பின்பற்றுபவர்கள்

இயற்கை வளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை வளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்ரல், 2012

* போகாத ஊருக்கு சில வழி !

ரு இடத்தில் மனிதனின் காலடிபடுவதால் பூமிக்கு ஒண்ணும் பெருமை கிடையாது, மனிதன் காலடிபட்டால் காடுகள் அழிக்கப்படும், மனிதர் தவிர்த்த உயிர்வாழ்க்கைக்கு அங்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை

****

ண்டார்டிக்கா பற்றி பாட நூல்களில் படித்திருக்கிறோம், அதில் எவ்வளவு தகவல்கள் நினைவில் இருக்கின்றன என்று தெரியாது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்புகளில் அண்டார்டிக்கா ஐந்தாம் இடத்தில் வருகிறது. 96 விழுக்காடு பனிக்கட்டிகளால் பரவி இருக்கும் கண்டம், தென் துருவம் இங்கு தான் அமைந்திருக்கிறது.  தெற்குமுனைப் பெருங்கடலால் முழுவதுமாக சூழப்பட்ட தீவு கண்டம். மொத்தப் பரப்பளவு 1 கோடியே 50 லட்சம் சதுர கிமீ. அண்டார்டிக்கா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்கா கண்டமும் பூமியின் ஒரே நிலப்பரப்பாக இணைந்திருந்து பின்னர் பிரிந்து சென்றுள்ளதாம். தற்பொழுது ஆண்டுக்கு 10 மீட்டர் என்ற அளவில் தென் அமெரிக்காவின் பக்கமாக நகர்ந்துவருகிறதாம். 


வெப்ப நிலை : அண்டார்டிக்காவின் தட்பவெப்பம் உறை நிலைக்கு கீழேயே ஆண்டு முழுவதும் இருக்கிறது, குளிர் சூறைக்காற்றுடன் குளிர்காலங்களில் அதன் வெப்ப நிலை - 82 டிகிரி, கோடை காலங்களில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 5 டிகிரி வரை இருக்குமாம். முழுவதுமாக பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளதால் பனிப்பாலைவனம் என்றும் சொல்லப்படுகிறது, கடற்கரைப் பகுதிகளில் பென்குயின் மற்றும் சீல் போன்ற கடுங்குளிர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன, மையம் நோக்கிச் செல்லச் செல்ல அதுவும் கிடையாது, சில பறவை இனங்களும், நுண்ணியிரிகளும் தென்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. அண்டார்டிக்கா என்பதற்கு  (ரோமன் மொழியில்) 'தென் முனையம்' என்பதே மொழிப் பெயர்ப்பாம். உலக நன்னீரின் 70 விழுகாடு அண்டார்டிக்காவில் மட்டுமே பனியாக உறைந்துள்ளதாம். அதெல்லாம் சேர்ந்து உருகினால் கடல் மட்டம் 200 அடிக்கு உயரும் என்கிறார்கள். அண்டார்டிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை ஆனால் உறைந்த நிலையில் ஏரிகள் பல உள்ளனவாம், அவற்றிளுள் துளையிட்டு ஆராய அப்பரப்பு வியாழன் கோளின் சந்திரனை ஒத்து இருப்பதால் ஏரியில் ஏதேனும் உயிரினம் வசித்ததாக கண்டிபிடித்தால் வியாழனின் சந்திரனிலும் உயிர் வாழ்க்கைக்கு வாய்ப்புள்ளது என்று தெரியவருமாம்.

