நான்கு நாளைக்கு முன்பு வலைப்பதிவு நண்பர் ஒருவர் 'மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதம் ( பதஞ்சலி தரிசனம் ) (படிக்கத் தவறாதீர்கள் )' இணைப்பைக் கொடுத்து 'இதன் உண்மை தன்மை' குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா ? அறிந்து கொள்ள ஆவல் என்று மின் அஞ்சல் செய்திருந்தார். அந்த இணைப்பில் ஏழு தலை நாகம் காட்சி தந்ததையும், அந்த ஏழு தலை நாகம் சாட்சாத் பதஞ்சலி மகரிஷியே தான் என்றும் அந்த வலைப்பதிவில் எழுதி இருந்தனர். நண்பர் இது போன்ற தகவல்களை நம்பக் கூடியவர் இல்லை என்றாலும் சித்தர்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவரையும் மீறி இது அற்புதமாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க, சித்தர்கள் நினைத்தால் இதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று ஒருவேளை அவர் எண்ணி இருந்தாரோ என்னவோ, என்னைமாதிரி ஆளுங்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றால் உண்மையிலேயே அதை பலருக்கும் அனுப்பலாம் என்று கூட அவர் நினைத்திருக்கக் கூடும்.
நாம் ஏற்கனவே மாடு மணி அடிச்சக் கதை, பாம்பு சிவலிங்கத்திற்கு செய்த வில்வ அர்சனைக் குறித்தப் படம், குரங்கு செய்த பூசை எல்லாம் அறிந்தவர் அலசியவர் என்ற முறையில் இணைப்பில் இருந்த ஏழு தலைகள் நாகமும் தகவலும் பெரிதாக ஈர்க்கவில்லை, இந்த தகவலை 'கும்முகிறவர்களெல்லாம் வரிசையாக வாங்க' என்று கூறி கூகுள் கூ(ட்)டலில் இணைத்துவிட்டேன். அந்த தகவலைப் பார்த்த மற்றொரு கூகுள் நண்பர் இந்த பாம்புக்கு ஏற்கனவே மூணு தலை தானே இருந்தது என்று கூறி அவரும் ஒரு இணைப்பை எடுத்து அனுப்பினார். ஏழு தலை நாகம் பதஞ்சலி மகிரிஷி தான் என்று சத்தியம் செய்து இது கிராபிக்ஸ் படமில்லை என்று சாதித்துக் கொண்டிருந்த பதிவில் சென்று அந்த 'மூன்று தலைகள் நாகம்' குறித்த இணைப்பைப் கொடுத்துப் பின்னூட்டம் போட்டப் பிறகு பதிவையே தூக்கிவிட்டார்கள். ஆனாலும் வேறொரு இணையப்பக்கத்தில் அந்த தகவல் அப்படியே இருக்கிறது.
* ஒரு தகவலை யாரேனும் சொன்னால் அதன் நம்பகத்தன்மை குறித்து கொஞ்சம் கவலையின்றி நாலு பேருக்கு வதந்திகளைப் பரப்புவதில் உள்ள இன்பம் என்ற வகையில் இதைப் பார்ப்பதுடன், இது போன்றெல்லாம் அற்புதங்கள் நடந்தால் தான் தன் நம்பிக்கைகள் போற்றப்படும் என்கிற தவறான நம்பிக்கைகளையும் பலர் கொண்டு இருக்கின்றனர்.
*****
பாம்பு, இருட்டு இதற்கான அடிப்படை அச்சம் ஒவ்வொரு மனிதருக்குமே உண்டு, பாம்பு, இருட்டு (எமன்) இவைகள் தெய்வமாக மாறியதற்குக் காரணமே அதன் மீது இருக்கும் அடிப்படை பயம், அதைப் போற்றிவிட்டால் அது நம்மை அச்சப்பட வைக்காது அல்லது அச்சமின்றி இருக்கலாம் என்ற உளவியல் காரணங்களால் இவைகள் தெய்வமாயின, நாகம் என்று வாய் சொல்லாகச் சொன்னால் கூட ஏற்படும் அச்சத்தைப் போக்கிக் கொள்ள 'நல்ல பாம்பு' என்று கூறிவருகிறோம், நல்ல பாம்பு என்று கூறிவந்தாலும் அதற்கு நாம் முத்தம் கொடுக்க முடியுமா ? அச்சமற்றவன் (தைரியசாலி) என்று கூறிக் கொள்ள அச்சம்(பயம்) இல்லாதது போல் நடிப்பது போன்றது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ள நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே பாம்பை தெய்வமாக்கியதும், நல்ல பாம்பு என்றதும். பாம்புகள் நம்மைப் பார்த்து அச்சமடைகின்றன, பல்வேறு உயிரினங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவற்றிற்கு இயற்கை வழங்கி இருக்கும் பாதுகாப்புகள் போன்றவையே பாம்புக்கு நஞ்சு. மற்றபடி யாரைத் தீண்டலாம் என்று எந்த பாம்பும் வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பது கிடையாது.
