பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.

காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.




தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

16 மார்ச், 2014

மோடி அலையா ? அலையின் நுரையா ?

தற்பொழுது இந்தியாவின் பொதுப் பிரச்சனை என்றால் ஊழல் தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை, ஊழலே இமாலயமாக எழுந்து நிற்பதால் மற்ற பிரச்சனைகள் பெரிதாகப் பேசப்படுவதும் இல்லை. ஊழல் பிரச்சனைகள் அடிக்கடி மறக்கடிக்கும்படி ஆட்சியாளர்களுக்கு பாலியல் வண்புணர்வு நிகழ்வுகள், குண்டுவெடிப்புகள் அல்லது வழிபாட்டு தலங்களில் பெரும் விபத்து, இயற்கை சீற்றத்தில் பலர் கொல்லப்படுதல் போன்ற தகவல்கள் வரும் பொழுது ஊழல் பிரச்சனைகள் தற்காலிகமாக மறக்கப்படும், 

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் உள்ளடக்கிய இந்தியவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர், பொதுவான கட்சி என்று தம்மை முன்னிலைபடுத்தி வளர்ந்து செயல்படும் அளவுக்கு ஒரு தேசிய கட்சி வருங்காலத்தில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தம் மாநில வளர்ச்சி அதில் உள்ள பிரச்சனைகள் தாண்டி, தேச வளர்ச்சி என்ற அளவுகோலில் வாக்களிப்பதற்கான வாய்புகள் குறைவு, மாநில கட்சிகள் பலம் பொருந்த்திய எந்த ஒரு மாநிலத்திலும் (தற்பொழுது இருக்கும்) தேசிய கட்சிகள் பெரிதாக வென்றுவிட முடியாது. இது பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்று உணர்ந்து வாக்களிப்பவர்கள் குறைவே.

உதாரணத்திற்கு ஆளும் தேசியகட்சி, (எதோ ஒரு மாநிலத்தில்) ஆளும் மாநில கட்சி ஆகிய இரண்டுமே ஊழல் கட்சி என்று பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிந்தால் வாக்குகள் அனைத்துமே மாநிலத்தில் அடுத்து பலம் பொருந்திய மற்ற கட்சிக்கு தான் வாக்குகள் சேரும், மற்றபடி அந்த கட்சி பிரதம வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் மக்கள் வாக்களிப்பார்கள், அதைத்தான் எதிர்ப்பு வாக்குகள் என்கிறார்கள்.

மோடி அலை தமிழகத்தில் பலமாக வீசுவதாக தமிழக முதல்வர் நம்பி இருந்தால் பாஜகவுட கூட்டு சேர்ந்து  பாஜகவிற்கு 2 - 5  இடம் ஒதுக்கிவிட்டு 38 - 35 இடங்களிலும் அதிமுகவே நின்றிருக்கும்,  ஏனெனில் பாஜகவினர் தங்களுக்கு அதுவே மிகுதி என்றும் தேர்தலுக்கு பின்னர் ஆதரவும் தொடரலாம் என்று நம்பி சேருவார்கள். தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பே மிகுதியாக உள்ளது, அவை மோடிக்கு ஆதரவாகும் என்று நம்புவதற்கும் இல்லை, ஒருவேளை ஜெ மோசமாக ஆட்சி நடத்தி வந்திருந்தால் ஜெ விற்கு எதிரான மனநிலையில் பலம் பொருந்திய மாற்று கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். 

