பின்பற்றுபவர்கள்

அரிசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரிசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே சாப் நஹி சப்போர்ட்ஸ் !

இந்தியா என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட நாடு, அதிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை தனிநாடுகள். உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகள் தனித் தனி மொழி அடையாளம் கொண்ட குழுவாக இன்றும் அடையாளம் காணப்படுகின்றன. கடந்த 200 நூற்றாண்டுகளில் உருவான நாடுகள் தவிர்த்து பெரும்பாலனவை மொழிவாரி, இனம் சார்ந்த நாடுகள் தான். வெள்ளையர்கள் இந்தியாவை கைப்பற்றி இருக்காவிட்டால்,இந்தியா மொழிச் சார்ந்து பல்வேறு நாடுகளாக இருக்கும் என்றே கருதவேண்டி இருக்கிறது. இந்திய மக்களுக்கு பொது இன அடையாளம் காணப்படுவதும் கடினம் தான்.

Scientific racism of the late 19th and early 20th centuries divided mankind into three "great races", Caucasoid (white), Mongoloid (yellow) and Negroid (black) in accordance with their own world-view.
The populations of the Indian subcontinent however were problematic to classify under this scheme. They were assumed to be a mixture of an indigenous "Dravidian race", tentatively with an "Australoid" grouping, with an intrusive Aryan race, identified as a sub-race to the Caucasoid race, but some authors also assumed Mongolic admixture, so that India, for the purposes of scientific racism, presented a complicated mixture of all major types.
மேலும் படிக்க

ஆனாலும் மொழிக் குழுக்களின் அடையாளமாக திராவிடர் ஆரியர் என்கிற பகுப்புகள் இருக்கின்றன. அதன் உட்பகுப்பாக மொழி அடையாளங்களே மாநிலங்களாகவும் மாநில மக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தென்னிந்தியர் ஒருவரை முகத்தை வைத்து இவர் இந்த மொழி பேசுபவராக இருக்கும் என்று கணிப்பதும் கடினம் தான். பிரச்சனைகள் அதாவது பிறநாட்டினரின் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு என்கிற போது இந்திய நிலம் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்தார்கள், ஆனால் வெள்ளையர்கள் சென்ற பிறகு ஆளுமை / ஆட்சி அதிகாரம் என்று வரும் போது உண்மையில் இந்தியாவின் பிரச்சனைகள் ஒருமைப்பாடு என்பவை கேள்விக்குறியாகவே ஆகின்றன, காரணம் வட இந்தியர்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஆகுவதும் தென்னிந்தியர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. இந்தியா பகுதிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு தலைவர், மாநிலப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுச் சொல்லக் கூடிய ஒருவர், பெரும்பாலான மாநில மக்கள் ஏற்கக் கூடிய தலைவர்கள் உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லை.

100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட சென்ற தேர்தலும் முந்தைய தேர்தலில் இவர் தான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கத் திணறி தேர்தலை சந்தித்து பின் கூட்டணிகள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரம் பெற்று மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கி பின் தொடர்கிறது. வெங்கையா நாயுடுவையோ பிற தென் மாநில பாஜக பொறுப்பாளர்களையோ பாஜக பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இருப்பதே இல்லை, சந்துல சிந்து என்ற அடிப்படையில் தான் தென்னிந்தியர்களான நரசிம்மராவும், குறைந்த நாட்களே தேவ கவுடாவும் கூட பிரதமர் ஆனார்கள், அப்படி பிரதமர் ஆனவர்களுக்குக் கூட அவர்கள் மாநிலங்கள் தவிர்த்து பெரிய ஆதரவோ, மறுமுறை அவ்வாறு ஆகுவதற்கான வாய்ப்போ கிடைக்கவில்லை.

ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக ஆளும் தேசிய கட்சிகள் புறக்கணிக்கப்பட்டால், அந்த மாநிலத்திற்கு மத்திய அரசில் பங்கு பெற எந்த ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்காது, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அந்தந்த மாநில வளர்ச்சிக்கு உதவும் மத்திய அமைச்சர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. கூட்டணி என்பதால் சில பதவிகள் கிடைக்கிறது அதையும் கூட திமுக உள்ளிட்டவை ஊழல் செய்யதாகக் கூறப்பட்டு கெடுத்துக் கொண்டுள்ளது. இரண்டு அமைச்சர்களின் பதவிகளை பறித்துக் கொண்டார்கள் கேட்டுப் பெற ஒரு துப்பும் இல்லை.

ஸ்பெக்டரம் விவாகரத்தை பத்திரிக்கைகள் தான் ஊதிப் பெருக்குகின்றன, ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற காங்கிரஸ் நீதிமன்ற நெருக்கடியால் சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை செய்துவருகிறது. ஊழலே நடக்கவில்லை என்றால் தற்போது சிறையில் இருக்கும் கல்மாடி, ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் அப்பாவிகள் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே சொல்லிவரலாமே.

எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்று சாதிக்கவே அவர்கள் அவ்வாறு கூறி வந்தார்கள், சில மாதங்களாக அன்னா ஹசாரே கொடுத்துவரும் குடைச்சலாலும், விக்கிலீக் வழங்கியுள்ள ஸ்விஸ் வங்கி கருப்புப்பணப் பட்டியல் வெளி ஆகியுள்ளதால், பிரதமர் சுதந்திர தின உரையில் வெட்கமே இல்லாமல் நாட்டில் ஊழல் பெருகியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார், அதையும் தாங்களே ஒழிக்கப் போவதாகக் கூடச் சொல்லி இருக்கிறார். எங்கள் ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது என்பதை நீங்கள் சொல்லித்தான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம், நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம், நாங்களே நடவெடிக்கை எடுக்கிறோம் என்பதாக வெட்கமே இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறார்கள். சரி அதுவேறு......

