கார்ப்ரேட் சாமியார்கள் அனைவருமே கடவுள் படத்தை தூக்கிப் போட்டுவிட்டு நான் தான் சிவன் அவதாரம் என்பார்கள். சாய்பாபா விஷ்ணு அவதாரமாம், போட்டி வேண்டாமே என்று நினைத்த நித்தி சிவன் அவதாரம் ஆகிவிட்டார். சிவலிங்கத்திற்கு முண்டாசு கட்டிவிட்டு பூசைக்காக பெயரளவில் வைத்துவிட்டு, இவர் படத்தையே இவரது அடியார்கள் வணங்கும் படி வைத்தார். சாய்பாபா செய்துவருவதும் அப்படியே. சாய்பாபா சமீதிகளில் அவரது படமும், ஒரு நாற்காலியும் இருக்கும், இதன் பொருள் சாய்பாபா அங்கே அமர்ந்திருப்பதாக உணரனுமாம், சிலருக்கு அப்படியே தோன்றுமாம் (மன பிராந்தி, விஸ்கி என்று இதைத்தான் சொல்லுவார்கள்), அதே பாணியில் நித்தியும் நித்தியின் படங்களை முன்னிறுத்தி சீடர்களையும், நம்பிக்கையாளர்களையும் வணங்கச் செய்தார். படத்தை வணங்கச் சொல்லுவது பங்காரு அடிகளாரும் என்றாலும் சாய்பாபா தான் நித்திக்கு முன்னோடி.

கார்ப்ரேட்டுகளாக வளர்ந்த பிறகு உலக அளவில் பரவவேண்டுமென்றால் 'அடியார்கள் அருள் பெற்ற' கதைகள் எழுதவேண்டும். படத்திலிருந்து விபூதி கொட்டியது, 'மெடிக்கல் மிராக்கல்' என்று மருத்துவர்களே வியப்படையும் படி நோயாளிகள் குணமடைந்தார்கள் போன்ற பல கதைகள் உலவ விடப்படவேண்டும். இந்த வேலையை சாரு போன்ற பிரபல எழுத்தாளர்கள் எழுதி நித்திக்கு பெரும் புகழ் சேர்த்தனர். கார்ப்ரேட் சாமியார்களின் பக்தர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் பிறகு வெளி நாடுகளில் மடம் திறக்க அது பெரியவழியாக அமையும். அவர்களின் முன்னேற்பாடுகளில் கிளை கிளையாக தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் நித்தியும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். 1000 என்ற எண்ணிக்கையில் ஆசிரமங்கள், யோக நிலையங்கள், தனிப்பட்ட கோவில்கள் என நித்திக்கு உலக அளவில் செல்வாக்கு உயர்ந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் நித்தி வளர்ந்த அசுர வளர்ச்சி 32 வயதிற்குள் 1000 கணக்கில் யோகா நிலையங்கள், 1000 ஏக்கர் கணக்கில் ஆஸ்ரம நிர்வகத்திற்கு பல்வேறு நாடுகளில் சொத்துகள், மில்லியனில் பணம் இவையெல்லாம் நித்தியின் தனிப்பட்ட சாதனைதான், இந்த வயதில் இவ்வளவு வளர்ந்தவர்கள் தொழில் துறையிலும் பன்னாட்டு நிறுவனம் என்ற அளவில் கூட குறைவே.

சாய்பாபா போன்றே பெரிய பெரிய ஆசனங்களில் அமர்ந்து பேசினார். தன்னை சிவனவதாரம், ஜீவன் முக்தி அடைந்தவன் (வாழ்வில் முக்தி அல்லது வாழும் போதே மோட்சம் பெற்றவன் என்று பொருள், அதனால் தான் அவர் பெயர் நித்திய ஆனந்தா)

நித்தி போன்றவர்கள் போதிப்பதே உண்மையான ஆன்மிகம் என்று ஆன்மிக நாட்டம் உடையவர் நம்பிவிட்டால், மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயக்கம் அடைந்துவிடுவார்கள், அதன் பிறகு சரணாகதி அடைந்தவர்களாக அந்த அப்பாவிகள் 'ஜீவன் முக்தி' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களைத் துறந்து, இல் வாழ்க்கையை துறந்து நித்தி போன்றவர்களின் ஆஸ்ரமங்களில் சேவைக்கு சரணாகதி அடைந்துவிடுவார்கள், நித்தி போன்றவர்கள் போலி என்று அடையாளம் காணும் போது ஆசிரமத்தில் சரண் அடைந்த ஆண்கள் பரவாயில்லை, இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று அதனை விட்டு 'மனப்'பூர்வமாக விடுதலை அடைய முடியும். பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறி, 'இவளும் அங்கே படுக்கையை பகிர்ந்திருப்பாளோ' என்று உறவினர்களாலேயே கேவலமாகப் பேசப்பட்டு அந்த பெண் வாழ்நாள் முழுவதும் ஒடுங்கியே இருக்க வேண்டியதான். நித்தியின் ஆசிரமத்தில் சரணடைந்த பெண்களின் எண்ணிக்கை 600க்கும் மேலாம், இதில் இந்தியாவில் தான் உண்மையான ஆன்மிகம் என்று விரும்பி வந்த வெளிநாட்டினர்களும் உண்டு. நித்தியின் கார்பரேட் கட்டுமானத்தில் வெற்றிகரமாக ஆசிரமம் நடத்தியவர்களின் அனைத்து அம்சங்களும் உண்டு.

ஆன்மிகத்தில் மாயை என்று சொல்லுவார்கள், கண்ணில் தெரியும் காட்சி உண்மை அல்ல என்பது இதன் பொருளாம். அபிரதமான வளர்ச்சி அடைவது அது பணமாக இருந்தாலும் புகழாக இருந்தாலும் அது மாயைதான். ஏனெனின்றால் அது இயல்பான வளர்ச்சியே அன்று. குதிரை பந்தயம், பெரும் திருட்டு, ஏமாற்றுதல் இதன்வழியாக பெரிய பணம் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால், அது விட்டுப் போக வெகு குறைவான நாட்களே எடுத்துக் கொள்ளும், நித்தியின் கட்டுபாடற்ற வளர்ச்சியும் கூட அப்படித்தான், சீட்டுகட்டு மாளிகைப் போல் ஒரே நாளில் தரைமட்டமானது.

நித்தி விவேகநந்தாராக, புத்தராக, சிவ அவதாரமாகி கடைசியில் மன்மதன் அவதாரம் எடுத்த போது வீழ்ந்துவிட்டார். :)

மக்களும் எந்த அவதாரத்தையும் போற்றி வணங்குகிறார்கள், லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி பாத பூசைகூட செய்கிறார்கள் மன்மத அவதாரம் என்றால் பொங்கிவிடுகிறார்கள். :)

கடவுள்களுக்கு ஏற்கபட்டும் மன்மத அவதாரம், சாமியார்களும் எடுக்கும் போது ஏற்றுக் கொள்ளாதது மக்களின் ஓரவஞ்சனை. ஆக மக்கள் மனதில் எந்த ஒரு சாமியாரையும் கடவுள் அல்ல அவன் மனிதன் தான் என்று புரிந்து கொள்ள சூழல் தான் தேவைப்படுகிறது. மற்றபடி மக்கள் முட்டாள்களே அல்ல.






4 மார்ச், 2010

ஞான மரபும், வெளிநாட்டு சதியும் !

நேற்றுவரை இந்து மதத்தை உய்விக்க மறு அவதாரம் எடுத்த விவேகநந்தர் என புனித பிம்பம் ஆக்கி புகழ்ந்த இந்து அமைப்புகள் அது கிழிந்த மூத்திரப் பை என்று தெரிந்ததும், சத்யானந்தனின் ஆசிரம அமைப்புகளை அடித்து நொறுக்கி இருக்கிறதாம். வேடம் களைந்ததால் இவர்கள் உருவாக்கிய புது விவேகநந்தனை இவர்களே காலி செய்கிறார்கள். சத்யாநந்தனனுக்கு இவர்கள் செய்த விளம்பரம், அவனுடைய அசுர வளர்ச்சியும் துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம் ஆனது போல் ஆகிவிட்டது.

