பின்பற்றுபவர்கள்

2 அக்டோபர், 2007

மகாத்மாவின் கனவு ராஜியம் !





காந்தி கண்ட கனவு தேசமாம்
'இராம இராஜ்ஜியம்'
கைக் கெட்டும் தொலைவில்...

இராமன் பிறந்த(?) அயோத்தி
கையகப்படுத்தி யாயிற்று !

இராமன் நடந்து(?) போன
சேது, நாசா உதவியுடன்
கண்டுபிடித்தாகி விட்டது !

இன்றைய இராம ராஜியத்தில்
வாழ்வதற்கு காந்திக்கு
வயதின் காரணமாக
கொடுத்து வைக்காது என்று
எண்ணியும்...

ஈஸ்வரன் அல்ல அல்லா...
இதை உணர்ந்து கொள்ளச்
சொல்லி
நாது 'ராம்' கோட்சே,
அண்ணல் காந்தியை
அன்றே அனுப்பிவைத்தான்
இராமனின் திருவடிக்கு(?) !

ஹே ராம்.....!

காந்திஜியின் புகழ்வாழ்க !

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்