அன்னா ஹசாரே யார் ? யாருக்குத் தெரியும் வட இந்திய செய்தி இதழ்கள் அவரை ஊழலை ஒழிக்க வந்த புதிய அவதாரமாகக் காட்டுகின்றன, அவரும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் நாள் தோறும் செய்திகள் வெளியாகின, அன்றைய செய்திக்கு இடம் போக மீதம் உள்ள இடத்தில் தென்னிந்திய செய்தித்தாள்கள் அவற்றை மீள் பதிவு செய்தன, மற்றபடி அன்னா ஹசாரே என்பவர் இந்திய மாநிலங்கள் அனைத்தாலும் அறியப்பட்டவரே இல்லை. அன்னா ஹசாரே என்பவர் நதி நீர் உள்ளிட்ட தென்னிந்திய பிரச்சனைகளுக்கு ஏதேனும் குரல் கொடுத்துள்ளாரா ? தெலுங்கானப் பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா ? இந்தியாவை ஆளும் சக்திகளில் தென்னிந்தியர்களுக்கும் முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஏதேனும் போராடியுள்ளாரா ? மாநில மொழி சார்ந்த உரிமைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்து அனைத்து ,மொழிகளையும் ஆட்சி மொழி ஆக்க குரல் கொடுத்துள்ளாரா ? இந்தநிலையில் தென்னிந்தியர்களால் ஓரளவு அறியப்பட்ட அமிதாப்பச்சன் கட்சித் துவங்கினால் தென்னிந்தியர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்களோ அதைவிடக் மிக குறைவாகத்தான் அன்னா ஹசாரேவுக்கு கிடைக்கும், அதுவும் கூட காங்கிரஸுக்கு மாற்றான தேசியக் கட்சியான பாஜகவின் ஆதரவாளர்களால் தான் கிடைக்கிறது.

அன்னா ஹசாரே தேசிய புதிய அவதாரமாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கி இருந்தாலும் அவர் அதன் பிறகு தென்னிந்திய மாநிலங்கள் எதிலும் கால் வைத்தது போலும் தெரியவில்லை, பிறகு எப்படி அவரை ஒரு பொதுத்தலைவர் மற்றும் சமூகப் போராளியாக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு கொடுப்பார்கள். மேலும் காங்கிரஸ் ஆட்சிகள் துவங்கி போஃபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நீர்க்கடிக்கப்பட்ட பிறகு ஊழலுக்கு எதிரான கூக்குரல்கள் யாவும் பயனற்றதாகவே போய்விடும் நம்பிக்கையின்மையும் மக்களிடையே இருக்கிறது.

இந்தியை தேசிய மொழியாக திணிப்பதையும், வட இந்தியர் ஆதிக்கங்களைக் குறைத்து, ஆட்சி அதிகாரம், மாநில மொழிக்கு அங்கீகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தென்னிந்தியர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரை எந்த ஒரு வட இந்தியரையும் பொதுத் தலைவராக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொள்வது கடினமே. ஆனால் தலைமைத்துவம் சாராத கார்கில் ஊடுறுவல் உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகளில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டினர் நிறையவே ஆதரவு கொடுத்துவருகின்றனர்.


மேற்கண்ட கட்டுரை வெளியான பின்பு ....

கூகுள் பஸ்ஸில் ஒருவர் ஆவேசமாகக் விமர்சித்துக் கேட்டார்,

அரைகுறை அறைவேக்காட்டு பதிவு

சுத்த ஹம்பக். ஊழல் பொதுப் பிரச்சனை இல்லையா ? ஊழலை ஒழிக்க குரல் கொடுக்க தகுதி வேண்டுமா ? அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமா ?

எதுவுமே தவறு இல்லை. ஊழலை ஒழிக்கக் குரல் கொடுக்கத் தகுதி தேவை இல்லை, திகார் புகழ் ராசா கூட ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கலாம், சாராய உடையார் கூட மது ஒழிப்புக்கு போராடலாம், இவையும் பொதுப் பிரச்சனை தானே, அவர்களும் பொது மக்கள் தானே..... அன்னஹசரே நல்லவரு வல்லவரு அவர் (மதவாதி) மோடியையோ, ஊழல் அமைச்சர்கள், அலுவர்களின் தலைவன் மன்மோகன் சிங்கையோ தனிப்பட்ட முறையில் புகழ்ந்திருந்தால் என்ன தவறு ? :)

ஊழலுக்கு எதிராக போராட தகுதி இல்லை சார்.

6 பிப்ரவரி, 2011

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ?!

'மிஸ்டர் க்ளீன்' காங்கிரசு கட்சி தன் பகடையை நன்றாகவே உருட்டுகிறது. பிகாரில் புறமுதுகு காட்டிய கோ மகன் ராகுல் காந்தி தமிழக சட்ட(ச)பைக்கு 90 இடங்கள் வரை பேரம் பேசுவதாக நாளிதழ் செய்திகள் அறிவிக்கின்றன. அந்த 90ம் ஏ,பி,சி என்ற பிரிவுகள் அடிப்படையில் அதாவது ஏ - காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், பி - காங்கிரஸ் கூட்டணியாக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், சி - இழுபறி தொகுதிகள். கருணாநிதியின் இலவச அறிவிப்புகளை வைத்து திமுக கூட்டணி வெற்றிபெரும் என்கிற (நப்)பாசையில் இவ்வாறு மிகுதியாகக் கேட்கப்படுவதாக நினைக்க முடிகிறது, அதிலும் திமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் தனிப்பட்ட கவனமாக ராசா கைது நடவடிக்கைகள் இந்த நேரத்தில் செய்வதன் மூலம் நெருக்குதல் கொடுத்து கேட்டும் சீட்டுகளைப் பெற்றுவிட முடியும் என்று காங்கிரஸ் கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள், இதன் மூலம் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் கனிசமான வெற்றியைப் பெற வாய்ப்புள்ள அதே நேரத்தில் திமுக ஊழல் குறித்த குற்றச் சாட்டில் தோல்வியைச் சந்தித்தால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு தன் தலைமையில் ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் நம்புவதாக ஐயம் ஏற்படுகிறது.