சந்தடி சாக்கில் 'கிந்து' லேகியம் விற்கும் 'வெற்றி' எழுத்தாளர் குழுமம், சத்யானந்தரின் அம்பலத்தால் கிந்து ஞானமரபுக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று கேள்வி எழுப்பி விடையும் சொல்கிறார்கள். தலித்தை கோவிலுனுள் சேர்க்காததற்கும், அனைத்து மதத்தினர் அர்சகர் ஆகும் திட்டத்திற்கு தடைவாங்கியும், தமிழ் வழிபாட்டு முறை என்றால் முகம் சுளிக்கும் இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு 'ஞான மரபு' பற்றி வெற்றி எழுத்தாளர் மிகவும் கவலைப்படுகிறார். எங்க கிந்து மதத்தில் பிரம்மாச்சாரியம் எல்லாம் கிடையவே கிடையாது பெளத்த மதத்தின் 'சன்னியாசம், பிரம்மச்சாரியம்' என வேண்டாத ஒன்றை கிந்து மதம் எடுத்துக் கொண்டுதால் இது போன்ற அவமானங்களை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று முத்து உதிர்கிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக சத்யானநந்ததிற்காக மீடியா கிடைத்த போதெல்லாம் கூவிய சேறு எழுத்தாளர், சத்யானந்தன் ஸ்திரீ லோலன் தான் ஆனாலும் அவனிடம் நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பது உண்மை, நேரில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே தான் உடல் நலம் இல்லாமல் படுத்திருந்த போது சத்யானந்ததின் ஆசி பழிக்கவில்லை, கஞ்சு பாத்திரத்தைக் கூட திறக்க தெம்பு இல்லாமல் இருந்ததாகவும் யாரோ ஒரு வாசகர் உதவியால் மருத்துவமனை சென்றதாகவும் அதே கட்டுரையில் சத்யானந்ததின் சக்தி பற்றி முன்னுக்கு பின் உளரலாகவே எழுதி இருக்கிறார். தான் விளம்பரம் செய்தது தவறு அல்ல, சத்யானந்தம் மோசமானவன் தான் என்பதை இப்படியாக உணர்த்துகிறாராம். அவரை படிப்பவர்கள் ஐயோ.....முட்டிக் கொள்ளுங்க.

நவீன வீவேகந்தர் நாறிப் போய்விட்டார், கிந்து மததிற்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்று அலறும் கூட்டங்கள், கிந்து மதம் மேன்மை அடைய என்ன செயதது என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் போலி சாமியார்களை அடையாளம் காட்டும் வேலையாவது செய்தார்களா ? தெரியவில்லை, மாட்டிக் கொண்டால் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை உடனடியாக சொல்லி மாட்டிக் கொண்ட அமைப்பை தாக்குவதின் மூலம் கிந்து மதம் காக்கப்படும் வருணாசிரமம் காக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

இதைவிடப் பெரிய காமடி சத்யானந்தம் சிக்கிக் கொண்டது நல்லது தான் என்று எதுவுமே சொல்லாமல், இது கிந்து எதிரிகளின் சூழ்ச்சி, வெளிநாட்டு மதமாற்றுக் கும்பலின் சதி என்றால் உளறிக் கொட்டுவதற்கு 'வெற்றி' எழுத்தாளர் ஆமாம் போடுகிறார். வெளி நாட்டுக்காரன் ஒரு வேளை சதி செய்கிறான் என்றே வைத்துக் கொண்டாலும் சத்யானந்தம் போன்ற கார்பரேட் சாமியார்களுக்கு 200 ஏக்கர் பரப்பில் அமைந்த ஆசிரமங்கள், 1000 கிளைகள், உலகம் தழுவிய 1000 கோடி டாலர் ஆசிரம சொத்துகள், யாரால் வந்தது ? வெளி நாட்டுக்காரன் பணம் தானே ? பாதிக்கபடுபவன் வெளிநாட்டுக்காரனாக இருக்கும் போது அதை அவன் தான் அம்பலப்படுத்தி இருந்தாலும் அதில் தவறு ஏது ?

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளை காமசூத்திர,தாந்திரீக யோக குண்டலினி, என்ற பெயர்களில் போலி கிந்து அமைப்புகள் கூடாரம் அடித்து தாக்கி வருகின்றனர். கிந்து மதத்தில் தான் உண்மையான ஆன்மீகம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கையில் வாரிசு அற்ற தங்கள் சொத்துகளை வெளி நாட்டினர்கள் முழுவதுமாக அளிக்கிறார்கள், பில்கேட்ஸ் 10000 தொழிலாளர்களை, 1000 அலுவலங்களை வைத்து செய்யும் ஒரு தொழிலில் கிடைக்கும் வருவாய் போல 1000 ஆசிரமக் கிளைகள் தொடங்கி கிந்து சாமியார்கள் வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டு அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு கோபம் வருமா வராதா ?

கிந்து சேவை அமைப்புகள் சாமியார்களின் அளவுக்கு மிஞ்சிய அசுரவளர்ச்சி, அவர்களின் சொத்து குவிப்பு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமல் இருந்துவிட்டு, அவர்கள் மாட்டிக் கொண்டால் கைகழுவதும் இல்லாமல் அவர்களின் அமைப்பில் எதுவுமே தெரியாமல் எதோ தேடல் என்று சென்று அங்கே சேர்ந்து அங்கேயே தங்கி இருக்கும் அப்பாவிகளையெல்லாம் தாக்குகிறார்கள். சத்யானந்ததிற்கு பேராதரவு கொடுத்து கட்டுரைகள், அருளுரைகள் வெளி இட்ட செய்தி இதழ்கள் தற்போது சூடான விற்பனைக்கு சத்யானந்த சம்போகம் வெளி இடுகிறார்கள். இவர்களையாவது கிந்து அமைப்புகள் கண்டித்ததா ?

கிந்து மதம், ஞான மரபு என்ற சப்பைக் கட்டும் 'வெற்றி' எழுத்தாளர் இதை வைத்து நித்யபுரம் என்னும் நாவல் எழுதினால் நன்கு விற்கும்.

கிந்து மதத்தை எவனும் காத்துவரவில்லை, அதுவாகவே அவ்வப்போது போலிகளை அம்பலப்படுத்தி காத்துக் கொண்டு தான் வருகிறது. சத்யானந்தம் சிக்கியதற்கு உணர்ச்சி வசப்படும், ஆவேசப்படும் இந்துக்கள் சத்தியானந்தம் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் இந்து மதத்தின் கற்பக விருச்சம் என்ற பெயரில் அசுர வளர்ச்சி பெற்ற ஒரு எட்டி மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாய்க்கப்பட்டுவிட்டதாக நினைத்து மகிழலாம்.

இந்த சூழலில் உடனடித் தேவை மற்றும் சேவை எதுவென்றால் சத்யானந்தனின் ஆசிரமத்தில் அற்பணித்துக் கொண்டவர்களை மீட்டு அவர்களின் இல்லங்களில் ஒப்படைத்து அவர்களுக்கு உளவியல் மருத்துவரை வைத்து பயிற்சி கொடுத்து, மன அழுத்ததில் இருக்கும் அவர்களின் தற்கொலைகளைத் தடுக்கலாம். தாம் தவறு செய்துவிட்டோம், வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்கிற குற்றவுணர்வுகளில் இருந்து மீட்டு, அவர்களை குத்திக் காட்டாமல் அவர்களுக்கு நல்வாழ்வு அமைய ஏற்பாடு செய்வது தான் ஹிந்து மததிற்கு செய்யும் உண்மையான சேவை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

18 ஜனவரி, 2010

சிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு !

என்ற தலைப்பில் படத்துடன் ஒரு தகவலை வெளி இட்டிருக்கிறது தினமலர், இந்த தகவலை ஆத்திக அன்பர் ஒருவர் அனுப்பி அதில் இருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கச் சொல்லி அனுப்பினார்.

பாம்பு மரத்தில் ஏறி வில்வ இலையைப் பறித்து வந்து பறித்து வந்து அர்சனை செய்ததாம். படிப்போருக்கு மெய் சிலிர்க்க வைக்கும் தகவல். மாட்டுக் கண்ணில் கிருஷ்ண பகவான் தோன்றுவது, பிள்ளையார் பால் குடித்தது, ஏசுவின் கண்ணில் இரத்தம் வழிவது மண்ணறையில் கடுமையான தண்டனை கிடைப்பதற்கான ஆதாரமாக ஒரு பிணத்தை தோண்டி காட்டியது போன்று பல்வேறு மத நம்பிக்கை வதந்திகளில் இதுவும் ஒன்று. பாம்பு அபிஷேகம் செய்வது, தாலாட்டுவது, இதையெல்லாம் ராமராஜன் படத்தில் என்றோ பார்த்துவிட்டோம். பல ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு ஒன்று கோவிலுக்குள் சென்று அங்கு பக்தர்கள் கொடுக்கும் தேங்காயை உண்டு வாழ்ந்து அங்கேயே இறந்ததாம். அனுமாரே வந்ததாக கிளப்பி விட்டனர். எங்கும் யாரும், காக்கைகளும் துறத்தாத இடம், உணவு கிடைக்கும் இடம் என்றால் குரங்கு நகராமல் அங்கேயே இருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. பாம்பு சிலை மீது படுத்து இருப்பதும், தன்னுடைய பாதுகாப்பிற்காக யாரும் வருகிறார்களாக என்கிற கவனத்துடன் தலையை முன்பாக வைத்திருப்பதும் அதிசயம் இல்லை. வில்வ இலையைப் பறித்து அர்சனை செய்ததாக சொல்லி இருப்பது வெறும் வதந்தி என்றே நினைக்கிறேன்.


