நிறைய நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. நிறைய நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். என்னை வந்து சந்தித்தும் இருக்கிறார்கள். இதில் முதன்மையாக நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளது திரு (வி) எஸ்கே ஐயா அவர்கள். என்மீது அன்பு கொண்ட பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
அறிமுகப் பதிவில் குறிப்பிட்டது போலவே அரசியல்,கதை, கவிதை, கட்டுரை என எல்லா பிரிவுகளிலும் என் அறிவுக்கு எட்டியவற்றை எழுதி தள்ளி இருக்கிறேன். காலம் மற்றும் காலங்களிலும், சொல் ஒரு சொல், சற்றுமுன் மற்றும் வ.வா.ச வுக்கு 2 பதிவுகள் என 300 ++ பதிவுகள் எழுதி இருக்கிறேன். மொக்கை பதிவுகளின் விழுக்காடு அதிக அளவில் இருக்கிறது :)). 5,000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றும் 15,000க்கு அதிகமான பின்னூட்டங்களைப் நண்பர்களின் வலைப்பதிவுகளுக்கு போட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறேன்.
எனது பதிவுகளில் எந்த தனிமனித தாக்குதல்களும் இருந்ததாக தெரியவில்லை.
ஒரு வயசு இன்னிக்கு பூர்த்தி ஆகிவிட்டது.
-- அன்புடன்,
கோவி.கண்ணன்
Blogger Sites :
http://kaalangkal.blogspot.com
http://govikannan.blogspot.com
குருமா (கூட்டு) பதிவுகள் :
http://solorusol.blogspot.com
http://satrumun.blogspot.com