பின்பற்றுபவர்கள்

26 செப்டம்பர், 2012

பூ மிதிக்கலாம் வாங்க !


பூ மிதிக்க ஆசைப்பட்டு போன கவுண்டமணி,  நல்லா அடிவாங்கிக் கொண்டே கொஞ்சாதீங்க கொஞ்சாதிங்க என்று சொல்லும் ஜனராஜ் கேரக்டர் ஞாபகம் தான் வருது அண்ணன் சுபி எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்களுக்கு தடித்த தோலுடா ன்னு நாம மார்க்க அறிஞர்களைப் பார்த்து தான் தெரிஞ்சு கொள்ளனும், மதங்களும் மார்க்கங்களும் எதை எதையெல்லாம் சொல்லிக் கொடுக்குதோ இல்லையோ தடித்தத் தோலை ஆடையாகக் கொடுக்கிறது, அது அல்லேலோயா கோஷ்டியாக இருக்கட்டும், இந்துத்துவா குருப்பாக இருக்கட்டும், நம்ம மார்க அறிஞ்ஞர்களாக இருக்கட்டும் சொல்லி வச்சது போல் அவங்க அவங்க அளவுக்கு தோலாடை அணிந்து கொண்டு தான் பொது இடத்தில் வந்து "கருத்து" சொல்கிறார்கள். நமக்கு மார்க அறிஞ்ஞர்களுக்கு மார்க்கு போடுவது வேலை இல்லை என்றாலும் மார்க்க அறிஞ்ஞர்களாக ஓடிவந்து தமக்கு மார்க்கு போடுங்க என்று முதுகை காட்டி வரத்தான் செய்கிறார்கள்.  ஏற்கனவே நிறைய பேர் நிறைய மார்க்கு போட்டுவிட்டார்களே என்றாலும் நாம யோசிச்சு மார்க் போடத்தான் வேண்டி இருக்கு காரணம் மேலே சொன்னவை தான்.

*****

கற்பழிப்பு என்று சொல்வது பாலியல் வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுபடி நாம் பன்னெடுங்காலமாக அவ்வாறு சொல்லக் கூடாது எழுதிவருகிறோம், தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை, அதாவது கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்கிற பொருள் தவிர்த்து வெறெதும் இல்லை, எனவே பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பெண் ஒருத்தியை ஒழுக்கம் கெட்டவள் அல்லது அவளுடைய ஒழுக்கம் அழிக்கப்பட்டது என்ற பொருள் தரும் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவது காட்டுமிராண்டி தனம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வதில் யாதொரு தவறும் இல்லை, கற்பு என்ற சொல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் பெண்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது மணவிலக்கு பெற்ற பெண் இரண்டாவது கணவருடன் வாழ்க்கை நடத்துவதை இரண்டாம் கற்பு பெற்றவள் அல்லது கற்பு மாற்றம் செய்து கொண்டவள் என்று சொன்னால் அது எப்படி பொருந்தாதோ, அபத்தமானதோ அது போன்றதே தானாக எந்த ஒரு ஒழுக்கக் கேட்டையும் செய்துவிடாது பாலியல் வேட்கை வெறியால் சிதைக்கப்பட்ட பெண்ணை கற்பிழந்தவள், கற்பழிக்கப்பட்டவள் என்று சொல்லுவதும் ஆகும். இது போன்ற முறையற்ற, பொருள் தராத, திரிக்கப்படக் கூடிய வகையில் பெண்களை இழிவுப் படுத்தும் சொல் தான் "கற்பு" என்பதால் பெரியார் அதனைப் பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை அரிசனங்கள் என்று காந்தி சொன்னபோது கடுமையாக எதிர்த்தவரும் பெரியார் தான்,  ஹரி ஜனங்கள் அதாவது மகாவிஷ்ணுவின் மக்கள் என்ற பொருளில் தாழ்த்தப்பட்டவர்களை அழைக்கலாம் என்கிற காந்திஜியின் பரிந்துரை தாழ்த்தப்பட்டவர்களை இந்துமத சாக்கடைக்குள்ளே அடைத்து அதை அள்ளச் சொல்லும் பார்ப்பனிய வாதிகளுக்கு தான் சாதமாக இருக்கும் எனவே ஹரிஜன் என்று தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினார் பெரியார்,  தாழ்த்தப்பட்டவர்களை வெறும் சொற்களால் "வள்ளல் வாரிசுகள்" என்று அழைப்பதினால் மட்டுமே அவர்களின் பொருளாதாரா நிலை மாறிவிட்டதாக நாம் கூறிக் கொள்ள முடியுமா ? எனவே ஹரிஜன் என்று சொல்வது தாழ்த்தப்பட்டவர்களை மேலும் இழிவிலேயே வைத்திருக்கும் என்பதால் ஹரிஜன் என்று சொல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது மாறாக தலித் என்ற சொல்வது அவர்களைக் குறிக்கும் பொது அடையாளச் சொல்லாக இந்தியாவெங்கிலும் வழக்கில் உள்ளது, தமிழகத்தில் மு.கவின் பரிந்துரைப்படி அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை, "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று தமிழில் சொல்லிவருகிறோம்.

அண்ணன் சுவனப்பிரியன் அரிசனத் தெரு அவலம் என்ற பெயரில் 'எங்கள் ஊருக்கு பக்கத்தில் அரிசனத் தெரு இருக்கிறது அவர்கள் சுத்தம் தெரியாதவர்கள் தண்டவாளப்பாதையில் திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள், இவர்கள் எங்கள் மதத்தவர்களைப் பார்த்து திருந்தவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார், வவ்வால் போன்றவர்கள் அரிசனம் என்று சொல்லக் கூடாது இழிவு படுத்துவதாகும் என்று சொல்லியும் மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லை. தலித்துகளின் நிலை குறித்து பாலைவன ஊற்றாக கண்ணீர் வடிக்கும் சுவனப்பிரியன் தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் திறந்த "வெளிக்கு" போகிறார்கள், அவர்களுக்கு கழிவறையையும் அவர்களது  கழிவறையை  தூய்மை செய்யவும் ஏன் ஆட்கள் இல்லை ?, தம்பகுதி மக்களின் கழிவறையை யார் துப்புறவு செய்கிறார்கள் ? என்ற கேள்வியெல்லாம் எழவே இல்லை. இவர் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இவரின் தாரைக் கண்ணீரில் கோரைப் பாயை ஊறவைக்கிறார்.

அடுத்து அண்ணாரின் இன்றைய பதிவு "கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக விட்ட கண்ணீர்", ஏனுங்க வர வர உங்கப் பதிவு ஏன் இந்துத்துவ எழில் பதிவு போல் அவலங்களை மட்டும் அதும் இந்தியாவில் நடக்கும் அவலங்களை மட்டும் எடுத்து எழுதுகிறீர்கள், நீங்கள் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்லும் சவுதியில் இவையெல்லாம் நடைபெறுவதே இல்லையா ?" என்ற என் பின்னூட்டத்திற்கு அண்ணன் அளித்துள்ள மறுமொழி

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவின் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ


"சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். 


ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்."


அதாவது அண்ணன் சுபி கற்பழிப்பு  பற்றி சவுதியில் இவர் கேள்விப்பட்டதே இல்லையாம், அங்கு நடைபெறுவதெல்லாம் சில பெண்களிடம் தவறாக நடப்பது மட்டும் தானாம். படிப்பவர்களுக்கு ஏதோ சுவனப்பிரியன் தான் ஒப்புக் கொண்டுள்ளாரே என்று நினைக்கத் தோன்றும், தவறாக நடப்பதெல்லாம் என்றால் என்ன பொருள் ஈவ் டீசிங்கா ? அதாவது சவுதியில் வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வண்புணர்வுக்கு பெயர் "தவறாக நடப்பதாம்"  ஆனால் இந்தியாவில் நடப்பது "கற்பழிப்பாம்",  சவுதியில் உள்ள பாலியல் குற்றவாளிகள் அதை மொபைலில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், அவர்கள் அறிவாளிகள் என்றும் மறைமுகமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அண்ணன் சுபியின் சவுதிய அகராதிபடி சவுதியில் 
கல்லால் எறிந்து கொல்லப்பட்டால் அதன் பெயர் பூ எறிதல், பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக சவுதியில் இன்று நான்கு பெண்கள் மீது பூக்கள் எறிந்தனர்

கழுத்து வெட்டி கொல்லப்பட்டால் அதன் பெயர் மாலை சூடுதல், திருட்டு வழக்கில் இரண்டு சவுதி ஆண்களுக்கு இன்று மாலை சூடப்பட்டது

பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டிருந்தால் அதன் பெயர் தங்கம் உரசுதல் ஏதோ இரக்கப்பட்டு இதற்கு மட்டும் "தவறாக நடத்தல்" என்று சொல்கிறார் போலும் கை வெட்டப்பட்டால் "இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தல்" என்று சொல்லுவாரோ

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அண்ணன் சுவனப்பிரியனுக்கு வாழ்த்து சொல்லுவோம், ஆனால்  'வாழ்த்து' அவருடைய அகராதிபடி இல்லை.

இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்.
:)

************

சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின்  அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.

265 கருத்துகள்:

265 இல் 1 – 200   புதியவை›   புத்தம் புதியவை›
? சொன்னது…

வைகாசி பொறந்தாச்சு ஜனகராஜ் ரேஞ்சுக்கு சுவனபிரியனை உயர்த்திவிட்டீர்கள். http://goo.gl/Pce6p

சவுதியில் பாலியல் வல்லுறவு பற்றி கேள்விபட்டதேயில்லை என ஒட்டக லெக்பீஸை அப்படியே பிரியாணியில் மறைக்கிறார் சுவனபிரியர். சவுதியில் பணி செய்யவோர் மற்றும் ஷியா பெண்களின் மீதான கொடுமைகள் என்பது சாதரண விடயம் என்பது போக அது குறித்து யாரும் புகார் செய்தால் நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுதான் எடுப்பார்கள். இதுதான் வகாபிகள் ஷரியா சட்டத்தை வைத்து நீதியை நிலைநாட்டும் முறை. உதாரணமாக 2007-ல் 7 சுன்னிப் பயல்களால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட ஷியா பிரிவை சேர்ந்த அபலை புகார் செய்த போது சவுதி நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? பொதுவிடத்தில் 200 சவுக்கடியும் 6 மாத சிறைதண்டனையும், அந்த சுன்னிகளுக்கு அல்ல, அந்த பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணுக்கு! வாழ்க சவுதி, வாழ்க ஷரியா! வாழ்க வாகபியிசம்!

மேலும் இதே பெரியார்தான் இசுலாத்திற்கு மாறினால் எல்லாப் பிரச்சனையும் அகலும் என்பது போன்ற தப்பான நம்பிக்கையை-(மூடநம்பிக்கை?) விதைத்தவர் என்பது முரண்பாடே.

{பெரியார் கண்மூடித்தனமாக ஆதரித்த - அந்த மதம் குறித்து ஒருவர் பெரியாரிடம் உரையாடினார். "அம்மதம் குறித்து நீங்கள் முழுமையாக அறிந்திருக்கிறிர்களா? படித்தீர்களா?" என்று கேட்டபோது "எதையும் நான் படிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார். நன்றி:http://goo.gl/KCqlg }

குட்டிபிசாசு சொன்னது…

//இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்//

எல்லாம் வல்ல அல்லா அருளாமலா போய்விடுவார்.

சார்வாகன் சொன்னது…

வண்க்கம் சகோ,
இந்தியாவில் இன்னும் தலித்கள் மீது அடக்குமுறைகள் சட்டத்திற்கு புறம்பாக நடப்பது உண்மைதான். எனினும் அது இபோது வெளிவருகிறது, விமர்சிக்கப் படுகிறது. யாரும் இப்படி நடக்கவே இல்லை என பதிவோ, கடவுள் என்க்கு இப்படி பிறரை எது வேண்டுமானலும் செய்ய அதிகாரம் கொடுத்த‌து என்றோ பதிவிட மாட்டார்கள்.

ஆனால் பாருங்க‌ள் அடிமைப் [வலக்கரம் சொந்தமாக்கப் பட்ட] பெண்கள் திரும‌ண‌ம் ஆன‌வ‌ர்க‌ளாக இருந்தால் கூட‌ எஜ‌மான் பாலுற‌வு கொள்ள‌லாம்.
இத்னை நியாய‌ப் ப‌டுத்துவார்கள்.கண்வனுள்ள பெண்னை மண முடிப்பது என்பது மொழியாக சித்து வேலை அது ஹி ஹி..........

குரான் 4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

http://www.answering-islam.org/Silas/femalecaptives.htm

கேட்டா‌ல் அடிமைமுறை இப்போது இல்லையே,இருந்தால்........!!!


இஸ்லாம்தான் அடிமைமுறையை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக ஒழித்தோம் 610CE ல்[வஹி தொடக்கம்] இருந்து 1962CE வரை[சவுதியில் அடிமைமுறை ஒழிப்பு சட்டம் அமல்] என்று க‌தை விடுவார்க‌ள்.

[http://en.wikipedia.org/wiki/Abolition_of_slavery_timeline]

ந‌ன்றி!!!!


suvanappiriyan சொன்னது…

கோவி கண்ணன்!

நான் எனது நாட்டை இழிவாக நினைத்தால் அது என்னை நானே இழிவாக்கிக் கொள்வதாக அர்த்தம். சவுதியிவிருந்து ஊருக்கு செல்லும் போது அந்த குறுகிய சாலைகளையும் அதன் இரு புறமும் வளைந்து நெளியும் மரங்களையும் மண் வாசனையையும் சுவீகரித்துக் கொண்டே செல்வேன்.

ஏசி, உயர்தரமான அலுவலகம், கணிணி என்று சவுதியில் சற்று வசதியான வாழ்வு வாழ்ந்தாலும் எனது ஊரிலும் எனது நாட்டிலும் இருக்கும் நாட்களின் சுகங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

நமது நாட்டு அவலங்களை அவ்வப்போது எழுதுவதன் காரணம் எனது தாய் நாட்டின் மீது உள்ள பற்றுதலாலேயே! எனது பதிவுகளை ஒரு பாகிஸ்தானியோ, ஒரு சவுதியோ படிப்பதில்லை. தமிழ் பேசும் மக்கள் தான் படிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் எழுதுகிறேன். சொந்த மக்களிடத்தில் தனது சொந்த வீட்டைப் பற்றி பேசுவதோ சுட்டிக் காட்டுவதோ எவ்வாறு இழிவாகும்.?

அபாண்டமாக பொய் சொன்னாலோ அல்லது வேறு இனத்து மக்களுக்கு மத்தியில் இதை எல்லாம் சொல்லி எள்ளி நகையாடியாலோ உங்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளானவனாவேன்.

எனவே இந்த மக்களை எவ்வாறு திருத்துவது என்ற ஆதங்கத்தில் எழுந்த பதிவுகள் தானே யொழிய வேறு எந்த உள் நோக்கமும்
இல்லை.

அடுத்து சவுதியில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று. வெளியில் நடக்கும் தவறுகளை சட்டத்தின் மூலம் தடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளே நடப்பதை எவ்வாறு தண்டிப்பது. தவறு நடந்தாலும் தெரிய வருவது மிக குறைவே.

எனவே தான் நான் முன்பு ஒரு பதிவில் பெண்கள் தனியாக தனியாக இங்கு வீட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று பதிவிலேயே கோரிக்கை வைத்தேன். நம்மால் முடிந்தது அவ்வளவுதான். தெரிந்தே தங்களது வறுமையினால் இது போன்ற சிரமங்களை சுமப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? வரும் பெண்கள் தனது கணவர் வீட்டு டிரைவராக வருமாறு பார்த்துக் கொண்டால் இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

முன்பெல்லாம் எத்தனையோ இலங்கை தமிழ் பெண்களுக்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளேன். படிப்பறிவு இல்லாமல் இங்கு வந்து சிரமப்படுவதை பார்த்து வருத்தமுற்றிருக்கிறேன்.

சவுதியில் எல்லா நபர்களும் இறைவனுக்கு பயந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்க முடியாது. எனது அரபி மிக நல்லவர். 20 வருடமாக ஒரே பெண் ராணி போல் வசதியாக இருக்கிறார். சிலருக்கு நரகமாக அமைந்து விடுகிறது. நமது எம்பாஸியும் ஸ்ரீலங்கா எம்பாஸியும் ஒரு அமைப்பை கூட்டாக ஏற்படுத்தி இது போன்ற சிக்கல்களை களைய முயற்ச்சிக்கலாம். அல்லது விசாக்களை முழுவதுமாக தடை செய்யலாம்..

வேகநரி சொன்னது…

தங்களுக்கு தான் சுன்னத்து என்று ஆண் குறி நறுக்குகிறார்கள் பெண்களை பர்தாவால் மூடி வைத்திருக்கிறார்கள் என்றால் கல்லால் எறிந்து கொல்லுதல்,கழுத்து வெட்டி கொல்லுதல், பெண்களுக்கு உடலில் ஆணி அடித்து அனுப்புதல் என்று ஒரே பயங்கரமயமா இருக்கே.
இஸ்லாம் நாட்டை விட்டு தப்பினோம் பிழைத்தோம் என்று காபீர் நாடுகளில் குடியேறிய இஸ்லாமிய பெண்கள் பர்தா இல்லாம night shift செய்து முடித்து பஸ்சிலோ, ரெயிலிலோ சுதந்திரமாக வீடு திரும்புறாங்க.ஆனால் இஸ்லாமிய சவூதியில் பெண்கள் நிலை என்ன? பெண்களே! இஸ்லாமிய சவூதிக்கு வேலைக்கு போகாதிங்க என்று கேட்கும் நிலை.
காபீர்களே!!! பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு.சிந்திப்பீர்களா?

//பெரியார் கண்மூடித்தனமாக ஆதரித்த - அந்த மதம் குறித்து ஒருவர் பெரியாரிடம் உரையாடினார். "அம்மதம் குறித்து நீங்கள் முழுமையாக அறிந்திருக்கிறிர்களா? படித்தீர்களா?" என்று கேட்டபோது "எதையும் நான் படிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.//
பகுத்தறிவு தூள் பறக்குது.
தகவலுக்கு நன்றி நந்தவனத்தான்.

? சொன்னது…

சுவனபிரியன் நீங்கள் சவுதியில் உட்கார்ந்து கொண்டு இந்திய மக்களை அதுவும் இந்துக்களை நினைத்து எப்புடியெல்லாம் ஆதங்கப்படுகின்றீர்கள் என்பதினை அறிந்து புல்லரிக்கிறது. இன்னிக்கு போய் becon -னை சைடு டிஷ்ஷாக வைத்து ஒரு ஃபுல் அடித்தால்தான் அரிப்பு நிக்கும் போல இருக்குது.

நீங்கள் உங்கள் கருணைப் பார்வையை மற்ற மதத்தினரிடம் வீசுவதற்கு முன் இந்திய முசுலிம்களிடையே உள்ள சாதி பற்றியும் எப்படியெல்லாம் கீழ்சாதி முசுலிம்கள் படாதபாடு படுகிறரார்கள் என எழுதி அவர்கள் குறித்தும் சிந்திக்கலாமே என்பதுதான் எமது விருப்பம்! ஆனால் இசுலாமியரிடையே சாதி என்றதும் உமக்கு செலக்டிவ் அம்னீசியா வந்துவிடும் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன? வேணும்னா கூகிள் பண்ணி பாருங்கள், பல கீழ்சாதி முசுலிம்களின் சோக கட்டுரைகள் கிட்டும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கூகிள் பயன்படுத்தாமல் போராட்டம் நடத்துவீர்கள் (இந்த கோரிக்கையே படித்தவுடன்) என்பது தெரியும். அதனால் 2 லிங்கு கொடுக்கிறேன் படித்து இது குறித்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

http://goo.gl/CwO2N
http://goo.gl/5Sc0r

இந்த சாதி, ஷியா, சுன்னி பிரச்சனை தீர்ந்தால் அலை அலையாக நாங்கள் வந்து சாதி இன வேறுபாடு இல்லாத ஒரு மதத்தில் சேர வசதியாக இருக்கும் என்பதற்குதான் இந்த கோரிக்கை!

சார்வாகன் சொன்னது…

@ சகோ நந்தவன‌த்தான்,

நல்ல சுட்டிகள். இருப்பினும் என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் மார்க்கமேதை சு.பி இதற்கு பதில் சொல்ல வேண்டுமா? அவரின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அடியேனே பதில் சொல்ல முடியும்.

இது அண்ணன் பதிலாக நினைத்து படிக்கவும்.

1.குரான், (சு.பி ஏற்கும்) ஆதரபூர்வ ஹதிதில் சாதி இல்லை. ஆதாரம் காட்ட முடியுமா? ஆனால் மனுதர்மத்தில் இந்து புராணங்களில் உண்டு.

2. இஸ்லாமுக்கு முந்திய அறியாமைக் கால் விடயங்களை இன்றும் சில முஸ்லிம்கள் அறிந்தே செய்வது வருத்தத்திற்கு உரியது. அவர்களைக் குரான் முனாஃபிக்குகள் என ஒரு சூரா முழுதும் கண்டிக்கிறது .
****
63 ஆம் சூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
மதனீ, வசனங்கள்: 11
63:1. “(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
63:2. இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
63:3. இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
....


ஆகவே நயவஞ்சகர்களின் செய்லை மூமின்கள் செயலாக பார்க்க கூடாது!!.
நானும் வன்மையாக இத்னை கண்டிக்கிறேன். காலப்போக்கில் அனைவரும் ஆதமின் மக்களே[ஆதமின்டே மக்கள்!!] என நபிவழிக்கு திரும்பவைக்கவே தவுகீத் இயக்கம் போராடுகிறது.

ஆகவே சாதியை ஒழிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதலேயே நாத்திக வேடம் பூண்ட யூத,இந்துத்வ,குறித்தவ,முனாஃபிக்குகள் வசைபாடினாலும் மார்க்கம் காத்து அன்பு அமைதி கொண்டு நபிவழியில் நடப்போம்.
எப்புடீ!!

நன்றி!!

கோவி.கண்ணன் சொன்னது…

//மேலும் இதே பெரியார்தான் இசுலாத்திற்கு மாறினால் எல்லாப் பிரச்சனையும் அகலும் என்பது போன்ற தப்பான நம்பிக்கையை-(மூடநம்பிக்கை?) விதைத்தவர் என்பது முரண்பாடே.//

பெரியார் பார்பனியத்தையும் இஸ்லாமையும் ஒப்பிட்டு அவ்வாறு சொன்னார், இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு செல்லும் தாழ்த்தப்ப்ட்டவர்களுக்கு கதவுகள் திறக்கப்படவில்லை, அவர்களை நாத்திகராக மாறுங்கள் என்று பெரியார் கூறவில்லை, உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் நீங்கள் மாற்று வழியை தேர்ந்தெடுக்கலாம் என்ற பரிந்துரையை முன்வைத்தார், அதற்கு மற்றொரு காரணம் இந்திய இஸ்லாமிய பெண்களின் நிலையை விட தலித்துகளின் நிலை ஒடுக்குமுறையில் மிகவும் கீழாகத்தான் வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த சாதி, ஷியா, சுன்னி பிரச்சனை தீர்ந்தால் அலை அலையாக நாங்கள் வந்து சாதி இன வேறுபாடு இல்லாத ஒரு மதத்தில் சேர வசதியாக இருக்கும் என்பதற்குதான் இந்த கோரிக்கை!//

ஆதாம் அலையில் இருந்து முகமது அலைவரையிலும் ஏற்கனவே அல்லாவே முடிவு செய்து, முகமது தான் கடைசி அலை(இறைத் தூதர்) என்று இறுதி அறிவிப்பும் செய்துவிட்டார், உங்களுக்கெல்லாம் அலை வாய்ப்பு விதிக்கப்படாது, இல்லை வீணாக அலையாதீர்கள். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//எனவே தான் நான் முன்பு ஒரு பதிவில் பெண்கள் தனியாக தனியாக இங்கு வீட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று பதிவிலேயே கோரிக்கை வைத்தேன். //

சுபி, சவுதியில் தனியாக வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு ஏற்படும் இன்னல் அறிந்தவர் நீங்கள், அவ்வாறு அனுபவிக்கும் இன்னல்களில் பாலியல் வண்புணர்வும் அடக்கம் என்றே அறிந்தவர், பின்னர் ஏன் அவ்வாறெல்லாம் சவுதியில் நடைபெறுவதே இல்லை என்றெல்லாம் கூறினீர்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆகவே சாதியை ஒழிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதலேயே நாத்திக வேடம் பூண்ட யூத,இந்துத்வ,குறித்தவ,முனாஃபிக்குகள் வசைபாடினாலும் மார்க்கம் காத்து அன்பு அமைதி கொண்டு நபிவழியில் நடப்போம்.
எப்புடீ!!

நன்றி!!//

சார்வாகன், உங்களுக்கு தெரிந்த மார்க்கத் தெளிவில் நீங்கள் பார்டைம் அறிஞ்ஞ்சர் ஆகலாம்.

:)

? சொன்னது…

@சகோ சார்வா,

கோவியார் சொன்னதை கன்னாபின்னா என்று வழிமொழிகிறேன். கடவுள் மறுப்பு, பரிணாமத்தை எல்லாம் எழுதி தம்பிடிக்கு பிரயோசனம் கிடையாது. உங்களுக்கு இருக்கும் மார்க்க அறிவுக்கு நம்ம முமின்களோட டீல் போட்டுகிட்டு நீங்க தாவா செய்ய ஆரம்பித்தால் ஆயில் வித்த காசு உங்க வீட்டுகுள்ளும் ஓட நல்ல வாய்ப்பிருக்குது. மேலும் Maurice Bucaille இல்ல கீத் மோர் மாதிரி நீங்களும் பிரபலமாயிடுவீங்க,நல்லா யோசியுங்கோ!

நன்னயம் சொன்னது…

எல்லோருக்கும் வணக்கம், மார்க்க அறிஞர் சுவனபிரியர் ஒரு மட்டமான ஒரு பிரசாரகர் என்பது நாம் அறிந்ததே.

