Scientific racism of the late 19th and early 20th centuries divided mankind into three "great races", Caucasoid (white), Mongoloid (yellow) and Negroid (black) in accordance with their own world-view.
The populations of the Indian subcontinent however were problematic to classify under this scheme. They were assumed to be a mixture of an indigenous "Dravidian race", tentatively with an "Australoid" grouping, with an intrusive Aryan race, identified as a sub-race to the Caucasoid race, but some authors also assumed Mongolic admixture, so that India, for the purposes of scientific racism, presented a complicated mixture of all major types.
மேலும் படிக்க
ஆனாலும் மொழிக் குழுக்களின் அடையாளமாக திராவிடர் ஆரியர் என்கிற பகுப்புகள் இருக்கின்றன. அதன் உட்பகுப்பாக மொழி அடையாளங்களே மாநிலங்களாகவும் மாநில மக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தென்னிந்தியர் ஒருவரை முகத்தை வைத்து இவர் இந்த மொழி பேசுபவராக இருக்கும் என்று கணிப்பதும் கடினம் தான். பிரச்சனைகள் அதாவது பிறநாட்டினரின் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு என்கிற போது இந்திய நிலம் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்தார்கள், ஆனால் வெள்ளையர்கள் சென்ற பிறகு ஆளுமை / ஆட்சி அதிகாரம் என்று வரும் போது உண்மையில் இந்தியாவின் பிரச்சனைகள் ஒருமைப்பாடு என்பவை கேள்விக்குறியாகவே ஆகின்றன, காரணம் வட இந்தியர்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஆகுவதும் தென்னிந்தியர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. இந்தியா பகுதிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு தலைவர், மாநிலப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுச் சொல்லக் கூடிய ஒருவர், பெரும்பாலான மாநில மக்கள் ஏற்கக் கூடிய தலைவர்கள் உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லை.
100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட சென்ற தேர்தலும் முந்தைய தேர்தலில் இவர் தான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கத் திணறி தேர்தலை சந்தித்து பின் கூட்டணிகள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரம் பெற்று மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கி பின் தொடர்கிறது. வெங்கையா நாயுடுவையோ பிற தென் மாநில பாஜக பொறுப்பாளர்களையோ பாஜக பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இருப்பதே இல்லை, சந்துல சிந்து என்ற அடிப்படையில் தான் தென்னிந்தியர்களான நரசிம்மராவும், குறைந்த நாட்களே தேவ கவுடாவும் கூட பிரதமர் ஆனார்கள், அப்படி பிரதமர் ஆனவர்களுக்குக் கூட அவர்கள் மாநிலங்கள் தவிர்த்து பெரிய ஆதரவோ, மறுமுறை அவ்வாறு ஆகுவதற்கான வாய்ப்போ கிடைக்கவில்லை.
ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக ஆளும் தேசிய கட்சிகள் புறக்கணிக்கப்பட்டால், அந்த மாநிலத்திற்கு மத்திய அரசில் பங்கு பெற எந்த ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்காது, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அந்தந்த மாநில வளர்ச்சிக்கு உதவும் மத்திய அமைச்சர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. கூட்டணி என்பதால் சில பதவிகள் கிடைக்கிறது அதையும் கூட திமுக உள்ளிட்டவை ஊழல் செய்யதாகக் கூறப்பட்டு கெடுத்துக் கொண்டுள்ளது. இரண்டு அமைச்சர்களின் பதவிகளை பறித்துக் கொண்டார்கள் கேட்டுப் பெற ஒரு துப்பும் இல்லை.
ஸ்பெக்டரம் விவாகரத்தை பத்திரிக்கைகள் தான் ஊதிப் பெருக்குகின்றன, ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற காங்கிரஸ் நீதிமன்ற நெருக்கடியால் சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை செய்துவருகிறது. ஊழலே நடக்கவில்லை என்றால் தற்போது சிறையில் இருக்கும் கல்மாடி, ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் அப்பாவிகள் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே சொல்லிவரலாமே.
எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்று சாதிக்கவே அவர்கள் அவ்வாறு கூறி வந்தார்கள், சில மாதங்களாக அன்னா ஹசாரே கொடுத்துவரும் குடைச்சலாலும், விக்கிலீக் வழங்கியுள்ள ஸ்விஸ் வங்கி கருப்புப்பணப் பட்டியல் வெளி ஆகியுள்ளதால், பிரதமர் சுதந்திர தின உரையில் வெட்கமே இல்லாமல் நாட்டில் ஊழல் பெருகியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார், அதையும் தாங்களே ஒழிக்கப் போவதாகக் கூடச் சொல்லி இருக்கிறார். எங்கள் ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது என்பதை நீங்கள் சொல்லித்தான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம், நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம், நாங்களே நடவெடிக்கை எடுக்கிறோம் என்பதாக வெட்கமே இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறார்கள். சரி அதுவேறு......