அதாவது திமுகவின் இலவசத் திட்டங்கள் காங்கிரசை கரையேற்றும் அதே சமயத்தில் திமுகவின் மெகா ஊழல் திமுகவை (மட்டும்) வீழ்த்தும் என்றும் நம்புகிறார்கள் போலும். இதற்கனவே திமுகவின் இலவசத் திட்டங்கள் மத்திய அரசின் மானியத்தில் செயல்படுவதாக இளங்கோவன் உள்ளிட்டோர் கூறுவதை ஒப்பு நோக்கவும். அதாவது ஊழலில் பலனை திமுக அனுபவம் செய்யவும், இலவசத் திட்டங்களின் அறுவடையை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திட்டம் போலும்.

ராசா அப்பழுக்கற்ற உத்தமராசா என்றும் பார்பனப் பத்திரிக்கைகளின் சூழ்ச்சி என்று புலம்பும் தாத்தா நெருக்குதல் தரும் காங்கிரசிற்கு அடிபணிவது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை நினைவுப்படுத்துகிறது. தாத்தாவின் நிலை காங்கிரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைதான். தாத்தாவின் நிலை பரிதாபம் என்றாலும் இது எதிர்பார்த்த ஒன்று தான். நேர்மையானவர்கள் வளைய மாட்டார்கள்.

தாத்தாவுக்கும் நமக்கும் தெரிந்தவையில் தாத்தா மவுனம் சாதிப்பவை :

1. ஸ்பெக்டரம் டேப் விவகாரத்தில் ராசா - நிராடியா தொடர்புடைய உரையாடலை மத்திய அரசின் கீழ் உள்ள தொலை தொடர்பு நிறுவனமே வெளியிட்டது. இதில் காங்கிரசின் கைங்கரியம் இருக்கிறது என்றும் தெரிந்தும் தாத்தாவின் மவுனம்

2. நீராராடியாவுன் மத்திய அமைச்சர் பதவிகளுக்கான போரம் குறித்த உரையாடல், இது ஒரு நரித்தனமான காங்கிரசின் அரசியல் அசிங்க விளையாட்டு, நீராராடியா டெலிபோன் பேச்சுகளில் திமுகதரப்பின் பேச்சுகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு, நீரா ராடியா காங்கிரசின் எந்த பிரமுகருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை வெளியிடாமல் காங்கிரஸ் தற்காத்து கொண்டது, நீரா ராடியா காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரா ? அவர் கண்டிப்பாக திமுக அமைச்சர் பதவிகளுக்கு இன்னொரு காங்கிரஸ் பெருந்தலைகளிடம் தானே பேசு இருப்பார் அது ஏன் வெளிவரவில்லை. இதை ஏன் தாத்தா இதுவரை கேட்காமல் வெறும் பார்பன பத்திரிக்கை சதி என்றே கூறி வர அதற்கு போயாஸ் தோட்டத்து முன்னாள் பூசாரி (மானமிகு வீரமணி ஐயா) ஜிங்க்சா அடிக்கிறார் ? பொதுமக்களுக்குத் தோன்றும் இந்தக் கேள்விகள் திமுகவினருக்கு தோன்றாதா ?

திமுக காங்கிரசை கேள்வி கேட்காததற்கு ஸ்பெக்டரம் ஊழலில் பெரும் பங்கு திமுகவிற்கு இருப்பதே காரணம், அதற்கான வழுவான ஆதாரமும் காங்கிரஸ் வசம் உள்ளது. தயாநிதி மாறன் தொலைதொடர்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இராசா அமர்ந்த பிறகு ராசாவின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு அதன் பிறகான மத்திய அரசு தேர்தல் முடிகளுக்கு பிறகு மத்திய அமைச்சர் பேரமும் பதியப்பட்டுள்ளது. ஆக ஸ்பெக்டரம் விவகாரம் காங்கிரசிடம் இலங்கைப் போருக்கு முன்பே சிக்கி இருக்க, திமுகவை காங்கிரஸ் தன் இலங்கை அதிபரின் ஆதரவுக்கும் பயன்படுத்தி இருக்கிறது, இதன் பிறகும் தாத்தா போர் நிறுத்தத்திற்கு ஆடியவை வெறும் நாடகம் தான். ஒராண்டாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கக் காரணம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிறது என்பதால், இதில் திமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்து மிகுதியான இடங்களைப் பெற்று வென்றால் தன் தலைமையில் ஆட்சி அமைத்துவிட்டு திமுகவை கழட்டிவிடலாம் என்பதே காங்கிரசின் எண்ணமாக இருக்கவேண்டும். முதலில் திமுகவின் விரல்களைப் பயன்படுத்தியும் தமிழர்களின் கண்களில் குத்திய காங்கிரஸ் பிறகு திமுகவின் கையைக் கொண்டே திமுகவை குத்திக் கொள்ளும் நிலைக்கு பகடை ஆடிவருகிறது.