அதற்காக அவரை கண்டனம் செய்வதற்காக இந்தியாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கான பதிவில் அந்த மட்டமான மனிதருக்கான விமர்சன களமாக மாற்ற வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
""சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். "
மேற்படி சுவன பிரியரின் வாக்கு பச்சை அயோக்கிய தனம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அவரை கண்டிப்பதட்க்கு தனியான பதிவை போடலாம்.

முதலில் ஒரு தலித் பெண்ணை வன்புணர்வு செய்தவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் இந்த குற்றவாளிகள் சட்டத்தின் கையில் தண்டனை பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன் வட இந்தியாவில் ஒரு தலித் பெண் உயர் சாதியினரால் வன்புணர்வுக்கு உட்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். ஆனால் குற்றவாளிகள் தண்டனை பெறவில்லை. அந்த பெண் வன்புணர்வுக்கு உட்படவில்லை என மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் தலித் வைத்தியர்கள். பணம் அல்லது அழுத்தம் காரணமாக இருக்கலாம். இந்த பெண் விடயத்திலாவது அவ்வாறு நடக்க கூடாது.

நன்னயம் சொன்னது…

இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

நன்னயம் சொன்னது…

இந்த பெண் ஆதரவாக போராட்டம் செய்பவர்கள் ஏதாவது முகநூல் கணக்கு தொடங்கியிருக்கலாம். அதில் இணைந்து எமது ஆதரவை தெரிவிக்கலாம் அல்லது ட்வீட்டர் மூலமாக வேனும் ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டும். இக்பால் எதாவது தெரிந்தால் எமக்கு தெரிவிக்கவும்.

UNMAIKAL சொன்னது…

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

----------- தந்தைபெரியார்- நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11


CLICK TO >>>>> கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! <<<<< TP READ.
.

THANKS TO SOURCE: http://thamizhoviya.blogspot.sg/2008/04/blog-post_3045.html

========================


CLICK >>>>>

"தமிழர்கள் இந்துக்கள் அல்ல, அல்ல, அல்ல”என்று அறுதியிட்டுச் சொல்கிறேன், உரக்கக் கூவுகிறேன். - அறிவழகன் கைவல்யம்
<<<<< TO READ

Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3935:2010-02-20-08-29-29&catid=1:articles&Itemid=264

நன்னயம் சொன்னது…

இது ஒரு அபலை பெண் சம்மந்தப்பட்ட விடயம் இதில் மத அரசியலை உள்ளடக்க வேண்டாம் என்று நான் பின்னூட்டம் இட்ட பின் உண்மைகள் என்ற பெயரில் வரும் ஒரு நா ____ரி தனது வாந்தியை எடுத்து விட்டு போயிருக்கிறது. (உண்மை என்ற பெயரில் வருவது வாஞ்சூர் என்ற _______)

கோவி.கண்ணன் சொன்னது…

//Ethicalist E சொன்னது…
இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்//

ஏற்கிறேன், இதில்மாற்றுக்கருத்து இல்லை, இதே தொனியில் தான் சுபி பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//UNMAIKAL கூறியது...
நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, //

திருவாளர் மதவெறியர் உண்மை"கள்" வாங்கோ,

நீங்கள் ஒரு இஸ்லாமியர் உண்மையான மார்க அறிஞர் என்று ஒப்புக் கொண்டால் நீரும் ஒரு "இஸ்லாமிய தீவிரவாதி" என்கிற உலக ஊடகங்கள், ஒப்புக் கொண்டு சட்டையில் "நான் ஒரு மார்க்க தீவிரவாதி" என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டியது தானே ?

ஒரு பார்ப்பானுக்கு தம் சாதியைத் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து சாதிமதத்தினரும் சூத்திரர்களே, உண்மையில் பொருள் தெரியாமல் உளறிக் கொட்டிவருகிறீர்

தலித் முஸ்லிம் என்று ஒருபிரிவு இருக்கிறது, உம்ம பாஷையில் சூத்திர முஸ்லிம் என்று அவர்களுக்கு அடைமொழி கொடுத்துவிடுவோமா ?

Unknown சொன்னது…

வணக்கம் சகோ,

//சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின் அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.//

கணக்கை மிகக் கச்சிதமாக கணித்துள்ளீர்கள் இவர்களுக்குள் நடக்கும் குடிமிப்பிடி சண்டையே ஓய்ந்தபாடில்லை மற்றவர்கள் மேல் அக்கறை ஏன்? இறைவனை(?)தொழும் பள்ளிவாசலில் பேதம் பார்க்கும் இவர்களா இப்படி???

இனியவன்...

Unknown சொன்னது…

வணக்கம் சகோ,

//சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின் அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.//

கணக்கை மிகக் கச்சிதமாக கணித்துள்ளீர்கள் இவர்களுக்குள் நடக்கும் குடிமிப்பிடி சண்டையே ஓய்ந்தபாடில்லை மற்றவர்கள் மேல் அக்கறை ஏன்? இறைவனை(?)தொழும் பள்ளிவாசலில் பேதம் பார்க்கும் இவர்களா இப்படி???

இனியவன்...

வவ்வால் சொன்னது…

கோவி,

சு.பி.சுவாமிகளுக்கு வரை ஒட்டிய வகாபிய பரப்புரையாளர்களுக்கும் இதுவே ஒரு வேலையா போச்சு, அதனால் இஸ்லாம் பற்றி படிப்பதை விட, இந்துத்துவ வேதங்களையும், பண்பாட்டையும் அதிகம் படித்து அது குறித்தே அதிகம் சிந்திப்பதால் அவர்கள் அனைவரும் மனதால் இந்துவாகிய இஸ்லாமியர்கள் ஆகிவிட்டார்கள் :-))

அதனால் தான் சூத்திரன், கீதைனு பேசுறான்ங்க. இந்துத்வா தத்துவங்களை ஏற்காதவர்களும் நாட்டில் உண்டு என அறியாதவர்கள், தமிழர்கள் இந்துக்களே கிடையாது, அவர்களின் வழிபாடு வேறு ,ஆனால் அதனையும் இந்துத்வா சித்தாந்த்தின் கீழ் அடைத்து விட்டார்கள்.

அய்யனார், முனிஸ்வரன், மாரியம்மன் கோவில் வழிபாடுகள் எந்த சிவன், பெருமால் கோவிலிலும் இல்லை.

அய்யனாருக்கு மது ,மாமிசமே படைப்பார்கள், அது தமிழ் வழிபாடு.

அய்யனார், முனிஸ்வரன், அம்மன்ன் கோவில்களில் பார்ப்பணர்கள் அர்ர்சகர்களாக இருப்பதில்லை.

அம்மன் கோவில்களில் வருமானம் அதிகம் வருவதாக பார்த்து சில இடங்களில் பார்ப்பணர்கள் வேலை செய்வதுண்டு.

எந்த பார்ப்பணரும் தப்பி தவறி கூட அய்யனார், முனிஸ்வரன், அம்மன் போன்ற தெய்வங்களை வணங்குவதில்லை.

எனவே தமிழர்களின் மதம் இந்து அல்ல என்பதே சு.பி.சுவாமிகளுக்கு புரியவில்லை.

தமிழர்கள் இந்து தெய்வங்களையும் வணங்குவார்கள் என்ன்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

--------

அரிசனம் , தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்வதை அவ்வப்போது சுட்டிக்காட்டினாலும் ஏற்பதில்லை, மேலும் சூத்திரன் என சொல்வது இந்துத்வாவில் ஒட்டியவர்களையே வேண்டுமானால் சொல்லலாம். அப்படியும் கேட்காமல் சொன்னால், இவர்களை துளுக்கன் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்.

துலுக்கன் என்றும் அழைப்பது வழக்கமாக இருக்கையிம் அப்படி சொன்னால் ஏன் இவர்கள் வருத்தப்பட வேண்டும்.சந்தோஷப்பட வேண்டுமல்லவா?

இஸ்லாமில் இருக்கும் பிரிவுகள், சாதிகள் பற்றி நான் பட்டியலிட்டு சொன்னால் ,அவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களே அல்ல என்று சொல்லி தப்பிப்பார், அப்புறம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கூட்ட மட்டும் அனைவரையும் சேர்த்துக்கொள்வார்.:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்த பார்ப்பணரும் தப்பி தவறி கூட அய்யனார், முனிஸ்வரன், அம்மன் போன்ற தெய்வங்களை வணங்குவதில்லை.//

எனக்கு தெரிந்த பார்பனர் ஒருவருக்கு ஐயனார் தான் குலதெய்வமாம். நாங்கள் பொங்கல் வைத்து கும்பிடுவோம் என்றார். எனக்கு அவருக்கு அய்யனார் எப்படி குலதெய்வம் ஆனார் என்பது விளங்கவில்லை. ஒருவேளை முன்னோர் சாதிக் கலப்பு திருமணம் செய்திருந்தால் ஐயனாரையும் சேர்த்தே கிளப்பி வந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றியது

வவ்வால் சொன்னது…

கோவி,

அம்மனை கூட இப்போதெல்லாம் வழிபடுகிறார்கள்,அதுவும் அதோட பாப்புலாரிட்டி பொறுத்து,அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சொல்லி வணங்குவதாக இருக்கும். ஆனால் தீ மிதித்தல், அலகு குத்துவது , காவடி எடுப்பது,கரகம் எடுப்பது என வேண்டிக்கொள்ல மாட்டார்கள்.

போய் கன்னத்தில் போட்டுக்கிறதோட சரி.

ஆனால் அய்யனார் எல்லாம் எப்படின்னு தெரியலை, நீங்க சொன்னது போல எப்பவோ கலப்பு திருமணம் செய்து இருக்கணும்.

அய்யனார், முனியாண்டி, முனிஸ்வரன் கோயிலுக்கு விசேஷமே கெடா வெட்டு தான்.அங்கே பூஜை செய்வதே கிராம பூசாரி என சொல்லப்படும் பண்டாரம் வகுப்பினர், அவங்க கையான துன்னூறு வாங்கி பூசிப்பாங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//அய்யனார், முனியாண்டி, முனிஸ்வரன் கோயிலுக்கு விசேஷமே கெடா வெட்டு தான்.அங்கே பூஜை செய்வதே கிராம பூசாரி என சொல்லப்படும் பண்டாரம் வகுப்பினர், அவங்க கையான துன்னூறு வாங்கி பூசிப்பாங்களா?//

இங்கே சிங்கப்பூரில் அம்மன் கோவில்களில் முனிஸ்வரனுக்கு தனியாக சிலை இருக்கும், அதற்கும் சமஸ் மந்திரம் சொல்லி அவாள் பூசை நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். நான் மேலே குறிப்பிட்ட பார்பனர் யார் பூசை செய்தாலும் வாங்கிப் பூசிக் கொள்வார். மற்றவர்கள் எப்படி என்று தெரியவில்லை.

இங்குள்ள முனீஸ்வரன் முறுக்கு மீசையுடன் பூணூலும் போட்டு இருப்பார்.

naren சொன்னது…

@ethicalist
/////////////
முதலில் ஒரு தலித் பெண்ணை வன்புணர்வு செய்தவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் இந்த குற்றவாளிகள் சட்டத்தின் கையில் தண்டனை பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
....................
இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
//////////////

தலித் பெண்களை சாதிய ஆதிக்கதுடன் வன்புணர்ச்சி செய்வது தொடர் நிகழ்வுகளாகவே இருக்கிறது. வெளியில் வந்தது சில. வெளிவராது பல நிகழ்ச்சிகள்.

ஏன் நடக்கிறது என்பது தெரிந்த விடயம் தான். ஏன் தொடர்கிறது என்பது தெரிந்த விடயம்தான். பாதித்த பெண்களுக்கு முழுமையான நியாயம் தரமுடியாவிட்டாலும், குற்றவாளிகளை சட்டத்தின் மூலம் விரைவில் தண்டணை வாங்கி தந்து நிவாரணம் அளித்தால் ஒரளவுக்கு நியாயமாகும். தண்டனைகள் மற்றவர்களுக்கு படிப்பினையாகும். வன்புணர்ச்சியாளர்கள் சாதிய மனப்பான்மையிலிருந்து மனமாறுவார்கள் என்று நம்பிக்கையில்லை, ஆனால் தவறு செய்தால் தண்டனையுண்டு என்று அவர்களுக்கு காட்டினால் போதும்.

@வவ்வால்,
///அம்மன் கோவில்களில் வருமானம் அதிகம் வருவதாக பார்த்து சில இடங்களில் பார்ப்பணர்கள் வேலை செய்வதுண்டு.///

காசேதான் கடவுளுப்பா


நன்னயம் சொன்னது…

@கோவி
"இங்கே சிங்கப்பூரில் அம்மன் கோவில்களில் முனிஸ்வரனுக்கு தனியாக சிலை இருக்கும், "
ஆரம்ப காலங்களில் இக் கோயில்கள் சிங்கபூருக்கு வேலைக்காக வந்தவர்களினால் தங்கள் குல தெய்வங்களை அடிப்படையாக கொண்டு கட்டப் பட்டன. பின் காலப்போக்கில் அக்கோயில்கள் செல்வந்தர்களின் கையில் போன பின் அவை பெரிதாக உருவெடுத்தன. சிறிய தெய்வங்களுக்கு பெரிய கோயில்கள் கட்ட கூடாது என்ற ஆகம விதி உள்ள படியாலும் செல்வந்தர்கள் பல்வேறு சமூகங்களையும் பல்வேறு குல தெய்வங்களையும் கொண்டவர்களாக இருந்த படியாலும் பெருந்தெய்வங்களை முன்னிருத்தி கோயில்கள் பெரிதாக்க பட்டன. செரங்கூன் ரோட் பெருமாள் கோயிலுக்கு அருகில் ஒரு மதுரை வீரன் கோயில் இருக்கிறது. அங்கு மதுரை வீரனுக்கு விசேட பூசைகள் நடை பெறும். ஆனால் மூல விக்ரகம் ஒரு பெரும தெய்வம். அம்மன் என்று நினைக்கிறேன்.

வேகநரி சொன்னது…

//Ethicalist E சொன்னது…
இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்//

ஏற்கிறேன், இதில்மாற்றுக்கருத்து இல்லை//

அதே தான். பாதிக்கபட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்காவிடில் அது இந்தியாவில் உள்ள மிக பெரிய தவறு.அதை மாற்றவே போராட வேண்டும். பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் என்பது இஸ்லாமிய நாடுகளின் அன்றாட சாதாரண நிகழ்வுளாகும். ஆன அவர்கள் பாதிக்க பட்ட பெண்ணை வைத்து மத பிரசாரம் செய்கிறார்கள்.

//உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் நீங்கள் மாற்று வழியை தேர்ந்தெடுக்கலாம் என்ற பரிந்துரையை முன்வைத்தார்//
மாற்று வழியாக தேர்ந்தெடுக்கலாம் என்று முகமதுவின் அரபு மதத்தை பரிந்துரைத்தார் பெரியார்.இது தான் பகுத்தறிவின் இலசணமா?
நான் வயதான சில பெரியவர்களுடன் பேசிபார்த்துள்ளேன்.முன்பே இஸ்லாம் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது.அதே முகமது அதே குரான் தான் எப்போதும். சீர் திருத்தமே இல்லை எல்லா காலத்தற்க்கும் பொருத்தமானது என்று அவர்களே சொல்லிவிட்டார்களே. இஸ்லாம் மதத்தில் சில நல்லவர்கள் இருந்தார்கள்,எல்லா மதங்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், ஆனா நல்லவர்களாக இருந்த இஸ்லாமியர்களை வெறி கொண்டவர்களாக தீமை செய்யகூடியவராக மாற்றியது அரபு இஸ்லாம் மதம்.

Sathish Murugan . சொன்னது…

தமிழர்களுக்கு வணக்கம்,
முன் குறிப்பு: தமிழ் பேசுறவங்க எல்லாரும் தமிழனில்லை
ஒரு பெண்ணை எந்த நாதாரி (இனா முனா கினா வா இருக்கட்டும்) வன்புணர்வு செய்தாலும் த(க)ண்டிக்க தக்கதே. ஆனால் அதிலும் மதம் பரப்பி சொரிந்து சுகம் காணும் சூனா பானா சாமியாருக்கு இந்துவை சொரிந்து சுகம் காண எல்லாம் வல்ல இல்லாதவர் அனுப்பினார் போல.
உண்மை எனும் பெயரில் வந்து, எங்கோ உள்ளதை காப்பி பேஸ்டு மலம் கழிப்பதை புனித போராக நினைக்கும் கூமுட்டையை நினைக்கும் போது நபியும் வருந்துவார் போல.

//ஏசி, உயர்தரமான அலுவலகம், கணிணி என்று சவுதியில் சற்று வசதியான வாழ்வு வாழ்ந்தாலும் எனது ஊரிலும் எனது நாட்டிலும் இருக்கும் நாட்களின் சுகங்களை எழுத்தில் வடிக்க முடியாது.// அப்படி இருந்தும்(?) சவுதியையும் பாகிஸ்தானையும் தலையில் வைப்பதை நினைக்கும் போது - யா அல்லா....

//நமது நாட்டு அவலங்களை அவ்வப்போது எழுதுவதன் காரணம் எனது தாய் நாட்டின் மீது உள்ள பற்றுதலாலேயே!// சூனா பானா சாமியாரே, அப்போ உங்களுக்கு இஸ்லாத்தின் மீது பற்று இல்லையா? அங்கு வண்டி வண்டியாக குப்பை கிடக்கும் போது, அடுத்தவன் வீட்டில் பஞ்சாயத்து பண்ண வருவதன் நோக்கம்?

//அபாண்டமாக பொய் சொன்னாலோ அல்லது வேறு இனத்து மக்களுக்கு மத்தியில் இதை எல்லாம் சொல்லி எள்ளி நகையாடியாலோ உங்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளானவனாவேன். // சுவாமிஜி, சுயநினைவோடு தானா டைப்பிநீர்?

//எனவே இந்த மக்களை எவ்வாறு திருத்துவது என்ற ஆதங்கத்தில் எழுந்த பதிவுகள் தானே யொழிய வேறு எந்த உள் நோக்கமும்
இல்லை.// இந்த உத்தமரை ஏன் இன்னும் மக்கள் புரிந்து "கொல்ல" வில்லை?

//அடுத்து சவுதியில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று.// அப்புறம் ஏன் சுவாமிஜி கோவி அண்ணனுக்கு தவறான பதிலை சொன்னீர்கள்?

//சவுதியில் எல்லா நபர்களும் இறைவனுக்கு பயந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்க முடியாது.// நீங்க இருக்குற இடமாயிற்றே சூனா பானா?

பின் குறிப்பு: அடுத்தவங்களை பரிகாசிக்கும் எண்ணம் எனக்கில்லை, ஆனால் உங்களை போன்றவர்களை விடவும் மனம் இல்லை.

தொடரும் கச்சேரி....
அன்போடு சதீஷ் முருகன்

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி.கண்ணன்!மதம் சார்ந்த சுவனப்பிரியனின் கருத்துக்களின் மீது மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் இங்கே அவருடைய பின்னூட்டம் சிறப்பு தகுதி பெறுகிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

பின்னூட்டம் போட்டுட்டு போனவுடன் எதையோ சொல்லாமல் விட்டுட்ட உணர்வு.அதனால் மீண்டும் ஒரு முறை!

நந்தவனத்தில் ஒரு ஆண்டி என்ற பழைய பாட்டுத்தான் நினைவு வருகிறது நந்தவனத்தான்:)

பெரியார் வாழ்ந்த காலப்பகுதியின் வர்ணாசிரம கொடுமைகளின் காரணமாக பெரியார் ஒப்புமைக்காக இஸ்லாத்தை பரிந்துரை செய்திருக்க கூடும்.அவரது கால கட்டத்தில் இஸ்லாம் அமைதியாகவே இருந்தது.இப்போதைய மத தீவிரவாத சிந்தனைகள் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,சவுதி அரேபியா என்ற Axis of evil முக்கோணத்தில் விளைந்த ஒன்று.மாங்கா ஜார்ஜ் புஷ் தவறுதலாக ஈரான்,ஈராக்,வடகொரியா என அவரின் அரசியல் சுயநலத்துக்கு சொல்லி விட்டுப் போய் விட்டார்.

பெரியாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லையென்ற போதிலும் எதிர் விமர்சனங்களை தாண்டிய சிந்தனை வளம் பெரியார்.

வவ்வால் சொன்னது…

சுபி.சுவாமிகள்,

//நமது நாட்டு அவலங்களை அவ்வப்போது எழுதுவதன் காரணம் எனது தாய் நாட்டின் மீது உள்ள பற்றுதலாலேயே! எனது பதிவுகளை ஒரு பாகிஸ்தானியோ, ஒரு சவுதியோ படிப்பதில்லை. தமிழ் பேசும் மக்கள் தான் படிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் எழுதுகிறேன். சொந்த மக்களிடத்தில் தனது சொந்த வீட்டைப் பற்றி பேசுவதோ சுட்டிக் காட்டுவதோ எவ்வாறு இழிவாகும்.?
//

நீங்கள் உண்மையில் நாட்டில் உள்ள குறைகள்ன் நீங்க வேண்டும் என எழுதினால் பாராட்டப்பட வேண்டியவரே ஆனால் அப்படியில்லையே?

கீழக்கரையில் முஸ்லீம்கள் குப்பையை பொது வெளியில் கொட்டுகிறார்கள் என்பதை சொல்ல வந்த இடத்தில் தேவை இல்லாமல் அரிசனங்கள் பொது இடத்தில் மலம் கழிக்கிறார்கள் திருந்த வேண்டும் எங்களைப்பார்த்து என்று அவர்களையே இழுக்க வேண்டிய அவசியம் என்ன, அதே போல கீழக்கரை இஸ்லாமியர்கள் யாரைப்பார்த்து திருந்த வேண்டும் என சொல்லி இருக்கலாமே ஏன் சொல்லவில்லை?

ஆப்கானில் 17 பழன்ங்குடியின மக்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் அதனை பற்றி ஒன்றும் சொல்லாமல் முல்லா ஓமரின் பெருநாள் வாழுத்து என பதிவு போட்டுக்கொண்டீர்கள்.

அலாவுதீன் கில்ஜி, கஜினி முகமது, அவுரங்க சீப் பற்றி எல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு என பெருமையாக பதிவிட்டீர்கள், ஆனால் அக்பர் (முகலாய மன்னர்) ஆனாலும் கெட்டவர் என ஒரு பதிவு போட்டீர்கள்.

இதெல்லாம் நாட்டின் மீதான அக்கரையினாலா?

இப்போது ஒரு தலித் பெண் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டதை குறிப்பீட்டீர்கள், சரி சமூக அக்கரை என எடுத்துக்கொண்டாலும்.

நாகையில் வைத்து ஒரு பெண்ணை நண்பர்களுடன் பாலியல் பலாத்காரம் செய்து அதனை மொபைலில் வீடியோ எடுத்த ஒருவனை ,பின்னர் விஷயம் தெரிந்து காவல் நிலையம் செல்லாமலே , வெட்டிக்கொன்றுள்ளார்கள்.

இதில் குற்றவாளியும், பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரே மதம், எனவே கவுரவம் காக்க கவுர கொலையாக செய்துள்ளார்கள்.

சுந்தரபாண்ன்டியன் படத்தினை விமர்சிக்க வினவு தளத்தினை நாடிய தாங்கள் இச்சம்பவம் பற்றி எக்காலத்திலும் பேசியதாக நினைவில்லை.

எனவே உங்களின் செலக்டிவ்வான சமூக அக்கரை குறித்து எப்படி பாராட்டுவது என தெரியாமல் திகைத்து போய் உள்ளேன் :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//அவரது கால கட்டத்தில் இஸ்லாம் அமைதியாகவே இருந்தது.//

அவர்காலத்தில் கோவை குண்டுவெடிப்பு போல் தென்னிந்தியாவில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட வில்லை. தீண்டத்தகாதவர்களாக இந்து என்று சொல்லிக் கொள்ள ஒன்னும் இல்லை, மாற்று மதங்களுக்கு செல்லலாம் என்று அறிவுறுத்தினார்

மு மாலிக் சொன்னது…

சவுதியில் நடந்த கற்பழிப்பு ஒன்று பற்றி, நான் சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு: வகாபிய மன்னிப்பு ( http://vilambi.blogspot.com/2007/12/blog-post_19.html )

பெயரில்லா சொன்னது…

கற்பு என்பது மனம் சார்ந்த ஒழுக்கமே தவிர, உடல் தகுதி அல்ல, கற்பை உடலில் எங்கே போய் தேடுவார்கள் சொல்லுங்கள், ஹைமனிலா ... கற்பழிப்பு என்ற பதத்தில் எமக்கும் உடன்பாடு இல்லை .. பாலியல் வன்புணர்வு என்பது தான் சரியான ஒரு பதமாகும் ... !!!

ஹரிஜனம் என்பதில் பல விசமத்தனங்கள் இருக்கின்றன, தலித்களை சக்காளித்தியர் மக்கள் என்ற பொருளிலேயே பார்ப்பனர்கள் பார்த்து வந்தார்கள் .. அதே பாணியைத் தான் காந்தியும் தொடர்ந்தார்.. தலித் என்ற வார்த்தையே எமக்கு உடன்பாடானவை, தமிழில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லலாம், அது கூட சில சமயம் நெருடக் கூடிய சொல்லே, அடக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம் - தலித் என்றால் oppressed என்ற பொருள் தருவதால் ... !!!

சுவனப்பிரியன் போன்றோர் என்ன தான் சமத்துவம் பேசினாலும் ஆழ்மனதில் தலித்கள் மீதான வெறுப்புணர்வைக் கொண்டுள்ளார்கள். மதங்கள் மாறுவதால் ஜால்ரா தட்டக் கூட்டம் கிடைக்குமோ ஒழிய, அவர்களுக்கு வாழ்வு கிடைக்காது ... பிற்போக்குத் தனமானவர்களுக்கு எவ்வளவு எடுத்துக் கூறினாலும், அவர்கள் கேட்க மாட்டார்கள் சகோ....