அண்டார்க்டிக்கா பற்றி நாம் முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டியது அதன் கடுங்குளிர், பனிப்பாறைகள் தான் உலகின் அனைத்து கடல்களில் தட்பவெப்பங்களை சரி செய்து நாம் வாழும் நிலப்பரப்புகளின் சுற்றுச் சூழலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது, அண்டார்டிக்காவின் பனி உருகினால் கடல் மட்டம் உயருவதுடன் வெப்பமும் மிகுதியாகும். அதனால் தான் அண்டார்டிக்காப் பகுதி பண்ணாடுகளால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது, பசிபிக் கடலில் நடக்கும் அணுகுண்டு சோதனைகள் அண்டார்டிக்காவில் நடப்பது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் உருகும் பனி கடல் நீரில் சேர்ந்து பின்னர் குளிர்காலத்தில் கடல் நீரிலிருந்தே பனிக்கட்டிகள் உருவாகிவிடுமாம், அதனால் அண்டார்டிக்காவின் வெப்ப நிலை தம்மைத் தாமே சரி செய்து கொள்வதாக சொல்கிறார்கள். வட துருவத்தைக் காட்டிலும் தென் துருவ அண்டார்டிக்காவில் குளிர் மிகுதி ஏனெனில் இது கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் நிலப்பரப்பில் அமைந்திருப்பதால் தான் என்கிறார்கள்.




பகல் இரவு :  ஐரோப்பிய சாலைகள் அனைத்தும் ரோமை நோக்கிச் செல்கிறது என்று சொல்வது போல் அண்டார்க்டிக்காவின் மையத்தில் இருந்து எந்தப் பக்கமும் பயணம் செய்ய அது வட திசை நோக்கியே அழைத்துச் செல்லுமாம், அண்டார்க்டிக்கா தென் முனையமாக இருப்பதால் அதன் எந்த பக்கமும் வட திசை நோக்கியதே.  திசை நோக்கித் தொழ வாய்ப்பு இல்லை, பண்ணாடுகள் அங்கு ஆய்வுக்கூடங்கள் அமைத்துள்ளன, அவர்களையும் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கும் அங்கு கிறிஸ்துவ தேவாலயங்கள் ஒன்று இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆண்டில் ஒரே ஒரு பகலும் ஒரே ஒரு இரவும் மட்டுமே அங்கு வருகிறது.  அக்டோபர் துவங்கி பிப்ரவரி வரை சூரிய வெளிச்சம் கிடைக்கும், பின்னர் முழுவதுமாக இருட்டு தான், அந்த வேளையில் சூரியன் வட துருவத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டு இருக்கும். பகலாக இருக்கும் பொழுதுகளில் சூரியன் அதிக பட்சமாக 23.5 டிகிரி கோணத்திற்கு மேல் வருவது கிடையாது, நமக்கு தெரிவது போன்று கிழக்கு உதயம் மேற்கு மறைவு போன்ற நிகழ்வுகள் கிடையாது, 0 டிகிரியில் இருந்து 23 .5 டிகிரிவரை மூன்று மாத காலம் உயரவும் பின்னர் குறைந்து அடுத்த மூன்று மாத காலமும் மறையவும் துவங்கும், சூரியன் வட்டப் பாதையில் தரையில் இருந்து வானில் 23.5  டிகிரி சாய்வில் கடிகார திசைக்கு எதிராக வளையமாக சுற்றிவருதாகத் தெரியும். துருவங்களில் சூரியப் புயலினால் தாக்கம் வண்ண வேடிக்கையாகவும், பனித்துகளின் தூசிகளால் பல சூரியன்களும், சூரியனைச் சுற்றி பெரிய ஒளி வட்டமும் (Sun Dog) காட்சிக்கு வருவது இந்தப் பகுதியில் நடக்கும் இயற்கைக் காட்சிகள்.




நேரப் பகுதி : அண்டார்டிக்காப் பகுதியை எந்த ஒரு குறிப்பிட்ட நேரப்பகுதி (Time Zone) பகுதிக்குள் அடக்க முடியததால், தனிப்பட்ட நேரம் கிடையாது, ஆனாலும் வசதிக்காக நியூசிலாந்தின் நேரத்தை ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். 