"இதே போன்ற சிவலிங்க சன்னதியின் கருவரையில் தான் தேவ நாதன் என்பவன் காம லீலைகளையும் நடத்தினான். பாம்பு அர்சனை செய்தது உண்மை என்றால் அது போன்ற மற்றொரு பாம்பு தேவ நாதனுக்கு கொத்த வேண்டிய இடத்தில் கொத்தி இருக்க வேண்டும், அப்படியெல்லாம் எதுவுமே நடக்காமல் தேவ நாதன் தொடர்ந்து பல பெண்களுடன் கருவரையை விந்தாபிஷேகம் செய்து வந்திருக்கிறான். பல நாள் திருடன் என்கிற ரீதியில் தான் தேவ நாதன் சிக்கினான்."


மனிதர்கள் தொட்டாலே தீட்டு, பாம்பு படுத்து இருந்தால் தெய்வீகமாம், அதிசயமாம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.........தமிழ்நாட்டிலே. இதை இறை அற்புதம், அதிசயமாகக் காட்டுவதன் மூலம் மக்கள் மனதில் வேதனையாக இருக்கும் தேவநாதன் திருவிளையாடலை மறக்க வைத்துவிடும் என்கிற ஒரு நம்பிக்கையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிலந்தி அர்சனை செய்ததாக கூறிய பெரிய புராணக் கதையின் தற்கால வடிவமாக இதனைக் கொள்ளலாம் போலத் தெரிகிற


எத்தனையோ கோவில்கள், புராணங்கள், மந்திரங்கள், பக்தி நூல்கள் இருந்தும் கடவுள், மனிதனுக்கு இறை நம்பிக்கை ஏற்படுத்த, வலுப்படுத்த ஒரு வாயில்லா உயிரை நம்புகிறார் என்று நினைப்பது பக்தியா ? அறியாமையா ?

சிவன் கோவிலில் பாம்பு வில்வ அர்சனை செய்தது என்று கேள்விப்பட்டால் உடனடியாக முகம் சுளிபவர் இந்து வைணவர்கள் மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தான், நாத்திகனுக்கு இவை பெரிய விசயமே இல்லை வழக்கமான ஒன்று தான்.

தினமலர் இணையப்பக்கத்தில் குறிப்பிட்ட தகவலுக்கு வந்த சுவையான பின்னூட்டங்கள் :

அன்புள்ள வாசகர்களே,

"இந்த செய்தியை படித்த இவளவு மக்கள் கமெண்ட் எழுதிகிறார்கள் என்றால் அதுவே இறை நம்பிக்கைக்கு வெற்றி, அதிலும், வரலாற்றில் படித்து, பெரியோர் சொல்லி கேட்டு,பெற்ற அனுபவத்தை கட்டிலும் இதுபோன்ற தெய்வதினம் மிக்க விஷயம் கண்டிப்பாக நாஸ்திகர் மனதிலும் ஒரு மிக மெகா பெரிய கேள்வி எழுப்பும், யோசி, யோசி, யோசித்திகொண்டே இரு ஒரு நாளேனும் விஷயம் புரியும் , அயல் நாடுகளில் வசிக்கும் மனிதனும் கர்ம பலன்களை நம்புகிறான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று இன்டியானகிய எனக்கு சொல்கிறான்,இனியாவது கேடு செய்யாதே, இறைவன் இருக்கிறான், அவன் , சிவனாக இருந்தால் என்ன, ஏசுவாக இருந்தால் என்ன, அல்லாவாக இருந்தால் என்ன, புத்தனாக, இருந்தால் என்ன, அல்லது வேறு உருவில் இருந்தால் என்ன, அவன் மீது நம்பிக்கை வைத்து நல்லதையே செய், நிச்சயம் பலன் உண்டு."


" நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ரியம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய மிர்தியுன்ஜெயாய
ஸர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமண் மகாதேவாய நமக
இந்த மந்திர்ரத்தை தினமும் சொல்லுங்கள் ஒரு மணி நேரம்
உங்கள் வாழ் முழுவதும் உங்களுக்கு ஒருநாள் சித்தி கெடைக்கும் இது முழு உண்மை . ஆனால் நீங்கள் இதை யாரிடமும் உங்களுக்கு சித்தி கெடைக்கும்வரை நான் இந்த மந்திரத்தை சொல்வதாக சொல்லக் கூடாது, பொதுப்படையாக இந்த மந்திரத்தை சொல்லுங்கள் உங்களுக்கு சித்தி கெடைக்கும் என்று சொல்லலாம் "


" உண்மை என்ன?! எல்லோருக்கும் புரிய வேண்டும். பொதுவாக, விஞ்ஞான ரீதியாக, இயற்கை ரீதியாக, நடப்பது இதுதான்: இங்கும் கிரிஸ் நாட்டில் பாம்புகள் பெரிய பாறைகள் புதர்கள் பக்கத்தில் முட்டைகள் இட்டு அவைகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டி, இலைகள் பூக்கள் போன்றவைகளை பறித்து வந்து மூடும்; அடிக்கடி வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு செல்லும்; இது இயற்கையில் நடக்கும் உண்மை; இதுதான் அங்கும் நடந்திருக்கும்! பாம்பு வகைகளுக்கு மட்டும் அல்ல; பல விலங்கினங்களுக்கே மனிதனைவிட அறிவுக்குர்மை அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது!! வீணாக கடவுள் அது இது என்று புலம்ப வேண்டாம்! நாங்களும் நம்பிக்கை உடையவர்கள்தான் ; ஆனால் மூடர்கள் அல்ல!! "


"
பாம்பு செய்தது தெய்வச் செயல் என்பது போல் பரவசப்படுபவர்கள் மச்சேஸ்வரர் கோவில் பாம்புகளே வசிக்காத நகரத்தில் இருக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதிசயங்கள் நிகழ்வதாகக் கூறிக் கொள்வது எதுவுமே ஆன்மிகம் சார்ந்த ஒன்று அல்ல. அதை குடுகுடுப்பைக்காரன் மற்றும் மோடிமஸ்தான்களாலும், ப்ளாக் மேஜிக் காரர்களாலும், மேஜிக் காரர்களாலும் நிகழ்த்த முடியும். எல்லாம் தெரியமல் 'மெய் பொருள் காண்பதறிவு' என்று முன்னோர் சொல்லி வைத்துவிடவில்லை."



"இந்த அதிசயம் மூலம் இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் சொந்தமானவன் என்று நம்மால் உணரமுடிகிறது. இதை நாம் பல கதைகளில் படித்தும் இருக்கிறோம். அனால் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தை படித்து கேலி சேயும் பல ''''பகுதரிவளிகள்'''' ஒரு பாம்பு சிவ வழிபாடு செய்வதை ஒப்புகொள்வது இல்லை, தான் பிராணிகளைவிட கேவலமானவர்கள் என்று நிருபிகின்றனர். ஈசன் ஒருவனால் மட்டுமே இவர்களை காபற்றமுடியும்."



"
இது அனைவரையும் மெய் சிலிர்க்கவைத்த காட்சியாக இருந்தது என்று செய்தியில் இருந்தாலும் ஒரு அர்ச்சகர் மட்டும்தான் பார்த்தார் என்று கூசாமல் கமென்ட் அடித்த நாத்திக அன்பரின் இச்செய்தி பொய்யாக வேண்டும் என விரும்பும் உள் உணர்வு நன்கு தெரிகிறது பூனை கண்ணை மூடினால் எனும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது ஓம் நமசிவாயா சிவாய நாம ஓம் = விஜயகோபால் "


"நாத்திகம் பேசுபவனும் நிச்சயம் ஒரு நாள் ஆதிக்கம் பேசுவான்...இதற்கு எந்த கொம்பனும் விதி விலகு கிடையாது ...இதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டே '''' மஞ்சள் சலவை '''' போர்த்தி கொண்டு பவனி வரும் தமிழின தலைவர்..எல்லா வற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.பாலாவிற்கும் இது தான் பதில்.ஓம் நமாஹ் சிவாய."


"தயவு செய்து தினமலர் இதை பிரசுரிக்க வேண்டும்.......