குட்டிபிசாசு சொன்னது…

ராச நடை,

//இப்போதைய மத தீவிரவாத சிந்தனைகள் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,சவுதி அரேபியா என்ற Axis of evil முக்கோணத்தில் விளைந்த ஒன்று.//

உண்மையாக நீங்கள் பூமியில் தான் இருக்கிங்களா? இல்ல செவ்வாய் கிரகத்திலிருந்து இந்த கமெண்ட் சொல்லுரிங்களா?

//மாங்கா ஜார்ஜ் புஷ் தவறுதலாக ஈரான்,ஈராக்,வடகொரியா என அவரின் அரசியல் சுயநலத்துக்கு சொல்லி விட்டுப் போய் விட்டார்.
//

ஈரான், ஈராக் சரி! வடகொரியா இஸ்லாமிய நாடா? சொல்லனும்னு எதாவது சொல்லக்கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

// மு மாலிக் கூறியது...
சவுதியில் நடந்த கற்பழிப்பு ஒன்று பற்றி, நான் சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு: வகாபிய மன்னிப்பு ( http://vilambi.blogspot.com/2007/12/blog-post_19.html )//

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு கொடுமையை இன்னொரு பெண் பார்த்திருந்தாலும் அவளுடைய சாட்சி எடுபடாது, ஏனெனில் இரு பெண்களின் சாட்சி தான் ஒரு ஆணின் சாட்சிக்காக எடுபடுமாம், இவ்வளவு பழமைவாத சட்டங்களுக்கெல்லாம் முட்டுக் கொடுக்கும் சுபி போன்றவர் இதை எடுத்து எழுதுவது மதம் சார்ந்த பிரச்சார உத்திக்கானது என்பது தவிர்த்து வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

renga சொன்னது…

//அவர்காலத்தில் கோவை குண்டுவெடிப்பு போல் தென்னிந்தியாவில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட வில்லை. தீண்டத்தகாதவர்களாக இந்து என்று சொல்லிக் கொள்ள ஒன்னும் இல்லை, மாற்று மதங்களுக்கு செல்லலாம் என்று அறிவுறுத்தினார்//

எனக்கு ஒன்றும் புரியவில்லை...பெரியார் ஒரு நாத்திகவாதிதானே?ஒரு உண்மையான(?) நாத்திகவாதி எப்படி மற்றவர்களை மதம் மாறுங்கள் என்று சொல்லமுடியும்?கடவுளே இல்லை,கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னவருக்கு அல்லா பற்றி தெரியாமல் போய்விட்டதா?

வருண் சொன்னது…

***எனக்கு ஒன்றும் புரியவில்லை...பெரியார் ஒரு நாத்திகவாதிதானே?ஒரு உண்மையான(?) நாத்திகவாதி எப்படி மற்றவர்களை மதம் மாறுங்கள் என்று சொல்லமுடியும்?***

ரெங்கா: நீங்க பார்ப்பனரா? இல்லை உயர் சாதி இந்துவா? இல்லைனா தாழ்த்தப்பட்டவரா?

நீங்க பெரியார் சொன்ன காலத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டவரா அல்லது இன்று தாழ்த்தப்பட்டவராகவோ இருந்தாலேயொழிய இது உங்களுக்குப் புரியாது. பொத்திக்கொண்டு இருங்க!

வருண் சொன்னது…

**எனக்கு ஒன்றும் புரியவில்லை...***

உமக்கு மட்டுமல்ல, பெரியாரை வஞ்சம் தீருக்கும் உயர் சாதி இந்துக்கள் எவருக்குமே இது புரியாது. DONT EVEN TRY- your brain lacks that capability!!! You BETTER UNDERSTAND.

Dont you repeat the same ****ing question again and again like a high-class RETARD!

உங்களுக்கு "ரிசெர்வேசன்" நன்னாப் புரியும்! பகவானுக்கு சுண்டல் சமைத்து நீங்களே திங்கிறது எல்லாம் தப்பே இல்லைனு நன்னாத் தெரியும்.

வருண் சொன்னது…

****சுவனப்பிரியன் போன்றோர் என்ன தான் சமத்துவம் பேசினாலும் ஆழ்மனதில் தலித்கள் மீதான வெறுப்புணர்வைக் கொண்டுள்ளார்கள். ***

இகபால் வால்!

யாரு ஆழ்மனதில் என்ன இருக்குனு பகவானுக்கு அடுத்து நோக்கு மட்டும்தான் சரியாத் தெரியுதுங்கோண்ணா!

இதுபோல ஒரு பெரிய சக்தியை உங்களுக்கு பகவான் அருளியிருக்காரே, ஏன் இந்த கரிசனம் உம்மேல்?

ஒருவேளை பகவானுக்கு நீங்க என்ன தூரத்து உறவோ??

சும்மா சொல்லுங்கோண்ணா!

suvanappiriyan சொன்னது…

//அவர்காலத்தில் கோவை குண்டுவெடிப்பு போல் தென்னிந்தியாவில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட வில்லை.//

அவர் காலத்தில் ஒரு போலீஸ்காரரை வெட்டியதற்காக அந்த கொலைகாரர்களை தண்டிக்காமல் அப்பாவியாக தெருவில் திரிந்த 19 முஸ்லிம்களை சுட்டுக் கொல்லவில்லை. இதை சக்காக வைத்து பின்னர் நடந்த குண்டு வெடிப்புகளும் காட்டுமிராண்டிதனமானதே!

suvanappiriyan சொன்னது…

நண்பர் வருண்!

//யாரு ஆழ்மனதில் என்ன இருக்குனு பகவானுக்கு அடுத்து நோக்கு மட்டும்தான் சரியாத் தெரியுதுங்கோண்ணா!

இதுபோல ஒரு பெரிய சக்தியை உங்களுக்கு பகவான் அருளியிருக்காரே, ஏன் இந்த கரிசனம் உம்மேல்?

ஒருவேளை பகவானுக்கு நீங்க என்ன தூரத்து உறவோ??

சும்மா சொல்லுங்கோண்ணா!//

அவர் தத்துவ ஞானி சார். எல்லாம் அவருக்கு தெரியும். (அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்) :-)

வவ்வால் சொன்னது…

மாமா வேலை செய்றவனுங்க தொல்லை தாங்கலை :-))

இஸ்லாமிய கூஜா ஒன்னு , எல்லாம் தெரிஞ்சா போல போலி நாத்திகம் பேசிட்டு அலையுது, அது மண்டையில நாலு போட்டு அடக்கணும் :-))

வருண் சொன்னது…


நரேன் அண்ணா சொல்கிறார்..


///* தலித் பெண்களை சாதிய ஆதிக்கதுடன் வன்புணர்ச்சி செய்வது தொடர் நிகழ்வுகளாகவே இருக்கிறது.

* வெளியில் வந்தது சில. வெளிவராது பல நிகழ்ச்சிகள்.

* ஏன் நடக்கிறது என்பது தெரிந்த விடயம் தான்.

* ஏன் தொடர்கிறது என்பது தெரிந்த விடயம்தான்.

* பாதித்த பெண்களுக்கு முழுமையான நியாயம் தரமுடியாவிட்டாலும், குற்றவாளிகளை சட்டத்தின் மூலம் விரைவில் தண்டணை வாங்கி தந்து நிவாரணம் அளித்தால் ஒரளவுக்கு நியாயமாகும்.

* தண்டனைகள் மற்றவர்களுக்கு படிப்பினையாகும்.

* வன்புணர்ச்சியாளர்கள் சாதிய மனப்பான்மையிலிருந்து மனமாறுவார்கள் என்று நம்பிக்கையில்லை, ஆனால் தவறு செய்தால் தண்டனையுண்டு என்று அவர்களுக்கு காட்டினால் போதும்.///

ஆக இந்த இந்து உயர் சாதி முண்டங்களை திருத்தவே முடியாதுனு சொல்றேளாண்ணா??

என்னண்ணா இப்படி சொல்லிட்டேள்!

நம்ம சரஸ்வதி ஆண்ட்டி, லக்ஷ்மி ஆண்ட்டியெல்லாம் அவங்க ஆத்துக்காரர்ட்ட எடுத்துச் சொல்லி ஏதாவது செய்யலாம் இல்லங்கண்ணா?

ஒரு வேளை நம்ம சிவா அங்கிளும் விஷ்ணு அங்கிளுமே ஊர் மேயிறாளோ என்னவோ!

இந்து பகவான்களே ஊர் மேஞ்சா மேஞ்சா உயர் சாதி பக்தன் என்ன செய்வான்? ஊர் மேயத்தான் செய்வான்? என்னண்ணா நான் சொல்றது? :)

இந்த வன்புணர்வு செய்ற உயர்சாதிவால் எல்லாம் அவனுக ஆத்துக்காரி, அம்மா, தங்கை எல்லாரையும் கூட இவனுக பகவானுகளுக்கு கூட்டிக் கொடுப்பானுகண்ணா. ஆமண்ணா எல்லாம் பக்திதான்! ஆனால் இவனுகளுக்கு தீண்ட்த் தகாதவர்களைத்த்தான் தீண்டனும்! இல்லையாண்ணா???

k.rahman சொன்னது…

ரியாதில் மன்போஹா , அல் ஹியர் என்று இரண்டு ஏரியாக்கள் இருகின்றன. இங்கு டாக்ஸி டிரைவர்களே இரவில் வருவதற்கு யோசிப்பார்கள். ஒரு ஆண் குட தனியாக போவது ரிஸ்க் தான். போதை பொருட்கள் (ஹஷிஷ்), விபசாரம் எல்லாம் இங்கு சாதரணமாக நடக்கும் என்று அங்கு வசிபவர்கள் சொல்கிறார்கள். ஆனால் செய்திதாளில் அது பற்றி எல்லாம் வருவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு குட ஒரு பாகிஸ்தான் பெண்ணை வீடு புகுந்து கடத்தி கொண்டு போனதாகவும் திரும்ப அவரை பற்றி எந்த செய்தியுமே இல்லை என்று கேள்விபட்டேன். ஆனால் செய்திதாளில் இது போன்ற செய்திகள் வருவதில்லை.

தணல் சொன்னது…

//பாலியல் வன்புணர்வு//

அதையெல்லாம் புணர்வு என்று சொல்லுவதை விட, பாலியல் வன்முறை என்ற பதம் சரியாக இருக்கும். அங்கு நடப்பது வெறும் வன்முறை மட்டுமே, பாலுறுப்புகளின் மேல்!

//தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் //

கற்பு is BISEXUAL ன்னு தமிழ்க் கவிஞர் ஒருவர் சொல்லியிருக்கார் :-) அவர் பெயர் பாரதியார் என்று நினைக்கிறேன் :-)

தணல் சொன்னது…

ஷரியா சட்டம் உலக மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூவுபவர்கள் எவ்வளவு பெரிய மாங்கா மடையர்கள் (aka மதவாதிகள்) என்பதைப் புரிய வைக்க பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் இந்த கசையடி தண்டனைகளே சான்று!

rajan சொன்னது…

சைன்டிஸ்ட் (50) ஒன்னு ஜால்ராவானது!

rajan சொன்னது…

'UNMAIKAL' சொன்னபோது குளிர்ந்தது, 'உண்மைகள்' சொல்லும்போது நவ துவாரமும் எரியுது

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கு ஒன்றும் புரியவில்லை...பெரியார் ஒரு நாத்திகவாதிதானே?ஒரு உண்மையான(?) நாத்திகவாதி எப்படி மற்றவர்களை மதம் மாறுங்கள் என்று சொல்லமுடியும்?கடவுளே இல்லை,கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னவருக்கு அல்லா பற்றி தெரியாமல் போய்விட்டதா?//

பெரியாரின் நாத்திகத்தை அவர் மதவாதிகளைப் போல் கூவிக் கூவி விற்பனை செய்யவில்லை, நாத்திகமதமாக்க முயற்சிக்கவில்லை, உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் பார்பானர் காலை ஏன் கழுவி குடிக்கிறாய் ? உனக்கு மரியாதைக் கிடைக்கும் இடத்திற்கு செல்லலாமே என்று பரிந்துரைத்தார், மற்றபடி எந்த மதத்திற்கும் அவர் அக்மார்க் முத்திரைக் குத்தவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் காலத்தில் ஒரு போலீஸ்காரரை வெட்டியதற்காக அந்த கொலைகாரர்களை தண்டிக்காமல் அப்பாவியாக தெருவில் திரிந்த 19 முஸ்லிம்களை சுட்டுக் கொல்லவில்லை. //

அது போலிஸ் பிரச்சனை என்றால் போலிஸ் நிலையத்தில் தானே குண்டு வைக்கனும் ? எதற்கு பொதுமக்கள் நடமாடும் இடத்தில் வைக்க வேண்டும் ?

நான் அப்பாவியாக கேட்கிறேன் ஒரு அப்பாவியின் படுகொலை இன்னொரு அப்பாவியைக் கொல்வதால் உலகத்திற்கு தெரியவரும் என்று நம்பிக்கையா ? இதற்கெல்லாம் உங்களைப் போன்றவர்கள் முட்டுக் கொடுப்பதும் பெயரளவுக்கு கண்டனம் செய்வதும் தான் கேடுகெட்ட செயல்

கோவி.கண்ணன் சொன்னது…

// k.rahman கூறியது...
ரியாதில் மன்போஹா , அல் ஹியர் என்று இரண்டு ஏரியாக்கள் இருகின்றன. இங்கு டாக்ஸி டிரைவர்களே இரவில் வருவதற்கு யோசிப்பார்கள். ஒரு ஆண் குட தனியாக போவது ரிஸ்க் தான். போதை பொருட்கள் (ஹஷிஷ்), விபசாரம் எல்லாம் இங்கு சாதரணமாக நடக்கும் என்று அங்கு வசிபவர்கள் சொல்கிறார்கள். ஆனால் செய்திதாளில் அது பற்றி எல்லாம் வருவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு குட ஒரு பாகிஸ்தான் பெண்ணை வீடு புகுந்து கடத்தி கொண்டு போனதாகவும் திரும்ப அவரை பற்றி எந்த செய்தியுமே இல்லை என்று கேள்விபட்டேன். ஆனால் செய்திதாளில் இது போன்ற செய்திகள் வருவதில்லை.//

ஒரு உண்மையான முஸ்லிம் தன் மதத்தின் தவறுகளை வெளியே சொல்லமாட்டான் என்று திருவாளர் சுவனப்பிரியன் உங்களை இஸ்லாமிலிருந்து தள்ளி வைக்கக் கூடும்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதையெல்லாம் புணர்வு என்று சொல்லுவதை விட, பாலியல் வன்முறை என்ற பதம் சரியாக இருக்கும். அங்கு நடப்பது வெறும் வன்முறை மட்டுமே, பாலுறுப்புகளின் மேல்!//

நீங்கள் சொல்வதன் பொருள் புரிகிறது, ஆனால் வெறும் வன்முறை என்று கூறுவதில் பேருந்தில் உரசுவது, கைவைப்பது, ஈவ்டீசிங் உள்ளிட்டவற்றிற்கு பொருத்தமானதாக இருக்கலாம். விருப்பத்துடன் கூடுவதை உடலுறவு என்று சொல்வது போல் விருப்பம் இல்லாமல் வன்முறையாக நடத்துவதை வன்புணர்ச்சி என்று சொல்வதனால் தான் அந்த செயலில் அறுவெருப்பும் விபரீதமும் புரிய வைக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

renga சொன்னது…

//நீங்க பார்ப்பனரா? இல்லை உயர் சாதி இந்துவா? இல்லைனா தாழ்த்தப்பட்டவரா?//

நான் உங்களை மாதிரி அவன் பார்ப்பனர்,இவன் மேல் சாதி-கீழ் சாதி என்கிற வேற்றுமையைகளை பார்க்காத மலேசியாவில் வாழும் தமிழன்.மேலும் "பொத்திக்கொண்டு" போன்ற சொற்களை தவிர்த்தால் நலம்.

//மற்றபடி எந்த மதத்திற்கும் அவர் அக்மார்க் முத்திரைக் குத்தவில்லை//

16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்:-

வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.

23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-

புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்."

26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’

நன்றி:http://soriyaar1.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

//16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்:-//

பெரியார் ஒரு கலக்காரர் என்பது எல்லோருக்கும் தெரிந்தவை தான், மதம் மாறுங்கள் என்று வெளிப்படையாக எழுதுவதன் மூலம் இந்து கூடாரம் காலியாகும் அச்சத்துடன் இந்து ஆளுமை சக்திகள் தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திற்குள் மதிக்கப்படும் நிலைக்கு மாற்றிவிட முடியும் என்று நம்பினார்.

ஆனால் இப்பவும் அப்படியே தான் இருக்கிறது நிலைமை, இந்து மக்கள் தொகையை கட்டிக்காக மத்திய அரசே மதம் மாறினால் தாழ்த்தப்பட்டவர்களின் சலுகைகள் பரிக்கப்படும் என்பதை விதியாகவே வைத்திருக்கிறது.

இதையெல்லாம் வெளிப்படையாக தெரிந்தே "ரிசர்வேசனால் இந்தியாவே ஓட்டுகளுக்கான மண்டியிட்டு கிடக்கிறது" என்றும் புலம்புகிறார். இந்தியாவின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் மேலானவர்களாக இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் மதமாறினால் ரிசர்வேசன் அவர்களுக்கு தேவையற்றதாகிவிடும் ஏனெனில் அவர்கள் சென்று சேர்ந்துள்ள மதமே பெரும்பான்மை மதம் என்ற நிலையில் ஒட்டு மொத்த ஆளுமையும் அவர்களிடம் சென்றுவிடும், இதையெல்லாம் உணராது "ரிசர்வேசனால் எங்க பொழப்பு போச்சு, எங்க தகுதி போச்சு" என்று பொதுப்புத்தி விவாதம் செய்வோர் பலர்

renga சொன்னது…

இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் மேல் சாதி-கீழ் சாதி என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் மேல் சாதி-கீழ் சாதி என்று பிதற்றிக்கொண்டு திரிவீர்கள்? இந்தியாவைவிட்டு வெளியே கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.மலேசியா/சிங்கபூர்(கோவி அண்ணனுக்கு தெரியும்)வாழ் தமிழர்கள்/இந்தியர்கள், சாதி பார்க்காமல்(தான் எந்த சாதியன்று தெரியாமல்) பிற‌ இனங்களோடு போட்டி போட்டு அந்த நாட்டின்(இனவெறி அதிகம் உள்ள‌ மலேசியாவில்)பொருளாதார,கல்வி நிலைகளில் உச்சிக்கு சென்று. அந்த நாட்டின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்..

7.1% இந்தியர்கள் உள்ள மலேசியாவில் முடியும் என்றால் 100% இந்தியர்கள் உள்ள உங்கள் நாட்டில் இது முடியும்தானே?
இதோடு இந்த சர்ச்சயை முடித்துக்கொள்வோம்.

தணல் சொன்னது…

//வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.//

இதை அவர் காரணமில்லாமல் சொல்லியிருக்க மாட்டார்.

இஸ்லாமோ அல்லது கிறிச்துவமோ, தம்மைப் பின்பற்றும் மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் கருத்துகளைக் கொண்டிருப்பதில்லை என்று அவர் நினைத்ததால் அப்படிக் கூறியிருக்கலாம். அப்படிச் சொன்னதன் பின்னணியில் குரானையோ அல்லது பைபிளையோ வரிக்கு வரி வாசித்தறிந்திருக்க மாட்டார். மேலும், இதற்கு மாற்றாக அது என்ற பதத்திலேயே இம்மதங்களைக் குறிப்பிட்டிருப்பார்.

===========

//ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.//

//… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்."//

இந்தக் கூற்றுகளில் எல்லாம் எமக்கு ஏற்பில்லை. மேலும் அவர் கூறிய எல்லாமுமே சரியாக இருக்க வேண்டும் என்று நிரூபிக்க அவர் ஒன்றும் நான் வணங்கும் தெய்வமும் அல்ல.

பண்டைய தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களுக்கேற்ப, இயற்கையை, குழு மூத்தோர்களை (நாட்டார் தெய்வங்கள்) வணங்கி வந்தவர்கள். இஸ்லாம் இதற்கு நேர் எதிராக ஒற்றைப்படைத் தன்மையை வலியுறுத்துகிறது.

இஸ்லாம் இன்று எவ்வாறு உலக சாந்தியை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டு தானே வருகிறோம். பெரியாரது காலத்தில் இப்படியான அதிகாரவெறி மற்றும் மதவெறி கொண்டலையும் மதவாதிகள் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார், அப்போதிருந்த தமிழ் முஸ்லிம்களது கூற்றுகளை வைத்து அல்லது சூபியிசம் போன்றவற்றை அவ்வாறு கூறியிருக்கலாம். அப்போது கிருத்துவ மெசினரிகள் நாடார்கள் முன்னேற்றத்துக்கு பாதை வகுத்திருந்தன, அதை வைத்து கிருத்துவத்துக்கு ஆதரவாகச் சொல்லியிருக்கலாம்.

இவை யாவும் சுதந்திரத்துக்கு முன் சொல்லப்பட்ட கருத்துகள். சுதந்திர காலத்தில் ஏற்பட்ட மதக் கலவரங்களுக்குப் பின்னரும் இப்படிச் சொன்னாரா என்று தெரியவில்லை.

தணல் சொன்னது…

//7.1% இந்தியர்கள் உள்ள மலேசியாவில் முடியும் என்றால் 100% இந்தியர்கள் உள்ள உங்கள் நாட்டில் இது முடியும்தானே?//

முடியவே முடியாது :-)

சகோ, மலேசியாவில் இந்த ஏழும் ஒன்றாக நின்றால் தான் நிலைக்க முடியும். இங்கு அப்படியில்லை. அங்கு இனவெறிக் குழுக்கள் என்றால் இங்கு சாதிவெறிக் குழுக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//renga சொன்னது…
இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் மேல் சாதி-கீழ் சாதி என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் மேல் சாதி-கீழ் சாதி என்று பிதற்றிக்கொண்டு திரிவீர்கள்? இந்தியாவைவிட்டு வெளியே கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.மலேசியா/சிங்கபூர்(கோவி அண்ணனுக்கு தெரியும்)வாழ் தமிழர்கள்/இந்தியர்கள், சாதி பார்க்காமல்(தான் எந்த சாதியன்று தெரியாமல்) பிற‌ இனங்களோடு போட்டி போட்டு அந்த நாட்டின்(இனவெறி அதிகம் உள்ள‌ மலேசியாவில்)பொருளாதார,கல்வி நிலைகளில் உச்சிக்கு சென்று. அந்த நாட்டின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்..

7.1% இந்தியர்கள் உள்ள மலேசியாவில் முடியும் என்றால் 100% இந்தியர்கள் உள்ள உங்கள் நாட்டில் இது முடியும்தானே?
இதோடு இந்த சர்ச்சயை முடித்துக்கொள்வோம்.//

இதையெல்லாம் வீட்டை வாடகைக்கு விடுவதிலும் "பிராமணாள் ஒன்லி" என்று அறிவிப்புவிடுபவர்களுக்கு சொல்லிவிட்டு அவாளெல்லாம் திருந்த முயற்சிக்கிறா ன்னு மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லலாம்.

வருண் சொன்னது…

ரெங்கா: இந்தியாவில் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கு. சட்டம் ஒழுங்கே சரிவர இல்லை. இதை ஏழையாகவும், கீழ்சாதியினராகவும் நாம் இருந்தால் ரொம்ப கஷ்டம். வட இந்தியா பிஹார், ஹரியானா வெல்லாம் ரொம்ப ரொம்ப மோசம்.

வேகநரி சொன்னது…

நண்பர் ரெங்கா,பெரியார் பற்றி தெரிந்திராத பல வண்டவாளங்களை தந்துள்ளீர்கள். நன்றி.
நாங்களும் பலர் முகமதுவின் அரபு இஸ்லாமை, பெண் அடிமைதனம் கொண்ட இஸ்லாமை, தமிழர்களுக்கு பரிந்துரைத்த பெரியாரை பகுத்தறிவுவாதி என்று அழைப்பதையிட்டு தான் அதிசயமாக பார்த்து கொண்டிருக்கிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நண்பர் ரெங்கா,பெரியார் பற்றி தெரிந்திராத பல வண்டவாளங்களை தந்துள்ளீர்கள். நன்றி.
நாங்களும் பலர் முகமதுவின் அரபு இஸ்லாமை, பெண் அடிமைதனம் கொண்ட இஸ்லாமை, தமிழர்களுக்கு பரிந்துரைத்த பெரியாரை பகுத்தறிவுவாதி என்று அழைப்பதையிட்டு தான் அதிசயமாக பார்த்து கொண்டிருக்கிறோம்.//

பெரியார் 100 ஆண்டுகள் கடந்து இன்னும் உங்களையெல்லாம் கடுப்பேற்றுகிறார் என்றால் பெரியாரின் தாக்கம் விளங்கிக் கொள்ளக் கூடியதே.

:)

வவ்வால் சொன்னது…

பெரியார் சொன்னது என்பதற்காக அனைத்தையும் நம்ப பகுத்தறிவு கொண்ட யாரும் ஒப்ப மாட்டார்கள்.

பெரியாரின் கொள்கை முள்ளை முள்ளால் எடுப்பது போல இந்து மதத்தினை எதிர்க்க மாற்று மதம் உதவும் என நினைத்தார், ஆனால் அம்மாற்று மதத்தில் உள்ள பிற்போக்கு தனத்தினை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்திருக்கலாம்.

நம் மக்கள் மதமற்ற ஒன்று என்ற நிலையை விரும்பாததே காரணம்.

ஆரம்பத்திலிருந்தே மதம், வழிப்பாடு, கடவுள் நம்மை கரைசேர்ப்பான் என வாழ்ந்த மக்களை ,கடவுளே இல்லை என சொல்லி, இறைமறுப்பாளானக மாற சொன்னால் நம்பிக்கையற்று இருந்தார்கள், எனவே உனக்கு கடவுள் தானே வேண்டும், என இன்னொரு கடவுளை சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அடிப்படை நோக்கம், இந்து மத வர்னாசிரம கொள்கையை எதிர்க்க வேண்டும் என்பதே.