திமுகவின் ஊழல் குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை, அதனால் இலவச திட்டங்களினால் திமுக வெல்லும் என்று உடன்பிறப்புகள் பரப்பி நம்பி வந்தாலும், திமுகவின் இலவசத் தொலைகாட்சி வழியாகவே திமுகவின் ஊழல்களையும் அறிந்துள்ளார்கள் பெருவாரியான மக்கள். ஈழ மற்றும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவானர்களின் எழுச்சி காங்கிரசுக்கு எதிராக பலமாகவே வேர்விட்டிருக்கிறது. எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அது ஒரு உடன்கட்டை கூட்டணி தான். இதில காங்கிரஸ் தன் தலைமையில் கூட்டணி ஆட்சி என்னும் கனவுக்கு உரமாக உருட்டி விடுவது பகடையா? அல்லது தனக்குத் தானே கட்டிக் கொள்ளும் (பீகாரில் தோற்றோடியதைப்) போன்ற பாடையா ?

12 ஜனவரி, 2011

கமான் சீமான் கமான் !

வைகோ ஜெயலலிதாவிடம் சேர்ந்ததற்கும் சீமான் ஜெ வுடன் கைகோர்த்திருப்பதும் ஒரே நிகழ்வாக பரப்பப்படும் அளவுக்கு சீமான் அரசியல் நுழைவு ஆளும் கட்சி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. தமிழக வாக்காளர்களைப் பொருத்த அளவில், நோக்கர்களைப் பொறுத்த அளவில் வைகோ ஜெ விடம் சேர்ந்த நிகழ்வு அரசியல் ரீதியாக வைகோவினால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவு. வைகோ உள்ளே இருந்ததற்கும் சீமான் உள்ளே இருந்ததற்கும் சொல்லப்பட்ட காரணம் விடுதலைப் புலிகள் ஆதரவு என்றாலும் சீமானுக்கு அதை தேச தூரோகம் என்ற இந்திய முத்திரை குத்தி அனுப்பினார்கள். வைகோ உள்ளே இருந்த போது இலங்கையின் நிலவரம் கவலை கொள்ளுவதாக இல்லை. சீமான் உள்ளே வைக்கப்பட்டது எல்லாம் முடிந்த பிறகே எனவே இவை இரண்டும் ஒரே மாதிரியான உணர்வுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவோ, பார்க்கக் கூடிய நிகழ்வோ அல்ல. வைகோ ஜெவின் தனிப்பட்ட முடிவால் பழிவாங்கப்பட்டு அந்த காயம் முற்றிலும் ஆறும் முன்பே துரோகியை விட எதிரியே மேல் என ஜெவுடன் தொடர்ந்தால் தான் அரசியல் வாழ்வு என்னும் நிலைக்கும் என்னும் முடிவுக்குத் தள்ளப்பட்டவர். வைகோ ஜெவுடன் அரசியலில் சேர்ந்திருந்தாலும் தனிப்பட்ட கொள்கையான ஈழ ஆதரவு என்பதையெல்லாம் மாற்றிக் கொள்ளவும் இல்லை. சீமான் எடுத்துள்ள முடிவு எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்னும் நிலையே.

2006ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் அரசியல் சூழலும் தற்போதைய அரசியல் சூழலும் ஒன்று இல்லை. பலமான கூட்டணி, இலவசத் திட்டம் என்பதுடன், விஜயகாந்து என்கிற திரைப்படக் கவர்ச்சியும் வாக்குகளைப் பிரித்தும் கருணாநிதியின் திமுக வெற்றி பெற்றதோ மைனாரிட்டி அளவில் தான். ஆனால் இன்றைய தேர்தல் சூழலுக்கு முன்பு ஈழம், தமிழக மீனவர் பிரச்சனைகள், ஸ்பெக்டரம் மெகா ஊழல் , விலைவாசி உயர்வு விஷ்வரூபமாக நின்று கொண்டு இருக்கின்றன. இவற்றையெலலம் சரி செய்து ஈழ எதிர்ப்பாளர்களான காங்கிரசு மற்றும் பாமக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது கருணாநிதிக்கு பெரும் அறைகூவல்.

இந்த தேர்தல் இலவச திட்ட ஏமாற்றுகளுக்கும் இன உணர்விற்கும் நடக்கும் போர் போல் தான் நினைக்க வேண்டி இருக்கிறது, இன உணர்வு சார்பாக வாள் சுழற்றப் போகும் சீமான் வைகோவைப் போல் வெறும் வைகோல் புலி அல்ல. அடிபட்ட புலி. இதுவரை சீமானை ஆதாரித்துவந்தது போலவும், ஜெவுடன் கைகோர்ததால் சீமான் தன்மானம் இழந்துவிட்டது போலவும் பரப்பும் உபிகளின் புலம்பல்களில் சீமான் ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வந்திருப்பதைக் காட்டுகிறது, அது உறுதிப்பட்டதால் தான் என்னவோ சீமானும் தேச துரோகம் செய்ததாக கைது செய்து அடைக்கப்பட்டார்.

கருணாநிதியால் வாரி வழங்கப்படும் இலவசத் திட்டங்களைக் கருத்தில் கொண்டும், ஸ்பெக்டரம், ஈழ ஆதரவு ஆகியவற்றுடன் ஊன்றிப் பார்த்தால் இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிகவும், சீமானும் இணைந்து சந்தித்தால் தமிழகத்தில் வெற்றித் தோல்வியில் இழுபறி நிலையே நீடிக்கும், அப்போது காங்கிரசோ, பாமகவோ எடுக்கும் முடிவில் அதிமுக ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கிறது.

