பின்பற்றுபவர்கள்

26 செப்டம்பர், 2008

கொய்யா....'லே' ! - வைகைப் புயலின் கட்சி பெயர் மற்றும் சின்னம் !

'வ'னா 'வே'னா சின்னப் புள்ளை, சின்னப் புள்ளத்தனமாக ஒண்டிக்கு ஒண்டி பேட்டிக் கொடுத்தாலும் வெவரம் தான். ஒரு கட்சி ஆரம்பிக்க எவ்வளவு யோசனை செய்து ( நீண்ட காலத்திற்கு பணம் கொழிக்கும் கார்ப்ரேட் பிஸ்னஸ் ஆச்சே) பெயரெல்லாம் வைக்கிறார்கள். ஆனால் நம்ம கைப்புள்ள வடிவேலு எல்லாவற்றிலும் அதிரடி தான்.

கட்சிக்கு பெயரை நக்கீரன் பேட்டியில் உடனே சொல்லிவிட்டார்



கட்சியின் பெயர் : 'வைகைப் புயல் திராவிடக் மக்கள் கழகம்' (VPDMK) ,



சின்னம் ?

சின்னப்புள்ளத் தனமாக இருக்கிறார் என்று நினைக்காதிங்க,



'கொய்யாப் பழம்' சின்னமாம்


திருநெல்வேலி பக்கம் போனால்,

'ஏலே... சின்ராசு, நம்ம வடிவேலு கட்சி சின்னம் என்ன...லே ?'

'டக்குன்னு வரமாட்டேங்குது................. அட(ங்) 'கொய்யா'.....லே' ன்னு வாங்களோ :)))))))))

இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி உண்மையிலே வீரன் தேங்....!

கிளிக்கிப் பெரிதாகப் பார்க்கவும் !

வைகைப்புயல் திராவிட மக்கள் கட்சி சார்பாக தேர்தலில் நிற்க சீட்டு வேண்டுவோர் வடகரை வேலன் அண்ணாச்சியை நாடுங்கள், முந்துவோருக்கு முன்னுரிமை.

10 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

ஓட்டு போட்டா ஆளுகொரு கொய்யா பழம் கொடுப்பாங்களா

கிரி சொன்னது…

அவ்வவ் வடிவேல் இம்சையை தாங்க முடியல.. தோத்துட்டா சினிமாவை விட்டே விலகிக்கிறேன்னு கூறி இருக்காரே..ஏற்கனவே காதை அறுத்துக்கறேன்னு சொன்னதையே இன்னும் செய்யல..

அதனால கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்பதால் அரசியல் "வியாதி" ஆகும் முழு தகுதியை அடைந்து விட்டார்.

எங்கள் ஒட்டு கொய்யா(லே) பழ சின்னத்துக்கே :-))))))))))

tamilraja சொன்னது…

முள்ளு குத்தி செத்தவீரனுங்க இருக்காங்க சாமி!
சாதாரணமா நெனைக்கிறது சிலநேரம்
ஆப்பு வச்சிடும்.

விஜய் ஆனந்த் சொன்னது…

வைகைப்புயல் அப்போ மெய்யாலுமே சீரியஸாதான் பேசிகிட்டு இருக்காரா???

(அண்ணே, உங்க வலைப்பூவின் மதிப்பு உயராம, அப்படியே இருக்கு???)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நாகப்பட்டினம் (தனி) தொகுதி வேற ஆளுக்குன்னு பேசிக்கிறாங்க.
எதுக்கும் கழகத் தலைமையுடன் தொடர்பில் இருக்கவும்.

ஓ.எஸ்.மணியன் மாதிரி, கொ.ப.செ. பதவியை பெறுவதற்கு தகுதியானவராக உங்களைக் கருதுகிறோம். கோவை சரளம்மா முயற்சி செய்வதாகக் கேள்வி. விட்டுராதிங்க கோவியாரே...!

அப்புறம் வடிவேளுக்கப்புரம் கோவை சரளாதான் முதல்வர். சொல்லிபுட்டேன் ஆமா!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நாகப்பட்டினம் (தனி) தொகுதி வேற ஆளுக்குன்னு பேசிக்கிறாங்க.
எதுக்கும் கழகத் தலைமையுடன் தொடர்பில் இருக்கவும்.

ஓ.எஸ்.மணியன் மாதிரி, கொ.ப.செ. பதவியை பெறுவதற்கு தகுதியானவராக உங்களைக் கருதுகிறோம். கோவை சரளம்மா முயற்சி செய்வதாகக் கேள்வி. விட்டுராதிங்க கோவியாரே...!

அப்புறம் வடிவேளுக்கப்புரம் கோவை சரளாதான் முதல்வர். சொல்லிபுட்டேன் ஆமா!
//

ஜோதிபாரதி,
பாராளுமன்றத்துக்குத்தான் தனித் தொகுதி, சட்டமன்றத்துக்கு பொதுத் தொகுதியும் இருக்கு. அண்ணன் வடிவேலு முதல்வர் பதிவிக்குத்தான் நிற்கிறார், அவருக்கு பிரதமர் ஆகும் பேராசையெல்லாம் இல்லை.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே வடிவேலு ஆட்சியில நீங்க தான் பதிவுத்துறை அமைச்சர்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உங்களுக்கு ஷேவிங் செஞ்சு உங்ககிட்ட 1000 ரூபா ஆட்டைய போட்டவன, நம்ம ஆட்சிக்கு வந்ததும் முத வேலையா தூக்கிடுவோம்ணே.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ரேசன்ல எல்லாருக்கும் கொய்யா குடுக்கனும், அப்புறம் சத்துணவுல முட்டையோட கொய்யப்பழமும் கொடுப்போம். கொய்யாப் பழம் வாங்குறதுக்கு தனியா ஒரு கொய்யாத்துறை அமைச்சர போட்ருவோம்.

முரளிகண்ணன் சொன்னது…

:-))))))))))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்