பெரியாருக்கு இந்து மத வர்ணாசிரம கொள்கையை எதிர்க்க வேண்டும் என்ற ஆசை எப்போது வந்தது என்ற கேள்வியில் இதற்கான விடை இருக்கிறது.

அவருக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை, பார்ப்பணர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது, என உணர்ந்த பின்னரே வெளியில் வந்து இறை மறுப்பு பிரச்சாரம் செய்யலானார்.

சுப்பிரமணிய அய்யர் ஒரு குருகுல கல்வி மையத்தினை வர்ணாசிரம அடிப்படையில் தென்காசியில் அமைத்து செயல்ப்படுத்தினார், அதற்கு காங்கிரசின் ஆதரவும் இருந்தது, அதனை கேள்விக்கேட்க துவங்கி பெரியாருக்கு காங்கிரஸ் தலைவர்களுடன் உரசல் உண்டாணது.

காங்கிரசில் பார்ப்பன தலைவர்களின் சொல்லுக்கு தனி மரியாதையும், மற்றவர்களுக்கு ஒன்றும் என்பதை காலப்போக்கில் உணர்ந்தார்.

இதுவே காங்கிரஸில் உரிய மரியாதை கிடைத்திருக்குமானால் பெரியார் நாத்திகம் பேசி இருக்க மாட்டார் என்பது உண்மையாகும்.

மதத்திற்கு மாற்று மதம் என்பது போல , கள்ளச்சாரம் எனப்படும் மெத்தனால் குடித்தவர்களை காப்பாற்ற எத்தனால் குடிக்க வைப்பது போல, பெரியார் கையாண்ட வழிமுறை அதனை வைத்துக்கொண்டு இஸ்லாம், கிருத்தவம் நல்ல மதம் அதனை தான் அனைவரும் ஆதரிக்கணும் என சொல்வது பகுத்தறிவல்ல.

மேலும் பெரியார் சொல்லிட்டார் எனவே இஸ்லாமிய மூடத்தனத்தினை எதிர்க்க கூடாது என்பவர்கள், பெரியார் சொன்ன பெண்களுக்கு சம உரிமை, புர்க்கா போடக்கூடாது என்பதனை கடைப்பிடிக்க வேண்டியது தானே.

பெரியார் மட்டுமே நாத்திகம்,பகுத்தறிவுக்கு சொந்தக்காரர் அல்ல,எனவே நாத்திகம், பகுத்தறிவு பேசுபவர்களை பெரியாரின் கொள்கையுடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாமல் , உண்மையான பகுத்தறிவின் படி செயல்ப்படுங்கள்.

வருண் சொன்னது…

*** வேகநரி கூறியது...

நண்பர் ரெங்கா,பெரியார் பற்றி தெரிந்திராத பல வண்டவாளங்களை தந்துள்ளீர்கள். நன்றி.
நாங்களும் பலர் முகமதுவின் அரபு இஸ்லாமை, பெண் அடிமைதனம் கொண்ட இஸ்லாமை, தமிழர்களுக்கு பரிந்துரைத்த பெரியாரை பகுத்தறிவுவாதி என்று அழைப்பதையிட்டு தான் அதிசயமாக பார்த்து கொண்டிருக்கிறோம்.***

வேகநரி: இஸ்லாமியப் பதிவருடன் கருத்துமோதல் செய்து நீங்க சாதிச்சது என்ன?

பெரியாரை காவு கொடுத்து இருக்கீங்க!
பெரிய சாதனைதான் போங்கப்பூ!

பெரியார் செத்ததுக்கப்புறமும் நெறைய ஆத்திகர்கள் போட்டிருந்த முகத்திரையை கிழிக்க இன்னைக்கும் உதவுறாரு. இல்லைனா நரினு சொல்லிக்கிட்டு அலைகிற உங்க நிலைப்படெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்??

Unknown சொன்னது…

வவ்வால் I like u for ur நேர்மை ji

குட்டிபிசாசு சொன்னது…


//பெரியார் மட்டுமே நாத்திகம்,பகுத்தறிவுக்கு சொந்தக்காரர் அல்ல,எனவே நாத்திகம், பகுத்தறிவு பேசுபவர்களை பெரியாரின் கொள்கையுடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாமல் , உண்மையான பகுத்தறிவின் படி செயல்ப்படுங்கள். //

//இஸ்லாம் இன்று எவ்வாறு உலக சாந்தியை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டு தானே வருகிறோம். பெரியாரது காலத்தில் இப்படியான அதிகாரவெறி மற்றும் மதவெறி கொண்டலையும் மதவாதிகள் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார், அப்போதிருந்த தமிழ் முஸ்லிம்களது கூற்றுகளை வைத்து அல்லது சூபியிசம் போன்றவற்றை அவ்வாறு கூறியிருக்கலாம். அப்போது கிருத்துவ மெசினரிகள் நாடார்கள் முன்னேற்றத்துக்கு பாதை வகுத்திருந்தன, அதை வைத்து கிருத்துவத்துக்கு ஆதரவாகச் சொல்லியிருக்கலாம். //

வவ்வால், தணல் கருத்துகளை வழிமொழிகிறேன்.

தணல் சொன்னது…

//இதுவே காங்கிரஸில் உரிய மரியாதை கிடைத்திருக்குமானால் பெரியார் நாத்திகம் பேசி இருக்க மாட்டார் என்பது உண்மையாகும்.//

வவ்வால், நடக்காமல் போகும் சாத்தியமுள்ளது என்ற ஒன்றை அதுவே உண்மையாகும் என்று கூற இயலாது (தர்க்கம்). இதுதான் பேசத் தூண்டியது என்றே எடுத்துக் கொண்டாலும், இது நடக்காதிருந்தால், வேறொரு நிகழ்வுக்காக அவர் பேச ஆரம்பித்திருக்கலாம் என்ற சாத்தியமும் இருக்கிறது.

வருண் சொன்னது…

பெரியார் தவிர, பகுத்தறிவு பற்றி பேசிய தமிழ் தலைவர்கள் (உண்மையான பகுத்தறிவுவாதிகள்) பெயர்களை சொன்னால் நல்லாயிருக்கும்!

பகுத்தறிவை மதப்பாகுபாடில்லாமல் பேசிஅ ஒரு 10 தமிழர்கள் (யோக்கியர்கள்) பெயர் வேண்டும், எனக்கு!

கோவி.கண்ணன் சொன்னது…

//பகுத்தறிவை மதப்பாகுபாடில்லாமல் பேசிஅ ஒரு 10 தமிழர்கள் (யோக்கியர்கள்) பெயர் வேண்டும், எனக்கு!//

வேண்டுமென்றால் பத்துமுறை
வருண்
வருண்
வருண்
வருண்
வருண்
வருண்
வருண்
வருண்
வருண்
வருண்
எழுதிக் காட்டட்டுமா ?

:)

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

கோவி: நான் சீரியஸாவேதான் கேக்கிறேன். பெரியார் சொன்ன எல்லாத்தையும் விட்டுப்புட்டு , இந்துமதம் உன்னை கீழ்சாதி என்று இழிவு படுத்தினால், நீ கிருத்தவனா இல்லை இஸ்லாமா, இல்லை புத்தமதத்துக்கு மாறுனு சொன்னதை சிலர் வேண்டுமென்றே ஊதி ஊதி பெரியாரைவிட சிறந்த பகுத்தறிவுவாதிகள் பலர் இருந்ததாக பிதற்றுவரிடம் கேட்கிறேன். சொல்லச் சொல்லுங்க யார் யாரென்று. அவர்கள் முகத்திரையை நான் கிழிக்கிறேன்!

குட்டிபிசாசு சொன்னது…

ஏன் தமிழ்நாடுனு கட்டம் கட்டுரிங்க! விரிவாகப் பாருங்க! சிறந்த பகுத்தறிவுத் தலைவர் அம்பேத்கார் தான்.

வருண் சொன்னது…

கு பி: ஏன் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறீங்க? எத்தனையோ கோடிப்பேரு இருக்கானுக. ஒரு பத்து பேரை சொல்ல முடியலையா? அம்பேத்காரைப் போயி பிடிச்சுட்டு வர்ரீங்க!

அப்புறம் அம்பேத்கார் சொன்ன மொழியை மொழிபெயர்க்க ந்ம்ம அய்யா டோண்டு ராகவன் போல மொழிபெயர்ப்பாளரை தேடனும்! இதெல்லாம் எதுக்கு?

வருண் சொன்னது…

***குட்டிபிசாசு சொன்னது…

ஏன் தமிழ்நாடுனு கட்டம் கட்டுரிங்க! விரிவாகப் பாருங்க! சிறந்த பகுத்தறிவுத் தலைவர் அம்பேத்கார் தான்.****

அவரு ஏன் இந்து மதத்தை விட்டு புத்த மதத்துக்கு ஓடிப்போனாரு?

பெரியார் சொன்னதை கேட்டா?? இல்லை பெரியார் சிந்தனையோட அவர் சிந்தனியும் ஒத்துப் போச்சா??

என்னத்தை சொல்லிக்கிட்டு இருக்கீங்க? :)))


வருண் சொன்னது…

***After publishing a series of books and articles arguing that Buddhism was the only way for the Untouchables to gain equality, Ambedkar publicly converted on October 14, 1956, at Deekshabhoomi, Nagpur.****

He was not able to survive in hindoosim as it is good for ONLY high-class morons!

குட்டிபிசாசு சொன்னது…

//பெரியாரைவிட சிறந்த பகுத்தறிவுவாதிகள் பலர் இருந்ததாக பிதற்றுவரிடம் கேட்கிறேன்.//

பெரியாரைவிட சிறந்த பகுத்தறிவுவாதி தமிழ்நாட்டில் இருந்ததாக யார் பிதற்றினார்கள்.

//அப்புறம் அம்பேத்கார் சொன்ன மொழியை மொழிபெயர்க்க ந்ம்ம அய்யா டோண்டு ராகவன் போல மொழிபெயர்ப்பாளரை தேடனும்! இதெல்லாம் எதுக்கு? //

அம்பேத்கார் என்ன பிரெஞ்சுலயா எழுதி இருக்கார்.

//அவரு ஏன் இந்து மதத்தை விட்டு புத்த மதத்துக்கு ஓடிப்போனாரு?//

புத்தமதம் ஒரு நாத்திக மதம். அதனால் தான் அவர் அதை பரிந்துரைத்தார்.

வருண் சொன்னது…

குட்டிபிசாசு :

Why dont you suggest our renga to convert himself to buddism as suggested by ambetkar the rationalist? LOL

வருண் சொன்னது…

***புத்தமதம் ஒரு நாத்திக மதம். அதனால் தான் அவர் அதை பரிந்துரைத்தார்.***

It does not matter, he got out of the hell-hole, he suggested low-class hindus to get out of that stupid religion! That is all counts!

EVR never said you should not get converted to buddism? Did he?

குட்டிபிசாசு சொன்னது…

//EVR never said you should not get converted to buddism? Did he?/7

நான் எப்போது சொன்னேன். நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள்.

//பெரியார் சொன்ன எல்லாத்தையும் விட்டுப்புட்டு , இந்துமதம் உன்னை கீழ்சாதி என்று இழிவு படுத்தினால், நீ கிருத்தவனா இல்லை இஸ்லாமா, இல்லை புத்தமதத்துக்கு மாறுனு சொன்னதை சிலர் வேண்டுமென்றே ஊதி ஊதி பெரியாரைவிட சிறந்த பகுத்தறிவுவாதிகள் பலர் இருந்ததாக பிதற்றுவரிடம் கேட்கிறேன். சொல்லச் சொல்லுங்க யார் யாரென்று. /7

கோவி.கண்ணன் சொன்னது…

வருண் ஆங்கிலத்துக்கு மாறுகிறார் என்றால் ரொம்ப டென்சனாக இருக்கிறார் என்று பொருள்

:)

வருண் சொன்னது…

கு பி: புத்தமதத்துக்கு மாறினவனையும் மாட்டுக்கறி தின்றார்கள்னு இந்த இந்து முண்டங்கள் போட்டுத் தள்ளிக்கிட்டுதான் இருக்குக. அதையும் தெரிஞ்சுக்கோங்க!

வருண் சொன்னது…

***கோவி.கண்ணன் கூறியது...

வருண் ஆங்கிலத்துக்கு மாறுகிறார் என்றால் ரொம்ப டென்சனாக இருக்கிறார் என்று பொருள்

:)***

அம்பேத்கார் தமிழ்லயா பேசுனாரு. அவரைப்பத்தி பேசும்போதுதான் மாறியது. நீங்கவேற! :)))

குட்டிபிசாசு சொன்னது…

//It does not matter, he got out of the hell-hole, he suggested low-class hindus to get out of that stupid religion! That is all counts!//

it matters. கடவுள் மறுப்பு என்று வரும்போது, அதையும் சொல்லியாக வேண்டும். சிந்தித்துதான் புத்தமதத்தை பரிந்துரைத்தார்.

வருண் சொன்னது…

***குட்டிபிசாசு சொன்னது…

//It does not matter, he got out of the hell-hole, he suggested low-class hindus to get out of that stupid religion! That is all counts!//

it matters. கடவுள் மறுப்பு என்று வரும்போது, அதையும் சொல்லியாக வேண்டும். சிந்தித்துதான் புத்தமதத்தை பரிந்துரைத்தார்.***

கடவுள் மறுப்புக்காக அம்பேத்கார் மாறவில்லை. இந்துமதம் தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்துது என்பதால், எனதை தெரிந்துகொள்ளவும்!

குட்டிபிசாசு சொன்னது…

//புத்தமதத்துக்கு மாறினவனையும் மாட்டுக்கறி தின்றார்கள்//

தரவு...தரவு...(சத்யராஜ் போல சொல்லணும்)

வருண் சொன்னது…

***Buddhism was the only way for the Untouchables to gain equality,**

கடவுளைப் பத்தி எல்லாம் அம்பேத்கார் கவலி படவில்லை! இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மரியாதை இல்லை என்பதே. அதைத்தன் பெரியாரும் சொன்னாரு.

வருண் சொன்னது…

***குட்டிபிசாசு கூறியது...

//புத்தமதத்துக்கு மாறினவனையும் மாட்டுக்கறி தின்றார்கள்//

தரவு...தரவு...(சத்யராஜ் போல சொல்லணும்)***

உலகத்துக்கே தெரியும். என்ன இப்படி இருக்கீங்க? :(

குட்டிபிசாசு சொன்னது…

//கடவுள் மறுப்புக்காக அம்பேத்கார் மாறவில்லை. இந்துமதம் தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்துது என்பதால், எனதை தெரிந்துகொள்ளவும்!//

இந்துமதத்தில் நிலவும் சாதி வேற்றுமை ஒழிய அதற்கு அவர் கிருத்துவ, இஸ்லாமிய மதங்களை தேர்ந்தெடுக்கவில்லை. புத்தமதத்தையே தேர்ந்தெடுத்தார்.

//In the same year, Ambedkar delivered a speech on Buddha Jayanti day in Delhi, in which he attacked Hindu gods and goddess and praised Buddhism because it was a religion based on moral principles. Besides, he pointed out, unlike the founders of other religions who considered themselves emissaries of god; the Buddha regarded himself only as a guide and gave a revolutionary meaning to the concept of religion. He said that Hinduism stood for inequality, whereas Buddhism stood for equality. //

குட்டிபிசாசு சொன்னது…

//உலகத்துக்கே தெரியும். என்ன இப்படி இருக்கீங்க? :(//

எனக்குத் தெரியலிங்க. கொடுங்க.

குட்டிபிசாசு சொன்னது…

நான் பார்த்த செய்தியில் முஸ்லிம், கிருத்துவர், தலித் போடப்பட்டு இருந்தது. 'புத்தமதம் மாறிய இந்துக்கள்' என நான் எங்கும் படிக்கவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

வருண் சொன்னது…

Violence breaks out at Indian beef-eating festival
Dalit students eating beef biriyani at the Osmania University in Hyderabad Dalit students argue they should have freedom to eat what they want

A beef-eating festival at a university in the Indian city of Hyderabad has led to clashes between rival sets of Hindu students, police say.

They say that Hindus who regard cows as sacred fought with low caste Dalit groups who organised the event.

About 1,500 people were fed beef biriyani as part of the festival late on Sunday evening.

Dalit groups want beef on the campus hostel menu. Right wing Hindu groups say eating beef is not Hindu practice.

Last year's event at Osmania University also ended in violence.

The BBC's Omer Farooq in the city says that says there has been tension for a few days now on the campus.

Our correspondent says that has been the case ever since organisers announced that the festival - held over the weekend - would go ahead. Right-wing Hindu groups soon afterwards declared their intention to stop it.

வருண் சொன்னது…

**In the same year, Ambedkar delivered a speech on Buddha Jayanti day in Delhi, in which he attacked Hindu gods and goddess and praised Buddhism because it was a religion based on moral principles. Besides, he pointed out, unlike the founders of other religions who considered themselves emissaries of god; the Buddha regarded himself only as a guide and gave a revolutionary meaning to the concept of religion. He said that Hinduism stood for inequality, whereas Buddhism stood for equality***

அவரு சமத்துவம் பத்திதான் பேசுறாரு. கடவுள் இல்லைனு எங்கே சொல்றாரு??

குட்டிபிசாசு சொன்னது…


//அவரு சமத்துவம் பத்திதான் பேசுறாரு. கடவுள் இல்லைனு எங்கே சொல்றாரு??//

*** unlike the founders of other religions who considered themselves emissaries of god; the Buddha regarded himself only as a guide ***

***In his last speech delivered in Bombay in May 24 1956, in which he declared his resolve to embrace Buddhism, Ambedkar observed:

Hinduism believes in God. Buddhism has no God. Hinduism believes in soul. According to Buddhism, there is no soul. Hinduism believes in Chaturvarnya and the caste system. Buddhism has no place for the caste system and Chaturvarnya.***

http://www.ambedkar.org/Babasaheb/Why.htm

குட்டிபிசாசு சொன்னது…

//வருண் கூறியது...

கு பி: புத்தமதத்துக்கு மாறினவனையும் மாட்டுக்கறி தின்றார்கள்னு இந்த இந்து முண்டங்கள் போட்டுத் தள்ளிக்கிட்டுதான் இருக்குக. அதையும் தெரிஞ்சுக்கோங்க!//

// வருண் கூறியது...

Violence breaks out at Indian beef-eating festival//

நான் பார்த்த செய்தியில் முஸ்லிம், கிருத்துவர், தலித் போடப்பட்டு இருந்தது. 'புத்தமதம் மாறிய இந்துக்கள்' என நான் எங்கும் படிக்கவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

வருண் சொன்னது…

****Hinduism believes in God. Buddhism has no God. Hinduism believes in soul. According to Buddhism, there is no soul. Hinduism believes in Chaturvarnya and the caste system. Buddhism has no place for the caste system and Chaturvarnya***

இது எதுக்கு?? அம்பேத்கார் என்ன சொல்லியிருக்காரு என்ன பிரசங்கம் செய்தார்னு மட்டும் சொல்லுங்க!

* அம்பேத்கார் புத்தமதத்துக்கு போனது கடவுள் அவர்களிடம் இல்லை என்பதால் அல்ல.

* அம்பேத்கார் கடவுளை இல்லை என்று விமர்ச்சதவோ, பிரசங்கம் பண்ணியதாக உங்க தொடுப்பு சொல்லவில்லை.

* அவர் புத்த மதத்துக்கு போனதுக்குக் காரணம் இந்துமதத்தில் தாழ்த்தப் பட்டவர்களை இழிவுபடுத்தினார்கள் என்பதற்காகவே.

வருண் சொன்னது…

Five men found clubbed to death for skinning a cow


n an agricultural town an hour's drive past the swamps and ruddy-soiled fields west of Delhi, a corpse has been laid out with care and reverence. It is being examined, to find out how and – crucially – when it died. Five men were beaten to death on Tuesday because of this body. It is a cow.

In an agricultural town an hour's drive past the swamps and ruddy-soiled fields west of Delhi, a corpse has been laid out with care and reverence. It is being examined, to find out how and – crucially – when it died. Five men were beaten to death on Tuesday because of this body. It is a cow.

The post-mortem examination, at a veterinary clinic in Jhajjar, will not throw any light on who killed the men. They were beaten to death with hoes and bricks on the doorstep of a police outpost, a few yards from some 70 policemen and a senior municipal administrator. Yesterday, the police had yet to make a single arrest.

The autopsy on the cow is to clarify whether the dead men killed the animal – considered sacred by Hindus – for the purpose of skinning it, or whether it was already dead. Some local people say the men made a living from selling cow hides, but only used animals that had expired.

The lynch mob was convinced the five men killed the animal, committing a terrible sacrilege and a crime under India's Cow Slaughter Act.

Blood still stains the road where the men – Virender Singh, Tofa Ram, Raji Ram, Dayanard Ram and Kailash Baljit – were beaten to death in the village of Dulena.

Two of the witnesses, both senior local officials, gave their version of events."The crowd was just impossible to control," said Deputy Superintendent Narendra Singh, adding that a team of 40 police was trying to track the killers.

R P Singh, a magistrate from Jhajjar, said the men had been discovered skinning the cow. A crowd took them to the police post where the five were locked up. But it was a Hindu holiday and before long, he said, a frenzied mob of several thousand had gathered, chanting "Gau mata ki jai" – "Long live the mother cow". They broke into the men's cell and lynched them.

He said the police, who were unarmed, were hopelessly outnumbered.

Remorse was not much in evidence in the neighbourhood. "Killing a cow is like killing a person," said one man, a tree-cutter. "If you do it, you deserve to die."

On Wednesday, protesters demonstrated in a nearby town, not against the murders, but the killing of the cow.

வருண் சொன்னது…


Murder of 'cow killers' in India prompts much soul searching

Share 2
Email

Luke Harding in New Delhi
The Guardian, Tuesday 22 October 2002 10.08 EDT

A Hindu religious leader has welcomed the murders of five men accused by a mob of killing a cow, India's most sacred animal, claiming that the life of the creature is more important than that of a human.

The victims in the north Indian state of Haryana hailed from the downtrodden Dalit caste, called "untouchables".

Police claim a 4,000-strong mob, incensed by the cow skins carried in the men's truck, attacked the Dalits and killed them. Other witnesses, however, insist the police killed them because they had refused to pay a bribe. Officers then allegedly spread the word that the Dalits had killed a cow to induce a vengeful mob.

To compound suspicions of a cover-up, the officer in charge of the case carried out a postmortem late last week - on the cow. And police have yet to make any arrests.

The case touches on several themes in modern Indian society: police unaccountability; the rise of violent Hindu extremism; and the persistence of India's ancient caste system.

It also raises the question: can a cow's life be worth more than that of a human? The answer, says Giriraj Kishore, a leader of the extremist religious Hindu group, Vishwa Hindu Parishad, is yes. Respected Hindu papers such as the Indian Express called it horrific.

Ratan Singh, whose 27-year-old son was burned to death, said the families had been skinning cows for generations, that they had been working on council contracts, and that their truck would never have carried a carcass.

He said that one man was so seriously beaten that police had "to spread the story that they were killing a cow".

The men's bodies - "half-burned, their eyes gouged out", were found in hospital.

"Untouchability" survives in many Indian villages, despite laws designed to protect Dalits, and to reserve jobs for them in the civil service.

Although Dalits are at the bottom of the caste heap, some point out that the cows' lot in India is not always a happy one either - thousands die each year after ingesting plastic bags from rubbish heaps.

குட்டிபிசாசு சொன்னது…

நீங்கள் கொடுத்த எந்தத் தொடுப்பிலும் புத்தமதம் மாறிய இந்துக்கள் என்றில்லை.

குட்டிபிசாசு சொன்னது…

//அவர் புத்த மதத்துக்கு போனதுக்குக் காரணம் இந்துமதத்தில் தாழ்த்தப் பட்டவர்களை இழிவுபடுத்தினார்கள் என்பதற்காகவே.//

ஆம். ஆனால் அதற்கு அவர் பரிந்துரைத்தது கடவுள் உள்ள மதம் அல்ல.

////அவரு சமத்துவம் பத்திதான் பேசுறாரு. கடவுள் இல்லைனு எங்கே சொல்றாரு??//
இதற்கான பதிலைக் கொடுத்தேன்.

வருண் சொன்னது…

கு பி: இப்போ என்ன சொல்லப்போறீங்க? அந்த தலித்கள் இந்துக்களா? இல்லை புத்தமதத்தை சேர்ந்தவங்களா? னா?? :)))

அது ரொம்ப முக்கியம் பாருங்க.

வேணும்னா புத்தமதத்தை சேர்ந்த தலித்கள் மாடு தின்னது, இல்லை கொன்னதுக்காக கொலை செய்யப்பட்ட தொடுப்பையும் தேடி எடுத்து தர்ரேன்.

மாட்டு இறைச்சி விரும்பி சாப்பிடும் தலித்களுக்கு புத்த மதம் மட்டுமன்றி, இஸ்லாம் மற்றும் கிருத்தவம்தான் சிறந்த இடம்.

எதுக்கு இந்துவா இருந்து இவனுககிட்ட் அடி வாங்கி சாகனும்??

வருண் சொன்னது…

***குட்டிபிசாசு கூறியது...

நீங்கள் கொடுத்த எந்தத் தொடுப்பிலும் புத்தமதம் மாறிய இந்துக்கள் என்றில்லை.***

நீங்க சீரியஸாதான் விவாதம் பண்ணுறீங்களா?

அவர்கள் புத்தமதத்தை சார்ந்தவரா இல்லை இந்துக்களா என்பது ஏன் முக்கியம்.

However I can still find you dalits who follow buddism got killed because of skinning a cow too! I just have to spend little more time! That's all

குட்டிபிசாசு சொன்னது…

// வருண் கூறியது...