ஜெ நம்ப வைத்து கழுத்து அறுப்பவராம், நம்ப வைத்து பிறகு 'இதயத்தில் இடம் கொடுப்பது' கழுத்தறுப்பு கணக்கில் வராதா ? ஜெ காலில் விழ வைப்பவராம். உண்மை தான். அஜித்திற்கு நேர்ந்த அவமானம், மிரட்டல்கள், கருணாநிதி என்று மேடையில் சொன்னதற்காக கவுதம் மேனனுக்கு நடந்தது எல்லாம் என்ன ? விஜய் ஜெவைத் தேடிப் போனதன் காரணம் என்ன ? இவை எல்லாம் காலில் விழாததால் ஏற்பட்ட பலாபலன்கள் தானே.

வைகோ அப்படி மாறினார், சீமானும் மாறுவார்.......! மாறிவிட்டுப் போகட்டுமே....அரசியல் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லையே.......பிறகு என்ன ? நம்பிக் கழுத்தறுத்தவர்கள் நிறைய உண்டு தான்....அவர்களிடம் மட்டும் தான் கழுத்து அறுத்து கொள்வேன் என்பது மட்டும் என்ன கொள்கையோ, சீமான் நாளைக்கே கழுத்தறுத்தாலும் அவர் ஏற்கனவே கழுத்து அறுத்தவர் இல்லையே.

வரும் தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்பதைவிட யார் தொடரக் கூடாது என்கிற முடிவில் ஜெவுடன் கைகோர்த்த சீமானின் முடிவு என்னைப் போன்ற பொதுவானவர்களால் வரவேற்கத்தக்கது.

சீமான் ஒன்றும் வைகோ போன்று ஒடுங்கிய புலி அல்ல... அடிபட்ட புலி

கமான் சீமான் கமான் !

சீமான் முடிவு சரியானதே......பதிவர் மோகன்தாஸின் பதிவு

29 டிசம்பர், 2010

திருமா அறிமுகப்படுத்திய தமிழ் கொடி !

தமிழ் கொடி என்றதும் தமிழ் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் இந்திய இறையாண்மையை சிதைக்கும் திட்டமிட்ட சதி என்று தேசியவாதிகள் கிலி பிடித்து உளறுவார்கள். தேசியம் என்கிற பெயரில் மாநில உரிமைகளும்,, மாநில மொழியும் அழிந்து போகாமல் இருக்க மொழி உணர்வை மேம்படுத்த தமிழ் நாட்டிற்கு தனிக் கொடி தேவை என்பதை நான் வழிமொழிகிறேன். தேசியவாதிகள் பயந்து மிரள மாநிலக் கொடிகள் என்பவை ஒரு அடையாளம் என்பது தவிர்த்து எதுவும் இல்லை, அண்டைமாநிலம் கர்நாடகாவில் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்திற்கான தனிக் கொடி இருந்துவருகிறது, வாட்டாள் நாகராஜ் ஏந்துவது கர்நாடக மாநிலக் கொடியைத்தான்.

தமிழர்களுக்கான அடையாளம் மொழி, மொழி என்பது பண்பாட்டு அடையாளம் மட்டுமே, இவற்றை குறியீடாகக் கொள்ள முடியாது. உலகமெங்கும் குறீயீடுகள் மக்கள் இனக் குழுவை அடையாளப்படுத்த ஏற்படுத்தப்படுவது நடைமுறைதான். நிலம்சார்ந்த வகையில் தமிழ் நாடு என்று சொல்லப்படுவதற்கு வெறும் வரைபடம் தவிர்த்து எந்த அடையாளமும் இல்லை. தற்போது தமிழ் கொடி அமைத்திருப்பது வரவேற்க்கக் கூடிய ஒன்று, இதை என்றோ செய்திருக்க வேண்டும்.

தற்போது திருமாவால் வடிவமைக்கப்பட்டு திக தலைவர் வீரமணி அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழ் தனிக்கொடிக்கு முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் எதுவும் இல்லை. மேலும் இதனை விரும்பவும் இல்லை, காரணம் தேசியவாத காங்கிரசை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதே.

தமிழ் கொடி பற்றிய சிந்தனையும், செயல்படுத்தலும் சரிதான், இருந்தாலும் இதுபற்றி பல்வேறு தரப்புகளிடம் விவரித்து, பல்வேறு வடிவமைப்புகளாக வைத்து ஒன்றை தெரிவு செய்திருக்கலாம், அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையான கருத்துகளோ, ஏற்புகளோ கிடைத்திருக்காது. ஆனால் பொதுமக்களிடம் கருத்தும் வாக்கெடுப்பும் நடத்தி இருக்கலாம்.

கொடியில் தமிழ் நாட்டின் சின்னங்கள் எதுவுமே இல்லை. தமிழ் நாடு பஞ்சு உட்பட விவசாயத்திற்கு பெயர் பெற்ற மாநிலம், மீன்பிடித் தொழில் பெயர்பெற்றது, பல்வேறு சமய / மத / மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் நிறைந்த மாநிலம். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இவற்றை காட்டும் வடிவமைப்பு கொடியில் இருந்தால் நன்றாக இருக்கும்.


அவசர கெதியில் 'நான் தான் பெயர் பெற வேண்டும்' என்று கட்டிய தமிழ்நாட்டு தலைமைச் செயலகத்தைப் பாருங்கள், எனக்கு அது பிடிக்கவே இல்லை. தமிழ் நாட்டின் முகப்பைக் காட்டுவதாக, கட்டிடக் கலையைக் காட்டுவதாக கட்டிடம் அமைந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் எந்த ஒரு சின்னமும் தலைமை செயலக கட்டிடத்தில் இல்லை. எண்ணை தொழிற்சாலையில் இருக்கும் சேமிப்பு தொட்டி ஒன்று பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அல்லது நெல் அரவை மில்களின் ஊரல் தொட்டிகள் பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது தலைமைச் செயலகம்.

