பின்பற்றுபவர்கள்

19 நவம்பர், 2007

சிவன் - பார்வதிக்கு என்ன வயது ?

14 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் வயது ஏறவில்லை. புரிய வில்லையா ? ஐயப்பன் அவதாரம் செய்தபிறகு சிவன் - மோகினி (கிருஷ்ணன்) தம்பதிகளுக்கோ, அல்லது சிவன் - பார்வதி தம்பதிகளுக்கு முருகன் தவிர்த்து வாரிசுகள் இல்லை. கிடைத்ததெல்லாம் ஆண் வாரிசு என்பது வேறொருவிசயம். கொடுப்பினை உள்ளவர்களுக்குத் தானே ஆண் வாரிசு கிடைக்கும். கடவுள்கள் கொடுப்பவர்கள் அவர்களுக்கே கொடுப்பினை இல்லாமல் போகுமா ? அதனால் தான் சிவன் பெற்ற நல்மக்களெல்லாம் ஆண் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். கிருஷ்ணன் - ராதை தம்பதிகள் பெற்றுக் கொள்ளாததைவிட இது எவ்வளவோ பரவாயில்லை.

சன் டிவியில் அடிக்கடிவரும் வேலன், இராஜ இராஜேஷ்வரி தவிர்த்து புராண கதைகள் எதுவும் பரிணாமம் பெறவில்லை என்பது வருத்தமான விசயமாக இருக்கிறது. மணக்கோலம் பூண்டு இரு மனைவிகளை உடைய முருகனுக்கோ தாம் என்றும் இளமையாக இருக்க வேண்ட்டும் என்று நினைத்தானோ தெரியவில்லை. மேல் நாட்டு வழக்கப்படி வாரிசு இல்லா குடும்பங்களாக மாறவிட்டாரா ? சிவன் தாத்தாவாகும் கொடுப்பினை இல்லாமல் இருக்கிறார். சிவன் - பார்வதி தம்பதிகள் கொஞ்சி விளையாட பேரன் ( பேத்தி எப்படியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை) இன்றி தவக்கோலத்தில் இருக்கிறார்கள்

முருகனுக்கு 16 வயது என்றால், அந்த காலத்தில் 16 வயதில் மணமுடிப்பார்கள், என்றும் 16 ஆகவே இருக்கிறார். எனவே சிவனுக்கு 32 - 33 வயது இருக்கும். பார்வதிக்கு அதைவிட குறைவாக 30க்குள் இருக்கும்.

**********

இது ஒரு சிந்தனைக்காகத்தான் எழுதினேன். விசயம் அதுவல்ல.

சபரிமலையில் 18 படிகளை தொட முயன்ற பெண் கைது
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007




சபரிமலை: சபரி மலை ஐயப்பன் சன்னிதானத்தில் 18 படிகளை தொட முயன்ற புதுச்சேரியை‌ சேர்ந்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

****
ஐயப்பன் கதைப்படி ஐயப்பன் சபரிமலையில் அமர்ந்த போது வயது 12, 12 வயது பாலகனுக்கு பெண் விலக்கப்பட்டவளாக இருக்கிறாள் என்று சொல்வது மாபெரும் இழிவு கற்பனை. அதைவிட கொடுமை அந்த பெண் 18 ஆம் படியை தீண்டினால் கூட கைது செய்யப்படும் நிலைமை. பார்வதியின் வயதை அதாவது தன் சின்னம்மாவின் ( ஐயப்பனை பெற்றெடுத்த மோகினி கிருஷ்ணனுக்கு பார்வதி தங்கை) வயதை ஒத்த ஒரு பக்தை தன்னை தரிசிக்க வருவதை ஐயப்பன் நிராகரிக்கிறானா ? அல்லது நம்பூதிரிகள் நிராகரிக்கிறார்களா ?

'கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போன அங்க ஒரு பேய் பூசாரியாக நின்னுச்சாம்' என்று பழமொழி சொல்வார்கள்.

எல்லா இடத்திலும் பெண்ணுரிமைக்கு போராடும் பெண்கள் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.


நம்பிக்கை இழிவுபடுகிறதா ? அல்லது இழிவே நம்பிக்கையா ?

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்