மக்கள் நடமாட்டம் : அண்டார்டிக்காவில் முதன் முதலாக கால் பதித்தவர்கள் என்கிற பெருமையை 31 அக்டோபர் 1956ல் Admiral George J. Dufek  என்பவரின் அமெரிக்க கடற்படை குழுமம் பெற்றிருக்கிறது, பிறகு பல நாடுகளில் இருந்து அங்கு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டவர் பலர், டிசம்பர் 30, 1989, Arved Fuchs மற்றும் Reinhold Messner ஆகிய இருவர் அண்டார்டிக்காவின் கடற்கரைப் பகுதியில் இருந்து மையம் நோக்கி நடந்தே சென்று அடைந்துள்ளனர்.  அதன் பிறகு 2009ல் Todd Carmichael என்கிற அமெரிக்கர் 39 நாட்கள் நடைபயணமாக அடைந்திருக்கிறார், பின்னர் மற்றொரு நார்வேகாரர் Hercules Inlet என்பவர் அதே தொலைவை 2011 ஆம் ஆண்டில் 29 நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.  தற்பொழுது 1000 - 5000 பேர் ஆராய்ச்சியாளர்களாக பல நாடுகளைச் சார்ந்தவர்களாக அங்கு தங்கி இருக்கிறார்களாம்.

அண்டார்டிக்கா தனி கண்டம் என்றாலும் மையப்பகுதியில் இருந்து கோணம் கோணமாக பகுத்து அதனை அமெரிக்கா, அர்ஜென்டைனா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் பங்கு போட்டுக் கொண்டுள்ளன, அண்டார்டிக்காவிற்கு தனிப்பட்ட இணைய தள குறியீடாக .aq  (https://www.google.com/search?q=site:aq) உண்டு, அதில் 100க் கணக்கான இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. அண்டார்டிக்கா பகுதிகள் பல்வேல்வேறு நாடுகளால் பங்கு போட்டுக் கொண்டாலும் அந்த கண்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், முழுக்கண்டமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நாட்டின் இராணுவ செயல்பாடுகளும் தடுக்கபப்ட்டுள்ளது. கொஞ்சம் இயற்கை வளங்கள், தாதுத் பொருள்கள் இருந்தாலும் அவற்றை எடுப்பதற்கும் தடை உள்ளது.

ஓசோன் திறந்தவெளி அண்டார்டிக்காவின் மீது உள்ளது, ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகிவருவதால் அண்டார்சிக்காவின் பனி உருகினால் உலமே தண்ணீரில் மூழ்கிவிடும்.

அண்டார்டிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாரும் கிடையாது, பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு முழுவதும் ஆள் மாற்று (ஷிப்ட்) முறையில் மாறி மாறி தங்கிச் செல்கிறார்கள், மற்றபடி சுற்றுலா சாதனையாளர்கள் வந்து செல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் தவிர்த்து வேறு யாரும் (அதாவது அக்டோபர் - மார்ச்) தவிர இரவு பொழுதுகளில் ஏப்ரல் - செப்டம்பர்) வரை வந்து செல்வது கிடையாது, சில நாட்களில் குறைவான நிலா வெளிச்சம் தவிர்த்து எப்போதும் இருட்டாகவே இருக்கும்.

சிலி நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அண்டார்டிக்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர், அதற்கான சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியாவில் இயங்கும் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி வரையில் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளனர், இந்த விமானங்கள் அண்டார்டிக்காவில் தரையிறங்காது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே இருக்கும் அண்டார்டிக்காப் பகுதியில் தாழ்வாகப் பறந்து வட்டமடித்து திரும்பிச் செல்லும், அண்டார்டிக்காவின் கடும்பனியில் ஓடுதளம் அமைக்கவோ அதனை பரமரிக்கவோ வாய்ப்பில்லை என்பதால் அண்டார்டிக்காவின் குளிர் குறைவாக இருக்கும் காலங்களில் மேலே இருந்து சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டை ஆஸ்திரேலியா நிறுவனங்கள் செய்துவருகின்றன.