சிற்பகக் கலைக்கும் / கோபுரங்களுக்குப் பெயர் போன தமிழ் நாட்டில், தாம் தமிழர்களின் அடையாளம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரால் கட்டிமுடிக்கப்பட்ட தலைமைச் செயலகம். பாதி வரை ஈயம் பூசப்பட்ட கவிழ்த்து வைத்த கரிபிடித்த அண்டாவைப் போலவே இருக்கிறது என்று காணும் போதெல்லாம் வருத்தம் கொள்கிறேன்.

தமிழ் கொடியும் அவ்வாறில்லாமல் தமிழர் பண்பாட்டைச் சொல்லும் அடையாளங்கள் அதில் இருக்க வேண்டும், கொடி அமைத்தல் நல்லச் செயல், தேவையும் கூட என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமாவின் முன்னெடுப்பும், திக வீரமணியின் ஒப்புதலும் நல்ல துவக்கம். ஆனால் இதுவே இறுதி என்பதை ஏற்கமுடியவில்லை. கொடியை மாற்றி அமைத்து பொதுமக்களின் ஒப்புதல் பெறுவது சரியான நடைமுறையாக இருக்கும்.

சுட்டிகள் :

தமிழர் இறையாண்மை மாநாடு புகைப்படத் தொகுப்பு


கூட்டணியில் இருக்கிறோம்... கூட்டம் போடத் தவிக்கிறோம்!

14 ஜூன், 2010

தண்டவாளத் தகர்பில் தி*மலரின் பங்கு !

இந்தியாவில் குண்டு வெடித்தால் இஸ்லாமிய சதி என்று (ஊகம்) கிளப்பி விடும் நாளிதழ்களில் நமது தி*மலருக்கு சிறப்பான இடம் உண்டு. மலேக்கான் குண்டு வெடிப்பு இந்துத்துவ சதி என்பது அம்பலமாகிய பிறகு யார் குண்டு வைத்தது என்று முந்திக் கொண்டு அறிவிப்பதில் சற்று சுனக்கம் காட்டினார்கள்.

வடகிழக்கில் இந்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் தொடர்ந்து வரும் வேளையில் தி*மலரின் தேசிய பற்று சற்று தூக்கலாகவே உள்ளது. இதன் காரணமாக பொதுப் புத்தி வாசகர்களை உருவாக்கி டீக்கடை பெஞ்சுகளில் தீவிரவாதிகளை கண்டிக்கும் தொடர் கூட்டங்களுக்கு தேவையான பணிவிடைகளை தினமலர் செய்துவருகிறது.

கடலூர் அருகே தண்டவாளத் தகர்ப்பில் இராஜபக்சே வருகைக்கு எதிரான துண்டு அறிவிப்புகள் கிடந்ததாம். இதைவைத்து 'விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?' என்ற கேள்விகளுடன் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர்.

* குண்டு வெடித்த இடத்தில் தி*மலர் நாளிதழ்களின் வாசகர் கடிதப் பகுதிகள் கிடந்தால் தி*மலர் தான் குண்டு வைத்தது என்று சொல்லிவிட முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'இராஜிவ் காந்தி வாழ்க !' என்ற துண்டு அறிவிப்பு கிடந்தால், தமிழ்நாட்டின் எதோ ஒரு காங்கிரசு கோஷ்டி சார்பில் குண்டு வைக்கப்பட்டது என்று கொள்ள முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'புரட்சி தலைவி வாழ்க' என்ற அறிவிப்பு கிடந்தால் அதிமுக காரன் குண்டு வைத்தான் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'நமீதா வாழ்க, குஷ்பு வாழ்க' என்று எழுதி இருந்தால் கவர்ச்சி சினிமா ரசிகர் எவரோ குண்டு வைத்தார் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'தாமபிராஸ் வாழ்க' என்று எழுதி இருந்தால் தமிழ்நாடு வாழ் பார்பனர்கள் தான் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா ?

குண்டு வெடிப்பிற்கும் கிடைக்கும் அறிவிப்புகளுக்கும் தொடர்பு இருக்கும் என்பது போலவே அவை திசை திருப்பும் நோக்கில் கூட செய்யப்பட்டிருக்கலாம் என்று இவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை. சதிச் செயல் என்று ஒரு செயல் உருவாகும் போது சுய விளம்பரத்திற்காக மட்டும் தான் இவற்றையெல்லாம் செய்வார்களா என்ன ? வேறொரு அமைப்பை சிக்க வைப்பதற்கும் சதிச் செயல்கள் நடைபெறும் என்பதை மலேக்கான் நிகழ்வுகள் சுட்டிக் காட்டிய பிறகும் இவர்களின் பார்வைகள் கோணல் பார்வையாக இருப்பதன் காரணம் என்ன ?

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியான பிறகு,
முள்ளி வாய்கால் படுகொலை தொடர்வது தெரிந்த பிறகு
இராஜ பக்சே மகிழ்ச்சியுடன் போர் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க திருப்பதி வந்த பிறகு
கடந்த ஓராண்டுகளாகவே இலங்கையிலும் எந்த ஒரு தண்டவாளத்திலும் வெடிக்காத குண்டு
இராஜபக்சே டெல்லி வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டும் தான் வெடிக்குமா என்ன ?

ஊகமாக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஊடகம் இருக்கிறதே என்று எழுதலாம் என்றால் என்னால் கூட தண்டவாளத் தகர்ப்பில் தினமலருக்கு பங்கு இருக்கிறது என்று எழுத முடியும் அல்லவா ?