கு பி: புத்தமதத்துக்கு மாறினவனையும் மாட்டுக்கறி தின்றார்கள்னு இந்த இந்து முண்டங்கள் போட்டுத் தள்ளிக்கிட்டுதான் இருக்குக. அதையும் தெரிஞ்சுக்கோங்க!//

நீங்கள் இவ்வாறு ஒரு தகவலைக் கொடுத்ததால் தான் கேட்கிறேன். நான் கேட்கும் இந்தக் கேள்வியால் சாதி இந்துக்களுக்கு கொடி பிடிப்பதாக நினைக்கத் தேவையில்லை.

தமிழ்நாட்டை விட அதிகமாக வட இந்திய மானிலங்களில் இந்துக்களின் சாதிவெறி அதிகம். அதனை நான் நேரிலும் பார்த்திருக்கிறேன்.

குட்டிபிசாசு சொன்னது…

//However I can still find you dalits who follow buddism got killed because of skinning a cow too! I just have to spend little more time! That's all///

தேடிச் சொல்லுங்கள்.

வவ்வால் சொன்னது…

ஶ்ரீனி ,

நன்றி!

நீங்களூம் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படிச்சிட்டிங்கன்னு தெரியுது :-))

பெரியார் 1925 வரையில் காங்கிரசுக்காக உழைத்தார். அவர் மதராஸ் மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த போது, விவி.சுப்ரமணிய அய்யர் நடத்திய குருகுலத்தில் பார்ப்பனியர்களுக்கு தனி உணவு ,சிறப்பு சலுகை மற்றவர்களுக்கு தனியான "கவனிப்பு" என வேறுபாடு இருப்பது புகாராக வந்தது , ஏன் எனில் அக்குருகுலம் காங்கிரஸ் கட்சி நிதியில் நடத்தப்படுவது , அதனை கேட்டு காந்திக்கு கடிதம் எழுதி முறையிட்டார்,ஆனால் பெரியார் சொன்னதை பார்ப்பனிய தலைவர்கள் மூலம் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார் விவி.சுப்ரமணிய அய்யர்.

அப்படி இருந்தும் பெரியார் காங்கிரஸ்ஸுல் தான் 1925 வரைக்கும் இருந்தார்.

நான் பிராமின்ஸ் என கொள்கையுடன் மெட்ராஸ் திராவிடன் அசோசியேஷன் என , நடேச முதலியார், மாதவன் நாயர் எல்லாம் 1906 இல் இயக்கம் ஆரம்பிச்சாச்சு, பின்னர் அதுவே நீதிக்கட்சி ஆயிற்று , 1919 இல் நீதிக்கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ் பெரியாரைத்தான் பயன்ப்படுத்தியது.

இதெல்லாம் வரலாறு.

1925 க்கு அப்புறமாக தான் பெரியாருக்கு திராவிடர் என்ற எண்ணமே தோன்றியது,ஆனால் அதற்கு முன்னரே பிராமண எதிர்ப்பு, திராவிடம் என சொல்லி நீதிக்கட்சி செயல்ப்பட்டு வந்ததால் ,பெரியார் கூடுதலாக ,கடவுள் இல்லை, கூடவே நீதிக்கட்சியின் பலவீனமான , மத்திய ஜாதியக்கட்சி என்ற இமேஜ் ,எனவே அதனால் நீதிக்கட்சியை விட புரட்சிகரமான இயக்கம் என நிறுவ தலித் பிரச்சினைகள் என எடுத்துக்கொண்டார்.

ஏன் எனில் தலித்துகளுக்கு காங்கிரசில் உரிய் மரியாதை இல்லை நீதிக்கட்சியிலும் இல்லை.

தனது இயக்கத்திற்கு மற்ற இயக்கத்தினரால் கைவிடப்பட்டவர்களின் ஆதரவை திரட்டவே இந்நிலைப்பாடு.

இதன் மூலம் பெரியார் ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம் ஓரளவு கவனிக்கப்பட்டது. பின்னர் 1939 ல் பெரியாரே நீதிக்கட்சியில் இணைந்து கொண்டார், நீதிக்கட்சியில் படித்த, மற்றும் நிலச்சுவாந்தார்களான, பனகல் ராஜ, பொப்பிலி ராஜா,சர்.பிட்டி தியாகராய செட்டியார், மாதவன் நாயர்(அப்போது இறந்துவிட்டார்), நடேச முதலியார், சுப்புராயலு ரெட்டியார் போன்றவர்களே இருந்தார்கள், அவர்களில் பலர் ஒதுங்கிவிடவே பெரியாரே நீதிக்கட்சியின் சகலமும் ஆனார், பின்னர் 1944 இல் தான் திராவிடர் கழகம் ஆக நீதிக்கட்சியை மாற்றினார், இதனால் பழைய நீதிக்கட்சியினர் மீண்டும் தனித்து இயங்கலானார்கள்.

இதெல்லாம் விக்கி பீடியாவிலே இருக்கு ,அதை படித்தாலே பெரியாரின் அரசியல் ஓரளவு புரியும்.

காங்கிரசை எதிர்க்கவேண்டும் எனவே காங்கிரசின் பலவீனங்களை தனது இயக்கத்தின் கொள்கையாக முன்னிறுத்தலானார் எனலாம்.

காங்கிரஸ் ஒரு இந்து பூர்ஷ்வா கட்சி என்றே பெயரெடுத்து இருந்தது, எனவே கிருத்துவர்கள், முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல் கொடுக்கும் இயக்கமாக பெரியாரின் இயக்கம் செயல்ப்பட்டது எனலாம்.

பெரியாரின் கொள்கை , அடிப்படையில் வேறு ,அம்பெத்காரின் கொள்கை அவரது சொந்த பாதிப்பினால் உருவானது. அம்பேத்கார் பிராமணர்களால் மட்டும் பாதிக்கப்படவில்லை,மற்ற அனைத்து உயர் சாதி இந்துக்களாலும் பாதிக்கப்பட்டார்.

எனவே அவரின் கொள்கை வலியாலும், அவமானத்தாலும் வடிவமைக்கப்பட்டது, பெரியாரின் கொள்கை நம்மை விட பிராமணர்கள் உயர்வா என்ற கேள்வியால் உருவானது.

பெரியார் சொன்னது பக்கத்து இலைக்கு பாயம் போடு என்பது போல, அம்பேத்கர் சொன்னது எனக்கு சோறு போடு என்பதாகும்.

பெரியார் தலித் முன்னேற்ரம் என பேசியது பிரசங்கமாக போய்விட்டது என்றே நினைக்கிறேன், இல்லை எனில் அவர் காலத்திலேயே ,அவரது சீடர் முதல்வராக இருந்த போது மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம், இன்றளவும் தமிழ்நாட்டில் தலித் முதல்வராக முடியாது.

ஆனால் அம்பெத்கரின் கொள்கையால் உத்திரப்பிரதேசத்தில் ஒரு தலித் முதல்வராக முடிந்தது. மாயாவதி ஊழல்வாதி என்றாலும் ,அவரால் செய்ய முடிந்ததை தமிழ்நாட்டில் யாராலும் ஏன் செய்ய முடியவில்லை.

இந்த வகையில் அம்பேத்கரின் தாக்கம் பெரியாரை விட அதிகம் எனலாம்.

பெரியார் அளவுக்கு கூட தமிழ்நாட்டில் யாரும் முயற்சிக்காத நிலையை கருதும் போது ,பெரியாரும் தமிழ்நாட்டில் இல்லை என்றால் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்றே சொல்லலாம்.

இன்று தமிழ்நாட்டில் பெரியார் கொள்கையே இல்லை என்ற நிலைதான் உள்ளது. பெரியார் ஆரம்பித்த இயக்கத்திலேயே அக்கொள்கை இல்லாத போது ,அவரது சீடர்களின் இயக்கத்தில் எதிர்ப்பார்ப்பது முட்டாள் தனமே :-))

குட்டிபிசாசு சொன்னது…

//பெரியாரின் கொள்கை , அடிப்படையில் வேறு ,அம்பெத்காரின் கொள்கை அவரது சொந்த பாதிப்பினால் உருவானது. அம்பேத்கார் பிராமணர்களால் மட்டும் பாதிக்கப்படவில்லை,மற்ற அனைத்து உயர் சாதி இந்துக்களாலும் பாதிக்கப்பட்டார்.

எனவே அவரின் கொள்கை வலியாலும், அவமானத்தாலும் வடிவமைக்கப்பட்டது, பெரியாரின் கொள்கை நம்மை விட பிராமணர்கள் உயர்வா என்ற கேள்வியால் உருவானது.

பெரியார் சொன்னது பக்கத்து இலைக்கு பாயம் போடு என்பது போல, அம்பேத்கர் சொன்னது எனக்கு சோறு போடு என்பதாகும்.

பெரியார் தலித் முன்னேற்ரம் என பேசியது பிரசங்கமாக போய்விட்டது என்றே நினைக்கிறேன், இல்லை எனில் அவர் காலத்திலேயே ,அவரது சீடர் முதல்வராக இருந்த போது மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம், இன்றளவும் தமிழ்நாட்டில் தலித் முதல்வராக முடியாது.

ஆனால் அம்பெத்கரின் கொள்கையால் உத்திரப்பிரதேசத்தில் ஒரு தலித் முதல்வராக முடிந்தது. மாயாவதி ஊழல்வாதி என்றாலும் ,அவரால் செய்ய முடிந்ததை தமிழ்நாட்டில் யாராலும் ஏன் செய்ய முடியவில்லை.

இந்த வகையில் அம்பேத்கரின் தாக்கம் பெரியாரை விட அதிகம் எனலாம்//

வவ்வால்,

எங்கிருந்து வந்து இப்படி ஒரே போடா போட்டுட்டே.

குட்டிபிசாசு சொன்னது…

//பெரியார் அளவுக்கு கூட தமிழ்நாட்டில் யாரும் முயற்சிக்காத நிலையை கருதும் போது ,பெரியாரும் தமிழ்நாட்டில் இல்லை என்றால் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்றே சொல்லலாம்.//

உண்மை தான். என்னோட அப்பாவும் இதைச் சொல்லுவார். பெரியார் இல்லாட்டி தமிழ்நாட்டில் நம்ம ஆளுங்க ஒருத்தன் அரசுவேலைக்கு போய் இருக்க முடியாதுனு சொல்லுவார்.

குட்டிபிசாசு சொன்னது…

//பெரியார் தலித் முன்னேற்ரம் என பேசியது பிரசங்கமாக போய்விட்டது என்றே நினைக்கிறேன், இல்லை எனில் அவர் காலத்திலேயே ,அவரது சீடர் முதல்வராக இருந்த போது மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம், இன்றளவும் தமிழ்நாட்டில் தலித் முதல்வராக முடியாது.//

அண்ணாவும் ,மஞ்ச துண்டும் தானே. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண, ஏழைய பர்மனென்டா ஏழையாவே வச்சிகிட்டு இருந்தாங்க.

வருண் சொன்னது…

ஒபாமா அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஆவதற்கு முன்னால கருப்பர் அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஆவது சாத்தியமில்லை என்றார்கள்.

காமராஜ் ஒண்ணும் உயர்சாதியைச் சேர்ந்தவரல்ல. அவர் முதல்வராக முடிந்தது.

அதே நேரத்தில் ஒரு சரியான தலித் லீடர் வந்திருந்தால், முதல்க்வராயிருக்கலாம். ஏன் இப்போவும் மே பி ஒரு நடிகர் நிச்சயம் (ரஜினி லெவெலுக்கு உயர்ந்தால்) அவரு தலித்தாக இருந்தாலும் முதல்வரலாகலாம்தான்.

குட்டிபிசாசு சொன்னது…

//காமராஜ் ஒண்ணும் உயர்சாதியைச் சேர்ந்தவரல்ல. அவர் முதல்வராக முடிந்தது.//

அப்படிப் பார்த்தால் அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர், ஜானகி, பன்னீர்செல்வம் என பட்டியல் நீளும். தலித் ஏன் வரவில்லை என்பதே கேள்வி.

//ஏன் இப்போவும் மே பி ஒரு நடிகர் நிச்சயம் (ரஜினி லெவெலுக்கு உயர்ந்தால்) அவரு தலித்தாக இருந்தாலும் முதல்வரலாகலாம்தான்.//

முதல்ல ஒரு தலித் பெரிய நடிகர் ஆகட்டும். பிறகு முதல்வரைப் பற்றி யோசிப்போம்.

வருண் சொன்னது…

கு பி: ஸ்ட்ராங்க கம்யுனிட்டிகள் முக்குலத்தோர், வன்னியர்கள்தான். இவ்ங்கதான் கனிசமா இருக்காங்க. இவங்களே இன்னும் முதல்வராக வில்லை. முக்குலத்தோரில் "பொம்மை பன்னீர் செல்வம்" முதல்வரா இருந்தாருனு எதுவும் காமெடி பண்ணாதீங்க. அந்த ஒரு சூழலில் காமராஜ் முதல்வரானது பெரிய விடயம். ஒரு சரியான டலிட் லீடர் இல்லைனா நடிகர் (விஜய் டலிட்டா என்னனு தெரியலை) பெரியாளானா, நிச்சயம் முதல்வராகலாம்தான்.

வருண் சொன்னது…

***முதல்ல ஒரு தலித் பெரிய நடிகர் ஆகட்டும். பிறகு முதல்வரைப் பற்றி யோசிப்போம்.***

மொதல்ல பெரியாளான நடிகர் டலிட் தன் சாதியை வெளியே சொல்லக்கூடாது. அது ரொம்ப முக்கியம்! :)))

குட்டிபிசாசு சொன்னது…

***விஜய் டலிட்டா என்னனு தெரியலை**

ஜோசப் விஜய்

வருண் சொன்னது…

விஜய் "ஃபர்னாண்டோ" என்கிற வகுப்பை சேர்ந்தவர்னு நெனைக்கிறேன். அவர்கள் எஸி/எஸ்டி கெடையாது. இருந்தாலும் விஜய் முதல்வரா வந்தாலே பெரிய விடயம்தான். :))

வருண் சொன்னது…

///***விஜய் டலிட்டா என்னனு தெரியலை**

ஜோசப் விஜய்///

உங்களுக்கு டலிட் கிருத்தவர்கள் எல்லாம் இருக்காங்க தெரியாதா? என்ன அவங்க டெக்னிக்கல்லி பி சி :)))

குட்டிபிசாசு சொன்னது…

//இருந்தாலும் விஜய் முதல்வரா வந்தாலே பெரிய விடயம்தான்.//

விஜய் எல்லாம் சினிமால பார்க்கவே எரிச்சலாக இருக்கு. முதல்வரா வந்தா?? முடியல:))

வருண் சொன்னது…

I hate Vijay too. I am an anti-vijay fan but he has a chance! It is not what we like. The mass!

தணல் சொன்னது…

//அம்பேத்கார் புத்தமதத்துக்கு போனது கடவுள் அவர்களிடம் இல்லை என்பதால் அல்ல.//

Varun, I understand that Ambedkar chose Buddhism instead of Islam or Christianity when he wanted to move out of Hinduism. And as a religion, he found Buddhism better than these two.

I feel the same too. The ideology of Buddhism is better than the other two/three. Of course, any 'religion' can progress into fanaticism/madness as in the case of Buddhist monks in Srilanka.

தணல் சொன்னது…

//இருந்தாலும் விஜய் முதல்வரா வந்தாலே பெரிய விடயம்தான். :))//

I don't think that will happen in the near future. DMK would do everything possible to crush him down. They would not want another MGR!

தணல் சொன்னது…

//http://idlyvadai.blogspot.com/2012/09/blog-post_23.html//

I appreciate what Periyar (or who so ever has preached for paguththarivu) has done when I come across such Hindu religious fanaticism! At least now we have got the ability to understand these pitfalls. These are published in the popular magazines, so such things will reach a wide number of people. They would make even those living simple lives to consider these things seriously as a way to attain higher position in life.

வருண் சொன்னது…

தணல்:

எனக்கு என்ன புரியலைனா, தாழ்த்தப் பாட்டவர்கள் மதம் மாறச்சொல்லி அம்பேத்கார் வலியுறுத்தினார். அவர் புத்தமதத்தை சொன்னதுக்கு காரணம் வட இந்தியாவில் அருகில் இருந்ததாகக்கூட இருக்கலாம். என்ன இருந்தாலும் புத்த மதம் நம்ம நாட்டு மதம்.

சரி, இஸ்லாம் வேணாம், கிருந்த்தவம் வேணாம்.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் என்னைப்போல் புத்தாவை பிடித்தவர்கள் புத்த மதத்துக்குப் போவதை உயர்சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்கள் சரி என்பார்கள்னு நீங்க நெனைக்கிறீங்களா?

அதுதான் இல்லை!!! அதையும் சரினு சொல்ல மாட்டார்கள். நான் இந்த ரிசேஎர்ச் காலங்காலமா பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.

இப்போ இஸ்லாம் தப்பு, கிருத்த்வம் சரியல்லனு சொல்லுவானுக, பெள்த்தம்னு வரும்போது எதையாவது சொல்லுவானுக. அதுதான் உண்மை!

தாழ்த்தப்பட்டவரை மதம் மாறவிடாமல் சட்டம்லாம் கொண்டு வந்து இருக்கானுக நார்த்தல.

வருண் சொன்னது…

The fact is, Brahmins are not only agianst Islam and Christianity, they are against converting to Buddism too! You have to analyze them carefully to know this truth. I am telling you, I have talked to several, they will not say Budhdhism is good way to go! THEY WILL NOT and THEY CAN NOT!

வருண் சொன்னது…

மாட்டு இறைச்சி அவனுக்கு பிடிக்கிது சாப்பிடுறான். உலகம் முழுவதும் சாப்பிடுறான்!

* யூதர்கள்

* இஸ்லாமியர்கள்

* வெள்லையர்கள்

* சைனீஸ், ஜாப்பனீஸ்

இந்த மூதேவிகள் மட்டும் மாட்டைக் கும்பிட்டுக்கிட்டு, மாடு சாபிடுறவனையெல்லாம் அடிக்கிறது கொல்றதுனு திரியுதுக. முட்டாப்பயலுக. இவனுகளுக்கு வக்காலத்து வாங்க இந்த திராவிட முண்டங்கள் வேற!

தணல் சொன்னது…

//தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் என்னைப்போல் புத்தாவை பிடித்தவர்கள் புத்த மதத்துக்குப் போவதை உயர்சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்கள் சரி என்பார்கள்னு நீங்க நெனைக்கிறீங்களா?//

புத்த மதத்துக்கு எதிரான (இலங்கை புத்த பிக்குகளின் ஆதிக்க வெறி தவிர்த்து) விடயங்களை அதிகம் வாசித்ததில்லை. புத்தத்தின் கருத்துகளும் பெரிய விமர்சனத்துக்குள்ளானதில்லை. அப்படி புத்த மதத்துக்கு தானே மாறுபவர்களைத் தடுக்க எவனுக்கும் அதிகாரமில்லை.

ஆனால் புத்த மதமும் ஆக்டிவாக பரப்பப்பட்டால் எதிர்ப்பு கிளம்பும் என்றே நினைக்கிறேன். இங்கே மதம் என்பது முக்கியமான அரசியலும் கூட. மதத்தை வைத்து குழு சேர்த்தல், குழுவை வைத்து அதிகாரமேறுதல். மதம் பரப்பப்டுவதில் அதை எதிர்பதன் பின்னணியில் எல்லாமே அரசியல் உள்ளது.

வருண் சொன்னது…

***புத்த மதத்துக்கு எதிரான (இலங்கை புத்த பிக்குகளின் ஆதிக்க வெறி தவிர்த்து) விடயங்களை அதிகம் வாசித்ததில்லை. புத்தத்தின் கருத்துகளும் பெரிய விமர்சனத்துக்குள்ளானதில்லை. அப்படி புத்த மதத்துக்கு தானே மாறுபவர்களைத் தடுக்க எவனுக்கும் அதிகாரமில்லை.

ஆனால் புத்த மதமும் ஆக்டிவாக பரப்பப்பட்டால் எதிர்ப்பு கிளம்பும் என்றே நினைக்கிறேன். இங்கே மதம் என்பது முக்கியமான அரசியலும் கூட. மதத்தை வைத்து குழு சேர்த்தல், குழுவை வைத்து அதிகாரமேறுதல். மதம் பரப்பப்டுவதில் அதை எதிர்பதன் பின்னணியில் எல்லாமே அரசியல் உள்ளது. ***

Tell me one Brahmin who converted himself to Buddism! You can not find them!

வருண் சொன்னது…

இந்த புத்த மதம் பத்தி பேசும்போது நீங்க ஈழத்தமிழர்கள் உணர்வுகளை தள்ளி வச்சுடனும். அவங்க இதை வேற மாதிரி பார்க்கிறாங்க.

வருண் சொன்னது…

***புத்த மதத்துக்கு எதிரான (இலங்கை புத்த பிக்குகளின் ஆதிக்க வெறி தவிர்த்து) விடயங்களை அதிகம் வாசித்ததில்லை***

I have talked to people. I am telling you, They can not appreciate Buddism. I never understand why. That is how I realize these guys DIFFERENT. They are NOT us!

தணல் சொன்னது…

//பெரியார் அளவுக்கு கூட தமிழ்நாட்டில் யாரும் முயற்சிக்காத நிலையை கருதும் போது ,பெரியாரும் தமிழ்நாட்டில் இல்லை என்றால் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்றே சொல்லலாம்.//

ஆம்!

//எனவே அவரின் கொள்கை வலியாலும், அவமானத்தாலும் வடிவமைக்கப்பட்டது, பெரியாரின் கொள்கை நம்மை விட பிராமணர்கள் உயர்வா என்ற கேள்வியால் உருவானது.//

கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும். பெரியார் மத்திய சாதியைச் சேர்ந்தவர், அம்பேத்கார் படியில் இன்னும் கீழே இருந்தவர்.

தலித் முதல்வராக வர முடியும், ஆனால் அவர் தலித்தியத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்காமல் பெரும்பான்மை சாதியினருடன் இணக்கமாக உள்ளவர் என்றால். அப்துல் கலாம் என்ற இஸ்லாமியரைப் போல. ஒபாமாவும் அப்படியே. பெரும்பான்மையினரது நாட்டில் சிறுபான்மையினர் மேலே வர இப்படியான முகம் தேவைப்படுகிறது.

காட்டான் சொன்னது…

வருண் நாத்திகம் என்னும் பேரில் எல்லா பிளாக்கிலும் வாந்தி எடுப்பது மட்டுமல்ல இப்ப சுனா பானாக்களுக்கு மாமா வேலையும் பார்க்கிறார். இவர் இந்துக்களை எதிர்பதை போல மற்றய மதங்களை எதிர்பதில்லை நாத்திகத்தின் பேரில் முஸ்லீம்களுக்கு வால் பிடிப்பதை மட்டுமே செய்கிறார்..!!
ம் முஸ்லீம்கள் இந்து பேரில் இருப்பது ஒன்றும் பதிவுலகில் புதிதில்லை வருண் என்ற பெயரும் விதிவிலக்கில்லை..! (இந்த பின்ணூட்டம் போட காரணம் வருண் தன்னுடைய மதத்தை தாங்கிப்பிடிக்க இந்து பெயரில் இந்துக்களை கேவலப்படுத்துவதாலேயே..) அசலாமு அலைக்கும் வருண்?

தணல் சொன்னது…

//Tell me one Brahmin who converted himself to Buddism! You can not find them! //

Why should he? :-) They don't have the need to change.

When religion is fed during their childhood, it is very difficult to come out of it.

But there are atheists who were by birth brahmins. Like Kamal. You may find them here as bloggers as well.

காட்டான் சொன்னது…

சகோ வருண் பதிவுலகில் எல்லோரும் உங்களுக்கு அறிவுரை சொல்வதைபோல நீங்கள் நல்ல மனநல வைத்தியரை பாருங்கள்..!!

வருண் சொன்னது…

***காட்டான் கூறியது...

சகோ வருண் பதிவுலகில் எல்லோரும் உங்களுக்கு அறிவுரை சொல்வதைபோல நீங்கள் நல்ல மனநல வைத்தியரை பாருங்கள்..!! ***

நான் கண்ட காட்டான் சொல்வதை எல்லாம் மதிப்பதில்லை! காட்டானுக்க் நான் செய்த ஒரே உதவி நீர் என் தளத்தை தொடருவைதை தடை செய்து இருக்கேன். எங்கேயாவது நல்ல தளங்கள் பார்த்து போய் தொலை!

வருண் சொன்னது…

***தணல் கூறியது...

//Tell me one Brahmin who converted himself to Buddism! You can not find them! //

Why should he? :-) They don't have the need to change.

When religion is fed during their childhood, it is very difficult to come out of it. ***

I beg to disagree. There are people like Richard Feynman who are not able to tolerate "PREACHING of religious NONSENSE" even when they were YOUNG! They criticize their religion by quoting their "bitter experience" of preaching religious nonsense from their parents or in the church.

வருண் சொன்னது…

***But there are atheists who were by birth brahmins. Like Kamal.***

I did not see him appreciating Buddism, yet.

*** You may find them here as bloggers as well.***

Unless you are one of them, I have not seen one! LOL

வருண் சொன்னது…

***காட்டான் சொன்னது…

வருண் நாத்திகம் என்னும் பேரில் எல்லா பிளாக்கிலும் வாந்தி எடுப்பது மட்டுமல்ல இப்ப சுனா பானாக்களுக்கு மாமா வேலையும் பார்க்கிறார். இவர் இந்துக்களை எதிர்பதை போல மற்றய மதங்களை எதிர்பதில்லை நாத்திகத்தின் பேரில் முஸ்லீம்களுக்கு வால் பிடிப்பதை மட்டுமே செய்கிறார்..!!
ம் முஸ்லீம்கள் இந்து பேரில் இருப்பது ஒன்றும் பதிவுலகில் புதிதில்லை வருண் என்ற பெயரும் விதிவிலக்கில்லை..! (இந்த பின்ணூட்டம் போட காரணம் வருண் தன்னுடைய மதத்தை தாங்கிப்பிடிக்க இந்து பெயரில் இந்துக்களை கேவலப்படுத்துவதாலேயே..) அசலாமு அலைக்கும் வருண்?***

காட்டான்: பெரிய கண்டுபிடிப்புதான்! எங்கேயாவது பப்ளிஷ் பண்ணி அவார்டு கிவாடு வாங்கும்!:))))

தணல் சொன்னது…

//I beg to disagree. There are people like Richard Feynman who are not able to tolerate "PREACHING of religious NONSENSE" even when they were YOUNG! They criticize their religion by quoting their "bitter experience" of preaching religious nonsense from their parents or in the church. //

It may not be impossible, but not everyone is that smart! If most are like that, if most are able to raise questions against what is taught to them in the form of religion, then all the religions by now would have gradually lost their 'power' to gather people. Rather they are taught not to raise questions, they are taught to believe it so that it'll grant them fortunes like education or good life or good partner. It is definitely difficult for someone to come out of this as preaching starts very early before they can think. This is where paguththarivu comes into play. By teaching them to question, to expect a valid reason, before they can start to believe.