நம சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
நாதர் முடியில் இருக்கும் நல்ல பாம்பே ..உன்னை பார்த்த பிறகாவது நல்ல புத்தி வருமா இவர்களுக்கு சொல்லு பாம்பே ..
உன் வாயில் வில்வம் இருப்பதை பார்த்த பிறகாவது அறிவுக்கண் திறக்குமா இவர்களுக்கு சொல்லு பாம்பே ..ஓம் சிவோஹம், ஓம் சிவோஹம்!!! "

28 டிசம்பர், 2009

வேதக்கடலில் தத்துவப் பெருங்காயங்கள் !

நான்கு வேதங்கள் பற்றிய பெயரையாவது இந்துக்களில் பெரும்பான்மையினர் அறிந்திருப்பர். நான்கு வேதங்களில் ரிக் வேதமே பழமையானது, அதர்வண வேதம் அவற்றுள் பிந்தையது. வேதங்களை எழுதியவர் யார் என்று தெரியாது, ஆனால் அவற்றைத் தொகுத்தவராக வேதவியாசர் என்பவரைச் சொல்லுகிறார்கள். வேதங்களை யார் எழுதியது என்பது தெரியாமல் இருக்க அவை தான் தோன்றியோ கடவுளால் படைக்கப்பட்டது என்கிற கூற்றைவிட அவை எழுதப்படாமல் மனப்பாடமாக (ஸ்ம்ருதி) வழிவழியாக கொண்டு செல்லப்பட்டது என்பதே பொருத்தமான கூற்றாக இருக்க முடியும். பருப்பொருள்கள் எதுவுமே மூலம் எதுவும் மின்றி தோன்றி இருக்க வாய்ப்புகள் கிடையாது. இப்படியான ஒரு கூற்றில் தான் சமணத் துறவி நீலி கேசி என்பவள், நட்ட நடுவீதியில் மலம் கிடந்தால், இருந்தவர் யார் என்று அறிய முடியாத சூழலில் அது தானாகவே வந்திருக்கும் என்று கூற முடியாதே, என்று சொல்லி வேதம் குறித்த 'தான் தோன்றிக்' கருத்துகளை மறுத்தாள்.

காலத்திற்கு முற்பட்டவை, காலம் அறியமுடியாதது, கல்தோன்றாக் காலத்து போன்ற காலத்தை வைத்து செய்யப்படும் சொல்லப்படும் கூற்றுகள் யாவும் வரலாறு என்பதற்கு போதிய தோற்றமை காட்ட ஒன்றும் இல்லாத போது உயர்வு நவிர்ச்சியாக அவ்வாறு சொல்லப்படுமேயன்றி எவராலும் எழுதப்படாத தான் தோன்றி ஆக்கங்கள் என்றுக் கூறக் கூடியது எதுவுமே இல்லை. மொழியாகிலும், தத்துவங்களாகிலும் இவை உருவாகி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளவை என்கிற புரிதலே அறிவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். தெய்வ மொழி, தெய்வ வேதம் போன்ற சொல்லாடல்கள் புனிதத் தன்மைகள் கற்பிக்கப்ப(ட்)ட வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்ட வெறும் சொற்களேயன்றி இவை புனிதப் பூச்சு என்பதைத் தவிர்த்து புனிதம் என்கிற ஒன்றை ஒருகாலமும் தந்துவிடாது. குறிப்பிட்ட தத்துவங்களை, வேதங்களை எழுதிய புத்தகங்கள் நெருப்பில் வேகாது என்று எவரும் காட்ட முடியாது. ஆனால அவ்வாறெல்லாம் கூடச் சொல்லப்பட்ட நெருப்பில் இட்டும், தண்ணீர் வீசியும் பல சோதனைகளை தமிழ் நூட்கள் மீது நடந்திருப்பதை அனல்வாதம் புனல் வாதம் ஆகியவற்றின் மூலம் அறியலாம். ஆனாலும் வென்றதாகச் சொல்லப்பட்ட நூல்கள் இன்றும் நெருப்பில் எரியாமல் இருக்கும் என்பதை ஒருவராலும் நிருபனம் செய்ய முடியாது, ஏனெனில் அன்றைக்கு பனவோலையில் என்ன விதமான இராசயனம் பூசப்பட்டு நெருப்பில் அல்லது நீரில் போடப்பட்டது என்பதை நாம் அறிவதற்கு இல்லை :)

நான்கு வேதங்களில் இருப்பவையாக சொல்லப்படுபவைகளில் பெரும்பான்மைச் செய்யுள்கள் அன்றாட சடங்கு மற்றும் வழிபாட்டு முறைகளை கொண்டது. இந்திரன் சோமன், ஐம்பூதங்களின் வழிபாடுகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. சோமபானத்தின் உயர்வும் புனிதத் தன்மையும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி, இன்பம் ஆகியவைச் சொல்லப்பட்டு இருக்கிறது. இதைத் தவிர்த்து அதர்வண வேதத்தில் இசைகள் குறித்து பேசப்படுகின்றன. மற்றபடி நான்கு வேதத்தில் பிரம்மம் என்ற சொல்லோ, அத்வைதத் தத்துவமோ பேசப்படவில்லை. எந்த ஒரு மதமாக இருந்தாலும் அது குறித்த புதிய நூல்களை எழுதும் போது மூல நூல்களின் மேற்கோளுடன் தான் எழுதுவர். இதே அடிப்படையில் தான் இந்து அல்லது இந்திய சமயங்களில் பவுத்தம், சமணம் தவிர்த்து அனைத்தும் வேதத் தொடர்புடையதாகவே எழுதப்பட்டது. இதில் வேடிக்கை என்ன வென்றால் வேதங்களையும், வேதக் கடவுளையும் மறுக்கும் சார்வாகம், மீமாம்சை போன்றவைகளைக் கூட பின்னால் வேதத்தொடர்புடன் இருப்பதாகவே சொல்லப்படும் இட்டுக்கதைகள். காரணம் இதை எழுதியவர்கள் பார்பன்ர்கள் என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லை. மீமாம்சகர்களும், குமரிலா போன்றோர்கள் பார்பனர்கள் என்றாலும் அவர்கள் தத்துவ ரீதியில் வேதங்களையும், வேதக்கடவுள்களையும், சிருஷ்டி குறித்த வேதக்கருத்துகளையும் கடுமையாக எதிர்த்தவர்கள். இவர்களின் கருத்துகளை வேதத்துடன் தொடர்புடையது என்று சொல்வதன் மூலம் புதிதாக தெரிந்து கொள்ள எதுவுமே இல்லை என்கிற கண்ணோட்டத்தில் அவர்களது நாத்திகக் கருத்துகள் புறக்கணிக்கப்படும் என்கிற வெறும் வைதீக அரசியல்.

நாத்திகக் கருத்துகளை மறுப்பவர்கள் முதலில் சொல்வது இது ஒன்றும் புதிதல்ல, நாத்திகம் என்பது வேதத்திலேயே அனுமதிக்கப்பட்டவை என்றும் சொல்லுவார்கள். அது உண்மையென்றாலும் ஏனைய கடவுள் ஏற்பு நூல்களைப் போன்ற மதிப்பு கொடுப்பது இல்லை, மேலும் சார்வாகம் குறித்த விளக்கங்களையும் பேசத் தயங்குவர். காரணம் கடவுள் குறித்தும் கடவுள் நம்பிக்கை குறித்தும் இந்த நூல்கள் மிகுதியாகவே கேள்வி எழுப்பி இதுவரை விடை இல்லாததால் அதை வேதாந்தக் கருத்தாக ஏற்றாலும் புனிதத் தன்மை கொடுப்பது சிக்கலாகிவிடும் என்கிற தாழ்வுணர்ச்சியே. புத்தரின் தத்துவங்களை மறுக்க புத்தரை விஷ்ணுவின் எட்டாவது அவதாராமாக்கிவிட்டால் ஒரு இந்துவுக்கு புத்தர் என்ன சொன்னார் என்ற அக்கரை இருக்கப் போவதில்லை. நாட்டார் தெய்வங்களை வைதிக தெய்வங்களின் கோவில்களுக்கு எல்லைச் சாமிகள் ஆக்கினால் அவற்றை வணங்குபவர்கள் தொண்டனை விட தலைவனையே வணங்கினால் போதும் என்று நினைத்துவிடுவர். இவை வழிபாட்டு அளவில் தான்.