அரங்கநாதன் அல்லது நாரயணனின் படுக்கையாகவும், சிவன் கழுத்து மாலையாகவும் பாம்புகள் இருப்பதற்கு என்ன காரணம் ? கடவுளுக்கு உருவங்கள் உருவகங்கள் போல் பாம்பு அந்த உருவகத்தில் அமைந்த மற்றொரு உருவகம் அவ்வளவு தான், அதற்கு மேல் ஒன்றுமே இல்லை, பொதுவாக பஞ்சமா பாதகம் அல்லது பெரும்பாவங்கள் என்று சொல்லப்படும் (மிதமிஞ்சிய) காமம் அல்லது காமவெறி, வெறுப்பு, பொறாமை, பேராசை, ஆணவம் ஐந்து தீய குணங்களைக் கொண்டவன் தீயவன் என்றும் அது இல்லாதவனை நல்லவன் என்றும் சொல்லுகிறார்கள், இதை இந்தி அல்லது வடமொழியில் காம, க்ரோத, லோப, மோக, அஹங்காரம் என்று சொல்லுவர். தீய எண்ணங்களால் ஆட்கொள்ளப் படாததே தெய்வாம்சம் அல்லது தெய்வீகத் தன்மை என்று சொல்லப்படும், நாகம் தீயது தீண்டி கொல்லக் கூடியது என்ற உருவகத்தில் இந்த ஐந்து தீய எண்ணங்களை இணைப்பாக ஐந்து தலை நாகம் உருவகப்படுத்தப்பட்டு அது குடையாக இருப்பதாகவும் பஞ்சணையாக இருப்பதாகவும் நாராயணன் படங்கள் வரயப்பட்டது, அதே போன்று தீய எண்ணத்தின் உருவகமான நாகத்தை அணிகலனாக அணிந்தவர் என்று சிவன் படங்கள் வரையப்பட்டன. வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை என்பது வெளி ஆட்களுக்குத் தான் அன்றி அதை வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கைக் கிடையாது. என்னதான் ஒருகடியில் ஒரு கிலோ சதையை கவ்வி எடுக்கக் கூடிய நாயாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தி வளர்ப்பவர்களுக்கு அது நன்றி உள்ள நாய், வளர்ப்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளவை, அந்த நாய் வளர்ப்பவர்களை ஒன்றும் செய்யாது தவிர அவர்களை பாதுகாக்கும், அதைப் பார்த்து வளர்ப்பவர்கள் அச்சம் அடைவதில்லை, தீய எண்ணங்களின் பிடியில் இருப்பவர்களுக்கும்.
தீய எண்ணங்களை கட்டுபடுத்தி வைத்திருப்பவர்களுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளே மனிதன் - தெய்வம் குறித்த வேறுபாடுகள், இதைத் தான் இந்திய சமய உருவ வழிபாடுகளின் உருவங்களில் பாம்புகளும் சேர்த்தே வரையப்பட்டிருப்பதாகக் காண முடியும், முருகனுக்கு கால் அடியிலும், பிள்ளையாரின் இடுப்பு பட்டியாகவும் பாம்பு இருக்கும். இவை தத்துவ ரீதியான விளக்கம், இதைச் சொல்வதால் நான் இந்திய சமயங்களுக்கு முட்டுக் கொடுக்கிறேன் என்று பொருளும் இல்லை, தத்துவங்கள் மதங்களைக் கடந்தவை, மனித நலனுக்காக ஏற்படுத்தி வைக்கப்பட்டவை என்பதை மறுக்கும் எண்ணம் எனக்கு அமையப் பெற்றதும் இல்லை, தந்தைப் பெரியாரையும், இராமலிங்க வள்ளலாரையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் மனநிலை வாய்க்கப் பெற்றவன் நான், தவிர விமர்சனங்களுக்கு பயந்து 'மூடிக் கொள்ளலாம்' என்று என்றுமே நினைத்ததும், என்னைப் பற்றிய எண்ணம் மாறிவிடுமோ என்றெல்லாம் நான் நினைப்பதே கிடையாது.
உண்மையிலே ஏழு தலைகள் கொண்ட நாகம் இருப்பதாக நம்புவதன் விளைவே பதஞ்சலி முனிவர் பற்றிய அற்புதமாக பரப்பப்பட்டுள்ளது, அவர்கள் காட்டி இருக்கும் படத்தில் பதஞ்சலி முனிவருக்கு பின்னால் இருக்கும் படத்தில் ஐந்து தலைகள் நாகமே உள்ளது, இவர்கள் எப்படி ஏழு தலைகள் நாகத்தைக் காட்டி பதஞ்சலி காட்சி கொடுத்தார் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை. இதற்கு பதிலாக சப்தரிஷிகள் காட்சி கொடுத்தார்கள் என்றாவது இவர்கள் நம்பி இருக்கலாம், ஆக தகவல் பிழை அடிப்படையிலும் இவர்களின் நம்பிக்கைகள் பொய் தான்.