You can't believe it, but religious practices are memes that are transmitted in families. They are almost transmitted as genes, like how a father would pass his to his daughter.

தணல் சொன்னது…

//*** You may find them here as bloggers as well.***

Unless you are one of them, I have not seen one! LOL//

Who knows! You could be one of them! LOL :-)

தணல் சொன்னது…

//***But there are atheists who were by birth brahmins. Like Kamal.***

I did not see him appreciating Buddism, yet. //

Why should he appreciate buddhism? He has chosen to be an atheist! You should not expect that all atheists would tell an alternative religion for Hinduism. If they are able to stay true to their principle and advocate that to others, that is more than enough.

நன்னயம் சொன்னது…

பன்றி இறைச்சி அவனுக்கு பிடிக்கிது சாப்பிடுறான். உலகம் முழுவதும் சாப்பிடுறான்!

* வெள்லையர்கள்

* சைனீஸ், ஜாப்பனீஸ்
*INDIAN

இந்த மூதேவிகள் பன்றி அசிங்கமாம், அழுக்காம். இவங்களை விடவா பன்றி அசிங்கம் சாபிடுறவனையெல்லாம் அடிக்கிறது கொல்றதுனு திரியுதுக. அசிட் அடிப்பேன் என்று பயமுறுத்துவது. முட்டாப்பயலுக. இவனுகளுக்கு வக்காலத்து வாங்க இந்த சில முண்டங்கள் வேற!

இன்றைக்கும் கனடாவில் சில இடங்களில் பன்றி இறச்சிக்கு எதிராக போராடுகிறார்கள் இந்த முட்டாள் கூட்டம் . பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்தால் அதன் கிருமிகள் அழிந்துவிடும். இன்றும் இலங்கை கிழக்கு மாகாணத்தில் சில அசைவ தமிழ் கடைகளில் பன்றி இறைச்சி விக்க கூடாது என்று இந்த முட்டாள்கள் உத்தரவு போட்டிருக்கிறார்கள். தமிழன் பன்றி இறைச்சி சாப்பிட்டால் இவர்களுக்கு என்ன செய்யுது ?

அடி எடுத்து கொடுத்த வருணுக்கு நன்றி.

வருண் சொன்னது…

***அடி எடுத்து கொடுத்த வருணுக்கு நன்றி.***

You are most welcome, E! :)))

வருண் சொன்னது…

***Why should he appreciate buddhism?***

Anyone can appreciate good things in other religion.

***He has chosen to be an atheist!***

I am an atheist but I can appreciate Budhdha. Not only me, KRP Senthil could. All you need to have is an open mind. :)

*** You should not expect that all atheists would tell an alternative religion for Hinduism. ***

I did not expect. I just said no brahmins ever appreciate Budhdhism including Kamalhassan.

***If they are able to stay true to their principle and advocate that to others, that is more than enough.***

Now his daughter is believer, his principles are already shaking a little. He does no say, there is no god. He says if there is a God it will be nice. LOL

தணல் சொன்னது…

//I am an atheist but I can appreciate Budhdha. Not only me, KRP Senthil could. All you need to have is an open mind. :)//

Bcos you and KRP appreciate Buddhism, I would not expect 'born as a brahmin' atheists to appreciate the same. Someone can be just indifferent to religions.

//Now his daughter is believer, his principles are already shaking a little. He does no say, there is no god. He says if there is a God it will be nice. LOL//

I do not agree with this, but I don't want to speak for or on behalf of Kamal. Bye.

நன்னயம் சொன்னது…

திரு.வருண் அவர்களின் தளத்தில் இட்ட பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன்.


@வருண் இந்த பிரச்சினையின் ஆணி வேர் சுவன பிரியன் ஒரு தலித் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட செய்தியை போட்டுள்ளார். (வழமையாக உண்மைகள் என்ற பெயரில் இயங்கும் தீவிர மத வெறியர் வாஞ்சூர் என்பவரே இம்மாதிரியான செய்திகளை போடுவார்) நம்ம கோவி சவுதியில் வேலைக்காக போகும் எமது தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் கொடுமை உலகம் அறிந்தது. இதில் வேலைக்கு போகும் தமிழ், முஸ்லிம் பெண்களுக்கு பொதுவானது.
பாதிக்கப்பட்டது இங்கும் ஒரு வறுமையில் வாடும் பெண்கள் (அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்கள்). இங்கு ஒரே பெண்கள் ஒரே வகையான சம்பவம். கோவி இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஆதரித்து பேசவில்லை. அதனையும் கண்டித்தார். அத்துடன் மத்திய கிழக்கில் பாதிக்கப்படும் நம் பெண்களுக்காகவும் பேசினார். ஆனால் நம்ம தவா சுவனப்பிரியன் சொன்னதென்ன "சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். "

வருண் மனசாட்சியுடன் சொல்லுங்கள் சவுதியில் இந்திய, இலங்கை பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லையா? எத்தனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது? முக்கிமாக கவனிக்க வேண்டியது சுவனபிரியரின் வார்த்தை ஜாலம் "சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை."
அதாவது சவூதி ஆண்கள் பாலியல் வன்புணர்வு செய்தால் தவறாக நடத்தல் அதே இந்திய இந்து மிருகம் செய்தால் வேறு சொல்.
இந்த விடயம் கொஞ்சம் பெரிதான பின் சுவனபிரியன் அடுத்த வாக்கு மூலத்தை எடுத்து விட்டார் "அடுத்து சவுதியில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று. வெளியில் நடக்கும் தவறுகளை சட்டத்தின் மூலம் தடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளே நடப்பதை எவ்வாறு தண்டிப்பது. தவறு நடந்தாலும் தெரிய வருவது மிக குறைவே.
எனவே தான் நான் முன்பு ஒரு பதிவில் பெண்கள் தனியாக தனியாக இங்கு வீட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று பதிவிலேயே கோரிக்கை வைத்தேன். நம்மால் முடிந்தது அவ்வளவுதான். தெரிந்தே தங்களது வறுமையினால் இது போன்ற சிரமங்களை சுமப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? வரும் பெண்கள் தனது கணவர் வீட்டு டிரைவராக வருமாறு பார்த்துக் கொண்டால் இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்."

பெண்கள் வேலைக்கு வருவதே வறுமையை போக்க , வேலைக்கு போவது என்றால் ஒரு சாரதி ஆணை திருமணம் முடிக்க வேண்டும். அதன் பின்பே வேலைக்கு போக வேண்டும. நல்ல ஆலோசனை. அவர் திரும்பவும் குறிப்பிட்டது "பெண்கள் பாலியல் தொல்லை" இப்போதும் எந்த கேள்வி என்ன வென்றால் சவூதி ஆண்கள் செய்தால் அதுக்கு பெயர் தொல்லையா? உலகத்தில் எந்த நாதாரி ஆணும் செய்தாலும் அதுக்கு பெயர் பாலியல் வன்புணர்வுதான். தொல்லை என்றால் டீசிங். சுவனபிரியன் ஐயாவுக்கு பாடம் எடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளேன்.

இந்த பாலியல் தொல்லை / கற்பழிப்பு விடயம் தான் இன்றுவரை பெரிய பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது. மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

சுவனபிரியன் சவுதியில் நடக்கும் இந்திய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புனர்வுகளை (அவரது மொழியில் தொல்லைகள்) எழுதாமல் இருக்கலாம். அது அவரது உரிமை, அவர் சார்ந்த அரசியல் பிரச்சினை.
ஆனால் அங்கு நடக்கும் கொடுமைகளை வேறு ஒருவர் கேள்வி எழுப்பும் போது சுவனபிரியர் அவ்வாறு ஒன்றும் நடப்பதில்லை நடந்தாலும் தண்டனை உண்டு என்றவகையில் பொய்களை கட்டவிழ்க்கும் போது பல சந்தேகங்களையும், காழ்ப்புனர்ச்சிகளையும் தோற்றுவிக்கும்.



? சொன்னது…

வவ்வால், குபி இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உங்க நேர்மை கம் சிந்தனைகள் ரொம்ப சிறந்தவை, உயர்ந்தவை!

பெரியாரின் கொள்கையினால் வளமடைந்தவர்கள் அவரது மத்தியதர சாதிகளே. பார்ப்பனர்களைவிட மத்தியதர சாதி வெறியர்களே மிகவும் மோசமானவர்கள், குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில். பிராமணர்களை தமிழகத்தில் 2% குறைவு மற்றும் இவர்களை சுலபமாக புறக்கணிக்கலாம். ஆனால் மத்திய சாதிகாரர்கள் எண்ணிக்கை அதிகம் மேலும் இவர்களைதான் பணம் படைத்தோராகவும் வேலை அளிப்பவர்களாகவும் இருப்பதினால் இவுனுக அட்டகாசமும் தாக்கமும் அதிகமே. இதனால்தான் மேதையான அம்போத்கர் பெரியார் சொன்ன போதும் பிரமாணரை மற்ற உயர்சாதிக்காரரிடமிருந்து தனியாக பிரித்து எதிர்க்க மறுத்துவிட்டார். அடக்கி ஒடுக்கும் உயர்சாதி ஆட்களுக்கும் இட ஒதுக்கீடு தரும் கூத்து எல்லாம் பெரியாரிசத்தின் மோசமான பக்க விளைவுகள். பெரியார் தமிழகத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றாலும் அனைத்து உயர்சாதி எதிர்த்தல் மற்றும் இந்து மதத்திற்கு மாற்றாக புத்தமதம் என சொன்னச் அம்பேத்கரின் சிந்தனைகள் மிகவும் உயர்ந்தவை என நினைக்கிறேன். இவரைப்போன்ற தலைவர்கள் தொடர்ந்து உருவாகதது தலித்களின் துர் அதிஷ்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் துர் அதிஷ்டம்!

தணல் சொன்னது…

//பிராமணர்களை தமிழகத்தில் 2% குறைவு மற்றும் இவர்களை சுலபமாக புறக்கணிக்கலாம்.//

எப்படி சார் புறக்கணிக்க முடியும்? ஊடகங்கள் எல்லாம் இவர்கள் கையில். தினமலர் விகடன் தினமணி துக்ளக் etc. இவர்கள் பரப்பும் கருத்தியல்கள் எல்லோரையும் எளிதில் சென்றடையக் கூடியவை. சக்தி விகடனில் வந்த கட்டுரையை எடுத்துப் போட்டிருந்தேன் பாருங்கள்.

http://idlyvadai.blogspot.com/2012/09/blog-post_23.html

// அடக்கி ஒடுக்கும் உயர்சாதி ஆட்களுக்கும் இட ஒதுக்கீடு தரும் கூத்து //

இட ஒதுக்கீடுக்கான வாய்ப்பளித்தது அன்றைய நிலையில் அந்தந்த சமூகத்தின் கல்வித் தகுதியை வைத்து. பட்டிக்காட்டான்களாக இருந்த அவர்களின் பிள்ளைகளும் கல்வி கற்று நாட்டின் ஆளுமையில் அதன் தொடர்ச்சியாக சமுதாய வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென்று. ஆனால் அந்தக் கல்வி வெறும் ஏட்டளவில் கணினி அளவில் மட்டுமே நின்றுபோய் சமூக ஒழுங்கிற்கு அத்தியாவசியமான சமத்துவம் நேர்மை போன்றவற்றை கற்றுக் கொடுக்கத் தவறி விட்டது என்பது கசப்பான உண்மை. தீண்டாமை என்பது பாவச் செயல் என்று புத்தகத்தில் எழுதினால் மட்டும் பத்தாது, களத்தில் இறங்கி தவறை உரைக்கச் செய்தல் வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு சதவிகித்தினரில் சிலர் பரப்ப விரும்பும் பிற்போக்கு கருத்தியல்களைப் போன்று ஆதிக்க சாதிக்காரர்கள் எதையும் உருவாக்க/பரப்ப முனைவதில்லை.

நன்னயம் சொன்னது…

சமீபத்திய செய்தி,
காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கோவையில் 21 வயது இளம்பெண் சுருதி மேனன் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவையை அடுத்த வடவள்ளி கல்வீரம் பாளையம் தோப்பில் நகரை சேர்ந்தவர் ராஜீவ்மேனன். டெல்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லதா(வயது 43). இவர்களுடைய மகள் சுருதி(21).
இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஐ.பி அவருடன் கோவை காளப்பட்டியை சேர்ந்த அயூப் மகன் அஜீம்(21) என்பவரும் படித்தார்.
இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜீமுடன் பழகுவதை சுருதி குறைக்கத் தொடங்கினார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அஜீம் நேற்று மாலை சுருதியின் வீட்டுக்குச் சென்றார். முதலில் பேசிப்பார்த்தார் சுருதி அஜீமை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் கத்தியை எடுத்தார். சுருதியின் தாயார் அஜீமைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
பிறகு சுருதியையும் கத்தியால் குத்தி கொலை செய்து அதன் பின்னும் தனது வெறி நீங்காததால் சுருதியின் உடலுக்கு அசிட் ஊற்றி எரித்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டார் அஜீம்.
இதில் பரிதாபம் என்னவெனில் உடல் நமமில்லாத சுருதியின் தாத்தா தட்டுத் தடுமாறி எழுந்து வந்து பக்கத்திலிருப்பவர்களை முடியாமல் அழைத்துள்ளார்.
பிறகு போலீஸுக்குத் தக்வல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சுருதி, அஜீம் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லதாவை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து லதா ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்றோரின் அறிவுரைக்கு இணங்க சுருதி காதலை மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அஜீம் பிடிவாதமாக சுருதிய துரத்தி வலுக்கட்டாயப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த கொடூரமான செயலை செய்த மிருகம் ஒரு இஸ்லாமியர் ஆவார்.

வருண் சொன்னது…

****நந்தவனத்தான் கூறியது...

வவ்வால், குபி இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உங்க நேர்மை கம் சிந்தனைகள் ரொம்ப சிறந்தவை, உயர்ந்தவை!

பெரியாரின் கொள்கையினால் வளமடைந்தவர்கள் அவரது மத்தியதர சாதிகளே. பார்ப்பனர்களைவிட மத்தியதர சாதி வெறியர்களே மிகவும் மோசமானவர்கள், குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில். பிராமணர்களை தமிழகத்தில் 2% குறைவு மற்றும் இவர்களை சுலபமாக புறக்கணிக்கலாம். ஆனால் மத்திய சாதிகாரர்கள் எண்ணிக்கை அதிகம் மேலும் இவர்களைதான் பணம் படைத்தோராகவும் வேலை அளிப்பவர்களாகவும் இருப்பதினால் இவுனுக அட்டகாசமும் தாக்கமும் அதிகமே. இதனால்தான் மேதையான அம்போத்கர் பெரியார் சொன்ன போதும் பிரமாணரை மற்ற உயர்சாதிக்காரரிடமிருந்து தனியாக பிரித்து எதிர்க்க மறுத்துவிட்டார். அடக்கி ஒடுக்கும் உயர்சாதி ஆட்களுக்கும் இட ஒதுக்கீடு தரும் கூத்து எல்லாம் பெரியாரிசத்தின் மோசமான பக்க விளைவுகள். பெரியார் தமிழகத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றாலும் அனைத்து உயர்சாதி எதிர்த்தல் மற்றும் இந்து மதத்திற்கு மாற்றாக புத்தமதம் என சொன்னச் அம்பேத்கரின் சிந்தனைகள் மிகவும் உயர்ந்தவை என நினைக்கிறேன். இவரைப்போன்ற தலைவர்கள் தொடர்ந்து உருவாகதது தலித்களின் துர் அதிஷ்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் துர் அதிஷ்டம்!****

அட அட அட அட!!! வாங்கோ நந்துவால்!

பிராமனர்கள் எல்லாருமே சாத்சாத் உங்கள் மாரியேதான். ரொம்ப ரொம்ப ரொம்ப அப்பாவிகள். ஆனால் அவங்களை எளிதாக அடையாளம் கண்டுக்கலாம். அவங்க சிந்தனையெல்லாம் உங்கள ஒத்தே உயர்தரமா இருக்கும்.

ஆமா சங்கர் ராமனை போட்டுத்தள்ளியது யாரு? உயர்சாதி திராவிடர்களா? இல்லை அப்பாவி பிராமணர்களா???

கோட்சே யாருங்க? உயர்சாதி ஹிந்துவா? பார்ப்பனரா?

நீங்க அப்பாவி, அதெல்லாம் உங்களுக்கெங்கே தெரியப்போது! :)))

நடத்துங்க! காலங்காலமா நடத்திக்கிட்டுத்தானே இருக்கீங்க!

? சொன்னது…

??எப்படி சார் புறக்கணிக்க முடியும்?‌//

2% கூட்டம் 98‌‌% சதவீதத்தை அடக்கி ஆள்கிறது என்பதே ஒரு தமாசுதான். இந்த மாதிரி கூத்துக்கள் இங்குதான் நடக்கும். குமுதம் தினகரன் தினத்தந்தி என்பதெல்லாம் மற்றவர்கள் கையில்தானே இருக்குது. மேலும் மீதி உள்ளவர்கள் நினைத்தால் பார்ப்பன பத்திரிக்கை வாங்காதேயுங்கள், அவர்களை கோவிலுக்கு போகதீர், அவர்களை வைத்து சடங்கு செய்யாமல் இருக்கலாம். அது முடியாதா என்னா? பிற்படத்தபட்ட சாதி மாதிரி அரிவாள் பலத்துடன் பார்ப்பனர்கள் சுவர் கட்டுவதில்லை. இன்னமும் சொல்லப்போன அரிவாளைக் காட்டுன பார்ப்பனர் உங்களைவே சாமி ஆக்கீடுவாங்க, இதை பெரியாரே சொல்லியிருக்கறாரு. ஆனா பிற்படுத்தபட்டவரிடம் அருவாள் காட்டுன என்ன நடக்கும்ன்னு மதுரை சைடு போய் காட்டுங்க தெரியும்!

//ஆதிக்க சாதிக்காரர்கள் எதையும் உருவாக்க/பரப்ப முனைவதில்லை.//

சாதி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவனுங்க சாதி பிரமிடின் உச்சத்தில் இருப்பதினால் ஆரியர்கள்தான் காரணம் என திராவிட இயக்கத்தினர் பிரச்சாரம் செய்துவிட்டார்கள். வால்காவிலிருந்து கங்கைவரையில் ஆரியர்கள் இங்கு வரும்போது திராவிடர்கள் ஏற்கனவே சாதியை கடைபிடித்து வந்ததாகவும் ஆரியர்கள் போரில் வென்று பிராமிடின் உச்சிக்கு போய்விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது இதுவும் உண்மையாக இருக்கலாம் இல்லையா? ஆரிய இனம் உலகில் வேறுஇடத்தில் இருந்த போதும் மற்ற இடங்களில் அவர்கள் சாதியை கொண்டதில்லை.

பிராமணருக்கு மட்டுமல்லாது பிற சாதியினருக்கும் சாதி தேவை. ஆனால் ஒட்டுமொத்த பழியை அவனுகமீது போட்டுவிட்டு நாம நல்லவனுக மாதிரியே நடிக்கிறோம்.

வருண் சொன்னது…

E: நீங்க என்னதான் சாதிக்க முயல்றீங்கனு தெரியலை. சரி, நம்ம எல்லாரும் நல்லவங்க, பிறமதத்தவர்தான் அயோக்கியர்கள்னே இருக்கட்டும்..

ஹரியானா நடக்கிறதுக்கும் சுவனப் பிரியனுக்கும் என்ன சம்மந்தம்? அது நம்மவர் செய்றதுதானே? மிடில் ஈஸ்டை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பதால் இது எப்படி சரியாகும்??

வருண் சொன்னது…

***சாதி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.***

அதான் பார்ப்பனர்கள்தான் அப்பவியாசே, நந்துவால். சாதியெல்லாம் தலித்கள் உருவாக்கியது!
இப்போ யாரு இல்லைனு சொன்னா, நந்துவால்???!

? சொன்னது…

//பிராமனர்கள் எல்லாருமே சாத்சாத் உங்கள் மாரியேதான். ரொம்ப ரொம்ப ரொம்ப அப்பாவிகள். ஆனால் அவங்களை எளிதாக அடையாளம் கண்டுக்கலாம். அவங்க சிந்தனையெல்லாம் உங்கள ஒத்தே உயர்தரமா இருக்கும்.//

வருண் பாய், இப்படி எல்லா சாதியிலயையும் மதத்திலும் ஆளைக்காட்டலாம். இதுல பார்ப்பான் மட்டும் என்ன சளைச்சவனா என்ன? கோட்சேயாவது தேவலைங்க, பிடிக்கலைன்னு போட்டு தள்ளிபிட்டான். ஆனா உங்க ஆளுக போட்டுத் தள்ளறதுக்கு முன்னாடி குனிய வைத்து குத்திபுடுறாங்க. அதுதான் பிரச்சனை.

நாங்களும் உங்களை அடையாளம் கண்டுகிட்டோம்!

நீங்க நடத்தும் போது நாங்க நடத்தக் கூடாதா என்ன?

வருண் சொன்னது…

நந்தவால்! உங்கள, அதான் பிராமனர்கள் போல நீங்களும் ஒரு அப்பாவினு ரொம்ப நாள் முன்னாலேயே அடையாளம் கண்டுகொண்டேன். எல்லாம் பகவான் செய்லால்தான். :)))

பகவான் ஏன் உங்கள் இப்படி அப்பாவியா படச்சுட்டாரு??நீங்க எதுவும் பாவம் செஞ்சுட்டேளா, கடந்த ஜெனமத்துல???

வருண் சொன்னது…

***கோட்சேயாவது தேவலைங்க***

அப்பாவி கோட்சேக்கும் நம்ம திராவிட முண்டங்கள்தான் ப்ளாட் போட்டுக் கொடுத்துச்சாம்..அதைப் பத்தி நீங்க சொல்லவே இல்லை! :)))

? சொன்னது…

//ஹரியானா நடக்கிறதுக்கும் சுவனப் பிரியனுக்கும் என்ன சம்மந்தம்? //


வருண் ஒண்ணுமே தெரியாதது மாதிரி நடிக்கீங்க பாருங்க... சூப்பர். சிவாஜி தோத்தாரு போங்க!

? சொன்னது…

//பகவான் ஏன் உங்கள் இப்படி அப்பாவியா படச்சுட்டாரு??நீங்க எதுவும் பாவம் செஞ்சுட்டேளா, கடந்த ஜெனமத்துல???//

கடந்த ஜெனமத்துல இல்லீங்க. இந்த ஜென்மத்துல பன்னிக்கறி ஒதுக்கி வைக்கறீங்க பாருங்க, அதான். பன்னீக விட்ட சாபமாக இருக்கும்!

? சொன்னது…

இப்படியே மொக்கை போட்டா, பின்னூட்டத்தை திறந்து வைச்சிருக்கற கோவிக்கு கோவம் வந்திடும். நான் தூங்க போறன். நாளை சந்திப்போம். குட் நைட்!

வருண் சொன்னது…

***நந்தவனத்தான் கூறியது...

//ஹரியானா நடக்கிறதுக்கும் சுவனப் பிரியனுக்கும் என்ன சம்மந்தம்? //


வருண் ஒண்ணுமே தெரியாதது மாதிரி நடிக்கீங்க பாருங்க... சூப்பர். சிவாஜி தோத்தாரு போங்க!***


அது!

அப்படித்தான்..

திராவிடர்களை திராவிடர்களுக்கு எதிரா தூண்டி விட்டுட்டா உங்க வேலை முடிஞ்சது.. அடிச்சுக்கிட்டு சாவானுக. அப்பாவி நீங்க இப்படியே குளிர்காயலாம் பாருங்க..:)))

Robin சொன்னது…

//2% கூட்டம் 98‌‌% சதவீதத்தை அடக்கி ஆள்கிறது என்பதே ஒரு தமாசுதான். இந்த மாதிரி கூத்துக்கள் இங்குதான் நடக்கும்.// இரண்டு சதவீதம் பார்ப்பனர்கள் 98‌‌% மக்களை அடக்கி ஆண்டார்கள் என்னும் கொடூர தமாசு இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. அது எப்படி முடியும் என்று சந்தேகம் இருந்தால் கேளுங்கள், விளக்கமாக சொல்கிறேன்.

வவ்வால் சொன்னது…

குட்டிப்பிசாசு,

ஹி...ஹி எல்லாம் பாழாய்ப்போன/போகும் பூமி கெரகத்தில இருந்து தான்.

பெரியார் காலத்து பெரியாரிஸ்ட் கூட எல்லாம் பேசியிருக்கேன்,அவர்களே பெரியாரை பற்றி கசப்புடன் பல விடயங்கள் பேசுவதை கேட்டும் இருக்கேன்.அப்போலம் நான் கொஞ்சம் கண்மூடித்தனமாக பெரியாரை ஆதரிப்பேன் அதனால் அவருடன் வாக்குவாதம் எல்லாம் செய்துள்ளேன்.

பெரியார் சாதியை துற என்று சொல்லும் காலத்திலேயே அனைவரையும் சாதிப்பேர் சொல்லித்தான் அழைப்பாராம் :-))

காமராஜரை எப்போதும் அந்த நாடாரு என விளித்தும், அண்ணாவை முதலி என்பதாகவும்... ஆனால் மேடையில் பேசும் போது யாரும் பேருக்கு பின்னால் சாதிப்பேர் போட்டுக்க கூடாது.