தத்துவ நூல்கள் பற்றியும் இதே நடைமுறை, வேதாந்தங்கள் எனப்படும் உரைநடைகள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடை பட்டவையே என்கிறார்கள். ஆனால் இவற்றில் வேதக் குறிப்புகளை வைத்து எழுதப்பட்டு இருப்பதால் அவை முழுமையான வேதாந்தம் என்பதாகவே கற்பிக்கப்படுகிறது. நான்கு வருணங்களில் சூத்திரன் தவிர்த்து மூன்றே மூன்று வருணம் தான் நான்கு வேதங்களில் இடம் பெற்றிருக்கிறது. நாலவது வருணம் பற்றிப் பேசுவது புருச சூக்தம் மட்டுமே, அதற்கு பிறகு மனுஸ்மிருதி ஆகியவை புருச சூக்ததின் மேற்கோளில் எழுதப்பட்டவை. இவை அனைத்தையும் வேதத்துடன் தொடர்பு படுத்துவதால் இவற்றில் பேசும் ஏற்றத்தாழ்வு அனைத்திற்கும் வேதம் அனுமதி கொடுத்திருப்பதாகவே கொள்ள முடியும் என்பதாக இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையாதாகச் சொல்லப்பட்டது. இந்திய தத்துவ ஞானம், இந்திய ஞான மரபு போன்ற சொல்லாடல்களை வைதீக வாதிகளும் ஆதரவாளர்களும் மிகுதியாகவே பயன்படுத்திவருகின்றனர். ஆனால் இந்த ஞான மரபு என்கிற ஒற்றைச் சொல்லில் அனைத்து தத்துவங்களும் அடங்கி இருப்பதாக இவர்கள் நினைப்பதற்கு மாறாக ஞான மரபு என்ற சொல்லில் அனைத்து தத்துவங்களும் நீர்த்துப் போகின்றன என்பதை நினைப்பது இல்லை.

இந்து / வைதீக மதத்தில் நாத்திகமும் ஒரு தத்துவம் தான் என்பது உண்மையானால் வேத பாடசாலைகளில் நாத்திக வாதங்கள் சொல்லிக் கொடுக்கலாமே ? நாத்திகமும் புனிதத் தன்மை வாய்ந்தது என்று சொல்லலாமே ? உண்மையில் தத்துவங்கள் என்று உயர்வு கற்பிக்கப்படுபவற்றில் அவை உண்மை பேசுகிறது என்பதைத் தவிர்த்து வேறெதும் இல்லை, அரிஸ்டாட்டில், பிளாட்டோ, கன்பூசியஸ் அல்லது நம் கவுதம புத்தர் இவர்களின் தத்துவங்களைப் படித்தால் அவற்றில் உண்மைகளை மிகத் தெளிவாகப் பேசி இருப்பதை உணரலாம். உண்மைகளில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் சூழல்களால், தன்னலத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைத் தவிர்த்து அவ்வுண்மைகளில் மறுப்புக்கான சொற்பக் காரணங்கள் கூட இருப்பதில்லை. உண்மைகள், மெய்கள் என்பதையே தத்துவம் என்பதாக சொல்லப்படும் பொழுது அதில் தேவையற்ற புனிதம் போய் ஒட்டிக் கொண்டு, அதை கடைப்பிடிப்பதில் இருந்து தடுக்கிறது, அல்லது ஒரு அச்சத்தை ஏற்படுகிறது என்கிற பரவலான புரிந்துணர்வு இருப்பதில்லை என்று சொல்வதற்கில்லை என்றாலும் ஆனால் அவை ஏன் புனித மற்றும் தத்துவ என்கிற அரசியல் அடைமொழிகளைக் கொண்டு உயர்வாக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதை வியாபாரமாக்கும் ஒரு செயல் அல்லது அதைவைத்து பிழைத்தல் என்பதே ஆகும். சூத்திரன் வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்து ஊற்று என்கிற மனு ஸ்மிருதிகள் கூட இந்த வகை தந்திரங்களினால் எழுந்த எழுத்து ஆவணங்களே. அதையும் தாண்டிய அரசியல் வேதங்களோ, வேதாந்தங்களோ அவற்றில் என்ன எழுதி இருக்கிறது என புரியாதது என்று ஒன்றும் கிடையாது, ஆனால் அதை எல்லோரும் படித்துவிட்டால், 'பூ......இவ்வளவு தானா ?' என்று மிகச் சாதரணாமாக்கப்பட்டுவிடுமோ என்கிற தேவையற்ற அச்சமும் பிரிதொரு காரணமாக இருக்கிறது.

வேதம் வேதாந்தம் இவற்றின் இன்றைய பயன் எதுவும் இருக்கிறதா என்கிற கேள்வி மற்றொரு விவாததற்கு உட்பட்டது. ஒரு கிறித்துவருக்கு நெருக்கமாகவும் அன்றாடமும் பயனில் இருக்கும் பைபிள், அதே போன்று இஸ்லாமியருக்கு இருக்கும் குரான் போன்று இந்துக்களின் ஒவ்வொரு பிரிவிற்கும் (சைவம், வைணவம்) ஒன்று என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை என்று பார்க்கும் போது இந்து சமயங்களின் வேதங்களின் மீது கட்டப்பட்ட மித மிஞ்சிய புனிதத் தன்மை தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும் ? இந்திய தத்துவ ஞானம், அல்லது இந்து ஞான மரபு என்கிற ஒற்றைச் சொல்லில் தத்துவங்களையும் சமய நூல்களையும் முடக்குபவர்கள் அவற்றை இந்து மக்களின் பொதுப்பயன்பாட்டில் இருந்து விலக்கி எடுத்துச் செல்கிறார்கள் என்பதை உணர்வார்களா ?

பின்குறிப்பு : நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சலாக எழுதியதன் தொகுப்பு

9 டிசம்பர், 2009

ஆன்மிகம் மிகைப்படுத்துதல், தூற்றுதல் !

"தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க" என்று சொல்லும் போது அந்த வரியில் இருக்கும் மிகைப்படுத்துதல் ஒருவரின் செயலை கடவுளுக்கு ஒப்பாக குறிப்பிடுவது என்பதாகிறது. இது மிகச் சாதாரணமான பயன்பாடுதான்.

மதம், கடவுள் சித்தாந்தங்களில் இந்த மிகைப்படுத்துதல் புனிதம் அல்லது பக்தி என்னும் ஏனைய பெயர்களில் செய்யப்படுகிறது. மதத்திற்கு அறிவியல் சாயம் பூசுகிறவர்கள் இதை மிகுதியாகவே செய்கிறார்கள். முழுக்காலத்திற்கும், முழு மனித குலத்திற்கும் மாறாத உண்மைகளை எங்கள் மதம் கொண்டிருக்கிறது, கண்டிருக்கிறது என்பவை மிகைப்படுத்துதல் தான். இறைவன் மனிதர்களை நோக்கி நீங்கள் என் புகழை மிகைப்படுத்திப் பேசுங்கள் என்று எந்த மதத்திலும் கூறியது போல் தெரியவில்லை. மத நம்பிக்கையாளர்கள் அதை வலிந்து செய்யும் போது அவை பிறரால் விமர்சனம் செய்யப்படுகிறது. கடவுள் பற்றி கேள்வி கேட்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் மதங்கள் மற்றும் வேதங்கள் குறித்து தேவைக்கு மிகுதியாக கட்டமைக்கப்படுவது குற்றம் இல்லையா ? இட்டுக்கட்டும் உருவகங்கள், உருவங்கள் (சிலை வணக்கங்கள்) அனைத்தும் ஒன்றே, ஒன்று சொற்களால், மற்றது வடிவத்தால்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று மிகைப்படுத்தும் போது, சாணியில் இருப்பானா ? என்று கேட்பது அபத்தமான கேள்வியாகுமா ? சர்கரை என்கிற ஒரு பொருள் இருக்கிறது, அதை புகழ்ந்து பேச அதனுடன் சந்தனத்தை கலந்து வைத்தால் சர்க்கரையின் தனித் தன்மை என்பது அழிக்கப்பட்டுவிடும், அதை சானியில் கலந்து பேசுபவர்களின் செயல்மட்டும் தரம்தாழ்ந்தாகுமா ? சர்கரை எதனுடன் கலந்தாலும் சர்கரைக்கு தன்மை இழப்பு தான்.

இயல்புக்கு மாறாக ஒன்றை திரித்து திரித்து பெருமைபட பொருள் கூறுவதும் அதைத் தூற்றிப் பொருள் கூறுவது ஒன்றே. மதங்களின் கொள்கைகள் விமர்சனம் ஆகுவது அவை தேவைக்கு மிகுதியாக இட்டுக் கட்டிப் பொருள் கொள்வதினாலும் பொருள் கூறப்படுவதாலும் ஏற்படும் ஒவ்வாமையின் பக்க விளைவுகளே. மதம் சிறந்ததாக இருந்தால் பின்பற்றலாம், ஆனால் அறிவுறுத்தல் கொடுமையானது.