இவர்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலுமே இது போன்ற அற்புதகங்களுக்கு வாய்பிருப்பதாக நம்புகிறார்கள், இரண்டு தலையுடன் பிறந்தாலே அந்த பாம்பு பரிதாபத்துக்கு உரியது என்றே சொல்லுகிறார்கள், ஒரு தலை வலப்புறமாக செல்ல விருப்பப்பட மறு தலை இடப்புற செல்ல விரும்பம் போராட்டத்தில் பாம்பு முடிவெடுக்கத் தெரியாமல் திணறிக் கொண்டு இருக்குமாம், பின்னர் எந்த தலையின் மூளை விரைவாக செயல்படுகிறதோ அந்தப் பக்கம் பாம்பு செல்லுமாம், ஒரு தலைக்கு பசி உணர்வும், மறு தலைக்கு உண்ட களைப்பும் இருக்குமாம், இரண்டு தலைக்கே இப்படி என்றால் ஏழு தலை நாகம் இருந்தால் அது படும்பாடு அந்தோ பரிதாபம்.
இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே மகப்பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதும், இரண்டு தலை பாம்பு, ஆமை உள்ளிட்டவை இருப்பதும் அதிசயமோ அற்புதமோ இல்லை, அவை இயற்கையில் சில வேளைகளில் நடைபெறும் கூறுகளே, அவற்றிக்கு அறிவியல் ரீதியான காரணங்களும் விளக்கங்களும் உள்ளன, இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிசயம், அற்புதம் என்று நம்பப்படாத போது ஏழு தலைகளுடன் ஒரு நாகம் ஒரு வேளை இருந்தால் அது மட்டும் எப்படி அதியமாகவோ, அற்புதமாகவோ நம்ப்படும் என்று தெரியவில்லை, இறை அற்புதங்கள் என்றால் அது நம்பக் கூடியத் தன்மையைக் கடந்தது என்ற தவறான அடிப்படைப் புரிந்துணர்வுகளலாம், அவை நடைபெறுவதால் இறைவனின் இருப்பு உறுதிப்படும், தத்தமது நம்பிக்கைகள் போற்றப்படும், பொருள் படும் என்று நம்புவதன் விளைவே அற்புதங்கள் குறித்த மனிதத் தேடலாகவும், அவை குறித்த கட்டுகதைகளை பரப்புவதாகவும் உள்ளது.
*****
நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது,
"நம் நாட்டில் சூரிய நமஸ்காரத்தை வழக்கமாக கொண்டுள்ள பலரும் அறியாமல் நோயை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் கண்பார்வை மங்கியவர்களின் விகிதாச்சாரமும் தோல் வியாதியின் விகிதாச்சாரமும் அதிகமாக இருப்பதற்கு இந்த சூரிய நமஸ்காரமும் காரணமாக இருக்கலாம்." - சுவனப்பிரியனின் உளறல்.
முரண்பாடுகளைத் தான் நாம் விமர்சனம் செய்கிறோம், குனிந்து நிமிரும் தொழுகையால் கூன் விழும் ஆபத்து உண்டு, முதுகு தண்டுவடம் தேயும், பாதிப்பு அடையும், ஆண்களின் விந்தகம் (Prostate) அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதால் பாதிக்கப்படும் என்று ஒரு நாசா விஞ்ஞானி கூறியுள்ளார் என்று ஒருவர் காணொளி காண்பித்தால் சுவனப்பிரியனுக்கு இனிப்பாக இருக்குமா ?
மேலும் இணைப்புகள்.
ஆக ஒருவருக்கு அற்புதமாக தெரிவது மற்றவருக்கு அற்புதமாக தெரியத் தேவை இல்லை, இவையெல்லாம் அவரவருக்கு வெறும் நம்பிக்கை மட்டுமே.
*****
இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதும் அற்புத விளக்கங்களினாலும், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி கடவுள் நினைத்தால் சாத்தியமே என்று இவர்கள் எழுதிவதில் இருந்தும் எனக்கு விளங்காதவை ஒன்று உண்டு. இயற்கைக்கு மேம்பட்ட சக்திகள் எல்லாம் கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உண்மை என்றால். ஓருபால் சேர்கையாளர்களையும், திருநங்கைகளையும் @#%%&&& கொழுப்பெடுத்தவர்கள், அரிப்பெடுத்தவர்கள் என்றும் இவர்கள் எள்ளி நகையாடுவதன் முரண்பாடுகள் எத்தகையது ? இவையெல்லாம் அற்புதம், விசித்திரம் என்ற வகைக்குள் வராதா ? இயற்கைக்கு மாறுபட்டு பாம்புக்கு பல தலைகள் இருந்தால் அதிசயம், அற்புதம், இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பால் விருப்பம், திருநங்கைத் தன்மை ? இவர்களின் படைப்புகள் மட்டும் யார் செயல் ?
அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கு செய் குடும்பக் கட்டுப்பாடு - கலைஞானி கமலஹாசன்