குசும்பன் இந்த ஆண்டு தலை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிறான். பிள்ளையார் சிலைக் கிடைக்கவில்லை என்றால் அவனே உட்கார்ந்துடுவான். இப்ப பிரச்சனை குசும்பனுக்கு கொழுக்கட்டை ரூபத்துல வந்து நிக்குது, திருமதி குசும்பனுக்கு கொழுக்கட்டை செய்யத் தெரியாதாம்...'யோவ் நீ ஊரெல்லாம் ப்ரண்ட்ஸ் வச்சிருக்கியே....கொழுக்கடடை செய்றது எப்படின்னு கேட்டு நீ தான் செய்யனும் ' என்று சொல்லி பூரிக்கட்டையை தூக்கி இருக்கு தங்க்ஸ். பூரிக்கட்டை இல்லாமலேயே கொழுக்கட்டை செய்ய முடியும் என்று ஒருவாறு சமாளித்து பூரிக்கட்டையை வாங்கி வச்சிட்டு, இங்கே சாட்டில் வந்து ஆலோசனை கேட்கிறான்.
கொழுக்கட்டை செய்வது எப்படி ?
அதுக்கும் முன்னால ஒரு பாட்டிக் கால கதையைப் பார்போம்.குசும்பனைப் போலவே ஒருவன், அதனால் குசும்பன் என்றே கதையில் பெயர் வைத்துக் கொள்வோம்.
குசும்பன் ஒருமுறை மாமியார் வீட்டுக்கு சென்ற போது கொழுக்கட்டை செய்து போட்டார்களாம், நல்லா சுவையாக இருந்ததும், பெயரைக் கேட்டு 'கொழுக்கட்டை' என ஞாபகம் வைத்திருந்து மற்றொருநாள் திருமதி குசும்பனைச் செய்யச் சொல்லவேண்டும் என்பதற்காக....திரும்பும் வழியெங்கும் 'கொழுக்கட்டை' ....... 'கொழுக்கட்டை' என்று சொல்லிக் கொண்டே வ்ந்தானாம். வழியில் குறுக்கே ஒரு கால்வாய் ஓடியது, கால்வாயில் இறங்கிச் செல்லாமல் ஒரே தாண்டு தாண்ட வேண்டுமென்பதற்காக...'அத்தேரிபச்சா.....' என்று சொல்லியபடி தாண்டி இருக்கிறான். அத்தோடு கொழுக்கட்டை என்று சொல்லி வந்தது மறந்துவிட்டது. 'அத்தேரிபச்சா.... அத்தேரிபச்சா' என்று சொல்லிக் கொண்டே வீடு வந்தவுடனே, மனைவியிடம் சொல்லி 'அத்ததேரிபச்சா...' செய்து கொடு என்றிருக்கிறான்.
'இது என்ன புதுமாதிரி பலகாரம், நான் கேள்விப்பட்டதே இல்லையே' என திருமதி குசும்பன் மடக்கவும், கோபமாகி, 'உங்க அம்மாவிட்டில் செய்தாங்க, உனக்கு தெரியும்...அத்தேரிபச்சாவை இப்பவே செய்து கொடு...' என்று சொல்லி டார்சர் செய்து, திரும்ப திரும்ப 'அத்தேரிபச்சா செய்' என்று நச்சரித்தானாம். பொறுக்கமாட்டாத மனைவி அப்பளகுழவியை எடுத்து நைய புடைக்க, குசும்பனின் அளறல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் கூடி இருக்கிறார்கள், அதில் ஒரு பாட்டி, 'ஏண்டி...இந்த அடி அடிச்சிருக்கே...ஒடெம்பெல்லாம் கொழுக்கட்டையாக வீங்கி இருக்கு' என்று சொன்னவுடன் 'கொழுக்கட்டை' என்றதைக் கேட்டு வலியை மறந்து குசும்பன் பிரகாசமாகி....உற்சாகத்தில் துள்ளினானாம். அத்தேரிபச்சா இல்லை, கொழுக்கட்டை செய்து கொடு என்றிருக்கிறான். அப்பறம் தான் மனைவிக்கு விசயமே புரி்ந்து கொழுக்கட்டை செய்து போட்டாளாம்.
********
உண்மையிலேயே குசும்பனுக்கு கொழுக்கட்டை செய்வது பற்றிய குறிப்புக் கொடுக்க வேண்டும் என்று வலையில் தேடினேன். ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கிறது.
அவற்றில் பிடித்ததை படித்து கொழுக்கட்டை செய்து விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடவேண்டும். குசும்பனைப் போல் கொழுக்கட்டை செய்ய நிர்பந்தம் உள்ளவர்களும் முயன்று பார்க்கலாம்
பிடிகொழுக்கட்டை :
தேவையான பொருட்கள்
அரிசி - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய் - 5
தேங்காய் - அரை முடி
செய்முறை
அரிசி மாவு :
பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அலசி நிழலில் உலர்த்தவும்.
அரிசி நன்கு காய்ந்ததும் மாவாக அரைத்துக் கொள்ளவும். வெளியில் கடையில் கொடுத்தும் அரைத்துக் கொள்ளலாம்.