பொருள் முதல்வாதம் என்னும் பயன்பாடு ரீதியில் வளர்ந்தது அறிவியல், இன்றைக்கு அறிவியல் உண்மைகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிந்திக்காமல் மனிதன் இருந்திருந்தால் அறிவியல் வளர்ந்திருக்காது. கருத்து முதல்வாதம் எனும் ஆன்மிக/மதவியாக்கானங்கள் அறிவியலை எதிர்த்தே வந்திருப்பது வரலாறு. ஏனெனிறால் ஆன்மிகம், மதம் இவை யாவும் விதியை நம்புபவை, விதிக்கு மீறியது அல்லது இறைவன் விட்ட வழிக்கு மாற்று கிடையாது என்கிற சித்தாந்தம் கொண்டவை. இவ்வுலக வாழ்க்கை என்பதே மறுவுலக வாழ்க்கைக்கான தேர்வு (பரிட்சை) என்று உலக வாழ்கைக்கு தற்காலிகமானது என்ற நம்பிக்கைக் கொண்டவை. ஆன்மிக, மதக் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, தனிமனிதனுக்கு வேண்டுமானால் இவை நிரந்தமற்றவையாக இருக்கலாம், ஆனால் மனித குலம் என்பது தொடர்ந்து இருப்பதே என்று கூறி சிந்தனையால் வளர்ந்தவையே அறிவியல், அதற்கு ஊட்டமளித்தது பொருள் முதல்வாதம். அதாவது அறிவியல் என்பது பொருள் முதல்வாதத்தின் குழந்தை, அதை பொருள் முதல்வாதம் என்றுமே வளர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்த அறிவியலுக்கு மதவாதிகள் சொந்தம் கொண்டாடுவதும், அறிவியலை மதத்துடன் ஒட்டவைப்பதும் எந்தவிதத்திலும் ஞாயமே இல்லை.

மிகைப்படுத்தப்படும் ஆன்மிகம் அல்லது மதவாதம், மத நூல்கள் அனைத்துமே நாத்திக கருத்துகளை அதாவது இறைச் செயல் என்பதை மறுக்கும் அறிவியலை நோக்கி நகர்வது விந்தையாக இருக்கிறது. அறிவியல் இதுவரை 'இறை' என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மதம், ஆன்மிகம், இறைவன் இவற்றை மிகைப்படுத்தும் உரிமையை அவரவர் எடுத்துக் கொள்வதும் சரியா ?

மதங்கள், வேத நூல்கள், இறைவன் குறித்து இட்டுக்கட்டி மிகைப்படுத்துவதும், அதை நாத்திக வாதமாக தூற்றுவதும் ஒன்றே !

7 டிசம்பர், 2009

புனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் !

மனித குலத்திற்கு இயல்புக்கு மாறாக கேடுவிளைவிப்பதை தீயது, விலக்கத்தக்கது, ஒதுக்கக் கூடியது என்றும், இயல்புக்கு மாறாக நன்மை விளைவிப்பது என்பதாக சொல்லப்படுபவை அல்லது காட்டப்படுபவை தெய்வீகம், புனிதம், போற்றத்தக்கது என்பதாக கட்டமைக்கப்பட்டு மக்கள் சமூகங்களில் உலவ விடப்படுகிறது, கேடுவிளைவைப்பவை மனித சமூகத்தின் அல்லது தனிப்பட்ட அல்லது குழுக்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட பாதிப்பு, உதாரணம் தனிமனித பேராசை, குழுவினர்களின் இனவெறி. குழுவினர்களின் ஒழுங்கீனம். இவைகளினால் சமூக ஒழுங்குகள் கேள்விக்குறியாகும் போது சமூகத்தின் சமச்சீர் தன்மை நலிவுறும். அங்கே புரட்சியாளன் அல்லது கலகக்காரன் உருவாகுவான். மதங்களின் அல்லது பகுத்தறிவு சிந்தாந்தங்களின் தோற்றப் பின்னனியைப் பார்த்தால் அக்காலத்தில் அவற்றின் தேவை இருந்திருக்கிறது என்பதாக விளங்குகிறது. அதாவது மதத்தீன், பகுத்தறிவாதத்தின் தேவை என்பது சமூகத்தின் சமச்சீர் தன்மை நோக்கிய நகர்வு என்று சொல்லலாம் என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

இப்படி தனிமனிதர்களால் உருவாக்கப்படும் மதங்கள், சமூக ஒழுக்கங்களை கட்டமைக்கும் போது அதனை வலிமையாக வழியுறுத்த, அச்சம் ஏற்படுத்தி பணிய வைக்க கடவுள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. கடவுள் கோட்பாடுகளற்ற மதங்களே கிடையாது. புத்தர் மறைவுக்குப் பிறகு புத்தரை மனிதரில் மேன்மைமிக்கவர் என்பாதாகவே நினைத்து, புத்தரின் கருத்துகளை புத்தரிடமிருந்து நேரடியாகப் பெற்றதைப் பரப்பியவர்களுக்கு
மாற்றாக அவை வெளிநாடுகளில் பரவ வைக்கும் போது புத்தரின் அற்புதங்கள் என்று காட்டத் தேவை இருந்ததாக நினைத்தார்கள், அதனால் புத்த சங்கங்களில் பிளவு ஏற்பட்டு, புத்தரை மனிதராக நினைப்பவர்கள், புத்தரை அவதாரமாக நினைப்பவர்கள் என இரு சமயப் பிரிவுகள் ஏற்பட்டது, இவையே ஹீனயானம் மற்றும் மகாயானம் எனப்படும். மகாயானத்தில் புத்தரை அவதாரமாகக் காட்ட புத்த ஜாதகக் கதைகள் எழுதப்பட்டன, புத்தரின் பிறப்பே புனிதம் நிறைந்ததாகக் சொல்ல பல பின்னனி புனைவுகள் புனையப்பட்டன. இவை புனைவுகள் தான் என்பதை உணர புத்தர் ஏழைத்தாயின் வேண்டுகோள் படி அவளுடைய இறந்த மகனை உயிர்பிக்க மறுத்து, மரணம் பற்றிய உண்மையை உணர்த்த அந்த தாயை இறப்பு இல்லாத வீட்டிற்கு சென்று கடுகு பெற்றுவருமாறு பணித்ததைக் கூறலாம். பெரியாரை புனிதப்படுத்தும் முயற்சியாக 'பெரியாரின் தீர்க்க தரிசனம்' என்கிற பெயரில் அவரது கருத்துக்களுக்கு தலைப்பிடுபவர்களின் செயல்கள் கூட பெரியாருக்கு புனிதம் கற்பிக்கும் செயலே.

புத்தர் மட்டும் அல்ல, புத்தரின் சூனிய வாதமான 'ஏதுமற்றது' என்கிற கொள்கைக்கு மாற்றாக அதன் எதிர் (0 அல்லது 1 நன்றி திரு ஸ்வாமி ஓம்கார்) சித்தாந்ததில் ஆதிசங்கரர் எல்லாமும் அது, அனைத்தும் பிரம்மம் என்று கூறி 'நீயே அது' என்கிற அத்வைத தத்துவத்தை உருவாக்கினார். புத்தமதத்தின் வைதீக வடிவம் தான் ஆதிசங்கரரின் அத்வைதம் அல்லது அதை வலுப்படுத்த விதமாக வைதிகத்தின் ஒரு பிரிவாகிய சார்வாகம் மற்றும் லோகாயத்தின் புதிய வடிவம் தான் அத்வைதம் என்று மத ஆய்வளர்கள் சொல்லுகிறார்கள். புத்தரைப் புனிதர் ஆகியதைப் போலவே ஆதிசங்கரர் சிவ(னின்) அம்சம் என்றெல்லாம் பின்னாளில் அவரைப் பின்பற்றுபவர்கள் கதை எழுதிக் கொண்டார்கள். ஏசு நாதர் புனிதர் ஆக்கப்பட்டதும் கூட மதப் பரவல் என்கிற செயலுக்கு இணைத்துக் கொண்ட பின்னனிக் கதைகளால் ஆனதும் என்றே மத ஆய்வளர்கள் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாக கிருஷ்ணன் மற்றும் ஏசு நாதர் ஆகிய இருவரும் ஆடுமேய்பது உட்பட பிறப்பு முதல் இறப்பு வரை நடந்ததாகக் கூறப்படும் ஒற்றுமைக் கதைகளைக் காட்டுகிறார்கள். அது பற்றி பிரிதொரு பதிவில் எழுதுகிறேன்.

