பின்பற்றுபவர்கள்

17 மே, 2009

விருந்தில் பாயாசம் வேண்டாம் !

இலங்கை மற்றும் இந்திய அரசியல் வெற்றியைத் தொடர்ந்து தங்களுக்கு கொடுக்கப்படும் விருந்தில் பாயாசம் வேண்டாம் என்று தமிழர் தலைவர்(!), இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்குக் காரணமாக ஏற்கனவே திகட்ட திகட்ட சாப்பிட்ட இனிப்புக்கு பிறகும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் இனிப்பை தவிர்க்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

இனிப்பைத் தவிர்த்த தங்கள் தலைவரின் பெரும் தன்மையைப் பாராட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தலைவருக்கு புகழாராம் தெரிவித்து அனுப்பிய தந்தி மலையில் இந்திய தபால் தந்தித்துறை விழிபிதுங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இழவு வீட்டில் கொட்டுச் சத்தமாம்,
எதிர்த்த வீட்டில் கெட்டி மேளமாம் !

- இந்த பதிவுக்கும் கீழே உள்ள கேஆர்எஸ் பதிவுக்கும் தொடர்பேதும் இல்லை.




"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!


"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!

"இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது!

7 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

மீ தி பர்ஸ்ட்

(சின்ன சின்ன ஆசை)

வாழ்த்துக்கள்

TBCD சொன்னது…

என்ன எழுதியிருக்கீங்க என்று உங்களுக்காவது புரிந்தால் சரி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
மீ தி பர்ஸ்ட்

(சின்ன சின்ன ஆசை)

வாழ்த்துக்கள்
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
என்ன எழுதியிருக்கீங்க என்று உங்களுக்காவது புரிந்தால் சரி !
//
"மேடை" நாடகாமே பார்த்திராத பச்சப் புள்ளைய்யா நீ :)

தீப்பெட்டி சொன்னது…

என்னாச்சு உங்களுக்கு...

ALIF AHAMED சொன்னது…

அந்த பதிவின் லெபிலை பாக்கலையா :)

:))))

Venkatesh சொன்னது…

நம்பி நம்பி ஏமார்ந்தது போதுங்க..
இவர்களால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.

வெங்கடேஷ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்