அவர்காலத்திலேயே திராவிடர்கழகத்தில் ஊர் தலைவர்களை ஆதிக்க சாதி தலைவர்களாகத்தான் போட்டுள்ளார், தலித்களை ஊர் கிளைத்தலைவர்களாக நியமித்ததில்லை, இன்று வரையிலும் அதே போக்கு தான் திராவிடர் கழகத்தில்.

தலித்களுக்கு நாம் பேசணும்,ஆனால் அவர்களாக பேசக்கூடாது என்ற நிலையாக இருக்கலாம்.

ஓட்டை சட்டியாக இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி தான் என்பது போல அன்று அவர் பேசிய பேச்சுக்கள் சமுதாயத்தில் கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்தது.

திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றால் பெரியார் என்ற பெயர் மறக்கடிக்கப்பட்டு இருக்கும். அண்ணா,கலைஞர்,எம்ஜிஆர் என அனைவருக்கும் பெரியார் பெயரளவில் தேவைப்பட்டதால் அவரது புகழ் பரவியுள்ளது.

பெரியாரின் இறை மறுப்பு கொள்கையோ, இன்ன பிற கொள்கையோ ,திராவிட இயக்கங்களை ஆட்சியில் அமர வைக்கவில்லை, இந்தி எதிர்ப்பு போராட்டமே திராவிட இயக்கத்தினை மக்கள் ஆட்சி பொறுப்பில் கொண்டு வர வைத்தது.

அதனை அறுவடை செய்தது அண்ணா, அதன் அடியொற்றி கலைஞர், எம்ஜிஆர் என திராவிட இயக்க கொள்கை நீர்த்துவிட்டது. ஜெயலலிதா எல்லாம் பெரியார் பெயரை பயன்ப்படுத்துவதே இல்லை.

பெரியார் சொன்ன பார்ப்பன எதிர்ப்பு என்பது மக்களிடம் நன்கு ஊன்றி இருந்தால் ஒரு திராவிட இயக்கத்தின் சார்பில் ஜெயலலிதா முதல்வராக வந்திருக்க முடியுமா?

எனவே பெரியார் சொன்ன கொள்கை எல்லாம் காகிதத்தில் மட்டுமே வாழ்கிறது.

அம்பேத்கார் எழுப்பிய சிந்தனைகள் இன்றும் வட இந்தியாவில் மக்களிடம் இருக்கிறது,அதனால் தான் மாயாவதி போன்றவர்களால் உத்திரபிரதேசத்தில் ஆட்சிக்கு வர முடிந்தது.
-----------

வவ்வால் சொன்னது…

தணல்,

//தலித் முதல்வராக வர முடியும், ஆனால் அவர் தலித்தியத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்காமல் பெரும்பான்மை சாதியினருடன் இணக்கமாக உள்ளவர் என்றால். //

சாத்தியமில்லை என்றே சொல்வேன்.

மத்திய தர சாதியினருக்கு பார்ப்பனர் மட்டுமே போட்டி,எதிரி,ஆனால் தலித்துகளுக்கு ,அனைவரும் போட்டி ,எதிரி.

அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் படி தொகுதி ஒதுக்கீடு இல்லை என்றால் ,எந்த அரசியல் கட்சியும் சீட்டே கொடுக்காது. இன்று வரை எந்த கட்சியும் ஒதுக்கீடு தாண்டி சீட் கொடுப்பதில்லை, பொது தொகுதியில் தலித்துக்கு சீட் கொடுப்பதில்லை.

மேலும் தலித் விடயத்தில் எல்லா இடைச்சாதியும்,பார்ப்பனர்களும் ஒன்றாகி அமுக்கிவிடுவார்கள்.

இன்றளவும் பல தலித் பஞ்சாயத்து தலைவர்கள் ஊரில் உள்ள ஆதிக்க சாதியினரால் அடக்கியே வைக்கப்படுகிறார்கள். அதனை கட்சி மேலிடமும் கண்டுக்கொள்வது இல்லை.

சென்னை அருகே உள்ள கிராம பஞ்சாயத்துகளிலேயே அதான் நிலைமை, பல பஞ்சாயத்து தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சென்னை புற நகரில் சில பஞ்சாயத்துகளில் சொந்த செல்வாக்கில் பொது தொகுதியில் வென்ற தலித் தலைவர்கள் இவர்கள்.அப்படியான கொலை சம்பவம் எங்க பகுதியிலும் நடந்துள்ளது.

இப்போது 2-3 நாட்களுக்கு முன்னர் சென்னை அருகே மண்ணிவாக்க பஞ்சாயத்து தலைவர்(தலித்) கூட கொலை செய்யப்பட்டார்.

சென்னை புறநகரில் ரியல் எஸ்டேட் நன்றாக போகிறது,பஞ்சாயத்து அப்ரூவல் கொடுக்க நல்ல வருமானம் ,எனவே அதனை இவன் சம்பாதிப்பதா என்றே போட்டு தள்ளிவிட்டு ,இன்னொருவரை அல்லது கொலை செய்தவரே பதவிக்கு வருவார்.
-------------
நந்தவனம்,

நன்றி!

எந்த அரசியல் தலைவரின் அபிமானியாகவும் இல்லாமல் வரலாற்றின் அடிப்படையில் அணுகினால் பொதுவாக பேச முடியும், அடிப்படையில் நான் பொதூடமை கொள்கையின் சார்புள்ளவன் என்றாலும் கம்யூனிசத்தினையே முற்றும் ஏற்றுக்கொள்வதில்லை.பள்ளி,கல்லூரி காலத்திலேயே பங்கெடுத்துக்கொண்டவன்,பின்னர் பித்தம் தெளிந்துவிட்டது :-))
//. ஆனால் மத்திய சாதிகாரர்கள் எண்ணிக்கை அதிகம் மேலும் இவர்களைதான் பணம் படைத்தோராகவும் வேலை அளிப்பவர்களாகவும் இருப்பதினால் இவுனுக அட்டகாசமும் தாக்கமும் அதிகமே. //

உண்மையே,பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி எல்லாம் உதாரணம், மேலும் தணலுக்கு மேலே சொன்ன பஞ்சாயத்து தலைவர்கள் பற்றியதையும் கவனிக்கவும்.

//து உயர்சாதி எதிர்த்தல் மற்றும் இந்து மதத்திற்கு மாற்றாக புத்தமதம் என சொன்னச் அம்பேத்கரின் சிந்தனைகள் மிகவும் உயர்ந்தவை என நினைக்கிறேன். இவரைப்போன்ற தலைவர்கள் தொடர்ந்து உருவாகதது தலித்களின் துர் அதிஷ்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் துர் அதிஷ்டம்!//

அம்பேத்கார் அளவுக்கு இல்லை என்றாலும் அதில் பாதி அளவுக்கு உள்ளவர்கள் கூட உருவாகவில்லை.

பெரியார் அளவுக்கு இல்லை என்றாலும் அவரில் பாதி அளவுக்கு கூட கொள்கையுடன் திராவிட தலைவர்கள் யாரும் இல்லை.

அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் கடன் தொல்லையால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார், ஆனால் அவர் பேர் சொல்லி கட்சி நடத்தும் மஞ்சத்துண்டின் கடைசி பேரனும் கிரானைட் ஊழல் செய்து கோடிகளில் கொழிக்கிறான் :-))
--------------

நன்னயம் சொன்னது…

"ஹரியானா நடக்கிறதுக்கும் சுவனப் பிரியனுக்கும் என்ன சம்மந்தம்? அது நம்மவர் செய்றதுதானே? மிடில் ஈஸ்டை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பதால் இது எப்படி சரியாகும்"
வருண் நீங்கள் தெரிந்துதான் கதைக்கிறீர்களா? மத்திய கிழக்கில் பாதிக்கப்படுவது நம்ம இன பெண்கள் ஐயர் ஆத்து பெண்கள் அல்ல. வறுமைக்காக தொழில் செய்து பிழ்க்கலாம் என்று போனால் அங்கேயும் இந்த மிருகங்களின் கொடுமை. பெண்களுக்கான கொடுமையை எந்த நாட்டில் நடந்தாலும் கண்டிக்கலாம். சுவன பிரியன் செய்த தவறு அப்படி ஒன்றும் நடப்பதில்லை என்று. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மத்திய கிழக்கில் தமிழ் (இந்திய பெண்கள்) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுவதில்லையா? உங்கள் கருத்து சுவனபிரியன் சொல்வது போல் சில காமுகர்கள் இந்திய பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க கூடும் என்பதா?
நான் என்ன சாதிக்க போகிறேன் என்று கேட்டிருந்தீர்கள்? சுவன பிரியன் என்ன சாதித்தார்?
என் இன பெண்களுக்கு நடக்கும் ஒரு கொடுமையை தட்டி கேட்பது ஒரு குற்றமா?

வவ்வால் சொன்னது…

எத்திகலிஸ்ட்,

//பன்றி இறைச்சி அவனுக்கு பிடிக்கிது சாப்பிடுறான். உலகம் முழுவதும் சாப்பிடுறான்!

* வெள்லையர்கள்

* சைனீஸ், ஜாப்பனீஸ்
*INDIAN

இந்த மூதேவிகள் பன்றி அசிங்கமாம், அழுக்காம். இவங்களை விடவா பன்றி அசிங்கம் சாபிடுறவனையெல்லாம் அடிக்கிறது கொல்றதுனு திரியுதுக. அசிட் அடிப்பேன் என்று பயமுறுத்துவது. முட்டாப்பயலுக. இவனுகளுக்கு வக்காலத்து வாங்க இந்த சில முண்டங்கள் வேற!
//

பாயிண்டு..பாயிண்டு..சரியா புடிச்சீர்.

ஹி...ஹி பன்றி கறி என்ன, கல்யாணத்தின் போது பாட்டு போட்டு டான்ஸ் ஆடியதற்காக 17 பேரை கழுத்து அறுத்து கொல்றாங்க ஆப்கானில்.

ஆடோ,மாடோ, கோழியோ ஹலால் செய்யலைனா கூட சாப்பிட மாட்டாங்களாம், காயல்ப்பட்டினத்தில் ஒரு இஸ்லாமியர் முகநூலில் ஒரு செய்தியை ஷேர் செய்துவிட்டார், அவர் அங்கு சிக்கன் கடை நடத்துகிறார், அந்த முகநூல் செய்திக்காக அவரது கடையில் யாரும் சிக்கன் வாங்க கூடாதுனு ஜமாத்தில முடிவு செய்துட்டாங்க. பத்தாதுக்கு அவரோட மனைவியை மிரட்டி கணவரை தலாக் செய்ய வைத்துட்டாங்க :-))

கடைசியில் அந்த சிக்கன் கடைக்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகு, தலாக் செய்யப்பட்ட மனைவியை மறு கல்யாணம் செய்துக்க சொல்லி இருக்காங்க :-))

இம்புட்டு தான் இஸ்லாத்தின் டக்கு!!!

நன்னயம் சொன்னது…

நான் என்றைக்கும் ஹிந்து மதவாதிகளை ஆதரித்து பேசியதும் இல்லை அவர்களை கடுமையாக விமர்சிக்க தவறியதும் இல்லை. வினவு தளத்தில் நீண்டகாலமாக நான் அவர்களை விமர்சம் செய்து வருகின்றேன். ஆனால் விமர்சனம் செய்யும் போது எல்லா மத வாதிகளையும் ஒரே தட்டில் வைக்கிறேன். வழமையாக பகுத்தறிவாளர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதவாதிகளை விமர்சிக்கோம் போது மென் போக்கை கையாள்வார்கள். ஆனால் இந்து மதவாதிகளை விமர்சிக்கும் போது விமர்சனம் தணல் பறக்கும். ஆனால் இந்த விடயத்தில் விதிவிலக்காக இருக்கிறேன் மதவாதத்தை விமர்சிக்கும் போது எல்லோரையும் ஒரே தட்டில் தான் வைக்கிறேன்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

suvanappiriyan சொன்னது…

சகோ எதிகாலிஸ்ட்!

//சமீபத்திய செய்தி,
காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கோவையில் 21 வயது இளம்பெண் சுருதி மேனன் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.//

அதற்குத் தான் இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் தனித்து பழக வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. அந்த பெண் அவனை காதலிக்காமல் இருந்திருந்தால் அல்லது அந்த கிறுக்கன் காதலை உண்மை என நம்பாமல் இருந்திருந்தால் இந்த இரண்டு இறப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கும். அவன் இஸ்லாமியனாக பிறந்தும் முஸ்லிமாக வாழாததினால் ஒரு உயிரை கொன்று தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளான்.

Robin சொன்னது…

//பத்தாதுக்கு அவரோட மனைவியை மிரட்டி கணவரை தலாக் செய்ய வைத்துட்டாங்க :-))

கடைசியில் அந்த சிக்கன் கடைக்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகு, தலாக் செய்யப்பட்ட மனைவியை மறு கல்யாணம் செய்துக்க சொல்லி இருக்காங்க :-))//

Quran 2:230. மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.

Robin சொன்னது…

//அவன் இஸ்லாமியனாக பிறந்தும் முஸ்லிமாக வாழாததினால் ஒரு உயிரை கொன்று தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளான்.//
அவன் முஸ்லிமாக வாழ்ந்திருந்தால் நபி வழியில் அந்தப் பெண்ணின் பெற்றோரைக் கொன்று அவளைத் தூக்கிக் கொண்டுவந்து திருமணம் செய்திருப்பான்.

கோவி.கண்ணன் சொன்னது…

இம்புட்டு பின்னூட்டம் போட்டு பூ மிதிச்சிருக்கிங்களா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


நான் 8 மணி நேரம் சென்று தான் பார்த்தேன்.

தலை சுற்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும்//

வாழமரத்துடன் திருமணம் செய்து வெட்டிவிட்டு பழைய கணவனை திருமணம் செய்து கொள்வது எளிய முறை என்று நினைக்கிறேன், ஒருதருக்கும் பொல்லாப்பு நேராது.

:)

வவ்வால் சொன்னது…

ராபின்,

காயல்பட்டிணம் அல்ல கடையநல்லூர் ,(நியாபக மறதி) கதை பற்றி விரிவா செங்கொடி என்னும் தளத்தில் இருக்கு, இப்படித்தான் படித்த நினைவு, ஜமாத் மிரட்டி பிரிச்சு,பின்னர் மன்னிப்புக்கு பின் இணைந்தார்கள்னு, ஏன் சுபி.சுவாகளுக்கும் அந்த கதை தெரியுமே.

ஒரு வேளை இன்னொரு கல்யாணம் சம்பிரதாயம செய்ய சொல்லி தலாக் வாங்கி மீண்டும் கட்டி வைத்தார்களா என தெரியவில்லை.

இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் தான் நடந்துச்சு.

முழுவிவரம் இங்கு காணலாம்.

http://senkodi.wordpress.com/2012/03/01/kdnl-argument/

கோவி.கண்ணன் சொன்னது…

//அதற்குத் தான் இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் தனித்து பழக வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. //

அதெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சரியானதாக இருக்கலாம், இப்போதெல்லாம் ஆண் பெண் பழகாமல் நடைபெறும் திருமணங்கள் நிலைப்பதில்லை, காரணம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு ஒருநாளில் ஏற்படுவது அல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஆடோ,மாடோ, கோழியோ ஹலால் செய்யலைனா கூட சாப்பிட மாட்டாங்களாம், //

இதெல்லாம் அந்த ஆடுமாடு கோழிகளுக்கு தெரியுமா ?

:)

குட்டிபிசாசு சொன்னது…

//ஆடோ,மாடோ, கோழியோ ஹலால் செய்யலைனா கூட சாப்பிட மாட்டாங்களாம், காயல்ப்பட்டினத்தில் ஒரு இஸ்லாமியர் முகநூலில் ஒரு செய்தியை ஷேர் செய்துவிட்டார், அவர் அங்கு சிக்கன் கடை நடத்துகிறார், அந்த முகநூல் செய்திக்காக அவரது கடையில் யாரும் சிக்கன் வாங்க கூடாதுனு ஜமாத்தில முடிவு செய்துட்டாங்க. பத்தாதுக்கு அவரோட மனைவியை மிரட்டி கணவரை தலாக் செய்ய வைத்துட்டாங்க :-))

கடைசியில் அந்த சிக்கன் கடைக்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகு, தலாக் செய்யப்பட்ட மனைவியை மறு கல்யாணம் செய்துக்க சொல்லி இருக்காங்க :-))//

நேருக்குநேர் வாதாட வா என்பார்கள். புனைப்பெயரில் வாதிட்டால், முகமூடி அதுஇது என்பார்கள். ஒருவேளை நீங்கள் உண்மையான பெயருடன் வந்தால் இதுதான் நிலைமை. தோழர் செங்கொடியின் தொழிலுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினார்கள். இது தான் இவர்கள் வீரம்.

வவ்வால் சொன்னது…

கோவி,

ஹி...ஹி ஆடு ,மாடுக்கெல்லாம் அது தெரிஞ்சா பின்னாங்காலால் உதைக்காது, ஒன்னுமே தெரியாத விலங்கு தானே னு இவனுங்க அதை அடிச்சு சாப்பிடுறதும் இல்லாம அதுக்கு சடங்கு வேற.

நிறைய பேருக்கு தெரியலை ,வெளிநாட்டில் எல்லாம் எந்திரங்கள் தானாக நிமிடத்தில் கழுத்தை வெட்டி கறியாக்குவது, ஆனாலும் அதனையும் ஹலால்னு சாப்பிடுவாங்க, பேசுறது தான் பெத்த பேச்சு :-))

200 அடிக்க வச்சிடலாமா ?

---------

குட்டிப்பிசாசு,

செங்கொடி தளம் எல்லாம் படிப்பதுண்டா, ஆமாம் அவருக்கு சவுதில போய் தொல்லை கொடுத்து வேலையை விட்டு அனுப்ப வச்சிட்டாங்கன்னு படிச்சேன்.

நீங்க வேற எனக்கு ஒரு மார்க்க பந்து கொலை மிரட்ட்டலே விட்டான், ஆனால் அதற்கும் நாலு பேரு நீங்க இப்படி சொல்வதால் தான் அவர் அப்படி சொல்லுறார் என சப்போர்ட்.


இங்கே ரொம்ப யோக்கியமா பேசுற வருண் மாமா பதிவில போய் தான் சொல்லி இருக்கான், நான் அங்கெல்லாம் பின்னூட்டம் இடுவதில்லை என்பதால் அங்கு போய் வீரம் காட்டியிருக்கான்.

சாதாரணமா இணையத்தில் சொல்லும் கருத்துக்கே அடிப்பேன் ,கொல்லுவேனு சொல்றாங்க ,அதையும் வருண் மாமா ஆட்சேபம் தெரிவிக்காமல், கமெண்ட் வெளியிட்டு ரசிக்குது, ஆனால் பேசுறது ஒலக நாயம் :-))

இன்னொருப்பதிவில் கலாய்ச்சு அனுப்பிட்டேன் அந்த மார்க்க பந்தை.

? சொன்னது…

@ராபின்
ராபின் ஏற்கனவே பிராமணர்கள் பிரமிடின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்றே எழுதியிருக்கிறேன். ஆனால் சாதிக்கு அவர்கள் மட்டும் காரணம் என்பதைத்தான் மறுக்கிறேன். இந்தியாவினை ஆண்ட பார்ப்பன அரசர்கள் குறைவு. பிற சாதி அரசர்களே அதிகம். இவர்கள் நினைத்திருந்தால் சாதியை ஒடுக்கியிருக்க இயலும். ஆனால் செய்யவில்லை இதற்கு காரணம் தனது சாதிக்கு கீழ் சிலர் இருக்கறானுகளே அவர்களை நாம மிதிப்போம் என்ற பாலிஸிதான். 2000+ வருடமாக 2% பேர் மீதியுள்ளோரை ஓமூளை சலவை செய்து ஆண்டார்கள் என்பது நம்பும்படியாகவாக இருக்குது?

விவேகானந்தார் இதுபற்றி கூறுகையில் இரு சாதி பிரிவினரையும் இடித்துரைத்தார். பார்ப்பனரிடம் நீங்கள் புத்திசாலி என பீத்திக்கறீங்க அப்படியானால் மற்றவரை படிக்க ஊக்கபடுத்தி இருக்கவேண்டும் எனவும் பிறசாதியினரிடம் கற்பது கடினமான வேலை என்பதினாலும் அதில் அதிக பணவரவு இருக்காது என்பதினால் அதை பிராமணரிடம் விட்டு ஒதுங்கிவிட்டீர்கள், அதன் பலனை இப்போது அனுபவிக்கின்றீர்கள் என சொன்னார்.

கல்வி எனபது பிச்சைக்கார பிழைப்பு என்றுதான் வெள்ளையன் வரும் வரை இருந்தது. ஆனாலும் பிராமணர்கள் கற்று வந்தார்கள். 23-ம் புலிகேசி பாலபத்திர ஒணான்டி மாதிரி அரசர்களை கெஞ்சி பரிசு பெற்றுதான் சாப்பிட முடியும்.வெள்ளைக்காரன் பிராமணர்களுக்கு அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை பயன்படுத்தி அவர்களுக்கு ஆங்கில கல்வி அளித்து பதவி அளித்தான். இது அதுவரை ஆண்டுவந்த நில உடமைதாரரான இடைச் சாதியனரை கோபப்படுத்தியதால் விளைந்தவைதான் இந்த நீதிகட்சி, திராவிட இயக்கம் போன்றவை. இவற்றின் மேல் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.ஏனெனில் இவற்றினால் பிரமிடின் கடைசியில் நசுங்கும் எனது கடைக்கோடி சகோதரனுக்கு பெரிய பலன் ஏதுமில்லை!

குட்டிபிசாசு சொன்னது…

நந்தவனம்,

//கல்வி எனபது பிச்சைக்கார பிழைப்பு என்றுதான் வெள்ளையன் வரும் வரை இருந்தது. ஆனாலும் பிராமணர்கள் கற்று வந்தார்கள். 23-ம் புலிகேசி பாலபத்திர ஒணான்டி மாதிரி அரசர்களை கெஞ்சி பரிசு பெற்றுதான் சாப்பிட முடியும்.//

எனக்கு இந்தக் கருத்துகளில் வேறுபாடு உண்டு. எந்த பிராமணனும் மூட்டை தூக்கியதாகவோ, கீரைக்கட்டு விற்றதாகவோ நான் கேள்விப்படவில்லை. மூட்டை தூக்குவது, தெருத்தெருவாக பொருள் விற்பது போன்ற வேலைகளை விட நீங்கள் கல்விகற்பது, கல்வி போதிப்பது, அரசரிடம் கெஞ்சுவது ஒன்றும் சிரமம் இல்லை என நினைக்கிறேன்.

Robin சொன்னது…

//ஆனால் சாதிக்கு அவர்கள் மட்டும் காரணம் என்பதைத்தான் மறுக்கிறேன்.// இருக்கலாம். ஆனால் சாதியால் அதிக பலன் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தான். சாதிக்கு மத அங்கீகாரம் பெற்று தந்தவர்களும் அவர்கள்தான்.

// இந்தியாவினை ஆண்ட பார்ப்பன அரசர்கள் குறைவு. பிற சாதி அரசர்களே அதிகம்// எந்த சாதி அரசன் ஆண்டாலும் பார்ப்பனர்கள்தான் ஆலோசகர்களாக இருந்திருக்கிறார்கள். அஸ்வமேதயாகம் என்ற பெயரில் அரசர்களின் மனைவியரிடம் உறவு கொள்ளும் அளவுக்கு பார்ப்பனர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. அரசர்கள் மற்றும் மக்களின் இறை நம்பிக்கையை சாமார்த்தியமாகப் பயன்படுத்த எண்ணிக்கை அவசியமில்லை.

தணல் சொன்னது…

//2% கூட்டம் 98‌‌% சதவீதத்தை அடக்கி ஆள்கிறது என்பதே ஒரு தமாசுதான்.//

அடக்கி ஆள்வதாகக் கூறியதாக நீர் ஏன் மாற்றுகிறீர்? நான் சொன்னது கருத்தியல்களைப் பரப்புவது குறித்து தான்.

//மேலும் மீதி உள்ளவர்கள் நினைத்தால் பார்ப்பன பத்திரிக்கை வாங்காதேயுங்கள், அவர்களை கோவிலுக்கு போகதீர், அவர்களை வைத்து சடங்கு செய்யாமல் இருக்கலாம். அது முடியாதா என்னா?//

நான் வளர்ந்த சுற்றுப்புரத்தினர் சடங்குப் பைத்தியங்கள் அல்ல. அவர்களையும் இவாள் மாதிரி ஆக்கிட வேண்டாம் என்று தான் இதை எல்லாம் எதிர்க்கிறோம். புரிகிறதா?

அப்படி எல்லாம் பிரச்சாரம் செய்தவரைத் தானே இன்று இப்படி தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? பார்ப்பன துவேஷம் செய்கிறார்கள் என்று மறுபடியும் அப்பாவி வேடம் பூண்டு அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொள்வீர்கள்.

//பிற்படத்தபட்ட சாதி மாதிரி அரிவாள் பலத்துடன் பார்ப்பனர்கள் சுவர் கட்டுவதில்லை. இன்னமும் சொல்லப்போன அரிவாளைக் காட்டுன பார்ப்பனர் உங்களைவே சாமி ஆக்கீடுவாங்க, இதை பெரியாரே சொல்லியிருக்கறாரு. ஆனா பிற்படுத்தபட்டவரிடம் அருவாள் காட்டுன என்ன நடக்கும்ன்னு மதுரை சைடு போய் காட்டுங்க தெரியும்!//

பிற்படுத்தப்பட்ட சாதியினரை யாரும் இங்கே நியாயப்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளும். நீர் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேச்செடுத்ததால் தான் அவர்களை இழுக்க வேண்டி வந்தது. இடஒதுக்கீடு என்ன காரணத்தினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை விளக்கவே.