கிருஷ்ணன், புத்தர், ஏசு, முகமது நபி ஆகியோர் அருள் பெற்றது கதையா ? கட்டுக்கதையா ? என்பதைவிட ஆய்வுக்குரியது மிகைப்படுத்தப்படும் புனிதத் தன்மையே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விசம் என்பது உணவுக்கு பொருந்துமோ இல்லையோ மதப் புனிதத் தன்மைக்கு இவை பொருத்தமகாவே இருக்கிறது. அண்மையில் கன்னியாஸ்திரி ஒருவர் கிறித்துவர்கள் கட்டமைக்கும் பிரம்மச்சாரியம் என்னும் புனிதத்துவத்தின் மீது கல்வீசினார், தேவனுக்கு அற்பணிப்பு என்கிற பெயரில் காமம் துறந்து கடமை ஆற்றுபவர்களாக பாதிரியார், மதர் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டவர்களின் பாலியல் நடவடிக்கைகள், முறைகேடுகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டினார். கேரளாவில் நூலாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நூலின் வழியாக பலர் ஞானஸ்தானம் பெற்று தங்களது மகள்களை கன்னிகஸ்திரி வேடம் வேண்டாம் என்று மீட்டுக்கொண்டார்கள் என்று செய்திகள் வெளியானது. இஸ்லாம் என்றால் அன்பு என்று கூறிக் கொள்ளும் இஸ்லாம் சமூகத்தின் மீது கல்வீச்சாக இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகள் நடத்தும் தொடர் கல்வீச்சு, கருவறை புனிதம் நிறைந்தது என்று கூறும் இந்துக்கள் மீதான கல்வீச்சாக காஞ்சிபுரம் வரதராஜன் கோவில் படுகொலை மற்றும் மச்சேஸ்வர கோவில் நடந்த பாலியல் ஆபாச கூத்துகள். அமைதி, அன்பு எனும் புத்தமதத்தினர் மீதான கல்வீச்சு அதைப் பின்பற்றுபவர்கள் இலங்கையில் நடத்தும் இனவெறி ஆட்டம்.

இவையெல்லாம் கேள்விப்படும் பொழுது உண்மையான இறை நம்பிக்கையாளர்களை மிகவும் வேதனைக்கு உட்படுத்தும். கடவுள் எங்கே போனார் ? கடவுள் இருக்கிறாரா இல்லையா ? என்று நினைக்க வைக்கும். காரணம் மதங்கள் இறை நம்பிக்கை கட்டுமானத்தில் அடித்தளமாக புனித இடைச் சொருகல்களை மிகுதியாகவே சொருகி வைத்திருக்கிறது, அவையே ஒருவருக்கு குழந்தை முதல் முதுமை வரை மாறி மாறிச் சொல்லிக் கொடுக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது. அந்த இடைச் சொருகல்கள் ஒவ்வொன்றாக உருவப்படும் போது எந்த ஒரு கட்டுமானமும் ஆட்டம் காணவே செய்யும்.

இறை நம்பிக்கைகளில் நுழைக்கப்படும் புனிதம் என்பவை மேல்பூச்சு தான் என்று புரிந்து கொள்வோர் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இல்லை இல்லை அவை என்றுமே புனிதம் என்போரே சஞ்சலத்திற்கும், அமைதி இன்மைக்கும் ஆளாகுகிறார்கள். பெண்களின் மீதான கற்பு போல் மதங்களில் புனிதம் என்பவை வெறும் கட்டமைப்புகள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

பிற பதிவுகள் :

புனிதக் குற்றங்கள்
புனித (நூற்) போர்

16 நவம்பர், 2009

(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் !

ஆன்மிகம் என்கிற பெயரில் உளறிக் கொட்டிவரும் ஞானாநந்தம் ( என்று சொல்லிக் கொள்ளும் வைரம் இராசகோபால்) எழுத்துகள் வழி பக்தியை வளர்த்துது லோகத்தை ஷேமமாக வைத்திருக்கிற உதவுகிறது தினமலர், இன்னிக்கு ஒரு கதையைப் படித்துவிட்டு புல்லரித்தது...நைசில் பவுடரைத் தேடினேன்.

எதற்கும் துணிந்தவர்கள்! (ஆன்மிகம்)


உலகில், நல்லவர்கள், தீயவர்கள் என்ற இரு வகையினரும் உள்ளனர். பிறருக்கு, நன்மை செய்வதிலேயே நாட்டமுள்ளவர்களாக இருப்பர் நல்லவர்கள்; இவர்கள், பிறருக்கு சிறு உதவியாவது செய்ய விரும்புவர். பிறருக்கு என்ன துன்பம் உண்டாக்கலாம் என்றே தீயவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பர்; ஒருவர், மற்றொருவருக்கு ஏதாவது நன்மை செய்வதாகத் தெரிந்தாலும், அதை கெடுப்பதற்கே முயற்சி செய்வர். "இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார். இந்த நல்ல காரியம் நடக்கக் கூடாது...' என்று, அவனுடைய தீய புத்திக்குத் தோன்றினால், பணம் செலவழித்தாவது அதை தடுத்து விடுவர். இந்த குணம் இன்று மட்டுமல்ல; அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது!

பரீட்சித்து மகாராஜாவுக்கு, ஒரு முனிவரின் சாபம் ஏற்பட்டது. "இன்று முதல், ஏழாவது நாள் தட்சகன் என்ற நாகம் கடித்து மரணம்!' என்பது சாபம். இதையறிந்த ராஜா, ராஜ்ஜியத்தை விட்டு, கங்கை கரைக்கு வந்து புண்ணியம் சேர்க்க, பாகவத புராணம் கேட்டான்.

சாபத்தின்படி, ராஜாவை கொத்திக் கொல்ல காத்திருந்தது தட்சகன் என்ற நாகம். இந்த விபரமறிந்த காசியபர் என்ற முனிவர், ராஜாவைக் காப்பாற்ற வந்து கொண்டிருந்தார். இவருக்கு எந்தவிதமான விஷத்தையும் இறக்கிவிடக் கூடிய மந்திரம் தெரியும்.அதனால், ராஜாவை காப்பாற்றி விடவேண்டும் என்று வந்து கொண்டிருந்தார்.

இவரை பார்த்து விட்டான் தட்சகன். அவரைப் பின் தொடர்ந்து வந்து, "ஓய்... பிராமணரே! நீர் யார், எங்கே போகிறீர்?' என்று கேட்டான். காசியபரும், "ராஜாவை, தட்சகன் கடிக்கப் போகிறானாம். அப்படி நடந்தால், அந்த விஷத்தை என் மந்திர சக்தியால் முறித்து, ராஜாவை காப்பாற்றப் போகிறேன்...' என்றார்.
உடனே, "ஐயா! நான் தான் அந்த தட்சகன். உமக்கு தெரிந்த அந்த மந்திர சக்தி என் கடுமையான விஷத்தை முறியடிக்குமா?' என்றான் தட்சகன். "முடியும்!' என்றார் காசியபர்.

"அப்படியானால் இதோ இந்த மரத்தை நான் கடிக்கிறேன். என் விஷத்தால் அது பட்டுப் போகும். தங்கள் மந்திர சக்தியால் அதை மீண்டும் துளிர்க்கச் செய்ய முடியுமா?' என்றான்; "முடியும்!' என்றார் முனிவர்.
அந்த மரத்தை, தட்சகன் கடிக்க, மரம் உடன் சாய்ந்து கருகியது. தன் மந்திர சக்தியால் அந்த மரத்தை மீண்டும் துளிர்விட்டுப் பூத்துக் காய்த்து நிற்கச் செய்தார் காசியபர். ஆச்சரியப்பட்டான் தட்சகன். இருந்தாலும், துஷ்ட புத்தி போகவில்லை. "ஓய், பிராமணரே... நீர் ராஜாவின் விஷத்தை இறக்கினால் என்ன கிடைக்கும்?' என்று கேட்டான்.

"நிறைய பொன்னும், பொருளும் கிடைக்கும்!' என்றார் காசியபர். "சரி! அப்படியானால் அதைவிட பத்து மடங்கு அதிகமாக நான் பொன்னும், பொருளும் உம்மால் சுமக்க முடியாத அளவுக்கு தருகிறேன்...' என்றான் தட்சகன்.
அதன்படியே அவருக்கு பொன்னும், பொருளும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டு, சாபத்தின்படி பரீட்சித்து மன்னனை கடித்து விட்டான் தட்சகன். பரீட்சித்தும் வைகுண்டம் சேர்ந்தார் என்பது சரித்திரம்.

தங்கள் தீய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்வர் துஷ்டர்கள்; எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பர். பிறர் கெட்டுப் போவதில் இவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்! இன்றும் சிலர் அப்படியே இருக்கின் றனர். இது போன்ற துர் குணம் இல்லா மல், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற் குணத்துடன் நாம் இருக்க வேண்டும்.

********

எனது கேள்விகள், ஞானாநந்தம் சுட்டிய இந்தக் கதையின் படி உண்மையிலேயே துஷ்டன் யார் ?