அன்னா ஹசாரே யார் ? யாருக்குத் தெரியும் வட இந்திய செய்தி இதழ்கள் அவரை ஊழலை ஒழிக்க வந்த புதிய அவதாரமாகக் காட்டுகின்றன, அவரும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் நாள் தோறும் செய்திகள் வெளியாகின, அன்றைய செய்திக்கு இடம் போக மீதம் உள்ள இடத்தில் தென்னிந்திய செய்தித்தாள்கள் அவற்றை மீள் பதிவு செய்தன, மற்றபடி அன்னா ஹசாரே என்பவர் இந்திய மாநிலங்கள் அனைத்தாலும் அறியப்பட்டவரே இல்லை. அன்னா ஹசாரே என்பவர் நதி நீர் உள்ளிட்ட தென்னிந்திய பிரச்சனைகளுக்கு ஏதேனும் குரல் கொடுத்துள்ளாரா ? தெலுங்கானப் பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா ? இந்தியாவை ஆளும் சக்திகளில் தென்னிந்தியர்களுக்கும் முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஏதேனும் போராடியுள்ளாரா ? மாநில மொழி சார்ந்த உரிமைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்து அனைத்து ,மொழிகளையும் ஆட்சி மொழி ஆக்க குரல் கொடுத்துள்ளாரா ? இந்தநிலையில் தென்னிந்தியர்களால் ஓரளவு அறியப்பட்ட அமிதாப்பச்சன் கட்சித் துவங்கினால் தென்னிந்தியர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்களோ அதைவிடக் மிக குறைவாகத்தான் அன்னா ஹசாரேவுக்கு கிடைக்கும், அதுவும் கூட காங்கிரஸுக்கு மாற்றான தேசியக் கட்சியான பாஜகவின் ஆதரவாளர்களால் தான் கிடைக்கிறது.
அன்னா ஹசாரே தேசிய புதிய அவதாரமாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கி இருந்தாலும் அவர் அதன் பிறகு தென்னிந்திய மாநிலங்கள் எதிலும் கால் வைத்தது போலும் தெரியவில்லை, பிறகு எப்படி அவரை ஒரு பொதுத்தலைவர் மற்றும் சமூகப் போராளியாக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு கொடுப்பார்கள். மேலும் காங்கிரஸ் ஆட்சிகள் துவங்கி போஃபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நீர்க்கடிக்கப்பட்ட பிறகு ஊழலுக்கு எதிரான கூக்குரல்கள் யாவும் பயனற்றதாகவே போய்விடும் நம்பிக்கையின்மையும் மக்களிடையே இருக்கிறது.
இந்தியை தேசிய மொழியாக திணிப்பதையும், வட இந்தியர் ஆதிக்கங்களைக் குறைத்து, ஆட்சி அதிகாரம், மாநில மொழிக்கு அங்கீகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தென்னிந்தியர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரை எந்த ஒரு வட இந்தியரையும் பொதுத் தலைவராக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொள்வது கடினமே. ஆனால் தலைமைத்துவம் சாராத கார்கில் ஊடுறுவல் உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகளில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டினர் நிறையவே ஆதரவு கொடுத்துவருகின்றனர்.
மேற்கண்ட கட்டுரை வெளியான பின்பு ....
கூகுள் பஸ்ஸில் ஒருவர் ஆவேசமாகக் விமர்சித்துக் கேட்டார்,
அரைகுறை அறைவேக்காட்டு பதிவு
சுத்த ஹம்பக். ஊழல் பொதுப் பிரச்சனை இல்லையா ? ஊழலை ஒழிக்க குரல் கொடுக்க தகுதி வேண்டுமா ? அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமா ?
எதுவுமே தவறு இல்லை. ஊழலை ஒழிக்கக் குரல் கொடுக்கத் தகுதி தேவை இல்லை, திகார் புகழ் ராசா கூட ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கலாம், சாராய உடையார் கூட மது ஒழிப்புக்கு போராடலாம், இவையும் பொதுப் பிரச்சனை தானே, அவர்களும் பொது மக்கள் தானே..... அன்னஹசரே நல்லவரு வல்லவரு அவர் (மதவாதி) மோடியையோ, ஊழல் அமைச்சர்கள், அலுவர்களின் தலைவன் மன்மோகன் சிங்கையோ தனிப்பட்ட முறையில் புகழ்ந்திருந்தால் என்ன தவறு ? :)
ஊழலுக்கு எதிராக போராட தகுதி இல்லை சார்.