கோடை காலங்களில் (குறைவான குளிர் காலங்களில் மற்றும் சூரிய வெளிச்சம் உள்ள காலங்ங்களில்) சிலி நாட்டின் புன்டோ ஏரிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 100 பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானங்கள் அண்டார்டிக்காவுக்கு அருகே இருக்கும் கிங்க் ஜார்ஜ் தீவிற்கு செல்கிறது, அங்கிருந்து சிறிய கப்பல் வழியாக அண்டார்டிக்கா கடற்பகுதியை அடைகின்றனர், இது 7 நாள் கொண்ட சுற்றுலாவிற்கு அமெரிக்க வெள்ளிகள் 15,000 வரை செலவாகும்.

பூமியின் வியப்புகளில் அண்டார்டிக்கா ஆகப் பெரிய வியப்பு

11 ஜனவரி, 2010

பனை !

தமிழ் எழுத்துக்கள் ஓலையில் எழுதியதால் தப்பித்தது என்கிற ஒரு கூற்றை (பனையண்ணன் என்கிற) ஒரு நூலில் படித்தேன். எதுவும் இயற்கைக்கும் கால மாற்றத்திற்கும் தப்பாது, முன்னோர்கள் முடிந்த அளவுக்கு நடப்புகளை கல்வெட்டு, பானையோடு, தந்தம், ஆமை ஓடு ஆகியவற்றில் எழுதி வைத்தனர். உலகெங்கிலும் எழுத்தாவணங்களை எழுதுவதற்கு தாள் கண்டுபிடிக்காத காலத்தில் பல்வேறு முறைகள் பயன்பட்டனவாம். எழுதும் முறைகள் ஏற்படுத்தி எழுதுவதற்காக கற்காலம் முதல் சென்ற நூற்றாண்டுவரையில் எலும்புகள், சிப்பிகள், சங்குகள், ஆமை ஓடுகள், விலங்குகளின் தோல்கள் ஆகியவற்றில் எழுதி வந்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் ஆட்டுத் தோல் மற்றும் இளங்கன்றுத் தோல்களில் எழுதி வந்தனராம். சுமேரியர்கள் சுட்ட களிமண் மீது எழுதி வந்தனராம். எகிப்தியர்கள் 'பப்ரைஸ்' (பைபிள் என்னும் சொல்லின் மூலம்) என்ற ஒருவகை நாணல் புல்லில் எழுதினராம். மூங்கில் கண்டுபிடிக்கும் முன் துணிகளிலும் மூங்கில் மீதும் எழுதுவது சீன(ர்) வழக்கம். தமிழ் நாட்டிலும் பண்டைய இந்தியாவிலும் துணிகளிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதி வந்திருக்கின்றனர். பழைய எழுது பொருள்களில் ஓலைகளின் எழுதுவது அவற்றை நூல்கள் போல் இதழ்களாக வைத்திருப்பதற்கும், எழுதுவதற்கும், பாதுகாப்பதற்கும் ஏற்றவையாக இருந்தபடியால் ஓலைகளில் எழுதுவது சீனர்களால் தாள்கள் கண்டுபிடிக்கும் வரையில் இந்தியாவில் நடைமுறையில் இருந்தன. 100 ஆண்டுகளுக்கு முன் சாதகங்கள் கூட ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. தாத்தாவின் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட சாதகமும், பலன்களும் வீட்டின் பூசை அறையில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைக்கு நாம் பார்க்கும் பனைமரங்கள் பண்டைய இலக்கிய வாழ்வின் எஞ்சிய சின்னங்கள் தாம். பனை ஓலைகள் இல்லாவிடில் தமிழுக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. பனை ஓலையில் எழுதுவதில் மற்றோர் வசதியும் இருந்திருக்கிறது. உலகெங்கிலும் இல்லாத ஒரு நடைமுறையாக இலக்கிய தரம் அறிய நம்மவர்கள் வைத்த சோதனைகள் மிகுதி. ஒரு நூல் நல்ல நூலா இல்லையா என்பதை அறிய அதை ஆற்றில் வீசியும், நெருப்பில் இட்டும் நிறைய சோதனைகள் செய்திருக்கிறார்கள். அதை மூட நம்பிக்கை என்பதைவிட உண்மை, நேர்மை ஆகியவற்றிற்கு கொடுத்த முதன்மைத்துவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு அரச சபையில் வெளி இடப்படும் நூல் கற்றோர்களால் சோதிக்கப்பட்ட பிறகு அது மக்களுக்கு பயன்படுமா என்பதை அறிய ஆற்றில் வீசப்படுமாம், ஆற்றில் அடித்துக் கொண்டு செல்லாவிடில் நல்ல நூல் என்பதாக அதை அறிமுகப்படுத்துவார்கள், அதே போன்று தீயில் இட்டு சோதனை செய்திருக்கிறார்கள். அனல் வாதம், புனல் வாதம் என்பவை கூட இப்படிப் பட்டவை தான் என்றாலும், சமண நூல்கள் எண்ணாயிரம் ஒருமுறை இலக்கிய தரச் சோதனைக்காக அவற்றில் எண்ணாயிரம் ஆற்றில் வீசப்பட அவற்றில் அடித்துக் கொண்டு செல்லாமல் மிதந்தவை வெறும் நானுறு, அவற்றை எடுத்து வந்து 'நன்னூல்' என்னும் தொகுதியாக வெளி இட்டதாக இலக்கிய குறிப்புகள் உண்டு.