1. தகாத செயல் எதையோ செய்துவிட்டு முனிவரிடம் சாபம் பெற்ற பரீட்சித்து மகாராஜாவா ?
2. அரசன் தானே போனால் போகட்டம் என்று குடிகளின் நலன் கருதாது சாபம் கொடுத்த முனிவரா ?
3. முனிவரின் சாபத்தை நிறைவேற்ற வந்த (வேலையாளான) தட்சகன் என்கிற நாகமா ?
4. தனக்கு தெரிந்த மந்திர சக்தி மூலம் பரீட்சித்து மகாராஜாவை காப்பாற்ற போகிறேன் என்று கிளம்பி நாகத்திடம் பொன்னுக்கு பொருளுக்கும் பேராசைப் பட்டு அதைப் பெற்றுக் கொண்டு ராஜாவைக் காப்பாற்றாமல் திரும்பி சென்ற காசியபர் என்னும் பார்பனனா ?

*******

இந்த கதையின் கட்டமைப்புகள் :

* எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் கங்கையில் கழுவினால் போய்விடும், இது கிட்டதட்ட ஆப்ரகாமிய மதங்கள் சொல்லும் 'மனம் வருந்தி மன்றாடினால், தொழுதால் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்பது போன்றது.
* எதிரிகளை விட்டுவிட்டு (ராஜா VS முனிவர்) அவர்களின் பகையை செயல்படுத்தவரும் அவர்களின் வேலைக்காரர்களே (தட்சகன் என்ற நாகம்) தீயவர்கள்
* பார்பனர்கள் எந்த சாபத்தையும் அல்லது எந்த தீமையும் மந்திரத்தால் நீர்த்து போகச் செய்யக் கூடியவர்கள் அல்லது மந்திரம் தெரிந்த பார்பனர்களால் எதையும் செய்ய முடியும்
* பார்பனர் அல்லது கதையில் சொல்லப்படும் பிராமணர்களின் தவறுகள் (பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டு பின் வாங்கியது) எப்போதுமே பேசக் கூடாத ஒன்று. எய்தவன் இருக்க, அதைத் தடுப்பவனும் இருக்க... அம்பு (மட்டுமே) தீயது என்றே பேசவேண்டும்.

********

நாம் வாழும் காலத்திலேயே ஆன்மிகம் என்ற பெயரில் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம், இன்னும் புராணங்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் குப்பை மலைகளையே அடையாளம் காண முடியும், பக்தி, கடவுள் நம்பிக்கை என்கிற பெயரில் உளரல்கள் கூட ஆன்மிகம் என்று விளம்பரப்படுத்தப்படுவது காலம் தோறும் நடந்தேறிவருகிறது, இதில் இன, சாதி அரசியலும் மிகுதியாகவே புகுத்தப்படுகிறது என்பதற்கு இந்த கதை ஒரு சிறிய காட்டுதான். :(

30 ஜூலை, 2008

தலித் கோவிந்தம் ! ஒரு கண்துடைப்பு பஜனை !

இதைவிட தலித் மக்களை கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை !!!

இதைப் சமூக புரட்சி, நல்லிணக்கம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள்

"இந்த புரட்சிகரமான சமூக மாற்ற நிகழ்ச்சியின் மூலம் ... சமூகத்தில் நிலவி வரும் மூடத்தனத்தை, தலித் புறக்கணிப்புப் போக்குக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறோம்.

தலித் மக்களையும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே இது. இந்த தலித் கோவிந்தம் மூலம் தலித் கிராமங்களுக்கு பெருமாளை நேரடியாக கொண்டு செல்வது, தலித் கிராமங்களில் பஜனைப் பாடல்களை இசைப்பது, அவர்களையும் பூஜிக்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.

தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு தலித் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடவுள் யாரையும் பாரபட்சப்படுத்திப் பார்ப்பதில்லை. அதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த தலித் கோவிந்தம் நிகழ்ச்சி. "


படிப்பதற்கு புரட்சிப் போன்று இருந்தாலும், தலித்துக்களுக்கு திருப்பதி கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதை பச்சையாகச் சொல்வது தான் இது. யார் சொன்னது ? யார் வேண்டுமானாலும் கோவிலுக்குள் செல்லலாமே ? என்றும் சிலர் வாதிடுகிறார்கள். ஒருவர் தன்னை தலித் என்று கூறிக் கொண்டோ, அல்லது அவர் தலித் என்று தெரிந்த பின்னர் கோவிலுக்குள் அனுமதிப்பபர்களா என்பதே கேள்வி. தேவஸ்தானாத்தின் புரட்சிகர திட்டத்தின் அறிவிப்பிலேயே தலித்துக்களுக்கான அனுமதி மறுப்பு உண்மைத்தான் என்பது போலவே உள்ளது.

"திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள் நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத அவலம்.

இந்த நிலையைப் போக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தலித் கோவிந்தம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் அபிலாஷைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்களை தேவஸ்தானம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த தலித் கோவிந்தம்."


தலித்துக்களின் சுறுக்குப் பைச் சில்லரை மீதும் குறிவைத்துக் கொண்டு வரப்படும் சிலைகள், திருப்பதி திரும்பும் போது யாரும் புழங்காத இடங்களில் மறைத்து வைக்கப்படும், அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்று அண்மையில் ஒருவர் மனக்குமுறலைக் கொட்டி இருந்தார்.

புரட்சி செய்வதென்றால் திருப்பதியில் கக்கூஸ் கழுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் தலித் மக்களில் ஒருவரை ஒரு நாள் அர்சகர் ஆக்கிப் பார்க்க வேண்டியதுதானே ?

நீங்கள் அங்கெல்லாம் வந்துடாதிங்க, நாங்களே இங்கே வருகிறோம் அதுதான் நல்லது என்கிறார்களோ.

என்ன கொடுமைய்யா இது 21 ஆம் நூற்றாண்டு கணனியுகத்தில் மனிதரில் சாதியால் தாழ்த்தப்பட்டவர் என்ற முத்திரையை சுமக்க வைப்பதும் இல்லாமல், அவர்களுக்கும் பெருமை சேர்ப்பது போல் இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுகிறது. இன்னும் எத்தனைக் காலம் தான் பொம்மைகளை வைத்து இப்படி ஆன்மிக பித்தலாட்ட பொம்மலாட்டாம் நடத்தப் போகிறார்களோ. கோவிலுக்குள் நுழைய சம உரிமைகேட்பதோடு அன்றி 'தலித் கோவிந்தத்திற்கு' நாமம் போட்டு திருப்பி அனுப்புவதே நல்லது. கோவிலிலும், கோவில் திருப்பணிகளிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராடினால் தான் இவற்றிற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.

புனிதம்...புண்ணாக்கு...அசுரன்...கிருஷ்ணன்...பரமாத்மா...நாய்...சங்கராச்சாரியார்...விபூதி... வாந்தி...லிங்கம்...பண்ணாடை...சலூன்....சால்னாகடை...ஐயப்ப சாமி...இரட்டை டம்ளர்...வெங்கடாஜலபதி...நடிகைரோஜா...சாராயக்கடை...புளிச்சேப்பம்...புளியோதரை...சோமபானம்...நீலப்படம்...பூக்கூடை...ஆர்லிக்ஸ்...அப்பப்பா

முடியல்ல மூச்சு வாங்குது !

தலித்துக்களை மேலும் இழிவு படுத்த .... அவர்கள் நிலை அப்படித்தான் இருக்கிறது என உறுதி செய்யவும் மேலும் அப்படியே வைத்திருக்க வேண்டும்... என வரும் 'தலித் கோவிந்தம்' வன்மையாக கண்டிக்கத் தக்கது.

பெருமாளுக்கும் தன் சிலையை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டம் இதெல்லாம் பிடிக்காது.

"புனிதம் என்று சொல்வதெல்லாம் புளிப்பேறியே கிடக்கிறது..." - சமூகவியல் எழுத்தர் க.சு.நடராஜன் !

********

"எலே மூக்கைய்யா...என்னல்லே எதோ சாமி வருதாம்லே"

"ஆமாண்டா செங்கோடா...நாமெல்லாம் கோவிலுக்கு போவ முடியாதுல்ல..."

"அப்ப சாமி வர்றது நமக்கெல்லாம் பெருமைங்கிறியா ?"

"மண்ணாங்கட்டி...அவங்க வருவாங்க போட்டா எடுத்து பேப்பரில போடுவாங்க...அதுல நமக்கு என்னய்யா பெருமை ? அது வந்தாலும் வராட்டாலும் ஏர் ஓட்டினாதான் நமக்கு சோறு...வா போய் வேலய பார்ப்போம்"

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்