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேசிய கட்சிகள் காங் மற்றும் பாஜகவே பலம் பொருந்திய கட்சியாக உள்ளன, அங்கெல்லாம் காங்கிரசின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக அமையலாம்,  தமிழ்நாட்டில் அவ்வாறு நடப்பதற்கு வாய்புகள் குறைவு, அதனால் தான் பாஜக முடிந்தவரை கூட்டணி பலத்தைக் கூட்டி 5 - 10 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பைக் கூட்டிக் கொள்ளலாம் என்று கூட்டணி அமைக்க தமிழக உதிரிகட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள விஜய்காந்து தவிர்த்து மற்றவர்களுக்கு பெரிய ஆதயம் இருப்பது போல் தெரியவில்லை, என்ன தான் கூட்டணி உடன்படிக்கை என்றாலும் பாமக ஆதரவாளர்கள் யாரும் தேமுதிகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தேமுதிகவினரும் பாமகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தமிழகத்தில் வடமாநிலத்தில் மட்டுமே இந்த இரண்டு கட்சிகளுக்கும் கனிசமான வாக்களர்கள் உள்ளனர். தென் தமிழகத்தில் இவர்களுக்கு வாக்கு வங்கிகளே கிடையாது. 

இன்னும் திராவிடம் பேசும் வைகோவிற்கு தமிழக பாஜக தொண்டர்கள் வாக்களிப்பார்கள் என்பதும் ஐயமே. வாக்கு பதிவு முடிந்த பிறகு, மொத்த வாக்குகளில்  பாஜக கூட்டணி 15 விழுக்காடு பெற்றிருந்தால்  கூட, என்னுடன் சேர்ந்ததால் பாஜக கூட்டணிக்கு இவ்வளவு வாக்குகளாவது கிடைத்துள்ளது என்று அதனை தம் வாக்கு வங்கியாக விஜயகாந்து அறிவித்துக் கொள்வார். (ஒருவேளை) தோல்விக்கு காரணம் கூட்டணி சேர்ந்த கட்சிகள் எங்களுக்கு ஓட்டுப் போடாமல் ஏமாற்றிவிட்டனர் என்று சொல்லிவிடுவார், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு கிடைத்த வாக்குகளின் விழுக்காட்டு அளவை சாதமாக்கிக் கொண்டு செயல்படுவார். பஜாக கூட்டணிக்கு தேமுதிக சேர்ந்துள்ளதால் பாஜகவிற்கோ, தேமுதிகவிற்கோ எந்த இழப்பும் இல்லை, பாஜவிற்கு பலனும் இருப்பது போல் தெரியவில்லை.

இந்த தேர்தல் தமிழகத்தைப் பொருத்த அளவில் மும்முனை போட்டி மட்டுமே, ஒன்று அதிமுக, அடுத்து திமுக மூன்றாவது பாஜக கூட்டணி. மீண்டும் திமுகவின் மீது நம்பிக்கை வைக்கும் படி தமிழகத்தில் திமுக எந்த அதியத்தையும் செய்து காட்டாததால் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்புகள் மிகுதி. எப்போதும் பாஜக ஆதரவு மனப்பாண்மை உள்ள 'மேட்டுக்குடிகள்' பாஜக நேரடியாக நிற்கும் தொகுதிகளில் பாஜகவிற்கும் மற்ற தொகுதிகளில் அதிமுகவிற்கும் வாக்கு அளிப்பார்கள். அவர்களின் வாக்கு எண்ணிக்கை குறைவு என்றாலும் வெற்றி தோல்வி சில இடங்களில் சில ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் மாறிவிடுகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும், மோடி அலை என்று காட்டுவதால் அதிமுக வாக்குக்கள் குறையும் என்று நான் நம்பவில்லை.


ஊழல் தேசிய பிரச்சனை என்று உருவாகி தமிழக்த்திலும் நுழைந்துள்ள ஆம் ஆத்மிக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பமுடியவில்லை. தமிழகம் ஒருவேளை ஊழல் மலிந்த மாநிலமாக உருவானால் ஆம் ஆத்மி வளரலாம். அந்த ஊழல் மலிந்த நிலையை தமிழகம் தொட தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள். மோடி அலை என்று தமிழகத்திலும் கிளப்பிவிடப்படும் மாயை தமிழகத்தில் தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .

பிகு : எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் (எழுதியதை திரும்பவும் படித்துப் பார்க்கவில்லை)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்