சுவடி ஏடுகளில் எழுதப்பட்டு, அதன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டதால் கல்வி முறைக்கு ஏ(ட்)டுக் கல்வி என்ற பெயர் வழக்கு வந்தது. 'Edu'cation சொல்லை ஆய்வு செய்தால் அதன் வேர்ச்சொல் தமிழாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

எழுதப் பயன்படும் பனை ஓலைகள் பூச்சிகளால் அரிக்காமல் இருக்க பல்வேறு மூலிகை சாறுகளில் ஊறவைக்கப்பட்டு காயவைக்கப்பட்டு பிறகே எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது,ஓலைகளின் அளவு மற்றும் எடை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் பண்டைய எழுதும் முறைகளில் ஓலையில் எழுதுவது சிறந்ததாகக் கருதப்பட்டது, ஏனெனில் சேர்த்து தொகுதியாக கட்டிவைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் எளிதாக இருந்திருக்கிறது. நாள் கணக்கில் எடுத்துப்பார்க்கமல் இருப்பது, பாதுகாக்கப்பட்ட இடத்தின் தீ ஆகியவையே ஓலைச் சுவடிகள் அழிந்து போவதற்கு காரணமேயன்றி மற்றபடி பரமரிக்கப்பட்டல் ஓலைச் சுவடிகள் நூற்றாண்கள் தாண்டியும் நிலைக்கும் என்பதற்காக ஓலைச் சுவடியில் எழுதுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்காகி இருந்தது.

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விட பனைமரங்கள் தமிழகத்தில் மிகுதி, சென்ற 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓட்டுவீடுகள் கட்ட பனைமரத்தின் தேவை இன்றியமையாததாகவே இருந்தது. பனையின் பயன்பாடு ஓலை (சுவடி) , நுங்கு, கள், பதனீர், பனைவெல்லம் மற்றும் வாரைகள் எனப்படும் பன மரத்த்தை அறுத்த கட்டைகள் தமிழ் நாட்டின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாகவே இருந்தன. பனைமரத்தின் பயன்கள் இவ்வளவு இருந்தாலும் பனை நிழல் பயன் தராதவை என்பதற்கான 'பனை மர நிழலும்.....பய உறவும் ஒட்டாதைவை' சாதி சார்ப்பு/சாடல் பழமொழி கூட உண்டு. முன்பெல்லாம் தொடர் வண்டி பயணத்தின் போது இருப்பக்கமும் பனை மரங்களைப் பார்க்க முடியும். தற்பொழுது அரிதான காட்சியாகவே அவை இருக்கின்றன. முதல் காரணம் புதிதாக ஓட்டுவீடுகள் யாரும் கட்டுவதில்லை, பனைமரத்தின் இதர பயன்பாடான கள் ஆகியவற்றிற்கான தடை இவையே பனைமரங்கள் பெருக்கத்திற்கு எதிராக எழுந்த தடைகள். மதுவிலக்கு இல்லாத நிலையிலும் பனைமரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதியும் கிடையாது. எனவே பனை மரங்களை வளர்க்க விரும்புவர்களும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதால் புதிய பனைமரங்கள் வளருவதற்கு தற்போதைய சூழல் மிகக் குறைவே.

