பின்பற்றுபவர்கள்

1 டிசம்பர், 2008

என்னம்மா யோசிக்கிறாய்ங்க !

மெதடிஸ்ட் ப்ராட்டஸ்டாண்ட் சர்ச்சுக்கு போக மாட்டார்கள்
ப்ராட்டஸ்டாண்ட் மெதடிஸ்ட் (பெந்தகோஷ்) சர்ச்சுக்கு போக மாட்டாங்க
இவர்கள் இருவரும் மாதா கோவிலுக்கு போக மாட்டார்கள்

அப்பறம்,

சியா முஸ்லிம் சன்னி முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
சன்னி முஸ்லிம் சியா முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
இவர்கள் வகாபிகளாக இருந்தால் தர்காவுக்கு போக மாட்டார்கள்

ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் மதத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ( கணக்கு தப்பு 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் பாலம் கட்டப்பட்டது) ஹிந்து கோவில் எதுக்கு வேண்டுமானாலும் போகலாம். தடையே இல்லை

நன்றாக சிந்தியுங்கள், எது உண்மையான மதம் ?

நண்பர் சிங்கை நாதன் செந்திலுக்கு ஆங்கிலத்தில் வந்த ஒரு நீண்ட மின் அஞ்சலின் குறுகிய தமிழாக்கம் தான் இது


*******

படிக்க ஞாயமான கேள்வி போல் இருந்தாலும், இதிலிருக்கும் இந்துத்துவ விளம்பரம் சகிக்க முடிகிறதா ? அல்லது இவர்கள் சொல்வது உண்மைதானா ?

வடகலை வைணவர், தென்கலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
தென்கலை வைணவர், வடகலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
இவ்விருவைணவரும் சைவர்களின் சிவன் கோவிலுக்கு போகமாட்டார்கள்

இம்மூவகையிலும் உயர்சாதியினராக இருப்பவர் நாட்டார் (கிராம) கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்

நாட்டார் கோவில்களில் வன்னியர், தேவர், கவுண்டர் கட்டிய கோவில்களுக்கு வேறு சாதியினர் போகமுடியாது

கண்ட தேவி கோவில் தேர் இழுப்பதற்கு தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பெரியாருக்கு முன்பு மேலே சுட்டிய எந்த கோவிலுக்குள்ளும் 'இந்து' தலித் நுழைவுக்கு அனுமதி இருந்தது இல்லை. இப்போதும் பரவலாக சாதியின் கீழ் உள்ள கோவில்களுக்கு இவர்களால் செல்லவே முடியாது

1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த புத்த மதம் முற்றிலும் அழிக்கப்பட்டது, பரவலாக இருந்த ஜைன மதமும் மார்வாடிகளிடம் மீட்கப்படாத அடகில் மூழ்கடிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் தற்கால கோவிலுக்குள் தமிழ் பாடும் உரிமைக்கே நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கிவரும் வேலையிலும், ஆறுமுக சாமி போன்ற முதியவர் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவேன் என்று முனைந்ததற்கு ரவுடிகளின் துணையுடன் மற்றும் ரவிடியாக மாறி தாக்கப்பட்டதெல்லாம் வசதியாக மறைக்கப்பட்டு இந்து மதம் ஒன்றாம், கோவில் என்பதில் எவரும் செல்ல எந்த தடையுமின்றி சென்று வருகிறார்களாம் ?

******

எல்லா மதக் குப்பைகளும் ஒன்று தான், இதில் எம்மதத்துக் குப்பையில் துர்நாற்றம் மிகுதியாக அல்லது மற்றவற்றைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் புனித குப்பை என்று சொல்வது போன்றதே.

ஆங்கிலத்தில் ஹார்லிக்ஸ் இதோ....அப்படியே குடிங்க.... படிங்க

You know the Latin Catholic will not enter to Syrian catholic church,

these two will not enter to Marthoma church,

these three will not enter to Penthacost church,

these four will not enter to Salvation army church,

these five will not enter to 7th day Adventist church,

these six will not enter to Orthodox church,

these seven will not enter to Jacobite church .....................

Like this there are 146 castes in Kerala alone for Christianity,

each will never share their churches for Christians !

Wonderful

One Christ, One Bible, One Jehova....What a unity !Among

Muslims, Shia an Sunni kill each other in all the Muslim countries.

The religious riot in Muslim countries is always between these two.

The Shia will not go to Sunni mosque,

these two will not go to Ahamadiya mosque,

these three will not go to Sufi mosque,

these four will not go to Mujahiddin mosque....................

like this it appears there are 13 castes in among

Muslims, Killing / bombing/conquering/ massacring/... each other !


The American attack to the Muslim land of Iraq is

fully supported by all the Muslim countries surrounding Iraq !


One Allah, One Quran, One Nebi....! Great unity !


For Hindus 1280 books, 10,000 commentaries,

more than one lakh sub commentaries for these foundation books,

330 million gods, variety of aacharas, thousands of Rishies, hundreds of
languages...

still everyone goes to the SAME TEMPLE ...

whether unity is for Hindus or i others and never quarreled each other for
the

last ten thousand years in the name of religion………………………


கேட்கிறவன் கேணையனாக இருந்தால் சோ ராமசாமி திருப்பதிக்கு மொட்டை அடிப்பதாக வேண்டிக் கொண்டார் என்றும் சொல்லுவார்கள்

2 கருத்துகள்:

Thamiz Priyan சொன்னது…

///கேட்கிறவன் கேணையனாக இருந்தால் சோ ராமசாமி திருப்பதிக்கு மொட்டை அடிப்பதாக வேண்டிக் கொண்டார் என்றும் சொல்லுவார்கள்////
:)))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சிவனே என்றிருக்கும் சோ வை திருப்பதி வரைக்கும் இழுத்ததைக்(அங்க போவாரா சோ?) வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உண்மையாக இருந்தால் வெட்கப்பட வேண்டிய விடயம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்