பின்பற்றுபவர்கள்

1 மே, 2023

நித்தி என்பது வெறும் சாமியார் அல்ல

சாமியார் என்றால் ஏதோ காவியோ கோமணமோ கட்டிய பஞ்ச பரதேசி என்று மக்களுக்கு காலம் காலமாக திணித்திருந்த எண்ணத்தை உடைத்தவர் யார் ?

பட்டும் பீதாம்பரமும் தங்க மகுடமும் அரசர்க்கும் பெரும் செல்வந்தர்களுக்கே உடையது என்ற மாயையை உடைத்தது யார் ?

சாமியார் என்றாலே சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக உபதேசம் செய்பவர் என்ற பிற்போக்கு எண்ணத்தை உடைத்து பெண்கள் புடை சூழ ‘கல கல’ சிரிப்பில் கூத்தும் கும்பாளமாகவும் சத்சங்கம் நடத்த முடியும் என்று செய்து காட்டியது யார் ?

யார் ? யார் ? யார் ? சாமியார்களின் சாமியார் ராஜ ரிஷி நம்ம நித்யானந்த பரமஹம்சர் தான் அந்த பெருமைக்குறிய மஹான்

நேத்திக்கு சொல்வதெல்லாம் உண்மையில் குந்தி இருந்து இன்னிக்கு சொல்வதெல்லாம் அருள் வாக்கு என்று உருமாறி இருக்கும் அன்ன பூரணி அரசு அம்மா தங்க மகுடம் சூட்டி ஆத்தாவாக அவதரித்துள்ளது என்றால், ‘வெத போட்டது யாரு ?’

நம்ம பரமஹம்சர் தான். 

ஓம் நித்யானந்த பரமசிவம். A trendsetter, ஒரு புரட்சியாளர்


- கோவி 

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்