பனைமரம் தென்னையைப் போன்று விரைவாகவும் வளருவதில்லை, ஒரு பனை மரம் வளர்ந்து பலன் கொடுக்க (கள் மற்றும் நுங்கு) குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும், அதுவரையில் அதன் மட்டைகளை வெட்டிப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பனை மட்டைகளில் வீடு கட்டுபவர்கள் மிகக் குறைவு. கிராமங்களில் மாட்டுக் கொட்டைகைகளை (குடில்) கட்டுவதற்கு பனை மட்டைகளை பயன்படுத்தி வந்தனர். கிராமங்களில் மாடுகளே குறைந்துவிட்ட பிறகு மாட்டுக் கொட்டைகைகள் தேடித்தான் பார்க்க வேண்டும். பனைமரங்களின் தற்போதைய பயனுக்கான தேவை முற்றிலும் குறைந்துவிட்டது அல்லது மிக மிகக் குறைவு என்றே சொல்லாலாம். பனைவெல்லத்தில் மருத்துவ பயன்கள் கரும்பு வெல்லத்தைவிட மிகுதியாக இருக்கின்றன என்றாலும் அதனை நாடுபவர்கள் குறைவே. மிகுதியாக நார்சத்து உள்ள பனங்கிழங்கை விரும்பி உண்ணுபவர்களும் குறைவு. எப்படிப் பார்த்தாலும் பழந்தமிழர் வாழ்வில் ஒன்றாக இருந்த பனைமரம் தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டு வருகிறது என்பது கசக்கும் உண்மைதான்.

பனைமரத்தை வைத்து குலம் சார்ந்த தொழிலாக பனைத் தொழில் செய்து வந்த சான்றோர் (நாடார்) சமூகம் முற்றிலும் அந்த தொழிலை தொடர்ந்து செய்து வர இயலாத (குறிப்பாக கள் இறக்கத் தடை ஆகிய ) நிலையில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர், என்பதால் குலவழியாக பனைகளை காத்துவருவதும் முற்றிலும் குறைந்துவிட்டது.

வேறெந்த மரங்களைவிட தமிழர்களோடும், தமிழோடும் நெருங்கி இருந்த பனைமரங்கள் அடுத்த நூற்றாண்டில் ஒன்றிடண்டாவது நிற்குமா என்பதும் ஐயமே. பராமரிப்பில் கவனித்து வரவேண்டிய முதியவர்கள் புறக்கணிக்கப்படுவது போல் நாம் பராமரிக்க வேண்டிய நம் பழந்தமிழ் வாழ்வியல் சின்னமான பனைமரங்களும் புறக்கணிக்கப்பட்டே இருந்துவருகிறது. ஆனால் பனைமரம் பயன்கருதி பராமரிக்காவிடிலும் அவை இதுவரை தந்தப் பயனுக்காக ஊருக்கு 100 மரங்கள் வரை பாதுகாப்பது தமிழர்கள் கடமையாகவே நினைக்கிறேன். பனைமரம் மற்ற மரங்களைப் போன்ற மரம் என்றாலும் அவை பாதுக்காக்க வேண்டிய தமிழர் சின்னங்களில் ஒன்று என்பதை நாம் மறக்கலாது.

பனை பற்றிய தகவல்கள் அடங்கிய மற்றொரு பதிவு இங்கே (வி. ஜெ. சந்திரன்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்