மேல்சாதி இயக்குனர்கள் தமது திரைப்படங்களில் இட ஒதுக்கீடால் தான் இன்று இந்தியா இழிந்த நிலையில் இருக்கிறது என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுகிறார்களே, அதை விடவும் நீர் சொன்னது ஒன்றும் பெரிய விடயமில்லை.

எல்லாம் இருக்கட்டும். இன்று ஏன் இந்த அப்பாவிப் பார்ப்பனர்கள் ஆகம விதிகளைக் கைகாட்டி பிற சாதி அர்ச்சகர்களுக்கு வேலை அளிக்க மறுக்கிறீர்கள்? அதை முதலில் கூறும்?

தணல் சொன்னது…

//சாதி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.//

அடடே! இவ்வளவு அப்பாவியா சார் நீங்க?

சாதிகள் யாராலும் உருவாக்கப்பட்டவை அல்ல இனக்குழுக்களே மாறின என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் அதை அடுக்குகளாகப் பிரித்தது நியாயப்படுத்தியது என்றெல்லாம் நீங்க கும்பிடுற புத்தகங்களில் இருக்கும், போய் வாசிச்சுப் பாருங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கு இந்தக் கருத்துகளில் வேறுபாடு உண்டு. எந்த பிராமணனும் மூட்டை தூக்கியதாகவோ, கீரைக்கட்டு விற்றதாகவோ நான் கேள்விப்படவில்லை. மூட்டை தூக்குவது, தெருத்தெருவாக பொருள் விற்பது போன்ற வேலைகளை விட நீங்கள் கல்விகற்பது, கல்வி போதிப்பது, அரசரிடம் கெஞ்சுவது ஒன்றும் சிரமம் இல்லை என நினைக்கிறேன்.
//

பார்பனர்களுக்கு புரோகிதம் தவிர்த்து கூத்தாடும் தொழில் இருந்திருக்க வேண்டும், ஆரிய கூத்து என்ற சொல் வழக்கும் தமிழில் உண்டு. எல்லா பார்பனர்களும் அரசவையிலோ, கோவில்களில் மட்டுமே வேலை செய்திருக்கும் வேலைவாய்ப்புகள் குறைவு, கோவில்களெல்லாம் 1100 ஆண்டுகளுக்குட்பட்டவை

கோவி.கண்ணன் சொன்னது…

//
200 அடிக்க வச்சிடலாமா ?//

பூமிதிக்கிறது தானே. வெளையாடுங்க.

:)

தணல் சொன்னது…

//காமராஜரை எப்போதும் அந்த நாடாரு என விளித்தும், அண்ணாவை முதலி என்பதாகவும்... ஆனால் மேடையில் பேசும் போது யாரும் பேருக்கு பின்னால் சாதிப்பேர் போட்டுக்க கூடாது.//

வவ்வால், எங்க ஊரில் இன்றும் சாதிப்பெயர் குறிப்பிட்டே அழைத்துக் கொள்கிறார்கள். இஸ்லாமியரை பாய் என்றும் ஐயரை அய்யர் என்றும். அந்த வழக்கத்திலேயே அழைத்திருக்கலாம், ஏற்ற தாழ்வுகளைக் குறைப்பதே முதல் குறிக்கோள் என்ற வகையில்.

//அவர்காலத்திலேயே திராவிடர்கழகத்தில் ஊர் தலைவர்களை ஆதிக்க சாதி தலைவர்களாகத்தான் போட்டுள்ளார், தலித்களை ஊர் கிளைத்தலைவர்களாக நியமித்ததில்லை, இன்று வரையிலும் அதே போக்கு தான் திராவிடர் கழகத்தில்.//

வவ்வால், நான் அவரது சில குறிப்புகளைப் படித்திருக்கிறேன். அவர் கொண்டு வர நினைத்த முதல் மாற்றம், ஒரு வட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையினரே அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது. அதாவது அன்று ஐந்து சதவிகிதம் இருந்த பிராமணர்கள் தான் இந்த ஊர்களை ஆட்சி செய்திருக்கிறார்கள், அதற்கு எதிராக அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மையினர் அதை ஆள வேண்டும் என்று பேசியிருந்தார். அதை முதல் கட்ட மாற்றம் என்ற மட்டில் எடுத்துக் கொள்ளலாம்.

தணல் சொன்னது…

//அம்பேத்கார் எழுப்பிய சிந்தனைகள் இன்றும் வட இந்தியாவில் மக்களிடம் இருக்கிறது,அதனால் தான் மாயாவதி போன்றவர்களால் உத்திரபிரதேசத்தில் ஆட்சிக்கு வர முடிந்தது.//

வட இந்திய நிலை புரியாமல் பேசுகிறீர்கள். உபி ஒன்றில் மட்டுமே தலித் ஒருவர் வர முடிந்தது.

பொதுவாகப் பார்த்தோமானால், அங்கு முற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகம். இவர்களே இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பெரிதும் பொங்கியவர்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் நிலை இன்னும் கீழே தான் உள்ளது. இது வட இந்திய கிராமங்களில் களஆய்வு செய்த நண்பர் ஒருவர் கூறியது. தலித்துகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அதைத் தான் செய்திகளில் பார்க்கிறோமே.

பெரியார் பரவலாக ஏற்படுத்திய பகுத்தறிவு தாக்கத்தைப் போல அம்பேத்காரால் ஏற்படுத்த முடியவில்லை. அம்பேத்கார், தான் உயர்ந்து மற்றவர்களுக்கு வழி காட்டினார் வழி அமைத்தார் என்றளவில் அது உண்மை.

தணல் சொன்னது…

//மத்திய தர சாதியினருக்கு பார்ப்பனர் மட்டுமே போட்டி,எதிரி,ஆனால் தலித்துகளுக்கு ,அனைவரும் போட்டி ,எதிரி.//

வவ்வால், இன்றைய நிலையில் மக்கள் ஊழற்ற நேர்மையான திறமையான ஒரு அரசுக்கு ஏங்கிப் போயுள்ளனர். அதை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் முதலில் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு கட்சி ஆரம்பித்து பெருமளவில் செலவு செய்து ஊர் ஊராகச் சுற்றி உழைத்து இனி ஒருவர் வரமுடியும் என்று தோன்றவில்லை. மேலும், மக்கள் மனதில் இடம் பெற செய்ய வேண்டிய பப்ளிசிட்டி ஸ்டன்ட்களைச் செய்யவேண்டும். ஊடகம் ஒன்றின் துணை நிச்சயம் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் ஏகப்பட்ட பொருட்செலவு ஆகும். திமுக அதிமுக வைத் தவிர (விஜயகாந்த் தவிர்த்து) பெரிய அளவில் யாரும் மக்களைச் சேர்ந்தடையவில்லை என்பதே உண்மை. இதை எல்லாம் செய்யக் கூடியவர் தலித் சார்பு நிலை எடுக்காமல் reconciliation போக்கைக் கடைபிடித்தால் நிச்சயம் வாய்ப்புண்டு.

தணல் சொன்னது…

//சென்னை அருகே உள்ள கிராம பஞ்சாயத்துகளிலேயே அதான் நிலைமை, பல பஞ்சாயத்து தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சென்னை புற நகரில் சில பஞ்சாயத்துகளில் சொந்த செல்வாக்கில் பொது தொகுதியில் வென்ற தலித் தலைவர்கள் இவர்கள்.அப்படியான கொலை சம்பவம் எங்க பகுதியிலும் நடந்துள்ளது.//

இது போன்ற விஷயங்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? வவ்வால், அவர்கள் சொந்தச் செல்வாக்கில் வென்றவர்கள் என்றால் அங்குள்ள மற்ற சாதியினரின் ஆதரவும் உள்ளது என்று தானே அர்த்தம்?

//சென்னை புறநகரில் ரியல் எஸ்டேட் நன்றாக போகிறது,பஞ்சாயத்து அப்ரூவல் கொடுக்க நல்ல வருமானம் ,எனவே அதனை இவன் சம்பாதிப்பதா என்றே போட்டு தள்ளிவிட்டு ,இன்னொருவரை அல்லது கொலை செய்தவரே பதவிக்கு வருவார்.//

இது சாதியம் சம்பந்தப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பணம் சம்பாதிப்பதில் உள்ள போட்டி காரணமாகவே என்று தோன்றுகிறது. எந்தச் சாதியாக இருந்தாலும் நேர்மையாக இருக்க முடிந்தால் அம்மக்களின் ஆதரவு அவர்களுக்கு தொடர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

தணல் சொன்னது…

//Quran 2:230. மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். //

சிரிப்பு தான் வருகிறது :-)

தணல் சொன்னது…

//ஏனெனில் இவற்றினால் பிரமிடின் கடைசியில் நசுங்கும் எனது கடைக்கோடி சகோதரனுக்கு பெரிய பலன் ஏதுமில்லை!//

அடடா! உங்கள் அன்பு புல்லரிக்க வைக்கிறது.

தணல் சொன்னது…

//நிறைய பேருக்கு தெரியலை ,வெளிநாட்டில் எல்லாம் எந்திரங்கள் தானாக நிமிடத்தில் கழுத்தை வெட்டி கறியாக்குவது, ஆனாலும் அதனையும் ஹலால்னு சாப்பிடுவாங்க, பேசுறது தான் பெத்த பேச்சு :-))//

அது ஹலால் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். மீட்டிங்கில் வழங்கப்படும் மாமிச உணவைச் சிலர் உண்ணுவதில்லை, வெஜிடேரியன் அல்லது மீன் உணவை எடுத்துக்கொள்ளுவார்கள் (நல்ல வேளையாக மீனை ஹலால் முறையில் தான் பிடிக்க வேண்டும், மரக்கறியை இப்படித் தான் வெட்ட வேண்டும் என்று எழுதிவைக்கவில்லை). வீட்டில் சமைப்பதற்கு ஹலால் மாமிசத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். இதெல்லாம் சிறுபிராயத்திலிருந்து பெற்றோர் பழக்கி வைத்திருப்பது. சிலர் ஹலால் இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல் உண்ணுவார்கள்.

யூதர்களுக்கும் இப்படி முறைமை உண்டு, ஆனால் அவர்கள் வெளியில் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஹலால் முறையில் எனக்கு ஒப்புதல் இல்லை. இங்கு செய்யப்படுவதைப் போன்று முதலில் மிருகங்கள் ஸ்டன் செய்யப்பட்டு பிறகு வலி தெரியாமல் கொல்லப்பட வேண்டும். ஆனால் பாருங்கள், இதைப் போன்ற மாற்றங்களை இவர்களால் (சில யூதர்களாலும் தான்) ஏற்றுக்கொள்ளவே முடியாது. மூளை அல்லது சுயமாகச் சிந்திக்கும் திறன் என்பதே இல்லாதது போல, குரானில் இப்படிக் கூறியிருக்கிறது, அது தெய்வ வாக்கு, எனவே அப்படித் தான் துடிக்க அறுத்து உண்ணுவோம் என்பார்கள்.

? சொன்னது…

//பிற்படுத்தப்பட்ட சாதியினரை யாரும் இங்கே நியாயப்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளும். //

பார்பனரை யாரும் இங்கே நியாயப்படுத்தவில்லை என்பதை நீர் முதலில் புரிந்து கொள்ளும்.

பார்ப்பனர் மட்டும் சாதிக்கு காரணம் எனச் சொல்லி இட ஒதுக்கீடு அனுவபவிக்கும் பிற்படுத்தப்பட்டதாக சொல்லிக் கொ'ல்லும்' ஆதிக்க சாதிகளின் களவாணித்தனத்தை தான் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்!

//இன்று ஏன் இந்த அப்பாவிப் பார்ப்பனர்கள் ஆகம விதிகளைக் கைகாட்டி பிற சாதி அர்ச்சகர்களுக்கு வேலை அளிக்க மறுக்கிறீர்கள்? அதை முதலில் கூறும்?//

நான் பார்ப்பனர்கள் கோவிலுக்கே போகாதீர்கள் அல்லது முனிஸ்வரன், மாரியம்மன் கோவிலுக்கு போங்கள் என்கிறேன். புறக்கணியுங்கள் அவர்கள் கீழே இறங்கி வருவார்கள்.

//அதை அடுக்குகளாகப் பிரித்தது நியாயப்படுத்தியது//

அவன் உயர் இடத்தில் இருக்கிறான். அப்படித்தான் செய்வான். பலம் பொருந்திய ஆதிக்க சாதி ஆட்களுக்கு சொந்த புத்தியே இல்லையா... இல்லை இல்லாதது போல் நடிக்கறீர்களா?

? சொன்னது…

//அடடா! உங்கள் அன்பு புல்லரிக்க வைக்கிறது. //

உங்களின் ஆதிக்க சாதி அன்பு என்னை புல்லரிக்க வைக்ககிறது... மாத்தி மாத்தி சொறிவமா?

தணல் சொன்னது…

//உங்களின் ஆதிக்க சாதி அன்பு என்னை புல்லரிக்க வைக்ககிறது... மாத்தி மாத்தி சொறிவமா?//

எனக்கு அரிப்பில்லை. நன்றி :-)

தணல் சொன்னது…

//பார்பனரை யாரும் இங்கே நியாயப்படுத்தவில்லை என்பதை நீர் முதலில் புரிந்து கொள்ளும்.//

நியாயப்படுத்தவில்லை என்றால் நன்று.

//பார்ப்பனர் மட்டும் சாதிக்கு காரணம் எனச் சொல்லி இட ஒதுக்கீடு அனுவபவிக்கும் பிற்படுத்தப்பட்டதாக சொல்லிக் கொ'ல்லும்' ஆதிக்க சாதிகளின் களவாணித்தனத்தை தான் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்!//

அப்படிச் சுட்டிக்காட்டும் நீங்கள் 'யார்' என்பதில் இருக்கிறது உங்களது நியாயம்.

//நான் பார்ப்பனர்கள் கோவிலுக்கே போகாதீர்கள் அல்லது முனிஸ்வரன், மாரியம்மன் கோவிலுக்கு போங்கள் என்கிறேன். புறக்கணியுங்கள் அவர்கள் கீழே இறங்கி வருவார்கள்.//

கோவில் என்பது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. போகாதே என்று கூற நீங்கள் யார்? முனிஸ்வரன் அல்லது மாரியம்மன் புராணமா இன்று பெருமையுடன் ஊடங்கங்களில் 'இது நமது கலாச்சாரம்' என்று பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது? எதிர்ப்பவனைத் தூக்கி எறிந்துவிட்டு உன்னை நிலைநாட்ட முயற்சி செய் என்ற கருத்தை வலியுறுத்தித் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

//அவன் உயர் இடத்தில் இருக்கிறான். அப்படித்தான் செய்வான். பலம் பொருந்திய ஆதிக்க சாதி ஆட்களுக்கு சொந்த புத்தியே இல்லையா... இல்லை இல்லாதது போல் நடிக்கறீர்களா?//

சொந்த புத்தி இல்லாதவர்களுக்காகத் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். உயர் இடத்தில் இருப்பவன் தன் விருப்பம் போலத்தான் வஞ்சகம் செய்வான் என்று நியாயப்படுத்திவிடாமல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவன் உயர் இடத்தில் இருக்கிறான். அப்படித்தான் செய்வான். பலம் பொருந்திய ஆதிக்க சாதி ஆட்களுக்கு சொந்த புத்தியே இல்லையா... இல்லை இல்லாதது போல் நடிக்கறீர்களா?//

ஆதிக்க சாதிங்கிறது அவங்க எந்த இடத்தில் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. எல்லா இடத்திலும் அவர்கள் வாலாட்ட முடியாது, ஒட்ட நறுக்கிவிடுவார்கள்.

ஒரு தேவர் வடதமிழகத்தில் வாலாட்ட முடியாது, ஒரு வன்னியர் தென் தமிழகத்தில் வாலாட்ட முடியாது, இவங்க அதிகாரம் வசிக்கும் எல்லைக்குட்பட்டது. ஆனால் எல்லா இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் மட்டமாகத்தான் நடத்தப்படுகிறார்கள்.

அதே போன்று தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்த கிராமங்களில் அவர்கள் வைப்பது தான் சட்டம் என்று நிலைமை மாறிவிட்டது.

பெயரில்லா சொன்னது…

எல்லோரும் நல்லாப் பூ மிதித்துள்ளார்கள். ஏக சாந்தி சில்பா உண்டாவதாக ! எம் பூனையார் மனம் மகிழ்ந்துள்ளார் ... !!! எல்லோருக்கும் சொர்க்கத்தில் லெக் பீஸ் பிரியாணியும், ஒரு புல்லும், குத்தாட்டம் ஆட மஜா பண்ண 101 சொப்பண சுந்தரிகளையும் ஏற்பாடு செய்துள்ளார். எல்லோரும் உடனடியாக சொர்க்கத்துக்கு போக கவுண்டர் திறந்து வைக்கப்பட்டுள்ளது ... இச்சலுகை கொஞ்ச நாளுக்கு மட்டும் தான். எல்லோரும் ஓடோடி வாருங்கள் சகோ.க்களே.


? சொன்னது…

@ சகோ குபி
பிராமணர்கள் அந்தக்காலத்தில் வேறுவேலை செய்யதால் சாதியை விட்டு விலக்கபடுவார்கள் என்பதினால் பிச்சை எடுத்தே வாழ்ந்தார்கள். எல்லோருமா அரசனிடம் பிச்சை எடுக்க முடியும். கோவிலில் போடும் காணிக்கைக்கூட ஒருவகை பிச்சைதான். ஆனால் பிராமணர்கள் மிகவும் புத்திசாலிகள் (தந்திரசாலிகள் என பொருள் கொள்க). அதனால் அவர்கள் தாங்கள் விதித்ததை விதிகளை மாற்றி எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு பொருள் ஈட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

நிற்க வழி இல்லை எனில் அவர்களும் எல்லா வேலையும் செய்வார்கள் இந்த வீடியோ பாருங்கள் http://www.youtube.com/watch?v=pADUEUGD8RI

இதில் உள்ள பிராமணர்கள் அமுக்கபடுகிறார்கள் என்று இப்படத்தின் செய்தியினை மறுக்கிறேன். ஆனால் பிராமணனனோ இல்லை சூத்தரனோ இம்மாதிரி கஷ்டப்படுவதை கண்டு வருத்தப்படுகிறேன். ஆக சூத்திரன் கஷ்டப்படுவதை நிறுத்தும் போது இவர்கள் கஷ்டம் தீர்ந்தால் போதும். எல்லாம் கர்மவினை... விதை விதைத்தவன் அறுத்துதானே ஆக வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவில் என்பது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. போகாதே என்று கூற நீங்கள் யார்? //

இதை நான் ஒப்புக் கொள்கிறேன். கோவில்கள் புறக்கணிக்கப்பட்டால் கோவில்கள் தான் பாழடையும், அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வேற கோவிலுக்கு இடம் பெயர்ந்துவிடுவார்கள், தொடர்ந்து வழிபட்டவர்களுக்கு தான் நட்டம்.

குலதெய்வத்தையெல்லாம் விட்டு ஒழிச்சிட்டும் மதம் மாறுகிறேன் என்று செல்பவர்களும் சாதியை விடாமல் பிடித்து தொங்குகிறார்கள், அதுக்கு பதிலாக அவர்கள் ஆளுமை சக்திகளை எதிர்த்து போராடி அவர்களை விரட்டி இருக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லோருக்கும் சொர்க்கத்தில் லெக் பீஸ் பிரியாணியும், ஒரு புல்லும், குத்தாட்டம் ஆட மஜா பண்ண 101 சொப்பண சுந்தரிகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.//

அதும் ஹலல் பிரியாணியாகத்தான் இருக்கனும், ஆடுமாடுகளும் பிரியாணி ஆகவே சொர்கத்திற்கு செல்லுமா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் 200க்கு மேலே சென்றால் அடுத்தப் பக்கத்தில் தான் தெரியும்.

தணல் சொன்னது…

கோவி, நந்தவனத்தார் அளித்திருக்கும் அந்த வீடியோவைப் பாருங்க :-)

இங்கு மக்கள் காலங் காலமாக உடலால் உழைத்து வருகிறார்கள். இவர்களைப் போல அனுதாப அல்வா கிண்டிக் கொண்டிருக்காமல். அல்வாவுக்கு நெய்யாக பின்னணியில் சோக ம்யூசிக் வேறு.

உடல் உழைப்பு இல்லாதவர்களை கேவலமாகப் பேசுவார்கள் எம்மூரில், தின்னுறதையும் தூங்கறதையும் தவிர வேற வேலையே இல்ல என்று.

இட ஒதுக்கீட்டால் பயன்பெற்று இப்படி உடலால் உழைக்க இயலாமல் ஆபீசில் உட்கார்ந்து வேலை செய்பவர்களை நினைத்து நானும் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இட ஒதுக்கீட்டால் பயன்பெற்று இப்படி உடலால் உழைக்க இயலாமல் ஆபீசில் உட்கார்ந்து வேலை செய்பவர்களை நினைத்து நானும் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன்.//

கொள்ளைப்பணத்தில் குறிப்பிட்ட பணத்தை உண்டியலுக்கு ஒதுக்கிறேன் என்று வேண்டிக் கொள்வதில் தான் தங்கள் கசானா நிறைவதாக பணக்காரர்கள் நம்புகிறார்கள்,

இட ஒதுக்கீடு சலுகைகள் எல்லாம் காலம் காலமாக இருந்துவருபவையே அனுபவிக்கும் ஆட்கள் வேறு, மானியங்களாக, பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் நாம கேள்விப்பட்டிருக்கோமா இல்லையா ?

:)

பெயரில்லா சொன்னது…

வருண பகவான் நன்னா பெஞ்சு இருக்கிறார்... நான் மழையை சொன்னேனாக்கும் .. !

இந்து மதம் மோசமானது தான், ஆனால் அந்த மோசத்துக்கு விமோசனம் கிறித்தவமோ, இஸ்லாமோ இல்லவே இல்லை .. !

வருண பகவான் இதனை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்... ஒரு வேளை மதம் மாறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் தருகின்றார்கள் என்று சொன்னால் தாராளமாக மாறிக் கொள்ளுங்கள், எந்த கேடியும் ஒரு கோடி தயாராக இல்லை ... !!! என்பது தான் நிதர்சன உண்மை.

அடுத்து பார்ப்பனர்கள் பௌத்தத்துக்கு மாறவே இல்லை என்று பெஞ்சுக் கொண்டு இருந்தார், பார்ப்பனர்கள் பலர் பௌத்தத்துக்கு மாறியுள்ளனர்.. ஆரம்பக் கால பௌத்த முனியான நாகார்ஜூனர் என்பவர் ஒரு பார்ப்பனரே.

வசுபந்து, சார்புத்ரா, மகா கஸ்யபா, புத்த கோசா எனப் பல பார்ப்பனர்கள் இந்து மதத்தை துறந்து புத்த மதத்துக்கு ஆரம்ப காலங்களில் மாறியுள்ளனர்....

அம்பேத்கார் என்ற பெயரே ஒரு பார்ப்பனருடையது என்பதை நாம் அறிவோம்.. மகர் சாதிகளை பார்ப்பனர் மட்டும் வெறுக்கவில்லை மராத்திய ஆதிக்கச் சாதிகள் அனைத்துமே ஒருக் காலத்தில் புறக்கணித்தன ... பழிகளை பார்ப்பனர் மீது மட்டும் போடுவது நியாயமான ஒன்றில்லை, அனைத்து ஆதிக்கச் சாதிகளும் பார்ப்பனத்தனத்துக்குள் அடங்கி இருக்கின்றன ... பல பார்ப்பனர்கள் தமது பார்ப்பனத்தை விட்டு வெளியேறி உள்ளார்கள், எதிர்த்து உள்ளார்கள், சாதியத்தை ஒழித்துள்ளார்கள் .. அம்பேத்கார் ஒருபோதும் பார்ப்பன இனத்தை வெறுத்தது இல்லை, பார்ப்பன சாதிய வெறியையே வெறுத்துள்ளார்கள்.

ஜி.என்.சகஸ்ரபுத்த என்னும் பார்ப்பனர் மனுஸ்மிருதி எரித்து போராடியது அம்பேத்காரை மிகவும் கவர்ந்தது, அவரை மாற்றியது கூட சொல்லலாம். அம்பேத்காரின் இரண்டாம் மனைவி சவிதா கூட ஒரு பார்ப்பன பெண் தான் என்பதை நாம் அறிவோமாக ! இங்கு நாம் வெறுக்க வேண்டியது வேதம் - மனுஸ்மிருதி அதனை தக்க வைத்து வரும் பார்ப்பனர்கள், அவர்களுக்கு பல்லக்குத் தூக்கும் ஆதிக்கச் சாதிகள், அத்தோடு இன்ன பிற மதவாதிகளைத் தான் ...

இன்னும் எண்ணற்ற பார்ப்பனர்கள் பிராமணியத்தில் இருந்து வெளியேறி நாத்திகர்களாகவும், இடது சாரிகளாகவும் மாறியுள்ளனர். சமத்துவம் பேணியுள்ளனர். பெலிஜியத்தின் கெண்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் பாலகங்காதர என்பவர் கூட ஒரு பார்ப்பனராக பிறந்து நாத்திகராக மாறியவரே. இன்னும் பற்பல பேர்கள் உள்ளார்கள் ....

பார்ப்பனர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை... ஆனால் பார்ப்பனம் அழிக்கப்பட வேண்டியது .. பார்ப்பனத்தில் பார்ப்பனர் மட்டுமில்லை, அதன் அடிவருடிகளாக பல ஆதிக்கச் சாதிகள் மதங்கள் கடந்தும் இந்தியாவில் நிழலாடுகின்றது ... !!!

வருணபகவானரே, சுகவனபிரியாணியாரே நான் ஒரு தத்துவஞானியாகவே இருந்துவிட்டு போகின்றேன் ... ஆனால் சித்து வித்தைக் காட்டும் அஞ்ஞானியாக இருக்க மாட்டேன் ... என்பதில் மட்டும் மகிழ்வடைந்துக் கொள்கின்றேன் ... !!!

«மிகவும் பழையது ‹பழையது   265 இல் 1 – 200   புதியவை› புத்தம் புதியவை›

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்