புலி என்பதாக ஈழ ஆதரவாளர்களையும், ஈழப் பொதுமக்களையும் முற்றிலும் ஒழிக்காமல் இவனுங்க அடங்கமாட்டானுங்கப் போல. அந்த அளவுக்கு தமிழர்கள் மீது கசப்புடன் இருக்கும் இவர்கள் நடத்துவதோ தமிழ் நாளிதழ், அதையும் காசு கொடுத்து வாங்கிப் படித்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறான் தமிழன்.

12 ஜூன், 2010

பார்வதி அம்மா, டக்ளஸ், இந்திய சட்டம் !

80 வயதை கடந்த மூதாட்டி சிகிச்சைக்கு விசா அனுமதி பெற்றும் அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினர் மத்திய அரசின் கூலிப் படைகள். அதே மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவனந்ததிற்கு விசா கொடுத்ததுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்துள்ளனர். காரணம் டக்ளசால் கொல்லப்பட்டவன் இராஜிவ் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழன் பொதுமக்களில் ஒருவன்.

மத்திய அரசின் அடிவருடி ஆட்சி நடத்தும் திமுக அரசின் தலைவர் கருணாநிதி பார்வதி அம்மா திருப்பி அனுப்பப்பட்ட விவரம் செய்திதாள்களைப் பார்த்து அறிந்து கொண்டதாக வெட்கம் இல்லாமல் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதது என்பது போல் ஒப்புதல் வாக்குமூலமாக அதனை தெரிவித்தது எரிச்சலை ஏற்படுத்தியது, அதற்கு பதிலாக 'சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம்' என்று புளுகி இருந்தாலும் அடடே ன்னு உச் கொட்டி இருக்கலாம்.

டக்களஸ் இந்தியா வந்ததும் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியால் டக்ளசை கைது செய்ய முடியுமா என்ற அலோசனையில் டெல்லி காவல்துறையிடம் பேசி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். சிவப்பு கம்பள மரியாதை செய்யப்பட்டவரை கைது செய்ய மத்திய அரசும், மன்மோகனும் அல்லது அவரின் சாட்டை சோனியாவும் கேணையா ?

அழும் குழந்தைக்கு வாழைப்பழம் காட்டுவதைப் போல இவர்கள் காட்டுவது தமிழர்களை முற்றிலும் உணர்ச்சியற்றவன் என்று குத்திக்காட்டும் ஒரு உத்தி....... இதே போல் போனால் நாளைக்கு பாகிஸ்தான் பிரதமருடன் ஒட்டிக் கொண்டு வர தாவூத் இப்ராஹிமுக்கு கூட வாய்ப்பு இருக்கும் போல.

இவர்களெல்லாம் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறார்களாம்.......தமிழர்கள், இந்தியர்களும் ஐயோ பாவம் என்று வெளிநாட்டுக்காரன் சிரிப்பான். போபால் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்பவிட்டதாக குற்றச் சாட்டுகள் காங்கிரசார் மீது கூறப்படுகிறது, இதை எதிர்கொள்ளத் தயங்கும் காங்கிரசு வீரப்ப மொய்ழி வழியாக 'ஓய்வு பெற்றவர்கள் வாயையும் பின்னாடியும் மூடிக் கொண்டு இருப்பது நல்லது, எதையாவது பேசி விவகாரம் ஆக்கவேண்டாம்...' என்று அவர்களை பொத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

டக்ளசுக்கு சிவப்பு கம்பளம் விரித்தவர்கள் பார்வது அம்மாளுக்கு நிபந்தனைகளை தளர்த்தி இருக்கிறார்களாம், நல்ல கூத்து, அவர் இங்கு வருவதாக இருந்தால் அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாதாம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் மனிதர்கள் இல்லையா ? எல்லோரும் எப்போது அரசியல் முகமூடிகளை இவர்களைப் போலவே அணிந்து கொண்டு இருக்கிறார்களா ?

இலங்கை இராஜபக்சேவும், டக்ளசும் டெல்லியில் விருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே இராமாஷ்வரம் பகுதியில் மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு, மீனவர்கள் கடத்தல் என்ற செய்திகள் வருகின்றன. எவன் எப்படிப் போனால் என்ன சோனியா வாழ்க, கருணாநிதி வாழ்க என்று கோசம் போடுபவர்களிலும் தமிழர்கள் உள்ளார்கள் என்பதைவிட இது வெட்கப்பட வேண்டிய விசயமாக தெரியவில்லை. புல்லுரிவிகளை கூடவே வைத்திருக்கும் நாம உணர்ச்சிவசப்படுவதைவிட இது விசயத்தில் வெட்கப்படவேண்டியதே முதன்மையாக உள்ளது.

3 ஏப்ரல், 2008

திங்க சோறு கிடைக்குமா ?

சிங்கப்பூர் வட்டாரத்தில் தற்போதைய பேச்சு 'அரிசி', 'அரிசி', 'அரிசி'. பொதுவாக ஆசியநாடுகளில் விரும்பி உண்ணப்படும் உணவு தானியங்களில் அரிசிக்கே முதலிடம். சிங்கைக்கு தருவிக்கப்படும் மொத்த அரிசி அளவில் 60 விழுக்காடு தாய்லாந்தில் இருந்தும் 30 விழுக்காடு இந்தியாவில் இருந்தும், மீதம் வியட்நாமிலிருந்து கிடைக்கிறது.