மாவை சுத்தமான கடாயில் கொட்டி நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். மாவில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வறுப்பதற்கு பதிலாக பலரும் ஆவி கட்டுவது உண்டு. அதாவது இட்லி குண்டானில் வெள்ளைத் துணியைப் போட்டு அதில் மாவைக் கொட்டி மூடி விட வேண்டும்.
5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கினால் மாவு நன்கு வெந்து இருக்கும். ஆனால் மாவு உதிரியாகத்தான் இருக்க வேண்டும்.
தற்போது வெல்லத்தை பொடியாக இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு பாகு போல காய்ச்சவும்.
அதற்குள் தேங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை சர்க்கரை வைத்து பொடித்துக் கொள்ளவும். இரண்டையும் மாவில் கொட்டிக் கிளறிவிடவும்.
வெல்லம் நன்கு கொதித்ததும் அதனை சிறிது சிறிதாக மாவில் ஊற்றிக் கிளறவும். மாவைக் கிளறுவதற்கு மத்தின் காம்பு அல்லது கரண்டியின் கைப்பிடிப் பாகத்தைப் பயன்படுத்தலாம்.
மாவு எந்த இடத்திலும் கட்டிப்போய் விடக் கூடாது. தண்ணீரும் அதிகமாகிவிடக் கூடாது. சப்பாத்திக்கு பிசைவது போல் வெல்லம் தண்ணீரை ஊற்றி பிசைந்து அதனை கொழுக்கட்டைக்கு பிடித்து வைத்துக் கொள்ளவும்.
தற்போது இட்லி குண்டானை தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு மட்டும் வைத்து அடுப்பில் மூடி வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து 10 கொழுக்கட்டைகளை அடுக்கி மூடி விடவும். சிறிது நேரம் கழித்து 15 கொழுக்கட்டைகளை அடுக்கவும். இப்படியே சிறிது சிறிதாக அடுக்கி 15 நிமிடம் வேக விடவும்.
இட்லி குண்டானை இறக்கி கொழுக்கட்டைகள் உடையாமல் எடுத்துப் பரிமாறவும்.
பின்பற்றுபவர்கள்
கலாய்த்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலாய்த்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1 செப்டம்பர், 2008
26 ஆகஸ்ட், 2008
வடுவூர் குமார் அப்பாவியா ?
வடுவூர் குமார் ஆன்மிக பதிவர் மற்றும் கட்டுமானத்துறை பற்றி பதிவு எழுதுபவர் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் குறைவாக பேசுவார்.
இவர் அடிக்கும் லூட்டி இப்பொழுதுதான் தெரிந்தது, கூகுள் ஸ்டேட்ஸ் மெசேஜ் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கமலஹாசன் ரசிகராக இருப்பார் போல...நீங்களே பாருங்க மக்கள்ஸ்...இவர் ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வாராம் !
எதுக்கா ?

'கொஞ்ச' நேரமாகுமாம். மெசேஜ் யாருக்குன்னு தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் அண்ணியிடம் சொல்லி குமார் அண்ணனை கண்காணிக்கச் சொல்வேன். அண்ணி சீதையை போல் அண்ணனையே நினைத்துக் கொண்டிருக்க அண்ணன் யாருக்கோ மெசேஜ் விட்டுக் கொண்டு இருக்கிறார்.
அந்த பக்கம் சாட்டில் என்ன மெசேஜாக இருக்கும் ? 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா ?' ன்னு தானே
வடுவூர் அண்ணனை கலாய்பவர்கள் கலாய்கலாம், பின்னூட்ட பெட்டி மாடுரேசன் இன்றி திறந்தே இருக்கிறது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு !
:)
இவர் அடிக்கும் லூட்டி இப்பொழுதுதான் தெரிந்தது, கூகுள் ஸ்டேட்ஸ் மெசேஜ் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கமலஹாசன் ரசிகராக இருப்பார் போல...நீங்களே பாருங்க மக்கள்ஸ்...இவர் ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வாராம் !
எதுக்கா ?
'கொஞ்ச' நேரமாகுமாம். மெசேஜ் யாருக்குன்னு தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் அண்ணியிடம் சொல்லி குமார் அண்ணனை கண்காணிக்கச் சொல்வேன். அண்ணி சீதையை போல் அண்ணனையே நினைத்துக் கொண்டிருக்க அண்ணன் யாருக்கோ மெசேஜ் விட்டுக் கொண்டு இருக்கிறார்.
அந்த பக்கம் சாட்டில் என்ன மெசேஜாக இருக்கும் ? 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா ?' ன்னு தானே
வடுவூர் அண்ணனை கலாய்பவர்கள் கலாய்கலாம், பின்னூட்ட பெட்டி மாடுரேசன் இன்றி திறந்தே இருக்கிறது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு !
:)
31 ஜனவரி, 2007
கை ஒடிஞ்சிடுச்சி ...
தமிழ்மணம் திரட்டியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறினால் ... நம்ம பதிவர் ஒருவர் "தமிழ்மணம் பார்க்காமல் ரொம்பவே கையொடிந்தது மாதிரி இருக்கு " ன்னு சொன்னாங்க ... யாருன்னு படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ! :))

இன்னிக்கு பதிவு போட ஒரு மேட்டர் சிக்குச்சு !!!
:)))))))
இன்னிக்கு பதிவு போட ஒரு மேட்டர் சிக்குச்சு !!!
:)))))))
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்