பின்பற்றுபவர்கள்

மீள் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 ஏப்ரல், 2007

எனக்கு ஒரு வயசு ஆகுது !

வலைப்பதிவில் விபத்தாக வழுக்கி விழுந்து இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியாகிறது. இதில் கற்றதும், பெற்றதும் பெரும்பாலும் நல்ல விசயங்களே.

நிறைய நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. நிறைய நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். என்னை வந்து சந்தித்தும் இருக்கிறார்கள். இதில் முதன்மையாக நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளது திரு (வி) எஸ்கே ஐயா அவர்கள். என்மீது அன்பு கொண்ட பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

அறிமுகப் பதிவில் குறிப்பிட்டது போலவே அரசியல்,கதை, கவிதை, கட்டுரை என எல்லா பிரிவுகளிலும் என் அறிவுக்கு எட்டியவற்றை எழுதி தள்ளி இருக்கிறேன். காலம் மற்றும் காலங்களிலும், சொல் ஒரு சொல், சற்றுமுன் மற்றும் வ.வா.ச வுக்கு 2 பதிவுகள் என 300 ++ பதிவுகள் எழுதி இருக்கிறேன். மொக்கை பதிவுகளின் விழுக்காடு அதிக அளவில் இருக்கிறது :)). 5,000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றும் 15,000க்கு அதிகமான பின்னூட்டங்களைப் நண்பர்களின் வலைப்பதிவுகளுக்கு போட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறேன்.

எனது பதிவுகளில் எந்த தனிமனித தாக்குதல்களும் இருந்ததாக தெரியவில்லை.

ஒரு வயசு இன்னிக்கு பூர்த்தி ஆகிவிட்டது.



-- அன்புடன்,
கோவி.கண்ணன்
Blogger Sites :
http://kaalangkal.blogspot.com

http://govikannan.blogspot.com


குருமா (கூட்டு) பதிவுகள் :
http://solorusol.blogspot.com

http://satrumun.blogspot.com





மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்