இந்த ஆண்டு அறுவடைகாலங்களில் வயல்வெளிகள் வெள்ளக்காடாக ஆனாதில் அரிசி உற்பத்தி பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிலைமை இந்தியாவில் மட்டுமல்ல மற்ற ஏசிய நாடுகளிலும் இதே நிலைமைதான். இந்தியாவில் உள்நாட்டுத் தேவைக்கு(ம்) தட்டுப்பாடு ஆகிவிடும் என்பதால் இந்திய அரசு அரிசி ஏற்றுமதியை தடை விதித்திருக்கிறது. இதனால் அதன் பாதிப்பு சிங்கை வரை எதிரொலிக்கிறது.

அரிசிவிலை கிடுகிடுவென உயர்ந்ததாக்ச் சொல்கிறார்கள், 25 கிலோ எடையுள்ள பொன்னி அரிசி இந்தியாவில் இருந்து வாங்குவதற்கு 14 வெள்ளிகள் வரை ஆனதாம், தற்பொழுது 32 வெள்ளி வரை உயர்ந்ததாகச் சொல்கிறார்கள், நம் இந்தியர்கள் பொன்னி அரிசி தவிர வேறு எதுவும் வாங்க மாட்டார்கள். தாய் லாந்து அரிசி சோற்றில் இனிப்பு அதிகமாக இருக்கும் அதுதவிர ஒருவித மணம் (ஜாஸ்மின் ப்ராக்ரெண்ட்) இருக்கும், நான்கு உருண்டைகளுக்கு மேல் உள்ளே இறங்காது. பொன்னி அரிசி இந்தியாவில் இருந்து மட்டுமே வந்து கொண்டிருந்தது, தடை செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொன்னி அரிசி தட்டுப்பாடு இருக்கும் என்கிறார்கள், கூடவே பயனர்கள் பொன்னி அரிசிக்கு மாற்றாக வேறு ரக அரிசிகளை பயன்படுத்த பழகிக் கொள்ளச் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டு விலைவாசி உயர்வு விழுக்காட்டு அளவில் உயர்ந்துள்ளது, தற்பொழுது அரிசியும் உயருவதால், உணவு அங்காடிகளில் உணவின் விற்பனை விலை கூடுதலாகும், ஏற்கனவே இந்த ஆண்டு ஒருமுறை உயர்ந்திருக்கிறது. மீண்டும் உயரும் வாய்ப்புகள் இருப்பதால் வரவு செலவு கணக்கு வைத்து செலவு செய்பவர்கள் அச்சப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

பருவமழை காலம் கடந்து பெய்து வெள்ளக்காடாக மாறி நெற்பயிரை அழித்தது உலக சுற்றுச்சூழல் வெப்பம் அடைந்திருப்பதும், உலக நாடுகளினால் கட்டுப்படுத்த முடியாத மாசுக்களால் குளோபல் வா(ர்)னிங் எனப்படும் உலக சுற்றுச் சூழல் எச்சரிக்கை ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டு அரிசி தேவையை சமாளிப்பதற்கு போதியளவு கையிருப்பு இருப்பதாக சிங்கை அரசாங்கம் சொன்னாலும் அவற்றின் விலை நிர்ணயம் எப்படி இருக்கப் போகிறதென்று தெரியவில்லை. பேரங்காடிகளில் அரிசி விலை உயரவில்லை என்பது தற்போதைக்கு ஆறுதலானது தான். ஆனால் அவை எவ்வளவு நாளைக்கு அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது, அரிசியை மூன்று மாதத்திற்கு மேல் கையிருப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும் உணவுக்காக அரிசியின் தேவை குறித்து அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டும் சுற்றுச் சூழல் பாதிப்பால் அரிசி உற்பத்தி நட்டம் அடைந்தால், அரிசி விலையை எட்டிப்பிடிக்க முடியாது. விவசாயம் கெட்டால் சாப்பிடுவதற்கு ஒன்றும் இருக்காது. உலகமாயமாக்கல் தாரளமயமாக்கல் என்று விரிவடைந்த இந்தியா விவாசாயத்தில் தன்னிறைவை தொலைத்துவிடும் போல் இருக்கிறது. ஏழை எளியோருக்கு அரிசி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகிவிடும்.

சாப்ட்வேர் வல்லுனர்களுக்கு வேண்டுமானால் எந்த விலை கொடுத்தேனும் அர்சி வாங்கிக் கொள்ள முடியும் ? மற்றவர்களுக்கு. சாப்ட் வேர்தான் அதாவது கிழங்கு வகைகள், தற்பொழுது தாய்லாந்தில் அரிசிக்கு மாற்றாக உருளைக் கிழங்கை உண்ணச் சொல்லி அரசாங்கம் கேட்டுக் கொள்கிறதாம்.

உணவு பஞ்சமே சமூக விரோத செயல்களுக்கு முதன்மை காரணியாக அமைந்துவிடும்.

இது தொடர்பான செய்திகளைக் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தபோது இறுதியாகச் சொன்னார்கள். நாம் குப்பைத்தொட்டியில் கொட்டி வீணாக்கும் ஒரு அரிசி(யின் அளவு) ஒரு எறும்புக்கு ஒரு நாள் உணவாம். அரிசியை சோறாக்கலாம், சோறாக்காமல் வீணாக்கலாமா, சோறாக்கியும் வீணாக்கலாமா? குப்பையில் கொட்டும் முன்பும், பாதி சாப்பட்டுடன் தட்டில் கைகழுவும் (சினிமாவில் தான் அப்படி காட்டுவாங்க) முன்பு ஒரு நிமிடம் யோசிப்பதற்கு முன்பு, எந்த அளவு நமக்கு போதுமானதோ அந்த அளவை சமைக்கலாம்.ஆக்கிக் கீழே கொட்டுவதை தவிர்ப்பது மறைமுகமாக சேமிப்பு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்